வெள்ளி, 31 டிசம்பர், 2021

ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

 31 12 2021 தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், அழகு நிலையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் , துணிக்கடைகள், நகைக் கடைகள், சலூன்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தும், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

image

மேலும், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்படுகிறது. அனைத்து பொருட்காட்சிகள், புத்தக கண்காட்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படவும் தடை விதிக்கப்படுகிறது.

புதிய கட்டுப்பாடுகள் சில வரிகளில்:

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு.

ஜன.10ம் தேதி வரை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை 

உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி 

திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி

மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி 

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும் 

திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி

அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு

source https://www.puthiyathalaimurai.com/newsview/126050/Yellowbag-Project-Awareness-Cycle-Rally-attended-by-students-with-the-Collector.html

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி 12% ஆக உயர வாய்ப்பு.. 15 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

 GST on textiles likely to rise to 12 percentage;15 lakh people at risk of losing their jobs

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு,மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிச் சீர்திருத்தம் மீதான ஆய்வு அறிக்கைகளை மாநில நிதியமைச்சர்கள் குழு, நேரடியாக சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சில பொருள்கள் மீதான வரிவிகிதத்தை மாற்றியமைப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஜிஎஸ்டி-யின் கீழ், தற்போதைய விகித கட்டமைப்பை மதிப்பாய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (GoM), அதன் இறுதிக் கூட்டத்தை நவம்பர் 27 அன்று ஒத்திவைத்தது. இதில் விகிதப் பகுப்பாய்வு மற்றும் வருவாயை உயர்த்துவதற்கான பல்வேறு திட்டங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

அதன்படி, வரி விகிதங்களை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் உயர்த்த அதிகாரி அளவிலான குழு பரிந்துரைத்துள்ளது.

ஆனால் சில மாநில நிதியமைச்சர்கள், குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிறகு, இத்தகைய பெரிய விகித உயர்வுகளின், பணவீக்க தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பினர்.

பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என ஜிஎஸ்டியில் ஐந்து வரி அடுக்குகள் உள்ளன. இழப்பீடு வரி, 1 சதவீதத்திலிருந்து 290 சதவீதம் வரையிலும், குறைபாடுகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு, உச்சமாக 28 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படுகிறது.

மேலும் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை, 5 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி விலை உயர்வு குறித்த முடிவை சில மாநிலங்கள் எதிர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வரின் முதன்மை தலைமை ஆலோசகர் அமித் மித்ரா, முன்மொழியப்பட்ட உயர்வை திரும்பப் பெறுமாறு சீதாராமனிடம் வலியுறுத்தினார். புதிய கட்டண அமைப்பால் தேசிய அளவில், சுமார் 1 லட்சம் ஜவுளி யூனிட்கள் மூடப்படுவதோடு, சுமார் 15 லட்சம்பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றார்.

தெலங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், ஜிஎஸ்டி விகிதங்களை உயர்த்தும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/gst-on-textiles-likely-to-rise-to-12-percentage-15-lakh-people-at-risk-of-losing-their-jobs-390296/

கர்நாடகா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிக இடங்களை வென்ற காங்கிரஸ்

 Karnataka urban local body polls, karnataka, karnataka Congress emerges single largest party, BJP, Karnataka urban local body polls results, congress, கர்நாடகா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், பாஜகவை விட அதிக இடங்களை வென்ற காங்கிரஸ், கர்நாடகா, பாஜக, ஜேடிஎஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், karnataka congress, congress maximum seats wins than BJP

கர்நாடாகாவில் 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1,184 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் காங்கிரஸ் 498 இடங்களிலும், பாஜக 437 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) 45 இடங்களிலும், மற்றவை 204 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கர்நாடகாவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் டிசம்பர் 27ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று, இன்று (டிசம்பர் 30) முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவை வீழ்த்தியுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 1,184 வார்டுகளை கொண்ட 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 1,184 வார்டுகளில் காங்கிரஸ் 498 இடங்களிலும், பாஜக 437 இடங்களிலும், ஜேடிஎஸ் 45 இடங்களிலும் மற்றவை 204 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 42.06 சதவீத வாக்குகளும், பாஜக 36.90 சதவீதமும், ஜேடிஎஸ் 3.8 சதவீதமும், மற்றவை 17.22 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

