சனி, 31 அக்டோபர், 2020

மும்பை சாலையில் ஒட்டப்பட்ட பிரான்ஸ் அதிபரின் போஸ்டர்கள் !

 கார்டூர் சர்ச்சை விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனில்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மும்பையில் உள்ள பிரதான  சாலையில் அவரது போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரான்ஸில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடம் காட்டி  பேச்சு , கருத்து சுதந்திரம் தொடர்பாக விவாதம் நடத்திய சாமுவேல் பேட்டி  என்ற 46 வயதான பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரை கடந்த 16-ஆம் தேதி 18  வயது மாணவர் ஒருவர் தலைதுண்டித்து கொலை செய்தார். அந்த நபரை  காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் ஐஎஸ் இயக்கத்துடன்  தொடர்புடையவர் என கூறப்பட்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

 

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த பிரான்ஸ் அதிபர்  இமானுவேல் மேக்ரோன், இதனை இஸ்லாமிய பயங்கரவாதம் என குற்றம்  சாட்டினார். பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்துக்கு ஈரான், துருக்கி, செளதி  அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம்  தெரிவித்தனர். மேலும் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என  துருக்கி அதிபர் எர்டோகன் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபருக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள  பல இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையின் பரபரப்பான  சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவேல்  மேக்ரோனின் படங்கள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்டி பசாரில் உள்ள மொகமது அலி சாலையில்  ஒட்டப்பட்டுள்ள இந்த புகைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  வைரலானதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த புகைப்படங்களை உடனடியாக அகற்றினர். இருப்பினும் இது தொடர்பாக யார்  மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.  

 

பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை!" - உமர் அப்துல்லா

 தாங்கள் நடத்தும் போராட்டம் நாட்டிற்கு எதிரானது அல்ல, பாஜகவிற்கு எதிரானது என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்துவதற்காக குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்கிற அமைப்பை ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவை இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் இன்று லடாக்கின் கார்கில் பகுதியில் உள்ள டிராஸ் என்கிற இடத்திற்குச் சென்று அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களையும், உள்ளூர் மக்களையும் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, தாங்கள் போராட்டத்தை ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை என்றும், பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராகத்தான் தாங்கள் போராடி வருவதாகவும் நாட்டிற்கு எதிராக அல்ல என்றும் அவர் கூறினார்.

இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்… சென்னை வானிலை அறிக்கை!

  தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொறுத்தவரை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2020

உறுதியோடு பிரார்த்திப்போம்

உறுதியோடு பிரார்த்திப்போம் அமைந்தகரை ஜுமுஆ தென்சென்னை மாவட்டம் உரை கா சுஜா அலி 09 10 2020 jumma

திருமண_விருந்து_தடுமாறும்_தவ்ஹீத் 👍 கொள்கையில் பிடிவாதம் வேண்டும்

திருமண_விருந்து_தடுமாறும்_தவ்ஹீத் 👍 கொள்கையில் பிடிவாதம் வேண்டும் 🎙️🎙️உரை: மவ்லவி.R.ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc (மாநில பேச்சாளர் TNTJ)

பிடிவாதம் கொள்வோம்

23 10 2020 - பிடிவாதம் கொள்வோம் உரை- கோவை R.ரஹ்மத்துல்லாஹ் சிங்காரத்தோப்பு - திருச்சி மாவட்டம்

ெய்தியும் சிந்தனையும் - 23-10-2020

பா.அப்துல் ரஹ்மான் - மாநிலத் துணை தலைவர் – TNTJ செய்தியும் சிந்தனையும் - 23-10-2020

வரம்பு மீறி புகழாதீர்கள்

மாநிலத் தலைமையக ஜுமுஆ - 23.10.2020 வரம்பு மீறி புகழாதீர்கள் 23 10 2020 R அப்துல் கரீம் jumma

அல்லாஹ்வின் தூதரை மட்டும் பின்பற்றுவோம்!


அல்லாஹ்வின் தூதரை மட்டும் பின்பற்றுவோம்! சுப்பிரமணியபுரம் - திருச்சி மாவட்டம் - 2016 உரை : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் எம்.ஐ.எஸ்.ஸி

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி மாணிக்கம் தாகூர் எம்.பி மனு!

 ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி டெல்லியில் இன்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் அன்சு பிரகாசை சன்சார் பவனில் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். 

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது ஆன்லைன் ரம்மி விளையாட்டு. இதனால் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்கள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர் இவ்விகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்பப்படும் என தெரிவித்தார்.

 

விரைவில் மத்திய சட்டத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்த அவர், செயலாளரிடம் மனு அளித்ததை தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு குழு அமைக்க உள்ளதாக செயலாளர் தெரிவித்ததாக மாணிக்கம் தாகூர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாம், இந்துக்களின் மக்கள் தொகை; சென்செஸ் கூறுவது என்ன?

 Muslim-Hindu demography of Jammu and Kashmir : ஜம்மு காஷ்மீரின் நிலச்சட்டங்கள் திருத்தப்பட்டு மத்திய அரசால் திங்கள் கிழமை அன்று கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதில், இதற்கு முன்பு நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக, ஜம்மு காஷ்மீருக்கு வெளியே இருக்கும் நபர்களால் அங்கு விவசாயத்திற்கு அல்லாத நிலத்தினை வாங்க இயலும்.

இந்த முடிவை பாஜக தலைவர்களும் செய்தி தொடர்பாளர்களும் வரவேற்க காஷ்மீரின் அரசியல் வட்டத்தில் புதிய புயலை உருவாக்கியுள்ளது. செவ்வாய்கிழமை தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ஜம்மு காஷ்மீர் தற்போது” விற்பனைக்கு என்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.

2011ம் ஆண்டுக்கான ஜம்மு காஷ்மீரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள், இதற்கு முந்தைய 50 ஆண்டுகளில் இருந்ததில் இருந்து மாற்றத்தையே காணவில்லை என்பதை தான் காட்டியது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் டெமோகிராஃபிக் என்ன?

சுதந்திரத்திற்கு முன்பு, 1941ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இஸ்லாமியர்கள் 72.41% என்றும் இந்துக்கள் 25.01% என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் விகிதம் குறைய துவங்கியது.

