வியாழன், 27 மார்ச், 2014

MK patti - Moments

23/03/2014 - TNTJ Dhawa for Non-Mulims (free books camp) near Senkulam bus stop 


Thamara Kulam - Due to the failure of Seasonal Rain No Drinking water for past 2 Years ( 12-13) 

Thamara Kulam - Kheni thoorvarum pani 


Tar Road for - Extended Koonan Street  

 Tar Road for - Extended Koonan Street (up to Mkpatti panjayath) circle  

Jobs


From: j.anwar@mnm360.com
Date: Thursday, March 27, 2014
Region: Riyadh (  Riyadh, Musa Bin Nas  )
A reputable Advertising Agency requires a skilled Graphics Designer.
who have a experience in Adobe photoshop, Adobe illustrator and Indesign. A offering good salary package on your skill.
If you are a skilled one. please contact us or email on giving address below.

This ad is valid till 2 Week from Today...

Thanks
Junaid Anwar
Asst. Art Director
M&M360

From: hr@pcshopbahrain.com
Date: Thursday, March 27, 2014
Region: Bahrain
 We are looking for an IT engineer. Candidate should have thorough knowledge of servers and networks. Should be a hands on person. People who want a desk job please do not apply. Must have knowledge of firewalls also. Minimum 8 years in same roll. GCC Driving license must.

Salary: BD 600/- ( All inclusive) for the right candidate ONLY

Send detailed CV with photo to hr@pcshopbahrain.com

From: divinelover@hotmail.com
Date: Thursday, March 27, 2014
Region: Dammam
We are looking for an experienced & enthusiastic medical sales rep. to work in the eastern province and represent our Est. (dealing in medical equipments) in various hospitals & government facilities in the region.

Please send in your CV (with photo) by e-mail. Suitable candidates will be contacted back.
From: jawadutmani@gmail.com
Date: Thursday, March 27, 2014
Region: Dammam (  Dammam  )
Please provide your resume for the position of Draftsman (Auto cad having experience in Manufacturing & production industry.

Duties & Responsibilities:

Preparations of Design Drawing For metal & Fabric works.
Preparations Fabrication drawing .(metal & Fabric)
Preparation of bill of materials & Cutting list along with the Fabrication drawings.
Keeping Co-ordination with project engineers and production department

செவ்வாய், 25 மார்ச், 2014

மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்




 டாக்டர் ஜி. ஜான்சன்
  
மன உளைச்சல் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உண்டாகலாம்.
           முன்பு இது வெளியிலிருந்து உண்டாவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது மன உளைச்சல் நம் உடலிலும் மனத்திலும் உண்டாவது என்பது நிச்சயமாகியுள்ளது

நமது உடலில் இயற்கையாகவே இரண்டு விதமான தற்காப்பு தன்மைகள் உள்ளன. இவை எதிர்த்து சண்டை போடு அல்லது தப்பி ஓடு ( fight or flee ) என்பவை. இதை எல்லா சூழலிலும் நாம் பயன்படுத்துகிறோம் .

உதாரணமாக ஒருவன் கத்தியைக் காட்டி நம்மை தாக்க வந்தால் நாம் எதிர்த்து சண்டை போடலாம் அல்லது தப்பி ஓடலாம். இந்த இரண்டு விதமான செயல்களையும் செய்வது அட்ரினலின் ( Adrenaline ) நார்அட்ரினலின் ( Noradrenaline ) எனும் ஹார்மோன்கள்
            நாம் சண்டை போடும்போது நெஞ்சு படபடப்பு, வேகமான சுவாசம், முகம் ஆவேசத்தில் சிவப்பது ,கைகால்கள் முறுக்கேறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

அப்போது வயிறு , குடல் , இதர உறுப்புகளில் இரத்த ஓட்டம் குறைந்து அதிக இரத்தம் கை கால்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் கை கால்கள் அடிக்கவும் அல்லது ஓடவும் இது பயன்படும்.

இத்தகைய முன் எச்சரிக்கை மாற்றங்களை உண்டு பண்ணுவது இந்த ஹார்மோன்கள்.

இதே வகையில்தான் மன உளைச்சலின்போது நமது உடல் செயல் படுகிறது. இவை ஹார்மோன்களின் செயல்பாடு .

மன உளைச்சல் காரணமாக உண்டாகும் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் மாற்றங்கள் 4 வகையானவைகள்.

