முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

    

12 மணி நிலவரம் , 4 5 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், இரவு 12 மணி நிலவரப்படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. அ.தி.மு.க 47 இடங்களில் வென்றுள்ளது   

தமிழக வெற்றிக் கழகம் - 108 வெற்றி 

திராவிட முன்னேற்றக் கழகம் - திமுக 59 வெற்றி - 1 முன்னிலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - அதிமுக 47 வெற்றி 

இந்திய தேசிய காங்கிரஸ் - 5 வெற்றி 

பாட்டாளி மக்கள் கட்சி -  4 வெற்றி 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - ஐயுஎம்எல் 2 வெற்றி 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -  2 வெற்றி 

விடுதலை சிறுத்தைகள் கட்சி -  2 வெற்றி 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - சிபிஐ(எம்) 2 வெற்றி 

பாரதிய ஜனதா கட்சி - பா.ஜ.க 1 வெற்றி 

தேசிய முற்போக்கு திராவிட கழகம் - தேமுதிக 1 வெற்றி 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் -  1 வெற்றி 

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்': ஸ்டாலின் பதிவு 5 5 2026 


MK Stalin DMK leader and other political reaction in tamil

"நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி" என்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-   

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.

மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள். அனைவருக்கும் நன்றி. 

எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-dmk-leader-and-other-political-reaction-tamil-nadu-election-2026-in-tamil-11800176

தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு: 175 இடங்களில் உதயசூரியன் போட்டி 24 3 2026

MK Stalin karur 2

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ஆரம்பத்தில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் பெரும் இழுபறி நீடித்தது. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டின. இருப்பினும், தி.மு.க தலைமை ஒவ்வொரு கட்சியுடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகளின் எண்ணிக்கையைச் சுதாரிப்புடன் குறைத்து இறுதி செய்துள்ளது.

குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நீண்ட நேரத்தைக் கடந்து ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி, இன்று கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும், தே.மு.தி.க-விற்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்குக் குறைந்த அளவிலான தொகுதிகளை ஒதுக்க தி.மு.க முன்வந்ததோடு, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது. இதன் காரணமாக, கமல்ஹாசன் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

இதுவரை தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 66 தொகுதிகளைப் பகிர்ந்தளித்துள்ளது. இதன் விவரங்களைப் பார்த்தால், காங்கிரசுக்கு 28, தே.மு.தி.க-விற்கு 10, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 8, இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சிகளுக்குத் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்குத் தலா 2 இடங்களும், ம.தி.மு.க-விற்கு 4 இடங்களும் (3 உதயசூரியன் சின்னம், 1 தனி சின்னம்) வழங்கப்பட்டுள்ளன.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 66 இடங்களில் 7 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே களம் காணுகின்றன. இதில் கொ.ம.தே.க-வின் 2 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சியின் 2 இடங்கள் மற்றும் ம.தி.மு.க-வின் 3 இடங்கள் அடங்கும். இவை தவிர, இன்னும் கூட்டணியில் உள்ள கருணாஸ் மற்றும் தனியரசு தலைமையிலான கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது.

தற்போதைய நிலவரப்படி, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து திமுக 168 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. இதனுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பிற கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-alliance-finalizes-seat-sharing-175-constituencies-to-feature-rising-sun-symbol-11260520

நாங்குநேரி போல் மானாமதுரையில் அதிர்ச்சி சம்பவம்: பட்டியலின கிராமத்திற்குள் புகுந்து சரமாரி தாக்குதல்


Murder Sivagangai

நாங்குநேரி சம்பவம் போல் மானாமதுரை அருகே தெருவிற்குள் வந்து விரட்டி, விரட்டி ஆதி திராவிட மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் மதுபோதையில் 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தெருவிற்குள் புகுந்து கண்ணில் படுபவர்களை வெட்டிவிட்டு தப்பி சென்றனர். தற்போது அந்த சம்பவம் நடைபெற்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாங்குநேரி பகுதியில் இதேபோல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுததிய நிலையில், அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்து ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Sivang2

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அருகே இடைக்காட்டூர் மேலத்தெருவில் ஆதி திராவிட மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அந்த பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த மதுபான கூடத்திற்கு சென்ற கும்பல் ராஜூவிடம் தகராறி ஈடுபட்டதுடன் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து ராஜூ அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.  ஆனாலும் விடாமல் 3 பைக்குகளில் துரத்தி வந்த கும்பல் ராஜூ வசிக்கும் தெருவிற்குள் புகுந்து கண்ணில் படும் நபர்கள் அனைவரையும் தங்களது கைகளில் வைத்திருக்கும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தெருவில் நின்றிருந்த பெண்கள், ஆண்கள் என பலருக்கும் காயம் ஏற்பட்டதுடன் இதில் தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட மற்றவர்கள் பயந்து ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதனை அடுத்து காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் நடந்த இந்த சம்பவத்தை வெளியே கூற வேண்டாம் என இந்த மக்களை மிரட்டியதுடன் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Sivang

இதற்கிடையே சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் இதேபோல கும்பல் ஒன்று தெருவிற்குள் புகுந்து சராமாரியாக வெட்டியதில் இருவர் கொலை செய்யப்பட்டு அந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் மற்றோரு சம்பவம் அதேபோல மானாமதுரை பகுதியில் அரங்கேறியிருப்பது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

5 3 2026 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-sivagangai-mystery-persons-murder-incident-update-in-tamil-11176939

சட்டம் ஒழுங்கு' - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

5 3 2026
TN Political leaders reaction on Sivaganga Manamadurai Scheduled Caste Idaikattur village attack Disturbing CCTV footage Tamil News

"சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது." என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அருகே இடைக்காட்டூர் மேலத்தெருவில் ஆதி திராவிட மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அந்த பேருந்து நிறுத்தம் வழியாக அருகில் இருந்த மதுபான கூடத்திற்கு சென்ற கும்பல் ராஜூவிடம் தகராறி ஈடுபட்டதுடன் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். 

இதனை அடுத்து ராஜூ அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் விடாமல் 3 பைக்குகளில் துரத்தி வந்த கும்பல் ராஜூ வசிக்கும் தெருவிற்குள் புகுந்து கண்ணில் படும் நபர்கள் அனைவரையும் தங்களது கைகளில் வைத்திருக்கும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் தெருவில் நின்றிருந்த பெண்கள், ஆண்கள் என பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட மற்றவர்கள் பயந்து ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து காவல்துறையிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் நடந்த இந்த சம்பவத்தை வெளியே கூற வேண்டாம் என இந்த மக்களை மிரட்டியதுடன் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் இதேபோல கும்பல் ஒன்று தெருவிற்குள் புகுந்து சராமாரியாக வெட்டியதில் இருவர் கொலை செய்யப்பட்டு அந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் மற்றோரு சம்பவம் அதேபோல மானாமதுரை பகுதியில் அரங்கேறியிருப்பது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


sourcehttps://tamil.indianexpress.com/tamilnadu/tn-political-leaders-reaction-on-sivaganga-manamadurai-scheduled-caste-idaikattur-village-attack-disturbing-cctv-footage-tamil-news-11176929

 

வேளாண் பட்ஜெட் 2026: ரூ.47,248 கோடி ஒதுக்கீடு - முக்கிய சிறப்பம்சங்கள்

17 2 2026
MRK Panneerselvam assmbly

நெல் சாகுபடி மற்றும் கொள்முதல் விலை உயர்வு: கொள்முதல் விலை: சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 156-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ. 131-ம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் கொள்முதல் விலை முறையே ரூ. 2,545 மற்றும் ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை (17.02.2026) தாக்கல் செய்தார். கடந்த ஐந்தாண்டு கால சாதனைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய இந்த பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் இதோ:

1. நிதி ஒதுக்கீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி:
ஒதுக்கீடு உயர்வு: 2021-22-ல் ரூ. 34,220 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, தற்போது 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 47,248.24 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி: வேளாண்மையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GSDP) கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 9.97 சதவீதம் உயர்ந்துள்ளது.

2. நெல் சாகுபடி மற்றும் கொள்முதல் விலை உயர்வு:
கொள்முதல் விலை: சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 156-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ. 131-ம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் கொள்முதல் விலை முறையே ரூ. 2,545 மற்றும் ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல்: கடந்த 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ. 2,118 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல்: ‘நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்’ கீழ் 70,000 விவசாயிகளுக்குப் பாரம்பரிய விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

3. சிறுதானியங்கள் மற்றும் பயிர் உற்பத்தி:
சிறுதானிய புரட்சி: தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் கேழ்வரகு உற்பத்தித் திறனில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தென்னை மற்றும் பனை: தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க 53 லட்சம் கன்றுகளும், பனை மேம்பாட்டிற்காக 68 லட்சம் பனை விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

4. இலவச மின்சாரம் மற்றும் பாசன வசதிகள்:
மின் இணைப்புகள்: கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சூரிய சக்தி: ரூ. 83 கோடி மானியத்தில் 4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

5. காப்பீடு மற்றும் நிவாரண உதவிகள்:
பயிர்க் காப்பீடு: கடந்த 5 ஆண்டுகளில் 38 லட்சம் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீடாக ரூ. 6,063 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் நிவாரணம்: இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 25.36 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2,045 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

6. இளைஞர்களுக்கான வேளாண் தொழில் மற்றும் கல்வி:
தொழில் முனைவோர்: 456 பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ. 4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சி: நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர் மற்றும் கிருஷ்ணகிரியில் புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.

7. கடன் வசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு:
பயிர்க்கடன்: கடந்த 5 ஆண்டுகளில் 83.64 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 69,457 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

உழவர் பாதுகாப்பு: உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி, திருமணம் மற்றும் விபத்து நிவாரணமாக ரூ. 819 கோடி வழங்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-interim-agriculture-budget-2026-key-highlights-mrk-panneerselvam-11124434


ஒன்றிய அரசின் 25 துரோகங்கள்! ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளைத் தட்டிப்பறிக்கும் செயல்களைப் பட்டியலிட்டுள்ளோம் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #NDABetraysTN 24/1 /2026

Credit Sun News
5 முன்முடிவுகளும் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் 24 1 2026

Credit Sun NEws
புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

Credit Sun NEws
திமுகவின் சாதனைகளின் வரிசையில்..” புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்! 24 1 2026

Credit Sun Nws
மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு! சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்த முதலமைச்சர்! 24 1 2026

Credit Sun News
ஆளுநர் எழுப்பிய 13 கேள்விகள்..தரமான, உறுதிபட பதில் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 1 2026

Credit Sun News YT
ஆளுநர் வெளிநடப்பு 20 01 2026

Credit Sun News

 

சிங்கார சென்னை அட்டை இனி பேருந்து நடத்துனர்களிடமே வாங்கலாம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு 12 01 2026 

Chennai bus

இதுவரை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைத்து வந்த இந்த அட்டைகளை, இனி பயணிகள் பேருந்து நடத்துனர்களிடமே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யப் பயன்படுத்தப்படும் 'சிங்கார சென்னை' அல்லது 'தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை' (NCMC) தொடர்பான புதிய வசதியை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதுவரை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைத்து வந்த இந்த அட்டைகளை, இனி பயணிகள் பேருந்து நடத்துனர்களிடமே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையை 100 ரூபாய் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்றும், அதில் 50 ரூபாய்க்குப் பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பயணிகள் தேவைக்கேற்ப ஆன்லைன் மூலம் கூடுதல் ரீசார்ஜ் செய்து தங்களது பயணத்தைத் தடையின்றித் தொடரலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய பயன்படுத்தும் சிங்கார சென்னை அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையை இனி பேருந்து நடத்துனர்களிடமும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.100 செலுத்தி வாங்கும் அட்டையை பயன்படுத்தி ரூ.50 பயணம் செய்யலாம் என்றும், ஆன்லைன் மூலம் கூடுதல் ரீசார்ஜ் செய்து பயணத்தை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/singara-chennai-ncmc-card-available-with-bus-conductors-mtc-metro-recharge-details-10990478

திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீடு! தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு 6 1 2026 Thiruparankundram Lamp Case | Madurai High Court | What did the High Court judges say? | Sun News

Credit Sun News

 

இது வெறும் லேப்டாப் அல்ல; உலகத்தை ஆளும் வாய்ப்பு’; மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் ஸ்டாலின் பேச்சு 5 1 2026 

MK Stalin laptop 2

கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தை முதமைச்சர் மு.க.ஸ்டாலி தொடங்கி திங்கள்கிழமை சென்னையில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தை முதமைச்சர் மு.க.ஸ்டாலி தொடங்கி திங்கள்கிழமை சென்னையில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திங்கள்கிழமை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, மணிகண்டன் ஆகியோர் கல்விக்காக தமிழ்நாடு செய்து வரும் திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் தமிழக அரசையும் பாராட்டினார்கள்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மாணவர்களான உங்களைப் பார்க்கும்போது, எனக்குள்ளே புது  ‘வைப்’ (vibe) வந்துவிட்டது. மடிக்கணிணி வழங்குகின்ற நிகழ்ச்சிக்கு இந்த நிகழ்ச்சிக்கு எதற்கு “உலகம் உங்கள் கையில்” என்ற தலைப்பை வழங்கியிருக்கிறோம் தெரியுமா, இது வெறும் தலைப்பு இல்லை; அதுதான் உண்மை. எதிர்காலமே உங்கள் கையில் தான் இருக்கிறது. அதை உரக்கச் சொல்லி, உணர்த்துவதற்கு தான் இத்தனை பேரும் இந்த விழாவிற்கு வந்திருக்கிறீர்கள்.

புத்தாண்டை புத்துணர்வுமிக்க, மாணவ சமுதாயத்துடன் தொடங்குவதே பாசிட்டிவ் எனர்ஜியை தருகிறது. நெக்ஸ்ட் ஜெனரேஷனான உங்களை மனதில் வைத்துதான், இந்த மொத்த விழாவையுமே ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால்தான், கல்வி கண்காட்சியுடன் இணைத்து, இதை, அறிவு விழாவாக, கல்வி விழாவாக, எதிர்காலத்திற்கு தேவையான விழாவாக ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து, சிறப்பு சேர்த்திருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஏன், இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம், ஏன், இதுபோன்று திட்டங்களை செயல்படுத்துகிறோம், மாணவர்களை வளர்த்தெடுத்தால் தான் மாநிலம் வளரும், நாடு வளரும். அதனால் நம்முடைய ஆட்சியில், “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ்ப்புதல்வன்” இப்போது இந்த லேப்டாப் திட்டம்.

இந்த ஸ்டேஜில் நீங்கள் லேப்டாப் பெறுவது போலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆங்காங்கே நம்முடைய அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளர்ந்து, ஒட்டுமொத்த உலகத்தையும் நம்முடைய கைகளுக்கு எட்டும் தொலைவுக்கு கொண்டு வந்துவிட்டது! அதை உங்கள் கைகளுக்கே கொண்டு வந்து வழங்குவது தான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.

நூறு அல்ல; ஆயிரம் அல்ல; 20 இலட்சம் லேப்டாப்-களை இளைய சமுதாயத்துக்கு வழங்கப் போகிறோம். அதன் முதல்கட்டமாகதான், இன்றைக்கு 10 இலட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க தொடங்கி இருக்கிறோம்.

திராவிட இயக்கம் என்பது, அறிவியக்கம். அறிவுக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற இயக்கம்! அதனால்தான், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உடனடியாக, உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்று நம்முடைய ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன் - 25 ஆண்டுகளுக்கு முன்பே, இனிவரும் காலம் தொழில்நுட்ப காலம், கம்ப்யூட்டரின் காலம் என்று உணர்ந்து ஐ.டி. பாலிசி, டைடல் பார்க் என்று கொண்டு வந்தார் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்! அதனால் தான், நம்முடைய தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், உலகளவில் சாஃப்ட்வேர் ஃபீல்டில் டாப் பொசிஷன்ஸில் இருக்கிறார்கள்.

தமிழர்களான நாம் எப்போதும் கடந்த கால பெருமைகளையும் பேசுவோம்! எதிர்கால பெருமைகளுக்காக உழைப்போம்! ஒருபோதும், போலி பெருமைகளை பேசி தேங்கிட மாட்டோம், அதற்கு எக்ஸாம்பிள்தான் இந்த விழா.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், உங்களின் திறனும், பகுத்தறிவும், அறிவியல் பார்வையும் ஊக்குவிக்கப்பட்டால் தான், புது புது கண்டுபிடிப்புகள் நிகழும்! தொழில்நுட்பம் வளரும்.

மனித இனம், நெருப்பையும், சக்கரத்தையும் கண்டுபிடித்த காலத்தில், இதுபோதும், இவ்வளவுதான் நமக்கு தெரிஞ்சது என்று சுணங்கி இருந்தால், இப்போது விண்வெளியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்ற அளவுக்கு சாதனைகள் படைத்துக் கொண்டிருக்க முடியுமா? நிச்சயம் முடியாது! மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கின்ற இரண்டாவது நெருப்புதான், ஏ.ஐ. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தான் இன்றைக்கு உங்கள் கைகளில் லேப்டாப் வழங்கியிருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரைக்கும், என்னுடைய எண்ணம் எல்லாம் என்ன தெரியுமா? நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? எத்தனை டிகிரி வாங்குகிறீர்கள்? என்ன வேலைகளில், எவ்வளவு பெரிய உயர்பொறுப்புகளில் இருக்கிறீர்கள்? சக்சஸ்ஃபுல்லாக, சொந்தமாக தொழில் நடத்துகிறீர்களா? உங்களால் எத்தனை பேருக்கு வேலை வழங்க முடிகிறது? உங்களுடைய வளர்ச்சியால் நீங்கள் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்வீர்கள்? சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு இருக்கின்ற இளைய சமுதாயம், மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமைமிக்க மனிதர்களாக, உயர்ந்து நிற்கவேண்டும். எல்லோரையும் வாழ வைக்கவேண்டும், இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் எண்ணம்.

இன்றைக்கு உங்கள் கைகளுக்கு வந்திருக்கின்ற லேப்டாப், பரிசு பொருள் கிடையாது; உலகத்தை நீங்கள் ஆளுவதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்பு. எங்களை பொறுத்தவரை, இது செலவுத் திட்டம் கிடையாது; எதிர்காலத் தலைமுறையின் கல்வியில் செய்யப்படும் முதலீடு! நீங்கள் படிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம். படித்து, உங்கள் எதிர்காலத்தை, வாழ்க்கைப் பாதையை, நல்ல பாதையாக தேர்ந்தெடுங்கள்.

3 ஆண்டுகள் - 4 ஆண்டுகள் படிக்கின்ற டிகிரி மட்டுமே போதும் என்று நினைத்துவிடக் கூடாது. அனைத்துத் துறைகளிலும் தினமும் நிறைய வளர்ச்சிகள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால், டிகிரி படிப்பதோடு, அப்கிரேட் ஆகின்ற டெக்னாலஜிக்கு ஏற்றது போல, நீங்கள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கவேண்டும்.

இனிமேல், டெக்னாலஜியை படிப்பது என்பது ஆப்ஷன் கிடையாது; உங்கள் ஃபீல்டில் நீங்கள் நிலைத்து நிற்பதற்கு அவசியமாக இருக்கிறது. தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது. எல்லாவற்றிக்கும் மேலாக எல்லோருடைய கைகளுக்கும் அது வந்துவிட்டது. அதை முறையாக பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் - ஏ.ஐ.-ஆல் ஒருபோதும் மனிதர்களை நாம் ரீ-பிளேஸ் செய்ய முடியாது. நம்முடைய வேலைகளை இன்னும் விரைவாக செய்வதற்கும், இன்னும் சிறப்பாக செய்வதற்கும் தான் ஏ.ஐ. துணை நிற்கும். ஸ்கில் அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் நிறைய உருவாகியிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.

சென்ற ஜெனரேஷன் இளைஞர்கள், அறிவுக்காக, பல புத்தகங்களை தேடி அலையவேண்டும். ஆனால், இப்போது உங்களுக்கு தேவையான தகவல்களை, அறிவை, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இருந்த இடத்தில் இருந்து கொண்டும் அதை நீங்கள் பெறலாம். இந்த வளர்ச்சியை குறைசொல்லி முடங்கி போவது முட்டாள்களுடைய பாதை. இதை பயன்படுத்தி வாழ்க்கையின் உச்சத்தை தொட வேண்டியதுதான் உங்களுடைய வேலை.

இன்றைக்கு உங்கள் கைகளில் வந்திருக்கின்ற லேப்டாப்பை - சும்மா படம் பார்க்க, கேம்ஸ் விளையாட, பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா, இல்லை, உங்கள் கரியருக்கான லாஞ்ச்-பேட்-ஆக பயன்படுத்திக் கொள்ள போகிறீர்களா? இதுதான் நாங்கள் உங்கள் முன்னால் வைக்கக்கூடிய கேள்வி. எல்லாவற்றுக்குமே நல்லது, கெட்டது என்று இரண்டு சைடு இருக்கிறது. அதில் நீங்கள் எந்த சைடை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் வெற்றி உங்கள் சைடு வரும். நான் சொல்வதெல்லாம், உங்கள் கரியர் எதுவாக இருந்தாலும், அதில் நீங்கள்தான் டாப் பொசிஷனில் இருக்கவேண்டும். வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், நாம் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது, உங்களுடைய வெற்றியைச் சொல்லி, நீங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும்; அதில் தான் நான் பெருமைப்படவேண்டும்.

உலகத்தோடு போட்டி போடுங்கள்.. அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான கருவியைதான், இன்றைக்கு உங்கள் கைகளில் வழங்கியிருக்கிறோம்.

வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது. நான் எப்போதும் சொல்வதுதான் – நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். படியுங்கள், படியுங்கள், படியுங்கள். உங்களைப் பார்த்துக் கொள்வதற்கு நான் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. பணம் தேவைப்படுகின்ற உங்கள் அம்மாக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருகிறோம். படிப்பதற்கு தேவையென்றால் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய். பொங்கல் கொண்டாடுவதற்கு மூவாயிரம் ரூபாய் வழங்குகிறோம். பசியோடு காலையில் பள்ளிகளுக்கு வருகின்ற குழந்தைகளுக்கு காலை உணவு தருகிறோம். வேலை கிடைப்பதற்கு உலக அளவில் சென்று தொழிற்சாலைகளை கொண்டு வருகிறோம். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், பொருளாதாரத்தைப் பாருங்கள். டபுள் டிஜிட் வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம்.

அதனால்தான், இங்கே இருக்கக்கூடிய உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உலகப் பத்திரிகையே நம்முடைய தமிழ்நாட்டை இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என்று சொல்கிறார்கள். இது எல்லாம் போதுமா, சொல்லுங்கள் போதுமா! கண்டிப்பாக போதாது! இன்னும் வளர்ச்சி வேண்டும். தமிழ்நாடு உங்களை நம்பித்தான் இருக்கிறது. உலகம் உங்கள் கையில் இருக்கிறது. ஜெயித்துவிட்டு வாருங்கள். நீங்களும் ஜெயித்து வாருங்கள். நாங்களும் ஜெயித்துவிட்டு வருகிறோம். எப்போதுமே உங்கள் கூடவே இருப்போம். தமிழ்நாடு வெல்லட்டும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-launch-free-laptops-to-college-students-world-in-your-hands-event-chennai-10974612

தமிழ்நாட்டின் கடன் உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளதாக குறிப்பிடுவது அபத்தமானது - The Hindu! | Kalaignar News 2 1 2026

வளர்ச்சியில் முந்தும் தமிழ்நாடு.. அடிப்படை வசதிகளுக்கே போராடும் உ.பி மாநிலத்தின் கடனை கணக்கிடுவது எப்படி? 01 01 2026

  

தமிழக அரசு பள்ளிகளில் ரூ6 கோடியில் ரோபோடிக் லேப்: இந்த 15 மாவட்டங்கள் செம்ம லக்கி! 23 12 2025 

Robotic AI Generated

இந்த ஆய்வகங்களுக்கான சிறப்புப் பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு உதவியுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வடிவமைத்துள்ளது. Photograph: (Gemini AI Generated Image)

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை நவீனத் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களாக மாற்றும் நோக்கில், 15 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தலா ஒரு ரோபோட்டிக் ஆய்வகம் வீதம், மொத்தம் 6.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டிற்கான முயற்சி

6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே சிக்கல்களைத் தீர்க்கும் திறன் மற்றும் குழுவாக இணைந்து செயல்படும் ஆற்றலை வளர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் முதற்கட்டமாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு

இந்த ஆய்வகங்களுக்கான சிறப்புப் பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு உதவியுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வடிவமைத்துள்ளது. இதற்காக 11 வகையான அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி, ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா 10 பாடத் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 90 சதவீதப் பாடங்கள் செய்முறைப் பயிற்சி வழியாகவே கற்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வகத்தின் சிறப்பம்சங்கள்

இந்த ரோபோட்டிக் ஆய்வகங்களில் மாணவர்கள் கீழ்க்கண்ட நவீனத் தொழில்நுட்பங்களைக் கற்க உள்ளனர்:

குரல் மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோக்கள்.

வண்ணங்களைப் பிரித்தறியும் மற்றும் ஸ்மார்ட் குப்பைத் தொட்டி ரோபோக்கள்.

டிரோன்களை இயக்குவதற்கான பயிற்சிகள்.

விர்ச்சுவல் லேப்ஸ் கொண்ட ஸ்டெம் பணிநிலையங்கள்.

அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எளிய மின்சுற்றுகளைக் கையாளும் முறைகள்.

வருங்கால கண்டுபிடிப்பாளர்கள்

இது குறித்துப் பள்ளிக் கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆய்வகங்கள் வெறும் தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள் மட்டுமல்ல; இவை மாணவர்களின் சிந்திக்கும் முறையைச் சீரமைக்கும் ஒரு கல்விப் புரட்சியாகும். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதோடு, புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும் உருவெடுப்பார்கள்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/education-jobs/robotic-labs-rs-6-crore-installed-in-some-tn-govt-schools-in-15-districts-10939320

சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும்

MTC Bus.jpg

இலவச பேருந்து பயண டோக்கன்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) மூத்த குடிமக்களுக்கான இலவசப் பயணச் சீட்டுகள் வழங்கும் திட்டத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய இலவசப் பயண டோக்கன்களைப் பெறுவதற்கான காலக்கெடு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

22 12 2025 

சென்னையில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், மொத்தம் ஆறு மாதங்களுக்கான 60 டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சேவையானது தற்போது நகரின் முக்கியமான 42 மையங்களில் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக இந்த மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதிக்குப் பிறகு, இந்த டோக்கன்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பேருந்து பணிமனை அலுவலகங்களில் வழக்கமான பணி நேரங்களில் மட்டுமே கிடைக்கும்.

புதிதாக இந்தப் பயண அட்டையைப் பெற விரும்பும் மூத்த குடிமக்கள், தங்களின் இருப்பிடச் சான்றிதழுக்காகக் குடும்ப அட்டையையும் (Ration Card), வயதுச் சான்றிற்காக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே இந்த அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள், அதனைப் புதுப்பிக்கத் தங்களின் பழைய அடையாள அட்டை மற்றும் ஒரு புகைப்படத்தை மட்டும் வழங்கினால் போதுமானது.

அடையாறு, தி.நகர், கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 மையங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள முதியவர்கள் உரிய ஆவணங்களுடன் சென்று தங்களின் இலவசப் பயண டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மாநகர் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/mtc-senior-citizen-free-bus-tokens-updates-10929907 

முதலீடுகள் எங்கே என கேட்டவர்கள்

இங்கே பார்க்கவும்



Source DMK Students Wing




சர்வதேச அளவில் ஹாக்கி மைதானம்; மதுரையில் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் Madrai Mh மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் இன்று திறக்கப்பட்டது. தமிழ்நாட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக கலந்து கொண்டு இம்மைதானத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், சர்வதேச போட்டிகள் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ஹாக்கி மைதானம், மதுரை விளையாட்டு வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது. 22 11 2025 இந்த மைதானத்தில் வரும் 28ஆம் தேதி 14வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்குகின்றன. உலக நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்கும் இந்த சர்வதேச தொடரை முன்னிட்டு, மதுரை நகரம் உற்சாகத்துடன் தயாராகி வருகிறது. source https://tamil.indianexpress.com/sports/tamilnadu-madurai-international-hockey-ground-opening-update-10803580 தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR-ஐ எதிர்ப்பது ஏன்? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் 2 11 2025
Credit Sun news

 

ஊர்களில், தெருக்கள், குடியிருப்புகளில் சாதிப்பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - தமிழக அரசு


secretariate 2

ஊர்களில் தெருக்கள் மற்றும் குடியிருப்புகளில் சாதிப்பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் அறிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் நிர்வாகம் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ள குடியிருப்புகள் தெருக்கள். சாலைகள், நீர்நிலைகள், இன்னபிறவை மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/ மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

ஊர்களில் தெருக்கள் மற்றும் குடியிருப்புகளில் சாதிப்பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் அறிவித்திருப்பதாவது:

1.தமிழ்நாடு அரசு சாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற எந்தவொரு காரணத்தாலும் வேறுபாடு இல்லாத, சம வாய்ப்புகள் கொண்ட ஒரு நியாயமான மற்றும் முன்னேற்றமிக்க சமத்துவ சமூக அமைப்பை (A fair and Progressive Egalitarian Society) நோக்கி பல்வேறு திட்டங்கள், பணிகள், கொள்கை முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.

2.தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக, சமூகத்தில் சமத்துவத்தை நிலைநிறுத்த பல மாற்றங்களை முன்னெடுத்த சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், தெருக்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்க 1978-ம் ஆண்டு, அக்டோபர் 3-ம் நாளன்று அரசு ஆணை வெளியிட்டது. இவ்வாணையில், பாகுபாட்டைத் தவிர்த்து சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் உரிய தீர்மானங்களை நிறைவேற்றி சாதிப் பெயர்களை நீக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

3.அரசு, அனைத்து தரப்பு மக்களும் மதிப்போடும், சமமாகவும் நடத்தப்படும் போது மட்டுமே உண்மையான சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற அடிப்படையில் மேற்கொண்டுவரும் எண்ணற்ற முன்னோடி முயற்சிகளின் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 29.04.2025 அன்று பின்வரும் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்: ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது பழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

4.அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில், குடியிருப்புகள். தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், இன்னபிற போன்றவற்றிலுள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/மறுபெயரிடுதல் தொடர்பாக 01.04.2025 மற்றும் 19.05.2025 ஆகிய நாட்களில் நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும், சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுப்படுத்தும் வகையில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உட்கட்டமைப்புகள் போன்றவற்றிலுள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/மறுபெயரிடுதல் தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோரிடமிருந்து மேலே படிக்கப்பட்ட மூன்று கடிதங்களில், மாதிரி வழிகாட்டு நெறிமுறைகள் பெறப்பட்டுள்ளன.

5. அரசு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக மேற்குறிப்பிடப்பட்ட மாதிரி வழிகாட்டு நெறிமுறைகளை கவனமான பரிசீலனைக்குப் பின்னர் ஏற்று, இவ்வாணையின் இணைப்புகளில் உள்ளவாறு குடியிருப்புகள், தெருக்கள். சாலைகள். நீர்நிலைகள் மற்றும் பிற பொது உட்கட்டமைப்புகள் போன்றவற்றில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறது.

6. இவ்வாணையை, இணைப்பில் நிர்ணயிக்கப் பட்டுள்ளவாறான காலவரம்பிற்குள் செயல்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர். நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தமிழக அரசு சாதிப்பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 10 2025 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-issued-guidelines-to-remove-caste-name-in-village-and-people-settlements-10542725    

   இந்த அரசு தோல்வி பெற்றுவிட்டாதாம் !!! . வீட்டிற்கு அனுப்பவேண்டுமாம். ? 

 

இந்தியாவில் எந்த கட்சியாவது முதலில் 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறதா....... ?

அப்படி கொடுத்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறதா.......?
அப்படி வெற்றி பெற்று
அதில் பாதியாவது நிறைவேற்றியிருக்கிறதா....... ?
திமுக அந்த சாதனையை திறம்பட செய்திருக்கிறது.
அதில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது.
அதாவது 80%...
பாராட்ட எதிர்க்கட்சியினருக்கு கண்ணியம் இல்லாவிட்டாலும்,
இகழாமல் இருக்கலாமே......
அதில் 38 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு
காரணம் ஒன்றிய அரசு என்பதும் அனைவருக்கும் தெரியும்.
மீதம் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற சில இடர்பாடுகள் மற்றும் போதிய நிதி ஆதாரமும் இல்லை என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். 2 9 2025
அது மட்டுமில்லை,
காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம்,
நான் முதல்வன் திட்டம்,
தமிழ் புதல்வன் திட்டம்
போன்ற நாடே திரும்பி பார்க்கும் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறது.
ஒரு பகுதி நேர,
கூத்தாடி யாரோ எழுதி கொடுத்தத்தை இப்படி படிக்கிறான்.
நடைமுறைக்கு சாத்தியமானதை
மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம்".
சில அறிவீலிகள்
ஆரவாரம் செய்கிறார்கள்.
இந்த அரசு தோல்வி பெற்றுவிட்டாதாம்.
வீட்டிற்கு அனுப்பவேண்டுமாம்.

Credit news 18 tamil nadu

நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டலின்! 14 09 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி – அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், திராவிட மாடல்!

இன்று கிருஷ்ணகிரியில் ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா – பொய்களால் காரிருளை விளைவித்திட முடியுமா – தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா என்றெண்ணும் கூட்டத்தின் மலிவான அரசியலை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்! நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/we-will-defeat-cheap-politics-we-will-stand-tall-as-no-1-tamil-nadu-chief-minister-m-k-stalin.html

கட்டணம் இல்லாத ஆன்மிகப் பயணம்... ஆன்லைனில் இப்படி விண்ணப்பிங்க!

download (6)

இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்து வரும் ஒரு சிறப்பு சேவையின் கீழ், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட பக்தர்கள் மூலதன செலவு இல்லாமல் புனிதத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் மற்றும் அறுபடை வீடுகள், மேலும் ராமேசுவரத்திலிருந்து காசி வரை ஆன்மிகப் பயணங்கள் நடத்தப்படுகின்றன.

அதோடு, மானசரோவர், முக்திநாத் போன்ற வெளிநாட்டு புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 7,998 பக்தர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த ஆண்டான 2025-2026 ஆம் ஆண்டுக்கான இந்துசமய அறநிலையத்துறை மானிய திட்டத்தின் சட்டமன்ற ஒப்புதலைத் தொடர்ந்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசி விசுவநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணமாக 600 பக்தர்கள் அரசின் நிதியுதவியுடன் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதற்காக ரூ.1.50 கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கான பக்தர்கள் தேர்வை மேற்கொள்வதற்காக, இந்துசமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திலும் இருந்து 30 பேர் வீதம், மொத்தம் 600 நபர்கள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்றும், போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.

ராமேசுவரம்–காசி ஆன்மிகப் பயண திட்டம் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை 2025–2026ஆம் ஆண்டிற்காக அறிவித்துள்ள திட்டத்தின் படி, இந்த பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள பக்தர்கள், தங்களது விண்ணப்பங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.hrce.tn.gov.in இல் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளையும் இணைத்து, தங்கள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 22.10.2025க்குள் ஒப்படைக்க வேண்டும். இந்த ஆன்மிகப் பயணம் மற்றும் தொடர்புடைய விவரங்களை அறிய விரும்பும் பக்தர்கள், துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணையும் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.

12 09 2025

இதன் மூலம், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலிலிருந்து, காசி விசுவநாதசுவாமி கோவிலுக்கு செல்லும் 600 பக்தர்களுக்கு ஆன்மிக அனுபவம் வழங்கப்பட உள்ளது. அரசு வழங்கும் மானியத்தின் கீழ் நடைபெறும் இந்த பயணம், மன நிம்மதியையும் ஆன்மிக மகிழ்ச்சியையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தகுதியான பக்தர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/lifestyle/pilgrimage-tour-in-tamilnadu-details-and-information-10451941

 வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விமர்சனங்களுக்கு மு.க.ஸ்டாலின் பதில் 3 9 2025 

MK Stalin Europe tour

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். Photograph: (x/@mkstalin)

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மு.க. ஸ்டாலினின் இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற மத்திய அரசின் புள்ளிவிவரங்களை உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள்.

ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற முறையில் ஆகஸ்ட் 30 அன்று ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன்.

விமானத்தில் துபாய் வழியாக ஆகஸ்ட் 30 சனிக்கிழமை இரவு ஜெர்மனியில் NRW எனப்படும் நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டசெல்டோர்ப் விமான நிலையத்தில் தரையிறங்கினேன்.

ஆகஸ்ட் 31 மாலையில் நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம். ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களுடனான சந்திப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஸ்வீடன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தனர்.

அதன்பிறகு அறிவாலயமாகத் திகழும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றேன். பழந்தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகள், அண்ணாவின் ஓர் இரவு உள்ளிட்ட பல தமிழ்ப் புத்தகங்களின் முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் நூல்கள் - ஆவணங்களைக் கொண்ட அந்தத் தமிழ்த்துறை மற்றும் நூலகத்தைக் காப்பாற்றும் வகையில் அதன் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு 2021-ல் ரூ. 1.25 கோடியும், கடந்த ஜூலையில் ரூ. 1 கோடியே 64 ஆயிரமும் என இரண்டு முறை நிதி அளித்துள்ளது. அந்த நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, ஜெர்மனியில் தமிழ்ப் பணி தொடர்கிறது என மகிழும் வகையில் தமிழ்த்துறை நூலகத்தில் பொறுப்பில் உள்ள Dr.Sven Wortmann, Mr.Sharon Nathan, Mrs.Daria Lambercht ஆகியோரின் தமிழார்வம் அமைந்திருந்தது. தமிழில் எங்களுக்கு வரவேற்பளித்து, ஓலைச்சுவடிகளைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள சிரமங்களை அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டு, சிலவற்றைத் தமிழ்நாட்டில் பாதுகாக்குமாறு சொல்லி வழங்கினர். அவற்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைத்துப் பாதுகாக்கும் எண்ணத்துடன் பெற்றுக் கொண்டேன்.

தமிழ் மணம் வீசிய கொலோன் பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் போனதே தெரியவில்லை. உலகின் எந்த மூலையிலிருந்தோ தமிழ் மீது ஆர்வம் கொண்டு ஆய்வில் ஈடுபடும் மொழியியல் அறிஞர்களுக்கு இந்த நூலகம் துணை நிற்பதையும், நூலகங்களின் பயனையும் தேவையையும் கருதி, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் சென்னையில் அமைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல, திராவிட மாடல் ஆட்சியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருப்பதுடன் திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் உலகத் தரத்திலான நூலகங்கள் அமைக்கப்பட்டு வருவதை எண்ணி மகிழ்ந்தபடியே கொலோன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியே வந்தேன்.

செப்டம்பர் 1 கொலோன் நகரத்திலிருந்து புறப்பட்டு, டசல்டோர்ஃப் நோக்கிப் பயணித்தோம். டசல்டோர்ப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

அதன் பின்னர் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசும்போது, நான் வெறும் முதலீட்டுக்காக இங்கு வரவில்லை என்பதையும், ஜெர்மனி - தமிழ்நாடு எனும் இரண்டு பொருளாதார அரசுகளுக்கிடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என்பதையும் சுட்டிக்காட்டினேன். ஜெர்மனியைப் போலவே தமிழ்நாட்டிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும், நிறுவனங்களுக்கேற்ற திறனை ஊக்குவிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதையும் எடுத்துக்கூறி, தொழில்வளர்ச்சிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் உங்களுடனான ஒரு பார்ட்னர் போல அரசு செய்து தரும் என்ற உறுதியை அளித்து, இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது என்ற நம்பிக்கையை விதைத்தேன்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஜெர்மனியில் முயற்சித்ததையும், நாம் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்கட்டமைப்பை அறிந்துகொள்ள முடிந்தது என்றும் அங்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

எந்த நாட்டில் முதலீடுகளை ஈர்க்கிறோமோ அந்த நாட்டிற்கு, முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதல்-அமைச்சரே நேரில் வந்து முதலீட்டாளர்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது, அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதற்கு NRW மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.

காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

செப்டம்பர் 2 அன்று காலையில் என்.ஆர்.டபிள்யூ (NRW) மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட்டை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், NRW மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.

அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-answer-to-criticism-about-his-europe-tour-for-draw-investments-9821391

இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்! 3 9 2025 தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான `தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா’ முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 ஆயிரத்து 819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்த நிலையில், ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சரை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் முதலமைச்சருடன் மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்டாரி வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன், கடல் கடந்த இந்த பயணத்தில் வீட்டின் நறுமணத்தை பெற்றேன். உற்சாக வரவேற்பால் உள்ளம் மகிழ்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/chief-minister-m-k-stalin-visits-england-people-give-him-a-rousing-welcome.html

தமிழ்நாட்டிற்கு ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்து” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எனது வெளிநாட்டு முதலீட்டு பணியின் ஜெர்மனி பிரிவு ஒரு வலுவான குறிப்பில் முடிவடைகிறது.

ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, அவை 9,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன கூறுகள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஜெர்மனி வருகையின் போது மொத்தம், ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன, இது தமிழ்நாட்டில் 15,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திராவிட மாடல் உரையாடல்களை உறுதிமொழிகளாகவும் நம்பிக்கையை உறுதியான வளர்ச்சியாகவும் மொழிபெயர்க்கிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 9 2025


source https://news7tamil.live/26-agreements-worth-rs-7020-crore-signed-for-tamil-nadu-chief-minister-m-k-stalins-post.html

தமிழகத்திற்கான நிதியை மத்திய நிதியமைச்சர் விரைவில் விடுவிப்பார் என நம்புகிறேன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய அமைச்சரின் அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஆகியோர்  சந்தித்தனர்.

19 08 2025

அப்போது அவர்கள்  தமிழ்நாட்டிற்கான ஊரக உட்கட்டமைப்பு மற்றும் குளச்சல் துறைமுக மேம்பாட்டிற்கான நபார்டு (NABARD) வங்கியின் நிதியுதவியினை விரைவில் விடுவிக்கக்கோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தைஅளித்தனர்.இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்ச மு.க.ஸ்டாலின்,

”குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



source https://news7tamil.live/i-hope-the-union-finance-minister-will-release-the-funds-for-tamil-nadu-soon-chief-minister-m-k-stalin.html

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வருவாய் அதிகரிப்பு; 2023 - 24 யில் 5 மடங்கு உயர்வு



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-tourism-development-corporation-revenue-increases-a-five-fold-9668034
கடந்த சில ஆண்டுகளில், தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசு எடுத்த புதிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (TTDC) வருவாய் பல மடங்கு அதிகரித்து, மாநிலத்தின் சுற்றுலாத் துறை ஒரு புதிய அத்தியாயத்தை அடைந்துள்ளது.

2020-21 நிதியாண்டில் வெறும் ரூ.49.11 கோடியாக இருந்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வருவாய், 2023-24 நிதியாண்டில் ஐந்து மடங்கு அதிகரித்து, ரூ.243.31 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நம்பமுடியாத வளர்ச்சி, மாநில அரசின் அர்ப்பணிப்பு மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் உள்ள முனைப்பைக் காட்டுகிறது.

மே 2021 முதல் ஜனவரி 2025 வரையிலான காலகட்டத்தில், TTDC-க்கு சொந்தமான 26 உணவகங்கள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு சேவைகள் மூலம் மட்டும் ரூ.129.28 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும், அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதிலும் தமிழ்நாடு அடைந்த வெற்றியைப் பிரதிபலிக்கிறது.

வருவாய் அதிகரிப்புடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.2022-ஆம் ஆண்டில் 0.14 மில்லியனாக இருந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, 2023-இல் 1.17 மில்லியனாக உயர்ந்தது. இந்த அபரிமிதமான வளர்ச்சி, தமிழ்நாட்டின் கலாச்சார, இயற்கை மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் உலக அளவில் அதிக கவனத்தைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது.

உள்நாட்டுப் பயணிகளின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022-இல் 218.58 மில்லியனாக இருந்த உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, 2023-இல் 286 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது, மாநிலத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளூர் மக்களிடையேயும் எவ்வளவு பிரபலமாகி வருகின்றன என்பதைக் குறிக்கிறது.இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய புதிய திட்டங்களும் கொள்கைகளும்தான். 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சுற்றுலாத் துறையில் பல முன்னோடித் திட்டங்கள் தொடங்கப்பட்டன.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக, செப்டம்பர் 26, 2023 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா கொள்கையை வெளியிட்டார். இந்தக் கொள்கை, தமிழ்நாட்டை உலக அளவில் ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது.சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக, பல புதிய மற்றும் முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பண்டைய தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், ஜல்லிக்கட்டுக்கான பிரத்யேக அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதற்காக, இந்த புதுமையான கடல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

16 08 2025

இந்தத் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் சுற்றுலா மேம்பாட்டிற்கு உறுதுணையாக அமைந்துள்ளன. பாரம்பரியம், கலாச்சாரம், இயற்கை அழகு, மற்றும் சாகச நடவடிக்கைகள் எனப் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறை தன்னை மாற்றியமைத்து வருகிறது. வருங்காலங்களில், தமிழ்நாடு மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி, உலக சுற்றுலா வரைபடத்தில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

தூய்மைப் பணியாளர்களுக்கான தமிழக அரசின் 6 சிறப்புத் திட்டங்கள்



14 08 2025
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களுக்கான தமிழக அரசின் 6 சிறப்புத் திட்டங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலன் காக்கும் வகையில் சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு திட்டங்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காலை உணவு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம், முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். அதன்பின்னர் மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

குடியிருப்புகள்

நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர் நல வாரிய உதவியுடன் 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.

நலன் காக்கும் காப்பீடு

தூய்மைப் பணியாளர்களின் உடல நலன் காக்க, தற்போதுள்ள அரசின் 5 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீட்டுடன், மிகை தொகையாக மேலும் ரூ.5 லட்சத்திற்கான புதிய திட்டம்.

சுயதொழில் உதவி

தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினர் சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை மானியம், 6% வட்டி மானியம்.

உயர்கல்வி உதவித் தொகை

தூய்மைப் பணியாளர் வீட்டு மாணவர்களின் கல்வி நலன் கருதி, 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும்.

நிவாரண நிதி

தூய்மைப் பணியாளர்கள் குடும்பங்களின் எதிர்கால நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு பணியின்போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-thangam-thennarasu-announced-special-scheme-for-sanitary-workers-including-morning-meal-9660790     

இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டிய தமிழ்நாடு 

6 8 2025

பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்ற இலக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்கே ஆண்ட்களில் சாதித்துக் காட்டியிருக்கிறார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்று கூறியதை நான்கே ஆண்டுகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் 7 அம்ச உறுதிமொழிகளை வெளியிட்டு மக்களிடம் வாக்கு கேட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் முதல் அம்சம், பொருளாதாரம். “வளரும் வாய்ப்புகள்-வளமான தமிழ்நாடு அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்க பொருளாதாரத்தை எட்டுவது முதல் இலக்கு” என்று உறுதியளித்தார்.

அவரது வாக்குறுதியை நம்பி வாக்களித்து தன்னை முதலமைச்சராக்கிய மக்களுக்காக ஓயாது உழைத்து, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியடைய வைத்து, தான் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றியுள்ளார்” என்று டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், “திருச்சி சிறுகனூரில் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் உறுதியளித்த நாள் 2021 மார்ச் 7. தமிழ்நாடு 11.29% என்ற இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டியிருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரத்துறை அறிவித்துள்ள நாள் 2025 ஆகஸ்ட் 5. பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்ற இலக்கை முதலமைச்சர் நான்கே ஆண்டுகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆகையால்தான் இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராகத் திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-trb-raja-praise-cm-mk-stalin-for-tamil-nadu-achieves-double-digit-economy-within-four-years-9634188


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-thuththukudi-investors-conclave-function-mous-worth-32554-crore-9626746

தூத்துக்குடி, நெல்லைக்கு ஸ்டாலின் அறிவித்த 4 திட்டங்கள்: முதலீட்டாளர் மாநாட்டில் ரூ32,500 கோடிக்கு ஒப்பந்தம்


MK Stalin Scheme

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டங்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் இன்வெஸ்டர்ஸ் கான்ஃளோவ் ('TN Rising Investors Conclave')  நிகழ்வு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் கனவுத் திட்டங்களின் வெளிப்பாடாக அமைந்தது. இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ரூ1,230 கோடி மதிப்பீட்டிலான 4 முக்கிய திட்டங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் மூலம் சுமார் 3,100 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என நம்பப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 41 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இவற்றின் மொத்த முதலீடு ரூ32,554 கோடி ஆகும். இந்தத் திட்டங்களின் மூலம் சுமார் 49,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 41 திட்டங்களில், 19 திட்டங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையைச் சேர்ந்தவை. இவற்றின் முதலீடு ரூ265.15 கோடி ஆகும்.

இந்த நிகழச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தென் தமிழகம் குறித்து கலைஞர் கருணாநிதி கண்ட கனவு இப்போது நிஜமாகி வருகிறது" என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டார். வின்ஃபாஸ்ட் (VinFast) வாகன உற்பத்தி ஆலையின் தொடக்க விழாவில் பேசியதை நினைவுகூர்ந்த அவர், இன்றைய தினம் தென் மாவட்டங்களின் வளர்ச்சியில் ஒரு பொன்னான நாள். துறைமுகம், வளமான இயற்கை வளங்கள் மற்றும் திறமையான பணியாளர்களுடன் கூடிய தூத்துக்குடியை ஒரு தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தென் மாவட்டங்களில் தொழில் பூங்காக்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த புதிய திட்டங்களில், தூத்துக்குடியில் 256 ஏக்கர் பரப்பளவில் ஒரு விண்வெளி பூங்கா (Space Park), தூத்துக்குடியில் பிரத்தியேக கப்பல் கட்டும் தொழில் துறை (Dedicated Ship Building Industry). முருங்கை ஏற்றுமதியை மேம்படுத்த தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் ரூ5.59 கோடி மதிப்பீட்டில் பொது வசதி மையம் (Common Facility Centre). மேலும், தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மதுரையில் டைடல் பூங்கா (Tidel Park), விருதுநகரில் பி.எம். மித்ரா பூங்கா போன்ற திட்டங்கள் தென் மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்,

அனைத்து துறைகள், அனைத்து மாவட்டங்கள் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றமே தற்போதைய அரசின் முக்கிய நோக்கம். இதன் அடிப்படையில், உயர் தொழில்நுட்ப செமிகண்டக்டர் உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி, சூரிய மின்கலங்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். 

 

சிகிச்சை முடிந்து ஸ்டாலின் டிஸ்சார்ஜ்; 3 நாட்களில் பணிக்கு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை அறிக்கை 27 7 2025

CM Stalin oty

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்த நிலையில், இன்று மாலை வீடு திரும்பியுள்ளார். முதல்வர் பூரண நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும், முதல்வர் தனது கட்சி மற்றும் அரசு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

apollo

மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு, முதலமைச்சருக்கு தேவையான அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, சிறப்பான சிகிச்சை அளித்தது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, முதலமைச்சர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஓய்வுக்குப் பிறகு, அவர் தனது வழக்கமான பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குநர், மருத்துவ சேவைகள், டாக்டர் அனில் பி.ஜி. வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சைக்குப் பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் முழுமையாக குணமடைந்துள்ளார். அவர் இன்று மாலை வீடு திரும்புகிறார். முதலமைச்சர் நலமாக இருக்கிறார். 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-discharge-apollo-hospital-press-release-9542525

மருத்துவமனையில் ' - மு.க.ஸ்டாலின்  26 7 2025 

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-oversees-dmk-election-work-from-apollo-hospital-9540203

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே தேர்தல் பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போலோ மருத்துவமனையில் தி.மு.க. மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை அழைத்து ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் உறுப்பினர் சேர்க்கையில் பின் தங்கியுள்ள ஓரிரு மாவட்டங்கள், தொகுதிகளைக் குறிப்பிட்டு அவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் கவனித்துச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார். மேலும் சில பாகங்களில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களில் சில குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் முதலில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவில், கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை! உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!' என நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்.

மீண்டும் உயரும் மின்கட்டணம்? ஒரு யூனிட்டிற்கு எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

29 6 2025

How smart is the Centre smart meter plan and why Kerala move to opt out underscores some of the scheme inadequacies Tamil News

தமிழகத்தில் வரும் ஜூலை 1-ந் தேதி முதல், மின் கட்டணத்தை 3.16 சதவீதம் உயர்த்துவதற்காக மின்வாரியும் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான கட்டண விகிதங்கள் குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாராக வைத்துள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பாடு, தொழிற்சாலைகள், மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வரும் நிலையில், இதற்கான கட்டண நிர்ணையம் செய்யும் உரிமையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வைத்துள்ளது, மின்கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த ஆணையம் தான் வெளியிட்டு வருகிறது. இந்த ஆணையம் தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்துவதாக கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தது.

அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 10 முதல் 52 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருந்த நிலையில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது அதன்படி 6 சதவீதத்திற்கு மேல் மின்கட்டணத்தை உயர்த்த கூடாது என்றும் கூறியிருந்தது.

அதன்படி 2023-ம் ஆண்டு, 2.18 சதவீதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணம், 2024-ம் ஆண்டு 4.18 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் கட்டண உயர்வை எதிர்கொள்ளும் மக்கள் இதனால் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆனாலும் 2025-ம் ஆண்டுக்கான கட்டண உயர்வை அறிவிக்க மின்சார வாரியம் தயாராகி வருகிறது. அதன்படி மின் கட்டண உயர்வு விகிதங்களை தயாரித்து வைத்துள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இந்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நுகர்வோர் குறியீட்டு எண் 3.16 ஆக உள்ளதாக மே மாதம் மத்திய அரசு அறிவித்த நிலையில், அதை வைத்து 3.16 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி பார்த்தால், வீட்டு பயன்பாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 15-37 காசுகள் வரை மின் கட்டணம் உயரும் என்றும், கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 4.83 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 3.16 சதவீதம் என சற்று குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது, தமிழகத்தில்தொடர்ந்து 4-வது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-power-tariff-high-3-17-percent-up-to-july-month-2025-9446448

மதராஸி கேம்ப் இடிப்பு: பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு

Madarasi Camp

டெல்லி மதராஸி கேம்ப் பாதிப்பு - ரூ. 50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஸ்டாலின்

டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

டெல்லியில் பாதிக்கப்பட்ட 370 தமிழர்களின் குடும்பங்களின் ஊழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு நிகழ்வாக வீடுகளை இழந்தவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக தலா 8 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள் அடங்கிய 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிடவும் ஏதுவாக, இன்று (16-6-2025) முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜங்புரா பகுதியில், மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஈடுக்குமாறு வலியுறுத்தி டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். 

17 6 2025 

அக்கடிதத்தினை கடந்த 10-6-2025 அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவர்களை நேரில் சந்தித்து வழங்கியதோடு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-announces-relief-for-tamil-families-evicted-madrasi-camp-in-delhi-9369565

துணைவேந்தர் நியமனத்திற்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு


தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த வக்கீல் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமண்றம் பிரதான மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைத்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், "தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதிகள் அமர்வு மே 21-ம் தேதி மனுவை விசாரித்து அன்றே அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

உரிய விசாரணை நடத்தப்படாமலே, திருத்தச்சட்டங்கள் அரசமைப்புக்கு எதிரானது என அனுமானித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை இல்லாமல் இயங்கிவந்த பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் மே 21-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த திருத்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்திருந்தார். எந்தக் காரணமும் தெரிவிக்காமல் மசோதாவை நீண்டகாலம் நிறுத்திவைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

4 6 2025 


source https://tamil.indianexpress.com/tamilnadu/block-on-appointment-of-vice-chancellor-tamilnadu-government-appeals-in-supreme-court-9333144

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றங்கள் அறிவிப்பு 1 6 2024


MK Stalin invites all party MPs and MLAs to starts Morning meal scheme in primary schools, MK Stalin invites all party MPs and MLAs, காலை உணவுத் திட்டம், அனைத்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் அழைப்பு, தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், MK Stalin free Morning meal scheme in primary schools, free breakfast scheme

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் வருகின்ற 2025 ஜூன் 2 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.2025 ஏப்ரல் 25ம் தேதி தொடங்கிய விடுமுறை, நாளையுடன் (2025 ஜூன் 1ம் தேதி) முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் காலை உணவு திட்ட மெனுவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பான 2025 ஜூன் 2ம் தேதி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும். அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தம், வாரத்தில் இரு தினங்கள் அதாவது திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் பொங்கல் வழங்கவும், வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா வழங்கப்படவும் உள்ளது.  

இதுகுறித்து சமூக நல ஆணையர் லில்லி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் கீழ் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது வார நாட்களில் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இந்த முதலமைச்சர் காலை உணவு திட்ட மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளி சமையல் கூடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமையல் கூடங்களில் அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக திங்கள் கிழமைகளில் பொங்கல் வழங்கப்பட இருக்கிறது.

வாரத்தில் இரு தினங்கள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் பொங்கள் வழங்கப்பட வேண்டும். எனவே, பள்ளிகள் திறப்பான 2025 ஜூன் 2ம் தேதி திங்கட்கிழமை பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட வேண்டும். பள்ளி சமையல் கூடங்களில் திங்கட்கிழமைகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கோதுமை ரவை உப்புமா இனிமேல் வியாழக்கிழமை நாட்களில் வழங்கப்படும். பள்ளி சமையல் ஒப்பந்ததார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமையல் கூட ஒப்பந்ததார்கள் இதனை செயல்படுத்துவதை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

மாற்றியமைக்கப்பட்ட உணவு பட்டியல்:

திங்கள் கிழமை:

ராகி உப்புமா – முருங்கைக்காய் சாம்பார்
கம்பு சேமியா உப்புமா – சிறுதானிய காய்கறி சாம்பார்
பொங்கல் – காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா – பசலைக் கீரை சாம்பார்

செவ்வாய் கிழமை:

ராகி காய்கறி கிச்சடி
கம்பு சேமியா காய்கறி கிச்சட
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவா காய்கறி கிச்சடி

புதன் கிழமை:

பொங்கல் – முருங்கை சாம்பார்
குதிரைவாலி வெண்பொங்கல் – காய்கறி சாம்பார்

வியாழக் கிழமை:

கம்பு சேமியா உப்புமா – காய்கறி சாம்பார்
பொங்கல் – சுரைக்காய் சாம்பார்
ராகி உப்புமா – கீரை சாம்பார்
கோதுமை ரவா உப்புமா – புடலங்காய் சாம்பார்

வெள்ளிக்கிழமை:

ராகி காய்கறி கிச்சடி
கம்பு சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவா காய்கறி கிச்சடி
கூடுதலாக ராகி கேசரி, கம்பு சேமியா கேசரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/there-has-been-change-in-the-food-list-in-the-breakfast-scheme-9324849

இந்தியாவில் பாஜக செய்யும் அத்தனை அராஜக செயல்களையும் உறுதியுடன் எதிர்த்து போராடி வீழ்த்தும் ஒப்பற்ற தலைவராக மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விளங்குகிறார்!

20 05 2025 Credit Sun News / FB Page /DMK IT Wing

      

ரூ.2,291 கோடி கல்வி நிதி.. மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு 21 5 2025


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-moves-sc-against-centre-over-rs-2291-cr-samagra-shiksha-funds-withheld-for-rejecting-nep-9089214
supreme court

மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக் ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வி நிதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால், தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்நிதியை ஒதுக்கமுடியாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், மத்திய அமைச்சரின் அறிவிப்பை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதி ரூ.2 ஆயிரத்து 291 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

அரசியலமைப்பின் 131 வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பி.எம்ஸ்ரீ, சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி இல்லாததால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும் சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ.2 ஆயிரத்து 291 கோடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டம்: ரூ. 25 கோடி செலவில் இலவச முழு உடல் பரிசோதனை 11 5 25 

Ma Subramanian

மாநகர மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் சென்னையில் ரூ. 25 கோடி மதிப்பிலான இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த முன்னெடுப்பு, சைதாப்பேட்டையில் நடைபெற்ற முன்னோடி மருத்துவ முகாம் ஆய்வின்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இது, மாநில அரசின் விரிவுபடுத்தப்பட்ட "கலைஞர் வருமுன் காப்போம்" திட்டத்தின் முக்கிய அங்கமாகும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் தொலைநோக்கு பார்வையால் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட "வருமுன் காப்போம்" திட்டம், தற்போதைய அரசால் செப்டம்பர் 2021-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 5,654 முகாம்கள் மூலம் 52.87 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர். 2025-26-ம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட திட்டம், சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, மாநிலம் முழுவதும் 1,256 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில், சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் முகாம்கள் அமைக்கப்படும்.

"அனைவருக்கும் சமமான மருத்துவ சேவையை உறுதி செய்வதே இந்த அரசின் முக்கிய குறிக்கோள். மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம், பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் காப்பீட்டு வசதிகளை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு குடிமகனின் நல்வாழ்வையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

முன்னோடி முகாம் ஆய்வில், சுகாதாரத்துறை செயலாளர் பி. செந்தில்குமார், தேசிய சுகாதார இயக்க இயக்குனர் அருண் தாம்பூராஜ் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த இலவச மருத்துவ முகாம்களில், 17 சிறப்பு மருத்துவ சேவைகளும், 30 நோயறிதல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதய பராமரிப்பு, மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை, புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குதல், காப்பீட்டு அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் போன்ற சேவைகளும் வழங்கப்படும். சென்னை மாநகர மக்களுக்கு சிறப்பு வசதியாக, புதிதாக உதவி மையங்களும் அமைக்கப்படும். பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் ரூ. 1,000 முதல் ரூ. 12,000 வரை செலவாகும் முழு உடல் பரிசோதனைகள், இந்த முகாம்களில் அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த முகாம்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும். பொது சுகாதாரம், உயர்கல்வி, சமூக நலன் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும். ஒவ்வொரு முகாமிற்கும் சுகாதாரத் துறையிலிருந்து ரூ. 75,000-ம், மருந்துகளுக்கு ரூ. 33,121-ம் வழங்கப்படும். தேசிய சுகாதார இயக்க நிதியுதவியும் வழங்கப்படும்.

தனியார் மருத்துவமனைகள் (1,231 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்) மற்றும் மருத்துவர்கள், அரசு குழுக்களுடன் இணைந்து தடையற்ற மருத்துவ சேவையை உறுதி செய்வார்கள்.

இந்த முகாம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். 388 வட்டாரங்கள் (ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள்) மற்றும் 25 மாநகராட்சிகள் (பெரிய நகரங்களில் 4 முகாம்கள், சிறிய நகரங்களில் 3 முகாம்கள்) இதில் அடங்கும்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/varumun-kaappom-scheme-free-full-body-checkup-9056557

ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 29 4 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது பேசியதாவது,

“ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கருணாநிதி கூறுவார். ஆனால் கருணாநிதி இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும்.
கருணாநிதியின் எண்ணங்களை தான் நான் நிறைவேற்றி வருகிறேன்.

இந்தியாவில் நம்பர் 1 மாநிமாக, தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வருமைன்கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.

கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது. உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம்.

இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். நிதி ஆயோக் வெளியிட்ட வளர்ச்சி இலக்க குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. தற்போது கடந்த ஆட்சியின் இருளை போக்கி தமிழ்நாடு அரசு தலைநிமிர்ந்து நடக்கிறது.

ஒரு பக்கம் மத்திய அரசு மறு பக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம். இவையெல்லாம் தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை”. இவ்வாறு அவர் பேசினார்.


source https://news7tamil.live/the-central-government-on-one-side-the-governor-on-the-other-dmks-achievement-surpasses-all-chief-minister-m-k-stalins-speech.html

காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!


29 4 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை தொடர்பான 102 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில்,

“சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம், பெரம்பூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிய புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

கோவை, சிவகங்கை, நெல்லை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களில் புதிய காவல்நிலையங்கள் தொடங்கப்படும்.

விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் தொடங்கப்படும்.

கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.

தடய அறிவியல் துறையை நவீனப்படுத்த 50 நடமாடும் தடயவியல் வாகனங்கள் வழங்கப்படும்.

சார்பு ஆய்வாளர் தலைமையிலான 250 காவல்நிலையங்கள் ஆய்வாளர் தலைமையிலான காவல்நிலையங்களாக மாற்றப்படும்.

ஊட்டியில் 90 ஆயுதப்படை காவல் குடியிருப்புகள், தர்மபுரியில் 134 குடியிருப்புகள் கட்டப்படும்.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு கட்டப்படும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகரங்களில் காவல்துறை பயன்பாட்டிற்கு ரூ.12 கோடியில் 80 ரோந்து வாகனங்கள் வழங்கப்படும்.

ரூ.16 கோடியில் 7 இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.

தீ விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் தீயணைப்பு வாகனம் வாங்கப்படும்.

350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும்.

ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்,

சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


source https://news7tamil.live/102-new-announcements-to-the-police-chief-minister-m-k-stalin-issued.html

தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்" - ஸ்டாலின்

29 4 2025 
ஸ்டாலின்

"காலனி என்ற சொல் வசைச்சொல்லாக மாறியிருப்பதால் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும்" என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானிய கோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். 

அதன்படி தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் தமிழ்நாடு ஆவணங்களில் இருந்தும் பொது புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.








source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-stalin-announcement-9013149

வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை – அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு

25 4 2025  

PTR Assembly

கேபிள் டிவி சேவையை போல வீடுகளுக்கு 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மாதந்தோறும் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று (ஏப்ரல் 25) தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார்.

அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர், தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் மூலமாக (TANFINET) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீதம் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநிலத்தில் உள்ள 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடையும். இதன்மூலமாக வீடுகளுக்கு கேபிள் டிவி சேவைபோல, மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 Mbps வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் வகையில் கூடுதலாக 50 புதிய ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும்.  இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதற்படியாக இதுவரை ஏற்கனவே 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதிகொடுக்கப்பட்டுள்ளது. 4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்ற விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இ-சேவை மையம் மூலம் 1.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ptr-palanivel-thiagarajan-announces-internet-services-100-mbps-to-family-at-tamilnadu-assembly-9002546

 

சட்டசபை ஹைலைட்ஸ் 23 4 2025 

MK Stalin Assembly

சட்டப்பேரவை ஹைலைட்ஸ்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் மற்றும் மதுரையில் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கப்படும் மற்றும் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ் வார விழா அறிவித்தது உள்பட தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (22.04.2025) நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து தருகிறோம்.

சட்டப்பேரவை தொடங்கியதும், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸ் இறுதி நிகழ்சியில் தமிழ்நாடு சார்பில், அமைச்சர்கள் நாசர் மற்றும் இனிகோ இருதயராஜ் கலந்துகொள்வார்கள் அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பேச முயன்றபோது, சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர்களின் மானியக் கோரிக்கை கேள்வி பதில்கள் பேசி முடிக்கட்டும், அவை விதிமுறைகளின்படி நினைத்த நேரத்தில் பேச அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதனால், அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

“பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் மொழிக்கு பாவேந்தர்; திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர்; தமிழினத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் போற்றும் வகையிலான அறிவிப்பு ஒன்றை தங்களுடைய அனுமதியோடு இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற வகையில் மிகுந்த பெருமையடைகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன்.

‘தமிழுக்கும் அமுதென்று பேர்;

அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’

என்ற அழகுத் தமிழின் பெருமையைப் பேசும் வரிகளையும்,

“புதியதோர் உலகம் செய்வோம்


கெட்டப் போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்”

என்ற எழுச்சி மிகுந்த வரிகளையும்,

‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்!’

என்னும் போர்ப்பாடலையும்,

“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு”


என்ற வெற்றிப் பாடலையும்,

“தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;

தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்”

என்று எழுச்சி முரசு கொட்டியும்

வாழ்க வாழ்கவே - வாழ்க வாழ்கவே,

வளமார் எமது திராவிட நாடு

என்று திராவிடப் பண் பாடியும், காலத்தினை வென்ற பாடல்களை நமக்குத் தந்தவர் பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

தமிழை வளர்த்தல் ஒன்று; சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர் அவர்கள். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர்.

1929 ஆம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990 ஆம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நாட்டுடைமையாக்கினார்கள். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமைவாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார்.

இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர் அவர்கள். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும்.


பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு; அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும்; எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம்.

இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை இந்தப் பேரவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

1. கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்:

"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்" என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.

2. பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது:

தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர் / கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.

3. தமிழ் இலக்கியம் போற்றுவோம்:

புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.


4. பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்:

மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

5. தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்:

தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.

பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். பாவேந்தரின் கவிதைகளை நாளும் படிப்போம்; நானிலம் முழுவதும் அவரின் சிந்தனைகளைப் பரப்புவோம்; தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.


“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்” என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.

“கடல் போலச் செந்தமிழைப் பரப்ப வேண்டும்” என்றார் பாவேந்தர். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும்.

“வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு” என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும்.

“தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.

பாவேந்தரை கொண்டாடும் விழாவில் அனைவரும் திரளாகப் பங்கேற்று, தமிழின் புகழை உயர்த்துவோம்! உயர்த்துவோம்! என்று கூறி தமிழ் வாழ்க! தமிழினம் ஓங்குக! என்று முழங்கி அமர்கிறேன்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

மதுரையில் வக்ஃப் தீரப்பாய கிளை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசும்போது, “வக்பு தீர்ப்பாயம் சென்னையில் மட்டும் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தொடங்கி இருப்பது போன்று, அந்தந்த பகுதி மக்களின் நலன் கருதி திருச்சி, மதுரை,கோவை போன்ற இடங்களிலும் வக்பு தீர்ப்பாய கிளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.


இதற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பதில் அளித்து பேசும்போது, “சென்னையில் இருப்பது போல் மதுரையில் வக்பு தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 13 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலித்து, திருச்சி மற்றும் கோவையில் வக்பு தீர்ப்பாய கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-highlights-obituary-to-pope-francis-waqf-tribunal-branch-tamil-week-bharathithasan-birth-anniversary-8991615

அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டாம்: அமைச்சர்களுக்கு ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்


ஸ்டாலின்

சில அமைச்சர்களுக்கு  பேச கடிவாளம் போட வேண்டும் என்ற நிர்பந்தம் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 17 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்று தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் கே.பொன்முடி ஆகியோர் கடந்த வாரம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டியிருந்ததால் மாநில அரசு தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அவர்களின் அவமரியாதையான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த மன்னிப்பு கோரப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தின் நடவடிக்கைகளை அறிந்த வட்டாரங்கள், முதல்வர் வழக்கத்திற்கு மாறாக கடுமையானவராகத் தோன்றியதாக விவரித்தனர். கூட்டத்தில் பொன்முடியும் கலந்து கொண்டார். "அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முதல்வர் கூறினார்" என்று சிலர் தெரிவித்தனர். 

சட்டமன்றத் தேர்தல்கள் வேகமாக நெருங்கி வருவதால் அமைச்சர்கள் தங்கள் பணிகளில் நேர்மையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பொன்முடி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் அல்லது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுடன் ஸ்டாலின் உத்தரவு ஒத்துப்போனது.

கடந்த வாரம் திமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் பொன்முடி நீக்கப்பட்டார், அதே நாளில் எம்.பி கனிமொழி சமூக ஊடகங்களில் அமைச்சரின் "கொச்சையான பேச்சுக்கு" பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற அநாகரீகமான செயல்கள் திமுகவின் வரலாற்றின் ஒரு பகுதி என்று அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியதால், பொன்முடிக்கு எதிராக மகளிர் அணி ஏப்ரல் 16 ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

முதல்வர் இவ்வளவு ஏமாற்றத்துடன் நாங்கள் பார்த்ததே இல்லை. மூத்த அமைச்சர்கள் கூட அவரை கைவிட்டதால் அவர் வருத்தப்பட்டார்" என்று மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிமுக சட்டப்பேரவையில் அதிமுக துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரை அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்ததை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 18 4 2025



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chief-minister-stalin-request-to-his-ministers-8974378

  

தி.மு.க-வின் கூட்டாட்சி கொள்கை: மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்த 3 குழுக்கள்; பரிந்துரைத்தது என்ன?

DMK’s

மாநில சுயாட்சி: மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்த 3 குழுக்கள் - பரிந்துரைத்தது என்ன?

"இந்தியா, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று அரசியலமைப்பின் பிரிவு 1 கூறுகிறது. இருப்பினும், அரசியலமைப்பு அரசியலை அரை-கூட்டாட்சியாக மாற்றுகிறது. சட்டமன்ற அதிகாரங்கள் யூனியன் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் ஒருங்கமை பட்டியல் எனப் பிரிக்கப்பட்டுள்ளன, நிர்வாக அதிகாரங்கள் சட்டமன்ற அதிகாரங்களுடன் இணைந்தே உள்ளன. நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

3 பட்டியல்களில் எதிலும் சேராத எந்தவொரு விஷயத்திலும் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் உள்ளன. மேலும் பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் மாநில சட்டத்துடன் மோதல் ஏற்படும்போது மத்திய சட்டம் மேலோங்கும். நாடாளுமன்றம் எந்த மாநில எல்லைகளையும் மாற்ற முடியும். மேலும், ஆளுநர் பதவி மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மத்திய அரசு அதிகாரத்தையும் மேம்படுத்துகிறது.


நாட்டில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசுக்கு ஆதரவாக அரசியலமைப்பில் உள்ள குறைபாடு கூட்டாட்சி கவலைகளை முன்னிலை படுத்தி உள்ளன. பல தசாப்தங்களாக மத்திய அரசை ஒருசார்புடையவை என மாநில அரசுகள் குற்றம் சாட்டின. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை நீக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரிவு 356-ஐ பயன்படுத்தியபோது, பிரச்னைகள் உருவாகின. மத்திய மற்றும் மாநில அரசு வேற வேற கட்சிகளால் நடத்தப்பட்டபோது, ​​மாநில கட்சிகளின் எழுச்சியுடன் பிரச்னைகள் மேலும் தீவிரமடைந்தன.


17 4 2025

மத்திய அரசின் அதிகாரங்களுக்கும், மாநில அரசுகளின் சுயாட்சிக்கும் இடையேயான இந்தப் பதற்றம், ஆணையங்கள் வழங்கிய பரிந்துரைகளால் தீர்க்கப்பட்டுள்ளது.

ராஜமன்னார் குழு:

1969-ல், அப்போதைய தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் விசாரணைக் குழுவை அமைத்தார். 3 பேர் கொண்ட குழு அரசியலமைப்பை ஆய்வு செய்து, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காமல் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை பிரிவுகளில் மாநிலத்தின் அதிகபட்ச சுயாட்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தது. அதன் முடிவுகள் தெளிவாகவும் கடுமையானதாகவும் இருந்தன. 