சுதந்திரத்தின் போதும் தற்போதும் எப்படி ஜம்மு காஷ்மீரின் டெமோகிராஃபிக் மாற்றம் அடைந்தது.

ஜம்மு காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 1961ம் ஆண்டு புள்ளிவிபரப்படி இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 24.32 லட்சம். இது அங்கிருக்கும் மொத்த மக்கள் தொகையான 35.60 லட்சத்தில் 68.31% ஆக இருந்தது. அதே போன்று இந்துக்களின் மக்கள் தொகை 28.45% அதாவது 10.13 லட்சமாக உள்ளது. முழுமையான 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விகிதங்களில் மாற்றம் ஏதும் இருக்கவில்லை. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் மக்கள் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 85.67%. மேலும் மொத்த மக்கள் தொகையில் இது 68.31% ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையான 125.41 லட்சம் நபர்களில் இந்துக்களின் எண்ணிக்கை 35.55 லட்சமாக உள்ளது.


மக்கள்தொகை கணக்கெடுப்பில் இரு சமூகங்களின் மக்கள்தொகையின் பங்கு எவ்வாறு மாறியது?

முஸ்லிம்களின் எண்ணிக்கை 1961ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 65.83% ஆகவும், 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 64.19% ஆகவும் சரிந்தது.

1991ல் கலவரங்கள் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது. ஆனால் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள்தொகையில் முஸ்லிம்களின் விகிதம் 66.97 சதவீதத்தைத் தொட்டது – இது 1971இல் இருந்த அந்த சமூகத்தின் பங்கை விட அதிகம். 1961இல் (68.31%) இருந்ததைக் காட்டிலும் இது கூடுதல்.

அதே நேரத்தில், மக்கள்தொகையில் இந்துக்களின் பங்கு எதிர் திசையில் நகர்ந்தது – 1961 இல் 28.45 சதவீதத்திலிருந்து 1971இல் 30.42% ஆகவும், 1981ல் 32.24% ஆகவும் உயர்ந்தது; 2001ல் 29.62% ஆகவும், 2011 ல் 28.43% ஆகவும் சரிந்தது.

மாவட்ட அளவில் எப்படி இந்த விகிதங்கள் எப்படி மாறியது?

முன்பு ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன. ஜம்மு மற்றும் காஷ்மீரில் தலா 6 மாவட்டங்கள் மற்றும் லடாக்கில் 2 மாவட்டங்கள். ஆறு காஷ்மீரிலும், 3 ஜம்முவிலும், ஒன்று லடாக்கிலும் என இதில் 10 மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் அதிகம் இருந்தனர்.

ஜம்முவில் மீதம் இருக்கும் மூன்று மாவட்டங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும்.லடாக்கில் மீதம் இருக்கும் ஒரு மாவட்டத்தில் பௌத்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது.

2006ம் ஆண்டு 8 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. தற்போது 17 மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 10 மாவட்டங்கள் காஷ்மீரிலும், ஜம்முவில் 6 மாவட்டங்களிலும், லடாக்கில் ஒரு மாவட்டத்திலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை உள்ளது. ஜம்மு பகுதியில் நான்கு மாவட்டங்களில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பௌத்த மதத்தினர் லெஹ் மாவட்டத்தில் அதிகம் உள்ளனர்.

காஷ்மீரின் பெரும்பாலான மாவட்டங்களில், 2001 உடன் ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. ஜம்மு மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களுக்கும் இதே நிலைதான்.

ஜம்மு காஷ்மீருக்கு புலம் பெயர்ந்தவர்களின் மக்கள் தொகை எவ்வளவு?

1.25 கோடியில் 1.64 லட்சம் நபர்கள் மட்டுமே வேறெங்கோ பிறந்து அங்கு வசித்து வருகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவில், 4.64% மக்கள் மட்டுமே வேறெங்கோ பிறந்து அந்த மாநிலத்தில் வாழ்கின்றனர்.

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை

 தமிழக பாஜக நவம்பர் 6ம் தேதி திருத்தணியில் இருந்து தொடங்கவுள்ள வெற்றிவேல் யாத்திரையை தடை விதிக்கக் கோரி விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ச் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் பாலகிருஷ்ணன் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சமீபத்தில், திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வெற்றிவேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவித்தார். இந்த வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் நவம்பர் 6ம் தேதி தொடங்கி திருச்செந்தூரில் டிசம்பர் 6ம் தேதி முடிவடையும் என்று அறிவித்தார். மேலும், இந்த வெற்றிவேல் யாத்திரையில் பாஜகவின் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெற்றிவேல் யாத்திரைக்கான பிரசாரப் பாடல் வீடியோவும் வெளியிடப்பட்டது.

பாஜக நடத்த உள்ள இந்த வெற்றி தமிழகத்தில் அமைதியைக் கெடுக்கும் நோக்கத்தில் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக சார்பில் நவம்மர் 6 முதல் தொடங்கி நடத்தப்படவுள்ள ‘வேல் யாத்திரை’ தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே, இதற்குத் தமிழக அரசு அனுமதியளிக்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை பாஜகவும் அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன. பாஜக ஆதரவாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார், அண்ணா, திருவள்ளுவர் முதலானோர் உருவச் சிலைகளுக்குக் காவிச் சாயம் பூசியும், காவி ஆடையைப் போர்த்தியும் அவமரியாதை செய்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தினர்.

சிலர் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டு பிற சமயத்தினர் தாக்கியதாகப் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். இப்போது வேல் யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் எனத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

கடந்த ஜனவரி மாதத்தில் திருச்சியில் விஜய் ரகு என்ற பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னால் முஸ்லிம் அமைப்புகள் இருப்பதாக எச்.ராஜா , முரளிதர ராவ் உள்ளிட்ட பாஜக உயர்மட்ட நிர்வாகிகளே வெளிப்படையாகக் குற்றம்சாட்டினர். ஆனால் மிட்டாய் பாபு என்பவரும் அவரது குழுவினரும்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது என்றும் காவல்துறையால் கண்டறியப்பட்டது.

