திங்கள், 31 அக்டோபர், 2016

இந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம்.,யில் தங்கம்!


இந்தியாவில் முதன் முறையாக ஏ.டி.எம் இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் நகை விற்பனை செய்யும் புளூஸ்டோன் நிறுவனம் தற்போது இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் செலக்ட் சிட்டி வாக் மால் மற்றும் பெங்களூர் ஃபோரம் மால் ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளது. இந்த ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் ஓன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் 20 கிராம் வரையிலான 24 காரட் தங்க நாணயங்களை மார்கெட் விலை நிலவரத்திற்கே வாங்க முடியும். அதற்கான தொகையினை பணமாகவோ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ செலுத்தலாம். நகையின் தரத்தை உறுதி செய்யும் ரசீதையும் இந்த இயந்திரம் வெளியிடுகிறது.

பெற்றோர்களின் கவனத்திற்கு... குழந்தைகளுக்கு நாய்களை முத்தம் கொடுக்க அனுமதிக்கலாமா...?

குழந்தைகளுக்கான பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி மனதிற்கு மகிழ்வைத் தரும் விஷயமாக மாறிவிட்டது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லபிராணிகள்.
அவை வீட்டில் ஒரு நபராகவே ஒன்றி விடுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் நம் மீது ஏறி கொள்வதும், குழந்தைகளிடம் கொஞ்சுவது போன்றவை விளையாட்டாக இருந்தாலும், அதனால் சில பாதிப்புகள் உண்டு என்ற கருத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
செல்ல பிராணிகளான நாய்கள், வீட்டின் ஒரு அங்கமாக இருக்கலாம். ஆனால், அதன் வாயில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் மிகுதியாகக் காணப்படுகிறது. லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியரான ஜான் ஆக்ஸ்போர்டு இதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டார்.
அந்த ஆய்வின் மூலம் நாய்கள் பல கழிவுப் பொருட்களின் மீது அதன் வாய் பகுதியை கொண்டு செல்லும். எனவே அதன் வாய் பகுதியில் பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற பல கிருமிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். நாய்கள் குழந்தைகளுக்கு நெருக்கமாக வாயை கொண்டு வருவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் பாக்டீரியா தொற்றுகளால் பாதிப்படைகின்றனர். இந்த வைரஸ்கள் தொற்றுகள் இரைப்பைக் குடல் அழற்சியை ஏற்படுத்த கூடியவை. இந்த பாதிப்பினால் பிரான்சில் 2001 முதல் 2011 வரை 42 குழந்தைகள் இறந்துள்ளனர்.
Dog
நாய்களின் வாயில் இருந்து வெளிவரும் பிளே என்னும் எச்சங்களை விழுங்கும் குழந்தைகள், வயிற்றில் நாடாப் புழு தொற்றினால் பாதிப்படைகின்றனர். அதுமட்டுமின்றி, ஹீமோபிளஸ் அஃப்ரோபிலஸ் (Haemophilus aphrophilus) எனும் பாக்டீரியா குழந்தைகளுக்கு இரத்தக் கட்டிகள் மற்றும் இதய வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு நேர்மறையான எண்ணங்களையும், மரியாதையும், அன்பையும் கற்று தரும் செல்லப்பிராணிகளால், இத்தகைய பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. எனவே குழந்தைகளை செல்லபிராணிகளிடத்திலிருந்து சற்று தொலைவில் வைப்பதே நன்று.

விண்வெளியில் 115 நாள் ஆய்வு முடித்து பூமிக்கு திரும்பிய விஞ்ஞானிகள்

Nasa fb

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாட்டு விஞ்ஞானிகள் பூமிக்கு திரும்பினர்‌.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 115 நாள் ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர்கள் ரஷ்யாவின் சோயு‌ஸ் விண்கலம் மூலம் கஜகஸ்தான் நாட்‌டில் பாதுகாப்பாக தரையிறங்கினர். இதில் அமெரிக்காவின் ருபின்ஸ் என்ற உயிரியல் விஞ்ஞானி மரபணுக்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டிருந்தார் .பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள விண்வெளி நிலையத்தில் 1998ம் ஆண்டு முதல் ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இதில் பல நாட்டு விஞ்ஞானிகளும் சுற்று முறையில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பயணம் குறித்து விண்வெளி வீரர்களின் தலைவரான ரஷ்யாவின் அனாடோலி இவானிஷின் கூறுகையில்: விண்வெளியில் இந்த 4 மாதங்களும் பனிச்சுமையுடன் காணப்பட்டதாகவும் இந்த காலக்கட்டத்தில் பூமியில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்று கூறினார்.

அக்டோபர் 31 இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்:

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக
சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு உள்ளே
இராணுவத்தை அனுப்பிய ஒரே காரணத்திற்காக நாட்டின் பிரதமர் என்று கூட பார்க்காமல் இரும்பு மங்கையை சீக்கியர்கள் சிதைத்த நாள் இன்று தான். !
கோவிலின் புனிதம் கெட்டுபோய் விட்டதாக கருதிய சீக்கியர்கள் நாட்டின் பிரதமரையே கொன்ற நாள் இன்று தான் .!
இந்த நாளில்….!
450 ஆண்டுகள் பழமையான முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை இடிக்க காரணமான அப்போதைய இந்திய பிரதமர் நரசிம்ம ராவை முஸ்லிம்கள் எதுவுமே செய்யவில்லை என்பதையும் சேர்த்தே நினைவு கூறுவோம்.! இந்த அப்பாவி முஸ்லிம் மக்களை தானே தீவிரவாதிகள் என்று அவதூறுகள் செய்கிறார்கள்.
இந்திரா காந்தி சுட்டுக் கொலை – சம்பவம்
மகாத்மா காந்தி அவர்கள் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா காந்தி மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை இந்திரா காந்தி ஏற்கவில்லை.
டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.
ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா காந்தி அவர்கள் நடந்தே செல்வது வழக்கம்.
1984 அக்டோபர் 31_ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும்
5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப்_இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.
இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன.
இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
சிந்தனை:
பாபர் மசூதி க்காக நரசிம்ம ராவை முஸ்லிம்கள் எதுவுமே செய்யவில்லை என்பதையும் இந்த நாளில் நினைவு கூறுவோம்.!