"மத்திய அரசின் வலுவான ஆதிக்கம் அதிகரிக்கிறது, மாநிலங்களின் மீது கட்டுப்பாட்டை செலுத்தும் மத்திய அரசின் போக்கு, மாநிலங்களின் சுயாட்சியை கடுமையாக பாதிக்கிறது" என்று தெரிவித்த குழு, அந்நேரத்தில் மத்திய-மாநிலங்கள் 2-ம் ஒரே கட்சியால் நடத்தப்படுவதால் மாநில குறிப்பிட்ட விஷயங்கள் எவ்வாறு மத்திய கட்டுப்பாட்டின் கீழ் அதிகரித்தன என்று கூறியது.

ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசை அனுமதிக்கும் 356-வது பிரிவை ரத்து செய்யவும், வேறுபாடுகளைத் தீர்க்க 263 வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான வலுவான கவுன்சிலை அமைக்கவும் குழு பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரைகள் எதையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசியலமைப்பிற்கு வெளியே தோன்றிய நிறுவனங்களை குழு விமர்சித்தது. அவற்றில் முக்கியமானது மத்திய அரசின் நிர்வாக உத்தரவால் உருவாக்கப்பட்ட திட்டக் கமிஷன். மத்திய அரசின் கையில் சாட்டை இருக்கிறது. ஏனெனில், மத்திய அரசு தனது விருப்பப்படி மானியங்கள் வழங்குகின்றன. திட்ட ஒதுக்கீடு முற்றிலும் திட்டக்குழு உறுப்பினர்களால் முடிவெடுக்கப்படுகிறது என்று குழு கூறியது.

இதனால், அரசியல் சாசன அங்கீகாரம் பெற்றுள்ள நிதிக்குழு தேவையற்றதாக உள்ளது. இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், மாநில அரசுகளை அவற்றின் சொந்த அதிகார வரம்புகளிலேயே உதவிக்கு விண்ணப்பிக்கும் நாடுகளாக மாற்றிவிட்டது. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற அகில இந்திய சேவைகளுக்கான ஆட்சேர்ப்பு மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போதுள்ள அரசிதழ் சேவைகளின் உறுப்பினர்களை மாற்றுவதன் மூலம் (அ) நேரடி ஆட்சேர்ப்பு மூலம் இருக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

ஆளுநரைப் பொறுத்தவரை, ஆளுநர்களுக்கு "அறிவுறுத்தல் ஆவணங்களை" குடியரசுத் தலைவர் வழங்குவதற்கு அதிகாரமளிக்கும் வகையில் அரசியலமைப்பில் ஒரு புதிய விதி சேர்க்கப்பட வேண்டும் என்று அது கூறியது. ஆளுநர் மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டிய விஷயங்கள், மத்திய அரசு அவருக்கு எங்கு உத்தரவுகள் பிறப்பிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை இவை வகுக்கும்.

சர்க்காரியா கமிஷன்:

சர்க்காரியா கமிஷன் 1983-ல் மத்திய-மாநில உறவுகளின் பரிணாமத்தை மறு ஆய்வு செய்யவும், தொடர் பிரச்னைகளை அடையாளம் காணவும், தீர்வுகளைத் தேடவும் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1960களில் இருந்து மாநில கட்சிகளின் எழுச்சியை அடுத்து இத்தகைய ஆணையத்தின் தேவை உணரப்பட்டது. அவை காங்கிரஸ் ஆளும் மத்திய அரசுடன் அடிக்கடி மோதின. பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த கட்சி என்ற தகுதியை காங்கிரஸ் இழந்து விட்டது.

சர்க்காரியா கமிஷன் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையை பரிந்துரைத்தது. பிரிவு-356 இன் தன்னிச்சையான பயன்பாட்டை விமர்சித்தது. அதிகாரப்பரவலை ஆதரித்தது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அரசியலற்ற நபர்களை ஆளுநர்களாக நியமிக்க பரிந்துரைத்தது. மேலும், கூட்டாட்சி பதட்டங்களைத் தீர்க்க மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலை செயல்படுத்த அழைப்பு விடுத்தது.

புஞ்சி கமிஷன்:

2007-ல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய-மாநில உறவுகளின் புதிய பிரச்னைகளை ஆராய புஞ்சி ஆணையத்தை அமைத்தது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது.

இது கூட்டாட்சி பிரச்னைகளை ஆராய்ந்தது. மாநிலத்தில் சாதி (அ) வகுப்புவாத வன்முறை வழக்குகளில் மத்திய சக்திகளின் பங்கு. அரசியல் ரீதியாக, பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அங்கு "சாத்தியமான" வன்முறைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பதிலும் இதுதான். வகுப்புவாத வன்முறைச் சூழலில், முன் அனுமதியின்றி மாநிலங்களில் மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது. நிதி அமைச்சகத்தின் நிதி ஆணைக்குழு பிரிவை தரமுயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளது.

ஆளுநர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் தனிநபர்களாக இருக்க வேண்டும் என்றும், அரசியலில் ஆழமான ஈடுபாடு இருக்கக்கூடாது என்றும் புஞ்சி குழு பரிந்துரைத்தது. ஒரு ஆளுநரின் நிலையான பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் என்றும், நீக்குவது மத்திய அரசின் விருப்பப்படி இல்லாமல் நீக்குவதற்கான செயல்முறை என்றும் அது கோரியது.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதா (அ) குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கி வைப்பதா என்று ஆளுநர் முடிவு செய்ய அதிகபட்சம் 6 மாத காலத்தை பரிந்துரைத்தது. குடியரசுத் தலைவர் தனது பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட மசோதா மீதான முடிவை 6 மாதங்களுக்குள் மாநிலத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலின் அதிகாரத்தை மேம்படுத்த பிரிவு 263-ஐ திருத்தப்பட வேண்டும் என்று புஞ்சி கமிஷன் பரிந்துரைத்தது.

சமீபத்திய நிகழ்வுகளில் இந்த கவலைகளில் சில மீண்டும் எழுந்துள்ளன. குறிப்பாக இந்த மாதம் உச்சநீதிமன்றம் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதில் நீண்டகால தாமதம் சட்டத்தில் தவறானது என்று தீர்ப்பளித்தது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-high-level-committee-stalin-centre-state-relations-8970574

மாநில சுயாட்சி: சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும் ஸ்டாலின்

ஸ்டாலின்

சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 15/ 2025) வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 25 அன்று இரு மொழிக் கொள்கை குறித்த சிறப்பு குறிப்புக்கு பதிலளித்த அவர், இந்த விஷயத்தில் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியைப் பாதுகாக்கவும், தமிழர்களை உயர்த்தவும் முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என்று கூறியிருந்தார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 1969 ஆம் ஆண்டில் மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.

ராஜமன்னார் கமிட்டி தனது பரிந்துரைகளை சமர்ப்பித்ததில் இருந்து நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. மாறிவிட்ட சூழ்நிலைகள், குறிப்பாக நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார காலநிலை, அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள், முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணய நடவடிக்கை, மாநிலங்களின் நிதி சுதந்திரம், தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி மற்றும் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய-மாநில உறவுகள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

பாடங்களை மறுபரிசீலனை செய்ய புதிய குழு நியமிக்கப்படலாம்" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சில தென் மாநிலங்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களை ஒன்றிணைத்து எல்லை நிர்ணய நடவடிக்கையை எதிர்த்துப் போராடியுள்ளார் ஸ்டாலின். இதற்கான முதல் கூட்டம் சென்னையில் நடந்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பெற்ற வெற்றியால் திமுக அரசும் உற்சாகமடைந்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த ஆளுநர் ரவியின் நடத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-may-make-announcement-on-state-autonomy-in-assembly-8962710

நீட் தேர்வு விலக்க முடியாத தேர்வு அல்ல” – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

09/04/2025

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர திரௌபதி மூர்மு நிராகரித்ததை தொடர்ந்து, இன்று(ஏப்ரல்.09) சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வில்சன்(திமுக) ராஜேஷ், பழனிநாடார் (காங்கிரஸ்) சதன் திருமலைகுமார் மற்றும் பூமிநாதன் (மதிமுக), தளி ராமச்சந்திரன் மற்றும் மாரிமுத்து (சிபிஐ), நாகைமாலிக் மற்றும் சின்னதுரை (சிபிஎம்), ஜி.கே.மணி (பாமக), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன்(கொமதேக), வேல்முருகன் (தாவாக) ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிதாவது, “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்த்து வருகிறது. பொதுவாக நுழைத்தேர்வு என்பது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கக்கூடியது. அதனால் அதைத் தவிர்த்து பள்ளி கல்வித் திறனை மட்டும் அடிப்படையாக கொண்டு கல்வி மாணவர் சேர்க்கை அமையும் என்பதில் அசைக்க முடியாத உறுதிகொண்டதாக நமது அரசு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில அளவில் நடந்துகொண்டிருந்த நுழைவுத் தேர்வுகளை 2006ஆம் ஆண்டு அதற்கான தனி சட்டம் இயற்றி அகற்றினார். அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்று, கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுடைய நலன் காக்கும்படி உறுதி செய்தார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடந்து, திறன்மிக்க மருத்துவப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு நம்முடைய மாணவர்களுக்கு கிடைத்தது. அந்த மருத்துவர்கள் மூலமாகத்தான் மருத்துவத்துறையில் நாட்டுக்கே முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்கான திருத்தச்சட்டம், அதன் பின்பு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவமனைச் சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை கொண்டு வந்தது. இது நம்முடைய மாணவர்களை வெகுவாக பாதித்து வருகிறது. மாநில அரசுகளால் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் , எப்படி மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பறித்தது.

நுழைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்கான வசதி வாய்ப்பிருக்கிற மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதுதான் நீட் தேர்வின் மாபெரும் அநீதி. அதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் மன்றத்தில் போராடுகிறோம். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  2021 ஆம் ஆண்டு முதல் மாபெரும் சட்டப் போராட்டத்தை தொடங்கினோம். மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கண்டறிந்து அறிக்கை வழங்க, ஓய்வு பெற்ற நீதி அரசர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்தோம்.

சமுதாயத்தில் பின்தங்கி இருப்பவர்களின் மருத்துவ கனவுக்கு பெரும் இடையூறாகவும் சமூக பொருளாதாரத்தில் வளம் மிகுந்து இருப்பவர்களுக்கு சாதகமாகவும் உள்ளது என்று எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவ படிப்புகளில் இருக்கிற பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது என அந்த குழு தெரிவித்தது. எனவே 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டம் மாதிரியான ஒரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற அந்த குழு பரிந்துரை செய்தது. அந்த விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள  அமைக்கப்பட்ட அரசு சார்பில் நீட் விலக்கு கொண்டுவர பரிந்துரைத்தது.

அதன் தொடர்ச்சியாக  நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை  13.09.2021 அன்று நான் முன்மொழிந்தேன். அதை சட்டமாக்க ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் தனது கடமையை செய்யாமல் அரசியல் செய்தார் என்பதை வேதனையோடு பதிவு செய்கிறேன். அதன் பின்பு நாமும் சலைக்காமல் அந்த நீட் விலக்கு சட்டத்தை கொண்டுவர கடுமையாக போராடினோம்.

இந்தநிலையில் 1.02.2022 அன்று அவர் திருப்பி அனுப்பினார். உடனடியாக 5.02.2022 அன்று இதே மாதிரியான ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். அப்போது மீண்டும் ஆளுநருக்கு அனுப்பினோம். அதன் பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில்  நீட் விலக்கு வேண்டிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,   8.02.2022 அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். பின்பு பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை வலியுறுத்தினேன்.

அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு  நேரடியாக சென்று மனு அளித்தார்கள். அடுத்தகட்டமாக மத்திய அரசை வலியுறுத்தி நீட் ரத்து சட்டம் கொண்டுவருவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை, உயர் கல்வித்துறை என பல்வேறு துறைகளில் இருக்கும் அமைச்சர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கம் அளித்தது. ஆனால் இதை ஏற்காமல் நம் மாணவர்களுக்கு  பெரும் பேரடியாக மத்திய அரசு, நம் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார்கள் என்பதை சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் வேதனையுடன் நான் தெரிவித்தேன்.

மத்திய அரசு நம் கோரிக்கைகளை நிராகரித்திருக்கலாம். ஆனால் நீட் தேர்வுக்கு எதிரான நம் போராட்டம் எந்த வகையிலும் முடிந்துபோகவில்லை என்பதையும் இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்கப்படும். நீட் தேர்வு விலக்க முடியாத தேர்வு அல்ல. பயிற்சி மையங்களின் நன்மைக்காக யாரோ தங்களின் சுயநல நன்மைக்காக மத்திய அரசை தவறாக பயன்படுத்தி நடத்தும் தேர்வு இந்த நீட். அதையும் முறையாக நடத்தவில்லை என்பதை பல்வேறு மாநிலங்களில் சிபிஐ மூலமாக வழக்குகள் நடந்து வருகிறது. நேற்று உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. நம் சட்டபோராட்டத்தை தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்தினால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/neet-is-not-an-exam-that-cannot-be-skipped-chief-minister-m-k-stalins-speech-at-the-all-party-meeting.html
வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்றம் செய்த சம்பவம்! Credit Sun News 8 4 2025 source

கன்னத்தில் ஓங்கி அடித்த . உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Credit Sun News 8 4 2025

ஆளுநர் இதை செய்வதை தவிர வேறு வெளியே இல்லை.. RN ரவிக்கு முற்று புள்ளி வைத்த முதலமைச்சர் Credit Sun News 8 4 2025 source https://www.youtube.com/watch?v=sKMOMtZ5wg0

சட்டவிரோத செயல்.. ஆளுநர் பதவி நீக்கம்? கொந்தளித்த வீரமணி Credit Sun News 8 4 2025

 

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்புஆளுநர் ரவிக்கு கடும் பின்னடைவு Credit Sun News 8 04 2025

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 26 03 2025

Credit YT Times Now Seithi WAQF வாரிய திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இவையெல்லாம் பாதிக்கும்

Credit Sun News 27 3 2025

 



26 3 2025 Credit Neerthirai ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம்

Credit Sun News 27 3 2025

  மறுவரையறை முடிவை ஒத்திவைப்பது முதல் டம் மனு அளிப்பது வரை: கூட்டுக் குழு கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? 22 3 25 

2

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

"இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பே மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்தக் கூட்டம். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்.

மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்க நேரிடும். மாநிலங்களில் தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். தமிழ்நாடு 6 முதல் 10 நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரம் பற்றியது.

தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பு சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக நம்மை மாற்றிவிடும். கூட்டாட்சித் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளதை உணர்ந்து அனைவரும் கூடியுள்ளோம். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை. எந்த சூழ்நிலையிலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது" என்று பேசினார்.

மாநில உரிமைகளை பா.ஜ.க. பறிக்கிறது- ஸ்டாலின்

மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பா.ஜ.க. எப்போதும் இருந்து வருகிறது. மாநில உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொகுத்து வழங்குகிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு:

ஒன்றிய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும். எண்ணிக்கை மட்டுமில்லை இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்; தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை . பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்; மாநிலங்களோடு மத்திய அரசு அத்தமுள்ள உரையாடல்களை தொடங்கவேண்டும் என்று கேட்டுக் கொன்டார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு:

மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை; கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து எதிர்த்து போராடுவோம் டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்; பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள்

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை:

"மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி இது; இதை உணர்ந்து, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது 2026 மக்கள் தொகையின்படி தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், மக்களவை - சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும்; ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜு ஜனதாதாளம் போராடும்" என்றார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு:

கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே கூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் அமைகிறது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் பங்கேற்கவில்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:

“நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும்; மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, நமக்கு தரப்பட்ட பரிசுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு" என்றார். தென் இந்தியாவின் தொகுதிகள் 30 சதவீதம் என்பதிலிருந்து 20 சதவீதம் என குறையும் அபாயம் உள்ளது. 7 மாநிலங்கள் 44 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றார்.

தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை:

மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே நோக்கம் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார். தொகுதி மறுவரையறையை மத்திய அரசு முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று கூட்டத்தில் கனிமொழி தெரிவித்தார்.

அடுத்ததாக ஐதராபாத்தில் கூட்டம் - ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 3 மணி நேரம் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டுமென தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-hosts-opposition-meet-on-delimitation-8878870

TN Agri Budget 2025: நம்மாழ் வார் விருது முதல் ரூ. 1,427 கோடி பயிர் கடன் தள்ளுபடி வரை... விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்புகள் 15 3 25

panneer

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பொது பட்ஜெட் உடன் நேற்று தொடங்கியது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் 4வது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இன்றைய தினம் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையும் செலுத்தினார். தொடர்ந்து, சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

வேளாண் பட்ஜெட் 2025 - முக்கிய அறிவிப்புகள்:

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும் என எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.  2025-26-ல், ரூ. 1,427 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு. முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். 

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்வு. 

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்காக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.

சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.

இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம். தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு. நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். 

1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 15 கோடியில், 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். * டெல்டா அல்லாத பயிர் சாகுபடியை அதிகரிக்க 102 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும். பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். * 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ.5,242 கோடி வழங்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-agriculture-budget-2025-highlights-8855230      

 23/01/2025

leaders 1

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைசர் மு.க. ஸ்டாலின், “மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் பணிந்துள்ளது மத்திய அரசு  - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைசர் மு.க. ஸ்டாலின்,  “மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நான் முதல்வராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க-வும் துணைபோக கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tungsten-mining-project-cancel-cm-mk-stalin-and-all-parties-leaders-welcome-8648562

தமிழக சட்டசபையில் 10 மசோதாக்கள் தாக்கல்; 09 12 2024

CM MK Stalin TN assembly

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (டிச.9) திங்கட்கிழமை தொடங்கியது. நேற்றைய கூட்டத் தொடரில் 10  மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தி.மு.க அரசு பெரும்பான்மையுடன் மசோதாக்களை நிறைவேற்றினாலும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. 

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டம் 2017 மற்றும் தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி விற்பனை (ஒழுங்குமுறை) இரண்டாவது திருத்த மசோதா 2024 ஆகியவற்றுக்கு அ.தி.மு.க ஆட்சேபம் தெரிவித்தது. 

தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2024 தொடர்பாக கட்சி சில கருத்துக்களை பதிவு செய்தது. உயர்கல்வி தொடர்பான நான்கு மசோதாக்கள் உட்பட ஏழு மசோதாக்களும் சபையில் தாக்கல் செய்யப்பட்டன.

பொது வெளியில் கச்சேரிகள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி வசூலிக்க ஏதுவாக  தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டம் 2017-ல் திருத்தம் செய்வதற்கான மசோதாவை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார். 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. 

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொருள்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையில், 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 27ன் பிரிவின் துணைப்பிரிவு (1) க்கு பதவிக்காலத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-10-bills-tabled-aiadmk-objects-to-three-of-them-8415728

விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது; 

 27 11 24


mk stalin jitan ram manjhi

சமூகநீதி அடிப்படையில், கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என திட்டம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் சமூகநீதி அடிப்படையில்,  கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என திட்டம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், சமூக நீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு புதன்கிழமை (27-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் 4-1-2024 நாளன்று இந்தியப் பிரதமருகு தான் எழுதியிருந்த கடிதத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும், இக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு, இத்திட்டத்தில் கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்திடப் பரிந்துரைத்துள்ளதாகவும், அவற்றை பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும்  தலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள்:

1.விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின்கீழ் உதவி பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

2.இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பினை 35-ஆக உயர்த்தலாம். இதனால் தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர, அதனை நன்கறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பலன்களைப் பெற முடியும்.

3.கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பதிலாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 15-3-2024 அன்று வரப்பெற்ற பதிலில், மேற்படி பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எனவே, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது என்றும், இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் என்றும், இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-letter-to-union-minister-jitan-ram-manjhi-tamil-nadu-government-will-not-implement-vishwakarma-scheme-7614179

துணை முதல்வராக உதயநிதி நியமனம்; 3 அமைச்சர்கள் நீக்கம்: ஆளுனர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு 

29 09 2024 

Udhayanidhi 75th

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடைபெற உள்ளதாவும், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் கைவசம் இருந்த படங்களை முடித்த அவர், திடீரென அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார்.

தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் உதயநிதி விரைவில், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வெளியாகி வந்தது. இதற்கு திமுக மூத்த தலைவர்கள் அமைச்சர்கள் என பலரிடமும் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தனர். அதேபோல், முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்வர் கையில் உள்ளது இது குறித்து அதிகாரப்பூர்வ முதல்வர் வெளியிடுவார் என்றும் உதயநிதி கூறியிருந்தார்.

இதனிடையே தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கோரி ஆளுனருக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நாளை மதியம் 3 மணியளவில், ஆளுனர் ஆர்,என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆன உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், தற்போது அமைச்சரவையின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், தி.மு.க தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் கடந்த ஆண்டு, பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அதேபோல் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டள்ளதாக ஆளுனர் மாளிகை அறிவித்துள்ளது. 

source 

https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-udhayanithi-deputy-cm-in-tamilnadu-ministry-7145714https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-udhayanithi-deputy-cm-in-tamilnadu-ministry-7145714

உலகின் 16முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7016கோடி முதலீடு – #TNGovt அறிவிப்பு! 11 09 24

உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ. 7016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டின் சிகாகோவில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பான ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் விளங்குகிறது. தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்த்திட வெளியிடப்பட்டுள்ளது.

கொள்கை சார்ந்த துறை அறிக்கைகளும் இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் உருவாக்கிடும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று (செப். 10) சிகாகோவில் ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். 



source https://news7tamil.live/7016-crore-investment-with-16-worlds-leading-companies-tngovt-announcement.html   


31 08 2024 



சென்னையில் இன்று #Formula4 கார் பந்தயம் தொடக்கம்!

Formula 4 car race starts today in Chennai

சென்னையில் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் இன்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் – 31ம் தேதி) மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.

இந்நிலையில், 3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பார்முலா 4 கார் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது. பந்தயத்தின் பயிற்சி சுற்று, இன்று பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையும், அதன் பிறகு பொழுதுபோக்கு சாகச கார் பந்தயமும் நடைபெறும். இதனை தொடர்ந்து தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். முதன்மை கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நாளை நடைபெறும்.

பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும்.இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 6.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 10.05 மணிக்கு தொடங்கும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இதில், ஒவ்வொரு பந்தயமும் 5 ரவுண்டுகளை கொண்டது. ஐ.ஆர். எல். என்று அழைக்கப்படும் இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.


source https://news7tamil.live/formula-4-car-race-starts-today-in-chennai.html

முத்தமிழ் முருகன் மாநாடு – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin

 24 08 2024

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இன்று காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றப்படுகிறது. காலை 8.55 மணிக்கு 100 அடி கம்பத்தில் மாநாட்டுக் கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். கண்காட்சியை அமைச்சர் ஐ.பெரியசாமி, வேல் கோட்டத்தை திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.

காலை 9.30 மணிக்கு மாநாட்டுதொடக்க நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தருமபுர ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம்சாந்தலிங்க மருதாசல அடிகள்,திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நீதிபதிகள் சுப்ரமணியன், புகழேந்தி, சிவஞானம் ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர் வெளியிடப்படுகிறது.

மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாடகம், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டு வளாகத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம், 500 பேர் சாப்பிடும் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 3-டி திரையரங்கில் பா.விஜய் இயக்கிய முருகனின் பெருமைகள் கூறும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், அறுபடை வீடு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் மட்டும் நடைபெறும் இந்த மாநாடு முடிந்தாலும், ஒருவாரத்துக்குக் கண்காட்சியை பக்தர்கள், பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மாநாடு நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழநி பேருந்து நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து செல்ல 10 பேட்டரி கார்கள், மாநாடு வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோரைஅழைத்துச் செல்ல 10 பேட்டரிகார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாநாட்டு நிகழ்ச்சிகளை 22 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. மாநாட்டையொட்டி 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

source https://news7tamil.live/muthamil-murugan-conference-today-chief-minister-m-k-stalin.html

  

கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டம்; மீண்டும் புத்துயிர் கொடுக்கும் சென்னை மாநகராட்சி 23 08 24 

priya and america

கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு சென்னை மாநகராட்சிமீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது. (Image: x/ @chennaicorp)

கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு சென்னை மாநகராட்சிமீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது.

சென்னையில் ஓடும் கூவம் ஆறு 1940-கள் வரையிலும்கூட தெளிந்த நல்ல நீர் ஓடியது. சென்னையின் வளர்ச்சி ஒரு ஆற்றை கழிவுநீர் கால்வாய் ஆகிவிட்டது. இன்று கூவம் என்றால் ஆறு என்பது மறந்துபோய் கழிவுநீர் கால்வாய்க்கு உதாரணமாகவும் அடையாளமாகவும் மாறிவிட்டது.

அவ்வப்போது, கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கூவம் எப்போது ஒரு நதியாக மீட்டெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அப்படியேதான் இருக்கிறது.

கூவம் நதியை சீரமைத்து மீட்டெடுக்க, 2006-2011 திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அப்போதைய மேயர் சுப்பிரமணியன் முயற்சியில் அமெரிக்க சான் ஆண்டனியோ மாகாணத்துடன் சென்னை மாநகராட்சி நீர்நிலைகள் மீட்டெடுத்தல் தொடர்பாக சகோதர ஒப்பந்தமும் கையெழுத்தானது.

பின்னர், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சான் ஆன்டனியோ மகாணத்துக்குச் சென்ற மேயர் பிரியா சகோதர ஒப்பந்தத்தை புதுப்பித்து, பின்னர் சென்னை மாநகராட்சியுடன் திட்டங்கள் பரிமாறிக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.

இதில், சான் ஆன்டனியோவில் உள்ள நதியை மீட்டெடுத்து சுற்றுலா தளமாக மாற்றியதை போல சென்னை கூவம் நதியை சீரமைக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக, சர்வதேச சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் அறிவியல் விவரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜெனிபர் லிட்டில் ஜான், அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹொட்ஜாஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர்.

மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ரிப்பன் மாளிகையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து கூட்டாக இணைந்து கூவம் நதியை நேரில் பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கனவுத் திட்டமான கூவம் நதி மீட்டெடுத்தல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய நீர்நிலைகளை சீரமைத்து மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “மேயர் ஆர். பிரியா தலைமையில், பெருங்கடல்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (பொ) ஜெனிஃபர் ஆர். லிட்டில் ஜான் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹாட்ஜஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்தினைப் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் திரு.பொதுப்பணித்திலகம், அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க துணை தூதரகத்தின் அலுவலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.” என்று தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/the-chennai-corporation-has-revived-the-project-to-restore-the-coovam-river-6921109

தமிழ் புதல்வன் திட்டம்; மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு 25 7 24 

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரனின் உத்தரவில் கூறியிருப்பதாவது: ”அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தப்படுகிறது.

மத்திய ஆதார் சட்டப்படி சில அறிவுரைகளை பயனாளிகளுக்கு அரசு இதன் மூலம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனை பெற தகுதியுள்ள மாணவன் தனக்கென்று ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அல்லது, ஆதார் எண்ணை பெறுவதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்கள், அந்த எண்ணை பெறுவதற்காக, அதற்கான மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தல் வேண்டும்.

ஆதார் எண் இல்லாத நிலையிலும் இந்த உதவித்தொகையைப் பெற மேலும் சில அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.

அதன்படி, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ள அடையாளச் சீட்டு; ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ளதற்கான மனுவின் நகல்; வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம்; பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை; மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட அட்டை; கிசான் கணக்கு புத்தகம்; ஓட்டுனர் உரிமம்; தாசில்தார் அல்லது 'கெசடட்' அதிகாரி அளித்துள்ள அடையாளச் சான்றிதழ், இவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும். 

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களும் இதில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேன்டும்.

இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை பெற அறிவுறுத்த வேண்டும். 

ஆதார் மையம் இல்லாத பகுதி என்றால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே ஆதார் நம்பரை பெறும் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவ வேண்டும்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-pudhalvan-scheme-rs-1000-scholarship-tamil-nadu-government-6694980

காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” – அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 16 7 24 

”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். 

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவு குறித்தும், இந்த உத்தரவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியத்தில் மேல் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.  இறுதியில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு எடுக்கப்பட்டது.  மேலும் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது.  இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும் எனக் குறிப்பிட்டார்.

காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகனின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திமுக சார்பில் வில்சன் எம்பி, திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி , அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி மற்றும் ஓ.ஏஸ்.மணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து செல்வப்பெருந்தகை மற்றும் ராஜேஸ் குமார்,  விசிக, பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம், மதிமுக, கொமதேக, தவாக, மமக, பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர முடியாது என கூறிய கர்நாடக அரசிற்கு அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவிரி நீரை விடுவிக்க கோரி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் நடைபெறும் இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை நான் தீர்மானங்களாக இப்பொழுது படிக்கின்றேன்:

1. காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.


source https://news7tamil.live/government-will-uphold-tamil-nadus-right-to-cauvery-water-chief-minister-m-k-stals-speech-in-all-party-meeting.html

கள்ளச் சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்ட மசோதா நிறைவேற்றம்


தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று. நேற்று கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு துறை வாரியான மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்றது. 

நேற்று, சட்டப் பேரவையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.  

source https://tamil.indianexpress.com/tamilnadu/illicit-liquor-crimes-imprisonment-for-life-new-bill-4787303

29 06 2024 

75,000 காலி பணியிடங்களை 18 மாதங்களில் நிரப்ப முடிவு: சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு


25 6 2024 \
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக தொடங்கி நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவையில் தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் மொத்தம் 17,595 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) மூலம் 19,260 காலிப்பணியிடங்களும், மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் 3,041 காலிப்பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 6,688 காலிப்பணியிடங்களும் ஜனவரி 2026-க்கு முன் நிரப்பப்படும் என்று அறிவித்தார். 

அத்துடன், சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் பிற முக்கிய துறைகளில் காலியாக உள்ள 30,219 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் அறிவித்தார். 

கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு 5,08,055 வேலை வாய்ப்புகளை தனது தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

source https://tamil.indianexpress.com/education-jobs/tn-cm-mk-stalin-announces-in-assembly-government-to-fill-up-75000-vacancies-in-18-months-tamil-news-4779806

ரூ.1 லட்சம் மானியத்தில் பெண்களுக்கு பிங்க் ஆட்டோ! அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசி! தமிழக அரசு அறிவிப்பு!21 6 24 



source https://news7tamil.live/pink-auto-for-women-with-a-subsidy-of-rs-1-lakh-mobile-for-anganwadi-workers-tamil-nadu-government-announcement.html

சென்னை மாநகரத்தில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சில முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ளார்.

1. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம் செயல்படுத்தப்படும்.

2. சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1,20,000 ஆக உயர்த்தப்படும்.

3. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்.

4.திருவள்ளூர், கோயம்பத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 6 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் ரூ.1 கோடியில் மறுசீரமைக்கப்படும்.

5. அனைத்து மாவட்டங்களிலும் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ள 451 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.9 கோடியில் முட்டை உரிப்பான் இயந்திரங்கள் வழங்கப்படும்.

6. ரூ.29 கோடி செலவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய கைப்பேசிகள் வழங்கப்படும்.

7.கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படும் சிறார்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதை திட்டம் ரூ.40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

8. மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கூடுதல் துயில்கூடங்கள் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.

9. சென்னை, திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தன்னார்வத் தொன்டு நிறுவனங்கள் மூலமாக இரவல் பெறுவோர்களின் மறுவாழ்வுக்கான இல்லங்கள் ரூ.2.80 கோடியில் அமைக்கப்படும்.

10.கோயம்புத்தூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளருக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் ரூ.2 கோடியில் கட்டப்படும்.

வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரும் பணி, நீர்வழிப்பாதை தூர்வாரும் பணியை முடுக்கிவிடுங்கள்!” – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!11 6 24

மழைக்காலம் தொடங்க உள்ளதால், வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது மற்றும் நீர்வழிப் பாதைகளை தூர்வாரும் பணியை முழுவீச்சில் முடுக்கிவிடுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (11.6.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில். மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் குறித்தும், வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் நிலை குறித்தும் வினவினார்.

அதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர், முழுமையான சேதம் மற்றும் பகுதியாக சேதமடைந்த வீடுகள் என்று இருவகைப்படுத்தியுள்ளதாகவும். அதில் 1360 வீடுகள் முழுமையாக சேதமடைந்த வீடுகள் என்று கண்டறியப்பட்டு. ஒவ்வொரு வீட்டிற்கும் 4 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல மிக்ஜாம் புயலால் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக கடன்உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மகளிர் உதவிக்குழுவினருக்கும் அவர்களின் கடனுதவி சுய அளவினை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் தாலுகாவில் மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்பு ஏற்பட்டது என்றும், காஞ்சிபுரம் தாலுக்காவிலும் பயிர் சேதங்கள் ஏற்பட்டது என்று தெரிவித்தார். தகுதியுள்ள அனைவருக்கும் 100 சதவீதம் பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும். அதுதவிர தற்காலிகமாக சரி செய்ய வேண்டியது. நிரந்தரமாக கட்டி கொடுக்க வேண்டியது என்று சேதமடைந்த வீடுகளை வகைப்படுத்தி அந்த வீடுகளை எல்லாம் கட்டும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாகவும், சில வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும். சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், பாதிப்படைந்த வீடுகளை சீர்செய்திட தேர்தலுக்கு முன்பே அனைவருக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, நிறைய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும். மீதமுள்ள வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பாதிப்பு அடைந்த மக்களுக்கு கடன்வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டதாகவும், பாதிப்படைந்த பகுதிகளில் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் எல்லாம் வழங்கிட சிறப்பு முகாம் நடத்தி தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்ததாவது:

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர், கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 11,455 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், அதில், 1245 வீடுகள் இன்னும் தொடங்காத நிலையில் இருக்கிறது என்றும் தெரிவித்தார். கிராம அளவில் ஒரு அலுவலரை நியமித்துள்ளதாகவும். பஞ்சாயத்து செயலாளர். மேல்நிலை தொட்டி இயக்குபவர் (OHT Operator) ஆகியோருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அப்பணிகளை பார்வையிட வேண்டும் என்ற பொறுப்பு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிகளை முழுவதும் கண்காணிக்கிறார்கள். இவர்கள் பணிகுறித்த ஆய்வுக் கூட்டம் 2 மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாரத்திற்கு ஒருமுறை நடைபெறுகிறது என்றும், பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர், நாகப்பட்டினம், மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் சுமார் 6000 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது என்றும். இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 33,000 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கிராம பஞ்சாயத்து அளவில் நேரடியாக சென்று அப்பகுதிகளிலுள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தி அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றை சரிசெய்து, கொடுத்திருக்கிறோம். 5000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது என்றும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணப்பட்டு நிலுவையில் உள்ள வீடுகள் விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் நிறைவாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும் என்றும், இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மழைக்காலம் தொடங்கப் போகிறது, ஏரி. குளம், குட்டை, கண்மாய்களையெல்லாம் தூர்வாரி, குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றும், அந்தப் பணிகளிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


source https://news7tamil.live/speed-up-the-construction-of-houses-for-the-homeless-and-the-construction-of-waterways-chief-minister-m-k-stals-instructions-to-district-collectors.html

 

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 20 3 2024 அறிவித்தார். 

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.  இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக படுவேகமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதிகள் முறையே திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும்,  சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும்,  மதிமுகவிற்கு ஒரு தொகுதியும்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.  மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,  அத்தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளிலும் யார், யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று திமுக தலைமை பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தியது. மாவட்ட செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ள நிலையில்,  திமுக வேட்பாளர் பட்டியலை இன்று   காலை  அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  முன்னதாக திமுகவின் தேர்தல் அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.

திமுகவின் வேட்பாளர் பட்டியல் :

1) வடசென்னை – கலாநிதி வீராசாமி

2 ) தென்சென்னை – தமிழ்ச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை – தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) – செல்வம்

5 ) அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

6) வேலூர் – கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி – அ.மணி

8 ) திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

9 ) சேலம் – டி.எம்.செல்வகணபதி

10 ) கள்ளக்குறிச்சி – மலையரசன்

11 ) நீலகிரி (தனி) – ஆ ராசா

12 ) பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி

13 ) கோவை – கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் – ச.முரசொலி

15 ) தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

16 ) தென்காசி (தனி) – ராணி ஸ்ரீகுமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு

18 ) பெரம்பலூர் – அருண் நேரு

19 ) தேனி – தங்கச் தமிழ் செல்வன்

20 ) ஈரோடு – பிரகாஷ்

21 ) ஆரணி – தரணி வேந்தன்

 

வேட்பாளர்கள் விவரம் :

  • 50%க்கு மேல் புதியவர்கள் (11)
  • பெண்கள் – 3
  • அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் – 2
  • ⁠முனைவர்கள் – 2
  • மருத்துவர்கள் – 2
  • ⁠பட்டதாரிகள் – 19
  • ⁠வழக்கறிஞர்கள் – 6

திமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்துக் காட்டினார்.  அதன் விவரம் வருமாறு:

  • மாநில முதல்வர்களுடன் ஆலோசனை பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  • உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்பட வேண்டும். 
  • புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்
  • அனைத்து மாநில மொழிகள் வளர்ச்சிக்கு சம நிதி வழங்கப்படும். 
  • தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். 
  • புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். 
  • நாடு முழுவதும் காலை உணவு திட்டம் செயல்படும். 
  • தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
  • வங்கிகளில் குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லாத போது வைக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும். 
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
  • பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது. 
  • எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 ரூபாய், டீசல் விலை ரூ.50 ஆக குறைக்கப்படும்.
  • ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்றவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும். 
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
  • மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்வி கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும். 
  • ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும். 
  • சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும். 


source https://news7tamil.live/21-person-dmk-candidate-list-released-kanimozhi-in-thoothukudi-arun-nehru-contest-in-perambalur.html

https://news7tamil.live/lpg-rs-500-petrol-rs-75-dmks-action-manifesto.html

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ புதிய திட்டம்; ஜன. 31 முதல் நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு 30 01 2024 

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை (ஜன. 31) முதல் நடைமுறைக்கு வருகிறது. பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி அவற்றை திறம்பட செயல்படுத்தி முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் 

இல்லம் தேடி கல்வித் திட்டம் 

மக்களைத் தேடி மருத்துவம் 

நான் முதல்வன் 

இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 

புதுமைப் பெண் 

முதலமைச்சரின் காலை உணவு 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 

கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் 

போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் மக்களுக்காக தீட்டப்பட்டு அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலை நிமிரச் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படுத்தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில்  ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 23.11.2023 அன்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இத்திட்டம் நாளை 31.01.2024 புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் சென்னை மாவட்டம் நீங்களாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல் மாவட்ட ஆட்சித் தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்



அரசின் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீளித்து எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/ungalaith-thedi-ungal-ooril-new-scheme-starts-on-january-31st-tn-government-announced-2407984


8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்ட ஸ்டாலின்: விமான நிலையத்தில் பேட்டி

 27 01 2024

அரசு முறை பயணமாக 8 நாட்கள் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அவர் கூறுகையில்,

2024-ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டார்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு பிப்ரவரி 7-ந் தேதி காலை சென்னை திரும்புகிறேன். கடந்த 2022-ம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருந்தேன். இந்த பயணத்தில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய6100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதேபோல் 2023-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது 2000-க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 1342 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணவு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த 2 பயணங்கள் மூலமாக 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 7442 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல் வடிவம் கொடுத்ததால் தான்,  பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவ தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட 2 மாதங்களில்ஜப்பான் நாட்டின் ஓம்ரான் நிறுவனத்தின தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுகட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் சிங்கப்பூர் நட்டை சேர்ந்த கேப்பிட்டாலா என்ற நிறுவனத்தின்ஐ.டி.பார்க் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

ஐக்கிய அரபு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படிலுலுப் நிறுவனம் கோயம்புத்தூரின் தங்களது திட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை போலவே ஸ்பெயின் நாட்டிலும்முதலீட்டார்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். ஸ்பெயின் நாட்டை சேர்ந்தமுதலீட்டாளர்கள்வணிக அமைப்புகள்தொழில்முணைவோர்இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடு தான் உகந்த மாநிலம் என்றுஅந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.

இந்த பயணத்தின் போது ரோஹாமற்றும் ஹெஸ்ட்ராம் உட்படசில பெருந்தோழில் நிறுவனங்களுடன்இன்வஸ்டென் என்னும் முதலீட்டு அமைப்புடன்நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட இருக்கிறேன். இந்த பயணத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்துஅந்த நாடுகளில் இருந்து பெருமளவு முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன். எனவே உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடுஇந்த பயணம் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-press-meet-in-chennai-airport-before-spain-travel-2403728


2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – பொன்முடி அறிவிப்பு 26 7 23

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்த, மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை தமிழ் நாடுஅரசு மதித்து அங்கீகரிக்கிறது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும். பாடப்பிரிவுகளுக்கு டையே 75% இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணைப் பெற்றும் பணியில் சேர முடியாமல் சிரமப்படும்.

மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த, மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2018 – 2019க்குப் பின், சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படவில்லை. இதை ஈடுசெய்யும் வகையில் இந்த, மாதிரிப் பாடத்திட்டம் (2023-2024) மிகத் தரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் உயரிய நோக்கம் ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களிடையே சரியாக சென்றடையும் பொருட்டு இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது.

உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க. 30-9-2021, 1-14-2021 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற சட்டம் 1992. பிரிவு 10 (2) விதியின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐ.ஐ.டி. அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்ஜூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலிருந்தும் 9:22 பேராசிரியர்களைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் (166 இளநிலை பாடங்கள், 135 முதுநிலை பாடங்கள்) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தொழில் முனைவு மற்றும் திறன்மேம்பாட்டு அம்சங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இம்மாதிரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

தொழில்ந்துறை வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்டு வளர்ந்து வரும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப B.sc. Artificial Intelligence, B.sc. Internet of things, B.sc. Computer Science, Artificial Intelligence and Machine Learning, B.sc. Computer Science and Block Chain Technolocy, B.sc. Computer Science with Augmented Reality and Virtual Reality போன்ற பல புதிய மாதிரிப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டங்களைப், பல்கலைக்கழக பாடத்திட்டக்குழுக்களின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துமாறு தன்னாட்சி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அணுப்பிவைத்தன. இதன் அடிப்படையில், 90 சதவித உயர்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் கீழ்க்காணும் ஐந்து பிரிவுகள் இடம் பெற்றுள்ளன:

பகுதி I மொழி,
பகுதி II ஆங்கிலம்,
பகுதி III முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்கள்.
பகுதி IV திறன் மேம்பாட்டு பாடங்கள்
பகுதி V மதிப்புக் கூட்டுக் கல்வி

இப்பாடத் திட்டத்தில் உள்ள பகுதி I, பகுதி II,
பகுதி III-ல் உள்ள விருப்பப்பாடங்கள் (Elective Papers), பகுதி IV, பகுதி V-ல் உள்ள பாடங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் தேவைக்கேற்ப தாங்கள் விரும்பும் பாடங்களைப் பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளலாம். பாடங்களுக்கிடையே இணைத்தன்மை இருப்பதற்காக இப்பாடத்திட்டத்தில் பகுதி II-இல் உள்ள முக்கிய பாடங்கள் (Core Papers) 75 சதவிதம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கருத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எதிரான கருத்து இந்த மாதிரி பாடத்திட்டத்தில் இல்லை. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமையை மதிக்கும் நோக்கத்தில் மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் நலன் கருதி அமைக்கப்பட்ட இம்மாதிரி திட்டம் கீழ் காணும் உரிமைகளைப் பாதுகாக்கிறது:

*பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

*ஆசிரியர்களின் பணிநிலையில் (work load or service condtion) எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*முக்கிய பாடங்களையும் (core papers), விருப்பப் பாடங்களையும் (Elective Papers) செய்முறை பயிற்சிகளையும் (Paracticals) பருவங்களுக்கு இடையே (semesters) மாற்றிக் கொள்ளலாம்.

*பல்கலைக் கழகங்களும் தன்னாட்சிக் கல்லூரிகளும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பீடுகளில் (Assessment) மாற்றங்கள் செய்துகொள்ள உரிமை உண்டு. அவர்களின் தன்னாட்சி உரிமைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது.

இந்த கல்வி ஆண்டு முதல் (2023 – 2024) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து சரி செய்யப்படும்.

மாதிரி பாடத்திட்டம் தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் 02.08.2033 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களின் கருத்துக்கள் கேட்டு தீர்வு காணப்படும்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/minister-ponmudi-statement-new-model-syllabus-to-be-implemented-from-current-academic-year/

மாதம் ரூ1000 பெற தகுதிகள் என்ன?

 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், பயனாளிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மாவட்டத் தோறும் மேற்கொள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார அளவுகோல் மற்றும் இதர விவரங்களை கொண்டு தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

21 வயது நிரம்பிய மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவம் 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில் வரி செலுத்துபவர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சொந்த பயனுக்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் உள்பட இத்திட்டத்தில் பயன் பெற முடியாது. இவ்வாறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது. திட்டச் செயலாக்கம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேப்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-rs-1000-scheme-for-women-go-order-released-720478/

எங்கள யாரும் அடிக்க முடியாது.. மத்திய அரசுக்கு தி.மு.க எச்சரிக்கை.. பரபரக்கும் போஸ்டர்

16 6 23

Demonstration against DMK in Coimbatore
கோவையில் ஒட்டப்பட்டுள்ள திமுக போஸ்டர்கள்

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திக பொதுச்செயலாளர் கி. வீரமணி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் டி ஆர் பாலு, ராசா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பலர் பங்கேற்கின்றனர்.

இன்று மாலை சிவானந்த காலனி பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை மாநகரில் காந்திபுரம், சிவானந்த காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சிவானந்த காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் “திமுக காரனை சீண்டி பாக்காதீங்க- இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை…”

எனவும் மற்றொரு போஸ்டரில் #WE STAND with ANNAN VSB” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், கலைஞர் கருணாநிதி கூறிய “எங்கள யாரும் அடிக்க முடியாது- நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது” என மத்திய அரசை குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், மிசா வழக்கின் போது எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/demonstration-against-dmk-in-coimbatore-698097/

 

செந்தில் பாலாஜியை கைது செய்த இ.டி; அரசியல் முதல் சமரசம் வரை, வேலை மோசடி வழக்கின் முழு பின்னணி

 

14 6 23

Arun Janardhanan 

தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, புதன்கிழமை (ஜூன் 14) அதிகாலை அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டது, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ​​தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, மத்திய அரசின் முதல் பெரிய அதிகார நகர்வைக் குறிக்கிறது. சர்ச்சைக்குரிய கைது என்பது 2011-16 அ.தி.மு.க அரசாங்கத்தின் கீழ் செந்தில் பாலாஜி போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த வேலை மோசடி ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகும்.

புதன்கிழமை அதிகாலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ரெய்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் ஒருவரின் அறையை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனை முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை என்று ஸ்டாலின் நேற்று மாலை கூறினார். கைது செய்யப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை புதன்கிழமை ஸ்டாலின் சந்தித்தார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் நிலையை பலவீனப்படுத்தியது, பாதிக்கப்பட்டவர்களுடன் “சமரசம்” செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் வெளிப்படையாக அறிவித்தது, இது ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் மறைமுகமாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாக விளக்கப்பட்டது.

கைதுக்குப் பின்னால் உள்ள கதை: விளம்பரங்கள் முதல் குற்றச்சாட்டுகள் வரை

இந்த வழக்கு நவம்பர் 2014இலிருந்து ஆரம்பிக்கிறது, அரசு நடத்தும் பெருநகர போக்குவரத்து கழகம் ஐந்து தனித்தனி விளம்பரங்கள் மூலம் ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்தது. 746 டிரைவர்கள், 610 கண்டக்டர்கள், 261 இளநிலை வரைவாளர்கள், 13 இளநிலை பொறியாளர்கள் மற்றும் 40 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆட்சேர்ப்பு விளம்பரங்களைத் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.

கடந்த 2015 அக்டோபரில் தேவசகாயம் என்பவர் தனது மகனுக்கு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பழனி என்ற கண்டக்டரிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்ததாக முதல் புகார் அளித்தார். அவருடைய மகனுக்கு வேலை கிடைக்கவில்லை, அவருடைய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அந்த புகாரில் அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் பாலாஜி சம்பந்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2016 இல், இரண்டாவது நபர் கோபி இதேபோன்ற புகாரை அளித்தார். அவர் இதுவரை கிடைக்காத கண்டக்டர் பணிக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு நபர்களிடம் 2.40 லட்சம் ரூபாய் கொடுத்ததாக புகார் அளித்தார். காவல்துறையின் வெளிப்படையான செயலற்ற தன்மை காரணமாக, தனது புகாரை பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் ஏற்பட்ட தடைகள் மற்றும் சட்ட சிக்கல்கள்

முதலில் கோபியின் வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், தேவசகாயம் தாக்கல் செய்த முந்தைய வழக்கில் அவரது புகாரையும் இணைத்தது. இருப்பினும், தேவசகாயம் தனது வழக்கில் அமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களால் தேவசகாயம் கையாளப்பட்டதாகவும் கோபி வாதிட்டார். கோபியின் கோரிக்கை, கீழ்மட்ட அதிகாரிகளைத் தாண்டி, அமைச்சர்கள் மட்டம் வரை விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான்.

கோபியின் மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனருக்கு கீழ்நிலை அதிகாரிகளை தாண்டி விசாரிக்க உத்தரவிட்டது. இருப்பினும், 2017 ஆம் ஆண்டு இறுதி போலீஸ் அறிக்கையில், அமைச்சர் மற்றும் அவரது உறவினர்கள் தவிர்த்து, தேவசகாயத்தின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 12 நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நபர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டுவதையும் அறிக்கை தவிர்த்தது, மேலும் அவர்களின் குற்றங்களின் தீவிரத்தன்மையை மேலும் நீர்த்துப்போகச் செய்தது.

அதே நேரத்தில், மேலும் பல புகார்கள் எழுந்தன. கடந்த 2017-ம் ஆண்டு போக்குவரத்து துறை ஊழியர் கணேஷ் குமார், செந்தில் பாலாஜி மற்றும் மூன்று பேர் வேலை தேடுபவர்களிடமிருந்து ரூ.95 லட்சம் வசூலிக்குமாறு தன்னிடம் அறிவுறுத்தியதாக குற்றம் சாட்டினார். இந்த நபர்களுக்கு ஒருபோதும் வேலை கிடைக்கவில்லை, மேலும் பணம் திரும்பப் பெறப்படவில்லை. ஒரு வழக்கு 2018 இல் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் வழக்கு மீண்டும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து, கிரிமினல் குற்றங்கள் மீது கவனம் செலுத்தியது.

அடுத்த ஆண்டு, கே.அருள்மணி தனது நண்பர்களிடம் இருந்து, வேலை வாய்ப்புக்காக, 40 லட்சம் ரூபாய் வசூலித்து, அமைச்சரின் தனி உதவியாளரிடம் கொடுத்ததாகக் கூறி, இதேபோல் புகார் அளித்தார். மீண்டும், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஊழல் குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன.

அமலாக்கத்துறை என்ட்ரி

செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள போதிலும், அனைத்து அதிகாரப்பூர்வ விசாரணைகளிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாததால் மேலும் ஒரு முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் அரசியல் அதிர்ஷ்டம் ஏற்ற இறக்கமாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, தலைமைக்கான அ.தி.மு.க கிளர்ச்சியின் போது ஜெயலலிதாவின் உதவியாளர் வி.கே சசிகலாவின் அணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி இருந்தார். 2017-ல் அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டு, சசிகலா தரப்புடன் சேர்ந்து, நெருக்கடியான காலகட்டத்தில் அவரது மருமகன் டி.டி.வி தினகரனை ஆதரித்த செந்தில் பாலாஜி, 2018-ம் ஆண்டு தி.மு.க.,வில் இணைந்தார். 2021ல் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தனது சொந்த ஊரான கரூரில் வெற்றி பெற்று, புதிய தி.மு.க அமைச்சரவையில் அமைச்சர் பதவியைப் பெற்றார்.

செந்தில் பாலாஜியின் எழுச்சியால் உற்சாகமடைந்த, அமைச்சரின் தனி உதவியாளர் சண்முகம் மற்றும் ஆர் சகாயராஜன் உட்பட இரண்டு நபர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் “சமரசம்” செய்து, அவர்கள் மீதான குற்ற வழக்குகளை ரத்து செய்ய முயன்றனர். ஒரு வழக்குக்கான அவர்களின் கோரிக்கைக்கு உயர் நீதிமன்றம் இணங்கியது. எவ்வாறாயினும், இந்த சமரசம் என்று அழைக்கப்படுவது, லஞ்சத்தை ஒப்புக்கொள்வதாகக் கருதப்படுகிறது, இது இரட்டை முனைகள் கொண்ட வாள் என நிரூபிக்கப்பட்டது, இது அமலாக்கத்துறையின் கவனத்தை ஈர்த்தது.

நிகழ்வுகளின் திருப்பம்

2021 ஆம் ஆண்டின் இறுதியில், அமலாக்கத்துறை (ED) வழக்கைத் தோண்டத் தொடங்கியது. பல்வேறு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை கோரியபோது, ​​உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறையை ஆய்வு செய்ய அனுமதித்தது, ஆனால் குறிக்கப்படாத ஆவணங்களை நகலெடுக்க அனுமதிக்கவில்லை, பின்னர் அந்த முடிவு சவால் செய்யப்பட்டது. மேலும், “சமரசம்” அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்வது குறித்து, வேலை கிடைக்காத ஆர்வலர் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் கேள்வி எழுப்பப்பட்டது.

இது புதிய சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது, உயர் நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் உயர் நீதிமன்றம் இந்த சம்மன்களை ரத்து செய்தது மற்றும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது, அங்கு உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு விசாரணையைத் தொடரவும் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்யவும் அதிகாரம் வழங்கியது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

“சமரசம்” பிரச்சனை

“சமரசம்” என்பது புகார்தாரருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே மட்டும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது; இது நீதியின் சமரசம், நியாயமான விளையாட்டு மற்றும் குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கோட்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

2015 முதல் 2021 வரையிலான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் சேர்க்கத் தவறியதால், விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் என்ற கருத்தை நீதிமன்றம் நிராகரித்தது, பாலாஜியின் அதிகாரமும் பதவியும் அவரது பதவிக்காலத்தில் வழக்குத் தொடராமல் அவரைக் காப்பாற்றியது என்று பரிந்துரைத்தது.

source https://tamil.indianexpress.com/explained/v-senthil-balaji-arrested-tamil-nadu-corruption-ed-dmk-stalin-696186/


செந்தில் பாலாஜியை கைது  14 6 23

மின்சாரம், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் இன்று (ஜுன் 14) அதிகாலை கைது செய்தனர். இது தி.மு.க, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று அதிகாலை (புதன்கிழமை) 2 மணி வரை சுமார் 18 மணி நேரம் அமைச்சர் செந்தில்பாலாஜி வசித்து வரும் அரசு வீடு, அவரது சகோதரர் வீடு, கரூரில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 11-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுமா? அன்பில் மகேஷ் பேட்டி12 6 23

Anbil Mahesh
Anbil Mahesh

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, திங்கள் கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கம் மகளிர் பள்ளியில், மாணவிகளை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதிய கல்வியாண்டு தொடங்கும் முன் மாநிலத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில், 1.31 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

பொதுவாக, அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகுதான் மாணவர் சேர்க்கை தொடங்கும். இந்த ஆண்டு, 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பிரசாரத்தை பள்ளிக் கல்வித்துறை கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கியது.

கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 4.5 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூன் மாத இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மற்ற வகுப்புகளிலும் அதிக மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சேர்க்கை ஆகஸ்ட் வரை நடைபெறும்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.

திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 46 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களைப் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் பஸ் பாஸ் வழங்கப்படும், சீருடையுடன் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம், என்றார்.

மேலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அமைச்சர் கூறுகையில், மாநில கல்வி கொள்கை குறித்து குழு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் மாநில அரசு முடிவெடுக்கும். தற்போது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு, போட்டி தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.


source https://tamil.indianexpress.com/education-jobs/chennai-anbil-mahesh-poyyamozhi-11-class-xi-board-exams-694472/

 

11 6 23

The foundation stone was laid to make Muttam Beach a tourist destination
முட்டம் கடற்கரையை சுற்றுலா தலமாக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

கன்னியாகுமரி முட்டம் கடற்கரை பகுதியை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.84 கோடி ரூபாய் செலவிலான மேம்பாட்டு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் முட்டம் கடற்கரையும் ஒன்று. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட முட்டம் கடற்கரையை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், முட்டம் கடற்கரையை சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்த 2.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, அந்தப் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் எம்.பி விஜய்வசந்த் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் த.இ. தாகூர்


source https://tamil.indianexpress.com/tamilnadu/the-foundation-stone-was-laid-to-make-muttam-beach-a-tourist-destination-693334/


டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு : வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிடுகிறார்

  9 6 23

டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் ஜூன் 16-ம் தேதி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணை மட்டுமின்றி அது அந்த தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இதனையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றடைந்தார்.

இதனைதொடர்ந்து இன்று காலை தஞ்சையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை பார்வையிடும் அவர், பின்னர் லால்குடி அருகே உள்ள பூழையாற்றில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார். அதன் பின்னர் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர், நாளை மறுதினம் ((11-ந்தேதி)) சேலம் மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.

 


source https://news7tamil.live/chief-minister-m-k-stalin-today-inspects-the-canal-digging-works-in-delta-districts.html


இந்து பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு; தி.மு.க எம்.பி முயற்சிக்கு முதல் வெற்றி

 4 6 23

DMK MP wilson
தி.மு.க எம்.பி வில்சன்

இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுகிறேன் என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி இந்து மதத்தை பின்பற்றும் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தி.மு.க எம்.பி வில்சன் முன்னெடுத்து வருகிறார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தார். இந்தநிலையில், அவரது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக வில்சன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க எம்.பி வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுகிறேன். இந்து மதத்தைப் பின்பற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு சொத்துக்களின் மீது சமமான பங்குகளைப் பெறுவதற்கு ஏதுவாக, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் நன்மை பயக்கும் விதிகளைப் பயன்படுத்துமாறு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர்களுடனான எனது சந்திப்பு மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பதில் எழுதியுள்ள மாண்புமிகு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால், இந்த விவகாரம் தொடர்பாக பழங்குடியினர் விவகாரத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகியவற்றின் அமைச்சர்களோடு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், இந்த விவகாரம் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் பிரிவு III-ன் படி மாநிலப்பட்டியலில் வருவதால் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசனை தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பழங்குடியின மகளிருக்கு சம உரிமைகளை வழங்கும் வகையில், அனைத்து தரப்பினராலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-wilson-initiative-for-hindhu-st-women-equal-shares-687275/


காவிரி மேகதாது அணைக்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு 31 5 23

durai murugan

காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் துரைமுருகன் கூறியிருப்பதாவது: “பதவி ஏற்றதும், வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். டி.கே.சிவகுமாரின் பேச்சு அண்டை மாநிலங்களுடன் நட்புறவாக இருப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை. டெல்டாவில் தூர்வாரும் பணி முறையாக நடக்கிறது”, என்று கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/kaveri-dam-opinion-minister-duraimurugan-684155/



சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!

 24 5 23

சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலையில் சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இன்று நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தொடர்ந்து, மாநில அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் தொழில் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.


source https://news7tamil.live/chief-minister-m-k-stalin-arrived-in-singapore-attend-the-investor-conference-today.html


தமிழக கல்விக் கொள்கை உருவாக்க 2 புதிய உறுப்பினர்கள் நியமனம்: அன்பில் மகேஷ் அறிவிப்பு

 20 5 2023 

anbil mahesh

மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக குழுவில் இரண்டு புதிய உறுப்பினர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

சென்னை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதை தொடர்ந்து, மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் இன்று குழு அமைக்கப்பட்டது.

இதில், மாநில கல்விக் கொள்கை உருவாக்கும் உயர்மட்டக்குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் ஃப்ரீடா ஞானராணி மற்றும் சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பழனி ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/education-jobs/state-education-policy-development-committee-have-two-new-members-674200/


திமுக கூட்டணியை பிரிக்க இலவு காத்த கிளியாக அவர்கள் காத்து கிடக்கின்றனர்

15 5 23 

Thirumavalavans reply to BJPs call for alliance
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய திருமாவளவன், “திமுக கூட்டணியை பிரிக்க இலவு காத்த கிளியாக அவர்கள் காத்து கிடக்கின்றனர். தொடர்ந்து பல பகீரத முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த ஆசை அந்த அம்மாவுககும் (வானதி சீனிவாசன்) இருந்துள்ளது. அது அவரின் பேச்சில் தெரிகிறது. ஆனால் இதெல்லாம் ஒருபோதும் நடக்காது. பாரதிய ஜனதா, பாமக கட்சிகளோடு கூட்டணி இல்லை” என்றார்.

நேற்று, அங்கன்வாடி மையம் ஒன்றினை திறநதுவைத்த வானதி சீனிவாசன், திமுக ஆட்சியில் பட்டியலின மக்களின் பிரச்னை தீர்க்கப்படாது. திருமாவளவன் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavans-reply-to-bjps-call-for-alliance-668645/


500 மதுக் கடைகள் மூடல்: கருணாநிதி பிறந்தநாளில் அறிவிப்பு

 15 5 23

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் 500 மதுக் கடைகள் இந்தாண்டு மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்திலாபாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியிருப்பாளர்களின் புகார்களின் அடிப்படையில் கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக டாஸ்மாக் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலம் முழுவதும் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சொந்தமாக 5,329 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், சென்னையில் பல இடங்களில் 500 மீட்டர் சுற்றளவில் செயல்படும் இரண்டுக்கும் மேற்பட்ட மதுக் கடைகளால் அங்கு மது அருந்த நிறைய பேர் வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாவதாக புகார் தெரிவிக்கின்றனர். சட்டவிரோதமாக கடைகள் வைத்து பார்கள் நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

டாஸ்மாக் மூலம் மாநில அரசுக்கு வருவாய் 2021-22-ல் ரூ. 36,056 கோடியிலிருந்து 2022-23-ல் ரூ. 44,098 கோடியாக அதிகரித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tasmac-to-close-500-outlets-in-tamil-nadu-may-announce-it-on-m-karunanidhis-birth-anniversary-668644/


புதிய அமைச்சர் 

 திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி செய்யத் தொடங்கியது முதல் இதுவரை 2 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு அமைச்சரை நீக்குவது இதுவே முதல் முறை. ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழக அரசு பரிந்துரைப்படி  பால் வலத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, டி.ஆர்.பி ராஜா புதிய அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி.ஆர்.பி ராஜா இன்று பதவியேற்கும் நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. தொழில் துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுக்கு, நிதியமைச்சகம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்படுவதுடன், மனோ தங்கராஜுக்கு பால்வளதுறை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

11 05 2023 

source IE Tamil 



இலாகா மாற்ற எதிர்ப்பு: ட்விட்டரில் பி.டி.ஆர்-க்கு ஆதரவாக ட்ரெண்டிங்

 11 5 2023 PTR Palanivel Thiaga Rajan with CM Stalin

PTR Palanivel Thiaga Rajan with CM Stalin

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து போக்குவரத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உள்ளிட்ட 4 துறை அமைச்சர்களுக்கான இலாகா மாற்றம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ, முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்தது. அப்போது சிறிய அளவில் இலாகா மாற்றம் நடைபெற்றது.


இந்நிலையில், கடந்த மே 7-ம் தேதியோடு தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக இன்று(மே 11) பதவியேற்கிறார். இவருக்கான இலாகா இன்னும் அறிவிக்கப்பட வில்லை. பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நிதியமைச்சராக உள்ள பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அத்துறையில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப வளர்ச்சி துறை (ஐ.டி) வழங்கப்பட உள்ளதாக யூகங்கள், தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜனை இலாகா மாற்றம் செய்யக் கூடாது என தெரிவித்து அவருக்கு ஆதரவாக #I_StandWithPTR என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டு செய்யப்பட்டு வருகிறது.

அண்மையில் உதயநிதி, சபரீசன் இருவரும் ஊழல் செய்யதாக கூறி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோவை பா.ஜ,க தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.கவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். பொய்யான ஆடியோ என விளக்கம் அளித்தார். இந்நிலையில், அவரது இலாகா மாற்றப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது. நிதித்துறையில் சீர் திருத்தங்களை செய்தும், துறை ரீதியாக குறைகள் இல்லாத நிலையில் அவரை நிதித்துறையில் இருந்து மாற்றக்கூடாது என ட்விட்டரில் அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cabinet-reshuffle-netizens-trend-istandwithptr-in-twitter-665504/


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா – திரும்ப பெற கோரிக்கை! 9 5 23

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது.


மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்: 

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிமுகப்படுத்திய தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் நிறைவேறியது. நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டே செல்வதால் அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், நிலப்பரிமாற்ற முறையை சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலைகள் இருந்தால், அந்த இடத்தில் வணிகம், தொழிற்துறை, சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் விண்ணப்பிக்கலாம் எனவும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டத்தை முன்னெடுப்பவரின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் தள்ளுபடி செய்யலாம் அல்லது நிராகரிக்கலாம் என்ற வாய்ப்பே இல்லை என்பதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா

source https://news7tamil.live/land-consolidation-bill-passed-in-tamil-nadu-legislative-assembly-request-for-withdrawal.html

 

தமிழக அமைச்சரவை மாற்றம்: நாசர் நீக்கம்- மன்னார்குடி எம்.எல்.ஏ ராஜா சேர்ப்பு

TRP Raja will take office in the Tamil Nadu cabinet on May 11
மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, சா.மு. நாசர்

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு மன்னார்குடியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர். பாலுவின் மகனாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. இந்தத் தகவல்கள் தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ராஜ் பவனில் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரப் போகிறது என கடந்த சில நாள்களாக பேச்சு அடிபட்டு வந்தது. அப்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மட்டுமின்றி வேறு சிலரும் நீக்கப்படலாம் என யூகங்கள் வெளியாகின.

இந்த யூகங்கள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு மூத்த அமைச்சர் துரை முருகன் தனக்கு தெரியாது, முதல்வர் இது தொடர்பாக முடிவெடுப்பார் என்றார்.
இந்த நிலையில், இன்று (மே 9) இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சா.மு. நாசர், கடந்த சில மாதங்களுக்குமுன்பு தொண்டர்களை நோக்கி கற்களை வீசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் சா.மு. நாசர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது

09.05.2023.

source https://tamil.indianexpress.com/tamilnadu/trp-raja-will-take-office-in-the-tamil-nadu-cabinet-on-may-11-664287/


திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் உகந்த நிர்வாக ஃபார்முலா: ஆளுனருக்கு ஸ்டாலின் பதில்

 4 5 23 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் பற்றி கொடுத்திருக்கும் பேட்டி அரசியல் அரங்கத்தில் சர்ச்சையை கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரிடம் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “”தமிழ்நாட்டின் #DravidianModel-தான் இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக Formula!”

இதனை மெய்ப்பிக்கும் நமது ஈராண்டு சாதனைகளை மக்களின் இதயங்களில் பதித்திடுவோம்!
மூன்றாம் ஆண்டிலும் முழுவீச்சில் செயல்படுவோம் என்ற உறுதியை அளிப்போம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டு மக்கள் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள்.

ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

மக்களுக்கான திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அந்தத் திட்டங்களின் பலன்களை மக்கள் உணரும்படி எடுத்துரைக்க வேண்டியது கழக உடன்பிறப்புகளின் கடமை. உங்களில் ஒருவனாக – உங்களின் உடன்பிறப்பாக அந்தக் கடமையை அடிக்கடி காணொளி வாயிலாக நிறைவேற்றி வருகிறேன். மே 2-ஆம் நாள்கூட, ‘உங்களில் ஒருவன்’ காணொளியை வெளியிட்டு, அதில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளையும், அரசியல் எதிரிகள் வைக்கின்ற ஆதாரமற்ற விமர்சனத்திற்கான பதில்களையும் அளித்து, கழக உடன்பிறப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியும், புதிய தொழில்நுட்பமும் அடிக்கடி காணொளி வாயிலாக உங்களிடம் உரையாற்றச் செய்திருக்கிறது. அதேநேரத்தில், நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான், உண்மையை உரக்கச் சொல்லவும், அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் வதந்திகளையும் அவதூறுகளையும் முறியடிக்கவும் நாமும் காணொளி வாயிலாகப் பதில் தர வேண்டியுள்ளது.

கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து காலம் காலமாக அதன் மீது அவதூறுகளைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்போர் இருக்கிறார்கள். கழகத்தைத் திட்டியே வயிறு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். கழகத்தை விமர்சித்தால்தான் தங்களுக்கு அடையாளமும் முகவரியும் கிடைக்கும் என்று அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள். இன்று, நேற்றா இதைப் பார்க்கிறோம்? என்றுதான் இந்த வீண்பழிகளைக் கண்டு நாம் அஞ்சியிருக்கிறோம்?

தி.மு.கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கு பேரறிஞர் அண்ணா தனது திராவிட நாடு இதழில் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் பதிலளித்தார். அவரது காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்ட அவதூறுகளுக்கும் வதந்திகளுக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் முரசொலியில் உடன்பிறப்பு கடிதங்களில் பதிலளித்தார். கழகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதற்கும், கழகத்தின் சாதனைகளை எடுத்துச் சொல்வதற்கும் கடிதங்கள்தான் பயன்பட்டன. கால வளர்ச்சியின் காரணமாக இன்று காணொளிகள் வெளியிடப்பட்டாலும், கடிதத்தின் வாயிலாக கழகத் தொண்டர்களாம் – கலைஞரின் உடன்பிறப்புகளாம் உங்களுடன் உரையாடும்போது நெருக்கமான அன்பும் பாசமும் வெளிப்படுவது இயற்கைதானே! தி.மு.கழகம் எனும் கொள்கைக் குடும்பத்தின் உடன்பிறப்புகளல்லவா நாம்! அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நம்மை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு நாம் செய்திருக்கும் பணிகளை, நிறைவேற்றியிருக்கும் திட்டங்களை, இரண்டாண்டு காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் இதயத்தில் அவற்றைப் பதியச் செய்திடும் கடமை, உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. அதனால்தான், திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

மே 7-ஆம் நாள் சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றுகிறேன். என்னுடன் கழகப் பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு எம்.பி., பங்கேற்கிறார். கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோயில் கிழக்குப் பகுதியிலும், கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலம் மேற்கு மாவட்டம் தாரமங்கலம் நகரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரத்திலும், மாண்புமிகு அமைச்சர் க.பொன்முடி அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும், திரு.ஆ.ராசா எம்.பி., அவர்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலும், திரு.அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அவர்கள் ஈரோடு தெற்கு மாவட்டம் கொடுமுடி வடக்கு ஒன்றியத்திலும், கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள் தூத்துக்குடியிலும், இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் உரையற்ற இருக்கிறார்கள்.

அதே நாளில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதுபோலவே மே 8, 9 ஆகிய நாட்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தொடர்கின்றன. இந்தச் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில், யார் யார் எங்கு உரையாற்றுகிறார்கள் என்ற விவரங்கள் முரசொலியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு கூட்டம் நடத்தினோம் என்றில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியம் – நகரம் – பகுதி – பேரூர் என அனைத்து இடங்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மாண்புமிகு அமைச்சர்கள், கழகத்தின் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மட்டுமின்றி கழகத்தின் பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்களும், கழகத்தின் கொள்கைகளை எடுத்துரைக்கும் ஆற்றல்மிக்க உடன்பிறப்புகளும் இந்தப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். எண்ணற்ற சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சொற்பொழிவாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

75 ஆண்டுகளை நெருங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் அலையலையாய் மக்கள் திரண்ட பிரம்மாண்டமான மாநாடுகளும் உண்டு. தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் என ஒவ்வொரு மனிதரையும் தேடிப் போய் மேற்கொண்ட பரப்புரைகளும் உண்டு. அந்த வகையில், மக்களைத் தேடி நாம் பயணிக்கிறோம். அவர்களுக்காக நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை எடுத்துரைக்க இருக்கிறோம்.

இளைஞரணிச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் இளைஞரணியினர் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன், இளைஞரணி சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

இதுபோலவே ஒவ்வொரு அணியினரும் கழகத்தின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களில் ஒருவனான எனக்கு நிறையவே இருக்கிறது.

இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக்கூடிய கழகச் சொற்பொழிவாளர்கள் உரிய தயாரிப்புகளுடனும், புள்ளிவிவரங்களுடனும் கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும். கடந்த இரண்டாண்டுகளில் எண்ணற்ற சாதனைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும், பொறுப்பான முறையிலும் எடுத்துரைக்க வேண்டும். உங்களது பேச்சை நாடே உற்று நோக்குகிறது என்பதை உணர்ந்து நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொருவரிடமும் நீங்கள் கொண்டு சேர்த்திட வேண்டும்.

அதேநேரம் உங்களது பேச்சுகளை எதிர்க்கட்சியினரும், திருகு வேலைகளில் ஈடுபடும் சில ஊடகங்களும், வெட்டியும் ஒட்டியும் தவறாகப் பொருள்படும்படி மாற்றி பரப்பிட காத்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு கண்ணியம் குன்றிடாமல் கருத்துகளை மக்களிடம் முன்வையுங்கள். ‘உங்களில் ஒருவன்’ காணொளியில் நான் குறிப்பிட்டத்தைப் போல, நாம் மக்களை நம்புபவர்கள்; எதிர்க்கட்சியினரைப் போல பொய்களை அல்ல என்பதால் மக்களிடம் நம் சாதனைகளைக் கொண்டு சேருங்கள்.

மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, காலைச் சிற்றுண்டித் திட்டம், நம்மைக் காக்கும் 48, புதிய முதலீடுகள், அதிகத் தொழிலகங்கள், நிறைய வேலைவாய்ப்புகள் என அனைத்து மக்களுக்குமான – அனைத்துப் பகுதிகளுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் மக்களின் இதயத்தில் பதிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டியது சொற்பொழிவாளர்களின் கடமை.

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது.

இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும். திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்கான நற்சான்றிதழைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரலாறு படைக்கட்டும்”, என்று தனது அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-mk-stalin-about-dravida-model-governor-rn-ravi-speech-659469/


12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: உழைப்பாளர் தினத்தில் ஸ்டாலின் அறிவிப்பு

 1 4 23 

Chief Minister Stalin alleged that attempts are being made to tarnish the DMK regime
முதல்வர் ஸ்டாலின்

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை எனும் தொழிலாளர் சட்டமசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான் என்றும் அவர் கூறினார்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 1) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மே தினப் பூங்காவில் உள்ள மே நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் அனைத்து தொமுச பேரவை இணைப்பு சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க உறுப்பினர்களும் கருப்பு சிவப்பு உடை அணிந்து வர வேண்டும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்து இருந்தார். அதன்படி ஆண்கள் சிவப்பு சட்டை அணிந்தும், பெண்கள் சிவப்பு நிற புடவை அணிந்தும் வருகை தந்திருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிவப்பு நிற சட்டை அணிந்து வந்திருந்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பெருமுதலீடுகளை ஈர்க்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவே அந்த சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்டமுன்வடிவு அல்ல. தொழிலாளர்களை பாதுகாக்கும் அம்சங்கள் பல இருந்தன.

