செவ்வாய், 31 ஜனவரி, 2017

மக்கள் விரோத கொள்கையை கண்டித்து SDPI - Social Democratic Party of India#திருச்சி

பொருளாதார கொள்கையில் பாஸிஸம்.
★ கலாச்சாரத்தில் பாஸிஸம்.
★ அரசியலில் பாஸிஸம் ஆகியவற்றை 
புகுந்தி #மக்களுக்கு விரோதமாக செயல்படும் பாரதீய ஜனதா கட்சியின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து SDPI - Social Democratic Party of India#திருச்சி__மாவட்டத்தின் சார்பாக #தலைமை__தபால்__நிலையம் முற்றுகை போராட்டம் இன்று மாலை 4 மணியளவில் நடைப்பெற்றது.
போராட்டத்தில் 100 க்கும் அதிகமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 1 person, outdoor

Image may contain: 5 people


தேசம் முழுவதும் அதிகாலை முதலே ஆரம்பித்துவிட்டது கருப்பு தின அனுசரிப்பு. .

தேசம் முழுவதும் அதிகாலை முதலே ஆரம்பித்துவிட்டது கருப்பு தின அனுசரிப்பு. .
மத்திய பாஸிச பாரதீய ஜனதா கட்சி அரசிற்கு எதிரான கருப்பு தின பிரச்சாரம் மற்றும் central goverment அலுவலகங்களின் முற்றுகை இன்று தேசம் முழுவதும் பரவலாக Social Democratic Party Of India சார்பில் நடைபெற உள்ளது.

Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 1 person

Image may contain: one or more people, people standing and outdoor


ஹஜ் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளம்பரம் இது...

ஹஜ் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளம்பரம் இது...
“ஹஜ்ஜுக்காக அரசு விளம்பரம்” என்பதை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.
Image may contain: phone

#SDPI__செயல்வீர்கள்__மீது__தடியடி

Image may contain: 1 person, standing, crowd and outdoor

Image may contain: one or more people, people walking and outdoor

Image may contain: one or more people, people standing, crowd and outdoor
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து Social Democratic Party of India சார்பாக #கேரள__மாநிலத்தில்__கோழிக்கூடு__வடகரா பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதை பொறுத்து கொள்ள இயலாத பாசிச சக்திகளின் கை பாவகைகளான #கேரள__அரசு ஜனநாயக வழியில் அறப்போராட்டம் நடத்திய #SDPI__செயல்வீரர்களின் மீது தடியடி நடத்தியுள்ளது.
இதை வண்மையாக கண்டிக்கிறோம்.
மத்திய அரசே,தடியடியும்,கொடுஞ்சிறையும் களப் போராளிகளை என்ன செய்யும்.
எதிரிகலும்,துரோகிகளும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

ரயில்வேயை தனியார் மயமாக்கும் முதல் கட்ட முயர்ச்சியாக மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் ரயில்

ரயில்வேயை தனியார் மயமாக்கும் முதல் கட்ட முயர்ச்சியாக மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் ரயில்
ஊட்டி - மேட்டுப்பாளையம்
கல்கா - சிலு குரி- டார்ஜிலிங்
நேரல்_மாத்ரன்
காங்ரா பள்ளத்தாக்கு ஆகிய ரயில்களை கார்பரேட்டுக்களுக்கு தாரைவார்க்க இருப்பதாக தெரிகிறது

No automatic alt text available.

போலிஸ் வெறியாட்டத்தால் ஜாஹீர் உசைன் வீட்டு நிக்காஹ் மட்டுமல்ல நிம்மதியே நாசமாபோச்சு.!

சென்னையில் போலிஸ் வன்முறையால் திருமணமே நின்று போன கொடுமை.!
போலிஸ் வெறியாட்டத்தால் ஜாஹீர் உசைன் வீட்டு நிக்காஹ் மட்டுமல்ல நிம்மதியே நாசமாபோச்சு.!
ஓபிஎஸ் இதற்கு என்ன சொல்வீர்.? 

Image may contain: 5 people, text

IT crackdowns on people depositing black money post #DeMonetisation.


ஒரே நாளில் பொதுமக்கள் நிதியின் மூலம் #6கோடி திரட்டி புது பள்ளிவாசலுக்கு அடிதளமிட்ட அமெரிக்கர்கள்.!

அமெரிக்காவில் ட்ரம்ப் சூழ்ச்சியால் எரிந்த பள்ளிவாசலை
ஒரே நாளில் பொதுமக்கள் நிதியின் மூலம் #6கோடி திரட்டி
புது பள்ளிவாசலுக்கு அடிதளமிட்ட அமெரிக்கர்கள்.!
சர்வாதிகாரத்துக்கு சமாதிகட்டிய மக்கள் புரட்சிக்கு வாழ்த்துகள்.!
Image may contain: house and outdoor