செல்போன்கள் செவ்வக வடிவில் இருப்பது ஏன்..? தெரிந்து கொள்வோமா..!

நம் வாழ்வில் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது செல்போன். தொலைதொடர்பு, இசை, பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காக நாம் பயன்படுத்தும் செல்போன்கள் செவ்வக வடிவில் இருப்பது ஏன் என்று யாராவது சிந்தித்ததுண்டா?.
நம் அனுதினம் உபயோகபடுத்தும் செல்போன்கள் வட்ட வடிவிலோ, சதுர வடிவிலோ, முக்கோண வடிவிலோ வடிவமைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?. ஆனால் செவ்வக வடிவில் அமைந்திருப்பது ஏன்?.
முதன்முதலில் செல்போன்கள் செவ்வக வடிவில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இயற்கையாகவே கீபேட், திரை, மைக் மற்றும் ஸ்பீக்கர் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்க இத்தகைய செவ்வக வடிவத்தில் செல்போன்களை வடிவமைத்தனர்.
இது ஒரு இயல்பான காரணம் தான். ஆனால் இதையும் தாண்டி சில தொழில்நுட்ப காரணங்களும் இதன் பின்னணியில் உள்ளது. என்னவெனில், செவ்வக வடிவில் இருந்தால்தான் நம் பார்வை செல்போன் முழுமையையும் ஒரே நேரத்தில் சென்றடையும்.
அதுமட்டுமின்றி, வரிசைப்படி அமைக்கப்பட்ட எழுத்துகள் செவ்வகவடிவில் இருந்தாலே நம் படிப்பதற்கு எளிதாக இருக்கும். நம் எடுத்து செல்வதற்கும் செவ்வக வடிவ செல்போன்கள்தான் வசதியாக இருக்கும். இயற்கையாகவே மனிதனுடைய பார்வை 16:9 என்ற விகிதத்தில் தான் சமமாக அனைத்தையும் நோக்கும்.
இதேபோல, பிக்சல்கள் பொதுவாக சதுர வடிவிலேயே அமைந்திருக்கும். இதற்கு நேர்மாறாக வட்ட வடிவில் செல்போன் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும் போது போது பிக்சல்கள் சிதறி முழுமை அடையாமல் போக வாய்ப்புண்டு. இதனால் பார்வை திறன் அனைத்து திசைகளிலும் செல்லாது. செவ்வக வடிவத்தின் பின்னணியில் சில கணித விதிமுறைகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. செவ்வகத்தின் சுற்றளவானது வட்டம் அல்லது முக்கோண வடிவத்தின் சுற்றளவை விட அதிகமாக உள்ளது.
உதாரணமாக, வட்ட வடிவத்தில் செல்போன்கள் உள்ளது என்று எடுத்து கொள்வோம்.அப்படி இருந்தால், செல்போன்களை எடுத்துச் செல்வது மற்றும் கீபேடில் டைப் செய்வது என பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

உலக வரலாற்றில் பணக்கார மனிதர் யார் தெரியுமா?..

உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா என நம்பப்படுகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள போர்ப்ஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 85.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார மனிதராக அறியப்படுகிறார். இந்தசூழலில் செலிபிரெட்டி நெட்வொர்த் எனும் அமெரிக்க வர்த்தக நிறுவனம் உலக வரலாற்றில் பணக்கார மனிதர் யார் என்ற ஆய்வினை நடத்தியது.
அந்த ஆய்வில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள பணக்கார மனிதர்களின் சொத்து மதிப்புகளை இன்றைய பணவீக்கத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. அதன்படி வரலாற்றில் அதிக மதிப்புடைய சொத்துகளுடன் பணக்கார மனிதராக ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா கருதப்படுகிறார். அவரது சொத்துகள் இன்றைய மதிப்பில் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மன்சா மூசா, இன்றைய கானா, திம்புக்து மற்றும் மாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த மாலி பேரரசினை கி.பி 1312 முதல் கி.பி. 1337ம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அன்றைய சூழலில் உலகின் தேவையில் பாதியளவு தங்கம் மற்றும் உப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்ததன் மூலம் சொத்துகள் குவிந்ததாகத் தெரிகிறது.
Musa
அவர் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலையும் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவரது ஆட்சியின் போது மாலி பேரரசில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் தவித்துள்ளனர். இதனைத் தீர்க்க நினைத்த மூசா, தனது சொத்துகளின் ஒருபகுதியை பொதுமக்கள் அனைவருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளார். இன்றைய எகிப்திலுள்ள கெய்ரோ மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள மதீனா நகரவாசிகளுக்கு அவர் அள்ளிக் கொடுத்த தங்கத்தால் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார நெருக்கடி பெரும் பிரச்னையானதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஸ்லாம் மதத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்த மூசா, தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான மசூதிகளைக் கட்டினார். மேலும், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விநிலையங்களையும் மூசா கட்டியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்லாமிய பெருமக்களின் புனித நகராகக் கருதப்படும் மெக்காவுக்கு இவர் பயணம் மேற்கொண்டபோது அவருடன் பயணித்த 60,000 பேர் தங்களால் சுமக்க முடிந்த அளவு தங்கத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சுமார் 25 ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்த மூசாவின் மரணம் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகிறது.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த வரலாறு...

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நாளையுடன் 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்பாகவே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மதுசூதன் தாஸின் போராட்டம் காரணமாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலமாக ஒரிசா கடந்த 1936-ல் அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் தமிழகம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய ’மெட்ராஸ் ராஜதானி’ -யையும் மொழிவாரியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்தது. மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திராவை தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது மறைவால் வெடித்த வன்முறையை அடுத்து ஆந்திரா தனிமாநிலமாக பிரிக்கப்படுவதாக 1953-ல் பிரதமர் நேரு அறிவித்தார்.
இதன்பின்னர் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க ஃபசல் அலி, எம்.பனிக்கர் மற்றும் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் அடங்கிய குழு 1953-ல் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் 2 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி தங்களது அறிக்கையினை 1955-ல் அளித்தனர். அந்த குழுவின் அறிக்கையின்படி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா என 1956ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிரிக்கப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நாளையுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் தமிழகம் என அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் 1967ம் ஆண்டு ஜூலை 18-ல் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மூலம் மாற்றப்பட்டது.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா, சிலம்பு செல்வர், சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர்களாவர்.