ஆனால் சில சந்தேகங்கள் தொழிற்சங்கங்களுக்கு இருந்தன. திமுக தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு பாராட்டுகிறேன். உடனடியாக அனைத்து தொழிற்சங்க தோழர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அதனை திரும்பப் பெற்றுள்ளது தான் திமுக அரசு. இதனை அவமானமாகக் கருதவில்லை. பெருமைப்படுகிறேன். திரும்ப பெறப்பட்டுள்ள செய்தி விரைவில் தெரிவிக்கப்படும். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான்” என்று கூறினார்.

முன்னதாக 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு தி.மு.க கூட்டணி கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-announces-12-hour-workday-bill-taken-back-656057/ 


 பி.டி.ஆர் ஆடியோ சர்ச்சை:

25 4 23

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. . இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கம் தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், இது மோசடியாக தயார் செய்யப்பட்டது என குறிப்பிட்டார். இந்த சர்ச்சை முடிவடையாத நிலையில், அமைச்சர் பி.டி.ஆர் பேசியதாக மீண்டும் ஒரு டேப்  ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், பி.டி.ஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/admk-seeks-cbi-investigation-on-ptr-purported-audio-650512/


12 மணி நேர வேலை சட்டம் நிறுத்தி வைப்பு: தொழிற்சங்க ஆலோசனைக்கு பிறகு ஸ்டாலின் அறிவிப்பு

 24 4 23 

CM Stalin
12 மணி நேர வேலை மசோதா

தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் 12 மணி நேர பணி தொடர்பான மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்யும் சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளிம்பிய நிலையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் மட்டுமே இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இந்த சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனிடையே 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். தலைமைச்செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோஇ அன்பரசன், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வரும் மே 12-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில், இரவு 7 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்கள் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது. சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் சிக்கல்கள் சிரமங்கள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் விளக்கினர். தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு எப்போதும் தொழிலாளர்களின் தோழனாகவும், தொண்டனாகவும், காவல் அரனாகவும் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதன் மூலம் 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-12-hours-working-law-amendment-bill-hold-cm-stalin-action-649225/


சட்டப்பேரவையில் முதன்முறையாக அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்த கூட்டணிக் கட்சிகள்

 21 4 23

திமுக ஆட்சியமைந்த பிறகு முதன்முறையாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அரசு கொண்டு வந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோழமைக் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகளும், பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், எட்டு மணி நேர வேலை என்பதை நீர்த்துப் போகச் செய்கிற 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவை திரும்ப பெறுவதோடு, தேர்வுக் குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, 12 மணி நேரம் வேலை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், எட்டு மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப்போகச் செய்யும் சட்ட மசோதாவை எதிர்ப்பதாக தெரிவித்தார்.  இதேபோல, இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார்.

மசோதாவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் வலியுறுத்தினார். காங்கிரஸ் சார்பாக பேசிய செல்வப்பெருந்தகை, இந்த சட்ட மசோதாவால் தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் என்றும், தொழிலாளர்கள் பயனடைய மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். பாஜக சார்பாக பேசிய நயினார் நாகேந்திரன், இந்த மசோதாவை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தனியார் முதலாளிகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்று குறிப்பிட்டார். இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். தொழிற்சாலைகளை பாதுகாப்போடு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த சட்டத்தை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், இந்த சட்டத்தால் எல்லோருக்கும் பாதிப்பு இல்லை என்றும், தற்பொழுது உள்ள நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்தார். வாரத்திற்கு வேலை நாட்களான 48 மணி நேரத்தை நான்கு நாட்களில் முடித்த பிறகு, மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும், விடுமுறை நாட்களில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.

இந்த சட்ட திருத்தமானது அனைவருக்கும் கொண்டு வரப்படவில்லை என்றும், விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்சாலைகள் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுவது, தமிழ்நாடு அரசு கொண்டுவரவில்லை என்றார். 12 மணி நேரம் வேலை என்பது யார் வேண்டுமோ அவர்கள்தான் இதை பயன்படுத்தலாம். எல்லோருக்கும் அல்ல. அவர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் செய்கிறோம் என்று தெரிவித்து வேலை செய்து வார விடுப்பு 3 நாட்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தால் மட்டுமே 12 மணி நேர வேலை அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அதிமுக பேரவையில் இல்லாத நிலையிலும், திமுக தவிர மீதமுள்ள பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக ஆட்சியமைந்த பிறகு கூட்டணிக் கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது இதுவே முதன்முறையாகும்.

source https://news7tamil.live/for-the-first-time-in-the-legislative-assembly-the-coalition-parties-walked-out-against-the-government.html


தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக

21 4 23

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடரில் முதன் முறையாக புதிதாக பல முக்கிய சிறப்புகள் இணைக்கப்பட்டு, அவை நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறைரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காவல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடரில் முதன் முறையாக புதிதாக பல முக்கிய சிறப்புகள் இணைக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்கள்: 

  1. செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் சைகை மொழியிலும் ஒளிபரப்பப்பட்டன.
  2. உறுப்பினர்கள் பேசும் நேரம், அமைச்சர்கள் பதிலளிக்கும் நேரம் திரையில் தெரியும் வகையில் DIGITAL HOUSE திட்டம் கொண்டு வரப்பட்டது.
  3. வினாக்கள் – விடைகள் நேரத்துடன் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்பாகின.
  4. முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் பேசுவது அனைத்தும் உறுப்பினர்கள் முன் உள்ள சிறு கணினியிலும் நேரலை செய்யப்பட்டன.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/events-that-happened-for-the-first-time-in-the-tamil-nadu-legislative-assembly.html


நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானங்கள்!

 21 4 23 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று தனித் தீர்மானங்களை கொண்டு வந்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20 ஆம் தேதி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பல்வேறு துறைகளுக்காக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

இதையும் படியுங்கள் : சட்டப்பேரவையில் முதல் முறையாக அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்த கூட்டணிக் கட்சிகள்!!

தொடர்ந்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தொடரில், ஒவ்வொரு நாளும், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான் விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்ததற்கு ஏற்ப, இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று முக்கிய தனித் தீர்மானங்களை கொண்டுவந்துள்ளார்.

1. சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

2. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய குடியரசுத் தலைவர், பிரதமரை வலியுறுத்தி அரசினர் தீர்மானம் கொண்டு வந்தார்.

3. கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கும் அரசினர் தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

source https://news7tamil.live/resolutions-brought-by-the-chief-minister-in-the-current-assembly-session.html


தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டு நடைபெற்ற மொத்த நிகழ்வுகள் 

 21 4 23

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20 ஆம் தேதி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பல்வேறு துறைகளுக்காக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

தொடர்ந்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தொடரில், ஒவ்வொரு நாளும், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான் விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்ததற்கு ஏற்ப, இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.

இந்த கூட்டத்தொடர்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றை சுருக்கமாக காணலாம்….

  • ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட சட்டப்பேரவை கூடிய நாட்கள் – 26
  • மாலையிலும் பேரவை கூடிய நாட்கள் – 08
  • அவைக்கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் – 142 மணி நேரம் 47 நிமிடங்கள்
  • மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற நாட்கள் – 15
  • மானியக் கோரிக்கை விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர்கள் – 171
  • அமைச்சர்கள் பதிலுரை ஆற்றிய மொத்த நேரங்கள் – 23 மணி நேரம் 20 நிமிடங்கள்
  • அதிகளவு வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர்களில் முதல் ஐந்து இடம் : அமைச்சர் V.செந்தில்பாலஜி – 17 வினாக்கள், அமைச்சர் சேகர்பாபு – 15 வினாக்கள், அமைச்சர் கே.என்.நேரு – 14 வினாக்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் – 12 வினாக்கள், அமைச்சர் பொன்முடி – 10 வினாக்கள்.

  • அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானங்கள் – 12
  • தகவல் கோரல் என்ற முறையில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்னைகள் – 40
  • அவையில் பதிலளிக்கப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானங்கள் – 15
  • அவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் – 24
  • அவையில் நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் – 03
  • 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் – 03

source https://news7tamil.live/here-are-all-the-events-that-took-place-in-the-tamil-nadu-legislative-assembly-this-year.html


தினமும் 12 மணி நேரம் வேலை; வாரத்தில் 3 நாள் விடுமுறை: தமிழக அரசு புதிய சட்டம்; இடதுசாரிகள் எதிர்ப்பு

 21 4 23 

தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற தொழிற்சாலை சட்டதிருத்த மசோதா கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பொதுவாக 8 மணி நேரம் வேலை வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் தினமும் 12 மணி நேரம் வேலை வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை என்று சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்த நிலையில், இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனாலும் அரசின் சார்பில் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன்படி இன்று சட்டசபையில் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் படி இனி தனியார் நிறுவனங்களில் தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகவும் 3 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த சட்டமசோதாவுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளாக மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பலமான எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனாலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டுக்காக தமிழகத்திற்கு வர தொடங்கியுள்ளன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்மட்டக்குழ அமைக்கப்படும். அதே சமயம் எந்த தொழிலாளர் விரும்புகிறார்களே அவர்களுக்கு மட்டும் இந்த சட்டம் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கனேசன் பேசுகையில், தொழிலாளர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்டால் அடுத்து 5-வது நாள் அவர்கள் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்கு சம்பளம் வழங்கும் சட்டம் உள்ளது. அதே சமயம் விருப்பம் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-passed-12-hours-working-bill-despite-opposition-from-opposition-parties-646149/


இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு!

 19 4 23

சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்க்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சோதியக்குடி மற்றும் கோபால சமுத்திரம் கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது. கோயிலுக்கு எந்த வருவாயும் இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

எனவே மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் திருக்கோயில் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பறிமுதல் செய்ப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இந்த நிலங்களை மீட்பதற்காக மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் விஏஓ சங்கீதா முன்னிலையில், கோயில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கணக்கர் ராஜி ஆகியோரால் சொத்துக்கள் மீட்கப்பட்டது.

சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அந்த இடத்தில் தகவல் பலகையும் வைக்கப்பட்டது.

—அனகா காளமேகன்

source https://news7tamil.live/recovery-of-4-acres-of-temple-land-belonging-to-hindu-religious-charities-department.html


கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு; மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

 19 4 23

MK Stalin brings separate resolutions in assembly, TN Assembly, கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு, மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் மு.க. ஸ்டாலின் தீர்மானம், MK Stalin, reservation to converted christian from SC
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு, மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் மு.க. ஸ்டாலின் தீர்மானம்

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கிறிந்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை புதன்கிழமை கொண்டுவந்தார்.

இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் மக்களையும் பட்டியலில் சேர்த்து, அந்த பட்டியலின மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, சட்டரீதியான அனைத்து உரிமைகளையும் இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டுவர விரும்புகிறேன்.

ஆதி திராவிடர்களாக் இருந்து மதம் மாறிய பின்னரும், தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே, இதனை நாம் கனிவோடு கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி, இந்து, சீக்கியர், பௌத்த மதத்தைத் தவிர்த்து, பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின் வகுப்பில் சேர்ந்தவராகக் கருத முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர்கள் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்பினருக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாக, சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூக ரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த உரிமைகள் தர வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு.

மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால், சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டதல்ல. இத்தகைய சாதி என்பது நீ வேறு, நான் வேறு என்பதாக இல்லாமல். நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கை கோடாக இல்லாமல் செங்குத்து கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. சாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்து இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைத்த தத்துவம்தான் சமூகநீதி தத்துவம். இந்த சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். அந்த வகையில், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் அரசியல் சட்டம் சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011, ஆகிய கால கட்டங்களில் இதே கோரிக்கையை நிறைவேற்ற, பிரதமருக்கு நேர்முகக் கடிதம் எழுதி ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து, வலியுறுத்தி இருக்கிறார். இதே பேரவையில் இந்த கோரிக்கை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று 06.01.2011-ல் ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க சார்பில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெள்யிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தியிருந்தோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டியல் இன மக்களுக்கு இணையாக கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் தரும் வகையில், அரசாணைகள் வெளியிடப்பட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இடஒதுக்கீடு நீங்களாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால், பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகை திட்டங்களும் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முழு நேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுபவர்களுக்கான ஊக்கத் தொகை, உயர் கல்வி சிறப்பு ஊக்கத்தொகை என அனைத்தும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இட ஒதுக்கீட்டை வழங்குவது சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். அரசியலமைப்பு பட்டியல் இன சாதிகள் திருத்த ஆணை 1950-ன் படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும், அட்டவணை சாதிகளில் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956-ம் ஆண்டு, சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும் 1990-ம் ஆண்டு பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பட்டியல் சாதியினராக சேர்க்க திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத் தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.

ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, அவர்கள் தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறிவிடுகிறார்கள் என்றும் மதம் மாறிய பின்பு, அவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால், அது செல்லாது என்றும் மத்ம் மாறியவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்று சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் என்றும் தேசிய பட்டியல் இன ஆணையத் துணை தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.

அப்போது, பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில், ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் பெற்ற பிறகு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதனை வலியுறுத்தும் வகையில், பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

இந்திய அரசிலமைப்பு சட்டத்தில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள, சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள், மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை, கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக ரீதியில் பயன்களைப் பெற அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். சமூக ரீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமன கேட்டு அமைகிறேன்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

கிறிந்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் வரவேற்றுப் பேசினார்கள். இதையடுத்து, இந்த தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-brings-separate-resolutions-in-assembly-for-reservation-to-converted-christian-from-sc-643389/

 

கருப்புக் கொடியுடன் போராட்டம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 265வது நாளாக திரண்ட மக்கள்

 17 4 23

parandhur protest

பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களும், விவசாயிகளும் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் கட்ட முன்மொழியப்பட்டதைக் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை எதிர்த்து போராடி வரும் மக்கள், 265வது நாளான இன்று நூற்றுக்கணக்கான மக்கள் மொட்டையடித்துக்கொண்டு தெருவில் இறங்கினர்.

சென்னை நகருக்கான இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசு அறிவித்துள்ளன.

புதிய விமான நிலையத்திற்காக நீர்நிலைகள், கால்வாய்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட நிலங்கள் சுமார் 4,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான நிலையத்தால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கு கிராம மக்கள், விவசாயிகள் மட்டுமின்றி, ஆர்வலர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மக்கள் தங்கள் எதிர்ப்பை ஒரு தனித்துவமான வழியில் வெளிப்படுத்த கறுப்புக்கொடி ஏந்தியவாறு வீதிகளில் திரண்டு விமான நிலைய திட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/villagers-protest-against-parandhur-airport-640884/



வகுப்புவாத எண்ணம் கொண்டவர்களின் ஊதுகுழல் ஆளுநர்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

10 4 23

வகுப்புவாத எண்ணம் கொண்டவர்களின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சியினரின் கண்ணோட்டத்தில் ஆளுநர் செயல்பட்டு வருவதால் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக ஆக இருக்க ஆளுநர் தயாராக இல்லை என கூறினார்.


மதச்சார்பின்மைக்கு எதிராக பேசும் ஆளுநர், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார் எனக்கூறிய அவர், தினமும் ஒரு கூட்டம் என்ற நிலையில் ராஜ்பவனை, அரசியல் பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டார்.

மேலும், வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநரின் செயல்பாடுகளை மட்டுமே அரசு விமர்சித்து வருவதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அதே நேரத்தில், அரசியல் நோக்கத்தோடு சட்டமன்றத்துக்கு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என தெரிவித்தார்.ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம் என்றும் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், அரசியல் நோக்கத்துக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக இந்த அவையில் சட்டங்களை நாம் நிறைவேற்றுவது இல்லை என்றும், சட்டத்தை தன்னுடைய சுய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு காரணம் சொன்னால், அதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு ஏமாந்தவர்கள் இருக்கும் மாநிலம் அல்ல என்றும் கூறினார்.

source https://news7tamil.live/the-governor-is-the-mouthpiece-of-the-communal-minded-chief-minister-m-k-stalins-heavy-attack.html



10 04 2023

stalin
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க அவருக்கு ஜனாதிபதியும், மத்திய அரசும் அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 10) முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்திற்கு பேரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தனர். அவையில்
146 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 144 பேர் ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர். பா.ஜ.க உறுப்பினர்கள் 2 பேர் இருந்த நிலையில் அவர்கள் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாகவும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாவும் தி.மு.க அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா உள்ளிட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் வைத்துள்ளார்.

இந்தநிலையில் அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி, “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தால், அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்” என்று கூறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் அவருக்கு அறிவுரை வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. மக்கள் நலனுக்கு கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் வருத்தம் ஏற்படுகிறது.

வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழல்

நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற போதும், பதவிக்கான மரியாதையை கொடுக்க தவறவில்லை. மக்களுக்கும் அரசுக்கும் வழிகாட்டியாக, நண்பராக ஆளுநர் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால் ஆளுநர் அரசியல் கட்சி கண்ணோட்டத்தில் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்ற நிலையை தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். தமிழக அரசுக்கு எதிராக பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளார். ஆளுநர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக இருக்க வேண்டும்.

சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் என்ற நிலை மாறி அரசியல்வாதியாக ஆளுநர் பேசுகிறார். தமிழக மக்களின் நலனுக்கு குறுக்கே நிற்கிறார். மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார். சட்டசபையை அவமதிக்கிறார். வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக உள்ளார். ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றி வருகிறார்.

மக்கள் ஏமாளிகள் அல்ல

ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்ல சட்டசபையை அரசியல்மன்றமாக மாற்ற விரும்பவில்லை. சட்டசபைக்கு அரசியல்நோக்கத்தோடு இடைஞ்சல் கொடுக்க நினைத்தால், வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட காலக்கெடுவை ஜனாதிபதி, மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை, ஜனாதிபதியும் , மத்திய அரசும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்றார்

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-passes-resolution-against-governor-ravi-633662/



முதல் கட்டமாக இந்த நகரங்களில் இலவச வைஃபை: பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு

 21 03 23

2023-24-ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நேற்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றப் பின் தாக்கல் செய்யப்படும் 3-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தகவல் மற்றும் பல்வேறு துணை சார்ந்த வாய்ப்புகளை அனைவரும் அணுகும் வகையில் முதல் கட்டமாக 7 நகரங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த இணைய யுகத்தில் தகவல் பரிமாற்றம் அடிப்படை தேவையாக உள்ளது. சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை நிறுவ, தகவல் மற்றும் வாய்ப்புகளை அனைவரும் அணுகுவது இன்றியமையாதது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

மேலும் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் எளிதாகவும், வெளிப்படையாகவும் வழங்க ‘Simple Gov’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/technology/free-wi-fi-zones-to-come-up-in-chennai-avadi-tambaram-617544/


சேலத்தில் தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க பிரமுகர் அதிரடி கைது


  31 1 2023

சேலத்தில் தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க பிரமுகர் அதிரடி கைது

சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கும்பாபிஷேகம் முடிவுற்று, மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2, 3 நாட்களுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த, அந்த ஊராட்சியின் தலைவரும், தி.மு.க சேலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞர் மற்றும் அவரது தந்தையை கிராம மக்கள் முன்னிலையில் நிற்க வைத்து, கடுமையாக திட்டியுள்ளார். வார்த்தைக்கு வார்த்தை ஆபாச சொற்களால் காது கூசும் அளவிற்கு இளைஞரை ஊர் மக்கள் மத்தியில் மாணிக்கம் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.

வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதையடுத்து, தி.மு.க தலைமை உடனடியாக மாணிக்கத்தை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, மாணிக்கத்தை தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கூறி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் மாணிக்கத்தின் மீது புகார் கொடுத்ததன் பேரில், அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணிக்கத்தை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளளனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-panchayat-president-arrested-for-abusing-dalit-youth-in-salem-585243/



திருட்டுத்தனம்.. | வெளுத்துவாங்கிய Wilson MP ! #dmk #wilson #tamilnadu


ஆளுனர் குறித்து அவதூறு பேச்சு : தி.மு.க பேச்சாளர் இடைநீக்கம்

 ஆளுனர் குறித்து அவதூறு பேச்சு : தி.மு.க பேச்சாளர் இடைநீக்கம்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பாட்டதாக திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துறைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வில் தலைமை கழக பேச்சாளராக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த ஜனவரி 12-ந்’ தேதி நடந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய இவர், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிரான அவதூராகவும் கொலை மிரட்டல் விடுப்பது போன்று பேசினார்.

ஆளுநர் தனது சட்டமன்ற உரையில் “அம்பேத்கரின் பெயரை உச்சரிக்க மறுத்தால், அவரைத் தாக்க எனக்கு உரிமை இல்லையா? தமிழக அரசு ஆற்றிய உரையை நீங்கள் (கவர்னர்) படிக்கவில்லை என்றால், காஷ்மீருக்குச் செல்லுங்கள், நாங்கள் பயங்கரவாதிகளை அனுப்புவோம், அதனால் அவர்கள் உங்களை சுட்டு வீழ்த்துவார்கள் என்று தனது பேச்சில் கூறியிருந்தார்.

மேலும் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையை கிண்டல் செய்து, அவர் ஒரு இந்தியரா என்று கேள்வி எழுப்பிய கிருஷ்ணமூர்த்தி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்த அவர், அவர் ஒரு ஆண்மகனா? நமது முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அனைவரும் ஆண்களே, ஏனென்றால் அவர்கள் மகன்களை இந்த உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

சமீப காலமாக தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாகப் பேசியதாக சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

14 1 2023



source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-leader-suspended-over-abusive-speech-against-tamil-nadu-governor-rn-ravi-576714/


  சட்டப்பேரவை ஹைலைட்ஸ் 14 1 2023

 தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் 5வது நாள் அமர்வில், தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப்பணி, 2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்புகள் மற்றும் பதிலுரைகள் இடம்பெற்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது நாள் கூட்டம் இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். முன்னதாக சட்டப்பேரவையில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 2022-23-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிட்டார். அதில், மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,31,407 கோடி, மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி என்று தெரிவித்தார்.

2022-23-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில சட்டப் பிரிவுகளுக்கு இணங்க 2022-2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தொடர்பான வரவுகள் மற்றும் செலவுகளின் போக்குகள் குறித்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2022 வரையிலான 6 மாத காலத்திற்கான ஆய்வினை 2022-ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 30-ம் நாளன்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்படுகின்றது.

இந்திய அரசின் உதவி மானியங்கள் மற்றும் மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு உட்பட 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,31,407 கோடி. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி.

இது 2022-2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய் வரவுகளில் 48.46 சதவீதம் ஆகும். இது 2021-2022-ம் ஆண்டில் அதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாய் வரவுகளைக் காட்டிலும் 31.61 சதவீதம் கூடுதலாகும். மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் குறித்த ஒப்பீட்டு விவரம் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான முதல் 6 மாதங்களில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.72,441 கோடியாகும். இது 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 50.73 சதவீதம் ஆகும்.

இது முந்தைய ஆண்டின் அதாவது 2021-2022-ம் ஆண்டு அதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயோடு ஒப்பிடும்போது 36.92 சதவீதம் உயர்ந்துள்ளது.

2022-23 வரவு செலவுத் திட்ட மதிப்பீடான ரூ.15,537 கோடியில், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பெறப்பட்ட வருவாய் ரூ.5,994 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட ரூ.3,974 கோடி வருவாயை காட்டிலும் 50.83 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, 2022-23-ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 38.58 சதவீதமாக உள்ளது.

மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு 15-வது நிதிக்குழுவினர் பரிந்துரையின்படி, மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 2020-2021ஆம் ஆண்டு 4.189 சதவீதத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 4.079 சதவீதமாக சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு நிதி அளிக்கும் திட்டங்கள் உள்பட, இந்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.39,759 கோடி என கணிக்கப்பட்டதில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18,367 கோடி பெறப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கணக்கிப்பட்ட உதவி மானியத்தில் 46.20 சதவீதமாகும். செப்டம்பர் 2022 வரை பெறப்பட்டுள்ள வருவாய் இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டு பெறப்பட்ட ரூ.17,717 கோடியைக் காட்டிலும் 3.67 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் தமிழ்நாடு அரசுப் பணி – சட்டத்திருத்தம்

2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞரை நூறு விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆட்சேர்ப்பு முகாமைகள் மூலம் நடத்தப்படும் நேரடி ஆள்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


இந்த சட்டத் திருத்தம் குறித்து பேசிய பா.ம.க, வி.சி.க, த.வா.க கட்சிகள் தமிழர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என 2021 டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், திருத்தம் செய்யப்பட்டுள்ள சட்டத்திலும் விண்ணப்பிக்க கூடிய நபர் எவரும் என குறிப்பிடுவதால் பிற மாநிலத்தவரும் தேர்வெழுத வாய்ப்பாக அமைவதாக கூறினார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் சிலர் ஆட்சியாளர் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழை பயின்று அரசுப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது என கேள்வி எழுப்பிய வேல்முருகன், ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் குடியிருக்கும், தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அடுத்து பேசிய பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, வெளிமாநிலத்தவரும் தேர்வெழுத அனுமதித்தால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கையேந்தும் சூழல் உருவாகும் என்பதால், சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதே கருத்தை வலியுறுத்திய வி.சி.க உறுப்பினர் ஆளூர் ஷாநாவாஸ், உறுப்பினர்கள் கோரும் திருத்தங்களை மேற்கொண்டால் தமிழக மக்கள் அனைவரும் சட்டத்தை வரவேற்பார்கள் என கூறினார். இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், இன்றைக்கே இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகியிருப்பதாகவும், இன்றைக்கு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வராவிட்டால், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்பதே ரத்தாகி விடும் என கூறினார்.உறுப்பினர்கள் கோரிய திருத்தங்கள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, இந்த சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது.


செங்கம் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டி – எம்.எல்.ஏ. கிரி கோரிக்கை

செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. கலைஞர் பெயரில் ஒன்றும் அண்ணா பெயரில் ஒன்றும் வந்தவாசி பகுதியில் ஒரு கல்லூரியும் உள்ளது. செங்கம் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை. செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 12-ம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தனியார் பள்ளியில் படித்தவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இதனால் செங்கம் தொகுதிக்கு கல்லூரி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஓராண்டில் 31 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளது. அங்கு 3 கல்லூரிகள் இருக்கின்றது. மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. சபாநாயகர்கூட கல்லூரி ஒன்றை கேட்டுள்ளார். எங்கே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறதோ அங்கு கல்லூரிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு


ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15-9-2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெரும்பாலான பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்த திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், நான் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தேன். அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த இலக்கினை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் விதமாக, பல முதலீட்டாளர்கள் மாநாடுகளை துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. மேலும், உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின்ஆண்டுக் கூட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11 ஆம் நாட்களில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என்ற அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டமன்றத்தின் விழுமியங்களை போற்ற நான் எனது சக்தியை மீறி செயல்படுவேன் – மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சமத்துவ போராளி அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, எங்களை எல்லாம் ஆள்ளாக்கி அழகுபார்த்த நவீன தமிழ்நாட்டி சிற்பி முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், இவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்த திராவிட மாடல் ஆட்சி.

தி.மு.க அரசு 20 மாதங்களை கடந்துள்ளது அதற்குள் இமாலய சாதனை செய்துள்ளோம். இலக்கினை அடைவதை நோக்கமாக கொண்டு நாம் செயல்பட்டோம். மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது. அதுவே மக்களின் மனதை வென்றது. சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுய ஆட்சி, ஆகிய தத்துவங்களில் அடிப்படையில் எழுப்பப்பட்ட பலம்வாய்ந்த இயக்கம் தி.மு.க.

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அமையவேண்டுமென நாம் திட்டமிட்டோம். திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது சரித்திரபயணமாக ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 9-ம் தேதி கவர்னர் இந்த மன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான தொடக்க உரையை ஆற்றினார். அன்று நிகழ்ந்தவற்றை நான் மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்ந்தவும் நூற்றாண்டை கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களை போற்றவும், நான் எனது சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இந்த மாமன்றமும், என்னை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்பெருமக்களும் நன்கு அறிவார்கள்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா… மயிலாட வான்கோழி தடை செய்வதோ? மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ? முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ? அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ? உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ? அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ? என்ற திராவிட இயக்க கவிஞர் முத்துக்கூத்தன் கவிதையை நாம் என்று நினைவில் கொண்டு பெருமித நடைபோடுவோம்.

தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க, என்றும் உழைக்கும் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நிரூபித்துக்காட்டிய நாளாக அன்றைய தினம் (ஜனவரி 9) அமைந்திருந்ததே தவிர வேறொன்றும் இல்லை” என்று கூறினார்.

2023-ம் ஆண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கடந்த 9-தேதி தொடங்கியது. ஆளுநர் வெளிநடப்பு சம்பவம் களேபரமானது. தொடர்ந்து இன்று 5-வது நாள் நடைபெற்ற கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது.

இன்று நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-highlights-mk-stalin-ptrp-thiagarajan-world-investors-conference-576169/

சட்டசபை ஹைலைட்ஸ் 12 1 2023 

சட்டசபை ஹைலைட்ஸ்: சேது சமுத்திர திட்டம் … அமைச்சர் உதயநிதி முதல் பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3வது நாள் கூட்டத்தில் இன்று சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேச்சு என இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளில் இடம்பெற்றது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானம்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி, “தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பல எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம்” என்று கூறினார்.

இந்த தீர்மானம் குறித்து மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசுகையில், “தமிழருக்கு மிகப்பெரிய அளவில் உதவக்கூடிய சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சியை மனதார வரவேற்கின்றேன்” என்று கூறினார்.

சேது சமுத்திரத் திட்டம் குறித்தான தீரமானம் குறித்து பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “இந்த அரசின் தனித் தீர்மானத்தின் மீது ஆதரவா இல்லையா என்று மட்டுமே பேச வேண்டும். உறுப்பினர்கள் ராமாயணத்தை பற்றி எல்லாம் பேசி வருகிறார்கள். உறுப்பினர்கள் விமர்சித்து பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.

அப்போது, குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மதத்தையோ தெய்வத்தையோ விமர்சித்து யாரும் பேசவில்லை” என்று கூறினார். பின்னர், தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “சேது திட்டம் வருமேயானால் எங்களைவிட மகிழ்ச்சியடைபவர்கள் யாரும் இல்லை. மண் எடுக்க எடுக்க சரிந்து கொண்டே இருக்கும். ராமர் பாலம் சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்றினால் ஆதரிக்கிறோம். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சட்டசபையில் பாஜக ஆதரவு தரும்” என்று கூறினார்.

இதையடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “2000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு தி.மு.க ஆதரவு அளிக்கிறது” என்று கூறினார்.

மேலும், அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சேது சமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தான் கொண்டு வந்த தீர்மானம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் கப்பல்களின் பயண நேரம் பெரும் அளவில் குறையும். தமிழ்நாடு, அண்டை மாநில துறைமுகங்களின் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும். சிறு, சிறு துறைமுகங்களை உருவாக்க முடியும். கடல்சார் பொருள் வர்த்தகம் விரிவடையும்” என்று கூறினார். இதையடுத்து, இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் 28.88 கால்நடைகளுக்கு தடுப்பூசி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் 28.88 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என பதிலளித்தார். தமிழ்நாடு அரசு வழங்கும் கால்நடை மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் இல்லை. ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய கால்நடை மருந்துகளுக்கு தான் தட்டுப்பாடு உள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை வழக்கம் போல காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

போதைப்பொருள் தடுப்பில் புதிய வரலாறு படைத்துள்ளது இந்த ஆட்சி – மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “கடந்த நவம்பர் மாதம் சர்வதேச மதிப்பில் விலை உயர்ந்த போதைப் பொருள் பிடிபட்டதாக கடலோர காவல் படை அதிகாரி தெரிவித்துள்ளார். அவை சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது. அதனுடைய உண்மை நிலை என்ன? முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை இந்த ஆட்சி ஒரு புதிய வரலாற்றை படைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. 2022 முதல் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். தமிழ்நட்டில் 12,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 250 எதிரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி நானே உயர் அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்.பி-களோடு ஆய்வு நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். தி.மு.க ஆட்சியில் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதோடு வழக்குகளை திறம்பட நடத்தி தண்டனை பெற்றுத் தருவது நடந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்தி ஆய்வு செய்யவில்லை. அது இப்போதுதான் நடக்கிறது.

இந்த ஆட்சியில் நடத்தப்பட்டது போல கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பத்தாண்டு கால உங்களுடைய ஆட்சியில் நடத்தப்படவே கிடையாது. அ.தி.மு.க ஆட்சியில் நோய் போல வளர்ந்து வந்தது. இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடியவர் அப்போது அமைச்சராக இருந்தவர், டி.ஜி.பி-யை விசாரிக்க நீதிமன்றமே கூறியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் போதை பொருட்களை தடுக்காததால் இப்பொழுது நாங்கள் இவ்வளவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கிறோம்” என்று கூறினார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 84 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது – செந்தில்பாலாஜி

திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் இருந்த 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். கோயில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் மாற்றி தரப்படும். புகார் தெரிவித்த 2 நாட்களுக்குள் டாஸ்மாக் கடைகள் மாற்றி தரப்படும் எனவும் கூறினார்.

அமைச்சரான பின் உதயநிதியின் முதல் பேச்சு

சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது, தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில், பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள் வசதிகள் உருவாக்கப்படும். அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 2023-க்குள் மற்றும் கைப்பந்து ஆடுகளப் பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி, 400 மீ தடகள் பாதை, கால்பந்து மைதானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-highlights-setu-samudhram-project-mk-stalin-minister-udhayanidhi-first-speech-575686/


சட்டப்பேரவை ஹைலைட்ஸ்: 11 1 2023

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் (ஜனவரி 09) தொடங்கியது. தமிழ்நாடு அரசு கொடுத்த ஆளுநர் உரையில் திராவிடநாடு, சமூகநீதி, அம்பேத்கர், அமைதிப்பூங்கா உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருந்த பகுதியை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில் படித்ததால் சட்டப்பேரவையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதையடுத்து, மு.க. ஸ்டாலின், ஆளுநர் படித்த உரையைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு அச்சிட்டு விநியோகித்த ஆளுநர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இப்படி இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாள் கூட்டம் களேபரமாக முடிந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் 3வது நாளான இன்று (ஜனவரி 11) ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

மதிநுட்பத்துடன் செயல்பட்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றிய முதல்வருக்கு பாராட்டு

ஆளுநர் உரைக்குப் பிறகு, முதலமைச்சரை பேச அனுமதித்தது விதிமீறல் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து பேசிய சபாநாய்கர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தபோது, ஏற்பட்ட அசாதாரண சூழலை முதல்வர் சரியாக கையாண்டு மதிநுட்பத்துடன் செயல்பட்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: “ஆளுநர் உரையில் பல குளறுபடிகள் இருந்தன. உரையை வசிப்பது மட்டும்தான் ஆளுநரின் கடமை. உரையில் உள்ள வரிகளுக்கு அரசுதான் பொறுப்பு. ஆனால் ஆளுநர் உரையை மாற்றிப் படித்ததால், அவையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அப்போது முதல்வர் மதிநுட்பத்துடன் செயல்பட்டார். அவையில் இருப்பவர்களை அமைதிபடுத்தினார். விதி எண் 17 ஐ தளர்த்தி ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதை பதிவு செய்யுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரி சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாத்தார். அவருக்கு நன்றி. பிற மாநிலங்களுக்கு ஓர் முன்மாதிரியான சட்டமன்றமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பிற மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் செயல்பட்ட முதல்வரின் செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ஆளுநரின் உரை தொடர்பான தீர்மானம் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆளுநரின் உரிமை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் அமைந்ந்துள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்த பிறகு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அரசு மீது குற்றச்சாட்டு வைக்கும் போது எதன் அடிப்படையில் என குறிப்பிட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றால், எந்த சம்பவம் என குறிப்பிட்டு சொல்லுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எடுத்த எடுப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டது என பேசுகிறார். அவர் பேசுவதற்கு அனுமதி அளியுங்கள். நான் அதற்கு பதிலளிக்கிறேன். அவர் ஆட்சியில் என்ன நடந்தது என்ற பட்டியல் உள்ளது. அவருடைய ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீரழிந்தது என்பதை நான் ஆதாரத்தோடு விளக்குகிறேன். அவர் பேசுவார் எனில், நானும் பேச தயார்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தினம்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இ.பி.எஸ் பேசும்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என்று கூறினார்.

அவருக்கு பேச அனுமதி கொடுங்கள் என முதலமைச்சர் தெரிவிக்க, ஆளும் கட்சி அனுமதி அளித்தால் தான் பேச அனுமதிக்கிறீர்கள் என சபாநாயகர் அப்பாவு மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இ.பி.எஸ்-சின் இந்த குற்றச்சாட்டும்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்வாறு சபாநாயகரை குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது. இது மரபு அல்ல என்று கூறினார்.

அப்போது, சபாநாயகர் அப்பாவு, அவர்கள் இந்த பிரச்சனை குறித்து பேசுவதாக தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அவருக்கு பேச அனுமதி கொடுங்கள். பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். நான் ஓடி ஒளியமாட்டேன்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசியதாவது: “காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார். ஆனாலும், முழுமையாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அ.தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.விஜயபாஸ்கர், ஜி.கே. மணி உள்ளிட்டோர் இன்று பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சாதிக் கொடுமையை சான்றோர்களே தவறு என்று உணரச் செய்து தனது கல்வியால் சட்டமும் கல்வியும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை அம்பேத்கர். அத்தகைய மாமேதை பிறந்த மண்ணில் சாதிய பாகுபாடு தீண்டாமை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது, கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை போட்டு அசுத்தம் செய்தது தொடர்பாக இங்கே பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி, இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டுவந்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று ஒட்டுமொத்தமாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக, அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள, தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்த அவையிலே நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூக நீதி. அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும், வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்ற எண்ணம்தான் சமூக நீதி. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதி செய்வதன் மூலமாகத்தான் அத்தகைய சமூக நீதியை நாம் வழங்கிட முடியும்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி என்னும் அசைக்க முடியாத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். சாதிக் கொடுமையை, சான்றோர்களே தவறு என்று உணர்ந்து கொள்ளச் செய்து, தன் ஓங்கி உலகளந்த கல்வியால், சட்டமும், பொருளாதாரமும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை டாக்டர் அம்பேத்கர். அத்தகைய மாமேதை பிறந்த இந்த மண்ணில், சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை இன்னும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்திற்குரியது; கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.” என்று கூறினார்.

ஆளுநரின் விருந்தினர் மீது உரிமை மீறல் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜன.11) பேசிய தி.மு.க எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, ஆளுநர் உரையின்போது ஆளுநரின் விருந்தினர் சபை மாடத்தில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்தார் என்று தெரிவித்து, ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இது தொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, இதில் உரிமை மீறலுக்கான காரணம் இருப்பதால் தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்ற உரையின் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது என்று தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-highlights-speaker-praise-cm-and-thanks-and-sorry-to-governor-574940/




திராவிட மாடல் என்ற சொல்லுடன் அரசு தயாரித்த ஆளுநர் உரை சட்டப்பேரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 9 1 23

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார். தொடர்ந்து அவர் தனது உரையில் திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தார்.

தொடர்ந்து ஆளுநரின் உரைக்கு முதலமைச்சர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்தார்.தமிழக அரசால் அச்சடிக்கப்பட்ட உரையை தவிர்த்து ஆளுநர் உரையாற்றியது வருத்தமளிப்பதாக கூறினார். மேலும், உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் அரசு, அமைதிப்பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்திருந்தார்.

எனவே, ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும், இணைத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது

இதையடுத்து, உடனடியாக அரசு தயாரித்த ஆளுநர் உரையை ஆங்கிலம் மற்றும் தமிழ் உரையை சட்டப்பேரவையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அச்சடிக்கப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகளை நீக்கி ஆளுநர் உரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், திராவிட மாடல் அரசு, அமைதிப்பூங்கா உள்ளிட்ட அச்சிடப்பட்ட அனைத்தும் அடங்கிய ஆளுநரின் உரை இணையத்தில் பதிவேற்றப்பட்டது.

 

source https://news7tamil.live/the-governor-rn-ravi-speech-prepared-by-the-government-is-uploaded-on-the-website-of-the-legislative-assembly.html

அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது சட்டப்பேரவை மரபுகளை மீறிய செயல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 9 1 23

அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி, முழுமையாக படிக்காதது சட்டப்பேரவை விதிகளுக்கு முரணானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:-

ஆளுநருக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில்,  அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.

பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல – அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.

ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”

ஆளுநர் உரை தொடர்பாக தீர்மானத்தை கொண்டுவந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார். பின்னர் இந்த தீர்மானம்  சட்டப்பேரவையில் நிறைவேறியது.


source https://news7tamil.live/cm-mk-stalin-speech-in-assembly-about-governor.html




திமுக அரசு கடும் கண்டனம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பின்னணி என்ன?

 9 1 2023 

திமுக அரசு கடும் கண்டனம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பின்னணி என்ன?
தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என். ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக இடையேயான முறுகல் நிலை திங்கள்கிழமை (ஜன.9) புதிய உச்சத்தை தொட்டதால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
கவர்னரால் பேசிய சில வார்த்தைகளை அகற்ற ஆளுங்கட்சி சபாநாயகரிடம் முறையிட்டது. முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு தமிழகம் என்பது மாநிலத்திற்கு மிகவும் பொருத்தமான பெயர் என்று ஆளுநர் பரிந்துரைத்திருந்தார்.

2021 செப்டம்பரில் ரவி ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து இரு தரப்புக்கும் இடையே பரபரப்பான உறவு உள்ளது. கடந்த ஏப்ரலில், பல அமைச்சரவைப் பரிந்துரைகள் மற்றும் ஒரு டஜன் மசோதாக்களை நிறைவேற்றுவதில் ரவியின் தரப்பில் கூறப்படும் தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த ஏப்ரலில் ஸ்டாலின் அரசு ரவி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தது.
மருத்துவ சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்யக் கோரியும், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அப்போது, திமுக தினசரி நாளிதழான முரசொலி தனது தலையங்கத்தில், “தமிழகத்தில் பா.ஜ.க.வின் வாக்கு தளம் எங்கு மிச்சமிருக்கிறதோ அங்கெல்லாம் வளர்க்கும் முனைப்பில் உள்ளது.

ஆளுநர் ரவி தனது அரசியல் சாசனப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தேவையற்ற அரசியலை தமிழகத்தில் நடத்துகிறார். அவர் பாஜக தலைவர் போல் செயல்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபரில், கோயம்புத்தூர் கார் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவத்தில் மாநில அரசின் நடவடிக்கையை விமர்சித்த ஆளுநர், மீண்டும் மாநில அரசை உலுக்கினார்.
“தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பது தெளிவாகிவிட்டது. பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஒரு பெரிய சதியைக் குறிக்கின்றன. தமிழ்நாடு காவல்துறைக்கு நான் பெருமை சேர்க்கிறேன். ஆனால், சில மணி நேரங்களிலேயே வழக்கை முறியடித்தபோது, என்ஐஏவைக் கொண்டு வர நான்கு நாட்கள் ஏன் எடுத்தார்கள் என்பதுதான் கேள்வி.

தமிழ்நாடு காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால் அதுவும் ஒரு கருவிதான்… என்ஐஏவை உள்ளே வரச் சொல்ல முடியாது… அந்த அழைப்பை எடுக்க வேண்டியவர்கள் அதைச் செய்ய நான்கு நாள்கள் ஆனது” என்று ரவி கூறினார்.

அடுத்த மாதம், திமுகவை உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, ரவியை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது.
ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 20 மசோதாக்களின் பட்டியலை அது இணைத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை, தேர்ந்தெடுக்கப்படாத ஆளுனர் எதிர்த்தால், அது “அரசியலமைப்புச் சட்ட புரட்டலாக” மாறுகிறது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி 2012 இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கூட்டு உளவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார், பின்னர் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்தார். ஆனால் நாகா அமைதிப் பேச்சுக்களுக்கு மையத்தின் தலையாட்டியாகவே அவரது மிக உயர்ந்த பணி உள்ளது.

ஆகஸ்ட் 2015 இல், NSCN(IM) நாகா அமைதி ஒப்பந்தத்திற்கான மையத்துடன் ஒரு கட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மற்றும் ரவி அவர்களின் முடிவுக்கு பேச்சு வார்த்தைகளை எடுத்துச் செல்வதற்காக உரையாசிரியராக நியமிக்கப்பட்டார்.

அரசாங்கத்தின் காலக்கெடுவான அக்டோபர் 31, 2019 இல் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததாக அரசாங்கமும் நாகா குழுக்களும் தெரிவித்தாலும், எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை, மேலும் ரவிக்கும் NSCN (IM) க்கும் இடையிலான உறவுகள் அவிழ்க்கப்பட்டன. என்.எஸ்.சி.என் (ஐ.எம்) பேச்சு வார்த்தைகள் தடம் புரண்டதற்கு ரவி மீது குற்றம் சாட்டியுள்ளது.

இந்தச் சூழலில்தான் ரவி தமிழ்நாட்டுக்கு வந்தார், அவர் வகிக்கும் அரசியல் சாசனப் பதவிக்கு அவரது மோதல் குணம் சரியாகப் போகாது என்று விமர்சகர்கள் கூறினர்.
பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குப் பிறகு, திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மாநிலத் துறைகள் விளக்கங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ரவியின் கோரிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் கடும் ஆட்சேபனைகளை எழுப்பிய நிலையில், மாநில தலைமைச் செயலாளர் வி.இறை அன்பு சர்ச்சையைக் குறைத்து ஆளுநரின் உத்தரவை “வழக்கமான தொடர்பு” என்று அழைத்தார்.

ஒரு தலையங்கத்தில், முரசொலி, ரவியின் ஐபிஎஸ் பின்னணி மற்றும் நாகாலாந்தில் அவரது பணியை குறிப்பிட்டு எழுதினார், “இது நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு… ஒருவேளை காவல் துறைக்கு மிரட்டும் தந்திரங்கள் தேவைப்படலாம் மற்றும் பல சந்தர்ப்பங்களில் உதவியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் இதுபோன்ற தந்திரங்கள் எதையும் சாதிக்க உதவாது என்பதை அவர் உணர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-govts-object-of-ire-who-is-tamil-nadu-governor-rn-ravi-573680/



ஆளுநர் ஓடிய ஓட்டம் 08 1 2023

 


Credit YT : NakkheeranTV



எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, கைவிட்டுவிட்டதாக ஜாக்டோ ஜியோ 

 7 1 2023

எதிர்க்கட்சி தலைவராக ஆதரித்த ஸ்டாலின்… ஆட்சிக்கு வந்த பிறகு கைவிட்டுவிட்டார் – ஜாக்டோ ஜியோ

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, கைவிட்டுவிட்டதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தி.மு.க அளித்த வாக்குறுதகளை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்ற மறுத்தால், வரும் தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் தி.மு.க-வை கைவிடுவார்கள் என்று கூறினார்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினருமான டி.கனகராஜ் பேசுகையில், “அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முந்தைய அ.தி.மு.க அரசால் பறிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை கைவிட்டுவிட்டார். கடந்த ஆட்சியில் நாங்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியபோது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உண்மையான கோரிக்கைகளைக் கூட செவிசாய்க்கவில்லை என்று ஸ்டாலின் எங்களிடம் கூறினார். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று உறுதி அளித்து போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இப்போது, அவர் தனது அரசாங்கம் அளித்த வாக்குறுதியையும் சமூக நீதியையும் மறந்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சி 2013-ல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தியபோது, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தாலும், தவறை உணர்ந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு புத்துயிர் அளித்தது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என்பதால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் குப்பையில் போட்டுவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மு.க. ஸ்டாலின் கொண்டு வர வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

காலவரையின்றி முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் விடுப்பு சரண்டர் செய்தல் முறையை தாமதப்படுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அகவிலைப்படி உயர்வு குறித்த சமீபத்திய அறிவிப்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை கைவிடப்பட்டதால், அதையும் சேர்க்க வேண்டும். முதுகலை மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும்.இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தினர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/jactto-geo-said-mk-stalin-let-govt-staff-down-after-coming-to-power-572714/


கோவை: ஆளுனருக்கு எதிராக போஸ்டர் யுத்தம் தொடங்கிய தி.மு.க

 10 12 2022

கோவை: ஆளுனருக்கு எதிராக போஸ்டர் யுத்தம் தொடங்கிய தி.மு.க

கோவை தி.மு.க வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் சார்பில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம் தூங்கிக் கொண்டிருப்பதாக கோவை மாநகரில் பல்வேறு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என பேரறிஞர் அண்ணா கூறியதை முதன்மையாக கொண்டு, ஆளுநருக்கு ஆண்டு செலவு 6.5 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2020 முதல் இந்த ஆண்டு மே 30ஆம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டு, நிறைவேற்றப்படாத 21 சட்ட மசோதாக்கள் குறித்து பட்டியல் அச்சிடப்பட்டுள்ளது.

அதில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்ட திருத்தம், ஆன்லைன் ரம்மி ஒழிப்பு மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் குறிப்பிடப்பட்டு “இவையெல்லாம் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில் இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறட்டை விட்டு தூங்க முடியுமா? தூங்கினால் துயரப்பட நேரும் எச்சரிக்கை! என அச்சிடப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/kovai-dmk-pastes-poster-against-bills-pending-in-tamilnadu-governor-office-556133/




EWS இடஒதுக்கீடு: ரூ. 8 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு கோரி தி.மு.க வழக்கு

 23 11 2022

ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தி.மு.க நிர்வாகி குன்னுார் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள அனைவருக்கும் வருமான வரி விலக்கு அளிக்கக் கோரி, திராவிட தி.முக-வைச் சேர்ந்த குன்னூர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க-வின் சொத்து பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் குன்னூர் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது நிதிச் சட்டம் 2022-ன் ஒரு பகுதியாக உள்ளது. ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களை பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் ஜே. சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் மத்திய அரசு, மத்திய சட்டத்துறை, மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

“ரூ. 7,99,999 வரையிலான மொத்த வருமானம் உள்ள குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் இடஒதுக்கீட்டின் கீழ் பலன்களைப் பெறுவதற்கான வருமான அளவுகோல்களை அரசு நிர்ணயித்திருக்கும் போது, ​​ரூ. 7,99,999 வரம்பு வரை வருமானம் உள்ள தனிநபர்களிடம் இருந்து வருமான வரி வசூலிக்க அரசை அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், அதில் பகுத்தறிவோ சமத்துவமோ இல்லை” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு அறிவிப்பின்படி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி-களுக்கான இடஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் வராதவர் மற்றும் அவரது குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், இடஒதுக்கீடு பெற EWS என அடையாளம் காணப்பட வேண்டும். அரசாங்க அறிவிப்பில் வருமானம் என்ன என்பதைக் குறிப்பிட்டது. மேலும், சில நபர்களின் குடும்பங்கள் குறிப்பிட்ட குறிப்பிட்ட சொத்துக்களை வைத்திருந்தால், EWS பிரிவில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-functionary-plea-in-madras-high-court-income-tax-exemption-ews-546269/



10% இட ஒதுக்கீடு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி தீர்மானம்

 12 11 2022

10% இட ஒதுக்கீடு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி தீர்மானம்
EWS quota: Tamil Nadu legislature parties decides to file review petition, CM MK STALIN Tamil News

EWS quota: MK STALIN Tamil News: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினர். பின்னர் கூட்டத்தில் முடிவில் 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் முடிவு செய்யப்பட்டது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/ews-quota-all-party-meeting-under-cm-mk-stalin-tamil-news-540528/



20 மசோதா பென்டிங்… ஆர்.என் ரவியை பதவி நீக்க தி.மு.க முறையிடுவது ஏன்?

 10 11 2022

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டதாகவும், மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான மசோதாக்களில் அவர் கையெழுத்திடத் தவறியதாகவும் கூறி அவரை திரும்ப பெற வேண்டும் என திமுக, திரௌபதி முர்முவிடம் மனு அளித்துள்ளது.

திமுகவின் வாதம் என்ன?

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அறிக்கை, மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் மிகவும் அவசரமான விஷயத்தை சுட்டிக்காட்டுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஆளுநர், அரசின் பெயரளவிலான தலைவராக இருப்பதால், மாநிலத்தின் தலைமையிலுள்ள முதலமைச்சரைக் கொண்ட அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி [நிர்வாக] அதிகாரத்தைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறார். …

ஆளுநர் முக்கியமான அரசியலமைப்புச் செயல்பாடுகளைச் செய்கிறார், எனவே அவர் பாரபட்சமற்றவராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும், மேலும் இந்த இலட்சியங்களில் எதிலும் நம்பிக்கை இல்லாத ஆளுநர் அரசியலமைப்புப் பதவி வகிக்கத் தகுதியற்றவர்.

அரசியலுக்கு மாறிய ஆளுநர் பதவியில் இருந்து விலகுவது கட்டாயம், மேலும் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை எதிர்க்கும்போது, ​​அது அரசியலமைப்புச் சீர்கேடாக மாறும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் மீது அரசு ஏன் வருத்தப்படுகிறது?

மு.க.ஸ்டாலின் அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே கடந்த பல மாதங்களாக பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த அக்டோபர் 23-ம் தேதி கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அரசின் பதில் குறித்து ஆளுநரின் விமர்சனமும் இதில் அடங்கும்.  சனாதன தர்மத்தைப் புகழ்வது, மேலும் வகுப்பு வெறுப்பைத் தூண்டுவதாகவும் ஆளுநர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் கேரளாவில் ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களுக்கும் இடையே இதேபோன்ற உரசல் காணப்படுகிறது, இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளால் ஆளப்படுகின்றன.

இந்த அனைத்து மாநிலங்களிலும், மஹாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசு மற்றும் யூனியன் பிரதேசமான டெல்லியிலும், ஆளுநர்/துணைநிலை ஆளுநர் பாஜக தலைமையிலான மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஒரு பக்கச்சார்பான முறையில் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திமுக மனுவில், குறிப்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இதில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து மாநிலத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும் அடங்கும்.

ஒரு ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு எதிராக பகிரங்கமாக முரண்படுவது அல்லது காலவரையின்றி காலதாமதம் செய்து, மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதன் மூலம் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் சூழ்நிலையை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய முறையில் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது மாநில நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், சட்டமன்றத்தின் வணிகப் பரிவர்த்தனையில் தலையிடுவதாகவும் உள்ளது…மசோதாவின் தேவை அல்லது அவசியத்தை ஆளுநரால் விசாரிக்க முடியாது. அது சட்டமியற்றும் சபையின் தனி உரிமைக்கு உட்பட்டது, என்று அந்த குறிப்பேடு கூறுகிறது.

மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் கையெழுத்திட ஆளுநர் மறுக்க முடியுமா?

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக அல்லது ஒப்புதலைத் நிறுத்தி வைப்பதாக அல்லது அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாவை ஒதுக்கி வைத்திருப்பதாகவோ அறிவிக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு கூறுகிறது.

இருப்பினும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவோ, ஒப்புதலை நிறுத்தவோ அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்கு மசோதாவை ஒதுக்கி வைக்கவோ அரசியலமைப்பு காலக்கெடு விதிக்கவில்லை.

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒரு விரோதமான உறவு நிலவி வரும் சூழ்நிலையில், மத்திய அரசின் பிரதிநிதி என்ற முறையில் ஆளுநர், இந்த அரசியல் சாசன அமைதியை தவறாக பயன்படுத்துவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/explained/dmk-mk-stalin-governor-rn-ravi-droupadi-murmu-539205/



10 11 2022

‘தாயாகவும், தந்தையாகவும்’ : அரசு பள்ளி மாணவர்களை துபாய்க்கு சுற்றுலா அழைத்து சென்ற அன்பில் மகேஷ்

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இணைய வழியில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற 67 மாணவ-மாணவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று துபாய்க்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். தமிழகம் முழுவதிலிருந்தும் போட்டியில் வெற்றி பெற்ற 11-ம் வகுப்பு பயிலும் 33 மாணவிகள், 34 மாணவர்கள் என மொத்தம் 67 பேர் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,” நான் இந்த 67 மாணவ-மாணவிகளுக்கு தாயாகவும், தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருப்பேன். 5 ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை மற்றும் வெளியுறவுத் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் வருகின்றனர். துபாய் செல்வது மாணவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

மாணவ மாணவிகளின் திறமையை ஊக்குவித்து அரசு சார்பில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சுற்றுலாவிற்கு தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இது சி.எஸ்.ஆர் நடவடிக்கையின் மூலம் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா என்றார்.

மாநில கல்வி கொள்கை

மேலும், 10% இட ஒதுக்கீடு பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் ஒரு குழு அமைத்துள்ளார். புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வந்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது தெரியும்.

முதலமைச்சர் பிரதமரை முதல் முறையாக சந்தித்தபோதே தமிழகத்திற்கு நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை தேவை இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். தமிழக மாணவர்களுக்கு எந்த கல்வி முறை வேண்டும் என்பதை ஆணித்தனமாக முதலமைச்சர் பிரதமரிடம் கூறியிருந்தார். இந்த 4 நாட்கள் கல்வி சுற்றுலாவில் நான் தான் இந்த மாணவர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க போகிறேன்” என்றார். அரசு அனுமதியுடன் வெளிநாட்டுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்வது தி.மு.க வரலாற்றில் இது முதன்முறை ஆகும்.

செய்தி: க. சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-school-students-taken-to-educational-trip-to-dubai-with-minister-539287/







இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்



 18 10 2022

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த  இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது :

இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியைத் திணிப்பதை மத்திய அரசு தனது வழக்காமாக கொண்டுள்ளது. தமிழினத்தைத் தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். அமித் ஷாவின் பரிந்துரைகளை இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு. ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக இந்தியை  மாற்றிக்கொண்டிருகின்றனர். ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை அமர வைக்கும் எண்ணம்தான் உள்ளது”  என்று அவர் கூறினார்.  



source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-proposes-hindi-against-bill-in-tn-assembly-527329/



ஓசி பயண பேச்சு.. கண்டித்த மு.க. ஸ்டாலின்.. வருந்திய பொன்முடி.!

 12 10 2022

ஓசி பயண பேச்சு.. கண்டித்த மு.க. ஸ்டாலின்.. வருந்திய பொன்முடி.!
அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அரசுப் பேருந்துகளில் பெண்கள் ஓசி பயணம் மேற்கொள்கிறார்கள் என அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார். திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், ‘வியர்வைக்கு வெகுமதி’ என்ற தலைப்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “இப்போ எல்லாம் வாயா, போயா என்று பேசவே பயமா இருக்கிறது. பாஜகவினருக்கு அரசியல் செய்ய எதுவும் இல்லை.

நான் பேசிய வார்த்தையை பிடித்துவைத்து அரசியல் செய்கின்றனர். மகளிர் பேருந்து பயணம் குறித்து பேசிய வார்த்தைக்காக முதலமைச்சரிடம் வருத்தம் தெரிவித்தேன்.
அவரும் என்னை அவவ்வாறு பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், என் பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என்றார்.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்வது குறித்து அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன.
இந்த நிலையில் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ponmudi-expressed-regret-to-cm-mk-stalin-on-free-bus-controversy-speech-524602/


மொழிப் போர் வெடிக்கும்.. மத்திய அரசை எச்சரித்த மு.க. ஸ்டாலின்! 13 10 2022

மொழிப் போர் வெடிக்கும்.. மத்திய பா.ஜ.க., அரசை எச்சரித்த மு.க. ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “மத்திய பாஜக அரசுக்கு கடந்த காலங்களில் தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நினைவூட்டியுள்ளார்.

முன்னதாக மு.க. ஸ்டாலின் 2018இல் திமுகவின் செயல் தலைவராக இருந்த போதும், தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக 1965இல் நடந்த மாதிரி போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.

1965இல் என்ன நடந்தது?

இந்த ஆண்டு திராவிட இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டாகும். 1963 ஆம் ஆண்டில், பிரதமர் ஜவஹர்லால் நேரு அலுவல் மொழிகள் மசோதாவை முன்வைத்தார்.
இது 1965 ஆம் ஆண்டில் நாட்டின் அலுவல் மொழியாக இந்தியை உருவாக்கும் ஆண்டாக அமைத்தது.

அப்போது, திராவிட இயக்கத்தின் அரசியல் வாரிசாக இருந்த தி.மு.க. இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் 17வது அத்தியாயத்தின் நகல்களை கட்சி தொண்டர்கள் எரிப்பார்கள் என்று அறிவித்தது,

அதைத் தொடர்ந்து திமுக தலைவர் சி என் அண்ணாதுரை கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். எதிர்ப்பு வலுத்ததால், 1964 ஜனவரி 25 அன்று, இந்தி திணிப்பை எதிர்த்து, 27 வயதான சின்னசாமி என்ற தி.மு.க தொண்டர் தீக்குளித்தார்.
எனினும், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்து, ஜனவரி 26, 1965 முதல் இந்தி இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக மாறும் என்று அறிவித்தது.

இதற்கு முந்தைய நாள், ஜனவரி 25, 1965 அன்று, அண்ணாதுரை உட்பட மூத்த திமுக தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து ஹிந்தியை நீக்கக் கோரி சென்னை மாகாணத்தில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 50,000 மாணவர்கள் தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்று, அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலத்திடம் அனு அளித்தனர்.

ஜனவரி 26ஆம் தேதி, அதிகாலையில், மு. கருணாநிதி மற்றும் பல திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டபோதும், திமுக உறுப்பினர் டிஎம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யன்பாளையம் வீரப்பன் மற்றும் ராமசுந்தரம் முத்து ஆகியோர் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தனர்.
தொடர்ந்து, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் மற்றும் பீளமேடு தண்டபாணி ஆகியோர் விஷம் குடித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களான சி.சுப்பிரமணியம் மற்றும் ஓ.வி.அழகேசன் ஆகியோர் பதவி விலகப் போவதாக மிரட்டியதை அடுத்து, 1964ல் நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும், ஆங்கிலம் தொடரும் என்றும் பகிரங்க உறுதிமொழி அளித்தார்.

தொடர்ந்து, பிப்ரவரி 1965 இல், காங்கிரஸ் காரியக் கமிட்டி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, மேலும் இந்தி பேசாத மக்களின் அச்சத்தை நிவர்த்தி செய்ய அலுவல் மொழிச் சட்டம், 1963 இல் திருத்தம் கோரியது.
இதனை, இந்தித் திணிப்புக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றி என திராவிட இயக்கங்கள் கொண்டாடின. பின்னர், அரசியல் ரீதியாக, தமிழ்நாட்டில் காங்கிரஸின் தாக்கம் பேரழிவு தரக்கூடியதாக இருந்தது

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இழந்த மண்ணை காங்கிரஸால் ஒருபோதும் மீட்டெடுக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், 1967இல், நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, அன்றிலிருந்து, திராவிடக் கட்சிகள் தனித்து ஆட்சியில் உள்ளன.
தல்வர் அண்ணாதுரையின் அரசு, மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது.

தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு வரலாற்று, கலாச்சார சூழல்

தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல், ஆரம்பத்தில் தேச உணர்வு இல்லாதது, காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கம் மற்றும் கம்யூனிஸ்டுகள் இரண்டிலிருந்தும் தன்னை வேறுபடுத்திக் கொள்ள தமிழ் மற்றும் திராவிட மொழி மற்றும் இன அடையாளங்களை முன்னிறுத்தியது.
1937-39 இன் முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான், 1936ல் காங்கிரஸிடம் மாகாணத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, பெரியார் ஈ.வி. ராமசாமியையும் அவரது ஆதரவாளர்களையும் அரசியல் இடத்தை மீட்டெடுக்க அனுமதித்தது.

சி ராஜகோபாலாச்சாரியின் அரசாங்கம், சென்னை மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தியை அறிமுகப்படுத்தியது. பெரியார் தலைமையிலான இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்திய தேசிய அரசிலிருந்து சுதந்திரமான தமிழ் திராவிட தேசம் என்பதை வலியுறுத்தியது.
தமிழுக்கும் இந்திக்கும் எதிரான வாதமும் தடையின்றி திராவிடம் மற்றும் ஆரியம் என்ற விவாதத்தில் சேர்ந்தது. 1980 களில் இலங்கைத் தமிழர்களுக்கான குரல் தொடங்கி சமீபத்திய ஜல்லிக்கட்டு வரை இது தொடர்ந்தது.

ஏன் இந்த பழைய பதற்றம் மீண்டும் எழுந்தது?

2014க்குப் பிந்தைய பிஜேபியின் எழுச்சி இந்தி-இந்து-இந்துத்துவா இந்தியா என்ற சூழலை உருவாக்கியுள்ளது. இது நாட்டின் தென்மாநிலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில், இந்தி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகளுக்கு தொண்டர்களை அணிதிரட்டவும், அவர்களின் செயல்திறனில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவும் நீண்ட காலமாக பயன்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் அமைப்புகள் அரசியல் இயக்கத்தில் சாத்தியமான மாற்றத்தை உணர்கின்றன.
தற்போது தமிழ்நாட்டின் மேலாதிக்கப் பிராந்தியக் கட்சி என்ற நிலைப்பாட்டை திமுக மீண்டும் நிலைநிறுத்த முற்படுகிறது. தொடர்ந்து, 1965ஆம் ஆண்டு போல் தமிழர் பாதுகாவலர் ஆக முயற்சிக்கிறது.


source https://tamil.indianexpress.com/explained/as-stalin-warns-centre-recalling-the-anti-hindi-agitations-in-the-past-in-tamil-nadu-524607/


 08 10 2022

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழ்நாடு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கடந்த 1-ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஒன்றாம் தேதியே அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, வரும் கூட்டத்தொடரிலேயே அவசரச் சட்டமாக இயற்றப்பட உள்ளது.

சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிப்பு. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை நடைமுறைக்கு வந்துவிடும்.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை. சூதாட்டம் அல்லாத இதரஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்படும். ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆணையத்தின் உறுப்பினர்களாக IT வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இடம் பெறுவர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தண்டனை விவரங்கள் :

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம் 26-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

source https://news7tamil.live/governor-approves-online-gambling-prohibition-act-gazette-release.html


ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – நீதிமன்றத்தில் தமிழக அரசு

 29 09 2022

சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ம் தேதி  ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தது. உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து,  அணி வகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தனியாக வழக்கு தொடரலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி இந்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில் அரசு உத்தரவிட்டுள்ளது என்று ஆர்எஸ்எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.


ஆன்லைனில் பட்டா மாற்றம்: ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டம்

 

23 9 2022

இனி ஆன்லைனில் பட்டா மாற்றம்: ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டம்
Source: Twitter/@CMOTamilnadu

Tamil Nadu News: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் “எங்கிருந்தும் எந்தநேரத்திலும்” என்ற இணையவழி சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். 

இதன் மூலமாக பட்டா மாறுதலுக்கான இணையவழி சேவையை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கால விரையம் இல்லாமல் பட்டா மாறுதலுக்காக இணையவழியில் விண்ணப்பிப்பவர்கள், சிரமம் இல்லாமல் மாறுதலின் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

நகர்ப்புற வரைபடங்களை பதிவிறக்கம் செய்வதற்கான வசதியையும் இந்த இணையதளத்தின் மூலமாக மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

இணையவழியில் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்காக, இணையவழி மூலமாகவே விண்ணப்பத்தை சரி பார்த்து உறுதி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, இந்த இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி கூறும் கருத்துக்கு ஏற்றாற்போல இந்த வசதியை மேம்படுத்துவோம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூறுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-launched-a-new-website-with-office-of-directorate-of-land-records-department-of-revenue-514979/

காலை சிற்றுண்டி திட்டம்;

 15 09 2022

காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுக்கு ஊட்டிவிட்டதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.  

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 லட்சத்து 14,095 மாணவா்களுக்கு ரூபாய் 33 கோடி 56 இலட்சத்தில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா ஏதேனும் ஒன்றும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை கிச்சடியில் ஏதேனும் ஒன்றும், புதன்கிழமை ரவை அல்லது வெண் பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரியுடன் காய்கறி சாம்பாா் தினமும் வழங்கப்படவுள்ளது.

இன்று மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 1246 தொடக்கபள்ளிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 26 பள்ளிகளை சேர்ந்த 4,136 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மதுரை கீழத் தோப்பு பகுதியில் உள்ள ஆதி மூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கும் ஊட்டிவிட்டார்.

முன்னதாக, மதுரை நெல் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 3 சமையல் கூடங்கள் வாயிலாக உணவுகள் கொண்டு செல்லப்படவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..

திங்கள்கிழமை :

ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசு உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமைரவா உப்புமா + காய்கறி சாம்பார்

செவ்வாய்கிழமை :

ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவாகாய்கறி கிச்சடி

புதன்கிழமை :

ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்
வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்

வியாழக்கிழமை :

சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசி+ உப்புமா + காய்கறி சாம்பார்
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளிக்கிழமை :

ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவா காய்கறி கிச்சடி
கூடுதலாக ரவா கேசரி, சேமியா கேசரி

மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

source https://news7tamil.live/breakfast-program-the-chief-minister-distributed-food-and-fed-the-students.html

திறன் மேம்பாட்டிற்கான போர்டல் – ‘நான் முதல்வனின்’ புதிய முயற்சி

 30 8 2022

திறன் மேம்பாட்டிற்கான போர்டல் – ‘நான் முதல்வனின்’ புதிய முயற்சி
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம்

Educational News: திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு திங்கள்கிழமை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ திட்டத்துக்காக இணையதளத்தை (www.naanmudhalvan.tn.gov.in) தொடங்கி வைத்து, பல்வேறு துறைகள் மற்றும் பாடங்களில் பயிற்சி, திறன் மற்றும் படிப்புகளை வழங்கும் நிறுவனங்களின் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

பிளாக் செயின், ஐடி-திறன்கள், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், மொழி நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுதல் போன்ற படிப்புகள் இதில் மாணவர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த போர்ட்டலில் சைக்கோமெட்ரிக் சோதனை, புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சிகள் குறைந்த கட்டணத்திற்கு திறன் மேம்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் 47 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசு வெளியீடு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய போர்டல் மூலம் ரோபோடிக்ஸ், மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐ.ஓ.டி.) போன்ற வளர்ந்து வரும் துறைகளை பற்றி மாணவர்கள் எளிதாக படிக்கலாம் என்று கூறுகிறார்.

தொழில் முனைவோர் மற்றும் ஆளுமை மேம்பாட்டு திறன்களை வளர்ப்பதற்காக, குறிப்பிட்ட பயிற்சி தொகுதிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போதே தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த போரட்டலை பயன்படுத்திக்கொள்ளலாம். கல்லூரி மாணவர்களுக்கான இந்த போர்ட்டலில் வழங்கப்படும் IoT போன்ற பாடத்திட்ட உள்ளடக்கங்கள் இலவசம் மற்றும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ‘ஆங்கில தொடர்பு’ அறிமுகப்படுத்தப்படும். ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் படிப்புகள் வழங்கப்படும், என்றார். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற விரும்புபவர்களும் இணையதளத்தின் அம்சத்தை பற்றி ஒரு பாடம் இப்போர்ட்டலில் இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக இத்திட்டத்தை மார்ச் 1ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை கொண்டு வர உதவும் என்று கூறுகிறார்கள்.

‘முதல்வன் திட்டம்’ திறன் மேம்பாடு என்பது, தனிமனித திறமையை அடையாளம் கண்டு அதை வளர்ப்பதை உள்ளடக்கியது. 

குறியீட்டு முறை மற்றும் ரோபாட்டிக்ஸ் பற்றிய பயிற்சி அமர்வுகள், வழிகாட்டுதல், ஆளுமை மேம்பாடு மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான வசதி ஆகியவை பற்றின வகுப்புகள் இந்த போர்ட்டலில் அடங்கும். இந்த போர்ட்டலினால் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி முயற்சிகள் மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் ஆகியவை மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-government-launced-its-new-portal-for-naan-mudhalvan-502655/

தமிழகத்தில் உள்ள 2500 கோவில்களை மறுசீரமைக்க ஏற்பாடு 25 08 2022

தமிழகத்தில் உள்ள 2500 கோவில்களை மறுசீரமைக்க ஏற்பாடு
தமிழகத்தில் உள்ள 2,500 சிவாலயங்களை மறுசீரமைக்க ஏற்பாடு (Source: Twitter/File photo)

Tamil Nadu News: தமிழகத்தில் உள்ள 2500 கோவில்களில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, மொத்தம், 365 கோடி ரூபாய் நிதியளித்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

தோட்டம் அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், சுவர்களை சரி செய்தல் போன்ற பல பணிகள் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

ஆகம சாஸ்திர முறைப்படி கோவில் பூஜைகளை செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம், மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சிக்கிறோம்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறினார்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமியின் கரையோரக் கோவிலை 171 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக மாற்றவுள்ளனர்.

ஆண்டு முழுவதும் முருகப்பெருமானின் பக்தர்களை ஈர்க்கும் புகழ்பெற்ற கோயில், இந்த ஆண்டு மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள 2500 சிவாலயங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

“திட்டத்தின் அளவு மற்றும் முன்மொழியப்பட்ட பணிகள் திருச்செந்தூரில் உள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் வருவதால், மாநில அரசு மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதியை கோரியுள்ளது” என்று HR & CE கமிஷனர் ஜே.குமரகுருபரன் தெரிவித்தார்.

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் நிகழ்வைக் காண குறைந்தது 4 லட்சம் பக்தர்கள் கூடுகின்றனர். அதே நேரத்தில் சராசரி நாளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னதிக்கு வருகை தருகின்றனர்.

வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இறைவனை தரிசனம் செய்வதற்கான மக்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த பழமையான கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலுக்கு அருகாமையில் தங்குவதற்கும், சிரமமின்றி தரிசனம் பெறுவதற்கும் ஏற்பாடுகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

“தி.மு.க அரசுதான் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. நாங்கள் அதிக எண்ணிக்கையிலான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கிறோம், நிர்வாகத்தில் எங்களின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் பல நல்ல தீர்ப்புகளை பெற்று வருகிறோம்,” ஜே.குமரகுருபரன் என்றார்.
இதற்கிடையில், இங்குள்ள வடபழனி ஆண்டவர் கோவிலில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாநிலத்தில் உள்ள சுமார் 500 கோவில்களுக்கு கிரெடிட்/டெபிட் கார்டு மற்றும் யுபிஐ கட்டண வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்




புறக்கணிக்கப்பட்ட இலவச அறிவுரை

புறக்கணிக்கப்பட்ட இலவச அறிவுரை | PTR | Sriram Sharma Sriram CREDITS: Script - Sriram Sharma Sriram | Voice Over - Pavithra | Editing - Kittu #freebies #palanivelthiagarajan #ptr #dmk #standwithStalin #standwithTnCm

 

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஸ்டாலின் அறிவிப்பு

 

09.08.2022 MK Stalin speech highlights at Chess Olympiad closing ceremony: செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது, இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் என நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் அகர்டி துவார்கோவிச், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் நடுவர்களும் இந்த நிறைவு விழாவில் கலந்துக் கொண்டனர்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு நிற உடையில், ஆளப்போறான் தமிழன் பாடல் பின்னனியில் மாஸாக மேடை ஏறினார். பின்னர் நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வெறும் நான்கே மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து, சிறப்பாக நடத்தியுள்ளோம். உலகமே மெச்சத்தக்க அளவில் தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் உலக அரங்கில் தமிழகத்தின் மதிப்பு உயரும் என முன்பே கூறியிருந்தேன்.

