செவ்வாய், 30 ஏப்ரல், 2013

News







I Love Isha(alai)


Good job, ICNA Los Angeles ! =] 47 people embrace Islam in Los Angeles today.

"I Love Jesus because I am Muslim" banner attracted many people to the all-Spanish WhyIslam booth at the nation's largest Latino event: Fiesta Broadway in Los Angeles.

Some of the guests were surprised that Muslims love Jesus. The Spanish speaking volunteers were amazed at the ease with which people were flocking into the fold of Islam despite fierce and vocal opposition from certain groups. ~A1
47 people embrace Islam in Los Angeles today. 

"I Love Jesus because I am Muslim" banner attracted many people to the all-Spanish WhyIslam booth at the nation's largest Latino event: Fiesta Broadway in Los Angeles. 

Some of the guests were surprised that Muslims love Jesus. The Spanish speaking volunteers were amazed at the ease with which people were flocking into the fold of Islam despite fierce and vocal opposition from certain groups.
47 people embrace Islam in Los Angeles today.

"I Love Jesus because I am Muslim" banner attracted many people to the all-Spanish WhyIslam booth at the nation's largest Latino event: Fiesta Broadway in Los Angeles.

Some of the guests were surprised that Muslims love Jesus. The Spanish speaking volunteers were amazed at the ease with which people were flocking into the fold of Islam despite fierce and vocal opposition from certain groups.

திங்கள், 29 ஏப்ரல், 2013

முபட்டி-Free English Medium


முபட்டி  29/04/2013 -கல்வி  இயக்கம்  - இந்த கல்வி ஆண்டு  முதல் அணைத்து ஆரம்ப பள்ளிகளில் ஆன்கிலவலி கட்டாய கல்விகாண செயற்கை 30 /04/2013 - 31/04/2013 வரை நடை பெரும் . சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஊக்கதொகை  ரூபாய் 1000 வழங்கப்படும்

969 -மியான்மரில்


மியான்மரில் வளர்ந்து வரும் மத பிளவுகளை ஒரு அறிகுறியாகும், சில வணிக உரிமையாளர்கள் தங்களின் முஸ்லீம் போட்டியாளர்கள் இருந்து தங்களை வேறுபடுத்தி குறியீட்டு எண்கள் ஸ்டிக்கர்கள் காண்பிக்கப்படுகின்றன.

எண்கள் 969 பெளத்த இலக்கியத்தில் வசனங்கள் பார்க்கவும்.



இலவசமாகப் படிக்கலாம்!


விண்வெளி தொழில்நுட்பப் படிப்புகளை இலவசமாகப் படிக்கலாம்!


விண்வெளித் துறையில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி

விண்வெளி ஆய்வுத் துறையில் உலக நாடுகளை வியக்க வைக்கும் வகையில் இந்தியா முன்னேறி வருகிறது. விண்வெளி ஆய்வுக்குத் தொடர்புடைய அறிவியல் தொழில்நுட்பப் படிப்புகளில் இளைஞர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக திருவனந்தபுரம் அருகே வாலியமலையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி (ஐஐஎஸ்டி) செயல்பட்டு வருகிறது. இஸ்ரோவின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கல்வி நிறுவனம், ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் ஸ்பேஸ் இன்ஸ்டிட்யூட். உலக அளவில் விண்வெளித் துறை சம்பந்தமாக இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளை வழங்கும் முதல் கல்வி நிலையம் இது.

இங்கு ஏவியானிக்ஸ், ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், பிசிக்கல் சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெக். படிக்கலாம். பி.டெக். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், ஏவியானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 60 இடங்களும் பி.டெக். பிசிக்கல் சயின்சஸ் பாடப்பிரிவில் 36 இடங்களும் உள்ளன.

பி.டெக். ஏவியானிக்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடத்துடன் அட்வான்ஸ்ட் எலெக்ட்ரானிக்ஸ் (டிஜிட்டல் அண்ட் கம்யூனிக்கேஷன் கண்ட்ரோல், சிஸ்டம்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்) போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. இந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் டிஎஸ்பி, ஆர்எஃப்அண்ட் கம்யூனிக்கேஷன், ஆன்டெனா, பவர் எலெக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட துறைகளை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம்.

பி.டெக். பிசிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்பேஸ் சயின்ஸ், ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி, ஸ்பேஸ் அப்ளிக்கேஷன் போன்ற துறைகளில் பயன்பாட்டு அடிப்படை அறிவியல் பாடங்கள் கற்றுத்தரப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய துறைகளில் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும். பி.டெக். பிசிக்கல் சயின்சஸ் துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள் ரிமோட் சென்சிங் அண்ட் ஜிஐஎஸ், அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ், எர்த் சிஸ்டம் சயின்ஸ் ஆகிய துறைகளில் சிறப்புப் படிப்புகளைப் படிக்கலாம்.

பி.டெக். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளைக் கற்றுத் தர இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இருந்தாலும்கூட, ஐஐஎஸ்டி ஸ்பேஸ் டெக்னாலஜி படிப்பு தனி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மெக்கானிக்கல் டிசைன், மானுபாக்ச்சரிங் சயின்ஸ், ஸ்பேஸ் டைனமிக்ஸ் உள்ளிட்ட மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடங்களும் கற்றுத்தரப்படும். இந்தப் படிப்பைப் படித்து முடித்த மாணவர்கள் ஃபிளைட் மெக்கானிக்ஸ், ஏரோடைனமிக்ஸ், தெர்மல் அண்ட் புரபல்ஷன், ஸ்டிரக்ச்சர் அண்ட் டிசைன், மானுபாக்ச்சரிங் சயின்ஸ் ஆகிய துறைகளில் சிறப்புப் படிப்புகளைப் படிக்கலாம்.

இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் சேர்க்கப்படும் மாணவர்கள், இஸ்ரோ திட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்புத் துறைகளில் பயிற்றுவிக்கப்படுவார்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் கோடை மற்றும் குளிர்காலத்தில் ஒவ்வொரு செமஸ்டரிலும் நான்கு வாரப் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள். ராக்கெட், மைக்ரோ சாட்லைட் துறைகளில் புராஜெக்ட்டுகளை மேற்கொள்ளும்படி மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதாவது, விண்வெளித் துறையில் திறமை வாய்ந்தவர்களை உருவாக்குவதற்கு ஏற்ப சிறப்பான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இங்கு படிக்கும்போதே, விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பிளஸ் டூ படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் ஒரே முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். இந்தியப் பிரஜைகள் மட்டுமே இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு, கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 1988ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 1983ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும்.

