செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

2000 ரூபாய் நோட்டு போலியானதா இல்லையா என்பதை கீழே உள்ள வழிமுறைகள் மூலம் சரிபாருங்கள்.

 2000 ரூபாய் நோட்டு போலியானதா இல்லையா என்பதை கீழே உள்ள வழிமுறைகள் மூலம் சரிபாருங்கள்.

போலி ரூபாய் மற்றும் நாணயங்கள் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தனர். இதனால் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே போலி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்ததாக செய்திகள் வெளியாகின. அதுமட்டும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டு சார்ந்த பல புரளிகள் உலாவரத் தொடங்கியது. அதனால் இன்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதில் தயக்கம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) மத்திய அரசும் இந்தியாவில் கள்ள நோட்டுகள் சிக்கலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கள்ள நோட்டுகளை தடுக்கும் வகையில், ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. மேலும், கரன்சி நோட்டின் சிறப்பு அம்சங்களைக் கண்டறியவும், அவர்களிடம் போலி ரூபாய் நோட்டுகள் இருந்தால் வங்கி அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு புகாரளிக்கவும் உதவும் வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
எப்போதும் இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி உருவம் இருக்கும். அதன்படி, புதிய 2000 ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், மங்கள்யானின் மையக் கருத்தைக் கொண்டுள்ளது. 66 மிமீ x 166 மிமீ அளவு கொண்ட நோட்டு மெஜந்தா எனும் அடிப்படை நிறத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டை போலியானதா இல்லையா என்று சரிபார்க்கும் வழியை சொல்கிறோம்.
நோட்டின் இடது பக்கத்தில் 2000 எண் கொண்ட பதிவு குறிப்பிடப்பட்டிருக்கும்.
இடதுபுறம் நோட்டின் கீழே 2000 எண் கொண்ட மறைந்த படம் ஒன்று காணப்படும்.
2000 மதிப்பு கொண்ட நோட்டு என்பதை குறிக்கும் தேவநாகரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
நோட்டின் மையத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இருக்கும்.
காந்தி படத்தின் அருகே ‘भारत’ மற்றும் ‘India’ என்ற வார்த்தைகள் மைக்ரோ எழுத்துகளால் எழுதப்பட்டிருக்கும்.
"भारत' , 'RBI' மற்றும் '2000' என்ற வார்த்தைகளுடன் கூடிய கலர் ஷிப்ட் பாதுகாப்பு பட்டயம் நோட்டின் நடுவில் காணப்படும். நோட்டை சாய்க்கும் போது நூலின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறுபடுவதை பார்க்கலாம்.
மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வலதுபுறத்தில் ரிசர்வ் வங்கியின் சின்னத்துடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் அந்த நோட்டின் மதிப்பிற்காக கொடுக்கும் உத்தரவாதம், உறுதிமொழி மற்றும் கையொப்பம் இருக்கும்.
நோட்டின் வலது புறத்தில் உள்ள வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் 2000 மதிப்பிற்கான எலக்ட்ரோடைப் வாட்டர்மார்க் இருக்கும்.
நோட்டின் இடது பக்கம் மேல்புறமும் வலது புறத்தில் கீழ்பக்கமும் ஏறுவரிசை எழுத்துருவில் எண்கள் கொண்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண் இருக்கும்.
நோட்டின் கீழ் வலதுபுறம் ரூபாய் சின்னத்துடன் கூடிய ₹2000 மதிப்பு எண், நிறம் மாறும் மையில் (பச்சை முதல் நீலம்) அமைக்கப்பட்டிருக்கும்.
வலதுபுறம் அசோக தூண் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும்.
மாற்றுத்திறனாளிகள் இந்த ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண சில முக்கிய அம்சங்கள் அம்சங்கள்: நோட்டின் மத்தியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப்படம் (4), வலது ஓரத்தில் உள்ள அசோக தூண் சின்னம் (11), வலதுபுறம் ₹2000 கொண்ட கிடைமட்ட செவ்வகக் குறியீடும், இடது மற்றும் வலது பக்கங்களில் ஏழு கோண ரத்தக் கோடுகள் ஆகியவை அடர்த்தியான மையில் போடப்பட்டிருக்கும். இதனை தடவிப்பார்த்து அடையாளம் காணமுடியும்.
இது போக, நோட்டின் பின்புறம் நோட்டின் இடதுபுறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.
இடது புறம் நோட்டில் கீழே, ஸ்லோகத்துடன் ஸ்வச் பாரத் லோகோ பொறிக்கப்பட்டிருக்கும்.
நோட்டின் மத்தியில் இந்தியாவில் பேசப்படும் 15 மொழிகளில் இரண்டாயிரம் ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கும்.
ரூபாய் நோட்டின் மத்தியில் மங்கள்யான் படம் வரையப்பட்டிருக்கும்.
நோட்டின் முன்பக்கம் இருப்பது போலவே பின்புறம் வலது மேல்பாகம் ரூ.2000 என்பதை தேவநாகிரி எழுத்தில் எழுதியிருப்பார்கள்.
இந்த அடையாளங்களை எல்லாம் வைத்து உங்களிடம் உள்ள ரூ. 2000 நோட்டு அசல் நோட்டா, போலியானதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றி : News 18 தமிழ்
தகவல் : FB Page தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஏரல் கிளை - மாணவரணி , தூத்துக்குடி மாவட்டம்.

