புதன், 13 மே, 2026

வன்னியரசு சட்டமன்ற உரை 13 05 2026

வன்னியரசு சட்டமன்ற உரை 13 05 2026

Credit https://www.youtube.com/watch?v=1OGyJjXgoNg

திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்-05

திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்-05 ஆர் அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர்,TNTJ

முஸ்லிம்கள் அன்றும் இன்றும்

முஸ்லிம்கள் அன்றும் இன்றும் கே.எம்.ஏ.முஹம்மது மக்தூம் பேச்சாளர்,TNTJ மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் - 21.09.2025 நம்புதாளை - இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்

குர்பானியின் நோக்கம்

குர்பானியின் நோக்கம் கே.எம். சல்மான் M.I.Sc பேச்சாளர், TNTJ kurbaaniyin nokkam

இறைவனின் அன்பு இரு உலகங்களின் வெற்றியாகும்

இறைவனின் அன்பு இரு உலகங்களின் வெற்றியாகும் A. சாபிர் அலி மாநிலச் செயலாளர், TNTJ கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - 03.05.2026 வட சென்னை மாவட்டம் - மண்ணடி

குர்பானி யார் மீது கடமை ?

குர்பானி யார் மீது கடமை ? கே.எம்.சல்மான் M.I.Sc பேச்சாளர்,TNTJ

வேதங்களை நமது தாய்மொழியில் வாசிக்கலாமா?

வேதங்களை நமது தாய்மொழியில் வாசிக்கலாமா? ஆடு, மாடு போன்ற விலங்குகளை உண்பது சரியா? இஸ்லாம் ஒரு இனிமையான மார்க்கம் ஐ. அன்சாரி (மாநிலச் செயலாளர், TNTJ) பேராவூரணி - 04.01.2026 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

சிந்தனையை மழுங்கடிக்கும் சினிமா மோகம்

சிந்தனையை மழுங்கடிக்கும் சினிமா மோகம் M. Shamsulluha Rahmani Chairman of the Management Committee, TNTJ TNTJ, Headquarters Jumu'ah - 08.05.2026

உழைப்பே உயர்வு!

உழைப்பே உயர்வு! பல்லாவரம் இப்ராஹீம் பேச்சாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 01.05.2026

புதிய அரசுக்கு முஸ்லிம்களின் செய்தி

புதிய அரசுக்கு முஸ்லிம்களின் செய்தி செய்தியும் சிந்தனையும் - 9.5.26 N. அல் அமீன் (மாநிலச் செயலாளர், TNTJ)

மதுவிலக்கு - தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு

மதுவிலக்கு - தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு செய்தியும் சிந்தனைகளும் - 12.05.2026 காஞ்சி அ. இப்ராஹிம் (மாநிலப் பொருளாளர், TNTJ)

மீண்டும் Work From Home!''- பிரதமர்

மீண்டும் Work From Home!''- பிரதமர் E.J.Muhsin State Secretary TNTJ Message and Thoughts - 11.05.2026

உதயநிதி சட்டசபை உரை 13 -5 2026

உதயநிதி சட்டசபை உரை 13 -5 2026

Credit https://www.youtube.com/watch?v=h0qJ8TPbadg

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.500 கோடியை உடனே வழங்குக;

 தமிழக முதலமைச்சர் விஜய்யை விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து, மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கான ரூ.500 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இது குறித்த விபரம் வருமாறு:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

தமிழக முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

தமிழக அரசின் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல்லுக்கு மூன்று நாட்களில் பணம் வழங்கப்படுகிறது ஆனால் மத்திய அரசின் நேஷனல் கன்ஸ்யூமர் கோப்பரட்டிவ் ஃபெடரேஷன் சார்பில் திருநெல்வேலி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 20- 2 -2026 முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ரூ.500 கோடி அளவுக்கு நெல் கொள்முதல் செய்துவிட்டு இதுவரை விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை.
 
அந்தத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், மாநில அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். மழைக்காலங்களில் 
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் புதிதாக செட்டுகள் அல்லது கூடாரங்கள் அமைக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனு அளித்ததை தொடர்ந்து உடனே முதலமைச்சர் வேளாண் துறை செயலர் பழனிச்சாமியை அழைத்து விவரம் கேட்டார். அப்போது அவர் மத்திய அரசு ரூபாய் 391 கோடி மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. இன்னும் 15 நாட்களில் அந்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் உடனான சந்திப்பின்போது துணைத் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, ஜோதி முருகன், மாநில பொதுச் செயலாளர் ஏழுமலை, செங்கல்பட்டு சண்முகம் உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/farmers-leader-ayyakannu-meets-cm-vijay-regarding-paddy-procurement-payment-11828749

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க எம்.எல்.ஏ-வுக்கு உயர்நீதிமன்றம் தடை: உச்ச நீதிமன்றத்தில் அவசர விசாரணை

 

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஆர். சீனிவாச சேதுபதி பங்கேற்கவோ அல்லது வாக்களிக்கவோ சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) அவசரமாக விசாரிக்கிறது.

