வெள்ளி, 30 செப்டம்பர், 2022

பேரணிக்கு அனுமதி மறுப்பு – நீதிமன்றத்தில் தமிழக அரசு

 29 09 2022

சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ம் தேதி  ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தது. உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து,  அணி வகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தனியாக வழக்கு தொடரலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி இந்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில் அரசு உத்தரவிட்டுள்ளது என்று ஆர்எஸ்எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 source https://news7tamil.live/denial-of-permission-to-rss-rally-due-to-law-and-order-problem-tamil-government.html

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஏன்?-மத்திய இணை அமைச்சர் பதில்

 

சர்வதேச சந்தையில் விலை ஏற்றத்தின் காரணமாகவே சிலிண்டர் விலை அதிகரிப்பதாக
மத்திய இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்.

சென்னை நெசப்பாக்கத்தில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிரப்பும்
நிலையத்தையும் துவக்கி வைத்த மத்திய இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர்
ராமேஸ்வர் டெலி , பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு
இணைப்புகளையும் வழங்கினார். இதையடுத்து மேடையில் பேசிய அவர் கூறியதாவது:
நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் தாமதம் ஆனது.

தமிழ்நாட்டை மனதிற்கு வைத்துக் கொண்டு தான் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தினை
செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தான் 19 லட்சம் எல்பிஜி இணைப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும்தான் உஜ்வாலா 2.0 திட்டம் 100 சதவீத இலக்கை
எங்களால் எட்ட முடிந்தது. இருப்பினும் பின் தங்கிய அடித்தட்டு மக்களுக்கு
முழுமையாக இந்த திட்டத்தை கொண்டு செல்லும் வரையில் எங்களது பயணம் தொடரும்.

ESI மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல
இடங்களில் ESI மருத்துவமனைகள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரையிலான கேஸ் பைப் லைன் கொண்டு செல்லும்
பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடியும் நிலையில் உள்ளது. இதனால் தமிழ்நாடு பயனடையும்.

சிஎன்ஜி மூலமாக வாகனங்களை இயக்கினால் மாசு குறையும். அனைத்து பெட்ரோல்

நிலையகளில் சிஎன்ஜி நிலையம் அமைக்க வேண்டும். சிஎன்ஜி எரிவாயுகளின் தேவை நாட்டில் அதிகரித்து வருகிறது என்று பேசினார் ராமேஸ்வர் டெலி.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
காமராஜர் துறைமுகத்தில் நடைப்பெற்று வரும் பணி குறித்து ஆய்வு செய்தேன்.
பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. CNG எரிவாயு விலை பெட்ரோல் விலையை விட குறைவு. தமிழகத்தில் CNG எரிவாயு நிரப்பும் நிலையத்தை அதிகரித்து மக்கள் அதிக அளவு பயன்படுத்த துவங்கினால் தமிழகத்தில் மாசுக்களை குறைக்க முடியும்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு
வருகிறது. மக்களுக்கு மருத்துவ தேவை அதிகம் உள்ள இடத்தில் ESI மருத்துவமனைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிலிண்டர் விலை அதிகரித்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்புகிறீர்கள். சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் இறக்கம் என உள்ளது. சர்வதேச அளவில் விலை ஏற்றம் ஆனால் அதன் விளைவு இங்கேயும் அதிகரிக்க காரணமாகிறது. சிலிண்டர் மாணியத்தை பொறுத்தவரை முழுமையாக நிறுத்தவில்லை. காஷ்மீரிலும் ஒரு சில மாநிலங்களில் வழங்கப்பட்டு வருகிறது என்றார் ராமேஸ்வர் டெலி.

source https://news7tamil.live/why-the-increase-in-gas-cylinder-price-union-ministers-answer.html

கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு

 29 9 2022


கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழமையான கறுப்பு, சிவப்பு இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை, தொழில் முறை, இன மரபியல், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை அறியும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 8 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 11ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வில் இதுவரை சுடுமண் உருவம், யானை தந்தத்தில் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய உருளை வடிவ மணி, தந்தத்தினாலான பகடை காய், காதணி, சுடுமண்ணாலான தக்களிகள், காதணிகள், ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், சங்கினாலான வளையல்கள், வட்டசில்லுகள் போன்ற 1500 க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாளிக்குள் கருப்பு சிவப்பு நிற குவளைகளுடன் 40 செமீ நீளம் கொண்ட இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாள் எது போன்ற பயன்பாட்டை கொண்டது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றனர்


source https://news7tamil.live/underground-excavation-invention-of-the-iron-sword.html

இதற்கு முன் நடந்த அணிவகுப்புகளில் என்ன நடந்தது?