முன்பு, ஐஐடி நுழைவுத் தேர்வு மூலம் இந்தக் கல்வி நிறுவனத்தின் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் ஐஐஎஸ்டி கல்வி நிறுவனமே நுழைவுத் தேர்வை நடத்தியது. தற்போது, இந்த இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஜேஇஇ-மெயின் தேர்வில் தகுதி பெற்று, ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும். அந்தத் தேர்வில் பொதுப் பிரிவு மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆகிய பாடப்பிரிவுகளில் குறைந்தது 5 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், இந்த மூன்று பாடங்களிலும் சேர்த்து 20 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களில் கிரீமிலேயர் அல்லாத பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள், பொதுப் பிரிவு மாணவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் சேருவதற்கான தகுதியாகக் கருதப்படும். ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 60 சதவீதமும் பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையில் சிபிஎஸ்இ தயாரிக்கும் ரேங்க் பட்டியலின் அடிப்படையில் இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும்.

இங்கு படிக்க இடம் கிடைத்துவிட்டால் போதும். படிப்புச் செலவு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இங்கு படிக்கக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஹாஸ்டலில் இலவசமாகத் தங்கலாம். ஹாஸ்டலில் உணவுக்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஐஐஎஸ்டியில் படிக்கும் மாணவர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும். இலவசமாக இந்தக் கல்வி நிறுவனத்தில் படித்து விட்டு, இஸ்ரோவில் வேலை செய்ய விருப்பம் இல்லை என்றால் இந்த நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஐஐஎஸ்டி கல்வி நிலையத்தில் சேரும்போதே, இதற்கான உத்தரவாதப் பத்திரத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

மே 17ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 8-07-2013. ஏப்ரல் 30ஆம் தேதி அட்மிஷன் விவரங்கள் குறித்த தகவல் கையேடு இணையதளத்தில் வெளியிடப்படும். விண்வெளித் துறையில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இது.

 விவரங்களுக்கு: www.iist.ac.in

அம்பலமாகும் ரகசியங்கள்


அம்பலமாகும் அரண்மனை ரகசியங்கள் விக்கிலீக்ஸ் வீசும் வெடிகுண்டுகள்!


அமெரிக்கா வெளிவிவகாரத்துறைக்கு உலகெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவரவர் பணியாற்றும் நாட்டிலிருக்கும் அரசியல், சமூக நிலவரங்களை அவ்வப்போது குறிப்புகளாக அனுப்புவார்கள். அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் இந்த United States diplomatic cables விக்கிலீக்ஸ், ‘எப்படியோ’ கைப்பற்றி பகிரங்கப்படுத்தி வருகிறது.

2006-ஆம் ஆண்டு இணையதள செய்தி ஊடகமாக துவக்கப்பட்ட விக்கிலீக்ஸ், அரசுகளின் பாதுகாக்கப்பட்ட ரகசிய ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவருவதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் பல்வேறு நாடுகளைப் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை பகிரங்கப்படுத்தியது. சமீபகாலமாக இந்தியா குறித்த தகவல்களை கசியவிட்டுக் கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ். கசிவுகளிலிருந்து, உள்ளது உள்ளபடி...


புலிகளுக்குப் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட ராஜீவ்
நாள்:1988 ஏப்ரல் 5, 10:45 (செவ்வாய்க்கிழமை)
Canonical ID: 88COLOMBO2367_a

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து  (விடுதலைப் புலிகளுக்கு அவர்கள் அதிகாரத்தின் கீழிருந்த பகுதிகளிலிருந்து கிடைத்து வந்த), வரி வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் விடுதலைப்புலிகளுக்கு மாதம்தோறும் பணம் கொடுப்பதற்கு பிரதமர் ராஜீவ்காந்தி ஒப்புக் கொண்டிருப்பதாக இந்தியத் தூதர் ஜே.என்.தீக்ஷித், மற்றும் சென்னையில் உள்ள விடுதலைப் புலிகள் செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி ஏப்ரல் 5-ஆம் தேதி முக்கிய இலங்கை நாளிதழ்கள் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் செய்தி, முதலில் லண்டனிலிருந்து வெளியாகும் லண்டன் அப்சர்வரில் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாகியிருந்தது.

மாதந்தோறும் அளிக்கப்படவுள்ள இந்த உதவித் தொகை, 50 லட்சம் இந்திய ரூபாய்களாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை இறுதியில் புலிகளுக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டதாக தூதரக அதிகாரி உறுதி செய்தார். செப்டம்பர் இறுதியில் இடைக்கால நிர்வாகக் குழுவில் பங்கேற்பதாக அளித்த உறுதிமொழியிலிருந்து புலிகள் பின்வாங்குவதற்கு முன் ஒருமுறை பணம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தியா - இலங்கை இரு தரப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய பிரபாகரனுக்கு ராஜீவ் காந்தி, ஜூலை மாதம் அளித்த வாக்குறுதிகள் கொண்ட ஒரு பெரிய ரகசிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதி இந்தப் பணம் என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையில் உள்ள ஒரு புலிகளின் செய்தித் தொடர்பாளர்.


ஜெயலலிதா: ஆண்களின் உலகில் வெற்றி கண்ட இரும்பு மனுஷி
நாள்: 2009-03-19, 03:44
Reference ID09CHENNAI81

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்நாட்டு அரசியலில் தனித்து நிற்பவர் ஜெயலலிதா. ஓர் ஆண்தான் அவரை அரசியலுக்குக் கொண்டு வந்தார் என்றாலும் தன்னுடைய முயற்சி, புத்திசாலித்தனம், அரசியல் நுண்ணறிவு இவற்றால் அதிகாரத்தின் சிகரங்களை அடைந்தவர். அதீத ஆண்மை கொண்ட தலைவர்களை உடைய - அவர்களில் பலர், முதலமைச்சர் கருணாநிதி உட்பட இரண்டு மனைவிகள் வைத்திருப்பதைப் பகிரங்கமாக பறைசாற்றிக் கொள்பவர்கள்- திமுகவை சரிக்குச் சரியாக எதிர்கொண்டதாலும், தன் லட்சியங்களை அடைய வன்முறையைக்கூட அனுமதிக்கத் தயங்காததாலும்தான் அவரால் இதை சாதிக்க முடிந்தது. இது பெண்களைப் பற்றிய வழக்கமான பார்வையை மாற்றி, ஜெயலலிதாவை உறுதி வாய்ந்த மனுஷியாக மக்களை எண்ணச் செய்கிறது. அவரது அமைச்சரவையில் உள்ள ஒரே ஆண் என்று இந்திரா காந்தியைப் பற்றிச் சொல்லப்படும் பழைய ஜோக் போல, அதிமுகவில் இருக்கும் ஒரே ஆண் என இவரைப் பற்றி அவ்வப்போது மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்திரா காந்தியைப்போல. இவரும் பெண் தெய்வங்களை சக்தியாக வழிபடும் இந்திய மரபைப் பயன்படுத்திக்கொண்டு தன்னையே தெய்வமாக சித்தரித்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றவர்.

