புதன், 31 ஆகஸ்ட், 2016

வட மாநிலங்களில் கன மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வட மாநிலங்களில் கன மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகரின் முக்கியப் பகுதிகளான லோதி ரோடு, விஜய் சவுக், ஆர்.கே. புரம், சரோஜினி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக, டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகப் புறப்பட்டுச் செல்கின்றன. இதனிடையே, டெல்லி வர வேண்டிய விமானம் ஒன்று, ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, டெல்லியில் உள்ள 3 வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று செல்வதாக இருந்தது. எனினும், மழை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.

​தமிழக புதிய ஆளுநர் வித்யாசாகர் ராவ்: இவரைப் பற்றிய தெரிந்து கொள்ள சில தகவல்கள்!

​தமிழக புதிய ஆளுநர் வித்யாசாகர் ராவ்: இவரைப் பற்றிய தெரிந்து கொள்ள சில தகவல்கள்!


தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகரைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ், ஹைதராபாத்தில் பிஎஸ்சி கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார்.

சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய வித்யாசாகர் ராவ், 1972-ல் கரீம்நகர் மாவட்ட ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார்.

மெட்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஆந்திர சட்டப்பேரவைக்கு 1985-ல் தேர்வு செய்யப்பட்டார்.

1998-ல் கரீம் நகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், 1998-ல் ஆந்திரப் பிரேதச பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த 1999-ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று தேசிய அரசியலில் அறிமுகமானார்.

பின்னர், அதே ஆண்டில் இலாகா மாற்றப்பட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.

2014 ஆகஸ்ட் மாதம், வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிர மாநில அளுநராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.


தற்போது, தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.

காது குடையும் பழக்கம் ஆபத்தானதா


நம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம், காது குடைவது. சிலர் காது குடைவதில் அலாதி சுகம் காண்கின்றனர்.இந்த பழக்கம் நல்லதா?
அல்லது இதனால் ஏதேனும் கேடு ஏற்படுமா?
ஐம்புலன்களில் ஒன்று செவிப்புலன். காது மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாகும். காதின் உள்ளே செல்லும் குழாயில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும்மெழுகுபோன்ற திரவம் தான் காதிற்குள் தூசி, அழுக்கு செல்லாமல் பாதுகாக்கிறது.
காதின் நடுவில் மெல்லிய ஜவ்வு போன்ற தடுப்பு உள்ளது. இது செவிப்பறையாகும். இது தான் காற்றில் வரும் ஒலி அதிர்வுகளை வாங்கி உள்ளே அனுப்புகிறது.
சிலர் காதிற்குள் ஹேர்ப்பின், தீப்பெட்டிக் குச்சி போன்றவற்றால் குடைவார்கள். இது செவிப்பறையில் பட்டால், ஜவ்வில் ஓட்டை விழுந்து கிழிந்து விட வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய பழக்கம் காதுக்கு ஆபத்தாக முடியும்.
காது ஒரு மெல்லிய உறுப்பு. இதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை

‌பகிரப்படும் வாட்ஸ்அப் பயனாளிகள் தகவல்கள்: அரசிடம் விளக்க‌ம் கேட்டது நீதிமன்றம்

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தரப்பட உள்ள நிலையில் இது குறித்த மத்திய அரசின் விளக்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து விளக்கமான தகவல்களுடன் வரும் 14-ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என நீதிபதிக‌ள் ரோஹிணி மற்றும் சங்கீதா திங்ரா ஆகியோர் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குக்கு தர உள்ளது. இந்த நடைமுறை ‌வரும் 25-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இந்நிலையில் வாட்சப்பின் இந்த முடிவு பயனாளிகளின் தனிப்பட்ட உரிமைகளை மீறும் செயல் என்றும் இந்த நடவடிக்கை ஆபத்தை விளைவிக்க கூடியது என்றும் கூறி கர்மன்ய சிங் சரீன் மற்றும் ஷ்ரேயா சேத்தி ஆகிய இருவர் ‌வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி வரிவிதிப்பு

ஆப்பிள் நிறுவனம் சுமார் 60ஆயிரம் கோடி ரூபாய் வரியை அயர்லாந்து அரசிற்கு வழங்க வேண்டும் என ஐரோப்பிய கமிஷன் உத்தரவிட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கமிஷனின் நடவடிக்கையானது நியாயமற்றது என்றும், தனி நாடுகளின் வரிவிதிப்பு கொள்கைகளை உதாசீனப்படுத்துவதாக உள்ளது என்றும் அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கை வரி செலுத்தும் அமெரிக்கர்களை பாதிப்பதோடு, ஐரோப்பாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதையும் பாதிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தில் நிறுவனங்களுக்கான வருமான வரி விதிப்பு 12.5 சதவீதமாக இருக்கையில், ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்திற்கு ஒரு சதவீதம் வரையிலான வரியே விதிக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய கமிஷன் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய கமிஷனின் முடிவு குறித்து ஆப்பிள் நிறுவனம், அயர்லாந்து அரசு ஆகியவை கவலை தெரிவித்துள்ளன.
இம்முடிவினை எதிர்த்து மேல்முறையீடு செ‌ய்யப்போவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கமிஷனின் இந்த முடிவானது ஐரோப்பிய மண்ணில் தொடர்ந்து நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் அதனால் ஏற்படுத்தப்படும் வேலை வாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் தனிப்பிரிவு - தமிழக அரசு