 

இதற்கு முன் நடந்த RSS அணிவகுப்புகளில் என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் RSS அணிவகுப்பு நடக்க கூடாது என்று பலர் கூறிவருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளில் நடைபெற்ற RSS அணிவகுப்புகளில் என்ன நடந்தது என்பதை பற்றி விவரிக்கிறது இந்த பதிவு.



திருமணமான, திருமணம் ஆகாத அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான சட்டப்பூர்வ கருக்கலைப்பு உரிமை – சுப்ரீம் கோர்ட்

 29 09 2022 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு 1971-ஆம் ஆண்டு சட்டம் திருமணமான பெண்களைப் பற்றியது, 2021 திருத்தத்திற்கான விஷயங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் இடையில் வேறுபடுவதில்லை, எனவே, பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்புக்கு அனைத்துப் பெண்களுக்கும உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் தனிச்சிறப்பு மற்றும் ஒவ்வொருவருக்கும் சூழ்நிலைகள் மாறுபடலாம் மற்றும் பல்வேறு பொருளாதார, கலாச்சார அல்லது சமூக காரணிகள் இதில் பங்கு வகிக்கின்றன.

1971 ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் (எம்.டி.பி) கீழ் திருமணமான பெண்களுக்குக் கருவைக் கலைப்பதற்கு இருக்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கும் உண்டு என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு 1971-ஆம் ஆண்டு சட்டம் திருமணமான பெண்களைப் பற்றியது, 2021 திருத்தத்திற்கான விஷயங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் இடையில் வேறுபடுவதில்லை, எனவே, பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்புக்கு அனைத்துப் பெண்களுக்கும உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளார்.

திருமணமான பெண்களுக்கும் திருமணமாகாத பெண்களுக்கும் இடையிலான செயற்கையாக உள்ள வேறுபாட்டை தொடர முடியாது என்றும், இந்த உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்த பெண்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் இந்த அமர்வு கூறியது.

இனப்பெருக்க உரிமையை வலியுறுத்துவது உடல் ரீதியான சுதந்திரத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், கருத்தடை தேர்வு உரிமை, குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் கருக்கலைப்பு செய்யலாமா வேண்டாமா என்பதை சமூக காரணிகளின் செல்வாக்கு இல்லாமல் எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒரு பெண்ணுக்கு தேவையற்ற கர்ப்பத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைத்து மதிப்பிட முடியாது. அது கருவின் ஆரோக்கியம் தாயின் மன நலனைப் பொறுத்தது. எம்.டி.பி சட்டத்தின் விளக்கம் சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் குறித்த நாடாளுமன்ற விவாதப் புள்ளி விவரங்கள், 67 சதவீத கருக்கலைப்புகள் பாதுகாப்பற்றவை என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் குளோபல் ஹெல்த் ஸ்டடியை நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது. பாதுகாப்பான கருக்கலைப்புக்கான அணுகலை மறுப்பது பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை நாடுவதை அதிகரிக்கும் என்றும் அது கூறியது.

பாலியல் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு ஆகியவற்றில் தப்பிப்பிழைத்தவர்களில் திருமணமான பெண்களும் இருக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது. ஏனெனில், ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் கணவரின் செயலால் கர்ப்பமாக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

இந்தச் சூழலில், பாலியல் பலாத்காரம் என்பது எம்.டி.பி சட்டம் மற்றும் அதன் விதிகளின் அர்த்தத்தில் மட்டுமே திருமண பலாத்காரம் என்ற பொருளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. எம்.டி.பி சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் ஆகியவை இணைத்துப் பார்க்க வேண்டும் என்றும், எம்.டி.பி சட்டத்தின் கீழ் சிறார்களின் அடையாளத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/all-women-married-or-unmarried-have-right-to-safe-and-legal-abortion-supreme-court-order-518239/

2023 அக்டோபர் முதல் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்

 30 09 2022

அனைத்து பயணிகள் கார்களிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை அக்டோபர் 1, 2023க்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

அக்டோபர் 1, 2022 முதல் எட்டு இருக்கைகள் கொண்ட வாகனங்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. நாட்டில் வாகனத் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடைகளை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறினார்.