ஜாதி மற்றும் பெண் என்பவையும் அவர் அதிகாரத்தில் உயர உதவின. உயர் ஜாதி (பிராமணர்கள்), தாழ்த்தப்பட்டவர்கள் (தலித்கள்), பிற்படுத்த வகுப்பில் ஒரு சாரார் (தேவர்கள்) ஆகியோரை முதன்மையாகக் கொண்ட ஒரு கூட்டின் மூலம் கெட்டிக்காரத்தனமாக திமுகவின் ஆதரவுத் தளமான பிற்பட்ட வகுப்பினரை எதிர்கொண்டார். பெருமளவில் வந்து வாக்களித்த பெண்களின் வாக்குகளில் கணிசமானவற்றைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பெண்களைக் கவர்ந்தார். காலம் காலமாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த திமுகவினால், தான் நசுக்கப்படுவதைப் போன்று மறைமுகமாகச்  சித்தரித்தார். பெண்களுக்கு நேரடியாகப் பலனளிக்கும், மாணவிகளுக்கு இலவச சைக்கிள், சுய உதவிக்குழுக்களுக்கு ஆதரவு போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாகப் பெண்களின் வாக்குகளைக் கவர முயற்சித்தார். ஆறரைக் கோடி மக்கள் கொண்ட மாநிலத்தின் முதல்வராக பலமுறை ஆட்சி செய்தது இந்தியப் பெண்கள், அரசியலில் தடம் பதிக்க முடியும் என்பதற்கான ஒரு வரலாற்று சாட்சியம்.   


தனித் தமிழ்நாட்டிற்கு அமெரிக்க ஆதரவு  தருமா?
1975 ஜூலை 3, 12:08 (வியாழன்)
Canonical ID:1975NEWDE08889_b

நேற்று மாலை நான் தமிழ்நாட்டின் தொழிலாளர், வீட்டுவசதித்துறை அமைச்சர்  ராசாராமை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். அமைச்சர் சைமனுடன் அவர் இருக்கும் படம் வெளியிடப்பட்டிருந்த நம் அயலகத்துறை செய்திமடலின் பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்தேன். இந்தியாவில் நடப்பதைப் பற்றி என் கருத்துக்கள் என்ன என்று அவர் கேட்டார் (அப்போது இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது-பு.த.). நாம் கடைசியாகச் சந்தித்தபின் எவ்வளவோ நடந்துவிட்டது என்ற ரீதியில் நான் பதில் சொல்ல ஆரம்பித்தேன். அவர் என்னை இடைமறித்து, ‘நானே உங்களிடம் பேச வேண்டும் என்றிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள், சந்தோஷம். நான் உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்க வேண்டும். தமிழ்நாடு தனியான சுதந்திர நாடாக வேண்டும் என முடிவெடுத்தால், அமெரிக்கா உதவ முடியுமா?’ எனக் கேட்டார். நானும் நேரடியாகவே பதில் சொல்கிறேன்: ‘முடியாது. இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம். இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறோம். சீரியசாக இந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கிறதா?’ எனக் கேட்டேன். ‘இல்லை. மேல் மட்டத்தில் அந்த மாதிரி சிந்தனை இல்லை. திமுக பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. ஆனால், கட்சியில் பல இளைஞர்கள் சில நாள்களாக இதைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள்  சோவியத் யூனியனும், மற்ற கம்யூனிஸ்ட் நாடுகளும் இங்கே ஜனநாயகத்தைக் கொல்லும் இந்திரா காந்தியின் முயற்சியை ஆதரிக்கிறார்கள். அந்த முயற்சி வெற்றியடைந்தால், இங்கே கம்யூனிசம் வளரும். தமிழ்நாடு பிரிந்துவிட வேண்டும், அதற்கு அமெரிக்கா உதவுமா என அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அதனால் கேட்டேன்’ என்றார். அதற்குப் பிறகு அவர் அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.

இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், எனக்கு முன்னர் அறிமுகமாகாத ஓர் உள்ளூர் கல்வியாளர், இரண்டு நாள்களுக்குமுன் பேசி நேரம் வாங்கிக் கொண்டு, என்னை சந்தித்தார். நாட்டில் இப்போதுள்ள நிலைமையால் கவலை கொண்ட அவர் நேற்று முதலமைச்சரை சந்தித்து, நிலைமை மேலும் மோசமாகும் என்றும், இந்தியாவின் மற்ற பகுதிகள் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கின்கீழ் வருமானால், தமிழ்நாடு தனியாகப் பிரிந்து போக முயற்சி செய்ய வேண்டும் என்று அவரிடம் தான் சொன்னதாகவும் கூறினார்.  அதற்கு முதலமைச்சர், என்ன நடக்கும் எனத் தனக்குத் தெரியாதென்றும், தான் நிலைமைகளைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும், வியட்நாம் அனுபவத்திற்குப் பிறகு ஆசியாவில் புதிதாகத் தலையிடாது என்று, தான் நினைப்பதாகவும் சொன்னதாகச் சொன்னார்.


விமானப்  பேரத்தில் ராஜீவ்காந்தி
நாள்: 1975 அக்டோபர் 21, 12:25 (செவ்வாக்கிழமை)
Canonical ID: 1975NEWDE14031_b

புதுதில்லி, இந்தியா
ரகசியம்

1.விக்ஜென்  விமானங்கள் தொடர்பாக ஸ்வீடன் நாட்டினரோடு இந்தியாவின் சார்பாக பேச்சுகள் நடத்தும் முக்கியமான நபர், திருமதி. காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி என ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தார்கள். விமானத் தொழில் துறையோடு அவருக்கு உள்ள ஒரே தொடர்பு (எங்களுக்குத் தெரிந்தவரை)  அவர் இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட் என்பதுதான். அவர் ஓர் தொழில்முனைவர் என்பதை இப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறோம்.

2.டஸால்ட் நிறுவனம் தனது மிராஜ் விமானங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, விமானத் தளபதி மெஹராவின் மருமகனை நியமித்திருப்பதாக ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

திருமதி. காந்தி (ஸ்வீடீஷ் அதிகாரிகளின் தகவல்களின்படி) பிரிட்டீஷ் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு காரணமாக பிரிட்ஷ் தயாரிப்பான ஜாகுவார் விமானங்களை வாங்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார். மிராஜ் அல்லது விக்ஜென் என்ற இரண்டில் ஒன்றிற்கு சாதகமாக முடிவு இருக்கும். உலக அரசியலில் ஸ்வீடன் நடுநிலை வகிப்பதால், அந்த நாட்டு விமானங்களின் விலை அதிகமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தக்கூடாது என ஸ்வீடன் அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்திய விமானப்படை அதிகாரிகளை பேரம் பேச அனுமதிக்காமல், திருமதி. காந்தியே நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து ஸ்வீடன் அதிகாரிகள் எரிச்சலடைந்திருக்கிறார்கள்.