166 சிட்டி முனிசிபல் கவுன்சில் வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 61 இடங்களும் பாஜகவுக்கு 67 இடங்களும், ஜேடிஎஸ் 12 இடங்களும் மற்றவைக்கு 26 இடங்களும் கிடைத்துள்ளன. 441 டவுன் முனிசிபல் கவுன்சில் வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 201 இடங்களும், பாஜகவுக்கு 176 இடங்களும் ஜேடிஎஸ்-க்கு 21 இடங்களும் கிடைத்துள்ளன. பட்டன பஞ்சாயத்துகளில் 588 வார்டுகளில், காங்கிரஸ் கட்சி 236 இடங்களிலும் பாஜக 194 இடங்களிலும் ஜேடிஎஸ் 12 இடங்களிலும் மற்றவை 135 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார், “சமீபத்திய தேர்தல் முடிவுகள் மாநிலத்தில் காங்கிரஸ் அலை வீசுவதையும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதற்கு உறுதியளித்துள்ளன. 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்காலத் தேர்தலுக்கான அளவுகோலாக இருக்க முடியாது என்றாலும், இந்த முடிவுகள் காங்கிரஸின் சித்தாந்தம் மற்றும் அதை நம்பும் நமது மக்களின் பலத்தை உறுதிப்படுத்துகின்றன. பணப்பட்டுவாடா மூலம் வெற்றி பெறலாம் என்ற பா.ஜ.,வின் கணக்கீட்டை தகர்த்துவிட்டனர். மக்கள் சார்பு சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது” என்று அவர் கூறினார்.

இந்த வெற்றி குறித்து கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, “உள்ளாட்சி தேர்தலில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் வெற்றி. ஆளும் பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களை வெற்றி பெற்றிருப்பது பாஜக ஆட்சி மீதான நம்பிக்கையின்மையின் பிரதிபலிப்பாகும். இது இறுதி பொதுத் தேர்தலில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான அறிகுறியாகும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/karnataka-urban-local-body-polls-congress-emerges-single-largest-party-than-bjp-390557/

கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை

 Encounter Specialist Velladurai, ADSP Velladurai, ADSP Velladurai appointed to prevent Kattapanchayat in Chennai, Chennai, Velladurai as head of special force to prevent Kattapanchayat, கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை, கட்டப்பஞ்சாயத்து, சென்னை, ரவுடிகள் அட்டகாசம், ADSP Velladurai, Tamilnadu, special force to prevent Kattapanchayat in Chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் மாமூல் வசூல் ஆகியவற்றை தடுப்பதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல்துறை சிறப்புப் படை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதே போல, தொழில் நிறுவனங்களை சில கட்டப் பஞ்சாயத்து பேர்வழிகள் தொந்தரவு செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, சென்னை, புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துகள் மற்ற்றும் மாமூல் வசூல் ஆகியவற்றை தடுப்பதற்காக, கூடுதல் எஸ்.பி என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல்துறை சிறப்புப்படை அமைத்துள்ளது. அதே போல, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தொந்தரவு அளிக்கும் நபர்களைக் கண்காணிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக வெள்ளத்துரை பணியாற்றிவருகிறார். இவருடைய தலைமையில் சென்னை புறநகர் பகுதி ரவுடிகளை ஒடுக்கும் சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரவுடிகள், தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து புள்ளிகளை ஒடுக்கவே என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை களமிறக்கப்பட்டுள்ளார் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/encounter-specialist-adsp-velladurai-appointed-to-prevent-kattapanchayat-in-chennai-390532/

புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு தாக்கி சிறுவன் படுகாயம் : உறவினர்கள் சாலை மறியல்

