Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 9 டிசம்பர், 2025

Rahul Gandhi exposes Who behind Election Commission Move


Rahul Gandhi exposes Who behind Election Commission Move 09 12 2025

Credit YT page Neerthirai

போலியை கண்டறிந்து இருக்கலாம்.

 ஒரு சின்ன ப்ரோக்ராம் எழுதி இருந்தாலே போலியை கண்டறிந்து இருக்கலாம். போலியை கண்டுபிடிக்காதவாறு எழுதிய அந்த போலி நிறுவனம் யாருடா??
































Source FB page
IT Company Basic Interview questions:
1. Find the duplicate char in the statement?
2. Find the duplicate number in the series?
3. Find the duplicate word in the statement?
4. Find the duplicate records from USER table?
இதையெல்லாம் தெரியாத ஒரு கம்பெனியிடம் யாருடா கொடுத்தா??
அந்த திருட்டு பசங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா???

2014 முதல் இ.டி - ஐ.டி பதிவு செய்த வழக்குகள் எத்தனை? இதுதான் டேட்டா!

 ED IT

அதிகரித்து வரும் சிக்கல்கள் மற்றும் பொருளாதார குற்றங்களின் வளர்ந்து வரும் வடிவங்களுடன், இந்த மத்திய நிறுவனங்களின் பொறுப்புகள் வரும் ஆண்டுகளில் இன்னும் முக்கியமானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ED cases in India, ED cases list, Income Tax Department cases: அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மற்றும் வருமான வரித்துறை (ஐ.டி) ஆகியவை நாட்டின் பொருளாதார ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியா விக்சித் பாரத் 2047 என்ற இலக்கை நோக்கி முன்னேறும் வேளையில், பொருளாதாரம் மற்றும் அதன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். பொருளாதாரக் குற்றங்களின் சிக்கல்கள் அதிகரித்து, அவற்றின் வடிவங்கள் மாறி வருவதால், வரும் ஆண்டுகளில் இந்த மத்திய நிறுவனங்களின் பொறுப்புகள் மேலும் முக்கியமானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மற்றும் வருமான வரித்துறை (ஐ.டி) ஆகியவை நாட்டின் பொருளாதார ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. பொருளாதாரக் குற்றங்களின் சிக்கல்கள் அதிகரித்து, அவற்றின் வடிவங்கள் மாறி வருவதால், வரும் ஆண்டுகளில் இந்த மத்திய அமைப்புகளின் பொறுப்புகள் மேலும் முக்கியமானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்க இயக்குநரகத்தின் (இ.டி) பங்கு:

அமலாக்க இயக்குநரகம் என்பது நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு விசாரணை அமைப்பு ஆகும். இது பணமோசடிக் குற்றங்கள் மற்றும் அன்னியச் செலாவணிச் சட்ட மீறல்கள் ஆகியவற்றை விசாரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

வருமான வரித்துறையின் (ஐ.டி) பங்கு:

மறுபுறம், வருமான வரித்துறை முக்கியமாக வரி ஏய்ப்பு, கருப்புப் பணம், வருமான வரிக் கணக்குகளில் சலுகைகள் மற்றும் விலக்குகளுக்கான போலி உரிமைகோரல்கள் போன்றவற்றை விசாரிப்பதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்கிறது.

2014-15 நிதியாண்டு முதல், அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மொத்தம் 6,444 வழக்குகளை (இ.சி.ஐ.ஆர் பணமோசடி தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ) 2002-ன் கீழ் பதிவு செய்துள்ளது. அதே சமயம், வருமான வரித்துறை (ஐ.டி) மொத்தம் 13,877 வழக்குத் தொடர்வு வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி டிசம்பர் 8-எழுத்துபூர்வ அறிக்கையில் பதிலளித்தபோது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மற்றும் வருமான வரித் துறை (ஐ.டி) வழக்குகள் (2014-15 முதல்)

ED IT cases 2
அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மற்றும் வருமான வரித் துறை (ஐ.டி) வழக்குகள் (2014-15 முதல்)

source https://tamil.indianexpress.com/india/how-many-cases-ed-and-income-tax-dept-filed-since-2014-year-wise-data-10893798

தமிழகத்தில் இருந்து பறந்த 50,000 கடிதங்கள்... குடியுரிமை கேட்டு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

 


50000 letters to PM Modi

தமிழகத்தில் இருந்து பிரதமருக்கு பறந்த 50,000 கடிதங்கள்... குடியுரிமை கேட்டு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வசிக்கும் சுமார் 50,000 இலங்கைத் தமிழர்கள் ஒன்றாக இணைந்து, மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தும், அத்துடன் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் 10) ஒட்டி இந்தக் கடிதங்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள 103 முகாம்களில் சுமார் 58,000 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், 2015 ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் பதிவு செய்து சட்டபூர்வமாகத் தங்கியிருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய சலுகையை வழங்கியது. மத்திய அரசு கடந்த செப்.2ஆம் தேதி ஒரு உத்தரவின் மூலம், குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் (Immigration and Foreigners Act) கீழ் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தது.