வழக்கின் பின்னணி:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை விட ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு, "ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதி குறித்த சந்தேகம் இருக்கும்போது அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது மாநிலத்தின் அரசியல் சாசன நிர்வாகத்தைப் பாதிக்கக்கூடும்" எனக் கூறி அவருக்குத் தடை விதித்தது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு:

இந்தத் தடையை நீக்கக் கோரி சீனிவாச சேதுபதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த வழக்கை விசாரிக்கும் என உத்தரவிட்டுள்ளார். தபால் வாக்குகளைக் கையாள்வதில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படும் புகாரில், இன்று உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவு தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் முக்கியத் திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-to-hear-tvk-mla-seenivasa-sethupathi-plea-against-madras-high-court-ban-floor-test-2026-11828735

எம்.எல்.ஏ-க்கள் ஓட்டு போட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை:

 

os maniyan

தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது.எடப்பாடி பழனிசாமி தலைமைக்கும், சி.வி.சண்முகம்-எஸ்.பி. வேலுமணி குழுவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி வரை நீண்டுள்ளது. இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களான ஓ.எஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சட்டமன்ற சபாநாயகரைச் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், அ.தி.மு.க.வின் 47 எம்.எல்.ஏ-க்களும் கையெழுத்திட்ட கடிதத்தைச் சபாநாயகரிடம் அளித்து உள்ளோம். அதனடிப்படையில் எடப்பாடி பழனிசாமிதான் இப்போதும் அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவர். அ.தி.மு.க. கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி செயல்படுவார். நாளை நடைபெறும் த.வெ.க அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் உத்தரவை ஏற்று த.வெ.க-வுக்கு எதிராகவே அ.தி.மு.க வாக்களிக்கும். தி.மு.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேசிக் கொண்டிருப்பதாக சி.வி. சண்முகம் கூறிய குற்றச்சாட்டை ஓ.எஸ். மணியன் வன்மையாக மறுத்தார்.

அ.தி.மு.கவும் தி.மு.க.வும் என்றும் எதிரெதிர் துருவங்கள். சி.வி. சண்முகம் தனது சுய லாபத்திற்காக, எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுக்க அவதூறுகளைப் பரப்புகிறார். அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் அவர் இவ்வாறு பேசி வருகிறார். அ.தி.மு.க.வின் பிளவை முதல்வர் விஜய் ஆதரிக்க மாட்டார் என நம்புகிறோம். கட்சி கொறடாவின் உத்தரவை மீறி, த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் எம்.எல்.ஏ-க்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு மட்டுமே கட்சியின் விதிகள் குறித்து பேச அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் அவ்வப்போது குழப்பங்கள் நீடித்து வந்தன. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தற்போது தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்ற புள்ளியில் கட்சி மீண்டும் 2 அணிகளாகப் பிரிந்துள்ளது. ஒருபுறம் வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பு 30 எம்.எல்.ஏ-க்களுடன் விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தரப்பு 47 எம்.எல்.ஏ-க்கள் தன்பக்கம் இருப்பதாகக் கூறி எதிராக வாக்களிக்கத் தயாராகி வருகிறது. நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு, த.வெ.க அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வின் அதிகாரப் போட்டியிலும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-vs-tvk-we-will-vote-against-cm-vijays-govt-declares-eps-faction-legal-action-if-they-support-tvk-in-trust-vote-11828082

செவ்வாய், 12 மே, 2026

சென்ற தி மு க ஆட்சி - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ஆலோசனை குழுவில்

 12 05 2026  சென்ற தி மு க ஆட்சி - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ஆலோசனை குழுவில்





ஆரோக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் உரை.... வாழ்த்துக்கள் திரு.உதய் 12 05 2026

ஆரோக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் உரை.... வாழ்த்துக்கள் திரு.உதய் 12 05 2026

Credit https://www.youtube.com/watch?v=4s1dENLaZHs

இது தோல்வியின் அடையாளம்': ராகுல் எதிர்ப்பு

source  https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-vs-pm-modi-west-asia-crisis-india-impact-11823033


Rahul Gandhi vs PM Modi West Asia crisis India impact

Rahul Gandhi vs PM Modi | West Asia crisis India impact

மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைக்கவும், அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும் மக்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமரின் இந்த அறிவுரைகள் மத்திய அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைங்கள், சமையல் எண்ணெய் மற்றும் உரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யுங்கள் மற்றும் வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள் (Work From Home) என மக்களிடம் பிரதமர் தியாகங்களைக் கோருகிறார். இவை வெறும் ஆலோசனைகள் அல்ல; இவை அரசின் தோல்விக்கான ஆதாரங்கள்.