கடந்த மே மாதத்தில் கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் உள்ள வேணு கோபால கிருஷ்ணசாமி கோவில் முன்பு பன்றி இறைச்சியை யாரோ வீசி விட்டனர். அந்த சம்பவத்தை வைத்து அங்கே ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பன்றி இறைச்சியை வீசியவர் ஹரி என்றும் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் என்றும் சிசிடிவி காட்சிகள் மூலமாகக் காவல்துறை கண்டறிந்து அவரைக் கைது செய்தது.

கடந்த செப்டம்பர் 15ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரங்கநாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதைவைத்து மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சி செய்தனர். ஆனால் அந்தக் கொலைக்கு அரசியல் காரணம் எதுவுமில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த செப்டம்பர் 13ம் தேதி கோயம்புத்தூர் ஆவாரம்பாளையம் பிஜு என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் இந்து முன்னணி ஆதரவாளர் என்பதால் அவரை வேறு மதத்தவர்கள் கொலை செய்துவிட்டனர் என்று பிரச்சனை கிளப்பினார்கள். ஆனால் அந்த கொலைக்கு முன் விரோதமே காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ராமநாதபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் அருண்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கும் மற்ற மதத்தினரைக் குற்றம்சாட்டி பாஜக மற்றும் அதன் ஆதரவு இயக்கங்கள் பிரச்சினை உண்டாக்கினார்கள். போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண்குமார் இதற்குப் பின்னால் மதரீதியான காரணம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார். அதனால் அம்பலப்பட்டுப்போன பாஜகவினர் ஆளுங்கட்சியிடம் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறை கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்ய வைத்தனர்.

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த ஏழெட்டு மாதங்களில் பாஜக செய்த சில முயற்சிகளை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம். காவல்துறையிடம் இதைவிட நீண்ட பட்டியல் இருக்குமென நம்புகிறோம்.

அரசியல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் பாஜகவின் இந்த சதித் திட்டத்துக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது. உடனடியாக வேல் யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” இவ்வாறு கூறியுள்ளார்.

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணனும் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பாஜக நாடு முழுவதும் நடத்தி இருக்கும் யாத்திரைகளை தொடர்ச்சியாக கவனித்துவரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் பளிச்சென்று விளங்கும். இந்தியா முழுமைக்கும் அவர்கள் யாத்திரை நடத்துகிற போது வழிநெடுக இந்திய மக்களின் கொள்கையும் சபைகளும் கொட்டிக்கிடந்த வரலாறு பதிவு செய்திருக்கிறது.

தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அவர்களே குண்டு வைத்தது, திருப்பூரில் தன் சொந்த கட்சிக்காரரின் தற்கொலையை அரசியல் மற்றும் மத அடிப்படையிலான கொலை என்று விளம்பரம் செய்து கலவரம் செய்ய முயற்சித்தது, ராமநாதபுரத்தில் தனி நபர்களுக்கு இடையிலான மோதலை மத மோதலாக சித்தரித்து வன்முறையைத் தூண்ட முயற்சித்தது. பாஜகவின் சில நிர்வாகிகளை தங்கள் வீட்டில் குண்டு எறிந்து சிறுபான்மை மக்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனவே போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரியது என இவர்களுடைய வரலாறு முழுவதும் வன்முறையைத் தூண்டுவதும் அந்தப் பழியை இதர இயக்கங்கள் மீது திணிப்பதுமாகவே இருந்து வந்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் வட மூலையிலிருந்து தென் மூலை வரை கட்டுப்பாடுகள் இருக்கும் இந்த காலத்தில் யாத்திரை நடத்த அனுமதிப்பது அவர்களின் விஷம் கலந்த பிரசாரத்தை பரப்புவதோடு கொடிய நோயையும் பரப்புவதற்கு ஏதுவாக அமைந்து விடும்.

எனவே, நோய் பேரிடர் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்துகிறது?

 Arun Janardhanan

2021-ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர், குறைவான பிரச்சினைகள் கொண்டிருந்த பாஜக, மாநிலத்தில் மனுஸ்மிரிதி போராட்டம் வெடிப்பதற்கு சில உதவிகளைப் பெற்று வருகிறது.

தலித் தலைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், ‘பெரியாரும் இந்திய அரசியலும்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆன்லைன் நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரையில், மனுஸ்மிரிதியை மேற்கோள் காட்டி பேசினார். “சனாதன இந்து தர்மம் பெண்கள் குறித்து என்ன சொல்கிறது? என்றால், பெண்கள் அடிப்படையில் கடவுளால் விபச்சாரிகளாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்து தர்மத்தின் படி… எல்லா பெண்களும் விபச்சாரிகள்… என்று மனு தர்மம் கூறுகிறது” என்று கூறினார்.

“விபச்சாரி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை மனுஸ்மிரிதியின் ஒரு பழைய உரையிலிருந்து அல்லது பதிப்பிக்கப்பட்ட மனுஸ்மிரிதியின் பல மொழிபெயர்ப்புகளில் ஒன்றில் இருந்து பேச்சாளர் விளக்கியுள்ளார்.

விரைவில், பாஜக தலைவர் குஷ்பு சுந்தர், இதற்கு திருமாவளவன் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக சட்டப்பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் புகார் அளித்த பின்னர், சென்னை நகர போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 153, 153 (ஏ) (1) (அ), 295 ஏ, 298, 505 (1) (பி) மற்றும் 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

திருமாவளவனும் திமுகவும் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள்?

அவரை பெண்களின் நலனுக்கு எதிரான ஒரு தலைவராக சித்தரிப்பதற்காக அவரது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு திரிக்கப்பட்டுவருவதாக திருமாவளவன் தெளிவுபடுத்தினார். விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சி பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக போராடுவதாகவும், தவறான தகவல் பிரச்சாரம் தேர்தலுக்கு முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணிக்குள் ஒரு தடுமாற்றத்தை உருவாக்குவற்காகவும் செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும், விசிக இந்தியாவில் மனுஸ்மிரிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்ததையும் அவர் நினைவுபடுத்தினார்.

