திங்கள், 30 நவம்பர், 2020

கட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி

 ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில முதல் பெண் முதல்வருமான மெஹபூபா முப்தி, “ஜம்மு காஷ்மீரில் எதிர்ப்பு குரல்கள் நசுக்கப்படுவதாகவும், ஜனநாயகமற்ற சூழலை பாஜக உருவாக்கி வருவதாகவும்  குற்றம் சாட்டினார்”.

மெஹபூபா முப்தி,“அவர்கள் என்னை முடக்க நினைக்கிறார்கள். எனது கட்சியை தடை செய்ய விரும்புகிறார்கள். வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370- ஐ ரத்து செய்தது குறித்து தொடர்ச்சியாக நான்  பேசி வருவதாக கூறுகிறார்கள். ஆனால், நான்  வேறு என்ன செய்ய முடியும்? ” என்று கேள்வி எழுப்பினார்.

வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு முப்தியின் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புல்வாமா மாவட்டத்தில், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (DDC) தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த மூன்றே நாட்களில் மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தலைவர் வஹீத் உர் ரெஹ்மான் பாராவை தேசிய விசாரணை முகமை  கைது செய்தது. வாகீத்-உர்-ரஹ்மான் குடும்பத்தினரை சந்திக்க புல்வாமாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தத மெஹபூபா முப்தியை காவல்துறை தடுத்து நிறுத்தினர். .

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முப்தி தெரிவித்தார். எவ்வாறாயினும், ​​ஜே & கே காவல்துறை இதை மறுத்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பயணத்தை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டதாக தெரிவித்தனர். முப்தி தனது இல்லத்தில் இருந்து  ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

“முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள்  காலிஸ்தானியர்கள், சமூக ஆர்வலர்கள் நகர்ப்புற நக்சல்கள், மாணவர்கள் சமூக விரோதிகள் ” என்று  பாஜக முத்திரை குத்துவதாக முப்தி குற்றம் சாட்டினர்.

“நாட்டில் அனைவரும் பயங்கரவாதிகள் என்றால், பின்பு  யார் தான் இந்துஸ்தானியார்கள் என்று எனக்கு புரியவில்லை. பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மட்டும் தான் இந்தியர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

“370 வது பிரிவை மீண்டும் நிலைநிறுத்தாத வரை பிரச்சினை தீர்க்கப்படாது. வெறுமனே தேர்தல்களை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது, ”என்றும் தெரிவித்தார்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை

 Election 2021: வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இருபெரும் கட்சிகளான திமுக-வும் அதிமுக-வும் அதன் மூத்த தலைவர்கள் இல்லாமல் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன. அதனால் அடுத்து ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல்வாதிகளிடமும், பொதுமக்களிடமும் அதிகரித்துள்ளது. அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என பாஜக அறிவித்தது. அதோடு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கடந்த வாரம் தமிழகம் வந்து சென்றார்.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சியான திமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் இத்தேர்தலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அதன்படி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் ராகுல் காந்தி. காணொளிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாணிக்கம் தாகூர் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு பேசிய தினேஷ் குண்டுராவ், சட்ட மன்ற தேர்தலுக்காக திமுக-விடம் பேரம் பேச மாட்டோம் எனவும், எதார்த்தத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வழக்கு: மூளை பிங்கர்பிரிண்டிங் சோதனை என்றால் என்ன?

 சனிக்கிழமை (நவம்பர் 21), உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்-ல் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்ட  நான்கு பேரையும் காந்திநகர் நகரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (எஃப்எஸ்எல்) வந்து சேர்ந்தது.

நான்கு பேரிடமும் மூளை பிங்கர்பிரிண்டிங் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த திங்களன்று, பிஇஒஎஸ்பி (BEOSP) என்ற சொல்லப்படக் கூடிய இந்த சோதனைக்கு, குற்றம் சாட்டப்பட்ட  நன்கு பேரும் தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பிஇஒஎஸ்பி சோதனை என்றால் என்ன?

மூளை பிங்கர்பிரிண்டிங்  என்றும் அழைக்கப்படும்  (BEOSP) என்பது ஒரு நரம்பு உளவியல் விசாரணை முறையாகும், இதில்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிலளிக்கும் போது அவர்கள்  மூளையில் ஏற்படும் தாக்கங்கள் ஆராயப்படுகிறது. எலக்ட்ரோஎன்செபலோகிராம்’ (இஇஜி) செயல்முறையின் மூலம், மனித மூளைகளின் மின் அலைகளின் சிக்னல்களை அறிந்து கொள்ளலாம்

இந்த சோதனையின் கீழ், மின்வாயிகள் (electrode) பொறுத்தப்பட்ட தொப்பிகளை விசாரணை கைதிகளிடம்  அணிய வைக்கப்படுகிறார்கள். பின்னர், குற்றம் சம்பவம் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் போடப்படும். மூளை அலைகளை உருவாக்கும் நியூரான்கள் ஏதேனும் தூண்டப்படுகிறதா என்று சோதிக்கப்படும். சோதனை முடிவுகள் பின்னர் ஆய்வு செய்யப்பட்டு, குற்ற சம்பவத்தோடு இவர்  தொடர்புயைடைவரா என்பது  தீர்மானிக்கப்படும்.

குஜராத் தடயவியல் இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், “ குற்றத்தைப் பற்றிய ‘அறிவு’, ‘அனுபவம்’ ஆகிய இரண்டின்  அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்படும். தனிநபரின் மூளையில் குற்றத்தை பற்றியும் அதில் இருந்து விடுபடுவதற்கான அறிவும் இருக்கலாம். ஆனால் குற்றத்தில் பங்கெடுத்ததன் ‘அனுபவம்’ மட்டுமே அவர்களின் குற்றத்தை தீர்மானிக்கிறது.” என்று தெரிவித்தார்.

சோதனை முடிவுகள் வழக்கில்  ஆதாரமாக ஒப்புக்கொள்ளப்படுமா?

2010 ஆம் ஆண்டில், செல்வி vs கர்நாடக மாநிலம் என்ற  வழக்கில், உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ சோதனை), மூளை வரைபட சோதனை மற்றும் பாலிகிராப் சோதனைகள் தனிநபரின் அனுமதியுமின்றி கட்டாயப்படுத்த முடியாது என்றும், சோதனை முடிவுகளை மட்டுமே ஆதாரமாக ஒப்புக்கொள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது. எவ்வாறாயினும், சோதனைகளின் போது கண்டறியப்பட்ட எந்தவொரு தகவலும் அல்லது பொருளும் வழக்கின் ஆதாரங்களின் ஒரு பகுதியாக கருதப்படலாம் என்றும் அமர்வு  தெரிவித்தது.

புதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை?

 Weather Tamil News, Tamil Nadu New Cyclone Puravi: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழகத்தை நோக்கி நகருகிறது. இதனால் தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தத் தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற விவரத்தை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

நிவர் புயல், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு நல்ல மழை கொடுத்தது. இதைத் தொடர்ந்து வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின்படி, தெற்கு அந்தமான் கடல் பகுதி, அதையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடல், வங்கக் கடலின் பூமத்திய ரேகை பகுதி ஆகியன காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருக்கின்றன.

