ஞாயிறு, 31 மார்ச், 2019

கிராமப் புற மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை!" - உயர்நீதிமன்றம் March 31, 2019

ns7.tv
Image
நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், கிராமப் புற மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 
அரசு மருத்துவர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேர சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்காக, அவர்கள் பணியாற்றிய பகுதிகளை தொலைதூர பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி, கிராமப் பகுதி என வகைப்படுத்தி தமிழக அரசு, மார்ச் 6ம் தேதி அரசாணை பிறப்பித்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த  நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என குறிப்பிட்டார்.  
பணியிடங்கள் தொடர்பான அரசின் வரையறையை மாற்றியமைக்க கோரி, ஓய்வு பெற்ற நீதிபதி குழு முன்பாக, மே 31ம் தேதிக்குள்  சம்பந்தப்பட்டவர்கள் மனு அளிக்கலாம் எனவும், அந்த மனுக்களை ஆய்வு செய்து, பகுதி வரையறை மாற்றம் தொடர்பாக ஜூலை 31ம் தேதிக்குள் குழு தன் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கிராமப் புறங்களில் மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார மையங்களை துவங்கிய போதும், அவற்றில் போதுமான மருத்துவர்கள் இல்லை எனவும்,  நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், கிராமப் புற மக்களுக்கு சிகிச்சை வழங்க மருத்துவர்கள் விரும்புவதில்லை குறித்து வேதனை தெரிவித்த அவர்,  மருத்தவர்களை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என, நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை சிறுமி கொலை வழக்கு : ஒருவர் கைது...! போலீசார் தீவிர விசாரணை! March 31, 2019

Image
கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 
கோவை பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 25-ம் ஆம் தேதி காணாமல் போனநிலையில் அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்து தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியின் வீடு அருகே உள்ள தமது தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர் ஏற்கனவே சிறுமியை இருமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
சிறுமி இறந்த நிலையில் மீட்கப்பட்டபோது அவர் உடலில் மூடப்பட்டு கிடந்த டீ சர்ட்டும் சந்தோஷ் குமாருடையது தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறுமி காணாமல் போன இரவு சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடலை பாட்டியின் வீட்டில் தான் சந்தோஷ்குமார் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரின் வயது 34 என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதும் தெரியவந்துள்ளது.

source ns7.tv

குஜராத்திற்கு ஒரு சட்டம், தமிழகத்திற்கு ஒரு சட்டமா? - ஆர்.எஸ்.பாரதி March 31, 2019

Image
தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் நடத்தக்கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹூவிடம் திமுக மனு அளித்தது. 
சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, 45 நாட்கள் கால அவகாசம் இருப்பதால் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கும் உடனே தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
இரண்டு தொகுதிகள் காலியானதும் குஜராத்தில் மட்டும் உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், குஜராத்திற்கு ஒரு சட்டம், தமிழகத்திற்கு ஒரு சட்டமா? எனவும் கேள்வி எழுப்பினார். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை சட்ட விரோதமானது எனவும், சோதனை நடத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
source ns7.tv

சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய காவலர்! March 31, 2019

Image
சென்னையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை காவலர் ஒருவர் அடித்துநொறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 
சென்னை தலைமைச்செயலகத்ததை அடுத்துள்ள போர் நினைவுச் சின்னம் எதிரில் சாலையோரமாக இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது ரோந்து வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், கம்பால் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தார். பின்பு இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் ஓடி வந்து வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றார். அவர் காவலருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 
இது தொடர்பாக கோட்டை காவல்துறையிடம் கேட்டபோது, அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர் கல்லூரி மாணவர் என்றும், சத்யா நகரில் கஞ்சா கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அவரை பலமுறை கண்டித்தும் கேட்காததால் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

source ns7.tv

சனி, 30 மார்ச், 2019

பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என வெளிப்படையாக கோரிக்கை விடுத்த 103 இயக்குநர்கள்! March 30, 2019