* மனம் சார்ந்தவைபரபரப்பு , கவலை , சோர்வு , கோபம் , எரிச்சல் , ஏமாற்றம் , ஆர்வமின்மை ,வெறுப்பு

* நடத்தை சார்ந்தவைதவறுகள் செய்வது , விபத்துகள் , உண்பது தூங்குவதில் பிரச்னை , புகைத்தல் , போதை மருந்துகள் பயன்படுத்தல் , மதுவுக்கு அடிமையாதல் , சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்தல் அல்லது ஆவேசமாக குழப்பங்கள் உண்டு பண்ணுதல்.

* எண்ணம் சார்ந்தவைகவனக் குறைவு , ஞாபக மறதி , ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை , பிரச்னையை எதிர்கொள்ள முடியாத நிலை , தவறை சுட்டிக் கட்டினால் அது பற்றி அக்கறை கொள்ளாதது

* உடல் சார்ந்தவைஅதிக வியர்த்தல் , தலை சுற்றுதல் , குமட்டல் , மூச்சு வாங்குதல் , உடல் வலி , அடிக்கடி நோய்த் தொற்று , ஆஸ்த்மா , தோல் பிரச்னைகள் , இருதய பிரச்னை.

இத்தகைய மன உளைச்சல் அறிகுறிகளுக்கு நிவாரணமாக சூழ்நிலைக்கேட்ப செயல்படும் நிலை ( Adaptation ) தற்காப்பு முறையில் உருவாகிறது.

வெளி உலகிலிருந்து எதிர்படும் உளைச்சலை நம்மால் மாற்ற இயலாது. ஆனால் அதை எதிர்கொள்ளும் வ்கையில் நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம். இந்த நிலையில் வெளியிலிருந்து வரும் உளைச்சல் நமக்கு ஆபத்து தராது என்ற எண்ணம் உண்டாகி அதை எளிதில் எதிர்கொள்ளலாம் எனும் நிலைக்குள்ளாகலாம்.

ஒரு உதாரணம்: வேலை முடிந்து வீடு செல்லும் போது வாகன நெரிசலில் ஒரு மணி நேரம் தாமதமானால் நமக்கு மன உளைச்சல் உண்டாகிறது என்று வைத்துக் கொள்வோம். இது தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்து சிறிது தாமதமாக நெரிசல் குறைந்தபின் புறப்படுவது .

இதுவே சூழ்நிலைக்கேட்ப செயல் படும் நிலை ( ADAPTATION ) என்பது .
           மன உளைச்சலை எதிர்கொள்வது முழுக்க முழுக்க நம்மிடமே உள்ளது. வெளியிலிருந்து உண்டாகும் பிரச்னைகளை சுமுகமாக எதிர்கொண்டு அவற்றை மாற்ற முடியாத பட்சத்த்தில் நம்மை நாமே மாற்றிக்கொண்டால் நாம் அதை எதிர் கொண்டு வெற்றி பெறுகிறோம். இதற்கு சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்தல் தோல்வி எண்ணங்களை விடுதல் , தன்னம்பிக்கை போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகள் மூலம் பயன் பெறலாம்..
            உங்கள் வேலை இடத்தில் என்ன பிரச்னை என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உங்களை தயார் செய்து கொள்ளலாம்.உயர் அதிகாரிகளிடம் அது பற்றி பேசி தீர்வு காணலாம்.          வீட்டிலும் என்ன பிரச்னை என்பதையும் ஆராய்ந்து அதற்கு தீர்வு காண முயற்சி செய்யலாம். இவ்வாறு மன உளைச்சலை நீங்கள் சுய முயற்சியால் எதிர்கொண்டு அதிலிருந்து விடுதலை பெறலாம்.

வியாழன், 20 மார்ச், 2014


முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பி மேலே நாம் எடுத்துக்காட்டிய அத்தனை வசனங்களையும் மறுப்பதை விட அந்த வசனங்களை ஏற்று அந்த ஹதீஸை ஏற்காது விட்டு விடுவது தான் சிறந்ததாகும்.

அந்தச் செய்தியில் எங்கோ தவறு ஏற்பட்டுள்ளது என்பதை இந்தச் செய்தி பலவிதமாக அறிவிக்கப்படுவதிலிருந்தே நாம் முடிவு செய்து விடலாம்.

சீப்பு, உதிர்ந்த முடிகள் ஆகியவற்றின் மூலம் சூனியம் செய்யப்பட்டு கிணற்றில் புதைக்கப்பட்டதாக இது குறித்த ஹதீஸ்களில் கூறப்படுகிறது.

முரண்பட்ட அறிவிப்புக்கள்

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது 'அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

 'நபி(ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள்' என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது.

அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.

நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல்(அலை) வந்து 'உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான்' என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புக ளில் முரண்பாடு இருப்பதாலும் இதை நாம் ஏற்கக் கூடாது.

இவ்வாறு விரல் விட்டு எண்ணக் கூடிய ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை மட்டும் தான் ஏற்கக் கூடாது என்று தக்க காரணத்துடன் கூறுகிறோம்.

இவ்வாறு இல்லாத பல்லாயிரம் ஹதீஸ்களை நாம் ஏற்கிறோம். ஏற்கத் தான் வேண்டும் என்கிறோம். குர்ஆன் மட்டும் போதும், நபிவழி அவசியமில்லை எனக் கூறுவோர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்பதை திர்மிதீ தமிழாக்கத்தின் முன்னுரையிலும், அல்முபீன் மாத இதழில் தொடர் கட்டுரையிலும் தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதை நினைவூட்டுகிறோம்.

 113, 114வது அத்தியாயங்கள்

திருக்குர்ஆனின் 113, 114வது அத்தியாயங்களின் அடிப்படையிலும் சூனியத்தின் மூலம் அதிசயங்களை நிகழ்த்த இயலும் என்று வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது அதை நீக்குவதற்காக ஃபலக், நாஸ் எனும் அத்தியாயங்கள் அருளப்பட்டன. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்வதற்காக 12 முடிச்சுக்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்தது என்ற செய்தியின் அடிப்படையிலும் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதை நிரூபிக்க முயல்கின்றனர்.

சில தஃப்ஸீர்களில் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் இதில் ஏராளமான ஆட்சேபனைகள் உள்ளதாகவும் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் கூறுகிறார்கள்.

மேலும் மேற்கண்ட இரண்டு அத்தியாயங்களும் மதீனாவில் தான் அருளப்பட்டது என்பதற்குக் கூட ஆதாரமில்லை. இதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது.

அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் 'இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டவை' என்று கூறுகிறார்.

நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் 'இவ்விரு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்டவை' என்று கூறுகிறார்.

எங்கே அருளப்பட்டது என்பதற்கே ஆதாரம் கிடையாது என்பதால் 12 முடிச்சுக்கள் அவிழ்ந்ததாகக் கூறுவது கட்டுக்கதை என்பது உறுதியாகிறது.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்

 'முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்' (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர்.

முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர்.

இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை.

இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.

 'முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்' என்பதற்கு சூனியக் காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.

ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)

நாம் நல்லறங்கள் செய்து விடாதவாறு ஷைத்தான் தடைகளை ஏற்படுத்துகிறான். அந்தத் தடைகளைத் தான் இங்கே முடிச்சுக்களில் ஊதுதல் எனப்படுகிறது. அதிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் இறைவன் இவ்வசனத்தின் மூலம் நமக்குக் கற்றுத் தருகிறான்.

முடிச்சு என்றவுடன் நூல் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள குறைபாட்டை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது முடிச்சு என்று தான் கூறினார்கள்.

எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

 (திருக்குர்ஆன் 20:26, 27) நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஹதீஸ்களில் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அபூதாவூத் 651

தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண் பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண் பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.



இஷ்ரத் ஜஹான


இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் மோடியின் முகமூடியைக் கிழிக்கும் முக்கியசிடிஆதாரம் சிக்கியது...!


மோடியின் தனி செயலாளர்கள் ஜி.சி. முர்மு, .கே.சர்மா சதி திட்டம்.

குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.

முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதால் இந்த என்கவுன்டரை நடத்தியதாக காவல்துறை விளக்கம் அளித்தது. ஆனால் இதுதொடர்பாக சி.பி.. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறியிருந்தது.

இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு அப்பாவிகளின் மீதான என்கவுன்டர் சம்பவம் நடந்தபோது அகமதாபாத் இணை கமிஷனராக இருந்த மூத்த போலீஸ் அதிகாரி பாண்டே முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். காவல்துறையை சேர்ந்த சிங்கால் என்ற அதிகாரி மீதும் வழக்கு தொடரப்பட்டது.

தற்போது அவர் ஒரு சி.டி. ஆதாரத்தை சி.பி..யிடம் வழங்கியுள்ளார். அந்த சி.டியில் 70 நிமிட ஆடியோ உரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த ஆடியோ உரையாடலில் மோடியின் தனி செயலாளரான ஜி.சி. முர்மு, .கே சர்மா மற்றும் அவரது முக்கிய அமைச்சர்களின் பேச்சுகள் அடங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் இந்த போலி என்கவுன்டர் குறித்த வழக்கின் போக்கை மாற்றுவது குறித்து விவாதித்தது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சி.டி ஆதாரத்தை மையமாக வைத்து தற்போது மோடியின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக தனது விசாரணையை சி.பி. துரிதப்படுத்தியுள்ளது.