இந்த முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உட்பட திருச்சி, நாமக்கல், ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பல முகாம்களைச் சேர்ந்த சுமார் 50,000 பேர், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கடிதங்களைப் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து மாதினி, நளினி உள்ளிட்டோர் இந்த நூற்றுக்கணக்கான கடிதங்களை அனுப்பி வைத்தனர்.

கடிதத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

பிரதமருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதங்களில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்ததுடன், ஒரு முக்கியமான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு வணக்கம் ஐயா, உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 01.09.2025 தேதியிட்ட S.O. 3997(E) உத்தரவின் மூலம் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 இன் தண்டனை விதிகளிலிருந்து எங்களுக்கு விலக்கு அளித்ததற்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்."

4 தசாப்தங்களாகத் தாங்கள் ஏங்கி வந்த நிவாரணத்தை வழங்கிய பிரதமர் மற்றும் இந்திய அரசுக்கு இலங்கைத் தமிழர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த முடிவானது, இந்தியாவின் நிலையான மதிப்புகளான இரக்கம், நீதி, மனிதநேயத்தை, குறிப்பாக "வசுதைவ குடும்பகம்" (உலகம் ஒரு குடும்பம்) என்ற கருத்தை, பிரதிபலிக்கிறது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து, சமூக வளர்ச்சிக்குப் பங்களித்து வருவதாகவும், நாட்டின் சட்டத்தை மிகுந்த மரியாதையுடன் மதித்து வருவதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேண்டுகோள்:

"நாங்கள் இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறோம். எங்களுக்கு இங்கே வலுவான பிணைப்பும் அன்பும் இருக்கிறது. அதேநேரத்தில், எங்களை சட்டவிரோத குடியேறிகளாக வகைப்படுத்தியுள்ள இந்திய அரசு, எங்களுக்கு சட்டபூர்வமான குடியுரிமை வழங்கி, இந்திய குடியுரிமை பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை இந்தியப் பிரதமர் தயவுசெய்து பரிசீலிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 50,000 கடிதங்கள் ஒரே நேரத்தில் பிரதமரைச் சென்றடைந்திருப்பது, தமிழக இலங்கைத் தமிழர்களின் சமூகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வை குறிக்கிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/50000-letters-fly-to-pm-modi-sri-lankan-tamils-thank-centre-demand-indian-citizenship-10893437

8-வது நாளாக தொடரும் சிக்கல்; சென்னை ஏர்போர்ட்டில் 41 இண்டிகோ விமானங்கள் ரத்து

 source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chennai-airport-41-indigo-flight-cancelled-update-in-tamil-10893867

IndiGo flights delayed in Tamil

நாடு முழுவதும் இண்டிகோ (IndiGo) விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், 8-வது நாளாக இந்த நிலைமை தொடர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 91 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 8-வது நாளாக 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய விமான பணி நேர கட்டுப்பாட்டு விதிகள், காரணமாக விமானிகள், விமான  பணிப்பெண்கள் ஆகியோர் அடங்கிய பணிக்குழுவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், இண்டிகோ விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.இதன் காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பணிகள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக இந்த நிலை நீடித்து வருவதால், எப்போது சீராகும் என்ற கேள்வி எழுந்துள்ளது,

அதேபோல் விமானங்கள் ரத்து செய்ய்பபட்டதால் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படுமா? எப்போது கொடுக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான பணத்தை பயணிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம், உத்தரவிட்டிருந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பயண நேரத்தை மாற்றிக்கொள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் கூறியிருந்தது.

