வியாழன், 28 பிப்ரவரி, 2019

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு



2019-02-28@ 13:11:44








நிகோபார்: அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணாமாக பல வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 94 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் பண்டா ஆசே நகரத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும், சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இதேபோன்று நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 17ம் தேதி காலை 9 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. மேலும் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதனை தொடர்ந்து நிக்கோபார் கடல்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலையில், இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக அந்தமானின் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா?


பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா? கேள்வி பதில் நிகழ்ச்சி - 27.02.2019 பதிலளிப்பவர் : எம்.எஸ்.சுலைமான் (மேலாண்மை குழு தலைவர், TNTJ)

புதன், 27 பிப்ரவரி, 2019

கமலின் கூட்டணி அழைப்பை நிராகரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! February 27, 2019

Image
கமலின் கூட்டணி அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது. 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதிமய்ய தலைவர்  கமல்ஹாசன் டெல்லியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இணைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் திமுகவுடன் கூட்டணி பேச்சு நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் தலைவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் கமல் சந்தித்து பேசியுள்ளார்.  
இதனிடையே கமலின் கூட்டணி அழைப்பை நிராகரித்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.  சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் திமுகவுடன்  மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்க உள்ளதால், நண்பர்களாக இருப்போம் என தெரிவித்து விட்டதாகவும் கூறினார்

source: ns7.tv

இந்தியாவின் பெரும் பகுதிகளில் வறட்சி ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை! February 27, 2019

Image
நிலத்தடி நீரின் வீழ்ச்சி அதிகரித்து கொண்டிருப்பதால் இந்தியாவின் பெரும் பகுதிகளில் வறட்சி ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கணக்கிட்ட அளவை விட 70% வேகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக தெரிய வந்துள்ளது. 
``டெல்லி, ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 32 கன கிமீ நிலத்தடி நீரானது ஒவ்வொரு வருடமும் எடுக்கப்படுவதாகவும், இவ்வாறு எடுக்கப்படும் நிலத்தடி நீரில் பாதியாவது பருவமழைகளின் மூலம் திரும்பக் கிடைத்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய நிலத்தடி நீர் வீழ்ச்சி வட இந்தியாவில்தான் நிகழ்ந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள், வேகமாக வளர்ந்து வரும் இந்தப் பிரச்னையின் மையப்புள்ளியாக தலைநகர் டெல்லி உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கங்கைக் போன்ற ஆறுகளின் கரையோரத்தில் நிலத்தடி நீரை தொடர்ந்து நீரை உறிஞ்சி கொண்டிருப்பதால் வறட்சி நெருங்கி கொண்டிருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே பூமி வறண்டு விடுவதன் மூலம் மிதமான பூகம்பங்களைத் தூண்டுவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
நீர் தர குறியீட்டில் இடம் பெற்றுள்ள 122 நாடுகளில் இந்தியா 120வது இடத்தில் உள்ளதாக  நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது நினைவு கூரப்பட வேண்டியுள்ளது. 

source: ns7.tv

உலகின் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் 120வது இடத்தில் இந்தியா! February 26, 2019

Image
உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்திலும்,  இந்தியா 120வது இடத்திலும் உள்ளது.
உலகின் ஆரோக்கியம் மிகுந்த நாடுகள் பட்டியலை “BLOOMBERG“ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
இதில் ஸ்பெயின் முதலிடமும், இத்தாலி 2வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐஸ்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3, 4 மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளன. கடந்த 2017ம் ஆண்டு 119வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஒரு இடம் பின்தங்கி 120வது இடத்தை பிடித்துள்ளது. சீனா 52வது இடத்திலும், இலங்கை 66வது இடத்திலும், பாகிஸ்தான் 124வது இடத்தையும் பிடித்துள்ளன. 
ஒரு நபரின் ஆரோக்கியத்துக்காக அமெரிக்கா அதிகளவில் பணம் செலவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமெரிக்கா செலவிடுகிறது
source ns7.tv

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு மீது மமதா பானர்ஜி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! February 26, 2019