இருப்பினும், திமுக கூட்டண்இ அதன் எதிர்வினையில் அதிகமாக அளவிடப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மனுஸ்மிரிதி விமர்சனத்தை தொடவில்லை. ஆனால், திருமாவளவனுக்கு எதிரான பொய் வழக்குக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். மேலும், அவர், “காவல்துறை மத வெறியர்கள், தவறான விளக்கம் அளித்து சிதைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். திருமாவளன் மீது செய்திருக்க கூடாது” என்று கூறினார்.

மற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி கட்சியான மதிமுக தலைவர் வைகோ, சிபிஐ(மார்க்ஸிஸ்ட்) தலைவர்கள் சென்னை காவல்துறையிடம் திருமாவளவன் மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியதுடன், விசிக தலைவர் மனுஸ்மிரிதியின் பழைய உரையிலிருந்து மேற்கோள் காட்டுவதாகவும், அந்நூல் சமூகத்தில் பெண்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பிரிவுகளை இழிவுபடுத்தும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த விவகாரத்தில் பாஜக ஏன் ஆர்வமாக உள்ளது?

கேரளாவில், ஆளும் சிபிஐ (மார்க்ஸிஸ்ட்) மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் தாக்குதலை சந்திக்கும் கேரளா பாஜக-வைப் போல இல்லாமல், தமிழக பாஜக பிரிவு, மத்தியில் பாஜக ஆட்சி செய்வதாலும், மாநிலத்தில் ஒரு தசாப்தமாக ஆட்சி செய்யும் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாலும் இந்த பிரச்னையை ஒரு அளவுக்கான பரப்பில் எடுத்துள்ளார்கள். இத்தகைய சூழ்நிலையில், மனுஸ்மிரிதி சர்ச்சை பிரதான தமிழ் அரசியலில் ஒரு வெற்றிகரமான அரசியல் நடவடிக்கையாகும். இதை பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தமிழகத்தில் இந்து வாக்குகளை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக காண்பதாக கூறுகிறார். திருமாவளவனின் இந்த பேச்சு ஒரு அவர்களுக்கு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.

பாஜக நவம்பர் 6ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டுள்ள “வெற்றிவேல்” யாத்திரை பிரச்சாரத்தின் மூலம் இந்து வாக்குகளை பலப்படுத்த பாஜக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது. ரத யாத்திரைப் போல, மாநில அரசின் முறையான அனுமதியுடன், இந்த வெற்றிவேல் யாத்திரை பழணி, சுவாமிமலை மற்றும் பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகனின் ஆறுபடைவீடு கோயில்களை இணைப்பதாக அடங்கியுள்ளது. இந்து வாக்குகளை பலப்படுத்த வெற்றிவேல் யாத்திரை உதவும் என்று பாஜக தலைமை எதிர்பார்க்கிறது.

மனுஸ்மிரிதி சர்ச்சையில் யார் பலனடைகிறார்கள்?

சமீபத்தில் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சுந்தர், காவிக் கட்சியில் விரைவாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக சிதம்பரம் செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திராவிடக் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தலித்துகள், இடதுசாரிகள் மற்றும் தமிழ் தேசியவாதக் கட்சிகள் தேர்தல் அரசியலில் அவர்களின் நாத்திகம், பிராமண எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு கொள்கைகளுக்காக பெரிய அளவில் அறியப்பட்ட கட்சிகள். மாநிலத்தின் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு, அவர்கள் மனுஸ்மிரிதி சர்ச்சையை கையாள்வது எளிதல்ல. கேரளாவில் உள்ள சபரிமலை கோயில் பிரச்சினையில் பாஜக தொடர்ந்து ஊடுருவ முயற்சிக்கும் அதே வேளையில், திமுக அதற்கான எதிர்வினைகளில் எச்சரிக்கையாக இருந்து வருகிறது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 7.5% உள் இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் மாநில ஆளுநர் தாமதம் செய்து வருகிறார் என்று கூறப்படும் மிகவும் முக்கியமான பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பவும் இந்த பிரச்னை உதவியுள்ளது. இந்த மசோதா சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் நிலை குறித்து எதிர்க்கட்சியும் மாநில அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

“விபச்சாரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக திருமாவளவன் மன்னிப்பு கேட்டிருக்கலாம். நாங்கள் இதை ஒரு சர்ச்சையாக மாற்றவில்லை. இது அவர்களின் தவறான பெருமையும் மத விரோத உணர்வுகளும்தான் இதை ஒரு சர்ச்சையாக மாற்றியது. அவர்களின் இந்து விரோத நிலைப்பாட்டை அம்பலப்படுத்த நாங்கள் எங்கள் போராட்டங்களைத் தொடருவோம்” என்று ஒரு பாஜக தலைவர் கூறினார்.

வியாழன், 29 அக்டோபர், 2020

பீகார் முதல் கட்ட தேர்தலில் 53.54% வாக்குகள் பதிவு!

 


பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில், 53.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 3 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு இடையே நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் இந்த தேர்தல் நாடெங்கிலும் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.  மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக 71 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளுடன்   வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர்.

 

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தனது வாக்கினை லக்கிசாராய் பகுதியிலுள்ள வாக்குசாவடிக்கு சென்று பதிவு செய்தார். பொதுவாக முதல்கட்ட வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது. 53 புள்ளி 54 சதவீத வாக்குகள் இன்று பதிவானது முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

இந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பெக்கா உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

 இந்திய அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான உயர்மட்ட பேச்சு வார்த்தை புதுதில்லியில் நடைபெற்றது.  இதில், இந்தியா- அமெரிக்கா இடையே அடிப்படை பாதுகாப்பு, பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்புக்கான முக்கிய ஒப்பந்தம் உட்பட ஐந்து ஒப்பந்தங்கள் புதுதில்லியில் கையெழுத்தாயின.

அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பெக்கா ஒப்பந்தம்) என்றால் என்ன? 

தன்னியக்கம் அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களின் துல்லியத்தை மேம்படுத்தும் அமெரிக்க புவிசார் நுண்ணறிவுக்கு இந்தியா நிகழ்நேர அணுகலைப் பெற பெக்கா ஒத்துழைப்பு உதவும். வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம், புவியியல் மற்றும் இடவியல் தரவுகளும், துல்லியமாக தாக்கும் எதிர்ப்பு ஆயுதங்களுக்கு தேவையான சேவைகளும் கிடைக்கப்பெறும்.