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு பிரதமர் கொண்டு வந்துள்ளார். மக்கள் எதை வாங்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்பதைக்கூட அரசே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்காகவே அரசாங்கம் மக்களின் மீது பழியைப் போடுகிறது. நாட்டை நடத்துவது என்பது இனி ஒரு 'சமரசமான பிரதமரால்' (Compromised PM) முடியாத காரியம்" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தத்தில் இருப்பதாகக் கூறினார்.

"எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files) மற்றும் அமெரிக்காவில் கௌதம் அதானிக்கு எதிரான வழக்குகள் காரணமாகவே பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கப்பட்டு, இந்த வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்" என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இது குறித்துக் கூறுகையில், "தேர்தல் முடிந்தவுடன் அரசாங்கத்திற்கு 'நெருக்கடி' ஞாபகம் வந்துவிட்டது. உண்மையில் நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பாஜகதான். கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒரு நாடால் எப்படி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடியின் அறிவுரைகள் என்ன?

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய இடையூறுகளைச் சமாளிக்க மக்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்:

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.

மின்சார வாகனங்களுக்கு (EV) முன்னுரிமை கொடுங்கள்.

ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதையும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களையும் தவிர்க்கவும்.

கொரோனா காலத்தைப் போல 'வொர்க் ஃப்ரம் ஹோம்' மற்றும் மெய்நிகர் கூட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துங்கள்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளை விடவும், முஸ்லிம் லீக்கை விடவும் தீவிரமான நிலையை எடுத்துள்ளதாகவும், அக்கட்சியை 'எம்.எம்.சி' (முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் காங்கிரஸ்) என்றும் விமர்சித்தார்.

சிலிண்டர் டெலிவரி மெசேஜ் வருதா? ஒரு நிமிஷம் நில்லுங்க.. மொத்த பேங்க் பேலன்ஸும் காலியாக வாய்ப்பிருக்கு - உஷார்!

 

source https://tamil.indianexpress.com/tamilnadu/lpg-cylinder-delivery-dac-otp-scam-alert-protect-bank-account-11824996


lpg supply 2

சிலிண்டர் விநியோகத்தை உறுதிப்படுத்த எரிவாயு நிறுவனங்கள் அனுப்பும் ஓ.டி.பி (OTP) எண்களைப் போல போலியான குறுஞ்செய்திகளை உருவாக்கி, மோசடியாளர்கள் கைவரிசை காட்டுகின்றனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டி.ஏ.சி (DAC) பாதுகாப்பு நடைமுறையைப் பயன்படுத்தி, பொதுமக்களின் வங்கிப் பணத்தைச் சுருட்டும் புதிய வகை சைபர் மோசடி அரங்கேறி வருகிறது. சிலிண்டர் கையில் கிடைப்பதற்கு முன்பே ஓ.டி.பி (OTP) எண்களைப் பகிரக் கோரும் மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க, எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இதோ.

பொதுவாக, முன்பதிவு செய்த சிலிண்டர் வீட்டிற்கு வரும்போது அதனை உறுதி செய்ய நுகர்வோரின் மொபைல் எண்ணிற்கு ஒரு ரகசிய குறியீடு வரும். இதனைப் பயன்படுத்தும் கும்பல், சிலிண்டர் விநியோகஸ்தர்கள் போலப் பேசி அல்லது போலியான இணைய முகவரிகளை அனுப்பி, அந்த குறியீட்டைப் பகிருமாறு நுகர்வோரை வற்புறுத்துகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், உண்மையான செய்தி என நம்பி மக்கள் அந்த லிங்க்கை கிளிக் செய்யும்போதோ அல்லது ரகசிய எண்ணைப் பகிரும்போதோ, அவர்களது வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஹெச்பி, இண்டேன் மற்றும் பாரத் கேஸ் போன்ற முன்னனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. குறிப்பாக, சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து, சிலிண்டரை உங்களிடம் ஒப்படைக்கும் போது மட்டுமே அந்த டிஏசி குறியீட்டை அவரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் வழியாகவோ ஓ.டி.பி எண்களைக் கேட்பது அதிகாரப்பூர்வமானது அல்ல என்பதை நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

மேலும், எச்.பி கேஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை 'VM-HPGASc-S' என்ற அடையாளத்தில் வரும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய வகையில் வரும் அழைப்புகள் அல்லது அவசரப்படுத்தும் குறுஞ்செய்திகளுக்குப் பதில் அளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தட்டுப்பாடு நிலவும் சூழலில் மக்கள் அவசரத்தில் எடுக்கும் முடிவுகளை மோசடியாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதால், எல்.பி.ஜி சிலிண்டர் தொடர்பான விவகாரங்களில் மிகுந்த நிதானத்துடனும் பாதுகாப்புடனும் செயல்படுவது அவசியம். உங்களின் விழிப்புணர்வு மட்டுமே உழைத்துச் சேர்த்த பணத்தைச் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாக்கும்.