 30 12 2021 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அருகில் இருந்த பள்ளி சிறுவன் துப்பாக்கி குண்டு தாக்கி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நர்த்தமலை அருகே அம்மாசமுத்திரம் பகுதியில் மத்திய தொழில்துறை பாதுக்காப்பு படை வீரர்கள் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ளது. திருச்சி மண்டலத்தை சேர்ந்த போலீசார் மற்றும் சிறப்பு காவல் படையினர் தினந்தோறும் இந்த பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று வழக்கம்போல வீரர்கள் பலரும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, போலீசார் ஒருவர் சுட்டத்தில் துப்பாக்கி குண்டு 2 கி.மீ தூரத்தில் வீட்டில் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் தலையில் பாயந்தது. இதனால் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்தான். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுவனின் தலையில் இடதுபுறம் துப்பாக்கி குண்டு ஆழமாக புகுந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது விபத்தில் காயமடைந்த சிறுவன் புதுக்கோட்டை மாவட்டம் நர்த்தமலை அருகே உள்ள கொத்த மங்களத்துப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் என்பரின் மகன் புகழேந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் அதே பகுதியில் 6-ம் வகுப்பு படித்து வருவதாகவும் பள்ளி விடுமுறை என்பதால் நர்த்தமலையில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நர்த்தமலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச்சுடுதல் மையத்தில் இருந்து ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடந்து சிறுவனின் உறவினர்களிடம் பேசிய போலீசார் மற்றும் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இது தொடர்பாக இந்தியன் எக்பிரஸிடம் பேசிய கீரனூர் டிஎஸ்பி சிவசுப்ரமணியன், துப்பாக்கிச்சூடு ரேஞ்ச் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. “நாங்கள் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது கிராம மக்கள் கலைந்து சென்றனர், அவர்களின் கூற்று உண்மையாக இருந்தால், உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அவர்களிடம் தெரிவித்தோம். தற்போது துப்பாக்கி சூடு வரம்பை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-11-years-old-boy-injury-for-stray-bullet-from-firing-range-in-pudukottai/

வீரப்பனின் சகோதரர் உள்ளிட்ட 3 பேர் விடுதலை; கூட்டணி கட்சிகள் முதல்வருக்கு கோரிக்கை

DMK allies joint statement to CM, dmk allies to released three inmates including Veerappan's brother, Veerappan's brother Madhaiyan, வீரப்பனின் சகோதரர் மாதையன், வீரப்பன் சகோதரர் மாதையன் 3 பேர் விடுதலை செய்ய கோரிக்கை, கூட்டணி கட்சிகள் முதல்வருக்கு கோரிக்கை, dmk, cm mk stalin, veerappan, vck, cpi, thamizhak vaazhvurimai katchi

கோவை மத்திய சிறையில் 33 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் வீரப்பனின் சகோதரர் மாதையன் உள்ளிட்ட 3 பேர்களை விடுதலை செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 87 கட்சிகள் மற்றும் அமைப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

வீரப்பனின் சகோதரர் மாதையன் உள்ளிட்ட 3 பேர் கோவை மத்திய சிறையில் 33 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை மனிதாபிமான அடிப்படையில், நீண்ட காலம் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்கும் தமிழக அரசின் அறிவிப்பில் வீரப்பன் சகோதரர் மாதையன் உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 87 கட்சிகள் மற்றும் அமைப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: “இது போன்ற நீண்ட சிறைவாசம்‌ என்பது சிறைவாசிகளின் நலனுக்கும்‌. அவர்களது குடும்பத்தாரின்‌ நலனுக்கும்‌ மட்டும்‌ எதிரானது அல்ல. சிறைவாசிகளின்‌ மறுவாழ்வு என்ற அரசின் கண்ணோட்டத்துற்கும்‌ முற்றிலும்‌ எதிரானதாக உள்ளது. இந்த சிறைவாசிகளின்‌ முன்‌ விடுதலைக்‌ குறித்து அவர்கள்‌ தண்டனை பெற்ற வழக்கினைக்‌ காரணமாக வைத்து அறிவுரைக்‌ குழுமம்‌ மற்றும்‌ இதர குழுமங்கள்‌ பரிசீலிப்பதில்லை என்பது அதிர்ச்‌சிகரமாக உள்ளது.

