புதன், 31 மே, 2023

அமல்களை அதிகப்படுத்துவோம்

அமல்களை அதிகப்படுத்துவோம் K.M.அப்துந் நாஸிர் M.I.Sc (மேலாண்மை குழு உறுப்பினர்,TNTJ) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 23 வது மாநிலப் பொதுக்குழு திருப்பூர் - 28.05.2023

பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம்

பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் அதிராம்பட்டினம் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-05-2023 உரை : எம்.ஏ. அப்துர்ரஹ்மான் எம்.ஐ.எஸ்.ஸி (பேச்சாளர், TNTJ)

பஜனை மடமாகிப்போன புதிய நாடாளுமன்றம்

பஜனை மடமாகிப்போன புதிய நாடாளுமன்றம் உரை : கே.ஏ. சையத் அலி (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 30.05.2023

முஸ்லிம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

 முஸ்லிம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரிக்கை பாஜக அத்துமீறலை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். புதிய நாடாளுமன்றம் செங்கோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 23 வது மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள். A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைப் பொதுசெயலாளர்,TNTJ) பத்திரிகையாளர் சந்திப்பு - 30.05.2023 ஹிஜாப் | கர்நாடகா முஸ்லீம் இடஒதுக்கீடு திருபூண்டி ஹிஜாப்

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் இதுவரை வாய் திறக்காதது ஏன்..? – ப.சிதம்பரம் கேள்வி

 

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில்
ஆரம்ப சுகாதார நிலையப் பணிகளுக்கும் திருமயத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
நூலகம் அமைப்பதற்கும் மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் ஒதுக்கியுள்ளார். இந்தப் பணிகளை இறுதி செய்வதற்காக பொதுப்பணித்துறை சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளோடு முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய ப. சிதம்பரம் தெரிவித்ததாவது..

 பாராளுமன்ற உறுப்பினர் நிதியை அதிகரிக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு நிதியை குறைக்காமல் இருந்தால் போதும். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை என்னிடம் நிதியை குறைக்காமல் வழங்க மோடியிடம் பரிந்துரைக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் இரண்டு வருட காலம் பாராளுமன்ற நிதியை நிறுத்தியதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களுக்கு நலத் திட்டங்களை செய்ய முடியாமல் தவித்தனர்.  கொரோனா காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை நிறுத்தினால் கொரோனா கட்டுக்குள் வந்துவிடுமா என்று நாங்கள் கேட்டோம் ஆனால் அதற்கு பதில் இல்லை கொரோனாவிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்தனர்.

நேருவுக்கு கொடுத்த செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் மிகவும்
பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளது வாக்கிங் ஸ்டிக்காக இல்லை. நேருவிற்கு செங்கோல் வழங்கும்போது நிகழ்ச்சி என்பது மவுன் பேட்டன் பிரபு இந்தியாவிலேயே இல்லை பாகிஸ்தானில் இருந்தார். வரலாற்றை ஆளுநரும் பாஜகவினரும் திரித்துக் கூறுகின்றனர் நடக்காததை நடந்தது போல் கூறுகின்றனர்.

1947 ஆம் ஆண்டு நடந்த வரலாறு பழைய வரலாறு. மோடி அரசை பொறுத்தவரை சுதந்திரம் கிடைத்தது மோடியால்தான் என்று கூறுவார்கள். அதற்கு முன்பு சுதந்திரமே இல்லை என்று கூறுவார்கள். நேருவிற்கு நினைவு பரிசாக தரப்பட்ட செங்கோல் தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கோல் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளது மகிழ்ச்சி தான்.

மணிப்பூர் மாநிலத்திற்கு உள்துறை அமைச்சர் தாமதமாக தற்போது சென்றுள்ளார் இது
மகிழ்ச்சி. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் மாநில பிரச்சனை குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்.? பிரதமர் அந்த பகுதி மக்களிடம் வன்முறையில் ஈடுபட வேண்டாம் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறி இருக்க வேண்டும்.

மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விளையாட்டு துறை அமைச்சரோ
அல்லது முக்கிய அமைச்சர்களோ சென்று அவர்களை சந்தித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி இருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்வது கண்டனத்துக்குரியது. போராட்டம் நடத்துவதற்கும் தர்ணா செய்வதற்கும் உரிமை உள்ளது. தர்ணாவை முடித்து வைப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

அனைத்து பாராளுமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு புதிய பாராளுமன்றம்
திறப்பதற்கான அழைப்புகள் அனுப்பும்போது குடியரசுத் தலைவருக்கு ஏன் அழைப்புகள் அனுப்பவில்லை. அதனால்தான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விழாவை புறக்கணித்தது.

தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்றது முதலீடுகளை ஈர்த்து
வருவதற்காகத்தான். சர்ச்சைகளை பொருட்படுத்த வேண்டாம். அதிமுக ஆட்சியில் நடத்திய தொழில் முனைவோர் மாநாட்டில் எவ்வளவு முதலீடுகள் வந்தது என்பது குறித்து தெளிவுபடுத்துவதை விட்டு தற்போது முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ள வெளிநாட்டு பயணம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

ஏற்கனவே தமிழ்நாடு  முதல்வர் கடந்த சில நாட்களில் வெளிநாடு பயணம் செய்து எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளார். விமர்சனங்களை பொருட்படுத்த தேவையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை
கள்ளச் சாராய மரணங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூற முடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகத்தான் உள்ளது. இருப்பினும் கலாச்சாராயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/why-has-prime-minister-modi-not-opened-his-mouth-on-the-issue-of-manipur-yet-p-chidambaram-question.html

கீவ் நகரில் தொடர்ந்து 3வது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் – ஒருவர் பலி

 

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து மூன்றாவது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

30 5 23

கடந்த ஒராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இருதரப்பினரும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் நேற்று டிரோன்கள் மூலம் குண்டுவீசி ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் உயரமான பல கட்டடங்களின் மேல்மாடி தளங்கள் கடும் சேதமடைந்ததுடன், தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 4-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உக்ரைன் படையினர் 20க்கும் மேற்பட்ட டிரோன்களை சுட்டுவீழ்த்தியதுடன், தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/3rd-consecutive-night-of-drone-strikes-in-kyiv-one-dead.html

மாநில சுயாட்சி முழக்கம்.. ஒருங்கிணையும் கட்சிகள்… கரம் கோர்க்கும் தலைவர்கள்

 

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற தமிழ்நாட்டின், திமுகவின் முழக்கம், இப்போது தேசிய அளவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது… பீகாரில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்…இரண்டுக்கும் என்ன தொடர்பு. விரிவாக பார்க்கலாம்.

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் பொதுத் தேர்தலிலும் வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜகவும், பாஜக ஆட்சி அமைப்பதை தடுத்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உள்ளன. பத்தாண்டுகளாக பவரில் இருக்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். மூன்றாவது அணி பெயிலியர் மாடல் என்றும் தலைவர்களால் பேசப்பட்டும் வருகிறது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இதே போல் தேசிய அளவிலும் மெகா கூட்டணி அமைக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும் முனைப்பு காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலமாக சென்று, பாஜகவிற்கு எதிராகவும் மாநிலத்தில் செல்வாக்காகவும் உள்ள கட்சிகளின் தலைவர்களை, முதல்வர்களை சந்தித்தும் வருகின்றனர். குறிப்பாக மூன்றாவது அணி என்று அமைந்தால், அது ஆளும் பாஜகவிற்கே சாதகமாக அமையும் என்று அழுத்திச் சொல்லி, பொது எதிரியை வீழ்த்த ஒருங்கிணைவோம் வாரும் என்று பேசப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

பொது வேட்பாளர்கள்

இதனால், மூன்றாவது அணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரையும் சந்தித்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் ’’பொது செயல் திட்டம்’’, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின், ’’மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை’’ முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ‘’ பாஜகவை வீழ்த்த 450 இடங்களில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்’’ ஆகிய கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. ஆனாலும் சந்திரசேகர் ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி. அகிலேஷ் உள்ளிட்டோர் இன்னும் பிடி கொடுக்கவில்லை. அவர்களிடமும் தொடர்ந்து பேசப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா புறக்கணிப்பில் 19 கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டு, ஒருங்கிணைந்துள்ளன. பி.ஆர்.எஸ் கூட்டறிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும் 19 கட்சிகளின் முடிவையே அக்கட்சியும் எடுத்தது. இதுவே எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரமாகவும் அமையும் என்கிறார்கள்.