குழந்தைகள் கடத்தலை தடுப்பதற்கு மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் ஆய்வாளர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டால் பணி சுமை அதிகரிக்கும் என்றும், அதனால் மாவட்ட தோறும் டி.எஸ்.பி. தலைமையில் தனி பிரிவு அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தினர்.
மேலும் காணாமல் போன குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். குழந்தை கடத்தல் விவகாரத்தில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 27 பேரின் தகவலை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் அளித்து இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு விசாரணை நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தும், வழக்கை மதுரை கிளைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டனர்.
Source: New gen media

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் கொலைகள்! திருச்சி சமயபுரத்தில் மீன்டும் ஒரு மாணவி கொலை!

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கல்லூரி மாணவி மோனிஷாவுக்கு கத்திகுத்து ஏற்பட்டது. கொள்ளிடம் காவல் நிலையம் அருகே மாணவியை கத்தியால் குத்திய பாலமுருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் ஒருதலைக்காதலால் இளம்பெண்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதும், வெட்டிக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. சென்னை சுவாதி, விழுப்புரம் நவீனா படுகொலைகளால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாகவே கரூரில் பொறியியல் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
College girl stabbed near Trichy
அந்த அதிர்ச்சி சம்பவம் நீங்கும் முன்பாக இன்று காலையில் தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை பிரான்சினா என்பவர் ஒருதலைக்காதலால் தேவாலயத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காலை முதலே கொலை சம்பவங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்று வரும் நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த மோனிஷாவின் தாய் பாத்திமா இன்ஸ்பெக்டராக உள்ளார். இன்று மாலை 5 மணியளவில் மாணவி மோனிசா, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன் என்பவர், மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன் கையில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மாணவி மோனிஷாவையும், கத்தியால் குத்திய பாலமுருகனையும் துறையூரில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Source: Kaalaimalar

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது., இதேபோல் டீசல் விலை ரூ.2.67 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 1–ந் தேதி, பெட்ரோல் விலை 89 காசுகளும், டீசல் விலை 49 காசுகளும் குறைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி பெட்ரோல் விலை ரூ.2¼ குறைக்கப்பட்டது. அதுபோல், டீசல் விலை 42 காசு குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்


இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.
நாவல்பழக் கொட்டை
நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
மாந்தளிர் பொடி
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
வேப்பம்பூ பொடி
வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
இசங்கு வேர்
இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து உண்டு வந்தால் சுரம் மற்றும் விஷக்கடி நீங்கும். நீரிழிவு நோயாளிகள் இசங்குவேர் பொடியை நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
வெந்தையக் கீரை
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் டைப் 1 டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.
அவரைக்காய்
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
பாதம் பருப்பு
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும்.

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!


சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீத்தாப்பழத்தில்-நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
* சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
* சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
* இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
* விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
* சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
* சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
* சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
* சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
* சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பேன்களை ஒழிக்கும். பொடுகு காணாமல் போகும்.
* சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகள்!!!


தற்போது அனைவரும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தான் அதிகம் சாப்பிடுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த உணவுகளின் மூலம் அத்தியாவசிய சத்துக்கள் கிடைப்பதை விட, நச்சுக்கள் தான் அதிகம் சேர்கிறது. இதனால் உணவுக்கால்வாய் சிக்கல்கள் அதிகரித்து, அதனால் குடல் நோய்களுக்கு உள்ளாகிறோம். குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! ஆரோக்கியமற்ற செரிமானத்தினால், உடலில் பல்வேறு டாக்ஸின்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் சேர்கிறது. ஆனால் நல்ல ஊட்டச்சத்து நிறைய உணவுகளை உட்கொண்டு வந்தால், அதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, குடலில் தேங்கியுள்ள நச்சுக்களும் வெளியேறி, குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!! முக்கியமாக உடலில் எந்த ஒரு நச்சுக்களும், கழிவுகளும் இல்லாவிட்டால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடனும், லேசாக இருப்பது போன்றும் உணரக்கூடும். அதிலும் குடலை சுத்தம் செய்யும் உணவுகளை உட்கொண்டு வந்தால், குடல் சுத்தமாவதோடு, உடலின் ஆற்றல் அதிகரித்து, கவனச்சிதறல் ஏற்படுவதையும் தடுக்கலாம். மேலும் உடலின் pH அளவு சீராக இருப்பதோடு, கருத்தரிக்கும் பிரச்சனை இருந்தால் நீங்கிவிடும். குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை இயற்கையான வழியில் அழிக்க உதவும் உணவுகள்!!! சரி, இப்போது குடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
தானியங்கள் தானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலம் குடல் சுத்தமாகும். ஏனெனில் தானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாகவும் உள்ளது. இதனால் செரிமானம் சீராக நடைபெற்று, குடலும் சுத்தமாக இருக்கும்.
க்ரீன் டீ தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், குடலியக்கத்தை சீராக்கி, குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தவறாமல் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
எலுமிச்சை சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் க்ளின்சிங் தன்மை இருப்பதால், அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், உடலில் தேங்கும் டாக்ஸின்கள் மற்றும் கொழுப்புக்களை அவ்வப்போது கரையச் செய்து, செரிமான மண்டலம் மற்றும் குடலை நச்சுக்களின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
பச்சை இலைக்காய்கறிகள் பச்சை இலைக்காய்கறிகள் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, செரிமான பாதைகளில் எவ்வித நோய்களும் தாக்காமல் பாதுகாப்பு அளிக்கும். எப்படியெனில் பச்சை இலைக்காய்கறிகள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் குணம் கொண்டது. ஆகவே இவற்றை உட்கொள்வதால், குடலில் பாக்டீரியாக்கள் இருந்தாலும், அவை வெளியேறிவிடும்.
அவகேடோ அவகேடோ கூட குடலை சுத்தம் செய்யும் குணம் கொண்டது. மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், அவை குடல் சுவர்களில் ஓர் படலத்தை உருவாக்கி, டாக்ஸின்கள் தங்காமல் தடுக்கும்

