உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?
ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் , ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறுக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும் .
ஞாபகம் குறித்து சில தகவல்கள் :
நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .
இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .
ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .
எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம் ,திரும்ப திரும்ப செய்தல்
மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.
நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit
explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்
implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்
நினவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்
1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்
2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .
3 . முழு கவனம் மிக அவசியம் .
4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று
கொடுங்கள்
உதரணம் news - north ,east,west,south
5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்
7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை
8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .
9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .
10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளுதில் செரிக்கும் உணவை செர்த்துகொள்வது நல்லது
|
செவ்வாய், 1 ஜனவரி, 2013
Home »
» How to Improve your Memory Power
How to Improve your Memory Power
By Muckanamalaipatti 11:29 PM
Related Posts:
மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் உச்ச நீதிமன்றம் ஏமாற்றம்; வேளாண் சட்டங்களை நிறுத்த பரிந்துரை புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏமாற்றத்தை வெளிப்படுத்தியத… Read More
இடியுடன் கூடிய கனமழை எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை அப்டேட் வங்கக்கடலில், இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய கனமழை ப… Read More
உலக நாடுகள் அனைத்தும் தங்கள் விவசாயிகளை ஆதரிக்கிறது: இந்தியாவின் நிலை என்ன? மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தேசிய தலைநகர் புதுடெல்லி … Read More
அடுத்தடுத்து விபத்துக்கள் : விமான தளத்திற்கு இந்தோனேசியா மோசமான இடமா? இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை புறப்பட்ட ஸ்ரீவிஜயா 182 ரக விமானம் புறப்பட்ட சில நிமிட… Read More
தன்னார்வலர்களை களமிறக்கும் விவசாயிகள்: ஜன 26-ல் மெகா போராட்டம் டெல்லியில் வேளாண் மசோதாவை எதிர்த்து 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தி… Read More