Hatred among hindu and muslims

மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிரான அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்...

மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிரான அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்...






நம் நலனுக்காக


தீபாவளியன்று விடுப்பின்றி கடமையாற்றிய காவல்துறையினருக்கு இனிப்பு வழங்கி நெகிழ்வித்த இஸ்லாமிய மாணவ மாணவியர்.....

தீபாவளியன்று விடுப்பின்றி கடமையாற்றிய காவல்துறையினருக்கு இனிப்பு வழங்கி நெகிழ்வித்த இஸ்லாமிய மாணவ மாணவியர்.....

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

தகவல் பெறும் உரிமை சட்டம் -2005...

தகவல் பெறும் உரிமை சட்டம் -2005...
...எந்தெந்த பிரிவுகளில் தகவல்கள் பெறலாம்...
..
சட்டப்பிரிவு ..6(1),...7(1)....2(ஒ)(1)...
தகவல் தர கால அவகாசம்..
6(1)...30 நாட்கள் கால அவகாசம்...
..
7(1)...48 மணி நேரம் கால அவகாசம் ...
..
2(ஒ)(1)...அடுத்த நொடியே தகவல் பெறலாம்...
...சட்டப்பிரிவு 2(ஒ)(1)....தகவல்களை ஆய்வு செய்யலாம்..,
.....ஆய்வு செய்து..அந்த நோடியே உங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம்...
..
..
தகவல் சட்ட ஆர்வலர்களே ..!..தகவல் சட்டம் பயன்படுத்தும் மக்களே..!
...
அனைத்து தகவல்களும் ....
த.பெ.உ.ச -2005 சட்டப்பிரிவு 6(1)-இன் கீழ் மட்டும் கேட்காதீர்கள் ...,.. #AK
....
அவசரமாக ஒரு தகவல் வேண்டும் என்றால் ,.
...
..தகவல் பெரும் உரிமை சட்டம் 2005 சட்டப்பிரிவு 2(ஒ) (1) வை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தகவல்கள் உள்ள அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலருக்கு ,.
பதில் தபால் ஒப்புகை அட்டை இணைத்து அல்லது நேரில் கொடுத்து தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ..,

நேரில் கொடுப்பது உசிதமானது ..,அதுவே கால விரையம் ஏற்படாமல் தவிர்க்கும் ..,
...
ஆகையால் ,அனைவரும்..தாங்கள் கோரும் தகவல்கள் பொருத்து ...தகவல் சட்ட பிரிவுகளை பயன்படுத்துங்கள் ...,..

..
..ஒரு தகவல் எந்த நோக்கத்திற்கு பெறுகிறோம் என்று சிந்தித்து ,அதற்கு தகுந்த சட்டபிரிவை பயன்படுத்துங்கள் .,
...
சில அவசரநிலை என்றால் ,ஆய்வு பிரிவை பயன்படுத்துங்கள் ,.
..
தகவல்கள் விரைவில் பெறலாம் ,நீங்களே நேரில் அலசலாம் ..
...
இந்த பிரிவில் உள்ள ஒரு முக்கியம் விடையம் என்னவென்றால் ,.
..
நீங்கள் தகவல் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1) இன் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் அனுப்பினால்,.
அவர்கள் 30 நாட்களுக்குள் பதில் தர வேண்டும்..
..இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ,.நீங்கள் அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது ..,
..
ஆதலால் ,அவர்கள் அந்த 30 நாட்களில் நீங்கள் கேட்ட தகவல்களில் உள்ள ஊழல்களை மறைக்க / அழிக்க வாய்ப்புள்ளது ..,
...
ஆதலால் ,தகவல் பெரும் உரிமை சட்டம் 2005 சட்டப்பிரிவு 2(ஒ)(1) வை அதிகமாக பயன்படுத்துங்கள் ..,
இந்த விண்ணப்பம் நேரில் அளிப்பது தான் நல்லது / நன்று கூட..,
உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் எந்த பிரிவை பயன்படுத்த வேண்டும் ..சட்டப்பிரிவு...7(1)....

எந்த சூழ்நிலையிலாவது உங்கள் வாழ்வாதாரம் பாதித்தில் அப்பொழுது அதனை எதிர்கொள்ள உங்களுக்கு தேவையான தகவல்களை சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்தில் பெறலாம்...

மக்காவை நோக்கி ஏவுகணை வீச்சு : உலக நாடுகள் கடும் கண்டனம்……!!


மக்காவை நோக்கி ஏவுகணை வீச்சு : உலக நாடுக கடும் கண்டனம்……!!
உலக முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவை நோக்கி ஏவுகணை வீசப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்காவை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை ஈரான் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை என்பதால் பிரான்ஸ், பின்லாந்து, பெல்ஜியம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், ஏமன், சூடான், துருக்கி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள கிறித்தவ நாடுகள், முஸ்லிம் நாடுகளும் அரபு கூட்டமைப்பு, இஸ்லாமிய கூட்டமைப்பு உள்ளிட்ட கூட்டமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

துஆ செய்யுங்கள்.

உலகில் வாழும் அணைத்து முஸ்லிம்களுக்கும், துஆ செய்யுங்கள். அவர்கள் (உயிர் , உடமை, பாதுகாப்பு மாற்று சுமுக வாழ்விற்கு ) .....

மியான்மார்


முஸ்லிம்கள் கொல்லப்படுவதும், முஸ்லிம்கள் உடைமைகள், அளிக்கும் வேலைசெய்யும் மியான்மார் ராணுவம் மாற்றம் புத்த வெறியர்கள்.





இன்ஷா அல்லாஹ்.........