இது இந்தியா –  அமெரிக்கா  விமானப்படைகளுக்கு  இடையிலான ஒத்துழைப்புக்கு முக்கியமாக இருக்கலாம். நமது  ஸ்மார்ட்போனில் உள்ள ஜி.பி.எஸ் ஓரிடத்தைத் துல்லியமாக அடைய எப்படி உதவுகிறதோ, அதே போன்று தான் பெக்கா ஒப்பந்தமும்.  இந்த ஒப்பந்தத்தால், உயர் ரக ஜி.பி.எஸ் சேவையுடன் கூடிய இந்திய இராணுவ அமைப்புகள்,  வெகு தொலைவிலிருந்தே எதிரி நாடுகளை மிகத் துல்லியமாக  குறிவைக்கும்.

கப்பல் சேவை, விமானச் சேவை , போர் ஆயத்தப் பணிகள், இலக்குகளை துல்லியமாகக் கண்காணிப்பது  போன்றவைகளைத் தாண்டி இயற்கை பேரழிவு மேலாண்மைக்கும் புவியியல் நுண்ணறிவு முக்கியமானது.

இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ” புதிய பாதுகாப்பு தளவாடங்களை வாங்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுவரும் நிலையில், மாபெரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடு என்ற அந்தஸ்தில் இந்தியாவை தொடரச் செய்வது என்ற உறுதியை அதிபர் டிரம்ப் அளித்துள்ளார். இதன்மூலம், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்குவது மற்றும் பரிமாற்றம் செய்வதில் உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும். அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட உடன்பாடுகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகளை விரைந்து இறுதிசெய்ய தலைவர்கள் ஆவலுடன் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

 

 

லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம்: 

முன்னதாக, ஆகஸ்ட் 2016 இல், இந்தியாவும் அமெரிக்காவும் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஒப்பந்தத்தில் (LEMOA) கையெழுத்திட்டன, இது ஒவ்வொரு நாட்டின் இராணுவத்தையும் மற்றவர்களின் ராணுவ தளங்களில் பணியாற்ற அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் மலபார் உடற்பயிற்சியுடன் நன்கு இணைகின்றன, ஏனெனில் இந்தியா அனைத்து குவாட் நாடுகளுடன் LEMOA பதிப்புகளில் கையெழுத்திட்டுள்ளது.

1991 ல் முதல் வளைகுடாப் போரின்போது மும்பையில் அமெரிக்க விமானங்களை எரிபொருள் நிரப்ப அனுமதித்தல்,  9/11 க்குப் பிந்தைய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்போது அமெரிக்க போர்க்கப்பல்களை இந்திய துறைமுகங்களை பயன்படுத்த அனுமதித்தல் போன்ற  லாஜிஸ்டிக்ஸ் உதவிகளை கடந்த காலங்களில் செய்திருந்தாலும்,  LEMOA  கையொப்பம் இந்த செயல்முறையை நிறுவனமயமாக்கியது.

தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்:

செப்டம்பர் 2018-ல், இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் 2 + 2 உரையாடலுக்குப் பிறகு – அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோரை சந்தித்தனர் . இரு தரப்பினரும் தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (COMCASA) கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம், அமெரிக்கா தகவல்களை மறைபொருளாக்குதல் (என்கிரிப்ட்) வசதிகள் கொண்ட  தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் அமைப்புகளை  இந்தியாவுக்கு வழங்க அனுமதிக்கிறது. இதன்மூலம், போர் மற்றும் அமைதி காலங்களில் இரு நாட்டு விமானம் மற்றும் கப்பல் படைகளும் , இரு நாட்டு இராணுவத் தளபதிகளும் பாதுகாப்பான முறையில் இனைந்து செயல்பட வழி பிறக்கிறது.

தனது நெருக்கமான கூட்டாளிகளோடு அமெரிக்கா பகிர்ந்துகொள்ளும் தொழில்நுட்ப தகவல்களை இந்தியாவோடும் பகிர்ந்துகொள்ளும் வேலைகளில் அமெரிக்கா இறங்கும். இந்தியா தனது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்ற உறுதியின் பேரில் இருநாடுகளும் உபயோகிக்கத்தக்க தொழில்நுட்பங்களை எந்த உரிமமும் இல்லாமல் இந்தியா பெற முடியும் என்று பிரதமர் அலுவலகம் முன்பு தெரிவித்து இருந்தது.

இந்த ஒப்பந்தங்களின் நடைமுறை நன்மை என்ன?

ஆக்கிரமிப்பு சீனாவின் பின்னணியில் மூலம்  பாதுகாப்புத்துறையில் இந்தியா- அமெரிக்கா என்ற  இருநாடுகளுக்கிடையிலான உறவு வலுப்படுவதை நம்மால்    காண முடிகிறது. தனது எல்லையை பகிர்ந்துகொண்டுள்ள நாடுகளோடும், இதர நாடுகளையும் சீனா அச்சுறுத்தி வருகிறது. மேலும் இது விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவுகளின் அம்சங்களையும் தன்னிச்சையாக மீறிவருகிறது.

கடந்த மூன்று தசாப்தங்களில் காணப்படாத தீவிரமான எல்லை மோதல்கள் லடாக் கட்டுப்பாட்டுக் கோட்டில்  காணப்படுகின்றன. இந்த பின்னணியில் தான், குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து இந்தியா- அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு  முன்னெப்போதும் இல்லாத அளவில் தீவிரமடைந்தது.

கடந்த ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், அமெரிக்கா  வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் ஆர் பாம்பியோ தொலைபேசியில் உரையாடினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்கா பாதுக்காப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ’பிரையனுடன் தொடர்பு கொண்டார். மேலும், அமெரிக்க இராணுவத் தலைவர் ஜெனரல் மார்க் ஏ. மில்லி, பாதுகாப்புப் படைத்தலைவர் பிபின் ராவத் ஆகியோருக்கு இடையே பல வாரங்களாக உரையாடல்கள் நடைபெற்றன .

