ஞாயிறு, 31 ஜூலை, 2016

டெல்டாவின் அழிவை வேடிக்கை பார்த்து செல்லும் அன்பு தோழமைகளே

டெல்டாவின் அழிவை வேடிக்கை பார்த்து செல்லும் அன்பு தோழமைகளே இந்த புகைப்படங்கள் ஏதோ இணைய தளத்தில் எடுத்தது அல்ல திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகில் உள்ள எருக்காட்டூரில் ஓ என் ஜி சி நிருவணத்தின் புதிய தொழில் நுட்பத்தில் மீத்தேன் எறி வாயு மற்றும் எண்ணை எடுப்பதற்க்காக ஆழ் துவாரப்பணிகள் பெரிய அளவில் துவங்கப்பட்டு விட்டது அதிவிரைவில் ( 3 வருடங்களில் ) அந்த பகுதியில் வாழும் அப்பாவி மக்கள் வாழ்வாதாரம் இன்றி வெளியேறும் சூழலும் நெருங்கி விட்டது உள்ளே சென்று என்ன செய்கிரீர்கள் என்று கேட்டால் அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது என்று சற்றே மிரட்டலுடன் பதில் வருகிறது முறண்பாடுகள் செய்து உள்ளே சென்றால் . . 4 மாதங்களுக்கு முன் நெய்வேலியில் பாதுகாப்பு படை வீரர் ஒரு ஒப்பந்த தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டது போல ஒரு நிலையும் வரலாம் இதனால் பாதிக்க பட போவது விவசாயிகள் மட்டுமல்ல அங்குள்ள வியாபாரிகளும், அனைத்து பொது மக்களும்தான். எப்படி . . . ? தடுத்து நிறுத்த போகிறோமா, ? வேடிக்கை பாற்க போகிறோமா . . ? அரசியல் தீர்வு கிடைக்குமா . . ? நீதித்துறையை நாட போகிறோமா ? சற்றே யோசிப்போம் முடிவெடுப்போம்
நன்றி
- முரளிதரன்
பின் குறிப்பு ; இந்த புகை படங்களில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் 10 அடி ஆழத்திற்கு பிளஸ்டிக் ஷீட் பரத்தி நச்சுக்கழிவு நீரும் சேகரிக்கப்பட்டுள்ளது பாருங்கள் அந்த துர்நாற்றத்தையும் நேரில் செல்பவர்கள் அனுபவிக்கலாம். அதை பற்றி ஒரு சில நிபுணர்களிடம் ஆலோசனை செய்யும்போது அந்த கழிவின் வாடையால் மனித நுறையீரலுக்கும் பாதகம் ஏற்படுத்துமென்றும் குழந்தைகளுக்கு புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் சொல்கிறார்களாம்


thanks
https://www.facebook.com/photo.php?fbid=595539197232217&set=pcb.595545770564893&type=3&theater

Rise in Islamic pre-schools a concern


thanks
Dr.Ajmal 

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி


புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ்சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா
என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக்காளி உருவாக்கப்பட்டுள்ளது.
"பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.
சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி
உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய்அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் கருத்து இல்லாமல் அட்டப்பாடி திட்டம் கிடையாது : மத்திய அரசு


பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது - மத்திய அரசு
தமிழக அரசு கருத்து சொல்ல காலம் தாழ்த்துவதால் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை
thansk : News 18

நேபாளத்தில் தமிழர்கள் தவிப்பு - மீட்க முதலமைச்சர் நடவடிக்கை


தமிழகத்தில் இருந்து நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்று, நிலச்சரிவில் சிக்கியுள்ள 10 பேரை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 20ந்தேதி, நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலை கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த 19 பேர் சென்றனர்.
அங்கு நிலச் சரிவு ஏற்பட்டதால், காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 பேர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
அவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தூதரகத்தை அணுகி 10 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

News18

என்றென்றும் மக்கள் பணியில் காவல் துறை!

