ஞாயிறு, 31 அக்டோபர், 2021

பெரியாறு அணையில் தண்ணீர் திறந்த கேரள அமைச்சர்கள்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

 30 10 2021  தமிழக அரசின் பராமரிப்பில், கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பல ஆண்டுகளாக இரு மாநிலத்திற்கும் இடையேயான பிரச்சனை மையமாக இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 142 அடி ஆக இருக்க வேண்டும் என 2006 மற்றும் 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்குள், கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு மாவட்டங்கள் கனமழையை சந்தித்து வருகின்றன. இதில் இரு மாநிலங்களில் உள்ள அணைகளும் கணிசமான நீர் வரத்தை பெற்று வருகின்றன. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், அணை உடைந்து விடும் என்ற தொடர் அச்சம் கேரள மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்குள் நேற்று காலை 7:29 மணிக்கு அணை திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 138.70 அடியாக உயர்ந்து இருந்தது. நீர் திறப்பின் போது கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜன், இடுக்கி ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் இருந்தனர்.

தமிழக அரசு சார்பில், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் உடன் இருந்தனர். நீர் திறப்பிற்குப் பின் அமைச்சர்கள், தண்ணீர் வெளியேறும் வல்லக்கடவு, மஞ்சுமலை, வண்டிப்பெரியாறு ஆற்றின் கரையோர பகுதிகளை பார்வையிட்டனர்.

பெரியாறு அணை அருகே உள்ள மூன்று மற்றும் நான்காவது மதகுகளில் வினாடிக்கு தலா 257 கன அடி வீதம், 514 கன அடி நீர், கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு செல்லும். அணை திறப்பிற்கு பிறகு பேசிய கேரள அமைச்சர் ரோஷி அகஸ்டின், ”பெரியாறு அணையில் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு 514 கன அடி நீர் வெளியேறுவதால் கேரள மக்கள் கவலைப்படத் தேவையில்லை.”அணை நிலவரம் குறித்து, அடிக்கடி தெரிவிக்கும் வகையில் இரு மாநில அதிகாரிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் உத்தரவின்றி, முல்லைப் பெரியாறு அணையில் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு எடுத்து அணையை திறந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால், தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், கேரள அரசின் இந்த செயலுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முன்னிலையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இது எழுப்பப்பட்டது. அப்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பேசிய ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ”தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், வெள்ள எச்சரிக்கையை முன்கூட்டியே விடுத்தது கண்டனத்துக்குரியது. கேரள அரசின் விதிமீறலை கட்டுப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.

பின்னர் சங்க நிர்வாகிகளுடன் வெளிநடப்பு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பெரியாறு அணையில் நவம்பர் 11 வரை, 139.50 அடி நீர் தேக்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், முன்கூட்டியே அணையில் இருந்து கேரளாவுக்கு 514 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்னும் அணை நீர் கிடைக்காத நிலையில், இதை ஏற்க முடியாது.

கேரளாவில் ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை. சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு, கேரள அரசை கலைக்க வேண்டும். தமிழகத்துக்கு 999 ஆண்டு ஒப்பந்தம் இருந்தாலும் 90 சதவீத அணை உரிமை, கேரளாவிடம் பறிபோயுள்ளது. இன்றைய நாள், ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு கறுப்பு நாள். கேரள அரசை கண்டித்து, இன்று முதல் போராட்டம் நடத்த உள்ளோம்.” என்று விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-dam-tamil-news-kerala-ministers-releases-water-from-mullaperiyar-dam-farmers-in-tn-object-362243/

நீட் பீதியில் மேலும் ஒரு மாணவர் மரணம்; ஸ்டாலின் இதைச் செய்து ஆகணும்: அன்புமணி

 30 10 2021 நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ், கனிமொழி, மற்றும் சௌந்தர்யா ஆகிய மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன். நன்றாக படிக்க கூடிய இந்த மாணவர் கடந்த 2 வருடங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்த தேர்விலும் கலந்து கொண்டு தேர்வு எழுதி இருக்கிறார்.

தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த கீர்த்திவாசனுக்கு தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற மனஉளைச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் கீர்த்திவாசன் பள்ளியில் 2வது ரேங்க் வாங்குவார் என்றும், நீட் தேர்வு இந்த முறை நடக்காது என்றிருந்த நிலையில் திடீரென்று மத்திய அரசு தேர்வை அறிவித்ததால் சரியாக தயாராகாமல் இருந்தார், இதனால் மன உளைச்சலடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு, கடந்த 3 வருடங்களாக வேறு எந்த கல்லூரிக்கும் செல்லாமல், நீட் தேர்வுக்கு மட்டுமே அவர் தயாராகி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது மாணவர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் மாணவரின் மரணத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும் தங்கள் கருத்துகளை கூறியும் வருகின்றனர்.

இந்நிலையில், பாமகவின் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக ஒரு முக்கிய கோரிக்கையை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு விடுத்துள்ளார். அதில் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் எனவும், இதற்காக தனிக்குழு அமைத்து ஆளுநர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து 4 ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டுகள் பின்வருமாறு:-

  1. பொள்ளாச்சியை அடுத்த முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்!
  2. மாணவர் கீர்த்தி வாசன் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இம்முறையும் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிபோய் விடுமோ? என்ற அச்சம் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது. மாணவர்களைக் காக்க நீட் ரத்து செய்யப்பட வேண்டும்!
  3. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இன்னும் ஆளுனரின் ஒப்புதலைக் கூட பெறவில்லை. ஆளுனர் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்!
  4. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். இதற்காக தனிக் குழு அமைத்து ஆளுனர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உங்கள் ஊருக்கான சார் பதிவாளர் அலுவலகம் மாறும் வாய்ப்பு: தமிழக அரசு புதிய அரசாணை

 30 10 2021 தமிழகத்தில் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்களை ஒரே எல்லைக்குள் கொண்டு வரும் வகையில், சார்பதிவாளர் அலுவலக எல்லைகளை மறுவரையறை செய்ய தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக. பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில்,

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பதிவுத்துறை மானியக்கோரிக்கையின் போது, பதிவுத்துறையில் சில சார்பதிவக எல்லைகளில் ஒரு முக்கிய வருவாய் கிராமமானது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அதே வருவாய் கிராமத்திற்குட்பட்ட குக்கிராமம் வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அமைந்துள்ள நிலை உள்ளது. பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை-வருவாய்த்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது.

எனவே, ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முக்கிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட குக்கிராமங்கள் அனைத்தும் ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் பதிவு எல்லைகளை சீரமைத்து நிர்வாக அனுமதி வழங்க ஏதுவாக பதிவுத்துறை தலைவருக்கு ஆணையிடுகிறது.

பதிவுத்துறையில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் அமைந்துள்ள முக்கிய வருவாய் கிராமங்கள் மற்றும் அவற்றில் அமைந்துள்ள குக்கிராமங்களின் விவரங்கள் அந்தந்த பதிவு மாவட்டத்தில் உள்ள நிர்வாக மாவட்ட பதிவாளரால் தொகுக்கப்பட வேண்டும். இந்த விவரங்கள் வருவாய்த்துறையில் உள்ள கிராமங்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.

இந்த கிராமங்களில் வேறு, வேறு சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் முக்கிய வருவாய் கிராமங்கள் மற்றும் அவற்றின் குக்கிராமங்கள் கண்டறியப்பட வேண்டும் பிரதான வருவாய் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களை ஒன்றிணைத்து அவற்றை முக்கிய வருவாய் கிராமம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கலாம் அல்லது அந்த குக்கிராமங்கள் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்படலாம். அவ்வாறு இணைக்கும் போது பதிவு கிராம எல்லைகள் வருவாய்த்துறையின் வருவாய் கிராமம், வருவாய் வட்டம் மற்றும் வருவாய் மாவட்டம் ஆகியவற்றுடன் பொருத்தும் வகையில் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் சீரமைக்கப்படும் போது ஒரு வருவாய் கிராமம் முழுவதையும், ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவாளர் எல்லைகள் சீரமைக்கப்பட வேண்டும்.

வருவாய் மாவட்டங்களுடன் பொருந்தும் வகையில் ஒரே குக்கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களும் ஒரே சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இணையவழி தானியங்கி பட்டாமாறுதல் பணியை இலகுவான வகையில் மேற்கொள்ள ஏதுவாக பதிவு கிராமங்கள் அனைத்தும் வருவாய் கிராமங்களுடன் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.பின்னர் இவ்விவரங்கள் தொடர்புடைய மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும்.