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் ஜூலை இரண்டாவது வாரத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். இந்த உயர்மட்ட உரையாடல்கள், இரு நாடுகளின் பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்புக்கு  தேவையான தகவல் மற்றும் அதிக அளவிலான உளவுத்துறை பகிர்வு குறித்த கட்டமைப்பை உருவாக்க உதவியுள்ளன.

உயர்தர செயற்கைக்கோள் படங்கள், தொலைபேசி இடைமறிப்பு,  சீன துருப்புக்கள் குறித்த விவரங்கள் , எல்லைக் கட்டுப்பாடு கோடு நெடுகே சீனாவின்  ஆயுத பலம் ஆகிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. எல்லைப் பகுதி நெடுகே  அனைத்து செக்டாரிலும் சீன துருப்புகளின் இயக்கங்களை புது டெல்லி உன்னிப்பாக கவனிப்பதற்கு இது மிகவும் உறுதுணையாக இருந்தன.

செவ்வாயன்று, அமெரிக்கா  வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ சீனாவை நேரடியாகத் தாக்கியதுடன், “தங்கள் இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் எதிரான அச்சுறுத்தல்களை சந்திக்கும் இந்திய மக்களுடன் துணை நிற்போம்” என்ற அமெரிக்க உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

“… சீன கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மட்டுமல்லாமல், அனைத்து வகையான அச்சுறுத்தல்களுக்கும் எதிராக ஒத்துழைப்பை வலுப்படுத்த இருநாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதில்  நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பாம்பியோ கூறினார்.

“நாங்கள் (புதுதில்லியில் உள்ள போர் நினைவுச்சின்னத்திற்கு) சென்றோம் … ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளால் கொல்லப்பட்ட 20 ராணுவ வீரர்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த  ராணுவ வீரர்களின் கரவிப்பதற்காக.”

பாம்பியோ, எஸ்பருடன் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் ஜெய்சங்கர் ஆகியோர் சீனாவின் பெயரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால், பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை சர்வதேச விதிமுறைகளுக்குட்பட்டு, நிலைநாட்டப்பட வேண்டும் , அண்டை நாடுகளுடன் நல்லுவை பராமரிக்கவே இந்தியா விரும்புகிறது” என்று தெரிவித்தார்.

நாம், என்ன புரிந்து கொள்ள வேண்டும்?   

எல்லாவற்றிற்கும் மேலாக, பரஸ்பர நம்பிக்கையின் இணைப்பு  மற்றும் நீண்டகால மூலோபாய உறவுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை இது குறிக்கிறது. முக்கிய பாதுகாப்பு உடன்படிக்கைகள்  தற்போது நடைமுறையில் இருப்பதால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் கட்டமைக்கப்பட்ட, திறமையான வழியில் செல்கிறது.

அதே சமயம், ரஷ்யாவின் ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களில் இருந்து  இந்தியா விலகிச் செல்ல வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

கொரோனா பரவலை தடுக்க உதவியவை: ஒரு ஆய்வு

 பேண்டமிக் காலகட்டத்தையொட்டி பல்வேறு நாடுகளில் பள்ளி மற்றும் அலுவலக மூடல், பொது நிகழ்வுகள் மீதான தடை, பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அதிகப்படியான கோவிட் -19 பரவுதலைத் தடுக்க உதவியது. ஆனாலும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எந்தவொரு தடைகளையும் விட மிகவும் பயனுள்ளதாக இருந்தன என ‘தி லான்செட் தொற்று நோய்கள்’ வெளியிடப்பட்ட ஓர் புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 131 நாடுகளிலிருந்து டேட்டாவை எடுத்து, அவற்றின் செயல்திறனுக்காக பல்வேறு மருந்து அல்லாத தலையீடுகளை (non-pharmaceutical interventions (NPIs)) தரவரிசைப்படுத்தினர்.

அவர்கள் அதை எவ்வாறு செய்தனர்?

இந்த கணக்கீடுகள் R எண்ணை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது, பாதிக்கப்பட்ட நபர்களின் மக்கள் தொகைக் குழுவிற்குள் வைரஸ் பரவக்கூடிய ஆரோக்கியமான நபர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

இந்த தலையீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உயர்த்தப்படும்போது R எண்ணை மதிப்பிட்டு, பரிமாற்றத்தின் தனி மற்றும் ஒருங்கிணைந்த தலையீடுகளின் விளைவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். “எங்களுடைய இந்த ஆய்வுதான் முதன்முதலில் NPI-களின் வரம்பை மாற்றுவதற்கும் SARS-CoV-2-ஐ பரப்புவதற்கும் இடையிலான தற்காலிக தொடர்பை மதிப்பிட்டு, R எண் மூலம் அளவிடப்படுகிறது. இந்த தரவு அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

R-ன் தினசரி மதிப்பீடுகள் ஜனவரி முதல் ஜூலை வரை நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு காலவரிசை உருவாக்கப்பட்டு, தனிப்பட்ட கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது(இதில் எந்த கட்டத்திலும், அனைத்து நடவடிக்கைகளும் மாறாமல் இருந்தன).

சிக்கலான மாடலிங் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள கட்டுப்பாடுகளை R மாற்றங்களுடன் இணைத்தனர்.

School office closing Corona Lockdown Restrictions Effect Tamil NewsCorona Lockdown Restrictions Effect

சிங்கிள் vs பேக்கேஜ்

24% : பொது நிகழ்வுகள் மீதான தடைகள், மிக உயர்ந்த குறைப்பை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது. 28 நாட்களுக்குள் R எண் 24% குறைந்திருக்கிறது. பிற நடவடிக்கைகள் அவற்றின் மீது குறிப்பிடத்தக்க விளைவைக் காணவில்லை.

29% : நான்கு “தொகுப்புகளை” மாதிரியாகக் கொண்டு, இந்த குழு பல நடவடிக்கைகளை இணைத்தது. இவற்றில், பொது நிகழ்வுகளுக்குத் தடை, 10-க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்குத் தடை என மிகக் குறைவான கட்டுப்பாடு, 28 ஆம் நாளில் R எண்ணை 29% குறைத்தது.

52% : பள்ளி மற்றும் பணியிடங்களை மூடுவது, பொது நிகழ்வுகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டங்களுக்குத் தடை, இயக்கத்தின் வரம்புகள் மற்றும் வீட்டில் தங்க வேண்டிய தேவை ஆகியவற்றால் ஏற்பட்ட குறைப்பு.

