திங்கள், 28 பிப்ரவரி, 2022

சாதிய கொடுமையால் இஸ்லாத்துக்கு மாறிய பட்டியலின மக்கள்

25 2 2022  தேனி அருகே சாதிய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்காக 8 குடும்பங்களைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித்களாக இருப்பதால் சுயமரியாதை கிடைப்பதில்லை எனக் கூறி கடந்தாண்டு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தலித் சமுதாயத்தினர் இஸ்லாம் மதத்தை தழுவினர். மாநிலம் முழுவதும் பெரும் பேசு பொருளான இச்சம்பவத்தைப் போல தேனியிலும் தற்போது தலித் சமுதாயத்தினர் 40பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.‌

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது டொம்புச்சேரி கிராமம்.‌ பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் அப்பகுதியில் தலித் சமுதாயத்தினரும் ஏறக்குறைய நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் சாதிய வன்கொடுமைகளால் நிகழும் தாக்குதலில் இருந்து மீள்வதற்காக  டொம்புச்சேரி கிராமத்தில் வசிக்கும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த  8 குடும்பங்களில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 40பேர் அன்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.

source https://tamil.news18.com/news/tamil-nadu/theni-district-theni-dalits-converted-to-islam-due-to-caste-oppression-aru-703011.html

இஸ்லாமிய ம்தமாற்றம்

இஸ்லாமிய ம்தமாற்றம்

10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு

 28 2 2022

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து 8,013 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாம் அலையானது கடந்த 2021ம் ஆண்டில் இறுதியில் பரவத் தொடங்கி ஜனவரி வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இரண்டாம அலைக்கு பிறகு மக்கள் அனைவரும் மீண்டும் அதிக பாதிப்புக்குள்ளாகினர். தற்போது சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கையாக கணிசமாக குறைந்துவருகிறது. டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022ல் 1 லட்சத்தை தொட்ட தினசரி பாதிப்பானது படிப்படியாக குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் 8.013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சிகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 8.013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு 16,765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,07,686ஆக அதிகரித்துள்ளது. மேலும் 119 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,13,843 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,23,828 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை பரொசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76,74,81,346 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்து 1,02,601 என்ற எண்ணிக்கையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/less-than-10-thousand-daily-corona-exposure-in-the-country.html

ஆஸ்திரேலியாவில் வெள்ளம்: 7 பேர் உயிரிழப்பு.

 28 2  2022

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடலோர பகுதிகளில் புயல் காற்று வீசி வருவதன் எதிரொலியாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் 4.6 அடி உயரம் வரை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

மீட்புப்படையினர் குவிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் பெருகிய திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

வாகனத்துடன் நீரில் மூழ்கிய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரில் கார்களும் கட்டடங்களும் வெள்ளத்தில் மூழ்கியதோடு, 1,400க்கும் அதிகமான வீடுகளில் வெள்ளம் புகுந்ததாக கூறப்படுகிறது. பல்லாயிரம் வீடுகளில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

நகரில் உயர்ந்துவரும் நீர்மட்டம் அந்த வட்டாரத்தில் வெள்ளத்தை அதிகரிக்கும் என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. தென்கிழக்கு மாநிலமான குவீன்ஸ்லந்தில் எந்நேரமும் பெருமழை கொட்டித் தீர்க்குமென வானிலை அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்தனர்.

தற்போது அங்கே கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான பிரிஸ்பேனின் சில பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கிழக்கு கடற்கரை பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நேற்று பிரிஸ்பேனின் வடக்கு பகுதியில் 59 வயதுடைய முதியவர் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கிய சிறிய ஓடையை கடக்க முயன்று நீரில் மூழ்கி இறந்ததாக குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பாகவும், குடியிருப்பவர்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுகிழமை) முதல் பிரிஸ்பேன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உதவிக்காக 100 க்கும் மேற்பட்ட அவசரகாலக் குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்பேன் புறநகர்ப் பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 2300 க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், முக்கிய சாலைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பிரிஸ்பேன் முழுவதும் ரயில் மற்றும் படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

source https://news7tamil.live/australia-floods-7-dead.html

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை.