திருச்சி எஸ்.பி யாக இன்று (31.7.16) பொறுப்பேற்றுக் கொண்டேன். வாழ்த்து தெரிவித்த சகோதர, சகோதரிகள், நண்பர்களுக்கு,மனம் நிறைந்த நன்றி!🙏🙏�.. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜீயபுரம்,திருவெறும்பூர், லால்குடி,முசிறி,மணப்பாறை உட்கோட்டங்களுக்குள் அடங்கிய காவல் நிலையங்கள் சார்ந்த பிரச்சினைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம், தகவல்கள் SMS/Inbox ல் தெரிவிக்கவும்,விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்..
என்றென்றும் மக்கள் பணியில் காவல் துறை! 
த.செந்தில் குமார் MA,ML காவல்கண்காணிப்பாளர்,
திருச்சி
9444114125

மோடி ஆவேச உரை அம்பலம்

இந்தியாவில் இஸ்லாத்தை கடைபிடிக்க வோ பிரச்சாரம் செய்யக்கூடாது - மோடி ஆவேச உரை அம்பலம்
https://www.facebook.com/kaalaimalar.net/videos/vb.1447928032184081/1626743140969235/?type=2&theater

சம உரிமை மறுப்பு - மக்கள் எதிர்ப்பு பழங்கள்ளிமேடு கோவில் திருவிழா நிறுத்தம்

சம உரிமை மறுப்பு - மக்கள் எதிர்ப்பு
பழங்கள்ளிமேடு கோவில் திருவிழா நிறுத்தம்
நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தலித் மக்களுக்கு மண்டகபடி வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. உரிமை அளிக்காவிட்டால் இஸ்லாமிய மதத்துக்கு மாறப்போவதாகவும் அந்த மக்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இரு தரப்பு மக்களிடையே சுமுக தீர்வு காண்பதற்கான நடவடிக்கையாக அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்த விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், ஆணை வரும் வரை திருவிழா நடத்துவதற்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வழிபாட்டில் சம உரிமை மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாக வெளியிட்டது.
தொடர்புடைய வீடியோ: https://youtu.be/XdEOSbGYaU0

கார்களுக்கு சுங்கக்கட்டணம் ரத்து ! குஜராத் மாநிலத்தில்,

கார்களுக்கு சுங்கக்கட்டணம் ரத்து !
குஜராத் மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் 15 முதல் கார்கள், சிறிய வகை வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஆனந்திபென் அறிவிப்பு

thanks News18

மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும் :-


தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம்பூவின் பயன்கள்
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு


பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.
தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும். மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வாந்தி பேதி நிற்கும்.
பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் நன்கு கழுக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, தணண்ணீர் சூடானதும் சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடம் மிட நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை முடி புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து முடி புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!


பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.
வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.
ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.
நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.
தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.

காஷ்மீர் மக்களை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள்?

காஷ்மீர் அவலம் குறித்து கொந்தளித்த உவைசி
காஷ்மீர் மக்களை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள்?
அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
அவர்களை தனிநாடாக விட வாய்ப்பு இருந்தும் அவர்களிடத்தில் இந்திய ரானுவத்தை அனுப்பி அளிச்சாட்டியம் செய்தது நியாயமா?
என உவைசியின் கொந்தளிப்பு

குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லியில் ஆபத்து….


குழந்தைகளின் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பகிருங்கள்
  

கடந்த ஆண்டு அழைத்து செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இன்றும் வீடு திரும்பாததால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால், கடந்த ஆண்டு அழைத்து செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இன்றும் வீடு திரும்பாததால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அது தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார்.
 thanks :http://kaalaimalar.net/bjb-goverment-women-child/





வெள்ளைக்காரன் காலை கழுவி குடித்த ஆர்.எஸ்.எஸ்


thanks https://www.facebook.com/kaalaimalar.net/videos/vb.1447928032184081/1626526987657517/?type=2&theater

மனிதாபிமானமற்ற மதுரை ஏர்போர்ட் பிச்சைக்கார நாய்கள்...