3.விமானம் ஒன்றுக்கு 40 அல்லது 50 லட்சம் டாலர்கள் என்ற விலையில் 50 விக்ஜென் விமானங்கள் வாங்க இந்தியா முடிவு செய்திருப்பதாக ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். சோவியத் ராணுவ விமானங்களை இனிமேல் வாங்கப் போவதில்லை என இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.


திமுக உடைந்து சிதறும்: தலைமைச் செயலர் போட்ட தப்புக் கணக்கு
1976 பிப்ரவரி 18, 9:20 (புதன்கிழமை)
Canonical ID:1976NEWDE02455_b

ரகசியம்

தூதரக அரசியல் பிரிவு அதிகாரியும் நானும் தலைமைச் செயலாளர் சபாநாயகத்தை அவரது இல்லத்தில் பிப்ரவரி 16 காலை, அவர் தலைமைச் செயலகத்திற்குப் புறப்படும்முன் சந்தித்தோம். லுங்கி கட்டிக் கொண்டு காஷுவலாக இருந்த அவர், எங்களை அன்போடு வரவேற்று காபி கொடுத்து உபசரித்து எங்களது பல கேள்விகளுக்கு பதில் சொன்னார்.  திமுக வன்முறைக்குத் திட்டமிடுகிறது, லஞ்சம் ஊழல் இவற்றை ஊக்குவிக்கிறது என்ற இந்திரா காந்தியின் குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டோம். மக்கள் இந்தக் குற்றச்சாட்டை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கருதுவதாகச் சொன்னார். தமிழ்நாட்டில் லஞ்சம் என்பது  தனித்துவமான  விஷயமில்லை என்றும் திமுக அரசின் சமூக நலத் திட்டங்கள் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களைத்தான் மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்றும் சொன்னார். திமுகவின் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகளுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்றார். ஆனால், திமுக வேகமாக உடைந்து சிதறிக் கொண்டிருப்பதாகவும் அது தனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் சொன்னார். ஆனால், பிளவுபட்ட காங்கிரஸ் (அப்போது காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் (ஸ்தா.காங்), இந்திரா தலைமையில் ஒரு காங்கிரஸ் (இ.காங்) என இரண்டாகப் பிரிந்திருந்தது). ஒன்று சேர்ந்தாலும் அது வெற்றிக்கு உதவாது. காங் (0) தலைவர்களில் பலர் இணைப்பை விரும்பினாலும், தொண்டர்கள் அதை ஏற்கவில்லை என்று நினைப்பதாகவும் சொன்னார். குடியரசுத் தலைவர் ஆட்சி இரண்டு வருடம் நீடிக்கலாம் என்றார்.


எம்.ஜி.ஆரும் சி.ஐ.ஏ. யும்

ஸ்தாபன காங்கிரஸ் இதழான, ‘நவசக்தி’ ‘அதிமுகவுக்கும், சிஐஏவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியை அப்படியே மொழிமாற்றம் செய்து அமெரிக்காவுக்கு குறிப்புகளாக அனுப்பியிருக்கிறார்கள். சென்னை துணைத் தூதரக அதிகாரிகள்.

எம்.ஜி.ஆர்., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு தோழமை பேணியிருந்ததை அமெரிக்கா விரும்பவில்லை என்பது இதுதொடர்பான சில குறிப்புகளில் தெரிகிறது.


மதிமுகவுக்கு விடுதலைப்புலிகள் நிதியுதவி?
தமிழக அரசியல் தலைவர்கள் சிலருக்கு விடுதலைப்புலிகள் நிதியுதவி செய்திருக்கிறார்கள். குறிப்பாக, மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு, 1993-இல் திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக என்கிற கட்சியை உருவாக்குவதற்கு ஆரம்பக்காலத்திலும் புலிகள் நிதியுதவி செய்திருக்கிறார்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தலைவர்களில் ஒருவரான சந்திரஹாசன் கருதுவதாக ஒரு தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கிறது எனினும் புலிகளுடனான தமிழக அரசியல் தலைவர்களின் பொருளாதார உறவு, இன்னமும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.


பாக்.கோடு கைகுலுக்கத் தயாராக இருந்த இந்திரா
பாகிஸ்தான் பிரதமர் ஜூல்பிகர் அலிபுட்டோவுக்கு, 1974-இல் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஒரு கடிதம் எழுதுகிறார். அப்போதுதான் இந்தியா பொக்ரானில் தன்னுடைய முதல் அணுசோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தது. பொருத்தமான நிபந்தனைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் அணு தொழில்நுட்பத்தை, இந்தியா, பாகிஸ்தானோடு பகிர்ந்துக்கொள்ளத் தயார் என்று அக்கடிதத்தில் இந்திரா நட்புக்கரம் நீட்டினார். ஆனால், புட்டோ ஏனோ இதை மறுத்துவிட்டார்.


சஞ்ச காந்தியை கொல்ல மூன்று முறை முயற்சி
1976 ஆகஸ்ட் 30 அல்லது 31-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபரால் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி சுடப்பட்டார். ஆனால், இந்தக் கொலைமுயற்சியில் இருந்து பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார். இந்திய உளவுத்துறை வட்டாரம் சொல்வதின்படி இது அவர் மீதான மூன்றாவது கொலைத் தாக்குதல் என்று செப்டம்பர் 1976-இல் அனுப்பப்பட்ட குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்திரா, எமர்ஜென்ஸி கொண்டு வந்ததின் காரணமாக அடுத்து நடந்த 1977 தேர்தலில் தோல்வியுற்றார். பதவிக்கு வந்த ஜனதா அரசு, சஞ்சய் மீதான கொலைமுயற்சி விசாரணைகளைக் கண்டுகொள்ளவில்லை. 1980-இல் நடந்த விமான விபத்தில் சஞ்சய், 33 வயதில் மரணமடைந்தார்.


வீரப்பனுக்குப்பின்
வீரப்பன் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு நிலவும் நிலவரத்தை, வீரப்பனால் இதுவரை இருந்து வந்த தொல்லை, மக்களுக்கு நீங்கியது. ஆனால், தர்மபுரி மாவட்டத்துக்குள் சுலபமாக மாவோயிஸ்ட்கள் நுழைந்து விடுவார்களோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. திமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு இங்கே வசிக்கும் வன்னிய இளைஞர்களிடம் நல்ல செல்வாக்கு இருந்தாலும், ஆந்திராவில் வலுவாக காலூன்றிய மக்கள் போர்ப்படை போன்ற குழுக்கள் இங்கே வளர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தபடி இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே இந்த அபாயம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று சென்னைத் துணை தூதரக அதிகாரிகள் அனுப்பிய குறிப்பு தெரிவிக்கிறது .