அமெரிக்க விமான தளங்களை இறை இல்லங்களாக மாற்றிய முஸ்லிம்கள்

அமெரிக்கா ஏர்போர்ட்டில்
முற்றுகை போராட்டத்தின் போது 
அமெரிக்க விமான தளங்களை 
இறை இல்லங்களாக மாற்றிய முஸ்லிம்கள்
=====================================
டிரம்மின் விசா தடை அறிவிப்பை எதிர்த்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும் அமரிக்க மக்களால் முற்றுகையிட பட்டு டிரம்முக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க பட்டது
அமெரிக்க விமான நிலைய முற்றுகையின் போது அமெரிக்க விமான தளங்கயை முஸ்லிம்கள் மஸ்ஜித்களாகவே மாற்றினர்
முற்றுகை நேரத்தில் தொழுகைகளை விமான நிலையத்திற்கு உள்ளேயே கூட்டாக முஸ்லிம்கள் நிறைவேற்றினர்
அந்த அழகிய காட்சியை தான் படம் விளக்குகிறது

Image may contain: one or more people, basketball court and indoor


Quran

ஒன்று திரட்டும் நாளில் அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதுவே (தீயவர்களுக்கு) நட்டமளிக்கும் நாள்.அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளை அவரை விட்டும் அவன் நீக்குவான். அவரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
64:09

மாற்றம் ஆரம்பம். நாமும் பின்பற்றுவோம்.

சென்னை சகோதரி தன் அம்மா தெரியாமல் வாங்கிய அந்நிய பால் பாக்கெட்டை திருப்பி அளித்தார்.
மாற்றம் ஆரம்பம்.
நாமும் பின்பற்றுவோம்.
No automatic alt text available.

"நாட்டை ஏமாற்றும் போலிசாமி #ராம்தேவ்"

No automatic alt text available.


பாதஞ்சலி என்ற பெயரில் தயாரித்து கொடுக்கும் ஒரு உணவுபொருளான Patanjali Ghee (நெய்) ல் எண்ணெய் மற்றும் மஞ்சள் நிறம் வருவதற்காக ஆசிட் கலந்துள்ளது உணவுப்பொருள் சோதனைகூட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Missing

At 815 am today our 12 year old daughter Alina Chakravorty, went missing from the gate of her school.(hiranandini foundation school Powai.) She fair, 5ft 5 inches tall and slender. Please help us find her! Please share her picture and look out for herany information however small is valuable. Inform Powai Police station or us at 9820379805.
Image may contain: 1 person, closeup

ரூபாய் நோட்டு தடை பொருளாதார வளர்ச்சி குறையும் – உண்மையை ஒத்துகொண்ட அருண்ஜெட்லி

நாட்டையே உலுக்கிய பிரதமர் மோடியின்  ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால், நடப்பு நிதியாண்டில்(2016-17) பொருளாத வளர்ச்சி 6.5 சதவீதமாகக் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.
இது முன்பு 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் 0.50 சதவீதம் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையுடன் நேற்று தொடங்கியது. மக்கள்அவை, மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் கூட்டாக அமர வைத்து பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அதன்பின், 2016-17ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 3 காலாண்டுகள் அதாவது 9 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளன. இன்னும் 3 மாதங்கள் உள்ளன. இந்நிலையில், 2017-18ம்  நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டும், ரெயில்வே பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பொருளாதார ஆய்வறிக்கை குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது-
பாதிப்பு
நாட்டில் கள்ள நோட்டையும், கருப்புபணத்ைதயும் ஒழிக்க கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.50 சதவீதமாகக் குறையும். இதற்கு முன் பொருளதார வளர்ச்சி என்பது 7.1 சதவீதமாகக் கணிக்கப்பட்டு இருந்தது.
அடுத்த நிதியாண்டு
அதேசமயம், அடுத்த நிதியாண்டான 2017-18ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருக்கிறது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும்.
தனிநபர் வருமான வரி விகித்தில் மட்டும் குறைத்தால் போதாது, கார்ப்பரேட் வரியையும் குறைத்து, உயர் வருமானம் உள்ளவர்களையும் படிப்படியாக வருமான வரிக்குள் கொண்டு வர வேண்டும்.
அடிப்படை ஊதியம்
ஒவ்வொருவரின் கண்ணில் இருந்து வரும் கண்ணீரையும் துடைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் நோக்கத்தின் அடிப்படையில், ஏழ்மையை விரட்ட அனைவருக்கும் அடிப்படை ஊதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி
மறைமுக வரி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம், நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும். இந்த கணிப்பின் அடிப்படையில் பார்த்தால், உலகில் பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இந்தியா முன்னணியில்இருக்கும்.
ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால், நடப்பு நிதியாண்டில் குறிப்பிட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி, விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பால் கொள்முதல், கரும்பு கொள்முதல், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் கொள்முதல் பாதிக்கப்பட்டது.
நீண்டகால பயன்
புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு புழக்கத்துக்கு வந்தவுடன் பொருளாதார வளர்ச்சி இயல்பு நிலைக்கு திரும்பும். ஏப்ரல் மாதத்துக்குள் பணத்தட்டுபாடு நீங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை என்பது குறுகிய காலத்துக்கு சிரமம் அளித்தாலும், நீண்ட காலத்தில் பயன் அளிக்கும்
தனிநபர் வருமானவரி விகிதம், ரியல் எஸ்டேட் தொழிலில் முத்திரைத்தாள் கட்டணம், கார்ப்பரேட் வரி ஆகியவை குறைக்கப் பட வேண்டும். பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 60 முதல் 65 டாலர் அளவுக்கு  உயர்ந்ததால், இந்தியாவின் நுகர்வு குறைந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து எங்கள் பணி தொடர ஒத்துழைக்கலாமே!