நீட் 2026: வினாத் தாள் கசிந்ததா? தேர்வுக்கு முன்பே வெளியான 120 கேள்விகள்? போலீசார் விசாரணை

 

NEET-UG

நீட் 2026: வினாத் தாள் கசிந்ததா? தேர்வுக்கு முன்பே வெளியான 120 கேள்விகள்? போலீசார் விசாரணை

நாடு முழுவதும் மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் 2026 தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து, ராஜஸ்தான் மாநில போலீசாரின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய SOG கூடுதல் டிஜிபி விஷால் பன்சால் கூறியதாவது; நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. 410 வினாக்கள் அடங்கிய ஒரு 'கெஸ் பேப்பர்' குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த 410 வினாக்களில் சுமார் 120 வினாக்கள், குறிப்பாக வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்கள், உண்மையான தேர்வு வினாத்தாளுடன் ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது. 

இந்த பிடிஎஃப் கோப்பு தேர்வு நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே, சுமார் 1 மாதத்திற்கு முன்னரே மாணவர்களிடம் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. சுமார் 150 பக்கங்கள் கொண்ட இந்த கோப்பு மாணவர்களின் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் எங்கிருந்து உருவானது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இது பொதுவெளியில் பரவலாகப் பகிரப்பட்டதால் அதன் மூலத்தைக் கண்டுபிடிப்பது சவாலான காரியம் என்று பன்சால் தெரிவித்தார்.

பொதுவாக வினாத்தாள் கசிவு என்பது மிகவும் ரகசியமாக நடக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் வினாக்கள் பொதுவெளியில் கசிந்துள்ளன. வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் பொதுவாக தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, தேர்வு நாள் காலை மாணவர்களைப் படிக்க வைப்பார்களே தவிர, இப்படி பொதுவெளியில் பகிர மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக டேராடூனைச் சேர்ந்த ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வினாத்தாள் கசிவு புகார்கள் குறித்து தேசிய தேர்வு முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேர்வு முறையின் நேர்மையைக் காப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மே 7-ம் தேதி இரவு இது தொடர்பான புகார்கள் வந்த நிலையில், அடுத்த நாளே (மே 8) மத்திய விசாரணை அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

தேர்வு நேர்மையாக நடந்ததாகத் தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதாகக் கூறியுள்ளது. வினாத் தாள்கள் GPS பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. தேர்வு அறைகளில் ஏ.ஐஒ (செயற்கை நுண்ணறிவு) உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் 5ஜி ஜாமர்கள் பயன்படுத்தப்பட்டன. விசாரணை முடிவில் உண்மைகள் வெளிவரும் என்றும், தகுதியுள்ள மாணவர்களின் உழைப்பு வீண் போகாது என்றும் தேசிய தேர்வு முகமை உறுதியளித்துள்ளது. கல்வி அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/120-of-410-questions-from-neet-ug-appeared-in-guess-paper-probe-begins-in-rajasthan-11824636


திங்கள், 11 மே, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு -ராமதாஸ் கண்டனம் 10 05 2026

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு -ராமதாஸ் கண்டனம் 10 05 2026

Credit https://www.youtube.com/watch?v=hvtouiaxpTo

திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக Udhayanidhi Stalin தேர்வு 10 05 2026

திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக Udhayanidhi Stalin தேர்வு 10 05 2026

Credit https://www.youtube.com/watch?v=gbPg3Zfxbyw

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு -விளக்கம் 10 05 2026

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு -விளக்கம் 10 05 2026

Credit https://www.youtube.com/watch?v=g3Xe4GqgJCw

பெட்ரோலை சேமியுங்கள், தங்கம் வாங்காதீர்கள் -மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

10 05 2026 பெட்ரோலை சேமியுங்கள், தங்கம் வாங்காதீர்கள் -மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

credit https://www.youtube.com/watch?v=doYnUT15pcI

தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள் உள்ளது திருமா

10 05 2026 தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள் உள்ளது திருமா

Credit https://www.youtube.com/watch?v=V5kwp4h0kuA

யாருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்; யாருக்கு 100 யூனிட் இலவசம்? அரசின் முதல் அரசாணை முழு விவரம்

 தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 3 முக்கியக் கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட '200 யூனிட் இலவச மின்சாரம்' திட்டம் குறித்த அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

200 யூனிட் இலவச மின்சாரம்: யாருக்குப் பொருந்தும்?