சென்னையில் தங்கியிருந்த நாட்களை செஸ் வீரர்களும் பயிற்சியாளர்களும் மறக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தமிழகத்தின் கலாசாரம், வரலாறு, குறிப்பாக உணவு ஆகியவற்றை ரசித்திருப்பார்கள். வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர்.

செஸ் விளையாட்டுப் போட்டி அதற்குள் முடிந்துவிட்டதா என ஏங்கும் வகையில் போட்டி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே, தமிழ்நாட்டுக்கு நீங்கள் எப்போதும் வரலாம். சென்னையை மறந்துவிட வேண்டாம். உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன்.

செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். செஸ் ஒலிம்பியாட்டிற்கு பின் விளையாட்டுத்துறை முன்பை விட அதிக பாய்ச்சலுடன் செல்லும். எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றில் சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விளையாட்டில் முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வகையில் வீரர்களை உருவாக்கும் பொருட்டு ரூ.25 கோடி மதிப்பில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கபடி மற்றும் சிலம்பத்திற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும். சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தவுள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-speech-highlights-at-chess-olympiad-closing-ceremony-492036/ 

தண்டோரா போட தடை… மீறினால் நடவடிக்கை

 04 08 2022 thandora ban, impose ban on Thandora, chief secretary letter to district collectors for ban thandora, , welcomes activists, Ban fo Dandora, A Marx, Ravikumar MP, Stalin Rajangam, K Veeramani, TN Govt, தண்டோரா அறிவிப்புக்கு தடை, தண்டோரா போட தடை, ரவிக்குமார், அ மார்க்ஸ், ஸ்டாலின் ராஜாஙம், கீ. வீரமணி, தண்டோராவுக்கு தடை, தமிழக அரசு, chief secretary Iraianbu, tamilnadu govt, thandora banned

தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, அரசு விழிப்புணர்வு திட்டங்கள் போன்ற அரசாங்க அறிவிப்புகள் கூட தண்டோரா போட்டு அறிவிக்கப்படுகிறது. தண்டோரா போடுவது சாதி ரீதியான இழிதொழில், அதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள், தலித் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

அண்மையில், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு சம்பவத்தையொட்டி நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, அரசின் நடவடிக்கைகள், காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை போன்றவற்றை தெரிவிக்க தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பலரும் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டினர். மேலும், தண்டோரா போடுவதைத் தவிர்த்து அறிவிப்பை ஒலிப்பெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில்தான், தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது, மீறி ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம், இந்த செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருமளவு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தலித் அமைப்புகள், எழுத்தாளர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் ‘தண்டோரா’ போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே, ‘தண்டோரா’ போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

தண்டோரா போடுவதற்கு தமிழக அரசு தடை விதித்ததற்கு எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் தலைமைச் செயலாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

இது குறித்து அ.மார்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “தண்டோரா போடுவதற்குத் தடை : தலைமைச் செயலருக்கு நன்றி! இத்துடன் ஒரு வேண்டுகோள்.

இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வரவேற்கத் தக்கது. கிராமங்களில் இன்னும் நடைமுறையில் உள்ள தண்டோரா போட்டு ஏதேனும் ஒரு செய்தியைப் பரப்பும் முறை ஒழிக்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் சொல்லி வருவதைக் கவனத்தில் கொண்டு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். பதிலாக வாகனங்களில் ஒலி பெருக்கியை அமைத்து இப்படியான செய்திகளைப் பரப்ப வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். பிணம் எரிப்பது உட்பட இப்படியான பணிகள் அனைத்தையுமே தடை செய்து அவற்றை Mechanise பண்ண வேண்டும்.

இதெல்லாவற்றையும் விட இன்னொரு கொடுமையைத் தலைமைச் செயலாளர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நகரங்களில் குறிப்பாகச் சென்னையில் பாதாள சாக்கடைகள் சுத்தப் படுத்துவதற்கு ஆட்களை மலக் குழிக்குள் உள்ளே இறக்கும் பணி இழிவானது மட்டுமல்ல, ஆரோக்கியக் கேடும், உயிராபத்தும் மிக்க ஒன்றாகும். உள்ளே ஆட்களை இறக்கக் கூடாது என்பதற்கு ஏற்கனவே சட்டங்கள் இருந்தபோதும் அவை கடைபிடிக்கபடாமையால் இந்தச் சாவுகள் நிகழ்கின்றன. தனியார்களால் மட்டுமல்ல, குடிநீர் வாரியம், கார்பொரேஷன் முதலான நிர்வாகங்களிலும் இது நடைபெற்று வருகிறது.

எதையும்விட கவனத்தில் எடுத்து உடன் நிறைவேற்ற வேண்டிய பணி இது. தலைமைச் செயலாளர் அவர்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன். இது தொடர்பான சமூக ஆர்வலர்களின் சமீபத்திய அறிக்கை ஒன்றையும் தங்களின் பார்வைக்கு உடன் அனுப்பி வைக்கின்றேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

தண்டோரா முறை ஒழிப்பு, தந்தையை விஞ்சிய தளபதி என்றும் ஒட்டுமொத்த ஆதிதிராவிட சமூகமும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தண்டோரா போடுவதற்குக் கடுமையான தடை விதிக்கவேண்டும். மீறி ஈடுபடுத்துகிறவர்களைத் தண்டிக்கவேண்டும்” என உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இன்று ( 03.08.2022) கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த சமூக இழிவு துடைக்கப்பட்டுள்ளது; கடந்த 15 ஆண்டுகளாக நான் எழுப்பிவந்த கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் 2006 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. முந்தைய ஆட்சியில் பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு பி டி ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அகாலமாக மரணம் அடைந்தார். அவருக்கு இரங்கல் தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் 25. 5.2006 அன்று அறிமுகப்படுத்தி அதன் மீது பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ‘திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டும் வழக்கம்’ ஒழிக்கப்படுவதாக அறிவித்தார். ‘திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 1971இல் அந்த வழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு மீண்டும் அதை உயிர்ப்பித்தது. தற்போது அது மீண்டும் ஒழிக்கப்படுகிறது’ என அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் 25.7.2006 அன்று திமுக அரசின் முதல் பட்ஜெட் மீது பேசுகிற வாய்ப்பை நான் பெற்றேன். அப்படி பேசுகிற நேரத்தில், “திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுகின்ற முறை அகற்றப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பான அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்கள்.
அது சமூகத்தில் சமூக நீதியை, சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப் பகுதிகளிலே தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருக்கின்றது. தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையிலே, நாம் உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையிலே வைத்திருப்பதை இந்த உலகிற்குச் சொல்கின்ற ஒரு முறையாக இருக்கின்றது. எனவே அந்த தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழித்து உத்தரவிட்டு வரலாற்றிலே ஒரு சிறப்பான இடத்தை நீங்கள் வகிக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என நான் வேண்டுகோள் விடுத்தேன். எனது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றித் தந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஏனோ இந்த வேண்டுகோளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்.

அதன் பின்னர், தமிழ்நாடு அரசால் பேராசிரியர் நன்னன் தலைமையில் சமூக சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன். அக்குழுவின் முதல் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை நான் முன்வைத்தேன்.

கடந்த 2021 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டோரா போட்டு மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதாக செய்தி வெளியானது.அவரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூப்பிட்டுப் பாராட்டினார். அந்த நேரத்திலும் இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அது ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

இவ்வாறு கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பலவிதங்களில் நான் முன்வைத்து வந்தேன். கடந்த நாளன்று காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக தண்டோரா போட்டு அறிவிப்பு செய்யப்பட்ட செய்தி 01.08.2022 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியானது. அப்போது நான் உட்னே தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில் பதிவு செய்தேன்.

அதைப் பல நண்பர்களும் வழிமொழிந்து பதிவுகளை வெளியிட்டார்கள். அதன் காரணமாகவே இப்போது தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு வெளியாகி இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்த இழிவைப் போக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள் இந்த உத்தரவைக் கடிதமாக எழுதியதோடு நிற்காமல் சட்டப் பாதுகாப்பு கொண்ட அரசாணையாக பிறப்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் முன் வைத்த கோரிக்கை அவருடைய வழியில் சமத்துவ ஆட்சி செய்யும் அண்ணன் தளபதி அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலை நாட்டுவதில் தலைவர் கலைஞரையும் விஞ்சுகிறவராக அண்ணன் தளபதி திகழ்கிறார். ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்த சமூக இழிவை ஒழித்த அவருக்கு ஒட்டுமொத்த ஆதிதிராவிட சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், “தமிழக தலைமைச் செயலர் தண்டோரா போடும் முறையை கைவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இது மாறிவரும் நவீன மதிப்பீடுகளை கணக்கிலெடுத்துக் கொள்ளும் விதமாக இச்செயல் அமைந்திருக்கிறது. இதேபோல், ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான பிற பிரச்சினைகளையும் நவீன கால கண்ணோட்டத்துடன் படி அணுக அரசு முன்வர வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் ராஜாங்கம் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தண்டோரா போடும் முறையை கைவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் தமிழக தலைமைச் செயலர். மாறிவரும் நவீன மதிப்பீடுகளை கணக்கிலெடுத்துக் கொள்ளும் விதமாக இச்செயல் அமைந்திருக்கிறது.

இதேபோல் ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான பிற பிரச்சினைகளையும் நவீன கால கண்ணோட்டத்துடன் படி அணுக அரசு முன்வர வேண்டும். குறிப்பாக அண்மை புள்ளிவிவரம் ஒன்று துப்புரவு பணியாளர் இறப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலாளர் தன் கடிதத்தில் தண்டோரா முறையை பற்றி கூறும்போது “சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வந்ததாக” குறிப்பிட்டிருந்தாலும் இது பெரும்பாலும் தலித் சமூகத்தின் குரலாகவே இருந்து வந்தது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக எழுத்தாளர் ரவிக்குமார் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களிலும் இப்பிரச்சினை அவ்வப்போது எழுதப்பட்டு வந்திருக்கிறது. குரல் எழுப்பியோர், அறிவிப்பு செய்த அரசு என யாவரும் பாராட்டிற்குரியோர்.

2006 ஆம் ஆண்டு “தண்டோரா முறையைத் தடை செய்க: இழிதொழில் மறுப்பும் தலித் முன்னோடிகளும் – சில குறிப்புகள்”என்ற தலைப்பிலான என்னுடைய கட்டுரை அம்ருதா இதழில் வெளியானது. என்னுடைய முதல் நூலான சனநாயகமற்ற சனநாயகம் நூலில் (சனவரி 2007)அக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தண்டோராவுக்கு தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“தண்டோராவுக்கு தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டரில் பதிவில், அரசின் பல்வேறு துறைகள் சார்பான அறிவிப்புகளுக்குத் தண்டோரா போடுவது கடுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மீறி ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மிக முக்கியமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்.

எத்தனையோ அறிவியல் முறைகள் வந்தபின்னும், தண்டோரா போடுவது அவசியமற்றது என்பதைவிட, ஜாதியைக் காக்கும் நடவடிக்கையாகும். அதனைத் தடைசெய்து தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் ஜாதிக்கும், சனாதனத்திற்கும் சம்மட்டி அடி! முற்போக்குத் திசையில் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு வெல்லட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/impose-ban-on-thandora-chief-secretary-letter-to-district-collectors-welcomes-activists-489070/

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா கிளிக்ஸ்…28 7 2022 

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செஸ் வீரர்கள், பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றனர்.


பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்குகிறார்

செஸ் ஒலிம்பியாட் தீபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

செஸ் ஒலிம்பியாட் தீபத்தைப் பிரதமரிடம் வழங்கி மகிழ்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிரதமருடன் செஸ் ஒலிம்பியாட் தீபத்தைத் தாங்கி பிடிக்கும் முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு செஸ் வீரர்கள்

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா மேடை

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.

பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் வழங்கி வரவேற்றார். source https://news7tamil.live/chess-olympiad-2022-opening-ceremony-clicks.html


ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் – அரசிதழ் வெளியீடு

 

27 7 2022 ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக மே மாத நிலவரப்படி 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. 21 மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜூலை 6 ஆம் தேதி நியூஸ் 7 தமிழ் பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 சட்டங்கள் குறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

1. தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி (திருத்தம்) மசோதா, 2022

2. தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் (திருத்தம்) மசோதா, 2022

3. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் (நான்காவது திருத்தம்) மசோதா, 2022

4. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாவது திருத்தம்) மசோதா, 2022

5. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு (திருத்தம்) மசோதா, 2022

6. தமிழ்நாடு தடுப்புச் சட்டத்தில் திருத்தம். (தங்கள் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்களைத் தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பாக மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை வழங்குதல்).

மேலும் ஒப்புதல் அளித்த மசோதாக்கள் விவரமும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது. பல்கலைக்கழக வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் வகையிலான மசோதாக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் பதவிக் காலத்தைக் குறைக்கும் சட்ட மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

-ம.பவித்ரா

source https://news7tamil.live/6-bills-approved-by-governor.html

காவலர்கள் முதல் டிஜிபி வரை… வருகிறது புதிய லோகோ!

 

27 7 2022

தமிழ்நாடு காவல் துறை டிஜிபி முதல், கீழ்நிலை காவலர்கள் வரை அணியும் சீருடையில் புதிய லோகோ வரும் 31ம் தேதி முதல் அணியும் பெருமையை அடையவுள்ளனர்.

தமிழக காவல்துறை 1305 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 202 அனைத்து மகிளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து புலானய்வு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், மற்றும் 27 புறக்காவல் நிலையங்கள் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 942 காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இதில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 23 ஆயிரத்தி 542 பெண் காவலர்கள் பணியாற்றுவது சிறப்பம்சம்.

தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு முதல், கடைநிலை காவலர்கள் வரை தாங்கள் அணியும் சீருடையில் ஒரே மாதிரியான லோகோ அணிந்து வருகின்றனர். காவல் துறையை பொருத்தவரை அவர்களின் பதிவிகளுக்கு ஏற்ப தொப்பி முதல் காலணிகள் வரை மாறுபட்டிருக்கும் ஆனால் அவர்கள் அணிந்திருக்கும் லோகோ ஒரே மாதிரியாக இருக்கும். இந்த லோகோ மற்றும் சீருடைகளில் மாற்றம் செய்ய வேண்டுமென 10 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது.

குறிப்பாக பெண்காவலர்கள் அணிந்திருக்கும் சீருடை அசௌகரியமாக இருப்பதால், சீருடை அமைப்பில் மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. ஆனால் இந்த கோரிக்கை தற்போது வரை பரிசீலனையிலேயே உள்ளது. வரும் 31ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடக்கும் போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, புதிய லோகோ அறிமுகம் செய்யப்படவுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இந்த விழாவில் கலந்து கொண்டு புதிய லோகோவை அறிமுகம் செய்யவிருப்பது தமிழக காவல் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றே கூறலாம்.

புதிய லோகோவை வடிவமைக்கும் பணியை, நவீன மயமாக்கல் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சை குமாரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாகவே, 100க்கும் மேற்பட்ட லோகோக்கள் வடிவமைக்கப்பட்டு தற்போது புதிய லோகோ இறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் தயாராகும் இந்த லோகோவை வரும் 31ம் தேதியன்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்த பிறகு அன்று மாலை முதலே இந்த புதிய லோகோவை போலீசார் பயன்படுத்தலாமனெ கூடுதல் டிஜிபி சஞ்சைகுமார் தெரிவித்தார். இதே காவலர்களின் சீருடையிலும் குறிப்பாக பெண் காவலர் சீருடையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போல, தமிழக காவல்துறையை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதியின் சிறப்பு கொடியியையும், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கவுள்ளார். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 10 மாநில போலீசாருக்கு மட்டுமே இந்த கொடி வழங்கப்பட்டுள்ளது. இநத கொடியை கடந்த 2009ம் ஆண்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் 13 ஆண்டுகளாக இந்த கொடி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட இல்லை. இந்த கொடி, வரும் 31ம் தேதி வழங்கப்பட உள்ளது. இது தமிழக காவல் துறையினருக்கு கிடைக்கும் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

எழுதியவர்: சிவ.செல்லையா.

source https://news7tamil.live/from-guards-to-dgp-comes-a-new-logo.html

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்-முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

 27 7 2022

1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!

சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டம்தான் இந்தக் காலை உணவுத் திட்டம். வயிற்றுக்கு நிறைவும் – செவிக்கு அறிவும் ஊட்டுபவையாக பள்ளிச் சாலைகளை மாற்றும் முயற்சி இது!

இலட்சக்கணக்கான மாணவக் கண்மணிகளின் மனம் குளிர நான் காரணம் ஆகிறேன் என்பதே எனக்கு ஏற்பட்டுள்ள பெருமகிழ்ச்சி!

திராவிட இயக்கக் கொள்கைகளில் உணர்வுப்பூர்வமாகத் தோய்ந்துபோன எனக்கு, ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் ஒரு கனவுத் திட்டம்!

முதலமைச்சராகப் பெருமிதம் தரும் திட்டம்!

மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், மலைப் பகுதிகள் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதற்கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்குச் சமைப்பதில் எடுத்துக் கொள்கிற சிரத்தையோடு, தங்கள் அன்பைக் கொட்டி, தூய்மையுடன் உணவைப் பரிமாற – களப்பணியாளர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் திட்டம், தனது நோக்கத்தில் மகத்தான வெற்றி அடைவதை மக்கள் பிரதிநிதிகளும்.

பொதுமக்களும் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டி உறுதிப்படுத்த வேண்டும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்குக் கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவதும், கல்வியைப் பரவலாக்குவதன் மூலம் அதிகாரத்தில் அடித்தட்டு மக்களை அமர வைப்பதும் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகள்.

அந்தக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைத் திராவிட இயக்கம் கண்டுள்ளது என்பது தமிழ்நாடு பெருமைப்படத்தக்க ஒன்று!

பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் – “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்த முன்னோடியான திட்டத்தின் வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும்.

பிற மாநிலங்களிலும் திராவிட மாடல் ஆட்சியின் இந்தத் திட்டம் பின்பற்றப்படும் என்பதிலும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


source https://news7tamil.live/breakfast-scheme-for-government-school-students-prime-minister-stalins-pride.html


22 7 2022 

செஸ் ஒலிம்பியாட்

Chess Olympiad 2022: here’s all you need to know
The Napier Bridge in Chennai has been decorated to celebrate the International Chess Olympiad in the city. (Image credits: @pk_views/Twitter)

44th Chess Olympiad 2022 Tamil News:  44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மாபெரும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஜூலை 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பியாட் முதலில் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நடந்துகொண்டிருக்கும் ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) புதிய ஏலதாரர்களைத் தேடத் தொடங்கியது. மற்ற நாடுகளை விட இந்தியா முதலிடம் பிடித்தது மற்றும் முதல் முறையாக உயர்மட்ட நிகழ்வை நடத்தும் வாய்ப்பை வென்றது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்விற்கு என 92 கோடி ரூபாய் ஒதுக்குவதாக தெரிவித்தார்.

கடந்த ஜூன் 19 அன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜோதி மாமல்லபுரத்திற்கு வருவதற்கு முன் நாட்டிலுள்ள 75 நகரங்களுக்கு தீபம் கொண்டு செல்ல இலக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில வாரங்களுக்கு முன்பு கூட்டம் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 24×7 கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், தங்குமிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம், தண்ணீர் மற்றும் மின்சாரம், சாலை வசதிகள் போன்ற பிற வசதிகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சியை பரவலாக விளம்பரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முழுவீச்சில் விளம்பரங்கள்:

இந்த மெகா நிகழ்வுக்கு அதிகபட்ச விளம்பரத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சிகளை மாநில அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த குதிரையின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘தம்பி’ மற்றும் சின்னமும் வெளியிடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின், ‘நம்ம சதுரங்கம், நம் பெருமை’ என்ற விளம்பர வாசகங்கள் அடங்கிய பேருந்துகளை, நகரம் முழுவதும் பயணிக்க கொடியசைத்து துவக்கி வைத்தார்.

The grand inaugural ceremony featuring the rich culture and tradition of Tamil Nadu will be attended by Prime Minister Narendra Modi, Chief Minister M K Stalin and other special invitees at Nehru Indoor stadium on July 28.

இந்நிகழ்ச்சியின் டீஸர் வீடியோவை வெளியிட்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவிலேயே முதன்முறையாக 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

செஸ் வண்ணம் பூசப்பட்ட நேப்பியர் பாலம்: சென்னை முழுவதும் வலம் வரும் தம்பி

விக்னேஷ் சிவன் இயக்கிய டீஸர், மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள நகரின் பிரிட்டிஷ் காலத்து நேப்பியர் பாலத்திலும், மாமல்லபுரத்தில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களிலும் படமாக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ள வீடியோ சதுரங்கப் பலகையைப் போன்ற பின்னணியில் அமைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள முழு பாலத்திற்கும் மேக்ஓவர் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சின்னத் தம்பி நம்ம சென்னை செல்ஃபி பாயின்ட், ஈசிஆர் மற்றும் பிற பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் விழா விவரங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

The Chennai Metro train was decorated with information about the Chess Olympiad event. (Source: CMRL)

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன, கோயம்புத்தூர், திருச்சி போன்ற பிற நகரங்களில், நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யும் வகையில், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

தம்பியுடன் செல்ஃபி எடுத்து, டிக்கெட்டை வெல்லுங்கள்

இந்நிகழ்ச்சியை மிகவும் சுவாரஸ்யமாக்குவதற்காக, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் திறப்பு விழாவிற்கான டிக்கெட்டுகளை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற, தம்பியுடன் செல்ஃபி படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் இடுகையிடுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்ட சில போட்டிகளையும் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஒலிம்பியாட் போட்டிக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

https://tickets.aicf.in./ என்கிற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இரண்டு விளையாட்டு அரங்குகள் உள்ளன. ஹால் 1 மற்றும் ஹால் 2. ஹால் 1 க்கான விலைகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் இது சிறந்த தரவரிசை அணிகளைக் கொண்டிருக்கும் (திறந்த நிலையில் 28 பலகைகள் மற்றும் பெண்கள் பிரிவில் 1).

ஹால் 2ல் போட்டியைக் காண, ஒருவருக்கு டிக்கெட் விலை ரூ.2,000, வெளிநாட்டவருக்கு ரூ.6,000. 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் 200 ரூபாய் சலுகை விலையில் டிக்கெட் பெறலாம்.

முதல் தரவரிசை அணிகள் இடம்பெறும் ஹால் 1க்கான டிக்கெட்டின் விலை ரூ.3000, அதேசமயம் வெளிநாட்டவர் ரூ.8,000 செலுத்த வேண்டும். 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு தள்ளுபடி டிக்கெட் விலை ரூ.300.

பார்வையாளர்களுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறை

பார்வையாளர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்கு பிறகே, போட்டி நடக்கும் இடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போட்டி அரங்கிற்குள் அலைபசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்களின் கேஜெட்களை கவுன்டரில் டெபாசிட் செய்யலாம்.

ஒலிம்பியாட் போட்டிக்கு இலவச பேருந்துகளை இயக்கும் தமிழக சுற்றுலாத்துறை

வருகிற திங்கள்கிழமை முதல், மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்காக ஐந்து ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் பேருந்துகளை இலவசமாக இயக்க தமிழக சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

இந்தியன்எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் பேசிய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (டிடிடிசி) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி, பேருந்துகள் மத்திய கைலாஷில் இருந்து சேவையைத் தொடங்கி, ராஜீவ் காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்புக்கு இயக்கப்பட்டு கிழக்குக் கடற்கரை சாலை வழியாகச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

“ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் பேருந்து சேவைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டன. இப்போது இந்த ஒலிம்பியாட் உடன் இணைந்து அவற்றை மீண்டும் தொடங்குகிறோம். நாங்கள் 19 நிறுத்தங்களைக் கண்டறிந்துள்ளோம், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் பார்வையாளர்களை அழைத்துச் செல்ல மொத்தம் ஐந்து பேருந்துகள் பயன்படுத்தப்படும், மேலும் இது இலவசம், ”என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், கடலோர நகரத்தில் உள்ள ஆட்டோ ரிக்‌ஷாக்களை ‘சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஆட்டோக்கள்’ என மறுபெயரிட தமிழக சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. ஏறக்குறைய 25 ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அடையாளம் காணப்பட்டு அவை புதிய வடிவமைப்பில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இயக்குநர் நந்தூரி கூறுகையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் துறையானது நடத்தைப் பயிற்சி அளித்து வருவதாகவும், இதனால் பயணிகள் குறிப்பாக ஓட்டலில் சிக்கல்களை அனுபவிக்கக்கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்குச் செல்லும் இடங்களைப் பற்றிய துணுக்குகளை ஓட்டுநர்கள் வழங்குவார்கள்.” என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/sports/chess-olympiad-2022-heres-all-you-need-to-know-483117/

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு: செந்தில் பாலாஜி அறிவிப்பு

 18 7 2022

Electricity Tariff will be increased, Electricity Tariff increased in Tamil nadu, Minister Senthil Balaji, Minister Senthil Balaji Pressmeet, மின்சாரக் கட்டணம் உயர்வு, தமிழகத்தில் மின்சார கட்டணம், மின் கட்டணம் உயர்கிறது, அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரம், இலவச மின்சாரம், 100 யூனிட் மின்சாரம், தமிழ்நாட்டில் மின்சாரம், மின் கட்டணம், Minister Senthil Balaji Speech, Electricity Tariff, Electricity Bill, Tamilnadu Electricity, Electricity tariff will be increased

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னையில் மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது.

ஒன்றிய மின் துறை 7 முறையும், மேல் முறையீட்டு ஆணையம் 1 முறையும், ஆர்.இ.பி.சி.எஃப்.சி (REPCFC) 5 முறையும், ஒழுங்குமுறை ஆணையம் 18 முறையும் என ஒட்டுமொத்தமாக 28 முறை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில், இன்று வேறு வழியில்லாமல், குறிப்பாக அதலபாதாளத்தில் இருக்கக்கூடிய மின்சாரத்துறையை மீட்டெடுக்க வேண்டும், தமிழகத்தில் வரக்கூடிய தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறனை நிறுவி நாம் அதை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இப்போது இருக்கக்கூடிய சொந்த மின் உற்பத்தி என்பது வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6220 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் மின் உற்பத்தியை மின்சார வாரியத்தின் உற்பத்தியுடன் இணைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலைமைகளில், குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில், சீரழிக்கப்பட்ட மின்சாரத்துறையை பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில், மேம்படுத்த வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, அந்த அடிப்படையில், எந்த வகையிலும் அடித்தட்டு மக்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில், மின் கட்டண மாற்றங்கள் செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை இப்போது நான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன்.

கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் இல்லை. 42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை.

2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.

201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களில் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப் படுகிறது.

2 மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50 பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2 மாதங்களில் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 வரை உயரும்.

2 மாதங்களில் 601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 கட்டணம் உயரும்.
விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின்கட்டண ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு விபரம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/electricity-tariff-will-be-increased-in-tamil-nadu-announced-by-minister-senthil-balaji-481263/

ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ்; மேலும் ஒரு வாரம் ஓய்வு: காவேரி மருத்துவமனை அறிக்கை

  17 07 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18/07/2022)  மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனக்கு சோர்வு மற்றும் காய்ச்சல் இருந்ததால், கொரோனா சோதனை செய்ததாகவும்,இதைத்தொடர்ந்து தனக்கு தொற்று இருக்கிறது என்பது உறுதியானது என்றும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.


இந்நிலையில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து கொரோனா தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெவித்தனர். இது தொடர்பான அறிக்கையும் வெளியானது.

இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதாகவும். அவரது தனிமைப்படுத்தல் காலம் முடிந்துவிட்டதால் அவர் நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.   

source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-will-discharge-tomorrow-kaveri-hospital-press-release-480620/

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்; கவுன்சில் என்பது என்ன?

18 6 2022 
Explained: What is the Inter-State Council?: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூன் 16) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை வலுப்படுத்த” மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று முறை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கவுன்சிலில் வைக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இதற்குக் காரணம், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பொதுவான நலன் சார்ந்த விஷயங்களில் “பயனுள்ள மற்றும் விவாதத் தொடர்பு” இல்லாததே காரணம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் என்றால் என்ன?

இது “இந்தியாவில் மத்திய-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக” அமைக்கப்பட்ட ஒரு பொறிமுறையாகும். மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் அரசியலமைப்பின் 263 வது பிரிவின் கீழ் நிறுவப்பட்டது. அந்த விதி கவுன்சிலுக்கான தேவை உணரப்பட்டால் ஜனாதிபதி அத்தகைய அமைப்பை உருவாக்கலாம் என்று கூறுகிறது. கவுன்சில் ஆனது அடிப்படையில் பல்வேறு அரசாங்கங்களுக்கிடையில் விவாதங்களுக்கு ஒரு மன்றமாக செயல்படும்.

1988 இல், சர்க்காரியா கமிஷன் இந்த கவுன்சில் ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது, மேலும் 1990 இல் அது ஜனாதிபதி ஆணை மூலம் நடைமுறைக்கு வந்தது.

கவுன்சிலின் முக்கிய செயல்பாடுகள், மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை விசாரிப்பது மற்றும் ஆலோசனை வழங்குவது, இரண்டு மாநிலங்கள் அல்லது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே பொது நலன்களைக் கொண்ட விவகாரங்களை ஆராய்ந்து விவாதிப்பது மற்றும் கொள்கை மற்றும் செயல்பாட்டின் சிறந்த ஒருங்கிணைப்புக்கான பரிந்துரைகளை வழங்குவது போன்றவையாகும்.

பிரதம மந்திரி கவுன்சிலின் தலைவர், அதன் உறுப்பினர்களில் அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டப் பேரவைகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் உள்ளனர். பிரதமரால் பரிந்துரைக்கப்படும், மத்திய மந்திரிகள் குழுவில் உள்ள கேபினட் அந்தஸ்தில் உள்ள ஆறு அமைச்சர்களும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ள பிரச்சனைகள் என்ன?

முக்கியமாக, வழக்கமான கூட்டங்கள் இல்லாததால், கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே கவுன்சில் கூடியது என்றும், ஜூலை 2016 முதல் எந்தக் கூட்டமும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார். 1990 இல் கவுன்சில் அமைக்கப்பட்டதிலிருந்து, அமைப்பு 11 முறை மட்டுமே கூடியுள்ளது. ஆனால், ஒவ்வொரு வருடமும் குறைந்தது மூன்று முறை சந்திக்க வேண்டும் என்று அதன் நடைமுறை கூறுகிறது.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கவுன்சில் மறுசீரமைப்புக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இந்த அமைப்பில் இப்போது 10 மத்திய அமைச்சர்கள் நிரந்தர அழைப்பாளர்களாக இருப்பார்கள், மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கவுன்சிலின் நிலைக்குழு மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகாராஷ்டிரா, உ.பி., மற்றும் குஜராத் முதல்வர்கள் மற்ற நிலைக்குழு உறுப்பினர்களில் சிலர்.

வரிவிதிப்பு, நீட் தேர்வு நீட் போன்றவற்றில் மத்திய அரசின் கொள்கைகளுடன் ஸ்டாலின் உடன்படவில்லை, மேலும், மாநிலங்களின் உரிமைகள் குறித்தும் அவர் அடிக்கடி பேசி வருகிறார். கவுன்சில் தவறாமல் கூட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஸ்டாலின், கவுன்சில் கூடாததால், “நிர்வாகப் பிரிவுகளுக்குள் இணக்கமாகத் தீர்வு காணக்கூடியது பெரும்பாலும் நீதித்துறையின் வாசலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது” என்று கூறினார்.

கவுன்சில் தேவை என்று தமிழகம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. 1969ல் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி, மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பேசினார். சில மாதங்களுக்குப் பிறகு, அவரது அரசாங்கம் முன்னாள் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது, அது 1971 இல் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது, அந்த அறிக்கை “உடனடியாக மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்தது.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் கடைசி கூட்டத்தில் நடந்தது என்ன?

2016 ஆம் ஆண்டில், 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய-மாநில உறவுகள் குறித்த புஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டது. அப்போது, ​​அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கருணாநிதி விமர்சித்திருந்தார்.

கூட்டத்தில் பரிந்துரைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் “மையமயமாக்கலுக்கு” எதிராக மத்தியில் கூட்டாட்சி கட்டமைப்பை கடைப்பிடிக்க மாநிலங்கள் வலியுறுத்தின. மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைத் திணிப்பது கவலைக்குரிய விஷயமாக விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகளுடன் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.



source https://tamil.indianexpress.com/explained/explained-what-is-the-inter-state-council-468623/

21 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

2 6 2022 Stalin urged Governor RN Ravi to grant assent to 21 bills: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைகழக சட்ட முன்வடிவு 2022-க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்துமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்காக கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து இருவரும் கலந்தாலோசித்தாகவும் கூறப்படுகிறது. மேலும் 6 பேர் விடுதலை குறித்து முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-urged-governor-rn-ravi-to-grant-assent-to-21-bills-462323/


Modi Chennai Visit Highlights:  

 26 5 2022 

PM Modi Chennai visit, Stalin attends inaugural function Live Updates: தமிழகத்தில் ரூ.31400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின். தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் மேலும் இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே சரியான தருணம் என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் மோடி:

பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/pm-modi-chennai-visit-stalin-attends-inaugural-function-live-updates-458897/

அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம் 20 5 2022

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மத்திய அரசோடு முரண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டின் குரலை அழுத்தமாக நீதிமன்றம் பதிவு செய்யும் வகையில் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பேரறிவாளன் விடுதலை வழக்கில், அதிகாரம் தொடர்பான விஷயத்தை உச்சநீதிமன்றம் அழுத்தமாக கூறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவை நிறைவேற்றிய எழுவர் விடுதலை விவகாரத்தில், மாநில அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிபடுத்தி உள்ளார்கள். ஆர்.என். ரவி – மு.க. ஸ்டாலின் முரண்பாடு:
தமிழ்நாட்டின் அரசியலை கூர்ந்து நோக்குபவர்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் முரண்பாடு புரியும். தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் முதலில் கிடப்பில் போட்டதும், பிறகு அதே மசோதாவை எந்த திருத்தமும் செய்யாமல் மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைத்ததையும் பார்த்தோம். இதன் தொடர்ச்சி, துணை வேந்தர் நியமனத்தில் யாருக்கு அதிகாரம், மாநில அமைச்சரவை முடிவு பெரிதா, அல்லது ஆளுநரின் அதிகாரம் பெரிதா என்ற முரண்பாட்டை நோக்கி நகர்ந்தது.
பேரறிவாளன் விவகாரத்தில் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தற்போது அவரின் விடுதலையையும் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் எதை காட்டுகிறது. ஆளுநரின் நடவடிக்கைகளிலிருந்து அவர் சட்டத்தை மீறி செயல்பட்டதால் அதனை எல்லையில் பேரறிவாளன் விடுதலை கிடைத்ததா என்பதை ஆராய வேண்டி உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவைக்கே அதிகாரம்”:
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு உடன் நிகழ்வாக அமைச்சரவைக்கு அதிகாரமா அல்லது ஆளுநருக்கு அதிகாரமா என்ற கோணத்திலும் கூடுதல் கவனத்தோடு கையாண்டது. பேரறிவாளன் விடுதலை வழக்கை சட்ட ரீதியான வெற்றியாக மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, மாநில சுயாட்சிக்கு கிடைத்த வெற்றி என்ற வகையிலும் வழக்கை கொண்டாடுகிறார்கள். அதற்கும் ஒரு கோணம் இல்லாமல் இல்லை. மாநிலத்தின் உரிமையை பேரறிவாளன் வழக்கு நிலைநாட்டியுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை வழக்கு கடந்து வந்த பாதையை உற்று நோக்கும் போது சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு சவால் விடும் அளவிற்கு ஒரு அரசியல், சமூக, சட்டப்போராட்டம் இங்கு நடந்திருப்பது புரிய வரும்.
பேரறிவாளன் விடுதலை குறிப்பிட்ட சமூக பொருளாதார அரசியல் சூழலில் தான் வழக்காக தொடுக்கப்படுகிறது. செங்கொடி மரணம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எழுவர் விடுதலைக்காக காட்டிய முனைப்பு. அதற்காக தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் இந்த பின்னணியில் தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு எழுவரையும் விடுதலை செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார். ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால், எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் உத்தரவு மத்திய அரசுக்கு தான் உள்ளது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இங்கு தான், யாருக்கு அதிகாரம் என்ற பேச்சு எழுகிறது. அதற்கு முன்பாக கூட, பேரறிவாளன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த கருணை மனுக்கள் ஆளுநர் தொடங்கி குடியரசு தலைவர்கள், அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், பிரனாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் வரை நிராகரிக்கப்பட்டதையும் பார்க்கலாம்.
எழுவர் விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய நீதிமன்றம் :

11 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டதால் பேரறிவாளன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2014 பிப்ரவரி 18ல் பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாகத் தான், இந்த வழக்கில் மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாஸன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

2012 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுவர் விடுதலை விஸ்வரூபம் எடுத்தாலும் கூட, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 7 தமிழர் விடுதலை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று ஆணையிட்டது. அதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி, 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுநருக்குப் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது.

இங்கு தான், எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற பேச்சு எழுந்தது. அதாவது, உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 161-வது பிரிவின்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என உறுதி அளிக்கிறது. ஆனாலும் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை 2018 செப்டம்பர் 9ல் 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதுவும் கிடப்பில் போடப்பட்டது. எழுவரை விடுவிக்கும் முடிவை ஆளுநரே எடுக்கலாம் என்று கூறிய உச்சநீதிமன்றம், மாநில அமைச்சரவைக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறி அதிகாரத்தின் பலத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவைக்கு வழங்கியுள்ளது. அதாவது, உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கும், நீதிபதி நாகேஸ்வரராவ் வழங்கிய தீர்ப்புக்கும் இடையில் நடந்த அரசியல் பொருளாதார நடவடிக்கைகளையும் கவனித்து பார்க்க வேண்டியுள்ளது.

சட்டங்களே ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார சூழலில் தான் கொண்டு வரப்படுகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழலை ஒட்டியும், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக சட்டத்தின் மீது நடத்தும் மதிப்பீடுகளைப் பொருத்தும் புதிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு நீதிமன்றம் வந்து சேர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் வழக்காக மாறிய பேரறிவாளன் விடுதலை:

யாருடைய அதிகாரம் மேலே வருகிறதோ அந்த அதிகாரத்தோடு முரண்படும் மற்றொரு ஆளும் வர்க்கம் மேல் கையெடுக்க வைக்கும். மத்திய அரசு மாநில அரசின் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்றால், அதற்கு எதிராக மாநில அரசு தனது உரிமையை மீட்க மீள் கையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், ஆளுநரின் அதிகாரம் மேலே வரும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை மேல் கையெடுக்கிறது. இது தான், பேரறிவாளன் விடுதலை விவகாரத்திலும் வெளிப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் தான், பேரறிவாளனுக்காக சட்டப் போராட்டம் நடத்தினார். தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசியல் பிரச்னையாக இது மாறியது. பின்னர், அமைச்சரவையின் முடிவாக பரிணமித்தது. அதன் முடிவாக, தமிழ்நாடு அரசே தன் சொந்த வழக்காக பேரறிவாளன் விடுதலை வழக்கை நடத்தியது.

அதாவது, பேரறிவாளன் விடுதலைக்காக தமிழக அரசே வழக்கை நடத்தும் அளவிற்கு இந்த விவகாரம் அரசியல் நடவடிக்கையாக மாறியது. இந்த அரசியல் பிரச்னை தமிழ்நாடு மக்களின் மனிதாபிமான விஷயமாகவும் மாறியது. அரசியல் உரிமை சார்ந்தும் பரிணமித்து அடுத்த அழுத்தத்தில் மத்திய அரசோடு முரண்பாட்டை கையில் எடுத்து பேரறிவாளன் விடுதலையை சாத்தியமாக்கியுள்ளது.

source https://news7tamil.live/perarivalan-case-conflict.html 

இந்தியாவிற்கு ஏன் தேவை தமிழ்நாட்டு மாடல் வளர்ச்சி? 20 5 2022

நமது நாட்டில் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. எனினும், தமிழகம் மற்றும் கேரளாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கம் என்ற வார்த்தையும் தற்போது நாட்டு மக்களிடம் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. ‘பல நலத்திட்டங்களை உள்ளடக்கிய திராவிடல் மாடல் ஆட்சி காரணமாகவே பணவீக்கம் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில், பணவீக்கம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் வளர்ச்சி மாடல்களின் ஒப்பீட்டை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம். இந்த 3 மாநிலங்களின் மாடல்களும் பிற மாநிலங்களுக்கான கொள்கைகளை வகுப்பதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க உதவும். பணவீக்கத்தைத் தடுப்பதற்கான பணிகளில் நமது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவராவது வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியையும் நீண்ட கால உத்திகளையும் வகுப்பதற்கான தேவை தற்போதைய காலகட்டத்தின் அவசியமாகும்.

மேலே குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு வளர்ச்சி அணுகுமுறைகள், அதனால் கிடைத்த பலன்கள் ஆகியவற்றையும் பார்ப்போம். இந்த மூன்று மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் வளர்ச்சி மாடல்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருக்கின்றன. முதலாவதாக, இங்கு பீகார் மற்றும் அதன் வளர்ச்சி மாடலால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

இந்தப் பட்டியலில், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம் மற்றும் அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் அடங்கும். இந்த மாநிலங்களில் பலவும் தேசிய சராசரியுடன் ஒப்பிடக்கூடிய விகிதங்களில் வளர்ந்து வருகின்றன. இந்த மாநிலங்கள் மிகக் குறைந்த தனிநபர் வருமானம், குறைந்த அளவிலான மனித அல்லது சமூக வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

பீகார் மாடலில், தொழிலாளர்கள் இன்னும் விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ளனர். பிற மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாநிலத்தில் அதிகம் உள்ளது. இந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தொழில்துறையின் பங்கு தேசிய சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளது. வளர்ச்சியை அதிகரிக்கக் கூடிய குறிப்பிடத்தக்க நவீன தொழில்துறை மையங்கள் எதுவும் அங்கு இல்லை.

சில பெரிய தொழில்சாலைகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமானவையாகவே இருக்கின்றன. விவசாயம் அல்லாத தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) குறைந்த ஊதிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கச் செலவினங்களும் மாநிலத்தின் சொந்த வளங்களைக் காட்டிலும் மத்திய அரசு நிதியையே பெரிதும் சார்ந்துள்ளன. கூட்டாட்சி முறையில் மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியம் என்பதையே இது காட்டுகிறது.

அடுத்ததாக குஜராத் மாடலைப் பார்ப்போம். வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் மாநிலமான குஜராத்தில் தனி நபர் வருமானம் மிகவும் அதிகமாகும். பீகாரைக் காட்டிலும் இந்த மாநிலத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு அதிகம். வேளாண்மை சார்ந்த பணிகளில்தான் குஜராத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாகவும் குஜராத் திகழ்கிறது. தொழிற்சாலைகளைச் சார்ந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி தேசிய சராசரியைவிட 44 சதவீதம் அதிகமாக உள்ளது.

பாரம்பரிய வேளாண் பதப்படுத்தும் தொழில்களுடன், போக்குவரத்து உபகரணங்கள், மருந்துகள், பெட்ரோகெமிக்கல்ஸ், தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் நவீன நிதி சேவைகள் போன்ற நவீன தொழில்களும் அதன் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கின்றன. உள்கட்டமைப்பும் மிகவும் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக வளர்ச்சியில், இந்த மாநிலம் நாட்டின் முன்னணி மாநிலங்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது என்பது இதில் வேடிக்கையான ஒரு விஷயமாக இருக்கிறது.

மூன்றாவதாக, நான் இங்கே குறிப்பிடப்போவது தமிழ்நாடு. இது மிகவும் வளர்ச்சி அடைந்த மாடலைக் கொண்டிருக்கிறது. தனிநபர் வருமானமும் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மாநிலமும் குஜராத்தைப் போன்று அதிக தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் ஒப்பிடுகையில் 34 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ள மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.
குஜராத்தைப் போன்று அல்லாமல், தமிழகம் வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 30 சதவீதமாகக் குறைத்துள்ளது. மேலும், சமூக வளர்ச்சியில் நன்கு முன்னேறி இருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவிகளை தமிழகம் சார்ந்திருப்பது பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் குஜராத்துடன் ஒப்பிடுகையில் தமிழகம் குறைவாகவே மத்திய அரசின் நிதியுதவியை சார்ந்துள்ளது. இந்தியச் சூழ்நிலைகளில் தமிழகம் மிகச் சிறந்த வெற்றிகரமான மாடலைக் கொண்டிருக்கிறது. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் இதே போன்ற மாடலை பின்பற்றி வருகிறது.

கேரளாவும் சிலவற்றில் தங்களை மேம்படுத்திக் கொண்டால், அறிவுடன் சிறந்த பொருளாதார மையமாக கேரளா திகழும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள 3 வளர்ச்சி மாடல்களும் பல்வேறு மாநிலங்களில் நீண்ட கால வளர்ச்சிக்கான வழிகாட்டியாகத் திகழும்.

தமிழக மாடலைப் பின்பற்றும் மாநிலங்கள் அதை அப்படியே பின்பற்றினால் போதுமானதாகும். குஜராத் மாடலை பின்பற்றும் மாநிலங்கள் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிகார் மாடலைப் பின்பற்றும் மாநிலங்கள் தமிழக மாடலுக்கு தங்களது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும். எனினும், மத்திய அரசின் நிதிகளை அதிகம் சார்ந்திருக்கும் மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது கடினம்தான். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பார்க்க வேண்டிய மாற்றம் ஒரே இரவில் நடந்துவிடாது. இது அடுத்த 10 ஆண்டுகளில் அல்லது அதற்கு மேல் மட்டுமே நடக்க சாத்தியம் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மாடலே தற்போதைய தேவையாகும். மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டு மாடலை பின்பற்றலாம் என்பதில் தயக்கம் தேவையில்லை.

-கட்டுரையாளர், சுதிப்தோ முண்டில்,  வளர்ச்சி கற்றல் மையத்தின் தலைவர், திருவனந்தபுரம்.

-தமிழில் மணிகண்டன்

source https://news7tamil.live/three-development-models-that-can-guide-indian-state-economies.html 

தமிழ்நாடு, கேரளாவில் பணவீக்கம் குறைந்தது எப்படி?

கொரோனா பெருந்தொற்றுக்கு காலமாக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் ,உலக பொருளாதாரம் தலைகீழாக மாறி போனது. வரலாற்றில் படித்த பஞ்சமும், நம் கண் முன்னே வந்து போனது. கொரோனா அலை ஓய்ந்த பின்னும், அது ஏற்படுத்திய ஆழமான காயம் இன்னும் ஆறாமல் உலக மக்களை வாட்டி வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் தான் அதிக பாதிப்பு, இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை என கூறப்பட்டது. ஆனால் இன்று இந்தியாவிலும் , கொரோனாவானது மெதுவாக சத்தமின்றி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அது குறித்து பார்ப்போம்.

26 மாநிலங்களில் உச்சத்தை தொட்டுள்ளது பணவீக்க விகிதம். விதி விலக்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பிற மாநிலங்களைவிட குறைவான அளவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாக சில்லறை விற்பனை பண வீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் , 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.79 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது என ஆய்வு கூறுகிறது.

அதிகரித்த பணவீக்கத்தை , மாநில வாரியாக ஒப்பிட்டால் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் , அரியாணா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ,அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநிலங்களில் 9 சதவீதத்தை தாண்டியுள்ளது பணவீக்கம். அதே சமயம் சில மாநிலங்களில் குறைவான அளவு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு 8.33 சதவீதம் என்ற அளவில் ஏற்பட்ட பணவீக்கமே, அதிகமானதாக உள்ளது என அப்போது விமர்சிக்கப்பட்டது. 6 முதல் 7 சதவீதத்தை தாங்கும் சக்தி கொண்ட பணவீக்கம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையின் படி ,பணவீக்கம் அதிகரித்த மாநிலங்களின் , வீடுகளில் மாதாந்திர மற்றும் தினசரி பட்ஜெட்டையே பதம் பார்த்து இருக்கிறது.மேலும் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கத்தை அளவிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேசியளவில் 7.8 சதவீதமாக பணிவீக்கம் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் 7 மாநிலங்களில் 8 சதவீதம் அளவுக்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடுகிறது

ரஷ்யா – உக்ரைன் போரின் மறைமுக தாக்கம், பெட்ரோல் டீசல் மீதான மாறுபட்ட வரி விதிப்பு, பள்ளி கல்லூரி கட்டண உயர்வு, எரிபொருள், அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் , மொத்த செலவில் 25 சதவீதம் வரை , பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டை அதிகரிக்க செய்துள்ளது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

நாட்டையே அச்சுறுத்தும் பணவீக்கத்தில் ஏழைகள், நடுத்தர மக்கள் மட்டுமின்றி உயர் நடுத்தர மக்கள், பணக்காரர்களும் இதனால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த ஆய்வில்,மற்றொரு நம்பிக்கை தரும் அம்சமாக , 2 மாநிலங்கள் மிகக்குறைந்த அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.


குறைந்த அளவு பாதிப்பை சந்தித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் கேரளா இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது . மேற்கண்ட 2 மாநிலங்களில், தேசிய சராசரியை விட குறைவாக முறையே , தமிழ்நாட்டில் 5.4 மற்றும் கேரளாவில் 5.1 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் உள்ளது . என்பதை அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாடு,கேரளா மாநிலங்களில் உணவுப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துதல், மாநில அரசின் பொதுவினியோக திட்டத்தில் வழங்கப்படும் இலவசப்பொருட்கள், உணவு பொருட்கள் மட்டுமின்றி ,இதர அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் வழங்குதல்,பெட்ரோலிய பொருட்களின் மீதான நியாயமான வரி விதிப்பு போன்ற காரணிகளால் ஓரளவுக்கேனும் தாக்குப்பிடிக்கும் சக்தியை மக்களுக்கு வழங்குகிறது. இதனால் தேசிய சராசரியை விட குறைவாக பணவீக்கம் உள்ளது குறிப்பிடதக்கது.

தெய்வத்தாலாகாது எனினும்,முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்ற வான்புகழ் வள்ளுவனின் கூற்றுக்கு ஏற்ப,மத்திய அரசின் ஆதரவு இல்லா விட்டாலும்,மாநிலத்தின் சுய கட்டமைப்பால் எதையும் தாங்கும் இதயம் போல் சுயமாக முன்னேறியுள்ளன தமிழ்நாடும் , கேரளாவும் என்றால் மிகையில்லை

ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ் 20 5 2022 

source https://news7tamil.live/india-inflation-rate-high-but-tamilnadu-and-kerala-is-low.html





பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு 11 5 2022

 பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான செவ்வாய்கிழமை சட்டசபையில் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 6 தொடங்கி மே 11 வரை வரை 22 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தொடரின் நிறைவு நாளை நேற்று மட்டும், 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கே வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து’ 1976 -1998 காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வழக்கிழந்த 91 சட்டங்களை நீக்குவதற்கான நீக்கறவு மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரையின்படி இது செய்யப்பட்டது.

கிராம ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்யும் சட்ட மசோதா, ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரி நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் பெரியகருப்பன் அறிமுகம் செய்தார்.

குண்டர் சட்டம், 1982- திருத்த மசோதா, இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள காவலர்களுக்கு தற்காலிக விடுப்பு வழங்கும் நடைமுறையை எளிதாக்கும். காவல் ஆணையர் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு தற்காலிக விடுப்பில் விடுவிக்க அதிகாரம் அளிக்கும் சட்டத்தின் 15வது பிரிவில்’ புதிய விதியைச் சேர்த்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நிறைவேற்றப்பட்ட மசோதா, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் துறையினரின் பங்கேற்புக்கு வழிவகுக்கும்.

இதுதவிர, அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதா, தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி ,தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாடு திருத்த சட்ட மசோதாக்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய திருத்தம் மொத்தம் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இதில் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவும், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், (நேற்று மே.11) நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களும் ஓரிரு நாட்களில், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-20-bills-passed-on-last-day-of-budget-session-452279/

ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி எப்படி இருக்கிறது? 

 8 5 2022

MK Stalin, CM MK stalin, CM MK stalin one year rule, முக ஸ்டாலின், ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி, தமிழ்நாடு, Chennai, Chennai news, M K Stalin, Stalin news, M K Stalin completes one year, Stalin completes one year, Tamil Indian Express, Tamil Indian Express news

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சனிக்கிழமை தனது தந்தையும் முன்னால் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் பெருமையைப் பற்றி குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், “நான் கலைஞர் அல்ல. என்னால் கலைஞரைப் போல் பேசவும் முடியாது, அவரைப் போல எழுதவும் முடியாது. ஆனால், நான் அவரைப் போல் கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்திருந்தேன். நான் அந்த வார்த்தையைக் கடைப்பிடித்து வருகிறேன் என்று கூறுகிறேன். அதுவே இந்த தருணத்தில் என் திருப்தி.” என்று கூறினார்.

ஸ்டாலினின் முதல் ஆண்டு ஆட்சி, மாநிலத்திற்கான ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டம், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு உதவும் நோக்கில் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான நீண்டகால திட்டமிடல், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடனான சோதனை, சட்டம்-ஒழுங்கு நிலைமை, மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மோதல் என்று இருக்கிறது.

அண்மைக் கால நிர்வாக சாதனகளைவிட சிறந்த நிர்வாக சாதனையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு, பத்தாண்டு காலமாக அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருந்த மாநில அரசு அதிகாரிகள் மட்டத்தில், அதற்கு அதிக விசுவாசிகள் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

“முந்தைய திமுக ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்த திமுக விசுவாசிகளில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்றுவிட்டனர். பதவி உயர்வு, இடமாற்றம், நியமனம் மற்றும் பிற பிரபலமான பணம் சம்பாதிக்கும் ‘துறைகளில்’ பணம் சம்பாதிப்பதற்கு எதிராக அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகார மட்டங்களை ஸ்டாலின் திட்டவட்டமாக எச்சரித்தாலும், ஊழல் ஒரு சவாலாக தொடர்கிறது” என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால், ஸ்டாலினின் மையப்படுத்தப்பட்ட வேலை, கடுமையான நிதி மேலாண்மை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான முழு அளவிலான ஆய்வுக் குழு, தலைமைச் செயலாளர் வி.இறையன்பு, முதல்வர் செயலாளர்கள் பி.உமாநாத், டி.உதயச்சந்திரன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் பட்டாளம் இந்த அமைப்பைச் கடந்த ஒராண்டாக செயல்பட வைத்தது.

சமூக நீதியில் கவனம் செலுத்துங்கள்

ஸ்டாலின் அரசாங்கத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையை தொடக்கத்தில் இருந்து செயல்படுத்தும் முயற்சி முக்கியமானது. தங்கள் பக்கம் (பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போன்ற) ஆழ்ந்த கள அறிவு கொண்ட அமைச்சர்கள் மற்றும் எஸ்தர் டஃப்லோ, ஜீன் டிரேஸ் மற்றும் ரகுராம் ராஜன் போன்ற சர்வதேச புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களின் ஆதரவுடன் ஒரு திடமான ஆராய்ச்சிக் குழுவை உருவாக்குவதன் மூலம், அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டமும் அறிவிப்புகளும் ஒரு நீண்ட கால திட்டமாக உள்ளது. அது செயல்திட்டங்கள் அல்லது தற்காலிக ஆதாயங்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் அதிக விளைவு சார்ந்ததாக இருக்கிறது. தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் திட்டம் ஒரு நல்ல உதாரணம்.

முதல் ஆண்டில், சமூக நீதியை மையமாகக் கொண்டு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை உறுதிசெய்ய அரசாங்கம் உழைத்தது. பணிபுரியும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம், பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்களை கோயில்களில் நியமனம் செய்ய வெளிப்படையான அழைப்பு, தனி வேளாண் பட்ஜெட், தனித்து நிற்கும் பெண்களை அங்கீகரித்தல் போன்றவை இயற்றப்பட்ட திட்டங்களில் சில. அவர்களது குடும்பங்கள் அல்லது பெற்றோர்கள் “குடும்பமாக” இருப்பதன் மூலம் அவர்கள் ரேஷன் கார்டுகளைப் பெற முடியும், மேலும் பள்ளி மாணவர்களுக்கான சமீபத்திய காலை உணவுத் திட்டம்.

முதல் ஆண்டில், சமூக நீதியை மையமாகக் கொண்டு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை உறுதிசெய்ய அரசாங்கம் வேலை செய்துள்ளது. பணிபுரியும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம், பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்களை கோயில்களில் பணி நியமனம் செய்ய வெளிப்படையான அழைப்பு, தனி வேளாண் பட்ஜெட், குடும்பத்திலிருந்து பிரிந்து அல்லது பெற்றோர்களிடம் இருந்து பிரிந்து தனியாக வாழும் பெண்களை அங்கீகரித்து ரேஷன் பொருட்களை பெற குடும்ப அட்டை வழங்குதல், சமீபத்தில்,பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்றவை இந்த ஒராண்டு ஆட்சியில் இயற்றப்பட்ட திட்டங்களில் சில.

வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்றுமதித் துறை மற்றும் பிற தொழில்துறை விரிவாக்கத் திட்டங்களிலும் திமுக தலைமையிலான நிர்வாகம் உறுதியாக இருந்தது. அரசாங்கத்தின் மற்றொரு கவனம் தமிழ் மொழி. தமிழ் மொழிக்கான திட்டங்களாக, புராஜெக்ட்கள், நூலகங்கள், கீழடி உள்ளிட்ட பல தொல்லியல் தளங்களில் அகழ்வாராய்ச்சி திட்டங்களில் சிறப்பு கவனம், மற்றும் இலங்கை தமிழ் அகதிகளின் முகாம்களை சீரமைக்க, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக 300 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஊழல் மற்றும் பிற சவால்கள்

“ஏழைகள், நலிந்த பிரிவினருக்காகப் பலவற்றைச் செய்தாலும், மேல்தட்டு வர்க்கத்தினருக்கான பெரிய முதலீடு, உள்கட்டமைப்புத் திட்டங்களைத் திட்டமிடும்போது, ஊழலால் நடுத்தர வர்க்கத்தினர்தான் புறக்கணிக்கப்பட்டு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்” என்றும் திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறினார். “அது கொஞ்சம் கூட மாறவில்லை. ஊழலுக்கு எதிரான வலுவான செய்தி இன்னும் குறையவில்லை. உண்மையில், அவர்கள் நம்பக்கூடிய அதிகாரிகளைக் கண்டுபிடிக்க அரசாங்கம் இன்னும் முயற்சி செய்கிறது” என்று கூறினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவின் வெற்றியும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று செயல்பாட்டாளர் கூறுகிறார்கள். திமுக அமைச்சர் ஒருவர் கூறுகையில், “பல வழக்குகள் பொது வெளியில் வரவில்லை, ஆனால் திமுக கவுன்சிலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் அதிகாரத்தை வலியுறுத்துவது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.” என்று கூறினார்.

சட்டம் ஒழுங்கு விஷயத்திலும் முதல் ஆண்டு சிறப்பாக அமையவில்லை. காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவல்துறையின் அத்துமீறல் வழக்குகள் வெளிவருவதால், கலவையான காரணிகள் காவல்துறையின் வேலையை கடினமாக்குகிறது என்று பல அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்கள். நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்குப் போராடும் காவல்துறையும் மற்றும் நீதித்துறை அமைப்பும் காவல்துறையின் மீதான அழுத்தங்களுக்கு பங்களிக்கின்றன.

“லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதும், நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கத் தவறும்போதும், உடனடி நீதிக்காக சட்டத்திற்குப் புறம்பான செயல்களை இயல்பாக்குவதற்கு காவல்துறை கூட்டாகத் திரும்புகிறது. அதிக பொருளாதார நடவடிக்கைகள் கொண்ட மாநிலமாக, நிதி மற்றும் கிரிப்டோ குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. பணிச்சுமை காரணமாக தற்கொலைகள் அடிக்கடி நிகழும் வேளையில், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் விபத்துகள் மற்றும் தற்கொலைகள் உட்பட மாநிலத்தில் குறைந்தது 100 போலீசார் இறந்துள்ளனர். பெண் பணியாளர்கள் சில பாதுகாப்புப் பணிகளில் இருந்து விடுபடுவதால் – அவர்களின் மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது – மன அழுத்தக் காரணி காவல்துறையில் சீராக உருவாகி உள்ளது” என்று ஐஜி பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாஜகவும் கூட்டாட்சி உரிமைகளும்

பாஜக தலைமையிலான மத்திய அரசுடனான உத்தி நடவடிக்கைகள் “குறிப்பாக மத அரசியலில்” ஸ்டாலினுக்கு பெரும் சவாலாகத் தொடர்கின்றன என்று முதலமைச்சருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசை கையாள்வதில் கவனமாக இருந்த நிலையில், மாநில நிர்வாகம், முதல் ஆண்டிலேயே, மத்திய அரசின் உரிமை பிரச்னையை முன்வைத்து, கவர்னர் ஆர்.என்.ரவியுடன் மோதலில் ஈடுபட்டது. ஆளுநரின் அதிகாரங்களை புறக்கணித்தோ அல்லது மறுத்தோ சட்டம் இயற்றுவதுடன், துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தையும் தமிழக அரசு தனக்கு மாற்றிக் கொண்டது.

திமுகவிற்குள் ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் எந்த கேள்விக்கு இடமில்லாத அளவில் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வருகின்றனர். முதல்வரின் மகன் உதயநிதியை மாநில அமைச்சரவைக்குக் கொண்டு வரும்போது, ஜூன் மாதத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்போது பின்னடைவுகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கட்சியின் மூத்த தலைமை எதிர்பார்க்கிறது. ஆனால், தற்போது இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் ஸ்டாலினின் மருமகன் வி.சபரீசன்தான்.

“சபரீசன் முக்கிய வியூக வகுப்பாளர். அவர் நல்ல மனிதர்” என்று திமுக அமைச்சர் ஒருவர் கூறினார். மற்றொரு அமைச்சர் சபரீசனுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சிகளோ அல்லது திட்டங்களோ இல்லை என்றார். ஸ்டாலின் எதை விரும்புகிறாரோ, அதை நோக்கி சபரீசன் செயல்படுகிறார். “ஒரு காலத்தில் நரேந்திர மோடிக்கு அமித்ஷா எப்படி இருந்தாரோ, அல்லது மறைந்த ஜெயலலிதாவுக்காக வி.கே.சசிகலா எப்படி செயல்பட்டார்களோ அது போலத்தான் அவர் இருக்கிறார். கட்சியிலோ ஆட்சியிலோ அவருக்கு முறையான பதவிகள் இல்லை, ஆனால் அவர்தான் நிகழ்ச்சியை நடத்துபவர். அவர் அன்றாட அரசு நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் கட்சி விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார். எல்லாவற்றிலும் அவருக்கு பெரும் பங்கு உள்ளது.” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-tiruchi-sivas-son-surya-joins-in-bjp-soon-451364/

5 புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர்

 7 5 2022 திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்பது தான் வாக்குறதி. ஓராண்டில் 60 முதல் 70 விழுக்காடு அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கோம். எல்லா அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கும். இந்த அரசுக்கும் அப்படி தான். அதற்கு திராவிட மாடல் என பெயர் சூட்டியிருக்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் இதன் உள்ளடக்கம் என்றார்.

மேலும், திமுக அரசு பொறுப்பேற்று 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் 5 புதிய திட்டங்கள் முதல்வர் அறிவித்தார்.

காலை சிற்றுண்டி

அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலை தூர கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகம்

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும்.

தகைசால் பள்ளிகள்

டெல்லியை போல தமிழ்நாட்டிலும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும். 25 மாநகராட்சிகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தகைசால் பள்ளிகள் (school of excellence) உருவாக்கப்படும். இங்கு, மாணவர்களுக்கு கல்வியோடு கலை, இலக்கியம், இசை, நடனம் ஆகியனவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

நகர்ப்புற நல்வாழ்வு மையம்

21 மாநகராட்சிகளில், 63 நகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் தொடங்கப்படும். இங்கு காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும். இந்த நிலையங்களில், தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் உள்பட 4 பேர் பணியில் இருப்பர்

உங்கள் தொகுதியில் முதல்வர்

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், மேலும் விரிவுப்படுத்த தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரும். ஒவ்வொரு எம்எல்ஏ-வும் ம் தொகுதிக்கு தேவையான 10 முக்கியமான திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும். இதன் பணிகளுக்காக ரூ1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் என முதல்வர் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-cyclone-asani-live-updates-451034/

சட்டசபையில் இன்று

 4 5 2022 

தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு புதன்கிழமை (மே 4) மீண்டும் கூடியது. இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதம் விவாதம் நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் தடை சர்ச்சை; அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்சியில், ஆதீனத்தின் பல்லக்கை மனிதர்கள் தோளில் சுமந்து செல்வதற்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.

தமிழக சடப்பேரவையில் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஆதீனத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதாக கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும் என்றார்.

தருமபுரம் ஆதீனத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி நல்ல முடிவு காண்பார் – அமைச்சர் சேகர் பாபு

இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம் அளித்து பேசுகையில், பட்டினப் பிரவேசம் குறித்து ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு மே 22ஆம் தேதிதான் நடைபெறும். எனவே, இது குறித்து வரும் 22ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், திமுக தலைமையிலான அரசு மதச்சார்பற்ற அரசு எனக் கூறிவரும் நிலையில், பண்டிகைகள் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகளை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து, சபாநாயகர் நீக்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் தவறாக எதையும் குறிப்பிடவில்லை என்று கூறினார்.


இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு நாடு முழுவதும் அவதூறு பரப்பப்படுவதாக ஆவேசமாகக் கூறினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வழியில் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருவதாக மு.க. ஸ்டாலின் கூறினார். தங்களின் கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயரிட்டு அப்படியே செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள்

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:

“*இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலம் பொற்காலமாக இருக்கும்

*ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும்.

*அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.

*திமுக ஆட்சி முடிவதற்குள் 15 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணி நிறைவடையும்.

*கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம்”

*அர்ச்சனை கட்டணத்தில் அர்ச்சகருக்கு 60% பங்கு தொகையாக வழங்கப்படும்.

*தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாச்சார மையம் அமைக்கப்படும்.” என்று கூறினார்.

கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மை நிறுவனங்களை மேம்படுத்த புதிய கொள்கை அமைக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – முதல்வர் ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற ஆளுனர், உள்துறை அமைச்சகத்திற்கு மசோதாவை அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

மேலும், “நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான நமது போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் கூட்டாக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-senior-leaders-competes-in-the-party-for-2-rajya-sabha-seats-449837/

பட்டினப் பிரவேசம் சர்ச்சை;


4 5 2022  மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை அன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியின்போது, ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமரவை வைத்து பக்தர்கள் பல்லக்கை சுமந்து வீதியுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் தவறானது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் மடத்தில் இந்த மாத இறுதியில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் பல்லக்கை தோளில் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ. பாலாஜி மே 2 ஆம் தேதி உத்தரவிட்டார்.

பட்டினப் பிரவேசத்துக்கு எதிராக திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 23-வது பிரிவின்படி மனித உரிமை மீறல் என காரணம் காட்டி, மே 22 அன்று நடைபெறவிருந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிகு ஆர்.டி.ஓ. தடை விதித்தார்.

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பக்தர்கள் பல்லக்கை தோளில் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து, மதுரை ஆதீன கர்த்தர் ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள கண்டனம் தெரிவித்ததோடு, எங்கள் உயிரைக் கொடுத்தாவது பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம் என்று கூறியதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

தருமபுரம் ஆதீனம் மடத்தின் நிகழ்ச்சிக்கு ஆளுநர் வந்ததால்தான் தமிழக அரசு தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடைவிதித்துள்ளது என்றும் தமிழக அரசு தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (மே 4) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஆதீனத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதாக கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடைபெற்றுவரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றம் தீர்மானம்

 29 4 2022 

இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவ மத்திய அரசின் அனுமதி கோரி முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி கோரும் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை அனுப்பி வைக்க அனுமதி தர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து மக்களுக்கும் உதவிட அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கை அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கை மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருவதோடு, உலக நாடுகள் அவர்களை அனுதாபத்துடன் பார்க்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானம் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தமிழர்கள் மனித நேய உலகில் உயர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும், இலங்கைக்கு நிவாரண உதவியாக நான் சார்ந்த குடும்பம் சார்பாக, ரூ.50 லட்சம் நிதியை அளிக்கிறேன் என்று கூறினார்.

பின்னர், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் முதற்கட்ட உதவி. இலங்கை மக்களுக்கு உதவ எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், எதிர்கட்சி துணைத்தலைவர் ரூ.50 லட்சம் தருவாதக தெரிவித்து இருப்பதோடு, மற்றவர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா இலங்கை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை சார்ந்தே இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்து விட்டது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அங்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு, அரிசி, பருப்பு, பால், டீ உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு, பால் பவுடர் உள்பட அனைத்து பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதனால் அங்கு மக்கள் கடந்த 21 நாட்களாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் பதவி விலக கோரி முற்றுகை போராட்டமும் நடந்து வருகிறது.

இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஐ.எம்.எப். போன்ற சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் இலங்கை கடன் உதவி கேட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகிறது. பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதுடன் சென்ற மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவியும் செய்துள்ளது. தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்குகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/seperate-resolution-passed-in-tamilnadu-assembly-447434/

சித்த மருத்துவ பல்கலை: சட்டமன்றத்தில் தீர்மானம்

 28 4 2022 

முதல்வரை வேந்தராக வைத்து தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சித்த மருத்துவம், யுனானி யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு தனி பல்கலைகழகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

இந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைக்க முதலில் ரூ 2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக சட்டசபையில். கடந்’த 2021-22-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தபோது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின மானிய கோரிக்கையின் போது இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னைக்கு அருகில். இந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வரை வேந்தராக கொண்டு தொடங்கப்படும் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடர்பான சட்டமசோதாவை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இயல் இசை கவின் கலை பல்கலை கழகங்களை தவிர மற்ற அனைத்திற்கும் ஆளுனரே வேந்தராக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தொடங்கப்பட உள்ள சித்த மருத்துவ பல்கலைகழகத்திற்கு முதல்வர் வேந்தராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இணை வேந்தராகவும் இருப்பார்கள் என்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் என்றும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-new-bill-passed-cm-as-chancellor-of-new-siddha-medical-university-447210/

சட்டசபை ஹைலைட்ஸ்

 27 4 2022 தமிழக சட்டசபையில் கடந்த மாத இறுதியில் நடப்பு ஆண்டுக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாளில் வேளான் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்காக மானிய கோரிக்கை தொடங்கியது.

இதில் இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான நிகழ்வு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த விபத்தில் தமிழக அரசு சரியாக பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறி தமிழக அரசை கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்வதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது.

தாம்பரம் செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு :

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, கொங்கு நாடு மக்கள் கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன். சென்னைக்கு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பெரிய போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருவதாகவும் இதனை தவிர்க்க செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில்  உயர்மட்ட சாலை அமைக்க அரசிடம் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், உயர்மட்ட சாலை அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வரையெறுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது தொடர்பான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தஞ்சை விபத்து குறித்து விசாரிக்க தனி குழு :

தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் தஞ்சை தேர் விபத்தில் அப்பாவி மக்கள் இறந்ததை வைத்து அரசியல் செய்ய நினைக்க வேண்டாம் என்றும், அதிமுகவினரின் செயல் நியாயமா என்பதை சபை உறுப்பினர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்ற சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூச்சலிட்டு அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்திரவிட்டார்.

தஞ்சை விபத்து குறித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அரசுக்கு தெரிவிக்காமல் தஞ்சையில் திருவிழா நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். மேலும்,தஞ்சை காளிமேடு பகுதியில் நடைபெற்றது திருவிழா அல்ல, அது சப்பரம் என்றும் ஊர்மக்களே இதை சேர்ந்து நடத்தியதாக கூறியுள்ளார்.

சட்டக்கல்லூரியில் கூடுதல் முதுநிலை படிப்புகள் :

தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, புதுப்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிகளில் கூடுதலாக முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் படித்த 17 சட்ட பட்டதாரிகளுக்கு தலைமை செயலக சட்டத்துறையில் தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என்றும், இதற்காக ஒரு பட்டதாரிக்கு மாதம் தோறும் தலா 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

ஆரணியில் சிப்கோ தொழிற்பேட்டை

விவசாயமும் நெசவும் பிரதான தொழிலாக உள்ள ஆரணியில். நெல் உம்மியை கொண்டு எண்ணெய் எடுக்கவும், பட்டு கைத்தறி உற்பத்திக்கு தேவையா மூலப்பொருட்கள் கிடைப்பதால், ஆரணி தொகுதிக்கு சிப்கோ தொழிற்பேட்டை அமைப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  திருவண்ணாமலையில் 15.56 ஏக்கரில் 13 தொழிற்மனைகள் மற்றும், 16 தொழிற்கூடங்களுடன் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது.

ஆரணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதியுடன் கூடிய தகுதியான நிலம் கண்டறிந்து தெரிவிக்கும் பட்சத்தில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சம் 20 தனியார் தொழில் முனைவோர்கள் சேர்ந்து தகுதியான நிலத்துடன் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சமாக ரூ. 15 கோடி மாநில அரசின் மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-update-in-tamil-april-27-446709/

 26 4 2022  தமிழக சட்டசபையில் கடந்த மாத இறுதியில் பொது மற்றும் வேளான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து. ஒவ்வொரு துறைகளின் மானிகோரிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட பல துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது.

50000 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், தமிழகத்தின் மின் உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில், 2022-23-ம் ஆண்டுகளில் 50 ஆயிரம் எண்ணிக்கையில் புதிய விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 2000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா மற்றும் ரூ 1649 கோடி செலவில். 100 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ 166 கோடி மதிப்பீட்டில் மிக உயரழுத்த மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும். என்றும் கூறியுள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ₨500 ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும். மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ₨500 ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ஊதிய உயர்வால் ஆண்டொன்றுக்கு ₨16.67 கோடி கூடுதல் செலவாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேரு நிதியுதவி :

கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ₨6,000 லிருந்து ₨18,000ஆக உயர்த்தப்படும் என்றும், விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ₨2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க உயர்மட்டக் குழு அமைத்து நிரந்தர தீர்வு காணப்படும்கூறியுள்ளார்.

