ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மக்களின் 11 கேள்விகள்! 11 06 2025
1. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று சொல்லிவிட்டு தற்போது பக்கோடா கடை போடுங்கள் என ஆணவமாக பேசுவது ஏன்?
2. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைந்து வரும் போதிலும், பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காமல் மக்கள் இரத்தத்தை உறுஞ்சி எடுப்பது ஏன்?
3. விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்காமல், அவர்களை திண்டாட விடுவது ஏன்?
4. தமிழ்நாடு போன்ற பாஜக ஆளாத மாநிலங்களுக்கு தொடர்ந்து முறையாக தரவேண்டிய நிதியைக் கூட தராமல் வஞ்சிப்பது ஏன்? மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரத்தில் கூட கைவிடுவது ஏன்?
5. இன்று வரை பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் Oh My God என அஞ்சுவது ஏன்?
6. கீழடி ஆராய்ச்சிக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்காமல், சமஸ்கிருத ஆராய்ச்சிக்கும் மொழிக்கும் மட்டும் நிதி ஒதுக்குவது ஏன்?
7. மதத்தின் பெயரால் சிறுபான்மையினரை சொந்த நாட்டு மக்களிடமே
எதிரிகளாக சித்தரித்து அரசியல் செய்வது ஏன்?
8. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தி ஆதிக்கத்தை வேரூன்ற செய்ய முனைவது ஏன்?
9. ஏழை எளிய மக்களிடம் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் பணத்தை பிடுங்கிக் கொண்டு, தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வது ஏன்?
10. கருப்பு பணத்தை ஒழித்து அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என மக்களை ஏமாற்றியது ஏன்? பண மதிப்பிழப்பு என்ற போலி நடவடிக்கை மூலம் ஏழை எளிய மக்களை அலைய விட்டது ஏன்?
11. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புக்களை பாஜக கட்சியின் ஏவல் நாய்களாக மாற்றி அதன் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து ஏன்
Source DMK IT Wings DMK ITWing