புதன், 31 அக்டோபர், 2018

இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ள "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி"! October 31, 2018

Image

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலத்திலுள்ள சரோவர் அணை அருகே கட்டப்பட்ட 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்து உரையாற்றினார். 

ரூ.2,989 கோடியில் 600 அடி உயரத்தில் உருவாகியுள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு "Statue of Unity" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை மொத்தம் 10 மொழிகளில் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு சில மொழிகளில் மட்டுமே அவை சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்காமல் அந்த வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் அப்படியே அந்த மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

அதாவது, தமிழுக்கு "Statue of Unity" என்பதனை ஒற்றுமைக்கான சிலை என குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களோ "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதையடுத்து "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" என்ற வார்த்தையை சமூகவலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டு கலாய்த்தும், மீம்களை உருவாக்கியும் வருகின்றனர். இந்நிலையில் "Statue of Unity"யை அடுத்து "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" இணையத்தில் ட்ரெண்டாகத் துவங்கியுள்ளது. 

செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஜனவரி முதல் சேவையை தொடக்கவிருக்கும் இந்தியாவின் 'TRAIN 18' October 30, 2018

Image

உள்நாட்டில் தயாரான இந்தியாவின் அதிவேக 'ரயில்-18' ஜனவரி மாதம் முதல் தனது சேவையை தொடங்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்-18-ன் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டடன. இந்த அதிநவீன ரயிலில் எக்சிக்யூடிவ், நான்எக்சிக்யூடிவ் என தனித்தனியாக 16 பெட்டிகள் உள்ளன. இதேபோன்று மேலும் 5 ரயில்கள் சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சாதாரணமாக இயங்கும் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த ரயில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள், வைஃபை வசதிகள், குளிரூட்டப்பட்ட பெட்டிகள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த ரயில், ஜனவரி மாதம் முதல் தனது சேவையை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது! October 30, 2018

Image

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரையும்,  மூன்று   விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை. 

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த் 7 மீனவர்களையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்து, காங்கேசன்துறை முகத்தில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

அதே போன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த  6மீனவர்களையும், ஒரு விசைப்படகையும்,, மண்டபத்தை சேர்ந்த 4மீனவர்கள் ஒரு விசைப்படகை.

இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்து, காங்கேசன்துறை முகத்தில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின் அவர்களையும்,  புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் அபராத தொகை விதிக்கப்படுவதுடன்  படகுகளை அரசுடைமையாக்கப்படுமா? அல்லது விடுதலை செய்யப்படுமா? என்பது தெரியயவரும்.

இலங்கை கடற்படை நேற்று 13 மீனவர்களையும், இன்று  4 மீனவர்கள் என மொத்தம் 17 மீனவர்களை செய்துள்ளது. தமிழக மீனவர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கும் பணிக்காக மரங்களை வெட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை! October 30, 2018

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, சாலையோர மரங்களை வெட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை-நத்தம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் உள்ள மரங்களை வெட்டி, விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள முயற்சிப்பதாக மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்த தமிழரசன் என்பவர் பொதுநல மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.

அதில், மரங்களை வெட்ட இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும், மரங்களை வெட்டாமல் மாற்று இடங்களில் வைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மறு உத்தரவு வரும் வரை சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.

source:
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/30/10/2018/trees-should-not-be-cut-national-highway-expansion-work-high-court

​ஸ்ரீவைகுண்டம் அருகே கி.மு10000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருவிகள் கண்டெடுப்பு! October 30, 2018



ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கி.மு10000 ஆண்டுகள் முற்பட்ட இடைகற்கால கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

சிவகளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை ஆராய்ச்சி செய்து வரும் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர்  மாணிக்கம் என்பவர் சிவகளையில் உள்ள தரிசுகுளம் மற்றும் தம்ளார் மூக்கு ஆகிய பகுதிகளை ஆராய்ச்சி செய்தபோது அங்கு இடைகற்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய 102 கற்கருவிகளை இந்திய தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா வழிகாட்டுதல் படி கண்டுபிடித்துள்ளார்.

வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தை கற்காலம் மற்றும் உலோககாலம் என வகைப்படுத்துவார்கள். கற்காலத்தை பழங்கற்காலம் அல்லது ஐஸ் ஏஜ் என்றும் இடைகற்காலம் அல்லது மேசோலிதிக் ஏஜ் என்றும் புதிய கற்காலம் அல்லது நியோலிதிக் ஏஜ் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிவகளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கருவிகள் அனைத்தும் இடைகற்காலத்தில் மனிதன் பயன்படுத்திய இடைக்கற்கால நுண்கற்கருவிகள் ஆகும்.