வாகனத் துறையால் எதிர்கொள்ளப்படும் உலகளாவிய சப்ளை சங்கிலித் தடைகள் மற்றும் பெரும் பொருளாதாரச் சூழலில் அதன் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பயணிகள் கார்களில் (எம்-1 வகை) குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்கும் திட்டத்தை 2023அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று நிதின் கட்கரி ட்வீட் செய்துள்ளார்.

மோட்டார் வாகனங்களின் விலை மற்றும் மாறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அவற்றில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை என்றும் நிதின் கட்கரி கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/govt-defers-mandate-of-six-airbags-in-passenger-cars-to-october-2023-says-nitin-gadkari-518288/

பி.எஃப்.ஐ தடை மேல்முறையீடு: யு.ஏ.பி.ஏ தீர்ப்பாயம் எப்படி செயல்படுகிறது?

 

29 09 2022

மத்திய அரசால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மீதான தடையைத் தொடர்வதற்கான அரசாங்க அறிவிப்பை உறுதி செய்ய இந்த வழக்கை தீர்ப்பாயத்தின் முன் வைக்க விரும்புகிறது.

யு.ஏ.பி.ஏ தீர்ப்பாயம் என்றால் என்ன?

யு.ஏ.பி.ஏ சட்டம் விதித்த தடை நீண்ட காலம் தொடர அரசாங்கத்தால் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.

ஒரு அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவிப்பதற்கான அதிகாரத்தை யு.ஏ.பி.ஏ -இன் பிரிவு 3 இன் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. யு.ஏ.பி.ஏ பிரிவு 4 -இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம், தீர்ப்பாயம் அதில் செய்யப்பட்ட அறிவிப்பை உறுதிசெய்து, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் வரை, அத்தகைய அறிவிப்பு எதுவும் நடைமுறைக்கு வராது என்று இந்த விதி கூறுகிறது.

எனவே, தீர்ப்பாயம் உறுதி செய்யும் வரை அரசு உத்தரவு அமலுக்கு வராது. இருப்பினும், விதிவிலக்கான சூழ்நிலைகளில், அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தவுடன் அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும். தீர்ப்பாயம் அதை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

தீர்ப்பாயத்தின் நடைமுறை

யு.ஏ.பி.ஏ பிரிவு 4 -இன் படி, மத்திய அரசு ஒரு அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்த பிறகு, அந்த அறிவிப்பு 30 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தை அடைய வேண்டும். இந்த நடவடிக்கைக்கு போதுமான காரணம் இருக்கிறதா இல்லையா என்று தீர்ப்பளிக்க வேண்டும்.

இதற்குப் பிறகு, அந்த அமைப்பை ஏன் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கக் கூடாது என்று 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் மூலம் அமைப்புக்கு தீர்ப்பாயம் அழைப்பு விடுக்கிறது. இது முடிந்ததும், ஐகோர்ட் விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கும்.

தீர்ப்பாயத்தின் அமைப்பு

உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கக்கூடிய ஒருவரை மட்டுமே இந்த தீர்ப்பாயம் கொண்டுள்ளது. தீர்ப்பாயத்தில் ஒரு காலியிடம் (தற்காலிகமாக இல்லாதது தவிர) ஏற்பட்டால், மத்திய அரசு மற்றொரு நீதிபதியை நியமித்து, காலியிடத்தை நிரப்பிய பிறகு நடவடிக்கைகள் தொடரும்.

மத்திய அரசு அதன் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணியாளர்களை தீர்ப்பாயத்திற்கு வழங்க வேண்டும். தீர்ப்பாயத்திற்கு ஏற்படும் அனைத்து செலவுகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து அளிக்கப்படுகிறது.

தீர்ப்பாயத்தின் அதிகாரங்கள்

தீர்ப்பாயம் அதன் அமர்வுகளை நடத்தும் இடம் உட்பட அதன் அனைத்து நடைமுறையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் கொண்டது. இதனால், அந்த மாநிலங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்த முடியும்.