ஒருங்கிணையும் தலைவர்கள்

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியின் அடுத்த கட்டமாக பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ந் தேதி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டத்தை நிதிஷ்குமார் கூட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அல்லது பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாநில சுயாட்சி/அதிகாரம்

தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட பாஜக அல்லாத முதலமைச்சர்கள் உள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நிர்வாகத்தில் இடையூறு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் மிரட்டல் சோதனைகள் நடத்தப்படுவதாக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து முற்றிலும் மத்தியில் அதிகாரத்தை குவிக்க முயற்சிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், மாநிலங்களுக்கு அதிகாரம், மாநில சுயாட்சி என்கிற அடிப்படையில் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கவும் அதற்கான அறிவிப்பை இந்த கூட்டத்தில் தலைவர்கள் வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னோட்டமாக முதலமைச்சர்களாக உள்ள, மம்தா, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரது பேச்சுக்களைக் குறிப்பிடுகிறார்கள். நிதி ஆயோக் கூட்டட்திற்கு செல்லாத, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ’’கூட்டாட்சி கேள்விக்குள்ளாகியுள்ளதாக’’ பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக் காட்டுகிறார்கள். பாஜகவை வீழ்த்த எந்த தியாகத்திற்கும் தயார் என்று சொல்லியுள்ள காங்கிரஸ் கட்சியும் இதற்கு இசைவு தெரிவித்துள்ளதாகம் கூறப்படுகிறது.

அண்ணா – ஸ்டாலின்: தொடரும் முழக்கம்

’’திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிறோம். அந்த கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அதை கைவிடவில்லை’’ என்று சொன்ன பேரறிஞர் அண்ணா தொடங்கி தற்போதைய மு.க.ஸ்டாலின் வரை மாநில சுயாட்சி என்கிற உரிமைக் குரலை தொடர்ந்து முன் வைக்கின்றனர். மாநிலங்களுக்கு அதிகாரப் பரவல் வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய அளவிலும் வெளிப்பட்டு வருகிறது. இதுவே கட்சிகளையும் ஒருங்கிணைத்துள்ளது என்கிறார்கள்.

மாநில சுயாட்சி ஏன் வேண்டும் ?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா ஒரு கூட்டாட்சி (Federalism) நாடாகும். பல மாநிலங்களின் ஒன்றியம் (Union of states)  ஆகையால்தான் இந்தியாவை ஒரு துணைக் கண்டம் என்கிறார்கள். இந்திய துணைக் கண்டத்தில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களும் தனித்த தேசிய இனங்களாக, தங்களுக்கென தனியாக மொழி, பண்பாடு, கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியல், மத்திய அரசின் அதிகாரப் பட்டியல், இரண்டுக்கும் பொதுவான பட்டியல் (Concurrent list) என்று 3 வகையாக அரசமைப்பின் 7வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை, பாதுகாப்பு, ராணுவம், நிதி, வெளியுறவு, அணுசக்தி, வான், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட 100 துறைகள் மத்திய அரசிடம் உள்ளன. இத்துறைகளில் மத்திய அரசு மட்டுமே முடிவுகள் எடுக்க முடியும். தேவையான சட்டங்களை இயற்றலாம்.

காவல்துறை, மருத்துவம், உள்ளாட்சி, மது விற்பனை உள்ளிட்ட 61 துறைகள் மாநில அரசுப் பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். தேவையான சட்டங்களை இயற்றலாம். கல்வி, விளையாட்டு, வனம் உள்ளிட்ட 66 துறைகள் இருந்தன. கடந்த 1976ல் நெருக்கடி நிலை காலத்தில் கல்வி உள்ளிட்ட 5 துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. வனம், மின்சாரம், தொழில் உள்ளிட்ட 52 துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. இத்துறைகள் குறித்து இருமாநில அரசுகளும் சேர்ந்து முடிவு செய்யலாம். சட்டம் இயற்றலாம்.

