புதன், 30 ஏப்ரல், 2025

கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச்சு: வாக்குவாதத்தில் இறங்கிய சமூக ஆர்வலர்கள்; புதுச்சேரியில் பரபரப்பு

 Puducherry Electricity Bill Hike opinion hearing meeting Officials speak in Hindi Social activists argument Tamil News

புதுச்சேரியில் நடைபெற்ற மின் கட்டண உயர்வு கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது


புதுச்சேரியில் நடைபெற்ற மின் கட்டண உயர்வு கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

புதுச்சேரியில்  2025-26 முதல் 2029-30 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு மின் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்பு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் இந்தியில் பேசியதற்கு  சமூக அமைப்புகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அதிகாரியில் இந்தி மொழி பேசினார்கள்.மேலும் சமூக அலுவலருக்கும் பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்ட குறை கேட்புக்கான கடிதம் ஆங்கிலத்திலும் இந்தியன் விருந்தின இதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர் தமிழில் ஏன் கொடுக்கவில்லை என கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பொதுமக்கள் தமிழில் கூறுவதை மொழிபெயர்த்து சொல்ல அதிகாரிகள் இருப்பதாக கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினார்கள். தொடர்ந்து கருத்துக்கணிப்பு கூட்டம் நடைபெற்றது

செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி. 



source https://tamil.indianexpress.com/india/puducherry-electricity-bill-hike-opinion-hearing-meeting-officials-speak-in-hindi-social-activists-argument-tamil-news-9016009

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்: மே 29-ல் செல்கிறார் இந்திய விண்வெளி வீரர்

 29 4 2025 

விண்வெளி ஆய்வில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டவுள்ளது! அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) தனது ஏ.எக்ஸ்–4 (Ax-4) என்ற 4-வது வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தை வரும் மே மாதம் 29 ஆம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இந்திய விமானப்படையின் குருப் கேப்டன் (Group Captain) ஷுபன்ஷு ஷுக்லா முக்கிய பங்கு வகிக்கவுள்ளார்.

ஷுபன்ஷு ஷுக்லாவுடன், இந்த ஏ.எக்ஸ்–4 (Ax-4) குழுவில் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த டிபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகியோர் இடம்பெறுகின்றனர். இதில் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி போலந்தின் 2-வது விண்வெளி வீரர் ஆவார், இதற்கு முன்பு 1978 இல் போலந்து வீரர் ஒருவர் விண்வெளிக்கு சென்றிருந்தார். அதேபோல், டிபோர் கபு ஹங்கேரியின் 2-வது தேசிய விண்வெளி வீரர் ஆவார், 1980 க்குப் பிறகு ஹங்கேரியிலிருந்து ஒருவர் விண்வெளிக்கு செல்வது இதுவே முதல் முறை.

பெக்கி விட்சன் ஏற்கனவே அமெரிக்க விண்வெளி வீரர்களில் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார், மேலும் இது அவரது 2-வது வணிகரீதியிலான விண்வெளிப் பயணமாகும். இந்த ஏ.எக்ஸ்–4 (Ax-4) குழு ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கவுள்ளது. அவர்கள் அங்கு சுமார் 14 நாட்கள் தங்கி, பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு, 1984 ஆம் ஆண்டு, ராகேஷ் சர்மா சோவியத் யூனியனின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். அதன்பிறகு இப்போது, ஷுபன்ஷு ஷுக்லாவின் இந்த பயணம், இந்திய விண்வெளி ஆய்வின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.
போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய இரு நாடுகளுக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். முதன்முறையாக இந்த நாடுகள் தங்கள் வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புகின்றன. இது சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) - ன் இந்த ஏ.எக்.ஸ்-4 (Ax-4) பயணம், வணிகரீதியிலான விண்வெளிப் பயணங்களின் முக்கியத்துவத்தையும், பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளிப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. ஷுபன்ஷு ஷுக்லாவின் இந்த வெற்றிகரமான பயணம், எதிர்கால இந்திய விண்வெளி வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.



source https://tamil.indianexpress.com/science/india-shubhanshu-shukla-international-space-station-9016128

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க திட்டம்… ரூ.63,000 கோடியில் பிரான்ஸ் – இந்தியா இடையே ஒப்பந்தம்!

