வியாழன், 31 மார்ச், 2016

ஸ்மார்ட்போன் வடிவ துப்பாக்கி: அமெரிக்காவில் விரைவில் அறிமுகம்

அமெரிக்காவில் மின்னசோட்டாவை சேர்ந்த ஐடியல் கான்சீல் என்ற நிறுவனம் ஸ்மார்ட் போன் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள புதுமையான கை துப்பாக்கியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
இந்த இரட்டைக் குழல் 380 காலிபர் ரக துப்பாக்கி இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 27 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கைத்துப்பாக்கிக்கு அதிக தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட் போன் கை துப்பாக்கியை அனைத்து இடங்களுக்கும் எளிதாக எடுத்து செல்ல இயலும். இந்த துப்பாக்கியை ஸ்மார்ட்போன் போன்று மடித்து கையடக்கமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் தயாரிப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக ஐடியல் கான்சீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விற்பனை அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 smart phone pistol

Quran

நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும், காலைப் பொழுதை அடையும் போதும், அந்தி நேரத்திலும், நண்பகலிலும் அல்லாஹ்வைத் துதியுங்கள்! வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே புகழனைத்தும்.
30:17,18

இஸ்லாத்திற்கும் . இஸ்லாமியர்களுக்கும் எதிராக தான் பிரச்சாரம்

சினிமாவில் மட்டும் அல்ல ஊடகங்கள் மற்றும் உலக நாடுகளும் இஸ்லாத்திற்கும் . இஸ்லாமியர்களுக்கும் எதிராக தான் பிரச்சாரம் செய்து வருகிறது

ஆனாலும் இந்த மார்க்கத்தின் வளர்ச்சியை மட்டும் யாராலும் தடுக்க முடிய வில்லை 


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அமெரிக்காவில் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட மக்களின் என்னிக்கை அதிகம்...

பல் வலிக்கு ஒரு மருந்து...பல்வலி 10 நிமிடத்தில் நிவாரணம்


பல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும்.
------------------------------------------------------------------------------------------------------
எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 40% வரை அதிகரிப்பு


கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

2016–17–ம் நிதியாண்டில் இன்சூரன்ஸ் கட்டணங்களை  உயர்த்திக்கொள்வதற்கு காப்பீடு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ. அனுமதி அளித்து உள்ளது.

அதன்படி 1000 சி.சி. திறன் கொண்ட சிறிய வகை கார்களுக்கான காப்பீடு தொகை 40 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்த கார்களுக்கான இன்சூரன்ஸ் தொகை இனி 2,055 ரூபாயாக உயருகிறது.

இதைப்போல 1000 மற்றும் 1500 சி.சி. திறன் கொண்ட ‘பி’ பிரிவு கார்களுக்கான காப்பீடும் 40 சதவீதம் உயர்த்தப்பட்டு 2,237 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

எனினும் 1,500 சி.சி.க்கு அதிகமான திறன் கொண்ட செடான் வகை உயர்ரக கார்களுக்கு 25 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது.

இதைப்போல மோட்டார் சைக்கிள்களுக்கும் இன்சூரன்ஸ் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி 75 சி.சி.க்கு கீழ் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு 9.6 சதவீதமும், 75 முதல் 150 சி.சி. வரை திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான காப்பீடு 15 சதவீதமும் உயர்த்தப்பட்டு உள்ளது.

150 சி.சி. முதல் 350 சி.சி. வரை திறன் கொண்ட பிரீமியம் வகை மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது.

ஐ.ஆர்.டி.ஏ.வின் புதிய முறைப்படி ஆட்டோக்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 3.2 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

புகைத்தலால் ஏற்படும் புதிய ஆபத்து!


smoking_002புகைப்பிடித்தலால் நுரையீரல் பாதிக்கும், புற்றுநோய் உண்டாகும் என இதுவரையான காலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது இவற்றினை விடவும் மற்றுமொரு பாதிப்பு இருப்பதாக நியூயோர்க்கில் அமைந்துள்ள NYU Langone மருத்துவ நிலையம் மற்றும் Laura and Isaac Perlmutter புற்றுநோய் நிலையம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படையாகியுள்ளது.
அதாவது நமது வாயில் நன்மை பயக்கக்கூடிய 600 வகையான பக்டீரியா இனங்கள் காணப்படுவதாகவும், புகைப்பதன் ஊடாக இவ் வகை பக்டீரியாக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வாயிலுள்ள நன்மை பயக்கும் பக்டீரியாக்கள் பாதிக்கப்படுவதனால் பல்வேறு உடல் உபாதைகள் அவை ஏற்படுத்துகின்றன என எச்சரித்துள்ளனர்.

கூகுள் புகைப்படத்தில் புத்தம் புதிய வசதி


google_photos_002புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ எடிட்டிங் உட்பட பல வசதிகளுடன் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனே கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆகும்.
தற்போது இம் மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட் சாதனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இப் பதிப்பில் எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை மீண்டும் பழைய நிலைக்கு (Undo Edits) மாற்றக்கூடிய வசதி கூடுதலாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ் வசதியினைப் பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட போட்டோவினை சேமிக்கும்போது அது ஒரிஜினல் போட்டோவின் மேல் தவறுதலாக சேமிக்கப்படின் மீண்டும் ஒரிஜினல் போட்டோவை பெறுவதற்கு பயன்படக்கூடியதாக இருப்பதும் விசேடமாகும்.

உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் தர்பூசணி ஸ்மூத்தி!


29-1459255529-5-watermelonஉடலினுள் உள்ள நச்சுக்களை நீக்கினாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு கெமிக்கல் முறை முற்றிலும் ஒத்து வராத ஒன்று என்பதை மனதில் வைத்து கொள்ள வெண்டும். உடலின் நச்சு தன்மைகளை நீக்க இயற்கையான முறைகளை பின்பற்றுதல் அவசியம்.
 
இயற்கையான பழங்கள் காய்கறிகளை வைத்து இதை நல்ல முறையில் செய்ய முடியும். பழம் மற்றும் காய்களை மிருதுவாக்கி அதை வைத்தே உடலின் நச்சுக்களை நீக்க முடியும். காய் மற்றும் பழங்களை மிருதுவாக்கி அதாவது ஸ்மூத்திகளாக செய்து உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இடைப்பட்ட உணவுகளை திட்டம் தீட்டி கொள்ள வேண்டும்.
 
இவற்றை முறையான நேரங்களில் உட்கொள்வதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களைப் போக்கி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும்
 
ஸ்மூத்தி செய்ய அவசியமானவை பொதுவாக ஸ்மூத்தி செய்ய நல்ல தரமான பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலின் மெட்டாபாலிக் தன்மை, வைட்டமின், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சத்துக்கள் போன்றவற்றை அதிகரிக்க முடியும்.
 
டயட் பாதிக்காது பல விதங்களில் ஸ்மூத்திக்களை செய்ய முடியும். இதனால் உங்கள் டயட் பாதிக்காத படி உங்கள் உடலின் நச்சு தன்மைகளை நீக்க முடியும். பெர்ரிப் பழங்கள், கேரட், கீரைகள் மற்றும் காய்கறிகள், போன்றவைகள் உங்கள் உடலுக்கு மிக மிக தேவை.
 
கிரான்பெர்ரி, தர்பூசணி, அன்னாசி, கிவி மேற்கூறிய பழங்கள் மிகவும் நல்லது. முறையான அளவில் இவற்றை உட்கொளவதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கவும் கெட்ட சக்தியை வெளியேற்றவும் முடியும். இந்த ஸ்மூத்தியில் நீங்கள் சில ஆரோக்கியமானவற்றை சேர்த்தாலும் ஆரோக்கியம் தான்.
 
சியா விதை உங்கள் ஸ்மூத்தியில் சியா விதைகளை சேர்த்து கொள்ளவும். சால்மன் மீனை விட இதில் 8 மடங்கு ஒமேகா-3 அமிலக்கூறுகள் அதிகமாக உள்ளன. பாலை விட 6 மடங்கு அதிகமாக கால்சியம் உள்ளது மற்றும் கீரையை விட 3 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து உள்ளது.
 
வாழைப்பழத்தை விட 2 மடங்கு அதிகமாக பொட்டாசிய சத்தும் ப்ராக்கோலியை விட 15 மடங்கு மெக்னீசியமும், ப்ளாக்ஸை விட 2 மடங்கு நார்ச்சத்தும், கிட்னி பீன்ஸ்களை விட 6 மடங்கு புரதமும், அவலை விட 4 மடங்கு செலினியமும், ஒரு முழு கோப்பை பாலை விட 9 மடங்கு பாஸ்பரசும் மற்றும் ப்ளுபெர்ரியை விட ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு கூறுகள் நிறைந்ததாகவும் உள்ளது.
 
தர்பூசணி ஸ்மூத்தி செய்ய தேவையானவை தர்பூசணி – 3 கப் (துண்டுகளாக்கப்பட்டது) பச்சை திராட்சை – 1 கப் எலுமிச்சை – 1-2 மிளகுத் தூள் – 1 சிட்டிகை இளநீர் – 1/4 கப்
 
செய்முறை
 
* முதலில் தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.
 
* பின் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து பரிமாறினால், தர்பூசணி ஸ்மூத்தி ரெடி!

மதுக்கூர் மைதின் கைது பின்னணி என்ன ???


இஸ்லாமிய ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் மதுக்கூர் மைதின் அவர்களை நேற்று ( 30.3.2016) மாலை 3 மணியளவில் காவல்துறையினால் அழைத்து செல்ல பட்ட பிறகு எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில். அவர் ஒரு இஸ்லாமியன் அதற்காக அவருகாக துவா செய்வோம் என்று துவா செய்த நல் உள்ளம் கொண்டவர்களுகாக இந்த தெளிவான பதிவு .
நேற்று பட்டுக்கோட்டையில் அஜிஸ் ( வினாயகர் சதுர்த்தின் போது வெட்டு பட்ட சகோதரர் ) என்ற சகோதரரை காவல்துறை அழைத்து சென்று உள்ளது .
அழைத்து சென்ற காவல்துறை அஜிஸை காட்டு மீராண்டி தனமாக தாக்கி உள்ளனர்
( குறிப்பு - அஜிஸின் தம்பி கூறுகையில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் அடித்து உள்ளனர் )
இதை அறிந்த அதிராம்பட்டினம் சகோதரர் ஒருவர் காவல் நிலையத்திற்கு விசாரிக்க சென்று உள்ளார் .
அந்த சகோதரரை காவல்துறையினர் கேவலமாக பேசி , அசிங்க படுத்தி அனுப்பி உள்ளனர் .
இந்த தகவலை இஸ்லாமிய ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதினிடம் அஜிஸின் தம்பி கூறி உள்ளார் .
இதை அறிந்தவுடன் ,இதை போல் பல குற்றச்சாட்டுகள் பட்டுக்கோட்டை காவல்துறையின் மீதும், மேலும் குறிப்பாக SI மதன் குமார் மேலும் இதற்கு முன்பு வந்து உள்ளதால் , சகோதரர் மதுக்கூர் மைதின் காவல் நிலையத்திற்கு சென்று உள்ளார்
( குறிப்பு - பட்டுக்கோட்டை காவல்துறையை கண்டித்தும் , SI மதன் குமாரை கண்டித்தும் நான்கு மாதம் முன்பு அதிராம்பட்டினத்தில் போராட்டம் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பாக நடைப்பெற்றது)
காவல் நிலையம் சென்ற சகோதரர் மைதினிடம் சிறிது நேரம் பேசி விட்டு அங்கு இருந்த காவல்துறை ,
சகோதரர் மைதினிடம் ASP அர்விந்த் அழைத்ததாக கூறி உள்ளார் .
அழைப்பது Asp என்பதால் , சகோதரர் மதுக்கூர் மைதின் Asp யை சந்திக்க சென்று உள்ளார்.
அங்கு சென்றவுடன் Asp யிடம் சகோதரர் மதுக்கூர் மைதின் , சகோதரர் அஜிஸ் பற்றியும், மற்றும் அதிரை சகோதரர் பற்றியும் பேசி உள்ளார் .
இதை கேட்டு கொண்டு இருந்த Asp அர்விந்த் இது சம்பந்தமாக எந்த ஒரு பதிலையும் தராமல்
நீங்கள் எல்லாம் காவல் நிலையத்திற்கு வர கூடாது , மீறி வந்தால் வருகின்ற எல்லோரும் மீது வழக்கு போடுவேன் என்று கூறி உள்ளார் .
ஏன் நாங்கள் வர கூடாது என்று கேள்வி கேட்டதற்கு எந்த பதிலும் Asp தர வில்லை .
ஆனால் பிரச்சனை வளர்க்கும் விதமாகவே Asp பேசி உள்ளார்
உதாரணமாக - நீங்கள் எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான் தேர்தல் முடியட்டும் என்று குறி உள்ளார்.
அப்போது மைதின் ஏன் தேர்தல், இப்பவே சொல்லுங்கள் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு
நீங்கள் எல்லாம் ஒரு ஆளு திமுக விற்க்கு ஆதரவு கொடுக்குறிங்க , ஏன் அதிமுக விற்கு ஆதரவு கொடுக்க மாட்டிங்களோ .
அது என்ன எல்லோரும் ஒரே மாதிரி போரிங்க என்று கேட்டு உள்ளார் .
இதில் ஆத்திரம் அடைந்த மதுக்கூர் மைதின் கூட்டணிக்கு போவதும் , ஆதரவு கொடுப்பது எங்கள் ஜனநாயக உரிமை என்று வாக்கு வாதத்தில் இடுபட்டு உள்ளார் .
இதில் வாக்கு வாதம் அருகில் இருந்த காவல்துறையிடம் தள்ளு முள்ளு வரை சென்று உள்ளது .
இதில் ஆத்திரம் அடைந்த Asp எவன் உன்னை பார்க்க வருகிறான் பார்ப்போம் என்று கூறி , கையில் இருந்த தொலைபேசியை வாங்கி switch off செய்து விட்டு இரவு 9:30 மணி வரை Asp அலுவலகத்தில் வைத்து உள்ளனர் .
அதன் பிறகு போலியாக வழக்கு பதிவு செய்து (போலி வழக்கு 506{॥} மற்றும் 386 பதிவு செய்து remand செய்து உள்ளனர் .
இச் சமுதாயத்தின் எதிரியான காவல்துறையும் , உளவு துறையும் இச் சமூகத்திற்காக போராடும் ஒருவர் மீது போலி வழக்கு போடுகிறான் என்றால் இதுவே நாம் நமது இலக்கை நோக்கி சரியாக செல்கிறோம் என்ற அத்தாட்சி .
அல்லாஹ் உதவி செய்வான் .
இப்போது மதுக்கூர் மைதின் பட்டுக்கோட்டை சப் ஜெயிலில் உள்ளார் .
சட்ட ரிதியாக நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளது .
பெயிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறைவன் நாடினால்...
திங்கள் அல்லது செவ்வாய் கிழமைக்குள் ஜாமின் கிடைத்து விடும்.
அவரின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் .

சுப வீர பாண்டியன் அழகாக பதிலளிக்கிறார்!


டவுசர் பார்ட்டிகளுக்கு சுப வீர பாண்டியன் அழகாக பதிலளிக்கிறார்!

Posted by Nazeer Ahamed on Thursday, March 31, 2016

பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு.

பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு... சாத்தியப்படுத்திய நிதிஷ்!
மதுவினால்தான் குழந்தைகளின் கல்வியும், எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது. மதுவினால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்" கடந்த ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமார் அளித்த வாக்குறுதி....விரிவாக படிக்க 

உறுப்பினர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பது


தாடி வைக்காத உறுப்பினர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பது ஏன்...

தாடி வைக்காத உறுப்பினர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பது ஏன்...

