செவ்வாய், 31 மார்ச், 2020

ஒரு ரூபாய்க்கு சானிடைசர்... பிரபல நிறுவனம் அறிவிப்பு

கவின்கேர் நிறுவனம், புதிய முயற்சியாக ஒரு ரூபாய்க்கு, சானிடைசர் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், எளிய மக்களிடையே shampooவை கொண்டு செல்லும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் 50 பைசா விலையில் shampoo பாக்கெட்டுகளை அறிமுகம் செய்தது.

இதை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும், சிறிய பாக்கெட்டுகளில் shampooவை அறிமுகம் செய்தன. தற்போது, CHIK, NYLE போன்ற பிராண்டில், SHAMPOO, எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்வதை தொடர்ந்து, இதே பெயரில், சானிடைசர் பாக்கெட்டுகளையும் ஒரு ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, சானிடைசர்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.


இதனை கருத்தில் கொண்டு 2 மில்லி அளவில் பாக்கெட்டுகளில் சானிடைசர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கவின்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தனது மற்றொறு பிராண்டான NYLEன் பெயரில், 90ML, 400ML, 800ML மற்றும் 5 லிட்டர் என்ற அளவுகளில் சானிடைசர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு புதிய தயாரிப்பை கொண்டு வர 18 மாதங்கள் வரை ஆகும் என்ற நிலையில், கவின்கேர் சானிடைசரை ஏற்கனவே தயாரித்திருந்ததால், உடனடியாக கொண்டு வர முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

shampoo பாக்கெட்டுகள் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதோ, அதேபோல், இந்த சானிடைசர் பாக்கெட்டுகளும், மளிகை கடைகள், இணையம் மூலம் என சாமானிய மக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
credit news 18 tamil nadu 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படலாம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் தகவல்களை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கொரோனாவை முன்வைத்து ஏராளமான பொய் செய்திகள் வலம் வருகின்றன. அதன்படி, தற்போதைய லாக்டவுனை தொடர்ந்து அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமல்படுத்தப்படும் என்கிற தகவலும் ரவுண்டு கட்டி வருகிறது.
அதுவும் ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின்னர் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படும் என்றும், ராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற என்.சி.சி., என்.எஸ்.எஸ். பிரிவினரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அந்த சமூக வலைதள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதனை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ராணுவ தகவல் தொடர்பு கூடுதல் இயக்குநரகம் கூறுகையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது பொய்யான செய்தி என திட்டவட்டமாக கூறியுள்ளது.
Fake and malicious messages are circulating on social media about likely declaration of emergency in mid April and employment of , , NCC and NSS to assist the civil administration.

It is clarified that this is absolutely FAKE.
View image on Twitter
இதைப் பற்றி 1,399 பேர் பேசுகிறார்கள்

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற ஹேஷ்டேகுகளை சிலர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகம் தனது ட்வீட்டில், “வதந்திகள் மற்றும் ஊடக செய்திகளில், லாக் டவுன் 21 நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை செயலாளர் இந்த அறிக்கைகளை மறுத்துள்ளார், மேலும் அவை ஆதாரமற்றவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit indianexpress.com