தீர்ப்பாயம் விசாரணை மேற்கொள்வதற்கு, 1908 ஆம் ஆண்டு சிவில் நடைமுறைச் சட்டத்தின் கீழ் சிவில் நீதிமன்றத்தில் உள்ள அதே அதிகாரங்களை தீர்ப்பாயம் கொண்டுள்ளது. சாட்சியை வரவழைத்து, அவரைப் பிரமாணத்தின் பேரில் விசாரிப்பதில் அவை பயன்படுத்தப்படலாம்; எந்தவொரு ஆவணம் அல்லது ஆதாரமாக தாக்கல் செய்யக்கூடிய பிற ஆவணங்கள், பிரமாணப் பத்திரங்களில் ஆதாரங்களைப் பெறுதல்; எந்தவொரு நீதிமன்றம் அல்லது அலுவலகத்திலிருந்தும் எந்தவொரு பொதுப் ஆவணங்களைக் கோருதல்; சாட்சிகளை விசாரிப்பதற்காக ஏதேனும் குழு அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

தீர்ப்பாயத்தின் முன் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளும் நீதித்துறை நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.

தீர்ப்பாயத்தின் பதிவுகள்

சிமி அமைப்பு தடை செய்யப்பட்ட விஷயத்தில் சில விதிவிலக்குகளுடன் அரசாங்க அறிவிப்புகள் பெரும்பாலும் தீர்ப்பாயங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிகி அமைப்பு வழக்கில், 2008-இல் தீர்ப்பாயம் அதன் மீதான தடையை விரைவில் நீக்கியது. ஜாகிர் நாயக், நீதிக்கான சீக்கியர்கள் அல்லது ஜே.கே.எல்.எஃப் ஆகியவற்றுக்கு எதிரான அனைத்து தடை நீட்டிப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் ஓரளவுக்கு தெளிவற்றதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. யு.ஏ.பி.ஏ தடை பற்றிய தகவல்களை பொதுவில் வெளியிட அனுமதிக்கவில்லை. அரசாங்கம் சீல் வைக்கப்பட்ட கவரில் சாட்சியங்களை வழங்குவதால், ஒரு அமைப்பு தன்னைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/explained/appealing-the-pfi-ban-how-uapa-tribunal-works-518223/

தடை செய்த வரலாறு…பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ்

 

29 09 2022

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை இப்போது பார்ப்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, கோர்ட்டின் அனுமதி இருந்தும் கூட ஆர்.எஸ்.எஸ். பேரணியை தடை செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாராட்டுகிறோம். முதலமைச்சர் மதசார்பின்மை மீது அசைக்க முடியாது நம்பிக்கை கொண்டவர். எனவே அவர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் சிறப்புடையது, என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை நியாயம்! காந்தியின் பேரால் மனித சங்கிலியை தமிழ் நாடு அரசு ஆதரிக்க வேண்டும் ! தேசத் தந்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில், தமிழ் நாட்டில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது.

அதே சமயம், காந்தி பிறந்த நாளில், மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்று செய்திகள் வருகின்றன. அவ்வாறானால் அது சரியான முடிவல்ல.

தமிழ் நாடு அரசு மதவெறி அமைப்புகளையும், மத நல்லிணக்க நடவடிக்கைகளையும் நேர்கோட்டில் வைத்து பார்ப்பது மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த உதவாது. இவ்விசயத்தில், தமிழ் நாடு அரசிடமும், காவல்துறையிடமும் சட்டப்படி அனுமதி பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முயற்சி செய்வோம். என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், RSS ஒரு மதவெறி ஃபாசிச அமைப்பு; அரசியல் கட்சியல்ல. அது நடத்துவதாக அறிவிக்கப்பட்ட அணிவகுப்பைத் தடைசெய்த அதே வேளையில் இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய அரசியல் கட்சிகள் அறிவித்த மனித சங்கிலிக்கும் தடை விதித்தது எவ்வகையில் பொருந்தும்? மனித சங்கிலிப் போராட்டத்திற்கு மதிமுக, தவாக, நாதக, மமக, இ.யூ.மு.லீக், தேசியலீக், எஸ்டிபிஐ, சிபிஐ (எம்எல்-விடுதலை) போன்ற அரசியல்கட்சிகளும் திக, தபெதிக, திவிக, தபுக, மக்கள்மன்றம் உள்ளிட்ட சமூகநீதி இயக்கங்களும் பங்கேற்கிற சமூகநல்லிணக்க மனிதசங்கிலிக்கும் தடை விதித்திருப்பது எவ்வகையில் நீதியாகும்?