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” – மணீஷ் சிசோடியா கைது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

 27 2 23

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா இன்று டெல்லி சிபிஐ போஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரியது. இந்நிலையில், அதை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் மார்ச் 4ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா கைது குறித்து பல தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், மணீஷ் சிசோடியா கைது என்பது எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக எப்படி தவறாக பயன்படுத்துகிறது எனபதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு இதுவாகும். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று விமர்சித்துள்ளார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறுகையில், பிரதமர் மோடி – தொழிலதிபர் அதானி இருவரின் பிணைப்பு பற்றிய மக்களின் கவனம் திசைதிருப்பப்பட வேண்டும் என்பதற்காகவே மணீஷ் சிசோசியா கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


source https://news7tamil.live/the-arrest-of-sisodia-is-an-attack-on-democracy-says-pinarayi-vijayan.html

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்

 27 2 23

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள், மதுபானக் கடை மீது கல்லெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு, விபத்தில் சிக்கி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து ஏற்பட காரணமான டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள், கடை மீது கல்லெரிந்தும்,  இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அகிலாண்டபுரம் பகுதியில் , பழைய மருத்துவமனை சாலையில் 7685 எண் கொண்ட டாஸ்மாக் கடை  செயல்பட்டு வருகிறது. இந்த கடையினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கடையை அகற்ற கோரியும் அப்பகுதி மக்கள் பலமுறை
போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆனால், அந்த கடை இன்றுவரை அகற்றப்படாத நிலையில் , கடந்த இரண்டு நாட்களுக்கு
முன்பு அதே பகுதியில் வசிக்கும் முசாபர் கனி என்பவர் , தனது வேலையை முடித்து வீடு
வந்தார். அப்போது, டாஸ்மாக் கடை முன்பு எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தர். பலந்த காயம் அடைந்த நிலையில்  சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த அவரது உடல் அரசு  அமரர் ஊர்தியில் சிவகங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் , அந்த வாகனத்தை   இறப்பிற்கு காரணமான டாஸ்மாக் கடை முன்பு நிறுத்தி, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆத்திரமடைந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூட கோரி , கடையின் மீது கல்லெரிந்து போராட்டம் செய்ததுடன் கடையின் முன்பு உள்ள  சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனை தொடர்ந்து, அங்குவந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டம் , டாஸ்மாக் மேலாளர் வந்து கடையை அடைத்த பிறகே உடலை எடுத்துக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

கு. பாலமுருகன்


source https://news7tamil.live/womens-protest-demanding-closure-of-tasmac-shop.html

காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு

 

28 2 23

செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நரசிங்கராயன்பேட்டையில் துரைகண்ணு
என்பவர் நரிக்குறவர் சமுதாயத்துக்கு சொந்தமான பழமையான காளி சிலையை பராமரித்து வந்துள்ளார். இதனிடையே துரைகண்ணுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் கல்லடிகுப்பம் கிராமத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வரும் ஏழுமலை என்பவரிடம் சிலையை ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி ஆனந்த், அருள், சேகர், ஜெரினா, செல்வி உள்ளிட்ட 5 பேர் ஏழுமலையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பழமையான காளி சிலையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் திருடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் உள்ளது.