கொரோனா வைரஸ் மனிதர்களில் பல ஆண்டுகளாக இருந்திருக்கலாம் - ஆய்வுகள்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வருவதன் காரணமாக, உலகளவில் மில்லியன் கணக்கானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஞ்ஞானிகள் குழு கோவிட் -19 வைரஸ் மனிதர்களிடையே பல ஆண்டுகளுக்கு முன்பே அல்லது இன்றைய சூழலுக்கு பல தசாப்தங்களுக்கு முன்பே பரவியிருக்கக் கூடும் என்பதைக் கண்டுபிடித்தது.
நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, சீனாவின் வுஹான் மாகாணத்தில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்படுவதற்கு முன்பே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இது ஒரு தசாப்த காலம் வரை இருந்திருக்கலாம் என்ற ஊகங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இந்த ஆய்வு மார்ச் 17 அன்று அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
“பின்னர், பல ஆண்டுகளாக அல்லது பல தசாப்தங்களாக படிப்படியாக பரிணாம மாற்றங்களின் விளைவாக. இந்த வைரஸ் இறுதியில் மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவி தீவிரமான, பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தான நோயை உருவாக்கும் திறனைப் பெற்றது” என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தெரிவித்தார்.
கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ரம்பாட், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயன் லிப்கின், சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஹோம்ஸ் மற்றும் புதிய ஆர்லேன்சில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் கேரி ஆகியோர் இந்த ஆய்வை நடத்தினர்.
“இந்த கொரோனா வைரஸ் மரபணு வரிசை தரவுகளை ஒப்பிடுவதன் மூலம், SARS-CoV-2 இயற்கையான செயல்முறைகள் மூலமாக உருவானது என்பதை நாம் உறுதியாக தீர்மானிக்க முடியும்” என்று முன்னணி ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கூறினார்.
அவர்களைத் தவிர, இத்தாலிய பேராசிரியர் கியூசெப் ரெமுஸி கடந்த நவம்பரிலிருந்து இத்தாலியில் “விசித்திரமான நிமோனியாக்கள்” குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். இது இத்தாலியில் தற்போது பேரிழப்பை ஏற்படுத்தி இருக்கும் கோவிட் -19 வைரஸ், அதைப் பற்றி யாருக்கும் தெரியுமுன் ஐரோப்பாவை அடைந்திருக்கலாம்.
மிலனில் உள்ள மரியோ நெக்ரி இன்ஸ்டிடியூட் ஆப் மருந்தியல் ஆராய்ச்சியின் இயக்குனர் பேராசிரியர் ரெமுஸி கூறுகையில், “நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிமோனியாவின் அசாதாரண வழக்குகள், வுஹான் நகரம் தலைப்புச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு, இத்தாலியின் மோசமான பாதிப்புக்குள்ளான லோம்பார்டியில் ஏற்கனவே வைரஸ் பரவி வருவதாக அர்த்தம்” என்று அவர் கூறினார்.
இதே கருத்தை அமோதித்து பேசிய சீன மருத்துவர், பெய்ஜிங்கில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார், கடந்த ஆண்டு பல நாடுகளில் உள்ள சுகாதார நிபுணர்களால் மர்மமான நிமோனியா பரவலால் ஏராளமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“முழு விஷயமும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்” என்கிறார் அந்த பெயர் தெரிவிக்க விரும்பாத சீன மருத்துவர்.
வுஹானில் உள்ள டாக்டர்களும் டிசம்பரில் நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவனித்தனர். காய்ச்சல் மற்றும் பிற நோய்க்கிருமிகளுக்கான சோதனைகள் எதிர்மறையாக திரும்பின.
தொற்றுநோய் பரவிய சிறிது நேரத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS-CoV-2 இன் மரபணுவை வரிசைப்படுத்தி, தரவை உலகளவில் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கச் செய்தனர். இதன் விளைவாக வந்த மரபணு வரிசை தரவு மூலம், சீன அதிகாரிகள் உடனடியாக தொற்றுநோயைக் கண்டறிந்ததாகவும், மனித மக்கள்தொகையில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட பிறகு, மனிதர்களுக்கு இடையே பரவும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் காட்டியது.
ஷி ஜெங்லி தலைமையிலான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி குழு சீனா-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு மலை குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பேட் வைரஸ் தான் இதன் தோன்றல் இடம் என்பதை கண்டறிந்தனர்..
இந்த வைரஸ் இப்போது உலகின் ஒவ்வொரு மூலையிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
credit indianexpress.com

ஊரடங்கு உத்தரவால் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது - ஐகோர்ட்