Posted by தவ்ஹீத் வீடியோ on Thursday, March 31, 2016

வீட்டை வடிவமைப்பதில் புது டிரெண்ட்


Desktop1_2771943fவீட்டை வடிவமைக்கும் போது எது புது டிரண்டு, எது பழைய டிரண்டு என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? கடந்த ஆண்டு டிரண்டிங்கில் இருந்த சில பொருட்கள், இந்த ஆண்டும் டிரண்டிங்கில் இருக்கின்றன. அதேமாதிரி, சில புதிய வடிவமைப்பு டிரண்டுகளும் இந்த ஆண்டு அறிமுகமாகி யிருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொண்டால், வீட்டை எளிமையாக ‘அப்டேட்’ செய்துவிடலாம். அப்படி, டிரண்டிங்கில் இருக்கும் சில வடிவமைப்புகள்:
கிராஃபிக் டைல்ஸ்
இந்த டிரண்டு நீண்ட காலமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், இன்னும் சில காலங்களுக்கு இந்த டிரண்டு நீடிக்கப்போகிறது. கிராஃபிக் டைல்ஸ் வீட்டின் தோற்றத்தைப் பிரம்மாண்டமாக்கிக் காட்ட உதவும். அத்துடன், வீட்டுக்கு ஒரு பாரம்பரிய தோற்றத்தையும் கொடுக்கும். இந்த டைல்ஸ் நீண்ட காலத்துக்கு உங்கள் வீட்டில் இருக்கும் என்பதால், அதன் வடிவமைப்பை உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுப்பது நல்லது. வீட்டின் சுவர்களை அலங்கரிக்க இந்த கிராஃபிக் டைல்ஸ் சிறந்த தேர்வு.
பிரியும் சோஃபாக்கள்
‘செக் ஷனல் சோஃபாக்கள்’ எனப்படும் இந்தப் பிரியும் சோஃபாக்கள் இந்த ஆண்டும் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கப்போகின்றன. சிறிய வரவேற்பறையிலும் இந்த ‘செக் ஷனல் சோஃபா’க்களைப் பயன்படுத்தமுடியும். இந்த சோஃபாவை அறையின் மூலைகளில் வைப்பதால், வரவேற்பறையின் நடுவே நிறைய இடம் கிடைக்கும். ‘எல்’, ‘யூ’, ‘அரை வட்டம்’ போன்ற வடிவங்களில் இந்த சோஃபாக்கள் கிடைக்கின்றன.
கருப்பு ஜன்னல் ஃப்ரேம்கள்
ஜன்னல்களைக் கருப்பு ஃப்ரேம்களுடன் வடிவமைப்பது இப்போதைய டிரண்டுகளில் ஒன்று. ஜன்னல்கள் வீட்டுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் வீட்டின் வடிவமைப்பிலும் ஜன்னல்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதனால், இந்தக் கருப்பு ஜன்னல்கள் ஃப்ரேம்கள் டிரண்டுக்கு வந்திருக்கின்றன.
படிக்கட்டுகளும், மையப்புள்ளியும்
படிக்கட்டுகள் அறையின் மையப்புள்ளியில் (Focal point) வந்து முடியும்படி வடிவமைப்பதும் இந்த ஆண்டின் டிரண்டாக இருக்கும். இந்த வடிவமைப்பு அறையின் தோற்றத்தைக் கூடுதல் அர்த்தமுள்ளதாக்கும்.
காற்று வரட்டும்
அறைகளின் பிரிப்பான்களை இப்போது காற்றோட்டத்துடன் அமைப்பது அதிகரித்துவருகிறது. இந்தக் காற்றோட்டமான பிரிப்பான்களால் எல்லா அறைகளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தமுடியும். சமையலைறையில் வேலைப்பார்த்துக்கொண்டே குழந்தைகள் அறையைக் கண்காணிக்கும் வசதியை இந்தக் காற்றோட்டமான பிரிப்பான்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
அலங்கார விளக்குகள்
அறைகளில் அலங்கார விளக்குகளை அமைப்பது எப்போதும் இருக்கும் டிரண்டுதான். எளிமையான அறையைக்கூட ஒரே அழகான விளக்கை வைத்துப் பிரம்மாண்டமாக மாற்ற முடியும்.
சாப்பிடும் அறை தேவையில்லை
வீடுகளில் வரவேற்பறையே அருகிவரும் இந்தக் காலக்கட்டத்தில் சாப்பிடும் அறை தேவையில்லை என்று சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தனியாகச் சாப்பிடும் அறை அமைப்பது இப்போதைய டிரண்டு இல்லை. அதற்குப் பதிலாக சமையலறை மேசையின் ஒரு பகுதியைச் சாப்பாட்டு மேசையாகப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.
பொருந்தாத பொருட்கள்
இந்த டிரண்டில் ‘மிஸ்மேட்ச்சிங்’ வடிவமைப்பும் இருக்கிறது. முற்றிலும் பொருந்தாத ஒரு பொருளை வைத்து ஒரு வடிமைப்பை உருவாக்குவதுதான் ‘மிஸ்மேட்ச்சிங்’ வடிவமைப்பு. இந்த வடிவமைப்பைச் சரியாகச் செய்தால் வீட்டை வித்தியாசமாக அலங்கரிக்க முடியும்.

முன்னுதாரணக் கட்டிடம்


example_2780949fசென்ற ஆண்டின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்று இது; ருவாண்டாவில் கிராமப் பகுதியில் மருத்துவமனைப் பணியாளருக்காக அமெரிக்க வடிவமைப்பாளர் சரோன் டேவிஸ் உருவாக்கிய குடியிருப்புக் கட்டிடம்.
ருவாண்டாவில் ருவின்குவேசூ என்னும் மலைக் கிராமத்தில் கிராமப்புறத்தாருக்கான ருவின்குவேசூ மருத்துவமனை அமைந்துள்ளது. 110 படுக்கைகள் கொண்டது இந்த மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வெகு தூரத்தில் இருந்து வரவேண்டியுள்ளது. அவர்கள் தங்குவதற்கான வசதி வாய்ப்புகள் அருகில் இல்லை. இதனால் தேவையற்ற கால விரையமும் பணமும் செலவாகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு மருத்துவமனைக்கு அருகிலேயே இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளாது. இரு தொகுதிகளாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பில் ஊழியர்கள் பங்கீட்டு முறையில் வசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. “கிராமத்துக்குள் ஒரு கிராமத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் டேவிஸ்.
இந்தக் குடியிருப்பின் சிறப்பு என்னவென்றால் முழுக்க முழுக்க உள்ளூர்க் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கைகளால் உருவாக்கப்பட்ட மரபான செங்கற்களையும் யூகலிப்படஸ் மரங்களையும் கட்டுமானப் பொருள்களாகக் கொண்டு இந்தக் கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கி முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் இயற்கைக் கட்டிடத்துக்கான சிறந்த முன்னுதாரணக் கட்டிடமாகத் திகழ்கிறது.

