இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம்: தடுப்பூசி திறன் குறைவது காரணமா? 22 5 2025
/indian-express-tamil/media/media_files/2025/05/22/fTOOCyiFhlYZ0J9yLGsl.jpg)
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம்: தடுப்பூசி திறன் குறைவது காரணமா?
ன் கிழக்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலும் சமீபத்திய வாரங்களில் புதிய கொரோனா பரவல் வழக்குகள் பதிவாகி வருகின்றன. கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து கொரோனா பரவல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இருப்பினும், பெரும்பாலான வழக்குகள் லேசானவை ஆகும் மற்றும் தீவிரம் அல்லது உயிரிழப்புகள் சம்பந்தப்பட்டவை அல்ல.
இதுவரை, பாதிப்புகள் ஆங்காங்கே பதிவாகியுள்ளன. ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சிக்கு காரணமாகக் கருதப்படும் JN.1 துணை-வகை வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் பரவி வருகிறது. ஓமிக்ரான் வகையைச் சேர்ந்த 'பைரோலா' என்று அழைக்கப்படும் BA.2.86-இன் திரிபாகும். இந்த வகை வைரஸ் தற்போதுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கவும், மேலும் எளிதில் பரவும் தன்மையையும் கொண்டது. இதுவரை, இது ஓமிக்ரானுடன் தொடர்புடைய அறிகுறிகளிலிருந்து பெரிதாக வேறுபடவில்லை" என்று டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஜதின் அஹுஜா கூறுகிறார்.
JN.1 என்றால் என்ன?