’’ஜனநாயகத்தின் அடிப்படையான அதிகாரப் பகிர்வு என்பது நடைமுறையில் இல்லாமல், மத்திய அரசிடமே அதிகாரங்கள் குவிந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாகவே இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் அவர்களின் இசைவு பெற்றே செயல்பட வேண்டியுள்ளது. இது முழுமையான கூட்டாட்சி அல்ல. கூட்டாட்சி போன்றது (Quasi federal) ’’ என K.C.வியார் உள்ளிட்டோர் சொல்கிறார்கள்.

கட்டுப்படுத்தப்படும் மாநிலங்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருந்தாலும் மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டாலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஒப்புதலின்றி எந்த சட்டமும் நடைமுறைக்கு வராது. ஆகையால்தால் மாநில சுயாட்சி முழக்கத்தை பேரறிஞர் அண்ணா முன் வைத்தார். அவர் தொடங்கிய திமுக, அவர் பெயரால் தொடங்கப்பட்ட அதிமுக இரண்டு இயக்கங்களும் இந்த புள்ளியில் இணைகின்றன.

அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சராகிய மு.கருணாநிதி, மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தினார். மாநில சுயாட்சி குறித்து நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையிலான குழு 1971ம் ஆண்டு மே 27ம் தேதி 380 பக்க பரிந்துரையை அறிக்கையாக கொடுத்தது. இதில், அரசமைப்புச் சட்டத்தில் 7வது அட்டவணையில் உள்ள அதிகாரங்களை திருத்தம் செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் வேண்டும். மாநில அரசுகளிடம் கலந்தாலோசனை செய்த பிறகே ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.

கோரிக்கை விடுத்த பிற தலைவர்கள்

ஆந்திராவின் என்.டி.ராமராவ், கர்நாடகத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, காஸ்மீரின் பரூக் அப்துல்லா, அசாம், கேரளம் என பிற மாநிலங்களும் அவற்றின் முதலமைச்சர்களாக இருந்தவர்களும் மாநில உரிமைகள் குறித்து அவ்வப்போது பதிவு செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலை வலியுறுத்தியுள்ளது.

மாநில சுயாட்சி குரல் என்பது தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று சொல்வதை அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் மறுத்துள்ளனர். அப்போது சீனா போரின் போதும் அதற்கு பிறகு பாகிஸ்தான் உடனான போரின் போது அதிக அளவில் நிவாரண உதவி அளித்த மாநிலமாக தமிழ்நாடு இருந்துள்ளது. ஆகையால், மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கான அதிகாரத்தின் மூலம் மாநிலங்கள் வளர்ச்சி பெறும். மாநிலங்களின் வளர்சியுடன் நாடு வளர்ச்சி பெறும் என்கிறார்கள்.

கிடைக்குமா மாநில சுயாட்சி…? பார்க்கலாம்.


source https://news7tamil.live/the-slogan-of-state-autonomy-parties-converging-leaders-asking-for-hands.html

நதிகளுக்குச் செல்லும் பதக்கங்கள்… – முகமது அலியை பின்பற்றும் மல்யுத்த வீராங்கனைகள்??

 31 5 23


பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை பின்பற்றியே இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கங்கை நதியில் பதக்கங்களை வீசப்போவதாக அறிவித்துள்ளனர் என்று கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போராடி வென்ற பதக்கத்தை நதியில் வீசும் சம்பவம் அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது. பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, 1960 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் அமெரிக்காவில் இனவெறி நீங்கும் என்றும், மாற்றம் ஏற்படும் என்றும் நம்பினார்.

ஆனால், கறுப்பினத்தவர் என்ற காரணத்திற்காக உணவகத்தில் தனக்கு உணவு பரிமாறகூட பணியாளர்கள் தயக்கம் காட்டியதைக் கண்ட முகமது அலி, தான் வென்ற தங்கப்பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசினார். குத்துச்சண்டை ஜாம்பவானின் இந்த செயலை பின்பற்றியே, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்துள்ளனர் என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



source https://news7tamil.live/medals-go-to-rivers-female-wrestlers-following-muhammad-ali.html

7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட வலியுறுத்தல்!