ஊரடங்கு உத்தரவு மூலமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய வாழும் உரிமையும் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது என தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாநில அரசின் 144 தடை உத்தரவு அறிவித்துள்ளது. அத்தியவசிய பொருள்கள் பால், மருந்து, மளிகை போன்றவற்றை விற்கவும், விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சமூக விலகல் அறிவுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிப்பதாகவும். காவல்துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்கின்றனர் என்றும், சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்யலாமே தவிர அவர்களை தண்டிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் மனு கூறியுள்ளார். எனவே ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை பொதுமக்களிடையே கடுமையாக நடந்து கொள்வதாக கூடாது என தமிழக அரசுக்கும் , டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு அவசர வழக்காக இன்று நீதிபதிகள் வீனித் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த வழக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் திநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் வாதிட்டார். அவர் தன்னுடைய வாதத்தில், தமிழக காவல் துறை பொதுமக்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்வதை தடுக்க வேண்டும். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் அப்பாவி மக்கள் மற்றும் மருத்துவர்கள் கூட அத்துமீறலால் பாதிக்கபட்டனர். எனவே இந்த வரம்பு மீறல் உடனடியாக தடுக்கபட வேண்டும்.
அரசினுடைய கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் அவருடை வீட்டில் இருந்து வீடியோ கால் மூலம் நீதிபதிக்கு பதிலளித்தார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தன்னுடைய வாதத்தில், தடை உத்தரவில் எந்த விதி மீறில் நடைபெறவில்லை. எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை, இதுவரை ஊரடங்கை மீறியவர்கள் மீது தமிழகம் முழுவதும் 17 ,118 வழக்குப்பதிவு, செய்யபட்டுள்ளதாகவும். முறையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்,
மனுதாரர் குறிப்பிட்ட சம்பவங்களை குறிப்பிடாமல் பொதுவான குற்றச்சாட்டு மட்டுமே எடுத்து வைப்பதாக தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் வினித் கோத்தாரி சுரேஷ்குமார் அமர்வு, நாங்கள் குறிப்பிட்ட எந்த உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்கவில்லை என்றாலும் இந்த பிரச்சனை தொடர்பாக நடுநிலையான அணுகுமுறையை அரசு கையாளவேண்டும். மேலும் மனித உணர்வுகள் இதில் மதிக்கப்பட வேண்டும்,
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 கீழ் தனி மனித வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது. அவர்களின் வாழும் உரிமைக்கு எந்த குந்தகமும் விளைவிக்கக் கூடாது தமிழகத்தின் கடைகோடியில் இருக்க கூடிய மக்களுக்கும் காவல் துறையால் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று தமிழக அரசிடம் எதிற்பார்ப்பதாக கூறிய நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
credit : indianexpress.com

சென்னையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் வசித்த பகுதிகளில் சோதனை நடக்கிறதே தவிர சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.



தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் சிகிச்சையில் குணமடைந்து சென்றுவிட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
67 பேரில் பலர் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள். சிலர் அவர்களது குடும்பத்தார். சிலர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் கண்டறியப்பட்டவர்கள். இவர்கள் வசிக்கும் பகுதியில் 7 கி.மீ. சுற்றுக்கு வீடுகளை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை முடிவு செய்தது.
சென்னையில் மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 2,500 வீடுகளில் வசிக்கும் மக்களை 28 நாட்கள் கண்காணிக்க முடிவு செய்து அதற்கான பணியும் இன்று தொடங்கப்பட்டது.
சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி அண்ணாநகர் மண்டலத்திலுள்ள அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 நபர்களுக்கும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 5 நபர்களுக்கும், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் பகுதியில் 2 நபர்களுக்கும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம் பகுதி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் பகுதி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் தலா ஒரு நபர் என மொத்தம் 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தப்பகுதிகளில் சோதனை நடக்கிறதே ஒழிய சென்னையில் சில பகுதிகளில் ரெட் அலர்ட் எதுவும் மாநகராட்சி விடுக்கவில்லை. பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி பீதியடைய வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks for staying indoors. To help you continue the same we are releasing a list of shops/ supermarkets in South Chennai which does home delivery. This list is not exhaustive & we will keep updating. Also feel free to add if shops are missed out on the comment section
View image on Twitter
இதைப் பற்றி 88 பேர் பேசுகிறார்கள்



credit indianexpress.com
அதே போன்று சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் கடைகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது.