குக்கிராமங்கள் இணைக்கப்படவுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட டிஐஜி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் கண்காணிப்பின் கீழ் இதுகுறித்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

பின்னர் குக்கிராமங்கள் உரிய சார்பதிவகத்துடன் இணைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, இதுகுறித்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் டிஐஜி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு்ளளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-permission-to-village-register-office-redefine-362451/

தமிழ்நாடு நாள் தேதி நவ. 1-ல் இருந்து ஜூலை 18-க்கு மாற்றம்: காரணத்தை விளக்கி அரசு அறிக்கை

 30 10 2021 

நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இனி ஜூலை 18 ஆம் நாளே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், எல்லைப் போராட்ட வீரர்களுக்கு தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள், இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1 ஆம் நாளை எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி, பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து, தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப்போராட்டத் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைச்சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது. தற்போது எல்லைக்காவலர்கள் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.5500ம், மருத்துவப்படியாக ரூ.500ம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எல்லைக்காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3000ம், மருத்துவப்படியாக ரூ.500ம் வழங்கப்பட்டு வருகிறது. எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து, தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1 ஆம் நாள் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-announces-tamilnadu-day-on-july-18-62499/

திமுக- பாமக திடீர் கூட்டணி: நெமிலியில் அதிமுக ஷாக்

 30 10 2021 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஒன்றியத் தலைவர் பதவியை, பாமகவுடன் கூட்டணி அமைத்து, திமுக முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது. இதில் பாமக துணைத் தலைவர் பதவியைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த, மறைமுகத் தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 19 வார்டுகளில் திமுக 8, பாமக 5, அதிமுக 4, சுயேச்சைகள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பாண்மைக்கான உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன. இதில், பாமகவுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக இடையில் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


இதற்கிடையில், கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் ‘தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் பொதுப்பிரிவு பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே நெமிலி ஒன்றியத் தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

புதிய அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் என்ற கவுன்சிலர் வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையில், ‘நெமிலி ஒன்றியத் தலைவர் பதவியைப் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கி புதிய அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், ‘நெமிலி ஒன்றிய மறைமுகத் தேர்தலை நிறுத்தி வைக்கவும் ஒரு வாரத்துக்கு முன்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்தலாம்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். அதன்படி, கடந்த 22ஆம் தேதி நடைபெற இருந்த மறைமுகத் தேர்தல் நிறுத்தப்பட்டதுடன் தலைவர் பதவியைப் பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்து அக்டோபர் 30ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நெமிலி ஒன்றியத்துக்கான மறைமுகத் தேர்தல், காவல் துறையினர் பாதுகாப்புடன் இன்று (அக்டோபர்30) நடைபெற்றது. இன்று காலை தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக கவுன்சிலர்களைத் தவிர்த்து மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 15 பேரும் கலந்துக் கொண்டனர். தலைவர் பதவிக்குத் திமுக சார்பில் வடிவேல் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல், பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாமகவைச் சேர்ந்த கவுன்சிலர் தீனதயாளன் மனுத்தாக்கல் செய்தார். எதிர்த்துப் போட்டியிட யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கூட்டத்திலும் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

நெமிலி ஒன்றியத்தில் பாமகவுக்குத் தலைவர் பதவியை அளித்து அதிமுகவுக்குத் துணைத் தலைவர் பதவியைப் பெறலாம் என்ற அதிமுகவின் முயற்சி கடைசிவரை வெற்றி பெறவில்லை. அதேநேரம், துணைத் தலைவர் பதவியைக் கொடுத்து பாமகவுடன் கூட்டணி அமைத்த திமுக, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தை முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது. இதுவரை நெமிலி ஒன்றியத்தை அதிமுக, பாமக மட்டுமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-wins-ranipet-nemili-panchayat-union-chairman-elections-362518/

துணைவேந்தர்கள்- துறை செயலாளர்களுடன் ஆளுநர் முதல்முறையாக ஆலோசனை: பேசியது என்ன?