டாஸ்மாக் வருமானம்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ₨2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றும், 2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ₨33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது என்றும், நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ₨36,013 கோடி வருவாய் வந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை மாநகராட்சி

சட்டசபை உறுப்பினர் மகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நகராட்சித்துறை அமைச்சர் கேஃ.என்.நேரு திருப்பூர் மாவட்டம் உடுமலையை மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும், மடத்துக்குளத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடியும் போது பெரிய நகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடல்நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணைகள் :

சட்டசபை உறுப்பினர் நாகை மாலி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எவ்வளவு செலவானாலும் தமிழக கடலோர பகுதியில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணைகள் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 36 இடங்களில் கடல்நீர் உட்புகுந்ததால், மக்கள், கால்நடைகள், விவசாயிகள் பெரும் அவதியுறுவதாக தெரிவித்தார்.

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு

கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி, சென்னை ஓமாந்தூர் அரசு தோட்ட வளாகத்தில் கலைஞரின் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-update-update-on-april-26-446168/

‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’

25 4 2022 

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.

2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அறிமுக நிலையிலேயே இதற்கு அதிமுக, பாஜக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேசிய அமைச்சர், 1949-ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகச் சட்டம், 1991-ஆம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, துணைவேந்தரை நியமிக்க தொடர்புடைய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, 2000-ஆம் ஆண்டு கர்நாடக மாநில பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி மாநில அரசின் இசைவுடன் வேந்தரால்துணைவேந்தரானவர் நியமிக்கப்படுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேற்சொன்ன பிற மாநில பல்கலைக்கழக சட்டங்களுக்கு ஏற்ப, தமிழ்நாடு மாநில அரசானது, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரமளிக்கப்படுதல் வேண்டும் என கருதப்படுகிறது என்றும் தெரிவித்தார். எனவே, அரசானது, அந்த நோக்கத்திற்காக, கீழ் குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழகச் சட்டங்களை திருத்துவதென முடிவு செய்துள்ளது என்ற அமைச்சர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் என 12 பல்கலைக் கழகங்களில் சட்டங்களை திருத்தப்படுகிறது என்று பேசினார்.

இதுபோலவே 2022 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமுன்வடிவையும் அறிமுகம் செய்தார். இதற்கு, கொமதேக, மமக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றட்ட சட்டமசோதாக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக, சட்டத்துறை மூலமாக சட்டமசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/university-amendment-bill-to-be-sent-to-the-governor-for-approval.html


மின்தடை ஏற்பட்டது ஏன்? அமைச்சர் செந்தில்பாலாஜி

 22 4 2022 மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததால் தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்வெட்டு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கோடைகாலத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நிலக்கரி பற்றாக்குறையால் மின்தடை ஏற்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன எனக்கூறிய அவர், தடையில்லா மின்சாரம் கொடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் நுகர்வு அதிகரித்துள்ளதால், குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 796 மெகாவாட் அளவுக்கு திடீரென தடை ஏற்பட்டுள்ளது எனக்கூறிய அவர் மின் தடை ஏற்படும்போது உடனடியாக சரிசெய்ய முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கூறினார்.

மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்டது என்றும், நாளொன்றுக்கு 78 ஆயிரம் டன் நிலக்கரி தேவை இருந்தும், குறைவான அளவிலேயே மத்திய அரசு வழங்கி வருவதாக சுட்டிக்காட்டினார். ஏப்ரல், மே மாதங்களுக்கு தேவையான 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் இறக்குமதி நிலக்கரியை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையை காரணம் காட்டி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் எந்தவித தடையுமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நம்முடைய மின் தேவையை நாமே பூர்த்தி செய்யும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கையை எடுத்துள்ளார் என குறிப்பிட்ட அவர்,தொழிற்சாலைகளுக்கு எந்த சூழலிலும் மின்தடை ஏற்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார்.

source https://news7tamil.live/why-is-there-a-power-outage-in-tamil-nadu-minister-senthilbalaji.html



திமுக மீது நடவடிக்கை எடுங்க… அதிமுக பரபரப்பு புகார் 

21 4 2022  தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது குறித்து திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அதிமுக சார்பில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி நேற்று முன்தினம் சிதம்பரத்தில் தருமபுரம் ஆதினத்தில் ஞானரத்தை திறந்து வைத்தார். அப்போது அவருக்கு எதிராக சிலர் கறுப்பு கொடி காண்பித்துள்ளனர். மேலும் ஆளுனரின் இந்த பயணம் குறித்து திமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மயிலாடுதுறையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆளுனருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆளுனரின சுற்றுப்பயணத்தின்போது அவரது கார் மீது கற்கல் வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் இந்த கான்வேயில் ஆளுனருடன் வந்த இரண்டு வாகனங்கள் மீது கறுப்புகொடி வீசப்பட்டதாகவும், கூறப்பட்ட நிலையில், இது போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும், போலீசார் இருந்ததால் கல்வீச்சு சம்பவம் தடுக்கப்பட்டதாகவும், காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனால் தற்போது தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாகி வரும் நிலையில், ஆளுனர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிமுக சார்பில், குடியரசு தலைவர், பிரதமர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பலருக்கும் அதிமுக சட்டக்குழு உறுப்பினர் பாபு முருகவேல் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  

இந்த மனுவில். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படவில்லை. போதை பொருள் பழக்கம் அதிகரித்து பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திறம்பட கையாளாத திமுக அரசு தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

இதனை கருத்தில் கொண்டு அரசியமைப்பு சாசன சட்டத்தின்படி திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிப்பட்டுள்ளர். ஆளுனரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-admk-complaint-against-dmk-government-for-governor-conway-issue-443586/

தமிழகத்தை திணறடித்த மின்வெட்டு:

 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணிநேரங்கள் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது.

குறிப்பாக கடலூர், விருத்தாசலம் , விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதே நிலை ஏற்பட்டது. 

பல இடங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில், திடீர் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் அளிக்கப்பட்டன. சிலர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து டுவிட்டரில் மின்வெட்டு தொடர்பாக புகார்களை அளித்து வருகின்றனர்.

திமுகவின் 2006-2011-ம் ஆண்டு ஆட்சியை ஒப்பிட்டும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டனர். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், “இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நகர்ப் புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/power-cut-in-south-district-tamilnadu-minister-senthil-balaji-tweet-443555/

சட்டசபை ஹைலைட்ஸ்

 20 4 2022 தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு முதல்வர் விளக்கம் அளித்தார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கால தாமதம் செய்வதாக குற்றம் சாட்டிய தமிழக அரசு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்தது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஏப்ரல் 19) மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், ஆளுநருக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கருப்புக் கொடி காட்டினர். தொடர்ந்து, சாலையில் கருப்புக் கொடிகளை வீசினர். இந்த சம்பவத்தால், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையா என்று பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில், இன்று (ஏப்ரல் 20) ஆளுநருக்கு கருப்புகொடி காட்டிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கோஷம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப் பேரவையில் நேரமில்லா நேரத்தில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரம் குறித்த பிரச்னையை எழுப்பினார். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பிறகு, இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“ஆளுநரின் வாகனம் வரும் வழியிலேயே போராட்டத்திற்கு அனுமதி அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டம் நடத்தியவர்களை முன்னதாகவே அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தமிழக காவல்துறைக்கு விழுந்த கரும்புள்ளி” என்று கூறினார்.

இதனிடையே, அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிவிட்டு வெளிநடப்பு செய்தபோது, ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டிய விதத்தைப் பற்றியும் பாதுகாப்பு விவகாரம் குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிவிட்டு பதிலுக்கு காத்திராமல் வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, ஒரு முக்கியமான பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அதேபோல, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்கள், சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் ஆகியோர் இங்கே உரையாற்றியிருக்கிறார்கள்.

அதாவது, நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி அரசிடம் கேள்வியைக் கேட்கின்றபோது, அதற்குரிய பதிலை அவர்கள் பொறுமையாக இருந்து கேட்டு, அதிலே அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னால், வெளிநடப்பு செய்யட்டும்; நான் வேண்டாமென்று சொல்லவில்லை. அதுதான் மரபு. ஆனால், அவர்களுக்கே தெரிந்துவிட்டது. இதிலே பதில் சொல்கிறபோது, நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்று சொல்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதைத்தான்செல்வப் பெருந்தகை அவர்கள் மிக விளக்கமாக இங்கே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

ஆளுநர் அவர்கள் தருமபுரம் ஆதீனம் அவர்களைச் சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றிருக்கக்கூடிய போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) அவர்கள் நேற்றையதினம் தெளிவாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாக நீங்கள் பத்திரிகைகளிலே பார்த்திருக்கலாம்; தொலைக்காட்சிகளிலும் கேட்டிருக்கலாம். இருந்தாலும் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒன்றை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் அவர்களுடைய கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர், அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை’ என்பதை காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் மிகத் தெளிவாக, மிக விளக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேபோல, A.D.C. to the Hon’ble Governor of Tamil Nadu அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். Official-ஆக அவர் நம்முடைய Director General of Police (DGP)-க்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அதிலே அவர் கடைசியாகக் குறிப்பிட்டிருப்பது, “fortunately, Hon’ble Governor and the convoy passed unarmed”. அதாவது, ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, காவல் துறை இயக்குநருக்குக் கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

ஆனால், இதுதான் நமக்கு chance; இதை அரசியலுக்காக நாம் பயன்படுத்திட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இது அரசியல் கட்சிகளுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய இயல்புதான். பொதுவாக, அ.தி.மு.க.-விலே இருக்கக்கூடிய அந்த ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு பேரும் திட்டமிட்டு சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். இங்கேயிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இந்த அறிக்கை மட்டும் தனித்தனியாக வந்தது. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதிலே குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் அவர்கள் அவருடைய அறிக்கையிலே கடைசியாக, ‘தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல் துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய இந்த விடியா அரசினுடைய முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்’ என்று சொல்லிவிட்டு, இப்போது பதிலைக் கேட்காமலேயே போய்விட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

அதேபோல, எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்கள் தனியாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அவர் கடைசியாகச் சொல்வது; இன்னும் soft-ஆகச் சொல்லியிருக்கிறார். ‘மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இது நியாயமாக இருக்கிறது.

அங்கே போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

ஆளுநரின் பாதுகாப்பிற்காக மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவராக இருக்கக்கூடிய ஐ.ஜி. தலைமையில் இரண்டு டி.ஐ.ஜி.-க்கள், 6 எஸ்.பி.-க்கள், 6 கூடுதல் எஸ்.பி.-க்கள், 21 டி.எஸ்.பி.-க்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன; கொடிகள் வீசப்பட்டன என்பது ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்பதுதான் உண்மை.

ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பில் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை முறையாக எடுத்திருக்கிறது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பினை அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு, ஆளுநரைப் பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் எண்ணுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அது நடக்கவே நடக்காது, இது தி.மு.க. ஆட்சி. சாத்தான்குளத்திலே நடைபெற்ற சம்பவம் குறித்து இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேபோல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம். அந்தச் சம்பவத்தைப் பற்றி அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவரிடம் கேட்டபோது, எனக்குத் தெரியவில்லையே என்று சொன்னார். அப்படிச் சொன்னவர்தான் இவர். ஆனால், இன்றைக்கு இவர் சட்டம்-ஒழுங்கைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்த மறைந்த சென்னா ரெட்டி அவர்களுக்கு என்ன நடந்தது? நான் அதற்குள் அதிகம் போக விரும்பவில்லை. திண்டிவனத்தில் 10-4-1995 அன்று, ஆளுநர் சென்னாரெட்டியும், அவரது கான்வாயும் 15 நிமிடங்களுக்கு மேல் அங்கே மறிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் நடுரோட்டில் நின்றது யாருடைய ஆட்சியில்? அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் 4 பேர் தலைமையில் சரமாரியாக கல் எறிந்திருக்கிறார்கள்; முட்டையை வீசியிருக்கிறார்கள்; தக்காளியை வீசி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், சென்னா ரெட்டி உயிர் தப்பினார்” என்று அன்றைக்குத் தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வந்தது. இது யாருடைய ஆட்சியில்?

தாக்குதலுக்கு உள்ளான ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்று இதே அவையில், அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு தனித் தீர்மானமே கொண்டுவரப்பட்டது என்று இங்கே சட்டமன்றக் காங்கிரஸ் கட்சி தலைவர் கு. செல்வப் பெருந்தகை அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள். நாவலர் அவர்கள்தான் அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து, அது இந்த அவையிலே நிறைவேற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால், ‘சென்னாரெட்டி உயிர் தப்பினார்’ என தலைப்புச் செய்தி பத்திரிகைகளில் எல்லாம் வந்தது. தாக்குதலுக்கு உள்ளான ஆளுநர் அவர்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று 26-4-1995 அன்று இதே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது யாருடைய ஆட்சியில்?

ஆளுநர் மட்டுமல்ல; மிகப் பெரிய சட்டப் பதவியில் இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மறைந்த டி.என். சேஷன் அவர்கள் தாஜ் ஓட்டலிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. அதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியினுடைய சாதனைகள். விமான நிலையத்திலிருந்து விரட்டியடித்து, அவர் சென்னையில் இருக்கக்கூடிய தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு வந்த பிறகு, அந்த ஓட்டலையும் முற்றுகையிட்டு, கல்வீசித் தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சியில்? அவர்கள் ஆட்சியில்தான்.

ஏன்; இன்றைக்கு பா.ஜ.க.-வில் ஒரு முக்கியஸ்தராக இருக்கக்கூடிய டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்த முயன்று, அவரை அசிங்கப்படுத்திய ஆட்சி உங்களுடைய ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி; சந்திரலேகா அவர்கள்மீது ஆசிட் வீசிய ஆட்சி, யாருடைய ஆட்சி? எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடைபெற்றன.

எனவே, இந்த அரசைப் பொறுத்தவரையில், நான் தெளிவாக, உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைத் தடுத்திருக்கிறது. ஆளுநர் அவர்கள் மீது ஒரு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. அதுமட்டுமல்ல; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசியல் சட்டப் பதவிகளில் இருப்பவர்களைக் காப்பாற்ற, அவர்களுக்குரிய பாதுகாப்பினை அளித்திட, இந்த அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. அந்தக் கடமையைக் காவல் துறை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, தங்கள் ஆட்சியில் ஆளுநரை கல், முட்டை, தக்காளி என வீசித் தாக்கியதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனையாக இங்கே கூறி அரசியல் செய்ய வேண்டாம் என்று- இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருந்தாலும், அவர்களுக்கு இந்தச் செய்தி போகும் என்ற காரணத்தினால்-எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களையும் நான் மிகுந்த மரியாதையோடும், மதிப்போடும் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, இதுகுறித்து இந்த விளக்கமே போதும் என்று கருதி, நான் அமைகிறேன்.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீது விவாதமும் நடைபெற்றது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக மானிய கோரிக்கைகள் அறிவிப்புகள்:

சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக மானிய கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டது. காடாம்புலியூரில் 29 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

கோவில்பட்டி அருகே லிங்கம் பட்டியில் ரூ. 25 கோடி மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் கூறினார். ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் மகளிருக்கான பொது வசதி மையம் அமைக்கப்படும் என்றும், ரூ. 3.75 கோடி மதிப்பு பொது வசதி மையம் உயர் தொழில்நுட்ப விசைத்தறி ஆகிய வசதியுடன் அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.

கடலூர் மாவட்டம் மதவேடு கிராமத்தில் ரூ. 4.70 கோடியில் புதிய தனியார் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 11.40 ஒரு ஏக்கரில் ரூ. 3.50 கோடி அரசு மானியத்துடன் அனைத்து தானியங்கி வாகன சேவை குழுமம் மூலம் தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.

போதிய இட வசதி இன்றி செயல்படும் தானியங்கி வாகன சேவை கூட்டங்களை நகருக்கு வெளியே மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அலுமினிய அச்சு வார்ப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

இதனால், 3000 தொழிலாளர்களுடன் இயங்கும் 1000 அலுமினியம் நிறுவனங்களுக்கு பொது வசதி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி கிராமத்தில் அலுமினியக் அச்சு வார்ப்பு தொழிலுக்கான ரூ. 5.75 கோடியில் பொது வசதி மையம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.

தமிழக சட்டப் பேரவையில் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு முத்துசாமி, சென்னையை அடுத்த திருமழிசையில் ஆயிரத்து ரூ. 280 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் வீடு கட்டிக் கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் வெளியான அறிவிப்புகள்:

  1. நடப்பு நிதியாண்டில் நிலம் வைத்திருக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும்.
  2. நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
  3. மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1200 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும்.
  4. நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தினை திறம்பட செயல்படுத்த குடியிருப்போர் நலச்சங்கள் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதவு கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
  5. அடுக்குமாடி குடியிருப்புதாரர்கள் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையினை இணையதள செயலி மூலம் குறித்த காலத்துக்குள் சுலபமாக செலுத்த வழிவகை செய்யப்படும்.
  6. பயனாளிகள் திறன் மற்றும் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யும் வகையில் பல்வேறு தரைபரப்பளவு கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோளரங்கம் பற்றி கேளுங்க என்றால் கோளாறான கேள்வி எல்லாம் கேட்கிறீங்க – சபாநாயகர் அப்பாவு கம்மெண்ட்டால் சிரிப்பலை

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது கந்தவர்ககோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை மற்றும் மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தங்கள் தொகுதிகளுக்கு கோளரங்கம் வேண்டும் எனக் கோரி கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு உயர்கல்வில்துறை அமைச்சர் க.பொன்முடி பதில் அளித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர், கோவிந்தசாமி மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என கேட்டார். கோளரங்கம் பற்றிய கேள்வியின் போது மாணவர்கள் சேர்க்கைக்கு கூடுதல் கட்டிடம் கேட்டது குறித்து சபாநாயகர் அப்பாவு, ஏங்க கேள்வி கோளரங்கம், துணை கேள்வி கேட்டால் விவரமா கேட்க வேண்டாமா என கேட்டார்.

இதையடுத்து, எம்.எல்.ஏ ரவி, அரக்கோணம் அரசு கல்லூரி வகுப்பறை பற்றாகுறை குறித்து கேள்வி எழுப்பினார். துணைக் கேள்விகள் பற்றியதாக இல்லாததால், இதற்கு சபாநாயகர் அப்பாவு, கோவிந்தசாமிக்கு சொன்னது தான், கேள்வி கோளரங்கம்; கோளரங்கம் அமைப்பது பற்றி கேளுங்கள், கோளாறான கேள்விகள் எல்லாம் கேட்கிறீங்க, உக்காருங்க என்று கூறினார். இதனால், சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-today-highlights-governor-security-issue-aiadmk-bjp-walkout-cm-mk-stalin-explained/

கட்டட அனுமதிபெற இனி நேரில் செல்லத் தேவையில்லை

20 4 2022  கட்டடம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருப்பதால் காலதாமதமும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

இதனை கருத்தில்கொண்டு, தானியங்கி ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி பெறும் முறையை மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவுசெய்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.இதனால் மே 1ஆம் தேதி முதல் கட்டடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தாலே போதும், நேரில் வரத் தேவையில்லை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் பதிவு செய்திருந்தால் தானியங்கி முறையிலே அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/tn-govt-order-in-building-permission.html

சட்டசபை ஹைலைட்ஸ்

19 4 2022 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னுடைய டீம் தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (ஏப்ரல் 19) காலை கேள்வி நேரத்திற்கு பிறகு தொழில்துறை மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

தொழில்துறை பெயர் மாற்றம் – அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்த விவாதத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும், மாநில அளவில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொடர்ந்து தொழில்துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் தொழிலக வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் பல்துறை தொழிற்பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ‘ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை’ வெளியிடப்படும்.

சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்த ‘எத்தனால் கொள்கை 2022’ வெளியிடப்படும்.

சென்னையில் 2-வது விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. சென்னையில் எந்த இடத்தில் Greenfield Airport அமைய உள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

வான்வெளி & பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் ரூ.500 கோடி மதிப்பில் கோவையில் அமைக்கப்படும். கோவையில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும். விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு சுமார் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், பொருட்களுக்கு மதிப்பு கூட்டல் பணியை செய்தால், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். அதற்கான கையேட்டினை மாநில திட்டக்குழு உருவாக்கி உள்ளது.” என்று அறிவித்தார்.

என்னுடைய டீம் தொழில்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றும் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தொழில் துறையில் முதலீடுகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “இங்கே அ.தி.மு.க.-வினுடைய சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரையாற்றுகிறபோது, நான் எனது வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்திலே சொன்னதாக ஒன்றை இங்கே பதிவு செய்திருக்கிறார். 10 வருடங்களாக நடக்காததை, 10 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற அடிப்படையில்தான் சொன்னேனே தவிர, வேறல்ல.

அவர் பேசுகின்றபோது, இன்னொன்றையும் குறிப்பிட்டார். அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே, அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது, முதலீடுகள் எப்படி வந்தன? உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எப்படிக் கூட்டினோம்? அதேபோல, எத்தனைத் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அதனால் வேலைவாய்ப்புகள் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது என்ற விவரங்களையெல்லாம் சொன்னார்.

அதேபோல, அதைத் தொடர்ந்து, இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய, அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர், அவர் ஆட்சிக் காலத்திலே கொண்டுவந்த முதலீடுகளைப் பற்றியும் குறிப்பிட்டார். அதேபோல, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி எவ்வளவு கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் பெற்றிருக்கிறோம்; எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன; எத்தனைத் தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறோம் என்பதையெல்லாம் பேசியிருக்கிறார். அதற்கெல்லாம், நம்முடைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இடையிடையே எழுந்து அதற்கு பதில் சொல்லாமல், அவர் பேசி முடித்ததற்குப்பிறகு, நிறைவாக அவருடைய பதிலுரையிலே அவற்றிற்கெல்லாம் விளக்கமாக பதில் சொல்லவிருக்கிறார்.

இருந்தாலும், தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்க, தொழில் துறை முன்னேற்றத்திற்காக நான் வெளிநாடு சென்று வந்த காரணத்தினால், அதிலே எனக்கும் பங்கு உண்டு என்ற அந்த உணர்வோடு சில விளக்கங்களை இந்த அவைக்கு நான் எடுத்து வைக்க விரும்புகிறேன். தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலே எந்த மாற்றமும் கிடையாது. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து, புதிய அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்காக, புதிய முதலீடுகளைப் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டு வருகின்றன.

ஆட்சிக்கு வந்து பத்தே மாதங்களில், 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 இலட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல; உறுப்பினர் பேசும்போது சொன்னார்; ‘MoU போட்டவுடனே, அடுத்த நிமிடமே, அடுத்த மாதமே தொழிற்சாலை வந்துவிடும்; வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. படிப்படியாகத்தான் அவையெல்லாம் வரும்’ என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அதில் உறுதி செய்யப்பட்டிருக்கிற முதலீடுகளைக் கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம்.

அந்த வகையில், இந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கின்றன; புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல், தமிழ்நாடு முழுமைக்கும் அது சென்றாக வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்த அரசு தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின், ‘வளர்ச்சி குறைந்த மாவட்டங்களுக்கும்’ அதனுடைய வளர்ச்சி, பயன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

அதனால்தான், இன்றைக்குக்கூட பிரபலமான தமிழ் பத்திரிகையான தினத்தந்தி பத்திரிகையின் தலையங்கத்தைப் பார்த்திருந்தால், நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில் இன்றைக்குக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; “தமிழ்நாட்டில் குவிகிறது அன்னிய நேரடி முதலீடுகள்” என்று இந்த அரசைப் பாராட்டி, அந்தப் பத்திரிகை தலையங்கமே எழுதியிருக்கிறது.

ஏற்கெனவே, ஆங்கில நாளேடான இந்து பத்திரிகை, ‘அன்னிய முதலீடுகளை ஈர்க்கக்கூடிய தமிழ்நாடு’ என்று பாராட்டி எழுதியிருக்கிறது. அதுமட்டுமல்ல; ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனமே, “2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான” காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 41.5 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரத்தையும் வெளியிட்டிருக்கிறது.

தேசிய அளவில் பார்த்தீர்களென்றால், 16 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்தித்த அதே காலகட்டத்தில், தமிழ்நாடு இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, பெருமைப்படத்தக்க ஒரு செய்தியாகும். நாட்டின் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 4 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் தொழில் துறை வழிகாட்டி நிறுவனமாக இருக்கக்கூடிய Guidance Tamil Nadu ‘ஆசிய ஓசியானியா’ பகுதியில் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு முகமை என்ற சர்வதேச விருதினைப் பெற்றிருக்கிறது. அதற்காக அமெரிக்க தூதரகமே இந்த அரசைப் பாராட்டியிருக்கிறது.

தமிழ்நாட்டைத் தொழில் முதலீட்டாளர்களின் முக்கிய மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கக்கூடிய தொழில் துறைக்கு, குறிப்பாக, இந்தத் தொழில் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய தங்கம் தென்னரசு அவர்களுக்கும், அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த, பாராட்டை, வாழ்த்துக்களை இந்த அவையின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய தலைமையில் இயங்கக்கூடிய இந்தத் தொழில் துறை Team, நிச்சயமாக, உறுதியாக தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தொழில் வளர்ச்சிக்கு சட்டம் -ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டுமென்று மாண்புமிகு உறுப்பினர் அவர்களே சொன்னார். எனவே, சட்டம்-ஒழுங்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமல் இருப்பதற்கு தொழில் வளர்ச்சி நிச்சயமாகத் தேவைப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் தொழில் துறை வளர்ச்சிக்கு, நானும், இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய அமைச்சர் அவர்களும், அவருக்குக் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்தத் துறை அதிகாரிகளும் அதற்காகத் தொடரந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

உழைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; இந்த அவையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல், நீங்களும் அதற்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடிய வகையில் முன்வர வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக் கொண்டு, சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறைக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து அமைகிறேன்.” என்று தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-highlights-industries-department-name-changed-cm-mk-stalin-swears-tamil-nadu-become-first-state-443031/


தி.மு.க-வை வம்புக்கு இழுக்க வேண்டாம்: மத்திய அமைச்சருக்கு ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை

 18 4 2022 இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்து பற்றி திமுகவினர் யாரும் கருத்து கூறவில்லை. அதனால், மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக சாடியதால் சர்ச்சையானது.

இதற்கு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இசைஞானி இளையராஜாவை அவமதித்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் விருப்பமில்லாத ஒரு கருத்தை தெரிவித்தார் என்பதற்காக இளையராஜாவை அவதிக்கலாமா? இது ஜனநாயகமா என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.

இதனிடையே, இளையராஜா பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக அவர் மீது சமூக ஊடகங்களில் கடுமையாக தாக்குவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, இளையராஜா சர்ச்சையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் தேவையில்லாமல் திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதாவது: “பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிடுவது அவருடைய அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 80 ஆண்டு காலத்திற்கும் மேலாக திமுகவின் போர்வாளாக இயங்கி வரும் முரசொலி அறக்கட்டளை கட்டிடம் குறித்து, வேலூரில் இவர் பேசிய அவதூறு பேச்சு குறித்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில், இவர் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

திமுக மீது அவதூறாக பேசுவதும் – கருத்து தெரிவிப்பதையும் எல்.முருகன் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுகவைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிக்க விரும்பவும் இல்லை. பிரதமர் மோடி குறித்து, இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின்படி, எப்படி கருத்து சுதந்திரமாகுமோ அதைபோல், இளையராஜா அவர்களின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட, மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எல்.முருகனை எச்சரிக்க விரும்புகிறேன்.

ஏற்கனவே, முரசொலி இடம் குறித்து தாங்கள் பேசியது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு வழக்கினை தங்கள்மீது தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும், தங்களின் இப்போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால், திமுக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை எச்சரிக்கையாவும் – அறிவுரையாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/rs-bharathi-bharathi-warns-minister-l-murugan-do-not-drag-the-dmk-into-the-fray-442619/


ஆளுநர் தேநீர் விருந்து

 14 4 2022

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்துவருவதால், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ளும் கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகி உள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வழி செய்யும் வகையில் தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட நாள் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, தமிழக அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழக சட்டப் பேரவையில் பிப்ரவரி 8-ம் தேதி மீண்டும் நீட் விலக்கு மசோதா ஒரு மனதாக நிறைவெற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக திமுக அரசு விமர்சித்து வருகிறது.

இதனிடையே, கடந்த மார்ச் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆளுநரும் உறுதியளித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக அளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று மாலை (ஏப்ரல் 14) தேநீர் விருந்து அளிப்பதாக அழைப்பு விடுத்தார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்யும் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பதாக முதலில் அறிவித்தது. இதையடுத்து, திமுக கூட்டணி கட்சியான விசிக, இன்று மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருதில் கலந்துகொள்ளாமல் உறக்கணிப்பதாக அறிவித்தது.

தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில், செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது, தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது; தமிழர் விரோதப்போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பை புறக்கணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இந்த நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக தெரிவித்தார். இதன் மூலம், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, மனிதநேய மக்கள் கட்சி மட்டுமல்லாமல் பாஜகவுடன் இணக்கமாக இருக்கும் பாமகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தில், எந்தெந்த கட்சிகள் கலந்துகொள்ளும் என்ற விவரங்கள் எழுந்துள்ளன. ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதே போல, இந்த தேநீர் விருந்தில், பாஜக எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்கிறார்கள்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/which-parties-will-participates-in-tea-party-of-governor-440857/

சட்டசபை ஹைலைட்ஸ்


11 4 2022  தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் 4வது நாளான இன்று (ஏப்ரல் 11) உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் இருவரும் பேசினார்கள். இதனிடையே, கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பேசியதாவது: “திறந்த நிலை பல்கலைக்கழகத்திற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதைத் தொடர யுஜிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்.” என்று கூறினார்.

புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி, “மணப்பாறை, செஞ்சி, அரவக்குறிச்சி, திருமயம், ஸ்ரீபெரும்புதூர், தளி, அந்தியூர், திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும். 41 உறுப்புக்கல்லூரிகள் விரைவில் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.50 கோடி மதிப்பில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறுவர். ஆட்சி இன்னும் 4 வருஷம் இருக்கிறது. இந்த 4 வருஷம் மட்டுமல்ல. அதுக்குப்புறமும் நாமத்தான் வரப்போகிறோம். எனவே, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.

உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – அமைச்சர் பொன்முடி புகழாரம்

தொடர்ந்து பேசிய பொன்முடி, “தமிழ்நட்டில் உயர் கல்வியில் வளர்ச்சி என்றாலே அது கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தான். தமிழகத்தில் உயர்கல்வியில் பயிலும் மாணவர்களின் சதவீதம் 51 என்பது 2019-ல் எடுக்கப்பட்ட கணகீடு. தற்போது அதை மீண்டும் கணக்கெடுத்தால் 55 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருக்கும்.

கடந்த ஆட்சியில், மருத்துவப் படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டாலும், ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக போராடி அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்ற காரணமானது திமுகதான். அதன் நீட்சியாக தற்போது பொறியியல், சட்டம், மீன்வளம், கால்நடை உள்ளிட்ட தொழில்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமல்லாது அவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கணவை நிறைவேற்றி வரும் வகையில் உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர்தான்.

உயர்கல்வி படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பதன் மூலம் இனி அனைத்து மாணவிகளும் உயர்கல்வி கட்டாயம் படிக்க வேண்டிய சூழலை உருவாக்கும். இதன் மூலம், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதோடு மட்டுமல்லாது கல்வியின் தரத்தையும் உயர்த்துவதுதான் தொலைநோக்கு திட்டம் என தெரிவித்தார்.

தமிழகத்தை திராவிட இயக்கங்களைத் தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது – செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தை திராவிட இயக்கங்களைத் தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என்று கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய செங்கோட்டையன், இந்தியாவிற்கே முன் மாதிரியாகத் திகழும், கல்வித் தொலைக்காட்சியை கொண்டு வந்த பெருமை அதிமுக அரசையே சேரும் எனக் கூறினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடாக இருந்தாலும், அதிமுக ஆட்சியில்தான் நீட் பயிற்சி அளிக்கப்பட்டதாக செங்கோட்டையன் பேசினார். தமிழகத்தை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது எனக் கூறிய அவர், தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.

CUET: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகள் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அறிவித்த யுஜிசியின் CUET தேர்வை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட யுஜிசியின் இந்த CUET நுழைவுத் தேர்வால், மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தகுதியான பெரும்பான்மையான மாணவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த திர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து பேசியதாவது: “கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கவே இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முன்னோடி திட்டமாக இது செயல்படுகிறது. 4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 6,029 அரசுப் பள்ளிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

2,713 நடுநிலைப் பள்ளிகளில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஆசிரியர் பணியிட மாறுதல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மாடல் பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பு அறைகள் அமைக்கப்படும். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது தான் திராவிட மாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை.

அரசுப் பள்ளிகளில் 25 லட்சம் ரூபாய் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும். சதுரங்க போட்டி குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும்.

அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ்; சமமான அளவு கொடுங்கள் என்றார் பெரியார். ஒரே வகையான குவளையில் கொடுங்கள் என்றார் அம்பேத்கர். பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர். தேநீரை இலவசமாக கொடுங்கள் என்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-highlights-today-ponmudi-give-hopes-mlas-anbil-mahesh-speaks-whatsapp-message-439408/

சமூக நீதிக்கான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் பிறப்பிப்பது ஏன்?

 

9 4 2022 நீதிமன்றங்கள் வழங்கிய 3 தீர்ப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இதை திமுக தனது ஆட்சியின் ஹாட்ரிக் வெற்றியாக பார்க்கிறது. உண்மையில் அந்த தீர்ப்புகளின் பின்னணி என்ன?


சமூக நீதிக்கான திமுகவின் ஹாட்ரிக் வெற்றி:

இந்தியாவின் எந்த மாநிலமும் முன்னெடுக்காக முக்கிய வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பித்த மூன்று முக்கியமான தீர்ப்புகள் சமூக நீதிக்கான வெற்றியாகவும் வரலாறாகவும் மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், சமூக நீதிக்கான போராட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ள 3-வது வெற்றி. தமிழ்நாடு அரசு அல்லது திமுகவிற்கு ஹார்டிரிக் வெற்றியை கொடுத்த அந்த மூன்று தீர்ப்புகள்
1) அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
2) அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
3) நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

இந்த மூன்று தீர்ப்புகள் சமூக நீதியை தேசிய அளவில் உயர்த்தி உள்ளது. திமுக ஆட்சியில் சமூக நீதி ஆட்சிக்கான ஹாட்ரிக் வெற்றி என திமுக இந்த தீர்ப்புகளை பிரகடனப்படுத்துகிறது. குறிப்பாக, இந்த மூன்று வெற்றிகளும் தற்போது ஏன் கிடைத்துள்ளன என்பதில் தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு காரணம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.

சில தீர்ப்புகள் ஆளும் அரசு அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அனுசரனையாக இருக்கின்றன என்ற விமர்சனங்களும் எழுந்தன.  அதாவது, மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கப்பட்ட தீர்ப்பு. ஆந்திராவில் பட்டியலின மக்களுக்கான உள் ஒதுக்கீடு செல்லாது என்ற உத்தரவு. 50 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லாது என ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உள்ளிட்ட பல வழக்குகளின் தீர்ப்புகள் சமூக நீதிக்கு எதிரானவையாகவே பார்க்கப்பட்டன. தற்போது கூட, வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5% இடஒதுக்கீட்டில் மட்டும் மாற்றான தீர்ப்பு வந்துள்ளது. உரிய ஆதாரங்களையும் ஆவணங்களையும் சமர்பிக்காதது காரணமாக சொல்லப்பட்டுள்ளது. வன்னியர் சமூக மக்கள் எந்த அளவிற்கு பின் தங்கி உள்ளனர் என்பதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

ஆனாலும், இது போன்ற கடந்த கால வரலாற்றில் இருந்து 7.5% இட ஒதுக்கீடு, 27% இட ஒதுக்கீடு தீர்ப்பு, 10.5% இட ஒதுக்கீடு தீர்ப்பு ஆகிய மூன்று தீர்ப்புகளுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் பொருளாதார நிகழ்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஜனரஞ்சக விருப்பங்களின் வெளிப்பாடு:

ஜனரஞ்சக விருப்பங்கள் அல்லது அபிலாஷைகளோடு அடையாளப்படுத்திக்கொள்ள கூடிய நிர்பந்தத்தில் சமூக அரசியல் பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த நெருக்கடி நீதித்துறைக்குள்ளும் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த வழக்குகளின் தீர்ப்புகளுக்கான பின்னணியில் மக்களின் போராட்டங்களும் உரிமைகளும் உள்ளன. காலங்காலமாக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது அது சமூக நெருக்கடியாக கொந்தளித்து இருப்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. அதுபோன்ற சமூக நெருக்கடிகள் இந்த தீர்ப்புகள் கிடைக்க காரணமாக உள்ளதா என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டி உள்ளது.


புதிய சிந்தனை – புதிய உழைப்பு – புதிய உற்பத்தி:

நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்கள் இனி மருத்துவராவது கனவாக போய்விட்டது என்ற ஆதங்கம் தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது. நீட் தேர்வால் மருத்துவர் கனவு பாதிக்கப்பட்டதால் அனிதா என்ற மாணவி உயிரிழந்தார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் இதுவரை 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் மரணத்தின் மடியில் தங்கள் உயிரை ஒப்படைத்துள்ளனர். இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களும் நீட் தேர்வுக்காக இதுவரை பெரிய போராட்டங்களை முன்னெடுக்காத போது தமிழ்நாடு மிகக்கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து களமாடியது. தொடர்ந்து சட்ட ரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் போராட்டங்களும் நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்களும் தொடர்ந்துகொண்டே தான் உள்ளன.

கால காலமாக அடித்தட்டில் இருக்கும் மக்கள் அரசின் உயர் இடங்களில் தங்களுக்கான உரிமையை மீட்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதை இந்த இடத்தில் நாம் மீண்டும் கவனப்படுத்த வேண்டியுள்ளது. நீட் தேர்வால் தங்களின் உரிமை பாதிக்கப்படுவதாக அதிமுக, திமுக அரசுகளின் போராட்டங்களையும் அதனையொட்டி கிடைக்கப்பெறும் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டையும் ஒப்பீட்டு பார்க்கலாம்.
ஏற்கனவே, காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்படுபவர்களும் காலங்காலமாக வாய்ப்புகளைப் பெறுபவர்களும் எதிரெதிர் துருவமாக இருக்கின்றனர்.

விளிம்பு நிலையில் இருந்து வருபவர்களுடன் ஒப்பிடும் போது காலங்காலமாக வாய்ப்புகளை பெறுபவர்கள் புதிய சிந்தனை, புதிய கண்டுபிடிப்பு, புதிய கற்பனைத் திறன், புதிய படைப்பாக்கத்தில் ஈடுபடுவதில் சுணக்கமாக உள்ளனர். அவர்களிடம் கற்பனை, ரசனை, புதுமை, உற்பத்தி முறை இருக்காது. தனக்கு புதிதாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களிடம் புதிய கற்பனை இருக்கும். உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் செயல் அதிகாரியாக நியமித்துள்ள பலர் இந்த பின்னணியில் இருந்து வருவதைப் பார்க்கலாம். கூகுள் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சையும் பல துறைகளின் முன்னணி தலைவர்கள் பலரையும் இந்த இடத்தில் ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம். சர்வதேச ஆளும் வர்க்கத்திற்கு கீழ்த்தட்டிலிருந்து வருபவர்களிடம் புதுமை, ஆற்றல், கற்பனைத் திறன், படைப்பாக்கம் இவை எல்லாம் தேவைப்படுகிறது. புதிய உழைப்பும் சிந்தனையும் தேவைப்படுவதால் அதனை பயன்படுத்திக்கொள்ளும் அவசியம் உருவாகுகிறது. இதுவும் சமூக நீதிக்கான தீர்ப்புகள் கிடைக்க உதவிகரமாக இருப்பதைக் காணலாம்.


நீதி துறை – மத்திய அரசு முரண்பாடு:

நீட் தேர்வு முறையை தீர்க்கமாக பாஜக அரசு ஆதரிப்பதாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடை நோக்கி செல்லவும், நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கும் நெருக்கடிக்குள் தள்ளியது. அதாவது, ஒரே நாடு ஒரே தேர்வை பாஜக ஆதரிக்கிறது. இதற்காக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மாநிலங்களின் உரிமைக்கு எதிராக மத்திய அரசு நிற்கிறது. நீதிமன்றங்களின் படிகட்டு ஏறி மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு வாதிடுகிறது. இது, நீதிதுறைக்கும் மத்திய அரசிற்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் முரண்பாடுகளை இந்த தீர்ப்புகள் மூலம் நிரூபணம். ஒருபக்கம் நீட் போராட்டம் இன்னொரு பக்கம் நீட் முறைக்குள் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை உள்ளடக்குவதற்கான முயற்சிகள், அதன் காரணமாகவே இந்த ஒதுக்கீடுகள் 7.5% மற்றும் 27% கொண்டு வரப்பட்டன. அந்த புள்ளியில் தான் முந்தைய அதிமுக அரசு 7.5% பார்மூலாவைக் கொண்டு வந்தது.


திமுகவின் சட்டப்போராட்டமும் சமூக நெருக்கடியும்:

இந்த பின்னணியில் இருந்து நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளை அணுகினால் அதில் சமூக – பொருளாதார நெருக்கடிகளின் தன்மைகளை புரிந்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில் திமுக அரசு மேற்கொண்ட சட்ட போராட்டத்தையோ மக்கள் திரட்டி நடத்திய போராட்டத்தையோ எளிதில் புறம் தள்ளிவிட முடியாது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடு, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு ஆகிய இந்த மூன்று தீர்ப்புகளுக்கு பின்னணியில் திமுகவின் தெளிவான சட்டப்போராட்டம் இருப்பதை புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில், சமூக நெருக்கடியையும், பொருளாதார நெருக்கடியையும், அரசியல் பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறையின் வரலாற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு பார்க்கவும் முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில், கூறியபடி, 2020-2021 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5% ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதற்கு காரணம், இந்திய சமூகம் எதிர்கொண்டுள்ள பொருளாதார ஒடுக்கு முறை, பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடி நிலையால், இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் கவனத்தில் கொள்ளப்பட கூடிய ஒன்றாக மாறுகிறது. நாடாளுமன்றத்தின் மூலம் பெறப்பட்ட சட்டங்கள் என்பது போய் தற்போது நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாகவே இத்தகைய சட்டங்களை திமுக அரசு பாதுகாத்ததோடு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக செயல்படுகிறது.

இந்திய மாநில மக்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளையும் சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளையும் முதன்மையாக வைத்து இந்த 3 தீர்ப்புகளை கவனிப்பது இன்றியமையாதது. அதே சமயத்தில், சாதி அல்லது வர்க்க ரீதியாக தடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இத்தகைய தீர்ப்புகள் பாதுகாப்பு கேடயம் என்பதை சமூக நீதி தளத்தில் பறைசாற்றலாம்.

source https://news7tamil.live/the-court-judgments-and-social-justice.html

முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற கேரளா!

 9 4 2022 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கேரளா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மத்திய – மாநில உறவுகள் குறித்து உரை நிகழ்த்துகிறார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கேரளா சென்றடைந்தார்.

அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மாநாட்டில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், இன்று இரவே சென்னை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/kerala-offered-a-warm-welcome-to-cm-stalin.html

அரிசி, பருப்பு, மருந்துகளை ஈழ மக்களுக்கு அனுப்பத் தயார்: மு.க ஸ்டாலின்

7 4 2022 

இலங்கையில் கடுமையாக பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகம் சார்பாக இந்திய தூதரகம் மூலம் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடானஇலங்கையில் கடுமையாக பொருளாதார நெருங்கடி ஏற்பட்டுள்ளது. அந்நியசெலாவணி கையிருப்பு குறைந்ததால், இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அத்தியாவசிய பொருட்களின விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதன் காரணமாக இலங்கையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் இலங்கையில் அவசர நிலை பிரபகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய உதவி செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில்,  அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலா தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-ready-to-medicine-help-for-srilankan-crisis-437499/

இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ் 6 4 2022 

 தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்த நாள் வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த இரு பட்ஜெட் மீதாக விவாதம் கடந்த 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் தங்களது விளக்கத்தை அளித்ததை தொடர்ந்து சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து சட்டசபையின் பல்வேறு மானிய கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் இன்று காலை கூடியது. இதில் மானிய கோரிக்கையின் முதல் நாளாக இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீர்வளத்துறையின் மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்தார்

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 1000 தடுப்பனைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பணைகள் கட்டுவதில் திமுக முனைப்பு காட்டி வருவதாக கூறியுள்ள அவர், அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பனை கட்ட வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகளாக அதிமுக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் இந்த வரி உயர்வுக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார் அமைக்கர்கள் பதில் அளித்தனர். இதில், ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொழிற்பூங்கா நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விவசாயிகள் பாதிக்கபாதபடி நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கபப்டும் என்று கூறியுள்ளார். மேலும் சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது வேளான் துறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளான்துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுக்காவாக விரைவில் செயல்படும் என்றும், மக்களுக்கு 3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.  

தொடர்ந்து சட்டப்பேரவையில், பவானிசாகர் குடியிருப்புகள் குறித்து உறுப்பினர் பண்ணாரி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தமிழக வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பவானிசார் தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் அரசிடம் இல்லை என்று பதில் அளித்துள்ளார். மேலும் மக்களின் எதிர்பார்ப்பை ஆய்வு செய்து நிலங்கள் கிடைப்பதை பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 216 துணைமின்நிலையங்கள் அமைக்கப்படும். இதில் 193 துணை மின் நிலையங்களுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 23 துணைமின் நிலையங்களுக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.  மேலும் சென்னையின் அனைத்து பகுதிகளிலும், மின் புதைவிட கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து சட்டசபையில் உறுப்பினர் கண்ணன் முந்திரி பதப்படுத்துதல் ஆலை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தொழில் முணைவோர் முன்வந்தால் முந்திரி பதப்படுத்தும் ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன்பெற அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-on-april-6th-tamilnadu-436886/

5 மண்டலங்களுக்கு சொத்து வரி அறிவிப்பு

 6 4 2022 சொத்து வரி உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பெரவையில் பேசுகையில், சொத்து வரி சீராய்வு என்பது மனமுவந்து செய்யப்பட்ட ஒன்றல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைப் பெறுவதற்கு ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின் பேரில்தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் 83% ஏழை எளிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்காத வகையில் கவனத்துடன் இது செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

சொத்து வரி உயர்வு குறித்து மக்களுக்கு சந்தேகங்கள் இருந்த நிலையில், சென்னை மக்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும் வகையில், சென்னை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கான சொத்து வரியை, தோராயமான உயர்வை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரையிலான வீட்டில் வசிக்கும் அடையாறு குடியிருப்பாளர், அரையாண்டு சொத்து வரியாக ரூ.1461 செலுத்தி வந்திருந்தால், இனி அவர்கள் அதிகபட்சமாக ரூ.2,922 வரி செலுத்த வேண்டும்.

சென்னையில் அதே அடையாறு மண்டலத்தில் 600 சதுர அடிக்கும் குறைவான வீட்டில் வசிப்பவர் முந்தைய ரூ.308 சொத்து வரிக்கு பதிலாக இப்போது ரூ.462 செலுத்த வேண்டும்.

சென்னை ஆலந்தூரில் 600 சதுர அடி வீட்டுக்கு ரூ.320 சொத்து வரி செலுத்திய குடியிருப்பாளர்கள் இனி ரூ.400 செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு ரூ.825 செலுத்தி வந்த நிலையில், இனி அதிகபட்சமாக ரூ.1,444 செலுத்த வேண்டும்.

சென்னை மாதவரத்தில் வசிப்பவர்கள் 600 சதுர அடிக்கு ரூ.275 சொத்து வரி செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,900 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,310 சொத்து வரி செலுத்த வேண்டும்.

சென்னை திருவொற்றியூரில் 600 சதுர அடியில் உள்ள வீடுகளுக்கு ரூ.264 வரி செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி உள்ள வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1,288 வரி செலுத்த வேண்டும். அண்ணாநகர் மண்டலத்தில் 600 சதுர அடி வீடுகளுக்கு ரூ.461 சொத்து வரி செலுத்த வேண்டும். 1,201 முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு ரூ.2,970 வரி செலுத்த வேண்டும்.

இருப்பினும், ஒவ்வொரு மண்டலத்துக்கும் மாறுபட்ட வரி விதிக்காமல் அனைத்து மண்டலங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்க வேண்டும் என்று சென்னையில் வீடு வைத்திருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா நகரங்களைக் காட்டிலும் சென்னையில் குறைவாகவே சொத்து வரி வசூலிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-corporation-property-tax-for-5-zones-released-436944/

நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக் கொள்கை குழு; ஸ்டாலின் உத்தரவு

 5 4 2022  தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிவுச் சுடர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, நல்லாட்சி தந்த நாயகராகவும், நற்றமிழ் வளர்த்த புரவலராகவும், சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் தமிழைப் போற்றிய கலைஞர் கருணாநிதி ஆகியோர் வகுத்துத் தந்த சமூக நீதிப் பாதையில் முனைப்போடு செயல்பட்டு வரும் திமுக அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அவர்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்று நடைமுறைப்படுத்தி வருவதோடு, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்று வருகிறது. அதேபோன்று, மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக நிலைநாட்டி சமூக நீதிப் போராட்டத்திற்கு மற்றொரு மணிமகுடத்தை சூட்டியுள்ளது.

மேலும், சமூக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிச் சாதிப்பதற்கான மிகவும் முக்கியமான சாதனம் கல்வி என்பதை உணர்ந்து, அதன் வளர்ச்சிக்காக, குறிப்பாக மாணவ, மாணவியர்களுக்கு சலுகைகள் வழங்குவதிலும், உதவிகள் புரிவதிலும் தமிழகத்தின் இளைய சக்திகள் அனைத்தும் உயர்கல்வியை அடைந்தாக வேண்டும் என்பதைத் தன் உயரிய இலக்காகக் கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி காட்டிய வழியில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வசதியற்ற கிராமப்புற கடைக்கோடி மாணவர்களின் எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்புக்காக, நீட் தேர்வு முறையை விலக்கக் கோரும் சமூகநீதிப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த 8-2-2022 அன்று கூட்டப்பட்ட தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவு மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் பின்தங்கிய மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை மீட்டு, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாகும்.

“அறிவை விரிவு செய்; அறிவியல் புதுமை செய்!” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்த வகையில், வருங்காலத் தலைமுறைகளின் அறிவை விரிவு செய்து வளர்த்திடவும். அறிவியல் புதுமைகளைப் பூத்திடச் செய்திடவும். இளந்தளிர்களின் உள்ளங்களில் புதிய புதிய சிந்தனைகளை விதைத்து வளர்த்திட வேண்டியதும் நமது இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து, இதுவரை, நாட்டில் பல்வேறு கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

எனினும், இன்றைய அறிவியல் யுகம் நொடிதோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட எண்ணமுடியாத சில புதுமைகள், இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம் பரப்புகின்றன. இன்றைய அறிவியல் நாளை பழைமை அடைவது திண்ணம்.


எனவே, மாணவர்கள் வருங்காலத்தின் அறிவியல் விடியலைக் காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

அந்தவகையில், கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழுவினை அமைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநில கல்விக் கொள்கைக் குழு விவரம்

இக்குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன்

உறுப்பினர்களாக பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்

இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்

பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்

பேராசிரியர் இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்

முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்

எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்

விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சாம்பியன்

டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்

துளசிதாஸ், கல்வியாளர்

முனைவர் ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்

இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்

ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-announces-state-education-policy-committee-members-436448/

தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன்.

 3 4 2022 நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் துபாய் பயணத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணத்தையும் அங்கே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்ததையும் இ.பி.எஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஸ்டாலினுக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கவே டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார் என்று செய்திகள் வருகிறது. டெல்லி பயணம் குறித்து ஸ்டாலின் விளக்குவாரா என்று இ.பி.எஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “நான் துபாய்க்கு பல கோடி ரூபாயை எடுத்துசென்றதாக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதற்கு எனக்கு முன்பு இங்கு பேசியவர்களே பதில் சொல்லிவிட்டார்கள்.

அதேபோல், இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு மூன்று நாட்கள் சென்றிருந்தேன். அப்போது, நம் மாநிலத்திற்கு தேவையான கோரிக்கைகளை எல்லாம், பிரதமரிடத்திலும், அந்ததந்தத் துறை அமைச்சர்களிடத்திலும் வலியுறுத்தி, உரிமைக்கு குரல் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். இதனை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமலும், மூடிமறைக்கவும் சிலர், ஏதோ அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக்கொண்டு என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக டெல்லி சென்றேன் எனச் சொல்லிவருகிறார்கள்.

ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நான் அங்கு சென்று யார் காலிலும் விழுந்து ‘எனக்கு இது செய்து தாருங்கள்’ என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, பதவி ஏற்றபோதே சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’. கலைஞரின் மகன் என்றைக்கும் தமிழ்நாட்டிற்காக உழைப்பான்” என்று பேசினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-retaliate-to-eps-that-i-am-not-ordinary-stalin-435323/


மத்திய நிதியை பெறவே தமிழகத்தில் சொத்து வரி உயர்வு: கே.என் நேரு விளக்கம்

 15வது நிதி ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மத்திய நிதியை பெறுவதற்காகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சொத்துவரி விகிதங்கள் உயர்த்தப்பட்ட ஒரு நாள் கழித்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். 15வது நிதி ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக நேரு சனிக்கிழமை புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மேலும் சொத்து வரியை உயர்த்தாவிட்டால், மத்திய நிதியை விடுவிக்க முடியாது திருத்தம் செய்யாவிட்டால், 15,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படாது, வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும், தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் சொத்து வரி 50%-100% அதிகம். அதேநேரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் சீராய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, இந்த உயர்வு ஒரு ட்ரெய்லர் என்றும், மக்களுக்கு இன்னும் அதிகமான “பம்பர் பரிசுகள்” காத்திருக்கின்றன என்றும் கூறியது குறித்து கேட்கையில், 2018ஆம் ஆண்டு அதிமுக அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 200% உயர்வு வழங்க முன்மொழிந்து தேர்தலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது பணக்காரர்களுக்கு அதிகமாகவும், ஏழைகளுக்கு குறைந்த அளவிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் ஸ்லாப் முறையின் அடிப்படையில் இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சொத்து வரி உயர்வுக்கு எதிராக திமுக நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு, “15வது நிதிக் கமிஷனின் வழிகாட்டுதல்கள் அப்போது இருந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது” என்று அமைச்சர் நேரு பதிலளித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-kn-nehru-explains-property-tax-hike-in-tamilnadu-434938/

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு

 2 4 2022 

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசினால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் பேரில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களின் பரப்பளவுக்கு தகுந்தவாறு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கும் குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் ஆயிரத்து 200 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வும், ஆயிரத்து201 முதல் ஆயிரத்து800 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீத வரி உயர்வும், ஆயிரத்து 800 சதுர அடிக்கும் அதிகமாக உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயர்வும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது உள்ள சொத்து வரியில் வணிகப் பயன்பாட்டில் உள்ள தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீத வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/property-tax-has-been-increased-in-tamilnadu.html

ஜி.எஸ்.டி – மத்திய நிதியமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்

 1 4 2022 

20 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அந்த மனுவில், 2017 முதல் 2020 வரையிலான மூன்று நிதியாண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தை தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.

நிலுவையில் உள்ள 548 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தையும், 2,029 கோடி ரூபாய் செயல்பாட்டு மானியத்தையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத் தொகை 13,504 கோடி ரூபாய் உள்பட 20,860 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அண்மைச் செய்தி: சென்னை விமான நிலையத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் போராட்டம்

ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான காலக்கெடு நிறைவடைவதால், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ள அவர், ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/chief-minister-of-tamil-nadu-urges-the-union-finance-minister-to-release-the-gst-arrears.html

தகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவு

 1 4 2022


சென்னையில் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக கவுன்சிலரின் கணவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா 51-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில், இவரின் கணவர் ஜெகதீசன், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் கவுன்சிலர் என கூறி தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதைத்தொடர்ந்து ஜெகதீசன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொது இடங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது, உள்ளிட்ட வழக்கங்களின் கீழ் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் வழக்கறிஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜெகதீசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

source https://news7tamil.live/dmk-official-who-spoke-inappropriate-words-minister-orders.html


தி.மு.க அரசு சிறுபான்மையினர் நலனை காக்கிறதா? அடிப்படை வாத அமைப்பு என தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பது சரியா? A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைபொதுச்செயலாளர்,TNTJ) இந்த வார பதில்கள் - 24.03.2022 சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி


முதலமைச்சர் டெல்லி பயணத்தின் விவரங்கள்

 31 3 2022 

4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண அட்டவணை குறித்த விவரங்கள்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வழங்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது, நீட் விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளார்.

பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். (நிதின் கட்கரியின் இல்லம்), பிற்பகல் 3.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசவுள்ளார்.

மாலை 4.30 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்

மாலை 4.30 மணிக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகமான உத்யோக் பவனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/cm-stalin-delhi-visit-and-the-schedule.html

சென்னையின் அடையாளம்: மத்திய சதுக்கம்  திறப்பு

 30 3 2022 

சென்னையின் அடையாளமான சென்னை மத்திய சதுக்கம் திறக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சென்னை மத்திய சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். சென்னை மத்திய சதுக்கம், நிழல் தரும் செடிகள், அழகிய செடிகள் மற்றும் நீரூற்றுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

500 கார்கள், 1500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது. நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தில் சுரங்கப்பாதை வழியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொதுமக்கள் சிரமமின்றி செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் உள்ளது. மத்திய சதுக்கத்தின் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எழில் கூடுவதோடு, போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் வகையில் நவீன கட்டமைப்புகளுடனும், அழகிய பூங்காங்களுடனும் மத்திய சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/chennai-central-square-opens-tomorrow-cm-mk-stalin.html

தமிழக அரசு மருத்துவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் டெல்லி

 29 3 2022 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசு மருத்துவர்களை நேரடியாக தொடர்புகொண்டு கருத்து கேட்பதாக மருத்துவர் அனுரத்னா தெரிவித்துள்ளார். தமிழக அரசு மருத்துவர்களை மத்திய அரசு இப்படி நேரடியாக தொடர்புகொள்ளக்கூடாது எங்கள் மாநில முதல்வரின் கீழ் இருக்கும் அமைச்சகத்துக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள். இப்படி தமிழக அரசு மருத்துவர்களை மத்தியில் இருந்து நேரடியாக தொடர்புகொள்வது முதலமைச்சரின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்கிறார்களா என்று மருத்துவர் அனுரத்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மருத்துவர் அனுரத்னா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சிலமாதங்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அறிமுகமில்லா எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

நமஸ்தே என்று ஆரம்பித்த அந்த குரல்,நான் பேசுவது பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அனுரத்னாவிடமா என ஆங்கிலத்தில் கேட்டார்கள்.
ஆம் நீங்க யார் என்றேன்.

புதுதில்லியில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பதாக சொன்னார்கள்.

இந்தியில் பேசவா ஆங்கிலத்தில் பேசவா என்றார்கள்.எனக்கு ஆங்கிலம் மட்டுமே புரியும் என்றேன்.
சரி ஆங்கிலத்திலேயே பேசுவோம் என்று பேசத்தொடங்கியவர்கள் மருத்துவக்காப்பீடு குறித்து கேட்டார்கள்,நீங்க ஏன் உங்க மருத்துவமனையில் பிரதமமந்திரியின் விரிவான மருத்துவக்காப்பீடு மூலம் நோயாளிககுக்கு சிகிச்சை வழங்கவில்லை என்றார்கள்.
“நீங்க பேசுவது தமிழகத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் மருத்துவரிடம்,எங்களுக்கு எங்க மாநில முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது,தமிழகத்தில் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள்,அதனால் எனக்கு PMJAY என்கிற பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு தேவைப்படல”என்றேன்.

சரிங்க மேடம் பிரதமமந்திரியின் மருத்துவ காப்பீடு மூலம் உங்க மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்க என்ன செய்யலாம்,உங்களுக்கு ஏதேனும் idea இருக்கா என்றார்கள்.ரொம்ப எளிமையா தன்மையா பொறுமையா கேட்கிறார்கள்.

“நான் இருப்பது தமிழக ஆந்திர எல்லையில்,தமிழர்களை எங்க முதல்வர் பார்த்துக்குவார் எங்க மாநில காப்பீட்டு திட்டம் மூலம்,வேணும்னா பக்கத்தில் இருக்க ஆந்திராவில் இருந்து எனக்கு case அனுப்ப சொல்லுங்க,அவர்களுக்கு வேணும்னா பிரதம மந்திரியின் காப்பீடு திட்டம் பயன்கொடுக்கலாம் ” என்றேன்.இதை சற்றே நக்கலாக தான் சொன்னேன்.

ஆனால் பேசியவரோ பொறுமையாக ஆந்திராவில் இருந்து உங்களுக்கு cases வர நான் என்ன செய்யவேண்டும் என்றார்.

“ஜெகன்மோகன் ரெட்டி கிட்ட தான் நீங்க பேசவேண்டும்” என்றேன்.

ரொம்ப valuable ஆன suggestions கொடுத்ததற்கு நன்றி,நாங்க இதுகுறித்து பரிசீலிப்போம் என்றார்.
எல்லா உரையாடலிலும் அவரிடம் மரியாதை,பொறுமை, எல்லாம் இருந்தது.ஆனால் எனக்கு தான் கோபம் மூக்கு மேலே இருந்தது,எங்க வந்து என்ன கேட்குறீங்க என.

ஆனால் அடுத்தடுத்து பார்க்கிறேன்,எதுனாலும் நேரிடையாகவே மத்திய அரசிடம்(சுகாதார துறை பிரிவு) இருந்து ஒரு மாநிலத்தின் கடைக்கோடியில் இருக்கும் எங்களை போன்றோருக்கு அழைப்பு வருது.
இன்று டயாலிசிஸ் zoom meeting நடந்தது ஒரு மூன்று மணிநேரம்.நான் எதிர்பார்த்தது என்னவோ தமிழக அதிகாரிகளை,ஆனால் national levelல zoom meeting நடந்தது இன்று.நாளையும் நடக்கும் இது.
அடுத்து இப்ப ஒரு அழைப்பு வந்தது,அதுவும் மத்திய அரசு அலுவலரிடம் இருந்து.

இப்படி எங்களுக்கு(மாநில root end officers) நேரிடையா அழைப்பு விடுப்பதும் எங்களை ஆய்வு செய்வதும் நம்ம முதல்வர் கவனத்திற்கு நம் அதிகாரிகள் கொண்டுசெல்கின்றனரா என தெரியல.

இது தவறான செயல்.மத்தியஅரசு நேரிடையாக எங்களை தொடர்புகொள்ள கூடாது,எங்க மாநில முதல்வரின் கீழ் இருக்கும் அமைச்சகத்துக்கு மட்டுமே நாங்க கட்டுப்பட்டவர்கள்.

தமிழக சுகாதார மற்றும் மருத்துவத்துறையும் மெல்ல மெல்ல மத்தியஅரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் போகிறது என்பதை உணர்கிறேன்.

மாநில சுயாட்சி பறிபோக கூடாது என்பதே என் ஆசை.” என்று மருத்துவர் அனுரத்னா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு மருத்துவர்களை டெல்லியில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து நேரடியாக தொடர்புகொள்கிறார்கள். அவர்கள் மாநில அரசின் அதிகாரிகள் மூலமே தொடர்புகொள்ள வேண்டும். இது தவறான செயல் என்று கூறியுள்ள மருத்துவர் அனுரத்னா, இப்படி எங்களுக்கு (மாநில root end officers) நேரிடையா அழைப்பு விடுப்பதும் எங்களை ஆய்வு செய்வதும் நம்ம முதல்வர் கவனத்திற்கு நம் அதிகாரிகள் கொண்டுசெல்கின்றனரா என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழக சுகாதார மற்றும் மருத்துவத்துறையும் மெல்ல மெல்ல மத்தியஅரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் போகிறது என்பதை உணர்கிறேன் என்று மருத்துவர் அனுரத்னா கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

SOURCE https://tamil.indianexpress.com/tamilnadu/central-govt-direct-contact-with-tamil-nadu-govt-doctors-this-know-to-cm-mk-stalin-432673/

ஸ்டாலின் துபாய் பயணம் தனி விமானச் செலவை தி.மு.க ஏற்கிறது:

28 3 2022 

 

முதல்வர் பதவியேற்று முதல்முறையாக துபாய் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்து எதிர்ட்சியினர் கடுமையான விமர்சனங்களை தொடுத்து வரும் நிலையில், முதல்வர் தனி விமானத்தில் துபாய் சென்றது ஏன் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

தற்போது இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு

முதலமைச்சர் அவர்களுடைய வெளிநாட்டுப் பயணம் தனி விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது, அவர் விமான பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிற சூழ்நிலையில், விமான வசதிகள் கிடைக்காத காரணத்தினால், அவருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தனி விமானத்திற்கான செலவைகூட திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறதே ஒழிய, இன்றைக்கு அரசாங்கத்தினுடைய நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

இரண்டாவதாக, அவர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். முதலமைச்சருடைய இந்தப் பயணம் என்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாத்திரம் அல்ல, அயலகத்திலே கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினுடைய வளத்திற்காகவும், வாழ்விற்காகவும் அவர் இந்தப் பயணத்தை இங்கே மேற்கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இங்கு வந்திருக்கக்கூடிய அவருக்கு தமிழ்ச் சமுதாயம் அளித்திருக்கக்கூடிய வரவேற்பை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். நம்முடைய உலக வர்த்தகப் பொருட்காட்சி என்பது முடிவுறும் தருவாயில் முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று, இது கோவிட் காலத்தினாலேயே தள்ளிப்போய் வந்திருக்கிறது. இன்னொன்று இது ஆரம்பிக்கும்போது வந்திருக்கக்கூடிய வரவேற்பைவிட, முடியும்போதுதான் மிகப் பெரிய கூட்டம் வந்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறார்கள். நான் கேட்க விரும்புவது, அவர் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. இன்றைக்கு முதலமைச்சர் இந்த மூன்று நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ 6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார். வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக ஈர்த்தாக சொல்லப்படும் முதலீடுகள் குறித்து சட்டமன்றத்தில் நான் மிகத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறி அவையெல்லாம் அவை குறிப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

இன்னொன்று… சட்டம் – ஒழுங்கு பிரச்சனை குறித்து இபிஎஸ் பேசியிருக்கிறார். விருதுநகர் பாலியல் வழக்குக் குறித்துக்கூட அவர் பேசியிருக்கிறார் அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபொழுது, சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரித்தது என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். . . முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துக் கொண்டிருக்கக்கூடிய புகழை, அந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் இத்தகைய புழுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இறைத்துக் கொண்டிருக்கிறார். இதை நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-thangam-thennarasu-explained-for-cm-dubai-trip-431639/

ரூ.2,600 கோடி முதலீட்டு ஒப்பந்தம் – முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

 27 3 2022 

தொழில் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும், தமிழ்நாட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன் ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் வந்துள்ளதாகக் கூறிய அவர், வர்த்தகம் அதிகம் நடைபெறும் நகரமாக துபாய் உள்ளது எனவும் உயர் தொழில் நுட்ப போக்குவரத்தில் துபாய் தலைசிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஏற்றுமதியின் நுழைவு வாயிலாக துபாய் உள்ளது எனவும் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும், தொழில் புரிவதற்கு தமிழ்நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டை முதலீட்டு மையமாக மாற்றுவதே தனது குறிக்கோள் என்றும், எண்ணற்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

source https://news7tamil.live/tamil-nadu-government-signed-rs2600-crore-investment-agreement.html

துபாய் சென்றார் ஸ்டாலின்: 4 நாள் பயணத் திட்டம் என்ன?

 24 3 2022 

துபாயில் நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்பொ 2022 கட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் தூபாய் புறப்பட்டு சென்றார். முதல்வராக பதவயேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். முன்னதாக இந்த பயணம் வெற்றிகரமாக முடியவேண்டும் என்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நம்பர் ஒன் முதல்வர் என்ற பெருமை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  ஆனால் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்வது தான் எனக்கும் இன்னும் மகிழ்ச்சி அதற்காக வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகிறோம். அதற்காக இந்த துபாய் மற்றும் அபுதாபி பயணங்கள் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று முதல்வர் கூறினார்.

இந்நிலையில் துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு வர்த்தகம், முன்னணி தொழில்துறைகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல துறைகளின் அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

துபாய் எக்ஸ்போ 2022 தொழிற்கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கு, தொழில்கள், மருத்துவம், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழில் பூங்காக்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் மாநிலத்தின் திறமையை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் “மோட்டார் வாகனங்கள்,  மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் காற்றாலைகள் உட்பட பல துறைகளின் அம்சங்களை இந்த அரங்கு காண்பிக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் துபாயில் புலம்பெயர் தமிழர்களை சந்திக்க உள்ளார்.

கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த துபாய் எக்ஸ்போ 2022 தொழிற்கண்காட்சி, ஆறு மாத காலம் நடைபெற உள்ளது. இதில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. எக்ஸ்போ 2.5 கோடி பார்வையாளர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cm-stalin-left-for-dubai-then-his-schedule-in-tamil-430237/

சட்டசபை ஹைலைட்ஸ்:

 23 3 2022 

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 19-ம் தேதி 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச் 21, 22, 23 தேதிகளில் பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இன்றைய சட்டப்பேரவை நிழ்ச்சிகளின் ஹைலைட்ஸை இங்கே காணலாம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு; அண்ணாவின் வரிகளை குறிப்பிட்ட ஸ்டாலின்

அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் நிறுத்தப்படுவதாக எழுந்த கேள்விக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “இது எனது அரசல்ல, நமது அரசு. அந்த கருத்தினைப் பின்பற்றி, இந்த அவையில் நமது அரசின் நிலைப்பாட்டை விளக்கிட நான் விரும்புகிறேன். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் வேலையில், எதிர்க்கட்சிகளின் கேள்வி 10 மாதக் குழந்தையிடம் 10ம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இந்த குழந்தை 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல, பட்டப்படிப்பிலும் பதக்கம் வெல்லும். நீங்கள் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும், எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து, நீங்கள் வைக்கக்கூடிய நினைவூட்டல் என்றே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். மேலும், ஒன்றை இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். நமது அரசு சொன்னதை மட்டுமல்ல, சொன்னதற்கு மேலும் செய்துகாட்டும் அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இறுதியாக ஒரு கருத்தை இந்த அவையில் பதிவிட விரும்புகிறேன். எதிர்க்கட்சி கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில், மக்களுக்கு ஏதேனும் மிகவும் பயன்படும் தேவை என்று கண்டறியப்பட்டால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கிற்கு ஏற்ப மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, அவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: விரைந்து தண்டனை பெற்று தருவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் – மு.க. ஸ்டாலின்

விருதுநகர் பாலியல் வன்கொடுமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “விருதுநகரைப் பற்றி ஒரு பிரச்னை சொல்லியிருக்கிறார். விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வன்புணர்வு புகார் வந்த உடன் 24 மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மீதியுள்ள 4 பேர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக தற்போது வழக்கு மாநில குற்றப் புலனாய்வு பிரிவு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். விரைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும். அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என்பதை ஆணித்தரமாக உறுதிபட நான் இந்த மற்றத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பாலியல் வன்முறை வழக்கில், ஒரு மாதிரி வழக்காக நேரடியாக கண்காணிக்குமாறு காவல்துறை தலைவர் டி.ஜி.பி-க்கு நான் உத்தரவிட்டுள்ளேன். நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல இல்லாமல், வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்கு போல இல்லாமல், இந்த வழக்கு நிச்சயம் முறைப்படுத்தப்படும். இந்த அரசு எப்படி தண்டனை வாங்கி கொடுக்கிறது. இந்த மாநிலத்துக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இந்த வழக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருவதில் ஒரு முன் மாதிரி வழக்காக இருக்கும். இது போன்று தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கப்போகிறது. இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களுக்கும் இங்கே இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் பொன்முடி

நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்வி பயில பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று யுஜிசி அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் கூறியதாவது: “தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு எந்தவிதத்தில் நுழைய முயற்சித்தாலும் அதை முதலமைச்சர் தீவிரமாக எதிர்ப்பார். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் இதுவரை 208 வாக்குறுதிகள் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்வரானதும் 5 கோப்புகளில் கையெழுத்திட்டேன்; அதில் 4 திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றவை. அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லாதவற்றையும் செய்து வருகிறோம். ஆனால், கடந்த ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன; ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச செல்போன், பொது இடங்களில் இலவச வைபை வசதி திட்டம் செயல்படுத்தப்படவில்லை.” என்று கூறினார்.

மேலும், 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

காழ்ப்புணர்ச்சிக்கு பெயர்போனது உங்க ஆட்சி; ஓ.பி.எஸ்-க்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி

தமிழ்நாடு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

திமுக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தாலிக்குத் தங்கம் வழங்கக்கூடிய திட்டத்தை நிறுத்தியதாக ஒரு கருத்தை நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே பதிவு செய்திருக்கின்றார். அ.தி.மு.க தொடங்கிய திட்டங்களை, ஏதோ திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் நிறுத்தி விடுவதைப்போல ஒரு போலித் தோற்றத்தை இங்கே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் தனது உரையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய உங்களுடைய அரசு திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போன அரசு; அது உங்களுடைய அரசு. இது கடந்த காலங்களில், பல நேரங்களில் நிரூபணமாகி இருக்கக்கூடிய உண்மை. ஊடகத்தினர், பொதுமக்கள் என அனைவரும் இதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, தலைவர் கலைஞர் அவர்களால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு, அன்றைக்குப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களால் அது திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான், சட்டமன்றமும் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப்பிறகு, சட்டமன்றம் நடைபெற்ற அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழா நினைவாக, 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8 மாடிகள் கொண்ட அளவில் ஒரு பெரிய மாளிகையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை தி.மு.க. ஆட்சி கட்டியது. அந்த மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற நினைத்ததும், அதைப் பாழடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதும் யார்? அங்கிருந்த அண்ணாவினுடைய சிலைக்குக் கீழே கல்வெட்டு இருக்கும். அந்தக் கல்வெட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்களது பெயர் இருந்தது. அந்தப் பெயரையே எடுத்த ஆட்சி எது?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திலே, கலைஞர் வீடு வழங்கக்கூடிய திட்டத்திலே இருந்த கலைஞர் பெயரை நீக்கியது யார்? செம்மொழிப் பூங்காவிலே, கலைஞருடைய பெயரை மறைப்பதற்காக செடி, கொடிகளை கொண்டுபோய் வைத்து, அதை முழுமையாக மூடி மறைத்தது யார்? கடற்கரைப் பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார்?

இராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு, அங்கிருந்த கல்லூரியை அப்புறப்படுத்த நினைத்தது உங்களுடைய ஆட்சி. அதை இடிக்கக்கூடாது, அந்தக் கல்லூரி பழமையான கல்லூரி, பல நூற்றாண்டுகளைக் கண்டிருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புக்குரிய கல்லூரி என்று நாங்கள் அன்றைக்குத் தி.மு.க. சார்பில் குரல் கொடுத்தோம். அதற்காகச் சிறைபிடிக்கப்பட்டு, சிறைக்குப் போய் பல நாட்கள் இருந்து வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு, அந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு, கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அந்த கலைஞர் மாளிகையில் இருந்த கலைஞர் பெயரை நீக்கியதுதான் உங்களுடைய சாதனை.

ஆகவே, கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காகவே சமத்துவபுரங்கள் எல்லாம் பழுதுபார்க்கப்படாமல், அவற்றைப் பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்கு, அதைப் பாழடித்தது யார்? உழவர் சந்தைகளை மேலும் மேலும் வலுப்படுத்தக்கூடாது என்று அதை இடித்து மூடியது யார்? தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்-ஐ முடக்கியது யார்? நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் போன்ற இந்தத் திட்டங்களையெல்லாம் உங்கள் ஆட்சியில் முடக்கினீர்கள். அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இன்னொன்று, முக்கியமான விஷயம்; இங்கே மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர் மட்டச் சாலைத் திட்டம் குறித்தும் பேசினார்கள். அந்தத் திட்டத்தை முடக்கியது யார்? சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7 ஆம் வகுப்புப் பாடத் திட்டத்திலே நாடகக் கலை குறித்த பாடத்தில் கலைஞர் அவர்களது பெயரையும் ஸ்டிக்கரை வைத்து மறைத்தது யார்?

இப்படி வரிசையாக என்னால் சொல்ல முடியும். அதற்காக, பழிவாங்குவதற்காக நாங்கள் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும், முறையான திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றுகிற ஆட்சிதான், கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கக்கூடிய, எங்கள் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சி என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவத் துறையில் முன்னுரிமை அளித்து பணி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், அம்மா கிளினிக் பணியாளர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவத் துறையில் முன்னுரிமை அளித்து பணி வழங்கப்படும்” என்று கூறினார்.

திருமணமான பின் 5 வருடங்களுக்கு பிறகு கொடுப்பது தாலிக்கு தங்கம் திட்டம் கிடையாது – அமைச்சர் எ.வ.வேலு

தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “திருமணமான பின் 5 வருடங்களுக்கு பிறகு தங்கம் கொடுப்பது தாலிக்கு தங்கம் திட்டம் கிடையாது” என்று பதிலளித்தார்.

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்படவில்லை – ஒ.பி.எஸ் விமர்சனம்

சட்டப்பேரவையில் பேசிய மு.க. ஸ்டாலின், கடந்த இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்ததுபோல் மாநில புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்படவில்லை என்று விமர்சனம் செய்தார். மேலும், பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை. பேரிடர் நிவாரண நிதியாக ரூ.6,230 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. எவ்வளவு நிவாரணம் பெறப்பட்டது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-highlights-on-march-23-cm-mk-stalin-answer-to-ops-that-aiadmk-govt-fame-for-vengeance-429689/

முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல் வெளிநாட்டு பயணம்: உடன் செல்லும் உதயநிதி

 23 3 2022 

Tamilnadu CM Stalin First Foreign Trip Update : தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று முதல்முறையாக மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அவர், துபாயில் நடைபெறும் எக்ஸ்போ தொழிற் கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய திமுகவின் மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல், மழைவெள்ளம், உள்ளிட்ட பல சீற்றங்கள் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக வெளிநாடு மற்றும் வெளி மாநில பயணம் எதும் மேற்கொள்ளாமல் இருந்தார்.

தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், முதல்வராக தனது முதல் வெளிநாட்டு பயணததை மேற்கொள்ள இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் தூபாய்நகரில் தொடங்கிய துபாய் எக்ஸ்பொ தொழிற் கண்காட்சி வரும் மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த கண்காட்சியில் இந்திய அமெரிக்க உள்ளிட்ட 192 நாடுகளுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உலக முதலீட்டார்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், தொழில், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பல அரங்குகள் அமைக்கப்பட்டது. இதில் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மகாத்மா காந்தி உருவப்படத்துடன் அமைக்கப்பட்ட அரங்கை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோஷல் திறந்து வைத்தார்.

மேலும் இந்த அரங்கத்தில் தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் தொழில்வளர்ச்சியை பறைசாற்றும் வகையில், அரங்குகள் அமைக்க தமிழக அரசு சார்பில் 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த அரங்கத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறபபடுகிறார். அவருடன் திமுக இளைஞராணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.

முதல்வராக பதவியேற்று முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்கு துபாய் வாழ் திமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு இந்த தொழிற்கண்காட்சி அதற்கு முக்கிய களமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-first-foreign-trip-with-udhayanidhi-stalin-to-dubai-429651/

சட்டப்பேரவையில் இன்று  23 3 2022 










சட்டப்பேரவை ஹைலைட்ஸ் 22 3 2022

 22 3 2022 

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 19-ம் தேதி 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச் 21, 22 தேதிகளில் பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23-ம் தேதியும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்றது.

இன்றைய சட்டப் பேரவை நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் முதலமைச்சர் பதில் அளித்தனர். அதுமட்டுமல்லாமல், சட்டமன்ற வரலாற்றில் சபாநாயகருக்கு முதல் பெண் துபாஷ் நியமனம் செய்யப்பட்டது கவனம் பெற்றுள்ளது.

முதல் பெண் துபாஷ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், துபாஷ் என்ற பணிக்கு சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துபாஷ் என்ற பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்.

இந்த துபாஷ் பணிக்கு ராஜலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1990-ம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தவர். தற்போது 60 வயது எட்டியுள்ள ராஜலட்சுமி வருகிற மே மாதம் ஓய்வு பெற உள்ளார்.

இந்த நிலையில், ராஜலட்சுமி சபாநாயகரின் துபாஷ் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல் பெண் துபாஷ் ஆகியுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்தனர். முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துபாஷ் பொறுப்பிற்கு தனி சீருடையும் வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வந்தாலும், இந்த பொறுப்புக்கு முதல்முறையாக திமுக ஆட்சியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பு, ராஜலட்சுமி துபாஷ் சீருடை அணிந்து சபாநாயகரை அழைத்து வந்தார்.

நம்ம ராஜுக்குதான் சந்தோஷம் இல்லைனு நினைக்கிறேன் – அமைச்சர் ராஜ கண்ணப்பன் கமெண்ட்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு பேசினார். கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி எழுப்பி பேசியதாவது: “பேரவைத் தலைவருக்கு கோடான கோடி நன்றி, இத்தனை நாளா கேட்டு இன்னைக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி நன்றி… பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்து துறை அமைச்சர் இடத்தில், மக்களின் கோரிக்கை, பெண்களின் கோரிக்கை, பெண்கள் எல்லாம் பேருந்துகளில் இலவச பயணம் என்று சொன்னவுடன் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது என்னவென்றால், குறிப்பிட்ட பேருந்துகளில்தான் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்கிறபோது அவர்கள் உரிய நேரத்துக்கு போக முடியவில்லை. அதனால், அவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணப்படுகிறார்கள். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பெண்களுடைய குரலாக நான் இந்த நேரத்தில் ஒலிக்கிறேன் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு சொலுங்கள், குறிப்பிட்டு ஒரு இடத்தில் கேளுங்கள், பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள் என்று கூறினார்.

இதற்கு செல்லூர் ராஜு, மதுரை மாநகரில், இயங்குகிற எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று இருந்தால் பரவாயில்லை, குறிப்பிட்ட பேருந்துகளில்தான் ஏற முடியும் என்று சொல்கிறார்கள். இதனால், அந்தப் பெண்களுக்கு மிகப்பெரிய தொந்தரவு, சில பேர் உரிய நேரத்தில் போக முடியவில்லை. மதுரை மாநகரில் மகளிருக்கு மட்டும் என்று பேருந்துகளை இலவசமாக இயக்குகிறார்கள். மற்ற பேருந்துகளில் ஏற்றுவது இல்லை. அதனால், எல்லா பேருந்துகளிலும் பெண்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கிறார்களா என்று பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கேட்கிறேன் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், “தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, மாநகர பேருந்துகளில் 40 சதவீதம் என்று வைத்தோம். ஆனால், இப்போது 61.82 சதவீதம் என்று கூடிவிட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தீர்கள் என்றால், பெண்கள்தான் 48%க்கு மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கு 90% பேர் வாக்களித்துள்ளார்கள். அதனால், மகளிர் பேருந்து என்பது முதலமைச்சரின் கனவு திட்டம். அந்த கனவு திட்டம் மிக வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதலில் 1,350 கோடி ரூபாய் ஒதுக்கிய அரசு, இந்த முறை 1,510 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. ஆகவே, அரசுப் பேருந்துகளில் மகளிர் பயணம் என்பது மிக திருப்தியாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி ஏதாவது குற்றச்சாட்டுகள் வந்தால், அந்த பேருந்துகளைத் தவிர வேறு மற்ற எல்லா பேருந்துகளையும் இலவசமாக விட்டால் பிறகு எல்லா பேருந்துகளிலும் ஏறிக்கொண்டிருப்பார்கள். பிறகு எப்படி பஸ் கம்பெனியை நடத்துவது. ஏற்கெனவே ரூ.48,000 கோடி நட்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து என்ன தேர்தல் அறிக்கையில் சொன்னோமோ அது நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நம்முடைய உறுப்பினர் ராஜு அவர்கள்தான் சந்தோஷமாக இல்லை என்று நினைக்கிறேன்.

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

திமுக அரசின் பட்ஜெட்டை வரவேற்ற அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி கூறினார்.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “முன்னாள் சபாநாயகர் தனபால், பட்ஜெட்டில் பல திட்டங்களை வரவேற்றுள்ளார். அதற்கு நன்றி; அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. அவர் கூறிய கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், திமுக ஆட்சிகு வந்தால் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதே திமுக அரசுதான். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுதான் மக்கள் நலப் பணியாளர்களின் வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்பியது. அதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், நீதிமன்ற தீர்ப்பு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதில் எந்தவித தயக்கமும் இல்லை” என்று கூறினார்.

இதனிடையே சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

10 ஆண்டு ஆட்சியில் அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? ஸ்டாலின் கேள்வி

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், “10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? 10 மாத ஆட்சி காலத்தில் திமுக செய்த சாதனையை எந்த ஆட்சியும் செய்யவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.

பட்ஜெட் விவாதத்தைக் காண வந்த பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தைக் காண நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சட்டமன்றத்திற்கு வந்தனர்.

source 

டெல்லி தி.மு.க அலுவலகம் திறப்பு விழா: சோனியாவை தொடர்ந்து அமித் ஷாவுக்கும் அழைப்பு

 22 3 2022 

டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் கடசியாக திமுக சார்பில் டெல்லியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலுவலகம், டெல்லியில் உள்ள தீன் தயால் உபார்த்தியாயா மார்க் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தின் அருகில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த அலுவலகம் திறக்கப்பட்ட இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அலுவலகத்தின் திறப்பு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி வரும் ஏப்ரல் 2-ந் தேதி டெல்லியில் திமுக அலுவலகம் திறக்கப்பட் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் ஏப்ரல் 2-ந் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மேலும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு திமுக சார்பில் மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாஜக முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமாக அமித்ஷா மற்றும் தொழில்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை நேரில் சந்தித்த டிஆர் பாலு திமுக அலுவலக திறப்பு விழாவுக்காக அழைப்பதழை வழங்கியுள்ளார். இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்த எம்பி டிஆர் பாலு மற்றும் ஆ.ராசா உள்ளிட்ட எம்பிக்கள் அவருக்கு திமுக அலுவலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/delhi-dmk-office-opening-invitation-tr-balu-to-amithsha-429102/

 22 3 2022 

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 19-ம் தேதி 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச் 21, 22 தேதிகளில் பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23-ம் தேதியும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்றது.

இன்றைய சட்டப் பேரவை நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் முதலமைச்சர் பதில் அளித்தனர். அதுமட்டுமல்லாமல், சட்டமன்ற வரலாற்றில் சபாநாயகருக்கு முதல் பெண் துபாஷ் நியமனம் செய்யப்பட்டது கவனம் பெற்றுள்ளது.

முதல் பெண் துபாஷ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், துபாஷ் என்ற பணிக்கு சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துபாஷ் என்ற பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்.

இந்த துபாஷ் பணிக்கு ராஜலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1990-ம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தவர். தற்போது 60 வயது எட்டியுள்ள ராஜலட்சுமி வருகிற மே மாதம் ஓய்வு பெற உள்ளார்.

இந்த நிலையில், ராஜலட்சுமி சபாநாயகரின் துபாஷ் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல் பெண் துபாஷ் ஆகியுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்தனர். முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துபாஷ் பொறுப்பிற்கு தனி சீருடையும் வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வந்தாலும், இந்த பொறுப்புக்கு முதல்முறையாக திமுக ஆட்சியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பு, ராஜலட்சுமி துபாஷ் சீருடை அணிந்து சபாநாயகரை அழைத்து வந்தார்.

நம்ம ராஜுக்குதான் சந்தோஷம் இல்லைனு நினைக்கிறேன் – அமைச்சர் ராஜ கண்ணப்பன் கமெண்ட்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு பேசினார். கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி எழுப்பி பேசியதாவது: “பேரவைத் தலைவருக்கு கோடான கோடி நன்றி, இத்தனை நாளா கேட்டு இன்னைக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி நன்றி… பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்து துறை அமைச்சர் இடத்தில், மக்களின் கோரிக்கை, பெண்களின் கோரிக்கை, பெண்கள் எல்லாம் பேருந்துகளில் இலவச பயணம் என்று சொன்னவுடன் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது என்னவென்றால், குறிப்பிட்ட பேருந்துகளில்தான் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்கிறபோது அவர்கள் உரிய நேரத்துக்கு போக முடியவில்லை. அதனால், அவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணப்படுகிறார்கள். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பெண்களுடைய குரலாக நான் இந்த நேரத்தில் ஒலிக்கிறேன் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு சொலுங்கள், குறிப்பிட்டு ஒரு இடத்தில் கேளுங்கள், பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள் என்று கூறினார்.

இதற்கு செல்லூர் ராஜு, மதுரை மாநகரில், இயங்குகிற எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று இருந்தால் பரவாயில்லை, குறிப்பிட்ட பேருந்துகளில்தான் ஏற முடியும் என்று சொல்கிறார்கள். இதனால், அந்தப் பெண்களுக்கு மிகப்பெரிய தொந்தரவு, சில பேர் உரிய நேரத்தில் போக முடியவில்லை. மதுரை மாநகரில் மகளிருக்கு மட்டும் என்று பேருந்துகளை இலவசமாக இயக்குகிறார்கள். மற்ற பேருந்துகளில் ஏற்றுவது இல்லை. அதனால், எல்லா பேருந்துகளிலும் பெண்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கிறார்களா என்று பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கேட்கிறேன் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், “தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, மாநகர பேருந்துகளில் 40 சதவீதம் என்று வைத்தோம். ஆனால், இப்போது 61.82 சதவீதம் என்று கூடிவிட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தீர்கள் என்றால், பெண்கள்தான் 48%க்கு மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கு 90% பேர் வாக்களித்துள்ளார்கள். அதனால், மகளிர் பேருந்து என்பது முதலமைச்சரின் கனவு திட்டம். அந்த கனவு திட்டம் மிக வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதலில் 1,350 கோடி ரூபாய் ஒதுக்கிய அரசு, இந்த முறை 1,510 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. ஆகவே, அரசுப் பேருந்துகளில் மகளிர் பயணம் என்பது மிக திருப்தியாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி ஏதாவது குற்றச்சாட்டுகள் வந்தால், அந்த பேருந்துகளைத் தவிர வேறு மற்ற எல்லா பேருந்துகளையும் இலவசமாக விட்டால் பிறகு எல்லா பேருந்துகளிலும் ஏறிக்கொண்டிருப்பார்கள். பிறகு எப்படி பஸ் கம்பெனியை நடத்துவது. ஏற்கெனவே ரூ.48,000 கோடி நட்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து என்ன தேர்தல் அறிக்கையில் சொன்னோமோ அது நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நம்முடைய உறுப்பினர் ராஜு அவர்கள்தான் சந்தோஷமாக இல்லை என்று நினைக்கிறேன்.

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

திமுக அரசின் பட்ஜெட்டை வரவேற்ற அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி கூறினார்.

இது குறித்து சட்டப்பே

ரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “முன்னாள் சபாநாயகர் தனபால், பட்ஜெட்டில் பல திட்டங்களை வரவேற்றுள்ளார். அதற்கு நன்றி; அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. அவர் கூறிய கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், திமுக ஆட்சிகு வந்தால் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதே திமுக அரசுதான். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுதான் மக்கள் நலப் பணியாளர்களின் வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்பியது. அதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், நீதிமன்ற தீர்ப்பு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதில் எந்தவித தயக்கமும் இல்லை” என்று கூறினார்.

இதனிடையே சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

10 ஆண்டு ஆட்சியில் அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? ஸ்டாலின் கேள்வி

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், “10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? 10 மாத ஆட்சி காலத்தில் திமுக செய்த சாதனையை எந்த ஆட்சியும் செய்யவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.

பட்ஜெட் விவாதத்தைக் காண வந்த பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தைக் காண நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சட்டமன்றத்திற்கு வந்தனர்.

source 

சட்டப்பேரவை ஹைலைட்ஸ் 21 3 2022 

 மேகதாது கட்டுவதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம், தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது குறித்த தமிழக முதல்வரின் விளக்கம் உள்ளிட்ட, தமிழக சட்டமன்றத்தில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம்

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பாய்கிறது. ஆனால் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. 

இதற்கிடையில், காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது. மேலும், 2022-2023-ம் ஆண்டுக்கான கர்நாடகா பட்ஜெட்டில், மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று நடைபெற்றது. அப்போது, காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த தீர்மானத்திற்கு, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்துகட்சிகளும் ஆதரவு அளித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த தீர்மானத்தில் மேகதாதுவில் கர்நாடகா அணைக்கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிராக தீர்மானத்தை ஆதரித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உரையாற்றிய முதலமைச்சர், நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் மேகதாது சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை, அரசினர் தனித் தீர்மானமாகக் கொண்டுவந்து, அவரே முன்னுரையாக வரலாற்றிலே பதிவாகியிருக்கக்கூடிய பல்வேறு செய்திகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, கட்சி பேதமின்றி, அரசியல் பேதமின்றி இந்தத் தீர்மானத்தை நாம் ஏகமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற அந்த அடிப்படையிலே, ஒரு தீர்மானத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததற்குப் பிறகு, அதைத் தொடர்ந்து உரையாற்றியிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று, இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிட, இந்த அரசுக்கு ஆதரவு தந்தமைக்கு முதலில் உங்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  

மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும்.  அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இந்த அரசு நிச்சயமாக உறுதியாக இருக்கும். அதிலே எந்தவித பாகுபாடும் பார்க்கமாட்டோம்.  

அணை கட்டக்கூடிய முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும்.  தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும்.  தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்; நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தாலிக்கு தங்கம் திட்டம் விளக்கம்

தமிழக பட்ஜெட்டில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வியில் சேர்க்கைப் பெறும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றலை தடுக்கும் வகையில் மாதம் ரூ.1000 மாணவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இன்று சட்டசபையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ பாண்டியன் தாலிக்கு தங்கம் திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்ததாக தெரிவித்தார். தற்போது இந்த திட்டம் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்த திட்டத்திற்கு சுமார் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தது தெரிய வந்தது என்றும் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 1989-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு முதல் முதலாக 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும், 2011-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் திருமண உதவிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார். 

மேலும் இந்த திட்டத்தை இடையில் நிறுத்திய அதிமுக அரசு பின்னர் மீண்டும் செயல்படுத்தியதாக கூறினார்.  அதிமுக அரசு திருமண உதவியை, ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் என உயர்த்தி வழங்கியதாக தெரிவித்தார். இந்த நிலையில் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்ததில் அதில் 24.5 சதவீத பயனாளிகள் மட்டுமே தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முறைகேடுகள் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டு 43 வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் உயர்நிலைக் கல்வியில் பெண்கள் சேர்வது 46 சதவீதம் மட்டுமே இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என்பதால் தான் தாலிக்கு தங்கம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பெண் உரிமை கொள்கையின் மறுவடிவம் தான் இந்த நிதி உதவி வழங்கும் திட்டம் எனவும் தெரிவித்தார். 

நகைக்கடன் தள்ளுபடி விளக்கம்

5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு அரசு எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 சவரனுக்கு கீழ் அடகு வைத்து தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என ஆதாரம் கொடுங்கள். ஆதாரம் கொடுத்தால் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. என்று கூறினார். மேலும், முறைகேடு செய்தவர்களுக்கு நகை கடனை தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? என பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.

மாநகராட்சியுடன் இணைய மறுக்கும் பேரூராட்சிகள்

மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேரூராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என சுதர்சனம் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, உடனடியாக செய்யமுடியாது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பணிகளை விரைந்து தொடங்க உள்ளோம். நூறு நாள் வேலை திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை இவ்வாறு கூறினார். 

சாலை விபத்து – காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000

சாலை விபத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் விதமாக இன்னுயிரை காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hours-க்குள் மருத்துவமனைக்கு கொண்டுவந்து, உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்சான்றிதழும், ரூ. 5,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-resolution-passed-against-mekedatu-dam-428476/

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு: சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!

 21 3 2022 

கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற சட்டப்பேரவை இன்று மார்ச் 21 கூடியது. அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அனுமதி தரவோ கூடாது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்தை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது குறித்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்பூர்வமாக தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.

மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. சமீபத்தில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது சட்டசபையில் பேசிய அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட நிதி நிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.

மேகதாது அணை கட்ட மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு எந்தவித ஒப்புதலும் இதுவரை அளிக்காத நிலையில், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டினால் தமிழக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என தொடர்ந்து தமிழக அரசும் , அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/a-separate-resolution-passed-unanimously-in-the-assembly-428237/

மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை ரூ25 உயர்வு; தமிழக அரசின் முடிவு என்ன?

 20 3 2022 Whole sale Diesel purchase price increased Rs.25: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வரும் நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்பட மொத்தமாக வாங்குபவர்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விலையில், கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சுட்டிக்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. இருப்பினும் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

இந்தநிலையில் மொத்தமாக வாங்குவோருக்கு மட்டும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதனிடையே இந்த விலை அதிகரிப்பால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு நாள்தோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து கழகம் மட்டுமின்றி தொழிற்சாலைகள் மற்றும் பெரு நிறுவனங்களும் மொத்தமாக டீசல் வாங்குகின்றன. அவர்களுக்கும் இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை கொடுக்கும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நாள்தோறும் 15 முதல் 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்து வருகிறது. தற்போதுள்ள விலை உயர்வால் பல கோடி இழப்பு ஏற்படும்.

இதனிடையே, விலை உயர்வு தொடர்பாக, சில்லறை விலையில் டீசல் வாங்க எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சில்லறை விற்பனை விலையை விட லிட்டருக்கு 64 காசு குறைவாக டீசல் வழங்க எண்ணெய் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் நாள்தோறும் ரூ.3.5 கோடி இழப்பு தவிர்க்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/whole-sale-diesel-purchase-price-increased-rs-25-428048/

7 ஆண்டுக்கு பிறகு தமிழக பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை இறங்குமுகம்: நிதித்துறை செயலாளர் பேட்டி

 18 3 2022 தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத 2வது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நிதி அமைச்சர், 2022-2023-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இந்த வரவு செலவு திட்டத்தைப் பற்றி சில குறிப்புகளை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். இந்த ஆண்டு நிதி நிலையை எடுத்துக்கொண்டோம் என்றால், ஒரு மிகவும் இக்கட்டான ஆண்டாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் தெரியும் பெருந்தோற்றின் இரண்டாவது அலை, பெருந்தொற்று மூன்றாவது அலை, எதிர்பாராத விதமாக வரலாறு காணாத மழை வெள்ளம். இது போன்ற பல்வேறு நிகழ்வுகளால், ஏற்பட்ட செலவினங்கள் இவையெல்லாம் இருந்தாலும்கூட, இந்த ஆண்டு முதல் முறையாக 7 ஆண்டுகளுக்கு பின்னர், வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. இதை நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்க்கு வருவாய்ப் பற்றாக்குறை முதல்முறையாக 7 ஆண்டுகளுக்கு பின்னர், 2014ம் ஆண்டில் இருந்து பார்த்தோமேயானால் வருவாய்ப் பற்றாக்குறை ஏறுமுகமாக இருந்தது. அது இந்த ஆண்டு இந்த நிலைமை மாறி குறைந்துள்ளது. அதே போல, நிதி பற்றாக்குறை 3% மாநில ஜி.டி.பி-யில் இருக்க வேண்டும். அது கடந்த ஆண்டு 4.6% இருந்தது. இந்த ஆண்டு 3.8%-க்கு குறைந்துள்ளது. இந்த 2 குறியீடுகளும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு சிறப்பு நிதி மேலாண்மை நடவடிக்கைகளால் இது எய்தப்பட்டது.

தொடர்ந்து, வரும் ஆண்டுகளிலும் இந்த நிதிப் பற்றாக்குறை அடுத்த ஆண்டு 3.62%க்கு கொண்டுவரலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அது இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில், 3%க்கு கொண்டுவருவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

வருவாய் பற்றாக்குறை பொறுத்தவரை, பொதுவாக வருவாய் பற்றாக்குறை இருக்கக்கூடாது. எவ்வளவு வருவாய் வருகிறதோ அந்த அளவுக்குதான் நாம் செலவு செய்ய வேண்டும். இப்போது, இந்த ஆண்டு கிட்டத்தட்ட, 55,000 கோடி ரூபாயில் இருக்கிறது. அதை அடுத்த ஆண்டு படிப்படியாகக் குறைத்து, வருவாய் பற்றாக்குறை இல்லாத நிலை எய்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கியமான குறிக்கோள். வருகிற ஆண்டைப் பொறுத்த வரை, 3 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டம் மொத்த செலவினங்கள் இருக்கும். இதில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 17% அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறோம். ஏனென்றால், இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்திருக்கிறது. அதனால், வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மூலம் மீண்டும் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டால், அது 17% உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

மூலதன செலவுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டைக் காட்டிலும் அடுத்த ஆண்டு 13.96% உயர்த்தி அதை நாங்கள் செலவிடப் போகிறோம். கிட்டத்தட்ட, 43,000 கோடி ரூபாய்க்கு மூலதன செலவினங்கள் மேற்கொள்ளப்படும். முக்கியமான சில திட்டங்களை இந்த வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்கள். பொதுவாக அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி கொடுத்திருக்கிறோம். ஏற்கெனவே, அவர்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கும் திட்டங்களுக்கும் புது திட்டங்களுக்கும் தேவையான நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து துறைகளுக்கும் உயர்த்தி கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகத்தான் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

முக்கியமான திட்டங்கள் என்றால், பள்ளிக் கல்வித்துறை. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேராசிரியர் க. அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு மகத்தான ஒரு திட்டம், கிட்டத்தட்ட 7,000 கோடி ஒதுக்கியிருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில், எல்லா அரசு பள்ளிகளும் ஆதி திராவிடர் நல பள்ளியாக இருந்தாலும் சரி, கள்ளர் சீர்மரபினர் பள்ளியாக இருந்தாலும் சரி, அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கம்ப்யூட்டர் லேப்ஸ், கம்ப்யூட்டர் ஸ்மார்ட் வகுப்பறை, சுற்றுச்சுவர் என 18,000 புதிய வகுப்பறைகள் இவை எல்லாமே இந்த திட்டத்தின் கீழ் எடுத்து செய்யப்படும்.

இந்த ஆண்டு ஒரு 10 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அரசு ஏற்படுத்தியது. அது மேலும், இன்னும் 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டம் மிக சிறப்பான திட்டம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நாட்டுக்கே ஒரு முன்னோடியாக இருக்கும் திட்டம். அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதற்கு ஒரு 200 கோடி ரூபாய் இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கி இருக்கிறோம்.

கல்லூரிகளைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டில் நிறைய மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துக்கொண்டிருப்பதால், தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 1,000 கோடி ரூபாய் அடுத்த 5 ஆண்டுகளில் ஒதுக்கி, இந்த ஆண்டு 250 கோடி ரூபாய் அதற்கு ஒதுக்கி இருக்கிறோம். அதில் புதிய வகுப்பறைகள், கம்ப்யூட்டர் லேப் இதை எல்லாம் உருவாக்குவதற்காக ஒதுக்கி இருக்கிறோம்.

பெண் கல்வித் திட்டம், குறிப்பாக அரசு பள்ளிகளில் இருந்து பெண் குழந்தைகள் கல்லூரி அளவுக்கு செல்வது மிகக் குறைவாக உள்ளது. 46% மாணவிகள்தான் அரசுப் பள்ளிகளில் முடித்துவிட்டு கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். இது மற்ற பிரிவையெல்லாம் பார்க்கும்போது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதை மாற்றுவதற்காக இராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உறுதித் திட்டம் என்ற புதிய திட்டத்தை மறுவடிவ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு எந்த கல்லூரிக்கு சென்றாலும் அந்த பெண் குழந்தைகளுக்கு பி.ஏ, பி.காம், பி.எஸ்சி, பி.இ., எம்.பி.பி.எஸ் என இளங்கலை படிப்பு வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்களுடைய கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். கல்லூரி படிப்பு 3 ஆண்டுகளும் அவர்களுக்கு கிடைக்கும். இதில் கிட்டத்தட்ட ஒரு 6 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள். இது பயனுள்ள திட்டமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதன் மூலம், அரசு பள்ளிகளில் இருந்து கல்லூரி செல்லும் பெண்களின் 46% நிச்சயமாக உயர்ந்து, நிறைய பேர் உயர்கல்விக்கு செல்வார்கள் என்று நம்புகிறோம். அதே போல, ஐ.டி.ஐ.கள். அரசு ஐ.டி.ஐ.கள், இந்த ஆண்டு 71 ஐ.டி.ஐ.கலை எடுத்து 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவதற்காக அறித்திருக்கிறார். அதில், இண்டஸ்ட்ரீ 4.0க்கு இப்போது இருக்கிற படிப்புகள் இல்லாமல், இப்போது தொழில்துறைக்கு எந்த மாதிரி படிப்புகள் தேவையோ அதை வழங்கப்போகிறோம். இது மேம்பாடு செய்யப்படும். இது மிகவும் பிரபலமான தொழில்துறை சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக நிறைய திட்டங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், புத்தாக்கத் தொழில்கள், ஸ்டார்ட் அப்ஸ், இது மிகமிக முக்கியம். அதில் சென்னையும் தமிழ்நாடும் சிறப்பாக செய்திருந்தாலும்கூட, இப்போது பெங்களூரு, நியூடெல்லி, ஹைதராபாத் இங்கெல்லாம் ஸ்டார்ட் அப்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கிறார்கள். அந்த நிலையமையை மாற்றுவதற்காக, தமிழ்நாட்டு ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்காக பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஸ்டார்ட் அப்-க்கு ரொம்ப ரொம்ப முக்கியம் அவர்களின் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அதை வாங்குவதற்கு மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் இருக்கிறது. அவர்கள்தான் நிறையப் பொருட்களை கொள்முதல் செய்கிறார்கள்.

அதில் நம் தமிழ்நாட்டை சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற பொருட்களையும், புதிய பொருட்களையும் அரசு துறைகளும் அரசு நிறுவனங்களும் நேரடியாக 50 லட்சம் வரை நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்படும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆரம்பித்தால் அவர்களுக்கு உதவி புரிவதற்காக 30 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக டேன்சிம் என்று ஸ்டார்ட் அப் அமைப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டும் இதில் இருக்கிறது.

இன்னொன்று கொள்முதலில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற பொருட்களில், அரசு கொள்முதல் செய்கிற பொருட்களில் 5% வரை வாங்கலாம் என்று ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறோம். இது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே போல ஏற்றுமதி, ஏற்றுமதியில் தமிழ்நாடு மிக முக்கியமான ஒரு மாநிலம். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பூர் இங்கெல்லாம் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாம் ஏற்றுமதி செய்கிறார்களோ அங்கெல்லாம், அவர்கள்க்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

சில கொள்கை முடிவுகளை அறிவித்திருக்கிறோம். எஃப்.எஸ்.ஐ, தளப்பிறப்பு குறியீட்டை சில பகுதிகளில் அதிகரிக்கலாம். இப்போது எஃப்.எஸ்.ஐ 3.2-ல் இருக்கிறது. ஆனால், சில மெட்ரோ ரயில் பாதைகள் போகிற வழிகளில் உள்கட்டமைப்பு எங்கே அதிகமாக இருக்கிறதோ கட்டமைப்பு வசதிகள் அதிகமாக இருக்கிறதோ, அதை உயர்த்தி வழங்கலாம் என்று ஒரு கொள்கையை அறிவித்திருக்கிறோம்.

இதனால், ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே போல, ஹவுசிங் போர்டு கட்டிய நிறைய பழைய கால கட்டங்கள், வீடுகள் எல்லாம் முன்னாடி கட்டி இருக்கிறார்கள். பழைய காலத்து வீடுகள் எல்லாம் இருக்கிறது. அரசு, அலுவலர்கள் குடியிருப்புகள் எல்லாம் இருக்கிறது. விற்றிருக்கிறார்கள். இதையெல்லாம், மீண்டும் கட்டியெழுப்ப (Redevelop) ஒரு கொள்கையை கொண்டு வரப்போகிறோம். அதெல்லாம், குறைந்த எஃப்.எஸ்.ஐ-இல் இருக்கும். 1.2 அப்படி எல்லாம் இருக்கும். அதை எல்லாம் இடித்துவிட்டு முழு எஃப்.எஸ்.ஐ கட்டுவது, ரிடெவலம் பண்ணுவது என ஒரு கொள்கையை அறிவித்திருக்கிறோம்.

அதே போல, எம்.எஸ்.எம்.இ என்கிற குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காகவும் நிறைய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, அறிவித்த கடன் தள்ளுபடிகள், அரசு அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி கிட்டத்தட்ட 4,131 கோடி ரூபாய் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கி இருக்கிறோம்.

முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தனியார் துறையில் நிறைய தமிழ் வழிப் பள்ளிகள் இருக்கிறது. அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் என்னென்ன உதவிகள் வழங்குகிறோமோ, நோட்டு புத்தகங்கள், புத்தகங்கள் எல்லாம் அவர்களுக்கும் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த வரவு செலவு திட்டத்தைப் பொறுத்தவரை, இது வளர்ச்சிக்காக அனைத்து துறைகளுக்கும் ஒரு கலவையான நிறைய திட்டங்கள் அம்சங்கள் இருக்கிறது. நிறைய கொள்கை முடிவுகள் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஓ.ஆர்.ஆர் என்கிற (Outer Ring Road) சென்னையைச் சுற்றி இருக்கிறது. அதை வளர்ச்சிப் பகுதிகளாக மாற்றுவதற்கு ஆய்வுகள் சொல்லப்பட்டிருக்கிறது. வளர்ச்சிக்காக இந்த வரவு செலவு திட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

நலத்திட்டங்களில் எந்தவித குறைபாடுகளுமின்றி, எந்தவித தொய்வுகளுமின்றி போதுமான நிதி அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நிதியாண்டில் கனிம வளம் மூலம் ரூ.1,000 கோடியும், பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23,000 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/finance-secretary-muruganandhan-says-about-budget-monthly-rs-1000-to-college-goes-girls-from-govt-school-427095/

அரசுப் பள்ளி மாணவிகள் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

18 3 2022 அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.

இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கும் இயற்கைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அரசுப் பள்ளி மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், உயர்கல்வி படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/government-school-students-rs-1000-per-month-for-higher-education/

தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 18 03 2022 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசனுக்கும், அறிக்கையை தயாரிக்க உதவிய அரசு அதிகாரிகளுக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

சமூகநலத் திட்டங்களில் எந்தக் குறையும் வைக்காமல், வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நிதி நிர்வாகத்தை வளர்த்துள்ளோம் என்பதை நிதிநிலை அறிக்கை எடுத்துக் காட்டி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் எடுத்துச் செல்ல வழிவகுக்கும் அறிவிப்பு, பழமை வாத கருத்துகள் என்னும் இருள் கவ்வியிருக்கும் பகுதிகளுக்கு, அறிவொளி பாய்ச்சும் அறிவிப்பு எனக் கூறியுள்ளார். பத்தாண்டு கால சரிவைச் சரி செய்வது மட்டுமல்லாமல், அடுத்த 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நூற்றாண்டு கால திராவிட சமூக நீதிக் கொள்கைகளையும், நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பட்ஜெட் - கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2022 - 2023: ரூ.36,895.89 கோடி 2021 - 2022: ரூ.32,599.54 கோடி (திமுக அரசு) 2021 - 2022: ரூ.34,181.73 கோடி (அதிமுக அரசு) 2020 - 2021: ரூ.34,181.73 கோடி 2019 - 2020: ரூ.28,757.62 கோடி 2018- 2019: ரூ.27,205.88 கோடி


ஒரு ரூபாயில் தமிழ்நாடு அரசு செலவிடும் தொகை( பைசாவில்) ➤கடனை திருப்பிச் செலுத்த - 7 ➤கடனுக்கான வட்டி - 13 ➤கடன் வழங்க - 2 ➤சம்பளம் வழங்க - 20 ➤ஓய்வூதியம் - 10 ➤செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவு - 4 ➤மானியங்கள் - 32 ➤மூலதனச் செலவு - 12

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், டான்சிம்க்கு (TANSIM) ரூ.30 கோடி நிதி வழங்கப்படும். - நிதியமைச்சர்


source https://news7tamil.live/tamil-nadu-budget-2022-23-report-by-chief-minister-mk-stalin.html

தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

15 3 2022  தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் அய்யன் திருவள்ளுவர் விருது மறைந்த மு.மீனாட்சி சுந்தரத்திற்கும், பேரறிஞர் அண்ணா விருது பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கும் வழங்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை ந.கவுதமனுக்கும், சொல்லின் செல்வர் விருது அரசியல் விமர்சகர் சூர்யா சேவியருக்கும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, இளங்கோவடிகள் விருது இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லை கண்ணனுக்கும், மறைமலையடிகளார் விருது ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவத்திற்கும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முனைவர் வ. தனலட்சுமிக்கும், தந்தை பெரியார் விருது பெரியாரிய ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவுக்கும் வழங்கப்பட்டது.
பின்னர், பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் குமரி அனந்தனுக்கும், முத்தமிழ்க்காவலர் சி.ஆ.பெ. விசுவநாதம் விருது மேனாள் துணைவேந்தர் முனைவர். ம.ராசேந்திரனுக்கும் வழங்கப்பட்டது. ஜி.யு.போப் விருது அ.சு.பன்னீர் செல்வனுக்கும், தேவநேயப் பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரனுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயருக்கும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனுக்கும் வழங்கப்பட்டது.

அண்மைச் செய்தி: தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் – முதலமைச்சர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம்

இதேபோல, அண்ணல் அம்பேத்கர் விருது சென்னை உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும் வழங்கப்பட்டது. கம்பர் விருது பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கும், உமறுப்புலவர் விருது நா. மம்மதுவுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கத்திற்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான. அலாய்சியஸ்-க்கும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

அப்போது, நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாரதிதாசனின் வரிகளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். தமிழ் மொழி 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போதைய ஆய்வுகள் வெளிப்பட்டு வருவதாக கூறினார். இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி முதல் முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழி தமிழ் விருதுகள் 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

source https://news7tamil.live/largest-book-park-to-be-set-up-in-tamil-nadu-chief-ministers-announcement.html


நீட் விலக்கு மசோதா: ஆளுநர் உறுதி

 15 3 2022 நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரும் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, ஆளுநர் – முதலமைச்சர் சந்திப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022 – 2023 ஆம் கல்வியாண்டு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தாமதம் இன்றி நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைச் செய்தி: தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம்

பல மாதங்களாக நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டமுன்வடிகள் மற்றும் கோப்புகள் மீது எடுக்கப்படும் உடனடி நடவடிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சந்திப்பின் இறுதியில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

source https://news7tamil.live/need-exemption-bill-confirmed-by-governor.html

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் கல்வியை இங்கு தொடர முடியுமா?

Local Body Polls, DMK, CM MK Stalin, AIADMK, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஸ்டாலின் செயல்பாட்டை உரசிப் பார்க்கும் முதல் தேர்தல், சவால் கொடுக்குமா அதிமுக, AIADMK, DMK vs AIADMK, local body polls, tamilnadu

15 3 2022 உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இங்கு கல்வியை தொடர அனுமதிப்பது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் கே.செந்தில் தெரிவித்தார்.

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அந்நாட்டில் மருத்துவக் கல்வி படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் சிக்கித் தவித்தனர். 


இவர்களை மத்திய-மாநில அரசுகள் பத்திரமாக நாட்டுக்கு மீட்டுக் கொண்டு வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களை பத்திரமாக நாடு திரும்பினர்.

கல்வி நிறுவனங்கள் உக்ரைனில் மூடப்பட்டுள்ளதாலும், போர் தொடர்ந்து நீடித்து வருவதாலும் அவர்கள் கல்வி கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்நிலையில், தேசிய மருத்துவ கமிஷனிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்று உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இங்கு மருத்துவக் கல்வியைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் கே.செந்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ் தள செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், நடைமுறையில் உள்ள மருத்துவக் கல்வி விதிமுறைகளின் படி, இதுபோன்ற சேர்க்கையை அனுமதிப்பது சாத்தியமில்லை.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை இங்கு தொடர்வதற்காக நடைமுறையில் உள்ள விதிகளைத் திருத்துவது என்பது சரி என்று எனக்குத் தோன்றவில்லை.

இதுகுறித்து இப்போதே விவாதிப்பதும் சரியாக இருக்காது. நாம் காத்திருந்து பார்ப்போம். உக்ரைன் மாணவர்களை பிற நாடுகள் அனுமதிக்க வாய்ப்புள்ளது அல்லது போர் முடிவுக்கு வந்த பிறகு அவர்கள் உக்ரைனில் கல்வியைத் தொடர முடியும் என்றார்.

மார்ச் 18-ஆம் தேதி மாநில தேர்தல் கவுன்சில் இதுதொடர்பாக விவாதிக்கவுள்ளது. இந்தக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கூறுகையில், இந்தியாவில் விதிமுறைகள் தெளிவாக இருக்கின்றன. தேசிய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இதுபோன்ற சேர்க்கையை அனுமதிக்க முடியும். இது சாத்தியமும் இல்லை. இதுகுறித்து பேசுவதும் சரியும் கிடையாது என்று தெரிவித்தனர்.

கொரோனா, விசா பிரச்சனைகள் காரணமாக சீனாவில் மருத்துவக் கல்வி படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் இதேபோன்று ஒரு பிரச்சனையை எதிர்கொண்டனர்.

ஆனால், சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஆன்லைனில் டிகிரி முடிக்கலாம் என்பதால் பெரிதாக பிரச்சனை எழவில்லை என்கிறார் மற்றொரு உறுப்பினர்.


ஆன்லைனில் மருத்துவக் கல்வியை முடித்த மாணவர்கள் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள முடியாது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் குறித்து உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அது நல்லெண்ணத்தால் ஏற்பட்டது. மேலும் அது ஒரு உணர்ச்சிகரமான அறிக்கை என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/absorbing-ukraine-returnees-not-feasible-tn-medical-council-chief-424795/

சாதி மோதல்கள் சமூகப் பிரச்சனையே; ரவுடிகளை அடையாளப் படுத்த கூடாது – ஸ்டாலின்

 12 03 2022 

Stalin says communal dispute is a social issue: சாதி மோதல்களை சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள், அது சமூக ஒழுங்குப் பிரச்னை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் வன அலுவலர்கள் மாநாடு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதில் 3-ம் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்தி விடுவதாகவும் காவல் துறை இயக்குனர் சொன்னார். கட்டுப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். சாதி மோதல்களை சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள். அது சமூக ஒழுங்குப் பிரச்னை. இதுபோன்ற பிரச்சனைகளில் ஈடுபடும் இளைஞர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். ஆக்கப்பூர்வமான வழிகளில் விளையாட்டு போட்டிகள், ஊர்க்காவல் படைகள் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். கிராமங்களில் இந்த பிரச்சினை அதிகம் உருவாக்கி இருக்கிறது என்று போலீஸ் சூப்பிரண்டு இங்கே பேசும்போது சொன்னார். படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல, படித்து முடித்து விட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்கும் ஒரு சிலராலும் இது போன்ற மோதல்கள் உருவாகும் சூழ்நிலை உள்ளது என்று கூறினார்.

மேலும், சமூக வலைதளங்கள் மூலமாக நடக்கும் வன்மங்களுக்கு எந்தெந்த வகையில் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

பின்னர், சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டு பதிவிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அவர்களை சாதி, மதம், அரசியல் என அடையாளபடுத்தக்கூடாது. ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை செய்வதும் தவறானது. ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது. குடிசைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அமைச்சர் சொன்னார், இது போன்ற அடையாளப்படுத்தல்கள் கூடாது. மராட்டிய மாநிலம் போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும். 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். குற்றங்களே இல்லாத சமூகத்தை உருவாக்குவதோடு, திட்டமிட்டு உருவாக்கப்படும்  மத மோதல்களை தடுக்க வேண்டும். மத மோதல் தடுப்பு பிரிவுகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும். குற்றம் புரிவோருக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது. கைதிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தும் யோசனையை செயல்படுத்தலாம். குற்றம் அதிகம் நடப்பதாக நினைக்க வேண்டாம். இப்போது தான் புகார்கள் அதிகமாக வருகின்றன” என்று அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-says-communal-dispute-is-a-social-issue-424041/

யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள்’ ஐ.ஏ.எஸ்- ஐ.பி.எஸ் மாநாட்டில் ஸ்டாலின் கட்டளை

 10 3 2022 Tamilnadu CM Stalin Speech : யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள் என்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர், ஐபிஎஸ், வனத்துறை, அலுவலர்கள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தின் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளை உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,

நமது மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து, அவற்றை மேலும் மேம்படுத்துவதற்காக பல்வேறு ஆலோசனைகள இந்த பணியில் நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள், மற்றும் சவால்கள் குறித்து சுறுக்கமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள். 

சட்டம் ஒழுங்கு என்பது காவல்துறை பணி மட்டும் அல்ல மேலும், இது ஒரு துறையை மட்டும் பாதிக்கக்கூடிய விஷயம் மட்டும் அல்ல, நமது மாநிலத்தின் மக்களுடைய வாழ்க்கைத்தரம், பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையின் கல்வி, வேலைவாய்ப்பு, என நமது சமூதாயத்தின் ஒவ்வொரு பரினாமத்தையம் நிர்ணையிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த தருணத்தின் உங்களுக்கு மீண்மு் வலியுறுத்துகிறேன்

மாவட்ட ஆட்சித்தலைவர்களையும், காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களையும், நான் பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்கள் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தை மிகுந்த கவனத்தோடு தவறாமல் நடத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக சரிவர கூட்டத்தை நடத்த முடியவில்லை. எனவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும்

மேலும் வாரந்தோறும் சட்டம் ஒழுறங்கு பிரச்சினை குறித்து நுன்னறிவு பிரிவைச்சார்த்த தகவல்கள் குறித்து ஆலோசனையும் தவறாமல் நடத்த வேண்டும். நீங்கள் உங்கள் மாட்டத்தில் ஒரு டேஷ்போர்டு உருவாக்கிக்கொள்ள வேண்டும். மாதந்தோறும் நடத்தப்படும் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அடுத்து வரக்கூடிய கூட்டத்தில், ஆராய்ந்து முழுமையாக தீர்வு காண வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் குற்றங்களும் நிறைந்த பின்பு அவற்றை தீர்ப்பதற்கும் திறனாய்வு செய்வதற்கும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை விட அவை நிகழாமல் தடுப்பதற்கு உண்டான முயற்சிகள தான் மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும்.

எனவே நமது வெற்றி என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதோ குற்றங்களை கண்டுபிடிப்பதில் இருப்பதை விட அவை மக்களை பாதிக்காத வகையிலே தடுப்பதில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தவுடன், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல செயலாலும் தொடர்ந்து பலமுறை செய்து காட்டியிருக்கிறேன்.

வருங்காலத்திலும் இந்த நிலை தொடர வேண்டும். தொடர்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த ஆட்சியில் மதிப்பீடு என்பது சட்டம் ஒழுங்கினை பராமரிப்பதில் தான் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-speech-law-order-issue-in-ias-ips-officers-meeting-423302/

 ஸ்டாலின் எச்சரித்தும் அடங்காத ‘தலை’கள்!

 7 3 2022

thirumavalavan, vck, dmk, mk stalin, திருமாவளவன், விசிக, திமுக, முக ஸ்டாலின், நெல்லிக்குப்பம், Nellikuppam, cudalore district

DMK dissenters not resigning even though stalin warned to necessary action: திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினரை பதவி விலக எச்சரித்துள்ள நிலையிலும், வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக திமுக தலைமை, இந்த பதவிகளில் கூட்டணிகளுக்கான இடங்களை ஒதுக்கியும், தங்கள் கட்சி சார்பில் யார் இந்த பதவிகளுக்கு போட்டியிடுவார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டது. இதன்படி மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்கள் கிட்டதட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

இருப்பினும் ஒரு சில இடங்களில், கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளருக்கு எதிராக, சொந்த கட்சியை சேர்ந்தவர்களே போட்டி வேட்பாளராக களம் இறங்கினர். இது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

இதை விட திமுக தலைமைக்குச் சிக்கலாக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும், திமுகவைச் சேர்ந்தவர்கள், ஒரு சில இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சியினர், திமுக தலைவர் ஸ்டாலினிடம் முறையிட்டனர்.

கட்சி தலைமையின் கட்டுபாட்டை மீறி செயல்பட்ட கவுன்சிலர்கள் மீது கோபமடைந்த ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வெற்றி பெற்றவர்கள், உடனடியாக பதவி விலகி விட்டு, தன்னை வந்து சந்திக்கும்படி எச்சரிக்கை விடுத்திருந்தார்.


இருப்பினும், திமுக தலைவர் எச்சரிக்கை விடுத்து 3 நாட்கள் ஆகியும், வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர். இதனால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட திமுக மாவட்ட தலைமை, மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனாலும் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வென்றவர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்றும், இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், இதுவரை வெற்றி பெற்ற எந்த திமுகவினரும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் திமுக தலைமை இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, கூட்டணி கட்சிகள் என்ன செய்ய போகிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-dissenters-not-resigning-even-though-stalin-warned-to-necessary-action-421539/

உள்ளாட்சியில் சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை உறுதி: ஸ்டாலின் எச்சரிக்கை

 6 3 2022 

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சியில் சிறு தவறு நடந்தாலும், நடவடிக்கை எடுப்பது உறுதி என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்தக்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்

தமிழக உள்ளாட்சி தேர்தலில். இதுவரை கழகம் கண்டிராத சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். அந்த வெற்றியை பெற்ற பிறகு என்னுடைய முதல் சுற்றுப்பயணம் இது. உள்ளாட்சியிலே இன்று மேயர்களாக, துணை மேயர்களாக மாநகராட்சி உறுப்பினர்களாக, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக, பேரூராட்சியில் உறுப்பினர்களாக அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொறுப்பேற்றுள்ளவர்கள் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி நாடாளுமன்ற் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும் சரி, மக்களோடு மக்களாக பணியாற்று என்ற அண்ணாவின் சொல்லை உணர்ந்து, நாம் நம்முடைய கடமையை ஆற்ற உறுதி எடுத்தக்கொள்ள வேண்டும்.

1996-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று நான் மேயராக பதவியேற்றபோது, மக்கள் உனக்கு தந்தது பதவி அல்ல பொறுப்பு அதை உணர்ந்து பணியாற்று என்று கலைஞர் என்னிடம் சொன்னார். அதைத்தான் இன்றைக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறேன். உறுதியோடு சொல்கிறேன் எங்காவது சிறு தவறு நடந்தாலும் அதை நான் தொடர்ந்து கண்கானித்துக்கொண்டிருப்பேன். அதுமட்டுமல்லாமல் உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பேன் என்பதை உறுதியோடு சொல்லிக்கொள்கிறேன்.

மிரட்டுவதற்காகவே அல்லது அச்சுறுத்துவதற்காகவே அல்ல மக்கள் நம்மை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அந்த பொறுப்பை நாம் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நம்முடைய கூட்டணி கட்சிகளுக்க சில இடங்களை ஒதுக்கி அவர்களிடத்திலே ஒப்படைத்தோம். ஆனால் அங்கு ஒரு சில இடங்களில் தவறுகள் நடந்தது. அந்த தவறை செய்தவர்கள் உடனடியாக திருந்தி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை உறுதி. ஆகவே உள்ளாட்சியில் பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி உங்களது பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-speech-about-rural-and-urban-executives-in-tuticorin-421286/ 

21 மாநகராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயர்கள் 4 3 2022 

`

திமுகவினருக்கு உத்தரவு 4 3 2022



பெரியார் வேடமணிந்த குழந்தைக்கு பகிரங்க கொலை மிரட்டல்… பேஸ்புக் பதிவால் பரபரப்பு

 27 2 2022 

பிப்ரவரி 19 அன்று, பெரியார் வேடமணிந்த குழந்தை , தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியாரின் கருத்துகளை பகிர்ந்திருந்தது. குழந்தையில் பேச்சு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில், பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக் கொன்று விட வேண்டும் என்ற பேஸ்புக் பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “பெரியார் வேஷம் போட்ட இந்த குழந்தையை அடித்து கொன்று நாலு முக்கு ரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் அப்போது தான் மத்த குழந்தைகளுக்கும் அவர்கள் பெற்றோருக்கும் பயம் வரும். ஏன் வவுசி, தேவர் பாரதி நேதாதி போன்ற வேஷம் போட முடியாதோ” என பதிவிட்டிருந்தார்

இந்தப் பதிவு குறி்தது கயத்தாறு காவல் நிலையத்தில் திமுக நகர மாவட்டச் செயலர் சுரேஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநராகப் பணிபுரியும் 36 வயதான வெங்கடேஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.

புகாரளித்த கண்ணன் கூறுகையில், இந்தப் பதிவு கடுமையான சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவது மட்டுமின்றி குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார்.

இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், ” சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளம் அல்லது சுவோரட்டிகள் மூலம் கருத்துகளை பகிர முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

வெங்கடேஷ் குமார் மீது கொலை மிரட்டல், சாதி, மதம், இனம் தொடர்பான உணர்ச்சிகளைத் தூண்டுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அச்சமூட்டுதல், மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வெங்கடேஷ் பாபு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, பெரியார் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளை தலைமை செயலகத்திற்கு வரவழைத்த முதல்வர் ஸ்டாலின், அவர்களை நேரில் பாராட்டினார். மேலும், அவர்களுக்கு திருவள்ளுவரின் உருவச்சிலையையும் பரிசளித்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/kid-plays-periyar-role-on-tv-show-gets-death-threat-via-facebook-post-417529/

89 சதவீதம் ஆக்கிரமித்த திமுக கூட்டணி;

23 2 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக பெருநகர சென்னை மாநகராட்சியில் திமுக போட்டியிட்ட 165 வார்டுகளில் 153 வார்டுகளில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆளும் திமுக சுமார் 93% இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில், குறைந்தபட்சம் திமுகவைச் சேர்ந்த 7 வேட்பாளர்கள் 10,000 வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 200 வார்டுகளில் போட்டியிட்டாலும் 15 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) வெளியானபோது, 5 சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த ஐந்து சுயேச்சை வேட்பாளர்களும் ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக வேட்பாளர்களைத் தாண்டி வெற்றி பெற்று கவனிக்க வைத்துள்ளனர். மேலும், சென்னை மாநகாராட்சியில், பாஜகவும் டிடிவி தினகரனின் அமமுகவும் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று தங்கள் கணக்கை தொடங்கியுள்ளன.

சென்னை மாநகராட்சியில், திமுக மட்டுமல்ல அதன் கூட்டணி கட்சிகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. திமுக கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகளான மதிமுக 2 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சென்னை மாநாகராட்சி கவுன்சிலில் 89% இடங்களை பிடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள 15 பட்டியல் இனப் பெண் கவுன்சிலர்களில் ஒருவரைத்தான் திமுக மேயராகத் தேர்ந்தெடுக்கபோகிறது. திமுக சார்பில் வெற்றி பெற்ற பட்டியல் இனப் பெண் கவுன்சிலர்கள் 28 வயது முதல் 62 வயது வரை உள்ளனர்.

சென்னையில் புதியதாக வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களில் 98 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறக்கிய ஆட்டோ ஓட்டுநரின் 21 வயது மகள் பிரியதர்ஷினி மிகவும் இளம் வயது கவுன்சிலர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.

சென்னை மாநகராட்சிக் கவுன்சிலில் திமுக கூட்டணி 89 சதவீதம் இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க செம்ம ஹேப்பியாக உள்ளன.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சென்னையில் பெற்றிருக்கும் வெற்றி என்பது திமுகவுக்கு ஒரு வகையில் ஹாட்ரிக் வெற்றி ஆகும். திமுக சென்னையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளும் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 15 சட்டமன்றத் தொகுதிகளும் ஏற்கெனவே திமுகவின் கைவசம் உள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/how-dmk-hattrick-victory-in-greater-chennai-corporation-local-body-polls-result-415835/

தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி 

 22 2 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி வாகை சூடுகிறது என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி தவழ்ந்ததை பார்க்க முடிந்தது. திமுகவின் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், தலைவர்கள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி அனைவரும் திமுகவின் இந்த வெற்றி குறித்து மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துகளைத் தெரிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 22) வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடக்கத்தில் இருந்தே திமுக முன்னிலை வகித்து வந்தது. மாலை 4 மணிக்கு மேல் பெரும்பாலான இடங்களில் முடிவுகள் வெளியாகி திமுக அனைத்து மாநகராட்சிகளையும் நகராட்சிகளையும் கைப்பற்றியது என்ற செய்தி வெளியாகி வந்தது. இதையடுத்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அப்போது திமுக அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, எம்.பி.க்கள் ஆ. ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திமுக 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும், கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது. அதே போல, சேலத்தில், திமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்த மாவட்டங்களை திமுக வசமாக்க வேண்டும் என்று அப்போதே குறி வைக்கப்பட்டது.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சரைப் பொறுப்பாளராக நியமனம் செய்து அந்த மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜியும் சேலம் மாவட்டத்துக்கு திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவையும் தருமபுரி மாவட்டத்துகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும் பொறுப்பாளராக நியமித்தார்.

கே.என்.நேரு சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு தயார் செய்து முடுக்கி விட்டார். அதே போல, அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து 25 பேர் பங்கேற்ற கோவை மாவட்ட பூத் கமிட்டி பாக முகவர்கள் கலந்துகொண்ட மாநாடு போன்ற கூட்டத்தைக் கூட்டி திமுகவினருக்கு உற்சாகம் அளித்தார்.

இந்த சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 70 இடங்களை திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 இடங்களிலும், சிபிஐ, சிபிஎம் தலா 4 இடங்களிலும் மதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே போல, கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் திமுக 159 வார்டுகளிலும் பேரூராட்சிகளில் 386 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாநகராட்சியில் திமுக 47 வார்டுகளில் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சியை கைப்பற்றியது. சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் 96 வார்டுகளிலும் பேரூராட்சிகளில் 278 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றி அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்தது.

அதே போல, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் நகராட்சியில் உள்ள 33 இடங்களில் 20 இடங்களில் திமுக வெற்றி பெற்று போடிநாயக்கனூர் நகராட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றியும் திமுகவினருக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட கோவை, சேலம் மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிகவும் சந்தோஷப்படுத்தியது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றிவாகை சூடிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியாதவது: “இந்த தேர்தல் நேரத்திலே தமிழ்நாட்டு மக்களிடத்தில் ஒரேயொரு வேண்டுகோளை வைத்திருந்தேன். அது, எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை கொடுங்கள். அதனை பயன்படுத்தி உங்களுக்காக பணியாற்ற தொண்டாற்ற காத்திருக்கிறோம் எனக் கோரினேன்.

தற்போது அந்த முழு வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கக்கூடிய நற்சான்றுதான் இந்த வெற்றி. என்னை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கக் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் இது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள், அந்த நம்பிக்கையை இந்த 9 மாத காலத்தில் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் நிறைவோற்றுவோம் என உறுதியளிக்கிறேன்

மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற தயாராக இருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்றும் பதிவாகும் அளவுக்கான சாதனையை செய்துக் கொண்டிருக்கிறோம். செய்யப்போகிறோம்.

இது தமிழ்நாட்டு மக்களுக்கு 100 சதவிகிதம் கிடைக்க வேண்டுமென்றால் உள்ளாட்சி நிர்வாகத்திலும் 100 விழுக்காடு திமுக கூட்டணி இருக்கவேண்டும் என்றுதான் பிரச்சாரத்தின் போதும் எடுத்துரைத்தேன்.

இதற்காக ஸ்டாலின் பேராசை கொள்கிறார் என நினைத்துவிடாதீர்கள். இந்த தேர்தலில் உங்களது வாக்குகள் மூலமாக உங்களுக்கான உரிமையை நிலைநிறுத்தியிருக்கிறீர்கள்.

இந்த வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிதான் இங்கே நிற்க வைத்திருக்கிறது.

அந்த வகையில் பொறுப்புகளை உணர்ந்து நம்முடைய அரசின் சார்பில் நிறைவேற்றப்படும். இவ்வளவு சிறப்பான வெற்றிக்கு காரணமாக அமைந்திருப்பது திராவிட் முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான்.

இது தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. கொள்கை அடிப்படையில் வலிமையாக இருப்பதால்தான் இந்த வெற்றி கிட்டியிருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த கூட்டணி பல வெற்றிகளை கண்டிருக்கிறோம். அதன்படி கூட்டணி கட்சித் தலைவர்கள் அயராது பரப்புரை மேற்கொண்டு இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடு மூலம் சமூகத்தில் உள்ள சரிபாதி பெண்கள் உள்ளாட்சி பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இது மாபெரும் சமூக நீதி, திராவிட மாடல் புரட்சியாகும்.

பெண்களுக்கு அதிகளவு அதிகாரம் வழங்குவதுதான் நம்முடைய கழகத்தின் லட்சியம், குறிக்கோள். ஆகையால் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

என்னுடைய பணிவான உரிமைகலந்த வேண்டுகோள் என்னவென்றால், இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.

மக்களுக்காக உண்மையாக இருந்து உழைக்க வேண்டும். மக்கள் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும். உங்கள் மீது எந்த புகாரும் வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை நான் தொடர்ந்து நிச்சயமாக உறுதியாக கண்காணித்துக் கொண்டே இருப்பேன். யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுப்பேன். தயங்க மாட்டேன்.

மாபெரும் வெற்றியை தந்திருக்கக் கூடிய தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இதயப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

உண்மையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஒரு ஸ்வீப் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட, கோவை மாநகராட்சி மற்றும் அம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் பங்கு முக்கியமானது என்பதை திமுகவில் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். அதே போல, சேலம் மாநகராட்சியையும் அம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளையும் குறிபாக எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றியது அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. இந்த வெற்றியும் திமுகவுக்கு புது உற்சாகத்தை அளித்திருக்கிறது. திமுக மற்ற மாநகராட்சிகளையும் நகராட்சிகளையும் கைப்பற்றி இருந்தாலும், திமுகவில் ஸ்வீப் செய்த அமைச்சர்கள் என்று குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அது திமுகவில் பிரம்மாண்ட மாநாடுகளுக்கு பெயர் போன அமைச்சர் கே.என்.நேருவும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் என்றால் மிகையல்ல. இந்த வெற்றியால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-happy-for-dmk-wining-in-local-body-polls-who-are-sweep-victory-ministers-415334/

கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை

 

Tamilnadu News Update : சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், புற்றுநோய் துறையின் தலைவராக இருப்பவர் டாக்டர் சுப்பையா. பாஜக மாணவர் அமைப்பாக ஏவிபிவி-யின் தலைவராக இருந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் தன் வீட்டின் அருகில் ஒரு பெண்மணியுடன் இவருக்கு தகாராறு ஏற்பட்டுள்ளது.

இதில் அந்த பெண்மணியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவர் வீட்டின் முதன்பு சிறுநீர் கழிப்பது குப்பைகளை கொடுவது என வழக்கமான செய்து வந்துள்ளர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண்மனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர் மீது துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இவர், தனது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சையில் பள்ளி மாணவி ஒருவரின் மரணம் தற்போது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக தரப்பில் தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் பல்வேறு பகுதிகளில் போட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏவிபிவியை சேர்ந்த சுமார் 32 பேர் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுட்ட அனைவரையம் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவருககும் பிப்ரவரி 28 வரை சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்த நிதி திரிப்பாதி உட்பட 32 பேரில் 3 பேர் சிறார் என்பதால், அவர்கள் விடுவிக்கப்பட்டு மீதமுள்ள 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

.இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்த நிதி திரிப்பாதியை டாக்டர் சுப்பையா சிறையில் சென்று சந்தித்துள்ளார். இந்த செயல்அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் செயலாக உள்ளதாலும், ஏற்கனவே அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாலும், அவரை பணயிடை நீக்கம் செய்வதாக மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-kilpauk-medical-college-cancer-department-leader-dr-subbaiah-suspended-413211/

அவசரமாக வந்த அறிவாலய பிரதிநிதி

 17 2 2022 த. வளவன்

தமிழகத்தின் எல்லை மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். இம் மாவட்ட எல்லையில் இருந்து  கேரள மாநிலம் தொடங்குகிறது. தமிழகத்திலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டம். சிறிய மாவட்டம் என்றாலும் இங்கு மக்கள் நெருக்கமும் பணப் புழக்கமும் அதிகம். ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த குமரி  மாவட்டம்  தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட்டது ஒரு வரலாறு.

நாஞ்சில் நாடு என்றழைக்கப்படும் குமரி மாவட்டத்தின் தலைநகர் தான் நாகர்கோவில்.  நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த 2018ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி அந்தஸ்துக்காக நாகர்கோவிலை சுற்றியிருந்த சிறு கிராமங்களான கணியங்குளம், மேலசங்கரன்குழி, திருப்பதிசாரம், தேரேகால்புதூர் ஊராட்சிகள் நாகர்கோவிலுடன் இணைக்கப்படும் என அன்றைய அதிமுக அரசு அரசாணை வெளியிட்டும்  இன்று வரை அவை இணைக்கப்பட வில்லை.

ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிகள்  இணைக்கப்பட்ட நாகர்கோவில் மாநகரின் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 52. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை  2.5 லட்சம்.  மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக 37 வார்டுகளிலும் பாஜக 39 வார்டுகளிலும் காங்கிரஸ் 13 வார்டுகளிலும் மதிமுக 2 வார்டுகளிலும், அதிமுக 50 வார்டுகளிலும், தமாகா இரண்டு வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.

இதில் பாஜக தனியாகவும், திமுக காங்கிரஸ், மதிமுக கூட்டணியுடனும், அதிமுக தமாக கூட்டணியுடனும் போட்டியிடுகின்றன. மாநில அளவில் திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஎம் தொகுதிப்பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தனியாக 9 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. தேமுதிகவும் தனது பங்கிற்கு ஆங்காங்கே பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.

தமிழகத்திலேயே வித்தியாசமான கேரள சாயல் கொண்ட மாவட்டமான குமரி வாக்காளர்களின் மனநிலை சற்றே  வித்தியாசமானது. தமிழகத்திலேயே முதல் பாஜக எம்எல்ஏ-வை தேர்வு செய்த முதல் மாவட்டம் குமரி மாவட்டம். அதே மாதிரி தமிழகத்தின் முதல் பாஜக எம்பியும் குமரி மாவட்டத்திலிருந்தே தேர்வானார். பாஜக என்றில்லாமல் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கும் மாவட்டமும் இது தான். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, தமாக  என அனைத்து கட்சிகளுக்குமே குமரி மாவட்டத்தில் வாக்கு வங்கி உண்டு. இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சம அளவில் வசிக்கும் மாவட்டமும் இது தான். இப்படி ஒரு வித்தியாசமான மாவட்ட தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சிக்கு தான்  முதல் கன்னி மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கிறது.

கன்னி மேயர் கனவில் அனைத்து கட்சிகளுமே களத்தில் இருந்தாலும் முக்கிய  போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான். கடந்த நாகர்கோவில் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி சட்ட மன்ற உறுப்பினர்  ஆனவர் பாஜகவின்  மூத்த  அரசியல்வாதி எம்ஆர்காந்தி. எம்எல்ஏ பதவியை பறிகொடுத்தால் மேயர் பதவியை கைப்பற்றுவதை ஒரு மானப் பிரச்சனையாக கருதுகிறது திமுக.

குமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் ,மேற்கு மாவட்ட செயலாளரும்  தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ்  இருவருக்கும்  எப்போது உரசல்தான். இதனால் இரு தரப்பினருமே தத்தமது ஆதரவாளர்களை போட்டி வேட்பாளர்களாக  போட்டியிட செய்து உற்சாக படுத்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தயாராகி வருகிறது பாஜக. இதனால் பல வார்டுகளில்  அதிகாரபூர்வ திமுக வேட்பாளர்களுக்கும் சீட் கிடைக்காத திமுக போட்டி வேட்பாளர்களுக்கும் போட்டி நிலவுகிறது.

உதாரணமாக 46 வது வார்டில் சீட் கிடைக்காத திமுக வட்ட செயலர் மாகின்  இப்போது  பாஜகவினர் கொடுத்த உற்சாகத்தில் திமுக வேட்பாளரை எதிர்த்து களத்தில் கலக்க இதனால் சிதறும் திமுக வாக்குகளால் பாஜக வேட்பாளர் சுயம்பு உற்சாகத்தில் இருக்கிறார்.

இது போல 39ம் வார்டில் இரண்டு முறை  கவுன்சிலராக இருந்த ஜியாவுதீன் தனது மனைவி ஷபீனாவுக்கு சீட் கேட்டார். அனால்  மாவட்ட செயலர் சுரேஷ் புதுமுக வேட்பாளர் பாத்திமா ரிஸ்வான் என்பவருக்கு சீட் கொடுத்தது விட இங்கும் முட்டல் மோதல். இது பாஜக வேட்பாளருக்கு சாதகமாக அமையலாம். இவை தவிர 3,11,15  வார்டுகளிலும் போட்டி வேட்பாளர்கள் சிலம்பம் வீசுகின்றனர். இதனால் பல வார்டுகளிலும் திமுகவின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதை தெரிந்து கொண்ட திமுக தலைமை சத்தமில்லாமல் தலைமைக்கு மிகவும் நெருக்கமான திமுக தலைமை நிலைய செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான  பூச்சி முருகனை ரகசியமாக நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அவரும் ரகசியமாக  தனது வெளிப்படையான அணுகுமுறையால் போட்டி வேட்பாளர்களிடம் பேசி அவர்களை சமாதானம் செய்து திமுகவின் வெற்றி தான் நமக்கு முக்கியம். தயவு செய்து கோஷ்டி அரசியல் வேண்டாம் என பேச்சுவார்த்தை  நடத்தியிருப்பதாக தகவல். இதனால் உற்சாகத்துடன்  வேலையை தொடங்கி இருக்கின்றனர் திமுகவினர்.

வழக்கறிஞர் மகேஷ் மற்றும் மேரி ஜெனட்

மேயர் ரேசில் முக்கியமான நபர்  குமரி மேற்கு  மாவட்ட செயலாளர் மற்றும்  அமைச்சர் மனோதங்கராஜ் ஆதரவாளரான வழக்கறிஞர் மகேஷ். இவர் நாகர்கோவில் மாநகர செயலாளராக இருக்கிறார். கட்சி பலம், இவரது வழக்கறிஞர் பலம், கட்சிக்காரர்களின் நெருக்கம் தவிர பணபலமும் இவரை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றன. இவரது ஒரே மைனஸ் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தனது வேட்பாளராக மேரி ஜெனட் விஜிலாவை முன்னிறுத்துவது தான். இவரது கணவர் ஜெயசிங் தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர். மேலும் இதே விஜிலா கடந்த நகராட்சி தலைவர் நேரடி தேர்தலில் குறைந்த வாக்குகளில்  பாஜக வேட்பாளர் மீனா தேவியிடம் பதவியை இழந்தவர். திமுக அதிகப் படியான வார்டுகளை கைப்பற்றும் பட்சத்தில்  இவர்களில் ஒருவர் நாகர்கோவில் மேயராக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக களத்தில் முன்னிலை வகிப்பது பாஜக வேட்பாளர் முன்னாள் நாகர்கோவில் நகராட்சி தலைவர் மீனா தேவ். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் முன்னிறுத்தும் வேட்பாளரான  இவர் இரண்டு முறை பாஜக சார்பில் போட்டியிட்டு நகர்மன்ற தலைவராக அனுபவம் கொண்டவர்.

மீனாதேவ் மற்றும் முத்துராமன்

திராவிடக் கட்சிகளின் கோஷ்டி பூசலுக்கு சவால் விடும் வகையில் பாஜகவிலும்  இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தனது ஆதரவாளரான முத்துராமன் என்பவரை மேயராக்க விரும்புவதாக ஒரு தகவல் இருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் பாஜக பெரும்பான்மையான கட்சியாக உருவெடுத்தால்  மீனாதேவ் மேயராக அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஸ்ரீவிஜா மற்றும் மோஷிதையான்

அதிமுகவை பொறுத்தவரை மாநகராட்சியில் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு இல்லையென்றாலும் முன்னாள் எம் எல் ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீவிஜா , 18ஆவது வார்டில் தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கும் அதிமுக  வேட்பாளர் மோஷிதையான் , 8 வது  வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேகர், 32 வைத்து வார்டு ராதிகா, 25 வது வார்டு அக்சயா கண்ணன், 27 வது வார்டு கோபால் சுப்பிரமணியன் போன்றவர்கள் திமுக, பாஜகவுடன் மோதுகின்றன. இவர்களில் மோஷிதையான், ஸ்ரீஜா வெற்றி பெறும்  வாய்ப்பு இருக்கிறது. இதில் ஸ்ரீஜா அதிமுகவின் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப் படுவதாகவும் இவர் வெல்லும் பட்சத்தில் மறைமுதத் தேர்தலில் தனது மகள் ஸ்ரீஜாவை மேயராக்கினால் வாக்களிக்கும் கவுன்சிலருக்கு ரூ. 5 லட்சம் பணமும் 5 சென்ட் நிலமும் தருவதாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆசை காட்டி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல். இதை தெரிந்து கொண்ட பாஜக அதே வார்டில் நாஞ்சில் முருகேசனின் மருமகள் திவ்யாவை பாஜக வேட்பாளராக்கி பரபரப்பை அதிகப் படுத்தி இருக்கிறது.