சனி, 29 அக்டோபர், 2016

புனித மக்கா நகரை நோக்கி செலுத்திய ஏவுகணையை


Global outrage over Houthi missile attack near Makkah

அடதேசதுரோகிகளா.?
பை முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்பி அலகாபாத் நீதி மன்றத்திற்குள் நுழைந்த நபர் கைது - The New Indian Express
நல்லா பாருங்க மக்களே நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் , 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் இதை அனைத்தையும் மீறி ஒருவன் பை முழுவதும் பயங்கர வெடிகுண்டுகளுடன் சென்றுள்ளான் அவன் வெடிமருந்து வழக்கில் கைது செய்யப்பட்டும் கூட அவனை பற்றி வெளியிடும் ஊடக தலைப்பு கைதாம் அதிலும் பல இடங்களில் மிஸ்டராம்..
மாறாக இவனுக்கு பெயரெல்லாம் தீவிரவாதி கிடையாதாம்.. தமிழ் ஊடகங்களில் இந்த செய்தி வரவே இல்லை..
காரணம் இல்லாமல் இல்லை மக்களே.. கைது செய்யப்பட்டவனின் பெயர் சந்தோஷ் குமார் அக்ராஹாரி.. அதனால் இவனுக்கு தீவிரவாதி என்ற அடைமொழி நபராக மாறிவிட்டது போலும்..
கைது செய்யப்பட்ட இவன் காவல்துறையிடம் கூறியதாக எழுதியுள்ள ஊடக வாசகங்களை தான் மெய்சிலிர்க்க வைக்கிறது.. அதில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் சென்றானாம்..
இதனால் இவனுக்கு அலஹாபாத் நீதிமன்றத்தில் வேலை கிடைக்கும் என்று நம்புகிறானாம்..
நல்ல பாருங்க மக்களே ஒரு முஸ்லீம் விசாரணைக்காக அழைத்து சென்றால் கூட பல பொய்களை பரப்பி..
வெங்காய வியாபாரியை பாகிஸ்தான் உளவாளியாகவும், டுவிட்டரை வைத்து ஐ எஸ் தீவிராவதியாகவும் வாந்தி எடுக்கும் ஊடகங்களில் கையையும் களவுமாக வெடிகுண்டு பிடிக்கப்பட்டு கூட அதுவும் இந்தியாவின் அதிக பாதுகாப்புள்ள நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டும் கூட அவனை தீவிரவாதி என்று அழைக்கவும் மனமில்லை.. இந்த செய்தியை வெளியிடவும் மனமில்லை..
இது தான் விபட்சார ஊடகங்களில் நடுநிலை சொம்பு போலும்.. கார்ர்ர்ர் தூ..
பதிவு Nsa Khadir

குற்ற வகைகள் :



..
1.தனி நபருக்கு எதிரான குற்றம் .
2.வன்முறை தொடர்பான குற்றம்.
3.பாலியல் வன்முறை தொடர்பான குற்றம்
4.சொத்து தொடர்பான குற்றம்.
5.மோசடி மற்றும் ஆள்மாராட்டம்.
6.துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மூலமாக தாக்குதல்.
7.மத்திய அல்லது மாநில அரசுக்கு எதிரான குற்றம் / அரசியல் குற்றங்கள்.
8.தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்து விளைவிக்கும் போதைப் பொருட்களை கடத்துதல்.
9.மதம் மற்றும் பொது வழிபாட்டு எதிரான குற்றம்.
10.பொது நீதி / பொது நீதி நிர்வாகத்திற்கு எதிரான குற்றம்.
11.பொது ஒழுங்குமீறல் வணிகம், நிதி சந்தைகள் போன்றவற்றில் பொது ஒழுக்கம் மற்றும் பொது கொள்கை எதிரான குற்றம்.
12.மோட்டார் வாகன குற்றங்கள்.
13.சதி, அடுத்தவரை குற்றம் செய்ய தூண்டுதல் மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் உள்ளிட்டவையாகும்.

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம்.


..
.
அவை நீதிமன்றத்தின் உத்தரவோ
அனுமதியோ இன்றி காவல்
துறையினர்தானாக விசாரிக்க
அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences),
..
.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி
விசாரணை செய்ய காவல் துறைக்கு
அதிகாரமில்லாத வழக்கு(Non Cognizable
Offences)களாகும்.

Uniform Civil Code

விற்பனை செய்த கார்களை திரும்பப்பெறும் ரினால்ட் இந்தியா - நிஸ்ஸான் நிறுவனம்



கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரினால்ட் இந்தியா - நிஸ்ஸான் நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் கார்களில் பழுதுள்ள சுமார் 51,000 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ரினால்ட் இந்தியா நிறுவனம், நிஸ்ஸான் நிறுவனத்துடன் இணைந்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இதில், குறைந்த விலை கார்களான ரினால்ட் குவிட் மற்றும் தட்சுன் ரெடி கோ ஆகியவற்றின் எரிபொருள் வடிவமைப்பில் குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, குறைபாடு உள்ள கார்களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரினால்ட் குவிட் எனும் பெயரில் விற்கப்பட்ட சுமார் 50,000 கார்களை திரும்பப் பெறவும், தட்சுன் ரெடி கோ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்களில் பழுதுள்ள 932 கார்களை திரும்பப் பெறவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இந்த கார்களை பழுது நீக்கி மீண்டும் வாடிக்கையாளர்களிடம் தர ரினால்ட் இந்தியா - நிஸ்ஸான் நிறுவனம் முடிவு செய்து, இதற்கான அறிவிப்பின வெளியிட்டுள்ளது. 

மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுகொள்ளும் வழிகள் என்ன? அறிந்துகொள்ளுங்கள்

இன்று மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ”உலக மேமோகிராஃபி தினம்”. இந்த அக்டோபர் மாதம் ”மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை.