சிறைவாசிகளின்‌ விடுதலை குறித்துத்‌ தமிழகத்தின்‌ சிறைத்துறை அவ்வப்போது வெளியிடுகின்ற அரசாணைகள்‌ சில குற்றங்களுக்குத்‌ தண்டணை பெற்றவர்கள்‌ மட்டும்‌ முன்‌ விடுதலைக்கு தகுதியானவர்கள்‌ என்றும்‌ மற்ற சில குற்றங்களுக்காகத்‌ தண்டனை பெற்றவர்கள்‌ முன்விடுதலைப்‌ பரிசீலனைக்கே தகுதியற்றவர்கள்‌ என்றும்‌ காட்டப்படுகிற பாகுபாடு, இது போன்ற நீண்ட சிறைவாசங்களுக்குக்‌ காரணமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

இந்தச்‌ சிறைவாசிகளின்‌ முன்‌ விடுதலை தொடர்பான இத்தகைய பாகுபாடு என்பது, சட்டத்திற்கும்‌ நியாயத்துற்கும்‌ எதிரானது மட்டுமல்லாமல்‌, சிறைவாசிகள்‌ மறுவாழ்வு பெறுகின்ற கண்ணோட்டத்துற்கும்‌, மனித உரிமைக்கும்‌ எதிரானதாக உள்ளது.

மேலும்‌, ஆயுள்‌ சிறைவாசிகள்‌ விடுதலை என்பது அவர்‌ சிறையில்‌ வாடும்‌ காலத்தின்‌ அடப்படையில்‌ முடிவு செய்வதற்குப்‌ பதிலாக, அவர்‌ தண்டனை பெற்றுள்ள வழக்குப்‌ பிரிவுகளின்‌ அடிப்படையில்‌ முடிவு செய்வதென்பது மனிதநேயத்தையும்‌, சிறைவாசியின்‌ விடுதலை குறித்தான நம்பிக்கையையும்‌ தகர்ப்பதாக உள்ளது.

குற்றவியல்‌ நடைமுறைச்‌ சட்டப்‌ பிரிவு 433ஏ, ஆயுள்‌ தண்டனை என்பதைக்‌ குறைந்த அளவு 14 ஆண்டுகள்‌ என்றே வரையறுத்துள்ளது. தவிரவும்‌, சென்னை உயர்நீதிமன்றம்‌, உச்சநீதிமன்றம்‌ ஆகியவை, ஏற்கெனவே வழங்கியுள்ள சில தீர்ப்புகளில்‌ சாதாரண ஆயுள்‌ சிறைவாசிகளின்‌ விடுதலையை 10 ஆண்டுகள்‌ கழித்துப்‌ பரிசீலிக்கலாம்‌ என்றும்‌, முன்விடுதலையைப்‌ பரிசீலனைக்கு உட்படுத்த முடியாத பிரிவுகளில்‌ தண்டனை பெற்ற ஆயுள்‌ சிறைவாடிகளின்‌ முன்‌ விடுதலைக்‌ குறித்து 14 ஆண்டுகள்‌ கழித்துப்‌ பரிசீலிக்க வேண்டும்‌ என்றும்‌ தமிழக அரசைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளன.

மேலும், வீரப்பனின்‌ சகோதரர்‌ மாதையன்‌ சார்பாக முன்‌ விடுதலை வேண்டி உச்ச நீதிமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட வழக்கில்‌ கடந்த 03.10.2017 அன்று உச்ச நீதிமன்றம்‌ மாதையன்‌ அவர்களுடைய முன்‌ விடுதலைக்‌ கோரிக்கையைப்‌ பரிசீலித்து முடிவு செய்திடத்‌ தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அவருடைய விடுதலை என்பது இன்னும்‌ சாத்தியமாகவில்லை.

சிறைத்துறை உயர்‌ அதிகாரிகள்‌, தமிழக அரசு அதிகாரிகள்‌ முன்‌ விடுதலை குறித்து வெளியிடுகின்ற அரசாணைகளில்‌ சில குறிப்பிட்ட வழக்குகளில்‌ தண்டனை பெற்ற ஆயுள்‌ சிறைவாசிகளின்‌ முன்‌ விடுதலை கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்படவில்லை என்பது வேதனையானது. இதனால்‌, குறிப்பிட்ட சிறைவாசிகளின்‌ மறுவாழ்வு மற்றும்‌ அவர்களது குடும்பத்தினரின்‌ வாழ்வு என்பது தொடர்ந்து பெரிதும்‌ பாதிக்கப்படுகிறது.