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாது! சனாதனப் பயங்கரவாத அமைப்புகளையும் தடைசெய்யவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ.வியனரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ் நாட்டில்  மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டையே அமளிக்காடாக மாற்ற திட்டமிட்டிருந்த இந்து மதவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்குத் தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவு சிறப்புக்குரிய தாகும்.

காவல் துறையின் இந்நடவடிக்கைக்கு ஆணைப்பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரிய நேரத்திலான இந்த சரியான முடிவை தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டிலும் இன்றைய சூழ்நிலை போலவே,   ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பா.ஜ.க.வினர், தமிழகத்தில் இராஜேந்திர சோழன் முடி சூட்டிக் கொண்ட 1,000 ஆவது ஆண்டை காரணம் காட்டியும்  ஆர்.எஸ்.எஸ் ஆண்டு விழா நடத்துவதாகவும் கூறி  தமிழ்நாடு முழுவதும் அதைக் கொண்டாடுவதற்காக 9.11.2014 நாளன்று  ஆர்.எஸ்.எஸ் அமைப்புப் பேரணி நடத்த முடிவு செய்து தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியது. அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு  எந்த பேரணிக்கும் அனுமதி கிடையாது என அறிவித்தது.

காவல்துறைச்  சட்டம் பிரிவு, 13 பி மற்றும் சென்னை மாநகர  காவல் சட்டம் பிரிவு, 41 ஏ ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ் நாடு முழுவதும் காவல்துறை அனுமதி மறுத்த வரலாறு தமிழ்நாட்டிற்குண்டு.

அப்போதும் தற்போது போன்றே  ஆர்.எஸ்.எஸ். விழாவைக் கொண்டாட, அனுமதி அளிக்க, தமிழ்நாடு அரசு  ஆணைப் பிறப்பிக்க வேண்டும் எனகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் வழக்குத் தொடுத்தனர்.

இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட பிறகு…  உயர்நீதி மன்றம், வெள்ளைச் சட்டை, காக்கி அரைக்கால் சட்டை, காவல் மற்றும் இராணுவத்தின் சீருடை அல்ல என கூறியதோடு, சில  கட்டுப்பாடுகளுடன் பேரணிக்கு  அனுமதி அளித்தது..

ஆனால் அன்றைய முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா இத்தகைய பேரணிகளை அனுமதிப்பது அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக் காடாக்கிவிடும்,  சமய சிறுபாண்மை மக்கள் எனது தலைமையிலான இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கைக்கு குந்தகம் விளைவித்து விடும் என கூறி அனுமதி மறுப்பில் உறுதியாக நின்று தமிழ்நாடு முழுவதும் அனுமதி கோரியவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையிலடைத்தார்.

தமிழ்நாட்டின் அந்த வரலாற்று சிறப்பை மீண்டும் புதுபித்து தமிழ்நாடு  மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கையை  எடுத்து தமிழ்நாட்டின் “அமைதிப் பூங்கா” பெயரையும் இங்குள்ள சமூக நல்லிணக்க பண்பாட்டு சூழலையும்  பாதுகாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் என்ற  இந்துமத அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுத்து தமிழ்நாட்டின் தனித் தன்மையும் சமூக நல்லிணக்க பண்பாட்டையும் பாதுகாத்திருப்பது அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து சனநாயக ஆற்றல்களாலும் வரவேற்று பாராட்டப் படுகிறது என கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govt-denied-permission-to-rss-rally-leaders-reactions-518266/

தமிழக காவல் துறை சீராய்வு மனு

 

29 09 2022

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு, அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெற நீதிபதி உத்தரவளித்திருந்தார். அதனை, தற்போது மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கலை தமிழக காவல் துறை தொடுத்துள்ளனர்.

கடந்த 22ஆம் தேதி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக தகவல் பரிமாறப்படுகிறது. 