இதனிடையே 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 8-வது நாளாக 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chennai-airport-41-indigo-flight-cancelled-update-in-tamil-10893867

திங்கள், 8 டிசம்பர், 2025

ஒரு நாள் முன்னதாகவே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய ஏ.ஐ.டி.யு.சி: மணப்பாறையில் 3 பஸ்களை சிறைபிடித்த போலீசார்

 

All India Trade Union Congress AITUC protes begin day before in  Manapparai demand special COVID incentive for sanitation workers Tamil News

திருச்சி மாவட்ட தலைவர் ராமலிங்கசாமி தலைமையிலான மூன்று பேருந்துகளில் புறப்பட்ட 150 தொழிலாளர்களை மணப்பாறை யூனியன் அலுவலகம் அருகில் காவல்துறை தடுத்து அங்கேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

ஏ.ஐ.டி.யு.சி தலைமையிலான தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் 2024 முதல் பலகட்ட போராட்டங்களை நடத்தியும், தமிழக முதல்வரிடமும், துணை அமைச்சரிடமும் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளில் அரசு ஏற்றுக்கொண்ட  கோரிக்கைகளான கொரோனா ஊக்கத்தொகை, மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆட்சியாரால் நியமனம் செய்யப்படும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட நிரந்தர பணியிடங்களில் நியமனம் செய்யப்படும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறையில் தற்காலிகமாக பணி புரியும் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் ஊதியம்  வழங்கப்படும், ஈ.எஸ்.ஐ (ESI), பி.எஃப் (PF) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தையின்போது எழுத்துப் பூர்வமாக கடிதம் வழங்கியும் கூட அரசாணை ஏதும் வழங்கவில்லை.

தமிழக அரசு ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை அரசாணை  வழங்கும் வரை 08.12.2025 காலை 10 மணி முதல் சென்னை பனகல் மாளிகை அருகில் காத்திருப்புப் போராட்டம் நடத்திட முறைப்படி  அறிவித்து சென்னைக்கு புறப்பட்ட ஏ.ஐ.டி.யுசி தலைமையிலான தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ராமலிங்கசாமி தலைமையிலான மூன்று பேருந்துகளில் புறப்பட்ட 150 தொழிலாளர்களை மணப்பாறை யூனியன் அலுவலகம் அருகில் காவல்துறை தடுத்து அங்கேயே நிறுத்தி வைத்துள்ளனர். காவல்துறை தடுத்ததை கண்டித்து அங்கேயே கோஷமிட்டவாறு ஒரு நாள் முன்னதாகவே போராட்டத்தை துவக்கினர்.

திருச்சி மாவட்ட ஏஐடியுசி உள்ளாட்சித்துறை சங்க தலைவர் இந்திரஜித் போராட்டக் களத்திற்கு சென்று அவர்களுக்கு  ஆதரவளித்து உரையாற்றினார். காவல்துறையின் அடக்குமுறை செயலை திருச்சி மாவட்ட ஏஐடியுசி வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்  .
 சென்னைக்கு செல்ல விடுங்கள், இல்லை என்றால் எத்தனை நாட்கள் ஆனாலும் இங்கேயே கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தை தொடர்வோம் என தொழிலாளர்கள் டிசம்பர் 7-ம் தேதி இரவில் இருந்தே போராட்டத்தை தொடங்கியதால் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களை திருச்சி மாவட்ட போலீசார் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/all-india-trade-union-congress-aituc-protes-begin-day-before-in-manapparai-demand-special-covid-incentive-for-sanitation-workers-tamil-news-10891458

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாளில் மக்களின் வாழ்வுரிமை,

 source TMMK MEDIA fb page 




தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையத்தில் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாளில் மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை, வழிபாட்டுரிமை, உள்ளிட்ட அரசியல் சாசனம் தந்துள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாத்திட தமுமுக தலைமையில் மாவட்ட தலைநகரங்களில் தோளில் கருப்புதுண்டு அணிந்து கருப்புக் கொடியேந்தி மாபெரும் கோரிக்கை போராட்டம் தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார் தலைமையிலும் மாவட்ட தலைவர் முகமது ரபீக் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை ஜைனுல் ஆபிதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரஃபிக் . மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இதில் மாவட்ட, பகுதி, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் ஜமாத்தார்கள்,பெண்கள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.


நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து: கட்டணங்களை திரும்ப வழங்க அறிவுறுத்தல்; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

 

IndiGo Flight Cancellations

நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து: கட்டணங்களை திரும்ப வழங்க அறிவுறுத்தல்; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளின் டிக்கெட் கட்டணங்கள் உச்சத்தை எட்டி உள்ளன. இந்தச் சூழலில், பயணிகளின் துயரத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பணத்தைத் திரும்ப வழங்க கெடு

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு விடுத்துள்ள உத்தரவில், விமான சேவை ரத்தால் நிலுவையில் உள்ள அனைத்துப் பயணிகளுக்கான பணத்தையும் (Refund) டிசம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்குள் திருப்பித் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