வீரப்பனின்‌ சகோதரர் மாதையன்‌ மற்றும்‌ அவருடன்‌ சேர்ந்து ஆண்டியப்பன்‌, பெருமாள்‌ ஆகியோர்‌ சுமார்‌ 75 வயதை நெருங்கிய முதியவர்களாக இருந்து வருகிற நிலையில்‌ உடலாலும்‌, மனதாலும்‌ பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர்‌. இவர்களின்‌ குடும்பங்களில்‌ இவர்களுடைய மகன்‌ உள்ளிட்ட நெருங்‌கிய உறவினர்கள்‌ இறந்து, குடும்பங்கள்‌ நிர்க்கதியான அவலநிலையில்‌ இருந்து வருகின்றனர்‌. அவர்களின்‌ எஞ்சிய ஒரு சில ஆண்டுகளையாவது மீதமுள்ள உறவுகளோடு கழித்திடப்‌ பெரும்‌ எதிர்பார்ப்போடு உள்ளனர்‌.

முழுக்க மனித நேயக்‌ கண்ணோட்டத்தின்‌ அடிப்படையிலும்‌, இரக்க குணத்தின்‌ அடிப்படையிலும்‌, மன்னிக்கும்‌ அரசமைப்பு அதிகாரத்தைக்‌ தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்‌ எனும்‌ எதிர்பார்ப்போடு சிறையில்‌ வாடி வருகின்றனர்‌.

சிறைவாசிகள்‌ தங்களது தண்டனையைக்‌ கழிக்கின்ற ஒவ்வொரு நாளும்‌, என்றாவது ஒருநாள்‌ நாம்‌ விடுதலை ஆவோம்‌ என்கிற நம்பிக்கையின்‌ அடிப்படையில்தான்‌ காலத்தைக்‌ கடத்தி வருகின்றனர்‌. அந்த நம்பிக்கை நிறைவேறாத சூழ்நிலையில்‌, நீண்ட ஆயுள்‌ சிறைவாசியின்‌ மனநிலை என்பது பெருத்த பாதிப்புக்கும்‌, அதிர்ச்சிக்கும்‌ உள்ளாகும்‌ என்பதை தமிழக முதல்வர்‌ கனிவுடன்‌ பரிசீலித்து, இவர்களுக்கு விரைவில்‌ விடுதலை வழங்கிட வேண்டும்‌ என அன்புடன்‌ வேண்டுகிறோம்‌.” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-allies-joint-statement-to-cm-to-released-three-inmates-including-veerappans-brother-390503/

எதிர்பாராத திடீர் தாக்குதல்: சென்னையை புரட்டிப் போட்ட மழை

 31 12 2021 தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. சென்னையில், இன்று மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது. பகல் 1 மணியளவில் தொடங்கிய கனமழை 7 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகரில் 18. செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ, நந்தனத்தில் 12 செ.மீ., மீனம்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோரும், வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் என பலரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கிண்டி, தி. நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாறு, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்த விரும்பியதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கனமழை காரணமாக சென்னையில் பல சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மேட்லி மற்றும் துரைசாமி சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்.பி.ஐ சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் கனமழை பெய்து வருவகிற நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-heavy-rain-waterlogging-orange-alert-to-4-districts-390542/