 



இந்திய கடற்படைக்காக மத்திய அரசு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று கையெழுத்தானது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன. இதனிடையே ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.

ஏற்கனவே இந்திய விமானப்படையிடம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள ரஃபேல் போர் விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

 

29 4 2025

source https://news7tamil.live/plan-to-buy-26-rafale-fighter-jets-rs-63000-crore-deal-between-france-and-india.html

ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 

ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 29 4 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது பேசியதாவது,

“ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கருணாநிதி கூறுவார். ஆனால் கருணாநிதி இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும்.
கருணாநிதியின் எண்ணங்களை தான் நான் நிறைவேற்றி வருகிறேன்.

இந்தியாவில் நம்பர் 1 மாநிமாக, தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வருமைன்கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.

கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது. உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம்.

இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். நிதி ஆயோக் வெளியிட்ட வளர்ச்சி இலக்க குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. தற்போது கடந்த ஆட்சியின் இருளை போக்கி தமிழ்நாடு அரசு தலைநிமிர்ந்து நடக்கிறது.

ஒரு பக்கம் மத்திய அரசு மறு பக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம். இவையெல்லாம் தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை”. இவ்வாறு அவர் பேசினார்.


source https://news7tamil.live/the-central-government-on-one-side-the-governor-on-the-other-dmks-achievement-surpasses-all-chief-minister-m-k-stalins-speech.html

காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

 

காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!


29 4 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை தொடர்பான 102 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில்,

“சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம், பெரம்பூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிய புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

கோவை, சிவகங்கை, நெல்லை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களில் புதிய காவல்நிலையங்கள் தொடங்கப்படும்.

விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் தொடங்கப்படும்.

கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.

தடய அறிவியல் துறையை நவீனப்படுத்த 50 நடமாடும் தடயவியல் வாகனங்கள் வழங்கப்படும்.

சார்பு ஆய்வாளர் தலைமையிலான 250 காவல்நிலையங்கள் ஆய்வாளர் தலைமையிலான காவல்நிலையங்களாக மாற்றப்படும்.

ஊட்டியில் 90 ஆயுதப்படை காவல் குடியிருப்புகள், தர்மபுரியில் 134 குடியிருப்புகள் கட்டப்படும்.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு கட்டப்படும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகரங்களில் காவல்துறை பயன்பாட்டிற்கு ரூ.12 கோடியில் 80 ரோந்து வாகனங்கள் வழங்கப்படும்.

ரூ.16 கோடியில் 7 இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.

தீ விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் தீயணைப்பு வாகனம் வாங்கப்படும்.

350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும்.

ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்,

சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


source https://news7tamil.live/102-new-announcements-to-the-police-chief-minister-m-k-stalin-issued.html

தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்" - ஸ்டாலின்

 

தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்" - ஸ்டாலின்

29 4 2025 
ஸ்டாலின்

"காலனி என்ற சொல் வசைச்சொல்லாக மாறியிருப்பதால் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும்" என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானிய கோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். 

அதன்படி தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் தமிழ்நாடு ஆவணங்களில் இருந்தும் பொது புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.








source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-stalin-announcement-9013149

மேலே பாம்பு.. கீழே நரிகள்... குதித்தால் அகழி" - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 

29 4 2025 

tn-government

"மேலே பாம்பு.. கீழே நரிகள்... குதித்தால் அகழி" - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

"7வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்"

இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-ஆவது முறையும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கலைஞர் கூறுவார். ஆனால், கலைஞர் இன்றிருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' என கூறியிருப்பார். கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன் என்றார்.

தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்கு கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வருமைன்கோட்டிற்கு கீழ் உள்ளனர். 98.3% பள்ளிகளில் ஆய்வக வசதிகள் உள்ளது.கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை.மிகச்சிறந்த 100 பல்கலை. பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில்தான் காவல்துறையில் பெண் அதிகாரிகள் எண்ணிக்கை அதிகம். பல்வேறு துறைகளில் இறுதி இடத்தில் இருந்த தமிழ்நாடு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

9.6% வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு"

இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. கடந்த அரசின் நிர்வாக சீர்கேட்டால் கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. கடந்த ஆட்சியின் இருளை போக்கி தலைநிமிர்ந்து நடக்கிறது தமிழ்நாடு அரசு. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி இந்தியாவில் எந்த மாநிலமும் காணாதது தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.3.58 லட்சம்; தேசிய சராசரி ரூ.2.06 லட்சம்தான். காற்றாலை உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. 27.75 லட்சம் பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். ரூ.5.35 லட்சம் முதலீடுகள் பெற்று இந்தியளவில் தமிழ்நாடு 2-ம் இடம். நாட்டிலே அதிக அரசு மருத்துவர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக மருத்துவ படிப்பு இடங்களில் தமிழ்நாட்டில்தான் உள்ளன.