Authors
Image
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜவுக்கு வாக்களிக்க வேண்டாம் என வெற்றிமாறன், கோபி நயினார் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள சுமார் 100 இயக்குநர்கள் வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மக்கள், மீண்டும் நரேந்திர மோடியை ஆட்சியில் அமரவைப்பார்களா அல்லது ராகுலுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவார்களா என பெரும் விவாதங்கள், கருத்துக்கணிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேந்த சுமார் 100 திரைப்பட இயக்குநர்கள் ஆளும் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துப்பது போல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஜனநாயகத்தை காப்பற்ற பாஜகவிற்கு மீண்டும் வாக்களிக்க வேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் www.artistuniteindia.com இணையத்தில் ஜனநாயகத்தை காப்போம் எனும் முழக்கத்தின் கீழ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
அந்த அறிக்கையில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கோபி நயினார், அஜயன் பாலா, லீனா மணிமேகலை, அமுதன், கோம்பை அன்வர்,  பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன், உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். அதில், வரும் மக்களவை தேர்தலில் நாம் சிந்தித்து வாக்களிக்கவில்லை என்றால் பாசிச அச்சுருத்தலுக்கு ஆளாக நேரிடும் எனவும், நாட்டில் வகுப்பு வாத சூழலை உருவாக்க பசு பாதுகாவலர்கள் போர்வையில் பாஜக வன்முறையை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
தேசபக்தி எனும் துருப்புச் சீட்டுடை வைத்து, யாராவது பாஜகவுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுவதாகவும், தேசபக்தி எனும் பெயரில் பாஜக வாக்கு வங்கியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜகவின் இந்த ஆட்டத்தில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஓரங்கப்பட்டு, இணையதளம் மற்றும் சமூகவலைதளம் மூலம் வெறுப்பு அரசியலை பாஜக பரப்புவதாகவும் இயக்குநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
ராணுவத்தைப் பயன்படுத்துவதும் பாஜகவின் திட்டங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ள இயக்குநர்கள், தேவையில்லாத போர் மூலம் நாட்டை ஆபத்தில் வைக்க முயற்சி நடப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்குச் சொந்தமான முக்கியமான நிறுவனங்களில், அந்த நிறுவனத்துக்குத் தொடர்பில்லாதவர்களை தலைமையிடத்தில் அமர வைத்து, உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கும்படி செய்கிறார்கள். திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் சென்சார் போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு உண்மை தெரியாத படி பாஜகவினர் பார்த்துக்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இன்னும் ஒருமுறை பாஜகவுக்கு அதிகாரம் வழங்கினால், அது மிகப் பெரிய தவறாக அமைந்துவிடும் எனவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அடிக்கும் கடைசி ஆணியாக அது இருக்கும் எனவும் காட்டத்துடன் இயக்குநர்கள் தெரிவித்துள்ள ஒவ்வொரு கருத்தும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.  
பொதுவாகவே திரைப்பிரபலங்களுடன் நெருங்கிய நட்புறவை கடைப்பிடித்து வரும் பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் 103 இயக்குநர்கள் சேர்ந்து கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை தேர்தலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியும். 

source ns7.tv

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்! March 30, 2019


Image
ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். 
இந்த நிலையில், ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் 22 கோடியே 28 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

credit  : ns7.tv

துரைமுருகன் வீட்டில் விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை! March 30, 2019

credit ns7.tv
Image
வேலூர் மாவட்டம் காட்பாடியில்  உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வந்தனர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தி.மு.க-வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சுமார்  4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். அதன்பின்னர் அதிகாலை 3 மணியளவில் சோதனையை தொடங்கினர்.  வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தினர். சுமார் ஐந்தரை மணி நேரம் இந்த சோதனை காலை எட்டரை மணி அளவில் நிறைவடைந்தது.   துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ், குடியாத்தம் அருகே உள்ள திமுக முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர் சக்கரவர்த்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.   
வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார். தன்னுடைய மகன் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் அதனை தடுத்து நிறுத்தி மன உளைச்சலை தர முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். களத்திலே தங்களை எதிர்க்க முடியாத மத்திய மாநில அரசுகளின் சூழ்ச்சி இது என குறை கூறிய துரைமுருகன், நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி முதுகில் குத்துவதாக மத்திய பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டினார். இதுபோன்ற பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என துரைமுருகன் தெரிவித்தார்.

வெள்ளி, 29 மார்ச், 2019

பிரேசிலில் அழிவின் விளிம்பில் உள்ள அமேசானிய மனட்டீ உயிரினம்: இனப்பெருக்கத்துக்காக வனப்பகுதி ஏரியில் விடப்பட்டது