இடைக்கற்காலம் என்பது பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட கற்காலம் ஆகும். இக்காலம் தான் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப காலம் என்றும் கருதப்படுகிறது. இக்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் நுண்ணிய கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளார்கள்.

இக்கற்கருவிகள் அகேட், செர்ட், ஜாஸ்பர் போன்ற கற்களால் உருவாக்கப்பட்டன. இவை அதிகபட்சம் ஐந்து சென்டிமீட்டர் அளவையுடையதலால் இவைகளை நுண்கருவி அல்லது மைக்ரோலித் என்று அழைக்கப்படுகிறது. இக்கருவிகள் முக்கோன வடிவகருவி சுரண்டும் கருவி, பிறைவடிவகருவி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கருவிகள் அனைத்தும் நுண்ணிய மற்றும் கூர்மையானவைகள் என்பதால் இவைகளை கொண்டு மான், பன்றி, ஆடு மற்றும் எலி போன்ற விலங்குகளை வேட்டையாடியுள்ளனர். வேட்டையாடிய விலங்குகளின் தோல் மற்றும் இறைச்சிகளை வெட்டுவதற்கு கூர்மையான நுண்ணிய கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.

இடைக்கற்காலத்தில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுதல் முக்கிய தொழில்களாக இருந்துள்ளன. இக்கற்காலத்தில் மனிதர்கள் ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி வாழ்ந்துள்ளனர். மேலும் பிராணிகளை வளர்த்தல் தோட்டப்பயிரிடுதல் தொடக்கால வேளாண்மை போன்ற நடவடிக்கைகளை இக்காலத்தில் தான் மனிதர்கள் தொடங்கியுள்ளனர்.

சிவகளையில் தாஜீசு பகுதியை சுற்றிலும் நீர்நிலைகளும் காடுகளும் சூழ்ந்து காணப்படுவதால், இப்பகுதியில் இடைக்கற்கால மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான எச்சங்கள் அதிகம் காணப்படுகின்றன.பொதுவாக இடைக்கற்காலத்திற்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. இவைகள் பெரும்பாலும் ஆற்றுப்படுக்கைகளில்தான் காணப்படுகின்றன.

தற்போது சிவகளை தரிசில் இடைக்கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது இப்பகுதியில் பழங்காலத்தில் தாமிரபரணி ஆறு ஓடியதற்கான சான்றாக உள்ளது. சிவகளை தரிசுகுளத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடைக்கற்கால கருவிகளைபோல சாயர்புரம் மெஞ்ஞானபுரம் கூட்டாம்புளி, கூத்தன்குழி, சாயர்புரம், கட்டாலங்குளம், குளத்தூர், புத்தன்தருவை, சூரங்குடி, நாசரேத், மானாடு, காயாமொழி போன்ற ஊர்களிலுள்ள தேரிகாடுகளிலும் இக்கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கண்டெடுக்கப்பட்டுள்ள இக்கருவிகள் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளி பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவைகளை பள்ளி கல்வி அபிவிருத்தி சங்கசெயலாளர் கோட்டை சண்முகநாதன், தலைமை ஆசிரியர் முத்துசிவன், வரலாற்று ஆசிரியர்கள், முத்தையா, குப்புசாமி, லெட்சுமி, சித்ரா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டனர்.

உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்த நீங்கள் யார்? - அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் கேள்வி October 29, 2018

Image

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்த தாங்கள் யார் என பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கேரள மாநிலம் கன்னூரில் பாஜக அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசிய அமித்ஷா, சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைக்கும், கேரள அரசின் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அமித்ஷாவின் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், அமித்ஷாவின் பேச்சு அரசியல்  சாசனத்திற்கு எதிராக உள்ளதாக கூறியுள்ளார். 

உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கை விசாரித்துவரும் நிலையில் தங்கள் விருப்பப்படி தீர்ப்பு வழங்க வேண்டுமெனக் கூற முடியுமா என்றும் அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவிற்கு கேரளாவில் என்றும் இடமில்லை என்றும் பினராயி விஜயன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

திங்கள், 29 அக்டோபர், 2018

பிட்ஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பன்னாட்டு தலைவர்கள் கண்டனம்! October 28, 2018

Image

மெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். 