2 மாதங்களுக்கு ஒருமுறை தங்களது வீட்டு மின் பயன்பாட்டை 500 யூனிட்டுகளுக்குள் வைத்திருக்கும் நுகர்வோருக்கு மட்டுமே மொத்தம் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும். ஒரு நுகர்வோர் 2 மாதங்களில் 500 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால், அவர்களுக்குப் புதிய சலுகை பொருந்தாது. அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கட்டண முறையே தொடரும்; அதாவது ஏற்கனவே அமலில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த புதிய மின்சார மானியத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,730 கோடி நிதிச் சுமை ஏற்படும். இதற்கான செலவினங்கள் 'தலைமை மின் ஆய்வாளர்' கணக்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அனுமதி, வரும் 2026-27 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் (Revised Budget Estimate) சட்டமன்றத்தின் மூலம் பெறப்படும். இந்த அரசாணையின் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் மின் கட்டணச் சுமையிலிருந்து பெரும் நிவாரணம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்கு 'வேலுநாச்சியார் அதிரடிப்படை'

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரத்யேகமாக 'வேலுநாச்சியார் அதிரடிப்படை' உருவாக்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரில் அமையும் இந்தப் படை மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்.

போதைப்பொருள் இல்லாத தமிழகம்: 'தடுப்புப் படை' அமைப்பு

தமிழகத்தில் இளைஞர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தனி 'போதைப்பொருள் தடுப்புப் படை' (Anti-Drug Task Force) அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது சமூக நலன் சார்ந்த மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-issues-official-order-for-200-units-free-electricity-check-eligibility-rules-government-releases-detailed-guidelines-11820124

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி; தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு

 

10 05 2026

udhayanithi

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி; தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு

தமிழக சட்டப்பேரவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராக அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த மே 7-ம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சட்டமன்றக் குழுத் தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் (இதன் மூலம் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகிறார்), துணைத் தலைவராக கே.என். நேருவும், கொறடா எ.வ. வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தார். இதனால், சட்டமன்றத்தில் தி.மு.கவை வழிநடத்தப்போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தற்போது அந்தப் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் இன்று (மே 10) பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட உள்ளார். தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. மே 11-ம் தேதி (நாளை) கூடவுள்ள 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகத் தனது பணியைத் தொடங்கவுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-appointed-as-tamil-nadus-leader-of-opposition-dmk-announces-new-assembly-roles-11820519

ஞாயிறு, 10 மே, 2026

இதுதான் டெல்லி vs தமிழ்நாடு... இப்போது தெரியுதா..?செந்தில்வேல் அதிரடி

இது தான் டெல்லி vs தமிழ்நாடு... இப்போது தெரியுதா..?செந்தில்வேல் அதிரடி 10 05 2026

Credit https://www.youtube.com/watch?v=rsoIQYMtIyQ

முடிவுக்கு வராத‌ டீல்; ஈரான் பதிலுக்கு காத்திருக்கும் அமெரிக்கா

 