செல்லாத நோட்டு அறிவிப்பிற்கு பிறகு புதிய இடி! வங்கியில் பணம் போட்டவங்க, படிங்க இத!

செல்லாத நோட்டு அறிவிப்பிற்கு பிறகு மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.
கருப்பு பண முதலைகள் பினாமிகள் பெயரில் டெபாசிட் செய்தன. இத்தனை நாட்களாக காய்ந்து போன கணக்குகளில் கூட பணம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில்  சுமார் 18 லட்சம் பேர் தங்களது அறியப்பட்ட வருவாயைவிட அதிக தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தவர்கள் கூட இந்த சந்தேக வளையத்தில் உள்ளனர்.  அதுபற்றிய தகவல்…
1) வங்கிகளில் பணம் செலுத்தியுள்ள 18 லட்சம் பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
2) அவர்களில் 5 லட்சத்திற்கு மேல் செலுத்தியவர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது வருமானம் குறித்து கேள்வி கேட்டு மத்திய அரசின் நேரடி வரிகள் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3) அவர்கள் 10 நாட்களுக்குள் பதில் அளித்து விட்டால், மேல் நடவடிக்கையை தவிர்த்துக் கொள்ளலாம்.
4) இந்த நடவடிக்கைகளுக்கு பெயர் Operation Clean Money/Swachh Dhan Abhiyan
5) இந்த நடவடிக்கைகளுக்கு உதவியாக புதிய சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை செயலாளர் Hasmukh Adhia தெரிவித்துள்ளார்.
6) வருமான வரித்துறையின் இணையதளத்தில் தங்களது பதிலை தெரிவிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் Sushil Chandra தெரிவித்துள்ளார்.
7) வரி செலுத்துபவர்களை அலைக்கழிக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும் என்று வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

எச்1பி விசா என்பது என்ன?

எச்1பி விசா என்பது அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு வழங்கப்படுவது.
பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் சார்பிலேயே இந்த விசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும். ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற சிறப்பு பணித்திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே எச்1பி விசா வழங்கப்படும். குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே இந்த விசாவைப் பெற முடியும். இந்த விசாவைப் பெற்றவர்கள் மூன்றாண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம், தேவைப்பட்டால் 6 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடியும் எச்1பி விசாக்களைப் பெறுவதில் இந்திய நிறுவனங்களே முன்னணியில் இருக்கின்றன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அதிக எண்ணிக்கையில் எச்1பி விசாக்களை வழங்குகிறது. இந்த விசா வழங்கப்படும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 60,000 டாலர் ஊதியம் அளிக்க வேண்டும் எனும் விதி உள்ளது. இந்த ஊதியத் தொகை தற்போது உயர்த்தப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. எச்1பி விசாக்களை வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு L1 விசா வழங்கப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு கணவனை மகிழ்விப்பது மட்டும் தான் மனைவியின் முதல் கடமை ...

திருமணத்திற்கு பிறகு கணவனை மகிழ்விப்பது மட்டும் தான்
மனைவியின் முதல் கடமை ...
வாழ்நாள் இறுதிவரை இந்த விஷயத்தில் ஓவ்வொரு மனைவியும் கவனமாக கணவனை புரிந்து நடந்து கொண்டால் கணவன் மனைவி உறவில் எந்த பிரச்சனையும் வராது..
நாங்கள் சொல்லவில்லை ..இஸ்லாம் பேசுகிறது ..

விளைநிலங்கள் வீட்டு மனையாக தடை நீடிப்பு

அங்கீகரிக்கப்படாத நிலங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பதாகவும், வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். இந்த தடையால் வீடு, மனை வாங்குவோர் விற்போர் பாதிக்கப்படுவது குறித்து தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை:மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை என்று, முன்னாள் பிரதமர் மன்மோக‌ன் சிங் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ற புத்தகத்தினை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதனை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இணைந்து வெளியிட்டனர். பின்னர் பேசிய மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார நிலை திருப்திகரமாக இல்லை என்று கூறினார். நாட்டில் வேலை வாய்‌ப்புகள், புதிய முதலீடுகள், கடன் வளர்ச்சி ஆகியவை எங்கே என்று கேட்கும் நிலை இருப்பதாக ப.சிதம்பரம் கூறினார்.

நாட்டு மாடுகளை காக்கும் இளைஞர்கள்

Cow

நாட்டு மாடுகளை பாதுகாக்கும் புதிய முயற்சியில் திருச்சியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்த மதன் மற்றும் ஆனந்தன் ஆகியோர், 15 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இவர்கள், கடந்த 6 மாதங்களாக நாட்டு மாடு வகைகளை பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
பால் விற்பனையும், இயற்கை உர தயாரிப்பும்
“நலம் நாட்டுப்பசும்பால் மையம்” என்ற பெயரில் விவசாய நிலங்களுக்கு நடுவே பண்ணை அமைத்து சுமார் 100 மாடுகளை இவர்கள் பராமரித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்த மொத்தம் 30 வகை நாட்டு மாடுகளில் 15 வகைகள் அழிந்து விட்டன. அதில் தற்போது உள்ள ஆலம்பாடி, உம்பலச்சேரி, மயிலை வகைகளை இவர்கள் வளர்த்து வருகின்றனர். இதில் கிடைக்கும் பாலில் சிறு துளி தண்ணீர் கலக்காமல் ஏறத்தாழ 60 வீடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். ஒரு லிட்டர் பால் 110 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.
இவர்கள் ஜெர்சி இன மாட்டு பால் தீமைகளை எடுத்துரைத்தும் ,நாட்டு மாட்டுப்பால் முக்கியத்துவத்தையும் இணைய தளம் வாயிலாக வலியுறுத்துகின்றனர். லாபம் என்பதை விட, மக்களுக்கு நாட்டு மாட்டு பாலின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் பயணத்தை தொடர்கின்றனர் இரு சகோதரர்களும்.