அடுத்த 48 மணி நேரத்தில் இவை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தொடர்ந்தே இது புயலாக மாறுமா? என்பது தெரியும். இது தென் தமிழக கடற்கரைப் பகுதியை நோக்கி நகருகிறது.

இதன் மூலமாக டிசம்பர் 1, 2, 3 ஆகிய தினங்களில் தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். உள் தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 4, 5 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திராவிட அரசியலும்…. அம்மன் படங்களும்!

 தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக அம்மன் படங்கள் திகழ்கின்றன. தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படம் கூட ‘கீசக வதம்’ எனும் பக்தி படம் தான். 1918ம் ஆண்டு இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

தமிழ் சினிமாவில் அம்மன் படங்கள் வெறும் பக்தியோடு நிற்கவில்லை. மாறாக, பெண்ணிய நீதி குறித்த ஜனநாயக வாசத்தை தட்டி எழுப்புகிறது. தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்க மக்களை அடையாளப்படுத்தியது அம்மன் படங்கள் தான். அதே போன்று, கிராமங்களில் வழிபட்டு வந்த பல அம்மன் தெய்வங்களுக்கு நகர வாழ்வியலை அறிமுகப்படுத்தியதும் அம்மன் படங்கள் தான்.

உதாரணமாக, பல படங்களில் அம்மன் மாறு வேடத்தில் தனது பக்தையைக் (பொதுவாக, படத்தின் கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்தினர்) காப்பாற்ற மருத்துவராகவும், கார் ஓட்டுனராகவும், அமெரிக்கா வாழ் இந்தியராகவும் வருவதுண்டு.

அம்மன் ஆசிரியையாக வரும் காட்சி. படம் : பாளையத்து அம்மன்

 

அம்மன், அமெரிக்கா வாழ் இந்தியராக வரும் காட்சி. படம் – ராஜகாளி அம்மன்

 

பெண்ணிய நீதியை நிலைநாட்டும் பொருட்டு தடையற்ற உருமாற்றத்திலும், இடமாற்றத்திலும் அம்மன் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டன. மூன்றாம் உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள் இறக்குமதி செய்த  சட்டம், நீதி, நியாயங்கள் எல்லாம் அம்மன் படங்களில் மறுஉருவம் பெற்றது. அம்மன் படங்களில் நீதியின் பன்முகத் தன்மை வெளிப்பட்டது. நன்மை- தீமை கணக்குகள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொழிநுட்பத்துடன்  முடித்து வைக்கப்பட்டன. அம்மனின் கோபமான பார்வையாலும், ஆக்ரோசமான நடனத்தினாலும் சட்டத்திட்டங்கள்  உயிரோட்டம் பெற்றன. சுருங்க சொன்னால், அம்மன் படங்கள் ஒவ்வொன்றும் ஒருவகையான அரசியல் மேடை, ஜனநாயக வாசம், கல்வியறிவு.

தென்னிந்தியாவில் சினிமாவும், அரசியலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கிறது. உதரணாமாக, 1949ல் பெரியார் திராவிட கழகத்தில் இருந்து பிரிந்த திமுக, இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக அரசியலில் களமிறங்கும் தனது விருப்பத்தை பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சியின் மூலம்  தெரிவித்தது (எம். எஸ். எஸ் பாண்டியன்). இங்கே, சினிமா அரசியலுக்காக பயன்படடுத்தப்பட்டது என்பது பொருள்ளல்ல, மாறாக மொழிவழி மாநிலங்களில் ஒரு நுட்பமான, தன்னிச்சையான அரசியல் ஈடுபாடுகளை சினிமா முன்னெடுத்தது என்றே கூறலாம்.

அம்மன் படங்களிலும், தமிழக அரசியலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. லிசா ப்ளேக், எம்.எஸ்.எஸ் பாண்டியன், சி. எஸ் . லக்ஷ்மி, மேரி எலிசபத் ஹன்காக், கல்பனா ராம் போன்ற பல ஆய்வாளர்கள் இத்தகைய கூற்றை நேராகவும், மறைமுகமாகவும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளில் வெளிபடுத்தியுள்ளனர்.

தமிழக அரசியலின் மையப்பகுதி தமிழன்னை. தமிழ்த்தாய், தமிழன்னையின் மடி, தமிழ்தாயின் கருவறை, முப்பாலூட்டிய தமிழன்னை, தமிழன்னையின் மானம், கற்பு, தமிழன்னையின் தவிப்பு போன்ற முழக்கங்கள் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது. இன்றளவிலும், மாநில சுயாட்சியில் இதன் தாக்கம் உணரப்படுகிறது.

உதாரணமாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் சுப்பையா சண்முகம் என்ற நபரை நியமித்ததிற்கு ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில், ” தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

பல்வேறு அரசியல் கட்டங்களில் தமிழன்னை பல்வேறு விதமாக உருவகப்படுத்தப்பட்டது. உதரணாமாக, தனித்தமிழ் இயக்கத்தின் போது, நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமாக தமிழன்னை உருவகப்படுத்தப்பட்டார். திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது, கணவனால் கைவிடப்பட்ட கை பெண்ணாகவும், கயவர்களிடம் இருந்து தனது கற்பை காக்கும் இளம் பெண்ணாகவும் தமிழன்னை உருவகப்படுத்தப்பட்டார் ( பராசக்தி திரைப்படம்).  1980- 90 களுக்குப் பிந்தைய திராவிட அரசியலில் தாராள மயக் கொள்கைகள், உலகமாயமாதல் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தமிழன்னை சித்தரிக்கப்பட்டார்.

அம்மன் படங்களும், இத்தகைய அரசியல் நிலைகளைத்  தான் முன்வைகின்றன. அம்மன் படங்களில் பெரும்பாலும் பக்தை (கதாநாயகி) தமிழன்னையாகவே சித்தரிக்கப்பட்டதாக லிசா ப்ளேக் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

அம்மன் படத்திற்குள் திராவிட அரசியல்: 

பொதுவாக, அம்மன் படங்களில் கிராமத்தில் வாழும் பக்தை, திருமணத்திற்குப் பிறகு நகரத்தில் குடிபெயருவாள். நகர்புற மேல்தட்டு கலாச்சார வாழ்க்கையால் பக்தையின் மானம், மரியாதை, கற்பு கேள்விக்குறியாக்கப்படும்.(பெரும்பாலும், கணவன் காதாபாத்திரம் நகர்புற வாழ்க்கையை பிரதிநித்துவத்துவம் செய்யும்). அதை, மீட்டெடுக்க அம்மன் நகர்புறத்தை நோக்கி பயணிக்கும். பக்தைக்கும், அம்மனுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவின் காரணமாக, தீய செயல்களில் ஈடுபட்ட கணவனை அம்மன் இறுதியாக மன்னித்து விடும். இறுதியில், பக்தியின் பூவும், பொட்டும் நிலைத்திருக்கும்.