முடிவுக்கு வராத‌ டீல்; ஈரான் பதிலுக்கு காத்திருக்கும் அமெரிக்கா 9 5 2026

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே நேரடி மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ள 14 அம்ச சமாதானத் திட்டத்திற்கு ஈரான் இன்று தனது அதிகாரப்பூர்வ பதிலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இதுகுறித்துத் தெரிவிக்கையில், ஈரானின் பதிலை வாஷிங்டன் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இன்று அந்தப் பதில் எங்களுக்குக் கிடைக்கக் கூடும் என்றார்.
உலகின் மிக முக்கியமான வர்த்தக பாதையான ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்க மற்றும் ஈரானிய கடற்படைகளுக்கு இடையே அங்காங்கே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் 'ஃபார்ஸ்' செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் முற்றுகையை (Maritime blockade) முழுமையாக நீக்கினால் மட்டுமே அமைதி சாத்தியம் என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது.
முன்னதாக, ஐநா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஈரான் அடியோடு நிராகரித்தது. இதுகுறித்து பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவின் இந்தத் திட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது; தனது ராணுவ அத்துமீறல்களை நியாயப்படுத்த சர்வதேச அமைப்புகளை வாஷிங்டன் கருவியாகப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்காவும் பஹ்ரைனும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ஒருபுறம் ஈரான் - அமெரிக்கா பதற்றம் நீடிக்க, மறுபுறம் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள டைர் டெப்பா, அல்-அப்பாசியே, புர்ஜ் ரஹால் உள்ளிட்ட 9 கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. அங்கு மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலியக் குடியேறிகள் பாலஸ்தீனியர்களின் வீடுகளுக்குத் தீ வைத்துள்ளனர். குறிப்பாக ஜெனின் பகுதியில், அடக்கம் செய்யப்பட்ட ஒரு பாலஸ்தீனியரின் உடலைத் தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்குமாறு இஸ்ரேலியப் படைகள் மக்களைக் கட்டாயப்படுத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ நடத்திய ஆய்வின்படி, அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை ஈரான் இன்னும் 4 மாதங்களுக்கு உறுதியாகத் தாக்குப் பிடிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. இதனால், தற்போதைய நிலையில் பொருளாதார அழுத்தம் கொடுத்து ஈரானை அடிபணிய வைக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளதாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. தூதரக ரீதியிலான முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், களத்தில் ராணுவ மோதல்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு நாடுகள் பெரும் போர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.


source https://tamil.indianexpress.com/international/iran-us-war-live-updates-us-imposes-sanctions-on-companies-it-accuses-of-aiding-irans-weapons-sector-11816383

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்: கடலுக்கு அடியில் ஈரானின் போர் தந்திரம்; அமெரிக்காவை தாக்கும் டால்பின் படை

 

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்: கடலுக்கு அடியில் ஈரானின் போர் தந்திரம்; அமெரிக்காவை தாக்கும் டால்பின் படை

iran

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த போரில் ஈரானில் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட அதிகாரிகள் மற்றும் மக்கள் என பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து, தற்போது ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் தொடர்ந்து முயன்று வருகிறது.

ஈரான் வசம் உள்ளா ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை இறுக்கமாகி வரும் நிலையில், அதை முறியடிக்க ஈரான் ஒரு விசித்திரமான மற்றும் ஆபத்தான உத்தியைக் கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்க்களத்தில் யாரும் எதிர்பாராத அதிரடித் தாக்குதல்களை நடத்துவதில் கில்லாடியான ஈரான், இம்முறை இயற்கையைத் தனது ஆயுதமாக மாற்றத் துணிந்துள்ளது.

டால்பின்களும் தற்கொலைத் தாக்குதலும்

'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரான் தனது கடற்படையில் பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது ஈரானுக்குப் புதிய விஷயம் அல்ல. கடந்த 2000-ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியனிடம் இருந்து இத்தகைய விலங்குகளை ஈரான் வாங்கியதாக பிபிசி ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த டால்பின்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் அதிர வைக்கின்றன.

கண்ணிவெடிகள்

எதிரிக் கப்பல்களைக் கண்டறிந்து அவற்றின் மீது கண்ணிவெடிகளைப் பொருத்துதல். தனது முதுகில் வெடிமருந்துகளைச் சுமந்து சென்று, எதிரிக் கப்பல்கள் மீது மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்துதல். கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் வீரர்களைக் கண்டறிந்து தாக்குதல் நடத்துதல் போன்ற பயிற்சிகள் இந்த டால்பின்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏன் இந்த விசித்திர முடிவு?

அமெரிக்காவின் தொடர் முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இனியும் அமைதியாக இருந்து அழிவதை விட, ஒருமுறை மோதிப் பார்ப்பதே மேல் என்ற மனநிலைக்கு ஈரான் வந்துள்ளதாக ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நவீன ரேடார்களால் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியாத இந்த 'உயிருள்ள ஆயுதங்கள்' அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

09 5 2026 


source https://tamil.indianexpress.com/international/hormuz-issue-iran-considers-trained-dolphins-for-naval-attacks-11817585

ஆதரவா? 20 எம்.எல்.ஏ-க்களுடன் கட்சித் தாவல் தடை சட்டம்' பாயுமா?

 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு அமைப்பதில் நிலவி வந்த இழுபறியில் தற்போது மிகப்பெரிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற த.வெ.க தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது த.வெ.க தலைவர் விஜய்க்கு 120 என்ற பலம் கிடைத்துள்ளது. 

விஜய் ஆட்சி அமைக்கும் பரபரப்பு ஒருபுறம் இருக்க, தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க. நகர்வுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றி பெற்ற கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தனிப்பட்ட செயல்பாடுகள் கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளன.