சுயபரிசோதனை:-

பெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டாலோ, அல்லது வலி இருந்தாலோ, உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். மேலும் மார்பகக் காம்புகளில் நீர் அல்லது ரத்தம் வடிந்தாலும் ஆபத்தே. சிலருக்கு கட்டி இருந்து வலி இல்லை என்றாலும் அபாயமே. அதனால் அவர்களும் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

மேமோகிராஃபி:-

மேமோகிராஃபி என்று அழைக்கப்படும் முலை ஊடு கதிர்ப் படம். மேமோகிராஃபி இயந்திரத்தில் தட்டு ஒன்று இருக்கும். அதன் மேல் மார்பகத்தை வைக்க வேண்டும். அந்த மார்பகத்தின் மீது ஒரு அழுத்தும் கருவி வைக்கப்படும். மார்பகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாக அறிய முடியும்.
பல்வேறு கோணங்களில் மார்பகத்தைப் படம்பிடித்து ஆராய வேண்டும். இந்த முறையில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, பெண்ணுக்கு வேதனை அதிக அளவில் இருக்கும். இதனால், பல பெண்கள் மேமோகிராஃபி பரிசோதனை என்றாலே பயந்து அதைத் தவிர்ப்பார்கள்.

நவீன மேமோகிராஃபி பரிசோதனை:-

மேமோகிராஃபி இயந்திரம் நவீனமாகிவிட்டது. மார்பகத்தை வைக்கும் தட்டு அப்படியே இருக்கும். ஆனால், முன்பைப்போல அழுத்தம் கொடுக்கும் கருவி தேவை இல்லை. அதற்குப் பதில் ஊடு கதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் மார்பில் செலுத்தி மார்பின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காண முடிகிறது. இதில் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த ஊடு கதிர்களால் ஆபத்து விளையுமோ என்று அச்சப்படத் தேவை இல்லை. இந்த ஊடு கதிர்களின் அபாயத்தன்மை மிக மிகக் குறைவு. மேலும், இந்தப் பரிசோதனை முழுக்க முழுக்கப் பெண்களாலே செய்யப்படுவதால், கூச்சப்படவும் அவசியம் இல்லை. வெளிநாடுகளில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, அனைத்துப் பெண்களுமே மேமோகிராஃபி பரிசோதனை செய்துகொள்கிறார்கள். அதனால் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டால், அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்துகொள்ள வாய்ப்புகள் உள்ளன.

'ஒவ்வொரு பெண்ணும் மார்பகப் புற்று நோய் கண்டு அறியும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்பது பல்வேறு நாடுகளின் தேசிய மருத்துவக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த நாடுகளின் அனைத்துப் பெண்களுக்கும் இது கட்டாயம்.

புற்று நோய்க்கு ஆரம்பத்தில் சிகிச்சை மேற்கொண்டால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 95 சதவிகிதம் உறுதி. தாமதமாகக் கண்டறியும் பட்சத்தில், முதலில் மார்பகத்தை எடுக்க வேண்டி வரும். அப்போதும் எலும்புகள் வரை புற்று நோய் பரவி இருந்தால், உயிர் பிழைப்பது கடினம்!

ஒரு பக்கத்தின் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டால், இன்னொரு பக்கத்தின் மார்பகத்திலும் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இளம் பெண்களுக்கு இந்த நோய் தாக்குதல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு மார்பகத்தில் வீக்கம் ஏற்படுவதை, ப்ரீஸ்ட் லம்ப் என்பார்கள். இதனை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமே கண்டறிந்துவிட முடியும். தேவைப்பட்டால் மட்டுமே, மேமோகிராஃபி மேற்கொள்ள வேண்டும். பொதுவாக, 40 வயதுக்கு மேலான பெண்களுக்குத்தான் இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, திருமணம் முடித்த பெண்கள் சுய பரிசோதனையை, மாதம் ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். வயதான பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து மேமோகிராஃபி பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமானதும், மார்பகப் புற்றுநோயை விரைவில் கண்டறிந்து அதிலிருந்து தப்புவதற்கான வழியும் ஆகும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க வாய்ப்பு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல்(30/10/2016) தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த கியான்ட் புயல் முற்றிலுமாக வலுவிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். 

தற்போது, அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நீடிப்பதாகவும்,  தென்மேற்கு பருவமழை முழுவதுமாக இந்திய பகுதியில் இருந்து விலகி உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், சென்னையில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

இயற்பியல் விதிகளை பயன்படுத்தும் அற்புதச் செடி : பரிணாம வளர்ச்சியின் மற்றொரு அதிசயம்!


peacock begonia எனும் இந்த செடி மலேசியாவின் அடர் காடுகளின் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட புதியவகை செடியாகும். நீலநிறத்தில் ஒளிரும் இலைகளை இச்செடி கொண்டுள்ளது ஏன் என்பது நீண்டநாட்களாக விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது.
இயற்பியல் விதிகளை பயன்படுத்தும் அற்புதச் செடி : பரிணாம வளர்ச்சியின் மற்றொரு அதிசயம்!

இந்நிலையில், இங்கிலாந்தின் பிரிண்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதற்கான விடையை கண்டறிந்துள்ளது. புதிய கண்டுபிடிப்பால் வாயடைத்து போயுள்ள விஞ்ஞானிகள் “மாபெரும் புத்திசாலி” என peacock begonia செடியை புகழ்ந்துள்ளனர்.

அடர்காட்டில் இருளில் ஒளிச்சேர்க்கை செய்ய சிரமமாக இருக்கும் என்பதால் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு இதன் இலைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

அடர்காடுகளின் கீழே குறைந்த அலைநீளம் உள்ள நீல கதிர்கள் வந்தடையும் என்பதால், அங்கு கிடைக்காத பச்சை மற்றும் சிகப்பு நிற அலைநீள கதிர்களை கவர்ந்து ஒளிசேர்க்கை செய்யவே இதன் இலைகள் நீல நிறம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பரிணாம வளர்ச்சியின் புதிய வடிவம் நமக்கு புரியவந்துள்ளதை காட்டிலும், ஒளியின் அலைநீளம் தொடர்பான குவாண்டம் இயற்பியல் விதிகள் ஒரு செடிக்கு புரிந்துள்ளது தான் விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

முஸ்லிம் பெண்களைவிட இந்துப் பெண்களுக்குதான் அதிகம் நீதி தேவைப்படுகிறது.