சுருங்க சொன்னால், பக்தையின் சுமங்கலி பாக்கியாத்தை பறிக்கும் உரிமை அம்மனுக்குக் கூட கிடையாது.

கோட்டை மாரியம்மன் திரைப்படத்தில் பக்தை தனது கணவனை மன்னிக்க வேண்டுகிறார்.

 

ராஜகாளி அம்மன் திரைப்படத்தில் பக்தை தனது கணவனை மன்னிக்க வேண்டுகிறார்.

 

திராவிட அரசியலுக்குள் அம்மன்:

1957 வருட தேர்தலுக்குப் பிறகு, நடைபெற்ற அனைத்து  சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக, அதிமுக என்ற இரண்டு பெரியத் திராவிட கட்சிகள் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் 60- 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், திராவிடக் கட்சிகள் முன்வைக்கும் நலத்திட்டங்கள்.

திமுக, அதிமுகவின் நலத்திட்டங்கள் பெரும்பாலும்  அம்மன் படங்களில் காட்டப்படும் அந்த பக்தையின் கதாபாத்திரத்தை மனதில் வைத்து தான் தீட்டப்படுகிறது.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், விதவைகள்/ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித் தொகை திட்டம், இலவச கலர் டிவி, மது விலக்கு, கிரைண்டர், மிக்சி, மின் விசிறி, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற அனைத்து நலத்திட்டங்களும் இதற்கு சான்றாக உள்ளது.  இத்தகைய நலத்திட்டங்கள், திருமணத்திற்குப் பிறகு நகர்புறத்துக்கு புலம் பெயரும் கிராமத்து பெண்களை பேணிக் காக்க முயல்கிறது.

சுருங்க சொன்னால் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அம்மனாக தங்களை உருவகப்படுத்திக் கொள்கின்றன.

முடிவுரை: 

திராவிடக் கட்சிகள் இந்துகளுக்கு எதிரான கட்சி என்ற வாதத்தை நாம் அவ்வப்போது கேட்டு வருகிறோம். ஆனால், உண்மை மிகவும் சிக்கலானது. பெரியாரின் திராவிட கழகம் பிராமணிய இந்துத்துவா எதிர்ப்பு வாதத்தை முன்வைத்தாலும், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு எதிரான ஒரு வாதத்தை தான் முதன்மைப்படுத்துகின்றன.

பராசக்தி படத்தில்…. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவனின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக… என்ற வசனத்தின் மூலம் திமுக தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியது. மேலும், அனைத்திந்திய ( தனித்தமிழ்நாடு முழுவதுமாக கைவிடப்பட்டதை குறிக்கிறது) அதிமுக கட்சி உருவான பின்பு, பிராமணிய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு தமிழகத்தில் சுத்தமாக கைவிடப்பட்டன.

திமுக, அதிமுக அரசியல் பொதுக் கூட்டங்களில் உள்ள மேடை அலங்காரம், செம்மொழி பேச்சு, கவிதை நடை சுவரொட்டி, ஒலி/ஒழி அமைப்பு, தமிழ்த் தாய் வாழ்த்து, வணக்கவுரை, வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே, என் இனியத் தமிழ் மக்களே போன்ற வசனங்கள் எல்லாம் ஒரு விதமான பக்தியை உருவாக்கின. அரசியல் மாநாடுகளும், பொதுக் கூட்டங்களும் கிட்டத்தட்ட கோவில் தளங்களாக மொழிபெயர்க்கப்பட்டன.

அதிமுக மாநாடு

 

திமுக மாநாடு

மறுபுறம், அம்மன் படங்கள் பெண்ணியம், மேல்தட்டு அடக்குமுறை, வரதட்சனை கொடுமை, கிராமம்/நகரம் இடைவெளி போன்ற ஆழ்ந்த அரசியல் நிகழ்வுகளை பேசுகின்றது.

உதரணாமாக, கோட்டை மாரியம்மன் திரைப்படத்தில் 41வது நிமிடத்தில் வரும் காட்சி:

 

 

அம்மன் (ரோஜா ): அப்படி என்ன தான் எழுதுறா?
பக்தை (ரோஜா ) : slate- ல் தான் எழுதியதை கான்பிக்கின்றார்(அதில், திமுக துணை ) என்று எழுதப்பட்டுள்ளது.
அம்மன்: இது என்ன கட்சி பெயரா?
பக்தை: இல்லை. கடவுள் பெயர் . திருமயிலை முன்டக கன்னி துணை
அம்மன்: அப்டியா… முன்னால ஒரு ‘அ’ வையும் சேத்துக்கோ … அதிமுக னா…. அருள்மிகு திருமயிலை முண்டக கண்ணி துணை
பக்தை: ஆத்தா … உனக்கு இருக்கும் அறிவுக்கு நீ லண்டன்ல இருக்க வேண்டிய ஆளு….

தமிழகத்தில் அரசியலும், தெய்வங்களும் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. பெயர்சொல்லப்படாத ஒரு ஆன்மீக அரசியல் தமிழகத்தில் ஏற்கனவே காலூன்றி நிற்கிறது. தெற்கு ஆசியாவில், தற்போது பெரும்பான்மை வாதத்தை பின்னுக்குத் தள்ளி அரசியல் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியதில் திராவிடக் கட்சிகளின் பங்கு அளப்பறியாதது.

ஞாயிறு, 29 நவம்பர், 2020

கர்நாடகாவில் சாதி அடிப்படையில் வாரியங்கள் அமைப்பதன் பின்னணி அரசியல் என்ன?

 The politics of creating community-based corporations in Karnataka : கர்நாடகாவில் ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசு சமீபத்தில் மூன்று வாரியங்கள் மற்றும் கார்ப்பரேசன்களை அமைத்து குறிப்பிட்ட சாதிகள் மற்றும் மொழி பிரிவினரின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து மேற்பார்வையிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மேம்பாட்டு கார்ப்பரேசனில் லிங்காயத்து வீரசைவ பிரிவும் அடங்கும் (முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும் இந்த பிரிவை சேர்ந்தவர்)

லிங்காயத்து பிரிவினருக்கு கார்ப்பரேசன் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முடிவுவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அந்த கட்சியின் வாக்குகளை பெறுவதற்காக எடியூரப்பா இவ்வாறு செய்வதாக அவர் குற்றம் சுமத்தினார். கர்நாடக மக்கள் தொகையில் 17% பேர் இந்த பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் பாஜக மற்றும் எடியூரப்பாவின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பெறும் வகையில் லிங்காயத்து பிரிவை இணைக்க எடியூரப்பா மேற்கொண்ட முயற்சியும் கூட அந்த பிரிவின் ஆதரவை பெற எடியூரப்பா மேற்கொண்ட முயற்சியாகும் என்று கருதப்படுகிறது.

சாதி அடிப்படையில் மேம்பாட்டு வாரியங்கள் அமைக்க காரணம் என்ன?