Authors
Image
புல்வாமா தாக்குதல் தொடர்பாக முன்னதாகவே உளவுத்துறை எச்சரித்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று (பிப்.25) நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மமதா பானர்ஜி, புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக அரசானது வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ சக்திகளுடன் இணைந்து நாட்டு மக்களின் ஒற்றுமையை மத ரீதியில் பிரிக்க சதி செய்வதாக தெரிவித்த மமதா, நாடாளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக போர் பதற்றத்தை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.
“புல்வாமா தாக்குதல் நிகழ்ந்தபோது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? உங்களுக்குதான் உளவுத்துறை முன்னதாகவே தாக்குதல் நடக்க உள்ளதை கண்டறிந்து சொல்லியதே, அதன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? வான்வழியாக வீரர்களை அழைத்துச் செல்லாமல் சாலை வழியாக அழைத்துச் சென்றது ஏன்? வீரர்களை அழைத்துச் செல்லும் முன்பாக சாலைகளை முன்கூட்டியே சோதனையிடாதது ஏன்?” என மத்திய அரசை நோக்கியும், பிரதமர் மோடியை நோக்கியும் மமதா பானர்ஜி ஏராளமான கேள்விகளை அடுக்கினார்.
“உளவுத்துறை எச்சரிக்கை இருந்தபோதும் வீரர்களை பாதுகாக்காதது ஏன்? ஏனெனில், வீரர்களை பலி கொடுத்து, அவர்களின் உடல்களைக் கொண்டு மத்திய அரசு தேர்தல் ஆதாயம் அடையப் பார்க்கிறது. நமது வீரர்களின் ரத்தத்தைக் கொண்டு அரசியல் செய்வதை அனுமதிக்கக்கூடாது” என்று மமதா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். 
மேலும், "சர்வாதிகாரி மோடி மற்றும் அமித்ஷாவை அதிகாரத்தில் இருந்து கீழிறக்கி நாட்டை காப்பாற்றுவோம்" என்றும் கட்சித் தொண்டர்கள் இடையே மமதா பானர்ஜி உரையாற்றினார்.
இதனிடையே, மமதா பானர்ஜியின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் மேற்குவங்க தலைவர் திலீப் கோஷ், காஷ்மீரில் இத்தகைய தாக்குதல் நடைபெறுவது இதுதான் முதல்முறையா என கேள்வி எழுப்பியதுடன், பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டே மமதா பானர்ஜி இத்தகைய குற்றச்சாட்டுகளை எழுப்புவதாக தெரிவித்தார். மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் ஆட்டம் கண்டு வருவதை மமதா உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

source: ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/india-editors-pick/26/2/2019/mamata-banarji-risen-plenty-allegation-against-bjp-pulwama

ராணுவ கண்காணிப்பை மீறி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது எப்படி? February 27, 2019

Authors
Image
பாகிஸ்தான் ராடார் அமைப்புக்கே தெரியாமல் அந்நாட்டு எல்லைக்குள் இந்திய விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது, பாகிஸ்தான் விமானப்படையின் திறனை கேள்விக்குள்ளாகி உள்ளது. உண்மையில் இந்தியாவின் பலம் என்ன? பாகிஸ்தானின் பலவீனம் என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சூடு மறைவதற்குள், பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலகோட், சக்கோதி, முஸ்பராபாத் ஆகிய இடங்களில் இந்திய விமானப்படையின் மிராஜ் ரக விமானங்கள், அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என்று மத்திய அரசும், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் அரசும் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை விட, பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்து, 19 நிமிடங்களில் வரை துல்லிய தாக்குதல் நடத்தி முடித்துவிட்டு திரும்பிய, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் கண்காணிப்பு வளையத்தை கடந்து எவ்வாறு தாக்குதலை நடத்தின என்ற கேள்வி எழுந்துள்ளது..
கடந்த 1971ம் ஆண்டு வங்கதேச பிரிவினையின் போது நடத்தப்பட்ட விமான தாக்குதலுக்கு பிறகு, தன்னை திறன்வாய்ந்த விமானப்படைகளில் ஒன்றாக கருதிக் கொண்டிருந்த பாகிஸ்தான், இந்தியாவை ஒப்பிடுகையில் திறன் குறைந்தவையாக உள்ளது என்று defencedotpk என்ற பாகிஸ்தான் இணையதளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. 
இதன் மூலம் பாகிஸ்தான் வான்வெளி கண்காணிப்பு அமைப்பும், ஜாமர்களும், திறம்பட செயல்படுபவை அல்ல என்பதும், இவ்வளவு குறைந்த நேரத்தில், இத்தகைய தாக்குதலை கண்டறிந்து செயல்படுவதற்கான திறனை பாகிஸ்தானின் வான்வெளி கண்காணிப்பு அமைப்பு பெற்றிருக்கவில்லை என்பதை அந்நாட்டு இணையதளமே சுட்டிக்காட்டுகிறது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்த A-50 AWAC விமானங்கள் இந்தியாவால் வாங்கப்பட்ட போதே, பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல், அயாஸ் அகமது கான், பாகிஸ்தானை எச்சரித்திருந்தார். ராடார் மற்றும், மின்னணு கண்காணிப்பு விஷயங்களில் அதிக திறன்கொண்ட இந்த வகை விமானங்களால் பாகிஸ்தானை இந்தியா உளவு பார்க்க ஏதுவாக அமையும் என்றும் எச்சரித்திருந்தார். 
இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சீனாவுடன் நெருக்கம் காட்டும் பாகிஸ்தான், வான்வெளி பாதுகாப்பில் சீனாவிடமிருந்து போதிய உதவியை பெற தவறிவிட்டதா என்னும் கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு இணையதளமான Global fire power, பாகிஸ்தானிடம் 1,281 பாதுகாப்பு விமானங்கள் உள்ளன என்றும், இந்தியாவிடம் 2,185 விமானங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது இங்கே நினைவு கூரப்பட வேண்டியுள்ளது. இந்த சூழலிலும் தங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும் என்று  பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பாகிஸ்தான் தீவிரவாதத்தை நம்பியிருப்பதையே காட்டுவதாக உள்ளது.  