இதனைத் தொடர்ந்து பெரியதச்சூர் போலீசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

  • எம்.ஸ்ரீ மரகதம்

source https://news7tamil.live/request-to-file-a-case-against-those-who-stole-the-kali-idol-narikkuvar-community-petition-to-villupuram-district-collector.html

ஓட்டுக் கொட்டகையில் இயங்கும் பள்ளி- புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்கள் மனு

 

27 2 23

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுக் கொட்டகையில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையால் உள்ளதால் புதிய கட்டடம் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் அருகே உள்ள வைத்தூரில்
ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுக் கொட்டகையில் செயல்பட்டு வருகிறது . 

இந்தப் பள்ளியில் 151 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில்
படிக்கும் மாணவர்களின் வருகைப் பதிவேடு , கணினி உபகரணங்கள் மற்றும் முக்கிய
ஆவணங்கள் அனைத்தும் பள்ளியின் கட்டிடத்தில் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.


எனவே ஓட்டுக் கொட்டகையில் இயங்கி வரும் பள்ளி பாதுகாப்பான சூழல் இன்றியும் , ஓடுகளில் விரிசல் ஏற்பட்டும் உள்ளதால் மழைக்காலங்களில் சுற்று சுவர்களில் ஊரல் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ள   கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டுப் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் ,பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அழித்துள்ளனர்.

ஆர்.வீரம்மாதேவி

source https://news7tamil.live/a-school-running-in-a-shed-parents-petition-for-construction-of-a-new-building.html


மக்களால் புறக்கணிக்கப்பட்ட குப்பைகளை ஆளுனராக நியமிப்பதா? புதுவையில் முத்தரசன் ஆவேசம்

 மக்களால் புறக்கணிக்கப்பட்ட குப்பைகளை ஆளுனராக நியமிப்பதா? புதுவையில் முத்தரசன் ஆவேசம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், நாடு முழுவதும் ஆளுநர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டத்தில் பேசப்பட்டது.

இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், “புதுச்சேரிக்கு 23 சதவீதம் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 90 சதவீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும். இதற்காகத் தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். புதுச்சேரியை புறக்கணிக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி என்று போஸ்டர் ஒட்டிக் கொள்ள மட்டும் அவர் பயன்படுகிறார். இதனால் அவரே மனவருத்தத்தோடு இருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுனரை எதிர்த்து குரல் கொடுக்கிறார். ஆனால் புதுச்சேரி முதல்வர் அப்படி இல்லை. முதலமைச்சர் என்றால் முதுகெலும்பு இருக்க வேண்டும். எந்த சாமி வேண்டும் என்றாலும் முதல்வராக இருக்கலாம். ஆனால் மக்கள் நலனில் அக்கறை இருக்க வேண்டும். மத்திய அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்ட குப்பைகளை‌ ஆளுநராக நியமிக்கிறது. விடுதலைக்காக எப்படி போராட்டம் நடத்தினோமோ. அதேபோல் ஆளுநரை ரத்து செய்ய போராட்டம் நடத்த வேண்டும்” என்று பேசினார்.

தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜா, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டசபை இருந்தும் மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும்” என்று கூறினார்.

மாநில செயலாளர் சலீம் தலைமையில் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ நாரா.கலைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாநில துணை செயலாளர் சேது செல்வம், சிபிஎம்யைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ரவிக்குமார் எம்,பி, எதிர்க்கட்சி தலைவர் சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/india/four-day-national-council-of-cpi-begins-in-puducherry-600373/

அல்மா தொலைநோக்கி என்றால் என்ன? அது விரைவில் புதிய சூத்திரத்தைப் பெறுமா?