சாதி மற்றும் மத குழுக்களின் மேம்பாட்டிற்காக கார்ப்பரேசன்கள் மற்றும் வாரியங்கள் அமைப்பது அக்குழு மக்களின் அரசியல் ஆதரவுகளை பெற பின்பற்றப்படும் ஒரு தந்திரமாகும். லிங்காயத்து பிரிவினருக்கான ஆதரவு தான் கர்நாடகாவின் சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் 90 இடங்களில் வெற்றி பெற உதவியது. இவர்கள் வடக்கு கர்நாடகாவில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.  லிங்காயத்து வீர சைவ மேம்பாட்டு கார்ப்பரேசன் ரூ 500 கோடி நிதியில், ஸ்காலார்ஷிப் மற்றும் கடன்கள தர, உருவாக உள்ளது. இரண்டு தொகுதிகளுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் (பசவகல்யாண் மற்றும் மஸ்கி) மற்றும் ஒரு மக்களவை இடைத்தேர்தல் (பெலகவி) காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மூன்று இடங்களும் வடக்கு கர்நாடகாவில் லிங்காயத்து பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளாகும். மராத்தா மொழி பேசும் மக்களுக்காக மராத்தா மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானவுடன் இந்த அறிவிப்பும் வெளியானது. மராத்தி பேசும் மக்களின் வாக்குகளை பெறவே இந்த அறிவிப்பும் வெளியானது. பெலகவி மற்றும் பசவகல்யாண் பகுதிகளில் மராத்தி பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர்.

இந்துத்துவ குடையின் கீழ் அனைத்து சாதிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டுள்ள போதிலும், கடலோர கர்நாடக பிராந்தியத்திற்கு அப்பால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை – 1990களில் இருந்து இந்துத்துவா மற்றும் மத துருவமுனைப்பு ஆகியவை தேர்தல்களில் முக்கிய செல்வாக்கு செலுத்தியுள்ளன, குறிப்பாக பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின்னர். பாஜக இன்னும் கர்நாடகாவில் ஒரு தனிப் பெரும்பான்மையை வெல்லவில்லை, 2008 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தனது பெரும்பான்மையை நிலைநாட்ட மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவதை நம்ப வேண்டியிருக்கிறது.

இது போன்ற வாரியங்கள் மற்றும் கார்ப்பரேசன்கள் தேர்தலில் வெற்றி பெற உதவுமா?

இதற்கு முன்பு பாஜக வெற்றியே பெறாத சிரா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜக காடு கொல்லா பட்டியல் இனத்தவர்களுக்கு மேம்பாட்டு வாரியம் ரூ. 10 கோடியில் உருவாக்கப்படும் என்று கூறியது. இந்த அறிவிப்பு பாஜகவை அங்கு முதன்முறையாக வெற்றி பெற வைத்தது. மற்ற அனைத்து கட்சிகளும் வெக்கலிக சமூகத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியது. ஆனால் பாஜக இது போன்ற பட்டியல் இன மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் மீது கவனத்தை செலுத்தியது.

லிங்காயத்து வீர சைவ கார்ப்பரேசனை உருவாக்குவதற்கு வேறேனும் பெரிய அரசியல் முக்கியத்துவம் உள்ளதா?

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க போகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் எடியூரப்பா மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கின்றனர். 2013ம் ஆண்டு தேர்தலின் போது பாஜக 110 இடங்களில் இருந்து 40 இடங்களுக்கு தள்ளப்பட்டது. அப்போது பாஜகவில் இருந்து விலகி தனியாக போட்டியிட்டார் எஇயூரப்பா. அந்த கட்சியும் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

2018ம் ஆண்டு மீண்டும் பாஜகவில் எடியூரப்பா இணைந்த போது 104 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் லிங்காயத்து பிரிவினரின் வாக்குகளை பெற கடுமையான முயற்சி மேற்கொண்டது. லிங்காயத்து வீர சைவ மேம்பாட்டுக் கழகத்தின் உருவாக்கம் எடியூரப்பாவின் செல்வாக்கை பலப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக மட்டுமல்லாமல், அரசாங்க வேலைகள் மற்றும் கல்வியில் லிங்காயத்துகளுக்கு 16% இடஒதுக்கீடு வழங்குவதற்கான கோரிக்கையை பரிசீலிப்பதற்கான ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.


கடந்த காலங்களில் இந்த யுக்தியை மற்ற கட்சிகள் எப்படி பயன்படுத்தின?

அனைத்து கட்சிகளும் சாதி உட்பிரிவினருக்கும், மத குழுவினருக்கும் வாரியங்கள் மற்றும் கார்ப்பரேசன்களை உருவாக்கியது. சமூகத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பிரிவினரை சாதி மற்றும் இன அடிப்படையில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2013 – 2018 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முடிவுகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும் இல்லை அதை பயன்படுத்தி மேம்பாட்டு திட்டங்களும் உருவாக்கப்படவில்லை.

டி. தேவராஜ் உர்ஸ் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கார்ப்பரேசன், டாக்டர் அம்பேத்கார் மேம்பாட்டு கார்ப்பரேசன், சிறுபான்மையிண்டர் மேம்பாட்டு கார்ப்பரேசன் ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது. மேம்பாட்டு திட்டங்களை உருவாக்கவே இவை உருவாக்கப்பட்டது. இதே போன்று பல சாதிகளுக்கும் கார்ப்பரேசன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெ.டி.எஸ். கட்சி தலைவர் எச்.டி. குமாரசாமி பிராமணர் மேம்பாட்டு வாரியத்தை ரூ. 25 கோடியிலும், ஆர்ய வைஷ்ய மேம்பாட்டு வாரியத்தை ரூ. 10 கோடியிலும் உருவாக்க இருப்பதாக அறிவித்தார்.

முன்னால் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா போவி மேம்பாட்டு கார்ப்பரேசன், பாபு ஜகாஜீவன் ராம் மடிகா, கர்நாடகா தண்டா மேம்பாட்டு கார்ப்பரேசன் மற்றும் நிஜ்ஷரணா சம்பிகரா சௌவ்டைய்யா மேம்பாட்டு கார்ப்பரேசன் ஆகியவற்றையும் உருவாக்கினார்.

சிறையில் ஒரு ”ஸ்ட்ராவுக்காக” காத்திருக்கும் 83 வயது சமூக செயற்பாட்டாளர்!

 


Stan Swamy, 83, waits as the buck is passed on his sipper and straw :  உபா சட்டத்தின் கீழ் தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், பாதிரியாருமான 83 வயது ஸ்டான் ஸ்வாமியின் ஒரு ஸ்ட்ரா மற்றும் சிப்பர் கோப்பைக்கான வேண்டு கோள் எவ்வாறு சட்ட நடைமுறைகள் உணர்ச்சியற்றதாக இருக்கிறது என்பதை எடுத்துக் கூறும் வழக்காக உள்ளது. எல்கர் பரிஷாத் வழக்கில் அக்டோபர் 7ம் தேதி கைது செய்யப்பட்ட அவரின் வேண்டுகோள் தொடர்பாக வியாழக்கிழமை நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.