பிரேசில் நாட்டில் INPA - அமேசானிய ஆராய்ச்சி தேசிய நிறுவனம் கடந்த வாரம் அமேசானிய நீர்வழி பாலூட்டிகளின் திட்டத்தை நிகழ்த்தினர். இந்த நிறுவனம் இந்த அறிய வகை பாலுட்டியை பராமரித்து வருகிறது. கடத்த சில தினங்களுக்கு முன்னர் அமோனொனாஸ் மாநிலத்தின் பியகாகு-புருஸ் ரிசர்வ் பகுதியில் உள்ள ட்ராபினோ ஏரியில் இந்த அறிய வகை பாலூட்டியானா அமேசானியன் மனட்டியை இனவிருத்திக்காக அப்பகுதி ஏரியில் விட்டனர். அழிவின் விளிம்பில் இருக்கும் அமேசானியன் மனட்டி என்றழைக்கப்படும் கடல் வாழ் பாலூட்டி வகை உயிரினத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த உயிரினம் அமேசான், பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார் மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளில் வாழும் உயிரினம். ஏரியில் விடப்பட்ட இந்த உயிரினத்தின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்காணித்து வருகின்றனர்.


பறக்கும் படையிடம் கதறும் சிறு வியாபாரிகள்

நெல்லை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யார் பணத்தை கொண்டு சென்றாலும் அதற்குரிய ஆவணம் இல்லை என்றால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்கின்றனர். இது சிறு வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. சிறிய வியாபாரிகளுக்கு ஆவணங்கள் என்று பெரிய அளவில் கிடையாது. காய்கறி, பழம், பால் போன்றவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆவணம் இன்றி தாங்கள் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினரிடம் இழந்து விட்டு வெறும் கையுடன் திரும்புகின்றனர். இதனால் அவர்கள் தொடர்ந்து தொழில் ெசய்ய பணமின்றி திண்டாடுகின்றனர்.


பணத்தை பறக்கும் படையினரிடம் இருப்பதை கொடுத்து வெறும் கையுடன் நிற்கும் வியாபாரிகள், “வேணாம்... விட்டுறு.... அழுதுறுவேன்......” என கதறும் நிலையில் உள்ளனர். ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராத சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டுவதை நிறுத்த வேண்டும். தேர்தலை காரணம் காட்டி இவர்களின் தொகைகளை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் பணம் எடுத்துச் செல்ல உச்சவரம்பு ரூ.50 ஆயிரம் என இருப்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

source dinakaran

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் 948 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு; 639 பேரின் மனு நிராகரிப்பு; சத்யபிரதா சாஹு பேட்டி

சென்னை: சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது; தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 948 பேரின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 639 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட 1587 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 9 பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி ஏப். 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை ரூ 54.43 கோடி பறிமுதல் இதுவரை 261 கிலோ தங்கம் மற்றும் 346 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டததாக கூறினார். மேலும் 14 மடிக்கணினிகள், 279 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தமிழகத்தில் 25.5 கோடி பணமும் ரூ.51. 83 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறினார். மேலும், 2,106 பறக்கும் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

source ns7.tv

கைக்கூலி செங்கோட்டையன் உளறியதற்கு

இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று BJPன் கைக்கூலி செங்கோட்டையன்
உளறியதற்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் என்ன?
பதிலளிப்பவர்:- கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் MISC
இந்த வார கேள்வி பதில் நிகழ்ச்சி - (27-03-2019)

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்! March 29, 2019


Image
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாலை 4 மணிக்கு பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27ம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் ஏற்கனவே சூடு பிடித்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர், தேர்தல் பிரச்சாரத்தில் கூடுதலாக அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
credit ns7.tv

புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்தியா அளித்த ஆதாரங்களை நிராகரித்த பாகிஸ்தான்! March 29, 2019

Image
புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்களில், 22 இடங்களிலும் தீவிரவாத முகாம்கள் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது.  இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 22 இடங்களில் தீவிரவாத முகாம்கள் செயல்படுவதாக இந்திய தரப்பில் ஆதாரங்கள் வழங்கப்பட்டன. 
எனினும் அதை ஆய்வு செய்த பாகிஸ்தான், இந்தியா கூறுவது போன்று தீவிரவாத முகாம்கள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த விளக்கம் மத்திய அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

credit ns7.tv

ஏப்.1-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45! March 28, 2019

credit ns7/tv
Image
பிஎஸ்எல்விசி- 45 ராக்கெட், 29 செயற்கைக்கோள்களுடன் வரும் திங்கள்கிழமை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில், இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட எமிசாட் செயற்கைக்கோளும், 4 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் வரும் திங்கட்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ளது.  இதில் அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா,ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் 4 செயற்கைக்கோளும், பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக எமிசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும், இதன் மொத்த எடை 436 கிலோ என்றும், இதன் மூலம் மின்காந்த அலைக்கற்றைகளை கண்காணிக்க முடியும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