பிட்ஸ்பர்க் நகரில் உள்ள யூத வழிப்பாட்டு தலத்தில் புகுந்த மர்மநபர் ஒருவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய ராபர்ட் பவர் என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக எஃபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்பாக ராபர்ட் பவர், யூதர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதுடன், அனைத்து யூதர்களையும் கொல்லப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்க வேண்டும்" : பொதுமக்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் October 28, 2018

Image

மக்கள் பிரதிநிதிகள் கடமையை செய்ய தவறும்போது பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஸ் வலியுறுத்தியுள்ளார். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த இலவச சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறினார். தேர்தலின்போது  வாக்காளர்கள் பெறும் அன்பளிப்பு என்பது அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதற்கு ஒப்பாகும் என்றும் நீதிபதி சுந்தரேஸ் தெரிவித்தார். 

மக்கள் பிரதிநிதிகள் தங்களது கடமையை மறந்ததால், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்குக் கூட மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உருவாகிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். ரோட்டரி சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புஸ்பா சத்தியநாராயணா, மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

​"சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம் October 29, 2018

Image

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீப காலத்தில் ரெட் அலர்ட் அறிவிப்புக்கு முன்பிருந்து தமிழகத்தில் மிதமாக மட்டுமே ஆங்காங்கு மழை பெய்துவருகிறது. ரெட் அலர்ட் அறிவிப்புக்கு பின் சொல்லிக் கொள்ளும்படியாக மழை ஏதுமில்லை. இந்நிலையில் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இதுவரை ஏற்படவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தக்கலை மற்றும் நாகர்கோவிலில் அதிகபட்சமாக 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தோனேஷியாவில் 188 பேருடன் சென்ற உள்ளூர் விமானம் கடலில் விழுந்து விபத்து! October 29, 2018

Image

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து, இன்று அதிகாலை புறப்பட்டுச்சென்ற உள்ளூர் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6.20 மணிக்கு, லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானம் புறப்பட்டுச்சென்றது. விமானத்தில் 188 பயணிகள் உள்பட 189 பேர் பயணம் செய்தனர். ஜகார்தாவில் இருந்து பங்கால் பினாங் பகுதிக்கு செல்ல சுமார் 1 மணி நேர பயண தூரம் உள்ள நிலையில், விமானம் புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என இந்தோனேசிய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. 

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் நிலை குறித்து எதுவும் தெரியாததால், பயணிகளின் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இதேபோன்று, கடந்த 2013ம் ஆண்டு 108 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக மைத்ரிபால சிறிசேனா அறிவிப்பு! October 27, 2018

Image

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையின் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து, பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,  இலங்கையில் முன்பு அதிபராக இருந்த ராஜபக்சே, பிரதமராக பதவியேற்றார். அதிபர் மைத்திரிபால சிறிசேனா  அவருக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையின் 11-வது பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ளது, தமிழர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என்றும் நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை, தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கும் போது, மற்றொருவருக்கு பிரதமர் பதவியினை வழங்க, அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும் ரணில் கூறியுள்ளார். 

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம், பிரதமரை பதவி நீக்குதல், அல்லது பதவியினை ராஜினாமா செய்வதன் மூலம் மட்டுமே, புதிய பிரதமரை அதிபர் தேர்வு செய்ய முடியும் என்றும், ரணில் விக்கிரமசிங்கே குறிப்பிட்டுள்ளார். சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஏதுவாக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறும் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்துவரும் நிலையில், ரணில் விக்கிரமசிங்கே, மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களிலும் தாங்கள் தான் இலங்கையின் பிரதமர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்திலும் ரணில் விக்கிரமசிங்கே தான் அந்நாட்டின் பிரதமர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சனி, 27 அக்டோபர், 2018

யாருப்பா இந்த பெண் ??


வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மோடி : மன்மோகன் சிங் October 27, 2018

Image

நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் சூழல் தரமிழந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுதிய தி பாரடாக்சியல் பிரைம் மினிஸ்டர் என்ற நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2014-ம் ஆண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என சாடினார். 

