23/01/2025
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைசர் மு.க. ஸ்டாலின், “மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் பணிந்துள்ளது மத்திய அரசு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைசர் மு.க. ஸ்டாலின், “மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நான் முதல்வராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க-வும் துணைபோக கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tungsten-mining-project-cancel-cm-mk-stalin-and-all-parties-leaders-welcome-8648562