source: ns7.tv

திங்கள், 25 பிப்ரவரி, 2019

பாமக குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமர்சனம்! February 25, 2019

Image
சமூகநீதி பேசுகின்ற பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைகளை மறந்து, மதவாத பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், பாஜக தலைமையிலான கூட்டணி என்பது தேசத்தையே விற்கக்கூடிய கூட்டணி எனவும், அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறக்கூடாது எனவும் கூறினார். 
தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தங்கள் பெட்டியை தினசரி நிரப்புவதையே, கொள்கையாக கொண்டு செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். ஆட்சியாளர்களின் பலவீனத்தை பயன்படுத்தி, கூட்டணியை பாஜக அமைத்துள்ளதாகவும், வரும் தேர்தலில் பாஜவை வீழ்த்தி பாடம் புகட்டுவோம், எனவும் கூறினார். 

source ns7.tv
http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu/25/2/2019/ks-alagiri-criticized-pmk

புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்: பாகிஸ்தான் February 25, 2019

Image
புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மற்றும் அதன் தலைவர் மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா கோரியது. அதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் உரிய ஆதாரம் இருந்தால் இந்தியா கொடுக்க வேண்டுமென தொடர்ந்து கூறிவந்தது. 
தற்போது பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், புல்வாமா தாக்குதல் குறித்து ஆணித்தரமான ஆதாரம் இருந்தால் பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source ns7.tv
http://www.ns7.tv/ta/tamil-news/world-important/25/2/2019/pakistan-said-about-pulwama-attack

வடநாட்டுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமா? - அற்புதம்மாள் ஆவேசம்! February 25, 2019

Image
வடநாட்டு நடிகருக்கு ஒரு சட்டம், பேரறிவாளனுக்கு ஒரு சட்டமா என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 
கடலூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்பை தாக்குதலில் தொடர்புடைய சஞ்சய் தத் நடிகர் என்பதால், 5 ஆண்டுகளில் அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும், வடநாட்டுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டம் என்று தான் உள்ளது, என ஆவேசமாக கூறினார். 
7 பேரை விடுதலை செய்ய கோரி, மார்ச் 9-ம் தேதி, 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம், நடத்த உள்ளதாகவும் அற்புதம்மாள் கூறினார்.

source: ns7.tv

வெனிசுலாவில் உச்சத்தை அடைந்துள்ள மக்கள் போராட்டம்! February 25, 2019

Image
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் மக்கள் போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. நிவாரணப் பொருட்களுக்கு கூட அந்நாட்டு அதிபர் தடை விதித்ததால் மக்கள் அடிப்படை உதவிகளுக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 
மத்திய கிழக்கில் எண்ணெய் வளமிக்க நாடுகளை சுழன்றடித்த போராட்டம் இப்போது தென்னமெரிக்க நாடுகளில் வீசிக்கொண்டிருக்கிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா உலகின் எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் ஒன்றாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே கடும் பணவீக்கத்தால் வெனிசுலா பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் வறுமையில் வாடி வருகின்றனர். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுலா தவித்து வரும் நிலையில், பிறநாடுகள் உதவிப் பொருட்கள் அனுப்புவதற்கும் அதிபர் மதுரோ எதிர்ப்பு தெரிவித்திருப்பது வன்முறையை ஏற்படுத்தி உள்ளது.
வரலாறு காணாத வறுமையில் வாடும் மக்களுக்கு உதவ அதிபர் மதுரோ நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அவரது ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.  அதே நேரத்தில், பிரேசில் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கும் வெனிசுலா அரசு தடை விதித்ததால், ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
நிவாரணப் பொருட்களை தடுத்து நிறுத்துவதற்கு உத்தரவிட்ட அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், வெள்ளை மாளிகையில் உள்ளவர்கள் வெனிசுலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக மதுரோ குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சியை தக்க வைக்கும் போராட்டத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை வெனிசுலா தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பல்வேறு நாடுகளின் கோரிக்கையாக உள்ளது. 