வாக்காளர்களுக்கு லஞ்சம்
தேர்தலில் வாக்கு பெற இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நடைமுறையாக்கி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் காலையில் வீடுகளில் போடப்படும் செய்தித்தாள்களுக்குள் கூட கரன்சி நோட்டை வைத்து விநியோகிக்கிறார்கள். இவ்வாறாக செலவழிக்கப்படும் பணத்தின் ஆதாரம் தேர்தல் நிதியாக கட்சிகளால் பெறப்படுகிறது. இதுவே அரசியல் ரீதியான ஊழல்களுக்கு அடிகோலுகிறது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வாக்காளர்கள் அனைவருமே வாக்குக்கு பணம் வழங்கப்படுவதை தேர்தல்கால நடைமுறையென்று சகஜமாகப் பேசுகிறார்கள். அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதானக் கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் - மே 13, 2009 அன்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் முதன்மை அலுவலகர் ப்ரெட்ரிக் ஜே.கப்ளான் அனுப்பியிருந்த குறிப்பிலிருந்து.


ஜார்ஜ் பெர்ணாண்டஸ் - சி.ஐ.ஏ. தொடர்பு?
தொழிற்சங்கச் செயல்பாடுகளில் தீவிரமான தலைவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். சோஷலிஸ்ட்டாக அறியப்படும் இவர், பொதுவாக அமெரிக்க எதிர்மனோபாவம் கொண்டவர். கோகோ கோலா, ஐ.பி.எம். போன்ற அமெரிக்க நிறுவனங்களை, தொழிற்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவை விட்டு விரட்டியடித்தார்.

ஆனால், எமர்ஜென்ஸியின்போது இந்திராவை எதிர்த்துப் போராட அமெரிக்க உதவியை நாட விரும்பினார். இதற்காக அமெரிக்கத் தூதரை சந்திக்கவும், சி.ஐ.ஏ., மூலமாக பண உதவி பெற முயன்றார் என்றும் இங்கிருந்து குறிப்புகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

சனி, 27 ஏப்ரல், 2013

கைது செய்யப்பட்டது தவறானது


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற இடதுசாரி அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவரை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார் என்று கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் க்யூ ப்ரான்ச் போலிஸ் கைது செய்தது.
தேசிய பாதுகாப்ப சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டது தவறானது என்று கூறி மதுரை உயர்நீதி மன்றம் அவரை நேற்று விடுதலை செய்தது.
அவர் கைது செய்யப்பட்ட போது.. தேச துரோகி என்பதாக சித்தரித்து அவரை இழிவு படுத்திய நமது ஊடகங்கள் அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டதைப் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.
ஆனாலும் தினமல ஏடு இந்த விசயத்தில் செய்தி வெளியிடாமல் இருந்திருந்தால் கூட நாம் அதனை ஒரு பொருட்டாக கருதியிருக்க போவதில்லை.. இந்த செய்தியை வெளியிட்ட அந்த பாசிச பத்திரிக்கை விடுவிக்கப்பட்ட அந்த நிரபராதியின் புகைப்படத்தை போடாமல்... மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் களமிறக்கப்பட்டவரான சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களது படத்தை வெளியிட்டுள்ளது.

குற்றவாளி என்று கைது செய்யும் போது தெளிவாக அவரது புகைப்படத்தை வெளியிட்ட தினமலம்... அவர் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்ததை செய்தி வெளியிட்டுள்ளதிலும் தமது பாசிச புத்தியை காட்டியுள்ளது.
சம்பந்தப் பட்டவரின் படத்தை போடாமல்.. மமக பொதுச்செயலாளரின் படத்தை வெளியிட்டதன் மூலம் சகோ தமிமுன் அன்சாரி அவர்கள் கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதாக வருங்காலங்களில் இவருக்கு எதிராக சங்பரிவாரங்கள் பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தினமலத்தின் இந் நடவடிக்கை அமைந்துள்ளது.

உடனடியாக தினமலர் இதற்காக சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.மேலும் நிரபராதியான அதிரை தமிம் அன்சாரி அவர்களது புகைப்படத்தையும் நிரபராதி என்பதாக குறிப்பிட்டு வெயியிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.
இதனை செய்யாவிட்டால்... அதற்குரிய சட்டரீதியிலான பலன்களை தினமலர் அனுபவித்தே தீரும்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற இடதுசாரி அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவரை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார் என்று கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் க்யூ ப்ரான்ச் போலிஸ் கைது செய்தது.
தேசிய பாதுகாப்ப சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டது தவறானது என்று கூறி மதுரை உயர்நீதி மன்றம் அவரை நேற்று விடுதலை செய்தது.
அவர் கைது செய்யப்பட்ட போது.. தேச துரோகி என்பதாக சித்தரித்து அவரை இழிவு படுத்திய நமது ஊடகங்கள் அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டதைப் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.
ஆனாலும் தினமல ஏடு இந்த விசயத்தில் செய்தி வெளியிடாமல் இருந்திருந்தால் கூட நாம் அதனை ஒரு பொருட்டாக கருதியிருக்க போவதில்லை.. இந்த செய்தியை வெளியிட்ட அந்த பாசிச பத்திரிக்கை விடுவிக்கப்பட்ட அந்த நிரபராதியின் புகைப்படத்தை போடாமல்... மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் களமிறக்கப்பட்டவரான சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களது படத்தை வெளியிட்டுள்ளது.

குற்றவாளி என்று கைது செய்யும் போது தெளிவாக அவரது புகைப்படத்தை வெளியிட்ட தினமலம்... அவர் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்ததை செய்தி வெளியிட்டுள்ளதிலும் தமது பாசிச புத்தியை காட்டியுள்ளது.
சம்பந்தப் பட்டவரின் படத்தை போடாமல்.. மமக பொதுச்செயலாளரின் படத்தை வெளியிட்டதன் மூலம் சகோ தமிமுன் அன்சாரி அவர்கள் கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதாக வருங்காலங்களில் இவருக்கு எதிராக சங்பரிவாரங்கள் பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தினமலத்தின் இந் நடவடிக்கை அமைந்துள்ளது.

உடனடியாக தினமலர் இதற்காக சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.மேலும் நிரபராதியான அதிரை தமிம் அன்சாரி அவர்களது புகைப்படத்தையும் நிரபராதி என்பதாக குறிப்பிட்டு வெயியிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.
இதனை செய்யாவிட்டால்... அதற்குரிய சட்டரீதியிலான பலன்களை தினமலர் அனுபவித்தே தீரும்.

குகை தோழர்கள் :::


அஸ்ஹாபுல் கஹ்ஃபு - குகை தோழர்கள் ::: ::: ::: ::: 

குகை தோழர்களை அல்லாஹ் உறங்க வைத்த குகை. இக்குகை ஜோர்டான் நாட்டின் தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில் இருக்கிறது. 

அவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

[குர் ஆன் 18:13]
அஸ்ஹாபுல் கஹ்ஃபு - 
குகை தோழர்களை அல்லாஹ் உறங்க வைத்த குகை. இக்குகை ஜோர்டான் நாட்டின் தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில் இருக்கிறது.

அவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

[குர் ஆன் 18:13]

மரபணு மாற்றம்


மரபை மீறும் மரபணு மாற்றம் :அச்சத்தில் விவசாயிகள் 
1980களில், ஒரே இனத்தைச் சேர்ந்த இரு தாவரங்களின் மரபணுவை சேர்த்து ஒட்டுமுறை தாவரம் உருவாக்கப்பட்டு வந்தது. ஒரு எலுமிச்சையின் மரபணுவை மற்றொரு எலுமிச்சை ரகத்துடன் சேர்த்து உருவாக்குவது ஒட்டுமுறை. ஆனால், அதே எலுமிச்சையை அதற்கு தொடர்பில்லாத வேறொரு தாவரம் அல்லது உயிரினத்துடன் இணைத்து உருவக்கப்படுவதே மரபணு மாற்றப் பயிர். இது சம்பந்தப்பட்ட தாவரத்தின் இயல்பையே மாற்றிவிடும்.
பருத்தி, கத்தரிக்காய் என தொடங்கி அனைத்து தாவரங்களும் மரபணு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டால், அவற்றை விளைவிக்கும் நிலங்களுக்கும் உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்புகள் உருவாகும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ஆரஞ்சுப் பழத்திற்கு தவளையின் மரபணுவை இணைத்து பளபளப்பை கூட்டுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.
இதுகுறித்து முறையாக பரிசோதிக்கப்பட்டதாக பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் கூறினாலும், அத்தகைய ஆய்வுகள் குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை விற்பதன் மூலம் அதன் மொத்த சந்தையும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்திடம் சென்றுவிடும் என குற்றம்சாட்டப்படுகிறது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய வரைவு மசோதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் மூலம் தேசிய அளவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இதோ உங்கள் பார்வைக்கு:
உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்று ஆணைய சட்ட மசோதாவை நிறைவேற்ற கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி மக்களவையில் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வாசுதேவ் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
உணவுப் பொருள் தேவை அதிகரிப்பதை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த மசோதா, மரபணு மாற்ற பயிர்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்த விதிமுறைகளை உள்ளடக்கியது. குறிப்பாக மரபணு மாற்ற பயிர்களை அனுமதித்தல், அதன் தன்மைகளை ஆய்வு செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை கண்காணிக்க உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையம், மரபணு மாற்ற பயிர்கள் குறித்த அனைத்து விவகாரங்களையும் கையாளும். உடல்நல பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
நீதிமன்றத்தை அணுக முடியாது! மரபணு மாற்ற பயிர்களால் பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. பிரச்னை எதுவாயினும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையத்திடம் தான் முறையிட முடியும்.அதேநேரத்தில் மரபணு மாற்ற பயிரால் பாதிப்பு ஏற்பட்டால், 2 ஆண்டுகளுக்குள் ஆணையத்திடம் முறையிட வேண்டும். அதன்பிறகு பாதிப்பு ஏற்பட்டதாக கூறினால் அந்த கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது. மரபணு மாற்ற தொழில்நுட்ப பிரச்னையில் நாட்டிலுள்ள எந்த நீதிமன்றமும் தண்டனை வழங்க முடியாது. ஆணையம் அளிக்கும் தீர்ப்பை ரத்து செய்யவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழும் தகவல்களைப் பெற முடியாது.
விவசாயம், வனம், மீன்வளம், உடல்நலம், கால்நடை, சுற்றுச்சூழல் என தனித்தனி துறைகளில் ஒழுங்காற்றுப் பிரிவுகளை அமைக்க இந்த மசோதா வழி செய்கிறது. மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே ஆராய தனி குழு ஒன்றும் ஏற்படுத்தப்படும் என சட்ட மசோதா கூறுகிறது.
மரபணு மாற்ற பயிர்களை அனுமதிக்கும் இந்த மசோதா, முழுக்க முழுக்க அறிவியல் தொழில்நுட்பத்துறையை சார்ந்தது. இதில் வேளாண்துறைக்கோ, சுற்றுச்சூழல் துறைக்கோ எந்த தொடர்பும் இல்லை. தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா மீது விவாதம் நடத்தப்படும். அப்போது உறுப்பினர்கள் தெரிவிக்கும் திருத்தங்களை கருத்தில்கொண்டு, மசோதா திருத்தப்படும். பின்னர் அதனை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்படும்.
உணவே மருந்து என்றார் திருமூலர். ஆனால் இன்று உணவை விஷமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கலக்கத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள்.
விவசாயிகள் குரல் ஓங்கி ஒலிக்குமா, மத்திய அரசு செவி சாய்க்குமா, நமக்கும் நம் சந்ததிகளுக்கும் உணவு உணவாகவே கிடைக்குமா இல்லை ஆரஞ்சு தோற்றத்தில் இருக்கும் தவளையை நாம் எதிர்காலத்தில் உண்ண வேண்டியிருக்குமா?!................ மரபணு மாற்றம் வரமா? சாபமா? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

கொலம்பஸ்


அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் எனப் பெருமைமிகு அறிமுகத்தை மட்டுமே பெற்றிருக்கும் பலருக்கும் அதிர்ச்சி தரக் கூடிய வகையில் கொலம்பஸ்ஸின் மற்றுமொரு முகத்தை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துக்கின்றார் இக்கட்டுரையாளர்.
 
வருடந்தோறும் அக்டோபர் 12 ந்தேதி  கொலம்பஸ் நினைவு கூரப்படுகின்றார். கொலம்பஸ் கொண்டாடப்படவேண்டியவரா என்ற கேள்வியைத் தோற்றுவிக்ககும் இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்ய அனுமதியளித்த கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team
 
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 12 ம் தேதி, கொலம்பஸ் என்ற கொலை வெறியனை நினைவு கூர்ந்து விழா எடுக்கிறார்கள். "கொலம்பஸ் தினம்" ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு முக்கியமான விடுமுறை தினம். கொலம்பஸ் அமெரிக்காவை "கண்டுபிடித்த" கதையை பாலர் பாடசாலையில் இருந்தே சொல்லிக் கொடுக்கிறார்கள். யார் இந்த கொலம்பஸ்? கரீபியன் தீவுகளில் வாழ்ந்த இரண்டு லட்சம் மக்களை இரு வருடங்களில் இனவழிப்பு செய்த சாதனையாளன். ஒன்பது வயது சிறுமிகளைக் கூட பாலியல் அடிமைகளாக்கிய கயவன். அமெரிக்காவில் முதன் முதலாக அடிமை வாணிபத்தை அறிமுகம் செய்த அயோக்கியன். இன்று உயிரோடிருந்தால், மனித குலத்திற்கு எதிரான குற்றம் இழைத்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பான்.
 