டிஜிட்டல் மயமாகும் பொதுநூலகங்கள்; தமிழக அரசின் புதுமையான முயற்சி

 31 12 2021 தமிழ்நாடு அரசு மாநிலத்தில் நூலகங்களை புதுப்பிக்கவும் புத்தகக் கடன் வழங்கவும் புதிய முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், வாசகர்கள் ஒரு புத்தகத்தை பொது நூலகத்தில் இருந்து வாடகைக்கு எடுத்து, அதைப் படித்துவிட்டு மாநிலத்தில் உள்ள எந்த நூலகத்தில் வேண்டுமானாலும் திருப்பி கொடுக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், புத்தகங்களைத் தேடுதல், முன்பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை மொபைல் ஆப் மூலம் செய்யவும், புத்தகங்களை வீட்டுக்கே டெலிவரி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகமும் (ஏசிஎல்) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள 4,640 பொது நூலகங்களில் உள்ள 35 லட்சம் புத்தகங்களுக்கான பொதுப் பட்டியலைத் தயாரித்து வருகிறது. இதனால், ஒரு நூலகத்தில் எடுத்த புத்தகத்தை மற்றொரு நூலகத்தில் திரும்ப வழங்கும் முறை சாத்தியமாகும். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பொது நூலகங்களில் உள்ள அனைத்து புத்தகங்களின் பட்டியலை ஆங்கிலோ அமெரிக்கன் கேடலாக்கிங் ரூல்ஸ் (AACR2) மற்றும் மெஷின்-ரீடபிள் கேடலாகிங் (MARC 21) போன்ற சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா பொது நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மற்றும் 32 மாவட்ட நூலகங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களுக்கான பொதுப் பட்டியலை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த வாரம் வெளியிட்டார். இந்த பொதுவான பட்டியல் மூலம், அனைத்து பொது நூலகங்களிலும் புத்தகங்களைத் தேடுவது எளிமையாக்கப்படும்.

தலைப்பு அல்லது ஆசிரியரைத் தட்டச்சு செய்வதன் மூலம், எந்த நூலகங்களில் புத்தகம், கிடைக்கும் தன்மை, இலக்கிய வடிவம், வெளியீட்டாளர், பதிப்பு மற்றும் பொருள் வகை போன்ற விவரங்களை வாசகர்கள் எளிதில் பெறுவார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள பொது நூலகங்களுக்கான பொதுப்பட்டியல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ் காமாட்சி, “இத்திட்டம் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (TANII) திட்டத்தின் கீழ் மாநில திட்டக்குழுவால் செயல்படுத்தப்படுகிறது. நூலகத்தில் இந்த பொதுப் பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது நூலகங்களிலும் கிடைக்கும் அனைத்து புத்தகங்களையும் தேடுவதற்கான ஒரே கருவியாக செயல்படும்.

எந்தெந்த புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன மற்றும் பொது நூலகங்களில் வாசகர்களால் பயன்படுத்தப்படாத புத்தகங்களை அறிய நூலக அதிகாரிகளுக்கு இந்த டிஜிட்டல் அட்டவணை உதவும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த வகையான புத்தகங்கள் அல்லது பாடங்கள் விரும்பப்படுகின்றன. அல்லது விரும்பப்படுவதில்லை என்பதை அறியவும் இது உதவும். நகரும் புத்தகங்களை அதிகமாக சேமித்து வைக்கலாம் மற்றும் பொது நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கும் போது பயன்படுத்தப்படாத புத்தகங்களை தவிர்க்கலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தூசி சேகரிக்கும் மற்றும் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் தலைப்புகளை களையெடுக்க நூலக அதிகாரிகளுக்கு இது உதவக்கூடும். தொழிற்சங்க பட்டியலைப் பின்பற்றி, புத்தகங்களைத் தேடுவதற்கு, பொது நூலகங்களின் இயக்குநரகம் பயனர் மொபைல் பயன்பாட்டைக் கொண்டு வரலாம். நமக்கு அருகில் உள்ள உணவகங்களை கூகுள் செய்வதன் மூலம் எப்படி அறிவோமோ, அதுபோல, புத்தக ஆர்வலர்கள் எந்த நூலகத்தில் குறிப்பிட்ட புத்தகம் உள்ளது, அது கிடைக்கிறதா இல்லையா என்பதை அறிய இந்த ஆப் உதவும்” என தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனர் ஜி சுந்தர் கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-tamil-news-tn-public-libraries-to-be-digitalized-and-union-catalogue-prepared-390717/