துபாயில் இருந்து அல்லல் பட்டு துன்ப பட்டு துயரபட்டு நல்ல கம்பேனி டிவி கூட வாங்க பணம் இல்லாமல் வெறும் கையோடு வரக்கூடாது என்று சைனா டிவி நம்ம ஊரு மதிப்புக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள டிவி ஒன்று வாங்கி வந்தார் திருச்சியை சேர்ந்த நம் சகோதரர்...
நம் மதுரை ஏர்போர்ட் பணம் திண்ணி பிச்சைக்கார அதிகாரி ரூபாய் 7000 ஆயிரம் கேட்க...
அவரோ அழுது புலம்பி கெஞ்சி கதறி காலில் விழாத குறையாக ரூபாய் 2000 அல்லது 3000 வரை தருவதாக போரடிப் பார்த்தார்...
வெளிநாட்டில் நம் துயரை அறியாத பிச்சைக்கார அதிகாரி ரூபாய் 7000 கொடு இல்லை என்றால் விட்டு விட்டு ஓடு என்று கூறியுள்ளான்...
சகோதரரோ பணம் இல்லாமல் உனக்கு இந்த டிவியை தந்துவிட்டு போவதற்கு இங்கேயே
உடைத்துவிட்டு போகிறேன் என்று உடைத்து எரிந்துவிட்டு வந்து விட்டார்...
இதை நாம் சும்மா விடுவதா...
அயல்நாட்டில் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள்...
நம் நாட்டில் நம் பணத்தை சுரண்டுகிறார்கள்...
இதே போல் இனியும் நடக்காமல் இருக்க பகிருங்கள் நண்பர்களே...
இடம் மதுரை ஏர்போர்ட் spice jet
TV China elockta 250 Dubai money
தகவல் மதுரை மைந்தன் ஷரீப்.

Hoax

சனி, 30 ஜூலை, 2016

Jobs

Qatar Labour Vacancies for 20/05/2016 Apply now
***********************************************************************
A company is looking for an experienced accountant/administrator with at least 5 years of experience.
Philipino male nationality is preffereable.
Salary start up package QR 3000, accommodation, and transportation.
Start immidiate
Please contact by email
entalek.org@gmail.com
***********************************************************************
Sales & Marketing Staff urgently required for an MNC.
The candidate should have experience in Qatar
Should have good communication
Should have experience in Construction field.
Valid Qatar Driving License must.
If you have match to the above requirement please forward your updated profile to salesmnp@gmail.com ASAP.
Selected candidates will be offered.
Good Basic Salary
Incentives
Accommodation + Car with Fuel and Mobil will be provided by Company.
Or allowances will be paid for accommodation.
salesmnp@gmail.com
***********************************************************************
A Group of Company required Coring & Cutting Technician and Supervisor
Should have very good knowledge in Coring & Cutting and operating Coring Machines.
Should have good experience in Coring Machine handling
Pls forward your profile to gcc.infotk@gmail.com
Shortlisted candidates will be offered Good Salary + Accommodation + Mobil + Transportation and project based incentives etc.
Pls mention in subject “CORING & CUTTING”
gcc.infotk@gmail.com
***********************************************************************
Waitress jobs:
We are seeking a reliable, well-presented and welling to learn F&B staff to join our team.
Candidate must be in Doha & have NOC
kindly send your CV to cafecrepedeparis@gmail.com

note: Message as received, originality of this message and policy can't be verified by the Admin. it sup to your own risk . 

கட்டளையிடும் நீதிப்பேராணை பற்றி ...

கட்டளையிடும் நீதிப்பேராணை பற்றி ...
..
STATUS REG-WRIT OF MANDAMUS...
கோரிக்கை /புகார்.....( PETITION/COMPLAINT)

அரசு அலுவலர்கள் /அதிகாரிகள் உங்கள் கோரிக்கை /புகார் மனு மீது நடவடிக்கை /பரிசீலனை செய்யாத பட்சத்தில் ...என்ன செய்ய வேண்டும்...
..
நீங்கள் கொடுக்கும்/பதில் அஞ்சல் மூலம் தரும் புகார் மனு/கோரிக்கை மனு மீது அரசு அலுவலர்கள் 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவு அளித்துள்ளது ...

உங்கள் கோரிக்கை மனு/புகார் மனு மீது 60 நாட்களுக்குள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் ....தான் உயர்நீதி மன்றத்தை நாட வேண்டும்...
..
சரி...இந்த 60 நாட்கள்...எப்படி...நாம் வகுத்து செயல்பட வேண்டும் என்று பார்ப்போம்...
..
முதலில் கோரிக்கை மனு/புகார் மனு....எழுதி நேரில் அல்லது பதிவு அஞ்சல் மூலம் கொடுக்கிறர்கள் ...
..
நீங்கள் புகார்/கோரிக்கை தந்து 30 நாட்கள் ஆன பிறகு ...ஒரு‪#‎நினைவூட்டும்‬ கடிதம்(REMINDER LETTER) கொடுக்க/அனுப்ப வேண்டும்...
..
நினைவூட்டும் கடிதத்துடன் ..நீங்கள் மனு தந்ததற்கு ஆதாரமாக ஒப்புகை ரசீது நகல் இணையுங்கள் ...
.

நினைவூட்டும் கடிதம் அனுப்பி 15 நாட்கள் ஆன பிறகு ....
..
ஒரு ‪#‎சட்டப்பூர்வ‬ அறிவிப்பு அனுப்புங்கள் ...அதாவது புகார் தந்து இதுவரை எவ்வித நடவடிக்கை/என் மனு மீது பரிசீலனை செய்யவில்லை ...ஆதலால்,இவ்வறிவிப்பு கிடைத்த 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ...மனுதாரர் /புகார்தாரர் ஆகிய நான்...

நீதியை நிலைநாட்ட ..உயர் நீதி மன்றத்தில் ...கட்டளை நீதிப்பேராணை (WRIT OF MANDAMUS)
தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிடலாம் ....
..
அறிவிப்பு அனுப்பி 15 நாட்களில் ...எவ்வித நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில் ...

..
உயர் நீதி மன்றத்தில் ...கட்டளை நீதிப்பேராணை (WRIT OF MANDAMUS) யை தாக்கல் செய்ய வேண்டும்.
..

State Supported Terrorism

விசாகப்பட்டினம் காட்டில் ஏஎன்32 ?


காணாமல் போன விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்32 விமானம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் விழுந்திருப்பதாக தகவல்...
அங்கு தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த பகுதிவாசிகள், காட்டின் மையப்பகுதியில் விமானம் விழுந்ததை கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை 22ந்தேதி, சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானம் நடுவழியில் காணாமல் போனது. இதில், 29 பேர் பயணம் செய்தனர். 9 நாள் ஆகியும் இதுவரை விமானம் குறித்த உறுதியான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஏஎன் 32 விமானம் விழுந்திருக்கலாம் என்று கருதப்படும் விசாகப்பட்டனம் வனப்பகுதியில் சூரியலங்கா விமானப்படை தள அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் தேடுதல் பணி நடைபெற்றதாக வன பாதுகாவலர் பிரதீப் குமார் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்

மதுரையை சேர்ந்த கண் மருத்துவர் பில்லட் குண்டுகளால் பாதிகப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

மதுரையை சேர்ந்த கண் மருத்துவர் பில்லட் குண்டுகளால் பாதிகப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.
மதுரையை சேர்ந்த கண் மருத்துவர் நடராஜன், அதித்யா ஜோய்ட் கண் மருத்துவமனை மும்பையில் நடத்தி வருகிறார், Borderless World Foundation என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் இவருடன் இரண்டு கண் மருத்துவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை(26\07\16) அன்று காஷ்மீர் அழைத்து சென்றது.
அழைப்பை உடனடியாக ஏற்று காஷ்மீர் புறப்பட்டுள்ளார், மேலும் அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்ய முன் வந்துள்ளார் மருத்துவர் நடராஜன்.
காஷ்மீர் SMHS மருத்துவமனை சென்ற மருத்துவர் நடராஜன் பில்லட் குண்டுகளால் பாதிகப்பட்டவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார், என் வாழ்நாளில் இதுபோன்ற கோரமான முறையில் பாதிக்கப்பட்டவர்களை கண்டது இல்லை என்றார்.
190 வாலிபர்களின் கண் பாதிகப்பட்டுள்ளது, 140 பேர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது, இவர்களில் 40 பேர்களுக்கு கடந்த மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
குறைந்த காலகட்டத்தில் 140 பேர்களுக்கு அறுவை சிகிச்சை அளித்து வருவது சிக்கலானது, SMHS மருத்துவமனை உழியர்கள் மிகப்பெரிய தியாகங்களுக்கு மத்தியில் சேவை செய்வது மிகவும் பாராட்டுக்குரியது.
அறுவை சிகிச்சைக்கு தேவையான ஜெர்மனி தயாரிப்பு BIOM லென்ஸ்கள் மிகவும் குறைவாக உள்ளது, கடந்த வியாழக்கிழமை 20 லட்சம் மதிப்பில் BIOM லென்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது, நாள் ஒன்றுக்கு இரண்டு பேர்களுக்கு விதம் கண் பகுதியில் உள்ள ரெட்டினாவில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம், சராசரியாக ஒரு வருடம் ஆகும் குணம் அடைய, இவ்வாறு மருத்துவர் நடராஜன் tribune பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

வங்கியில் கடன் பெற்ற கடனாளிகளே உங்களுக்கான 10 உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

வங்கியில் கடன் பெற்ற கடனாளிகளே உங்களுக்கான 10 உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

.
கடன் வாங்கியவர்கள் அதை சரியாகக் கட்டமுடியாத நிலை ஏற்படும் பட்சத்தில், அவர்களைக் கேவலமாகப் பேசும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
.
அதிலும் விஜய் மல்லையா வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திரும்பத் தராமலே வெளிநாடு ஓடியபின்பு, கடன்காரர்கள் நிலைமை படுமோசமாக மாறியிருக்கிறது.
ஆனால், எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் சிக்கி, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் கடனாளிகளுக்கு சில உரிமைகளை வழங்கி இருக்கிறது நம் அரசாங்கம். அந்த உரிமைகள் என்ன என்று விளக்குகிறார் கடனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர் எம்.எம்.கினி.
.T S Arunkumar
1. வங்கித் திட்டங்கள்!
.
வங்கியில் கடன் வாங்க வருகிறவருக்கு வங்கி தரும் கடன் திட்டங்களைப் பற்றி முழுமை யாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. கடன் தொகையை எப்படிக் கட்டினால் எளிதில் கடனைக் கட்டி முடிக்கலாம், எந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்கி னால் வட்டி குறையும் என்று முழு விவரத்தையும் கடன் வாங்கு பவருக்கு வங்கியாளர்கள் கட்டாயம் விளக்க வேண்டும்.
2. தகுதி!
.
ஒருவருக்கு கடன் கிடைக்குமா என்பதை வங்கியாளர் உடனடியாக அல்லது எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்ல வேண்டும். தேவை இல்லாமல் கடன் வாங்க வருபவரை இழுத்தடிக்கக் கூடாது.
3. திட்டத்தைப் பின்பற்றச் சொல்வது!
.
உதாரணமாக முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை எந்தப் பிணையமும் இன்றி முழுமையாக வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை 7 வருடம் வரை கட்டலாம். இது போன்ற உரிமைகளை கடன் வாங்குபவர் வங்கியாளர்களிடம் இருந்து கட்டாயம் கேட்டு தெரிந்து கொண்டு கடன் வாங்கலாம். இதற்கு பிணையம் தரச் சொல்லி, கடனாளியை வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது.
4. கூடுதல் கடன்!
.
ஒரு நிறுவனம் அல்லது தனிநபர், கடன் வாங்கி தன் நிறுவனத்தை நிறுவி சரியாக நடத்திக் கொண்டிருக்கும்போது, குறிப்பாக வங்கியில் வாங்கியக் கடனை சரியாக காலம் தவறாமல் செலுத்தி, நல்ல லாபம் ஈட்டி தொழில் முன்னேறும் சமயத்தில் கூடுதல் கடன் கேட்டால் வங்கி கள் தேவையான மதிப்பீடுகளை செய்து கடனை வழங்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் நன்றாக செயல்பட்டு வரும் நிறுவனத்துக்கு கூடுதல் கடன் வழங்க முடியாது என்று சொல்லக்கூடாது.
5. அவமானப்படுத்தினால் இழப்பீடு!
.
ஒருவர் தன் சொந்தத் தேவைக்காகவோ அல்லது தன் நிறுவனத்தின் சார்பாகவோ மற்றொருவருக்கு காசோலையை கொடுக்கிறார். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகை, காசோலை வழங்கிய வங்கிக் கணக்கில் இருந்து, ஏதோ ஒரு காரணத்துக்காக காசோலையில் பணம் இல்லை என வங்கியானது அதை திருப்பி அனுப்பிவிட்டால், அதனால் ஏற்பட்ட அவமானத் துக்கு வங்கியிடம் நஷ்டஈடு கேட்கலாம்.
6. நோட்டீஸுக்கு 60-வது நாள்!
.
ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை 90 நாட்களுக்கு மேல் தன் தவணைகளை செலுத்த வில்லை என்றாலோ அல்லது வாராக் கடனாக வங்கியில் தீர்மானிக்கப்பட்டாலோ, கடன் வாங்கியவரின் சொத்தை விற்றுக் கடனை மீட்க வங்கிக்கு உரிமை இருக்கிறது. ஆனால், சொத்தை கையகப்படுத்தி விற்பதற்குமுன், கடனாளிக்கு தன் கடனை திருப்பிச் செலுத்த ஒரு நோட்டீஸ் அனுப்பி 60 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அப்படி 60 நாட்களில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால்தான் சொத்தை கையகப்படுத்தி விற்று கடனை மீட்டுக் கொள்ளலாம்.
7. மதிப்பீடு எவ்வளவு
.
கடன் வாங்கியவரால் 60 நாட்களுக்குள் பணத்தைக் கட்ட முடியவில்லை எனில், கடனாளியின் சொத்து எவ்வளவு தொகைக்கு வங்கி மதிப்பீட்டாள ரால் மதிப்பிடப்பட்டிருக்கிறது, எங்கு, எப்போது ஏலம் விடப் போகிறார்கள் என்கிற தகவல் களை கடன் வாங்கியவருக்கு தகவல் சொல்ல வேண்டும்.
8. கடன் வாங்கியவரே தன் சொத்தை விற்கலாம்!
.
ஒருவேளை வங்கி மதிப்பீட் டாளர் மதிப்பிட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகைக்கு கடனாளியின் சொத்து இருக்கும் என்றால் தாராளமாக வங்கியிடம் புகார் தெரிவித்து, மறு மதிப்பீடு செய்யச் சொல்லலாம். கடன் வாங்கியவரே கூட வங்கி மதிப்பீட்டைவிட கூடுதல் விலைக்கு சொத்தை வாங்கும் ஆட்களை வங்கிக்கு அறிமுகப்படுத்தலாம்.
9. கடன் போக உள்ள தொகை!
.
சொத்தை விற்றுவரும் பணம், வங்கியில் வாங்கிய கடன் மற்றும் ஏலம் நடத்தியதற்கான செலவுகள் போக மீதம் இருந்தால், அந்தப் பணத்தை வங்கியிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். வங்கியாளர் வழங்கும் எந்த நோட்டீஸாக இருந்தாலும், அதற்கு கடனாளி ஏதாவது மறுப்பு தெரிவித்தால், அடுத்த 7 நாட்களுக்குள் வங்கியாளர் கடனாளிக்கு பதில் சொல்ல வேண்டும்.
10.7 AM – 7 PM!
.
ஒரு கடனாளியை, வங்கி அதிகாரிகள் அல்லது ஏஜென்ட்டுகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே சந்தித்து கடனைப் பற்றி விசாரிக்கலாம். வங்கி அதிகாரிகளோ அல்லது ஏஜென்ட்டோ சந்திக்க வேண்டிய இடத்தை தீர்மானிக்க வில்லை என்றால் கடனாளியின் வீட்டுக்கோ அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கோ சென்று சந்திக்கலாம். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடனாளியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் வரும் வகையில் வங்கியாளர்கள் நடந்து கொள்ளக்கூடாது. கடனாளியின் குடும்ப உறுப்பினர்களை கிண்டலாகவோ, அவமரியாதை யாகவோ நடத்தக் கூடாது.
T S Arunkumar
இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் முதலில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் புகார் கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் அடுத்து பிராந்திய மேலாளரிடம் புகார் தரவேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் மத்திய ரிசர்வ் வங்கியிட மும், பேங்கிங் ஆம்்புட்ஸ் மேனிடமும் புகார் தெரிவிக்க லாம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றங்களை படிப்படியாக அணுகலாம்’’ என கடன் வாங்கியவர்களுக்கு உள்ள உரிமைகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.T S Arunkumar
ஆனால், இத்தனை உரிமைகள் இருக்கிறதே என்று வாங்கியக் கடனை மட்டும் திரும்பக் கட்டாமல் கம்பி நீட்டிவிடா தீர்கள். நாம் கட்டத் தவறும் ஒவ்வொரு ரூபாயும், வங்கி களுக்கும், அதில் டெபாசிட் செய்தவர்களுக்கும் மட்டுமல்ல, நம் நாட்டுக்கும் நாம் செய்யும் துரோகம் ஆகும்.

Hadis

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),
நூல்: அஹ்மது (21252)
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் நான்காவது காவிாிப்படுகைப் பாதுகாப்பு பயணம் இன்று (20-07-2016) திருவாரூாில் தொடங்கியது. பரப்புரைப் பயணக் குழுவில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிாியர். த. செயராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா செயராமன், கோவி. அசோகன், கோவி. இரவி சந்திரன், ந. விஜயராகவன், மாாி பன்னீர் செல்வம், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. செ. பாண்டியன், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோ. யோபு ஞானப்பிரகாசம், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள், சிவகுமார், இராஜா,ஹுசைன், தாஹி மற்றும் பால்ராஜ், இராதா ரவிசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடக்க நிகழ்ச்சியில் தெய்வ சிகாமணி தலைமையேற்றார், வணிகர் சங்க பொதுச் செயலாளர் திரு. குமரேசன் பயணத்தை தொடங்கி வைத்தார். ஜவுளி ரெடிமேட் சங்கத் தலைவர் சாதிக் அலி. சகாரா சூப்பர் மார்க்கெட் திரு. சாக்கர்,பூக்கடை சங்கத் தலைவர் இரயில் பாஸ்கர் முன்னிலை வகித்தார் பரப்புரைப் பயணம் தொடங்கியது.

சிந்திக்கும் இந்து சகோதரர்களுக்கு இதில் படிப்பினை இருக்கிறது.



படம் 1 : பசுவை தங்கள் தெய்வம் என்று கூறி அப்பாவி இந்துக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தூக்குவதற்கு கூட ஆளில்லாமல் அனாதையாக செத்து கிடக்கிறது கோமாதா.
படம் 2 : பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஐவேளை தொழுவதற்காக கை கால்களை கழுவும் தடாகத்தில் தாகத்தோடு வந்து தண்ணீர் அருந்துகிறது ஒரு பசு. அதற்கு இடையூறு செய்யாமல் ஒதுங்கி நின்று தொழுகைக்காக தங்கள் கை கால்களை கழுவுகிறார்கள் முஸ்லிம்கள்.
சிந்திக்கும் இந்து சகோதரர்களுக்கு இதில் படிப்பினை இருக்கிறது.

நெட்வொர்க் தொல்லை இனி இல்லை.. வந்துவிட்டது லிபான் ஆப்

நெட்வொர்க் இல்லாமல் லிபான் ஆப் மூலம் நீங்கள் தொடர்பு கொண்டு பேச முடியும்.
முதலில் உங்கள் மொபைலில் லிபான் ஆப்பை (libon app) டவுன்லோடு செய்யவும். பிறகு அதில் ரீச் மி என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை கிளிக் செய்யவும். பிறகு இதில் இருந்து நீங்கள் நெட்வொர்க் இல்லாமல் கால் செய்து கொள்ளலாம்.
ஆனால் ரீசிவரின் திரையில் உங்கள் மொபைல் எண் மட்டுமே தெரியும். மேலும் இதில் வாய்ஸ் மெசேஜ் கூட அனுப்பிக் கொள்ளலாம்.
மேலும் இந்த ஆப்பினை நீங்கள் கால் செய்யும் நபரும் டவுன்லோடு செய்தல் அவசியம். இந்த ஆப்பினை பயன்படுத்துவோர் வயர்லெஸ் இன்டெர் நெட் வசதி பெற்று இருக்க வேண்டியது முக்கியம்.

காஷ்மீரில் இந்திய ராணுவத்தால்


காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை 92 ஆயிரம் பேர்கள் படுகொலை, 10 ஆயிரம் பெண்கள் கற்பழித்து கொலை, 22 ஆயிரம் விதவைகள் உள்ளார்கள்.
லட்சக்கணக்கான குழந்தைகள் அநாதையாக உள்ளார்கள்.
thank sto Nakkirarn 

என்ன செய்தாலும் நமக்குப் பெயர் தீவிரவாதி..

இதுதான் இஸ்லாம்....!!
துபாயைச் சேர்ந்த அரபு தொழிலதிபர் ஷேக் ஷைத் பின் ஷைய்ஃப் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராதாகிருஷ்ணன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளாவில் உள்ள எடப்பாள் கிராமத்திற்கு வந்திருந்தார்.
காரில் பயணிக்கும் போது அந்த கிராமத்தில் பெண்கள் கையிலும், தலையிலும் குடத்தை சுமந்து கொண்டு தண்ணீருக்கு அலைவதும், குழாயடிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் பார்த்து விசாரித்த அரபு ஷேக் எடப்பாள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதை தெரிந்து கொண்டார்.
எடப்பாள் கிராம மக்களின் தாகம் தணிக்கும் முயற்சியில் உதவும் வகையில் நான்கு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின் மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுத்ததோடு தனது குடும்பத்துடன் நேரடியாக வந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.
கடல் கடந்த தேசம் கடந்த மனிதநேயம், இதுதான் இஸ்லாம்.
நன்றி : குளச்சல் அஜீம்

குண்டு வைத்து மக்களை கொல்வது RSS… தடை செய்வது சிமி ? – அபூஷேக் முஹம்மத்

குண்டு வைத்து மக்களை கொல்வது RSS… தடை செய்வது சிமி ?
1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?
7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
😎 நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?
9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?
11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?
12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?
13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?
14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?
ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?
15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?
16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?
பலிகள் எண்ணிக்கை :-
****************************
2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.
2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.
2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.
2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.
2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.
2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.
2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.
2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.
2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.
2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.
2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.
2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.
கலவரங்கள் :-
*****************
இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.
மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.
இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.
இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.
நன்றி: CBI, NIA, ATS, Indian Press Release websites.
தொகுப்பு: அபூஷேக் முஹம்மத்
http://udagam.com/blog/2016/07/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/

தேவகோட்டை*💥 *சுன்னத் ஜமாத்தை💥 சார்ந்த நான் மன வருத்தத்தோடு பதியும் பதிவு

தேவகோட்டை*💥 *சுன்னத் ஜமாத்தை💥 சார்ந்த நான் மன வருத்தத்தோடு பதியும் பதிவு 👉மார்க்க ரீதியாக காந்தி ரோடு அஜரத் அப்துல் ஜலீல் பாக்கவியிடம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் பதில் தரவில்லை மக்களே சிந்தியுங்கள்அல்லாஹ்வும் அவன் தூதரின் சொல்லை விட்டு விட்டுஅஜரத்மார்களின் சொல்லை கேட்டு  இனி உங்கள் அமல்கள் பாலாகிவிடக்கூடாது என்பதற்க்காக இந்த பதிவு 👇 இவர் இவ்வவளவு காலம் போதித்தது மார்க்கமாஅல்லது மனோ இச்சையாமக்களே சிந்தியுங்கள்* 👇👇أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ
*44. வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?*
திருக்குர்ஆன் 2:44
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَىٰ مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ ۙ أُولَٰئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ
*159. வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.*
திருக்குர்ஆன் 2:159 : وْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ فَبِئْسَ مَا يَشْتَرُونَ
*187. வேதம் கொடுக்கப்பட்டோரிடம் "அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது' என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது.*
திருக்குர்ஆன் 3:187

உலகில் பெண்களுக்கு சொத்து உரிமை அளித்த ஒரே மதம் இஸ்லாம் . சகோதரி : அ .அருள்மெமொழி

உலகில் பெண்களுக்கு சொத்து உரிமை அளித்த ஒரே மதம் இஸ்லாம் .
சகோதரி : அ .அருள்மெமொழி
நன்றி :
புதிய தலைமுறை - தொலைக்காட்சி