அதற்கெல்லாம் ஆதாரம் உண்டா? கொலம்பஸ் தானே எழுதி வைத்த தினக்குறிப்புகள் இருக்கின்றன. கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான பார்த்தலோமே லாஸ் காஸாஸ், கொடுமைகளால் மனம்வருந்தி எழுதிய குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் அமெரிக்க மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளன. இன்று யாரும் இவற்றை நினைவு கூற விரும்புவதில்லை. வரலாற்றுப் பாடநூல்களும் சம்பிரதாயத்திற்காக என்றாலும் குறிப்பிடுவதில்லை.
 
இனவழிப்பு செய்த கொலம்பஸை தேசிய நாயகனாக விழா எடுத்துக் கௌரவிக்கும் வெட்கக்கேடு அமெரிக்காவில் நடக்கின்றது. இதை அறியாத பல தமிழர்கள், அமெரிக்கர்கள் நாகரீமானவர்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் கொண்டாடப் பட வேண்டுமென அரசுக்கு பிரேரணை செய்தது Knights of Columbus என்ற அமைப்பு. இது ஒரு வெளிநாட்டவருக்கெதிரான நிறவெறிக் கொள்கை கொண்ட கத்தோலிக்க அமைப்பு. அவர்கள் கொலம்பஸை தமது பிள்ளைகளுக்கு கத்தோலிக்க ஆதர்ச நாயகனாக காட்டினார்கள். 1934 ம் ஆண்டு, ஜனாதிபதி பிராங்கலின் ரூஸ்வெல்ட் கொலம்பஸ் தினம் என்ற விடுமுறை நாளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முதன் முதலாக அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்பது இன்று அனைவருக்கும் தெரிந்த உண்மை. செவ்விந்திய பூர்வீக குடிகள், பதினான்காயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள்.
 
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்றும் கூற முடியாது. Leif Ericson என்ற கடலோடி தலைமையில், ஸ்கன்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள், கனடாவில் நியூபவுன்லாந்து மாகாணத்தில் குடியேறி வாழ்ந்தனர்.
 
12 அக்டோபர் 1492 ம் ஆண்டு, கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்த காலத்தில், அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சமாதான விரும்பிகளான அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தினக்குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தார். "அவர்கள் தம்மிடம் இருப்பதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதற்கெல்லாம் இல்லை என்று மறுப்புக் கூறுவதில்லை....."
 
"அரவாக்ஸ் மக்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. அவர்களது சமூகத்தில் குற்றவாளிகள் இல்லை, கைதிகள் இல்லை, சிறைகள் இல்லை. எமது கப்பலான சாந்தா மரியா கரைதட்டி உடைந்த பொழுது, கப்பலில் வந்தோரையும், பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த ஒரு பொருளையேனும் அவர்கள் ஒளித்து வைக்கவில்லை..."
 
இவ்வாறு மனமுவந்து உதவி செய்த நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைம்மாறு என்ன? அந்த மக்களை அடிமைகளாக்கி தங்கச் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கினான். இருப்பதை பங்கிட்டு மகிழச்சியாக வாழ்ந்த மக்கள், இன்னலுற்று மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக தற்கொலை செய்தனர். அரவாக்ஸ் பெண்களை கொலம்பஸின் ஆட்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதைப் பற்றி கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: "இளம் பெண்களுக்கான கேள்வி அதிகரித்த காரணத்தால், அவர்கள் 9 , 10 வயது சிறுமிகளை தேடிச் சென்றார்கள்..."
 
அரவாக்ஸ் அடிமைகளை இறக்கும் வரை இரத்தத்தை பிழிந்து வேலை வாங்கினார்கள். ஒரு செவ்விந்திய அடிமை தினசரி குறிப்பிட்ட கோட்டா தங்கம் எடுத்துக் கொடுக்கா விட்டால், தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள். அடிமை முறைக்கு எதிர்ப்புக் காட்டிய அரவாக்ஸ் தொழிலாளியின் மூக்கையும், காதுகளையும் அறுத்தனர். அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடி பிடிபட்டால் உயிரோடு கொளுத்தினார்கள். கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். தப்பியோடியவர்களை வேட்டையாடும் நாய்கள், அவர்களை கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாக பிய்த்து விடும். கொலம்பஸின் ஆட்கள் தமது வேட்டை நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டி உணவளித்தார்கள்! ஸ்பெயினில் இருந்து நீண்ட கடற்பயணம் செய்து வந்தவர்களை விருந்தாளிகளாக ஏற்று உபசரித்த அரவாக்ஸ் மக்களுக்கு, கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் அப்படியானது. தான் செய்த கொடூரங்களுக்காக கொலம்பஸ் வருந்தியதாக தெரியவில்லை. கிறிஸ்தவர்களை அடிமைகளாக வைத்திருக்க கத்தோலிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. அதற்காக கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். செவ்விந்திய குடிமக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு தடை விதித்தான். கிறிஸ்தவர்கள் அல்லாதோரை கொன்றாலும் பாவம் இல்லை அல்லவா?
ஜெர்மனியில் ஹிட்லரை தேசிய நாயகனாக கொண்டாடினால் உலகம் எந்தளவு அதிர்ச்சி அடையும்? மனித நேயம் மிக்கவர்களாக உலகிற்கு காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், கொலைவெறியன் கொலம்பஸை தேசிய நாயகனாக கொண்டாடுவதைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏன்? உலக வரலாறு முழுவதும் இனப்படுகொலையாளர்கள் மாவீரர்களாக போற்றப் பட்டு வந்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன்.... உதாரணத்திற்கு சில. இதையெல்லாம் தெரிந்தாலும் மூடி மறைக்கும் அறிவுஜீவிகள் தான்; ஸ்டாலின், மாவோ எத்தனை பேரை கொலை செய்தார்கள் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். "மேலைத்தேய நலன்களுக்காக கொலை செய்பவர்கள் பரிசுத்தவான்கள். அதனால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கலாம்."
 
மேலதிக தகவல்களுக்கு :
Genocide of Christopher Columbus
Slavery and Colonialism Make Up the True Legacy of Columbus
Columbus Day
Knights of Columbus
Leif Ericson

Become Online Programmer

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்.


புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக  மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் இயக்கி பார்க்கவும் ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி: http://www.programr.com
இத்தளத்திற்கு சென்று நாம் கணினி மொழியில் எந்த மொழியில் திறமையானவர்களாக மாற வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை அடுத்து வரும் திரையில் புதிதாக மொழி கற்பவர்கள் என்னென்ன அடிப்படை  புரோகிராம்கள் உள்ளன என்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி பார்ப்பது மட்டுமல்லாமல் அதை இயக்கியும் ( RUN) பார்க்கலாம். ஏற்கனவே புரோகிராம் எழுதியவரின் கோடிங் Download என்பதை சொடுக்கி தரவிரக்கியும் நமக்கு தேவையென்றால் மாற்றம் செய்தும்   பார்க்கலாம். கணினியின் அனைத்து முக்கிய மொழிகளுக்காக நேரடியான புரோகிராம் பயிற்சி நம்மை குறிப்பிட்ட அந்த மொழிகளில் வல்லவர்களாக்கிவிடுகிறது. இதைத்தவிர புரோகிராம் எழுத தெரிந்தவர்களுக்கு போட்டியும் வைக்கிறது இத்தளம், சவால் விடும் பல கோடிங்களும் இத்தளத்தில் எளிதாக கிடைக்கிறது, புரோகிராம் எழுதுபவர்களுக்கும் புதியவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

Dubai police show off Ferrari




DUBAI: Dubai police on Thursday showed off a new Ferrari they will use to patrol the city state, hot on the heels of a Lamborghini which joined the fleet earlier.

Read more here: http://bit.ly/Y2h0p9 — in Dubai, United Arab Emirates.
Dubai police show off Ferrari

DUBAI: Dubai police on Thursday showed off a new Ferrari they will use to patrol the city state, hot on the heels of a Lamborghini which joined the fleet earlier.

Read more here: http://bit.ly/Y2h0p9

Islam






வெள்ளி, 26 ஏப்ரல், 2013

இஸ்லாத்தை தழுவிய கொரியாவை சேர்ந்த சகோதரி


கொரியாவை சேர்ந்த சகோதரி  இஸ்லாத்தை படித்து விளங்கி  ஹாங்காங்கில் இஸ்லாத்தை தழுவிய பொழுது  மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விடும் சகோதரி .

வெல்கம் சிஸ்டர் ..அல்ஹம்துலில்லாஹ்.!
கொரியாவை சேர்ந்த சகோதரி இஸ்லாத்தை படித்து விளங்கி ஹாங்காங்கில் இஸ்லாத்தை தழுவிய பொழுது மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விடும் சகோதரி .

வெல்கம் சிஸ்டர் ..அல்ஹம்துலில்லாஹ்.!

கிரகண தொழுகை முறை

26/04/2013 இன்ஷா அல்லாஹ் இன்று இரவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. தமிழ்நாட்டில் நள்ளிரவு 1.10 யில் இருந்து 1.50 வரை தெரியும் என்று அறிவித்து உள்ளார்கள் 

இன்ஷா அல்லாஹ் அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பள்ளிவாசல்களில் கிரகண தொழுகை நடக்கும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். 

பள்ளிவாசலில் தொழுகை நடக்கவில்லை என்றால் விட்டிலேயே நன்மையை நாடி கிரகண தொழுகையை தொளுகுங்கள். 

எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புகாரி 1042


கிரகண தொழுகை முறை : 

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து 'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) நூல் : புகாரி 1044

சந்திர கிரகண நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் (ஸலாத்துள் ஃகுஷுஃப்) தொழுவது சுன்னத் ஆகும்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

இஸ்லாமிய பெண்களே எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!!




ரெத்தம் கொதிக்கும் பதிவு இது!!!!!

போலி ஹிந்து முன்னணி RSS சங்கபரிவார் கும்பல் இஸ்லாமிய பெண்களை ஹிந்து இளைஞர்கள் காதலிப்பது போல நடித்து கற்பமாக்கி கைவிட்டால்.
ஒரு லக்சம் பணமும் மற்றும் போலீஸ் வழக்கு உள்ளிட்ட செலவுகளைவும் ஏற்றுகொள்வதாக ரகசிய செயல் திட்டம் வைத்து செயல்படுத்தி வருகின்றனர்.
இதுபோல் செயல்படும் கயவர்களை அடையாளம் கண்டு சட்டமும்,-நீதியும் -அரசும் தகுந்த தண்டனை வழங்கி தன்டிக்கணும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகுந்த நீதி கிடைக்னும்.

நண்பர்கள் இதைபார்த்துவிட்டு சேர் செய்யவும்..

Darfur war crimes suspect rebel Jerbo 'killed in Sudan'


Saleh Mohammed Jerbo Jamus at the International Criminal Court, 17 June 2010 Saleh Mohammed Jerbo Jamus voluntarily surrendered to the ICC in 2010
A Sudanese rebel charged with war crimes in Darfur by the International Criminal Court (ICC) has been killed, his defence team has said.
Saleh Mohammed Jerbo Jamus died on Friday afternoon during fighting in North Darfur, the statement said.
He was due to go on trial in May 2014 over a deadly attack on African peacekeepers in Darfur in 2007.
The BBC's Anna Holligan in The Hague says the court must get proof of his death before the case is dropped.
Other suspects at large
Mr Jerbo and fellow Darfur rebel leader Abdallah Banda Abakaer Nourain face three war crimes charges relating to the killing of 12 African Union peacekeepers in an attack on the AU's Haskanita camp in September 2007.

Start Quote

Mr Jerbo was killed during an attack on his location by forces of the Justice and Equality Movement faction led by Gibril Ibrahim”
Defence statement
The two men, who voluntarily surrendered to the ICC in 2010 to face the charges, have been free to leave the Netherlands and appear before the court when summoned.
In 2011, a pre-trial chamber found that there were "substantial grounds" to go ahead with their trial.
Mr Jerbo was chief of staff of SLA-Unity rebel group at the time of the 2007 attack but is currently in the Justice and Equality Movement group, the ICC says.
His defence team said he died in the north of Darfur on the afternoon of 19 April 2013 and was buried on the same day.
"Mr Jerbo was killed during an attack on his location by forces of the Justice and Equality Movement faction led by Gibril Ibrahim," AFP quotes the defence team's notification to the ICC as saying.
Sudan's president, two ministers and a pro-government militia leader have also been indicted by the ICC over Darfur and remain at large.
They deny the charges, saying the scale of the suffering in Darfur has been exaggerated for political reasons.
The conflict began 10 years ago when rebels began attacking government targets, accusing Khartoum of oppressing black Africans in favour of Arab communities.
The mainly Arab Janjaweed militia was then accused of carrying out a policy of ethnic cleansing against Darfur's black African population.
More than 300,000 people are thought to have died during the conflict, according to UN estimates.
The government in Khartoum puts the figure at about 12,000 deaths.
As many as 1.4 million remain homeless.
Though violence in Darfur has come down from its peak, there are still clashes between government forces, rebels, bandits and rival ethnic groups.