சிந்து நதி நீர் ஒப்பந்தம்: மீண்டும் பேச்சுவார்த்தைக்கு பாக்., அழைப்பு; இந்தியா ஏற்க மறுப்பு
/indian-express-tamil/media/media_files/2025/06/07/YKsQZpLF4yWGnsjn6P7W.jpg)
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: மீண்டும் பேச்சுவார்த்தைக்கு பாக்., அழைப்பு; இந்தியா ஏற்க மறுப்பு
ஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) தொடர்பாக மீண்டும் இந்தியாவிடம் பேச பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
மே 15-ம் தேதி வெளியிட்ட செய்தியின்படி, ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதற்கான இந்திய மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான தகவலுக்கு பாகிஸ்தானின் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசா முன்னரே பதிலளித்திருந்தார். தனது கடிதத்தில், இந்தியா எதிர்க்கும் ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விதிகள் குறித்து விவாதிக்க அவர் முன்வந்தார். இதன்மூலம், ஒப்பந்தத்தின் விதிமுறை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் முறையாக தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும். இந்தத் தொடர்பு 'ஆபரேஷன் சிந்தூர்' நடைபெறுவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது மற்றும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மே மாதத்தில் சில தேதிகளையும் உள்ளடக்கியிருந்தது. 7 6 2025
அதன் பின்னர், பாகிஸ்தான் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு மீண்டும் கடிதம் எழுதி, பேச்சுவார்த்தைக்கான தனது கோரிக்கையை புதுப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானிடமிருந்து 2 கூடுதல் கடிதங்கள் வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. உயர்மட்ட அரசாங்க வட்டாரங்களின்படி, இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு தற்போது ஆர்வம் இல்லை என்றும், இந்த ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கடிதங்கள், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.