மேலும், ரத்து அல்லது தாமதத்தால் பயணிகளிடமிருந்து பிரிந்த அனைத்து சரக்கு மற்றும் உடைமைகளை கண்டறிந்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவர்களின் குடியிருப்பு அல்லது அவர்கள் தேர்ந்தெடுக்கும் முகவரிக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கட்டண உச்சவரம்பு மற்றும் உயர்மட்ட விசாரணை

விமான டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்ததைத் தடுக்க, மத்திய அரசு விமான டிக்கெட்டுகளுக்கு உச்சவரம்பு (Cap) விதித்துள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கின்ஜரபு ராம் மோகன் நாயுடு இண்டிகோ விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பொறுப்பானவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விமானச் சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், இண்டிகோ ரத்துகளுக்கு காரணமாகக் கூறப்படும் புதிய விமானப் பணிக் கால வரம்பு (FDTL) விதிமுறைகளை அரசு கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான உத்தரவுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ரத்துகள் மற்றும் பயணிகள் அவதி

நாடு முழுவதும் விமான சேவைத் தடங்கல்களுக்கு மத்தியில், இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ, சனிக்கிழமை அன்று 4 முக்கிய விமான நிலையங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். விமானக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்தன. உதாரணமாக, வெள்ளிக்கிழமை (டிச.5) மும்பை-டெல்லி விமானத்தின் கட்டணம் ரூ.51,860 ஆகவும், டெல்லி-மும்பை விமானத்தின் கட்டணம் ரூ.48,972 ஆகவும் இருந்தது.

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோவின் செயல்பாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ மற்றும் ixigo-வின் நடவடிக்கைகள்

சனிக்கிழமை இறுதிக்குள் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. வெள்ளிக் கிழமை 700-க்கும் அதிகமான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது செயல்பாடுகளில் ஆரம்ப முன்னேற்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும், 95% க்கும் அதிகமான நெட்வொர்க் இணைப்பு மீண்டும் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

பயணத் தளமான ixigo, டிச.3 முதல் 8 வரை இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும், டிக்கெட்டுக்கான முழுமையான வசதிக் கட்டணம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட கட்டணம் ஆகியவற்றை திரும்ப வழங்குவதாக அறிவித்துள்ளது.

முக்கிய விமான நிலையங்களில் ரத்து விவரம்

கொல்கத்தா: சனிக்கிழமை அன்று 41 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அகமதாபாத்: புறப்படவிருந்த 35 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வடோதரா: புறப்படவிருந்த மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


source https://tamil.indianexpress.com/india/indigo-flight-cancellations-drop-below-850-as-airline-says-focused-on-stabilising-schedules-10888006

பாபர் மசூதி தகர்ப்பு தினம்: திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

 

Trichy SDPI Protests Babri Masjid demolition day Tamil News

"பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு போன்றவை சேர்த்து இடிக்கப்பட்டுள்ளது, இதனை பாசிசத்தின் நாளாகவே நாங்கள் கடைபிடித்து வருகிறோம்." என்று தெரிவித்தனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரையில் அரசமைப்பு சட்ட முகவுரையை கையில் ஏந்தியும், வக்பு மற்றும் வழிபாட்டு உரிமைகளை காக்க வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் தெற்கு மாவட்ட தலைவர் கே.தமீம் அன்சாரி  தலைமையில் நடைபெற்றது.திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகம்மது சித்திக் வரவேற்புரையாற்றினார்.

இந்த மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.ஏ.கே. அப்துல் கரீம் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார். ஆயிரக்கணக்கானோர் மத்தியில் கண்டன உரையாற்றி  அப்துல் கரீம் பேசியதாவது; இடித்தவனுக்கு தண்டனை வழங்கு, இழந்தவனுக்கு நீதி வழங்கு என்ற முழக்கத்துடனும், பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று பாசிச எதிர்ப்பு நாளாக அனுசரித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டமானது பாலக்கரை ரவுண்டானாவில் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு போன்றவை சேர்த்து இடிக்கப்பட்டுள்ளது, இதனை பாசிசத்தின் நாளாகவே நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இந்திய அரசு அளித்த வழிபாட்டு உரிமையை பறிப்பதற்கு எந்த அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அதிகாரம் கிடையாது, எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டத்தை தொடருகின்றோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சில அமைப்புகள் சேர்ந்து மத பதட்டத்தை உருவாக்குகிறார்கள், அதனை கூடாது என்கிறோம். கீழே கந்தர் மேலே சிக்கந்தர் என்று திருப்பரங்குன்றம் மக்கள் சொல்கிறார்கள், இதுதான் அந்தமக்களின் இயல்பு சில சங் பரிவார் அமைப்புகள் ஒன்று சேர்ந்து மடைமாற்ற பார்க்கிறார்கள், அதனை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசின் செயல்பாடுகளை வரவேற்கின்றோம் என மாநில பொதுச் செயலாளர் அப்துல்கரீம் கண்டன உரையாற்றினார்.