சர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு

 அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (எபிவிபி) தலைவரும், கீழ்பாக்கம்  அரசு மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சை புற்றுநோயியல் தலைவருமான டாக்டர் சண்முகம்  சுப்பையாவை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நியமிக்கும் அறிவிப்பை இன்று வெளியிட்டது.

 

சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

முன்னதாக, சண்முகம் சுப்பையா மீது 62 வயது நிரம்பிய பெண் ஒருவர் ஆலந்தூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ” கார் பார்க்கிங் தொடர்பான மோதளால், சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தாகவும், அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய முகக்கவசம் மற்றும் இதர குப்பைகள் தனது வீட்டு வாசலில் கொட்டி விட்டு சென்றதாகவும்”  தெரிவித்தார். இதுக் குறித்த சிசிடிவி காட்சிகளையும் அவர் காவல்துறையிடம்  சமர்பித்திருந்தார்.

இந்த விஷயம் தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. சம்பவம் நடைபெற்ற ஜூன மாதத்தில் தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வந்தது. ஊரடங்கு காலத்தில் ஒரு மருத்துவரே இத்தகைய செயல்களை செய்யலாமா? என்ற கேள்வியும் எழுந்தது.

எனவே, சண்முகம் சுப்பையா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் நியமித்திருப்பதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா? என்று விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினர்.

 

 

ஜோதிமணி:  

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ஒரு பெண்வீட்டின் முன் சிறுநீர்கழித்து அவரிடம் ஆபாசமாக, அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபியின் சண்முகம் சுப்பையாவை உடனடியாக மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

 

கனிமொழி :  

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டரில், “அநாகரிக நடத்தைக்கான ஒப்புதலா? பிற பாஜக உறுப்பினர்களும் இத்தகைய செயலை பின்பற்றுவதற்கான ஊக்கத் தொகையா? ” என்று கேள்வி எழுப்பினார்.

 

 

திமுக தலைவர் மு. க ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை “எய்ம்ஸ்” மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பா.ஜ.க. எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல!

அப்படியிருக்கும் போது – ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த – அதுவும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக – அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம்! பெண்களின் கண்ணியம் குறித்தோ, அவர்களுக்குக் கவுரவம் அளிக்க வேண்டும் என்பது பற்றியோ, எந்தக் காலத்திலும் பா.ஜ.க. கவலைப்படுவதில்லை என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாக அமைந்து விட்டது.

பெண்ணினத்திடம் பா.ஜ.க.விற்கு இருக்கும் வெறுப்புணர்வை இந்த நியமனம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இதுதான் பா.ஜ.க. “பிராண்ட்” கலாச்சாரமா?
பெண்ணை அவமானப்படுத்திய மருத்துவர் சுப்பையா சண்முகம் இடம்பெற்றுள்ள குழுவிற்கு, எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தராக இருக்கும் மரியாதைக்குரிய டாக்டர் சுதா சேசையன் அவர்களையும் உறுப்பினராக நியமித்து அவரையும் மத்திய பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தியிருக்கிறது.

பெண்களின் பெருமை குறித்த உயர்ந்த சிந்தனை கொண்ட  சுதா சேசையன் அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகி விடுவதுதான் அவருக்கும் கண்ணியம்; அவர் இதுவரை கட்டிக்காத்து வந்த நேர்மைக்கும் அடையாளமாக இருக்கும்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடமளித்து – ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்கி விட்டு – தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக்குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்தில் உருப்படியான நடவடிக்கை எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக முன்னெடுக்காத மத்திய பா.ஜ.க. அரசு, இப்படிப்பட்ட கோணல் புத்தியுள்ள ஒருவரை நிர்வாகக் குழுவில் இணைத்து, பெண்ணினத்தை அவமானப்படுத்திடும் வகையில் அமைத்திருப்பது, தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

 

மதுரை எய்ம்ஸ்:  

1,264 கோடி ரூபாய் செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது. இதற்கான, அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.

இந்த மருத்துவமனையில், 15 முதல் 20 அதிநவீன மருத்துவத் துறைகள் அமையவுள்ளன. இந்த மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. அதோடு மட்டுமன்றி, இது மருத்துவக் கல்லூரியாகவும் திகழவிருப்பதால், 100 எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்புக்கான இடங்களும், 60 பி.எஸ்.சி செவிலியர் பட்டப் படிப்புக்கான இடங்களும் உருவாக்கப்பட உள்ளன. இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1500 வெளி நோயாளிகள் மற்றும் மாதம் ஒன்றுக்கு 1000 உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்படும்


இந்தியாவுடன் ஒப்பீடு: பொருளாதார வளர்ச்சியில் இடைவெளியை குறைத்த வங்கதேசம்

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டில் பலர் கரையான்களை போல ஊடுருவுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு வங்கதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அமித்ஷாவின் கருத்து தேவையற்றது, பொருத்தமில்லாதது மற்றும் எந்த ஒரு தகவலையும் அடிப்படையாக கொண்டதல்ல என்று கூறியிருந்தார். சர்வதேச நிதி ஆணையத்தின் சமீபத்திய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து வெளியான தகவல்களில் கரையான்கள் என்று குறிப்பிடப்பட்ட வங்கதேசம் இந்தியா மற்றும் பாகிஸ்தானை காட்டிலும் சமூக மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்கிறது.