 31 5 23

தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

”தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கிலிருந்து 7,000 ரன் எடை கொண்ட நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அத்துறையின் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மாயமான நெல் மூட்டைகளின் மதிப்பு ரூ.1.50 கோடிக்கும் அதிகம் ஆகும். அரசு கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நெல் மூட்டைகள் மாயமான கிடங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ளது. நெல் மூட்டைகளை காவல் காக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ள கிடங்கிலிருந்து நெல் மூட்டைகளை வெளியாட்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்க முடியாது. 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது அம்பலமான பிறகு, அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, மிகப்பெரிய முறைகேட்டை, மோசடியை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

கொள்ளையடிக்கப்பட்ட நெல்லின் மதிப்பு முக்கியமல்ல. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அரசின் கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அரசின் தோல்வியாகவே பார்க்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

நெல் மூட்டைகள் மாயமானதற்கான முதன்மைக் காரணம், அரசு நெல் கிடங்கு திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்தது தான். திருட்டுக்கு மட்டுமின்றி, மழையால் நெல் மூட்டைகள் நனைந்து பாழாவதற்கும் இதுதான் காரணம். இதைத் தடுப்பதற்காக ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஒரே நேரத்தில் 5,000 மூட்டைகளை அடுக்கி வைக்கும் அளவுக்கு கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் வலிமையான மற்றும் தேவையான அளவில் நெல் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



source https://news7tamil.live/7000-tons-of-rice-bags-fake-anbumani-ramadoss-urges-to-order-a-quick-investigation.html

பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை” – முத்தமிழ்ச்செல்வி

 

30 5 23

பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் தமிழ் பெண் முத்தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி. இவர் திருமணமாக தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். 38 வயதான முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இவருக்கு கடந்த மே 17-ம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது பயணத்தின் 51வது நாளான கடந்த 23-ம் தேதி ஏறத்தாழ 8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து முத்தமிழ்ச்செல்வி சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து, இன்று சென்னை விமான நிலையம் வந்துள்ள இவருக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தமிழ்ச்செல்வி கூறியதாவது:

”நான் எவரெஸ்ட் ஏற வேண்டும் என்று மூன்று ஆண்டுகாலமாக யோசித்து வந்தேன். அன்றிலிருந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தேன். எனக்கு உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என் பயிற்சியாளர் திருலோக சந்தர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் நிறைய பெண்கள் உள்ளார்கள், அவர்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு ஏற்றவாறு இதனை சாதித்து உள்ளேன். எவரெஸ்ட்டில் 6 சிலிண்டர்கள் தான் கொடுப்பார்கள், ஒரு நிமிடம் கூட மிக முக்கியம். அதற்குள் சிலிண்டரின் உதவியை பயன்படுத்தி செயல்பட வேண்டும். எனக்கு ஆக்சிஜன் பிரச்னை வந்த போது மெக்சிகன் ஒருவர் தான் உதவினார். அதனால் தான் உயிர் பிழைத்தேன்.

அங்கு சென்று வர மற்றவர்களுக்கு 36 மணி நேரம் பொதுவாக எடுத்துக் கொள்ளும். எனக்கு 48 மணி நேரம் ஆனது. என் குழுவில் முதலில் இருந்து இறுதி வரை நடந்து சென்றது நான் தான். மொத்தம் 56 நாட்கள் பயணம் செய்துள்ளேன். ஏழு கண்டங்களில் இருக்கும் உயரமான சிகரங்களை ஏற வேண்டும் என்பது தான் என் இலக்கு. ஏற்கனவே ஒன்று முடித்துவிட்டேன். அடுத்துள்ள 6 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏற வேண்டும் என்பதே இலக்கு.

மலை ஏறி இறங்கும் போது, என்னுடன் வந்தவர்கள் பலர் ஹெலிகாப்டர் மூலம் சென்றுவிட்டனர். ஆனால், என்னிடம் பணம் இல்லாததால் சிரமம்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொண்ட போது, எனது உடல்நிலையை புரிந்து, உடனடியாக ஹெலிகாப்டர் உதவியை வழங்கினார். அதனால் தான் விரைவில் சென்னை வர முடிந்தது.”

இவ்வாறு முத்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/nothing-is-impossible-for-women-if-they-try-muthamilchelvi.html