விவாகரத்து வழக்குகள் முஸ்லிம் சமுதாயத்தை விட இந்து சமுதாயத்தில் 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.
எனவே BJP -யும் சங்க் பரிவாரங்களும் முஸ்லிம் தனியார் சட்டங்களை குறிவைப்பதை நிறுத்தி விட்டு முதலில் அவர்கள் தமது சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்க்கட்டும்.
முஸ்லிம் பெண்களைவிட இந்துப் பெண்களுக்குதான் அதிகம் நீதி தேவைப்படுகிறது.
வழக்கறிஞர் வஹீத் அஹ்மத்
மாநில செயலாளர் TRS
மாநில தலைவர் TMAF

வியாழன், 27 அக்டோபர், 2016

கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு..! சுற்றுசுழலுக்கு பேராபத்து..?

புவியை வெப்பமடைய செய்யும் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு வளிமண்டலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது
Capture2
வளி மண்டலத்தில் இருக்கின்ற கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, முன்பு இருந்ததை விட தற்போது 44 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உள்பட பிற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பு விவரங்களையும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம் அடுத்த மாதத்திலிருந்து அமலாக இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை மாசு தான் இந்த ஆபத்தான உச்ச அளவுக்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிகின்றது. இதனால் சுற்றுசுழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது. நிலக்கரி, டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாட்டை குறைத்தால் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

சத்தமில்லாமல் அறங்கேற்றபடும் பர்மா இனபடுகொலை.! உலக நாடுகள் மௌனம்..!


பாலியல் வல்லுறவு ,கட்டாய வெளியேற்றம் கண்ணீர் விட்டழுகிற பர்மா முஸ்லிம்கள்..!
மியான்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலைகள்,பாலியல் வல்லுறவுகள் ,கொள்ளைகள் ,பலவந்த வெளியேற்றங்கள் , தீவைத்து எரிப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் சர்வதேச சமுகம் தலையை திருப்பிய வண்ணம் உள்ளது .
இரு தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் தாயொருவரும் அவரது மகளும் இருவருக்கும் முன்னால் மியான்மார் படையினரால் பாலியல் வல்லுறவு படுத்தப்பட்டுள்ளனர் . நேற்றைய தினம் மங் டாவ் பகுதியில் மூன்று மாத கர்ப்பிணியான முஸ்லிம் பெண் ஒருவர் பல பர்மீய இராணுவத்தனரால் கூட்டமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் .
கடந்த வாரம் மாத்திரம் பத்து முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவுப்படுத்த்க்கப்பட்ட நிலையில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்கிற விபரம் இன்னமும் தெரிய வராமல் உள்ளது .
வன்முறைகள் காரணமாக சுமார் 15 ஆயிரம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் . பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டுள்ளன . புனித குர் ஆண் கிழிக்கப்பட்டு அதன் மேல் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளன . அங்குள்ள நிலை நாளுக்கு நாள் மோசமடைவதாக கூறப்படுகிறது .
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உணவுப்பொருட்கள் தண்ணீர் இன்றி கடும் கஷ்டமான நிலையில உள்ளதாக அங்கிருந்து கிடைக்கிற தகவல்கள் கூறுகின்றன. பர்மிய ராணுவமும் பௌத்த மத வெறியர்களும் இந்த இனபடுகொலையை செய்து வருகின்றனர்..பர்மா அரசு இதனை தடுக்காமல் கள்ள மௌனம் காத்துவருகிறது.

நாங்கள் இந்துகள் இல்லை . எங்களுக்கான பிரத்தியேக சட்டங்கள் உள்ளன. பொது சிவில் சட்டம் கூடாது – 11 கோடி ஆதிவாசிகள்.



FB_IMG_1477510867128
பொது சிவில் சட்டம் கூடாது என உச்சநீதி மன்றத்தை  அணுகும் 11 கோடி ஆதிவாசிகள் சார்பான அவர்களின் The Rashtriya Adivasi Ekta Parishad   என்ற அமைப்பு.
எங்களுக்கான பிரத்தியேக சட்டங்கள் உள்ளன.  எங்களுடைய தெய்வம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பலதாரமணம், திருமண சடங்குகள், மரண சடங்குகள் அனைத்தும் இந்துக்களுக்கு மாறுபட்டவை என்பதுடன் நாங்கள் மரித்தோரை புதைக்கும் வழிமுறையை கொண்டவர்கள்    நாங்கள் இந்துகள் அல்ல. ஆகையால் பொது சிவில் சட்டம் கூடாது என ஆதிவாசிகள் முறையீடு.
images (4)
Tribal rights group moves SC against Uniform Civil Code
The Rashtriya Adivasi Ekta Parishad, a group that claims to work to protect Adivasi interests, has moved the Supreme Court seeking protection of their customs and religious practices, including their right to practice polygamy and polyandry.
The group, which claimed to be representing interests of 11 crore tribals, has stated that any direction to impose the Uniform Civil Code would adversely affect their distinct customs, culture and heritage.
The NGO claimed the Adivasis (tribals) had their own personal laws and do not come in the category of Hindus as they worshiped nature instead of idols and performed burial of the dead. 
The marriage ceremonies of tribals are also different from the Hindu rituals, it submitted.
FB_IMG_1477510867128

காவிரி பிரச்சனை


புதன், 26 அக்டோபர், 2016

“முஸ்லீம் பெண்களின் உரிமை பற்றி மோடி பேசுவது அரசியலுக்காக” நக்கீரன் கருத்துக் கணிப்பில் தகவல்! அசிங்கப்பட்ட மோடி

தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் பந்தல்கண்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்து சமூகத்தில் உள்ள பெண் சிசிக்கொலையை வன்மையாக கண்டித்தார்.
இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக  இருந்தாலும் அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என எச்சரித்தார். அதே போல் தொலைப்பேசியில் தலாக் என்ற வார்த்தையை 3 முறை கூறி முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை அழிக்கும் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
முஸ்லீம் பெண்கள் மீதான பிரதமரின் திடீர் பாசம் அரசியல் காரணங்களுக்கானது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில் இதுகுறித்து நக்கீரன் இணையதளத்தில் கருத்துக் கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், பிரதமரின் முஸ்லீம் பெண்கள் மீதான அக்கறை பா.ஜ.க. வின் தேர்தல் வியூகம் என 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். உண்மையான அக்கறை என 20 சதவீதம் பேரும், சட்டத்தின் மூலமே பாதுகாப்பு தேவை என 22 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிலும் அழகிய இஸ்லாம்! By எம்.ஜி.கே. நிஜாமுதீன்


இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் (சட்டம்) 1430 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டு இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் ஷரீஅத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை, கணவனை விவாகரத்து செய்கின்ற உரிமை, மணமகனைத் தேர்வு செய்கின்ற உரிமை, சாட்சி சொல்கின்ற உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை வழங்கிய ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே.
இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒப்பந்தமாக கருதப்படுகிறது. வேறு வழியில்லாமல் ஆகிவிட்ட நிலையில்தான் கணவனும், மனைவியும் பிரியும் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது இஸ்லாமிய வழிமுறையாகும்.
விவாகரத்து முறை: கணவன், மனைவி பிரிவு குறித்து திருக்குர்ஆனில் இறைவன் ""நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் எப்படி அதை பிடுங்கி கொள்ள முடியும்?'' (4:21) என்று இறைவனே கேட்க கூடிய அளவிற்கு அதன் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் உணர்த்துகிறது.
"மனைவி விஷயத்தில் பிணக்கு (பிரச்னை) ஏற்படும் என்று அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கையில் அவர்களிடம் விளக்குங்கள்! அவர்களைக் கண்டியுங்கள், அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவருக்கு எதிராக வேறு வழி தேடாதீர்கள்' என்று திருக்குர்ஆன் கணவனுக்கு அறிவுறுத்துகிறது.
பிளவு ஏற்படும் எனத் தெரிந்தால், மேற்கூறிய நடவடிக்கைகளால் பிரச்னை கைமீறி, பிளவு வருமென்று அஞ்சினால் கணவன் குடும்பத்திலிருந்து ஒருவரையும், மனைவி குடும்பத்திலிருந்து ஒருவரையும் நடுவர்களாக கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று கணவன், மனைவி இருவரின் குடும்பத்தார்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும் திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது.
விவாகரத்து மிக சிறந்த முறை (அஹ்சன்): மேற்கண்ட முயற்சிகளுக்கு பிறகும் வாழ முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் மனைவியிடம் "உன்னை தலாக் (விவாகரத்து) செய்கிறேன்' என்று கூற வேண்டும். இதனை ஒரு முறை கூறினாலே போதும். இந்த தலாக் சொல்லும்பொழுது கண்டிப்பாக மனைவி மாதவிடாய் இல்லாத காலத்தில் (சுத்தமான காலத்தில்) இருத்தல் வேண்டும்.
தலாக் சொன்னதிலிருந்து மூன்று மாதவிடாய் காலம் (சுமார் மூன்றரை மாதம்) மனைவி கணவன் வீட்டிலேயே கணவனின் செலவிலேயே இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வேண்டும். இக்காலத்தில் இருவரும் தாம்பத்திய உறவு கொண்டால், கணவன் விரும்பினால் இந்த மூன்றரை மாதத்திற்குள் மனைவியை மீட்டு கொள்ளலாம்.
இந்த இத்தா காலத்தில் மனைவி மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் காத்திருப்பு காலத்தில் (இத்தா) கணவன் மனைவியை மீட்காமலும் அல்லது தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருந்தால் தலாக் (விவாகரத்து) நிறைவேறிவிட்டதாகக் கருதப்படுகிறது.
இதன் பின் கணவன் மீண்டும் அப்பெண்ணை மனைவியாக கொள்ள விரும்பினால், மஹர் கொடுத்து மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மனைவியின் சம்மதமும் வேண்டும். ஒருவேளை அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அது அவளுடைய விருப்பம்.
ஒருகால் இந்த இத்தா காலத்தில் விவாகரத்தை முறித்து மனைவியைக் கணவன் சேர்த்துக் கொண்டபின், மீண்டும் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு பிளவு ஏற்படுமேயானால் இரண்டாவது முறையாக அவன் மேற்கண்டவாறு தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம். மேற்கண்ட சட்டத்திட்டங்கள் தான் இரண்டாவது தலாக்கிற்கும்.
ஒருகால் கணவன் இரண்டாவது இத்தா காலத்திலும் விவாகரத்தை முறித்து மனைவியை சேர்த்துக் கொண்ட பின்னர் அவர்களுக்குள் மீண்டும் பிளவு ஏற்படுமேயானால் மூன்றாவது முறையாக அவன் தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம்.
மேற்கண்ட சட்டதிட்டங்கள் தான் மூன்றாவது தலாக்கிற்கும் (விவாகரத்து). ஆனால் மூன்றாவது முறை தலாக் சொன்ன பிறகு அப்பெண்ணை கணவனால் இத்தா காலத்தில் மீட்டுக் கொள்ள இயலாது. அவ்வுரிமையை அவன் இழக்கிறான். அவள் வேறொருவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றிருந்தால் தவிர, மீண்டும் அவளை திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.
மேலும், "மனைவியாக வாழ்ந்த காலத்தில் நீங்கள் அவளுக்கு கொடுத்தவற்றில் எதையும் திரும்ப பெறக் கூடாது' என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் விவாகரத்து முறையாகும்.
தலாக்குல் முபாரா (பரஸ்பர ஒப்புதல்)ட: கணவன், மனைவி இருவரும் தமக்குள் சேர்ந்து வாழ்வது ஒத்து வராது என கருதி இருவரும் சேர்ந்து பிரிந்து செல்வதாக முடிவு எடுத்தால் அழகிய முறையில் பிரிந்து செல்லலாம்.
