வியாழன், 31 ஆகஸ்ட், 2017

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு August 31, 2017

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு


தேர்ந்தெடுக்கப்படாமலே தமிழகத்தை பாஜக ஆட்சி செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும், இந்த அரசு இருக்கும் ஒவ்வொரு நாளும் தமிழகத்திற்கு பேரிழப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். 

சட்டப் பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தினார்.

ஆளுநர் அதிகாரத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் - ஆய்வு அலசல்! August 31, 2017

ஆளுநர் அதிகாரத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் - ஆய்வு அலசல்!



மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர் அதிகாரம் பல்வேறு காலகட்டத்தில் இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 1967முதல் இந்த சர்ச்சை நீடிக்கிறது. ஆளுநரின் அதிகாரம் குறித்து பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1970ல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக முதல்வர் கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழு அளித்த அறிக்கை, 1988ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட சர்க்காரியா குழு அறிக்கை, 2002ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட மறுஆய்வு குழு, 2007ல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட புஞ்சி குழு அறிக்கை ஆகியவை ஆளுநருக்கான அதிகாரம் குறித்து அறிக்கை அளித்துள்ளன. அவற்றில் முக்கியமான பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

புஞ்சி கமிஷன், 2007
பாராளுமன்றத்தில் குடியரசுத்தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சட்டம் உள்ளது போல மாநிலத்தில் ஆளுநருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிகாரம் வழங்க வேண்டும்

அரசியலமைப்பு மறுஆய்வு குழு, 2002
ஆளுநர் என்பவர் நேரடியாக குடியரசுத்தலைவரால் அல்லாமல் மாநில முதல்வர், இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர், பாராளுமன்ற சபாநாயகர் அடங்கிய குழுவால் நியமிக்கப்பட வேண்டும் 

ராஜமன்னார் குழு, 1970
ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஏஜெண்டாக அல்லாமல், மாநில அரசின் தலைவராக இருக்க வேண்டும் 

சர்க்காரியா குழு, 1988
மாநிலத்தில் அரசியல் பிளவு இருந்தால் ஆளும் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்று அத்தனை வாய்ப்புகளை ஆராய்ந்து ஆளுநர் உறுதிசெய்ய வேண்டும். மறுதேர்தலைத் தவிர வேறு வழி இல்லை என்றால் நடப்பில் இருக்கும் அரசை காபந்து அரசாக இருக்கப் பணிக்க வேண்டும் 

தமிழகத்தில் ஆளுநர் அல்லோகல வரலாறு! August 31, 2017

தமிழகத்தில் ஆளுநர் அல்லோகல வரலாறு!


தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் ஆளுநரின் நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த குழப்பம் இப்போது முதல்முறையாக எழுந்த ஆச்சரியம் இல்லை. தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் பல முறை ஆளுநர்களாலும், ஆளுநர்களை வைத்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளது. அவற்றைக் குறித்த எளிய அறிமுகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலை அமலுக்கு வந்து, திமுக அரசைக் கலைப்பதென முடிவெடுத்தபோது, ஆளுநரிடம் இருந்து அறிக்கை கோரியது இந்திராகாந்தி அரசு. அதற்கு கே.கே. ஷா மறுத்ததாகவும் பிறகு வேறுவழியின்றி அறிக்கையில் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆட்சிக் கலைப்புக்குப் பிறகு பிரபுதாஸ் பட்வாரி ஆளுநரானார்.

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது ஆளுநர் குரானா, பேச முடியாத, முழுமையாகச் செயல்பட முடியாத ஒருவருக்கு எப்படி முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பது என்று கேட்டார். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆரின் நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் ஆளுநரிடம் தரப்பட்டன. அதன் பிறகும் ஆளுநர் திருப்தியடையவில்லை. எம்ஜிஆர் தமிழகம் திரும்பியதும், அவரை நேரில் சென்று பார்த்த பிறகே சமாதானம் ஆனார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்திருந்த நேரத்தில் பி.சி.அலெக்ஸாண்டர் ஆளுநர் ஆனார். அலெக்சாண்டருடன் காங்கிரஸ் கட்சியினர் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அதிமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு உடனே தேர்தல் நடத்தப்படவில்லை. ஆளுநர் கண்காணிப்பில் குடியரசுத்தலைவர் தேர்தல் நடந்தது. காங்கிரஸைத் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தும் காரியத்தில் ஆளுநர் மறைமுகமாக ஈடுபட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. 

பீஷ்மநாராயண் சிங் ஆளுநராக இருந்த போது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவு மீது ஊழல் புகார் குற்றம்சாட்டியதோடு, அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதி கோரினர் எதிர்க்கட்சியினர். அந்தக் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். ஜெயலலிதாவின் நட்பு காரணமாக ஆளுநர் செயல்பட மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

 2001-ல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் பாத்திமா பீவி. மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஒருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாத்திமா பீவியின் செயல் தவறானது என்று தீர்ப்பு வரவே, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஜெயலலிதா. அந்தத் தீர்ப்பு வெளியானபோது, ஆளுநர் பொறுப்பில் பாத்திமா பீவி இல்லை. 

வாய்ப்பாடு


பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதித்தது இவ்வளவுதானா? அதிர்ச்சி புள்ளி விவரங்கள்! August 30, 2017

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதித்தது இவ்வளவுதானா? அதிர்ச்சி புள்ளி விவரங்கள்!


கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது முதல் இந்திய பணப்புழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களை புள்ளி விவரங்களுடன் கீழே காணலாம்...

* புழக்கத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டு அளவு 86%.

* பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்த ரூபாயின் மதிப்பு 15.8 லட்சம் கோடி.

* பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 2400 கோடி நோட்டுகள் (2400 crore pieces of currency)

* பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 66 முறை விதிகள் மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டது.

* 11. 12. 2016 அறிக்கையின் படி புதிய நோட்டுக்களாக அரசு மீண்டும் புழக்கத்தில் விட்ட பண மதிப்பு 5.48 லட்சம் கோடி. (அதன் பிறகு அறிக்கை தரவில்லை)

* 19.12.2016 அறிக்கையின் படி பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு 12.5 லட்சம் கோடி பணம் மீண்டும் வங்கியில் செலுத்தப்பட்டுவிட்டது. (அதன் பிறகு அறிக்கை தரவில்லை)

* ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள போலி நோட்டுக்களின் மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய்

* பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சுமார் 36 லட்சம் வங்கிக்கணக்குகளில் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டது.

* பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 1000% அளவில் தடாலடியாக உயர்ந்த ‘ரொக்கமில்லா' பரிவர்த்தனை கடந்த பிப்ரவரி மாதம் வீழ்ச்சியடைந்தது. கடந்த பிப்ரவரியில் அரசு அளித்த அறிக்கையின் படி அரசின் திட்டமிடலைவிட பணப்பரிவர்த்தனை 60% குறைவாகவே நடக்கிறது.

* பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகான 10 மாதங்களில், 11.23 கோடி ரூபாய் போலி நோட்டுகள் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு சோதிக்கப்பட்ட வங்கிக்கணக்குகளில் கணக்கு தாக்கல் செய்த 9.72 லட்சம் கணக்குகளில் செய்த முதல் ஆய்வில் 5.56 லட்சம் கோடி கணக்குகள் சுத்தமானவை என முடிவு செய்யப்பட்டது.

* பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் மொத்தம் 99 சதவீத நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

"கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவே Demonetisation நடவடிக்கையா?" August 30, 2017




பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மத்திய அரசு எதிர்பார்த்தது போன்று பெரிய பலன் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வல் இது வெளிப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 8ம் தேதி இரவு திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு முதல் செல்லாது என அறிவித்தார். வங்கிகளில் நோட்டுகளை மாற்றுவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கையால் புழக்கத்தில் இருந்த சுமார் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன.

மக்கள் தாங்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் வேலைகளை விட்டு கடும் வெயிலிலும் காத்துக்கிடந்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். நாடே நெருக்கடி நிலையில் சிக்கித்தவிப்பது போன்ற நிலை உருவானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கள்ளப்பணம் மற்றும் ஊழலை ஒழிக்கவே இந்நடவடிக்கை என மத்திய அரசு விளக்கம் அளித்த போதிலும், பொருளாதார வல்லுநர்கள் பலரும் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பொருளாதார நிபுணருமான ப.சிதம்பரம் இது முட்டாள்தனமான நடவடிக்கை என்று பகிரங்கமாகவே பேசினார். கருப்புப் பணம் என்பது பணமாக 5% கூட இல்லையென்றும், நிலம், தங்கம் என முதலீடாகவே 95% கருப்புப்பணம் உள்ளதால் அதை ஒழிக்க இந்நடவடிக்கை பலன் தராது என பல்வேறு பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99% வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கை தெரிவிக்கிறது. வெறும் 1% அளவு ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்பவில்லை. இந்நடவடிக்கையால் பெரிய அளவில் நட்டமே ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இதனிடையே, பெரும்பான்மையான பணம் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளதால் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டதா எனவும் ப.சிதம்பரம் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளி சீருடையில் மாதவிடாய் இரத்தம்: வகுப்பு ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை! August 30, 2017

பள்ளி சீருடையில் மாதவிடாய் இரத்தம்: வகுப்பு ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை!


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவியை வகுப்பு ஆசிரியர் மற்ற மாணவர்களின் முன்பு திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12 வயதான 7ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் இருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டு இரத்தம் கசிந்துள்ளது. மாணவின் சீருடையிலும், அவர் அமர்திருந்த இருக்கையிலும் இரத்தக்கறை படிந்துள்ளது. இதைப்பார்த்த மற்ற மாணவிகள் அந்த மாணவியிடம் இது குறித்து கூறியுள்ளனர்.

இதனால் கழிவறைக்கு சென்று சுத்தம் செய்வதற்காக வகுப்பு ஆசிரியரிடம் (பெண் ஆசிரியர்) அனுமதி கேட்டுள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்று சுத்தம் செய்துவிட்டு வந்த மாணவியை, வகுப்பில் இருந்த இருக்கையிலும், சீருடையிலும் இரத்தக்கறை படிந்தற்காக மற்ற மாணவர்களின் முன்பு அந்த ஆசிரியர் திட்டியுள்ளார். பின்னர் தலைமை ஆசிரியரையும் சந்திக்க சொல்லி வகுப்பைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார். 

இதனால் மிகவும் மனமுடைந்த அந்த மாணவி வீட்டிற்கு வந்து கடிதம் எழுதிவைத்துவிட்டு மாடியிலிருந்து கிழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் கடிதத்தை பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

பள்ளி ஆசிரியை திட்டியதால் 7ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாளையங்கோட்டை பகுதியிலும் மற்ற மாணவிகளின் பெற்றோர்களின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

யுத்த பூமியான “புத்த பூமி” : 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை! August 30, 2017

யுத்த பூமியான “புத்த பூமி” : 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை!


இலங்கையை போன்று  மற்றுமொரு புத்த பூமி  யுத்த பூமியாக மாறி இருக்கிறது. ஆம்.மியான்மரின் பெரும்பான்மை புத்த மதத்தினருக்கும் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில் 3,000-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளது...

ஏன் வன்முறை வெடித்தது... அதன் பின்னணி வரலாறு என்ன ?

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் புத்த மதத்தினருக்கும், ரோஹிங்கிய இஸ்லாமிய மக்களுக்கும் இடையே இனமோதல் அதிகரித்துள்ளது. பெரும்பான்மை புத்தமதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ராக்கைன் மாநிலத்தில் 2016ம் ஆண்டு,  ஏ.ஆர்.எஸ்.ஏ எனப்படும் Arakan Rohingya Salvation Army உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருப்பவர் அதா உல்லா. இந்த அமைப்பு மியான்மர் ராணுவத்தினர், போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

ரோஹிங்கிய இஸ்லாமிய மக்களை பாதுகாப்பது நோக்கம் என இந்த அமைப்பு கூறுகிறது. ஜிகாத் அமைப்புகளுடன் அதா உல்லா தொடர்புடையவர் என்று மியான்மர் அரசு குற்றம்சாட்டி வருகிறது. மியான்மரில் இருந்து ராக்கைன் மாநிலத்தை பிரித்து தனிநாடாக உருவாக்க முயற்சிக்கிறது என்பது மியான்மர் அரசு இந்த அமைப்பு மீது வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு. மேலும், ரோஹிங்கிய மக்கள் வங்கதேசத்தில் இருந்து மியான்மருக்குள் அத்துமீறி புகுந்தவர்கள் எனக் கூறி அவர்களுக்கான உரிமைகளை வழங்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. 





கடந்த வெள்ளிக்கிழமை ஏ.ஆர்.எஸ்.ஏ குழுவினர் ராக்கைன் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.  இதையடுத்து புத்தர் மதத்தினருக்கும் - இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது. ராணுவத்தினரும் ரோஹிங்கிய மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் ஏ.ஆர்.எஸ்.ஏ குழுவைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. 





ரோஹிங்கிய இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு மியான்மர் ராணுவத்தினர் தீ வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள்,  வங்கதேசத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் மியான்மரையும் வங்கதேசத்தையும் பிரிக்கும் எல்லையாக நாஃப் நதி இருக்கிறது. இந்த நதிக்கரையில் தான் முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரிலிருந்து வரும் அகதிகளுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டானியோ கட்டாரஸ் வங்கதேசம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 1990-ம் ஆண்டு முதல் ராக்கைன் மாநிலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருகிறது. ஏற்கனவே வங்கதேசத்தில் 4 லட்சம் ரோஹிங்கிய இஸ்லாமிய மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். 

மியான்மரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையைக் கட்டுப்படுத்த ஐ.நா. தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வங்கதேசம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிரிட்டன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாகக் கூட்ட கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மர் வன்முறையை செயற்கைக் கோள் புகைப்படங்களைக் கொண்டு ஆராய்ந்து வருவதாக ஐ.நா. மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது. 





இதனிடையே, மியான்மரில் 2,000 முதல் 3,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக The European Rohingya Council தெரிவித்துள்ளது. இன அழிப்பை தடுக்க உலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது. “மெதுவாக எரிக்கப்படும் இனப்படுகொலை” என மியான்மர் இன அழிப்பை அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், மியான்மர் ராணுவத்தின் கைகளே இந்த இனப்படுகொலையில் அதிகம் எனவும் The European Rohingya Council தெரிவித்துள்ளது.

கேரளாவின் குப்பைத் தொட்டியாகும் தமிழகம்! விளக்கமளிக்க ஆட்சியருக்கு உத்தரவு! August 30, 2017

கேரளாவின் குப்பைத் தொட்டியாகும் தமிழகம்! விளக்கமளிக்க ஆட்சியருக்கு உத்தரவு!


கேரளாவிலிருந்து மின்னணு பொருட்களின் கழிவுகள், மருத்துவ கழிவுகள் கோவையில் கொட்டப்படுவதை எதிர்த்த வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து மருத்துவ, மின்னணு மற்றும் ரசாயனக் கழிவுகள் கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் உள்ள வேலுமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டப்படுவதாக கூறியுள்ளார்.

அப்பகுதியில் இது போன்ற குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், சுற்று சூழல் பாதிப்படைவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மதுக்கரை வட்டாச்சியரிடம் புகார் அளிக்கபட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வட்டாட்சியர் உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

பருவநிலை மாற்றத்தால் ‘மம்மி’-களுக்கு ஆபத்து! August 31, 2017

​பருவநிலை மாற்றத்தால் ‘மம்மி’-களுக்கு ஆபத்து!



காலநிலை மாற்றத்தால் சிலியில் உள்ள அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்டு வரும் மம்மிக்களை பாதுகாக்க வேண்டும் என அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகிலேயே மிகவும் பழமையான மம்மிக்கள் இந்த அருங்காட்சியகத்தில் தான் உள்ளது எனவும், எனவே, யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது எழுந்துள்ள காலநிலை மாற்றத்தால், பாக்ட்ரீயாக்களால் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மம்மிக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 30 ஆகஸ்ட், 2017

மாநிலத் தலைமையின் முக்கிய அறிவிப்பு

மாநிலத் தலைமையின் முக்கிய அறிவிப்பு
( அதிகமாக பகிருங்கள் )
கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பீஜேக்கு எதிராக பரப்பப்படும் ஆடியோ குறித்து ஆதாரங்களுடன் அணுகுமாறு பத்து நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜமாஅத் இது குறித்து தக்க முடிவை அறிவித்த பின்னர் அனைத்து கொள்கைச் சகோதரர்களும் அந்தக் கெடு முடியும் வரை அமைதி காத்திருக்க வேண்டும். அல்லது அறிவுப்பூர்வமான வாதங்களை வைப்பதுடன் நிறுத்தி கொண்டிருக்க வேண்டும். நமது அறிவிப்பில் இதை தெளிவாக நாம் குறிப்பிடவும் செய்திருந்தோம்.
இருந்த போதும் ஆர்வமிகுதியால் நம் சகோதரர்கள் தரக்குறைவான பதிவுகள் போடுவது, அவர்கள் வழியில் மிமிக்ரி வெளியிடுவது, எதிரிகளின் மனைவி மக்களை இழுத்து பேசுவது போன்றவைகள் மார்க்க அடிப்படையிலும் ஜமாஅத்தின் கொள்கை அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத காரியங்களாகும்.
இது போன்ற செயல்களைக் கைவிட்டுவிட்டு மார்க்கம் அனுமதிக்காத பதிவுகளைப் போட்டவர்கள் உடனடியாக அவற்றை அழித்து விட வேண்டும். மீறுவோர் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நாம் வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் நிரூபிக்க எவரும் வரவில்லையென்றால், அதன் பின் இஸ்லாத்தின் பார்வையில் நாம் இந்த விவாகாரத்தை கையாண்டது சரிதானா என்பதை விளக்கும் விதமான முழு வீடியோ தொகுப்பு இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.
இந்த குற்றச்சாட்டை முன் வைத்து எதிரிகள் முன் வைக்கும் அறிவுப்பூர்வமான கேள்விகள் இருப்பின் அது குறித்தும் விளக்கங்களை அளிக்க உள்ளோம்.
ஒரு வேளை இஸ்லாத்தின் பார்வையில் இது போன்ற புகாருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இருந்தால், பீஜேவின் மீது நடவடிக்கை பாயும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர் #TNTJ

அறுவை சிகிச்சையின் போது சண்டையிட்ட மருத்துவர்களால் இறந்து பிறந்த குழந்தை August 30, 2017

அறுவை சிகிச்சையின் போது சண்டையிட்ட மருத்துவர்களால் இறந்து பிறந்த குழந்தை


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மகப்பேறு அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் இருவர் சண்டையிட்டனர். உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தினால் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தை இறந்து பிறந்தது. 

ஜோத்பூர் அருகே உள்ள Umaid மருத்துவமனையில் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பெண் சுயநினைவை இழந்து இருந்த நேரத்தில், அறுவை சிகிச்சை அறையில் இருந்த இரண்டு மருத்துவர்களுக்கு இடையே சிகிச்சை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இரு மருத்துவர்களும் மகப்பேறு அறுவை சிகிச்சையைக் கைவிட்டுவிட்டு ஆவேசத்தோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மருத்துவர்கள் இருவரும், பின்னர் வாக்குவாதத்தை  முடித்துக்கொண்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் அந்த பெண்ணின்  வயிற்றில் இருந்த குழந்தை இறந்து பிறந்துள்ளது. 

மகப்பேறு அறுவை சிகிச்சையை விட்டுவிட்டு, மருத்துவர்கள் சண்டையிட்டதால் குழந்தை இறந்து பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு மருத்துவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர்கள் சண்டையிட்ட காட்சியை, அறுவை சிகிச்சை கூடத்தில் இருந்த ஊழியர் ஒருவர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.  இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக இன்று பிற்பகல் 2 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சீரழிவுக்கு வழிவகுக்கும் நிதி ஆயோக் அமைப்பை கலைக்க ராமதாஸ் வலியுறுத்தல்! August 30, 2017

சீரழிவுக்கு வழிவகுக்கும் நிதி ஆயோக் அமைப்பை கலைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!


சிறப்பாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரைத்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து விட்டது என்பதையோ, அதற்காக நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ள காரணங்கள் அனைத்தும் சரியானவை என்பதையோ யாரும் மறுக்க முடியாது என கூறியுள்ளார். 

ஆனால், அதற்கான தீர்வாக நிதி ஆயோக் முன் வைத்துள்ள யோசனைகள் தான் மிகவும் ஆபத்தானவை என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், அரசு பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்து விட்டது என்றால், அதை மேம்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது அரசின் பணியாகும் என கூறியுள்ளார். 

ஆனால், நிதி ஆயோக் அமைப்போ எதிர்மறையான யோசனைகளை வழங்கி வருவதாகவும், சீரழிவுக்கு வழி வகுக்கும் அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

​​உ.பி-யில் மீண்டும் ஒரு மருத்துவ பயங்கரம் - 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் மரணம்! August 30, 2017

​​உ.பி-யில் மீண்டும் ஒரு மருத்துவ பயங்கரம் - 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் மரணம்!



உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோரக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் மேலும் 42 குழந்தைகள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளதாக தெரிகிறது.

இதில் 7 குழந்தைகள் மூளை அலர்ஜி காரணமாகவும் மற்றவர்கள் மற்ற காரணங்களுக்காகவும் பலியாகியுள்ளதாக கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பி.கே.சிங் தெரிவித்துள்ளார். கோரக்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பலியாகி வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பசிபிக் கடலை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு! August 29, 2017

பசிபிக் கடலை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு!


ஜப்பான் வான் எல்லை வழியாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது முன்னெப்போதும் இல்லாத போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது. 

அண்மைக் காலங்களில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு முரணமாக அணு ஆயுதங்கள் சோதனையில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. இதனால் அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக வடகொரியா தொடர்ந்து மிரட்டல் விடுத்துவருகிறது. 

இந்நிலையில் இன்று அதிகாலை வடகொரியா ராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்று ஜப்பான் நாட்டின் வான் எல்லையைக் கடந்து சென்று கடலில் விழுந்தது. நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள Hokkaido தீவைக் கடந்து சென்ற அந்த ஏவுகணை பின்னர் கடலுக்குள் விழுந்ததாக தெரியவருகிறது. வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பான் நாட்டைக் கடந்து பசிபிக் கடலில் விழுந்துள்ளது. வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

கனவை நனவாக்க 3 தலைமுறைகளாக காத்திருக்கும் வடகொரியா..! August 29, 2017

கனவை நனவாக்க 3 தலைமுறைகளாக காத்திருக்கும் வடகொரியா..!


வடகொரியா வீசிய ஏவுகணை ஒன்று ஜப்பான் நாட்டு வான் எல்லை வழியாகச் சென்று பசிபிக் கடலில் விழுந்துள்ளது. தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வடகொரியாவின் ராணுவ நடவடிக்கையின் பின்னணி என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்..

பல்வேறு அரசியல் கூறுகளாகப் பிரிந்து கிடந்த கொரிய தீபகற்பம், கடந்த 1948ம் ஆண்டு வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாகப் பிரிந்தது. இக்கால கட்டத்தில் இரண்டு கொரிய நாடுகளையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக்க இருதரப்பும் தனித்தனியே முயன்றதன் விளைவாக 1950ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் 1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி வரை இருதரப்பும் போரில் ஈடுபட்டன. 

இதன் பின்னர் இருதரப்பும் போர் நிறுத்தம் தொடர்பாக தற்காலிக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தின. ஆனால், நிரந்தரப் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. அதனால், தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், இருநாடுகளுக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராமல், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். 

இந்நிலையில், 1948ம் ஆண்டு வடகொரியாவை நிறுவிய கிம் டூ சங், தென்கொரியாவை எப்படியாவது வடகொரியாவுடன் இணைத்துவிடவேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டிருந்தார். 1994ம் ஆண்டு அவர் உயிரிழந்துவிட, அவருடைய மகன் கிம் ஜாங் இல் அதிபரானார். 2011ம் ஆண்டு இவரும் உயிரிழந்துவிட, அதன் பின் இவருடைய மகன் கிம் ஜோங் உன் தற்போதைய அதிபராகப் பதவிவகித்துவருகிறார். 

கிம் டூ சங்கின் கனவுகளை நிறைவேற்ற, அவருக்குப்பின் அவரது வாரிசுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதற்கிடையே, தென்கொரியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவது வடகொரியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

இருநாடுகளும் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தவும் வடகொரியா தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்துவருகிறது. இருப்பினும், தென்கொரியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து உறவுகளை வளர்த்துவருவதே வடகொரியா பதற்றமேற்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்வதன் பின்னணியாக விளங்குகிறது

தொடரும் குழந்தைகள் மரணம்! August 30, 2017

தொடரும் குழந்தைகள் மரணம்!


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் ஏழு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. 

கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் மேலும் 7 குழந்தைகள் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஒரே வாரத்தில் 70 குழந்தைகள் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் ஏழு குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது நித்யானந்தா சீடர்கள் புகார்! August 29, 2017


சமூக வலைதளத்தில் நித்யானந்தாவை தரக்குறைவான வார்த்தைகளால் பதிவிட்டு அவமானப்படுத்திய சமூக செயற்பாட்டளர் பியூஸ் மானுஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நித்தியானந்தா சீடர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் சமூக ஊடகங்களில் சாமியார் கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகவும் நித்தியானந்தா மீதுள்ள  பாலியல் புகார் தொடர்பாகவும் கடந்த 23ம் தேதி பதிவிட்டிருந்தார்.

புகைப்படத்தில் இருந்த பெண் சீடர்களான கோவையை சேர்ந்த மா நித்திய மகேஷ்வர நந்தா சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நித்தியானந்தாவுடன் தமது புகைப்படத்தை இணைத்து தரக்குறைவான வார்த்தைகளால் பியூஸ் மானுஷ் பதிவிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக மா நித்ய மகேஷ்வர நந்தா கூறினார்