மும்பையில் தலோஜா மத்திய சிறையில் இருக்கும், பர்கின்சன் நோயால் அவதியுற்றிருக்கும் ஸ்வாமிக்கு ஸ்ட்ரா மற்றும் சிப்பர் கப் உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக அந்த சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர் சிறைக்கு அழைத்து செல்லபட்ட சில நாட்களிலேயே உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸ்வாமியின் வழக்கறிஞர் குழு, ஸ்வாமி காத்துக் கொண்டிருக்கும் இந்த இரண்டு பொருட்களும் வெகு ஆண்டுகளாக அவரின் அத்தியாவசிய தேவையான பொருட்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்று கூறினார். அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவருக்கு தேவையான பொருட்களை அவர் கையோடு ஒரு பையில்வ் வைத்து எடுத்து வந்துள்ளார். பகைச்சாவில் தன்னுடன் பணியாற்றும் நபர் கொடுத்த சிப்பர் க்ளாஸூம் அதில் அடங்கும். மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 8ம் தேதி அவர் ஆஜர்செய்யப்பட்டு அதே நாளில் தலோஜா சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார்.

அவருடைய வழக்கறிஞர்கள் குழுவின் படி, நவம்பர் 6ம் தேதி அன்று ஸ்வாமிக்கு சிப்பர் கப்பை சிறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதை அறிந்துள்ளனர். அதே நாளில் என்.ஐ.ஏ. அந்த சிப்பரை அவரிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்புக்குமாறு நீதிமன்றத்தை நாடினார்கள்.

சிறை அதிகாரிகள் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்றால், அவருடைய பொருட்கள் அனைத்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதனை திருப்பி தர நேரம் அதிகம் எடுக்காது என்று எண்ணி நாங்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தோம் என்றார் அவருடைய வழக்கறிஞர் ஷரிஃப் ஷேய்க். இருப்பினும் நீதிமன்றம் இது தொடர்பாக தீபாவளி விடுமுறை முடிந்து நவம்பர் 26ம் தேதி அன்று பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. வியாழக்கிழமை என்.ஐ.ஏ. அளித்த அறிக்கையில், ஸ்வாமி கொண்டு வந்திருந்த பொருட்கள் தொடர்பாக நாங்கள் சுதந்திரமாக ஆய்வு செய்தோம். ஆனால் அதில் சிப்பர் மற்றும் ஸ்ட்ரா கண்டு பிடிக்க இயலவில்லை என்று கூறினார்.

இந்த வாதத்தை கருத்தில் கொண்டு, இல்லாத பொருள் குறித்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதன் பின்னர், ஸ்டான் ஸ்வாமிக்கு தேவையான குளிர்கால உடைகள், ஸ்ட்ரா மற்றும் சிப்பரை வழங்க சிறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு மனுவை ஸ்வாமி தரப்பில் வைத்தனர். சிறை நிர்வாகம் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி டிசம்பர் 4ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தது நீதிமன்றம்.

மகாராஷ்ட்ர மாநில உள்துறை துணை அமைச்சர் சடேஜ் டி பாட்டில் “அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும், ஸ்ட்ரா, சிப்பர் கப் உட்பட” வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அவருக்கு தேவையான அனைத்து வகையான மருத்துவ வசதிகளையும் இதர வசதிகளையும் சிறை விதிகளுக்கு உட்பட்ட வகையில் வழங்கியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையத்தின் கேள்விக்கு பதில் அளித்த தலோஜா சிறை அதிகாரிகள் ஸ்வாமிக்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள், உயர் புரத உணவுகள், குளிக்க வெந்நீர், பெட்ஷீட், மெத்தை மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. மேலும் பர்கின்சன்ஸ் இருப்பதால் அவருடன் உதவிக்கு இரண்டு நபர்களை நியமித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

அதில் மேலும் ஸ்வாமிக்கு வீல் சேர், வாக்கிங் ஸ்டிக், வால்க்கர், நாற்காலி, சிப்பர் கோப்பை, சிப்பர் பாட்டில், ஸ்ட்ராக்கள், அவருடைய காது மிஷினுக்கான பேட்டரி செல்கள் என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சைக்ராட்ரிஸ்ட் குறிப்பிட்ட இடைவெளியில் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்வதாகவும் கூறினார்கள்.

ஆனாலும் சமூக செயற்பாட்டாளரும், ஸ்வாமியின் பாதுகாப்பு குழுவில் ஒருவருமான பாதிரியார் செட்ரிக் பிரகாஷ் “இந்த வாரம் ஸ்வாமியிடம் பேசிய போதும் கூட அவருக்கு சிப்பர் வழங்கப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வாரம் ஸ்வாமி அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தின் ஒரு பகுதி, அவர் ஒரு முழு கை ஸ்வெட்டர், ஒரு மெல்லிய போர்வை மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் ஆகியவற்றைக் கேட்டதாகக் கூறினார். “சிறை வாசலில் இந்த பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும், அவற்றைக் கொண்டுவந்தவர் அவற்றை ஒரு முறை அல்ல, மூன்று முறை திரும்ப அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது என்பதையும் கேட்டு நான் வருந்துகிறேன்” என்று பிரகாஷ் பகிர்ந்து கொண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பொருட்கள் மறுபடியும் வரும் பட்சத்தில் அதனை சிறை அதிகாரிகள் உங்களிடம் சமர்பிப்பார்கள் என்று சிறை வட்டாரம் ஸ்வாமியிடம் உறுதி செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. மாவோய்ஸ்ட் நடவடிக்கைகளில் ஸ்வாமிக்கு ஈடுபாடு இருந்ததாக என்.ஐ.ஏ குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு தன்னுடைய எழுத்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்காக செய்யும் பணிகள் மற்றும் சாதி மற்றும் நில போராட்டங்கள் தொடர்பாக அவர் ஆற்றும் பணிக்காகவே இலக்காக்கப்படுள்ளேன் என்று கூறியுள்ளார். ஸ்வாமியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது சிறப்பு நீதிமன்றம். வியாழக்கிழமை பதியப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது

சனி, 28 நவம்பர், 2020

டெல்லி சலோ” : தடையை மீறும் விவசாயிகள்; சமாதானம் பேச அழைக்கும் அமைச்சர்கள்

டெல்லி சலோ” : தடையை மீறும் விவசாயிகள்; சமாதானம் பேச அழைக்கும் அமைச்சர்கள்

 Delhi Chalo’ against farm laws: Farmers cross barricades, water jets; Tomar, Rajnath offer talks : ஹரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக டெல்லி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் விவசாயிகள். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

அவர்கள் மீது தடியடி தாக்குதல் மற்றும் நீர் பாய்ச்சி அடித்து அப்புறப்படுத்தும் நிகழ்வுகள் நடந்த பின்னர் தடையை மீறி போராட்டக்காரர்கள் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை முனைப்புடன் நடத்தி டெல்லி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஹரியானாவில் இருந்து வந்த விவசாயிகள் பலரும் பானிபட் டோல் ப்ளாசாவில், டெல்லியின் எல்லையில் இருந்து 65 கி.மீ க்கு அப்பால், டெல்லி – அம்பலா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முன்னேறி வருகின்றனர். அதே தேசிய நெடுஞ்சாலையில், டெல்லி எல்லையில் இருந்து 100 கி.மீக்கு அப்பால் கர்னல் பகுதியில் இருந்து பஞ்சாப் விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்.