 

அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் அல்லது சப்மில்லிமீட்டர் அரே (ALMA) — 66 ஆண்டெனாக்கள் அடங்கிய ரேடியோ தொலைநோக்கி வடக்கு சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் அமைந்துள்ளது.
இது, மென்பொருள் மற்றும் வன்பொருள் மேம்படுத்தல்களைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ளது, இது முன்பை விட அதிக தரவைச் சேகரிக்கவும் கூர்மையான படங்களை உருவாக்கவும் உதவும்,
இது தொடர்பாக, சயின்ஸ் இதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மேம்படுத்தல்கள் முடிவதற்கு சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் $37 மில்லியன் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALMA க்கு செய்யப்பட்ட மிக முக்கியமான நவீனமயமாக்கல் தனிப்பட்ட ஆண்டெனாக்களில் இருந்து உள்ளீட்டை ஒருங்கிணைத்து அதன் தொடர்பினை மாற்றுவதாகும்.
இது, வானியல் பொருள்களின் மிக விரிவான படங்களை உருவாக்க வானியலாளர்களை அனுமதிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் ஆகும்.

இன்று, அல்மாவின் தொடர்புகள் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றாகும். அடுத்த 10 ஆண்டுகளில், மேம்படுத்தல் இரட்டிப்பாகும் மற்றும் இறுதியில் அவர்களின் ஒட்டுமொத்த கண்காணிப்பு வேகத்தை நான்கு மடங்காக அதிகரிக்கும்” என்று கனடாவின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் (NRC) தெரிவித்துள்ளது.

ஹெர்ஸ்பெர்க் வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) தேசிய வானொலி வானியல் ஆய்வகத்துடன் (NRAO) இணைந்து செயல்படும்.

அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் உள்ள 16 நாடுகளில் ALMA ஒரு கூட்டாண்மையின் கீழ் செயல்படுவதால், அனைத்து கூட்டாளர்களும் மேம்பாடுகளுக்கு தேவையான நிதியை அனுமதித்த பிறகு இந்த அறிவிப்பு வந்தது.

2013 ஆம் ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படும் இந்த ரேடியோ தொலைநோக்கி, அமெரிக்காவின் தேசிய வானொலி வானியல் ஆய்வகம் (NRAO), ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகம் (NAOJ) மற்றும் ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் (ESO) ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது.

பல ஆண்டுகளாக, இது நட்சத்திர வெடிப்பு விண்மீன் திரள்கள் மற்றும் சூப்பர்நோவா 1987A க்குள் தூசி உருவாக்கம் உள்ளிட்ட அற்புதமான கண்டுபிடிப்புகளைச் செய்ய வானியலாளர்களுக்கு உதவியது.

அல்மா என்றால் என்ன?

ALMA என்பது ஒரு அதிநவீன தொலைநோக்கி ஆகும், இது வான பொருட்களை மில்லிமீட்டர் மற்றும் சப்மில்லிமீட்டர் அலைநீளத்தில் ஆய்வு செய்கிறது.
அவை தூசி மேகங்கள் வழியாக ஊடுருவி, மங்கலான மற்றும் தொலைதூர விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களை வானியலாளர்கள் ஆய்வு செய்ய உதவுகின்றன.

இது அசாதாரண உணர்திறனைக் கொண்டுள்ளது, இது மிகவும் மங்கலான ரேடியோ சிக்னல்களைக் கூட கண்டறிய அனுமதிக்கிறது.
முன்னர் குறிப்பிட்டபடி, தொலைநோக்கி 66 உயர் துல்லியமான ஆண்டெனாக்களைக் கொண்டுள்ளது, இது 16 கிமீ தூரம் வரை பரவியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டெனாவும் தொடர்ச்சியான ரிசீவர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு பெறுநரும் மின்காந்த நிறமாலையில் குறிப்பிட்ட அலைநீளங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகிறது.

கேமராவின் ஜூம் லென்ஸ் போன்ற வெவ்வேறு கண்ணோட்டங்களுக்காக ஆண்டெனாக்களை ஒன்றாக அல்லது தொலைவில் நகர்த்தலாம்.

இதன் விளைவு அற்புதமானது, இதுவரை கண்டிராத ஆழமான, இருண்ட இடத்தின் படங்கள்,” என்று சயின்ஸ் நோட் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. அனைத்து ஆண்டெனாக்களிலிருந்தும் ஒரு படத்தை உருவாக்குவது, தொடர்புபடுத்துபவரால் செய்யப்படுகிறது,

சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் அல்மா ஏன் அமைந்துள்ளது?