வெளுத்து வாங்கிய கனமழை; ஸ்தம்பித்த தலைநகரம்; விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி ஊழியர்கள்

 31 12 2021 

Heavy Rain Lashed Chennai
மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்; மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேரி பார்வையிட்ட முதல்வர்

Heavy Rain Lashed Chennai: வியாழக்கிழமை அன்று (30/12/2021) சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் கடுமையான மழை பெய்தது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக மழை ஏதும் அதிக அளவில் பதிவாகாத நிலையில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. பல மணி நேரங்களாக தொடர்ந்த மழையின் காரணமாக சாலைகள் மற்றும் சப்-வேக்களில் நீர் தேங்கி, வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை அளித்தது இந்த மழை.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி எம்.ஆர்.சி. நகரில் 17.65 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14.65 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 10 செ.மீ மழையும் பதிவானது. 2015ம் ஆண்டுக்கு பிறகு அதிகப்படியான மழையை ஒரே நாளில் சென்னை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் நேற்றிரவு ஆய்வு செய்தார். பிறகு சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தை பார்வையிட்ட முதல்வர் வெள்ள பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

சென்னையில் பெய்த மழையின் அளவு (மாலை 6 மணி வரை)

மயிலாப்பூர் – 207 மி.மீ
எம்.ஆர்.சி. நகர் – 175 மி.மீ
நுங்கம்பாக்கம் – 140 மி.மீ
ஆழ்வார்பேட்டை – 133 மி.மீ
நந்தனம் – 100 மி.மீ
மீனம்பாக்கம் – 98 மி.மீ
வளசரவாக்கம் – 94 மி.மீ
ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி – 87 மி.மீ.
செம்பரம்பாக்கம் – 82 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் – 81 மி.மீ
தொண்டையார்பேட்டை – 72 மி.மீ
முகப்பேறு – 71 செ.மீ

கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “200 மி.மீ தாண்டியது மயிலாப்பூர். சென்னை நுங்கம்பாக்கம் 2015ம் ஆண்டு ரெக்கார்டை தோற்கடித்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.

3 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஆர்.பி.ஜி. சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது

வானிலை அறிவிப்பு

இன்று காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/heavy-rain-lashed-chennai-chennai-city-records-highest-one-day-december-shower-in-6-years-390626/

15 – 18 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? விளக்கப் படங்கள்

 15 முதல் 18 வயதினருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கும் பணி வருகின்ற ஜனவரி 3ம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி (Precautionary Dose) போடும் பணிகள், உலகம் முழுவதும் மீண்டும் அதிக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

வைரஸின் புதிய ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது, அறிவியல் சான்றுகள், உலகளாவிய நடைமுறைகள், கோவிட்-19 நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (Working Group of National Technical Advisory Group on Immunization (NTAGI) பணிக்குழுவின் உள்ளீடுகள்/பரிந்துரைகள், என்.டி.ஏ.ஜி.ஐ-யின் அறிவியல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் பரிந்துரை (Standing Technical Scientific Committee) போன்ற காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2007 மற்றும் அதற்கு முன்னர் பிறந்த குழந்தைகள் தடுப்பூசி பெற தகுதி பெறுகின்றனர். தங்களுக்கான தடுப்பூசியை பெற கோவின் இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம். ஏற்கனவே தங்கள் பெற்றோர்கள் பயன்படுத்தும் கோவின் கணக்குகள் மூலமாகவோ அல்லது தங்களுக்கான தனி அலைபேசி எண் கொண்டோ கொரோனா தடுப்பூசியை பெற பதிவு செய்யலாம்.

அரசு தடுப்பூசி முகாம்களில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் அல்லது தனியார் நிறுவனங்கள் நடத்தும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசிகளை பெற ஒருவர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிவுப்படுத்தியுள்ளது மத்திய அரசு

Vaccination program for children of 15-18 yrs

பெண்களின் திருமண வயதை அரசு உயர்த்தக் காரணம் என்ன? விளக்கப் படங்கள்

Vaccination program for children of 15-18 yrs

source https://tamil.indianexpress.com/explained/indias-vaccination-program-for-children-of-15-18-yrs-390603/