குடியரசு தினம் உருவான வரலாறு..!

நாட்டின் 68-ஆவது குடியரசுதினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாள் உருவான வரலாறு குறித்து தெரிந்துகொள்வோம்.
சுதந்தரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலம். 1929-ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், முழுமையான சுதந்தரமே இலக்கு என்பது தீர்மானிக்கப்பட்டது. இதற்கான போராட்‌டத்தை காந்தியடிகள் முடிவு செய்து அறிவிப்பார் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
மக்கள் உணர்வுகளை அகிம்சை வழியில் திருப்ப நினைத்த காந்தியடிகள், 1930-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாளை சுதந்தர நாளாகக் கொண்டாடும் படி அறிவித்தார். அவரது அறிவுறுத்தல்படி, அதே நாளில் நாட்டின் கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதியிலும் கூடிய மக்கள், ‘பொருளாதாரம், அரசியல், ‌கலாசாரம்‌, ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்கு கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்’ என்று உறுதி எடுத்துக்கொண்டனர்.
சுதந்தரம் பெற்ற பின் இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க மாமேதை அம்பேத்கர் தலைமையில் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ஆம் தேதி ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அதே ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் நாள் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறியும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டது. இதன் பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அந்த சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து 1930-ஆம் ஆண்டு காந்தியடிகளால் அறிவிக்கப்பட்ட சுதந்தர நாளான ஜனவரி 26-ஆம் நாள் முதல் அரசியலைப்புச் சட்டத்தை அமல்படுத்த பண்டித நேரு தலைமையிலான அரசு முடிவு செய்து செயல்படுத்தியது. அந்நாளே இந்தியக் குடியரசு நாளாக 1950-‌ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த தமிழ்நாட்டுக்காரர்

Chetty

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் தமிழ்நாட்டுக்காரர்.
பொருளாதார நிபுணரும் வழக்கறிஞருமான கோவையைச் சேர்ந்த சண்முகம் செட்டிதான் இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர். சண்முகம் செட்டி நீதிக்கட்சிக்காரர்.
பிரிட்டீஸ் ஆதரவு கட்சி என்று பெயர் பெற்ற நீதிக்கட்சியைச் சேர்ந்த சண்முகம் செட்டி சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது ஒரு ஆச்சரியமான நிகழ்வு. சண்முகம் செட்டியின் பொருளாதார மேதைமையைப் பார்த்து, அவர்தான் சுதந்திர இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கத் தகுதி படைத்தவர் என காந்தி முடிவு செய்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சண்முகம் செட்டியை தனது அமைச்சரவையில் நிதியமைச்சராக்கினார். சண்முகம் செட்டி 1947 நவம்பர் 26ம் தேதி முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கோவையில் பிறந்த சண்முகம் செட்டி சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர்.

போலீசார் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

Sign

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். ஒருவாரமாக இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருவதாக கூறும் மாணவர்கள் இதுவரை 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இதேபோல் மெரினா போராட்டத்தின் இறுதியில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை பூவிருந்தவல்லி மற்றும் தஞ்சையில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் அறிக்கை..

திருப்பூர் பாஜக நிர்வாகி முத்து கொலை செய்யப்படவில்லை, தற்கொலை செய்து கொண்டார் -மருத்துவர்கள் அறிக்கை.....!!
பாஜகவின் திருப்பூர் மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டதாக பாஜகவினர் கூறிவந்த நிலையில் முத்துவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் முத்து கொலை செய்யப்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
முத்துவின் உடலில் சிறிய அளவிலான காயங்கள் கூட இல்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முத்துவுக்கு பெண் ஒருவருடன் தவறான பழக்கம் இருந்து வந்ததாகவும், அந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் திடுத்திடும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலையை கொலை எனச்சொல்லி, பதற்றத்தை உருவாக்கியது யார்? எதற்காக இப்படிச்செய்தார்கள் என்பது தொடர்பாகவும் காவல்துறையனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கள்ளத்தொடர்பு, கட்டபஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் தகராறு போன்ற காரணங்களால் உயிரிழந்து வருகின்றனர்.
Image may contain: 1 person, smiling, text

வாக்குமூலம்

Image may contain: 1 person, text

அகண்ட பாரதம்

Image may contain: 7 people, people smiling, text

#வரலாற்றுஉண்மை

Image may contain: text

ஓயாத இருமலுக்கு வீட்டிலேயே கஷாயம் தயாரிக்கலாம் எளிய முறையில்!!