”காலனி என்ற சொல் நீக்கப்படும்”

தமிழ்நாடு அமைதியான மாநிலம். தமிழ்நாட்டில் அமைதி நிலவ காவல்துறைதான் காரணம். அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும். காவல்துறைக்கு நன்றி. குற்ற சம்பவங்களில் தமிழ்நாடு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி இருப்பது உறுதிசெய்யப்படும். இனி ஆண்டுதோறும் செப். 6 காவலர் நாளாக கொண்டாடப்படும். காவலர் நாளில் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும். ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்.

உள்துறை சார்பில் 102 அறிவிப்புகள்

உள்துறை சார்பில் 102 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்.

*சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.

*உதகையில் ஆயுதப்படை குடியிருப்புகள் கட்டப்படும்.

*250 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

*350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும்

* உதகை, தருமபுரியில் ரூ.101 கோடியில் ஆயுப்படை காவல் குடியிருப்பு கட்டப்படும்.

*50 நடமாடும் தடயவியல் வாகனம் வழங்கப்படும்.

*ரூ.16 கோடியில் 7 இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்து 102 அறிவிப்புகளை வெளியிட்டார்.

”2026-ல் திராவிட மாடல் அரசு 2.0”

2026ல் திராவிட மாடல் அரசு 2.0 வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் ஒன் தான்; தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக எனது பயணம் தொடரும். திட்டங்கள் எல்லாம் ஸ்டாலின் பெயரை அல்ல திராவிட மாடல் பெயரை கூறும். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை விட 1000 மடங்கு சிறப்பான சாதனைகளை செய்துள்ளோம். தமிழ்நாட்டை ஒருபோதும் சூறையாட முடியாது என்று கூறினார்.

மேலே பாம்பு.. கீழே நரிகள்.. குதித்தால் அகழி.. ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் மத்திய அரசு மறுபக்கம் ஆளுநர்.. நிதி என்று எல்லா தடைகளைத் தாண்டி செய்த சாதனை படைத்து வருகிறோம். இது தனிமனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் எனக் கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/snakes-above-foxes-below-if-you-jump-you-will-fall-into-a-ditch-mk-stalins-speech-in-the-assembly-9013210

சட்டப்பேரவையில் 'ஊர்ந்து' என்ற சொல்லை முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தியதால், அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் அமளி

 ADMK slams Stalin

சட்டப்பேரவையில் 'ஊர்ந்து' என்ற சொல்லை முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தியதாகக் கூறி, அ.தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டனர்.

29 4 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்  இறுதி நாளான இன்று (ஏப்ரல் 29) காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானிய கோரிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அப்போது, "அரசு தலை நிமிர்ந்து இருக்கிறதா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். பார்ட் 2, பார்ட் 3 என்று முதலமைச்சர் கூறுகிறார். தமிழ்நாட்டில் எப்போதும் பார்ட் 2 தோல்வி தான்" என்று அ.தி.மு.க உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். 

இடனிடையே, முதலமைச்சரின் பதிலுரையின் போது 'ஊர்ந்து' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அ.தி.மு.க-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அந்த சொல்லை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "ஊர்ந்து, தவழ்ந்து என்று நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அது ஒன்றும் அன்-பார்லிமென்ட் வார்த்தை அல்ல. தவழ்ந்து, ஊர்ந்து என்று நான் சொன்னது யாரையாவது குறிக்கிறது என்று சொன்னால், அதை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/admk-slams-cm-stalin-statement-at-assembly-9013355

திங்கள், 28 ஏப்ரல், 2025

சங்கிகளின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளேன்… அனைத்தும் ஆதாரங்களுடன்… அனைவரும் பகிருங்கள்.April 23 2025

சங்கிகளின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளேன்… அனைத்தும் ஆதாரங்களுடன்… அனைவரும் பகிருங்கள்.April 23 2025