கர்ப்பிணிகளை உலுக்கும் கேள்வி: தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுமா கொரோனா? குழந்தை பிறந்தவுடன் ஒருவர் எவ்வளவு நாள் தனித்திருக்க வேண்டும்? எனக்கு தெரியும் இந்த நாட்டிலே நான் ஒருத்தி மட்டும் கர்ப்ப காலத்தில், இந்த கேள்விகளுடன் அல்லாடிக்கொண்டிருக்கவில்லை.

கர்ப்பிணிகளை உலுக்கும் கேள்வி: தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுமா கொரோனா? குழந்தை பிறந்தவுடன் ஒருவர் எவ்வளவு நாள் தனித்திருக்க வேண்டும்? எனக்கு தெரியும் இந்த நாட்டிலே நான் ஒருத்தி மட்டும் கர்ப்ப காலத்தில், இந்த கேள்விகளுடன் அல்லாடிக்கொண்டிருக்கவில்லை.

ஸ்ருதி தபோலா, கட்டுரையாளர்
எல்லா பிரசவங்களுமே பீதி மற்றும் பதற்றம் நிறைந்த கணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அது தவிர்க்க முடியாததும் கூட. எனது முதல் அனுபவம், ஏதோ ஒரு ஆவலில் நான் ஒரு பாக்கெட் சிப்சை சாப்பிட்டுவிட்டேன். அதனால் என்ன? சிப்சை சாப்பிடதன் மூலம் நான் சரிசெய்ய முடியாத தீங்கை இன்னும் பிறவாத குழந்தைக்கு செய்துவிட்டேனா? கூகுளும், மற்ற தாய்மார்களும், மற்றவர்களும் அதனால் ஒன்றும் இல்லை என்று அறிவுறுத்தினர். அதனால், நான் அந்த முதல் பீதியிலிருந்து தப்பித்தேன். இப்படித்தான் பிரசவம் முழுவதுமே பெண்களுக்கு பல்வேறு விஷயங்களில் பீதியை ஏற்படுத்தும்.
ஆனால் இதுபோன்ற வேதனையான பதற்றங்கள் அவ்வளவு எளிதாக நம்மைவிட்டு சென்றுவிடாது. தற்போது நான் வேறுமாதிரியான காலகட்டத்தில் நுழைகிறேன். யாரும் எதிர்பாத்திடாத ஒரு திருப்புமுனையை எனது பிரசவகால இறுதி நாட்கள் கொண்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக உலகளவிலான ஒரு தொற்று நோய் நேரத்தில், தயாராவது சற்று கடினமாகத்தான் உள்ளது. நாம் உலகளவில் தொடர்பில் இருந்தாலும், 21 நாள் தேசிய ஊரடங்கில் இருந்தாலும், மருத்துவர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது போன்ற பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
Credit : Indian express.com
கர்ப்ப காலத்தின் மூன்றாவது மூன்று மாதங்கள் மிக வித்யாசமாக உள்ளது. அல்லது அவ்வாறு நான் நினைத்துக்கொள்கிறேன். பெரும்பாலானோர் தங்கள் சமூக வலைதளங்களில் கர்ப்பகால அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். எனக்கு அது இந்த செய்தியில் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். வளைகாப்புக்கு வாய்ப்பில்லை. உலகம் முழுவதும் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதை நான், கர்ப்பம் தொடர்பாக, எனது போனில், பதிவிறக்கம் செய்துவைத்துள்ள பல்வேறு செயலிகளில் பார்க்கிறேன்.
சமூக ஒன்றுகூடலே இனி சிறிது காலத்திற்கு கிடையாது. வணக்கம் சமூக தனிமையே! இந்த பதற்றம் புதிதல்ல. நானும் பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்து விடாமுயற்சியுடன் தொடர்ந்து பார்த்து வருகிறேன். செய்தி துறையில் பணியாற்றுவதில் உள்ள ஒரு அபாயம் இது ஆகும். உங்கள் பீட் தொடர்பான பிரச்னை இல்லையென்றாலும், உங்களுக்கு கிடைக்கப்பெறும் தகவல் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க இயலாது.
சீனாவில் மூன்றாவது மூன்று மாதத்தில் கொரோனா பாதித்த பெண்கள் குறித்து லான்சட் மருத்துவ இதழின் ஆய்வு குறித்தும், அவர்களுக்கு அப்போது எப்படி தோன்றியது, அவர்கள் நலமுடன் வெளிவர உதவிய விஷயங்கள் குறித்தும் நான் படித்து வருகிறேன். ஆனால் இவையனைத்தும் எந்த உத்திரவாதத்தையும் மனதிற்கு வழங்குவதாக இல்லை.