குளிர்காலம் வந்தாலே ஓயாத இருமல் ஜலதோஷம் உண்டாகும். அதிலும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நெஞ்சில் கபம் கட்டி மூச்சு விடவே சிரமப் படுவார்கள். 
அவர்களுக்காக எளிய முறையில் கஷாயம் தயாரிக்கும் முறையை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. 
இவற்றால் பக்க விளைவுகள் இல்லை. இதனை 3 வேளைக்கும் அருந்தி வந்தால் எப்பேர்பட்ட கபமும் கரைந்து வெளியேறிவிடும். எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை : 
சுக்கு, மிளகு திப்பிலி , வால் மிளகு அதிமதுரம், சித்தரத்தை போன்றவற்றை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். சம அளவில் தனித்தனியாக வாங்கியும் ஒன்றாக கலந்து கொள்ளலாம் அல்லது இவை எல்லாம் கலந்து ரெடிமேடாகவும் இந்த பொடி கடைகளில் கிடைக்கிறது.

தேவையானவை : 
மூலிகை இலைகள் : 
துளசி- ஒரு கைப்பிடி 
வெற்றிலை - 2 
புதினா - 1 கைப்பிடி 
கற்பூரவல்லி - 3


செய்முறை : 
முதலில் எல்லா மருந்து இலைகளையும் நன்றாக கழுவி பொடியாக ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அவற்றுடன் மேலே சொன்ன மூலிகை பொடியையும் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்தவுடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை : 
இதனை சூடாகவே குடியுங்கள். இதனை 3 வேளைக்கு குடித்தால் கபம் கரைந்து ஆரோக்கியமான நுரையீரல் பெறுவீர்கள். இலைகளை நறுக்குவதற்கு பதிலாக மிக்ஸியில் அரைத்தும் நீரில் போட்டு கொதிக்க வைக்கலாம்.
மூலிகை மாத்திரை : 
இதனை மாத்திரை வடிவத்திலும் சாப்பிடலாம். வெல்லப்பாகு வைத்து அதனடுன் இந்த பொடிகளையும் அரைத்த மூலிகை இலைகளையும் கலந்து சிறு சிரு உருணடைகளாக வெயிலில் காய வைத்து அவ்வப்போது சாப்பிடுவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.

என்ன மரியாதை

Image may contain: one or more people and text

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாது! - சவுதி அறிவிப்பு


கச்சா எண்ணைய் விலை குறைந்ததால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை சமாளிக்க சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கட்டணம், புதுப்பித்தல் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது. மேலும் வெளிநாட்டு
பணியாளர்களுக்கு வருமான வரி விதிப்பு பிடித்தம்
செய்வது தொடர்பாகவும் திட்டமிட்டது.

இந்நிலையில், புலம்பெயர்ந்த பண அனுப்புதலக்கு 6 சதவீத தீர்வை வசூல் செய்து குறித்த திட்டத்தை பரிசீலனை செய்வதாக சவுதி பேரரசின் சவுரா
ஆலோசனை குழு தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானவுடனே வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதிக்கு வெளியே எந்த நாட்டிற்கு பணம் அனுப்பினாலும் கட்டணம் கிடையாது என்று
சவுதி நிதியமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள குடிமக்களில் 3 சதவீதம் பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் வரி விலக்கு, அதிக சம்பளம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது பட்ஜெட்டை

இன்று பார்லிமெண்ட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றி வரப்படும் நடவடிக்கை. இந்த நடைமுறையை மாற்றி மோடி அரசு இந்த ஆண்டில் இருந்து ஜனவரி மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி அடுத்த (2017-18) ஆண்டுக்கான பட்ஜெட்டை ஏப்ரல் மாதத்தில் தொடங்க வசதியாக முன் கூட்டியே நடத்த திட்டமிட்டது.
அதன்படி இன்று பார்லிமெண்ட் கூட்டம் தொடங்கும். இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகின்றார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
நாளை (பிப் 1) நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த நடைமுறையும் மோடி அரசு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் தெரியுமா?

மொரார்ஜி தேசாய் அதிகம் முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஆவார். இவர் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதாவது 1958ம் ஆண்டு முதல் 1963 வரை நடந்த ஆட்சியில் 7 முறையும்,பின்னர் 1967 முதல் 1969 வரையிலான கால கட்டங்களில் 3 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்து மொத்தம் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசே வேணாம் நாங்க பாத்துக்குவோம்’’ மீனவர்களுக்கு நேர்ந்த கதி; இளைஞர்களின் நெகிழ்ச்சி நிதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சென்னையில் நடந்த வன்முறையில் மெரீனா ஒட்டியுள்ள மீனவ குப்பம் போலீசாரால் கடுமையாக தாக்கியும் குடிசைகளுக்கு தீயும் வைக்கப்பட்டது. மேலும், பல்வேறு வழக்கு உள்ளிட்ட போலீசாரின் தொந்தரவுகளால் மீன்பிடி தொழில், மீன் வியாபாரம் இல்லாமல் அத்தியாவசிய செலவுக்கும் மருத்துவ செலவிற்கும் போதிய வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், மாணவர்களின் சென்னை மெரீனா போராட்டத்தில் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலோனோர் ஆதரவு அளித்து பேருதவியாக இருந்து வந்தனர். போலீசாரின் தடியடியால் மீனவப் பகுதிக்குள் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவர்கள் மீது பொய் வழக்குகள் தொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட மீனவப் பகுதிகளில் கடந்த 29ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு சென்னை காவல் துறை பிறப்பித்துள்ளது. இதனால் ஏராளமான மீனவக் குடும்பங்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு எந்தவித உதவியும் இன்றி மீனவர்கள் உதவி செய்ததுபோல, தற்போது அவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் தற்போது இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக சென்னை மீம்ஸ் என்ற பெயரில் வங்கிக் கணக்கை உருவாக்கியுள்ளனர். இதுவரை ரூ.2 லட்சம் திரட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் நிதியை பிப்ரவரி 10ம் தேதி வரை வங்கிக்கணக்கில்  செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செலுத்துபவர்களின் பெயர் மற்றும் விவரங்களையும், மீனவர்களிடம் நிதி அளித்ததற்காக விவரத்தையும் விரைவில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் செய்யாத நிலையில், இளைஞர்களின் இந்த முயற்சி, ‘‘அரசே வேணாம் நாங்க பாத்துக்குவோம்’’ என்பதுபோல் தோன்றுகிறது என்றே கூறலாம். எனவே இந்த முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. பாராட்டுக்கள்!!
 