 

31 10 2021 சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி இதழ்களில் தரமான ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளின் அவசியத்தை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

தமிழக பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் தொடர்பாக, பல்கலைக்கழகங்களின் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி, நேற்று (அக்டோபர் 30) துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் 20 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் பேராசிரியர் காலிப்பணியிடங்கள், பல்கலைக்கழக செயல்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களை ஆளுநர் கேட்டறிந்தார்.

ராஜ்பவனில் துணைவேந்தர்களுடன் தனது முதல் சந்திப்பின் போது உரையாற்றிய ரவி, தமிழ்நாடு 20 மாநிலப் பல்கலைக்கழகங்களைக் கொண்டிருப்பதற்கும், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தையும் பாராட்டினார்.

மாநிலத்தின் உயர்கல்வி கணிசமாக விரிவடைந்துள்ள நிலையில், கல்வித் திறன் மற்றும் தரமான ஆராய்ச்சியில் கவனம் செலுத்துமாறு துணைவேந்தர்களை ஆளுநர் வலியுறுத்தினார் என்று ராஜ் பவனில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து நேர்மையான மதிப்பீட்டை துணைவேந்தர்கள் வைத்திருக்க வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்தார், இதனால் பலத்தைப் பயன்படுத்தவும், பலவீனங்களைக் கையாளவும் முடியும் என்றும் அவர் கூறினார். கற்பித்தல் மூலம் அறிவைப் பரப்புவதிலும், ஆராய்ச்சி மூலம் அறிவை உருவாக்குவதிலும் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும் என்றார். உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்ய அறிவு உருவாக்கத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் ஆசிரியர் ஆசிரிய பணியிடங்களை நிரப்புவதில் தரத்தை உறுதி செய்யுமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தினார்.

பல்கலைக்கழகங்களுக்கு உதவியதற்காக, குறிப்பாக அவர்களின் நிதி நெருக்கடியைத் தணிப்பதற்காக மாநில அரசாங்கத்தைப் பாராட்டிய ஆளுநர், ”கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்துவதற்கு பல்கலைக்கழகங்களை ஊக்கப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். அப்போது, துணைவேந்தர்கள் தங்கள் பல்கலைக் கழகங்களைப் பற்றி பவர் பாயின்ட் விளக்கக்காட்சியை ஆளுநருக்கு காண்பித்தனர். மாநில அரசின் மூத்த செயலாளர்கள், மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிலை குறித்தும், நிதி உதவி உள்ளிட்ட ஆதாரங்களில் அரசு அவர்களுக்கு எப்படி உதவி செய்து வருகிறது என்பது குறித்தும் விளக்கினர்.

துணைவேந்தர்கள், பதிவாளர்கள், மூத்த செயலாளர்கள் தவிர, ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் வி பாட்டீல், ஆளுநரின் (பல்கலைக்கழகங்கள்) துணைச் செயலாளர் சி.முத்துக்குமரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-governor-meeting-with-vice-chancellors-362562/

போலீஸ் வாகனத்தின் மீது இளைஞர்கள் குத்தாட்டம்… தேவர் விழாவில் விதிமீறல்

 

30 10 2021 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது

இந்நிலையில் நேற்று, பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதே போல, பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்ததால் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில், கமுதியில் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்டனர். இதன் காரணமாக, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளும், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவிட்-19 நெறிமுறைகள் காரணமாக தலைவருக்கு அஞ்சலி செலுத்த பொது மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்திருந்தது. ஆனால், உத்தரவை மீறி திரண்ட இளைஞர்கள், போலீஸ் வாகனத்திலே ஏறி நடனமாடியுள்ளனர். அந்த காணொலியில், காவல் துறையினர் அவர்களை தடுக்காமல் அமைதிகாத்தது தெளிவாக தெரிந்தது.

இதுகுறித்து நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பேசிய ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக், சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. காவல் துறை வாகனத்தின் மீது நடனமாடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.

அதே போல், மதுரையில் கோரிபாளையத்தில் அரசு பேருந்து ஒன்றின் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள், இறுதியாக பேருந்தின் மீது கல் ஏறிந்தி கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/youths-caught-on-camera-dancing-on-police-van-362554/

பார்களுக்கு வருவோரின் விவரம் சேகரிப்பு… வழிகாட்டு நெறிமுறையில் என்னென்ன கட்டுப்பாடுகள்?