புதன், 27 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நபர் கோவை நீதிமன்றத்தில் சரண்! March 26, 2019

Image
பொள்ளாச்சி பாலியல் விவாகரத்தில் புகார் தெரிவித்த பெண்ணின்  அண்ணனைக் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவாகரத்தில் குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் அண்ணனை கும்பல் ஒன்று கடந்த மாதம் தாக்கியது. இதில் தொடர்புடைய பாபு ,செந்தில் ,பார்நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். 
ஆனால் இதில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவர் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்துவந்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.  இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய கோவை தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி 8 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
source ns7.tv

கொள்கை பிடிக்காததால் பிரசாரம் செய்யவில்லை - சுப்பிரமணியன் சுவாமி March 27, 2019

Image
பாஜகவின் கொள்கை பிடிக்காததால் பரப்புரை செய்யவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பது தவறு என்றும், தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனுக்கு நிலையான சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.
பாஜக தனித்துப் போட்டியிடுவதையே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட தடையாக இருந்தது துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் ப.சிதம்பரம் எனவும் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.

source: ns7.tv

செவ்வாய், 26 மார்ச், 2019

இரண்டு கொலை 22 கற்பழிப்பு!!!!


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்....’ அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகுல்! March 26, 2019

Image
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 6000 செலுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். "குறைந்தபட்ச உத்தரவாத திட்டத்தின் கீழ் 25 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.72,000 நிதியுதவி கிடைக்கும் என்று தெரிவித்தார். இதன் மூலம் ஐந்து கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற திட்டம் உலகில் எங்கும் இல்லை என்றும் ராகுல் காந்தி அப்போது குறிப்பிட்டார். நாட்டில் 20% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாகவும் ராகுல் கூறினார். 
credit ns7.tv

நாடாளுமன்றத் தேர்தலில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்பு மனு தாக்கல்! March 26, 2019

Image
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நேற்று வரை 604 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் புதுவையில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் அடுத்த மாதம் 18ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அதே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நேற்றுவரை 604 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 
சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் 230 பேர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை வேட்பு மனு பரிசீலனை நடைபெற உள்ளது. 29ம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்த பின்னர் இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல் அன்றே வெளியிடும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

credit ns7.tv

5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ள வேட்பாளர்களின் சொத்து மதிப்பு! March 26, 2019

Image
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில், பலரது சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. 
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பில் அசையும் சொத்து என 24 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 168 ரூபாய் எனவும் அசையா சொத்துகள் 22 கோடியே 88 லட்சத்து 89 ஆயிரத்து 303 ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி ஸ்ரீநிதி பெயரில் அசையும் சொத்துகள் 9 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரத்து 140 ரூபாய் என அசையா சொத்துகள் 22 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 413 ரூபாய் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீதான குற்றவழக்குகள் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடுத்துள்ள தலா இரண்டு வழக்குகள் இருப்பதையும் கார்த்தி சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு 417 கோடியே 49 லட்சம் ரூபாய் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மொத்த கடன் தொகை 154 கோடியே 86 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது, தனது வேட்புமனுவில் தனக்கு 332 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், கடன் தொகையாக 122 கோடியே 53 லட்சம் ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்

credit ns7.tv

திங்கள், 25 மார்ச், 2019

நார்வே நாட்டில் என்ஜின் கோளாறால் நடுக்கடலில் தள்ளாடிய சொகுசு கப்பல்! March 25, 2019