தலாக்குல் குலா (பெண் விவாகரத்து கேட்டு பெறுதல்): மனைவி தலாக் கேட்டு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது. அதன்படி ஒரு பெண் தன் கணவனுடன் வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது கணவன் முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதாலோ அவள் பிரிந்து செல்வதென முடிவு எடுத்தால் குலா முறையில் விவாகரத்து கோரலாம். ஜமாஅத் எனும் நிர்வாகத்தை அல்லது காஜியை அணுகி குலா மூலம் தன் கணவரிடம் தலாக் பெற்றுத் தர கோரலாம். அவர்கள் கணவனிடம் பேசி விவாகரத்து பெற்றுக் கொடுக்கலாம்.
கணவன் விவாகரத்து தர மறுத்தால் அந்த நிர்வாகமே திருமண பந்தத்தை முறித்து விவாகரத்தை உறுதி செய்வதாக அறிவிக்கலாம். இதற்கும் இத்தா என்கிற காத்திருப்பு காலம் உண்டு. மனைவி கணவனிடம் பெற்ற மஹரை திருப்பி கொடுக்கக் கடமைப்பட்டவளாகிறாள்.
ஆணுக்கு மட்டும் தலாக் கொடுக்கும் அதிகாரமும், பெண்ணுக்கு தலாக் கேட்கும் உரிமையும் எப்படி சமமாகும்? இது அநீதி அல்லவா? பெண்களுக்கு மட்டும் குறைந்த உரிமையை கொடுத்து ஆண் அடிமைத்தனத்தை உறுதி செய்வதுபோல அல்லவா இருக்கிறது என்று சிலர் கேட்கக்கூடும்.
உலகம் இன்றுவரை ஆண் ஆதிக்கத்திலேயே இருந்து வருகிறது. ஆண் படைப்பால் பலசாலியாக உள்ளான். அவனது ஆதிக்கத்திடமிருந்து ஒரு பெண் (மனைவி) அவனை விவாகரத்து கூறி தள்ளுவது மிக மிக கடினமாகும். தன்னை, தன் மனைவி வெறுக்கிறாளே என்ற கோபத்தில் அவனுக்கு எதையும் செய்ய தோன்றும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவிக்கு மிக பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் கருத்தில் கொண்டே இஸ்லாம் பெண்ணுக்கு மிக பெரிய சமுதாய பங்களிப்புகளோடு கூடிய பாதுகாப்புடன் தலாக் கோரி பெறும் உரிமையை வழங்கி இருக்கிறது.
ஜமாஅத் மூலம் விவாகரத்து செயல்படுத்தப்படுவதால் ஜமாஅத்தின் பலமும் மனைவியோடு சேர்ந்து கொள்கிறது.
கணவன் விவாகரத்து செய்ய விரும்பினால் நடுவர்களை அழைத்து பிறகு தலாக் கூறி மூன்று மாதம் காத்திருக்க வேண்டும். ஆனால் பெண்ணுக்கு கேட்ட மாத்திரத்தில் விவாகரத்து கிடைக்கும். இதனால் ஆணைவிட பெண்ணிற்கு கூடுதலான உரிமை உண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஃபஸ்ஹ் (திருமண ஒப்பந்தத்தை முறித்தல் அல்லது ரத்து செய்தல்: கணவன் காணாமல் போனாலோ அல்லது சித்த பிரமை ஏற்பட்டாலோ அல்லது ஒழுங்கின, குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, அதுபோல் மனைவி ஒழுக்கம் தவறினாலோ அது குறித்து ஜமாஅத் என்கிற நிர்வாகத்திடம் தெரிவித்து திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்வது அல்லது பிரித்து கொள்வது ஃபஸ்ஹ் முறையாகும்.
உதாரணமாக, கணவன் காணாமல் போய் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எங்கு இருக்கிறார் என்று அறிய முடியவில்லையென்றால், மனைவி இது குறித்து ஜமாஅத்திடம் தெரிவித்து திருமண பந்தத்தை ரத்து செய்ய கோரலாம். ஜமாஅத் நிர்வாகிகள் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து விடலாம்.
அதுபோல் ஒரு பெண் நடத்தை தவறினால் அதை கணவன் அறியும் பட்சத்தில் அவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். சாட்சிகள் இல்லையென்றால் இருவரும் அல்லாஹ்வின் பெயரால் நான்கு முறை சத்தியம் செய்து "இதனால் ஏற்படும் கேடு என்னையே சேரும்' என்று கூற வேண்டும். அதன் பிறகு நிர்வாகம் இருவரின் திருமண ஒப்பந்தத்தையும் ரத்து செய்து பிரித்து விடலாம்.
தலாக்குள் பித்அத் (நூதன தலாக்): தலாக் தலாக் தலாக் அல்லது முத்தலாக். இந்த முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்கள் பிறகு வந்த முதல் கலீபா காலத்திலோ இல்லை. பிற்காலத்தில் வந்த விவாகரத்து முறை. ஆதலால் இது நூதன தலாக் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்த முறையின் படி மூன்று முறை தலாக் கூறிவிட்டாலே விவாகரத்து நிறைவேற்றியதாக கூறுவர். இப்படி ஒரே நேரத்தில் மூன்று முறை கூறினாலும், அது ஒரே தலாக் ஆகத்தான் கருதப்படும் என சொல்லும் அறிஞர்களும் உள்ளனர். எல்லா திருமண முறிவிற்கும் இம்முறையைப் பின்பற்றுவது இல்லை.
தனது மனைவி சோரம் போவதைக் கண்ணால் கண்டுவிட்ட எந்த கணவனும் மனைவியைத் திரும்ப சேர்த்துக்கொள்ள சம்மதிக்க மாட்டான். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மட்டும் இதுபோன்ற தலாக் பயன்படுத்தப்படுகிறது.
சிலர் தீர்க்க கூடிய வாய்ப்புள்ள பிரச்னைகளுக்கும் இந்த முத்தலாக் முறையை தவறாகப் பயன்படுத்துவது சரியல்ல. அது பாவமும் ஆகும். இதை பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் கண்டிக்கிறார்கள். ஒரு சட்டத்தை ஒருவர் தவறாக பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சட்டத்தையே நீக்குவது அல்லது குறை கூறுவது எப்படி முறையாகும்?
ஷரீஅத்தை, உலகில் எவராலும் குற்றம் காண முடியாது என்பது உலக முஸ்லிம்களின் கருத்து மாத்திரமல்ல; உளமார்ந்த நம்பிக்கையும்கூட.
முத்தலாக்கை முன்னிறுத்தி இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என சூளுரைப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
பொது குளத்தில் எல்லோரும் குளிக்க அனுமதி இல்லாதபோது, சாதிக்கொரு மயானம் இருக்கின்றபோது, சாதி பெயரை சொல்லி மனிதர்களைக் கொல்லும் நிலை இருக்கும்பொழுது சட்டத்தில் மட்டும் சமத்துவம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை!