ஞாயிறு, 31 ஜனவரி, 2021

கர்நாடகா – மகாராஷ்ட்ரா எல்லைப் பிரச்சனை அன்றும் இன்றும்!

 The Maharashtra-Karnataka border dispute – the past and the present :  இந்த வார துவக்கத்தில் மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தேசிய காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் ஷரத் பவாரும் இணைந்து மாநில அரசின் புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். மகாராஷ்ட்ரா கர்நாடகா சீமவத் : சங்கர்ஷ் ஆனி சங்கல்ப் (மகாராஷ்ட்ரா கர்நாடகா எல்லைப் பிரச்சனை : போராட்டமும் உறுதிமொழியும்) என்ற புத்தகத்தை வெளியிட்டனர்

மராத்தி மொழி பேசும் மக்களை அதிகமாக கொண்ட கர்நாடக பகுதிகள் மகாராஷ்ட்ராவிடம் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள், கட்டுரைகள் அடங்கிய இதழியல் தொகுப்பு இந்த புத்தகமாகும். உச்ச நீதிமன்றம் இந்த இடம் தொடர்பாக தீர்ப்பினை வழங்கும் வரை இப்பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று தாக்கரே கூறினார். மிகவும் எச்சரிக்கையுடன் பேசிய பவார், உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பினை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் 2004ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதி

ஔரங்கபாத்தின் பெயர் மாற்றம் போன்ற பிரச்சனையாக இல்லாமல் இந்த பிரச்சனை அவ்வபோது தோன்றும். மகாராஷ்ட்ரா-கர்நாடகா எல்லையில் உள்ள 7000 சதுர கி.மீ நிலபரப்பை உரிமை கோரியுள்ளது. பெலகவி, உத்தர கன்னடா, பிதார், குல்பர்கா மாவட்டங்களில் உள்ள 814 கிராமங்கள், பெலகவி, கர்வார், நிப்பானி உள்ளிட்ட டவுன்களும் இதில் அடங்கும். இந்த பகுதி மராத்தி பேசும் மக்களை அதிகம் கொண்டுள்ளது என்பதால் மகாராஷ்ட்ரா இந்த பகுதிகளை தங்களின் மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதில் இருந்தே இந்த பிரச்சனை ஏற்பட்டவன்னம் உள்ளது. முன்னாள் பம்பாய் பிரசிடென்ஸி ஒரு பன்மொழி மாகாணமாக செயல்பட்டது. அப்போது கர்நாடகாவின் விஜயபூரா, பெலகவி, தர்வாத், மற்றும் உத்திரகன்னடா ஆகிய பகுதிகளையும் அது உள்ளடக்கியது. 1948ம் ஆண்டு, மராத்தி அதிகம் பேசும் மக்களைக் கொண்ட பெல்காம் முனிசிபாலிட்டி தங்களை மகாராஷ்ட்ராவுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

ஆனாலும் 1956ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் பெல்காம் மற்றும் பம்பாய் மாநிலத்தின் 10 தாலுகாக்களையும் மைசூர் மாநிலத்தோடு இணைத்தது. மைசூர் மாநிலம் 1973ம் ஆண்டு கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எல்லைகளை நிர்ணயிக்கும் போது, மாநில கமிஷனின் மறுசீரமைப்பு மைசூரில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கன்னட மொழி பேசும் மக்கள்தொகை கொண்ட தாலுகாக்களை சேர்க்க முயன்றது. ஆனால் மைசூரில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதிகள் அனைத்திலும் கன்னட மொழி பேசுபவர்களைக் காட்டிலும் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக அளவில் இருந்தனர்.

எல்லைப் பகுதிகளை மகாராஷ்ட்ர மாநிலத்தோடு இணைக்க அன்று அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தன. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையின் போதும் காங்கிரஸ், என்.சி.பி., சிவ சேனா மற்றும் பாஜக என்று ஒவ்வொரு கட்சியும் இந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை மகாராஷ்ட்ராவுடன் இணைப்பது தொடர்பாக அறிவித்திருப்பார்கள். கடந்த 60 ஆண்டுகளில் ஒவ்வொரு கவர்னர் உரையின் போதும் எல்லைப் பிரச்சனை பற்றி குறிப்பிடும் போது கட்சி உறுப்பினர்கள் உரத்த கைதட்டல்களுடன் வரவேற்பதுண்டு.

சமீபத்திய நிகழ்வுகள்

மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவரும் கடந்த 13 மாதங்களில் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவது இது ஒன்றும் முதன்முறையல்ல.

சட்டமன்றத்தில் கர்நாடகா ஆக்கிரமிப்பு செய்த மகாராஷ்ட்ரா பகுதிகள் என்று இந்த பகுதிகளை முதல்வர் தாக்கரே கூறிய பின்பு சில நாட்களுக்கு கோலாப்பூரில் இருந்து பெல்காமிற்கான பேருந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிராவுக்கு ஆதரவாக விரைவாக தீர்வுகள் கிடைக்க உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவை மேற்பார்வையிடும் மூத்த அமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் சாகன் புஜ்பாலை அறிவித்தார்.

கடந்த ஆண்டு, கர்நாடக தினம் கொண்டாடப்படும், நவம்பர் 1ம் தேதி அன்று மகாராஷ்ட்ரா அமைச்சர்கள் அனைவரையும், கர்நாடகாவில் மராத்தி பேசும் மக்களுக்கு ஆதரவாக கறுப்பு நிற பேண்டை அணிந்து வர வேண்டும் என்று மகாராஷ்ட்ர அரசு கேட்டுக்கொண்டது.

மகாஜன் ஆணையம்

எல்லைப் பிரச்சனையில் மகாராஷ்ட்ர அரசு வன்முறையை தூண்ட முற்படுவதாக கர்நாடகாவின் பாஜக அரசு குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ஒரு அங்குல நிலத்தையும் விட்டுத்தர முடியாது என்று உறுதி எடுத்துள்ளார். மகாஜன் ஆணையம் வெகு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

மகாஹன் ஆணையம் இந்திய அரசால், இந்த பிரச்சனை குறித்து ஆராய 1966ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த ஆணையம் ஆகஸ்ட் மாதம் 1967ம் ஆண்டு சமர்பித்த அறிக்கையில் 264 கிராமங்கள் மகாராஷ்ட்ராவுடன் இணைக்கப்பட வேண்டும். பெல்காம் உள்ளிட்ட 247 கிராமங்கள் கர்நாடகாவுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த ஆணையத்தின் தலைவராக இருந்த இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

மகாராஷ்ட்ரா இதனை நிராகரித்ததோடு, இது ஒரு பக்கத்தினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறது. நியாயம் அற்றது என்றும் கூறியது. ஆனால் கர்நாடகா இதனை வரவேற்றது. கர்நாடகாவின் கோரிக்கைகள் இருந்த போதிலும் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இந்த வாரத்தின் துவக்கத்தில், இந்த ஆணையத்தின் அறிக்கை முற்றிலும் மகாராஷ்ட்ராவிற்கு எதிரானது என்றார்.

பாஜகவின் குழப்பம்

ஔரங்கபாத் பெயர் மாற்றத்தில் தாக்கரேவை ஓரங்கட்ட பாஜக முயன்ற போது, பழைய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று சவால் விடுத்தது. தற்போது எல்லை விவகாரத்தில் தன்னுடைய முன்னாள் கூட்டாளிக்கு பதிலடி கொடுக்க நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது.

மகாராஷ்ட்ரா காங்கிரஸ் நீண்ட காலமாக இது குறித்து பேசவில்லை. கர்நாடகாவில் தன்னுடைய கட்சிக்கும், ஆட்சிக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் எதுவும் பேசிவிடக்கூடாது என்று எச்சரிக்கையாக உள்ளது பாஜக. இருப்பினும் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராட்டி பேசும் மக்கள் உள்ள எல்லைப்பகுதியை மகாராஷ்ட்ராவுடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்ட்ர பாஜக விரும்புகிறது என்று கூறியுள்ளார்.

“ஆட்சியில் இருக்கும் கட்சியைப் பொருட்படுத்தாமல், இரு மாநிலங்களும் ஆரம்பத்தில் இருந்தே தங்கள் நிலைப்பாடுகளில் உறுதியாக உள்ளனர். மகாராஷ்டிரா பாஜகவின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது, ”என்று ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

source: https://tamil.indianexpress.com/explained/the-maharashtra-karnataka-border-dispute-the-past-and-the-present/

அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார் ஜெ.பி.நட்டா

 நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் ” எதிர்வரும் காலங்களில் பாஜக, அதிமுக மற்றும் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்திக்கும்” என்று தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

இன்று (ஜனவரி, 30), காலை மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்தார். சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக ஜே.பி.நட்டா இருந்ததால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.

 

 

 

ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி. ஆரின் நினைவாக கட்டப்பட்ட கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தற்போது மதுரையில் முகாமிட்டுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோயில்  திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சந்திக்காமல், அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பேசும் பொருளாகி உள்ளது.

இதற்கிடையே, தலைவர் ஜே.பி நட்டாவை ஆர்.பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு தனியாக சந்தித்து பேசினர்.  இன்று மட்டும் 3 அதிமுக அமைச்சர்கள் ஜே.பி நட்டாவை சந்தித்துள்ளனர். ஆனால், விஜயபாஸ்கர் தனியாகவும், மற்ற 2 அமைச்சர்கள் தனியாகவும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-national-president-jp-nadda-meets-tamilnadu-health-minister-c-vijayabaskar-in-madurai-244981/

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு : டெல்லியில் அதிகரிக்கும் பதற்றம்

 Delhi Israeli Embassy Bomb Blast : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கடந்த 26-ந் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக  டில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே, திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அப்துல்கலாம் சாலையில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பினால், 4 கார்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இதுவரை யாரும் காயம் மற்றும் பலியானதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் வெடித்தது, எந்த மாதிரியான குண்டு என்பது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வரும் நிலையில்,  சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டிராக்டர் பேரணி வன்முறை காரணமாக டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் டெல்லி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/national-news-bomb-blast-near-israeli-embassy-in-delhi-244858/

சனி, 30 ஜனவரி, 2021

கோவிட்-19 தொற்றும் ஒரு பருவகால நோய்: 221 நாடுகளின் புள்ளிவிவர ஆய்வு

 கோவிட் -19  பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் விகிதம் மற்றும் உயிரிழந்தோர்களின் விகிதம் பற்றி பரிணாம உயிர் தகவலியல் (பயோ-இன்ஃபர்மேட்டிக்ஸில்) அடைப்படையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  பிற தொற்று நோய்களைப்போல இந்த தொற்று நோயும் 221 நாடுகளுடைய வெப்பநிலை மற்றும் அட்சரேகைகளுடன் தொர்புடைய ஒன்றாக உள்ளது  என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையின் முடிவில் ‘மற்ற பருவ நோய் காய்ச்சல் போல, இதும் ஒரு பருவ கால நோயாக  இருக்கலாம்’ என்று மூத்த எழுத்தாளர் குஸ்டாவோ சீட்டானோ-அனோலஸ்  தெரிவித்துள்ளதாக, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக வேளாண், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சிகாக முதலில் 221 நாடுகளின் அட்சரேகை, தீர்க்கரேகை மற்றும் சராசரி வெப்பநிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய தொற்றுநோயியல் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவிறக்கம் செய்தனர். அவற்றில் நோய் நிகழ்வு, இறப்பு, மீட்பு வழக்குகள், செயலில் உள்ள வழக்குகள், சோதனை விகிதம், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது  போன்றவையும் அடங்கும். இந்த தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 15, 2020 முதல் உள்ளவையாகும்.

எடுக்கப்பட்ட தரவுகளுக்கும்,  221 நாடுகளின் வெப்பநிலை, அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஆகியவற்றிற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புள்ளிவிவர அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அதில் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக உள்ள  வெப்பமான நாடுகள் மிகக் குறைவாக பாதிக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

“உண்மையில், எங்கள் உலகளாவிய தொற்றுநோயியல் பகுப்பாய்வில், 221 நாடுகளின் வெப்பநிலை மற்றும் நிகழ்விற்கும், இறப்பு, மீட்பு வழக்குகள் மற்றும் செயலில் உள்ள நிகழ்வுகளுக்கும் இடையில் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க தொடர்பைக் காட்டியது. அதே போன்ற தொடர்பு  தான் அட்சரேகையுடன் காணப்பட்டது, ஆனால் தீர்க்கரேகையுடன் அந்த தொடர்பு  காணப்படவில்லை” என்று சீட்டானோ-அனோலஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/uncategorized/researchers-found-data-from-221-countries-suggest-covid-19-is-seasonal-244839/

கொரோனா தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளலாம்? யாருக்கு போடக் கூடாது?

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தாமதம்

Who can take the Covid-19 vaccine, and who are advised not to :  ஜனவரி 14ம் தேதி அன்று யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்பது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் முரண்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாவது டோஸிற்கு மாற்று தடுப்பூசி வழங்கப்படாது. அதாவது முதலில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டிருந்தால் அடுத்த டோஸூம் கோவிட்ஷீல்ட் மட்டுமே. அவர்களுக்கு கோவாக்‌ஷின் வழங்கப்படாது. உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் உடல் நலம் தேறிய பிறகு நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு தடுப்பூசி போடப்படாது.

கர்ப்பிணிகள்

கர்ப்பகாலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும், வைரல் தொற்றுக்கான எதிர்ப்பையும் பொதுவாகவே மாற்றும். இது சில நேரங்களில் கடுமையான அறிகுறிகளாக பிரதிபலிக்கும். இது கோவிட்19க்கும் பொருந்தும். கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள் யாரும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை கட்டங்களில் பங்கேற்கவில்லை. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது கர்ப்பம் குறித்து உறுதியாக தெரியாத பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் இந்த நேரத்தில் தடுப்பூசியை பெற கூடாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றதாகும்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

நாள்பட்ட நோயாளிகள்

இதற்கு முன்பு சார்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட இருதய, நரம்பியல், நுரையீரல், வளர்ச்சிதை மாற்ற நோய்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், எச்.ஐ.வி நோயாளிகள் போன்றோரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். இதுவும் மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் மருத்துவர் மனோகர் அக்னனி ஜனவரி 14ம் தேதி அன்று மாநில தலைமைச்செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நோய் தடுப்பு இயக்குநர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள்

மரபணு பொறியியல் மற்றும் பையோடெக்னாலிஜியின் சர்வதேச மைய முன்னாள் இயக்குனர் வி.எஸ். சௌஹான் கூறுகையில், நீரிழிவு நோயாளிகள் பருமனானவர்களும் உரிமைப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி எடுக்க விரும்பினால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இருப்பினும் அதிக அளவு இம்யூன் காம்ப்ரமைஸ்டுடன் இருப்பவர்களுக்கு தடுப்பூசி பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுத்தாது. ஆனால் ஆண்ட்டிபாடிகள் மிகவும் மெதுவாக செயல்படும் என்று அவர் கூறினார்.

தன்னார்வலர்கள்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோ-மோர்பிட் நிலைகளை கொண்டிருக்கும் தனிநபர்கள் தற்போது அதிக ஆபத்தில் இருப்பதால் அவர்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். அவர்களின் மருத்துவ பரிசோதனைகள் தடுப்பூசியின் செயல்திறனில் பிரச்சனையாக இருக்காது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா கூறினார். தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தன்னார்வமானது. ஆனால் ஒருவர் தன்னையும் தன்னுடைய நெருங்கிய உறவுகளையும் பாதுகாத்துக் கொள்வதும் முக்கியம் என்று குலேரியா கூறினார். இந்தியாவில் கடந்த 13 நாட்களில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்?

இரத்தப்போக்கு மற்றும் உறைதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாரத் பையோடெக்கின் அறிக்கை ஒவ்வாமை, ரத்தப்போக்கு பிரச்சனை, மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் வகையிலான மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பப்ளிக் ஹெல்த் ஃபௌண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் மருத்துவர் ஸ்ரீநாத் ரெட்டி, காம்ரமைஸ்ட் இம்யூனிட்டி கொண்டவர்களுக்கு செயலற்ற வைரஸை பெற்றிருக்கும் பாரத் பையோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று கூறியுள்ளார். ஆனால் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தான் அதனை முடிவு செய்வார்.

source https://tamil.indianexpress.com/explained/who-can-take-the-covid-19-vaccine-and-who-are-advised-not-to-244771/

விவசாயிகள் போராட்டம் : யார் இந்த விவசாய தலைவர் ராகேஷ் திகைத்?

 Rakesh Tikait : டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி பின்னர் விவசாய தலைவராக மாறிய 51 வயது ராகேஷ் திகைத் 2019ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்தாக ஒப்புக் கொண்டார். அவரைப் போன்றே ஜாட் சமூகத்தினர் அதிகம் இருக்கும் முசாஃபர் நகரின் சிசௌலி கிராமத்தினர் பலரும் பாஜகவிற்கு வாக்களித்தனர். ஏன் என்றால் அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட மத்திய அமைச்சர் சஞ்சீவ் குமார் பால்யனும் கூட, ராகேஷின் அண்ணன் நரேஷ் தலைமை வகிக்கும் பாலியன் காப் குலத்தை சேர்ந்தவர்.

ராகேஷ் திகைத் சிறப்பான அரசியல் பின்னணியை கொண்டிருக்கவில்லை. 2007ம் ஆண்டு யு.பி. சட்டமன்ற தேர்தலில் கத்தௌலி தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் நின்று ஆறாம் இடத்தையே பிடித்தார். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தால் கட்சி வேட்பாளாராக அம்ரோஹாவில் நின்று, வெறும் 9,539 வாக்குகள் பெற்று, டெபாசிட் இழந்தார்.

தற்போது பரபரப்பை கூட்டியிருக்கும் மோடி அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக கூட சமீபகாலம் வரை திகைத்தின் பி.கே.யூவினர் குறைவான அளவிலேயே போராட்டம் நடத்தினார்கள். அது அவர்களின் போட்டியாளரான வி.எம்.சிங்கின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய கிஷான் மஸ்தூர் சங்கதன் அமைப்பின் போராட்டக்காரர்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. பலரும், திகைத் மத்திய அரசால், விவசாய சங்கங்களை நடுநிலையாக்க அனுப்பப்பட்டவர் என்றும் கூறினர்.

ஆனால் அனைத்தும் வியாழக்கிழமை மாலை காசிப்பூரில் திகைத் நடத்திய உரையின் போது முற்றிலும் மாறியது. உள்ளூர் நிர்வாகம் போராட்ட முகாமை காலி செய்ய வேண்டும் அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு அந்த உரையை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவில்லை என்றால் தூக்கிட்டுக்கொள்வதாக அவர் மனமுடைந்து அழுத வீடியோ வைரலாக பரவியது. அப்போது ”ஹர் கிஷான் ரோயா ஔர் ஷபி கோ மஹேந்திர் சிங் ஜி யாத் ஆயா” (மனம் உடைந்து அழுத விவசாயிகள் பி.கே.யுவின் நிறுவனர் மகேந்திர சிங் திகைதை நினைத்துக் கொண்டனர்) என்று ரஜ்விர் சிங் முண்டெட் கூறினார். அவர் ஷாம்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சமூக செயற்பாட்டாளார் ஆவார்.

வி.எம்.சிங் தற்போது போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டதால், மேற்கு உ.பியின் மறுக்க முடியாத விவசாய தலைவராக மாறிவிட்டார். ஆர்.எல்.டி தலைவர் சௌதிரி அஜித் சிங்கும் உடன் இணைந்ததால் அவர்களின் பலம் அதிகரித்துள்ளது. அவர் திகைத் குடும்பத்தினருடன் ஒரு நல்ல உறவை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் நடைபெற்ற அதே நாள் இரவில் திகைத்தை தொலைபேசியில் அழைத்து பேசினார். மேலும் அண்டை மாநிலங்களில் இருக்கும் ஜாட் தலைவர்களின் ஆதரவையும் அவர் பெற்றார். குறிப்பாக, இந்திய தேசிய லோக் தளத்தின் அபய் சிங் சௌதலா மற்றும் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் ஹனுமன் பெனிவலும் இதில் அடங்குவர்.

அது ஒரு உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு. அரசால் அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை அனைவரும் தனக்கே ஏற்பட்டதாக நினைத்தனர். அதனால் தான் உ.பி. மேற்கு மட்டும் அல்லாமல் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் டெல்லியில் இருந்தும் விவசாயிகள் அவருக்காக ஒன்றிணைந்தனர். 1987-88க்கு பிறகு இது போன்று நடைபெறவில்லை என்று முண்டெட் கூறினார்.

மாநில அரசு மின்சார கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்திய அதே சமயத்தில் தான் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் முசாஃபர் நகரில் இருக்கும் கர்முகேரா பவர் ஹவுஸில் மகேந்திர சிங் திகைத் நான்கு நாட்கள் தர்ணா போராட்டத்தை துவங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து மீரட் கமிஷனரேட்டின் 24 நாள் கெராவ் (உத்தியோகபூர்வ கரும்பு விலையை ரூ .27 லிருந்து 35 / குவிண்டால் வரை உயர்த்தியதற்காக) நடைபெற்றது. அதனை தொடர்ந்து 1988ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 லட்சம் விவசாயிகள் புதுடெல்லி போட்க்ளபில் பேரணி நடத்தினர்.

இருப்பினும் மூத்த பத்திரிக்கையாளர் ஹர்விர் சிங் இந்த சூழல்கள் வேறுபட்டவை என்று உணர்ந்தார். எழுபதுகள் மற்றும் 80களில் புதிய ரக கரும்பு, கோதுமையினால் கிடைத்த நல்ல மகசூல் விவசாயிகளை ஒப்பீட்டளவில் செழிப்பாக வைத்திருந்தது. அப்போது அரசு பணிகள் இருந்தன. அன்றைய சூழலில் அடிப்படை கல்வி கற்றவர்களுக்கும் கூட வேலை இருந்தது. ராணுவம், காவல்துறை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம அளவில் பணியாளர்கள் இருந்தனர். பி.கே.யுவின் கிளர்ச்சிகள் அந்த ஆதாயங்களை பாதுகாப்பதாகவே இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய போராட்டங்கள், நல்ல காலத்தை பார்த்து தற்போது தடம் புரண்டிருக்கும் விவசாயிகளால் நடத்தப்படுகிறது. கரும்பை விட அதற்கு சிறந்த உதாரணம் இல்லை.

உ.பியில் யோகி ஆதித்யநாத் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கரும்பிற்கான அரசு அறிவுறுத்தப்பட்ட விலையை ( state advised price (SAP)) குவிண்டாலுக்கு ரூ. 10 வீதம் உயர்த்தி ரூ. 315ல் இருந்து ரூ. 325க்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 2020-21 பருவத்திற்கான விலையை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இருந்த போதிலும் கரும்பு ஆலைகள் அக்டோபர் மாத இறுதியில் இருந்து சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அனைத்திற்கும் மேலாக அவர்கள் விவசாயிகளிடம் இருந்து ரூ. 12,000 கோடிக்கு கரும்பினை கொள்முதல் செய்துள்ளனர்.