நாகர்கோவில் மாநகர் 37 வது வார்டில் தமாக வேட்பாளர் டிஆர்  செல்வம் தனது தனிப்பட்ட செல்வாக்கால் திமுக, பாஜக வேட்பாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருவது தமாகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால் அதிமுகவினரும்  கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் இவருக்கு உற்சாகம் கொடுக்கின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சியின் கன்னி மேயராக திமுக, பாஜக இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் நெருக்கமாக துரத்துகின்றனர். இதில் மலரப் போவது தாமரையா, சூரியனா  என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-urban-local-body-elections-2022-kanyakumari-mayor-candidates-list-412813/

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி: காய் நகர்த்தும் முதல்வர் ஸ்டாலின்!

 17 2 2022 பல்வேறு பிரச்சினைகளில் மத்திய-மாநில உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டிருப்பது மத்திய அளவில் மற்றும் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத முதல்வர்களின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, புதிய அரசியல் கூட்டணி உருவாக க்கூடும்  என்று தெரிகிறது. இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் உரையாடியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதியை முன்னெடுத்துச் செல்ல திமுக ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது என்று ஸ்டாலினின் சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து, பாஜக  முதலமைச்சர்கள் அல்லாத பிற முதலமைச்சர்கள் பங்கேற்கும்  மாநாட்டை அவர் முன் மொழிந்துள்ளார்.

இதே போல, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் பானர்ஜி ஆகியோருடன் விவாதிப்பதாகக் கூறினார்.

ராவ் சமீப காலமாக பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை அதிகரித்து, காங்கிரஸுடன் நட்பு ரீதியாக நெருக்கமாக மாறி வருகிறார். தெளிவாக, மாநில முதலமைச்சர்களின் இந்த நகர்வானது, 2024 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பொதுவான பாஜக-எதிர்ப்பு கூட்டணியை நோக்கிச் செல்லும் என்று தெரிகிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

புலனாய்வு அமைப்புகளின் பங்கு முதல் ஜிஎஸ்டி, ஐஏஎஸ் கேடர் விதிகள் மற்றும் மிக சமீபகாலமாக மாநிலங்கள் ரேஷன் கடைகள் உள்ளிட்ட (PDS) தரவைப் பகிர்வது போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மத்திய-மாநில உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டிருப்பது புதிய கூட்டணியை  உருவாக்குவதற்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களின் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உரிமைகளின் மீது, மத்திய அரசு உத்தரவின் பேரில் பேரில் அத்துமீறுவதாக இந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

குடியரசின் ஒற்றையாட்சிப் பார்வையாலும், மக்களவையில் பெரும்பான்மை பலத்தாலும் உந்தப்பட்ட பாஜக, தேர்தலில் தனது தடத்தை விரிவுபடுத்துவது மற்றும் ஆட்சியில் தனது கருத்தைக் கொண்டிருப்பது போன்ற தனது லட்சியங்களை வெளிப்படுத்தி வருகிறது.

கே.சி.ஆர் போன்ற தலைவர்கள், இந்திய அரசியலில் இப்போது பிஜேபி தனக்கு சாதகமான  நிலையை அடைந்திருப்பதை உணர்ந்திருக்கின்றனர்.  அது தங்கள் மாநிலங்களின் கோட்டைகளில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக தன்னை வெளிப்படுத்தும்  என்று எதிர்பார்க்கிறார்கள்.

சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஜார்க்கண்டில் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளும் இதே வழியில் சிந்தித்து, மாநில கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்புகள் உள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

ஐந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் போது, நிச்சயமாக மாநில கட்சிகளின் கூட்டணியின் தோற்றம் தெளிவாகத் தெரியவரும்.  இந்த  கூட்டணியில் காங்கிரஸுக்கு பங்கு இருக்கிறதா என்பது ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தே இருக்கின்றன.

மாறாக, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு  வெற்றி கிடைத்தால், அது எதிர்க்கட்சித் தலைவர்களின் லட்சியத்தை சிதைப்பதாக இருக்கும்.  எவ்வாறாயினும், பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைவதற்கான எதிர்க்கட்சி கூட்டணி  முயற்சியை ஒன்றிணைப்பதற்கான ஒரு பசை தேவைப்படும்.


கடந்த காலங்களில் இதேபோன்று முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ஏனெனில் அப்படி முயற்சிகளை மேற்கொண்ட கட்சிகள் பிஜேபிக்கு தாங்கள்தான் சரியான மாற்று என்பதற்கான ஒரு அழுத்தமான பார்வையையோ அல்லது வலுவான கொள்கையையோ வழங்க முடியவில்லை. வெறுமனே பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு மட்டுமே ஒன்றிணைவை உருவாக்காது. .

இந்த தலையங்கம் முதலில் பிப்ரவரி 15, 2022 அன்று அச்சுப் பதிப்பில் ‘The federal push’என்ற தலைப்பில் வெளியானது..

தமிழில்; ரமணி

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-stalin-attempts-to-form-alliance-at-national-leval412573/


இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

 16  2 2022 

இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவர் மக்களிடம் காணொளி வாயிலாக பேசினார். அந்தக் காணொளியை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆனது. நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை இந்த 8 மாத காலத்தில் செய்து முடித்திருக்கிறோம்.

நமது ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் சிந்தனை. அப்படியென்றால் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி. புரியும்படி கூற வேண்டுமென்றால் வாய்ப்புகளும், வளங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சரிசமமாக சென்று சேர வேண்டும்.

இதில், ஜாத, மத, பாலின வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது ஆகும்.  அதுதான் உண்மையான உண்மையான வளர்ச்சி. அதுதான் திராவிட சிந்தனை.

நாங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் இதை அடிப்படையாக வைத்துதான் கொண்டு வருகிறோம். பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.

பெண்களுக்கு வாய்ப்புகளையும், உரிமைகளையும் அளிக்க அவர்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை கொண்டுவந்தோம்.

தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை என்று அரசாணை வெளியிட்டதால் தமிழக இளைஞர்கள் பலன் பெறுவார்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம் சமூக நீதி என்றால் தமிழ்நாடு தான் என்று இந்தியாவுக்கு காண்பித்தோம்.

பட்டியலின பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு சிறப்புத் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என மக்கள் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தின் அணுகுமுறையில் முழு மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம்.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலம்காலமாக சொல்லப்பட்டுவந்த பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம்.

இந்த திமுக ஆட்சியில்தான் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,789 கோடி மதிப்பிலான 180 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம்.

தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கோயில் சீரமைப்பு நிதி ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க ஆரம்பித்துள்ளோம். ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்து வருபவர்களுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் ரத்த அழுத்தம் அதிகமாகதான் செய்யும். என்ன செய்தாலும் தமிழக மக்களின் ஒற்றுமையை எதுவுமே செய்ய முடியவில்லை என்ற வெறுப்பு அவர்களுக்கு ஏற்படச் செய்யும்.

DMK's 8 candidates win unopposed in Negamam town panchayat, Pollachi, Coimbatore, DMK, DMK candidates unopposed win, Local body polls, ஆடாமலேயே ஜெயித்த திமுக, பெரிய நெகமம் பேரூராட்சியில் 8 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு, கோவை, பொள்ளாச்சி, திமுக, பெரிய நெகமம் பேரூராட்சி, tamilnadu, dmk, aiadmk

சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் நமது முயற்சியில் பலவித சவால்களை ஒன்றிய அரசு முன்வைக்கிறது. அதற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால் இந்த  சிக்கலான கொரோனா சமயத்தில் கூட நமக்கு அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,725 கோடியைத்  தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நமக்கு வர வேண்டிய கொரோனா நிவாரண நிதியான ரூ.8,989 கோடியும் நமக்கு தரப்படவில்லை.

இந்த வருடம் மத்திய பட்ஜெட்டை எடுத்துக் கொண்டால் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித சலுகைகளும் உதவிகளும் இல்லை.

மேலும் இந்த பட்ஜெட்டில் முக்கியமான முன்னெடுப்பாக வைரத்துக்கு வரியை குறைத்திருக்கிறார்கள். இதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை குறைத்து அந்த திட்டத்தை கேள்விக் குறியாக்கி விட்டார்கள். இந்த ஆதிக்க அணுகுமுறையின் நீட்சிதான் நீட் தேர்வு.

நிறைய செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்கு செல்பவர்களுக்குத்தான் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. இதனால், வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இது மிகப்பெரிய சமூக அநீதி. இதை எதிர்த்து தான் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றினோம்.

அந்த சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதை நமக்கே திருப்பி அனுப்புகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்தை தடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை தானே?

ஆனால், முந்தைய ஆட்சி போல் இந்த அநீதிகளுக்கு நாம் துணை போக மாட்டோம். நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

ஒவ்வொரு சவாலையும் போராடி வெல்வோம். நாம் ஒன்றாக இருக்கிறோம். இனியும் ஒன்றாக இருப்போம் என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபிப்போம்.

 மாநில உரிமைகளுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உள்ளாட்சியிலும் நமது திமுக ஆட்சி தொடரட்டும். உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்களிக்குமாறு உங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  என்றென்றும் உங்களுடன் நான் என்று முதல்வர் ஸ்டாலின் அந்தக் காணொளியில் பேசியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/vote-for-dmk-and-its-alliance-cm-stalin-urges-tamilnadu-people411994/

10, 12ம் வகுப்புகள் வினாத்தாள் வெளியீடு..பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

 15 2 2022 தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ளது.

இதில், சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது தொடர்பாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில், திருவண்ணமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசியில் உள்ள ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறிப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தேர்வுகள் தொடர்பாக தேர்வுத்துறை அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/10th-12th-question-paper-issue-school-education-department-action.html


ஒரே நாடு ஒரு பதிவு திட்டத்திற்கு எதிர்ப்பு : முதல்வர் ஸ்டாலின் கூறுவது என்ன?

 13 2 2022  மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, தேசத்தின் மீது தனது சிந்தாந்தத்தை திணிப்பதன் மூலம் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “ஒரே நாடு-ஒரே பதிவு” என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இந்த முயற்சிக்கு எதிர்கட்சிகள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை மற்றும் “ஒரே நாடு-ஒரே பதிவு” போன்ற முழக்கங்கள் மற்றும் மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புறஉள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் என பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தி் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தமிழகத்தில் ஆளும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகயைில், திருப்பூரில் நடந்த மெய்நிகர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாட்சி என்ற இந்த முழக்கத்தை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்வேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே பதிவு மற்றும் புதிய கல்வி கொள்ளை உள்ளிட்ட பல முயற்சிகள் “நாட்டை ஒரு ஒற்றையாட்சி நாடாக மாற்றும் முயற்சியாக உள்ளது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் இந்தியா மலர வேண்டும் என்றால் மாநில சுயாட்சி வேண்டும். அதையேதான் நாங்கள்  வலியுறுத்துகிறோம். “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற திமுகவின் சித்தாந்ததை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், “சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சி ஆகியவை திராவிட இயக்கம் இந்த நாட்டிற்கு வழங்கிய மகத்தான சித்தாந்தங்கள். நாடு முழுவதும் சமூக நீதி மலர வேண்டும் என்பதை உறுதி செய்யும் பணியில் நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் பல மாநில அமைப்புகள் இந்த முயற்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 5 மாநில தேர்தல் முடிந்ததும் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும், தேசத்தின் கூட்டாட்சி உணர்வின்படி மத்திய அரசு செயல்பட்டு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் ஆனால் பாஜக தலைமையிலான அரசு மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்கும் சூழலை உருவாக்கி வருவதால், கூட்டாட்சி இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது,” குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் பல மக்கள் விரோதக் கொள்கைகளின் மூலம் இது தெளிவாகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-say-about-opposes-one-nation-one-registration-in-tamil-410760/

வரலாற்றில் இடம்பெரும் இன்றைய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்.

 8 2 2022 

இன்று ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.

காலை 10 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 2021 தமிழ்நாடு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன் வடிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், 2021-தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவை நிறைவேற்ற கோரவுள்ளார். பிறகு காலை 10 மணிக்கு கூடும் சிறப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன் வடிவு நிறைவேற்றப்படவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஒரு சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக கூடும் சட்டமன்ற கூட்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வருடங்களாக கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற அரங்கில் நடைபெறும் முதல் கூட்டம் சிறப்பு கூட்டமாக நடைபெறுகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் எதிர்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அறை புதுப்பிக்கப்பட்டு அதிமுகவிற்காக தயாராகியுள்ளது. சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட அறையே புதுப்பிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/todays-special-legislature-session-that-will-go-down-in-history.html


சட்டமன்றத்தில் மீண்டும் நீட் மசோதா; விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

 3 2 2022  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டிய சட்டமன்றத்தில தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அதனை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். ஆனால் இந்த தேர்வில் தோல்வி பயம்,தோல்வி மற்றும் இதர பிற காரணங்களுக்காக மாணவர்கள தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை அரங்கேறியுள்ளது.

இந்த நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தமிழக சட்டசபையில், கடந்த செப்ம்பர் மாதம் 12-ந் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த மசோதா குறித்து ஆளுனர் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இன்று திடீரென தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படுவதாக ஆளுனர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுனர் மாளிகையின் இந்த திடீர் அறிவிப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர் பலரும் ஆளுனர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில், தமிழக சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா கொண்டுவரப்படும் என்றும், இது தொடர்பாக வரும் 5-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில் நடைபெறும். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

இந்தச் சட்டமுன்வடிவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இருப்பினும், இந்தச் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 1-2-2022 அன்று மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும். இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட இந்த அரசு முடிவு செய்துள்ளது

என்று குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-statement-for-arange-all-party-meet-against-neet-406351/

சமூகநீதிக் கூட்டமைப்பு: அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு

2 2 2022  கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்ற அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனையடுத்து, இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 37 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களை அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் , திரினாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் சமூகநீதியில் பல ஆண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்கு பிற்போக்கு சக்திகள் சவால் விடுகின்றன எனவும், சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இணைந்தால்தான் எதிர்த்து போரிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டால்தான் முடியும் எனக்குறிப்பிட்டுள்ள அவர், குறிக்கோள்களை அடைய மாநிலங்களால் ஆன ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரமிது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதி செய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோர்க்க வேண்டியது இன்றியமையாதது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல, அடையாளத்தை மீண்டும் நிலை நிறுத்துவது பற்றியாகும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக தக்க நபர்களை நியமிக்குமாறு கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

source https://news7tamil.live/social-justice-alliance-chief-minister-calls-on-37-parties-including-aiadmk-and-bjp.html

சமூக நீதி தளத்தில்… பிரதமர் ரேஸில் ஸ்டாலின்

 1 2 2022 Now, Stalin as ‘PM material’, riding ‘social justice’ pitch: ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அனைத்து மாநிலங்களில் இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள்” பிரதிநிதித்துவத்துடன் ‘சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு’ தொடங்க உள்ளதாக அறிவித்தார். சமூக நீதியைத் தேடுவதோடு, கூட்டாட்சியை அடைவதும் கூட்டமைப்பின் குறிக்கோளாக இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு, சமூகப் புரட்சிக் கூட்டணி, பூலே-அம்பேத்காரி கவுரவ்ஷாலி அவுர் ஆதர்ஷவாதி முஹிம், மற்றும் பிஎஸ்பி நிறுவனர் கன்ஷி ராமுடன் தொடர்புடைய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு (அல்லது BAMCEF) போன்ற அமைப்புகளின் கீழ் தேசிய வலைதளத்தில் ஸ்டாலின் உரையாற்றினார்.

“அனைவருக்கும் அனைத்தும் என்பதே இந்தக் கூட்டமைப்புக்கு அடிப்படையாக இருக்கும். அடிக்கடி சந்தித்து சமூக நீதியை நிலைநாட்டுவோம்” என்று கூறிய ஸ்டாலின், திராவிட இயக்கம் தேசத்திற்கு அளித்த மிகப்பெரிய பரிசு சமூக நீதி என்றும் கூறினார்.

கூட்டமைப்பின் அறப்போராட்ட நோக்கங்கள் ஒருபுறமிருக்க, இச்சந்திப்பின் தெளிவான செய்திகளில் ஒன்று, அத்தகைய முன்னணியை வழிநடத்தும் இயல்பான கட்சி திமுகதான் என்பதுதான். காங்கிரஸால் காலியான தேசிய அரங்கில் இடத்தை நிரப்ப மாநிலங்கள் முழுவதும் உள்ள பிராந்திய தலைவர்கள் போட்டியிடும் நிலையில், ஸ்டாலினும் போட்டியில் களம் இறங்குகிறார். திமுக தலைவர் ஒருவர் ஸ்டாலினை “ஒரு தவிர்க்க முடியாத தலைவர்” என்றும் “பிரதமருக்கான தகுதியுடையவர்” என்றும் கூறினார்.

கூட்டத்தில், மாநில இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான போராட்டம் குறித்து ஸ்டாலின் பேசியதாவது: இதற்கு திமுக மகத்தான பங்களிப்பை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறேன். 2020 மே மாதம் உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது, 2021 ஜூலையில்தான் பாஜக அரசு இதை ஏற்றுக்கொண்டது.

திராவிடப் பேரறிஞர் பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் பங்களிப்புகளை மேற்கோள் காட்டி, திமுக அரசுகளின் இத்தகைய “மக்கள் நல” நடவடிக்கைகளை ஸ்டாலின் பட்டியலிட்டார்.

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக சார்பில் ஆஜரான ராஜ்யசபா எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி வில்சன், “அனைவருக்கும் அனைத்தும் என்கிற திராவிட சித்தாந்தம்” இந்தியா முழுவதும் சென்றடைய வேண்டும் என்றார்.

“சமூக நீதிக்கான அனைத்து இயக்கங்களுக்கும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது… நமது தளபதி (ஸ்டாலின்) அவரது தந்தை மற்றும் பிற திராவிடத் தலைவர்களைப் போலவே இருக்கிறார் … இன்று, வடகிழக்கு மாணவர்கள் கூட நமது OBC ஒதுக்கீட்டு போராட்டத்தின் பலனைப் பெறப் போகிறார்…. நமது முதலமைச்சரின் போராட்டத்தல் ஒட்டுமொத்த நாடும் பயனடையும். ஸ்டாலின் தவிர்க்க முடியாத தலைவராகிவிட்டார். அவர் பிரதமருக்கான தகுதியுடையவர் என்று நான் கூறுவேன்,” என்றார்.

திமுக அதன் சமூக நீதி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மற்ற மாநிலங்களுக்குச் செல்ல நினைக்கிறதா என்று கேட்டதற்கு, வில்சன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “எதுவும் சாத்தியம். நமக்கு (எச்.டி) தேவகவுடா பிரதமராக இருந்துள்ளார், அதனால் ஏன் முடியாது? என்று கூறினார்.

ஸ்டாலினின் ஆடுகளம் பாஜகவின் ஆக்ரோஷமான தேசியவாதத்தின் பின்னணியில் வருகிறது, பாஜக கட்சி அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. பிராந்திய பெருமை மற்றும் மற்ற உணர்வுகள் மேலெழும்பிய மாநிலம் இதுவரை பாஜகவின் கவர்ச்சியை எதிர்க்கிறது.

காங்கிரஸ் தலைவரும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவருமான எஸ் பீட்டர் அல்போன்ஸ், நாட்டின் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்க ஸ்டாலின் போன்ற தலைவர்கள் முன்னெப்போதையும் விட தேவை என்று கூறினார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

“பாஜக இந்திய அரசியல் தளத்தில் மதப் பிரச்சினைகளால் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. சில தலைவர்கள் இந்த போக்கை எதிர்த்துப் போராட முடியும், ஸ்டாலின் அவ்வாறு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அல்போன்ஸ் கூறினார், பாஜகவை எதிர்கொள்வதன் மூலம் இந்து வாக்குகளை அந்நியப்படுத்தும் “ஆபத்தில் திமுக தலைவர்” இருக்கிறார் என்று கூறினார். “சமூகப் பிரச்சனைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவ்வாறு செயல்படும் முதல்வர்கள் மிகக் குறைவு.” என்றும் அவர் கூறினார்.

ஸ்டாலினின் செய்தியில் ஆர்வமுள்ளவர்களில் உத்தரபிரதேசத்தில் உள்ள இளைஞர்களும் இருப்பதாக அல்போன்ஸ் கூறினார், மேலும் அவரது கருத்துகளை சமூக ஊடகங்களில் அந்த இளைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர். “ஸ்டாலின் வட இந்தியாவில் இருந்து இளைஞர்களின் கற்பனையை கவர்ந்துள்ளார்.” என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்த ஸ்டாலின், இனி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவர் என்று அறிவித்து, 2007-08 முதல் நிலுவையில் உள்ள அனைத்து சாதியினரின் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களின் 208 நியமனங்களின் ஒரு பகுதியாக ஒரு பெண் ஓதுவாருக்கு (தெய்வத்தின் முன் துதி பாடுபவர்) பணி நியமனக் கடிதத்தை நேரில் வழங்கினார். (கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம், அதிமுக ஆட்சியில் இது முற்றிலும் நிறுத்தப்பட்டது.)

பாஜக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ‘ஓபிசி இனத்தைச் சேர்ந்த மோடி பிரதமராக வந்ததன் மூலம் சமூக நீதிக்கு முன்னுதாரணமாக பாஜக திகழ்கிறது. “சமூக நீதி இயக்கத்தை திமுக கொண்டாட வேண்டுமானால், திமுக பிரதமர் மோடியைக் கொண்டாட வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது, ​​பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு என்ன செய்தார்கள்? என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/now-stalin-as-pm-material-riding-social-justice-pitch-405162/

ஒலித்த ‘திராவிட நாடு வாழ்க’ பாடல் 

 மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்த ஆர் என் ரவி, காரிலிருந்து இறங்கும் போது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினரும், பள்ளி மாணவிகளும் பாடினர்.

அதே சமயம், முதல்வர் ஸ்டாலின் அங்கு வருகையில் `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்க’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.

இதனை சுட்டிக்காட்டி, ஆளுநர் வருகையின் போது திராவிட நாட்டு பாடல் பாடப்பட்டது ஏன் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இந்த காணொலியை சமூக வலைதளத்தில் ஷேர் செய்யும் இணையவாசிகள், தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 31 1 2022

source https://tamil.indianexpress.com/tamilnadu/dravidian-song-sing-at-the-time-of-governor-entry-gets-controversial-404214/

கிரிமினல் வழக்கு இருந்தால் கவுன்சிலர் சீட் இல்லை: ஸ்டாலின் கறார் உத்தரவு

 31 1 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட எந்தக் கட்சியினருக்கும், கிரிமினல் குற்றச்சாட்டு பின்னனி உள்ள பெண்கள் உள்ளிட்ட கட்சியினர் யாருக்கும் சீட்டு வழங்கப்பட மாட்டாது என்றும், அதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 30) கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய ஒரு திறந்த கடிதத்தில், கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் கழகத்தினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும் என்பதும் வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்பதும் உங்களில் ஒருவனான என் வேண்டுகோளாகும்.

கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தி.மு.க போட்டியிட உள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு என்பது, ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும். சுயநலம் தவிர்த்து, பொதுநலச் சிந்தனையும் கொள்கைப் பற்றும் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தன்னை முழுமையாகவும் முழுநேரமும் அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு வேட்பாளர் தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வரையில் அவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்திடல் நிச்சயமாகக் கூடாது என்பதை திமுக நிர்வாகிகள் தவறாமல் மனதில் கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

மேலும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியதாக கூறிய ஸ்டாலின், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, இடங்களைப் பகிர்வது, வாக்கு கேட்பது போன்றவற்றை ஒருங்கிணைத்து, வெற்றியை ஒரே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். திமுக அரசின் அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கும் கூட்டணி தலைவர்கள் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். “நமது கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணியாக இருக்கக் கூடாது; அது மதச்சார்பற்ற கூட்டணியாக இருக்க வேண்டும், இது கொள்கை மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்க வேண்டும்,” என்று முதல்வர் கூறினார்.

“உள்ளாட்சி நிர்வாகம்தான் நல்ல ஜனநாயகத்தின் அடிப்படை. அவைதான் அரசின் திட்டங்கள் இறுதிவரை மக்களை சென்றடைய வழி வகுக்கும். மக்கள் தங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை எப்போதும் உறுதி செய்யும் இயக்கம் திமுக. எனவே, மாநிலம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடவும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும் தொண்டர்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “பாஜகவின் சீரழிவு அரசியலை” அம்பலப்படுத்துமாறும், “மத வெறுப்பை விதைக்கும்” அதன் முயற்சிகளை தமிழ் நாட்டில் நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். மேலும், “மக்கள் நலனுக்கு எதிரான இரு கட்சிகளையும் அம்பலப்படுத்துங்கள், மேலும் மதச்சார்பற்ற சக்தியை மாநிலத்தில் காலூன்ற அனுமதிக்காது என்று அவர்களிடம் சொல்லுங்கள்,” என்றும் ஸ்டாலின் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-assures-no-seat-for-cadres-with-criminal-cases-404238/

மாநகராட்சி பொறியாளர் மீது தாக்குதல்… தி.மு.க எம்எல்ஏ மீது அதிரடி நடவடிக்கை பின்னணி

 DMK Tamil News: Tiruvotriyur MLA KP Shankar Relieved From Party Post

Tiruvotriyur DMK MLA KP Shankar Tamil News: திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருபவர் கே.பி.சங்கர். இவருடைய சகோதரர் கே.பி.பி. சாமி, திமுகவின் மீனவர் அணி செயலாளராகவும், 2006-2011-ல் தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றிவர். கடந்த 2020ம் ஆண்டு கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், 2021ம் ஆண்டு நடத்த சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் கே.பி.சங்கர் களமிறங்கினார்.

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சீமானை எதிர்த்து போட்டியிட்ட கே.பி.சங்கர், கடும் போட்டிகளுக்கு இடையே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சீமானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தற்போது, திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளராகவும் கே.பி.சங்கர் பணியாற்றி வருகிறார். இவர், சமீபத்தில், சென்னை திருவொற்றியூரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டட விபத்தின்போது, அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தருவதாகவும், அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை தானே வாங்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

மாநகராட்சி பொறியாளரை தாக்கிய கே.பி.சங்கர்

இதற்கிடையில், கே.பி.சங்கர், சென்னை மாநகராட்சியின் உதவிப் பொறியாளரை அடித்ததோடு, திருவொற்றியூர் நடராஜன் கார்டன் பகுதியில் நடைபெற்று வந்த சாலைப் பணியையும் நிறுத்தியுள்ளார்.

திருவொற்றியூர் மண்டலத்தில் பல சாலைகள் அமைக்க ₹3 கோடி மதிப்பிலான டெண்டரை சாலை இணைப்பு உள்கட்டமைப்பு என்ற ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. இதன்படி, நேற்று முன்தினம், புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நடராஜன் கார்டன் முதல் தெரு, இரண்டாவது தெரு மற்றும் மூன்றாவது தெரு ஆகிய இடங்களில் ₹30 லட்சம் செலவில் சாலை போடப்பட்டது.

அப்போது, நான்கு பேருடன் அந்த இடத்திற்கு வந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி. சங்கர், சாலை போடப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார் என சாலைப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “சென்னை பெருநகர மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் பிரச்சினையைத் தீர்க்கத் தலையிட்டபோது, ​​அவரை எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தாக்கினர். பொறியாளரின் உதவியாளரும் தாக்கப்பட்டார். அந்த இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 13 லாரி ரோடு கலவை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டது.

இதனால் பயந்து, மன உளைச்சலுக்கு ஆளான மாநகராட்சி உதவிப் பொறியாளர் வியாழக்கிழமை விடுமுறையில் சென்றார். நான் அந்த இடத்தில் இருந்தேன். ஒப்பந்ததாரரிடம் பணி செய்யக் கூடாது என தெரிவித்தும், பணி நடப்பதால் எம்.எல்.ஏ., கோபமடைந்தார். அவர் அந்த இடத்தை அடைந்தவுடன், அவரும் அவரது ஆட்களும் எங்கள் அனைவரையும் அடித்தனர். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். பின்னர் எம்எல்ஏ என்னை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் பணியை அனுமதிக்க ஒப்புக்கொண்டார்,” என்று கூறியுள்ளார்.

தவிர, கே.பி. சங்கர் தொடர்ந்து ரவுடிசம், மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், இவரது செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் மேல் எழுந்துள்ள புகார்கள் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கே.பி. சங்கர் திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-tamil-news-tiruvotriyur-mla-kp-shankar-relieved-from-party-post-403218/

சென்னை, கோவையில் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியங்கள் விற்பனை.. தமிழக அரசு உத்தரவு!

 28 1 2022 வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, சென்னை மற்றும் கோவையில் உள்ள கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராகி, கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள்’ நுகர்வோருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

சிறுதானியங்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மற்றும் விலை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறைகளை வகுக்க, மாநில அளவிலான குழுவை மாநில அரசு அமைத்தது.

இந்தக் குழுவின் தலைவராக கூட்டுறவு சங்கப் பதிவாளர் இருப்பார் என ஜனவரி 25ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு / டிஎன்ஸ்டிசி-இன் தேவையின் அடிப்படையில் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு (FPO) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-orders-to-sale-millets-through-ration-shops-in-chennai-and-coimbatore-403124/

அனைத்திந்திய சமூக நீதி சம்மேளனம் உருவாக்குவோம் – மு.க ஸ்டாலின்

 27 1 2022 சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சமூக நீதிக்கான அனைத்திந்திய சம்மேளனம் தொடங்கவிருப்பதாக தெரிவித்தார்.

அவர் பேசியதாவது, “புதிதாக தொடங்கவிருக்கும் கூட்டமைப்பு அனைத்து மாநிலங்களுக்கும் சமூக நீதி தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க உடனடி ஆலோசனைகளை வழங்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சதவீதம் வேறுபடலாம். இருப்பினும், சமூக நீதியின் சித்தாந்தம் ஒன்றுதான்

அனைவருக்கும் எல்லாமே இந்த கொள்கை அடிப்படையில் கூட்டமைப்பு செயல்படும். இது கூட்டாட்சி கொள்கைகளை அடைய பாடுபடும் கூட்டமைப்பாக இருக்கும். கருத்தரங்களில் பங்கேற்றவர்கள் அவ்வப்போது சந்தித்து, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

திராவிட இயக்கத்தின் முதன்மை நோக்கம் சமூக நீதி மற்றும் பெண்ணுரிமை தான். அவற்றை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை தொடங்க விருக்கிறோம்.

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ததற்காக மாநாட்டில் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இது குறித்து பேசிய அவர், இந்த இடஒதுக்கீட்டை வழங்கியது பாஜக என்று சில பிரிவினர் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு உண்மை தெரியவில்லை.

திமுக உச்ச நீதிமன்றத்தில் 2020 மே மாதம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், பாஜக அரசு 2021 ஜூலையில்தான் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொண்டது. . இந்த உண்மையை அவர்களால் மறைக்க முடியாது என கூறி ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்கு திமுக அரசின் பணிகளை விவரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமூகநீதியை அடையும் திமுகவின் பணி இந்த ஒரு வழக்கோடு முடியபோவதில்லை. சமூக நீதி என்பது சமூக சமத்துவம் ஆகும். அது கல்வியில் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். “எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று உலகப் பொருளாதார மேதை அமர்த்தியா சென் சொல்லியிருக்கிறார். அத்தகைய நீதியை உருவாக்கவே திராவிட இயக்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.

இந்த மாநாட்டை அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் குழு ஏற்பாடு செய்தது. இதில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, ஏஐபிஎப் அமைப்பின் தலைவர் ஈஸ்வரய்யா, மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஷகன் புஜ்பால், ஆந்திர மாநில அமைச்சர் ஆதிமுலப்பு சுரேஷ், பிகார் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., முகம்மது பஷீா், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட பலரும் பேசினர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-m-k-stalin-to-launch-national-forum-for-social-justice-402726/

விவசாயிகளை மீண்டும் பீதியடைய செய்யும் 8 வழிச் சாலை திட்டம்; மாநில அரசின் நிலைப்பாடு என்ன?

 24 1 2022 தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வர பல்வேறு வழிகள் இருப்பினும் தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதியில் வசிக்கும் மக்களின் தேர்வாக எப்போதும் இருந்து வருகிறது சேலம். சேலத்தில் இருந்து சென்னை வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமானது மிகவும் அதிகமாக இருப்பதால் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 8 வழிச்சாலை (அ) பசுமை வழிச்சாலை என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடத்தினார்கள். இருப்பினும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்தப்பட்ட உழவர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 8 வழிச்சாலை தொடர்பான தங்களின் ஐயத்தை வெளிப்படுத்திய உழவர்கள் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரி மனு அளித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் வ.முகுந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம் செய்யப்படவில்லை. அதனால் பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களை பாகப் பிரிவினை செய்யவோ, பத்திரம் செய்யவோ, கடன் உதவி பெறவோ எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எட்டு வழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது விவசாயிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.

சாலைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில் துவங்க உள்ளது என்று தருமபுரி வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறியுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் தருமபுரி வருவாய்த்துறை அதிகாரிகளோ எட்டுவழிச்சாலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது. எனவே சாலை போடும் பணிகள் உடனே துவங்க உள்ளது என்று விவசாயிகளிடம் கூறியுள்ளனர். இந்த இரண்டு விவகாரங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளது. மாநில அரசு மற்றும் முதல்வரின் நிலைப்பாடு என்பதை உடனே தெளிவுப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனில் 7000 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நான் தன்னுடைய சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை ஏற்றுக் கொண்டு 8 வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனாலும் தற்போது மாநில அதிகாரிகளின் அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தன்னுடைய அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

எட்டுவழிச்சாலை பற்றி ஒரு பார்வை

மத்திய ரசின் ”பாரத் மாலா” சென்னை சேலம் இடையே 276 கி.மீ தொலைவில் 8 வழிச்சாலை, ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக காஞ்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிப்பாணையை ரத்து செய்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களில் திருப்பி அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/clarify-stand-on-chennai-salem-8-lane-project-says-anbumani-ramadoss-401110/


 21 1 2022 இந்து அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து உரிமைகள் மற்றும் நன்கொடைகள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது உட்பட்ட பல்வேறு விவகாரங்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை தற்போது இந்த சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குழு உறுப்பினர்கள் மத்தியில் பேசிய முதல்வர் 2015ம் ஆண்டு முதல் அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அமைக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் குழு அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

று தெரிவித்தார்.

ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகளை முதல்வர் வழங்கினார். ஸ்தலபுராணங்கள், அரிய புத்தகங்களை வெளியிடுதல், அதனை டிஜிட்டல் முறைப்படுத்துதல் மற்றும் புத்தகங்களை பக்தர்களுக்கு விற்றல் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று தமிழ் அறிஞர், பேச்சாளர் சுகி சிவம் சமய சொற்பொழிவு மற்றும் ஆன்மீக வகுப்புகளை நடத்தும் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பரிசீலனை செய்வதாக கூறிய முதல்வர், குழு உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களின் கருத்துகளை தனிப்பட்ட முறையில் நேரில் வந்து கூறலாம் என்றும் கூறினார். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வகையான சௌகரியங்களும் செய்து தரப்படும் என்றும் அறிவித்தார்.

கோவில்கள் நிதி நிலைமையை மேம்படுத்துதல், அறநிலையத்துறையின் ஸ்தலபுராணங்களை ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுதல், விற்பனை மற்றும் பக்தர்களுக்காக காட்சிப்படுத்துதல், அரிய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் ஆகியவற்றை மறுபிரசுரம் செய்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துதல் போன்ற விவகாரங்களும் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது.

வரலாற்று கோவில்களை கட்ட உறுதுணையாக இருந்த ஆகமங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல், இளைய தலைமுறையினருக்கு தர்ம விழுமியங்களை எடுத்துச் செல்ல சமய விவாதங்கள் மற்றும் ஆன்மிக வகுப்புகளை நடத்துவதற்கான வரைவு திட்டத்தை தயாரித்தல், சேவைகளை முழுமையாக கணினிமயமாக்குதல், 10 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு வருமானம் உள்ள கோயில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்களை நியமிப்பதற்கான ஆலோசனைக் குழுவிலிருந்து மாநில அளவிலான குழுவுக்கு மூன்று உறுப்பினர்களைத் தேர்வு செய்தல் ஆகிய பிற விவகாரங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cm-mk-stalin-led-panel-mulls-tweaking-hr-and-ce-act-400010/


நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி: சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 18 1 2022 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி, சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவித காரணமும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சரின் கடிதத்தில் எந்த காரணமும் குறிப்பிடாமல் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. விடுதலைப்போராட்டத்தியாகிகளின் தீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூறும் விதமாகவே தமிழக ஊர்தி வடிவமைக்கப்பட்டது.

ஆங்கிலேயே வல்லாதிக்க எதிர்ப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நாட்டுப்பற்றிலும், விடுதலை வேட்கையிலும், தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும்விதமாக முக்கிய நகரங்களுக்கு அலங்கார ஊர்தி பயணப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி பயணப்படும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில், தெரிவித்திருக்கிறார்.

source https://news7tamil.live/discarded-decorative-vehicle-displayed-at-the-republic-day-parade-in-chennai-chief-minister-mk-stalin.html

முதல் முறையாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளை பிரம்மாண்ட படுத்தும் திமுக அரசு:  விழா

16 1 2022  அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா (ஜனவரி.17) கொண்டாடப்படுகிறது. இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவினர் படுஜோராக கொண்டாடும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளியிட்ட செய்தி பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

அதில், முன்னாள் முதல்வர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (17.01.2022) காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் உருவச் சிலைக்கு சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1977 முதல் 1987 வரை தொடர்ந்து 10 ஆண்டுகளில் 3 முறை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்ததை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத் திட்டம், மதுரையில் 5ஆம் உலகத்தமிழ் மாநாடு, 1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தியவர் எம்ஜிஆர் என குறிப்பிட்டுள்ளது.

எம்ஜிஆரை பெருமைப்படுத்துகின்ற வகையில், கலைஞர் 17.01.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். அந்த விழாவிலே, “தனிப்பட்ட முறையிலே எனக்கும் எனதருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எனக்கும் அவருக்குமான நட்புணர்வை, என்னையும் அவரையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே தெரிந்திருக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

இதுதவிர, சென்னை கிண்டியில் அவரால் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டியதோடு, அவரின் உருவ சிலையினையும் 1998ஆம் ஆண்டு திறந்து வைத்துப் பெருமை சேர்த்தவர் கலைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்த போது, கருணாநிதி பிறந்தநாள் தொடர்பாக எவ்வித விழாவையும் நடத்ததாத நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பு அதிமுகவினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-led-dmk-govt-plan-to-pay-homage-to-mgr-105th-birthday-397902/


மக்களோடு வாழ் என்று சொன்னார் அண்ணா. அதைத்தான் நான் செய்து இருக்கிறேன். நான் மக்களோடு இருப்பேன். அவர்களுக்காக சேவை செய்வேன்.. அவர்களுக்காக தொடர்ந்து உழைக்க காத்துகொண்டு இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

நீட்: ஆளுநருக்கு எதிராக அனைத்துக் கட்சி தீர்மானம்; 

 8 1 2022 இன்று தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

தீர்மானம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வு, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு, ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக வெளிநடப்பு

நீட் தேர்வால் எந்த விதமான பாதிப்பும் இல்லை. நீட் தேர்வு 10 மொழிகளில் நடைபெற்று வருவதால் பல மாநில மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்ட போது பாஜகவின் கருத்தை முழுமையாக கேட்கவில்லை. மத்திய அரசு மாநிலங்கள் மீது நீட் தேர்வை திணித்திருப்பதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது என்று கூறி வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.

மீண்டும் அனைத்துக் கட்சி நடைபெறும் – சுகாதாரத்துறை அமைச்சர்

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடப்பாண்டு மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறினார். நீட் விலக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளனர். மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது . இது 12 ஆண்டு கால பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக மாற்றுகிறது என்றும் அவர்களின் பள்ளிக் கல்வியால் எந்த விதமான பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்குகிறது என்றும் கூறினார் அமைச்சர்.

நீட் விலக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழு மீண்டும் சந்திக்க முடிவு செய்துள்ளது. நீட் விலக்கு பெற சட்ட ரீதியான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும் இணைந்தே மேற்கொள்ளும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

யார் யார் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்?

இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக சார்பில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, அதிமுக சார்பில் டாக்டர் சி. விஜயபாஸ்கர்ம் காங்கிரஸ் கட்சி சார்பில் கு. செல்வபெருந்தகை, பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே. மணி, சி.பி.ஐ கட்சி சார்பில் டி. ராமச்சந்திரன், சி.பி.ஐ(எம்) சார்பில் வி.பி. நாகை மாலி, மதிமுக சார்பில் டாக்டர் டி.சதன் திருமலைக்குமார், விசிக சார்பில் சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனித நேயம் கட்சி சார்பில் எம்.எச். ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/resolution-passed-in-all-party-meet-on-exemption-from-neet-394221/

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1000; தமிழக அரசு அரசாணை வெளியீடு

 8 1 2022 ஒரு யூனிட் ஆற்று மணலின் அடிப்படை விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், தேவைப்படுவோர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஆற்று மணலைப் பெறலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆற்றுப் படுக்கைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான இந்த புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், ஆற்று மணல் அதிக விலைக்கு விற்பனை செய்யபடுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு ஆற்று மணலின் அடிப்படை விலையை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆற்றுமணலை பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதிலே தொகையும் செலுத்தி மணலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.00 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும்.

தற்போது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளின் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம். இவ்வசதியை தற்போது நடைமுறையிலுள்ள Net Banking, Debit Card மற்றும் UPI ஆகிய Online வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒரு யூனிட் ஆற்று மணலுக்கான அடிப்படை விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், முறைகேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் ஆற்று மணல் விற்பனை கண்காணிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govt-fixed-rate-for-river-sand-rs-1000-per-unit-394348/

 7 1 2022 தமிழக சட்டசபையில், 2022-ம் ஆண்டுக்காக முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் சட்டசபை கூட்டத்தில், பல்கலை கழக துணைவேந்தர் நியமனம், அம்மா கிளீனிக் மூடல், நீட் விவகாரம், இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதனைதயடுத்து 3-வது மற்றும் கடைசி நாள் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அனைத்து அரசு பணிகளும் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் அரசு உத்தரவு பொருந்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கால்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நினைவு கூர்ந்து இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொண்டதாக கூறியது யார் என்று கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினரே தவறு செய்தாலும் அண்ணா மீது ஆணையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 5,274 பேர் பயன்பெற்றுள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு்ளளார். கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும்,  தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம் என்றும், மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள முதல்வர் தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்,? அண்ணா நூலகத்தை பாழ்படுத்தியது யார்? செம்மொழி பூங்காவில் கருணாநிதி பெயரை மறைத்தது யார்? பாடத்திட்டத்தில் கருணாநிதியின் செம்மொழி பாடலை காதிகதம் ஒட்டி மறைந்தது யார் என்று ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

மேலும் தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்.  ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா? என்று எம்எல்ஏ.மு.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மருத்தவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து நீ்ட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அதிமுகவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி என்றும் எதிர்கால தமிழகம் எல்லா வகையிலும் உயர்வடைய நாம் உறுதியேற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். ஆனால் கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு பேசிய ஐ.பெரியசாமி சட்டசபையின் 110 விதியின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும் என்றும், சேலம், நாமக்கல்லில் ரூ501.63 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க இயலாத சூழல் உள்ளது என்று கூறிய அமைச்சர் சக்கரபாணி மத்திய அரசு மண்ணெண்ணெய் விநியோகத்தை குறைத்து விட்ட நிலையில் கூடுதலாக பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500ஆக உயர்த்த அரசு முன்வருமா? என்று பொன்.ஜெயசீலன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளத்த அமைச்சர் ராமச்சந்திரன். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

நாகை, சாமந்தான்பேட்டை பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறு மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தொடர்ந்து சட்டப்பேரவையில், சென்னை மாநகர காவல் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதனையடுத்து சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆதிக்க சக்திகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைத்து வந்த அநீதி துடைத்தெறியப்பட்டுள்ளது. 10% இடஒதுக்கீடு போராட்டத்திலும், அநீதியை முறியடித்து வெல்வோம் என்று குறிப்பிட்ட நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்ததுடன் சட்டசபை கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-meeting-3rd-day-update-in-tamil-393974/


மோடியை வரவேற்பதில் திமுகவின் நிலைப்பாடு சரியா? இந்த வார பதில்கள் - 06.01.2022 சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ

சட்டப்பேரவையில் நேற்று வெளிநடப்பு… இன்று அமைதி…

 6 1 2022 தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து நேற்று வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைதியாக இருந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது தமிழக அரசியல் களத்தில் ஆச்சரியங்களை எழுப்பியுள்ளன.

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ம் எதேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையின்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தான் தயார் செய்து வந்திருந்த உரையைப் பேசத் தொடங்கினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அம்மா கிளினிக் திட்டம் செயல்படுத்தப்படாதது, முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை உள்ளிட்ட விவகாரங்களைக் குறிப்பிட்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் உரையைப் புறக்கணித்து சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது என்று புகழாரம் சூட்டினார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று கூறினார்.

இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் தேடி வந்த நிலையில் நேற்று (ஜனவரி 5) மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடியது. சட்டப் பேரவையில் நேற்று வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பேரவையில் ராஜேந்திர பாலாஜி கைது குறித்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், இது போல, எதிர்க்கட்சிகளில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுகிறார் என்றால், சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சட்டப் பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து சட்டப்பேரவை அலுவல்களில் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன், கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் அரசிடம் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை மட்டும் எடுத்துரைத்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், “கோவையிலிருந்து பொள்ளாச்சியை பிரித்து மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட வட்டங்களை இணைத்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் முக்கியப் பதவியில் இருந்த ஜெயராமன் திமுக அரசு மீது நம்பிக்கை கொண்டு கோரிக்கை வைத்ததற்கு நன்றி எனக் கூறினார். இதனால், உறுப்பினர்கள் பலரும் சிரித்து சிரிப்பலையை எழுப்பினார்கள்.

பின்னர், இது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை செய்து உரிய தகவலை வெளியிடுவார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

2022ம் ஆண்டுக்கான முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நேற்று ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், இன்றைய கூட்டத்தில் அவையில், ராஜேந்திர பாலாஜி கைது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரும் அமைதியாக இருந்து அலுவல் கூட்டத்தை நடத்தியது தமிழக அரசியல் களத்தில் ஆச்சரியங்களை எழுப்பியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/aidmk-mlas-maintain-silence-about-rajendra-balaji-arrest-in-house-393403/

துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தீர்மானம்: ஸ்டாலின் அறிவிப்பு

 6 1 2022 தமிழகத்தில் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், முதல நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 2-வது நாளான இன்று சட்டப்பேரவையின் கேள்வி பதில் நேரம் நடைபெற்றது.

இந்த நேரத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, பல்வேறு மாநிலங்களில் பல்கலைகழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் அதற்கு அதிகாரம் இருக்கிறது. இதில் ஆளுநர் தலையிட கூடாது என்று பல மாநிலங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஜிகே.மணியின் இந்த கருத்துக்கு பதில் அளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், பல மாநிலங்களில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. மேற்கு வங்கத்தில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்கிறது. அதே சமயம் கேரளாவில் துணை வேந்தர் நியமன உரிமை மாநில அரசுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பல மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல கருத்துக்கள் எழுந்துள்ளன. இதில் குஜராத் மாநிலத்தில் பல்கலைகழக துணைவேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை அம்மாநில அரசுக்கே இருந்துள்ளனது. தற்போதைய பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருந்துள்ளது. இதை பாஜக உறுப்பினர்கள் பிரதமரிடம் எடுத்துக்கூற வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாகவே முதல்வர் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஜிகே மணி கூறியது போன்று இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் ஒன்று வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-speech-about-appointment-of-vice-chancellors-in-university-393506/

சட்டசபை ஹைலைட்ஸ் 6 1 2022

 தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் முதல் நாளான நேற்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 2-வது நாளான இன்று கேள்வி நேரம் தொடங்கப்பட்டது. இதில் எதிர்கட்சிகள் முன்வைத்த கேள்விகளுக்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர்.

முன்னதாக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது மறைந்த 12 முன்னாள் அமைச்சர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ரோசையா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில், திமுக அரசு செயல்படுகிறது. அப்படி அம்மா உணவகத்தை முடினால், அதற்காக தண்டனையை அனுபவிப்பார்கள் என்று கூறியிருந்தார்.

எதிர்கட்சி தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கலைஞர் பெயரில் இருந்த திட்டங்களை முடக்கியதால் தான் ஆட்சியை இழந்தீர்கள் என்று கூறினார். மேலும் அம்மா உணவகத்தை மூடினால் என்ன, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் மூடப்பட்டது. நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அதேபோல் அம்மா கிளினீக் மூடியது குறித்து அதிமுக தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அம்மா கிளினீக் தேவையில்லாதது  அதனால் முடியாதாக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதன்பிறகு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக நிகழ்ழும் தற்கொலைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டம் குறித்து எங்களின் முந்தைய 2001 ம் ஆண்டு ஆட்சியிலேயே தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டங்கள் மற்றும் காவல் சட்டங்கள் திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த கூடுதல் படுக்கை வசதிகளை செய்து தர வேண்டும் என்று எதிர்கட்சிதலைவர்  எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்த நிலையில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்கட்சித் தலைவர் பேச வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, 10.5% இடஒதுக்கீட்டில் சிக்கல்களை களைய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறினார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எடுக்கும் முயற்சிகளுக்கு பாமக துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் மதுக்கடைகளால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் அதனை மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்கலைகழகங்களில் துணைவேந்தர் நியமனம்தொடர்பாக மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீமானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து அனைத்து கட்சி குழுவினரை சந்திக்க உள்துறை அமைச்சர் மறுத்து வருகிறார் – இதனால் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு விவகாரததில் திமுகவடன் இணைந்து செயல்பட தயார் என்றும், நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மழை வெள்ளம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால், சென்னை. தீ நகரில் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கியதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது நிறைய விதி மீறல்கள் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பதுடன் சட்டசபை கூட்டம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-update-in-tamilnadu-assembly-news-393535/


நீட் விலக்கு – ஜன.8ல் அனைத்துக் கட்சி கூட்டம்

 6 1 2022 மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது வரை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் உள்ளது. இதுதொடர்பாக, ஆளுனரை நேரில் சந்தித்தும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு, குடியரசு தலைவர் மாளிகையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மனு அளித்தனர்.இதற்கு பதிலளித்த குடியரசு தலைவர் மாளிகை அலுவலகம் மனுவின் நகல் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, திமுக எம்.பி., டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். முதலில் நேரம் ஒதுக்கிய அமித் ஷா, பின்னர் உபி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவுள்ளதால், பார்க்க முடியாது என கூறி சந்திப்பை ஒத்திவைத்தார். இதுவரை, தமிழக எம்.பிக்களை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இன்று, சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த உடன் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது, “கல்வி என்பது அடிப்படை உரிமை. நுழைவுத் தேர்வுகள் விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை அமையவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

எந்தவொரு நுழைவுத்தேர்வு என்றாலும், அது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும். மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிட்டது. நீட் விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை

நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை நேரம் கொடுக்கவில்லை.

நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. நீட் விலக்கு தொடர்பாக, ஜனவரி 8 ஆம்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

போராட்டத்தின் மூலமே அனைத்து உரிமைகளையும் பெற்றிருப்பதால்,நீட் போராட்டமும் தொடரும். அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/m-k-stalin-lashes-out-at-centre-on-neet-calls-for-all-party-meet-on-jan-8-393313/

மேயர், சேர்மன் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்த விருப்பமில்லாத திமுக மா.செ.க்கள்

 4 1 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளான சிபிஐ மற்றும் ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மறைமுகத் தேர்தலை சந்திக்க திமுக அரசு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு பிப்ரவரிக்குள் முடியும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் கால்த்தில் 2011ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

நகப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) செயல்பாடு முதல்நிலை சரிபார்ப்பு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சமீபத்தில் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு 20 சதவீத உதிரி இ.வி.எம்.கள் (வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள்) இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவுன்சிலர் மற்றும் மேயர்/தலைவர்/தலைவரை தனித்தனியாக தேர்வு செய்ய, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் இரண்டு EVMகள் தேவை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, ஒரு சில மாவட்டங்களில் உள்ளாட்சித் தலைவர்களுக்குத் தனித் தேர்தல் நடத்துவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய சேமிப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் பேலட் அலகுகளின் மொத்த எண்ணிக்கை போதுமானதாக இருக்காது. மேலும், வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்படாததால், வாக்குச்சாவடிகளுக்கு தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கப்படும். இதனால், கவுன்சிலர்களை தேர்வு செய்ய மட்டுமே தேர்தல் நடத்தப்படும்” என, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட அளவிலான அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மாநில தேர்தல் ஆணையம் தனித்தனியாக தேர்தலை நடத்த தயாராக உள்ளது என்றும் இது குறித்த அரசாங்கத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அதிகாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் EVM சரிபார்ப்பு மற்றும் முதல்நிலை சரிபார்ப்பில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து ஒன்பது மாவட்டங்களில் அமோக வெற்றி பெற்ற திமுக, வலுவான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. கிராமப்புற அதிமுக வாக்குகளில் ஒரு பகுதி திமுகவுக்கு மாறியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் மற்றும் நகரத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தலை நடத்துவதற்கு திமுகவில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு விருப்பமில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “மறைமுகமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒன்றிய தலைவர் முடிவுகள் குறித்து திமுக தலைமை மற்றும் மூத்த தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கடைசி நிமிடத்தில் எந்த மாற்றமும் இருக்காது” என்று அவர் கூறினார்.

மேயர் மற்றும் நகரத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தலை நடத்துவதற்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு விருப்பமில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைமுகமாக நடைபெற்ற ஒன்றியத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து திமுக மேலிட தலைவர்களும், மூத்த தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-district-secretaries-do-not-like-to-conduct-direct-election-for-mayor-and-chairman-in-local-body-polls-391990/

நோ ஃபண்ட்… நோ அப்பாயின்ட்மெண்ட்… தமிழகத்திற்கு டெல்லி ஷாக்

 3 1 2022 இந்தியாவில் கடந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (என்.டி.ஆர்.எஃப்) கீழ் கூடுதலாக 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதில் தமிழகத்துக்கு என்.டி.ஆர்.எஃப் வழங்கப்படாததோடு, நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் நேரம் கேட்டபோது அப்பாயின்மெண்ட் அளிக்காதது போன்ற டெல்லியின் நடத்தை தமிழகத்திற்குச் அதிச்சியைக் கொடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (என்.டி.ஆர்.எஃப்) கீழ் கூடுதலாக 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 6,230 கோடி உதவி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கைகளை அனுப்பியது. இருந்தாலும், மத்திய அரசு, 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் அளித்த ரூ.3,000 கோடியில் தமிழக அரசுக்கு நிதி அளிக்கப்படவில்லை.

அதுமட்டுமில்லாமல், தமிழக சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு உள்துறை அமைச்சரை சந்திக்க முயன்றனர். இந்த குழுவில் திமுக எம்.பி.க்கள் மட்டுமல்லாமல், அதிமுக எம்.பி.க்கள், திமுக கூட்டணி கட்சிகளான சிபிஐ, சிபிஎம், விசிக எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், உள்துறை அமைச்சர்கம் தமிழக எம்.பி.க்களுக்கு அவர்களுக்கு சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. இதையடுத்து, தமிழக எம்.பி.க்கள் குழு தங்கள் கோரிக்கையை குடியரசுத் தலைவர் செயலகத்தில் சமர்ப்பித்தது. அது நடவடிக்கைக்காக அமித்ஷாவின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

மறுநாள் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு அமித் ஷாவைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திப்பு நடக்கவில்லை. டி.ஆர். பாலு உள்துறை அமைச்சருக்கு வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நேரம் கேட்டு அனுப்பிய செய்திகளுக்கும் வியாழக்கிழமை வரை பதில் கிடைக்கவில்லை. “நீங்கள் உத்தரப்பிரதேசத்தில் கூட்டங்களில் பிஸியாக இருப்பதை அறிந்து கொண்டதால், நாங்கள் மேலும் காத்திருப்பது பயனற்றதாக இருக்கலாம். நாங்கள் விவாதிக்க வேண்டிய விஷயம் பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ஜனவரி 3 அல்லது 4ம் தேதிகளில் சந்திப்புக்கு நேரம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று டி.ஆர். பாலு அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய சட்டங்களுக்கு முரணான சட்டங்களை மாநிலங்கள் இயற்றுவதற்கு எந்தவித சட்டத் தடையோ அல்லது தடையோ இல்லை என்று திமுக எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. இதற்கு ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்க இயற்றப்பட்ட மசோதாவை உதாரணம் காட்டுகிறார்கள்.

பாஜகவுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் அணுகுமுறை எதிர்பார்த்த மாதிரிதான் இருப்பதாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர். “அஸ்ஸாம், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களுக்கு என்.டி.ஆர்.எஃப் நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 5 மாநிலங்கள் பாஜகவால் ஆளப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசின் நிவாரணத் தொகையை ரேஷன் அட்டை தாரர்களுக்குப் பொங்கல் பணமாக வழங்குவது திமுகவுக்கு பெரும் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று பாஜக நினைக்கலாம்” என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, அமித் ஷா ஒரு திறமையான நிர்வாகி என்றும், அரசியலுக்கு புதியவர் அல்ல என்றும், விரைவில் சந்திப்பதற்கு நேரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இருப்பினும், தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி இல்லை, தமிழக எம்.பி.க்கள் சந்திப்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் அளிக்காதது போன்ற டெல்லியின் நகர்வு தமிழகத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/delhi-gives-shock-to-tamil-nadu-no-ndrf-fund-no-appoinment-to-tn-mps-delegation-391535/

டிஜிட்டல் மயமாகும் பொதுநூலகங்கள்; தமிழக அரசின் புதுமையான முயற்சி

 31 12 2021 தமிழ்நாடு அரசு மாநிலத்தில் நூலகங்களை புதுப்பிக்கவும் புத்தகக் கடன் வழங்கவும் புதிய முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், வாசகர்கள் ஒரு புத்தகத்தை பொது நூலகத்தில் இருந்து வாடகைக்கு எடுத்து, அதைப் படித்துவிட்டு மாநிலத்தில் உள்ள எந்த நூலகத்தில் வேண்டுமானாலும் திருப்பி கொடுக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், புத்தகங்களைத் தேடுதல், முன்பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை மொபைல் ஆப் மூலம் செய்யவும், புத்தகங்களை வீட்டுக்கே டெலிவரி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகமும் (ஏசிஎல்) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள 4,640 பொது நூலகங்களில் உள்ள 35 லட்சம் புத்தகங்களுக்கான பொதுப் பட்டியலைத் தயாரித்து வருகிறது. இதனால், ஒரு நூலகத்தில் எடுத்த புத்தகத்தை மற்றொரு நூலகத்தில் திரும்ப வழங்கும் முறை சாத்தியமாகும். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பொது நூலகங்களில் உள்ள அனைத்து புத்தகங்களின் பட்டியலை ஆங்கிலோ அமெரிக்கன் கேடலாக்கிங் ரூல்ஸ் (AACR2) மற்றும் மெஷின்-ரீடபிள் கேடலாகிங் (MARC 21) போன்ற சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா பொது நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மற்றும் 32 மாவட்ட நூலகங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களுக்கான பொதுப் பட்டியலை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த வாரம் வெளியிட்டார். இந்த பொதுவான பட்டியல் மூலம், அனைத்து பொது நூலகங்களிலும் புத்தகங்களைத் தேடுவது எளிமையாக்கப்படும்.

தலைப்பு அல்லது ஆசிரியரைத் தட்டச்சு செய்வதன் மூலம், எந்த நூலகங்களில் புத்தகம், கிடைக்கும் தன்மை, இலக்கிய வடிவம், வெளியீட்டாளர், பதிப்பு மற்றும் பொருள் வகை போன்ற விவரங்களை வாசகர்கள் எளிதில் பெறுவார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள பொது நூலகங்களுக்கான பொதுப்பட்டியல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ் காமாட்சி, “இத்திட்டம் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (TANII) திட்டத்தின் கீழ் மாநில திட்டக்குழுவால் செயல்படுத்தப்படுகிறது. நூலகத்தில் இந்த பொதுப் பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது நூலகங்களிலும் கிடைக்கும் அனைத்து புத்தகங்களையும் தேடுவதற்கான ஒரே கருவியாக செயல்படும்.

எந்தெந்த புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன மற்றும் பொது நூலகங்களில் வாசகர்களால் பயன்படுத்தப்படாத புத்தகங்களை அறிய நூலக அதிகாரிகளுக்கு இந்த டிஜிட்டல் அட்டவணை உதவும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த வகையான புத்தகங்கள் அல்லது பாடங்கள் விரும்பப்படுகின்றன. அல்லது விரும்பப்படுவதில்லை என்பதை அறியவும் இது உதவும். நகரும் புத்தகங்களை அதிகமாக சேமித்து வைக்கலாம் மற்றும் பொது நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கும் போது பயன்படுத்தப்படாத புத்தகங்களை தவிர்க்கலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தூசி சேகரிக்கும் மற்றும் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் தலைப்புகளை களையெடுக்க நூலக அதிகாரிகளுக்கு இது உதவக்கூடும். தொழிற்சங்க பட்டியலைப் பின்பற்றி, புத்தகங்களைத் தேடுவதற்கு, பொது நூலகங்களின் இயக்குநரகம் பயனர் மொபைல் பயன்பாட்டைக் கொண்டு வரலாம். நமக்கு அருகில் உள்ள உணவகங்களை கூகுள் செய்வதன் மூலம் எப்படி அறிவோமோ, அதுபோல, புத்தக ஆர்வலர்கள் எந்த நூலகத்தில் குறிப்பிட்ட புத்தகம் உள்ளது, அது கிடைக்கிறதா இல்லையா என்பதை அறிய இந்த ஆப் உதவும்” என தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனர் ஜி சுந்தர் கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-tamil-news-tn-public-libraries-to-be-digitalized-and-union-catalogue-prepared-390717/

மழைவெள்ள பாதிப்பு; நிவாரணமாக ரூ.6,230.45 கோடி வழங்க பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

 29 12 2021 TN urges Centre to release over Rs 6,230.45 crore assistance: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளுக்கு ரூ.6,230.45 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலத்தின் நிதி நிலைமையை மேலும் சுமைப்படுத்திய கனமழை, வெள்ளம், உயிர் சேதம், பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் ஆகியவற்றிற்காக தமிழகத்திற்கு ரூ.6,230.45 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர்-டிசம்பர்) தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால், பெரு வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மாநில அரசாங்கத்தின் நிதி நிலை “கொரோனா தொற்றுநோயால் கடுமையான நிதிச்சுமையில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளச் சூழல் அதைத் தீவிரப்படுத்தியது,” என்று முதல்வர் கூறினார்.

மேலும், “மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிர் இழப்பு, பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு சேதம்” ஆகியவை குறித்து பிரதமரின் கவனத்தை முதல்வர் ஈர்த்தார்.

மாநில அரசு விரைவான நிவாரணப் பணிகளை மேற்கொண்டதால், குறுகிய காலத்தில் இயல்பு நிலை திரும்பியது என்று பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இடைவிடாத மழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்தியக் குழு நவம்பர் 21, 2021 அன்று தமிழகம் வந்தது.

“மத்திய அரசாங்கத்திடம் இருந்து நிவாரண உதவி கோரி நாங்கள் இதுவரை மூன்று குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ளோம், அதில் தற்காலிக மறுசீரமைப்புக்காக 1,510.83 கோடி ரூபாயும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளான சாலைகள், பாலங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் போன்றவற்றை நிரந்தரமாக மீட்டெடுப்பதற்காக 4,719.62 கோடி ரூபாயும்.” கேட்டுள்ளோம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

நவம்பர் 16, 25 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் மத்திய அரசுக்கு குறிப்பாணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநில பேரிடர் மீட்பு நிதியும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும், இதனால் அவர்கள் வெள்ளத்தின் தற்போதைய பாதிப்பில் இருந்து விடுபடவும், சேதமடைந்த உள்கட்டமைப்பை புனரமைக்கவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் பாதையில் கொண்டு வரவும் முடியும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.” என்று முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் நிதியுதவியை விரைவில் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/rain-damage-tn-urges-centre-to-release-over-rs-6000-crore-assistance-390062/

இனி புதிய மீட்டர்களுக்கு நீட்டிப்புக் கட்டணம் இல்லை – தமிழ்நாடு மின்சார வாரியம் சுற்றறிக்கை

 30 12 2021 நுகர்வோர்கள் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, மின் இணைப்புகளை நீட்டிக்கவும், புதிய உள்கட்டமைப்புகளை நிறுவவும் ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழ்நாடு மின்சார வாரியம் (டாங்கெட்கோ – TANGEDCO) வசூலிக்கிறது. உதாரணமாக, சென்னையில் ஏற்கனவே உள்ள மின்பாதையில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிய மூன்று கட்ட இணைப்புக்கான (three-phase connection) நீட்டிப்பு செலவாக ரூ.90,000 செலுத்தப்பட்டுள்ளது.

இது போன்று நீட்டிப்புக் கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடு மின்சார விநியோகக் குறியீட்டிற்கு எதிரானது என்று தெரிவித்திருந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC), இந்த விதிமீறலை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், நுகர்வோரிடமிருந்து வசூலித்த பணத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு கடந்த 2009ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

எனினும், மின்சார வாரியம் நீட்டிப்புக் கட்டணங்களைத் தொடர்ந்து வசூலித்து வந்ததுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட சில நுகர்வோர் உதவி கோரி ஆணையத்தை அணுகியுள்ளனர். அப்போது, ஆணையம் மின்சார வாரியத்திற்கு அதிகபட்சமாக 1 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.

இதுதொடர்பாக ஆணையத்திடம் மனு அளித்திருந்த நுகர்வோர் உரிமைகள் ஆர்வலரான கே.கதிர்மதியோன், மின்சார வாரியம் அதிக அபராதம் செலுத்துவதைப் பொருட்படுத்தவில்லை என்றும், இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் வசூல் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மின்சார வாரியம் பணம் வசூலிக்க இதை ஒரு உத்தியாக பயன்படுத்துகிறது. சமீபத்தில் 2019ல் இந்தக் கட்டணங்களை 400% அதிகரித்தது. எனவே, சட்டவிரோதமாக நீட்டிப்புக் கட்டணம் வசூலிக்கத் தேவையில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், உள்கட்டமைப்பு செலவுகள் உயர்ந்துவிட்டதாகவும், புதிய சேவை இணைப்பு கோரிக்கைகளுக்கு நீட்டிப்புக் கட்டணங்களை வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்சார வாரியம் ஆணையத்தின் முன் வாதிட்டுள்ளது.

இந்நிலையில், கதிர்மதியோனின் மனுவை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆணையம், அவரது கோரிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், நுகர்வோர் நிவாரணத்திற்காக அவர்கள் வீட்டு கதவுகளைத் தட்டுவதைத் தவிர்க்க சரியான நடவடிக்கை எடுக்குமாறும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய மின் இணைப்புக்கு இனி கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-tamil-news-tangedco-sends-circular-to-stop-collection-of-extension-charges-390150/

தை முதல் தேதி தமிழர் திருநாள்: பொங்கல் பரிசு பைகளில் திடீர் மாற்றம்

 29 12 2021 தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு குறித்து சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு தரப்பில், வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் அடங்கிய பையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அச்சிட்ப்பட்டிருந்ததது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல தரப்பினர் எதிப்பு தெரிவித்தை தொடர்ந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற வாசகம் நீக்கப்பட்டு, தற்போது தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.

உலக தமிழர்கள் அனைவரும் ஆண்டின் முதல் நாளாக சித்திரை 1-ஐ தமிழ் புத்தாண்டாகவும், தை 1-ஐ தமிழர் திருநாளான பொங்கல் திருநாளாக கொண்டடி வருகின்றனர். பழங்காலம் முதல் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்ட வரும் இந்த நிகழ்வை மாற்றியமைக்கும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக, அரசின் முதல்வர் கருணாநிதி தை 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அறிவித்து புதிய சட்டத்தை இயற்றினார். அதன்பிறகு தமிழ் புத்தாண்டு தை 1-ந் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவத்தாலும் அப்போதைய திமுக அரசு இதில் மாற்றம் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை 1-ந் தேதிக்கு மாற்றி புதிய சட்டத்தை இயற்றினார். அதிமுக அரசு சட்டத்தை நீக்கினாலும், திமுகவினர் தை- 1-ந் தேதியை தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், தமிழ் புததாண்டு தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுமோ என்ற அச்சம் மக்களிடம் தொற்றிக்கொண்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தை 1-ந் தேதியை தமிழ்புத்தாண்டாக அறிவிக்க திமுக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இதை அறிந்த பல தரப்பினரும், இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். அதன்பிறகு இது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் தற்போது பொங்கல் பரிசு ரூபத்தில் இந்த சர்ச்சை மீண்டும் வெடித்து்ளளது. ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜனவரி 3-ந் தேதி முதல் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் பை வெளியிடப்பட்டது. இந்த பையில் தமிழக அரசின் முத்திரையுடன் தமிழ் புத்தாண்டு பொங்கல் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் திமுக அரசு மீண்டும் தமிழ் புத்தாண்டை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பொஙகல் பரிசு பையில் இடம்பெற்ற வாசகங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழபுத்தாண்டு தினத்தை வைத்து இரு கட்சிகளும் அரசியல் செய்வதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகினறனர். தமிழக அரசின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விரைவில் இதனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தற்போது பொங்கல் பரிசு வழங்கப்படும் பையில் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ் புத்தாண்டு என்ற வாசகத்தை நீக்கி, தமிழ்ர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள பையில் இருபுறமும் தமிழக அரசின் முத்திரையுடன், ஒருபுறம் உழவர்கள் மாடுகளுடன் பொங்கல் கொண்டாடும் படம் அச்சிடப்பட்டுள்ளது. மறுபுறம், தமிழர் திருநாள் என்ற வாசகத்துடன் மண் செழிக்கட்டும் மக்கள் மகிழட்டும் நீடு நிறையட்டும் நாடு சிறக்கப்பட்டும் என்ற வாசகம் குறிபபிடப்பட்டுள்ளது.  

தமிழ் புத்தாண்டு என்ற வாசகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதை மாற்றிய தமிழக அரசுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறனர். மேலும் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பெரிய சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு இந்த மாற்றத்தை செய்துள்ளதாகவும் கூறி வருகினறனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-changed-pongal-gift-bags-for-tamil-new-year-controversy-389559/

விமர்சனத்தில் சிக்கிய அமைச்சர் மா.சு

 சுகாதார செயல்திறன் தரவரிசை குறித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ட்விட்டர் பதிவு விமர்சனத்துள்ளாகி உள்ளது.

நேற்று (27.12.2021) நிதி ஆயோக் அமைப்பு 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதி சுகாதார செயல்திறன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் ஒட்டுமொத்த சிறந்த சுகாதார செயல்திறனுக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2 ஆம் இடம் பிடித்தது. இந்தப் பட்டியலில் கேரளா முதலிடம், உத்திர பிரதேசம் கடைசி இடம் பிடித்தன.

இந்தநிலையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தரவரிசை குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் விமர்சனத்துள்ளாகியுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ”நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது”, என பதிவிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனெனில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை 2019-2020 காலகட்டத்திற்கானது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது. நெட்டிசன்களில் சிலர் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொரோனா கால சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில் தான் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதல் என்பதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/neitizens-criticize-minister-ma-subramanian-tweet-about-health-parameters-list-389502/

தி.மு.க அட்டூழியத்தைக் கண்டித்த திருமா

  நாம் தமிழர் பொதுக்கூட்ட மேடையில ஏறி தகராறில் ஈடுபட்ட திக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபபாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம் மற்றும் ராஜூகாந்தி கெலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய கோரி மத்திய மாநில அரசுக்கு எதிரான நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மபுரி மொரப்பூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் இளைஞர்கள் பலரும் திமுக  கடுமையான வார்த்தைகளால் விமர்சிததுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் சிலர் பொதுக்கூட்ட மேடையில் ஏறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திமுகவினரை அப்புறப்படுத்திவிட்டு அனைவரையும் சமானதானபபடுத்தினர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும்பரபப்பை ஏற்படுத்திய நிலையில்,

திருமாவளவன் கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில்,  நாம் தமிழர் கட்சியின் மேடையில் அத்துமீறி ஏறி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய திமுக வன்முறைக்கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், அண்ணன் முனைவர்  திருமாவளவன்  அவர்களுக்கு எனது அன்பும், நன்றியும்! என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் திருமாவளவனின் கருத்து திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுகவினர் பலரும் சமூகவலைதளங்களில் திருமாவளவனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகினறனர். இதில் தொண்டர்களை சமாதானப்படுத்த திருமாவளவன் சொல்லாததை ஊடகங்கள் புனைவதாக திமுக ஐ.டி துறை கூறி வந்தாலும், சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் சென்னை போரூர் பெரியார் திடலில் நடைபெற்ற விருது வங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்ட முதல்வவர் பேசுகையில் திருமாவளவன் பேச்சுக்கு கட்டுப்பட்டவன. இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என்று கூறி திருமாவளவன் மீதான் திமுகவினரின்  கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-ntk-seeman-thanks-to-vck-thirumavalavan-for-against-dmk-387829/

தமிழக அரசு பொங்கல் பரிசு: 20 பொருட்கள் என்னென்ன?

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022-ம் ஆண்டிற்கான 20 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 முதல் ஜனவரி 17, 2022 வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்கள், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.

டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை (GO) படி, பட்டியலில் உள்ள 20 பொருட்கள் அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை ஆகியவை மஞ்சள் பையில் வைத்து வழங்கப்படும்.

மாநிலத்தில் நுகர்வோர் மத்தியில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ‘மஞ்சள் பை’யில் வைத்து பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம்’ கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) மூலம் 2021 இல் கோயம்பேடு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1,088 கோடி செலவில் 2,15,48,060 குடும்பங்களுக்கு 20 பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி 3ம் தேதி முதல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

மேலும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கரும்புகளுடன் 20 பொருட்களும் பரிசாக வழங்கப்படும். இதற்காக மொத்தம் 2.15 கோடி ரூபாய் செலவிடப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நெய் கூட்டுறவு சங்கங்களில் இருந்து அரசால் கொள்முதல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுநோயால் மக்களில் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர், மேலும் வருமானத்தில் சரிவைக் கண்டனர். இந்நிலையில் தான் சாமானிய மக்களின் நலன்கருதி, பொங்கல் பரிசுத் திட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக நிதியுதவி மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-announced-pogal-gifts-for-to-2-crore-families-including-sri-lankan-tamil-refugees-387519/

திமுக அரசு நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

 23 12 2021 திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்ல என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக இதுவரை 300 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக புதன்கிழமை கூறினார்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 500 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், மீதமுள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதாகவும் புதன்கிழமை தெரிவித்தார்.

பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது அரசின் நலத்திட்டங்கள் தொடரும் என்று கூறினார். அவருடைய அரசின் செயல்பாடுகள் திமுகவுக்கு வாக்களிக்காதவர்களையும் வருந்த வைக்கும் என்று அவர் முன்னர் கூறியதை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், “அப்படி அவர்களும் வருந்துவார்கள், நல்ல பணி தொடரும். அதுதான் என் வேலை.” என்று கூறினார்.

மேலும், அவரை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. “இது சுயநலம். நான் சுயநலவாதி. இந்த சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டில் நான் சுயநலவாதி.” என்று கூறினார்.

பொங்கல் பண்டிகை விழாவாக இருந்தாலும் சரி, திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளாக இருந்தாலும் சரி, வேறு எந்த விழாவாக இருந்தாலும் சரி, கொளத்தூர் வருகை தனக்கு எப்போதுமே சிறப்பானது என்று மு.க. ஸ்டாலின் கூறினார். இன்னும் மூன்று வாரங்களில் அந்தத் தொகுதியில் ‘சமத்துவப் பொங்கல்’ விழா பிரமாண்டமாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை சிஎஸ்ஐ மறைமாவட்ட பிஷப், அருட்தந்தை ஜே. ஜார்ஜ் ஸ்டீபன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ராஜ்பவனில் ‘கிறிஸ்துமஸ்’ ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி: “இயேசுவின் பாடுகளை அவர் உருவாக்கிய மதிப்பீடுகளை முன்பைவிட இன்று மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், நம் அனைவருக்குள்ளும் கிறிஸ்து வாழ்கிறார். அவர் எதற்காக தனது உயிரைக் கொடுத்தாரோ அந்தச் செய்தியை எடுத்துச் செல்வோம்.” என்று கூறினார்.

இந்த விழாவில், மயிலாப்பூர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசியனார்கள்.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிற நிலையில், திமுக அளித்த 500 தேர்தல் வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-says-dmk-implemented-300-out-of-500-poll-promises-387131/

சேலம்- சென்னை 8 வழிச் சாலை: தமிழக அரசு ஒத்துழைப்பை கோரும் NHAI

 24 12 2012 

Salem-Chennai 8-lane road Tamil News: NHAI seeks cooperation OF TN GOVT

Salem-Chennai 8-lane road Tamil News: சேலம்- சென்னை இடையேயான, 277 கி.மீ., துார சாலையை, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டு வழி சாலையாக மாற்றும் திட்டத்தை ( 8 Lane Green Road ) மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.


வழக்கு விசாரணை

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்வதாக அதிரடியாக தெரிவித்தது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை – சேலம் இடையேயான 8 வழி சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியை கோர முடியும். 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.

தொடர்ந்து எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக் கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரி என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் அக்டோபர் 2ம் தேதி வழக்கு ஒத்திவைத்தனர்.

தீர்ப்பு

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நீதிபதிகள் கண்வில்கர் மற்றும் பி ஆர் கவாய் இது தொடர்பாக தீர்ப்பு வழங்கினர். அந்த தீர்ப்பில் “புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது. எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடையில்லை. ஏற்கெனவே நடைபெற்ற நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கை மட்டுமே செல்லாது. இது தொடர்பாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு திட்டத்தை செயல்படுத்தலாம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், “சென்னை 8 வழி கட்டணச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற திருத்தம் செல்லாது; அனுமதி தேவை, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாம்” என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

இந்நிலையில், முடங்கிக் கிடக்கும் சேலம் – சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை மீண்டும் தொடங்கவும், மக்களிடம் கருத்து கேட்கும் மதிப்பீடு ஆய்வை சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் விரைவில் முடிக்கவும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் தயாரிக்க ஒத்துழைக்குமாறும் தமிழக மாநில அரசிற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

“சுற்றுச்சூழல் அனுமதி பெற, மாநில அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில் மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அது குறித்த எந்த அறிக்கைகளும் கிடைக்கவில்லை” என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை கைவிடுவது குறித்து, மாநில அரசிடம் இருந்து இதுவரை எழுத்துப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது, முன்மொழியப்பட்ட சீரமைப்பைச் சுற்றி வாழும் உள்ளூர் மக்களுக்கு நிலம் கையகப்படுத்துதலின் தாக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு விரிவான சமூக-பொருளாதார மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். உள்ளூர் பல்லுயிர், வனவிலங்கு வழித்தடங்கள் மற்றும் அதன் தணிப்பு உத்தி, அடிப்படை உருவாக்கம், வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் 277.3 கிமீ நடைபாதையில் உள்ள தாழ்வாரங்களை அடையாளம் காண்பது உள்ளிட்டவற்றின் மீதான தாக்கம், தன்பாத்தின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையால் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், கோயம்புத்தூர், சுற்றுச்சூழல் ஆய்வை முடித்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் பேசியுள்ள சாலைப் போக்குவரத்துக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த திட்டம் 2025ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். “சமூக-பொருளாதார ஆய்வை மேற்கொள்ள M/s KITCO (கேரள அரசு நிறுவனம்) என்ற நிறுவனத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நியமித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும். பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடப்படும்” என ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமூக-பொருளாதார மதிப்பீட்டை ஆய்வு செய்ய இதுவரை எந்த மாவட்ட ஆட்சியர்களும் பதில் அளிக்கவில்லை.

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவில், இத்திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/salem-chennai-8-lane-road-tamil-news-nhai-seeks-cooperation-of-tn-govt-387636/

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க தொடர் கோரிக்கை: புதிய கமிட்டி அமைத்த தமிழக அரசு

 24 12 2021 Rtd Justice Authinathan panel : தமிழக அரசு ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆதிநாதன் தலைமையில் 6 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மனிதாபிமான மற்றும் நன்னடத்தை காரணமாக கைதுகள் விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத்துறை தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளர், உளவியலாளர் மற்றும் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் இருக்கும் மூத்த அதிகாரி இந்த கமிட்டியின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இருக்கும் வழிமுறைகளின் படி சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியாத, 10 அல்லது 20 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை விடுதலை செய்வது குறித்து இந்த கமிட்டி பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஆய்வு செய்து தங்களின் பரிந்துரைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளை ஒட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது. பல ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வரும் இஸ்லாமியர்கள் பலரும் இதன் மூலம் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே போன்று நோய்வாய்ப்பட்ட பல கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் நோய்வாய்ப்பட்ட சிறைக்கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் நீண்ட வருடங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தடுக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய குழுக்கள்ள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை அறிவித்தனர். கொளத்தூர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், மத ரீதியாக திட்டங்களை அணுகுவதில் பாஜகவை போன்றே திமுகவும் செயல்படுகிறது. முந்தையை ஆட்சியில் அதிமுகவும் இப்படியே செயல்பட்டது என்று கூறி கடுமையாக சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி மூலம் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/rtd-justice-authinathan-panel-set-up-to-make-recommendations-for-release-of-convicts-387521/


நாம் தமிழர் கூட்டத்தில் புகுந்த தி.மு.க-வினர்: அடிதடி- ரகளை

 22 12 2021 

DMK cadres fights with Naam Tamilar Katch cadres, DMK, Dharmapuri, Morappur DMK cadres, NTK Dharmapuri protest stage, நாம் தமிழர் கட்சி, சீமான், நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் புகுந்த திமுகவினர், தருமபுரி, அரூர், மொரப்பூர் திமுக நிர்வாகி, நாம் தமிழர் கட்சி மேடையில் திமுகவினர் ரகளை, சீமான், சீமான் கண்டனம், NTK, DMK NTK cadres clash, Tamilnadu politics, Arur, Morappur, Seeman condemns, seeman

அரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திமுகவினர் புகுந்து தடுத்ததால் அடிதடி ரகளை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தருமபுரி மாவட்டம், அரூரில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென, மேடை ஏறிய திமுக ஒன்றிய செயலாளர் மொரப்பூர் செங்கண்ணன், என்ன பேசுற என்று தடுத்து ஹிம்லர் பேச்சை நிறுத்தச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சியினரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், மேடையில் இருந்த மைக் செட்டை தள்ளிவிட்ட செங்கண்ணன், மரியாதையாக பேசுங்கள், அரசியலை அரசியலாக பேசுங்கள் என்று எச்சரிக்கிறார்.

இதனிடையே, மேடைக்கு கீழே இருந்த சிலர், பிளாஸ்டிக் நாற்காலியைத் தூக்கி மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது வீசியதால் இருதரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டதால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கெ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பையும் விலக்கி அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருந்தபோது, திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் மேடையில் ஏறி என்ன பேசுற, மரியாதையா பேசுங்க என்று சொல்கிறார். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அப்போது, கீழே இருந்து ஒருவர் பிளாஸ்டிக் நாற்காலியைத் தூக்கி மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வீசுகிறார். பின்னர், காவல்துறை வந்து இரு தரப்பினரையும் கைகலப்பில் இருந்து தடுத்து அனுப்புகிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் திமுகவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகாரத்திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தருமபுரி மாவட்டம், அரூரில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரி நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் வன்முறைக்கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது.

நாம் தமிழர் கட்சியின் மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்ட திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மேடையில், திமுகவினர் புகுந்து ரகளை செய்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியினர் பொது மேடையில் பேசும்போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மைக் காலமாக, நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில், பொதுக்கூட்டங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகவை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-cadres-fights-with-naam-tamilar-katch-cadres-in-dharmapuri-protest-stage-386627/

பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு: தி.மு.க- அ.தி.மு.க மோதல் ஏன்?

 22 12 2021 

Pollachi Jayaraman attacks by sleeper, tension between AIADMK and DMK cadres, AIADMK and DMK cadres claims Restoration of Kothavadi Tank, பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு, திமுக- அதிமுக மோதல், பொள்ளாச்சி ஜெயராமன், கொத்தவாடி குளம், கிணத்துக்கடவு, கோவை, அதிமுக, திமுக kinathukadavu, coimbatore, DMK, AIADMK

கோவை கிணத்துக்கடவு அருகே சீரமைக்கப்பட்ட குளத்தைப் பார்க்கச் சென்ற அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் அங்கே அதிமுகவினரும் திமுகவினரும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறுகின்றனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள கொத்தவாடி குளத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பியதையடுத்து, குளத்தை சீரமைத்தது நாங்கள்தான் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சியினரும் உரிமை கோரியதால் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பதற்றம் நிலவியது.

அதிமுகவினர் அழைப்பின் பேரில் கொத்தவாடி குளத்திற்குச் சென்ற பொள்ளாச்சி எம்.எல்.ஏ வி.ஜெயராமன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மற்றும் அவருடன் இருந்த அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள கொத்தவாடி குளம் 27 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். குளம் நிரம்பியதைக் கொண்டாடும் நிகழ்ச்சியில், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்பட்டது.

அதிமுகவினர் அழைப்பின் பேரில் கொத்தவாடி குளத்திற்குச் சென்ற பொள்ளாச்சி எம்.எல்.ஏ வி.ஜெயராமன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மற்றும் அவருடன் இருந்த அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்த நிகழ்ச்சிக்கு, அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை அழைத்து வந்தது திமுகவினரை எரிச்சலடையச் செய்தது என்று போலீஸார் தெரிவித்தனர். கொத்தவாடி குளத்தை சீரமைத்ததாக அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினரும் உரிமை கொண்டாடியதால் இரு கட்சியினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொத்தவாடி குளத்தை சீரமைக்கும் பணியில் தன்னார்வலர்கள், விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆண்டு பொள்ளாச்சி எம்பி கே.சண்முகசுந்தரம், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையின் நீர்வள அமைப்பு ஆகியவை இணைந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் இரு துணைக் கால்வாய்களில் இருந்து மழைக்காலத்தில் உபரி நீர் சீராக வருவதை உறுதி செய்ததையடுத்து குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் உள்ளது. எப்பிங்கர் டூலிங் ஏசியா என்ற தனியார் நிறுவனம் இந்த குளத்தை சீரமைக்கவும் கரைகளை வலுப்படுத்தவும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி மூலம் ரூ.87 லட்சத்தை வழங்கியுள்ளது” என்று பி.கே. பேரூர் படித்துறை பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/pollachi-jayaraman-attacked-tension-between-aiadmk-and-dmk-cadres-restoration-of-tank-386689/

வித்தியாசமே இல்லை: அரசு ஊழியர் சங்க தமிழ்ச்செல்வி

 21 12 2021 

Tamilnadu Government Employee Association, TNGEA President S Tamilselvi, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலத் தலைவர் சு தமிழ்ச்செல்வி, சு தமிழ்ச்செல்வி ஸ்பெஷல் பேட்டி, CM MK Stalin, Tamil nadu govt, TNGEA demand

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம், அரசு ஊழியர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை. தேர்தலில் எங்களுடன் அரசியல் கட்சிகள் கூட்டணி வைக்கிறதோ இல்லையோ ஆனால், உங்களுடன் (அரசு ஊழியர்களுடன்) தான் நிரந்தர கூட்டணி என்று அரசு ஊழியர்களை புகழ்ந்து பேசினார். மேலும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அரசின் கடன் பிரச்சனை குறைந்த பிறகு நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய மறுநாளே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன் வெளியிட்ட கூட்டறிக்கையில் முதல்வர் உரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து கடுமையாக விமர்சித்திருந்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன் இருவரும் வெளியிட்ட அறிக்கை அரசு ஊழியர்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

முதலமைச்சரின் உரை எப்படி ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது, ஏன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் போகிறது என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு. தமிழ்ச்செல்வியிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து பேசினோம். செல்போன் மூலம் சு. தமிழ்ச்செல்வி அளித்த நேர்காணல் இங்கே தரப்படுகிறது.

கேள்வி: அரசு ஊழியர் சங்கம் மாநாட்டில் முதல்வர் உரையாற்றிய மறுநாளே கடுமையாக விமர்சித்து அறிக்கையை வெளியிட்டுள்ளீர்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

சு. தமிழ்ச்செல்வி: தேர்தல் வாக்குறுதியில் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம், நிறைவேற்றுகிறோம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாடு அரசுக்கு 5 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எந்த அரசாங்கம் வந்தாலும் கடனைத்தான் சொல்கிறார்கள். கடன் இருக்கிறது என்று தெரிந்துதானே வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வருகிறார்கள். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணப் பலன்கள் மட்டும்தான் அவர்களுக்கு குறியாக இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு கொடுப்பதனால்தான் கஜானாவில் பணம் இல்லாத மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால், தெரிந்தே எப்படி நீங்கள் தேர்தல் வாக்குறுதியைக் கொடுக்கிறீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சி.பி.எஸ் ரத்து பண்ணிடுவோம். நாங்கள் வந்தால் காலி பணியிடத்தை நிரப்பிடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்கள். காஜானா காலியாகிவிடும் என்று தெரிந்து எப்படி வாக்குறுதி அளிக்கிறார்கள். திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். இதுதான் எங்களுடைய வருத்தமான பதிவு.

கேள்வி: கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி ஆசிரியர்களுக்கு ஊதியமாக செலவிடப்படுகிறது என்று கூறப்பட்டது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் அதே கருத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதே கருத்தைத்தான் முன்பு சொல்லியிருக்கிறார் இல்லையா?

சு. தமிழ்ச்செல்வி: ஜெயலலிதா இருந்தபோது 2002ல் எங்களுடைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தை திருவல்லிக்கேணியில் திறந்துவைக்க நாங்கள் அவர்களைத்தான் அழைத்தோம். ஜெயலலிதா வந்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டு, அரசுக்கு வரக்கூடிய நிதி வருவாயில் 98 சதவீதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாகவே கொடுத்துவிடுகிறோம். மீதி இருக்கிற 2 சதவீத நிதியை வைத்துதான் நாங்கள் மக்கள் நலத்திட்டங்கள், ஆட்சியை நடத்திக்கொண்டு போகிறோம் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அப்போது, நாங்கள் அவர்களுக்கு பல உதாரணங்களைக் கொடுத்தோம். அவரிடம் உங்களால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்றெல்லாம் கேட்டோம். இன்றைக்கு அதையேதான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்கிறார். இது ரொம்ப வேதனையாக இருக்கிறது. 33,000 கோடி ரூபாய் இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கிறார்கள் என்றால் அதில் 31,000 கோடி ரூபாய் நாங்கள் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளமாகவே கொடுத்துவிடுகிறோம். மீதி 2,000 கோடி ரூபாயில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்று சொல்கிறார். இதில்தான் அவர்களுடைய சம்பளமும் இருக்கிறது. அவர்களுடைய அகவிலைப்படி உள்பட அவர்களுடைய ஒட்டுமொத்த சம்பளமும் இதிலேதானே இருக்கிறது.

முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அவர்களுடைய சம்பளம் எவ்வளவு உயர்த்தி இருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிடட்டும். அவர்கள் எவ்வளவு படிகள் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை வெளியிடட்டும். எங்களுக்கு இன்றைக்கும் அகவிலைப்படியை நிறுத்தியிருக்கிறார்கள். ஈட்டிய விடுப்பை நிறுத்தியிருக்கிறார்கள்.

முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசு இதை நிறுத்தினார்கள், அவர்கள் திருப்பிக் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்கள் வந்த உடனே கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு, 1.4.2022ல் இருந்து கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். திருப்பி, எங்களுடன் 3 மாதத்திற்கு முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில் 1.1.2022 முதல் கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை.

அதனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் வருவதற்கு முன்பு ஒரு வார்த்தை சொல்கிறார்கள். வந்த பிறகு ஒரு வார்த்தை சொல்கிறார்கள். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் எல்லோருமே நாங்கள் அஞ்சல் வாக்குகளில்தான் வெற்றி பெற்றோம் என்று அரசு ஊழியர்களை மனதாரப் பாராட்டினார்கள். அதற்கு பிறகு, எங்களுக்கு ஒதுக்கக் கூடிய பணத்தில்தான் இவர்களுக்கும் சம்பளம் போகிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

கேள்வி: பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளன. இரண்டு கட்சிகளிடமும் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாது என்று தெரிந்தே முன்வைத்து வருகிறீர்களா?

சு. தமிழ்ச்செல்வி: ஆமாம், உலக வங்கி முடியாது என்கிறார்கள். மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை 1.1.2004ல் இருந்து அறிமுகப்படுத்தியது. மாநில அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை 9 மாதங்கள் முன்கூட்டியே 1.4.2003ல் இருந்து அறிமுகப்படுத்தி தொடங்கிவிட்டார்கள். ஆனால், 2006ல் திமுக அரசாங்கம் வந்த பிறகுதான், அதற்கு வலுப்படுத்தும் விதமாக, சிபிஎஸ் பிடித்தம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி செய்தது திமுக அரசுதான். அதிமுக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தொடங்கியது. திமுக அரசு அதை வலுப்படுத்த கட்டாயப்படுத்தியது. சிபிஎஸ் பிடித்தம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இவர்கள் சம்பளம் பில் பாஸ் பண்ண வேண்டாம் என்று சொல்லி கட்டாயப்படுத்தி சிபிஎஸ் பிடிக்க வைத்தது திமுக அரசாங்கம்தான்.

நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், மேற்கு வங்கம், திரிபுரா மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் வசூல் பண்ணக்கூடிய 10 சதவீத பணத்தை ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆற்று ஆணையத்தில் (PFRDA) அந்த மாநிலங்கள் உறுப்பினராகி முதலீடாகப் போட்டுவிட்டார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு இன்றைக்கு வரைக்கும் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆற்று ஆணையத்தில் உறுப்பினரே கிடையாது. அதில் உறுப்பினர் இல்லை என்றும் அரசாங்கம் ஒத்துக்கொண்டது.

கேள்வி: இந்த விஷயத்தில், ஜெயலலிதா, கருணாநிதி, இ,பி.எஸ், மு.க. ஸ்டாலின் ஒரே மாதிரிதானே செயல்பட்டு இருக்கிறார்கள் இல்லையா?

சு. தமிழ்ச்செல்வி: ஆமாம், இவர்கள் ஒரே மாதிரிதான் நடந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாறியிருக்கிறது. காட்சிகள் எதுவும் மாறவில்லை. 4 தேர்தல்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று வந்தாகிவிட்டது. இன்றுவரை ரத்தாகவில்லை. 5 லட்சம் கோடி கடனை அடைத்த பிறகுதான், நாங்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கையை சரி செய்கிறோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இதையேதான் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அரசு ஊழியர்களை ஒரு படி மேலே உயர்த்தி, அரசு ஊழியர்கள் அரசாங்கத்தின் அகமாகவும் முகமாகவும் இருக்கக்கூடியவர்கள், அவர்களின் கோரிக்கைகளை நான் கனிவுடன் பரிசீலனை பண்ணுகிறேன் என்று சொன்னார்கள். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் என்றைக்கு தீர்கிறதோ அன்றைக்கு கொடுக்கிறேன் என்று கூறியது எங்களுக்கு வேதனையின் உச்சகட்டமாக இருக்கிறது.

மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% – 4% அகவிலைப்படி அறிவிக்கப்போகிறார்கள். ஆனால், எங்களுக்கு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படிக்கு என்ன பதில், 1.1.2022ல் இருந்து கொடுத்தாலும்கூட ரொக்கமாக நிலுவையுடன் ஏற்கெனவே கொடுக்க வேண்டிய அந்த அகவிலைப்படியுடன் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆதங்கம். அதற்குள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஓய்வு பெறும் வயது 58, 59, 60 என்று கூறுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியபோது ஆதரித்தவர் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 59 ஆக உயர்த்தியபோதும் அவர்தான் ஆதரித்தார். எங்களுடைய நோக்கம் ஓய்வு பெறும் வயதை நீங்கள் 58 ஆகவோம் அல்லது 59 ஆகவோ அல்லது 60 ஆகவோ மாற்றுங்கள் அது அல்ல எங்கள் பிரச்சனை. ஆனால், இன்றைக்கு 5 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று சொல்லும்போது அந்த கடனை அடைத்த பிறகு கொடுப்போம் என்று சொல்கிறார். அதைவிட, ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு கிராடுவிட்டியை கடன்பத்திரமாக வழங்க திட்டமிட்டு வருவதாக ஒரு பேச்சு அரசு ஊழியர்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருக்கிறது என்பதுதான் இபோது பிரச்சனையாக இருக்கிறது. அது அரசு ஊழியர்களை இன்னும் கோபப்படுத்திக் கொண்டிருக்கிறது. கடன்பத்திரம் கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. எங்களுடைய கம்யூடேஷன் பணம், கிராடுவிட்டி பணம், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய எங்கள் பணம் அதை அரசு பத்திரமாக கொடுக்கிறோம் என்றால் அரசு ஊழியர்கள் அந்த பத்திரத்தை வாங்கிக்கொண்டு சென்று எத்தனை வருஷம் உயிருடன் இருக்கப் போகிறார்கள். அவர்களுக்கு யார் சோறு போடுவார்கள். அதனால், இந்த திட்டம் அமல்படுத்துவதற்கு சாத்தியமே இல்லை. அது போல ஒரு சூழ்நிலை இல்லை. யாரும் பயப்பட வேண்டாம், பதற்றப்பட வேண்டாம் என்று இந்த விஷயத்துக்கு அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

5 லட்சம் கோடி ரூபாய் கடனைக் காட்டுகிறீர்கள் என்றால், செலவை மிச்சப்படுத்த 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் சம்பளத்தை கட் செய்யுங்கள். நாங்கள் மக்கள் சேவைக்காக்தான் வந்திருக்கிறோம் என்று சொல்லி சம்பளம் வாங்காதீர்கள். தொகுதிப் படி வாங்காதீர்கள். டெலிபோன் பில் வாங்காதிர்கள், சிலிண்டர் பணம் வாங்காதீர்கள். அவர்கள் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்று கணக்கிடுங்கள். நாங்கள் ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தோம் நாங்களும் ஓட்டு போட்டு 10 ஆண்டுகளாக பார்த்துவிட்டோமே இந்த அரசாங்கம் வந்தாலாவது ஒரு திர்வு கிடைக்காதா என்று எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்தோம். இந்த அரசாங்கத்துக்கு நாங்களும் வாங்களித்திருக்கிறோம். ஆனால், என்ன செய்வது எந்த அரசாங்கம் வந்தாலும் போராட்டம்தான் வாழ்க்கை என்று முடிவாகிவிட்ட பிறகு, இவரும் (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) அதே மாதிரிதான் பேசுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எங்களுடைய மாநில மாநாட்டில், ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர் ஆசிரியர்களின் தொழில்வரியை ரத்து செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால், இன்று வரை நாங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை அரசாங்கத்தில் செய்கிற வேலைக்கு தொழில் வரி செலுத்திக்கொண்டிருக்கிறோம். நாங்கள் அரசாங்க வேலை பார்க்கிறோம். தொழில் வரியை முறையாக செலுத்துவது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான். ஆண்டுக்கு ஒருமுறை முறையாக வருமானவரி செலுத்துபவர்களும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான். ஆனால், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு கொடுப்பது பெரிய சுமை ஓய்வூதியம் கொடுப்பது பெரிய சுமை என்று அரசாங்கம் சொன்னால் நாங்கள் யாரிடம் சென்று கேட்க முடியும்.

கேள்வி: தமிழ்நாடு அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர், கோரிக்கைளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும், போராட்டம் என்று அரசாங்கத்தை அச்சுறுத்தக் கூடாது என்று கூறுகிறார்கள்?

சு. தமிழ்ச்செல்வி: போராட்டம் என்பது அரசாங்கத்தை அச்சுறுத்தும் வார்த்தை கிடையாது. ஓய்வு பெற்று செல்பவர்கள் சிபிஎஸ் என எந்த பணமும் இல்லாமல், ஓய்வூதியமும் இல்லாமல் யாருடைய கையையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், எனது பணம் வேண்டும் என்றால் நான் தெருவில் வந்து தானே கேட்டாக வேண்டும். 20 வருடமாக அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அது கிடைக்கவில்லை என்கிறபோது நான் என்ன செய்ய முடியும்? வாழ்வாதாரம் என்று ஒன்று இருக்கு இல்லையா? எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாங்கள் ரோட்டுக்கு வந்துதானே ஆக வேண்டும். இதில் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்கான வார்த்தையே இல்லை. எங்களுடைய உரிமைகளைக் கேட்பது எப்படி அரசாங்கத்தை அச்சுறுத்துவதாக ஆகிவிடும்.

கேள்வி: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுதான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது?

சு. தமிழ்ச்செல்வி: அது மிகவும் தவறான ஒரு கருத்து. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நாங்கள் எல்லோருமே ஒரு நாள் சம்பளத்தை கொடுத்திருக்கிறோம். எங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை முந்தைய அரசாங்கத்துக்கும் கொடுத்திருக்கிறோம். இப்போதைய அரசாங்கத்துக்கும் கொடுத்திருக்கிறோம். கடந்த அரசாங்கத்தின் முதல்வர் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒரு நாள் சம்பளமாக 110 கோடி ரூபாயைக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த அரசாங்கம் வந்த பிறகும் ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்திருக்கிறோம். இப்படி 2 முறை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கொரோனா பொதுமுடக்கத்திலும் 50 சதவீதம் 100 சதவீதம் ஊழியர்கள் நாங்கள் வேலையை செய்துகொண்டிருக்கிறோம். அதே மாதிரி நாங்கள் எங்களுடைய அகவிலைப்படியை இழந்திருக்கிறோம். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்தலை இழந்திருக்கிறோம். கொரோனா தடுப்பு பணிகளுக்கு எவ்வளவு பணம் செல்வானது என்று அரசு ஒரு வெள்ளை அறிக்கையைக் கொடுக்கட்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பணத்தில் இருந்து எவ்வளவு பணம் எடுத்து செலவு செய்திருக்கிறார்கள் என்று ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடட்டும். நாங்கள் கேட்பது இதுதான்.

இதனால், ஒரு சுமையே கிடையாது, எங்களுக்கு கொடுக்கக்கூடிய பணத்தை அரசாங்கம் ஒரு சுமையாகக் கருதவே கூடாது. அரசின் போக்கு விதை நெல்லை வியாபாரமாக்குவது போன்றது என்ற வருத்தத்தை பதிவு செய்கிறேன்.

கேள்வி: அரசு ஊழியர்கள் விஷயத்தில் ஜெயலலிதா, கருணாநிதி, இ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் எப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள்?

சு. தமிழ்ச்செல்வி: அரசாங்கம் ஒரு முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்கிறபோது, எல்லோரும் ஒரே மாதிரியான சிந்தனையுடம் அரசு ஊழியர்களையும் அரசாங்கத்தையும் நினைக்கிறார்கள் என்கிறபோது அது வருத்தமாக இருக்கிறது. மக்கள் நலத் திட்டங்களை எல்லாம் இறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் எந்த குற்றச்சாட்டும் சொல்ல வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த ஆண்டு 5வது மாதத்தில் இருந்துதானே இந்த அரசாங்கம் அமைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அதையும் நாங்கள் குற்றமாக சொல்லவில்லை. அதனால்தானே, நாங்கள் அகவிலைப்படியை, ஈட்டிய விடுப்பை விட்டுக்கொடுத்தோம். எவ்வளவோ கடுமையான பணிகளை இன்று பொது சுகாதாரத் துறையிலும் மருத்துவத் துறையிலும் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நாங்கள் அவ்வளவு பணிகளை செய்து தமிழக அரசுக்கு நல்லப் பெயரை வாங்கிக்கொடுத்திருக்கிறோம். எவ்வளவு பேர் உயிரிழந்த பிறகு, நாங்கள் அந்த பணிகளை செய்துகொண்டிருக்கிறோம். அந்த பணிகளை நாங்கள் இன்னும் செய்வோம். அதே நேரத்தில், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுக்கக்கூடிய ஊதியத்தாலும் ஓய்வூதியத்தாலும், பணப்பலன்களாலும் தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது என்று கருத்துடன் இருக்கக்கூடிய முதல்வர்களின் எண்ணங்கள் மாற வேண்டும். அரசாங்கம்தான் ஒரு அச்சாணி. அரசு ஊழியர்கள்தான் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட எல்லாப் பணிகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பவர்கள் என்று எல்லா முதலமைச்சர்களும் சொல்கிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு.

கேள்வி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் குறைந்தபட்சம் எந்த கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

சு. தமிழ்ச்செல்வி: 2019ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம். சுப்பிரமணியம் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்திருக்க வேண்டும். தமிழக அரசுக்கு ஒரு பைசா செலவு இல்லாத இந்த கோரிக்கையையாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கலாம். நீதிமன்றம்கூட அவர் மீதான் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்து விட்டது. அந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவரைப் பற்றி எந்த கோப்புகளும் இல்லை என்று சொல்லிவிட்டார். நாங்கள் அன்றைக்கு இருந்த அதிமுக முதலமைச்சர், துணை முதலமைச்சரைப் பார்த்தோம். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என எல்லோரையும் பார்த்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

ஒத்த பைசா செலவில்லாமல் எம். சுப்பிரமணியம் அவர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு சென்றிருந்தால், நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். பொருளாதார கோரிக்கைகளை எல்லாம் நாங்கள் எப்படியாவது வாங்கிக்கொள்வோம். 30.5.2019ல் அவர் பணி ஓய்வு பெற்ற பிறகும், 2 அரசாங்கமும் அவருடைய தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஜாக்டோ ஜியோ போராட்டம் நடக்கும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அண்ணா அறிவாலயம் சென்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதை சரி செய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் கொடுத்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், அந்த தேதியைக்கூட என்னால் சரியாக சொல்ல முடியும். நாங்கள் போய் பார்த்தபோது அவ்வளவு நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் எங்களுக்கு கொடுத்தார். குறைந்த பட்சம் இந்த ஒரு கோரிக்கையைக்கூட நிறைவேற்றாமல் போனது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tngea-president-tamilselvi-special-interview-on-tn-govt-employees-demands-386353/

ஸ்டாலின் பேச்சால் கடும் அதிருப்தி; அவநம்பிக்கை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்ட எச்சரிக்கை

 20 12 2021 

TN Government Employees Association Dissatisfaction, CM MK Stalin speech, ஸ்டாலின் பேச்சால் கடும் அதிருப்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அவநம்பிக்கை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் எச்சரிக்கை, CM MK Stalin, Tamilnadu

அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றம் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு நேற்று (டிசம்பர் 19) நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்த நிலையில், முதலமைச்சரின் உரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ. லெட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நேற்றைய (19.12.2021) தினம் நடைபெற்ற ஒரு அரசு ஊழியர் அமைப்பின் மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

முதலமைச்சரின் உரையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இருக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு, தமிழகமெங்கும் பரவலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது…

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான…

பெங்கல் போனஸ் ரூ 7000/-

Group A & B க்கு மீண்டும் கருணை தொகை

1.7.21 முதல் ரொக்கமாக 14 % அகவிலைப்படி…

ஒப்படைப்பு விடுப்பு பணப்பலனை மீண்டும் வழங்குதல்…

புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களின் தற்காலிக பணி நீக்கம் இரத்து…

வருவாய் துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம் மற்றும் ஓய்வூதியம்…

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம்…
மற்றும் சட்டபூர்வமான ஓய்வூதியம்…

ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்…

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது…

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக் காலமாக்குவது மற்றும் சாலைப் பணியாளர்களை unskiled என அறிவிப்பது…. மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பேருராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம்…

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியர்களை நிரந்தரமாக்குதல்…

மேல்நிலை தொட்டி இயக்குநர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் தூய்மைக் காவலர்களின் கோரிக்கைகள்…

போன்றவற்றை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் முதலமைச்சர் அவர்களின் உரையில் இருக்கும்….

என்ற நம்பிக்கை ஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் மத்தியில் இருந்தது…

குறிப்பாக அரசு ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு தலைமையேற்ற ஒரே காரணத்திற்காக முந்தைய ஆட்சியாளர்களால் பழிவாங்கும் நோக்கோடு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களது தற்காலிகப் பணி நீக்கம் ரத்து செய்யப்படும் என்பதை மட்டுமாவது முதலமைச்சர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை அரசு ஊழியர்களிடையே பெருமளவில் இருந்தது…

ஆனால், மு.சுப்பிரமணியன் மீதான அரசுத் துறையின் குற்றச்சாட்டை நீதிமன்றமே தள்ளுபடி செய்த பின்பும், அவரது தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்வதால் எவ்வித நிதிச் செலவும் இல்லாத நிலையில் அதற்கான அறிவிப்பைக் கூட வெளியிடாமல்,…

“அரசு கடும் நிதிச்சுமையில் இருக்கிறதென்றும், ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறதென்றும்…

அரசின் கஜானாவிலிருந்து எந்த அளவுக்கு கூடுதலான நிதி சம்பளமாக… ஊதியமாக… கூலியாக… பட்டுவாடா செய்யப்படுகிறதோ, அதே அளவு பொதுச் சமூகத்தில் பொருளாதார சுழற்ச்சியும், பொருளாதார மலர்ச்சி ஏற்படும் என்பதையும்,

அந்த வகையில் தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக செலவிடப்படும் தொகையானது…

தமிழகத்தின் பொருளாதார, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பினை பெருக்குவதற்கானதே என்ற உண்மைகளை மறந்தும்… மறைத்தும்…

முதலமைச்சர் அவர்கள் முந்தைய காலத்தில் போராட்டங்கள் ஏற்படுத்திய நிர்பந்தத்தால் வழங்கப்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும்… தற்போது பட்டியலிட்டு ஆற்றிய உரை, அரசு ஊழியர்களிடையே இந்த அரசின் மீது கடும் அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் உருவாக்கி உள்ளது.

அது மட்டுமல்லாது, நிதி அமைச்சர் சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையில், 2006-07-இல்‌ மொத்த வருவாய்‌ செலவினத்தில்‌ சம்பளம்‌ மற்றும்‌ ஊதியங்கள்‌ 27.95 சதவீதமும்‌ ஓய்வூதியம்‌ மற்றும்‌ ஓய்வுக்காலப்‌ பலன்கள்‌ 14.22 சதவிகிதமாக இருந்த நிலையில்‌, 2020-21-இல்‌ முறையே 24.92 சதவீதம்‌ மற்றும்‌ 10.50 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும்…

தமிழக அரசின்‌ நிதி நிலை அறிக்கையில்‌ நிதி வருவாயில்‌ ஒரு ரூபாயில்‌ 19 பைசா ஊதியத்திற்காகவும்‌, 8 பைசா ஓய்வூதியத்திற்காகவும்‌ செலவிடப்படுகிறது என்றும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 12 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், சம்பளங்கள், ஊதியங்கள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பயன்கள் ஆகியவை செலவினத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதத்தை விட குறைவான வீதத்தில் அதிகரித்து வருகிறது.

ஊதிய குழு பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தியால் அரசு ஊழியர்கள் ஊதியமும் ஓய்வூதியமும் உயர்ந்துள்ள நிலையில் கூட செலவு சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கும் நிலையில், சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், “பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ 33,000 கோடி நிதியில் ரூ 31,000 கோடி அதாவது ஏறக்குறைய 94 சதவீதம் ஆசிரியர்களின் சம்பளத்திற்கே செலவு செய்யப்படுகிறதென உண்மைக்குப் புறம்பாக, அவதூறாக கூறியிருப்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்த உண்மைகளையும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென, மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசுக்கு 5 லட்சம் கோடி கடன் உள்ளதாகவும்…
கடன் அடைக்கப்பட்ட பின்பு ஊழியர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படும்… என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.

ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், முந்தைய ஆட்சியாளர்கள் அரசு கஜானாவை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள் என்று ஆட்சிக்கு வருபவர்கள் கூறும் நடைமுறையும் புதிதல்ல.

அரசின் கடன் தீரும் வரை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்க மறுக்கும் போக்கினை ஏற்க இயலாது.

அரசிற்கு உள்ள கடன்களை அடைப்பதற்கு மேலும் கூடுதலான வருவாய் ஈட்டுவதற்கான வழிவகைகளை கண்டறிவது தான் ஒரு மக்கள் நல அரசின் அணுகுமுறையாக இருக்க முடியும்.

அதற்கு மாறாக, கடனை காரணமாகக் காட்டி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை, உணர்வுகளை உதாசீனப்படுத்திடும்
இதே நிலை தொடரும் பட்சத்தில். “நிர்வாகத்தின் கால் செருப்பாக மாறிப் போகாமல், ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான படைக்கலனாய் அணிவகுத்து, ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் தாங்கள் அமர வைத்த அரசை தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராடுவது தவிர்க்க இயலாததாகிவிடும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இத்தகைய சூழலில், ஏற்கனவே 05/12/2021 அன்று திருச்சியில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டு அறைகூவல் தீர்மானத்தின் அடிப்படையில், எதிர்வரும் 23/12/2021 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள பெருந்திரள் முறையீடு… 28/01/2022 அன்று சென்னையில் நடைபெற உள்ள பெருந்திரள் முறையீடு… 10/02/2022 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் ஆகிய போராட்டங்களை லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை திரட்டி அரசை நிர்பந்திக்கும் போராட்டமாக நடத்திட உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அறிவித்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-employees-association-dissatisfaction-in-cm-mk-stalin-speech-385810/

மம்தா முயற்சியை புறந்தள்ளிய திமுக: டெல்லி கூட்டணி நிலைப்பாடு இதுதான்!

 20 12 2021 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர்த்து மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மம்தாவின் முயற்சியை புறந்தள்ளும் விதமாக திமுக முரசொலியில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திமுகவின் டெல்லி கூட்டணி காங்கிரஸ் கட்சியுடன் தான் என்று தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் இணைந்து அடுத்த மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பாஜகவை எதிர்ப்பது உறுதி என்பதை திமுக மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

அண்மையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தது, தேசிய அளவில் மாநிலக் கட்சிகளின் மூன்றாவது அணி அமைக்கும் ஊகங்களை எழுப்பியது. இந்த சூழலில்தான், திமுகவின் மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரிக்கக்கூடாது என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியான திமுகதான், 2019 மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அறிவித்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தி, திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பாஜகவை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க, தேசிய அரசியல் தொடர்பான பிரச்னைகளை முக்கியமாக ஒரே திட்டத்துடன் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும்.” என்று கூறினார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலு, “மம்தா பானர்ஜியின் தனியாகச் செல்லும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரப்போவதில்லை. மாறாக அவருடய முயற்சி எதிர்க்கட்சிகளின் பொது எதிரியான பாஜகவுக்கே உதவியாக இருக்கும்.” என்று கூறினார்.

பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்துவது குறித்து பேசிய டி.ஆர். பாலு, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என்.சி.பி தலைவர் சரத் பவார் மற்றும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேசிய அரசியலை விவாதிக்க பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றாக விவாதிக்க அழைக்க முடியும்” என்று கூறினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தனி வேட்பாளரை முன்னிறுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸுடனான கூட்டணி குறித்து திமுகவின் முரசொலி நாளிதழில் சமீபத்தில் வெளியான இரண்டு தலையங்கங்கள் உறுதி செய்கின்றன.

முரசொலி தலையங்கத்தில் இந்துத்துவா குறித்த ராகுல் காந்தியின் கருத்துகளையும், பாஜகவை ஒருமனதாக எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான மம்தா பானர்ஜியின் விமர்சனத்திற்குப் பிறகும், சந்திரசேகர ராவ் சந்திப்புக்கு முன்பும் இரண்டு தலையங்கங்களை முரசொலி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார். ஜிஎஸ்டி வரிப் பங்குகளையோ, வெள்ள நிவாரணத்துக்கான நிதியையோ வழங்காமல், மாநில அரசுகளை கொத்தடிமைகளைப் போல கையேந்தும் நிலையில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

தேசிய அளவில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி டி.ஆர். பாலு, “மம்தா பானர்ஜி தனியாக மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரப்போவதில்லை. மாறாக எதிர்க்கட்சிகளின் பொது எதிரியான பா.ஜ.க.வுக்கு இது ஓரளவுக்கு உதவியாக இருக்கும்.” என்று விமர்சனம் செய்தார்.

மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அளவில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அண்மையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில்தான், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர்த்து மம்தா பானர்ஜி மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியை புறந்தள்ளும் விதமாக திமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவின் கருத்து அமைந்துள்ளது. அதோடு, காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்ற திமுகவின் உறுதியான நிலைப்பாடும் வெளிப்பட்டுள்ளது. இதையேதான், திமுகவின் முரசொலி நாளிதழில் வெளியான 2 தலையங்கங்களும் உறுதிப்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-refuse-mamata-banerjees-third-front-farming-and-alliance-confirm-with-congress-385753/

அம்மா வளாகம் ‘பேராசிரியர் க அன்பழகன் மாளிகை’ என பெயர் மாற்றம்; அதிமுக கண்டனம்

 19 12 2021

Amma Valagam, Amma Valagam name changed as Perasiriyar K Anbazhagan Maaligai, Perasiriyar K Anbazhagan Maaligai, AIADMK's OPS EPS condemns MK Stalin, அம்மா வளாகம், பேராசிரியர் க அன்பழகன் மாளிகை, அம்மா வளாகம் பெயர் மாற்றம், அதிமுக கண்டனம், ஓபிஎஸ், இபிஎஸ், அதிமுக, AIADMK, cm mk stalin, ops, eps, dmk

சென்னை நந்தனத்தில் உள்ள ஜெயலலிதா பெயரில் இருந்த அம்மா வளாகத்திற்கு மறைந்த திமுக மூத்த தலைவர் பேராசிரியர் க அன்பழகன் மாளிகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மறைந்த திமுக மூத்த தலைவர் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் க. அன்பழகனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பண்பின் சிகரம் – நட்பின் இலக்கணம், நான் பெரியப்பா என்று அன்போடு அழைத்த நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டையொட்டி, நந்தனம் – ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து, அவ்வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என்று பெயர் இருந்த நிலையில், அதற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்பதற்கேற்ப விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தொட்டி குழந்தைத் திட்டம், மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், மடிக் கணினி திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில், உணவு வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டம், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், சட்டப் போராட்டத்தின் மூலம், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பினை பெற்றுத் தந்தது என எண்ணற்றத் திட்டங்களை தமிழக மக்களுக்கு தந்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றதோடு, தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் அம்மா ஜெயலலிதா.

தமிழக அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த அம்மாவை (ஜெயலலிதா) கௌரவிக்கும் விதத்தில் நந்தனத்தில் அமைந்துள்ள நிதித் துறை வளாகத்திற்கு ‘அம்மா வளாகம்’ என்று அதிமுக ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது.

ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தில் 10 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட இரண்டு தளங்களைத் திறந்து வைக்கும்போது “சென்னை – நந்தனம், அம்மா வளாகத்தில் அமைந்துள்ள ஒருஞ்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகம்” என்று 16.06.2020 நாளிட்ட செய்தி வெளியீடு எண் 426-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளியிடப்பட்ட தொலைபேசி கையேட்டில் கருவூல அலுவலகம், ஓய்வூதிய வழங்கல் அலுவலகம், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் (தெற்கு), மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கை இயக்கம், ஓய்வூதிய இயக்கம் ஆகியவற்றின் முகவரியிலும் “Ammaa Complex” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அம்மா வளாகம்’ என்ற பெயரில் இயங்கி வரும் அந்த நிதித் துறை வளாகத்தில் திமுக பொதுச் செயலாளராகவும் தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகன் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும் அந்த வளாகத்திற்கு ஏற்கெனவே உள்ள அம்மா வளாகம் என்ற பெயரை நீக்கிவிட்டு ‘பேராசிரியர் க. அன்பழக மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்து வந்துள்ளது.

பேராசிரியர் க. அன்பழகன் நிதித் துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதே சமயத்தில், ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.

பேராசிரியர் க. அன்பழகன் நிதித்துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பது நியாயமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொருவரை புகழ்வது போல் ஆகும். இது போன்ற செயல் தமிழ்ப் பண்பாட்டிற்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான செயல், அம்மா (ஜெயலலிதா) தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தேசியத் தலைவராக அனைவராலும் கருதப்பட்டார். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் எல்லாம் அம்மாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள். வட இந்திய மாநிலத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒரே தமிழினத் தலைவர் அம்மா அவர்கள். இப்படிப்பட்ட தலைவரின் பெயரில் அமைந்துள்ள வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுகிறது என்று வந்துள்ள செய்தியில் உண்மை இருப்பின் அது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே, ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை மாற்ரி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயரைச் சூட்டலாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/amma-valagam-name-changed-as-k-anbazhagan-maaligai-aiadmks-ops-eps-condemns-385194/

முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன புதுமொழி

 19 12 2021 மகாத்மா காந்தியின் மிகவும் பிரபலமான பொன்மொழியான செய் அல்லது செத்துமடி என்ற பொன்மொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமொழியாக மாற்றி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “எப்பொழுதும் கட்சிகள் கூட்டணிகள் வைக்கிறதோ இல்லையோ, ஆனால், நீங்கள் எப்போதும் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள். நான் எப்போதுமே அதிகம் பேச மாட்டேன். செயலில் நம்முடைய திறமையை நாம் காட்டிட வேண்டும். ஒரு பொன்மொழி உண்டு பேச்சைக் குறைத்து செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும் என்று. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு Do or Die,செய் அல்லது செத்து மடி என்பார்கள். நான் அதைக்கூட அந்த வார்த்தையை கொஞ்சம் திருத்தம் செய்ய வேண்டும் என சொன்னால், என்னைப் பொறுத்த வரையில், Do and Die, செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன். செய்துமுடித்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்ற உணர்வோடு நான் எனது கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறேன்.

அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம், அரசு ஊழியர்கள் இல்லையென்றால் அரசாங்கமே இல்லை. அதை சொவதற்காகத்தான் நான் இப்போது வந்திருக்கிறேன். திமுக ஆட்சி என்பது அரசு ஊழியர்களின் பொற்கால ஆட்சியாக அமைந்திருக்கிறது.

நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் கைவிடப்படும்.

அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான்; அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ்நாடு அரசின் நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/not-do-or-die-cm-mk-stalin-says-new-quotes-385239/

வெளிநாட்டு பயணிகளுக்கு 7 நாள் வீட்டு தனிமை – மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் தமிழக அரசு

 வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் பயணிகளை 7 நாள்கள் வீட்டு தனிமையில் வைக்கும் முடிவுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. ஏழு நாள்களுக்கு பிறகு, ஆர்டி-பிசிஆர் சோதனை செய்துகொண்டு, நெகட்டிவ் ரிசல்ட் வந்தபிறகே, பொதுவெளியில் பயணிக்க அனுமதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அண்மையில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.

தற்போது, ஆபத்தான நாடுகள் என வரையறுக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. வெறும் 2 விழுக்காடு பயணிகளுக்கு மட்டுமே ரேண்டமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” ஆபத்தான நாடுகள் பட்டியிலில் இல்லாத நைஜீரியா,காங்கோ நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. எனவே, அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் வீட்டு தனிமை கட்டாயமாக்க வேண்டும். ஏழு நாட்கள் கழித்து அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தி, நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே, வீட்டைவிட்டு வெளியேற அனுமதியளிக்க வேண்டும். இத்தகைய மாற்றங்களை கொண்டு வருவது குறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம்” என்றார்.

அமைச்சர் வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தம் 14,800 வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோனை மேற்கொண்டதில், 70 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், 28 பேருக்கு S வகை மரபு மாற்றம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 70 பேரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதில் 10 பேரின் முடிவு வெளியாகியுள்ள நிலையில், அதில் ஏற்கனவே ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர் மற்றும் 8 பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-ask-central-to-make-home-isolation-mandatory-for-international-passengers/

 ராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டப் பணி அரசின் கவனத்திற்காக காத்துக் கிடக்கிறது

 தென்காசி மாவட்டத்தின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றான ராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டப் பணிதான் இப்படி அரசின் கவனத்திற்காக காத்துக் கிடக்கிறது. ராமநதி என்பது, குற்றாலம்- பாபநாசம் இடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிறது. பாரதியார் மணம் முடித்த கடையம் என்கிற ஊரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவுதான். அங்கு மலையடிவாரத்தில் ராமநதியின் குறுக்கே அணை கட்டப்பட்டிருக்கிறது.

சுமார் 4 லட்சம் கன அடி கொள் அளவு உடைய இந்த அணை, வருடம் தவறாமல் பெருகிவிடும். அணை நிரம்பியதும் அந்தத் தண்ணீர் கடையம் அருகேயுள்ள ரவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களைக் கடந்து தாமிரபரணியில் சங்கமித்து, கடலில் போய் கலக்கிறது. வருடம்தோறும் இப்படி உபரி நீர் இங்கே வீணாகிக் கொண்டிருக்க… இதே கடையம் ஒன்றியத்தின் வடக்குப் பகுதி வறட்சியால் வாடிக் கொண்டிருக்கிறது. 

அதாவது, கடையம் ஊருக்கு வடக்கே கீழப்பாவூர் ஒன்றியத்தின் தென் பகுதியான பாவூர்சத்திரம் பகுதி வரை வேறு எந்த ஆற்றுப் பாசனமும் இல்லை. பாவூர்சத்திரத்திற்கு வடக்குப் பகுதி சிற்றாறு (அதுதாங்க, குற்றாலம் நீர்வீழ்ச்சி) பாசனம் மூலமாக ஓரளவு செழிப்பாகி விடுகிறது. பாவூர்சத்திரத்திற்கும் கடையத்திற்கும் இடைப்பட்ட பகுதி மட்டும் வானம்  பார்த்த பூமியாக வருடம் தோறும் காய்கிறது.

ராம நதி அணை

இந்த வேதனையைப் போக்க உருவானதுதான், ராமநதி – ஜம்பு நதி இணைப்புக் கால்வாய்த் திட்டம். ஜம்பு நதி என்பது ராமநதிக்கும் குற்றாலத்திற்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு சிறு நதி. இதில் ராமநதி போல தண்ணீர் பெருக்கெடுத்து வருவதில்லை. மலையில் பலமாக மழை பெய்தால், ஜம்பு நதியில் வரும் தண்ணீர், மானாவாரிக் குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு ஓரளவு கை கொடுக்கும்.

எனவே ராமநதியின் உபரி நீரை ஜம்பு நதியில் கொண்டு வந்து சேர்த்தால், இங்கேயும் ஒவ்வொரு ஆண்டும் மொத்தக் குளங்களும் நிரம்பி, விவசாயம் செழிக்கும். இந்த நோக்கத்தில்தான் 2015-ம் ஆண்டு ராமநதி – ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக ராமநதி – ஜம்பு நதி இடையே இணைப்புக் கால்வாய் வெட்ட வேண்டிய தூரம் வெறும் 3.15 கி.மீ மட்டுமே. பிறகு ராமநதி – ஜம்பு நதி இணைந்த தண்ணீர் குற்றாலப் பேரி கால்வாய், நாராயணப் பேரி கால்வாய்கள் வழியாக குற்றாலப் பேரி குளம், நாராயணப் பேரி குளம், கைக்கொண்டார் குளம் ஆகியவற்றை நிரப்பி ஆவுடையானூர் குளம் வரை வந்து சேரும். இவை அனைத்தும் கீழப்பாவூர் ஒன்றியத்தின் தென் பகுதிகள். இங்கிருந்து கடையம் ஒன்றியத்தின் வட பகுதிகளான மைலப்புரம், புங்கம்பட்டி, பண்டாரகுளம் வரை 4.15 கி.மீ தொலைவுக்கு மற்றொரு துணைக் கால்வாய் புதிதாக அமைக்க  வேண்டும். ஆக, கால்வாய் அமைக்க வேண்டிய மொத்த தொலைவு 7.30 கி.மீ.

அடிக்கல் நாட்டி தொடங்கிய நிலையில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணி

இந்த இணைப்புக் கால்வாய்க்காக 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போதே ஆய்வுப் பணிக்காக ரூ40 லட்சமும், நிலம் கையகப்படுத்த ரூ5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் நிர்வாக ரீதியிலான தாமதங்களால், நான்கரை ஆண்டுகள் கடந்து 10-3-2020ல்தான் நிலம் கையகப்படுத்த அரசாணை (எண் 80) வெளியானது.

அப்போதும் அரசு அறிவித்தபடி 7 பணியாளர்களை நியமிக்காமல், 2 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இதனால் நிலம் கையகப்படுத்தும் பணியும் கிடப்பில் போடப்பட்டது. எனினும் 2020 பிப்ரவரி 26-ம் தேதி கால்வாய் வெட்ட அரசாணை (எண் 64) பிறப்பிக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 4-ம் தேதி கால்வாய் வெட்டும் பணிக்காக ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கால்வாய் அமைக்க வனத்துறை அனுமதி பெறவே இல்லை. நிலம் கையகப்படுத்தும் பணியும் முடியவில்லை.

இதனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு (20-8-2020) பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்ட கால்வாய்ப் பணி, அப்படியே நின்று போனது. திமுக ஆட்சி அமைந்ததும் ராமநதி – ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக் குழுவினர் இந்தப் பிரச்னையை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

உபரி நீரி வெளியேறும் காட்சி

அதன் அடிப்படையில் மாவட்ட வனத்துறை இதற்கான பரிந்துரைகளை சென்னையில் முதன்மை வனப் பாதுகாவலர் அலுவலகத்திற்குஅனுப்பி வைத்தது. முதன்மை வனப் பாதுகாவலரும் மேல் நடவடிக்கைக்காக 23-9-2021 அன்று சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளருக்கு கோப்புகளை அனுப்பி வைத்திருக்கிறார்.

இனி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநில வனவிலங்கு வாரியம் ஒப்புதல் கொடுக்கவேண்டியது மட்டுமே பாக்கி! இதற்காக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி ஆகியோரை சந்திக்கும் முயற்சிகளை செயற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநதி- ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக் குழு அமைப்பாளர் இராம. உதயசூரியன் இது தொடர்பாக கூறுகையில், ‘பாவூர்சத்திரத்தின் தென் பகுதி ஒரு காலத்தில் மிளகாய் வத்தல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற பகுதி. அதனால்தான் பாவூர்சத்திரம், தமிழகத்தின் முக்கியமான மிளகாய் வத்தல் வர்த்தக கேந்திரமாகத் திகழ்ந்தது. இந்தப் பகுதியில் சரியான பாசன வசதி இல்லாததால், விவசாயமும் பொய்த்தது. இந்த ஏரியாவின் வர்த்தகம்- பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

அமைச்சர் துரைமுருகனை சந்தித்தபோது

இதையெல்லாம் மீட்க, ராமநதி-ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் அவசியம் தேவை. முழுக்க ராமநதியில் வீணாகும் தண்ணீரை மட்டுமே இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்துகிறோம். எனவே இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இணைப்புக் கால்வாய் வெட்டினால் இந்த 2 ஒன்றியங்களிலும் 21 குளங்கள் ஆண்டுதோறும் நிரம்புவது உறுதி செய்யப்படும். சுமார் 4050 ஏக்கர் பாசன வசதி பெறும். 784 கிணறுகள் செறிவூட்டப்பட்டு,100 கிராமங்களின் குடிநீர் தேவை ஈடு செய்யப்படும்.

இந்தத் திட்டத்திற்கான மொத்த நிதி 41.08 கோடி ரூபாய். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 39 கோடி ரூபாயை நபார்ட் வங்கி டெப்பாசிட் செய்துவிட்டது. எஞ்சிய சிறு தொகையை மாநில அரசு ஒதுக்குவதில் பிரச்னை இருக்காது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வன விலங்கு மாநில ஆணையம் கூடி ஒப்புதல் அளித்தால் ஓராண்டில் திட்டத்தை நிறைவேற்றிவிட முடியும். இதற்கான முயற்சிகளைசெய்து வருகிறோம்’ என்றார் உதயசூரியன்.

இந்தத் திட்டத்தின் துவக்கப் புள்ளியான ராமநதி அணைக்கு திட்டம் தீட்டியவர் காமராஜர். ஆனால் கலைஞர் கருணாநிதியின் முதல் முறை ஆட்சியில்தான் திட்டம் நிறைவு செய்யப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது. அதேபோல அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு இழுபறியில் நிற்கும் இந்த இணைப்புக் கால்வாய் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுப்பாரா?

source https://tamil.indianexpress.com/tamilnadu/tenkasi-ramanathi-jambunathi-link-canal-project-delay-issue-384802/

பதிவுத் துறையில் நடந்த மோசடிகளை விசாரிக்க குழு: தமிழக அரசு அறிவிப்பு!

 17 12 2021 பதிவுத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க, இரு அடுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

முதல் அடுக்குக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமை தாங்குவார், மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த ஆலோசகரும், பதிவுத் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் உறுப்பினர்களாக இருப்பார்கள்

இரண்டாம் அடுக்கு, அதாவது, நிர்வாக பிரிவு தலைவராக பதிவுத் துறையின் கூடுதல் டிஜி தலைவராக இருப்பார்.

இக்குழு மூன்று ஆண்டுகள் செயல்பட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் செல்லும். மேலும், போலி பதிவுகள் மற்றும் நில அபகரிப்பு சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற்று, அதன் அறிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

மாநிலங்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் பதிவு செய்தல், போலி ஆவணங்கள் பதிவு செய்ததற்காக கண்டுபிடிக்க முடியாத சான்றிதழ் தயாரித்தல், மோசடி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தல், ஒரே சொத்தை பலருக்கு விற்றல், போலி ஆவணம் தயாரித்து உண்மையான உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை அபகரித்தல் உள்ளிட்ட பதிவுத்துறையில் நடந்த முறைகேடுகளை இந்த குழு விசாரிக்கும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-forms-committee-to-investigate-frauds-in-the-field-of-registration-384363/

காணாமல் போன நிலக்கரி… கிரிப்டோகரன்சி… இந்த ரெண்டுக்கும் தங்கமணி விளக்கம் சொல்லட்டும்: செந்தில் பாலாஜி

 17 12 2021 முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்து வருகிறது. இதில் முக்கியமாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரின் வீடுகளில் வரிசையாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதேபோல் முந்தைய ஆட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகளும் இந்த ரெய்டில் சிக்கியுள்ளனர்.

முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து வரிசையாக வெவ்வேறு முன்னாள் அமைச்சர்களிடம் இந்த ரெய்டு நீட்டிக்கப்பட்டது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்டோரின் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. கடைசியாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு ரெய்டு

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவரின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சமீபத்தில் ரெய்டு நடத்தினர். சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி

இந்த ரெய்டை தொடர்ந்து தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தங்கமணி அமைச்சகராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக சேர்த்த சொத்துக்களை அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாகவும் போலீசார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடந்த ரெய்டு தொடர்பாக கண்டனம் தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும், தி.மு.க. அரசின் சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

மேலும், “தி.மு.க.வின் இந்த பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் தி.மு.க. அரசு ஈடுபடாமல் நேர்மறை அரசியலை முன்னெடுத்து தேர்தலில் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்பை முனையுங்கள் என்று வலியுறுத்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்றும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்திய பிறகு செய்தியளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “அ.தி.மு.க.வை பழி வாங்கும் நோக்கில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வலு சேர்க்க கூடாது என்பதற்காக இது போன்று முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு பின்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் தி.மு.க.வில் உள்ளதால் என்னை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி

1,000 செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க. தலைவருக்கு செந்தில் பாலாஜியின் சுயரூபம் தெரியவில்லை. அவரை பற்றி போக போக தெரிந்து கொள்வார். எனது வீட்டில் இருந்து ரூ.2.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தவறான தகவல் வெளியாகி உள்ளது. கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனது வீட்டில் இருந்து ஒரே ஒரு செல்போனை மட்டுமே என்னிடம் கையெழுத்து வாங்கி லஞ்ச ஒழிப்பு துறையினர் எடுத்து சென்றுள்ளனர். நான் நேர்மையாக உள்ளேன். எனவே எனக்கு கடவுள் துணை இருப்பார்.” என்று தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

இந்த நிலையில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்கு தெரியாத கிரிப்டோகரன்சி இந்த ரெண்டுக்கும் தங்கமணி விளக்கம் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:- “அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு வித கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தங்கமணி ஒருவிதமான கருத்தை வெளியிட்டுள்ளார். இவர்கள் மூவரும் கூடி ஒரே கருத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையிலே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய வரலாற்றிலே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி என்கிற பெருமையை அமைச்சர் தங்கமணி பெற்று இருக்கிறார். கண்பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்கு தெரிய கிரிப்டோ கரன்சி இவை இரண்டுக்கும் விளக்கம் சொல்லவேண்டிய தங்கமணி, என்ன பேசவேண்டும் என்று புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

2006, 2011, 2016, 2021 ஆகிய 4 தேர்தலில் அவரின் சொத்து மதிப்பை ஒப்பிட்டு பார்த்து, அதனுடைய வித்தியாசங்கள் என்ன?, இது எங்கிருந்து வருமானம் வந்தது என்று அவர் முதலில் தெளிவுபடுத்திக் கொண்டு, அதற்குபிறகு மற்ற கருத்துக்களை சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

தமிழக மாநில பாடலாக தமிழ்தாய் வாழ்த்து : அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

 17 12 2021 

Tamilnadu News Update : தமிழ்தாய் வாழ்த்து தமிழகத்தின் மாநில பாடலாக அறிவித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சி உட்பட எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் நிகழ்ச்சி தொடங்கும்போது தமிழதாய் வாழ்த்து பாடுவது வழக்கம். ஆனால் சென்னை ஐஐடியில் கடந்த நவம்பர் 20-ந் தேதி நடைபெற்ற 58-வர் பட்டமளிப்பு விழாவில், தமிழ்தாய் வாழத்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டத்தை தெரிவித்தனர்.   

மேலும் தமிழ்தாய் வாழ்த்து இறைவணக்க பாடல் தான் தேசிய கீதம் அல்ல என்றும், தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது அணைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டப்படியான விதிமுறை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி கூறியிருந்தார். இதனால் தமிழ்தாய் வாழ்த்து பாடல் குறித்து சமூக வலைதளங்களில் அதிக கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், நிகழ்ச்சிகள் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து கட்டாயம் ஒலிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மேலும் தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் மாற்றுத்தினாளிகளுக்கு எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்தாய் வாழ்த்து 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழ்தாய் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு

கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பல்கலைகழகங்கள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுஅமைப்பு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.

தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைவட்டுக்களைக் கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்பாட்டாக பாடப்பட வேண்டும்.

தனியார் அமைப்புகள் நடத்தும் கலை இலக்கிய மற்றும் பொதுநிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஊக்குவிக்க வேண்டும்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-order-for-tamilthai-greeting-on-tamilnadu-state-song-384618/

 17 12 2021 AIADMK to protest against Dmk Tamil News: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலைமை தாங்கி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைப்பது, அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-to-protest-against-dmk-tamil-news-admk-minister-jayakumar-sings-song-at-the-protest-site-384637/


மாதந்தோறும் மின்கட்டணம் எப்போது அமல்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

 மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடும் முறை எப்போது அமல்படுத்தபடும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வியாழக்கிழமை காலை டெல்லியில் மத்திய மின்சாரத்துறை மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

கேள்வி: நிலக்கரியை மத்திய அரசு குறைவாக கொடுப்பதனால், மின்சார உற்பத்தி ஏதாவது பாதிக்கப்படுகிறதா? அதனால், கூடுதலாக நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்கப்படுகிறதா? அல்லது ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தின்படி அடிப்படையில் நிலக்கரியைக் கேட்கிறோமா?

ஏற்கெனவே, போட்டிருக்கிற ஒப்பந்தங்களின் அடிப்படையில் நமக்கு நிலக்கரிகள் கிடைக்கப்பெறுகின்றபோது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிற நிலக்கரியின் அளவை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். அதனால் ஏற்படுகின்ற கூடுதல் செலவினங்களை நம்மால் தவிர்க்க முடியும். அதனால்தான், ஒதுக்கீடு செய்யப்பட்ட முழு அளவு நிலக்கரியை தமிழ்நாடு மின்சாரத் துறைக்க்கு வழங்க வேண்டும் என்று இப்போது வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

கேள்வி: தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் எப்போதிலிருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது?

மே 7ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். நடந்து முடிந்த சட்டமன்றத்தின் பொதுத்தேர்தலில் திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 6 மாத காலத்தில் 202 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். மின்சாரத் துறையில் மாதாந்திர கணக்கீடு என்பது மின்சாரத் துறையில் அதற்கான கட்டமைப்புகளை நாம் வலுப்படுத்திட வேண்டும். கணக்கெடுப்பதற்கான பணியாளர்களை அதிகரித்திட வேண்டும். அதே போல, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துகிறபோது, இந்த மாதாந்திர கணக்கீடு என்பது நடைமுறைக்கு கொண்டுவர முடியும். அதற்காகத்தான் இந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத்தின் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில், முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படையாக நிறைவேற்று வருகிறார். இந்த திட்டங்களும் விரைவாக படிப்படியாக முதலமைச்சர் நிறைவேற்றுவார்.

கேள்வி: மின்சாரத் துறை கட்டணம் உயரும் என்று ஒரு தகவல் பரவலாக பரவி வருகிறது. அது உண்மையா? அல்லது அரசிடம் அதுபோல திட்டங்கள் இருக்கிறதா?

தேர்தல் களத்தில் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற முடியாமல், ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, பல்வேறு கருத்துகளை, விமர்சனங்களை அரசின் மீது வைத்து வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகள் வதந்திகள் மக்கள் மத்தியில் எடுபடாது.

கேள்வி: தங்கமணி வீட்டில் நடந்த சோதனைக்கு நீங்கள்தான் காரணம் என்று அவர் நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்?

இன்று நாங்கள் வரும்போது முதலமைச்சர் மற்றும் டிடி சாரிடம் சொன்னோம். ஒரு நல்ல நோக்கத்துக்காக கடந்த பல ஆண்டுகளாக, தமிழக அரசு தமிழக மின்சாரத்துறை ஒன்றிய அரசின் மூலமாக பெற வேண்டிய நிலுவையில் இருக்ககூடிய பெற முடியாத சில திட்டங்களை, நம்முடைய உரிமைகளை நாம் கேட்டு பெற வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம். அதற்காக, ஒன்றிய அரசின் மின்சாரத் துறை அமைச்சரும் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால், அந்த கருத்தில் இருந்து மாறுபட்டு செல்ல வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இருந்தாலும்கூட நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள். என்னவென்றால், கடந்த காலங்களில் தமிழகத்தினுடைய மின்சாரத்துறை மக்களிடத்தில் அவர்களுக்கு அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யமுடியாத நிலையில் இருந்தது. நமக்கு தேவையான மின் உற்பத்தியை நாமே செய்ய முடியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் இருந்தன. இதைத்தான் நடந்து முடிந்த ஆளுநர் உரையிலும் நிதிநிலை அறிக்கையிலும் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் ஆய்வு செய்யப்படும் என்று தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

தங்கமணி ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் இந்த சோதனை சம்பந்தமாக ஒருவிதமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். தங்கமணி ஒரு விதமாக கருத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த மூன்று பேரும் உக்கார்ந்து பேசி எல்லோரும் ஒருமித்த கருத்துக்கு வரட்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இவரும் சேர்ந்து இந்த ரெய்டுக்கு என்ன காரணம் என்று அவர்களுக்குள் ஒரு சுமூகமான ஒரு முடிவை எட்டட்டும். இன்னொன்று திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இப்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் யார் தவறுகள் செய்திருந்தாலும் நிச்சயமாக, நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது.

இன்னொன்று நான் அவர்களுக்கு சொல்வது, இந்திய வரலாற்றிலேயே, ஊழல் பணத்தை கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையை தங்கமணி பெற்றிருக்கிறார். இன்னொன்று, கண்பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரண்சி இந்த இரண்டுக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய தங்கமணி என் மீது குற்றச்சாட்டு சொல்வது உள்ளபடியே, தங்கமணி என்ன பேசுகிறோம் என்று புரிதல் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

வடசென்னையில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி கடந்த ஆட்சியில் காணாமல் போயிருக்கிறது. அது சம்பந்தமாக குழு அமைக்கப்பட்டு இப்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதே போல, தூத்துக்குடியிலும் நிலக்கரி காணாமல் போயிருக்கிறது.

நிலக்கரிக்கும் கிரிப்டோ கரண்சிக்கும் பதில் சொல்ல வேண்டிய தங்கமணி என் மீது குற்றச்சாட்டு சொல்வது ஏன் அவருக்கு அந்த பயம் என்று தெரியவில்லை. எதனால், அவருக்கு அந்த பயம் என்று தெரியவில்லை.

உள்ளபடியே தான் தவறு செய்யவில்லை என்று சொன்னால், நான் ஒரு விஷயம் கேட்கிறேன். உங்கள் மூலமாக கேட்கிறேன். 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறபோது தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, 2016ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, 2021ம் ஆண்டு தேர்தல் களத்தில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, இந்த நான்கு தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட சொத்தினுடைய மதிப்பை, ஒப்பிட்டுப் பார்த்து அதனுடைய வித்தியாசங்கள், அது எங்கிருந்து வருமானம் வந்தது என்று அவர் தெளிவுபடுத்திக்கொண்டு, அதற்குப் பிறகு மற்றக் கருத்துகளை சொல்ல வேண்டும். அதில் எவ்வளவு வித்தியாசம் அதிகரித்திருக்கிறது. குடும்பச் சொத்துகள் எவ்வளவு உயர்ந்திருக்கிறது. இது எங்கிருந்து வந்த வருமானம், 2006ல் செய்த தொழில்தான் 2011ல் இருந்திருக்கிறது. 2011ல் செய்த தொழில்தானே 2016ல் இருந்திருக்கிறது. 2016ல் இருந்ததுதானே 2021ல் வந்திருக்கும். ஆக எங்கே இருந்து இந்த சொத்து மதிப்புகள் உயர்ந்தது. எதனடிப்படையில் இந்த வருமானம் அதிகரித்திருக்கிறது. ஊழல் பணத்தில் வந்த அந்த சொத்தினுடைய அதிகரிப்பு, அதை சட்டத்திற்கு உட்பட்டு திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-senthil-balaji-answer-to-question-when-will-implement-monthly-eb-bill-384283/

ஊடக செய்திகளின் உண்மையை சரிபார்க்க நோடல் அதிகாரிகளை நியமிக்கும் தமிழக அரசு

 12 12 2021 ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் ஒவ்வொரு துறையை குறித்தும் பகிரப்படும் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை சரிபார்க்க, சமூக ஊடக நோடல் அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்துச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அரசாங்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நோடல் அதிகாரிகளுடன் முதல்வரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நோடல் அலுவலரும் தங்களின் வாட்ஸ்அப் எண், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்கு ஐடிகளை தகவல் துறைக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையினர், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பகிரப்படும் அரசு துறை தொடர்பான செய்திகுறிப்புகளை சரிபார்த்து, அதில் விமர்சனம் மற்றும் எதிர்மறையான செய்திகளை குறிப்பெடுத்து அந்தந்த துறை செயலாளர், தலைவர், மாவட்ட ஆட்சியர் தினமும் காலை 8 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

அதனை நோடல் அதிகாரிகள் சரிபார்த்து மதியம் 2 மணிக்கு முன்னதாக பொருத்தமான பதில் அல்லது மறுபிரதியை தயார் செய்ய வேண்டும். இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்களில் அதற்கு பதிலோ அல்லது மறுபிரதியை வெளியிடவும், ஒளிப்பரப்பவும் தகவல் துறை நடவடிக்கை எடுக்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட செய்தியின் நகலை காலை 9.30 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அன்றைய தினமே பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பகிரப்படும் எதிர்மறையாக செய்திகளை அனுப்பவும், நடவடிக்கை அறிக்கையைப் பெறவும், மறுபிரிதியை வெளியிடவும் அனைத்துச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு இரண்டு பிரத்யேக மொபைல் எண்களை தகவல் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-to-nominate-social-media-nodal-officers-to-do-fact-check/

இனி அரசு ஊழியர்கள் இனிஷியல், கையொப்பத்தை தமிழில் தான் எழுத வேண்டும்’ – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

10 12 2021தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலின் போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பம் எழுத ஊக்குவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை (ஜிஓ) வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அரசாணை 1978 மற்றும் 1998ல் இது தொடர்பாக வெளியிடப்பட்ட முந்தைய அரசாணைகளையும், 1997ல் வெளியிடப்பட்ட அரசாங்கக் கடிதத்தையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது. தவிர, பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​வருகைக்கு மதிப்பெண் வழங்குதல், பள்ளி, கல்லூரிகளில் மாற்றுச் சான்றிதழ் பெறுதல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் மாணவர்கள் தங்கள் இனிஷியல் எழுதவும், கையொப்பமிடவும் தமிழில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும், இந்த அரசாணையில் அரசுத் துறைகளின் அனைத்து உத்தரவுகளிலும், பெயர்கள் மற்றும் முதலெழுத்துக்கள் குறிப்பிடப்படும் போதெல்லாம், அவை தமிழில் இருக்க வேண்டும் என்றும், பொது மக்களும் அரசு விண்ணப்பப் படிவங்களில் தமிழில் கையொப்பம் மற்றும் முதலெழுத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்களுக்கு சுவரொட்டிகள் ஒட்டுவதன் மூலம் அரசுத் துறைகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்