மூன்றாவது சிறிய குழுவினர் டெல்லி சிர்ஸா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து டெல்லி எல்லைக்கு 115 கி.மீக்கு அப்பால் இருக்கும் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹான்சியை வந்ததடைந்தனர். டெல்லி – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தை தலைமை தாங்கி வந்த ஸவ்ராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ், கூர்கோனில் உள்ள பிலாஸ்பூர் கிராமத்தில்கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு பகுதியில் இருந்து டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் தங்களை ஒரு நீண்ட கால போராட்டத்திற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். அவர்களுடைய ட்ராக்டர்களில் உணவுப் பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் உள்ளன. சிலர் ட்ரக்குகள், பஸ்கள், மற்றும் ஜீப்களிலும், பலர் நடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் வேளாண்துறை அமைச்சர் தோமர் போராட்டக்காரர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற சமிக்ஞையை விடுத்தார். அரசு இந்த விவகாரத்தில் இருக்கும் மாறுபட்ட கருத்துகளை கலைய விரும்புகிறது என்று அவர் கூறினார்.

“நான் நம்முடைய விவசாய சகோதரர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். நம்முடைய பேச்சுவார்த்தை முடிவுகள் சாதகமாக அமையும்” என்றும் அவர் கூறியுள்ளார். மாலையில் ராஜ்நாத் சிங் தானும் ஒரு விவசாயி மகன் தான். மேலும் அரசு விவசாயிகளை ஏமாற்றிவிடாது என்று கூறினார்.

எச்.டி. லீடர்ஷிப் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், “உங்களின் போராட்டங்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றேன். நான் பாதுகாப்புத்துறை அமைச்சர். ஆனால் ஒரு விவசாயியின் மகன். ஒரு விவசாயியாக நான் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்றேன். நான் அவர்களுடன் பேச தயாராக இருக்கின்றேன். நம்மால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது என்று அவர் கூறினார்.

‘Delhi Chalo’ against farm laws: Farmers cross barricades, water jets; Tomar, Rajnath offer talks

தோமர் மற்றும் ராஜ்நாத் இருவரும் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையையே தரும் என்பதை புரிய வைக்க முயலுகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பை முடிவுக்கு வரும் என்ற அச்சம் தரும் விசயங்கள் ஏதும் வேளாண் சட்டத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முயலுகின்றனர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஹரியானா காவல்துறையால் பல்வேறு இடங்களில் இரும்பு மற்றும் கான்கிரீட்டால் ஆன பல் அடுக்கு தடைகள், . மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், எம்.எஸ்.பி. தொடரும் என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவு ஆகியவற்றை கோரி டெல்லியை நோக்கி செல்லும் அவர்கள் போராட்டத்திற்கு தடையாகவே இல்லை

ஹரியானா காவல்துறை கண்ணீர் புகை, தண்ணீர் கேனான் மற்றும் தடியடி ஆகியவற்றை பயன்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயன்றனர். ஆனாலும் அவர்களால் போராட்டக்காரர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. காவல்துறை 90 விவசாய தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களில் கைது செய்தனர்.

‘Delhi Chalo’ against farm laws: Farmers cross barricades, water jets; Tomar, Rajnath offer talks

ஹரியானாவின் ஃபதேஹாபாத், ஜிந்த், பானிபட், சோனிபட், ரோஹ்தக் மற்றும் அம்பலா ஆகிய மாவட்டங்களில் இதே போன்ற சூழல் காணப்பட்டது. சில இடங்களில் காவல்துறையினர் மீது கல்லெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அம்பலா, ஜிந்த், ஃபதேஹாபாத், கார்னல் ஆகிய இடங்களில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே தாக்குதல்கள் மூண்டதாக தகவல்கள் வெளியாகின. ஜிந்த் பகுதியில் தனியார் மற்றும் அரசு வாகனங்கள் சேதம் அடைந்தது. அதே போன்று அம்பலாவீல் விவசாயிகள் காவல்துறையிடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.

டெல்லியில் தோமரின் அறிக்கையோ அல்லது ஹரியானாவில் அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளோ கிளர்ந்தெழுந்த விவசாயிகளை சமாதானப்படுத்துவதில் வெற்றிபெறவில்லை. பிற்பகலில், முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு விவசாயிகள் அமைப்பு ஒப்புக்கொண்டது.

விவசாய சங்கத் தலைவர்களை முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவர்களும் தயார் ஆனார்கள். ஆனால் சில குண்டர்கள் காரணமாக பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத்தினர் வரவில்லை என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார். சர்ச்சைகளை தவிர்க்கவும், கொரோனா தொற்றுக்கு நடுவில் கூட்டம் கூட்டமாக மக்கள் சேர்வதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து விவசாயிகள், காவல்துறையின் தடுப்புகளை உடைத்து முன்னேறி வர கட்டார் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ட்விட்டரில் கருத்துகளை கூறினார்கள். அம்ரிந்தர் சிங் கட்டாரிடம் விவசாயிகள் மீது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கட்டார், போராட்டத்தை தூண்டுவதாக பஞ்சாப் முதல்வர் மீது குற்றம் சுமத்தினார்.

 

‘Delhi Chalo’ against farm laws: Farmers cross barricades, water jets; Tomar, Rajnath offer talks

ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் உள்ள பாஜக அல்லாத தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைதியான போராட்டம் அவர்கள் அரசியல் சாசன உரிமை என்று கூறினார். ஹரியானா மற்றும் மத்திய அரசு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு விமர்சனங்களையும் முன் வைத்தார். விவசாயிகள் பலரும் இன்று டெல்லியை அடைய இருக்கும் நிலையில், பெரும்பாலானோர் குந்த்லி எல்லை வழியாக தலைநகரை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரியானா காவல்துறை வியாழக்கிழமை மாலை, டெல்லியை ஹரியானாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 10 (ஹிசார்- ரோஹ்தக்- டெல்லி) மற்றும் தேசிய நெடுஞ்சாலை 44 (அம்பலா – பானிபட்-டெல்லி) ஆகியவற்றில் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.டெல்லிக்கு செல்லும் சாலைகளில், குறிப்பாக பானிபட் மற்றும் கர்னல், கர்னல் மற்றும் குருக்ஷேத்ரா, மற்றும் குருக்ஷேத்ரா மற்றும் அம்பாலா ஆகியவற்றுக்கு இடையேயான பாதைகளில் பொது மக்களுக்கு சிரமமாக இருப்பதாக டிஜிபி மனோஜ் யாதவா எச்சரித்தார்.

எங்களின் பிரிவினர், பஞ்சாபில் இருந்து விவசாயிகள் ஹரியானாவை அடைவதை தடுக்க முயன்றோம். விவசாயிகள் காவல்துறையினரின் தடையை மட்டும் சேதப்படுத்தவில்லை. அனைத்து தடைகளையும் மீறி அவர்கள் முன்னேறி சென்றனர். காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதலை நடத்தவில்லை. ஆனால் விவசாயிகள் சட்டத்தை மீறினார்கள். பல்வேறு இடங்களில் காவல்துறையினர் மீது கற்களை வீசும்படி உத்தரவும் பிறப்பித்ததாக டி.ஜி.பி. கூறினார்.