இதை தொடர்ந்து, ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் சீராய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்று சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

எனவே, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-department-review-petition-for-rss-rally-518285/

பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்; எங்களுக்கு தொடர்பில்லை என எஸ்.டி.பி ஐ விளக்கம்

 30 09 2022


பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்; எங்களுக்கு தொடர்பில்லை என எஸ்.டி.பி ஐ விளக்கம்

பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்திற்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுப்பு தெரிவித்து எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் விளக்க மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

அதில் பொள்ளாச்சி குமரன் நகரில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு, மற்றும் கையெரி குண்டு வீசப்படும் எனவும், சட்டம் ஒழுங்கு பாதுகாத்துக் கொள்ளவும் என எழுதப்பட்ட அந்த கடிதத்தில் குமரன் நகர் எஸ்.டி.பி.ஐ என குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானதோடு, செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கோவை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் இக்பால் தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு ஒன்று அளித்துள்ளனர்.

அதில் காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்திற்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேண்டுமென்றே கோவையில் தற்போது உள்ள சூழ்நிலை பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் மர்ம நபர்கள் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டு வீன் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் உண்மையான நபர்களை கண்டறிய வேண்டும் எஸ்.டி.பி.ஐ கட்சி பெயரை வைத்து இந்த கடிதம் பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை


source https://tamil.indianexpress.com/tamilnadu/sdbi-explanation-on-kovai-bomb-threatening-letter-518256/

ரஷ்யா ஆயுதங்கள், எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா விசா பிரச்னை ஆகியவை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்

 

28 09 2022

ரஷ்யா ஆயுதங்கள், எரிபொருள் விலை உயர்வு, அமெரிக்கா விசா பிரச்னை ஆகியவை குறித்து அமெரிக்காவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியவற்றின் முக்கிய பகுதிகள் இங்கே.

உக்ரைனுடன் போர் நடந்து வரும் நிலையிலும், ராணுவ உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களை இந்தியா பெறுவதில் ரஷ்யாவுடன் எந்த சிரமமும் இல்லை என்று இந்தியா செவ்வாய்கிழமை கூறியது.

ராணுவ உபகரணங்களில் (ரஷ்யாவிலிருந்து), எனது அறிவுக்கு எட்டிய வரையில், கடந்த காலத்தில் ரஷ்யாவிடமிருந்து பெற்ற உபகரணங்களின் சேவை மற்றும் உதிரி பாகங்கள் வழங்குவதில் எந்த குறிப்பிட்ட சிக்கலையும் சமீபத்திய மாதங்களில் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை, “என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறினார்.

“எங்கள் இராணுவ உபகரணங்கள் மற்றும் தளங்களை நாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது பிரச்சினை அல்ல, நேர்மையாக, இது ஒரு புதிய பிரச்சினை அல்லது புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக குறிப்பாக மாறிய ஒரு பிரச்சினை,” என்று அவர் கூறினார்.

இந்தியா, உலகெங்கிலும் உள்ள சாத்தியக்கூறுகளை உற்று நோக்குகிறது. “தொழில்நுட்பத்தின் தரம், திறனின் தரம், அந்த குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் விதிமுறைகள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கிறோம், மேலும் எங்கள் தேசிய நலனுக்காக நாங்கள் நம்பும் தேர்வை நாங்கள் செய்கிறோம்” என்று ஜெய்சங்கர் கூறினார்.

உதாரணமாக, கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா உண்மையில் அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளது. “உதாரணமாக, விமானம் – C-17, C-130, P-8, அல்லது Apache ஹெலிகாப்டர் அல்லது Chinooks அல்லது Howitzers, M777 Howitzers ஆகியவற்றை நீங்கள் கருத்தில் கொண்டால் – நாங்கள் சமீபத்தில் பிரான்சில் இருந்து அவர்களின் ரஃபேல் விமானத்தை வாங்கினோம். நாங்கள் இஸ்ரேலில் இருந்தும் பெற்றுள்ளோம்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

“எனவே, எங்களிடம் மல்டி-சோர்ஸிங் பாரம்பரியம் உள்ளது, எங்களைப் பொறுத்தவரை, ஒரு போட்டி சூழ்நிலையிலிருந்து உகந்த ஒப்பந்தத்தை எவ்வாறு பெறுவது என்பது உண்மையில் இதுதான்” என்று ஜெய்சங்கர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.