சத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 7 பேர் பலி


dantewadaராய்ப்பூர், மார்ச் 30-

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 7 பேர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் படையினர் சாதாரண உடையில் வாகனங்களில் சென்றனர். மாலை 4 மணியளவில் காட்டுப்பகுதியில் மேலவாடா கிராமத்தில் சென்றபோது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், ஒரு வாகனம் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. 

இதில், அந்த வாகனத்தில் சென்ற 7 வீரர்களும் உடல் சிதறி பலியாகினர். கண்ணிவெடி வெடித்த இடத்தில் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் மாவோயிஸ்டுகள் திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலும் படைகள் வரவழைக்கப்பட்டன.

பாதுகாப்பு படையினர் 7 பேர் பலியான தகவலை உள்துறை அமைச்சர் சட்டசபையில் தெரிவித்தார்.

புதுச்சேரியின் ஊசுட்டேரியில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள்


புதுச்சேரியின் வேடந்தாங்கல் என்றழைக்கப்படும் ஊசுட்டேரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. விதவிதமான பறவைகளைக் காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதுச்சேரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஊசுட்டேரி. இந்த ஏரியின் அமைதியான சூழ்நிலையால் ஈர்க்கப்பட்டு ஆண்டுதோறும் 110 வகையான உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பறவைகள் வந்து செல்கின்றன. தற்போது ஊசுட்டேரில் சீசன் துவங்கியுள்ளதையொட்டி ஆயிரக்கணக்கான பறவைகள் குவியத் துவங்கியுள்ளன. ஏரியில் எங்கு திரும்பினாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பறவைகளாக காட்சியளிக்கின்றன.

குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வட ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து விருந்தாளியாக புதுச்சேரிக்கு வந்துள்ள கரண்டிவாயன், ஸ்பாட் பில்டு பெலிக்கான் என்ற புள்ளிமூக்கு கூழைக்கடா பறவைகள் ஆழம் குறைந்த ஊசுட்டேரி நீர் நிலைகளில் உள்ள மரங்களில் கூடுகளை கட்டி வாழ்கின்றன.

பறவைகளைப் புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலையில் ஊசுட்டேரியில் பலர் குவிகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் ஊசுட்டேரி படகு குழாமில் படகுகளை எடுத்துக்கொண்டு ஏரிக்குள் சிறிது தூரம் சென்று பறவைகளைக் கண்டு மகிழ்வது மட்டுமின்றி அவை எழுப்பும் இனிமையான ஒலிகளையும் கேட்டு ரசிக்கின்றனர்.

வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு


சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் இன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஆர். ரமணன். இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி முடித்தார்.
பின்னர், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 1980 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னை விமான நிலையம் வானூர்தி வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்துகொண்டே பதவி உயர்வுக்கான பல தேர்வுகளையும், சென்னை பல்கலையில், பி.எச்டி ஆய்வு பட்டம் படித்து முனைவர் பட்டம் பெற்றார்.   2002 -ஆம் ஆண்டு முதல் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்து வரும் ரமணன் இன்று பணி ஒய்வு பெறுகிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ரமணன் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் என் மீது வைத்திருக்கும் அன்பை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு சிறுவயது முதல் இயற்கை மீது ஆர்வம் அதிகம் அதனால்தான் இந்த துறையை தேர்ந்தெடுத்து பணிக்கு வந்தேன்.
நான் பணியில் சேர்ந்தபோது இந்த துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் அந்த அளவுக்கு இல்லை. தற்போது செயற்கைகோள், ரேடார், துருவ வட்டங்கள் போன்றவற்றில் இருந்து அனுப்பப்படும் படங்கள் துல்லியமாக உள்ளன. மேலும் கணினி சார்ந்த கணிப்புகளும் மேம்பட்டுள்ளது.
அடுத்ததாக தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் இடையே வானிலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேச்சுகளில் ஈடுபட உள்ளேன் என்று கூறினார்.
ramanan

நேர்மைமிக்க அதிகாரிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரப்படுத்த வேண்டும்!

குஜராத் கலவரம்: 300 இஸ்லாமிய மாணவ மாணவிகள் படிக்கும் மதரஸா. அந்த மதரஸாவில் பயிலும் அத்தனை குழந்தைகளையும் கொல்ல ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், பிஜேபி காவி வெறியர்கள் நெருங்குகின்றனர். இது பற்றி மேலிடத்துக்கு புகார் அளிக்கிறார் காவல் துறை அதிகாரி ராகுல் ஷர்மா. ஆனால் மோடியின் அதிகாரிகளிடமிருந்து 'நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்' என்ற உத்தரவு வருகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகிறார் ராகுல் ஷர்மா.மோடி அரசின் உத்தரவை காலில் போட்டு மிதித்து விட்டு கலவரக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கிறார். துப்பாக்கி சப்தம் கேட்டவுடன் கலவர நாய்கள் ஓட்டமெடுக்கின்றது. 300 க்கு மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர்.'ஒரு நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு அந்த மக்களை கொல்ல துணை போவதா? இப்படிப்பட்ட ஒரு பாசிச அரசுக்குக் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை' என்று வேலையை ராஜினாமா செய்தார் ராகுல் ஷர்மா!ராகுல் ஷர்மா போன்ற நேர்மைமிக்க அதிகாரிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரப்படுத்த வேண்டும்!󾮚󾮚󾮚