source: kaalaimalar 

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக போயகொண்டிருகின்றது ! – போட்டு உடைத்த மன்மோகன் சிங்!

நாட்டின் பொருளாதார நிலை, சூழல் ஆரோக்கியமாக இல்லை. சர்வதேச நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறைத்துவிட்டன என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ்கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி இப்படி ஒரு குண்டை போட்டுள்ளது.
‘2017-ல் இந்தியாவின் பொருளாதார நிலை’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் பொருளாதார வல்லுநர்கள் சேர்ந்து ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்தனர். அந்த அறிக்கையை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். அதன்பின் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர்.
முன்னாள் பிரதமர் மன்கமோன் சிங் பேசுகையில், “ நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை பாரதிய ஜனதா அரசு நாளை(இன்று) தாக்கல் செய்ய இருக்கிறது.  இந்தியாவின் இன்றைய பொருளாதார நிலை என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த இதுதான் சரியான நேரம் என்று நாங்கள் நினைத்தோம்.
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நாட்டின் பொருளாதாரம் எங்கே செல்கிறது, எங்கே நகர்கிறது, நாம் சரியான பாதைக்கு கொண்டு செல்ல என்ன செய் வேண்டும் என்பதை குறித்து அறிக்கை தயாரித்துள்ளோம்.
உண்மையில் இப்போது நாட்டின்  பொருளாதார நிலை ஆரோக்கியமாக இல்லை. சர்வதேச நிதியம் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்பு 7.6 சதவீதமாக கணித்து இருந்தது. இப்போது அதை 6.6 சதவீதத்துக்கும் குறைத்து கணித்து இருக்கிறது. இதேபோல் பல பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் இதையே கூறுகின்றன.
இந்த கணிப்பு மீது நான் கருத்து ஏதும் கூறவில்லை. இதை உங்களிடம் விட்டு விடுகிறேன்” என்றார்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், “ நாட்டின் பொருளாதார நிலை மகிழ்ச்சி அடையும் நிலையில் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதத்துக்கும் குறைத்து சர்வதேச அளவில் கணித்துள்ளதால், மிகுந்த கவலை அடைய வேண்டும். இது 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையாகும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி எண்ணிக்கைக்கு பின்னால் பாரதிய ஜனதா அரசு ஒளிந்து கொண்டு இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி காட்டி மக்களை பிரமிக்க வைக்க முடியாது. அவர்கள் வேலை வாய்ப்பை கேட்பார்கள்? தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் பொருளாதாரத்தை மிகைப்படுத்தி காட்டி வருகிறது. ஆனால், எங்களின் அறிக்கையை, நாட்டின் உண்மை நிலையைக் கூறும்.
அரசு என்பது நம்பிக்கையுடன், உத்வேகத்துடன் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை என்பது, நாட்டின் சூழலில் இருந்து வர வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் அரசு சமூக திட்டங்களுக்கு செலவு செய்வதைக் குறைக்க கூடாது. மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமே ஏழைமக்களை பாதுகாக்கும். கிராமப்புறங்களில் 60 சதவீத வேலைவாய்ப்பு இதன் மூலமே கிடைக்கிறது. இதை குறைத்தால், ஏராளமான மக்கள் வேலை இழப்பார்கள். இதை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
விஜய் மல்லையாவுக்கு கடன் கிடைக்க ப.சிதம்பரம், மன்மோகன்சிங் உதவினார்கள் என்று பாரதியஜனதா குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்து மன்மோகன் நிருபர்களிடம் பதில் அளிக்கையில், “ நான் எதையும் சட்டத்துக்கு புறம்பாக செய்யவில்லை. நான் செய்த செயல் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டு, மனநிறைவாகவே செய்தேன்” என்றார்.

source : kaalaimalar 

காவல் துறை நடவடிக்கை சரியா?

No automatic alt text available.

முதல்வரின் பார்வைக்கு......


