தேர்தல்

 

2024 

    

ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியில் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு; காரணம் என்ன? 31 08 24 


source https://tamil.indianexpress.com/india/haryana-election-commission-poll-dates-changed-6940732
Election Commissioner

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிஷ்னோய் சமூகத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான திருவிழா நடைபெற உள்ளதால், தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வட இந்தியாவில் முக்கிய மாநிலமான ஹரியாணாவில், வரும் அக்டோபர் 1-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது, பிஷ்னோய் சமூகத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான திருவிழா நடைபெற உள்ளதன் காரணமாக, அக்டோபர் 1-ந் தேதிக்கு பதிலாக அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,

அகில இந்திய பிஷ்னோய் மகாசபாவின் தேசியத் தலைவர் பிகானேரிடமிருந்து தேர்தல் ஆணையம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ள திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பிஷ்னோய் குடும்பங்கள் ராஜஸ்தானில் உள்ள முகம் என்ற தங்கள் சொந்த கிராமத்திற்குச் செல்வார்கள். இதனால், அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படும்.

வாக்குரிமை மற்றும் சமூகத்தின் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் மதிக்கும் வகையில், தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது, இது அவர்களின் குரு ஜம்பேஸ்வரரை நினைவுகூரும் வகையில் 300 ஆண்டுகள் பழமையான நடைமுறையை நிலை நிறுத்தும் வகையில் கொண்டாடப்படும் திருவிழா என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஜம்மு மற்றுமு் காஷ்மீர் பகுதியில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டம் செப்டம்பர் 18 ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் செப்டம்பர் 25 ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் இறுதி கட்டம் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் தேர்தல்: அரசியல் களம் எப்படி மாறி இருக்கிறது?

17 8 2024

jk elec

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுகளில் அங்கு அரசியல் களம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.  2019-ல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்டது என அதன் அரசியல் நிலப்பரப்பு குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்துள்ளது.

அடுத்த மாதம், செப்டம்பர் 18 முதல் மூன்று கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2014க்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள்.  இருப்பினும், இவை அனைத்திலும் ஒரு நிலையானது பிராந்தியக் கட்சிகள். மாநிலக் கட்சிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 87.09 லட்சம் வாக்காளர்கள் மீது தொடர்ந்து தங்கள் பிடியை தக்கவைத்து வருகின்றனர்.

ஜூன் 2018-ல், பா.ஜ.க,  மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (பிடிபி) அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது, அதன் ஆட்சிக் காலத்தின் நடுவில் அவர்களின் கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்தியது. ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளதால், ஜே & கே சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், அதே ஆண்டு அக்டோபரில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (DDC) என அழைக்கப்படும் அடிமட்ட நிர்வாகத்தின் ஒரு புதிய அடுக்கு 2020-ல் தொடங்கப்பட்டது. DDC-கள் 14 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில்களாகும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆணையைக் கொண்டுள்ளனர். 

பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் அடிமட்ட இணைப்பு காரணமாக பணிகளைச் செய்ய முடிந்தது, ஆனால் DDCகள் அதிகாரத்துவத்துடன் வேலை செய்வதற்கான போராட்டத்தின் மத்தியில் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்க போராடினர். புல்வாமா டிடிசி தலைவர் அப்துல் பாரி அன்ட்ராபி கூறுகையில்: "ஒரு கப்பல் கட்டப்பட்டுள்ளது, பின்னர் அது பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்." என்றார்.

பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற குடிமை அமைப்புகள் 5 ஆண்டு பணி செய்வர். DDC-கள் தங்கள் பதவிக்காலத்தின் நான்காவது ஆண்டில் இருக்கும்போது புதிய தேர்தல்கள் அறிவிக்கப்படவில்லை, பலர் இதில் கவுன்சில் கூட்டங்களை நடத்த முடியாமல் திணறி வருகின்றன. DDC உறுப்பினர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், 

 உடல்கள் தாமாகவே கூட்டங்களை நடத்தாத நிலையில், தங்கள் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்தப் பணிக்கு ஒப்புதல் பெறலாம் என்பதன் அடிப்படையில் தாங்கள் தனித்தனியாக வேலை செய்கிறோம் என்றனர். 

புதிய கூட்டணி

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரில் பெரிய மாற்றங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிப்பதற்கு ஒரு நாள் முன்பு, பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் ஆகஸ்ட் 4, 2019 அன்று குப்கார் பிரகடனத்தில் கையெழுத்திட்டன.

ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் அமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் காவலில் வைக்கப்பட்டனர், அதே நேரத்தில் மூன்று முன்னாள் முதல்வர்கள் - தேசிய மாநாட்டின் (NC) ஃபரூக் மற்றும் உமர் அப்துல்லா மற்றும் பா.ஜ.கவின் முன்னாள் கூட்டணி கட்சியான டி.பி.பி-ன் மெஹபூபா முஃப்தி ஆகியோர் மீது பாதுகாப்பு சட்டத்தின் கீழ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு இடைநிறுத்தப்பட்டது,  மாநிலம் முழுவதும் இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலக் கொடி அகற்றப்பட்டது. 

சில மாதங்களுக்குப் பிறகு, இந்தத் தலைவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, குப்கர் பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்கள் குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை (பிஏஜிடி) உருவாக்கினர். 370 மற்றும் 35A பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராகவும், ஜே&கே ஒரு மாநிலமாக மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று போராடுவதற்காக "தேர்தல் அல்லாத" கூட்டணியாக இந்த பிரதான கூட்டணி உருவாக்கப்பட்டது.

source https://tamil.indianexpress.com/india/jammu-and-kashmir-after-a-decade-election-political-landscape-6864223

இடைத்தேர்தலில் கொடி நாட்டிய காங்கிரஸ்! 13 07 2024



உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியில் பாஜக இருக்கும் நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கொடி நாட்டி இருப்பது கவனம் பெற்றுள்ளது. 

7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிவாகை சூடியது வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.


உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. அதேபோல 20 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இவ்விரு கட்சிகள் தவிர பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 தொகுதியும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி பத்ரிநாத் மற்றும் மங்களூரு என இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தொகுதியில் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. தொகுதியின் தன்மையை பொறுத்தவரை, ஒருமுறை பாஜகவும், அடுத்த முறை காங்கிரசுக்கும் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். 2002ம் ஆண்டு காங்கிரஸ் இந்த தொகுதியில் வென்றது. இதனை தொடர்ந்து 2007ல் பாஜகவும், 2012ல் காங்கிரசும், 2017ல் பாஜகவும், 2022ல் காங்கிரசும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.

இப்படி இருக்கையில், 2012 மற்றும் 2022ல் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர சிங் பந்தாரி, திடீரென கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி நடந்த தேர்தலில் 49.80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்த தொகுதியிலும் 2002லிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சிதான் வென்றிருக்கிறது. நடுவில் இரண்டு முறை மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த சார்வாட் கரீம் அன்சாரி அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால், 2012 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2022 தேர்தலிலும் பகுஜன் சமாஜ் சார்பில் வெற்றி பெற்றார்.

ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 68.24 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று இரண்டு தொகுதியிலும் வாக்குகள் எண்ணப்பட்ன. இந்நிலையில், பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் லக்கபாட் சிங் புடோலோ வெற்றி பெற்றார். அதே போன்று, மங்களூர் தொகுதியிலும் காங்கிரஸின் முகமது நிஜாமுதீன் வெற்றி பெற்றார்.

உத்தரகாண்டில் ஆளும் கட்சியாக பாஜக இருக்க, இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருப்பது பாஜகவுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


source https://news7tamil.live/uttarakhand-congress-hoisted-the-flag-in-the-by-election-when-bjp-was-in-power.html

 இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி: 8 இடங்களில் வெற்றி


இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் இந்தியா கூட்டணி 8 இடங்களிலும், பா.ஜ.க 2 இடத்திலும், ஒரு இடத்தில் சுயேச்சையும் முன்னணியில் உள்ளனர்.

தேர்தல் நடந்த இடங்கள்

எம்.எல்.ஏ.க்களின் மரணம் மற்றும் ராஜினாமா உள்ளிட்ட காரணங்களின் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடந்தது.

அந்த இடங்கள், பீகாரின் ருபாலி, மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா, தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா; உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு; மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகும்.