An Uncertain Glory: India and its Contradictions என்ற புத்தகத்தில் 2012ம் ஆண்டு அபிவிருத்தி பொருளாதார நிபுணர்கள் ஜீன் ட்ரூஸ் மற்றும் அமர்த்தியா சென் ஆகியோர் வங்கதேசம் அதன் அண்டை நாடுகளைக் காட்டிலும் குழந்தை இறப்பு, குழந்தை நோய்த்தடுப்பு, பெண் கல்வியறிவு, மேம்பட்ட சுகாதாரத்திற்கான அணுகல் மற்றும் மொத்த கருவுறுதல் வீதம் போன்ற இண்டிகேட்டர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்கள். 1971ம் ஆண்டு புதிதாக உருவான இந்த நாட்டில், அன்றைய தினம் ஒரு சராசரி வங்கநாட்டை சேர்ந்தவரின் ஆயுட்காலம் 46.5% ஆகும். அது சராசரி இந்தியரின் ஆயுட்காலத்தை விட இரண்டு ஆண்டுகள் குறைவு. 2018ம் ஆண்டு வங்கநாட்டை சேர்ந்தவரின் சராசரி ஆயுட்காலம் 72 ஆண்டுகள். இது இந்தியாவை காட்டிலும் 2 ஆண்டுகள் அதிகம். பொருளாதாரத்தில், 2015ம் ஆண்டு,தனிநபர் வருமானம் இந்தியர்களை காட்டிலும் 25% குறைவாக இருந்தது. சர்வதேச நிதி ஆணையத்தின் கணிப்புகள் சரியாக இருந்தால், அந்த இடைவெளி தற்போது மறைந்துவிடும். 2025ம் ஆண்டு இந்தியாவும் வங்கதேசமும் சரிசமமாக இருக்கும்.

தொற்றுநோயால் தூண்டப்பட்ட இந்தியாவின் வளர்ச்சி (-)10%மாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில் வங்கதேசம் (+) 3.8% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒரு வருடத்திற்கான நிகழ்வாக இதை காண்பது தவறாகலாம். ஒவ்வொரு சமூக அல்லது பொருளாதார இண்டிகேட்டர்களும் மனித மேம்பாட்டில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைப் பிடிக்க முற்படுகிறது – மேலும் ஒரு நாடு தொடர்ச்சியாக பலவிதமான இண்டிகேட்டர்களில் சிறப்பாகச் செயல்படும்போது, பொருளாதாரத்திலும் இது சாத்தியமாகும். இது சாத்தியப்படும் என்று வங்கதேசத்தில் பெரும்பாலான ஆய்வாளார்கள் காத்துக் கொண்டிருந்தனர். கொரோனா தொற்று இதனை விரைவுப்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இது வங்கதேசத்திற்கு எப்படி சாத்தியமானது?

வங்கதேசத்டின் பொருளாதாரம் எப்போதும் நம்பிக்கை கொண்டதாக இருக்கவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு, வங்கதேசத்தை, அடியற்ற கூடை என்று வர்ணித்தார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செயலாளர் ஹென்றி ஹிஸிங்கர். வளர்ச்சி அடைந்த பண்டிதர்கள், மக்கள் தொகை நெருக்கமாக உள்ள ஒரு நாட்டில் குறைவான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து நம்பவில்லை. ஆனால் இந்த கருத்துகள் காலப்போக்கில் ஏற்பட்ட சமூக பொருளாதார முன்னேற்றங்களுக்கு காரணமாக அமையவில்லை.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

ஒரு நீண்ட பார்வையை எடுத்துக் கொண்டால், கடந்த நாற்பது ஆண்டுகளாக வங்கதேசம் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது என்பது தெளிவாகிறது. சுதந்திரத்திற்கு பிறகு பஞ்சம் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக சில இடர்பாடுகள் ஏற்பட்ட போதும் கூட மொத்தமாக 1990களுக்கு பிறகு முன்னேற்றம் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

வங்கதேசத்தின் சராசரி ஜி.டி.பி. வளர்ச்சி கடந்த முப்பது ஆண்டுகளாக உலக நாடுகளின் சராசரி ஜி.டி.பி. வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக உள்ளது. 2010ம் ஆண்டில் இருந்து தெற்காசியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. 1980 முதல் ஒவ்வொரு தசாப்தத்திலும் பங்களாதேஷின் சராசரி பொருளாதார வளர்ச்சி படிப்படியாக அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், பங்களாதேஷ் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் உற்பத்தி மற்றும் சேவைகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 1980ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை விவசாயம் கொண்டிருந்தது. ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக தொழில்துறை இருந்தது. 2018 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 15% ஆக குறைந்தது. இப்போது தொழில்துறை மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 1980 ஆண்டு முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

1990களில் இருந்து ஏற்றுமதி மிதமாக உள்ளது. அவை 1992ம் ஆண்டு நிதியாண்டில் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்தது. தற்போது 2019ம் ஆண்டின் நிதியாண்டில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளன – 37 ஆண்டுகளில் (தோராயமாக) 20% வளர்ந்துள்ளது.

91ம் ஆண்டுக்கான நிதி ஆண்டின் போது பணம் பெறுதல் 764 டாலர்களாக இருந்தது. 2019ம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் அது 16.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. வங்கதேசம் உலக அளவில் பணம் பெறும் முதல் 10 இடங்களில் உள்ளது. இது வங்கதேசத்திற்கு குறைந்த ஊதிய உழைப்பிலிருந்து பணம் வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய பலவீனங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு 18 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் அனுப்பப்பட்டுள்ளது, இது தொற்றுநோயால் தூண்டப்பட்ட ஊரடங்கில் இருந்து ஒட்டுமொத்த கோரிக்கை அதிர்ச்சியை உறுதிப்படுத்த உதவியது.

கட்டமைப்பு மாற்றம் மற்றும் அந்நிய செலவாணி வருவாயை ஊக்குவிக்கும் துறைகளில் வங்கதேசம் வளர்ச்சியை கண்டது. இது பொருளாதார அடிப்படைகளை தக்க வைக்க பாலிசிமேக்கர்களுக்கு உதவியது. இந்த பொருளாதார முன்னேற்றத்தை தக்கவைக்க பலவீனமான வரிதிரட்டும் திறன், அதிக சுமை கொண்ட நீதித்துறை, போதிய அதிகாரத்துவ திறன் போன்ற நிர்வாக சவால்களை சரி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளும் தடையற்ற வர்த்தகக் கோட்பாட்டின் மீதான நம்பிக்கையை விரைவாக இழந்து வருவதோடு, பெரிய வர்த்தகத் தொகுதிகள் பாதுகாப்புவாதத்தை நோக்கி பெருகி வருவதால், வங்கதேசம் அது போட்டியிடும் சர்வதேச சூழலை முழுமையாக ஆராய வேண்டும்