 28 2 2022 ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி இரணைத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி லெனின்குமார், ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை அடுத்து யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 12 மீனவர்களும் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்னும் ஓரிரு நாட்களில் மீனவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் மேலும் 47 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர்.

source https://news7tamil.live/tamilnadu-fishermans-release-srilanka-court.html

ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா; தேஜஸ்வி வருகை

 

Tejashwi attend Stalin’s Book release event in Chennai: 28 2 2022 சென்னையில் நடைபெறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில், பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தேஜஸ்வி யாதவ், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஷியாம் ரஜக் தெரிவித்தார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது அரசியல் பயணம் குறித்து எழுதிய புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்ள உள்ள நிலையில் தற்போது தேஜஸ்வி யாதவ்வும் கலந்து கொள்கிறார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் வாரிசாகக் கருதப்படும் தேஜஸ்வி, பிராந்தியக் கட்சிகளின் ஒற்றுமைக்காக குரல் கொடுத்து வரும் திமுக தலைவரைச் சந்திக்க வருவதால், அவரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேஜஸ்வி யாதவ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்தார்.

காங்கிரஸின் சீட் பகிர்வு கோரிக்கையை புறக்கணித்து, வரவிருக்கும் கவுன்சில் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட ஆர்ஜேடி முயற்சித்து வருவது, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பீகாரில் மிகப்பெரிய கட்சியாக தன்னை நிலைநிறுத்துவதில் அக்கட்சி எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) எதிராகப் போராட திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல பிராந்தியக் கட்சிகளால் பரிந்துரைக்கப்படும் மூன்றாவது அணியில் சேர தேஜஸ்வி ஆர்வமாக இருப்பதாக ஊகங்கள் உள்ளன. “தேஜஸ்வி நிச்சயமாக டிஎம்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் உட்பட முக்கிய பிராந்திய தலைவர்களுடன் தனது உறவை வலுப்படுத்துவதன் மூலம் தேசிய தலைவராக தனது இமேஜை அதிகரிக்க முயற்சிக்கிறார்” என்று மூத்த ஆர்ஜேடி தலைவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tejashwi-attend-stalins-book-release-event-in-chennai-417867/

SWIFT என்றால் என்ன? ரஷ்யா நீக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

 

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து ரஷ்ய நாட்டு வங்கிகளை விலக்குவதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது “சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவது” என்று கூட்டறிக்கை கூறுகிறது. இதன்படி ரஷ்ய வங்கிகள் தங்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வங்கிகளுடன் பாதுகாப்பாக தொடர்பு கொள்ள முடியாது அர்த்தமாகும்.

இந்தக் கூட்டுத் தடையானது, உக்ரைனுக்கு ரஷ்ய படைகள் நுழைந்தபிறகு, மாஸ்கோவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கையாகும். ஏனென்றால், முக்கிய இயற்கை வளங்கள் வர்த்தகத்திற்காக SWIFT தளத்தை பெரிதும் நம்பியிருக்கும் ஒரு நாட்டை மோசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான வருமானத்தை பாதிக்கும்.

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகமான SWIFT-லிருந்து ஒரு நாட்டைத் துண்டிப்பது ஒரு நாட்டின் இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதற்குச் சமமாகும் என கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் ஒரேயொரு நாடு மட்டுமே இந்த சேவையிலிருந்து நீக்கப்பட்டது. அது ஈரான். இதனால், அந்நாடு வெளிநாட்டு வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது.

தற்போது, ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கை ஓரளவு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. சில ரஷ்ய வங்கிகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை மேலும் விரிவுப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SWIFT என்றால் என்ன?

SWIFT என்பது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகம் ஆகும். பணப் பரிமாற்றங்கள் போன்ற உலகளாவிய பணப் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ள நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பான தளமாகும்.

SWIFT வாயிலாக பணத்தை பரிமாற்றம் செய்திட முடியாது. 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 11,000 க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே உள்ளக செய்தியிடல் அமைப்பாக செயல்படுகிறது.

பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட இந்நிறுவனம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகிய பதினொரு தொழில்துறை நாடுகளின் மத்திய வங்கிகளால் கண்காணிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் நோக்கம் என்ன?

SWIFT தளத்திலிருந்து ரஷ்ய வங்கிகளைத் நீக்குவது, அந்நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் வார்த்தைகளில் சொல்லப்போனால், ரஷ்யா பணப்பரிவர்த்தனைக்கு “டெலிபோன் அல்லது ஃபேக்ஸ் இயந்திரத்தை” சார்ந்திருக்க வேண்டிவரும்

ரஷ்ய மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் செர்ஜி அலெக்சாஷென்கோவின் கூற்றுப்படி, ” திங்கட்கிழமை ரஷ்ய நாணய சந்தையில் ஒரு பேரழிவு இருக்கும் என்றார்.

மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உருசுலா வான் டேர் லேயன் கூறுகையில், ” இந்த முடிவு, ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களை “போருக்காக பயன்படுத்துவதிலிருந்து” ரஷ்ய அதிபர் மாளிகையை தடுத்து நிறுத்தும்” என்றார்.

குறிப்பிட்ட சில ரஷ்ய வங்கிகளை தேர்ந்தெடுப்பது, பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்யும். அதேசமயம், ஐரோப்பாவில் அதிக தாக்கத்தை ஏற்படுவதைத் தடுக்கும். ஐரோப்பிய வணிக நிறுவனங்கள், செலுத்த வேண்டிய பணத்தை வசூலிக்கவும், ரஷ்யாவிலிருந்து எரிசக்தியை வாங்கவும் முடியும்

மாஸ்கோ 2014இல் ஏற்பட்ட பொருளாதார தடைகளை தொடர்ந்து, வங்கிகளைப் பாதுகாக்க வெளிநாட்டு பண இருப்பைப் பெருக்கி வந்தது. 2022 ஜனவரியில் கையிருப்பு அதிகபட்சமாக $630 பில்லியனைத் தொட்டது. புதிய நடவடிக்கைகள் நாட்டின் மத்திய வங்கிக்குக் கிடைக்கும் கையிருப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்விஃப்ட் சேவைக்கு மாற்றாக பல தீர்வுகள் முயற்சிக்கப்பட்டன. ஆனால், அவை எதுவும் திறன்வாய்ந்தவை அல்ல.

கடந்த ஏழு ஆண்டுகளில், ரஷ்யாவும், SPFS (நிதிச் செய்திகளை மாற்றுவதற்கான அமைப்பு) உட்பட மாற்று வழிகளில் பணியாற்றியுள்ளது. இது ரஷ்யாவின் மத்திய வங்கியால் உருவாக்கப்பட்ட SWIFT நிதி பரிமாற்ற அமைப்புக்கு சமமானது. SWIFT க்கு சாத்தியமான சவாலை உருவாக்க சீனர்களுடன் ரஷ்யா கைக்கோர்த்து பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தடைகள் மீதான தாக்கம் தெரிவதற்கு சில காலம் ஆகும். ஆனால், மேற்கத்திய நாடுகளின் உடனடி தாக்கத்தை இந்த தடைகள் வெளிப்படுத்தும்.

சமீபத்திய பொருளாதாரத் தடைகள் குறித்து பேசிய உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், “இந்த இருண்ட நேரத்தில் உண்மையான உதவி” என்று குறிப்பிட்டார்.

source https://tamil.indianexpress.com/explained/what-is-swift-and-what-shutting-russia-out-of-it-means-417667/

அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம்… ரஷ்யா- உக்ரைன் லேட்டஸ்ட் 10 நிகழ்வுகள்

 27 2 2022 

Ukraine Russia crisis latest news in Tamil: உக்ரைன் மீது ரஷ்யா 4ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பேச்சு வார்த்தை பெலாரஸ் எல்லையில், இரு நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் மத்தியில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்ய விவகாரத்தில் நடந்த லேட்டஸ்ட் நிகழ்வுகளைப் பார்ப்போம்.

SWIFT-ல் இருந்து ரஷ்யாவை நீக்க முடிவு; சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கெளரவத் தலைவர் பதவியிலிருந்து புதின் இடைநீக்கம்

உக்ரைனுக்கு ஆதரவாக உலகளாவிய வங்கி தகவல் பரிவர்த்தனை சேவை (SWIFT) அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், சர்வதேச விளையாட்டு நிர்வாகக் குழுவான சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் (IJF) கௌரவத் தலைவராக பதவியில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடைநீக்கம் செய்யப்பட்டார்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய தூதுக்குழு பெலாரஸ் வருகை; நிராகரித்த உக்ரைன்

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய தூதுக்குழு பெலாரஸ் வந்துள்ளதாக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்துள்ளதாகவும், தற்போது நெறிமுறை சிக்கல்களைத் தீர்ப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் பெலாரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

ஆனால், பெலாரஸில் பேச்சு வார்த்தை நடத்துவதை உக்ரைன் நிராகரித்தது. ஞாயிற்றுக்கிழமை ஒரு வீடியோ செய்தியில் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான பேச்சு வார்த்தைக்கு வார்சா, பிராட்டிஸ்லாவா, இஸ்தான்புல், புடாபெஸ்ட் அல்லது பாகுவை மாற்று இடங்களாக கூறியதோடு, மற்ற இடங்களும் சாத்தியம் என்று கூறினார், ஆனால் பெலாரஸில் பேச்சுவார்த்தை என்ற ரஷ்யாவின் தேர்வை உக்ரைன் ஏற்கவில்லை என்பதை உக்ரைன் அதிபர் தெளிவுபடுத்தினார்.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் நுழைந்தது ரஷ்யா படை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் ஏற்கனவே தலைநகர் கிவ்வுக்குள் நுழைந்துள்ள நிலையில், இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் நுழைந்தது.

ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடை விதிக்கப்படுவது குறித்து விவாதிக்க முடிவு

உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடை விதிக்கப்படுவது, ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர்களால் விவாதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறினார். பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஏற்கனவே இந்த விமானங்களுக்கு தங்கள் வான்வெளியை மூடிவிட்ட நிலையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என்று அதிகாரி மேலும் கூறினார்.

இதனிடையே இன்றுபின்லாந்து நாடு ரஷ்ய விமானங்களுக்கான வான்வழியை மூடியது. பின்லாந்து ரஷ்யாவுடன் 800 மைல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

உக்ரைனுக்கான உலக நாடுகள் உதவி

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு மேலும் பாதுகாப்புப் பொருள் உதவிக்கு செக் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா கூறினார். செக் அரசாங்கம் நேற்று 188 மில்லியன் மதிப்புள்ள இயந்திர துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், மற்ற இலகுரக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்பியது.

இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை, கியேவ் மற்றும் மாஸ்கோவுடனான அதன் உறவுகளை சோதிக்கும் மோதலில் தனது அரசாங்கம் ‘நிதானத்துடனும் பொறுப்புடனும்’ தொடர்கிறது என்று கூறினார். மேலும், “உக்ரைன் குடிமக்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், மேலும் இரத்தக்களரி தடுக்கப்படும் என்று நம்புகிறோம்” என்று பென்னட் கூறினார். ‘நாங்கள் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்கிறோம்’. நீர் சுத்திகரிப்பு கருவிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கூடாரங்கள் உட்பட 100 டன் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு இஸ்ரேல் அனுப்புகிறது என்றார்.

போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் 100 மில்லியன் டாலர் நிதி அளிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது

உக்ரைனுக்கு எதிரான போர் : 4300 வீரர்களை இழந்த ரஷ்யா

உக்ரைன் மீதான படையெடுப்பின் போது ரஷ்யப் படைகள் சுமார் 4,300 படைவீரர்களை இழந்துள்ளன என்று துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய படையில் சுமார் 146 டாங்கிகள், 27 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்களை இழந்ததாகவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன்

உடனே போரை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில மனுதாக்கல் செய்துள்ள உக்ரைன் அரசு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துளளது. மேலும் உக்ரைன் மீதான போரை பொய்யான புகார் கூறி நியாயப்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் இடத்தை பறிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

கார்கிவைக் கைப்பற்றுவதற்கான ரஷ்ய முயற்சியை முறியடித்த உக்ரேனியப் படைகள்

ஞாயிறு அன்று கார்கிவ் நகரைக் கைப்பற்றும் ரஷ்ய முயற்சியை உக்ரேனியப் படைகள் முறியடித்துள்ளன என்று கார்கிவ் நகரின் கவர்னர் கூறியுள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தை ரஷ்ய கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. கார்கிவ் கவர்னர் ஓலே சின்யெஹுபோவ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், “கார்கிவ் மீதான கட்டுப்பாடு முற்றிலும் எங்களுடையது! எதிரிகளிடமிருந்து நகரத்தின் முழுமையான வெளியேற்றம் நடக்கிறது. ரஷ்ய எதிரிகள் முற்றிலும் மனச்சோர்வடைந்துள்ளார்.

ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்

ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பெலாரஸ் எல்லையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் உக்ரைன் அதிபர் மாளிகை கூறியுள்ளது

ரஷ்யாவின் அணுசக்தி தடுப்புப் படைகள் தயார் நிலையில் இருக்க புதின் உத்தரவு

உக்ரைன் மீதான தனது படையெடுப்பு தொடர்பாக மேற்குலக நாடுகளுடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், ரஷ்ய அணுசக்தி தடுப்புப் படைகளை தயார் நிலையில் இருக்க அதிபர் விளாடிமிர் புதின் கடும் உத்தரவிட்டுள்ளார்.

புதின் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி மற்றும் இராணுவத்தின் பொதுப் பணியாளர்களின் தலைவருக்கு அணுசக்தி தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டார். உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக மேற்கு நாடுகளுடனான பதட்டங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்ற அச்சுறுத்தலை அவரது உத்தரவு எழுப்பியது.

source https://tamil.indianexpress.com/international/ukraine-russia-crisis-latest-news-in-tamil-417903/

நேட்டோ உறுப்பினர் ஆகும் முயற்சி: பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை ரஷ்யா எதிர்ப்பது ஏன்?

 28 2 2022 

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியில், நோர்டிக் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்கள், படையெடுப்புடன் தொடர்புடையதாகவும் அதற்கு பதிலளிக்கும் விதமாகவும், பிராந்தியத்தில் மேலும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் உறுப்பினர்களாக இருந்திருந்தால், இந்த நடவடிக்கை தீவிரமான ராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

உக்ரைனின் நிலைமை தொடர்பாக காணொலி வழியாக நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யாவின் இந்த பதில் வந்தது. இதில் பெரிய வரலாற்றுப் பின்னணி செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. இது தற்போதைய நெருக்கடியின் அடிப்படையில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நேட்டோ உறுப்பினர் பதவியை ரஷ்யா ஏன் எதிர்க்கிறது?

ஆஸ்திரியா, அயர்லாந்து, சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளின் வரிசையில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்னும் நேட்டோவில் உறுப்பினர்களாக இல்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இரு நாடுகளும் ராணுவ ரீதியாக நடுநிலை வகித்தன.

இரு நாடுகளும் 1990-களில் அரசியல் ரீதியாக நடுநிலை வகித்தன. ஆனால், 1995-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தபோது அந்த நிலைப்பாடு மாறியது. இது அவர்களின் ராணுவ அணிசேராக் கொள்கைகளின் ஒரு பகுதி காரணமாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்தது. ரஷ்ய ஆக்கிரமிப்பு என்று கருதும் இரு நாடுகளின் பார்வையால் நேட்டோ உறுப்பினர் பற்றிய விவாதங்களைத் தூண்டியது.

ஜகரோவா வெளியிட்ட ஒரு அறிக்கையில், “பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உட்பட அனைத்து ஓஸ் (All OSCE) உறுப்பு நாடுகளும் அவற்றின் தேசியத் திறனில் ஒரு நாட்டின் பாதுகாப்பை மற்ற நாடுகளின் பாதுகாப்பு இழப்பில் கட்டியெழுப்ப முடியாது என்ற கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.” என்று கூறினார்.

ஓஸ் (OSCE) அல்லது ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு சார்ந்த அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். “வெளிப்படையாக, ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோவுடன் இணைவது, முதன்மையாக ஒரு இராணுவக் கூட்டணி என்று புரிந்துகொள்ளப்பட்டது. இது கடுமையான ராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். இதில் நமது நாடு பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ஜகரோவா கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு ஸ்வீடன் மற்றும் பின்லாந்து எவ்வாறு பதிலளித்தன?

உக்ரைன் படையெடுப்பிற்கு எதிராக பின்லாந்து ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நாட்டின் பல உயர் அதிகாரிகள் மாஸ்கோவின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாகக் கண்டித்துள்ளனர். ஸ்வீடனும் இதைப் பின்பற்றியது.

இந்த ஆண்டு படையெடுப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பின்லாந்து அதிபர் உக்ரைனை ரஷ்யாவின் தற்போதைய அணுகுமுறையை சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் 1939-ல் படையெடுப்பதற்கு முன்பு தனது நாட்டை அச்சுறுத்தி பிளவுபடுத்தும் முயற்சியுடன் ஒப்பிட்டார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மியூனிச்சில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில், அதிபர் சவுலி நினிஸ்டோ, “உக்ரைனில் நடக்கும் அனைத்தும், மேற்கத்திய உலகில் நடக்கும் அனைத்தும், பின்லாந்தில் என்ன நடந்தது என்பதை எனக்கு நினைவூட்டுகிறது….” ஸ்டாலின் நாட்டைப் பிளவுபடுத்துவார் என்று நினைத்தேன். பின்லாந்தைச் சென்று ஆக்கிரமிப்பது எளிது. முற்றிலும் எதிராக நடந்தது. மக்கள் ஒன்றுபட்டனர், உக்ரைனிலும் அதையே நாங்கள் காண்கிறோம்.” என்று கூறினார்.

ஸ்வீடன் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், பிராந்தியத்தில் அதன் இருப்பிடம் மற்றும் மோதலின் பரவல் அதன் நலன்களை பாதிக்கலாம். ஸ்வீடனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட விவாதமாக பால்டிக் கடலில் உள்ள கோட்லாண்ட் தீவு உள்ளது. இது பெரும்பாலும் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கைக்கு இலக்காகிறது.

ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் பிப்ரவரி 22ம் தேதி ரஷ்ய ஆக்கிரமிப்பை படையெடுப்பு என்று முத்திரை குத்துவதை நிறுத்தினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் ட்வீட் செய்தபோது அது மாறியது: “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பை ஸ்வீடன் கடுமையாக கண்டிக்கிறது. ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஐரோப்பிய பாதுகாப்பு உத்தரவின் மீதான தாக்குதலாகவும் உள்ளது. உக்ரைனுடன் ஒற்றுமையுடன் ஒரு ஐக்கியமான மற்றும் வலுவான பதிலளிப்பால் அது சந்திக்கப்படும். மனித துன்பங்களுக்கு ரஷ்யா மட்டுமே காரணம்” என்று கூறியது.

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரு நாடுகளும் உக்ரைனுக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்கியுள்ளன. படையெடுப்பு தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பின்லாந்து சார்பாக 50 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியை வழங்கிய அதிபர் நினிஸ்டோவுடன் பேசினார்.

பின்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 30வது ஆண்டு நிறைவை பயன்படுத்தியது. “இன்று நாம் பின்லாந்து மற்றும் உக்ரைன் இடையே 30 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளை கொண்டாடுகிறோம். உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு பின்லாந்தின் ஆதரவு உறுதியானது. இந்த கடினமான நேரத்தில் உக்ரைன் தலைவர்களுக்கும் மக்களுக்கும் தைரியமும் வலிமையும் பெற்றிருக்க விரும்புகிறொம்” என்று பின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்வீட் செய்தது.

வரலாற்றுச் சூழல் என்ன?

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு நாடுகளும் ரஷ்யாவுடன் ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 1917-ல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, பின்லாந்து இப்போது ஸ்வீடன் மற்றும் ரஷ்யாவின் பிரதேசங்களின் ஒரு பகுதியாக இருந்தது.

1809 வரை, கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு, பின்லாந்து ஸ்வீடனின் ஒரு பகுதியாக இருந்தது. 1809 பின்லாந்திய போரைத் தொடர்ந்து, பின்லாந்து ரஷ்யப் பேரரசின் தன்னாட்சிப் பகுதியாக மாறியது. வில்சன் மையத்திற்கான அறிக்கையில் ராபின் ஃபோர்ஸ்பெர்க் & ஜேசன் சி. மோயர் எழுதியுள்ளனர்.

ஆனால், இரண்டு போர்களும் – 1939 குளிர்காலப் போர் மற்றும் 1941-1944 -ன் தொடர்ச்சியான போர் – பின்லாந்து மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான உறவுகளை மாற்றியது. அதிபர் பாசிகிவி மற்றும் அதிபர் கெக்கோனன் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை, பாசிகிவி-கெக்கோனன் கோட்பாடு, பனிப்போரின்போது பின்லாந்தை ஒரு நடுநிலை நாடாக நிலைநிறுத்தியது, அதே நேரத்தில் கிழக்கில் அதன் அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேணியது என்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் 1948 முதல் 1992 வரையிலான பின்லாந்து-சோவியத் உறவுகளில் முக்கிய கருவியாகச் செயல்பட்டது. ஃபார்ஸ்பெர்க்-மோயர் அறிக்கை, ஒப்பந்தத்தை மதிக்கவும் சோவியத் யூனியனைத் தூண்டிவிடாமல் இருக்கவும், பின்லாந்தும் மார்ஷல் திட்டத்தில் இருந்து நிதியை மறுத்துவிட்டது.

“சோவியத் யூனியனின் அழுத்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால், அது பின்லாந்து ஒரு வளமான ஜனநாயகமாக மாற போதுமான சுதந்திரத்தை வழங்கியது” என்று இந்த அறிக்கை கூறுகிறது. ரஷ்யாவுடனான கடினமான வரலாறு இருந்தபோதிலும், பின்லாந்து மேற்கு பாதுகாப்பு கூட்டணியில் சேரவில்லை.

வில்சன் நடுநிலை அறிக்கை, ரஷ்யாவுடனான ஸ்வீடனின் வரலாற்று உறவுகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான நுண்ணறிவைக் கொண்டுள்ளது: “ஸ்வீடன் 1814 முதல் ஒரு ராணுவக் கூட்டணியில் சேரவில்லை அல்லது எந்தப் போரிலும் பங்கேற்கவில்லை. 200 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதி நிலவுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மரபான சக்திகள் வீழ்ச்சியடைந்து புதிய சக்திகள் எழுந்ததால், ஸ்வீடன் அதன் பாதுகாப்புக் கொள்கையில் இலக்கற்று இருந்தது. பனிப்போரின்போது அமெரிக்காவின் பக்கத்தில் சேருவதற்குப் பதிலாக, சோவியத் யூனியனுடன் இணைவதில் ஆர்வம் காட்டாமல், ஸ்வீடன் தனது பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மூன்றாவது வழியைத் தேடியது.” என்று கூறுகிறது.

1948 ஆம் ஆண்டில், நார்வே மற்றும் டென்மார்க் நேட்டோவுடன் இணைந்து ஒரு நடுநிலையான ஸ்காண்டிநேவிய பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்க ஸ்வீடனின் முயற்சிகள் தோல்வியடைந்தபோது, ​​அதன் நடுநிலைக் கொள்கைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நவீன அரசியல் சூழல் என்ன?