 


Credit Senthil Vel

அகவிலைப்படி முதல் திருமண முன் பணம் உயர்வு வரை” – அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

அகவிலைப்படி முதல் திருமண முன் பணம் உயர்வு வரை” – அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

28 4 2025 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

“திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களும், பல்வேறு துறைகளில் திட்டப் பணிகளும் பாராட்டத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் நம்முடைய தமிழ்நாடு பலவகையில் முதலிடத்திலேயும் முன்னோடி மாநிலமாகவும் திகழ்கிறது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் உழைப்பும், சீரிய பங்களிப்பும் இதற்கு ஒரு மிக முக்கியமான காரணம்.

அரசு நடைமுறைப்படுத்தி வருகிற நலத் திட்டங்கள், யாருக்கும் விட்டுப் போகாமல், அனைத்து மக்களையும் சென்றடைய பணியாற்றும் அரசு ஊழியர் ஒவ்வொருவரையும் இந்த தருணத்தில் தமிழ்நாடு அரசின் சார்பிலேயும், தனிப்பட்ட முறையிலேயும் பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறேன். தற்போது, அரசு ஊழியர் நலன் கருதி, அவர்களுக்காக ஒன்பது அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

முதல் அறிவிப்பு;

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை, இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அறிவிப்பின்படி, சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

இரண்டாவது அறிவிப்பு;

01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை மத்திய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.

மூன்றாவது அறிவிப்பு;

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

நான்காவது அறிவிப்பு;

அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில்வதில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த அடிப்படையில், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு லட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

ஐந்தாவது அறிவிப்பு;

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஆறாவது அறிவிப்பு;

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும்.  இந்த உயர்வால் சுமார் நான்கு லட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.

ஏழாவது அறிவிப்பு;

ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

எட்டாவது அறிவிப்பு;

அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும்.

ஒன்பதாவது அறிவிப்பு;

திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வழியில் அரசு ஊழியர்களுக்கு அரணாக, அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக திமுக அரசு என்றென்றும் தொடரும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


source https://news7tamil.live/from-dearness-allowance-to-increase-in-pre-wedding-money-chief-minister-m-k-stalin-issued-a-series-of-announcements-to-government-employees.html

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

பஹல்காம் தாக்குதல் எதிரொலி | மேலும் 4 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாறி மாறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

26 4 2025 

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் (ஏப்.25) தெற்கு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. தொடர்ந்து, நேற்று (ஏப்.26) பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான மேலும் 4 வீடுகளை பாதுகாப்புப் படையினர் இடித்தனர். இதன்மூலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு நாட்களில் அழிக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.


source https://news7tamil.live/echoes-of-pahalgam-attack-4-more-terrorist-houses-demolished-to-the-ground.html

பார்சல் விநியோகங்களுக்கு புதிய முயற்சி; சில்லறை வணிகத் தளங்களுடன் கைகோர்க்கும் அஞ்சல் துறை

 

Postal delivery

சென்னை நகரப் பகுதியில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 81 ஆயிரம் பார்சல்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

இந்த பார்சல் விநியோகத்தை துரிதப்படுத்தும் நடவடிக்கையாக, ஒரே நாள் டெலிவெரி மற்றும் ஓ.டி.பி பாஸ்வேர்ட் டெலிவெரி போன்ற திட்டங்களை இன்னும் ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்ய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

சி.சி.ஆர் போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஜி. நடராஜன் கூறுகையில், "சர்வதேச நாடுகளுக்கும் கூட பார்சல்களை வழங்குவதற்காக, சிறு அளவிலான சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் இத்துறை ஏற்கனவே கூட்டு சேர்ந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

"முக்கிய சில்லறை வணிகச் சங்கிலிகளுடன் அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறோம். மேலும், சிறந்த தளவாட ஆதரவிற்காக நாடு முழுவதும் பரவியுள்ள 1.64 லட்சம் அஞ்சல் அலுவலகங்களின் பரந்த நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.