 31 10 2021 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பார்களில் அமர்ந்து மது அருந்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்களை நாளை (நவம்பர் 1) முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

மாநிலம் முழுவதும் செயல்படும் 5425 மதுபானக்கடைகள், அங்கு இயங்கிவரும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்களும் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா கட்டுக்குள் இருந்தாலும், தினசரி பாதிப்பு பதிவாகி வருவதால் பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதில், மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமர ஏற்பாடு செய்ய வேண்டும். இடையே 6 அடி இடைவெளி விட வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும். பாரில் எச்சில் துப்பக்கூடாது. நுழைவுவாசலில் சானிடைசரும், காய்ச்சல் இருக்கிறதா என தெரிந்துகொள்ளும் தெர்மல் ஸ்கிரீனிங் கருவியும் வைத்திருக்கவேண்டும். அவ்வப்போது பார் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பார்களுக்கு வருகை தரும் நபர்களின் தொலைபேசி எண், பெயர், முகவரி போன்ற விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். இந்த பதிவேடை அனைத்து பார்களிலும் முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tasmac-released-sop-for-bar-attached-to-tasmac-outlets-362606/

சனி, 30 அக்டோபர், 2021

வீட்டுக் கடனுக்கு மத்திய அரசு மானியம் இவ்ளோ பெரிய தொகை… இதை ஏன் மிஸ் பண்றீங்க?

 How to get a home loan subsidy under the Pradhan Mantri Awas Yojana Scheme Tamil News : எந்தவொரு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் பட்டியலைச் சரிபார்க்கும் முன்பும், அந்தத் திட்டத்தின் முக்கிய கொள்கைகளை நன்கு புரிந்துகொள்வது அவசியம். PMAY (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா)-ஜி (கிராமின்), அனைவருக்கும் வீடு என்ற அரசாங்கத்தின் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது. 2022-ம் ஆண்டிற்குள் இந்தத் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. PMAY-G ஆனது, சொந்த வீடு இல்லாத தகுதியுடையவர்களுக்கும், கடுமையாக சேதமடைந்த வீடுகள் அல்லது வீடுகளில் வசிப்பவர்களுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய நல்ல வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. PMAY-G-ன் கீழ் கட்டப்படும் வீடுகளின் குறைந்தபட்ச அளவு, 25 சதுர மீட்டர் (முன்பு 20 சதுர மீட்டர்) இருக்க வேண்டும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் பட்டியல் மற்றும் கடன் வரம்பு

PMAY பட்டியலில் உள்ள தகுதியான பயனாளிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து 3% வட்டியில் மானியத்துடன் ரூ.70,000 வரை கடன் பெறலாம். அதற்கான அதிகபட்ச அசல் தொகை ரூ.2,00,000 மற்றும் அதிகபட்ச மானியமாக செலுத்த வேண்டிய EMI ரூ.38,359. சமவெளிப் பகுதிகளில் உள்ள பகுதிகளுக்கு, யூனிட்டின் விலை 60:40 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ.1.20 லட்சம் ஆதரவு கிடைக்கும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடன் இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், இந்த விகிதம் 90:10-ஆக உயர்ந்து ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.1.30 லட்சம் ஆதரவளிக்கிறது.

லடாக் உட்பட யூனியன் பிரதேசங்களில் (யூனியன் பிரதேசங்கள்) 100% நிதியுதவியை மையம் வழங்குகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் பட்டியல் பயனாளிகளுக்கு, MGNREGS-ன் unskilled தொழிலாளர் உதவியின் பகுதியாக ஒவ்வொரு நாளும் ரூ.90.95 பெறுகின்றனர். மேலும் பயனாளிகள், SECC (சமூக-பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு) மூலம் அளவுருக்கள் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள் மற்றும் கிராம சபைகளால் சரிபார்ப்பு செய்யப்படுகிறது. MGNREGS உள்ளிட்ட பிற திட்டங்களுடன் இணைந்து ஸ்வச் பாரத் மிஷன்-கிராமின் (SBM-G) திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்ட உதவித்தொகையாக ரூ.12,000 கொடுக்கப்பட்டது. ஆதாருடன் இணைக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகவும் மின்னணு முறையிலும் பணம் செலுத்தப்படுகிறது.