தேர்தல் முடிவுகள்

திரிணாமுல் காங்கிரஸ் ராய்கஞ்ச், ரணகட் தக்ஷின் மற்றும் பாக்தா சட்டமன்றத் தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. மணிக்கட்டாலா தொகுதியில் வேட்பாளர் சுப்தி பாண்டே 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மங்களூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் காசி முகமது நிஜாமுதீன் பாஜகவின் கர்தார் சிங் தானாவை எதிர்த்து 400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லக்பத் சிங் புடோலா பாஜகவின் ராஜேந்திர சிங் பண்டாரியை எதிர்த்து 5000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 8 தொகுதிகளிலும் பா.ஜ.க 2 தொகுதிகளிலும் முன்னணியில் உளளன. ஒரு சில இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.

source https://tamil.indianexpress.com/india/by-election-result-2024-india-bloc-wins-8-seats-nda-2-6132202


தி.மு.க-வா? விக்கிரவாண்டி இறுதி ரிப்போர்ட் 13 07 2024 

Vikravandi By Election 2024 Results Anniyur Siva of DMK win MK Stalin Tamil News

விக்கிரவாண்டி தொகுதிக்கு கடந்த ஜூலை 10-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். 

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக. சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19-ந் தேதி அவர் திடீரென மரணமடைந்தார். அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தால், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், கடந்த ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ருந்தனர்.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜக.கூட்டணியில் பா.ஜ.க சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர்.  அதிமுக தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்தனர். கடந்த ஜூலை 10-ந் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுகவின் அன்னியூர் சிவா, 124053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க 2-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தையும் பிடித்தது.

இந்த இடைத்தேர்தலில், அதிமுக போட்டியிடாததால், அதிமுகவின் ஓட்டுக்கள் திமுக பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் பங்கிகட்டுக்கொண்டது போல் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பிடாரிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2076 வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது, திமுக, 1766 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இந்த முறை, 1559 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.

அதேபோல், 996 வாக்குகள் பெற்றிருந்த பா.ம.க இந்த முறை 917 வாக்குகளும், 219 வாக்குகள் பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி 67 வாக்குகளும் அதிகம் பெற்றுள்ளது. பொன்னாங்குப்பம் பகுதியில், திமுக 1842, பா.ம.க, 1386, நாம் தமிழர் கட்சி 167 வாக்குகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட அதிகமான வாக்குகள் பெற்றுள்ளது. இந்த பகுதியில் அதிமுக 2766 வாக்குகள் பெற்றிருந்தது.

மண்டகப்பட்டு பகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக 2516 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில், திமுக 1568, பா.ம.க.1108, நாம் தமிழர் கட்சி 202 வாக்குகள் கடந்த தேர்தல்களை விட கூடுதலாக பெற்றுள்ளது. உலகலாம்பூண்டி பகுதியில், அதிமுக 2354 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 2229 வாக்குகள், பாமக 565 வாக்குகள், நாம் தமிழர்73 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளனர். வயலாமூர் பகுதியில், அதிமுக 2751 வாக்குகள் பெற்றிருந்தது.

வயலாமூர் தொகுதியில் தற்போது திமுக 1598 வாக்குகள், பா.ம.க 901 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி 19 வாக்குகளை இழந்துள்ளது. சூரப்பட்டு பகுதியில் அதிமுக 3126 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 1537, பாமக 1477, நாம் தமிழர் 262 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. குண்டலப்புலியூர் பகுதியில், அதிமுக 2523 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 1730, பா.ம.க 1019, நாம் தமிழர்151 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

கல்யாணம் பூண்டி பகுதியில் அதிமுக 2197 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 1750, பாமக 1134, நாம் தமிழர் 10 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. சோழம்பூண்டி பகுதியில், அதிமுக 2940 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 2992, பாமக 556, நாம் தமிழர் 15 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. வடக்குச்சிபாளையம் பகுதியில், அதிமுக 2520 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 1359, பாமக 1367, நாம் தமிழர் 91 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

டி.மேட்டுப்பாளையம் பகுதியில், அதிமுக 2680 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 2268, பாமக 754, நாம் தமிழர் 294 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. கொட்டியாம்பூண்டி பகுதியில், அதிமுக 2886 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 2237, பாமக 1034, நாம் தமிழர் 69 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-vikravandi-by-election-result-dmk-win-which-party-give-admk-vote-6132726

      


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 82.48% வாக்குகள் பதிவு; ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை 10 07 2024 

விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல்  மாதம் 6ம் தேதி மரண மடைந்தார். இந்நிலையில் இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேதிகளை அறிவித்தது.

தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க தேர்தலில் போட்டியிட வில்லை. இவர்களையும் சேர்த்து சுயேச்சையாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.  வாக்குப்பதிவுக்கு தலா ஒரு வாக்குச்சாவடிக்கும் 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொகுதி முழுவதும் 552 வாகுப்பதிவு எந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. தேர்தல் பணியில் 1,355 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/vikravandi-by-election-2024-polling-live-updates-voters-percentage-5556058

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு; மொத்தம் 64 பேர் மனு 22 6 24 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நிறைவடைந்தது. இதுவரை 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கியது. 

அ.தி.மு.க விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் ஜூன் 21-ம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் இதுவரை 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அளித்த மனுக்கள் மீது 24ம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனுவை திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதையடுத்து, ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/vikravandi-byelection-nominations-completed-total-64-people-file-nominations-4773861

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 14 6 2024

விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது.

திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கவுள்ளது.

வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும்.  மிக குறைந்த காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் விருப்பமனு வழங்கப்படுவதில்லை எனவும் நேரடியாக திமுக வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்த நிலையில்,  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மாநில அந்தஸ்து பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சி போட்டியிடும் முதல் தேர்தல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும். அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்பு மனுவை விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்றும், விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான மு.சந்திரசேகரை தேர்தல் நடத்தும் அலுவலராகவும், விக்கிரவாண்டி வட்டாட்சியர் க.யுவராஜை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமித்து மாவட்ட ஆட்சியர் சி. பழனி உத்தரவிட்டார்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

source https://news7tamil.live/vikravandi-by-election-nomination-filing-begins-today.html       

தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்து  9 தொகுதிகளில் 3வது இடம்!

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 7 தொகுதிகளில்  டெபாசிட் இழந்துள்ளது.  மேலும், 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ்,  திமுக,  சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது .  INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை . தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

இதைபோல,  தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பின்னடைவு பெற்றுள்ளது.  குறிப்பாக, அதிமுக தமிழ்நாட்டில் போட்டியிட்ட 32 தொகுதிகளில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.

அதிமுக டெபாசிட் இழந்த தொகுதிகள்

  1.  தென்சென்னை
  2.  கன்னியாகுமரி
  3.  தூத்துக்குடி
  4.  நெல்லை
  5.  வேலூர்
  6.  தேனி
  7.  புதுச்சேரி

மேலும்,  ஒன்பது தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும்,  2 தொகுதிகளில் 2-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.

அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தொகுதிகள்

  1. மதுரை
  2. தென்சென்னை
  3. தேனி
  4. ராமநாதபுரம்
  5. வேலூர்
  6.  நெல்லை
  7. நீலகிரி
  8.  தருமபுரி
  9.  கோவை

அதிமுக 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தொகுதிகள்

  1.  கன்னியாகுமரி
  2. புதுச்சேரி

source https://news7tamil.live/lok-sabha-elections-2024-aiadmk-deposit-loss-in-seven-constituencies-in-tamil-nadu.html

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: தோல்வியைச் சந்தித்த 13 மத்திய அமைச்சர்கள்!

5 6 24

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

இந்நிலையில், பாஜக இந்த தேர்தலில் பல அமைச்சர்களை களம் இறக்கியது. இதில், ஸ்மிரிதி ராணி உள்பட பலர் தோல்வியடைந்துள்ளனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்….

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் சசி தரூருக்கு எதிராக மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் போட்டியிட்டாா். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சசி தரூரைவிட 24,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்துடன் சந்திரகேசா் முன்னிலை வகித்தாா். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோதிலும், இறுதியில் சசி தரூரிடம் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகா் தோல்வியடைந்தாா்.

கடந்த 2021-ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாஜகவினா் வந்த காா் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்த நிலையில், அவா் உள்பட 13 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் கெரி தொகுதியில் போட்டியிட்ட அஜய் மிஸ்ரா, சமாஜவாதி வேட்பாளா் உத்கா்ஷ் வா்மாவைவிட 34,000 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலம் குந்தி தொகுதியில் மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டாவை, காங்கிரஸ் வேட்பாளா் காளிசரண் முண்டா 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

source https://news7tamil.live/lok-sabha-elections-central-ministers-who-suffered-defeat.html

மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!