தமிழகத்திலுள்ள முஸ்லிம் அமைப்புகள் லட்சக்கணக்கான
மக்களை திரட்டி மாநாடுகளும், போராட்டங்களும் நடத்தியுள்ளன.
இதில் எங்கேயும் ஒசாமா பின்லேடன் படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தியதில்லை,
அவ்வாறு பயன்படுத்தியதாக உளவுத்துறை ரிப்போர்டும் இல்லை,
தமிழக முதல்வர் மதம், ஜாதி, இனம் போன்ற உணர்வுப்பூர்வமான விசயங்களில் கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

திங்கள், 30 ஜனவரி, 2017

அரைமணி நேரத்தில் சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ மருந்து

சளி பிடித்துவிட்டால் சிலர் என்னதான் வைத்தியங்களை மேற்கொண்டாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு பின்னரே அதற்கான தீர்வு கிடைக்கும்.
அப்படி அரைமணிநேரத்தில் உங்கள் உடலில் இருந்து சளியை விரட்ட இதோ தீர்வு,
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
நீங்கள் உறங்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும். பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பள்ளிக்கூடத்திற்குச் செல்வதால் தொழுகை நேரம் தவறி விடுகிறது என்ன செய்வது?



பள்ளிக்கூடத்திற்குச் செல்வதால் தொழுகை நேரம் தவறி விடுகிறது என்ன செய்வது?

நிர்வாகி தற்கொலையை 'கொலை' என மாற்ற முயற்சி! பி.ஜே.பியின் பிரிவினை வியூகமா?

திருப்பூரில் பி.ஜே.பி. நிர்வாகி கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் அருகில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றி வைத்தும், மோடி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொலையாளிகள் தப்பிச் சென்றதாகவும் சொல்லப்பட்ட நிலையில், பி.ஜே.பி. நிர்வாகி கொலை செய்யப்படவில்லை என்பதும், தற்கொலை செய்து கொண்டதையும் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
H.Raja Tweet
அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வருகிறது பி.ஜே.பி. மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 20-ம் தேதி, "கோயம்புத்தூர் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் விக்னேஷ் வாசுதேவன் எனும் இளைஞர் தேசிய கொடியை ஏந்தி இருந்ததால் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார்" என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ஹெச்.ராஜா. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஜாதி, மத பேதமின்றி நாங்கள் போராடி வருகிறோம். நடக்காததை நடந்ததாகச் சொல்லி போராட்டத்தை நிறுத்த கலவரத்தை ஏற்படுத்த முயல வேண்டாம்' என மாணவர்கள் நேரடியாகவே எச்சரித்தனர்.
இந்நிலையில், மெரினா போராட்டத்தில் பின்லேடன் படத்துடன் இஸ்லாமியர்கள் வலம் வந்ததாக புகைப்படத்தை காட்டி பி.ஜே.பி. நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர். ஆனால் "அந்த புகைப்படம் மெரினாவில் எடுக்கப்பட்டதில்லை என்றும், அந்த வாகனம் ராஜி என்பவருக்கு சொந்தமான வாகனம். இஸ்லாமியர் வாகனம் அல்ல" எனவும் சொல்லப்பட்டது. இதிலும் பி.ஜே.பி. நிர்வாகிகள் கண்டனத்துக்கு உள்ளாகினர். "மாட்டை அறுத்து சாப்பிடும் முஸ்லிம்களும், தலித்துகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது” என்று பி.ஜே.பி.யினர் சொன்னதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல் மெரினா போராட்டத்தின்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதைச் சொல்லி சர்ச்சையை கிளப்பினர் பி.ஜே.பி. நிர்வாகிகள். அதற்கு பதிலளித்த மாணவர்கள், "இந்திய இறையாண்மையை நாங்கள்தான் கட்டிக்காப்பாற்றுகிறோம். முற்றிலுமாக புறக்கணிக்கிறோம். மற்ற மதத்தினர் அவர்கள் கடமையை நிறைவேற்ற உரிமை உண்டு. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. அதைத்தான் நாங்கள் நிறைவேற்றிக் காட்டினோம். ஆனால் இதைச்சொல்லி மத்திய அமைச்சர் இந்து - முஸ்லிம் பிரிவினையை தூண்டுகிறார்," என காட்டம் காட்டினர்.
BJP functionarie Sucide
இப்படி மத பிரச்னையை திட்டமிட்டே பரப்பி வருவதாக பி.ஜே.பி. அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகி வந்த நிலையில், இன்னுமொரு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அழுத்தமான கோரிக்கைகளோடு நடந்த மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், திருப்பூரில் பி.ஜே.பி. வடக்கு மாவட்ட துணைத் தலைவர் முத்து என்கிற மாரிமுத்து மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் தொங்கியிருந்தார். அவரது உடல் அருகே மோடியின் படத்துக்கு செருப்பு மாலை போட்டும், தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டும் இருந்தது. மேலும் பி.ஜே.பி. மற்றும் இந்து முன்னணி கொடியுடன் கறுப்புக் கொடி ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. TPR12345 என எழுதப்பட்டு, அதில் 3 என்ற எண் அடித்து விடப்பட்டிருந்தது. இதனால் திருப்பூரில் பதற்றமான சூழல் உருவானது. பி.ஜே.பி. நிர்வாகி கொலை, மோடி படத்துக்கு செருப்பு மாலை, தேசியக்கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்டது போன்றவற்றால் பெரும் பதற்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
உடனடியாக திருப்பூர் வந்த தமிழிசை சவுந்திரராஜன், "பி.ஜே.பி.திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைத்தலைவர் முத்து மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இதில் சமூக விரோதிகள் ஈடுபட்டிருக்கலாம். தமிழகத்தில் பி.ஜே.பி. நிர்வாகிகள் கொல்லப்படுவது தொடர்கிறது. சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்," என வலியுறுத்தினார்.
BJP functionarie Sucide spotஇந்நிலையில் போலீஸார் இது தோடர்பாக விசாரணையை துவக்கினர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவில் முத்து கொலை செய்யப்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. முத்துவின் உடலில் சிறிய அளவிலான காயங்கள் கூட இல்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், முத்துவுக்கு பெண் ஒருவருடன் தவறான பழக்கம் இருந்து வந்ததாகவும், அந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக சிலரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தற்கொலையை கொலை எனச்சொல்லி, பதற்றத்தை உருவாக்கியது யார்? எதற்காக இப்படிச்செய்தார்கள் என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே கொலையைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்த பி.ஜே.பி. நிர்வாகிகள் போராட்டத்தை ரத்து செய்துள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முத்துவின் குடும்பத்தாரை சந்தித்துப் பேச இருந்த நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்னுமொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது பி.ஜே.பி.