PMAY-ன் கீழ் கடன் பெறுவதற்கான தகுதி

● வீடற்ற குடும்பங்கள்

● கட்சா கூரை மற்றும் சுவருடன் கூடிய 0/1/2 அறைகளைக் கொண்ட வீடுகளைக் கொண்டவர்கள்

● 16-59 வயதுடைய ஆண் உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள்

● 25 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாத குடும்பங்கள்

● 16-59 வயதுக்கு இடைப்பட்ட வயதுவந்த உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள்

● மாற்றுத்திறனாளிகள் உள்ள வீடுகள்

● பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர்

● சாதாரண தொழிலாளர் வேலை மூலம் வருமானம் ஈட்டும் நிலமற்ற குடும்பங்கள்

மோட்டார் பொருத்தப்பட்ட 2/3/4 சக்கர வாகனங்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய உபகரணங்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், KCC (கிசான் கிரெடிட் கார்டு) வைத்திருப்பவர்களுடன் சேர்த்து ரூ. 50,000. குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது அரசாங்கத்தில் பணிபுரிந்திருந்தால் அல்லது ரூ.10,000-க்கு மேல் சம்பாதிப்பவராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் அல்லது தனிநபர் வருமான வரி/தொழில்முறை வரி செலுத்துகிறார் அல்லது குளிர்சாதனப் பெட்டி/லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பு வைத்திருந்தால், தகுதி இருக்காது.

தேவையான ஆவணங்கள்

● பயனாளியின் சார்பாக ஆதாரைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் ஆவணம்

● ஆதார் எண்

● MGNREGA-பதிவு செய்யப்பட்ட வேலை அட்டை எண்

● வங்கிக் கணக்கு தகவல்

● SBM (ஸ்வச் பாரத் மிஷன்) எண்

பயனாளியின் பதிவு/சேர்ப்பு

● அதிகாரப்பூர்வ PMAY-G இணையதளத்தைப் பார்வையிடவும்.

● மொபைல் எண், பாலினம் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை நிரப்பவும்.

● ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் படிவத்தைப் பதிவேற்றவும்.

● PMAY ஐடி, பயனாளியின் பெயர் மற்றும் முன்னுரிமை ஆகியவற்றைக் கண்டறிவதற்கான தேடலைக் கிளிக் செய்யவும்.

● பதிவு செய்யத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

● பயனாளியின் விவரங்கள் உருவாக்கப்பட்டுத் தானாகவே காண்பிக்கப்படும்.

● மீதமுள்ளவை உரிமையின் வகை, ஆதார் எண், தொடர்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கியதை நிரப்பவேண்டும்.

● பயனாளியின் சார்பாக ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்குத் தேவையான ஒப்புதல் படிவத்தை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.

● வங்கிக் கணக்கு எண் மற்றும் பெயர் உட்படத் தேவையானவற்றைப் பயனாளியின் கணக்கு விவரங்களைச் சேர்க்கவும்.

● பயனாளி கடன் வாங்க விரும்பினால், ஆம் என்பதைத் தேர்ந்தெடுத்து தேவையான தொகையை உள்ளிடவும்.

● SBM (Swachh Bharat Mission) எண்ணுடன் MGNREGA வேலை அட்டை எண்ணையும் உள்ளிடவும்.

● அடுத்த பகுதியை சம்பந்தப்பட்ட அதிகாரி நிரப்ப வேண்டும்.

SECC என்பது பயனாளிகளின் பட்டியலை உருவாக்க உதவும், அதே நேரத்தில் இந்த பயனாளிகள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் பட்டியலில் இடம் பெற்றவுடன் முன்னுரிமை பெறுவார்கள். பட்டியல் பின்னர் சரிபார்ப்பிற்காக கிராம சபைகளுக்கு அனுப்பப்பட்டு, இறுதிப் பட்டியல் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். அதன் பிறகு வருடாந்திர பட்டியல்கள் உருவாக்கப்படும். PMAY-G-ன் கீழ் ஒரு வீட்டைப் பெறுவதற்கான முழு நடைமுறையும் இதுதான்.

source https://tamil.indianexpress.com/business/how-to-get-a-home-loan-subsidy-under-the-pradhan-mantri-awas-yojana-scheme-tamil-news-361975/