source ns7.tv
Image
நார்வே நாட்டில், நடுக்கடலில், என்ஜின் கோளாறால் பேரலையில் சிக்கி தள்ளாடிய சொகுசு கப்பிலில் இருந்து 1,300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். துரித கதியில் பயணிகளை மீட்ட, மீட்புக்குழுவுக்கு நார்வே பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
நார்வே நாட்டின் ஹஸ்டர்ஸ்விகா பே பகுதியில் இருந்து, எம்.வி.வைகிங் ஸ்கை என்ற சொகுசுக் கப்பல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரத்து 373 பேருடன் புறப்பட்டது.  நடுக்கடலில் சென்றபோது, ராட்சத பேரலைகளால் கப்பலின் என்ஜின்கள் செயல்படாமல் நின்றுவிட்டன. இதனால் ராட்சத அலைகளில் சிக்கிய சொகுசு கப்பல், ஊஞ்சல் போன்று அங்கும் இங்கும் தள்ளாடியது. அசுர வேகத்தில் எழுந்த அலைகளால், கப்பலில் இருந்த பொருட்கள் அனைத்தும், அங்கும் இங்கும் சரிந்து சேதத்தை ஏற்படுத்தின. பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டது.
நிலைமையை உணர்ந்த கப்பல் கேப்டன் மற்றும் மாலுமிகள், பயணிகள் அனைவருக்கும் உயிர்க்கவசங்களை உடனடியாக விநியோகித்தனர். சொகுசுக் கப்பல் கரையிலிருந்து, 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் தள்ளாடிய கப்பலில் இருந்து அபாய ஒலி எழுப்பப்பட்டது. தகவலறிந்த மீட்புக் கப்பல்கள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர்கள், அங்கு பயணிகளை மீட்க விரைந்தன. 
24 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் கப்பலில் இருந்த ஆயிரத்து 373 பேரும் பத்திரமாக மீட்கப்பபட்டனர்.கப்பலில் இருந்த பயணிகள் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு நார்வே துறைமுகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரித கதியில் செயல்பட்டு, பயணிகளை பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவுக்கு, நார்வே பிரதமர் எர்னா சொல்பெர்க் நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனிடையே கப்பலில் உள்ள என்ஜின்களை சரிசெய்து, துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஞாயிறு, 24 மார்ச், 2019

அயோத்தி விவகாரம் தொடர்பாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அவசர ஆலோசனை...! March 24, 2019

Image
அயோத்தி விவகாரம் தொடர்பாக விவாதிக்க, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அவசர கூட்டத்தை நடத்தியது.
லக்னோவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாரியத்தின் 51 உறுப்பினர்கள் மட்டுமின்றி, மத்திய வக்ஃபு வாரியத்தின் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நிரந்தர தீர்வு காண்பதற்காக மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான அந்தக் குழுவில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மத்தியஸ்த குழுவினரிடம் என்னென்ன விஷயங்களை முன்வைப்பது என்பது தொடர்பாக இன்றைய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது

credit : ns7.tv

நியூசிலாந்து பிரதமரிடம் பாடம் படிக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள்!

நியூசிலாந்து பிரதமரிடம் பாடம் படிக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள்!
செய்தியும்! சிந்தனையும்! (20-03-2019)
பா.அப்துல் ரஹ்மான்
(மாநிலத் துணைத் தலைவர்-TNTJ)

சனி, 23 மார்ச், 2019

விதிகளை மீறியதாக கூறி ஓலா கேப் சேவைக்கு தடை விதித்துள்ளது கர்நாடக அரசு! March 23, 2019

credit ns7.tv
Image
அரசின் விதிகளை மீறிய ஓலா கேப் சேவைக்கு ஆறு மாதங்கள் தடை விதித்து கர்நாடகா அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  
கார் மற்றும் ஆட்டோக்கள் மூலம் மக்களுக்கு போக்குவரத்து சேவை அளிக்கவே ஒலா நிறுவனத்திற்கு கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வரும் 2021ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.
இந்நிலையில், ஓலா சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் சேவை அளித்து வருவது குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. 
மேலும், இந்த புகார்கள் குறித்து ஓலா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு ஓலா நிறுவனம் சரியான பதிலை தரவில்லை எனவும் கூறப்படுகிறது.
எனவே ஓலா நிறுவனத்தின் உரிமம் ஆறு மாத காலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், பெங்களூரில் ஓலா சேவைகளை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் ஓலா சேவை நிறுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்ட நிலையிலும் இன்று பெங்களூரில் ஓலா போக்குவரத்து சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கர்நாடக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது

கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...! March 23, 2019

சென்னையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாங்காட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்தாண்டு HIV ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவ்வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர், குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மருத்துவ குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு அளித்த அறிக்கையின்படி பெண்ணுக்கு அளிக்கப்பட்டது HIV தொற்றுள்ள ரத்தம் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி, மருத்துவ குழு அளித்த அறிக்கையையும், வழக்கு குறித்த பதில் மனுவையும் 4 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

credit ns7.tv

கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய கும்பல்! March 23, 2019

Authors
Image
ஹரியானாவில் கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை அப்பகுதிவாசிகள் சிலர் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை, கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் உலா வர, இந்தியா முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. கம்பு, இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கும் அளவிற்கு இவர்கள் மூர்க்கத்தனமாக மாற காரணம் என்ன தெரியுமா?
குர்கிராம் பகுதியில் இஸ்லாமிய சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். ஹோலி கொண்டாடி கொண்டிருந்த சிலர், சிறுவர்களிடம் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுங்கள் என துரத்தியுள்ளனர். இதனை தட்டி கேட்பதற்காக சிறுவர்களின் 
உறவினர்கள் சென்றபோது, அங்கிருந்த கும்பல், அவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. இதனை தாக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதும், வலைதள வாசிகளும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

credit ns7.tv

வெள்ளி, 22 மார்ச், 2019

வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு? March 22, 2019

Image
வக்ஃபு வாரிய கல்லூரி முறைகேடு தொடர்பாக, சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
 