இந்தியர்கள் அனைவருக்குமான பிரதமர் என கூறும் மோடி, நாட்டில் பரவலாக நடக்கும் வகுப்புவாத வன்முறை, கும்பல் வன்முறை ஆகியவற்றைக் கண்டும், கேட்டும் கருத்து தெரிவிக்காமல் மவுனமாகவே இருப்பதாக குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு! October 27, 2018

Image

பிரதமர் மோடி ஓடலாம், ஒளியலாம், ஆனால் அவரால் சிபிஐ விவகாரத்தில் உண்மையை மறைக்க முடியாது என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சிபிஐ அமைப்பின் புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சிபிஐ அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  டெல்லி லோதி காலனியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். உடனடியாக, ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல், பிரதமர் மோடி சிபிஐ இயக்குனர் போல் செயல்படுவதாகவும், இது வெறும் பயமுறுத்தும் செயல் எனவும் விமர்சித்தார். மேலும், "ரஃபேல் ஒப்பந்தத்தை பெற்றுக் கொடுத்ததன் மூலமாக அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி அள்ளிக் கொடுத்துள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

கடைகளில் வேலை செய்பவர்கள் அமரலாம்: சட்டம் இயற்றியது கேரள அரசு! October 26, 2018


Image

கேரளாவில் கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இனி உட்கார உரிமை அளித்து கேரள மாநில அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.  

பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதற்கு செவிசாய்த்து இந்த அவசர சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்த புதிய சட்டம் மூலம்  பெண்களுக்கு இரவு நேரங்களில் வேலை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இரவு பயண வசதியையும் நிறுவனமே செய்துதர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் October 27, 2018

Image

சாலையில் பொறுப்பில்லாமல் வாகனங்கள் ஓட்டுவதால், நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

திருப்பூரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு, 19 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. 2012ம் ஆண்டு நடைபெற்ற இந்த விபத்து தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, காப்பீட்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, வாகன ஓட்டிகள், பொறுப்பில்லாமல் வாகனங்களை ஓட்டுவதால், நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

காலை இழந்த சிறுமிக்கு வழங்க உத்தரவிடப்பட்ட தொகையை 19 லட்சத்தில் இருந்து 52 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வட்டியுடன் சேர்த்து நான்கு வாரங்களுக்குள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் என்ன? October 27, 2018

Image

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் பாதிப்பின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பற்றிய முழு விவரம்.

நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் தமிழகத்தில் இரண்டாயிரத்து 175 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 23 ஆயிரத்து 294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடந்தாண்டு டெங்கு பாதிப்பால், அதிகம் பேர் உயிரிழந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.

2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 80க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலியாகியுள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 5 லட்சத்துக்கும் மேலானனோர் டெங்கு காய்ச்சலாம் பாதிக்கப்பட்ட நிலையில், 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே October 26, 2018

Image

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, அந்நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து, பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இலங்கையில் முன்பு அதிபராக இருந்த ராஜபக்சே, தற்போது பிரதமராக பதவியேற்றுள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில், அவருக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையின் 11-வது பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ளது, தமிழர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமர்  பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை, என்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவேன் என்றும், ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை, தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கும்போது, இன்னுமொருவருக்கு பிரதமர் பதவியினை வழங்க, அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும் ரணில் கூறியுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம், பிரதமரை பதவி நீக்குதல், அல்லது பிரதமர் தனது பதவியினை ராஜினாமா செய்வதன் மூலம் மட்டுமே, புதிய பிரதமரை அதிபர் தேர்வு செய்யமுடியும் என்றும், ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் ரணில் விக்ரமசிங்கே அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே, கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சில் பங்கேற்க, சென்னை வந்த இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம், ராஜபக்சே பிரதமரானதை ஏற்க முடியாது என்றும், அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், என்றும் தெரிவித்தார். மேலும், அரசியல் குழப்ப நிலை காரணமாக, தான் உடனடியாக இலங்கை திரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

"ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்? மே...மே...மே..": ரஜினியை கடுமையாக விமர்சித்த முரசொலி நாளிதழ்! October 26, 2018

Image


ரசிகர்களுக்கான நடிகர் ரஜினியின் எச்சரிக்கை கடிதம் குறித்து திமுக நாளேடான முரசொலியில் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் மே...மே...மே.. என்ற தலைப்பில் முரசொலியில்  வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், ஊர் ஊராக தெருத்தெருவாக  மன்றம் அமைத்து திரைப்படம் ரிலீசாகும் நாளே திருநாள் என்று வானவேடிக்கை எல்லாம் நடத்தி கொண்டாடிய ரசிகர்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா? என ரஜினியை கேள்வி கேட்டுள்ளது. புகழ் பாடி போஸ்டர் அடித்து ஒட்டியதையெல்லாம் பார்த்து ரசித்து கொண்டு இருந்தாய், ரசிகர்கள்  எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை தாங்கள் அறிய மாட்டீரா? என்று கேட்கப்பட்டுள்ளது. 