Posted by Jeddah TNTJ on Thursday, March 31, 2016
குஜராத் கலவரம்: 300 இஸ்லாமிய மாணவ மாணவிகள் படிக்கும் மதரஸா. அந்த மதரஸாவில் பயிலும் அத்தனை குழந்தைகளையும் கொல்ல ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், பிஜேபி காவி வெறியர்கள் நெருங்குகின்றனர். இது பற்றி மேலிடத்துக்கு புகார் அளிக்கிறார் காவல் துறை அதிகாரி ராகுல் ஷர்மா. ஆனால் மோடியின் அதிகாரிகளிடமிருந்து 'நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்' என்ற உத்தரவு வருகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகிறார் ராகுல் ஷர்மா.
மோடி அரசின் உத்தரவை காலில் போட்டு மிதித்து விட்டு கலவரக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கிறார். துப்பாக்கி சப்தம் கேட்டவுடன் கலவர நாய்கள் ஓட்டமெடுக்கின்றது. 300 க்கு மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர்.
'ஒரு நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு அந்த மக்களை கொல்ல துணை போவதா? இப்படிப்பட்ட ஒரு பாசிச அரசுக்குக் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை' என்று வேலையை ராஜினாமா செய்தார் ராகுல் ஷர்மா!
ராகுல் ஷர்மா போன்ற நேர்மைமிக்க அதிகாரிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரப்படுத்த வேண்டும்!

தீவிரவாதிகள் இந்தியாவின் இறையான்மையை சொல்லி தருவதா ???



பாரத் மாதா கீ ஜெய் என்று கூற மறுத்த மதரஸா மாணவர்கள் மீது தாக்குதல்!-
ஒருவரது கை ஒடிந்தது!
புதுடெல்லி:
டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதரஸா இடைவேளையில் பூங்காவிற்கு வந்த மாணவர்களிடம், 5 பேரைக் கொண்ட இந்துத்துவா வெறிக் கும்பல், ’பாரத் மாதா கீ ஜெய்’ என்று கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதற்கு மறுத்த காரணத்தால் மாணவர்களை அக்கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
இத்தாக்குதலில் தில்காஷ் என்ற 17 வயதான மதரஸா மாணவரின் கை ஒடிந்தது.2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையான்மை காக்கிண்றோம் என்ற பெயரில் காவி பாசிச சக்திகள் தொடர்ச்சியாக மத வெறிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இஸ்லாமியர்களுக்கு,காந்தியை சொட்டு கொன்ற காவி தீவிரவாதிகள் இந்தியாவின் இறையான்மையை சொல்லி தருவதா ???

பாரத் மாதா என்று இந்த பெண்ணைச் சொல்லலாம்!

பாரத் மாதா என்று இந்த பெண்ணைச் சொல்லலாம்!-------------------------------------------------------------------கடைவீதியில் தினமும் மாமூல் வாங்கும் ஒரு கான்ஸ்டபிளை ஒரு இஸ்லாமிய பெண்மணி துவைத்து எடுப்பதை பாருங்கள். அநீதிக்கு எதிராக கொதித்தெழும் இவர்தான் உண்மையான பாரத மாதா!'காவல் துறையில் உள்ள நீங்களே இப்படி ஏழைகளிடம் திருடினால் உங்களிடம் எப்படி இவர்கள் புகார் செய்ய முடியும்? ஏழை மக்களான இவர்களிடமிருந்து தண்ணீர் வாங்குகிறாய், மளிகை சாமான்கள் வாங்குகிறாய். எதற்கும் பணம் கொடுப்பதில்லை. கேட்டால் மிரட்டுகிறாய்.''நான் கேட்கவில்லை.... அவர்களாகத்தான் கொடுத்தார்கள்''சுப்.... வாயை மூடு. வேலையில் சேரும் போது லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி மொழி கொடுத்தாயே... அந்த உறுதி மொழி எங்கே? இந்த கொடுமையை பொதுமக்களாகிய நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.'இந்த இஸ்லாமிய பெண்மணியின் கோபத்தைக் கண்டு அந்த கடைவீதியே அதிர்ச்சியில் உறைந்து போனது. இது போன்று இந்திய தாய்மார்கள் களமிறங்கினால் லஞ்சமும் திருட்டும் நம் நாட்டில் என்றோ மறைந்திருக்கும். கற்பனை உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டு 'பாரத் மாதா கீ ஜே' என்று கூவி வரும் அரை டவுசர்களே! உண்மையான பாரத மாதா இவர்தான். இவருக்கு ஜே போடு. குற்றங்களாவது நாட்டில் குறையும்.

Posted by Nazeer Ahamed on Wednesday, March 30, 2016


-------------------------------------------------------------------

கடைவீதியில் தினமும் மாமூல் வாங்கும் ஒரு கான்ஸ்டபிளை ஒரு இஸ்லாமிய பெண்மணி துவைத்து எடுப்பதை பாருங்கள். அநீதிக்கு எதிராக கொதித்தெழும் இவர்தான் உண்மையான பாரத மாதா!

'காவல் துறையில் உள்ள நீங்களே இப்படி ஏழைகளிடம் திருடினால் உங்களிடம் எப்படி இவர்கள் புகார் செய்ய முடியும்? ஏழை மக்களான இவர்களிடமிருந்து தண்ணீர் வாங்குகிறாய், மளிகை சாமான்கள் வாங்குகிறாய். எதற்கும் பணம் கொடுப்பதில்லை. கேட்டால் மிரட்டுகிறாய்.'

'நான் கேட்கவில்லை.... அவர்களாகத்தான் கொடுத்தார்கள்'

'சுப்.... வாயை மூடு. வேலையில் சேரும் போது லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி மொழி கொடுத்தாயே... அந்த உறுதி மொழி எங்கே? இந்த கொடுமையை பொதுமக்களாகிய நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.'

இந்த இஸ்லாமிய பெண்மணியின் கோபத்தைக் கண்டு அந்த கடைவீதியே அதிர்ச்சியில் உறைந்து போனது. இது போன்று இந்திய தாய்மார்கள் களமிறங்கினால் லஞ்சமும் திருட்டும் நம் நாட்டில் என்றோ மறைந்திருக்கும்.