ALMA கடல் மட்டத்திலிருந்து 16,570 அடி (5,050 மீட்டர்) உயரத்தில் சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் உள்ள சஜ்னன்டர் பீடபூமியில் அமைந்துள்ளது.
அது காணும் மில்லிமீட்டர் மற்றும் சப்மில்லிமீட்டர் அலைகள் பூமியில் வளிமண்டல நீராவி உறிஞ்சுதலுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.

மேலும், பாலைவனம் உலகின் வறண்ட இடமாகும், அதாவது இங்குள்ள பெரும்பாலான இரவுகள் மேகங்கள் மற்றும் ஒளி சிதைக்கும் ஈரப்பதம் இல்லாதவை..
ஆகவே, பிரபஞ்சத்தை ஆராய்வதற்கான சரியான இடமாக இது அமைகிறது.

ஜப்பானில் இருந்து பயணிக்க, சிலியில் உள்ள ALMA தளத்திற்கு இணைப்பு நேரம் உட்பட 40 மணிநேரம் ஆகும்.

இவ்வளவு தூரம் இருந்தபோதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தளம் இன்னும் அல்மா தொலைநோக்கிக்கான சிறந்த நிலைமைகளுடன் பூமியில் இறுதி கண்காணிப்பு தளமாக உள்ளது” என்று தொலைநோக்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALMA செய்த சில குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் யாவை?

நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் உருவாகும் வாயு மற்றும் தூசியின் உயர் தெளிவுத்திறன் படங்களையும், வாழ்க்கையின் கட்டுமானத் தொகுதிகளாக இருக்கும் பொருட்களையும் கைப்பற்றும் ALMA இன் திறனுடன், விஞ்ஞானிகள் நமது அண்டவியல் தோற்றம் பற்றிய பழைய கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

ஆரம்பகால கண்டுபிடிப்புகளில் ஒன்று 2013 இல் வந்தது, இது பிரபஞ்சத்தின் வரலாற்றில் முன்பு இருந்ததாகக் கருதப்பட்டதை விட ஸ்டார்பர்ஸ்ட் விண்மீன் திரள்களைக் கண்டுபிடித்தது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்மீன் திரள்கள் இன்றைய மிகப் பெரிய விண்மீன் திரள்கள் அவற்றின் ஆற்றல் மிக்க, நட்சத்திரங்களை உருவாக்கும் இளைஞர்களில் எப்படி இருந்தன என்பதைக் குறிக்கின்றன” என்று NRAO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு, ALMA ஆனது HL Tauriயைச் சுற்றியுள்ள புரோட்டோபிளானட்டரி வட்டின் விரிவான படங்களை வழங்கியது.
மேலும், பூமியிலிருந்து சுமார் 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டாரஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள மிக இளம் T Tauri நட்சத்திரம் ஆகும்.

2015 ஆம் ஆண்டில், தொலைநோக்கி விஞ்ஞானிகளுக்கு ஐன்ஸ்டீன் வளையம் எனப்படும் ஒரு நிகழ்வைக் கவனிக்க உதவியது.
அந்த வகையில், ஒரு விண்மீன் அல்லது நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியானது பூமிக்கு செல்லும் வழியில் ஒரு பாரிய பொருளைக் கடந்து செல்லும் போது, அசாதாரணமான விவரங்களில் நிகழ்கிறது.

source https://tamil.indianexpress.com/explained/what-is-alma-telescope-that-will-soon-get-a-new-brain-600281/

அவதூறு: சென்னை நபரை கைது செய்த தஞ்சை போலீஸ்

 27 2 23

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக ட்வீட் செய்த சென்னையைச் சேர்ந்த ஜான் ரவி என்பவரை தஞ்சாவூர் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜான் ரவி சமூக ஊடகங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். பா.ஜ.க ஆதரவாளரான ஜான் ரவி தி.மு.க அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

இந்தநிலையில், பிப்ரவரி 21 அன்று ஒரு ட்வீட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பதிவிட்டார். இதனையடுத்து ஜான் ரவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள குருச்சியைச் சேர்ந்த தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜசேகர் பந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பந்தநல்லூர் போலீசார் ஜான் ரவியை கைது செய்துள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/thanjavur-police-arrest-chennai-man-for-defame-cm-stalin-600708/