அப்பாவிகளை என்கவுன்டரில் சுட்டுத் தள்ளிய மோடி நல்லவரா ?. வல்லவரா ?. நாட்டின் பாதுகாவலரா ?. பொதுமக்களே ! சிந்தியுங்கள். நடுநிலையாளர்களே, நாட்டின் மானம் காக்க நினைப்பவர்களே இந்த கொலை கும்பலை புறக்கனியுங்கள் !


புதன், 12 மார்ச், 2014

Election seasion (2014 )


Hadis


நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில்
ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(இவருடன்
சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம்
அளிக்கக்கூடியவர் யார்?'' என்று கேட்டனர். ஒரு மனிதர்
முன்வந்தார். அவருடன் வந்த மனிதர்
சேர்ந்து தொழுதார்
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல்: திர்மிதி (204), அபூதாவூத் 487

மேற்கண்ட ஹதீஸ், ஒரு பள்ளியில் முதலில் ஜமாஅத்தாகத்
தொழுகை நடத்தி முடிந்த பிறகு மீண்டும் அதே பள்ளியில்
‪#‎ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு மிகத் தெளிவான
ஆதராமாகும்.

********


ஒரு ‪#‎உளூ-வில் பல தொழுகைகளைத் ‪#‎தொழுதல்:

 ஒரு தடவை உளூச் செய்த பின் அந்த உளூ நீங்காத வரை எத்தனை தொழுகைகளையும் தொழலாம். ஒவ்வொரு தொழுகை நேரம் வந்ததும் உளூச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

 '‪#‎நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் உளூச் செய்வது வழக்கம்' என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.'அப்படியானால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?' என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'உளூ நீங்காத வரை ஒரு உளூவே எங்களுக்குப் போதுமானதாகும்' என விடையளித்தார்கள்.

 அறிவிப்பவர்: அம்ர் பின் ஆமிர் (ரலி)

 நூல்: புகாரீ 214

 நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது ஒரு உளூவின் மூலம் பல தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது தமது காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். 'ஒரு நாளும் செய்யாத ஒன்றை இன்றைய தினம் செய்தீர்களே!' என்று உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உமரே! வேண்டுமென்று தான் அவ்வாறு செய்தேன்' என்று விளக்கமளித்தார்கள்.

 அறிவிப்பவர்: புரைதா (ரலி)

 நூல்: ‪#‎முஸ்லிம் 415


#‎நெருங்காதீர்

 இன்று நம் குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால், எல்லோருமே விபச்சாரம் எனும் அசிங்கத்தில் சர்வ சாதரணமாக ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சினிமாக்களை (சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச் செய்வதற்கு நெருங்கிய குற்றத்தில் வரும்.


விரலசைத்தல்:

 நபி (ஸல்) அவர்கள் தமது விரலை உயர்த்தினார்கள். பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இதன் பிறகு குளிர் காலத்தில் நான் (மறுபடியும்) வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்தனர். குளிரின் காரணத்தால் அவர்கள் போர்த்தியிருந்த ஆடைகளுக்குள் அவர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்ததை கண்டேன்.

 18115حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا زَائِدَةُ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ أخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ ثُمَّ قَالَ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى فَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ بَيْنَ أَصَابِعِهِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ الثِّيَابُ تُحَرَّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ مِنْ الْبَرْدِ رواه أحمد

 அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (-லி), நூல் : அஹ்மது (18115)

__________---


மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு



 டாக்டர் ஜி. ஜான்சன்

 Septicaemia என்பது குருதி நச்சூட்டு அல்லது குருதி நச்சேற்றம். குருதி என்பது இரத்தம் என்பதையும் நச்சு என்பது நஞ்சு அல்லது விஷம் என்பதையும் நாமறிவோம்.
 இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்க முடியும் என்ற வினா எழுவது இயல்பே! விஷம் குடித்து அல்லது பாம்பு, தேள் கடித்து விஷம் ஏறி உயிர் போவதையும் அறிவோம். ஆனால் இவை ஏதும் இல்லாமல் இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்கும்?

 இது வேறு விதமான நஞ்சு. இந்த நஞ்சு நோய்க் கிருமிகளால் உண்டாகும் நஞ்சு. இந்த நஞ்சு இரத்தத்தில் கலப்பதையே குருதி நச்சூட்டு என்கிறோம்.

 உடலின் எதிர்ப்புச் சக்தி நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடை செய்யத் தவறினால் அல்லது, மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த முடியாவிடில் அவற்றால் உட்பத்தியாகும் நஞ்சு இரத்தத்தில் கலந்து நச்சு அதிர்ச்சியை ( septic shock ) உண்டுபண்ணி உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணுகிறது.

 இது பெரும்பாலும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களையும் , அல்லது வேறு நீண்ட கால நோய்களால் ( chronic illness ) உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவு பட்டவர்களையும் எளிதில் தாக்குகிறது. இதற்கு உடனடி தீவிர சிகிச்சை இன்றியமையாதது.

 குருதி நச்சூட்டு உண்டாக்கும் சில காரணங்கள்

 உடலின் எந்தப் பகுதியிலிருந்தும் நோய்க் கிருமிகள் இரத்தத்தில் கலப்பதே குருதி நச்சூட்டுக்கு முதல் காரணம் எனலாம். கிருமிகளால் வெளியேறும் நஞ்சும், அதை எதிர்க்க உடலின் எதிர்ப்புச் சக்தியிலிருந்து வெளியேறும் உள்நச்சும் ( endotoxin ) திசுக்களுக்குத் தேவையான இரத்த ஓட்டத்தைத் தடைப் பண்ணி குளிர்க் காய்ச்சல் உண்டாகி குருதி அதிர்ச்சியை உண்டுபண்ணுகிறது.

 இது பெரும்பாலும் அறுவைச் சிகிச்சைக்குப்பின் கிருமித் தோற்றால் உண்டாகும் என்பது உண்மையானாலும் , இதர பல காரணங்களாலும்கூட இது உண்டாகலாம். தீக் காயங்கள், இதர காயங்கள், சிறுநீர் கிருமி தோற்று, நிமோனியா, சீழ்க் கட்டிகள், பல் சீழ் கட்டி, பல் ஈர் பிரச்னை போன்றவை சில உதாரணங்கள்.

 தற்போது மருத்துவமனைகளில் குருதி நச்சூட்டு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் புதிய சக்திவாய்ந்த நோய்க்கிருமிகள் உருவாகி சாதாரண மருந்துகளுக்கு கட்டுப்படாத நிலை உருவாகியுள்ளதே.

 இவை தவிர சூடாக்காத பால் ( unpasteurized milk ) , சில மிருதுவான பாலாடைக் கட்டி ( soft cheese ) போன்றவற்றில் உள்ள பாக்டீரியா லிஸ்டரீயா மோனோசைட்டோஜீன்ஸ் ( Bacteria Listeria Monocytogenes ) என்ற கிருமியாலும் குருதி நச்சூட்டு உண்டாகலாம்.

 சிப்பி ( oyster ) போன்ற கடல் வாழ் சில உயிரினங்களில் ஊள்ளபாக்டீரியம் விப்ரியோ உல்னிபிகஸ் ( Bacterium Vibrio Vulnificus ) என்ற கிருமி உள்ளதால், இவற்றை கல்லீரல் வியாதி உள்ளவர்கள் உட்கொண்டால் குருதி நச்சூட்டு உண்டாகலாம்.

 பரிசோதனைகள்

 இரத்த நச்சூட்டு என்று சந்தேகப்பட்டால் இரத்தப் பரிசோதனை மூலம் கிருமியைக் கண்டுபிடிக்கலாம். இரத்த நச்சூட்டு ஆபத்தானது என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

 சிகிச்சை

 குருதி நச்சூட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த கிருமிகளுக்கு ஏற்ப மருந்துகள் தரப்படும். பெனிசிலின் ( Penicillin ), செபலோஸ்போரின் ( சேபாலோஸ்போரின் ) போன்ற மருந்துகள் இரத்தக் குழாய் மூலம் செலுத்தப்படும்.

 தடுப்பு முறைகள்

 * வாய்க்குள் தொற்று ஏற்பட்டால் பல் மருத்துவரைப் பார்த்து முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

 பல் தொடர்புடைய சீழ் கட்டிகள் உள்ளதா என்பதைக் கண்டுபிடித்து சிகிச்சை பெறவேண்டும். லிஸ்ட்டரின் அல்லது லேசான சுடுநீரில் உப்பு கலந்து கொப்பளிக்க வேண்டும்.

 * உடலின் எங்காவது சீழ் கட்டிகள் இருந்தால் உடன் மருத்துவரைப் பார்த்து சீழை வெளியேற்ற வேண்டும்.