5 6 24

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட திமுக கூட்டணி பெண் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

குறிப்பாக,  தமிழ்நாட்டில் தூத்துக்குடி,  தென்காசி,  தென் சென்னை,  கரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.


தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  குறிப்பாக தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்தார்.  இதையடுத்து,  தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,13,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜோதிமணி 5,31,829 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றார்.  மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  தென்காசி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

 

source https://news7tamil.live/lok-sabha-elections-women-candidates-won-in-tamil-nadu.html

மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? எவ்வளவு வாக்கு சதவிகிதம்?

5 6 24

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 4முனைப் போட்டி – யார் யாருக்கு எத்தனை இடங்கள்? எவ்வளவு வாக்கு சதவிகிதம்? என்பதை இப்போது பார்க்கலாம்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி  பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

மத்தியில் இரண்டு முக்கிய கூட்டணிகள் தேர்தலை எதிர்கொண்டாலும் தமிழ்நாட்டைப்  பொறுத்த வரை நான்கு முனை போட்டி நிலவியது.  திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி,  அதிமுக தலைமையிலான கூட்டணி,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டன.  இந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்சிவாரியாக வெற்றி பெற்ற இடங்கள் மற்றும் அவர்களுக்கு கிடைத்த வாக்கு சதவிகிதம் குறித்து விரிவாக காணலாம்.


திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி
  • திராவிட முன்னேற்றக் கழகம் – வெற்றி பெற்ற இடங்கள் 22 (26.3%)
  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி- வெற்றி பெற்ற இடங்கள் 9 (10.67)
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 2
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 2 (2.52%)
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 2 (2.15%)
  • இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் – வெற்றி பெற்ற இடம் 1 (1.17%)
  • மறுமலர்ச்சி திமுக – வெற்றி பெற்ற இடம் 1
  • மொத்தம் : வெற்றி பெற்ற இடங்கள் 39  (46.97%) 
அதிமுக கூட்டணி
  • அதிமுக வெற்றி பெற்ற இடங்கள் – 0 ( 20.46%)
  • தேமுதிக வெற்றி பெற்ற இடங்கள் – 0 (2.56%)
  • புதிய தமிழகம் – வெற்றி பெற்ற இடம் – 0
  • எஸ்டிபிஐ கட்சி – 0
  • மொத்தம் : வெற்றி பெற்ற இடங்கள் 0  (23.05%) 
பாஜக தலைமையிலான NDA கூட்டணி
  • பாஜக – வெற்றி பெற்ற இடங்கள் 0 (11.24%)
  • பாமக – வெற்றி பெற்ற இடங்கள் 0 
  • தமாகா – வெற்றி பெற்ற இடங்கள் 0
  • அமமுக – வெற்றி பெற்ற இடங்கள் 0
  • தமமுக –  வெற்றி பெற்ற இடம் 0
  • புதிய நீதிக் கட்சி – வெற்றி பெற்ற இடம் 0
  • சுயேட்சை – வெற்றி பெற்ற இடம் 0
  • மொத்தம் : வெற்றி பெற்ற இடங்கள் 0  (18.28%) 
நாம் தமிழர் கட்சி
  • நாம் தமிழர் கட்சி – வெற்றி பெற்ற இடங்கள் 0 (8.10%)
மற்றவை :
  • பகுஜன் சமாஜ் கட்சி 0 ( 0.31%)
  • நோட்டா (1.07%)
source https://news7tamil.live/lok-sabha-elections-4-way-race-in-tamil-nadu-who-has-how-many-seats-how-much-vote-percentage.html

 5 6 24

ஆன்மீக நம்பிக்கையை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளுக்கு வீழ்ச்சி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் மக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,

நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது! மகத்தான வெற்றியை நமக்கு அளித்திருக்கிறார்கள் மக்கள். அந்த வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் உடன்பிறப்புகளாகிய நீங்கள். தமிழ்நாடு – புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தோழமைக் கட்சியினருடன் தோளோடு தோள் நின்று அவர்களின் பங்களிப்புடன் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது.

கொள்கை உறுதியும், லட்சியப் பார்வையும், திட்டமிட்ட உழைப்பும், தெளிவான வியூகமும் இருந்தால் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் வெல்லவும் முடியும், அதன் மூலம் நாட்டை வழிநடத்தும் ஆற்றலுடன் செயல்படவும் முடியும் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. 2022-ம் ஆண்டு விருதுநகரிலே நடைபெற்ற முப்பெரும் விழாவிலே நான் உரையாற்றும்போது, ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தேன். அது முழக்கமாக மட்டும் இருந்து விடக்கூடாது, முழுமையான வெற்றியாக விளைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை பூத் வாரியாக மேற்கொண்டது திமுக.

பாக முகவர்களை நியமித்தல், பூத் கமிட்டிகளை அமைத்தல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் என ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளிலும் கழகத்தின் கட்டமைப்பும் வலிமையும் மேம்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டை 5 மண்டலங்களாகப் பிரித்துக்கொண்டு மாநாடுகள் போன்ற அளவில் பாக முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைகள் நடத்தப்பட்டன. அவற்றில் நானும் பங்கேற்று, திமுகவின் தேர்தல் பணிகள் எப்படி அமையவேண்டும் என்பதையும், முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தேன்.

ஒவ்வொரு நாளும் கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தேர்தல் தயாரிப்புப் பணிகளின் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தேன். நானும் ஓய்வெடுக்கவில்லை. திமுக உடன்பிறப்புகளாம் உங்களையும் ஓய்வெடுக்கவிடவில்லை. முரசம் கேட்டதும் போர்க்களத்திற்குப் பாயும் குதிரை வீரர்கள் போல தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்பட்டாலும் வெற்றிக்களமாட ஆயத்தமாக இருந்தது தி.மு.க உடன்பிறப்புகளின் படை.

2019-ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியினர் எப்படி 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து நின்றார்களோ, அதுபோலவே இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்கும் இலட்சிய நோக்கத்துடன் ஒரே அணியாக ஒருங்கிணைந்து நின்றனர். நமது நோக்கத்தை அறிந்து கூடுதலான ஆதரவை வழங்கிய இயக்கங்களும் தோள் கொடுத்து நின்றன. இந்தியா கூட்டணியின் நம்பிக்கை மிக்க களமாகத் தமிழ்நாடு அமைந்தது. மதவாதத்தையும் வெறுப்பரசியலையும் விதைக்க நினைப்பவர்கள் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விடவேண்டும் எனத் திட்டமிட்டார்கள்.

வன்ம விதைகளைத் தூவினார்கள். வதந்தி நீர் ஊற்றி அதனை வளர்க்கப் பார்த்தார்கள். நாட்டின் பிரதமர் 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். தி.மு.கழகம் மீது அவதூறு சேற்றினை அள்ளி வீசினார். தோழமைக் கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர் வழியிலேயே அவரது கட்சியினரும் செயல்பட்டனர். மற்றொருபுறம், இந்த மதவாத சக்திகளுக்கு சேவகம் செய்த அ.தி.மு.க. தனித்து நிற்பதாகக் கூறி மறைமுகக் கூட்டணியாகச் செயல்பட்டது.

இந்த இரண்டு சக்திகளும் தமிழ்நாட்டுக்கு எந்தளவு ஆபத்தானவை, எந்த அளவுக்குக் கேடானவை என்பதைக் கொள்கைத் தெளிவுடன் எடுத்துரைப்பது மட்டுமே தேர்தல் களத்தில் எனது பரப்புரை வியூகமாக அமைந்தது. தி.மு.க வெறுப்புப் பிரச்சாரம் செய்யவில்லை. பொறுப்பான முறையிலே தேர்தல் களத்தில் தன் கடமையை ஆற்றியது. தமிழ்நாட்டு மேடைகளில் தமிழைப் போற்றுவது போலப் பேசும் பிரதமர் உள்ளிட்ட மத்திய ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் எந்தளவுக்கு வஞ்சித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தோம்.

கடந்த மூன்றாண்டுகால திமுக ஆட்சியில் எத்தனையெத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, எத்தனை கோடி மக்கள் அதனால் பயனடைந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துச்சொன்னோம். இந்தியா கூட்டணியால்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் – ஜனநாயகத்தை மீட்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினோம். திமுகவின் தேர்தல் அறிக்கையும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையும் தோழமைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் நலன் காக்கும் வகையில் இருப்பதை விளக்கினோம்.

பன்முகத்தன்மை கொண்ட – மதநல்லிணக்கத்துடனான – சமூகநீதி இந்தியாவைப் பாதுகாத்திட இந்தியா கூட்டணியால்தான் முடியும் என்பதைக் கொள்கை வழியில் எடுத்துரைத்தோம். எல்லாருக்கும் எல்லாம் என்கிற திமுக இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டிய அவசியத்தை தோழமைக் கட்சியினரும் எடுத்துச் சொன்னார்கள். நாம் மக்களை நேரடியாகச் சந்தித்தோம். மூன்றாண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்கள் அவர்களைச் சரியாகச் சென்று சேர்ந்திருப்பதை உறுதி செய்தோம். நம்மிடம் மேலும் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். அவர்களின் கோரிக்கைகளை – கேள்விகளைச் செவிமடுத்தோம்.

அதைவிட முக்கியமாக, திமுக கூட்டணி மீதுதான் தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைக் களத்தில் கண்டோம். அவர்களின் நம்பிக்கைதான் இன்று முழுமையான வெற்றியாக விளைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குத் துணைநின்ற கழகத்தின் மாநில – மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழக நிர்வாகிகள், கழகமே உயிர்மூச்சு என வாழும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

திமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எந்தளவுக்கு உடன்பிறப்புகள் களப்பணியாற்றினார்களோ, அதுபோலவே தோழமைக் கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளிலும் கழகத்தினர் சுற்றிச்சுழன்று பணியாற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. 40 தொகுதிகளில் ஏறத்தாழ பாதி அளவு தொகுதிகளில்தான் தி.மு.கழகம் போட்டியிட்டது. மீதமிருந்த தொகுதிகள் தோழமைக் கட்சிகளின் வெற்றிவாய்ப்பை உறுதிசெய்யும் வண்ணம் பகிர்ந்தளிக்கப்பட்டன. அந்தத் தொகுதிகளும் நமது தொகுதிகள்தான் என்ற தோழமை உணர்வுடன் உடன்பிறப்புகள் தேர்தல் பணிகளை நிறைவேற்றினர்.

கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் தோழமைக் கட்சியினர் துணைநின்று பணியாற்றினர். இத்தகைய ஒருங்கிணைப்புதான் நாற்பது தொகுதிகளிலும் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இதற்குக் காரணமான, தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தேர்தல் களத்தில் போட்டியிடும் வாய்ப்பு அமையாத நிலையிலும், இந்தியாவைக் காத்திட இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் முழு மூச்சாய்ச் செயலாற்றிய அரசியல் இயக்கத்தினர், அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் இதயப்பூர்வ நன்றியை உரித்தாக்குகிறேன்.

திமுக தலைமையிலான அணி மீது முழுமையான நம்பிக்கை வைத்து, மூன்றாண்டுகால திமுக ஆட்சியின் பயன்மிகு திட்டங்களுக்கு நற்சான்றளிக்கும் வகையில் நாற்பது தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை அள்ளித் தந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு கோடானுகோடி நன்றி. மத்திய ஆளுங்கட்சியின் அதிகார பலம், அடக்குமுறைத்தனம், அவதூறு பரப்புரைகள் இவற்றைத் தகர்த்தெறிந்து நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரே அணி முழுமையான வெற்றி பெற்றது என்பது ஒரு சில மாநிலங்களில்தான். அதில் இந்தியா கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைத்திருப்பது தமிழ்நாடு – புதுச்சேரியில் மட்டும்தான் என்பது உடன்பிறப்புகளின் ஓயாத உழைப்புக்கும், நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குமான சான்று. நூற்றாண்டு நாயகராம் கருணாநிதிக்கு இந்த வெற்றியைக் காணிக்கையாக்குவோம் என்று இதற்கு முந்தைய ‘உங்களில் ஒருவன்’ கடிதத்தில் எழுதியிருந்தேன்.

சொன்னதைச் செய்வோம் என்ற அவரின் வாக்குக்கேற்ப அவர் நிரந்தர ஓய்வு கொள்ளும் நினைவிடத்தில் நெஞ்சம் நெகிழக் காணிக்கையாக்கினேன். மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத்தான் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் தேவையில்லை. வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள். அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்போம் என்ற உறுதியினை அளியுங்கள். தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்றப் பாடுபடுவதும், மாநிலத்தின் நலனைக் காக்கும் செயல்பாடுகளுமே உண்மையான வெற்றிக் கொண்டாட்டமாகும்.

நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்றிய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பாஜகவின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் சரிக்குச் சரியாக இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம்பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.

சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள். சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். வெற்றியை வழங்கிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை கரம் குவித்து நன்றியை உரித்தாக்குகிறேன்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/fall-for-the-religious-forces-who-want-to-use-spiritual-faith-for-political-gain-chief-minister-m-k-stalins-letter.html


ஒரே நாடு ஒரு தேர்தல் முதல் பொது சிவில் சட்டம் வரை, கனவு திட்டங்களுக்கு காத்திருக்கும் சவால்!

ஒரு தசாப்த கால முழுமையான ஆதிக்கத்திற்குப் பிறகு, பா.ஜ.க மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை இழந்துவிட்டது. நரேந்திர மோடி யின் கீழ் கட்சியை புதிய அரசியல் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றது. அதன் என்.டி.ஏ கூட்டணி கட்சிகள் ஆளும் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

என்.டி.ஏ கூட்டணி இன்னும் அரசாங்கத்தை அமைக்கும் போக்கில் உள்ளது. ஆனால் அது கூட்டணிக் கட்சிகளான டி.டி.பி மற்றும் ஜே.டி (யு) சார்ந்து இருக்கும் சூழல் நிலவுகிறது. அவர்கள் எதிர்காலத்தில் முக்கியமான தருணங்களில் பா.ஜ.க-வுடன் உடன்படவில்லை என்றால் தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்ய தயங்க மாட்டார்கள். குறிப்பாக ஒரே நாடு ஒரு தேர்தல், எல்லை நிர்ணயம் மற்றும் சிவில் சட்டம் போன்ற சிக்கல்களுக்கு அவர்களால் தீர்வு காண முடியாது. 

மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜே.டி(யு) வின் நிதிஷ் குமார் இருவரும் கடந்த காலங்களில் பா.ஜ.க-வுடன் குழப்பமான உறவைக் கொண்டிருந்தனர். “சமூகத் துறையாக இருந்தாலும் சரி, பொருளாதாரத் துறையாக இருந்தாலும் சரி, கூட்டணி ஆட்சியில் கடுமையான சீர்திருத்தக் கொள்கைகளுக்கு இடமில்லை. உதாரணமாக, ஜே.டி(யு) போன்ற கட்சிகள் பொதுத்துறை நிறுவனங்களை விலக்குவதை ஆதரிக்காது” என்று பா.ஜ.க தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

2018 ஆம் ஆண்டில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால், மோடி தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்த பிறகு, பா.ஜ.க-வுடனான கூட்டணியை சந்திரபாபு நாயுடுவின் டி.டி.பி முறித்துக் கொண்டது. நாயுடு மோடியை "கடினமான பயங்கரவாதி" என்று வர்ணிக்கும் அளவுக்கு அவர்களின் உறவுகள் மிகவும் மோசமாக இருந்தன. பின்னர், 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தங்கள் உறவுகளை புதுப்பிக்க நாயுடு பலமுறை முயற்சித்த போதிலும், பா.ஜ.க தனது கட்சியை மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் சேர்ப்பதில் இருந்து இழுத்தடித்தது.

ஏ.பி வாஜ்பாய் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க-வுடனான ஜே.டி(யு) உறவை முதலில் முறித்துக் கொண்டார். அவர் பின்னர் என்.டி.ஏ-வுக்கு திரும்பினாலும், ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸுடன் மாநில அரசாங்கத்தை அமைப்பதற்காக 2022 இல் மீண்டும் உறவை முறித்துக் கொண்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே பா.ஜ.க பக்கம் திரும்பினார்.

இப்போது, ​​ஸ்டிரைக் ரேட் அடிப்படையில் பிகாரில் பா.ஜ.க-வை விட ஜே.டி(யு) சிறப்பாகச் செயல்படுவதால், குமார் மீண்டும் பா.ஜ.க-வுடன் "விலைமதிப்புடன்" செயல்பட முடியும் என்று மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி ஒருவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வாக்கு எண்ணிக்கை முன்னேறிய நிலையில், பா.ஜ.க போட்டியிட்ட 17 இடங்களில் 12 இடங்களில் முன்னிலையில் இருந்தது, குமாரின் கட்சி அது போட்டியிட்ட 16 இடங்களில் 14 இடங்களில் தெளிவான முன்னிலை பெற்றது.

அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, மோடியின் வெல்லமுடியாத பிம்பம் சிதைந்த நிலையில், பா.ஜ.க தனது அரசியலையும் தேர்தல் வியூகத்தையும் அவரை மையமாகக் கொண்டுள்ள இந்த நேரத்தில், அவர் ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக நீடிக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். முக்கியமாக, மூத்த பாஜக தலைவர்கள் ஒப்புக்கொள்வது, கூட்டணி அரசாங்கம் என்றால், சீர்திருத்தங்கள் மற்றும் சித்தாந்த முன்னணியில் பா.ஜ.க-வின் பல செல்லப்பிள்ளை திட்டங்கள் கிடப்பில் போடப்படும் அல்லது அப்படியே ஓரங்கட்டப்படும் கிடங்கில் வைக்கப்படும் 

மோடியின் விருப்பமான திட்டங்களில் ஒன்றான “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற கோஷத்தின் கீழ் புதிய அரசாங்கம் ஒரே நேரத்தில் தேர்தலுக்குத் தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்சியில் இருக்கும் புதிய கூட்டணி அத்தகைய நடவடிக்கைக்கு சாதகமாக இருக்காது. உதாரணமாக, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிற்கு பதிலளித்த போது, ​​ஒரே நேரத்தில் தேர்தல்கள் மற்றும் அதைச் செயல்படுத்துவதற்கான வழிகளை பரிந்துரைத்த ஜே.டி(யு) அதை ஆதரித்த போது, ​​டி.டி.பி  திட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படவில்லை. மீண்டும், இந்த நடவடிக்கையை எதிர்த்த 15 கட்சிகளில் காங்கிரஸ், டி.எம்.சி, தி.மு.க, ஆம் ஆத்மி மற்றும் எஸ்.பி ஆகியவை அடங்கும். அவை இப்போது ஒரு வலிமையான மற்றும் தைரியமான எதிர்ப்பை உருவாக்குகின்றன, அவை தேசிய அரசியலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சோதனைகள் மற்றும் சமநிலையை உறுதி செய்யும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

2026ல், தெலுங்கு தேசம் கட்சி எடுக்கும் நிலைப்பாட்டைப் பொறுத்து, எல்லை நிர்ணய செயல்முறை குறித்த தனது முன்னோக்கை மாற்ற வேண்டிய கட்டாயம் பா.ஜ.க-வுக்கு ஏற்படலாம். 2024 பிரச்சாரத்தின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திட்டமிடப்பட்ட காலத்தில் செயல்முறை நடைபெறும் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

தவிர, செவ்வாய்க்கிழமை முடிவுகள், குறிப்பாக உ.பி.யில் இருந்து 2019-ல் இருந்த 62 எண்ணிக்கையில் இருந்து பா.ஜ.க-வின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கடுமையாகக் கூட்டிய நாடாளுமன்றத்தில் முன்வைத்த கட்சிக்குள் இருந்து அழுத்தம் வரக்கூடும் என்பதைக் குறிக்கிறது. 

மிகவும் பரபரப்பாக பேசப்படும் ராமர் கோவில் "பிரான் பிரதிஷ்டை" பா.ஜ.க-வுக்கு பெரிய பலன் அளிக்காததால், உ.பி.யில் கூட, காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய மற்ற மதத் தலங்களில் அக்கட்சி தனது சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நிரலை பின்னுக்குத் தள்ளும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு விடப்படும் என்று கட்சி கூறியிருந்தாலும், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட பல தலைவர்கள் மதுராவின் ஷாஹி ஈத்கா மற்றும் வாரணாசியின் ஞானவாபி மசூதியை "பரஸ்பர ஆலோசனைகள்" மூலம் வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

இதேபோல், பொது சிவில் சட்டத்தை நோக்கி ஒரு தொடக்கம் செய்யப்பட்டது, பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட் அதை அமல்படுத்தியது மற்றும் அக்கட்சி ஆளும் பிற மாநிலங்கள் அதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இருப்பினும், அடுத்த மக்களவையில் சாத்தியமான சமன்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பா.ஜ.க இந்தத் திட்டத்தை அதன் தேசிய முன்னுரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கலாம்.

டெல்லியில் அதன் சிறப்பான செயல்திறன் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த முடிவுகள் பா.ஜ.க-வை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை முட்டுக்கட்டை போடும் அதன் முயற்சிகளைக் குறைக்கும். மேலும், 18-வது மக்களவையின் அரசியல் அமைப்பு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்த மத்திய அரசை நிர்பந்திக்கக்கூடும் என்றும் தலைவர்கள் கூறுகிறார்கள். 



source https://tamil.indianexpress.com/india/allies-in-play-tough-road-ahead-for-bjps-key-plans-from-one-poll-push-to-delimitation-tamil-news-4746062

 

78 முஸ்லீம் வேட்பாளர்களில் 24 பேர் மட்டுமே வெற்றி; மக்களவையில் குறைந்து வரும் பிரதிநிதித்துவம்

2024 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்ட 78 முஸ்லீம் வேட்பாளர்களில், 24 பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, இந்த எண்ணிக்கை பல ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க:

2019 இல், 26 முஸ்லீம் வேட்பாளர்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலா நான்கு பேர், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியிலிருந்து தலா மூன்று பேர், மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தலா ஒருவர்.

இந்த ஆண்டு, சஹாரன்பூரில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் 64,542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், கைரானாவிலிருந்து சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 29 வயதான இக்ரா சவுத்ரி 69,116 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் பிரதீப் குமாரை எதிர்த்து வெற்றி பெற்றார்.

காசிப்பூரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அப்சல் அன்சாரி பா.ஜ.க.,வின் பார்ஸ் நாத் ராயை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார், அதே நேரத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது ஹைதராபாத் தொகுதியை தனது நெருங்கிய போட்டியாளரான பா.ஜ.க.,வின் மாதவி லதா கொம்பெல்லாவை விட 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் தக்கவைத்துக் கொண்டார். லடாக்கில், சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா 27,862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், மற்றொரு சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் என்ற இன்ஜினியர் ரஷித், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் 4.7 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மொஹிப்புல்லா 4,81,503 வாக்குகள் பெற்றும், ஜியா உர் ரஹ்மான் சம்பாலில் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை எதிர்த்து 2,81,794 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் மியான் அல்தாப் அகமது வெற்றி பெற்றார். ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அகா சையது ருஹுல்லா மெஹ்தி 3,56,866 வாக்குகள் பெற்றார்.

மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் தொகுதியில், முதல்முறையாக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், 85,022 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் 6 முறை எம்.பி.யாக இருந்தவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை தோற்கடித்து அசத்தினார். சந்தேஷ்காலிக்கு உட்பட்ட பாசிர்ஹாட் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஹாஜி நூருல் இஸ்லாம் பா.ஜ.க வேட்பாளர் ரேகா பத்ராவை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். உலுபெரியாவிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சஜ்தா அகமது இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.,வின் அருணுதாய் பால்சௌத்ரியை வீழ்த்தினார். ஜாங்கிபூரில் திரிணாமுல் கட்சியின் கலீலுர் ரஹ்மான் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் முர்தோஜா ஹொசைன் போகுலைத் தோற்கடித்தார். முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது, அபு தாஹர் கான் சி.பி.எம் கட்சியின் எம்.டி சலீமை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கடந்து சென்றார். மல்தாஹா மேற்கு தொகுதியில் காங்கிரஸின் இஷா கான் சவுத்ரி 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.,வின் ஸ்ரீரூப மித்ரா சவுத்ரியை தோற்கடித்தார்.

லட்சத்தீவில், காங்கிரஸின் முகமது ஹம்துல்லா சயீத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (ஷரத்சந்திர பவார்) முகமது பைசல் பிபியை வெறும் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றார். கேரளாவின் பொன்னானியில், ஐ.யூ.எம்.எல் (IUML) கட்சியின் டாக்டர் எம்.பி அப்துஸ்ஸமத் சமதானி, சி.பி.ஐ(எம்) கட்சியின் கே.எஸ்.ஹம்சாவை தோற்கடித்தார். வடகரையில் காங்கிரஸின் ஷாபி பரம்பில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷைலஜா டீச்சரை தோற்கடித்தார். மலப்புரம் தொகுதியிலும் ஐ.யூ.எம்.எல் வெற்றி பெற்றது, அங்கு இ.டி முகமது பஷீர் சி.பி.ஐ(எம்) கட்சியின் வி.வசீஃபை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பீகாரில், காங்கிரஸின் தாரிக் அன்வர் கதிஹாரில் வெற்றி பெற்றார், ஐக்கிய ஜனதா தளத்தின் துலால் சந்திர கோஸ்வாமியை கிட்டத்தட்ட 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கிஷன்கஞ்சில், காங்கிரஸின் முகமது ஜாவேத், ஜே.டி.(யு)வின் முஜாஹித் ஆலமை கிட்டத்தட்ட 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஏ.ஐ.யு.டி.எஃப் (AIUDF) கட்சியின் கோட்டையான அசாமின் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் ரகிபுல் ஹுசைனிடம் பதுருதீன் அஜ்மல் தோல்வியடைந்தார்.

