Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 26 நவம்பர், 2018

டெல்டாவை தாக்கிய கஜா; மெரினாவில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜெல்லி மீன்! November 26, 2018

Image

சென்னை மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், வங்கக்கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தென்னை, நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், அண்மையில் மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது சுற்றுசூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ப்ளூ பட்டன் ஜெல்லி மீன் என அழைக்கப்படும் இந்த அரிய வகை ஜெல்லி மீன், பசிஃபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் அதிக அளவில் காணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த அரிய வகை ஜெல்லி மீன் பார்ப்பதற்கு மிக அழகிய தோற்றத்தில் இருந்தாலும் மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருக்கும் எனவும் இதனை தொட்டால் எரிச்சல், அரிப்பு போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்பாக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இந்த ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியது. தற்போது, சென்னையில் முதல்முறையாக இந்த ஜெல்லி மீன் கரை ஒதுங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கஜா புயலால் ஏற்பட்டுள்ள பருவமாற்றம் காரணமாக இந்த ஜெல்லி மீன் கரை ஒதுங்கியதா என்ற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.