#சிறைவாசிகள்_விடுதலை_போராட்டத்தில்#உரை_நிகழ்த்தும்_இயக்க_கட்சி_தலைவர்கள்...!


செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தில்.... 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கழித்த முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் உள்பட அனைத்து தண்டனை சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் முன் விடுதலை செய்ய வலியுறுத்தி...
வருகின்ற 2/9/2006 வெள்ளி அன்று மாலை 3.30 மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மறுமலர்ச்சி தமுமுக சென்னை மாவட்டம் ஏற்பாடு செய்துள்ள...
தொடர் முழக்கப் போராட்டத்தில்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் K.M.ஷெரிப்
இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா அப்துல் ரஹீம்
தமிழ் தேச மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி
நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் அன்வர் பாலசிங்கம்
சிறுபான்மை வழக்கறிஞர் சங்க துணை தலைவர் மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் M.R.சேக் அப்துல் ரஹீம் அவர்களும்...
ம.த.மு.மு.க.மாநில தலைவர் சீனி முகம்மது (K.S.ரசூல்மைதீன்) மற்றும் மாநில நிர்வாகிகள் உரையாற்ற உள்ளோம் அனைவரும் வருக...!
அழைக்கிறது மறுமலர்ச்சி தமுமுக
சென்னை மாவட்டம்.

அரபு நாடுகளில் ஏகத்துவ புரட்சி


முகம்மது அப்துல்லாஹ் சிஸ்தி
கி பி.. 1700 கால கட்டத்தில் அரபு நாட்டில் முஸ்லிம்கள் ஓரு பக்கம் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டும், மறுபக்கம் தர்காக்களில் வழிபாடுகள் நடத்திக்கொண்டும் இருப்பதைப் பார்த்த இளம் ஆலிம் அப்துல் வஹ்ஹாப் ரஹ் இஸ்லாத்தையும் ஷிர்கையும் விளக்கி கிதாபுத் தவ்ஹீத் எனும் நூலை எழுதி வெளியிட்டார்
கிதாபுத் தவ்ஹுதில், அல்லாஹ் தஆலா உடைய உள்ளமை, பண்புகளில் ஒன்றையேனும் மனிதர்கள் உட்பட படைப்பினங்களுக்கு உண்டு என நம்புவது, சொல்வது, நம்பி செயல்படுவது அனைத்தும் ஷிர்க் இணை வைத்தலாகும். அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரும் பாவமாகும். எவையெல்லாம் ஷிர்க் எனக் கோடிட்டுக் காட்டி அவற்றை யெல்லாம் முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் என பரப்புரை செய்தார்.
The "core" of Ibn ʿAbd al-Wahhab's teaching is found in Kitab al-Tawhid, a short essay which draws from material in the Quran and the recorded doings and sayings (hadith) of the Islamic prophet Muhammad.[48] It preaches that worship in Islam includes conventional acts of worship such as the five daily prayers (salat); fasting (sawm); supplication (Dua); seeking protection or refuge (Istia'dha); seeking help (Ist'ana and Istighatha) of Allah.[1][page needed]
Muhammad Ibn ʿAbd al-Wahhab was keen on emphasizing that other acts, such as making dua or calling upon/supplication to or seeking help, protection or intercession from anyone or anything other than Allah, are acts of shirk and contradict the tenets of tawhid and that those who tried would never be forgiven –google/wikki
கிதாபுத் தவ்ஹீத் அரபியப் பாலவனப் பெருவெளியில் பல இலட்சக் கணக்காண இஸ்லாமிய இளைஞர்கள், சிந்தனையாளர்கள், உயைனாவின் அரசர் உஸ்மானிப்னு முஅம்மர், திரியாவின் அரசர் முகம்மது இப்னு சுவுது உட்பட அரசர்கள், அறிவு ஜீவிகளை சுண்டி இழுத்து அறிஞர் அப்துல் வஹ்ஹாபின் ஆதரவாளர் களாக்கியது.
இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல இலட்சம் பேரை சுண்டி இழுத்து தவ்ஹீத் தொண்டர்களாக்கி வைத்திருப்பதைப்போல.
After his return home, Ibn ʿAbd al-Wahhab began to attract followers, including the ruler of 'Uyayna, Uthman ibn Mu'ammar.-google/wikki
எல்லாக் காலங்களிலும் தவ்ஹீது, உண்மையான விசுவாசிகளை தன் பக்கம் ஈர்த்துவிடுகிறது. மற்றவர்கள் அறிந்தும் அறியாமலும் தவ்ஹீதின் எதிரிகளாகிவிடுகின்றனர்.
அறிஞர் அப்துல் வஹ்ஹாப் காலத்தில் அரபியாவின் நஜ்து பகுதியில் சய்யிது இப்னு அல்கத்தாப் என்ற தர்காவும், உலகிலேயே சிறந்த மரம் என்ற மரமும் இஸ்லாமிய ஷிர்க்கின் மையங்களாக செல்வாக்கு பெற்று விளங்கின.
he persuaded Ibn Mu'ammar to help him level the grave of Zayd ibn al-Khattab, a companion of Muhammad, whose grave was revered by locals. Secondly, he ordered the cutting down of trees considered sacred by locals, cutting down "the most glorified of all of the trees" himself.-google/wikki
அறிஞர் அப்துல் வஹ்ஹாபின் ஆலோசனையில் அரசரின் ஆணைப்படி தர்கா உடைத்து தரைமட்ட மாக்கப்பட்டு மரமும் வெட்டி சாய்க்கப்பட்டு எழுத்து, பாடல் வடிவிலான எல்லா ஷிர்குகளும் தடை செய்யப்பட்டன.
அறிஞர் அப்துல் வஹ்ஹாப்,
அற்ப துன்யாவுக்காக நபியையும், அடியார்களையும் அல்லாஹ்வுக்கு இணையாக்கும் ஷிர்கு எனும் பெரும்பாவத்தை விட்டு விலகி, அல்லாஹ்வின் வல்லமை, அல்லாஹ்வின் கட்டளைகளை உலகோருக்கு உரக்கப் பறை சாற்றுங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள் அளவில்லாமல் உங்களை வந்தடையும் என்றார்.
நம்ப மறுத்தனர் அந்தக் கூட்டத்தார்.
தவ்ஹீத் – ஏகத்துவ அழைப்பிற்கு இன்றுபோல் அன்றும் எதிர்ப்பலைகள் இருந்தது. அறியாமையின் காரணமாக தவ்ஹீதை எதிர்ப்பவர்களும் உண்டு, தவ்ஹீதுதான் உண்மையானது என அறிந்திருந்தும் அதை எதிர்ப்பவர்களும் உண்டு.
ஒருகூட்டம் தவ்ஹீதைச் சொன்ன அறிஞர் அப்துல் வஹ்ஹாபை கொலை செய்ய திட்டமிட்டது
அந்த சமயத்தில்
திர்யாவின் அரசர் இப்னு சுவுது, அறிஞர் அப்துல் வஹ்ஹாபை தனது நாட்டுக்கு அழைத்து,
,, இந்த பாலை, வனப்பிரேதசம் உங்களுடையது. தவ்ஹீதின் எதிரிகளைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களது தவ்ஹீத் கொள்கைக்கு எங்களது அரசின் முழு ஆதரவு உண்டு ,, என்று சொன்னார்.
அறிஞர் அப்துல்வஹ்ஹாப் அரசரிடம்,
,, நீங்கள்தான் இந்த நாட்டின் மக்கள் தலைவர். நான் மத நடவடிக்கைகளுக்கு தலைவன். தவ்ஹீதை ஆதரிப்பதால் நீங்கள்தான் சிறந்த அறிவாளி " chief and wise man ,, என்றார்.
bin Saud declared:
"This oasis is yours, do not fear your enemies. By the name of God, if all Nejd was summoned to throw you out, we will never agree to expel you."
Muhammad ibn ʿAbd al-Wahhab replied:
"You are the settlement's chief and wise man. I want you to grant me an oath that you will perform(Struggle to spread Islam) against the unbelievers of thawheed. In return you will be imam, leader of the Muslim community and I will be leader in religious matters."
— Madawi al-Rasheed, A History of Saudi Arabia:
The agreement was confirmed with a mutual oath of loyalty (bay'ah) in 1744
சவுதி அரசின் ஒத்துழைப்போடு அறிஞர் அப்துல் வஹ்ஹாப்பும் அவரது 6 மகன்களும் திர்யாவிலும் அரபியாவின் பல பகுதிகளிலும் மதரசாக்களை நிறுவி ஏகத்துவ பரப்புரையை அரபுலகம் முழுவதும் எடுத்துச் சென்றனர்.
இதன் காரணமாக அரபு நாடு முழவதும் தர்கா, ஷிர்க் ஸலவாத்து, பாடல்கள், மற்றும் எல்லா வகையான ஷிர்க்குகளும் அழித்தொழிக்கப்பட்டன.
அல்லாஹ் சந்தோசப்பட்டான்.
அரபுநாட்டுக்கு அல்லாஹ் தஆலாவின் அருட்கொடை பெட்ரோல் வடிவில் வந்தது. அரபுநாடுகள் செழித்தன. தவ்ஹீத் பரப்புரைக்கு துணை நின்ற உலமாக்களும் மற்றவர்களும் மதம், அரசு சார்ந்த உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை மிகக் கண்ணியமாக வாழ்ந்து வருகின்றனர்.
The descendants of Ibn ʿAbd al-Wahhab, the Al ash-Sheikh, have historically led the ulama in the Saudi state,[6] dominating the state's religious institutions.[7] Within Saudi Arabia, the family is held in prestige similar to the Saudi royal family, with whom they share power, and has included several religious scholars and officials.[42] –google/wikki
அரபுநாடுகளில் மார்க்க கல்வி நிறுவனங்கள், உலக கல்வி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்றன. மதினா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் மாணவர் எண்ணிக்கை 22 ஆயிரம். ரியாத் பிரின்ஸ்சஸ் நூரா பின்த் அப்துர் ரஹ்மான் மகளிர் பல்கலைக் கழகத்தின் மாணவியர் எண்ணிக்கை 66 ஆயிரம். பல்கலைக்கழக வளாகத்தில் 4 லைன்களில் 14 ஸ்டேசன்கள் வழியாக ஓடும், டிரைவர், டிக்கட் இல்லா மெட்ரோ ரயில் பாதையின் தூரம் 12 கி மீ. www.pnuniversity/riyath
இன்று அரபு நாடுகளில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை அரபியரின் மக்கள் தொகையைப்போல் இரண்டு மடங்கு. அரபு மண்ணில் வைத்து அவ்வளவு பேருக்கும் அல்லாஹ் ரிஷ்க் வழங்கிக்கொண்டு இருக்கிறான். இன்று அரபு நாட்டு செல்வம் ஜம் ஜம் நீரைப் போல உலகெங்கும் நற்காரியங்களுக்காக சென்று கொண்டிருக்கிறது.
குவைத் பிரதமர் ஏழை இந்திய கிராமங்களைத் தத்தெடுக்க ஆர்வம் தெரிவித்து இருக்கிறார்.
அரபு நாட்டு மக்களை ஷிர்கிலிருந்து விடுவித்து அரபு நாட்டு மக்களுக்கு அல்லாஹ்வின் உதவியை கொண்டு வந்த அறிஞர் அப்துல் வஹ்ஹாப்பை இன்றும் நினைவு கூறுகின்றனர் அரபுநாட்டு மக்கள்.
தர்கா கட்டி அல்ல, ஒரே சமயத்தில் ஆண்களும் பெண்களுமாக 12 ஆயிரம்பேர் தொழும் வசதியுடைய, கோட்டை வடிவிலான, கலை நயமிக்க பள்ளிவாசலை 2011 ல் கத்தார் தோஹாவில் கட்டி அப்பள்ளிவாசலுக்கு மஸ்ஜித் இமாம் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். -Qattar News 2011
ஷிர்கிலிருந்து விடுபட்டு ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டதால் அரபு நாட்டு மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அன்பளிப்புக்கள்தான் மேலே உள்ள நற்செய்திகள். ஷிர்கை விட்டு வெளியேறி தவ்ஹீதுக்கு வரும் அறிந்தவர், அறியாதவர் அனைவருக்கும் இந்நற்செய்தி பொருந்தும். அன்றிருந்த அல்லாஹ்தான் இன்றும் இருக்கிறான்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கரத்தை வலுப்படுத்தினால் எல்லா ஜமாஅத்துகளுக்கும் அல்லாஹ்விடமிருந்து அரபு நாட்டவருக்கு வந்தது போன்ற நற்செய்தி வரும். தவ்ஹீதுக்கு வந்தால் வாங்கும் கைகளை அல்லாஹுத்தஆலா கொடுக்கும் கைகளாக்குவான். இது கற்பனை அன்று. வரலாற்றின் மூலம் தெரிய வரும் உண்மையாகும்.

துபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய துபை தமுமுகவினர்...


-----------------------------------------------
ஆம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக, ஏஜெண்ட் மூலம் நேற்றைய முன்தினம்(29/8/16) துபை வழியாக சென்றார்.
செல்லும் வழியில் துபையில் ஒரு அறையில் இரவு தங்கியுள்ளார், அப்போது அவரோடு இருந்த ஏஜண்டுகள் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஆம்பூரில் உள்ள தனது மகனை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். எப்படியாவது தன்னை மீட்குமாறும் கூறியுள்ளார்.
உடனே அவரது மகன் என்னை தொடர்பு கொண்டார்,
நான் தமுமுகவின் அமீரக துணைச் செயலாளர் சகோ. ஹூஸைன் பாஷா மற்றும் துபை மமக செயலாளர் சகோ.A.S.இப்ராஹிம் ஆகியோரது தொடர்பு எண்ணை கொடுத்து பேச சொன்னேன்.
அந்த பெண் ஒரே முறை மட்டும் தான், தனது மகனை தொடர்பு கொண்டு இருந்தார், அதுவும் NET மூலம் பேசியிருக்கிறார். வேறு எந்த தொடர்பு எண்ணும் இல்லை,
ஆனாலும் நமது சகோதரர்களின் தொடர் முயற்சியால், அந்த பெண்ணை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்டவர்களோடு பேசி, அவரை மீட்டு, அவருக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறி, சிறை தொகையை செலவுக்கு வழங்கி, சென்னைக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
துரிதமாகவும் பொறுப்பாகவும் செயல்பட்ட அமீரக செயலாளர் அண்ணன் அப்துல் ஹாதி, ஹூஸைன் பாஷா, A.S.இப்ராஹிம், அஹ்மத் கான், கள்ளக்குறிச்சி காதர் அலி மற்றும் துபையை சேர்ந்த தமுமுக சகோதரர்கள் அனைவருக்கும், எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மை மறுமையில் இதற்கான நற்கூலி வழங்குவானாக.
(ஏஜண்டுகளை நம்பி, அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, இவரைப் போல் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இனிமேலாவது கவனத்துடன் செயல்பட வேண்டும்.)
V.R.நசீர் அஹ்மத்.
மாவட்ட செயலாளர்.
தமுமுக. (வே.மே.)

#காணவில்லை ..!

பெயர் : அன்னா ஹஸாரே

தொழில் : உண்ணாவிரதம்,

உபதொழில் : ஊழல் ஒழிப்பு கோஷம் போடுவது,

இந்திய விடுதலைக்காக #ஆர்எஸ்எஸ் எந்த பங்களிப்பும் செய்யவில்லை: முன்னாள் எம்.பியும் நடிகையுமான #ரம்யா தெரிவித்துள்ளார்.

இந்திய விடுதலைக்காக #ஆர்எஸ்எஸ் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்றும், ஆங்கிலேயர்களின் பக்கம் இருந்து செயல்பட்ட அமைப்பு அது என்றும், முன்னாள் எம்.பியும் நடிகையுமான #ரம்யா தெரிவித்துள்ளார். SourcE: News18 Tamil 

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியாததற்கான காரணங்கள்


சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா? எவ்வளவு டயட்டில் இருந்தாலும், நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். சரி இப்போது உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்களை பார்க்கலாம்.
* சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது. ஃபேட்டி அமிலங்களில் இப்படி ஏற்றத்தாழ்வு இருப்பதால், அதன் காரணமாக உடலினுள் அழற்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே சரிசம அளவில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.
* எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள். இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
* பால் பொருட்களை எடையைக் குறைக்கும் போது எடுத்து வந்தால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளில் Neu5Gc என்னும் பொருள் உள்ளது. இந்த உணவுகள் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும்.
* உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் நீரிழிவு, பற் சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். என்ன தான் நீங்கள் டயட்டில் இருந்து சர்க்கரை சேர்க்காமல் இருந்து, கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடையை அதிகரிக்கும்.
* சுத்திகரிக்கப்பட்ட (மைதா) மாவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. எனவே பிரட், நூடுல்ஸ், சாதம், பாஸ்தா, பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்த்திடுங்கள்.

உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.!!!


1.மாரடைப்பு (Coronary heart disease)
2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)
3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)
4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)
5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)
6.HIV/AIDS
7.காச நோய் (Tuberculosis)
8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)
9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)
10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight)
இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல்.
நன்றி : தமிழ் மருத்துவம்

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை காட்டினார்கள்....

#முஸ்லிம்_சமுதாயத்தின்_வலிமை_வாய்ந்த_அமைப்பு_தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
சட்டமன்ற வளாகத்தில் #தமிமுன்_அன்சாரி_
எம்.எல்.ஏ பேட்டி....!!
ஒட்டகத்தை குர்பானி கொடுக்க தடை விதித்த சென்னை உயர்நீதி மன்றம் அளித்த அநீதியான தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை காட்டினார்கள்....
இது,முஸ்லிம் சமுதாய மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்றும் தமிமூன் அன்சாரி கூறினார்.
👇👇👇👇👇👇👇👇👇

மக்களிடையே பிரிவினை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது... சிந்தியுங்கள்...!

🗿உங்களுக்கு தெரியுமா ஆர்.எஸ்.எஸ்.உண்மை முகம்
*சகோதர்களே சிந்திப்பீர்*
◯‍ அய்யப்ப பக்தர்கள் பல மசூதிகளை கடந்து சபரி மலைக்குச் செல்கிறார்கள்....
◯‍ முருக பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் அறுபடை வீடுகளுக்கு செல்கிறார்கள்...
◯‍ ஏழுமலையான் பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்கள்...
◯‍ செவ்வாடை தரித்த பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்...
◯‍ கிருஸ்தவர்கள் தன் நேர்ச்சைக்காக பல மசூதிகளை கடந்து தான் வேளாங்கண்ணி செல்கிறார்கள்...
🏮இதில் எங்காவது பிரச்சனைகள் ஏற்ப்பட்டதுண்டா
🏮எந்த ஒரு கட்டத்திலும் சிறு பிரச்சினை வந்ததில்லை
🏮இதுவரை செய்தியாவது வெளிவந்து பார்த்ததுண்டா...?
🏮ஏனென்றால் இவர்கள் தன் பக்திக்காக கோவிலுக்கு செல்பவர்கள்...
🔮முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து வழிபாடு நடத்திவிட்டு அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ போட்டுவிடுவார்கள்
🔮இன்றோ, தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.
🏮வடநாட்டு சேட்டுக்களின் விநாயக சதுர்த்தி பக்திக்காக தமிழகம் கொண்டு வரப்படவில்லை....
🏮பதட்டம், கலவரம், இந்து முஸ்லிம் மக்களிடையே பிரிவினை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது... சிந்தியுங்கள்...!
🏮போலி வேசம் போடுபவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்...
இந்துக்கள் வேறு
இந்துத்துவா வேறு என்று புரிந்து கொள்ளுங்கள்
*���மறந்து விடுவது மக்களின் இயல்பு���*
*��நினைவுபடுத்துவது எம் கடமை���*
Source: FB முகம்மது அன்சர்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

#செப்டம்பர்15_சிறைவாசிகளை_விடுதலை_செய்யுமா_தமிழக_அரசு?.


1992 ம் ஆண்டு இந்தியா தேசத்தின் மதசார்பின்மையை பறிக்கும் விதமாக ஜனநாயகங்களுக்கு எதிராக இஸ்லாமியர்களின் வணக்க வழிபாட்டு தளமான பாபர் மஸ்ஜித் சங்பரிவார கும்பல்களால் இடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சங்பரிவார சக்திகளால் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்களும்,
வணிக வளாகங்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசின் மெத்தனப்போக்கால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றது.
அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தது தமிழக அரசு.
அப்பாவிகளுக்கும் வழக்கில் சம்பந்தமே இல்லாத இஸ்லாமிய இளைஞர்களுக்கு நீதி கிடைக்காமல் அநீதி இழைக்கப்பட்டு படித்த பட்டதாரிகளுக்கு கூட சிறைவாசிகள் என்ற பட்டமளிக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை விதிக்கக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் குடும்பங்களையும்,இன்பமான இந்த உலக வாழ்க்கையும் இழந்து வாடுகிறார்கள்(மறுமையில் இன்ஷா அல்லாஹ் கூலி கிடைக்கும்).
தமிழக அரசு அண்ணா பிறந்தநாள்,எம்.ஜி.ஆர் பிறந்தநாள் போன்ற தினங்களில் ஆயுள் சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்தது.
இவர்களை விடுவிக்க அரசியலமைப்பு சட்டம் 161 பயன்படுத்தப்படுகிறது.அதாவது மாநில அரசு நினைத்தால் யாரை வேண்டுமானாலும் விடுதலை செய்ய அதிகாரம் வழங்கப்படும் சட்டம்.
ஆனால் ஆளும் அதிமுக அரசாங்கம் கடந்த ஆட்சியில் ஒரு சிறைவாசியை கூட விடுதலை செய்யவில்லை.
இது குறித்து சென்ற முறை சட்டமன்றத்தில் பலமுறை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்,
அஸ்லாம் பாஷா,
இந்த முறை முஸ்லிம் லீக்கை சேர்ந்த அபுபக்கர்,
மஜக பொது செயலாளர் அன்சாரி போன்றவர்கள் பேசிய போது இதற்கு பதிலளித்த அமைச்சர்கள் சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறினர்.
இதனால் இந்த வழக்கு முடியும் வரை விடுதலை செய்ய இயலாது என்று தங்கள் பதிலுரையில் தெரிவித்தனர்.
தற்போது இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
எனவே வருகின்ற அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசு முன் வரவேண்டும்.
இதற்கு முதற்கட்டமாக ஏற்கனவே நன்னடத்தை அடிப்டையில் விடுவிக்க பரிந்துத்தை செய்து நிலுவையில் உள்ள
குன்டு ஜாக்கீர் பிரஸ் அபு அமானுல்லாஹ் போன்றவர்களையும்,நோய்வாய்ப்பட்டுள்ள அபுதாகீர்,திண்டுக்கல் மீரான் மைதீன் போன்றவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மக்களின் மீது அக்கறை கொண்ட,
குறிப்பாக பெண்களின் நலன் மீது அதிகமாக அக்கறை கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் அந்த சகோதரர்களின் குடும்பங்களை கருணையோடு பார்த்து அவர்களின் விடுதலைக்கு வித்திட வேண்டும்.
எங்களுக்கு தாலிக்கு தங்கம் வேண்டாம்.தாலிகள் அறுபடும் முன் எங்கள் கணவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று எங்கள் சகோதரிகள் கேட்கிறார்கள்.
இவர்களின் கண்ணீர்களுக்கு பதிலளிக்கும் விதமாக,
வாழ்விழந்தவர்களுக்கு புது வாழ்வு அளிக்கும் விதமாக இந்த அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய மக்களுக்கு அன்பு பரிசாக சிறைவாசிகள் விடுதலை என்ற அறிவிப்பு வெளிவரும் என்று நம்புகிறோம்.

#சிறுபான்மையினர்_நலத்துறை_மானியக்_கோரிக்கையில்_தமிமுன்_அன்சாரி_MLA_உரை(சுருக்கமாக)30_08_16