http://www.vikatan.com/news/tamilnadu/79151-is-bjp-trying-to-convert-party-functionarie-suicide-as-murder.art

உண்மையிலேயே அமெரிக்கர்கள் அணைவருமா வெறுப்பை வளர்க்கிறார்கள். இல்லவே இல்லை.

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க மக்கள்.! பொது மக்களால் கட்டபடும் அழகிய பள்ளிவாசல்.!
டிரம்ப் பதவி ஏற்றபின் ஒட்டு மொத்த அமெரிக்காவும் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பி உள்ளது போன்ற செய்திகள் நியூஸ் மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் ஓங்கி ஒலிக்கிற்து. அந்த கூற்றுக்கு வலு சேர்த்தார்ப்போல் அமைந்தது விக்டோரியா, டெக்ஸாஸில் விசமிகளால் தீ வைக்கப்பட்ட அழகிய பள்ளி வாசல்.
இப்போது நிலை என்ன.. உண்மையிலேயே அமெரிக்கர்கள் அணைவருமா வெறுப்பை வளர்க்கிறார்கள். இல்லவே இல்லை.
இந்த மஸ்ஜித் எரிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் பல இடங்களிலும் இருந்து மஸ்ஜிதை பார்வையிட வந்து குவிந்த அமெரிக்கர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. வந்த ஒவ்வொருவரும் என்னால் இந்த பள்ளிக்கு என்ன செய்ய முடியும் என்ற கேள்வியோடே வந்தனர். நான் கட்டுமான சாதனங்கள் தருகிறேன், என்னால் பிளம்பிங் செய்து தர முடியும், நானே கட்டி தருகிறேன் என சொன்ன பணமும் மனமும் கொண்டோரும் அதில் அடக்கம்.
இந்த பள்ளி மீண்டும் கட்டி எழுப்ப பட வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றவர்கள் இஸ்லாமியர்களை விட அமெரிக்கர்களே. அவர்களின் வேண்டு கோள் ஏற்கப்பட்டு கோபண்ட்மீ எனும் க்ளவுட் பண்ட் மூலம் பணம் திரட்ட முடிவு செய்து கட்டுமானத்திற்கு தேவையான பணம் US $850,000 (கிட்டத்தட்ட இந்திய மதிப்பு 6 கோடிகள்) என நிர்னயிக்கப்பட்டு, குறைந்தபட்சம் $10, அதிகபட்சமாக $100ம் தரலாம் என முகனூல் வழியாக அறிவிக்கப்பட்ட து.
இது அறிவிக்கப்பட்ட 24மணிக்கூரில் இது மிக பெரிய வைரலாகி 75000 சேர்களை கடந்து, தேவையான $850,000ல் 780,000 டாலர்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. இது கிட்டத்தட்ட 17000 பேர்களின் பங்களிப்பு. ஒரு கட்டத்தில் கோபண்டின் சர்வர் கிராஸ் ஆகும் நிலைமை கூட உருவாகியது. கோ பண்டின் வரலாற்றில் இத்தனை பெரிய தொகை அறிவிக்கப்பட்ட 24 மணிக்கூரில் (கிட்டத்தட்ட 90சதமானம் பண்ட்) இதுவரை திரட்டப்பட்ட தில்லை. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காசோலைகள் அனுப்பி உள்ளதாகவும் தகவல் தந்துள்ளனர்.
இது எப்படி சாத்தியமாய்ற்று. பணம் தந்தவர்கள் அனைவரும் அப்துலும், ஆசிபும், இஸ்மாயிலுமா என்றால் இல்லை... இதை வைரலாக்கியது இஸ்லாமியர்களா.. என்றால் இல்லை.
இதனை சாத்தியமாக்கி காட்டியவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்க ரோபர்ட்டும், மேத்யூவும், ஜேசனும் தான். இவர்களால் நிரம்பியதுதான் அமெரிக்கா.
இவர்களால்தான் அமெரிக்கா வாழ்கிறது.. வாழும்...
அமெரிக்க மோடிகள் வருவார்கள் . போவார்கள்..
But America will remain Great..
https://www.gofundme.com/victoria-islamic-center-rebuilding
@Al kader

Image may contain: 1 person