உ.பி.யில் விவசாயிகளின் கோபம் மூன்று வேளாண் சட்டங்களைக் காட்டிலும் கரும்பின் விலைக்காகவே உள்ளது. இது தவிர்த்து மின்சார கட்டணங்களை இரட்டிப்பாக்குதல் (நீர்பாசனம் மற்றும் வீட்டு இணைப்பு இரண்டிற்கும்), கடைசி ஒரு வருடத்தில் டீசலின் விலை ரூ. 10 வரை அதிகரித்தது, மேலும் யோகியின் ஆட்சியில் கடுமையாக விதிக்கப்பட்ட கால்நடைகளை கொல்லுதலுக்கான தடை விதிகள் மோசமான சூழலை உருவாக்கியது. அதனால் முப்பது வருடங்களுக்கு முன்பு ராகேஷின் தந்தையை தேர்வு செய்தது போன்று தற்போது அந்த விவசாயிகள் ராகேஷை தேர்வு செய்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/india/a-breakdown-and-the-rise-of-farmer-leader-rakesh-tikait-244928/

வெள்ளி, 29 ஜனவரி, 2021

குடியரசுத் தலைவர் உரை புறக்கணிப்பு- 16 எதிர்க்கட்சிகள் முடிவு

 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக  முன்னதாக ஜனவரி 29 ம் தேதியன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 29ம் தேதி தொடங்குகிறது. அன்று, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்க உரையாற்றுகிறார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , திமுக, திருணாமுல் காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி கட்சி, இராச்டிரிய ஜனதா தளம், சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

இதுதொர்பான வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், ” இந்த மூன்று வேளாண் சட்டங்களும்  அரசியலமைப்பின் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரனாது, மாநில உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என்று  தெரிவிக்கப்பட்டது.

மேலும், “மூன்று வேளாண் சட்டங்களால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மெல்ல மெல்ல  நீர்த்து போகும். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, நெல் கொள்முதல், பொது விநியோகம் போன்றவைகளே  உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையாக உள்ளன.

 

 

மாநில அரசுகள் மற்றும்  விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் எந்தவித ஆலோசனையுமின்றி  வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒடுக்கப்பட்டு நாடாளுமன்ற விதிகளும், நடைமுறைகளும், மரபுகளும் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு இச்சட்டங்கள் இயற்றப்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் அரசியலமைப்பின் கீழ் செல்லுபடியாகுமா என்பதும்  கேள்விக்குறியாகவே உள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 

மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
கோவிட் – 19 தொற்று காரணமாக மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாம் கட்ட அமர்வு அடுத்த மாதம் 15-ம் தேதியுடன் முடிவடையும்.
இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 8-ம் தேதிவரை நடைபெறும்.

source https://tamil.indianexpress.com/india/16-opposition-parties-including-congress-dmk-vck-to-boycott-presidents-address-to-parliament-friday/

இறுதி உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் – ராகேஷ் டிக்கைட்

பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு எட்டப்படும் வரை எங்கள்  உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடருவோம். எக்காரணத்தையும் முன்னிட்டு இடத்தை காலி செய்ய மாட்டோம். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு நிர்வாகம் நீக்கியுள்ளது. இருப்பினும், கிராமங்களிலிருந்து நாங்கள் குடிநீர் பெறுவோம் என பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார். 

வியாழன், 28 ஜனவரி, 2021

இறை உதவி கிடைக்க இந்த மூன்று விஷயங்கள் -இஸ்லாம் கூறும் வழ்வியல் நெறி - J Abdul Rahman

இறை உதவி கிடைக்க இந்த மூன்று விஷயங்கள்! ஜே.அப்துர்ரஹ்மான் M.I.sc இஸ்லாம் கூறும் வழ்வியல் நெறி

இந்திய விடுதலை யுத்தமும் இஸ்லாமியர் சிந்திய இரத்தமும் N Faisal Mailaduthurai 27 01 2021

 

இந்திய விடுதலை யுத்தமும் இஸ்லாமியர் சிந்திய இரத்தமும்! N.ஃபைசல் - மாநில செயலாளர் - TNTJ புத்தூர் கிளை - மயிலாடுதுறை மாவட்டம் 27 01 2021

கேள்விக்குறியான பேச்சுவார்த்தை… பின்வாங்கும் விவசாய சங்கத் தலைவர்கள்

Liz Mathew , Harikishan Sharma

கடந்த இரண்டு மாதங்களாக சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வகையில் விவசாய தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தினர். நக்சல்கள் முதல் காலிஸ்தானியர் என்று பல்வேறு விதமாக விமர்சித்த அனைவருக்கும் இது அமைதியான போராட்டம்தான் என்று பதிலடி கொடுத்தனர். ஆனால் தேசிய தலைநகர் டெல்லியில் குடியரசு தின நிகழ்வுகள் போது செங்கோட்டையை நோக்கி ஒரு பிரிவினர் ஊர்வலம் சென்றனர். அவர்களின் நடவடிக்கை இந்த போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமில்லை பல்வேறு தீய சக்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை அரசு முன்வைக்க ஒரு வாய்ப்பினை கொடுத்துள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மூன்று சட்டங்களையும் நிறுத்தி வைப்பதற்கான உத்தரவையும் விவசாய துறையினர் நிராகரித்தனர். செவ்வாய்க் கிழமை வன்முறையைத் தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. அரசு இந்த சமயத்தில் வேளாண் தொழிற்சங்கங்கள் மற்றும் பஞ்சாப்பின் ஆளும் காங்கிரஸ், செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற சம்பவங்களில் இருந்து விலகி கண்ணனும் செய்வதையும் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களின் யுக்தி முன்னோக்கி செல்வது நிச்சயம் என்று அரசுத் தரப்பில் இருக்கும் ஒருவர் கூறியுள்ளார். நீங்கள் செங்கோட்டைக்கு கூட்டமாக சென்று அங்கே ஒரு கொடியை நாட்டி இந்த சட்டங்களை பற்றிப் பேசலாம் என்று ஒருபோதும் கூற முடியாது என அவர் தெரிவித்தார்.

விவசாய சங்கத் தலைவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டாலும், இவர்கள் (போராட்டக்காரர்கள்) அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத போது தலைவர்கள் என்ன செய்வார்கள். செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற சம்பவம் அவர்களின் விரிட் கூட செல்லுபடியாகாது என்பதையே காட்டுகின்றன என அவர் தெரிவித்தார்.

டெல்லியில் குழப்பமான சூழ்நிலை உருவான நிலையில் எதிர்ப்பாளர்கள் தடுப்புகளை மீறி காவல்துறையினரை தாக்கி மத கொடியை செங்கோட்டையில் ஏற்றுவதற்காக நுழைந்தனர். மத்திய அமைச்சர்கள் இதுவரை அமைதி காத்து வருகின்றனர். என்ன நடந்தது அது எவ்வாறு நடைபெற்றது என்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் எங்களால் ஏதும் கூற முடியாது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ட்ராக்டர் அணிவகுப்பு விவசாய சங்களின் வெளியேற்றத்திற்கு ஒரு முக்கியப்புள்ளியாக அமைந்துவிட்டது. அவர்கள் நாங்கள் பேச்சுவார்த்தையில் சமரசத்தை எட்டவில்லை என்று கூற வேண்டிய நிலை உருவாகும் என்றும் மேற்கோள்காட்டினார்.

இந்த விவகாரத்தில் அரசு மிகவும் நெகிழ்வு தன்மையுடனே நடந்து கொண்டது. மேலும் பல்வேறு சமரசங்களை செய்து கொண்டது. ஆனால் தற்போது நிலைமை வேறாக உள்ளது. இந்த கட்டுக்கடங்காத போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தையை நிறுத்த அச்சுறுத்துகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தலைவர்கள் ஒரு தீர்மானத்தை எடுப்பார்கள் என்று மற்றொரு அரசு வட்டாரம் கூறுகிறது.

Question mark over farm talks, protest leaders on backfoot

கண்ணீர் புகைகுண்டு வீசுவதை தவிர, இந்த போராட்டத்தில் டெல்லி காவல்துறையினர் ஆற்றிய பதிலடியும் அளவிடப்பட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.  இந்த போராட்டம் எதிர்க்கட்சியினரால் நடத்தப்படுகிறது என்றும் பஞ்சாப் அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டது என்றும் கூறி போராட்டத்தை குறைமதிப்பீடு செய்ய முற்பட்டது பாஜக. போராட்டக்காரர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை வைக்க கூடாது என்று கூறியும் பல தலைவர்கள் அவர்களை மாவோயிஸ்ட்கள் மற்றும் காலிஸ்தானியர்கள் என்று கூறினர்.  இருப்பினும், கட்சியின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய இப்போது ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில், பாஜக தலைவர் ஜே பி நட்டா கட்சி தலைமையகத்தில் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

பாஜக மூத்த தலைவர் முரளிதர ராவ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, அரசால் சீர்திருத்தங்கள் என்று வழங்கப்பட்ட சட்டங்களை எதிர்த்து போராடுகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் இந்தியாவின் குடியரசிற்கு எதிரானது என்று நடந்த நிகழ்வுகள் மூலம் அறிந்தோம். இன்று தேசிய தலைநகரில் என்ன நடைபெற்றதோ அது நம்பிக்கை மற்றும் சுதந்திர மீறலாகும் என்றார்.

Question mark over farm talks, protest leaders on backfoot

ஜனநாயகத்தில், அரசை எதிர்த்து நீங்கள் ஊர்வலம் நடத்தலாம். நீங்கள் அரசையும் அமைச்சர்களையும் அவமானப்படுத்துவதாக அது தோன்றும். ஆனால் இந்தியா குடியரசின் இறையாண்மையை நீங்கள் எதிர்க்க கூடாது. இது தான் இன்று நடைபெற்றது. இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று ராவ் தெரிவித்தார்.

பாஜக பொது செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இயக்கம் என்ற பெயரில் இன்று டெல்லியில் என்ன நடந்தது? இந்நாட்டின் விவசாயிகள் இதை செய்ய முடியுமா?

பாஜக தலைவர் ராம் மாதவ், எதிர்கட்சியினரை இந்த நிகழ்விற்காக குற்றம் சாட்டினார். புதிய சட்டங்களுக்கு எதிராக பொய்யான தகவல்கள் அனைத்தையும் கூறி விவசாயிகளை தூண்டிய பின்னர், ட்ரெம்பின் இந்திய முகமாக இருக்கும் ராகுல் போன்றவர்கள் தற்போது போலியான கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இன்று டெல்லியில் நடந்த சம்பவத்திற்கு அவர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, செங்கோட்டையில் கொடியேற்றும் காட்சிகளை பதிவிட்டு சோகம் என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு ட்வீட்டில் இந்தியில், இத்தனை நாட்களாக நமக்கு உணவினை வழங்கிய விவசாயிகளை நாம் அன்னதத்தா என்று வழங்கினோம். ஆனால் அவர்கள் உக்ரவாதி என்று இன்று நிரூபித்துவிட்டனர். விவசாயிகளை இழிவுபடுத்த வேண்டாம். உக்ரவாதிகளை உக்ரவாதி (Extremists) என்றே அழையுங்கள் என்றார்.

ஆனாலும் இரண்டு மூத்த தலைவர்கள், விவசாயிகளை அப்படி விரோதிகளை காண முடியாது என்பதால் அவர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இல்லை என்றால் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும், நாட்டின் பிற பகுதிகளில் அமைந்திருக்கும் விவசாய சமூகத்தினருக்கு போராட்டத்தை நடத்த ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும் என்றார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் அமையப்பெற்ற அமைச்சர்கள் குழு 41 விவசாயி சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

டிசம்பர் 22ம் தேதிக்கு பிறகு சில சக்திகள் இந்த போராட்டத்தை தொடர விரும்புகின்றன என்று தோமர் கூறினார். அரசு பிரச்சனைகளை தீர்க்க தயாராக உள்ள போது, முடிவுகள் மேற்கொள்ள இயலவில்லை என்றால் , இந்த போராட்டத்தை நடத்த விரும்பும் சில சக்திகள் அங்கே உள்ளன என்பதையே நாங்கள் யூகிக்கின்றோம் என்று அவர் கூறினார்.

திங்கள் கிழமை அன்று குடியரசு தலைவர் பேசிய உரையில், சீர்திருத்த திட்டங்களின் ஆரம்பம் வேண்டுமானால் தவறான புரிதல்களை கொண்டிருக்கலாம். ஆனால் அரசு விவசாயிகளின் நலனிற்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

source  https://tamil.indianexpress.com/india/question-mark-over-farm-talks-protest-leaders-on-backfoot-244364/ 

அடுத்த ‘மூவ்’ என்ன?

 – அருண் ஜனார்தனன்

VK Sasikala Political Chance :சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், சென்னை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும்.

இந்நிலையில் சசிகலா சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினால் தமிழக அரசியலில் அவருக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், சசிகலா சிறை செல்வதற்கு முன் முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தி தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் முதல்வராக சசிகலாவால் கை காட்டப்பட்ட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்து, கட்சியின் உயர் பதவியில் இருந்து வருகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழியாக மூன்று தசாப்தங்களாக (பத்தாண்டுகள்) இருந்த மரியாதைக்கு கூட பார்க்காமல் அவருக்கு கட்சியில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இப்போது, ​​சசிகலாவின் நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் உறவினர்களின் கருத்துப்படி, சசிகலாவுக்கு முன் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. மேலும் சசிகலா விடுதலையாவதற்கு முன் பல்வேறு அரசியல் முகாம்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் மும்முரமாக உள்ளனர்.

வாய்ப்பு 1: மீண்டும் அ.இ.அ.தி.மு.க –வுடன் இணைவது :

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் சசிகலா மீண்டும் அஇஅதிமுக -ல் சேர ஒரு தெளிவான வாய்ப்பு உள்ளது. இதில்”சசிகலா கட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்டால், அவர்கள் அரசாங்கத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம். ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தோல்வியடைந்தால் கட்சியில் அவர்கள் சசிகலாவின் கீழ் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த காரணத்தால் முதல்வர் பழனிசாமி இந்த யோசனைக்குத் தயாராக இல்லை ”என்று இருவருக்கும் நெருக்கமான மூத்த அஇஅதிமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு 2: அஇஅதிமுக மற்றும் அமமுக இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது:

சசிகலா அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவரின் அக்காள் மகன் டிடிவி தினகரன் தொடங்கிய கட்சி அமமுக. ஆனால் இந்த கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று அதிமுகவில் பல வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகலா அஇஅதிமுக – க்கு திரும்புவதற்கான வாய்ப்புகளை பழனிசாமி நிராகரித்த பின்னர் மூத்த தலைவர்கள் இந்த யோசனையை ஆதரிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் இன்னும் அறிக்கைகளை வெளியிடவில்லை.

இரு கட்சிகளும் அதைச் செய்வதற்கு காரணங்கள் உள்ளன:

அமமுக நிலைத்து நிற்பதற்கும், இறுதியில் அஇஅதிமுக-க்குள் நுழைவதற்கும், மற்றும் அஇஅதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், ஒரு நேரத்தில் திமுக – வுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை கொண்டுள்ளது.

வாய்ப்பு 3: அமமுக-வில் இணைந்து மூன்றாவது முன்னணியில் செல்வது :

சமீபத்திய முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, ​​வரும் தேர்தலில் அஇஅதிமுக – வை தோற்கடிக்க அமமுக -வை மூன்றாவது முன்னணியை உருவாக்கும் நிலை உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தினகரனின் அமமுக கட்சி சுமார் 4% வாக்குகளைப் பெற்றது, இது அஇஅதிமுக வாக்குகளில் 15% ஆகும். அஇஅதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள், மூன்றாவது முன்னணியை உருவாக்குவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும், இந்த முறை அஇஅதிமுக – ல் உள்ள”துரோகிகளை” தோற்கடிக்க இந்த 3-வது அணி உருவாகலாம். “கடந்த முறை (2016), நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சியைத் தோற்கடிக்க அரசாங்க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து மூன்றாவது முன்னணியை அமைத்தார். இந்த முறை, அமமுக தலைமையிலான மூன்றாவது அணி அரசாங்க சார்பு வாக்குகளைப் பிரிக்கும் ”என்று மூத்த அஇஅதிமுக  தலைவர் தெரிவித்துள்ளார்.

எஸ் ராமதோஸின் பாமக, கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக போன்றவர்கள் மூன்றாம் தரப்பில் இதுபோன்ற சூழ்நிலையில் சேர வாய்ப்புகள் உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பகிர்வு தொடர்பாக ஏதேனும் மோதல்கள் அல்லது சச்சரவுகள் ஏற்பட்டால் இந்த மூன்றாவது முன்னணியில் அதிக கூட்டணிகள் பெற உதவும்.

இது குறித்து சசிகலா குடும்பத்தின் நெருங்கிய வட்டாரம் கூறுகையில், பழனிசாமி அல்லது பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கட்சியின் மீது முழுமையான கட்டுப்பாடு இல்லை, அரசாங்கத்தை நடத்துவதற்கு அவர்களுடன் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள் . ஆனால் “வரும் தேர்தலில் அஇஅதிமுக தோற்கடிக்கப்பட்டால் முழு கட்சியும் இறுதியில் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்கு வரும் ”என்று சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறியது.

வாய்ப்பு 4: சசிகலா அரசியலில் இருந்து வெளியேறுவது:

உடல்நல பாதிப்பை காரணம் காட்டி ரஜினி அரசியல் முடிவை கைவிட்டதை போல, சசிகலாவும், அரசியலில் இருந்து விலகுவார் என  நம்புபவர்களும் உள்ளனர்.  ஆனால் அவருடன் நெருக்கமாக பணியாற்றியவர்கள் அவரை விடமாட்டார் என்று நம்புகிறார்கள். மேலும் அவர் பெங்களூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மூன்று முறை தரையில் அடித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/explained/political-chance-for-vk-sasikala-after-release-244465/


புதன், 27 ஜனவரி, 2021

டெல்லி தடியடி: தமிழக தலைவர்கள் கண்டனம்

 மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்குள் ட்ராக்டர் வாகன அணிவகுப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது. சிங்கு எல்லைப்பகுதியிலும், இந்திய பொறியாளா்கள் நிலைய கட்டடப் பகுதியிலும் (ஐ.டி.ஓ) டெல்லி காவல்துறை   விவசாயிகள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

திராவிட கழகத் தலைவர் வீரமணி: 

ஆசரியர் கே. வீரமணி தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் குடியரசு நாளில், 60 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் முன் கூட்டியே தெரிவித்து டிராக்டர் அணி வகுப்பு நடத்தும் நிலையில், அவர்கள்மீது கண்ணீர்ப் புகைக் குண்டுவீசியதும், தடியடி கொண்டு கொடூரமாக தாக்கியதும் மிகவும் கண்டனத்துக்கு உரியது.

அமைதி வழி போராட்டம் நடத்தினால் துப்பாக்கிப் பிரயோகமா? அடக்கு முறையைக் கைவிட்டு, அமைதி வழி போராடுவோரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யட்டும்! குடியரசு நாளில் தலைநகரில் விவசாயிகள்மீது தாக்குதல் செய்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொது மரியாதையைக் குலைக்கும். அமைதியான சூழலை அரசே வன்முறை மூலமாக மாற்றிவிடக் கூடாது. எச்சரிக்கை! விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போதாதா? இப்பொழுது விவசாயிகளையும் அடிக்கும் காரியத்தில் ஈடுபடுவதா?” என பதிவிட்டார்.

மு.க ஸ்டாலின்: 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ” மத்திய அரசின் அணுகுமுறையே  போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது! வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும்! ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொல். திருமாவளவன்: 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”  விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர்ப் புகை
குண்டுகள் வீச்சு. மோடி அரசின் அரசப் பயங்கரவாத
ஒடுக்குமுறையை விசிக சார்பில் வன்மையாகக்  கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ” தமிழகத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு, ஸ்டர்லைட் போராட்டங்களை எப்படி வன்முறையாக்கினார்களோ, அதேபோல வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியையும் அங்குள்ள காவல்துறையினர் வன்முறைக் களமாக்கியுள்ளனர். வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சினையையும் பேசி தீர்க்க முடியும் என்ற நிலையில், மத்திய அரசாகட்டும், இங்குள்ள அடிமை அரசாகட்டும் மக்கள் போராட்டங்களை துப்பாக்கி மூலம் அடக்க முயற்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளன. ஜனநாயகத்தை போற்றுகிற குடியரசு தினத்தில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. ‘நானும் விவசாயி’ என்று நாடகம் போடுபவர்கள் அமைதி காக்கலாம். உண்மையான விவசாயிகளும், பொதுமக்களும் இந்த அக்கிரமங்களை சகித்துக் கொள்ளமாட்டார்கள்” என்று பதிவிட்டார்.

கே.எஸ் அழகிரி: 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தனது செய்திக் குறிப்பில், ” தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டிராக்டர் பேரணி நடத்தி போராடுகிற விவசாயிகள் மீது வரலாறு காணாத வகையில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் 46 வயது நிரம்பிய நவ்ஜித் என்ற விவசாயி உயிரிழக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பா.ஜ.க. காட்டுமிராண்டித்தனமான போக்கையே காட்டுகிறது ” என்று தெரிவித்தார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் : 

உயிர்வாழ உணவளிக்கும் விவசாயிகளை தடி கொண்டு தாக்கி உயிரைப் பறித்த கொடுங்கோல் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

வைகோ:

பிடித்த முயலுக்கு மூன்று கால்  என்று பிடிவாதம் பிடித்து, விவசாயிகளை ஒடுக்க நினைத்தால் விபரீத முடிவே ஏற்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

டிடிவி. தினகரன்: 

அமமுக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்    வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” டெல்லியில் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை. நாட்டின் குடியரசு தினத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. விவசாயிகளின் பிரச்னைக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் மத்தியஅரசு ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

கருணாஸ்: 

கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் பிரதமர் மோடி  என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

source: https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-political-leaders-condemned-violence-at-delhi-protest-farmers-tractor-rally-244284/

செவ்வாய், 26 ஜனவரி, 2021

72வது குடியரசு தின -மரக்கன்றுகள் நடப்பட்டது

  26/01/2021 -72வது குடியரசு தினத்தை முன்னிட்டு,  Brotherhood Foundation  -Muckanamalaipatti, சார்பாக  மரக்கன்றுகள் , தாமரை குளம் அருகில் நடப்பட்டது. இதில் Bh foundation நிர்வாகிகள் , அரசியல் பிரமுகர்கள் , ஜமாத்தார்கள், மற்றும்  ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்