அப்போதெல்லாம் வாய் மூடிக் கொண்டு இருந்துவிட்டு தற்போது புத்திமதி சொல்லப்புறப்பட்டிருப்பது தான் நேர்மையா என்றும் முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. 30, 40 ஆண்டுகள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டுகாலம் உயர்த்திப் பிடித்த ரசிகர்களுக்கு அரசியலில் ஈடுபட தகுதி இல்லை என்பது எத்தகைய நியாயம் என ரஜினி ரசிகர்கள் கேட்பதாக  முரசொலியில் கேட்கப்பட்டுள்ளது. 

குடும்பத்தை, மனைவி, மக்களை பார்த்துக்கொண்டு தாங்கள் இருக்க வேண்டியதுதானே என குறிப்பிட்டுள்ள முரசொலி, ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியபோதிலும், அதற்கான  கொள்கையை எப்போதாவது அறிவித்தீர்களா என்றும் ரஜினியை வினவியுள்ளது. தங்களுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க  கிடைக்க , ரசிகர்கள் மட்டும்  நாயாய் பேயாய் உழைக்க வேண்டுமா என்றும் முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! October 26, 2018

Image

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு வாரத்தில் விசாரணையை முடிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் வெடித்தது. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இருவரையும் பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. புதிய சிபிஐ இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில் கட்டாய விடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஏ.எம்.ஜோசப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அலோக் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரிமன், அலோக் வர்மாவின் பதவி காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் மத்திய அமைச்சகத்தின் உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என்று வாதிட்டார். சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மீதான விசாரணையை 2 வாரங்களில் முடிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் விசாரணை நடத்தலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நவம்பர் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அதுவரை தற்காலிக சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவி வரும் டெங்கு! October 26, 2018

Image

மதுரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மதுரையில் காய்ச்சலுக்கு 115 பேர் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 11 பேரும், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அரியலூர் அருகே அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செந்துறையில் உள்ள அரசு முழு சுகாதார மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லை எனக் கூறப்படுகிறது. 

மூன்று மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு மருத்துவரே பணியாற்றுவதாகவும், அவரும் விடுப்பில் சென்றுவிட்டதால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ தலையிடுவதை தடுக்கவே அலோக் வர்மா மீது நடவடிக்கை! October 25, 2018


Image

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்த முறைகேட்டைப் பற்றி விசாரிப்பதை தடுக்கவே, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் ஒரு அதிகாரியிடம், சிபிஐயின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். இதன் மூலம் தன் மீது எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள பிரதமர் மோடியால் முடியும் என்று தெரிவித்த ராகுல், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நள்ளிரவில் திடீரென அகற்றப்பட்டதன் பின்னணியும் இதுதான் எனக் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் ஒன்றிணைந்தே சிபிஐ இயக்குநரை நீக்க முடியும் என்ற அரசியலமைப்புச் சட்டம் இருக்கும் நிலையில், அதனை பிரதமர் மோடி அவமதித்து விட்டதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

சிபிஐ எனப்படும் இந்தியாவின் மதிப்பு மிக்க தேசிய நிறுவனம் மீது திடீர் தாக்குதல் நடத்தியிருக்கும் பிரதமர் மோடி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு ரஃபேல் ஒப்பந்தம் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து கொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஊழலில் ஈடுபட்டதால் பீதியில் இருக்கும் பிரதமர் மோடி, சிபிஐ விசாரணை அரசியல் வாழ்க்கையை கெடுத்து விடும் என்று தெரிந்த காரணத்தாலேயே, பல்வேறு விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.

ரஃபேல் பேரம் குறித்து விசாரிக்கும்படி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மற்றும்  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அலோக் வர்மாவை சந்தித்து எழுத்துப் பூர்வமாக வேண்டுகோள் விடுத்ததையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.





source:
http://ns7.tv/ta/tamil-news/india/25/10/2018/action-against-alok-verma-stop-cbi-intervention-rafal-case

வியாழன், 25 அக்டோபர், 2018

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்! October 25, 2018

Image

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி சத்திய நாராயணன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கவில்லை என்றும், தனது தனிப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக நீதிபதி சத்திய நாராயணன் கூறினார்.