சரவணா ஸ்டோர்ஸின் இ - காமர்ஸ் தளமான அண்ணாச்சியுடன் இணைந்து, இந்தியா முழுவதும், குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு பார்சல் சேவையை வழங்க சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய கூட்டாண்மைகள் டிஜிட்டல் பிளவைக் குறைக்கவும். மேலும், உள்ளடக்கிய இ - காமர்ஸ் வளர்ச்சியை செயல்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இ - காமர்ஸ் தளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட 10,872 பார்சல்கள் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், சென்னையில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் இ - காமர்ஸ் தளங்களுடன் இணைவதற்கு திட்டமிடப்பட்டது. இந்த வசதி, பின்னர் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

அஞ்சல் துறையானது, கடன் வசதி, பிக் - அப் சேவைகள் மற்றும் சரக்கு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்கி வருகிறது. "போர்டலில் ஒரு நாளைக்கு நான்கு முறை சரக்கு கண்காணிப்பு வசதியை நாங்கள் அப்டேட் செய்கிறோம்" என்று நடராஜன் கூறினார். விநியோகம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறை அமைக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/department-of-posts-to-tie-up-with-retail-chains-e-commerce-platforms-for-parcel-delivery-9006317

சனி, 26 ஏப்ரல், 2025

வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை – அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு

வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை – அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு

25 4 2025  

PTR Assembly

கேபிள் டிவி சேவையை போல வீடுகளுக்கு 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மாதந்தோறும் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று (ஏப்ரல் 25) தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார்.

அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர், தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் மூலமாக (TANFINET) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீதம் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநிலத்தில் உள்ள 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடையும். இதன்மூலமாக வீடுகளுக்கு கேபிள் டிவி சேவைபோல, மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 Mbps வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் வகையில் கூடுதலாக 50 புதிய ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும்.  இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதற்படியாக இதுவரை ஏற்கனவே 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதிகொடுக்கப்பட்டுள்ளது. 4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்ற விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இ-சேவை மையம் மூலம் 1.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ptr-palanivel-thiagarajan-announces-internet-services-100-mbps-to-family-at-tamilnadu-assembly-9002546

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

ஆளுநர் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல - திருச்சியில் திருமாவளவன் பேட்டி

 thiruma vck trichy

திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது; தீவிரவாதத்தை சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி இந்தியன் என்ற உணர்வுடன் எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் சாதி, மதத்தின் பெயரால் பகைமையை வளர்த்து ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார் உருவாக்கியுள்ளது என்பதே கசப்பான உண்மை. இந்திய ஒற்றுமைக்கு மத நல்லிணக்கமே தேவை என்பதை சங்பரிவார் இந்தச் சூழலில் புரிந்து கொள்ள வேண்டும். 

காஷ்மீர் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று கூறுவதில் எங்களுக்கு அரசியல் லாபம் இல்லை. இது அதிருப்தியின் வெளிப்பாடு மட்டுமே. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் இருக்காது என பா.ஜ.க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு செல்லலாம் என பா.ஜ.க அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதை நம்பி மக்கள் அங்கு சென்றபோது, இப்படி ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகி முன்னுதாரணமாக விளங்கினார். இந்தச் சூழலில்தான் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம். 

காஷ்மீரில் நடந்த தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான போராக மாறக் கூடாது. தீவிரவாத தாக்குதலுக்கு ஒரு நாடு தான் காரணம் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக நாம் போர் தொடுக்கக்கூடாது. வேறு நாட்டுக்கு எதிராக நமது பலத்தை நிரூபிக்கக் கூடாது. இது உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்றால், அதை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும், போர் தீர்வு அல்ல. இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பயனளிக்கவில்லை, ஆனால் அதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என்பதை சமீபத்தில் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்

 உணர்த்தியுள்ளது.

தீவிரவாதிகள் சாதி, மதம் என எதையும் பார்ப்பதில்லை. காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதலாக தெரியவில்லை. இது இந்திய அரசுக்கு எதிரான தாக்குதலாகவே தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அப்படியே புரிந்து கொள்ள வேண்டும். இதில் விளக்கம் தேவையில்லை. வக்ஃப் சட்டத்தை கண்டித்து வி.சி.க சார்பில் மே 31-ம் தேதி திருச்சியில் மாபெரும் பேரணி நடத்த உள்ளோம். 

கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அரசு இடையே உள்ள முரண்பாடுகள் கூர்மையாகிவிட்டன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின், பல்கலைகழக துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு அவர் அழைப்பு விடுத்தது, தமிழக அரசுக்கு நெருக்கடியாக இருப்பதாக அனைவராலும் உணரப்பட்டது. துணைவேந்தர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியை கவர்னர் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளார். இன்று அந்த மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணிக்கிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் மே 31 ஆம் தேதி வி.சி.க சார்பில் திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளோம் என்றார்.

க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/vck-thirumavalavan-slams-tamilnadu-governor-rn-ravi-on-vc-meeting-at-trichy-9001512






வியாழன், 24 ஏப்ரல், 2025

ஏகத்துவமும் எமது ஏக்கமும்

ஏகத்துவமும் எமது ஏக்கமும் M. S சுலைமான் தணிக்கை குழுத் தலைவர் TNTJ தர்பியா நிகழ்ச்சி (21-12-2024) சிதம்பரம் கடலூர் தெற்கு மாவட்டம்

உறவை பேணச் சொல்லும் உன்னத மார்க்கம்

உறவை பேணச் சொல்லும் உன்னத மார்க்கம் செ.அ.முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச் செயலாளர்,TNTJ குடும்பவியல் தர்பியா - 16.02.2025 தென்சென்னை மாவட்டம்

ஈஸ்டர் தினம் ஓர் இஸ்லாமிய பார்வை

ஈஸ்டர் தினம் ஓர் இஸ்லாமிய பார்வை மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜுமுஆ மேலப்பாளையம் - 18.04.2024 உரை : எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மேலாண்மைக்குழுத் தலைவர், TNTJ)

சமத்துவமும் சமூக நீதியையும் போதிக்கும் இஸ்லாம்

சமத்துவமும் சமூக நீதியையும் போதிக்கும் இஸ்லாம் ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர் அமைந்தகரை ஜுமுஆ - 18.04.2025

மறுமைக்கான முதலீடு

மறுமைக்கான முதலீடு ஏ.ஹமீதுர்ரஹ்மான் M.I.Sc பேச்சளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 18.04.2025

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி ஆளுனர் மாளிகை முற்றுகை!

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி ஆளுனர் மாளிகை முற்றுகை! சென்னை மண்டலம் - 12.04.2025 கண்டன உரை R.அப்துல் கரீம் MISc (TNTJ மாநில தலைவர்)

வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு இடைக்காலத்தடை!

வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு இடைக்காலத்தடை! உச்சநீதிமன்றத்தில் ஒலித்த நீதியின் குரல்.. K .தாவுத் கைசர் M.I.Sc ( TNTJ மாநில துணைத் தலைவர் )

பள்ளியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு தீர்வு என்ன?

பள்ளியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு தீர்வு என்ன? E.J முஹ்சின் மாநிலச் செயளாலர் TNTJ செய்தியும் சிந்தனையும் - 19.04.2025

அமெரிக்காவை உலுக்கிய '50501..?

 

அமெரிக்காவை உலுக்கிய '50501..? K.ரஃபீக் முஹம்மது மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 22.04.2025

ஜம்மு காஷ்மீரில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது” – திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு!

 ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த சிலர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலையடுத்து ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மாதிரி வரைபடங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பஹல்காமில்  நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளகளை சந்தித்து அவர் பேசியதாவது, “தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பயங்கராவாதத்தை கடுமையாக நசுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரக்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு காஷ்மீரில் அவர்கள்(பாஜக) எடுத்த நடவடிக்கை இந்த விளைவுகளை உருவாக்கி இருக்கிறது. உளவுத்துறை தோல்வியடைந்திருப்பதை இந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது.

ஆர்டிகள் 370-ஐ அகற்றிவிட்டால் அங்கே பயங்கரவாதம் இருக்காது என தொடர்ந்து பாஜக சொல்லி வந்தது. பயங்கரவாதத்தை நீக்கிவிட்டோம் என்று சொன்னதன் அடிப்படையில், அதை நம்பி போன சுற்றுலா பயணிகள் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இதற்கு அமித் ஷா பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது”



source https://news7tamil.live/this-result-has-been-created-due-to-the-action-taken-by-the-bjp-government-in-jammu-and-kashmir-thirumavalavan-mp-alleges.html

ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. இதையடுத்து சிறை சென்ற அவருக்கு கடந்தாண்டு உச்சநீதிமன்றம் ஜாமின் கொடுத்தது.

