செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது நாசாவின் இன்சைட் விண்கலம்! November 26, 2018
ஆறு மாத விண்வெளி பயணத்திற்கு பின்னர், நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் நிலவுகிறதா இல்லையா என்பதை அறியவும், ஆய்வு செய்யவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்சைட் விண்கலத்தை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அனுப்பியது. கலிபோர்னியா நகரில் விண்ணில் பறந்த இன்சைட் விண்கலம், சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணித்து, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக அது எந்த நிலையில் உள்ளது என்பதை, இன்சைட் விண்கலம் மூலம் அறிந்து கொள்ள முடியும், என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.