source NS7.tv

வரலாற்றில் முதன்முறையாக பெண் தூதுவரை நியமித்தது சவுதி அரேபியா! February 25, 2019

Imageசவுதி இளவரசி ரீமா பிந்த்பாண்டர் அல்சவுத் (Reema bint Bandar al-Saud) அமெரிக்கா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் இதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவரை சவுதி அரேபியா தூதராக நியமித்துள்ளது. 
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், "சவுதி அரேபியா விஷன்-2030" என்ற பெயரில் தொலை நோக்கு திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். பெண்களுக்கு இதுவரை அளிக்கப்படாத உரிமைகளை வழங்கி வரும் அவர், இளவரசியான ரீமா பிண்ட்மாஸ்டர் அல் சவுத்தை, அமெரிக்க தூதராக நியமித்துள்ளார். 
அவரது தந்தை பாண்டர் அல் சுல்தான் சவுத் 1983ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை, அமெரிக்க தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
source ns7.tv

உலகிலேயே, இந்தியாவில் தான் அதிகமாக போலி செய்திகள் பரப்பப்படுகின்றன...அதிர்ச்சி ரிப்போர்ட்! February 24, 2019


source ns7.tv
Image
உலகிலேயே, இந்தியாவில்தான் அதிக அளவு போலி செய்திகள் பரப்பப்படுவதாக சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமடைந்துவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதினரும் இதற்கு அடிமையாகிவிட்டதால், சமூகவலைதளங்களில் பரவும் செய்திகள் உண்மையானதா இல்லையா என்பதறியாமல் நிறைய பேர் போலி செய்திகளை பரப்பிவிடுகின்றன. இந்நிலையில், போலி தகவல்கள் குறித்து அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில், உலகம் முழுக்க 57% மக்களும், 64% இந்திய மக்களும் போலி செய்திகளை எதிர்கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
64% இந்தியர்கள் எதிர்கொண்ட போலி செய்திகளில் 54% இணையதளங்களில் வேண்டுமென்றே பரப்பப்படும் போலி செய்தியாக இருக்கின்றது. இதுபோன்ற போலி செய்திகளால் சாமானிய மக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் போலி செய்திகளினால் பல மக்கள் மோசமான செயல்களிலும் ஈடுபடத்தொடங்கினர். இதனையடுத்து, வாட்ஸ் அப் மூலம் போலி செய்திகளை தடுக்க நடவடிக்கை எடுத்த வாட்ஸ் அப் நிறுவனம், ஒரு தகவலை குறைந்த நபர்களுக்கு மட்டுமே ஃபார்வார்ட் செய்யப்படும் முறையை அமல்படுத்தியது. 
இதுமட்டுமல்லாமல், artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவின் உதவியால், ஆபத்தான தகவல்களை பரப்பும் வாட்ஸ் அப் கணக்குகளை கண்காணிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது வாட்ஸ் அப். இதற்கிடையே, இந்தியாவில், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் கூட 29% போலி செய்திகள் பரவி வருவதாக மைக்ரோசாப்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

மார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு! February 24, 2019


Image
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஜனநாயகம், டெல்லிக்கு மட்டும் இல்லாமல் போனது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
எனவே, மார்ச் முதல் தேதியில் இருந்து டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் வரை, மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் பிடிக்கப்பட்ட அபராத தொகை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் திருப்பி அளிக்கப்படும் : ப.சிதம்பரம் February 24, 2019


Image
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ட இருப்புத் தொகை இல்லாத காரணத்திற்காக பிடிக்கப்பட்ட அபராத தொகை, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், திருப்பி அளிக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய சிதம்பரம், கடந்த நான்கரை ஆண்டில் 45 வருடங்கள் இல்லாத அளவாக 6.1 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக விமர்சித்தார்.
அதிமுக அரசின் ஊழல்கள் தொடர்பாக பாமா தயாரித்த 206 பக்க ஊழல் பட்டியலை இனி ஒவ்வொரு தொகுதியாக வாசிக்க இருப்பதாகவும் ப.சிதம்பரம் அப்போது தெரிவித்தார்.

ஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி : அன்வர் ராஜா அதிமுக எம்.பி February 24, 2019

தமிழகத்தில் ஆட்சியை  காப்பாற்றுவதற்காகவே பாஜகவுடன்  கூட்டணி வைத்துள்ளதாக அதிமுக எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் நடைபெற்ற முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுக சார்பில் 37 எம்பிக்கள் இருந்தும் எந்த ஒரு பயனும் இல்லை என்றும், 5 ஆண்டு காலமாக நாடாளுமன்றத்தில் கத்தி கத்தி குரல் எழுப்பியும் எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கால கூட்டணி கணக்கு என்பது வேறு கொள்கை என்பது வேறு என குறிப்பிட்டுள்ள அன்வர்ராஜா, கொள்கையில் அதிமுகவிற்கும் பாஜகவுக்கும் எந்த சமரசமும் இல்லை என்றும் கூறியுள்ளார். முத்தலாக் சட்டத்தை எத்தனை முறை அரசு கொண்டுவந்தாலும் அத்தனை முறையும் அதிமுக எதிர்க்கும் என கூறியுள்ள அவர், தேர்தல் காலத்தில் வைக்கப்படும் கூட்டணி என்பது லாப நஷ்ட கணக்கு என்றும் தெரிவித்துள்ளார். 

சேலம் அருகே பயங்கர காட்டுத் தீவிபத்து: நேரில் பார்வையிட்டார் ஆட்சியர் ரோகினி! February 24, 2019

Image
சேலம் அருகே மலைப்பாதையில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. வனப்பகுதியில் சிக்கிய 30 குடும்பத்தினரை, வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
சேலம் மாவட்டம் கிழக்கு மலைத் தொடர்ச்சியான ஏற்காடு சேர்வராயன் மலை வனப்பகுதிகளில் வெயில் அதிகரித்ததால் வறட்சி நிலை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் ஏற்காடு அடிவாரப் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் திடீரென பரவிய தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீ மேலும் பரவாமல் இருக்க எல்லை பகுதிகளில் தண்ணீரை ஊற்றினர். 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்காடு மலை பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மூங்கில் மரங்கள், வேம்பு மரங்கள், கருங்காலி மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அரிய வகை நாரை, சாம்பல் நாரை பறவைகள், கொக்கு, வெள்ளை மயில்கள் உள்ளிட்ட விலங்குகளை உடனடியாக வனத்துறையினர் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு மாற்றினர். மாவட்ட ஆட்சியர் ரோகினி தீவிபத்து நடந்த பகுதிகளை  பார்வையிட்டார். தீ விபத்து காரணமாக 40 ஏக்கர் பரப்பில் இருந்து மரங்கள் எரிந்து நாசமானதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மனித உரிமைகள் (Human Rights)

மனித உரிமைகள் (Human Rights)
மனித மாண்பு எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அல்லது மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அவர்களின் மாண்பை காக்கும் உரிமையே மனித உரிமைகளாகும். இது எந்நாட்டவருக்கும், உலகெங்கும் பொருந்தக் கூடியதாகும்.
மனித உரிமைகள் மீறல் என்றால் ?
ஒவ்வொரு மனிதனுடைய மனித உரிமைகளையும் காப்பதற்குரிய செயல்படுத்த கட்டுப்பாடும் அரசுக்கு உண்டு. அதனை செயல்படுத்த இயலாத நிலையில் அரசோ, காவல்துறை அரசு அதிகாரிகள், வனத்துறை, ஆயுதப்படை அதிகாரி, அரசு சார்பாக ஒப்பந்தக்காரரைப் போல் செயல்படுகின்ற எவரேனும் ஒருவர் அடுத்தவரின் மனித உரிமையில் தலையிட்டோ மரியாதைக் குறைவாக நடத்துகிறார் எனில் அவைகளும், மனித உரிமைகள் மீறல்களே. மனித உரிமைகள் அரசுக்கு எதிராகவே கோரப்படுகின்றது. தனி மனிதர்களுக்கு எதிராக கோரப்படுவதில்லை. இருப்பினும் ஒரு தனி மனிதன் இன்னொருவரின் வாழ்வுரிமைகளான சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் தொடர்பான உரிமைகளை மீறினால் பாதிக்கப்பட்டவர் அந்த உரிமை மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசினை அணுக முடியும். அரசு அந்த உரிமையை மீறுவோருக்கு தண்டனை வழங்கவோ (அல்லது) தடுத்து நிறுத்தவோ தவறினால் அப்போது அது மனித உரிமை மீறலாக மாறுகிறது.
மனித உரிமை மீறலுக்கான சில வரையறைகள் :
மக்களுடைய வீடுகள், நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவற்றில் தொழிற்சாலையால் வெளியிடப்படும் நச்சு, வேதியியல் கழிவுகள் கலக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறுவதே
வாழ்வுரிமை மீறலாகும்.
- காவலரால் சந்தேகப்பட்டு அடித்தல், விலங்கிடல் மற்றும் சித்ரவதை செய்தல் என்பன மனித மாண்பு மற்றும் உடல் பாதுகாப்புக்கு எதிரான உரிமை மீறலாகும்.
- ஒரு பெண் சிறைக் கைதி சிறைக்காப்பாளரால் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்ற புகார் அடிப்படையில் குற்றவியல் நடுவர் நடவடிக்கை எடுக்க தவறுதல் சட்டப்படி சம பாதுகாப்பளிக்கும் உரிமை மீறலாகும்.
- தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு கோவிலில் வழிபட, கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கத் தடுக்கின்ற உயர் சாதி மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மறுத்தல் பாகுபாடு சார்ந்த உரிமை மீறலாகும்.
வேலைத் தளங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியம் கொடுக்கப்படுவதையும், பணி உயர்வில் சம வாய்ப்பு கொடுக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கு முதலாளிகளுக்கான சட்ட வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையினர் புறக்கணித்தல் சம வாய்ப்பிற்கான உரிமை மீறலாகும்.
பாதுகாப்பு படையில் பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு கடையின் சொந்தகாரருக்கு இழப்பீடு கொடுக்காமல் எடுத்துக் கொள்ளுதல். வாழ்வாதார உரிமை மீறலாகும்.
மாவட்ட நிர்வாகம் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவாக வெளியிட மறுத்தல் செய்தி பெறும் உரிமை மீறலாகும்.
புலனாய்வுக் குழுமத்தால் முகம்மதியர் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு மதபாடங்கள் கொடுக்கப்படுவதை அவர்கள் தேச விரோதிகள் என்று காரணங்களை காட்டி மறுத்தல் மதவுரிமை மீறலாகும்.
வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட காடு அழிக்கப்படுவதையும், சட்டத்திற்குப்புறம்பாக மரங்கள் வெட்டப்படுவதையும் கட்டுப்படுத்த இயலாதிருந்தால் சுற்றுச்சூழல் உரிமை மீறலாகும்.
அரசு என்பது மத்திய மாநில அரசுகளையும் மேலும் நாட்டை நிர்வகிக்க உதவுகின்ற நிறுவனங்கள் முகவாண்மைகள் ஆகியவைகளை உள்ளடக்கிய அனைத்து மக்களையும் குறிக்கும். மாவட்ட ஆட்சி அலுவலர்கள் ஊராட்சி அமைப்புகள், நீதி மன்றங்கள், நகராட்சி, அஞ்சல்துறை, மின்சாரத்துறை, அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான அரசின் கட்டுப்பாட்டிற்குள்ள குழுக்கள் அனைத்துமே அரசின் அங்கமாகவே குறிக்கப்படும்.
காவல் துறையை பற்றிய மனித உரிமைகள் :
- கைது செய்யும் பொழுது அதற்கான காரணம் சொல்ல வேண்டும்.
- கைதுக்கு கைவிலங்கு போட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
- 16 வயதிற்கு கீழ் உள்ள ஆண் / பெண் சிறுவர்களை விசாரணை என்ற பெயரில்
இருக்கும் இடத்தைவிட்டு அழைக்கக் கூடாது.
- பெண்களை மாலை 6.00 மணிக்குமேல் கைது செய்யக்கூடாது.
- கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.
- கைதியை அடிக்கக் கூடாது.
மனித உரிமை சட்டங்கள் :
1993 - மனித உரிமை பாதுகாப்புச் சட்டம். இதில் அரசியல் அமைப்பு சட்டம் 338ன் கீழ் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
1992 - சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
1999 - மகளிர் நல பாதுகாப்பிற்கென தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
1950 - மனித வர்த்தகம் சம்பந்தமான பன்னாட்டு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
1923 - தொழிலாளர் இழப்பீட்டு சட்டம்.
1926 - தொழிற்சங்க சட்டம்.
1936 - சம்பள சட்டம்.
1942 - வாராந்திர விடுமுறை சட்டம்.
1946 - தொழில் நிறுவன, வேலை நிலையானைகள் சட்டம்.
1947 - தொழில் தகராறு சட்டம்.
1948 - தொழிலாளர் காப்புறுதி சட்டம்.
1948 - தொழிற்சாலை சட்டம்.
1948 - குறைந்தபட்ச சம்பள சட்டம்.
1952 - தொழிலாளர் சேமநிதி சட்டம்.
1966 - பீடி, சிகரெட் தொழிலாளர்கள் வேலை நிபந்தனைகள் சட்டம்.
1971 - மருத்துவ முறையில் கருச்சிதைவு சட்டம்.
1976 - சம ஊதிய சட்டம்.
1986 - சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்.
1993 - பயங்கரவாத தடுப்பு சட்டம்
1994 - மனித உறுப்புகள் மாற்று சட்டம்.
போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. "சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல் வாதம் என்பது ஒரு விளக்கு அது ஏழைகளுக்கு எட்டாதது" என்றார் பேரறிஞர் அண்ணா.
ஆம். மனித உரிமைகள் பாதுகாப்பிற்கென்று தனித்தனி ஆணையங்களும், நீதி மன்றங்களும், உரிமை சாசனங்களும், பிரகடனங்களும் எவ்வளவோ உருவான பின்பும் ஆங்காங்கே மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படும் நிலைதான் இன்றளவும் தொடர்கின்றது.
Source: Thanks to Legel Right Organization ( FB Page) 