எரிபொருள் விலை உயர்வு குறித்து இந்தியா கவலை

தலா 2,000 டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியா, ரஷ்யா-உக்ரைன் மோதலால் எரிபொருள் விலை உயர்வு குறித்து கவலை கொண்டுள்ளது, மேலும் அது “எங்கள் முதுகை உடைக்கிறது” என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர், வளரும் நாடுகளிடையே தங்கள் எரிசக்தி தேவைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பது குறித்து மிகவும் ஆழ்ந்த கவலை உள்ளது என்றார்.

உக்ரைன் போரைப் பற்றி பேசுகையில், “இந்த மோதல் யாருடைய நலனுக்காகவும் இல்லை என்று நாங்கள் தனிப்பட்ட முறையில், பகிரங்கமாக, ரகசியமாக பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு திரும்புவதே சிறந்த வழி என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்”, என்றார்.

ஜெய்சங்கர் ரஷ்ய எரிபொருள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

“கடந்த காலங்களில் நாங்கள் ஏதாவது பங்களிக்க முடிந்த போதெல்லாம், நாங்கள் அதற்குத் திறந்துள்ளோம், இப்போது சில சிக்கல்கள் உள்ளன, கடந்த சில மாதங்களில் எரிசக்தி சந்தைகள் ஏற்கனவே பெரும் அழுத்தத்தில் உள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விலையேற்றத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, பெரும்பாலும் கிடைக்கும் தன்மையிலும் உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் வரையறுக்கப்பட்ட எரிசக்திக்கான போட்டியில் உள்ளன.” என்று கூறினார்.

விசா பிரச்னை குறித்து அமெரிக்காவில் ஜெய்சங்கர் ஆலோசனை

வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் செவ்வாயன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுடனான சந்திப்பில், இந்தியாவில் இருந்து விசா விண்ணப்பங்கள் தேங்கி இருப்பது குறித்த பிரச்சினையை எழுப்பினார், இந்த விஷயத்தில் அமெரிக்க உயர் தூதர் தாம் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அதைத் தீர்க்கும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.

“திறமையின் வளர்ச்சி மற்றும் இயக்கம் ஆகியவற்றை எளிதாக்குவது எங்கள் பரஸ்பர ஆர்வத்தில் உள்ளது. இது குறித்த தடைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம், ”என்று ஜெய்சங்கர் கூறினார்.

தொற்றுநோய் காரணமாக மார்ச் 2020 இல் உலகெங்கிலும் உள்ள அனைத்து விசா செயலாக்கங்களையும் வாஷிங்டன் நிறுத்திய பின்னர், அமெரிக்க விசா சேவைகள் ஒரு பின்னடைவை சரி செய்ய முயற்சிக்கின்றன.

எச்-1பி மற்றும் தொழில் நுட்பத் துறையில் உள்ள பல திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை விசாக்களைப் பெறுபவர்களில் இந்தியர்கள் பெரும் பகுதியினர்.

H-1B விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும், இது அமெரிக்க நிறுவனங்களுக்கு கோட்பாட்டு அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்புத் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது.

பொது வெளியில் தோன்றிய சீன அதிபர்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் செவ்வாயன்று கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காட்சியை பார்வையிட்டார், செப்டம்பர் 16 அன்று எஸ்.சி.ஓ உச்சிமாநாட்டில் இருந்து திரும்பிய பிறகு முதல் முறையாக பொதுவில் தோன்றினார், முன்னதாக மாநாட்டில் இருந்து திரும்பிய அவர் வெளிச்சத்தில் வரமால் இருந்தது பல்வேறு  வதந்திகளைத் தூண்டியது.

கடந்த தசாப்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அந்நாட்டின் மகத்தான சாதனைகள் குறித்த கண்காட்சியை ஜி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டதாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்காட்சியில் பேசிய அவர், சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசத்தின் புதிய வெற்றியை நோக்கி உறுதியுடன் முன்னேற ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் என்று அறிக்கை கூறியது.

source https://tamil.indianexpress.com/international/jaishankar-talks-about-russian-military-assistance-oil-price-hike-h1b-visa-at-america-517607/