#ஒட்டக_குர்பானிக்கு_தடை_விலக_அரசு_உதவ_வேண்டும்!
#உருது_அகாடமி_சீரமைக்கப்பட_வேண்டும்!
#முஸ்லிம்களுக்கு_இட_ஒதுக்கீடு_அதிகரிக்கப்பட_வேண்டும்!
#வக்பு_வாரியத்திற்கு_தீர்ப்பாயம்_தேவை!
பாகம்_1
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே....
பக்ரீத் பண்டிகை என்னும் தியாகத்திருநாள் உலகமெங்கும் கொண்டாப்படுகிறது. இது நரபலியை ஒழித்து அதற்கு பகரமாக விலங்குகளை பலியிடும் நோக்கத்தில் ஆடு,மாடு,ஒட்டகங்கள் குர்பானி கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த இடைக்கால தீர்ப்பில், "ஒட்டகம் அறுக்கும் வகையில் இடம் (SLAUGHTER HOUSE) இங்கு இல்லை" என்பதை காரணம் காட்டி ஒட்டக குர்பானிக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக ஆந்திராவிலிருந்து லாரிகளில் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு குர்பானி கொடுக்கப்படுகிறது. வியாபாரத்திற்காக அறுக்கப்படும் பிராணிகளுக்குத்தான் SLAUGHTER HOUSE என்னும் அறுக்கும் இடம் அவசியம்.
அதே சமயம் இது மத சடங்குகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் சொந்த தேவைகளுக்கான பயன்பாட்டிற்கோ இது அவசியமில்லை. அதனால்தான் எனது சகோதர மக்கள் தங்களின் மத நம்பிக்கைகளின் படி கோயில்களில் கால்நடைகளை வெட்டுவதற்கு சட்டம் அனுமதிக்கிறது.
மேலும் மிருகங்களை வதை செய்யக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட மிருகவதை தடை சட்டம் 28-வது பிரிவு மத நம்பிக்கைக்கு விலக்களித்துள்ளது.
எனவே இது முஸ்லிம்களின் மத நம்பிக்கை சார்ந்த உணர்வு பூர்வமானது என்பதை இங்கே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மேலும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது பாசமும் அன்பும் கொண்ட மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் இவ்விசயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். ஒட்டகங்களை அறுப்பதற்கு மாநகராட்சி, நகராட்சிகளில் இடங்களை ஒதுக்கி, இதனை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஒட்டகங்களை குர்பானி கொடுக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
(உரையின் இதரப்பகுதிகள் பிறகு வெளியிடப்படும்.)
தகவல்;
மஜக ஊடகப் பிரிவு (சென்னை)

ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்றை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது நிபுணர் குழு..


அவை என்னவென்றால்....
மிளகாயிலிருந்து எடுக்கப்படும் பெலார் கானிக் அமிலம், வானிலைல் அமைடு பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மிளகாய் குண்டுகள் பயன்படுத்தப்படும். (இது தாங்க முடியாத எரிச்சலையும் தற்காலிக முடக்கத்தையும் ஏற்படுத்தும்.)
காதைச் செவிடாக்கும் அளவுக்கு பெருத்த ஒலியை உண்டாக்கும் ‘லார்டு’ (LARD) உபகரணம் பயன்படுத்தப்படும். (பழைய கட்டிடங்கள் இருக்கும் இடங்களில் இதை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இந்த சத்தத்தால் கட்டிடமே விழுந்துவிடும்.)
அதேநேரம் பெல்லட் துப்பாக்கிகளுக்கு முழுமையாக தடை வித்திக்கவும் வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

அதிகாலையில் கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் - இயற்கை மருத்துவம்


உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நாம் பல்வேறு செயல்களை அன்றாடம் மேற்கொண்டு வருகிறோம். அதுவும் இயற்கை வழிகளின் மூலமே நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறோம். அப்படி இயற்கையாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் வழி தான் ஜூஸ் குடிப்பது.
அதிலும் வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், நாம் தினமும் அடிக்கடி அவஸ்தைப்படும் நோய்களில் இருந்து விடுபட முடியும். இங்கு அப்படி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பானங்களில் ஒன்று கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பது.
இப்போது இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் இருக்கும் எந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று காண்போம்.
பார்வை மேம்படும் :-
கண் பிரச்சனை இருந்தால், கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடியுங்கள். இதனால் அந்த பானம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, வலிமைப்படுத்தி, பார்வையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
புற்றுநோய் தடுக்கப்படும் :-
கேரட் இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அபாயகரமான புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்
நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் :-
கேரட் மற்றும் இஞ்சியில், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, நோய்களிடமிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
குமட்டல் குறையும் :-
இந்த இயற்கை பானம், வயிற்றில் உள்ள அமிலத்தை நிலைப்படுத்தி, குமட்டல் மற்றும் வாந்தி உணர்வைக் குறைக்கும்.
தசை புண்கள் :-
கேரட் மற்றும் இஞ்சியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் ஏராளமாக உள்ளது. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், தசைகளில் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறையும்.
இதய நோய்கள் :-
கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
வாய் ஆரோக்கியம் :-
கேரட் இஞ்சி ஜூஸ், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இது வாயில் எச்சிலின் உற்பத்தியைத் தூண்டி, வாய் வறட்சியடைவதைத் தடுத்து, வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.
ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:-
கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி - சிறிது (துருவியது)
தண்ணீர் - தேவையான அளவு
ஆரஞ்சு ஜூஸ் - சிறிது (விருப்பமிருந்தால்)
செய்முறை:-
மிக்ஸியில் துண்டுகளாக்கப்பட்ட கேரட், துருவிய இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டினால், ஜூஸ் ரெடி!

#விவாசயிகளின்__கோரிக்கையை#வலியுறுத்தி_மனிதநேய_ஜனநாயக_கட்சியின்_சார்பில்_திருச்சி_தலைமைதபால் #நிலையம்_முற்றுகை


காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசை வலியுறுத்தி 30.08.16 இன்று காலை 11.30 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையத்தை திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயாளலர் சகோ. இப்ராஹீம் ஷா அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயாளலர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு சாலை ரோட்டில் உள்ள G.K.M மஹாலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
தகவல்;
மஜக_ஊடகப் பிரிவு (திருச்சி மாவட்டம்)