ஆளும் கட்சி எம்.எல்.எக்களால் ஆட்சிக் கவிழ்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக சபாநாயகர் சந்தேகிக்கும்போது சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ள நீதிபதி,

முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியே என தனது தீர்ப்பில் கூறினார்

தகுதி நீக்கத்திற்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றதல்ல என்பதன் அடிப்படையில் 18 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி சத்திய நாராயணா தெரிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகவும் தேவைப்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதி சத்திய நாராயணன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

வங்கிகளில் வைத்திருக்கவேண்டிய குறைந்தபட்ச இருப்புத்தொகை எவ்வளவு தெரியுமா? October 25, 2018

வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. 

அதன்படி, மாநகரம், நகரம், கிராம வங்கிகள் என்று தனித்தனியாக பிரித்து, ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளன. 

எஸ்பிஐ வங்கியில் மாநகரம் மற்றும் நகர வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 3,000 ரூபாய் இருப்பு வைக்க வேண்டும்

எஸ்பிஐயில் நகரம் மற்றும் சிறுநகர வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாயும், கிராம வாடிக்கையாளர்கள் 1000 ரூபாயும் இருப்பு வைக்க வேண்டும்

ஹெச்டிஎப்சி வங்கியில் மாநகரம் மற்றும் நகர வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் இருப்பு வைக்க வேண்டும்

அதேபோன்று சிறுநகர வாடிக்கையாளர்கள் 5000 ரூபாயும், கிராம வாடிக்கையாளர்கள் 2,500 ரூபாயும் வைக்க வேண்டும்

ஐசிஐசிஐ வங்கியில் மாநகரம் மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 10,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். 

சிறிய நகரங்களை சேர்ந்தவர்கள் 5000 ம், கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 2,000 மும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு, உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி October 24, 2018

Image

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு, உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க கோரி, பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலான சாலைகள்  அமைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறையினர் சாப்பிட கற்களும், மணல்களும் மட்டுமே மிஞ்சும் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 

இதையடுத்து வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், விவசாய நிலங்கள், ஏரிகள் போன்றவை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகிறது என்றும், இதை யாரும் எதிர்க்கவில்லை எனவும் கூறினார்.

புதன், 24 அக்டோபர், 2018

கேஸ் சிலிண்டரில் கலப்படமா?


சிறந்த சாலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டது WEF! October 24, 2018

Image

உலகில் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறந்த சாலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலை  WORLD ECONOMIC FORUM வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள்.

► உலகில் சிறந்த சாலை வசதிகள் கொண்ட நாடு சிங்கப்பூர்


► சிங்கப்பூரை அடுத்து ஐரோப்பாவின் ஸ்விட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் உள்ளன 


► ஆசியாவிலிருந்து ஹாங்காங், ஜப்பான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன


► வட அமெரிக்க - தென் அமெரிக்க கண்டங்களில் இருந்து ஒரு நாடு கூட முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை 


► சாலை வசதிகள் பட்டியலில் இந்தியா 55வது இடம் 

​பசுமை பட்டாசு என்றால் என்ன தெரியுமா? October 24, 2018

Image

பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அத்துடன் GREEN CRACKERS எனப்படும் பசுமை பட்டாசுக்கள் மட்டுமே வெடிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை பற்றிய முழு விவரம்.

2017 - டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் -  மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு பசுமை பட்டாசுகள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு அளவு குறையும்.

சராசரி பட்டாசுகள் ஏற்படுத்தும் ஒலியின் டெசிபல் அளவை விட குறைவான ஒலியே  பசுமை பட்டாசுகள் உண்டாக்கும்.

சராசரி பட்டாசுகளின் விலையை விட பசுமை பட்டாசுகளின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 - பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பிறகு  பசுமைப் பட்டாசை தயாரித்திருப்பதாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் சாம்ராட் கோஷ் தெரிவித்திருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தல் தேதியை 10 நாட்களுக்குள் அறிவிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு! October 24, 2018

Image

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரியும், 10 நாட்களுக்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகாலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்ததால், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி பணிகள் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனே உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தி உள்ளார். இந்த மனு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கடந்த (2017) ஆண்டு அக்டோபர் மாதம் தமழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 2018 ஜனவரி மாதம் தொகுதி வரையறை செய்யும் பணிகள் நிறைவடையும் எனவும், அதனடிப்படையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறியிருந்தது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்த கோரி விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்! October 24, 2018

Image

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரியும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு துணி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

விவசாய தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெங்களூர் சாலை வழியாக ஏராளமான விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி பேரணியாக சென்று, அண்ணா சிலை அருகே  முழக்கங்களை எழுப்பினர்.