இந்த ஆண்டு, பகுஜன் சமாஜ் கட்சி அனைத்துக் கட்சிகளிலும் அதிகபட்சமாக 35 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. இவற்றில் பாதிக்கு மேல் (17) உத்திரபிரதேசத்தில், நான்கு மத்திய பிரதேசத்தில், பீகார் மற்றும் டெல்லியில் தலா மூன்று, உத்தரகண்டில் இரண்டு, மற்றும் ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், தெலுங்கானா மற்றும் குஜராத்தில் தலா ஒன்று.

அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது, காங்கிரஸ் 19 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியது, மேற்கு வங்கத்தில் 6 பேர், ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார் மற்றும் உ.பி.யில் தலா இருவர், கர்நாடகா, கேரளா, ஒடிசா, தெலுங்கானா மற்றும் லட்சத்தீவுகளில் தலா ஒருவர். திரிணாமுல் காங்கிரஸ் இம்முறை தேர்தலில் அதிக முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியதில் மூன்றாவது இடத்தில் உள்ளது, மொத்தம் ஆறு பேர், அவர்களில் ஐந்து பேரை அதன் சொந்த மாநிலமான வங்காளத்தில் நிறுத்தியுள்ளது. அசாமில் ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களில், மூன்று பேர் உ.பி.யில் இருந்தும், நான்காவதாக ஆந்திராவில் இருந்தும் போட்டியிட்டனர். உ.பி.யில் இருக்கும் முஸ்லிம் எம்.பி.களில் ஒருவரான மொராதாபாத்தின் எஸ்.டி.ஹாசனை களமிறக்காமல், இந்து வேட்பாளரான ருச்சி வீராவை சமாஜ்வாதி கட்சி நிறுத்தியது.

ஜம்மு காஷ்மீர் ஒருபுறம் இருக்க, அதிகபட்ச முஸ்லிம் வேட்பாளர்கள் உ.பி (22), அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (17), பீகார் (ஏழு), கேரளா (ஆறு) மற்றும் மத்தியப் பிரதேசத்தில் (நான்கு) அதிகமானோர் போட்டியிட்டனர். மக்கள்தொகையில் முஸ்லீம்களின் பங்கின் அடிப்படையில் அஸ்ஸாம், கடந்த முறை நான்கு முஸ்லீம் வேட்பாளர்களை விட, மூன்று முஸ்லிம் வேட்பாளர்களைக் கொண்டுள்ளது.

5 6 24



source https://tamil.indianexpress.com/india/minority-report-card-of-78-muslims-contesting-lok-sabha-polls-24-go-past-the-winning-line-4746822

 


source https://news7tamil.live/nota-pushed-back-independent-candidates-in-tamil-nadu.html

தமிழ்நாட்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வாக்காளர்களில் பெரும்பான்மையினரை பின்னுக்கு தள்ளி நோட்டா அதிக வாக்குகளை பெற்று பெரும்பாலான தொகுதிகளில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. 

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அதே நேரம் அதன் கூட்டணி கட்சியான பாமக தருமபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை நிலவரமும் இப்போது வரை மாறி மாறி வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

அதிமுகவை பொறுத்தவரை போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் வரவில்லை. ஒட்டமொத்தமாக கட்சிகள் அல்லாதவர்கள் தமிழகத்தில் 21% வாக்குகள் வாங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் இதர கட்சிகள் வாக்கு சதவீதத்துடன் நாதக வாக்கு சதவீதமும் அடங்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதில் திண்டுக்கல் தொகுதியில் அதிகபட்சமாக நோட்டாவில் 17495 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை நோட்டாவில் 299448 வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் நோட்டா பெரும்பான்மையான தொகுதிகளில் 5வது இடத்தை  பிடித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை என தெரியவருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பீகாரில் மட்டும் 8,16,950 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது. தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 7,25,097 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளது. மூன்றாவது அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் 5,50,577 வாக்குகள் நோட்டாவுக்காக பதிவாகி இருந்தது. நோட்டா இந்த முறை எத்தனை பேரின் வெற்றி தோல்வியைப் புரட்டிப் போடப் போகிறது என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தான் தெரியவரும்.


source https://news7tamil.live/nota-pushed-back-independent-candidates-in-tamil-nadu.html

.....................

ஃபைசாபாத் தொகுதியில் தோல்வி



அயோத்தி ராமர் கோயிலை முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.

18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் படிப்படியாக வெற்றி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

பாஜக தலைமையிலான கூட்டணி 291 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், உத்தரப் பிரதேச மாநிலம் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. அயோத்தி கோயிலை முன்னிலைப் படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.

பாஜக வேட்பாளர் லாலு சிங்கை விட 54,567 வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் லாலு சிங்  4,99,722 வாக்குகளையும், சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அயோத்தி கோயில் விழாவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் புறக்கணித்ததாக, மக்கள் மத்தியில் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/bjp-defeat-in-faizabad-constituency-where-ram-temple-is-located.html

ஆட்சி அமைக்க எந்த ஒரு தனிக் கட்சிக்கும் இதுவரை தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. 

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அதே நேரம் அதன் கூட்டணி கட்சியான பாமக தருமபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 21300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. 

மத்தியில் பெரும்பான்மையை நிருபித்து ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 543 தொகுதிகளில், 291 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் பாஜக 240 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேபோல், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 30 தொகுதிகளிலும், திமுக 22 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. இதில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதன்படி, எந்த கட்சிக்கும் இதுவரை தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகள் இடம் மாறுமா? ஆட்சி அமைக்கப்போவது பாஜகவா அல்லது காங்கிரஸா? என்ற கேள்வி அனைவரிடமும் தலை தூக்கியுள்ளது.


source https://news7tamil.live/will-the-bjp-form-the-government-in-the-middle-of-the-two-major-parties-that-have-lost-their-absolute-majority-congress.html


,,,,,,,,,,,,,,,,,,,

2024 மக்களவை தேர்தல்: தேர்தல் எண்ணிக்கைக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா? மாற வாய்ப்பு உண்டா?

முடிவுகளை ஏன் அழைக்க அதிக நேரம் எடுக்கிறது என்று நீங்கள் யோசித்தால், காத்திருங்கள். இதுவே சாதாரண வாக்கு எண்ணிக்கையாகும், தொலைக்காட்சி சேனல்கள் சென்று குறிப்பிட்ட இடத்தில் வெற்றி பெற்றவர்களை அழைத்தாலும், கடைசி வாக்கு எண்ணப்படும் வரை எந்த வெற்றியாளரையும் தேர்தல் ஆணையம் அறிவிக்காது. பெரிய இருக்கைகளுக்கு, இது பொதுவாக இரவு வரை செல்லும். EVMகளுக்கு முன், சில இடங்கள் அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் வரை ஆகும்.

இப்போது சில உண்மைகள் உங்களுக்கு கூடுதல் சூழலைக் கொடுக்கும்.

இந்தியா முழுவதும் 1700 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒவ்வொருவரும் 25 சுற்றுகள் வரை எண்ணலாம். ஒவ்வொரு சுற்றிலும் தோராயமாக 14,000 வாக்குகள் உள்ளன. பெரும்பாலான இடங்கள் குறைந்தது 12 சுற்றுகள் எண்ணப்படும்.

மதியம் 2 மணிக்கு, மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 50%க்கும் சற்று அதிகமாகவே எண்ணப்பட்டன.

எனவே தோராயமாக 50% வாக்குகள் எண்ணப்பட்டால், சுமார் 20,000 முதல் 30,000 வரை முன்னிலை பெறுவது நிலையான வித்தியாசமாகக் கருதப்படுகிறது. 50,000-க்கும் மேலான மார்ஜின் கடக்க முடியாததாகக் கருதப்படுகிறது.

இந்த தேர்தலில், மதியம் 1 மணிக்குள், உ.பி., பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிராவில் 10000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 100 இடங்கள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

எனவே, தேர்தல் நெருங்கி வரும்போது, ​​ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கைச் சுற்றிலும் முன்னிலை புரட்டலாம் என்பதால், மெல்லிய வாக்கு வித்தியாசத்தில் உள்ள இடங்கள் அறிவிக்கப்படுவதற்கு நேரம் எடுக்கும்.

எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?

பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதிகள் 15 சுற்றுகளுக்கு மேல் எண்ணும் போது இரவு 7 மணிக்குப் பிறகு நன்றாக இருக்கும். விளிம்புகள் குறுகுவதால் எண்ணிக்கை குறைகிறது. பல இருக்கைகளுக்கு, இரவு தாமதமாக கூட செல்லலாம். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரவு 9 மணி வரை நடைபெற்றது.

டிவி சேனல்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலான இடங்களைக் காட்டுவது ஏன்?

தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் சொந்த வழிமுறைகளைக் கொண்டிருப்பதால், வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி நிற்கும் தெரு நிருபர்களிடம் அவர்கள் காலில் இருந்து எடுக்கும் தகவல்களின் அடிப்படையில் முன்னணி மற்றும் வெற்றிகளைத் திட்டமிடுகின்றன. 90% நேரம், அவர்கள் சொல்வது சரிதான்.

எனவே இது தொழில்நுட்பமானது, ஆனால் முன்னணி நிலைத்திருக்க எவ்வளவு சாத்தியம்?

இந்த வழிகள் பெரிய அளவில் தங்கியிருப்பதில் ஆச்சரியமில்லை.

நேரத்துக்கு கடினமான நிறுத்தம் உள்ளதா?

உண்மையில் இல்லை. கடைசி வாக்குகள் பதிவாகும் வரை எண்ணிக்கொண்டே இருப்பார்கள். இதற்கு முன் பல நிகழ்வுகளில் நடந்தது போல் நள்ளிரவு வரை தாமதமாக செல்லலாம்.

மறுகணக்கிற்கு முன்னோடி உள்ளதா?

ஒரு வேட்பாளர், அதற்கு சரியான காரணம் இருப்பதாக நினைத்தால், மறு எண்ணைக் கோரலாம். வெற்றி வித்தியாசம் உண்மையில் குறைவாக இருக்கும்போது இது வழக்கமாக நடக்கும். ஒவ்வொரு லோசபா தேர்தலிலும் இதுபோன்ற சில இடங்கள் உள்ளன. 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸின் சௌமியா ரெட்டி 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், அங்கு ஜெயநகர் தொகுதியில் அதே பெயரில் மற்றொரு வேட்பாளர் தனது தோல்வியை விட அதிகமாகப் பெற்றிருந்தார்.

கடைசியாக போக்குகள் எப்போது வியத்தகு முறையில் மாறியது?

பீகார் மாநில தேர்தல் 2015 மதியம் 3 மணி வரை லாலு பிரசாத் யாதவின் கட்சிக்கு ஆதரவாக முன்னிலையில் இருந்தது, பின்னர் 20 நிமிடங்களில் நிதிஷ் வெற்றிக்கு வியத்தகு முறையில் மாறியது. 2018 கர்நாடகத் தேர்தலிலும், சில மணிநேரங்களுக்குப் பிறகு ஆரம்ப போக்குகள் மாறியது.

புதிய அரசாங்கம் எப்போது பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும்?

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஜூன் 6-ஆம் தேதிக்குள் தேர்தல்களை முடிக்க வேண்டும். 17வது மக்களவையின் பதவிக்காலம் முடிவடையும் ஜூன் 16ஆம் தேதிக்குள் புதிய மக்களவை (18ஆம் தேதி) நடைமுறைக்கு வர வேண்டும்

source https://tamil.indianexpress.com/explained/election-results-2024-is-the-counting-taking-too-long-and-is-there-a-chance-the-trends-could-change-4744384


........

பெரும்பான்மைக்கு 272 இடங்களைப் பெற போராடும் பா.ஜ.க; கிங் மேக்கர்களாகும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்!



பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதால், நரேந்திர மோடி புதிய அரசாங்கத்தை அமைப்பது என்பது, இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த இரண்டு மூத்த கிங் மேக்கர்களான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் (டி.டி.பி) சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) தலைவர் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவைப் பொறுத்தே இருக்கும்.

பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதால், நரேந்திர மோடி புதிய அரசாங்கத்தை அமைப்பது என்பது, இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த இரண்டு மூத்த கிங் மேக்கர்களான தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு) தலைவர் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவைப் பொறுத்தது. 

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட போக்குகளின்படி, மாலை 4.15 மணியளவில், பா.ஜ.க முன்னிலை வகித்தது அல்லது 244 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, தனிப் பெரும்பான்மை பெற 272 இடங்களுக்கு கிட்டத்தட்ட 30 இடங்கள் குறைவு. தெலுங்கு தேசம் கட்சி ஆந்திரப் பிரதேசத்தில் முன்னணியில் இருந்தது அல்லது 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஜே.டி.யு பீகாரில் 14 இடங்களில் முன்னிலை வகித்தது அல்லது வெற்றி பெற்றது.

இந்த எண்ணிக்கை கணிசமாக மாறவில்லை என்றால், சந்திரபாபு நாயுடுவும் நிதீஷ் குமாரும் புது டெல்லியில் நரேந்திர மோடிக்கு முட்டுக்கட்டை போடும் மனிதர்களாக இருக்கலாம். இந்த இரண்டு தலைவர்களின் குறுகிய வரலாறு மற்றும் பல ஆண்டுகளாக அவர்களின் குறிப்பிடத்தக்க அரசியல் பாதைகளை இங்கே பார்க்கலாம்.

சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் பாஜக மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு, கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் கிங்மேக்கராக இருந்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் சிதறி வாக்களித்தபோது, சந்திரபாபு ​​நாயுடு, ஐக்கிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக, காங்கிரஸ் அல்லது பா.ஜ.க-வுடன் இணையாத கட்சிகளின் கூட்டணி, வெளிப்புற ஆதரவுடன் காங்கிரஸில் இருந்து எச்.டி. தேவகவுடா அரசுக்கு முட்டுக் கொடுத்தார். 

அவர், இந்த காலகட்டத்தில் ஐ.கே. குஜரால் தலைமையில் மத்தியிலும் ஆட்சி அமைக்க உதவினார்.

1999-ல், சந்திரபாபு நாயுடு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் 29 இடங்களைக் கைப்பற்றினார். பெரும்பான்மை பலம் இல்லாத அப்போதைய அடல் பிஹாரி வாஜ்பாய் அரசை ஆதரித்தார். உண்மையில், 29 இடங்களுடன், டி.டி.பி அரசாங்கத்தில் சேரவில்லை என்றாலும், பா.ஜ.க-வின் மிகப்பெரிய கூட்டாளியாக இருந்தது.

2014-ம் ஆண்டிலும், சட்ந்திரபாபு நாயுடு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மோடி அரசில் இணைந்தார். 2018-ல் ஆந்திரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணியை விட்டு வெளியேறினார்.

என்ன சாத்தியம்: பா.ஜ.க-வின் மிகப்பெரிய என்.டி.ஏ கூட்டாளியாக மீண்டும் வெளிப்பட்டு, சந்திரபாபு நாயுடு மீண்டும் கிங் மேக்கராக இருக்க முடியும், கடந்த சில ஆண்டுகளில் சில கடுமையான பின்னடைவைச் சந்தித்த அவரது கட்சியின் மறுமலர்ச்சியை அறிவிக்க முடியும்.

எச்சரிக்கை குறிப்பு: இருப்பினும், தொங்கு பாராளுமன்றத்தில் நிலையான விசுவாசம் இல்லை என்பதை நினைவில் கொள்ளலாம். காங்கிரசுக்கு எதிரான கொள்கையில் உருவாக்கப்பட்டது என்றாலும், தெலுங்கு தேசம் கட்சி, தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது மட்டுமின்றி, 2019 தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசுடன் எதிர்க்கட்சி கூட்டணியையும் அமைக்க முயற்சித்த காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்துள்ளது.

நிதீஷ் குமார்

பீகாரில் சமூக நீதி அரசியலில் அனுபவம் வாய்ந்த நிதீஷ் குமார் சுருக்கமாக மத்திய ரயில்வே அமைச்சராகவும், சாலை போக்குவரத்து அமைச்சராகவும், பின்னர், 1998-99ல் அடல் பிஹாரி வாஜ்பாயின் என்.டி.ஏ அரசாங்கத்தில் விவசாய அமைச்சராகவும் இருந்தார். 2000-2004 வாஜ்பாய் அரசில் அவருக்கு மீண்டும் அதே இலாகா கிடைத்தது.

நீண்ட காலமாக, நிதீஷ் பீகாரில் என்.டி.ஏ-வில் மூத்த கூட்டாளியாக இருந்தார். மேலும், 2009-ம் ஆண்டில் காவி கட்சி தேசிய அளவில் மோசமாக இருந்தபோது மாநிலத்தில் 20 இடங்களை வென்று பா.ஜ.க-வின் மிகப்பெரிய கூட்டாளியாக இருந்தார்.

இருப்பினும், மறைந்த நிதிஷின் அரசியலில் தொடர்ச்சியாக மாறி மாறி செயல்பட்டது வரிசைப்படுத்தப்படுகிறது.

2014ல், நரேந்திர மோடியின் எழுச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து, பீகார் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டார். ஆனால், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, 2015 சட்டமன்றத் தேர்தலில் லாலு யாதவுடன் கைகோர்த்தார், அந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது.

இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குள், அவர் பிரிந்து, மீண்டும் என்.டி.ஏ-யில் சேர்ந்தார், பீகார் மக்களவைத் தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களை வென்று அந்த கூட்டணி வெற்றி பெற்றது.

இருப்பினும், 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் ஜே.டி.யு மோசமாக இருந்ததால், நிதிஷ் குமார் பா.ஜ.க-வுடன் பெரிய அளவில் அசௌகரியத்துக்குள்ளானார். 2022-ல் ஆர்.ஜே.டி உடன் ஆட்சி அமைக்க கூட்டணியை முறித்துக் கொண்டார். இருப்பினும், 2024 தேர்தலுக்கு முன்னதாக, நிதிஷ் குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.

என்ன சாத்தியம்: இந்தத் தேர்தல்களில் பீகாரில் அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வை விட ஜே.டி.யு-வின் சிறப்பான செயல்பாடு நிதிஷ் குமாரை மீண்டும் அரங்கத்தின் நடுவே கொண்டு வந்து அவரது கட்சிக்கு புதிய புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது.

எச்சரிக்கை குறிப்பு: நிதிஷ் தனது கூட்டணி நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வத்ல் புகழ் பெற்றவர், இது அவருக்கு பீகாரில் "பல்டு ராம்" என்ற புகழைக் கொடுத்தது. மேலும், சில விமர்சகர்கள் அவர் எங்கு வேண்டுமானாலும் போவார் என்று கூறுவார்கள்.

source https://tamil.indianexpress.com/explained/chandrbabu-naidu-tdp-niitish-kumar-jdu-bjp-kingmakers-4744407

..............

உத்தரப் பிரதேசம்: பா.ஜ.க திட்டத்தை சமாஜ்வாதி-காங்கிரஸ் சீர்குலைத்தது எப்படி?

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 45 இடங்களில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி (SP) குறிப்பிடத்தக்க திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோக் சபா தேர்தல் முடிவுகள் 2024

37 இடங்களில் முன்னிலை வகிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட காரணிகளில் ஒன்று, டிக்கெட் விநியோக உத்தி. முந்தைய தேர்தல்களைப் போலல்லாமல், SP டிக்கெட் விநியோகம் யாதவ் அல்லாத OBCகளை மையமாகக் கொண்டது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து யாதவர்களை மட்டுமே களமிறக்கியது, அது யாதவ் அல்லாத OBCகளுக்கு 27 டிக்கெட்டுகளை வழங்கியது.

நான்கு பிராமணர்கள், இரண்டு தாக்கூர்கள், இரண்டு வைசியர்கள் மற்றும் ஒரு காத்ரி உட்பட உயர் சாதியினருக்கு 11 இடங்கள் வழங்கப்பட்டது. மேலும், நான்கு முஸ்லிம்களுக்கு, 15 தலித் வேட்பாளர்களை நிறுத்தியது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாயாவதியின் பிஎஸ்பி மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்எல்டி) உடன் கூட்டணி வைத்து உ.பி.யில் உள்ள 80 இடங்களில் 37 இடங்களில் சமாஜவாதி போட்டியிட்டபோது, ​​அது 10 யாதவ் வேட்பாளர்களை நிறுத்தியது. அப்போது அது 5 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான பிஎஸ்பி 10 இடங்களையும் வென்றது. மறுபுறம் பாஜக 62 இடங்களை வென்றது. இரண்டு இடங்களில் என்.டி.ஏ கூட்டணி கட்சியான அப்னா தளம் (எஸ்) வெற்றி பெற்றது.

2014 இல், சமாஜ்வாதி 78 இடங்களில் போட்டியிட்டது மற்றும் முலாயமின் குலத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 12 யாதவ் வேட்பாளர்களை நிறுத்தியது.

“யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவில் எங்கள் கட்சி உறுதியாக இருந்தது. ஆனால் இந்த இரண்டு சமூகங்களுக்கும் அப்பால் எங்கள் தளத்தை விரிவுபடுத்தவும், யாதவ் அல்லாத OBCகள் மற்றும் தலித்துகளை அடையவும் நாங்கள் விரும்பினோம், அது இப்போது நடந்துள்ளது போல் தெரிகிறது,” என்று ஒரு மூத்தத் தலைவர் கூறினார்.

மாறாக, இம்முறை உ.பி.யில் 75 இடங்களில் போட்டியிட்ட பிஜேபி (அது மூன்று கூட்டணிக் கட்சிகளுக்கு ஐந்து இடங்களை விட்டுக் கொடுத்துள்ளது) 34 உயர் சாதியினரையும் (16 பிராமணர்கள், 13 தாக்கூர்கள், 2 வைசியர்கள் மற்றும் 3 பிற உயர்சாதியினரை நிறுத்தியது.

உ.பி.யில் பிஜேபி தலைமையிலான என்டிஏ மற்றும் இந்திய கூட்டணியின் பிரச்சார பாணியிலும் வித்தியாசம் இருந்தது. பிரமாண்ட பேரணிகளை நடத்துவதில் கவனம் செலுத்தும் பிஜேபியைப் போலல்லாமல், SP-காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் அளவில் குறைந்த முக்கியத்துவம் கொடுத்து, அதற்குப் பதிலாக உள்ளூர் சமூகங்களைச் சென்றடைவதில் கவனம் செலுத்தியது.

ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, பெரிய அளவில் பேரணிகளை நடத்தவில்லை. அதற்கு பதிலாக, அவர் தினமும் காலை முதல் மாலை வரை 20 க்கும் மேற்பட்ட நக்கட் சபைகளை நடத்தினார்.

மறுபுறம், பாஜகவின் பிரச்சாரம் கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பெரிய பேரணிகளை நம்பியிருந்தது.

நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள எஸ்பி, மாநிலத்தின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இடங்களை வென்றதன் மூலம், உ.பி. முழுவதும் இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பாஜகவால் தேர்தல் ரீதியாக ஆதிக்கம் செலுத்திய பண்டேல்கண்டிலும் அக்கட்சி இடங்களைப் பெற்றுள்ளது.

மேற்கு உ.பி.யில், ருச்சி வீரா மற்றும் ஜியா-உர்-ரஹ்மான் ஆகியோர் முன்னணியில் இருந்த மொராதாபாத் மற்றும் சம்பல் உட்பட குறைந்தது எட்டு இடங்களில் முன்னிலை வகித்து சமாஜவாதி கட்சி வெற்றி பெறுகிறது. சஹாரன்பூர் மற்றும் அம்ரோஹாவில் அதன் வேட்பாளர்களான இம்ரான் மசூத் மற்றும் டேனிஷ் அலி முன்னிலையில் இருந்த மேற்கு உ.பி.யிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தெரிகிறது.



source https://tamil.indianexpress.com/india/what-helped-sp-congress-upset-bjps-up-applecart-4744055

....

Lok Sabha Election 2024 Results DMK Alliance Updates: வரலாறு படைத்த தி.மு.க அணி; 40 தொகுதிகளிலும் மெகா வெற்றி

 Lok Sabha Election 2024 Results DMK Alliance  Updates: நாடு முழுவதும் மக்களவை தேர்தல்  கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் நடந்து முடிந்ததுநடந்து முடிந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று ( ஜீன் 4ம் தேதி) எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவும் இன்று வெளியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சிகளுக்குள் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியின் அங்கமாக தி.மு.க உள்ளது.

தி.மு. க கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளன. 

திமுக- 21,  காங்கிரஸ்- 10, விசிக- 2,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2 , ம.தி.மு.க-1 , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1 , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- 1 என்று பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என்று தகவல் வெளியானது.  



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-lok-sabha-election-2024-results-dmk-alliance-votes-live-updates-4740808