2018 இல், எஸ்டோனியாவின் முன்னாள் ஜனாதிபதி டூமாஸ் ஹென்ட்ரிக் ஐவ்ஸ் பின்லாந்திய-நேட்டோ உறுப்பினர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். ஹென்ட்ரிக்கின் எழுத்துக்கள் அதிகம் உள்நாட்டைச் சார்ந்துள்ளது என்பதையும், அரசியல் வட்டாரங்களைவிட அந்த நாடுகளின் குடிமக்கள் அந்த உறுப்பினரை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. 2018 இல் கட்டுரை வெளியிடப்பட்டபோது, ​​ஹென்ட்ரிக் எழுதினார், “பின்லாந்தில், பிரபலமான கருத்து (உறுப்பினருக்கு எதிரானது); ஸ்வீடனில் இது (இப்போது வரை) சாதகமாக உள்ளது. ஆனால், போதுமானதாக இல்லை.” என்று குறிப்பிட்டார்.

ஹென்ட்ரிக் கட்டுரை எழுதும் போது, ​​ “அந்த நேரத்தில் நேட்டோவில் ஸ்வீடனிய/பின்லாந்திய உறுப்பினர்களை எதிர்த்தவர்கள் மத்தியில், விஷயங்கள் தீவிரமானால் நாங்கள் சேருவோம் என்ற கருத்து இருந்தது. 2018-ல், ஹென்ட்ரிக், பாதுகாப்புச் சூழல் நேட்டோவில் சேர அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், நிலைமை மாறினால், இரு நாடுகளும் இணையும் என்ற உணர்வு இருந்தது” என்று விளக்கினார்.

இந்த ஆண்டு ஜனவரியில், பின்லாந்து பிரதமர் சன்னா மரின் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “எதிர்காலத்தில் நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து திட்டமிடவில்லை என்றும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்து அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் அமெரிக்காவுடன் நிற்க தயாராக இருப்பதாகவும் கூறினார். “இது மிகவும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருளாதாரத் தடைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்” என்று மரின் கூறினார்.

அதே நேரத்தில், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து நாட்டிற்கு உரிமை உண்டு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்றும் மரின் கூறியிருந்தார். யாரும் எங்களை பாதிக்க முடியாது, அமெரிக்காவை அல்ல, ரஷ்யாவை அல்ல, வேறு யாரையும் அல்ல” என்று மரின் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பின்லாந்து & ஸ்வீடன் நிலைப்பாட்டுக்கு உள்நாட்டு ஆதரவு உள்ளதா?

நேட்டோ உறுப்பினர் உரிமையைப் பெறுவதற்கு, இந்த நடவடிக்கைக்கு நாடுகள் கணிசமான பொது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.

பின்லாந்தின் மிகப்பெரிய நாளிதழான ஹெல்சிங்கின் சனோமட் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் சுமார் 28% பேர் பின்லாந்து நேட்டோவில் சேர விரும்பினர், 42% பேர் எதிராக இருந்தனர்/ மீதமுள்ளவர்கள் உறுதியாக தெரியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 -ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இருந்து ஆதரவாக இருப்பவர்களின் எண்ணிக்கையில் 8 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்வீடன் உள்ளூர் ஊடகங்களின் செய்திப்படி, நாடு கடந்த சில ஆண்டுகளாக நேட்டோவில் சேருவதற்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. 2020 டிசம்பரில், நேட்டோவில் இணைவதற்கான ஆயத்தத்திற்கு ஆதரவாக ஸ்வீடன் நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்களிடம் முதல் முறையாக பாதுகாப்புக் கொள்கை விருப்பம் வெளிப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ஸ்வீடன் அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை எதிர்த்தது. அப்போது, ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் ஆன் லிண்டே, அரசாங்கத்திடம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். “மிகவும் பலவீனமான பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்ட இந்த வகையான திடீர் மாற்றங்கள் நல்லதல்ல. இது ஸ்வீடிஷ் பாதுகாப்புக் கொள்கையின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது” என்று லிண்டே கூறியிருந்தார்.

source https://tamil.indianexpress.com/explained/russia-ukraine-invasion-finland-sweeden-nato-membership-417858/