லஞ்ச வழக்கில் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் ஜாமீன் மனு தள்ளுபடி! October 24, 2018

Image

லஞ்ச வழக்கில் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின்  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகன தகுதி சான்று வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கடந்த மாதம் 11ம் தேதி முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே பாபு தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி கோதண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை தொடர்வதால் ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல் 15 நாள் காவல் முடிந்ததையடுத்து, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாபு, விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ப்ரியா முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி, அடுத்த மாதம் 2ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சி தேர்தல்; இழந்தது என்ன? October 24, 2018

Image

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழல்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு முக்கியமானதாகி இருக்கிறது. 

தமிழக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த 2016 அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த திமுக, அது வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திமுகவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

தேர்தல் அறிவிப்பில் இருக்கும் குறைபாடுகளை களைந்து விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு பல முறை உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டும், இப்போது வரை தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளை நியமிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகள் மூலம் நிர்வகிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகளை அதிகாரிகள் தான் நிர்வகித்து வந்தனர். அதே போன்றதொரு நிலைமை இப்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. 

உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தின் ஆணிவேராக கருதப்படுபவை. சாமானிய மக்களும் அதிகாரத்தை நோக்கி முன்னேறுவதற்கான தளமாக உள்ளாட்சி அமைப்புகள் பார்க்கப்படுகின்றன. தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. இந்த நோய்களுக்கான முக்கியமான காரணம் சுகாதார சீர்கேடுகள். அதனை சரி செய்ய வேண்டிய கடமை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உண்டு. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் இல்லாததால் அந்தப் பணிகளில் சுணக்கம் நிலவுகிறது. 

தமிழக அரசு என்னதான் அதிகாரிகளை நியமித்தாலும், அவர்களால் மக்கள் பிரதிநிதிகள் அளவுக்கு பணியாற்ற முடியாது என்பதால் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

நான்காவது முறையாக 142 அடியை எட்டியது முல்லை பெரியார் அணை; விவசாயிகள் மகிழ்ச்சி! October 23, 2018

Image

முல்லை பெரியார் அணை நான்காவது முறையாக 142 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போது முல்லை பெரியார் அணையின் நீர்வரத்து 3 ஆயிரத்து 36 கனஅடியாக அதிகரித்து 142 அடியை எட்டியது. 

மேலும் அணையின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்து வருவதால் மதுரை மாவட்ட முதல்போக பாசனத்திற்காகவும் குடிநீர்தேவைக்காகவும் ஆயிரத்து 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எழும்பூர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 31 குழந்தைகள் அனுமதி! October 23, 2018

Image

சென்னை எண்ணூரில் காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், எழும்பூர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 31 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எண்ணூர் சத்தியவாணி முத்துநகரை சேர்ந்த சாதிக் பாஷா என்பவரின் 2 வயது குழந்தை சபீக், காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து, கடந்த 5 நாட்களாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை சஃபீக் உயிரிழந்தான். எண்ணூரில் நிலவும் சுகாதார சீர்கேடே, குழந்தையின் மரணத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் 31 குழந்தைகள் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிக குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நாட்டில் வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு! October 23, 2018

Image

நாட்டில் வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 4 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. 

ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் எண்ணிக்கை கடந்த 2014-2015ம் நிதி ஆண்டில் 88 ஆயிரத்து 649 ஆக இருந்ததாகக் கூறியுள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்த எண்ணிக்கை 2017- 2018 நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 139ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

தனி நபர் வருமான வரி பிரிவில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானத்தை கணக்கில் காட்டுபவர்களின் எண்ணிக்கை இதே கால கட்டத்தில் 48 ஆயிரத்து 416லிருந்து 81 ஆயிரத்து 344ஆக உயர்ந்துள்ளது. 

ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு தனி நபர் வருமானம் கெண்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 68 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. 

வருமானவரி கணக்கு தாக்கல்களின் எண்ணிக்கை கடந்த கடந்த 4 நிதி ஆண்டுகளில் 80 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறியுள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், 2017-18ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 6 கோடியே 85 லட்ச ரூபாயாக இருந்ததாக கூறியுள்ளது.