மதவாத அரசியலுக்கு முடிவுகட்டுவோம்!

மதவாத அரசியலுக்கு முடிவுகட்டுவோம்!!
உரை : இ. முஹம்மது
(மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ)
மாநில தலைமையக ஜுமுஆ இரண்டாம் உரை - (22-02-2019)

சனி, 23 பிப்ரவரி, 2019

பாகிஸ்தானிற்கு வழங்க இருந்த ரூ. 9,000 கோடி நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா! February 23, 2019

Imageபுல்வாமா தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்த 9,000 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் கவலை அளிப்பதாகவும், அது மிகப்பெரிய ஆபத்தானது எனவும் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு இருந்ததாகவும், புல்வாமா தாக்குதலால், அந்த உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். 
இந்நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புல்வாமா தாக்குதல் கோழைத்தனமானது என கோஷம் எழுப்பிய அவர்கள், பாகிஸ்தானுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயங்கரவாத செயல்களை கைவிட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சியில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
source: ns7.tv 

பாகிஸ்தானுக்கு நீராதாரமாக விளங்கும் 3 நதிகளை தடுக்க மத்திய அரசு திட்டம்! February 22, 2019

Image
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த “மிக அனுகூலமான நாடு” என்ற அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய நதிகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் தண்ணீர் அரபிக் கடலை அடைவதாகவும், இந்த 3 நதிகளின் தண்ணீரையும், பாகிஸ்தானுக்கு செல்ல விடாமல் தடுக்க உள்ளதாகவும் கூறினார். 
தடுப்பணை அமைத்து 3 நதிகளின் தண்ணீரையும் யமுனை ஆற்றுக்கு திருப்பி விட உள்ளதாகவும், இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார். 

source: Ns7.tv
http://www.ns7.tv/ta/tamil-news/world-editors-pick/22/2/2019/india-planned-stop-flow-3-rivers-pakistan

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

திருநெல்வேலி மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு








http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475599
நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் நடவடிக்கை எடுத்துள்ளார். பணியிட மாற்றம் தொடர்பான மேல்முறையீடுகளோ, விடுப்பு விண்ணப்பங்களோ ஏற்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை!








சென்னை : தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்பித்துள்ளது. அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என்ற அரசாணையை பின்பற்ற கோரிய வழக்கில், 3003 கோயில்கள், 131 தேவாலயங்கள், 27 MASJID-கள்  அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 
source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475601

வியாழன், 21 பிப்ரவரி, 2019

காஷ்மீரில் 18 பிரிவினைவாத தலைவர்கள், 155 அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்


ஸ்ரீநகர் : காஷ்மீரில் 18 பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் 155 அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

புல்வாமா தாக்குதலில்  44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா பகுதியில் கடந்த 14ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி கார்குண்டு தாக்குதலை நடத்தினார். இந்த சம்பவத்தில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் என்பதும் அவர் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் இருந்தபடி தாக்குதல்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

புல்வாமா தாக்குதல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் 

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்புதலைவர் யோகேஷ் சந்திரமோடி, மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.  இந்நிலையில் கிடைத்த தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வந்த என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதன் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.