சென்னை மண்ணடியில் வக்ஃபு வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மதுரையில் இருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான கல்லூரி மதுரை கே.கே.நகரில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லதோர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 
இதில் முறைகேடு நடந்ததாக மதுரை சின்னத்தெருவை சேர்ந்த சர்தார் பாஷா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று  வக்ஃபு வாரிய தலைவர் அன்வர் ராஜாவை ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சி.பி.ஐ அதிகாரிகள் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து வக்ஃபு வாரிய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. 
credit ns7.tv

வியாழன், 21 மார்ச், 2019

உலகின் மிக மகிழ்ச்சிகரமான நாடு எது தெரியுமா? March 21, 2019


credit ns7.tv
Image
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடத்தையும், இந்தியா 140வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஐநாவின் சார்பு நிறுவனமான ''Sustainable Development Solutions Network'' 2019ம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தனி நபர் வருமானம், ஆரோக்கிய வாழ்வின் அத்தியாவசிய தேவைகள், சமூக சுதந்திரம், ஊழலின்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 
இதில் ஃபின்லாந்து முதலிடத்திலும், டென்மார்க் இரண்டாம் இடத்தையும், நார்வே 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 10வது இடத்தையும், அமெரிக்கா 19வது இடத்தையும் பிடித்துள்ளன. மொத்தம் 156 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 140வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தின் 24 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசாணை! March 21, 2019

Image
சென்னை உள்பட தமிழகத்தின் 24 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பேரிடர் மற்றும் வருவாய் துறை சார்பில் மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் சராசரி மழை அளவைவிட 14 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில், அதிக மழைப்பொழிவை தரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், 24 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
இதனால்,சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 17 மாவட்டங்களையும், கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 24 வட்டாரங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

45 நாட்களில் கைத்தறி தொழிலை கற்றுத்தரும் நெசவாளர்...! March 21, 2019

Image
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெண்களுக்கு 45 நாட்களில் கைத்தறி தொழிலை கற்பித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி வரும் நெசவாளர் காரப்பனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கை அசைவுகள் ஏதும் இன்றி கால்களை மட்டுமே பயன்படுத்தி நெசவு செய்யும் வகையில் தறியினை கண்டு பிடித்து அதன் மூலம் பெண்களுக்கு காரப்பன் பயிற்சி அளித்து வருகிறார். இவரின் இந்த நடவடிக்கையை பாராட்டி அண்மையில் மத்திய அரசு இவரை தேசிய கைத்தறி பயிற்சியாளராக நியமித்துள்ளது.
பயிற்சிக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் சொந்தமாக கைத்தறிகள் அமைக்க பெண்களுக்கு காரப்பன் உதவி செய்து வருகிறார்.  இதன் மூலம் வீட்டில் இருந்தவாறே நாள் ஒன்றுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை வருவாய் ஈட்டும் தொழில் முனைவோராக மாற்றி வரும் நெசவாளர் காரப்பனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

நியூசிலாந்து தாக்குதல் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை நாட்டை விட்டு வெளியேற்றிய துபாய் அரசு! March 20, 2019

Image
நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ஆதரிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை பணி நீக்கம் செய்ததுடன் நாட்டை விட்டே வெளியேற்றியுள்ளது துபாய் அரசு!
கடந்த வெள்ளிக்கிழமையன்று நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து அங்கு வழிபாட்டில் இருந்தவர்கள் மீது இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் 5 இந்தியர்கள்  உள்ளிட்ட 50 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட Brenton Tarrant என்ற 28 வயது ஆஸ்திரேலிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் இந்த தாக்குதலுக்கு கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் ஐக்கிய அமீரகத்தின் Transguard என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நியூசிலாந்து தாக்குதலை ஆதரிக்கும் விதமாக கருத்து பதிவிட்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமீரக அரசு கருத்து பதிவிட்ட அந்த நபரை பணிநீக்கம் செய்துள்ளதுடன் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றியது. கருத்து பதிவிட்ட நபரின் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.

source ns7.tv