ஞாயிறு, 3 மே, 2026

தமிழ்நாடு தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் என்னென்ன? முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்த தேர்தலில பதிவான வாக்குகள் மே 4-ந் தேதி (நாளை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது, வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் சிறப்பான பங்கேற்பைக் காட்டுகிறது. 

3 5 2026

நீண்ட காலமாகவே தனது சுறுசுறுப்பான மற்றும் ஈடுபாடுள்ள வாக்காளர்களுக்குப் பெயர் பெற்ற ஒரு மாநிலத்தில், அரசியல் செயல்பாடுகளில் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த ஆர்வத்தின் பிரதிபலிப்பாக இந்த அதிக வாக்குப்பதிவு அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் போட்டியிட்டனர், 

இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, வாக்குப்பதிவு நாள் அன்று, 85 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது, 2011 தேர்தலின்போது பதிவான மாநிலத்தின் முந்தைய அதிகபட்ச வாக்குப்பதிவான 78.29 சதவீதத்தை முறியடித்துள்ளர். 

தேர்தல் முடிவு அறிவிக்கும் தேதி மற்றும் நேரம்

இந்திய தேர்தல் ஆணையம் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளை அறிவிக்க உள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இறுதி முடிவுகள் மாலையில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம் . மேலும், தமிழக சட்டமன்றத் தேர்தலின் போக்குகள், எதிர்வினைகள் மற்றும் இறுதி முடிவுகளை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'  வெளியிடும் .

தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது?

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் படியாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு, மின்னணு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இவை முடிந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டு, சில நிமிடங்களிலேயே ஆரம்பகட்டப் போக்குகள் வெளிப்படத் தொடங்கும். வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் ஆகியோருக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி உண்டு. வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது. 

மேலும், அலுவல் பணியில் இருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் மொபைல்போன் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை பயிற்சி முகவர்கள் உள்ளேயே இருக்க வேண்டும். ஏதேனும் தவறு நடந்திருப்பதாக எந்தவொரு முகவருக்கும் சந்தேகம் ஏற்பட்டால், அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே அவர் மறுவாக்கு எண்ணிக்கைக்குக் கோரிக்கை விடுக்கலாம்.

தேர்தல் அதிகாரி ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளை முடிவுத் தாளில் பதிவுசெய்து, வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அவருக்கு வெற்றிச் சான்றிதழை வழங்குகிறார். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன. விதிகளின்படி, வாக்கு எண்ணிக்கை நாளிலிருந்து 45 நாட்களுக்கு அவை அங்கேயே பாதுகாக்கப்படும்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-election-result-2026-date-time-11792966