18 பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்

இதனிடையே புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பிரிவினைவாத தலைவர்கள் 6 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை காஷ்மீர் மாநில நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கிலானி, யேசீன் மாலிக், அப்துல் கானி ஷா,முகமது பாட் உள்ளிட்ட 18 பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் 155 அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில அரசு நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

அரசின் வேற எந்த சலுகையை அவர்கள் பெற்று வந்தாலும் அதுவும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பிற்கான வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து ஆயிரம் காவலர்கள் மற்றும் 100 பாதுகாப்பு வாகனங்கள் வழக்கமான காவல் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற ராணுவ வடக்கு பிராந்திய கமாண்டர் ரன்வீர் சிங் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு நடத்தினார். 
source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475255

அதிமுக, பாஜக, பாமக கூட்டணி குறித்து தவ்ஹீத் ஜமாஅத் கருத்து என்ன?

அதிமுக, பாஜக, பாமக கூட்டணி குறித்து தவ்ஹீத் ஜமாஅத் கருத்து என்ன?
கேள்வி பதில் நிகழ்ச்சி - 20.02.2019
பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் (மாநில செயலாளர், TNTJ)

புதன், 20 பிப்ரவரி, 2019

19/02/2019, களத்தில் இருந்து நேரடியான நமது தமிழக இரானுவ வீரனின் உண்மை வாக்குமூலம்,

Source: FB Jeddah TNTJ
காஷ்மீர் வெடிகுண்டு சம்பவம்?
19/02/2019, களத்தில் இருந்து நேரடியான நமது தமிழக இரானுவ வீரனின் உண்மை வாக்குமூலம்,
உள்ளம் பதறவைக்கிறது!
யார் அந்த துரோகி....?


ராணுவத்தில் சேருவதற்கு 2500 இளைஞர்கள் விண்ணப்பம்..! February 20, 2019

Image
 ராணுவத்தில் சேருவதற்கு இரண்டாயிரத்து 500 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பாரமுல்லா பகுதியில் 111 பணியிடங்களுக்கு இரண்டாயிரத்து 500 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக ராணுவத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, அப்பகுதியில் நிலவும் வேலை வாய்ப்பின்மையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆகையால் எந்த வேலை கிடைத்தாலும் தற்போதைய சூழலில் போதும் என்ற மனநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பை தீவிர தாக்குதல் முதல் உரி தாக்குதல் வரை இந்தியா அனுப்பிய ஆதாரங்களை வைத்து பாகிஸ்தான் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புல்வாமா தாக்குதலுக்கு ராணுவம் எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது என தெரிவித்தார். பிரதமர் ஏற்கனவே கூறியதை போன்று ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

source: ns7.tv

கேரளா காவல்துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள KP-BOT ரோபோ..! February 20, 2019

Image
இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளா காவல்துறையில் ரோபோ ஒன்று பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. 
இதனை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். திருவணந்தபுரத்தில் உள்ள கேரளா காவல்துறை தலைமை அலுவலகத்தில் KP-BOT எனப்படும் ரோபோ பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. 
இந்த ரோபோ காவல் தலைமையகத்திற்கு வருவோருக்கு வழிகாட்டி அதிகாரிகளுடன் நேரம் நிர்ணயிக்க உதவி செய்கிறது. மேலும் காவல்துறை பணியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரோபோ அறிமுகப்பட்டுள்ளதாக டிஜிபி லோகநாத் பெஹ்ரா விளக்கினார்.
இந்நிலையில், நான்கு பேர் செய்யக் கூடிய வரவேற்பறை பணியை இந்த ரோபோ சமாளிக்கும். புகார்கள் அடிப்படையில் வழக்கு தொடர்பான கோப்புகளைத் தயாரித்தல், விருந்தினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்து முடிக்கும் திறன் கொண்டது  இந்த KP-BOT  வகை ரோபோ என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காவல் அதிகாரி போலவே இந்த ரோபோவுக்கு உடை அணிவிக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.

source ns7.tv

தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 6 பேர் உயிரிழப்பு..! February 20, 2019

Image
தெலங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 6 பேர் உயிரிழந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானாவில் கடந்தாண்டு பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 28 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 496 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்து 437 நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 6 பேர் உயிரிழந்த நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தெலங்கானா மாநில சுகாதாரத் துறையினர் கூறும்போது, குளிர்காலம் குறையும் போது, பன்றிக் காய்ச்சலின் தாக்கமும் குறைந்துவிடும். தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலர் குணமாகி வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கை கழுவுதல், குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

source: ns7.tv

அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! February 19, 2019

Image
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடல் முதல் கர்நாடக கடற்பகுதிகள் வரை வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும், ஓர் இரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
 
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 33டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source: ns7.tv