வெள்ளி, 20 செப்டம்பர், 2013

துஆக்கள

தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன்
நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும்த
காண்போம்.

அல்லாஹும்ம பாஇத் பைனீ
அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா
பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம
நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல்
அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில்
கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (744)

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ
ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே
நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா!
வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து
தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளை விட்டும் என்னைத்
தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும்
ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)

வஜ்ஜஹ்து

"வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி
வல்அர்ள ஹனீஃபன். வ மா அன மினல் முஷ்ரிகீன். இன்ன
ஸலாத்தீ வ நுசுகீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி
ரப்பில் ஆலமீன். லா ஷரீக்க லஹு வ பிதாலிக உமிர்த்து.
வ அன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்த்தல் மலிக்கு.
லா இலாஹ இல்லா அன்த்த. அன்த்த ரப்பீ வ அன
அப்துக்க. ழலம்த்து நஃப்சீ. வஅதரஃப்த்து பி தன்பீ.
ஃபஃக்ஃபிர்லீ துனூபீ ஜமீஆ. இன்னஹு லா யஃக்ஃபிருத்
துனூப இல்லா அன்த்த. வஹ்தினீ லி அஹ்சனில்
அக்லாக்கி, லா யஹ்தீ லி அஹ்சனிஹா இல்லா
அன்த்த. வஸ்ரிஃப் அன்னீ சய்யிஅஹா, லா யஸ்ரிஃபு
அன்னீ சய்யிஅஹா இல்லா அன்த்த. லப்பைக்க வ
சஅதைக்க. வல்கைரு குல்லுஹு ஃபீ யதைக்க. வஷ்ஷர்ரு லைஸ
இலைக்க. அன பிக்க, வ இலைக்க. தபாரக்த்த வ தஆலைத்த.
அஸ்தஃக்ஃபிருக்க வ அதூபு இலைக்க''

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி)

நூல்: முஸ்லிம் ( 1419)

பொருள்: நான் வானங்களையும் பூமியையும்
முன்மாதிரியின்றிப் படைத்தவன் பக்கம் நேராக என் முகத்தைத்
திருப்பிக் கொண்டேன். நான் இணைவைப்போரில்
ஒருவனாக இருக்க மாட்டேன். என் தொழுகையும் என்
தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அனைத்துலகின்
அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு இணையே
இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான்
கட்டுப்பட்டு நடப்பவர் (முஸ்லிம்)களில் ஒருவன் ஆவேன்.
இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.
நீயே என் இறைவன். நான் உன் அடிமை. எனக்கு நானே அநீதி
இழைத்துக் கொண்டேன். நான் என் பாவங்களை
(மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்
பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! பாவங்களை
மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர்.
நற்குணங்களுக்கு எனக்கு வழிகாட்டுவாயாக.
நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர
வேறெவரும் இலர். துர்குணங்களை என்னிலிருந்து
அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர
வேறெவரும் இலர். இதோ வந்தேன். கட்டளையிடு
(காத்திருக்கிறேன்). நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே
உள்ளன. தீமைகள் உன்னைச் சார்ந்தவை அல்ல. உன்னால்
தான் நான் (நல்வாழ்வு கண்டேன்). உன்னிடமே நான்
(திரும்பிவரப்போகிறேன்). நீ சுபிட்சமிக்கவன். உன்னதமானவன்.
நான் உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறேன்;
பாவங்களிலிருந்து மீண்டு உன்னிடம் திரும்புகிறேன்.

தொழுகையில் தக்பீர் கூறி கைகளைக் கட்டியது முதல்
ஸலாம் கொடுக்கின்றவரை பல்வேறு நிலைகளில் ஓதும்
துஆக்களை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒவ்வொரு துஆவும் நமக்கு இம்மையிலும், மறுமையிலும்
வெற்றி பெறுவதற்குத் தேவையான அற்புதமான
கருத்துக்களை உள்ளடக்கிய துஆக்களாகும்.

இவை அனைத்தும் பாவங்களிலிருந்து நம்மைப் பரிசுத்தமாக்கி,
நேர்வழியில் நம்மை நிலைநிறுத்தி, இவ்வுலக வாழ்வில்
ஈடேற்றமளித்து, ஈமானோடு நம்மை மரணிக்கச் செய்து,
கொடும் நரகத்திலிருந்து காப்பாற்றி, நிரந்தர
சுவர்க்கத்தில் நம்மை இணைத்திடும் அற்புத கருத்துக்களைப்
பொதிந்துள்ள துஆக்கள். இறைவனால்
இறைத்தூதருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அற்புத
துஆக்கள்.

இந்த அற்புத துஆக்களை ஓதும் பாக்கியத்தை
தொழுகையாளிகள் பெற்றுக்
கொள்கிறார்கள்.

என்றாவது ஒருநாள் நாம் துஆக்கள் ஏற்றுக்
கொள்வதற்குரிய தகுதியைப் பெற்று, இந்த
துஆக்களை ஓதும் போது இறையருளால் மிகப்பெரும்
பாக்கியத்திற்குரிய மனிதர்களாகிவிடுவோம். இது
தொழுகையாளிகளுக்கு இறைவனின் மாபெரும்
அருளாகும்.