/indian-express-tamil/media/media_files/2026/07/19/tenkasi-1-2026-07-19-09-18-29.webp)
எழுதியவர்: அருண் ஜனார்தனன்
தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொடர்ச்சியான மனித குடியிருப்பு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் வணிகம் ஆகியவற்றிற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு மனித குடியிருப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எவ்வாறு தப்பிப்பிழைத்து, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்ற கதையை தொல்லியல் துறையினர் மெதுவாக வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தோண்டப்பட்டுள்ள ஒவ்வொரு அகழ்வாராய்ச்சி குழியும், மனித குடியேற்றத்தின் வியக்கத்தக்க தொடர்ச்சியான வரலாற்றின் மற்றொரு அடுக்கை வெளிப்படுத்தி வருகின்றன. இப்பகுதியின் ஆரம்பகால குடிகளால் விட்டுச்செல்லப்பட்ட மிகச்சிறிய நுண்கற்கால ஆயுதங்கள் (microlithic stone tools) முதல், பரந்து விரிந்த சங்க கால செங்கல் கட்டுமானங்கள், இரும்பு வேலைப்பாடுகளுக்கான சான்றுகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பின் போது உருவான கழிவுகள் வரை பல பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த தளம் தெற்கு தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொல்பொருள் நிலப்பரப்புகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/stone-age-tools-to-sangam-era-workshops-what-a-tamil-nadu-excavation-has-revealed-12177806