கற்பனை உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டு 'பாரத் மாதா கீ ஜே' என்று கூவி வரும் அரை டவுசர்களே! உண்மையான பாரத மாதா இவர்தான். இவருக்கு ஜே போடு. குற்றங்களாவது நாட்டில் குறையும்.

தப்லிக் ஜமாஅத் என்போர் யார்...


தப்லிக் ஜமாஅத் என்போர் யார்...

தப்லிக் ஜமாஅத் என்போர் யார்...

Posted by தவ்ஹீத் வீடியோ on Thursday, March 24, 2016

சூடாக காப்பி, டீ குடிப்பவரா?


சூடாக குடிப்பவர் என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”
இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.
சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகை யையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.
* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.
* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.
* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.
இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர்.
ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங்கல்ல..

சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால்,

 உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காணவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.
தொலைந்த சொத்து பத்திரங்களை யாராவது கண்டெடுத்து, வழக்கறிஞரிடம் தந்தால், நாம் அந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கிடைக்கவில்லை எனில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரங்களின் நகலை (Certified Copies of the Documents) காணாமல் போன அசல் (Original) ஆவணங்களுக்கு பதிலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இப்படி அசல் பத்திரம் காணாமல் போன சொத்துக்களை வாங்குபவர் கவனிக்க வேண்டியவை என்ன என்பதைப் பார்ப்போம்.
காவல் நிலையத்தில் புகார் செய்தபின், அசல் சொத்துப் பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல் நிலையம் தரும் சான்றிதழ், பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்கள் போன்ற ஆவணங்களை, தங்களின் வழக்கறிஞரிடம் காண்பித்து அவர் ஒப்புதல் தரும்பட்சத்தில் அந்தச் சொத்தை வாங்கிக்கொள்ளலாம்.
புதிதாக பதிவு செய்யும் சொத்து ஆவணத்தில் அடுத்து வரும் வாசகம் கட்டாயம் இடம்பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். “இந்தச் சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று விற்பவராகிய நான் உறுதி அளிக்கிறேன். பிற்காலத்தில் இந்த சொத்தில் எந்த வில்லங்கம் ஏற்பட்டாலும், விற்பவராகிய நான் முன்னின்று என் செலவில் வில்லங்கத்தை சரிசெய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்”.
அசல் ஆவணம் இல்லாத சொத்தின் மேல், வங்கியில் கடன் வாங்கும்போது சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. முன்னர் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் சில வங்கிகள் கடன் வழங்க தயக்கம் காட்டக்கூடும். ஏனெனில், முன்பெல்லாம் சொத்தின் ஆவணங்களை கொலாட்ரல் செக்யூரிட்டியாக (Collateral Security) கொடுத்து, வங்கியில் கடன் பெறுவார்கள். ஆனால், பத்திரப் பதிவு அலுவலகத்தில் அவ்வாறு கடனுக்காக கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுப்பதைப் பதிவு செய்யமாட்டார்கள். அதனால் கடன் பெறுவது வில்லங்கச் சான்றிதழில் தெரியாது.
ஒரு சிலர் பல்வேறு காரணங்களால் தாங்கள் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடனைக் கொடுக்காமல், மேற்கூறியவாறு சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டது என்று காவல் நிலையத்திலும், பின்பு பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்து வழக்கறிஞரிடம் சான்று பெற்று சொத்தினை விற்றுவிடுவார்கள். பிற்காலத்தில் சொத்தை வாங்கியவரும், கடன் கொடுத்த வங்கியும் நீதிமன்றங்களை நாடும். பொதுவாக, கடன் கொடுத்த வங்கிதான் வெற்றி பெறும். ஆனாலும் நீண்ட கால தொல்லைகள் உண்டாகும். வாங்கியவருக்கும் நஷ்டம் ஏற்படும்.
இதுமாதிரியான தவறுகள் நடக்காதிருக்க, தற்போது வங்கியில் ஆவணங்களை வைத்துக் கடன் பெற்றால், Memorandum of Deposit of Title Deeds (MOD) என்ற ஆவணம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். இது வில்லங்க சான்றிதழில் தெரியவரும். இந்தமுறை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பொதுவாக, சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அந்த சொத்தின் மதிப்பு, சந்தை (Market) மதிப்பைவிட சற்று குறைவாகவே இருக்கும். மேலும், ஆவணங்களை தொலைத்தவர் கீழ்க்கண்ட முறையை பின்பற்றினால், வாங்குபவருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.
ஆவணங்களை தொலைத்தவர், அவருடைய மனைவி அல்லது மகன் எவருக்காவது அந்த சொத்தினை தான செட்டில்மென்ட் (Settlement Deed) மூலம் எழுதிக் கொடுக்கலாம். இதற்கான செலவு என்பது சொத்தின் மதிப்பு 25,00,000 ரூபாய்க்கு மேல் இருப்பின் ரூ.33,000 வரை செலவாகும். அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், அந்த சொத்தினை வாங்கிய விவரம், சொத்தின் ஆவணங்கள் விவரம், அவை காணாமல் போன விவரம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவரம், வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்த விவரம் ஆகியவற்றை முறையாக எழுதிப் பதிவு செய்யலாம்.
இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை கொண்டு, வீடாக இருந்தால் பட்டா, வீட்டு வரி ரசீது, மின் வாரிய ரசீது ஆகியவற்றை சொத்து செட்டில்மென்ட் செய்தவர் மேல்மாற்றம் செய்துவிடலாம்.
இதனால் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தில் உங்கள் புகைப்படத்துடன், தற்போதைய விலாசம், அதற்குறிய சான்றுகள் ஆகியவை மூலம் நீங்கள்தான் அந்த சொத்தின் உரிமையாளர் எனவும், நீங்கள் அதை மனைவிக்கோ, மகனுக்கோ செட்டில்மென்ட் செய்துவிட்டீர்கள் எனவும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரியவரும். பின்பு உங்கள் மனைவியோ அல்லது மகனோ இந்த சொத்தினை மேற்கூறிய ஆவணங்களைக் காட்டி சுலபமாக விற்கலாம்.

ஆற்றை காக்க ‪#‎பூஜைகள்‬ நடத்தினர் அந்த நிகழ்ச்சில் கோவையை சேர்நத அத்தார் ஜமாத் ‪#‎இமாம்

‪#‎நொய்யல்‬ ஆறு தூய்மை படுத்தல் என்ற நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆற்றை காக்க ‪#‎பூஜைகள்‬ நடத்தினர் அந்த நிகழ்ச்சில் கோவையை சேர்நத அத்தார் ஜமாத் ‪#‎இமாம்‬ கலந்து கொண்டு மாற்று மத கலாச்சாரமான கலசநீர் என்கின்ற தண்ணீரை ‪#‎ஆற்றில்‬ ஊற்றுகிறார். 
ஷிர்கை பகிரங்கமாக செய்யும் இவர் பின்னால் நின்றும் தொழுகிறார்கள்.
இது சுன்னத் ஜமாத்தின் வழி கெட்ட கொள்கை.
‪#‎இது‬ தான் நபி காட்டிய வழியா? 
‪#‎மாநபிவழியை‬ விட்டால் ஷைத்தான் வழி கெடுப்பான் என்பதற்கு இவர்களே ஆதாரம்..
‪#‎காசிற்க்காக‬ ‪#‎மார்க்கத்தை‬ ‪#‎விற்கும்‬ ‪#‎பரலேவிகள்‬.

சர்க்கரை நோயை உணவு மூலம் சரிசெய்யலாம் !!!


நெல்லிக்காய் பெரியது (காட்டு நெல்லி அல்லது முழு நெல்லிக்காய் என்றும் சொல்லப்படும்) துவர்ப்பு சுவை கொண்டது இரண்டு எடுத்துக் கொள்ளவும், கத்திக்கொண்டு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பில்லை பத்திலிருந்து பதினைந்து இலை கழுவி அதோடு சேர்க்கவும். இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு ஒரு டம்ளர் குடிநீர் சேர்த்து அரைக்கவும்.
தேநீர் வடிகட்டியால் வடிகட்டவும். இத்துடன் பத்து சொட்டுகள் எலுமிச்சை சாறு விடவும். ஒரு கரண்டி (பத்து மில்லி ) தேன் சேர்த்து கலக்கவும். காலை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் மெதுவாய் சப்பி சப்பி அருந்தவும். சாப்பிட ஆரம்பிபதற்கு முன் சர்க்கரை அளவை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து திரும்பவும் சர்க்கரை அளவை சோதிக்கவும். நிச்சயம் குறையும். உணவுதான் எனவே பயமின்றி தொடர்ந்து பயன் படுத்தலாம்

இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.
செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.
அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.
அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP ஒரு என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
டோஸ்ட்:
நாம் பொதுவாக காலை உணவாக அதிகம் சாப்பிடுகிற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.
ஓட் மீல்:
ஓட்ஸ் கஞ்சி ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படும்.
கதகதப்பான பால்:
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம் இன்றைக்கு பார்த்த மேலே இருக்கிற 4 உணவுகளுமே புதுசுதான். ஆனா பால் மட்டும் பழசு. ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா? ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.
வாழைப்பழத்தில் இருக்கும் எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமாக உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்!

துரித உணவுகளை தவிர்

துரித உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த காய்கறி, பழங்களே பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன என்பது தான் வியப்பின் உச்சம்.
மரபணு மாற்றம் செய்யப்பட காய்கறி, பழங்கள், நச்சுக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் என பல வகைகள் சந்தையில் கிடைக்கின்றன.
இவற்றை கண்டறிய தான் பி.எல்.யு எனும் குறியீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது.
பி.எல்.யு (PLU) என்பது ‘Price Look Up’ நம்பர் எனப்படுகிறது. நாம் வாங்கும் காய்கறிகள் பழங்கள் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டதா? மரபணு மாற்றம் செய்யபப்ட்டதா? அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை இந்த பி.எல்.யு குறியீட்டு எண்களை வைத்து எளிதாக கண்டறிந்துவிடலாம்.
காய்கறி, பழங்களில் இந்த நான்கு இலக்க குறியீடு இருந்தால் அது வழக்கமான முறையில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என குறிக்கிறது.
குறிப்பாக இவ்வகையான வாழைப்பழங்களில் ‘4011’ என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் வாங்கும் காய்கறி பழங்களில் 8-ல் துவங்கும் ஐந்து இலக்க குறியீட்டு எண் இருக்கிறது எனில், அது மரபணு மாற்றம் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறி பழங்கள் என குறிக்கிறது.
குறிப்பாக இவ்வகையான வாழைப்பழத்தில் ‘84011’ என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் வாங்கும் காய்கறி பழங்களில் 9-ல் துவங்கும் ஐந்து இலக்க பி.எல்.யு குறியீடு எண் இருந்தால் அது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப் பொருள் ஆகும்.
குறிப்பாக இவ்வகையான வாழைப்பழத்தில் ‘94011’ என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இனிமேலாவது நீங்கள் பெரும் கடைகளில் காய்கறி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது அது எவ்வகையானது என்பதை அறிந்துக் கொண்டு வாங்குங்கள்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி உணவுகளை அன்றாடம் உட்கொள்வது நாள்பட புற்றுநோய் கட்டிகள் உடலில் உண்டாக பெரிய காரணியாக இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.