உண்மையில் கர்ப்பிணிகளை இந்த நோய் எவ்வாறு பாதிக்கும் என்பது பல நிபுணர்களுக்கே தெரியவில்லை. இந்த வைரஸ் தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுமா? அப்படி பரவினால் குழந்தைக்கு என்ன ஆகும்? இதுபோன்ற கேள்விளை நான் தவிர்க்க முடியாது. ஆதாரங்கள் போதிய அளவு இல்லை மற்றும் யாருக்கும் தெரியாது என்ன ஆகுமென்று.
இந்த தொற்றுநோய் நிறைய பேருக்கு பரவினால், இதை நன்றாக புரிந்துகொண்ட வகையில், அது தீர்வை கொண்டு வராது. இந்த ஊரடங்கும், அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளும் வேறு அதிகரிக்கும். நான் எனது மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு செல்வது சட்டத்திற்கு புறம்பானதா? நான் ஒரு சிக்கலான உணவு கணக்கை என் மனதில் எண்ணிக்கொண்டிருக்கிறேன். வழக்கமாக வரும் பால் கிடைக்காவிட்டால் என்ன ஆகும்? வீட்டில் கால்சியத்திற்கான மாற்று வழிகள் என்ன? இரும்புச்சத்து உணவுகளுக்கான வழி என்ன? முட்டைகளுக்கான வழி என்ன? நான் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்ற புரதங்கள் என்ன?
இந்நிலை இன்னும் மோசமடைந்தால் என்ன ஆகும்? இந்தியாவின் சுகாதார சேவைகள் ஏற்கனவே உருக்குலைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொற்றால் நோயாளிகள் வெள்ளமென வந்தால், அதை எடுத்துக்கொள்ள முடியாது. எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள படுக்கை கிடைக்குமா? என் மகப்பேறு மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டு, எனக்கு தேவைப்படும்போது, அவர் செயலற்று கிடந்தால் என்னவாகும்?
இந்த ஊடரங்கு காலத்தில் வேறு ஒரு மருத்துவரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பேன்? எனது பெற்றோரும், என் கணவரின் பெற்றோரும் அவர்களின் பேரக்குழந்தையை எவ்வளவு நாளில் பார்க்க முடியும்? அது முன்னரே பிறந்திருக்கலாமோ? குழந்தை பிறந்தவுடன் ஒருவர் எவ்வளவு நாள் தனித்திருக்க வேண்டும்? எனக்கு தெரியும் இந்த நாட்டிலே நான் ஒருத்தி மட்டும் கர்ப்ப காலத்தில், இந்த கேள்விகளுடன் அல்லாடிக்கொண்டிருக்கவில்லை.
பீதியடையத் தேவையில்லை என்ற செய்தி எப்படியும் என் மனதில் பதியப்போவதில்லை. குறைந்தபட்சம் அதிலாவது என் மனம் அமைதியடைந்திருக்கும். பயம், பதற்றம் அனைத்தையும் உணர்கிறேன். சோகத்தை உணர்வது சரிதான். இந்த சோகம் நீங்கள் எப்படி திட்டமிட்டுள்ளீர்கள் என்ற விஷயங்களை பொறுத்து மட்டுமல்ல. அடுத்தவர்கள் உங்களிடம் என்ன கூறுகிறார்கள் என்பதை பொறுத்ததும். இது அதிகப்படியான எதிர்வினை கிடையாது. தற்போது அது எப்படி முடியும் என்று தெரியாது. அறிவியல் கதைகளில் உள்ள ஒரு கதாப்பாத்திரத்தைபோல் உணர்கிறோம். இங்கு அனைத்தும் கடுமையாகவும், தவறாகவும் சென்றுகொண்டிருக்கிறது.
இதுபோன்ற சிந்தனைகள் என் மனதில் நிறைந்திருக்கின்றன. இந்த கொந்தளிப்பான நேரத்திலும், எனக்கு உள்ள உயர்ந்தபட்ச சலுகைகளை நான் அறிவேன். உணவு முக்கியமல்ல. சில அளவு சுகாதார வசதிகள் எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு தேவையான மருந்துகள் கிடைக்கிறது. எனக்கு தெரியும், குறிப்பிட்ட அளவு சில விஷயங்கள் எனக்கு கிடைக்கும் வகையில் உள்ளது.
ஆனாலும், எனக்கு பிறக்க உள்ள குழந்தைக்கு நான் சில அத்தியாவசியமான பொருட்களை வாங்க வேண்டும். ஆனால் நாட்டில் உள்ள மற்ற கர்ப்பிணிகளுக்கு எனக்கு இருக்கும் சலுகைகள் இல்லை என்பது எனக்கு தெரியும். தொற்றுநோய் சூழல் நாட்டில் இன்னும் மோசமானால், அது அவர்களை பாதிக்கும், மேலும் நிலைகுலையச்செய்யும்.

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு! March 30, 2020

இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இன்று புனேவில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் உயிரிழந்துள்ளதாக புனே மேயர் முரளிதர் மொஹால் தெரிவித்துள்ளார். இதே போல மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரும் இன்று கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த 54 வயதுடைய பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனைதொடர்ந்து இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,192 பேர் ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிராவில் 215 பேரும், கேரளாவில் 202 பேரும், கர்நாடகாவில் 83 பேரும், டெல்லியில் 72 பேரும் உத்தரபிரதேசத்தில் 72 பேரும் தமிழகத்தில் 67 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 
மருத்துவமனையில் சிகிச்சைக்காக 1061 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சிகிச்சையின் மூலம் இதுவரை 102 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனாவிற்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். 
மகாராஷ்டிராவில் 8 பேரும், குஜராத்தில் 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், மேற்கு வங்கம், கர்நாடகாவில் தலா 3 பேரும், டெல்லி  2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
credit ns7.tv

திங்கள், 30 மார்ச், 2020

இன்றைய நிகழ்வு 30 03 2020


தமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல - ராணுவம் விளக்கம்

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி பலர் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும் களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.


இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம், சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.
credit : 
https://tamil.news18.com/news/tamil-nadu/no-para-military-force-security-in-tamilnadu-says-officials-vin-273361.html

COVID 19 - தகவல்

credit indianexpress.com

கடந்த மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் பதிவான 312 நாவல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) வழக்குகளில்

கடந்த மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் பதிவான 312 நாவல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) வழக்குகளில், 80%-க்கும் அதிகமான பேர்கள் இந்தியாவின் 16 நகரங்கள் (அ) மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியவை. இதில் 40%க்கும் அதிகமான பேர் டெல்லி, மும்பை, பில்வாரா (ராஜஸ்தான்), காசர்கோடு (கேரளா) நவான்ஷஹர் (பஞ்சாப்) ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ளனர்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இரண்டு உயிரிழப்பு மற்றும் 194 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இதன்மூலம் ஒரேநாளின் அதிகபட்ச எண்ணிகையை இந்தியா பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 26ம் தேதி அதிகபட்சமாக 86 வழக்குகள் பதிவாகின.  மார்ச் 28ம் தேடி வரை, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 918 ஆக உயர்ந்துள்ள நிலையில், 79 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்,19 பேர் உயிர் இழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் இந்தூர்,போபால்; கேரளாவில் பதனம்திட்டா, கண்ணூர்; மகாராஷ்டிராவில் புனே, சாங்லி; உத்தரபிரதேசத்தில் கவுதம் புத்த நகர்; அகமதாபாத் (குஜராத்), கரீம்நகர் (தெலுங்கானா), லே (லடாக்) , சென்னை (தமிழ்நாடு) ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களில்  கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
மும்பை, புனே, பதனம்திட்டா ஆகிய மூன்று பகுதிகள் “கொரோனா வைரஸ் தொற்றின் உண்மையான ஹாட்ஸ்பாட்களாக உருவெடுத்துள்ளதாகவும், அங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம்  கட்ட நோய் தொற்று பரவலை சந்தித்து வருவதாகவும்” என்று அரசாங்க வட்டாரம் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த பட்டியல்கள் மாறும் தன்மையுடையது. இன்று முதலாவது இடத்தில் உள்ள ஒரு மாவட்டம் நாளை கீழ் இரங்கலாம். புது மாவட்டம் முதல் ஐந்து இடத்திற்குள் வரலாம். இது கட்டுப்பாட்டு முயற்சிகளின் பிரதிபலிப்பு அல்ல, என்பதையும் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்”என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தற்போது 132 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று  கண்டறியப்பட்டுள்ளது . இந்த வாரத் தொடக்கத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்தபோது இந்த எண்ணிக்கை 75 ஆக இருந்தது. இருப்பினும், சுமார் 80 வழக்குகளுக்கு, அவை பதிவாகியுள்ள மாவட்டங்கள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை.
இதற்கிடையில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில்: “அடுத்தகட்ட நிகழ்வை நோக்கி செல்லும் இந்த நேரத்தில், அதிக நோய் சுமை கொண்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளை சுற்றியே எங்கள் கவனம் உள்ளது. அந்த பகுதிகளில் மாநில அரசுடன் இணைந்து, சமூக கண்காணிப்பு, தொடர்பு தடமறிதல் (contact tracing), கட்டுப்பாட்டு உத்திகள் போன்றவற்றை செய்து வருகிறோம்.அங்கு ஊரடங்கு மற்றும் சமூக விலகலை  திறம்பட செயல்படுத்துவதை  உறுதி செய்கிறோம். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சுகாதார உள்கட்டமைப்பு தயாரிப்பு, பிரத்தியோக மருத்துவமனைகள், ஐ.சி.யூ படுக்கைகள் ஆகியவற்றிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.,” என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் இறந்த நோயாளிகள் இருவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்; ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்தது என்றும் அவர் கூறினார்.


மார்ச் 22 முதல் அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்தூர், போபால், கண்ணூர், சூரத், அகமதாபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் தரை இறங்கியவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்பு தடமறிதல் முயற்சி மற்றும் ஏன் குறிப்பிட்ட சர்வதேச விமான நிலையங்கள் மட்டும் ஹாட்ஸ்பாட்டாக  உள்ளன என்ற கேளிவிக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்: “தொடர்பு தடமறிதல் மிகவும் விரிவான மற்றும் கடுமையான செயல்முறைகளில் ஒன்றாகும். ஏனெனில் ஒரு நபரை நீங்கள் தவறவிட்டாலும், மோசமான விளைவுகள் எற்பட வாய்ப்புள்ளது. . வியன்னாவிலிருந்து வந்த முதல் டெல்லி நோயாளி மூலம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த இரண்டு ஆக்ரா குடியிருப்பாளர்களுக்காக, நாங்கள் 1,63,000 வீடுகளில் தொடர்பு தடமரிதல் முயற்சியை நாங்கள் செய்தோம்…….  ஏனெனில், இது அவ்வளவு விரிவான செயல்பாடு” என்றார்.
credit indianexpress.com