டிசம்பர் மூன்றாம் தேதி அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு விவசாயிகளை அழைத்துள்ளது. இதற்கு முன்பு நவம்பர் 13ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வியாழக்கிழமை, காரீஃப் பருவத்தில் நெல் கொள்முதல் “சுமூகமாக” நடைபெறுகிறது என்று கூறினார்.

‘Delhi Chalo’ against farm laws: Farmers cross barricades, water jets; Tomar, Rajnath offer talks

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காரிஃப் பருவத்தில் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உ.பி., தெலுங்கானா, உத்திரகாண்ட், தமிழகம், சண்டிகர், ஜம்மு – காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரா, ஒடிசா மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் 307.03 லட்சம் மெட்ரிக் டன் நெல் 25/11/2020 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 259.41 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த இந்த கொள்முதல் தற்போது 18.35% வரை அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொள்முதல் செய்யப்பட்ட 307.03 லட்சம் மெட்ரிக் டன்னில் பஞ்சாப்பில் மட்டும் 202.53 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்த கொள்முதலில் இதன் அளவு 65.96% ஆக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் உணவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்ற தரவுகளில் 202 எல்.எம்.டி. நெற் கொள்முதல் கரீஃப் பருவத்தில் கடைசி இரண்டு மாதங்களில் மட்டுமே பெறப்பட்டுள்ளது. (செப்டம்பர் 26 முதல் புதன்கிழமை வரை). இது இந்த சீசனில் வைக்கப்பட்ட டார்கெட் மதிப்பை காட்டிலும் 20% அதிகம். கடந்த ஆண்டில் இதே பருவ காலத்தில் பஞ்சாபில் 161 எல்.எம்.டி. நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

ஹரியானாவில் தான் நெல்கொள்முதல் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. செப்டம்பர் 26ம் தேதியில் இருந்து 55 லட்சம் டன்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 63 லட்சம் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

source: https://tamil.indianexpress.com/india/delhi-chalo-against-farm-laws-farmers-cross-barricades-water-jets-tomar-rajnath-offer-talks-234234/

இந்தியாவின் 2வது காலாண்டு ஜிடிபி 7.5% ஆக சரிவு; மந்தநிலைக்கு செல்லும் பொருளாதாரம்

 மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீடுகளின்படி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 23.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அதையடுத்து, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் (2வது காலாண்டு) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம் சுருங்கியது. 2019-20ம் ஆண்டின் இதே காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

சமீபத்திய நிகழ்வின் மூலம், இந்திய பொருளாதாரம் வரலாற்றில் முதல் முறையாக (தொழில்நுட்பரீதியாக) மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது. பொருளாதாரத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு அல்லது அதற்கு மேல் எதிர்மறையாக இருக்கும்போது, ​​அது மந்தநிலை என்று அழைக்கப்படுகிறது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் (முதல் காலாண்டு) மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதம் சுருங்கியது. இது இந்தியப் பொருளாதாரத்தின் வரலாற்றில் மிக மோசமான சுருக்கமாகும். இது கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் காரணமாக நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கத்தால் ஏற்பட்டது. இருப்பினும், நாடு படிப்படியாக பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேறியது. அரசாங்கம் படிப்படியாக பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ், பொருளாதாரம் மீளும் வேகத்தில் எதிர்பார்த்ததை விட வலுவான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது, ஆனால் தேவையின் நிலைத்தன்மை குறித்து எச்சரிக்கிறது என்று வியாழக்கிமை கூறினார். சுவாரஸ்யமாக, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீத சுருக்கத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இருப்பினும், 2020-21 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பொருளாதாரம் கடந்த 6 மாதங்களின் சுருக்கத்திலிருந்து வெளியேறி சாதகமான வளர்ச்சிக்கு திரும்பும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அரசு தரவுகளின்படி, செப்டம்பர் காலாண்டில் 7.0 சதவீதமாக சுருங்கியதில் இருந்து நிலையான விலைகளில் (2011-12) அடிப்படை விலைகள் மொத்த மதிப்பு (ஜி.பி.ஏ) சேர்க்கப்பட்டது. தற்போதைய விலையான அடிப்படை விலையில் ஜி.வி.ஏ 2020-21 காலாண்டில் 4.2 சதவீதம் சரிந்தது.

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக தரவுகளின்படி, உற்பத்தித் துறை செப்டம்பர் காலாண்டில் 0.6 சதவீதம் உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் 39.3 சதவிகிதம் சரிந்தது. அதேபோல், மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகள் பிரிவு 2வது காலாண்டில் 4.4 சதவீதம் அதிகரித்து, முந்தைய காலாண்டில் 7 சதவீத வீழ்ச்சியிலிருந்து சரிந்தது. வேளாண்மை, காடு வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் முந்தைய காலாண்டில் இருந்து மாறாமல், 2வது காலாண்டில் 3.4 சதவீத நிலையான வேகத்தில் வளர்ந்தது.

மற்ற தொழில்களான வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகளில் சுருக்கம் 2வது காலாண்டில் 15.6 சதவீதமாக இருந்தது. இது முதல் காலாண்டில் 47.0 சதவீத சுருக்கத்திலிருந்து மிகவும் நன்றாக உள்ளது. கட்டுமானத் துறையும் 8.6 சதவீத சுருக்கத்தைக் காட்டியது. இது முதல் காலாண்டில் 50.3 சதவீத சுருக்கத்திலிருந்து இப்போது நன்றாக உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கருத்து

2வது காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு வெளியானதைத் தொடர்ந்து, தற்போதைய பொருளாதார நிலை கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே வி சுப்பிரமணியன் தெரிவித்தார். மூன்றாம் காலாண்டில் உணவு பணவீக்கம் மென்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். மேலும், இது உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று அவர் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டில் நேர்மறையான இடத்தை அடையா முடியுமா என்று கணிப்பது கடினம்” என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கூறியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

வெள்ளி, 27 நவம்பர், 2020

கடலூர், புதுச்சேரிக்கு அதிக மழை: நிவர் உருவாக்கிய பாதிப்புகள்

 Nivar Cyclone: அதி தீவிர புயலான ‘நிவர்’ நவம்பர் 25 இரவு 11.30 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 2.30 மணி வரை 120-130 கிமீ வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் வட கடலோர மற்றும் உள் தமிழகம் முழுவதும் கடுமையான காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்த நிவர் புயல், வடமேற்கு நோக்கி நகர்ந்து மூன்று மணி நேரத்திற்குள் வலுவிழக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் கரையைக் கடந்த நேரத்தில் கடலூர், காரைக்கல், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் சென்னையின் சில பகுதிகளில் மிகவும் கனமான மழையும், சில நேரங்களில் அதி தீவிர மழையும் பெய்தது.

மரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு

பல மாவட்டங்களின் சாலைகளை துண்டிக்கும் வகையில் பல மரங்கள் விழுந்தன. கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் அடித்துச் செல்லப்பட்டன. 2015 சென்னை பெருவெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட முடிச்சூர், நிவர் புயலால் இடுப்பு அளவிற்கு தண்ணீரில் மீண்டும் மூழ்கியது.

நிவர் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதும், அதிகாலை 2.30 மணியளவில் பலவீனமடைந்து வடக்கு-வடமேற்கு நோக்கி சென்றது. புயல் கடந்து வந்த பகுதிகளில் தொடர்ந்து காற்று வீசுவதோடு, மேகமூட்டமான வானிலையும் காணப்படுகின்றன. நவம்பர் 25 காலை 8.30 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 2.30 மணி வரை நிவர் புயலால், நாகப்பட்டினத்தில் 63 மி.மீ, காரைக்காலில் 86 மி.மீ, கடலூரில் 246 மி.மீ, புதுச்சேரியில் 237 மி.மீ, சென்னையில் 89 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது.

திருவண்ணாமலையில் மையம் கொண்டிருக்கும் நிவர்

கரையைக் கடந்த நிவர் புயல் தற்போது திருவண்ணாமலையில் மையம் கொண்டிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். அடுத்த 6 மணி நேரம் மிக தீவிரமாக காற்று வீச வாய்ப்புள்ளது. முக்கியமாக புயல் கடந்து சென்ற பாதையில் இருக்கும் பகுதிகள் அதிகம் பாதிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை பெய்தது. மரக்காணம், ஆரணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், சென்னையிலும் பல இடங்களில் கனமழை பெய்தது. அதோடு கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை நிலவரம்

நிவர் புயலால் சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவாக காட்சியளித்தன. இதனால் மக்கள் வீட்டின் மேல்பகுதியில் அடைக்கலம் புகுந்தனர். பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் டேங்க், நிவர் புயலின்போது பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை, எம்ஜிஆர் நகர், வேளச்சேரி, புரசைவாக்கம், பெரம்பூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த சூறாவளி காற்றால் சென்னை மாநகரம் முழுவதும் 500 மரங்கள் விழுந்தன.

நிவர் புயல் இன்னும் 2 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், இதன் எதிரொலியாக சென்னையில் இன்றும் மழை தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

மாநிலங்களின் அமைச்சரவைகளில் முஸ்லீம்களின் நிலை என்ன?

மாநிலங்களின் அமைச்சரவைகளில் முஸ்லீம்களின் நிலை என்ன?

 கடந்த வாரம், பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட  மாநில அமைச்சரவை பொறுப்பேற்றது. பல தசாப்தங்களுக்குப் பிறகு பீகார் அமைச்சரவையில் ஒரு இஸ்லாம் அமைச்சர் இல்லாதது இதுவே முதல் முறையாகும்.

பீகார் மாநிலத்தைப் போன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் மாநிலங்கள் ஒருபுறம் இருக்க,  பொதுவாகவே இந்திய அரசியலில் இஸ்லாமிய வகுப்பினர் போதிய அளவு பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

மக்கள் தொகையில் இஸ்லாம் மக்களின் விகிதத்தை ஒப்பிடும் போது பெரும்பாலான மாநில அமைச்சரவைகளில், இஸ்லாம் மக்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக உள்ளது. இஸ்லாமியர்களின் வாய்ப்புகளை பாஜகவின் அரசியல் மூடியது என்றால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் போதியளவு பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை.

 

நாட்டில், 80 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழும் முதல் 10 மாநிலங்களில், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 281 ஆக உள்ளது. இதில், இஸ்லாமிய அமைச்சர்களின் எண்ணிக்கை வெறும் 16 ஆக உள்ளது.  அதவாது, இந்த 10 மாநில அமைச்சரவைகளில் இஸ்லாமியர்களின் பங்கு 5.7 சதவீதம். இந்த விகிதம், 10 மாநிலங்களின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது.

இதில், அசாம், கர்நாடகா, குஜராத், பீகார் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில்  அமைச்சரவையில் ஒரு இஸ்லாமிய மக்கள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சரவையில் இஸ்லாமியரைக் கொண்ட ஒரே ஒரு மாநிலம் உத்திர பிரதேசம். அங்கு, மொஹ்சின் ராசா சிறுபான்மையினர் நலத் துறை  இணை அமைச்சராக உள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, இந்த 10 மாநிலங்களில், குஜராத் மட்டுமே இஸ்லாமியர்கள் இல்லாத அமைச்சரவைக் கொண்டிருந்தது. அப்போது,  இந்த 10 மாநிலங்களில் இஸ்லாம் அமைச்சர்களின் எண்ணிக்கையும் 34 ஆக இருந்தது. (கிட்டத்தட்ட இரு மடங்கு)

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 14.2 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். ஆனால், இதில் 3.9  சதவீதம் பேர் மட்டுமே அமைச்சர்களாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 10 மாநிலங்களில், காங்கிரஸ் ஆட்சி புரியும்  ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்கண்ட்   ஆகிய மாநிலங்களில் உள்ள 38 அமைச்சரவை உறுப்பினர்களில்  3 பேர் மட்டுமே இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும், இஸ்லாம் மக்கள் தொகை குறைவாக உள்ள  பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இஸ்லாமிய அமைச்சரை காங்கிரஸ் கொண்டுள்ளது.

பாஜக ஆட்சி அமைக்காத அனைத்து பெரிய மாநிலங்களிலும், குறைந்தது ஒரு இஸ்லாமியர் அமைச்சர் பதவியில் இருக்கிறார். அதிகபட்சமாக  மேற்கு வங்கத்தில் 7 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அடுத்தப்அப்டியாக மகாராஷ்டிராவில் 4 பேரும்,  கேரளாவில் 2 பேரும் உள்ளனர்.

“எந்தவொரு உறவிலும் திருப்தி நிலைத்திருப்பதற்கு பரஸ்பரமான ஒத்துழைப்பு தேவை. நீங்கள், ஒரு கட்சியை வேண்டாம் என தூக்கி எறிந்த பின்பு, அது உங்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த பிரச்சினையில், பாஜகவை விட,  இஸ்லாமிய சமூகம் தான் அதிக சுய பரிசோதனை செய்ய வேண்டும். ”என்று பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசியத் தலைவர் ஜமால் சித்திகி கூறினார்.

இந்தியா முழுவதும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் பாஜகவில் உள்ளார்.

அசாம் மாநிலத்தின் சோனய் தொகுதியில் இருந்து   தேர்ந்தெடுக்கப்பட்ட அமீனுல் ஹக் லாஸ்கர், அம்மாநில  சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகவும் .  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தரபிரதேச சிறுபான்மைத் துறை அமைச்சர்  மொஹ்சின் ராசா உத்திர பிரேதேச சட்டமேலவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவையிலும் மத்திய அரசிற்கு ஒரு முஸ்லிம் எம்.பியும் இல்லை.

Source: IEtamil