இந்த நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஜாமினுக்கு எதிராக வித்யாகுமார் என்பவர்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று(ஏப்ரல்.23) நடைபெற்றது.  இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்றம் விதித்த எந்த ஜாமின் நிபந்தனையும் அவர் மீறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, நீதிபதிகள்:-

அவர் அமைச்சராக இருந்தபோது, அவர் சமரசம் செய்த விதம் குறித்து கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா?  அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமின் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை

செந்தில் பாலாஜி தரப்பு :-

சட்டபூர்வமாக ஜாமீன் கிடைத்தவுடன் தான் , அவர் அமைச்சராக பதவியேற்றார்.

நீதிபதிகள்:-

அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என்று எப்படி கூற முடியும்.

நீதிபதிகள்:-

மெரிட் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை

அரசியல் சாசன பிரிவு 21 ஐ மீறியதன் காரணமாகவே ஜாமீன் வழங்கப்பட்டது

செந்தில் பாலாஜி தரப்பு:-

அவ்வாறு சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் இருந்தால், வழக்கு
விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றவேண்டும்

நீதிபதிகள்:-

வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும. என்ற கோரிக்கையை  நிராகரிக்கிறோம்.

நீதிபதிகள்:-

உங்களுக்கு ஜாமின் வழங்கிய போது நீங்கள் அமைச்சராக இல்லை என்று தெரிவித்திருந்தீர்கள். ஆனால், ஜாமின் கிடைத்த பின்பு அமைச்சராக பதவி ஏற்றி இருக்கிறீர்கள்.

செந்தில்பாலாஜி தரப்பு :-

இந்த வழக்கில் யாரையும் influence செய்யவில்லை. அவர் அமைச்சராக இருந்து சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இல்லை, அமைச்சராக இல்லை என்றாலும் அழுத்தம் கொடுக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் செய்யமாட்டார், அப்படிப்பட்ட நபரும் இல்லை.

கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு” - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி! - News7 Tamil

நீதிபதிகள்:-

உங்கள் கருத்துக்கு நாங்கள் உடன்படவில்லை.

செந்தில் பாலாஜி தரப்பு:-

தற்போது வரை நீதிமன்ற சாட்சி கூண்டுக்கு சாட்சி யாரும் வரவில்லை, அப்படி இருக்கையில் அவர் எப்படி அழுத்தம் கொடுத்திருப்பார்.

நீதிபதிகள்:-

நீங்கள் அவர்களை வரவிடாமல் தடுக்கிறீர்கள். ஒரு சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கிடைப்பது எவ்வளவு கடினமானது என்பது உங்களுக்கு தெரியாதா ? அரசியல்வாதிகள் ஜாமின் கிடைத்தவுடன் அதை மீறுகின்றனர். இது ஏற்க முடியாத ஒன்று.

அமைச்சராக இல்லை என்று கூறியதன் அடிப்படையில் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்ட நபர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பார் என வாதம் வைக்கப்பட்டது. ஆனால் நாங்கள் அந்தக் குற்றச்சாட்டைப் புறக்கணித்தோம். ஆனால் ஜாமீன் வழங்கிய சில நாட்களுக்குள் நீங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறீர்கள், அவர் மீண்டும் அமைச்சராகிறார். இது நீதிமன்றத்தை நீங்கள் கையாளும் முறை அல்ல.

செந்தில் பாலாஜி தரப்பு :-

தமிழ்நாட்டில் திமுக அரசின் காலம் இன்னும் ஒராண்டில் முடிவடையப்போகிறது. அப்போது அவரது அமைச்சர் பதவி முடிவுக்கு வந்துவிடும். இது போன்ற சூழ்நிலையில் வழக்கு விசாரணையில் செல்வாக்கை பயன்படுத்துவதற்கான வாய்ப்பில்லை.

நீதிபதிகள் :

அது அரசியல், அது குறித்து நமக்கு தெரியாது இந்த அரசு தொடருமா என்பதுசெந்தில் பாலாஜி எப்படி வழக்கில் செல்வாக்கை பயன்படுத்தினார் என்பது ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது நீங்கள் இதுபோன்று சட்ட நடைமுறைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.


source https://news7tamil.live/do-you-want-bail-do-you-want-a-position-supreme-court-questions-minister-senthil-balaji.html