மேலும், விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில செயலாளர் ஆலிமா மெஹராஜ் பானு, திருச்சி மாநகர  ஜமாத்துல் உலமா சபை செயலாளர் இமாம் அப்துல் ரஹீம் மன்பஈ மற்றும் கத்தோலிக்க பொது நிலையினர் பேரவை தலைவர் ஆசிரியர் வேளாங்கண்ணி ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் திருவரம்பூர் தொகுதி தலைவர் ஷேக் முகமது மற்றும் மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, ஶ்ரீரங்கம் தொகுதி துணைத் தலைவர் திப்பு சுல்தான், ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணைத் தலைவர் அப்பாஸ் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் எஸ்.டி.டி.யு மாநில செயலாளர் முகம்மது ரபீக், மாவட்ட துணைத் தலைவர்  ரஹீம், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் கே.முபாரக் அலி, மாவட்ட செயலாளர்கள் மதர் ஜமால் முஹம்மது, பொறியாளர் சதாம் உசேன், மாவட்ட பொருளாளர் பிச்சை கனி, மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (பாபு), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட்.மஜீத், சிராஜ், திருச்சி ஜாகீர் உசேன், முஹம்மது சலீம், ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர்  முகமது யாசர், மணப்பாறை தொகுதி தலைவர் உமர், மாவட்ட ஊடக அணி தலைவர் உபைதுர் ரஹ்மான், எஸ்.டி.டி.யு தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா,மாவட்ட செயலாளர் சர்க்கரை மீரான், கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் கே எம் எஸ் ஹக்கீம், மருத்துவ அணி தலைவர் டாக்டர் இக்பால், விமன் இந்தியா  மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் தௌலத்  நிஷா, வர்த்தக அணி மாவட்ட  தலைவர் டாக்டர் பக்ருதீன் மற்றும் நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள்,பொதுமக்கள், ஜமாத்தார்கள் என பெருந்திரளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா நன்றியுரை ஆற்றினார்.

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் ஒரே இடத்தில் திரண்டதால் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாலக்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தி: க. சண்முகவடிவேல். 

6 12 2025 


source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-sdpi-protests-babri-masjid-demolition-day-tamil-news-10887956

மதுரையில் ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு

 

மதுரை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், இன்று (டிசம்பர் 7, 2025) மதுரையில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு - 2025

மதுரை மாநகரில் இன்று ஸ்டாலின் தலைமையில் "தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் ‘மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு - 2025’ நடைபெறுகிறது. இம்மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, அதன் விளைவாக சுமார் 56,766 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், மேலூரில் அமையவுள்ள புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்காவிற்கும் முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு

மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு, சுதந்திரப் போராட்ட வீராங்கனை 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர் சூட்டப்பட்டு, அதனைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

63,698 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்

இதனைத் தொடர்ந்து கலைஞர் திடலில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், 63,698 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஸ்டாலின் வழங்குகிறார். . மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.3,065 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைக்கும், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-investors-meet-2025-cm-stalin-veeramangai-velunachiyar-flyover-sipcot-melur-10888421

சனி, 6 டிசம்பர், 2025

சமூக ஊடக விமர்சனங்களுக்கு மதுரை ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்றது. ​இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சமூக ஊடகங்களில் பரவும் விமர்சனங்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நீதிபதிகள் தெரிவித்த முக்கிய கருத்துகள்:

​அவசரம் தேவையில்லை:  மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்க அவசரப்படுத்த வேண்டாம் என்றும், வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

​வழக்கறிஞர்களுக்கு அறிவுரை: அரசு வழக்கறிஞர்கள் பொறுப்புடையவர்கள். நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளாமல், மற்றவர்களுக்கும் இது குறித்து அறிவுறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நீதிமன்றம் அல்லது நீதிபதிகள் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளக் கூடாது. தீபம் ஏற்றுவது தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து, பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் வரம்பில்லாமல் விமர்சனங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் நீதிமன்ற விவகாரம் குறித்துப் பேசும்போது, உயர்நீதிமன்றத்தின் மாண்புக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் பொதுவெளியில் பேச வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

​அடுத்த விசாரணை: விருப்பமுள்ளவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்றும், வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பின்னர் புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.