எடப்பாடி பழனிசாமி தனது X தளத்தில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் சி.வி.சண்முகம் தனது அலுவலகத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் 15 முதல் 20 எம்.எல்.ஏக்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, அண்மையில் அ.தி.மு.க.வில் இணைந்த லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் இதில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபடும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த ராஜினாமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவிக்கையில், அ.தி.மு.க.வின் ஒரு தரப்பு எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துப் பதிவு ஒருபுறம் இருக்க, மறுபுறம் எம்.எல்.ஏக்கள் கூடி ஆலோசனை நடத்துவது முரணாகத் தெரிகிறது. இது ஒரு செயற்கையான பெரும்பான்மையை உருவாக்கும் முயற்சியாகவோ அல்லது குதிரை பேரமாகவோ மாற வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.

சி.வி.சண்முகம் தலைமையில் ஒருகுழு தனியாகப் பிரிந்து சென்றால் அவர்கள் மீது 'கட்சித் தாவல் தடைச் சட்டம்' பாயுமா என்பது குறித்த விவாதமும் எழுந்துள்ளது. தராசு ஷியாம் இதுகுறித்து விளக்குகையில், தற்போது புதிய சபாநாயகர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், கொறடா உத்தரவு (Whip) மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இறுதியில் இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கைகளுக்கே செல்லும் சூழல் உருவாகலாம். அதிமுக தலைமைக்கும், சி.வி.சண்முகம் தலைமையிலான இந்த குழுவிற்கும் இடையே நிலவும் இந்த அதிகாரப் போட்டி, வரும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/anti-defection-law-vs-rebel-power-eps-wishes-but-cv-shanmugam-rebels-deep-split-in-admk-as-20-mlas-hold-separate-meet-11817474

8 அமைச்சர்களுடன் இன்று பதவி ஏற்பு

 10 05 2026 

tvk

த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் த.வெ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும். 

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது. ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு (2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது.

இதையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை த.வெ.க தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரிடம் வழங்கினார்.

அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆட்சியமைக்க த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, த.வெ.க தலைவர் விஜய், தமிழக முதல்வராக ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது முதற்கட்டமாக முதலமைச்சர் விஜயுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

கட்சியில் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், செங்கோட்டையன்,  அருண் ராஜ் (ஐஆர்எஸ்),  ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார்  ஆகியயோர்  பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணி துறை அமைச்சராக செங்கோட்டையன்,  நகராட்சி நிர்வாகத்துறை துறை  என்.ஆனந்த்,  மின்சாரம் சி.டி.ஆர். நிர்மல்குமார், விளையாட்டு மற்றும் மது விலக்கு துறை - ஆதவ் அர்ஜுனா,  ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன்,  சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா,  பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண்ராஜ்,  பள்ளி கல்வித்துறை - வெங்கட் ரமணன் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார்,  விஸ்வநாத் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-chief-vijay-set-to-become-next-chief-minister-of-tamilnadu-with-9-member-cabinet-11818202

தமிழக முதல் அமைச்சராக காலை 10 மணிக்கு பதவி ஏற்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

 


vjay

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க 108 இடங்களை கைப்பற்றியது. இதில் த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் த.வெ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும். 

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது. ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு (2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது.

இதையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை த.வெ.க தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரிடம் வழங்கினார்.

அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆட்சியமைக்க த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய், தமிழக முதல்வராக பதவியேற்கும் விழா நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

10 05 2026 

விஜய் உடன் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உட்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினாலும் கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என விஜய் விரும்புவதாக கூறப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-leader-vijay-to-take-oath-as-the-chief-minister-of-tamil-nadu-11818075

சனி, 9 மே, 2026

ஆதரவு! Open Talk

ஆதரவு! Open Talk 09 05 2026

credit https://www.youtube.com/watch?v=rcw8ZmRT4YM

ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்தது

ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்தது 09 05 2026

credit Sun News YT , https://www.youtube.com/watch?v=plDe5Ksf-1o

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 

09 06 2026 விசிக ஆதரவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

credit https://www.youtube.com/watch?v=1Q8UkaPT9_8

சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?

 

சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?


8 5 2026 
handa

நெதர்லாந்தைச் சேர்ந்த உல்லாச கப்பலான  எம்.வி ஹோண்டியஸ் என்ற கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்ந்த 149 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கப்பலில் இருக்கும் பயணிகளில் சிலருக்கு உலகின் மிக ஆபத்தான 'ஹண்டாவைரஸ்' தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்தப் பயணத்தின் இடையே, இதுவரை 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கப்பலில் பணிபுரியும் 61 ஊழியர்களில், இரண்டு பேர் இந்தியர்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. 

அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், நான்கு பயணிகள் சிகிச்சைக்காகக் கப்பலிலிருந்து மருத்துவ ரீதியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் ஒரு பறவையின் கழிவுகளிலிருந்து கிளம்பிய தூசியை சுவாசித்ததே இந்தத் தொற்றுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சல், தசைவலி ஆகியவை ஏற்படும். பின்னர் 72 மணி நேரத்தில் நுரையீரலை பாதித்து உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த நோய்க்கு தடுப்பூசியோ, எந்தவித மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தக் கப்பல் ஸ்பெயினின் டெனெரிஃப் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அங்கு வரும் மே 11-ம் தேதி பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். உலக சுகாதார அமைப்பு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 2008 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சிலருக்கு ஹண்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து இந்தியத் தூதரகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/international/hantavirus-infection-scare-passengers-what-is-the-situation-of-2-indians-11813121

நெருக்கடி காலத்தில் கைகழுவுபவர்கள் நாங்கள் அல்ல” - காங்கிரஸ் மீது அகிலேஷ் யாதவ் கடும் விமர்சனம்

 

rahul gandhi 2

ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ்

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகச் சாடிய முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கடினமான காலங்களில் தனது கூட்டாளிகளைக் கைவிடுபவர் தான் அல்ல என்று கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அகிலேஷ், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ஆகியோருடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, "சவாலான காலங்களில் ஒருவரையொருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல" என்று எழுதியுள்ளார்.

தமிழகத் தேர்தல் களத்தில் காலடி எடுத்து வைத்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்ற நடிகர்-அரசியல்வாதி விஜய்யின் த.வெ.க கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்ததும், தி.மு.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதுமே இந்த விமர்சனத்திற்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது. த.வெ.க தற்போது பெரும்பான்மையை எட்ட எம்.எல்.ஏ-க்களைத் திரட்டி வரும் நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின் காங்கிரஸ் கட்சி மாறியதை ஒரு தரப்பு தி.மு.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அகிலேஷ் யாதவின் இந்த சமூக வலைதளப் பதிவு, அவர் கொல்கத்தாவிற்குச் சென்று மம்தா பானர்ஜியைச் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவித்ததைத் தொடர்ந்து வந்துள்ளது. மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதை ஏற்க மறுத்துள்ள மம்தா, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அகிலேஷின் பதிவை ஆதரித்துப் பேசுகையில், காங்கிரஸ் இந்தியா கூட்டணியைச் சரியாக வழிநடத்தவில்லை என்றும், தமிழகத்தில் தனது நம்பிக்கைக்குரிய கூட்டாளியான தி.மு.க-வை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினர். "காங்கிரஸ் அதிகாரத்தை மட்டுமே குறிவைக்கிறது என்பதும், தி.மு.க-வை அது கைவிட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இது பொறுப்பான அரசியல் அல்ல" என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த மக்களவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். "யார் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்? மக்கள் நலனுக்காக கடைசியாக எப்போது சமாஜ்வாதி கட்சி நின்றது? குஷிநகரில் ஒரு மசூதி இடிக்கப்பட்டபோது சமாஜ்வாதி கட்சியின் நகராட்சித் தலைவர்தான் அதற்கு உத்தரவிட்டார். அப்போது அந்தத் தலைமை என்ன செய்தது? ஒன்றுமில்லை. சமூக வலைதளங்களில் மட்டும் பதிவிடுவது அரசியலுக்குப் போதாது" என்று கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் சாடியுள்ளார்.

2027 உ.பி. சவால்

2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் போட்டி நிலவப்போகிறது. இரு கட்சிகளின் மேலிடத் தலைவர்கள் நல்லுறவைப் பேணுவது போலத் தெரிந்தாலும், மாநில அளவிலான நிர்வாகிகள் பலமுறை மோதலில் ஈடுபட்டுள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலின் போதும், தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய இழுபறி நிலவியது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை காலை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், அகிலேஷ் யாதவின் கருத்து குறித்து நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார், ஆனால் "இது போராட வேண்டிய நேரம்" என்று கூறினார். "பாஜகவை எதிர்க்க வேண்டிய நேரம் இது, அதை நாங்கள் செய்து வருகிறோம். ராகுல் காந்தி அனைத்து நிலைகளிலும் பா.ஜ.க-வை எதிர்த்துப் போராடி வருகிறார், நாங்கள் அதைத் தொடர்வோம். எந்தவொரு தலைவரின் பதிவைப் பற்றியும் நான் கருத்து கூற விரும்பவில்லை," என்று ராய் கூறினார்.

பீகார் (ஆர்.ஜே.டி), தமிழ்நாடு (தி.மு.க) மற்றும் மேற்கு வங்கம் (டி.எம்.சி) ஆகிய மாநிலங்களில் அந்தந்தக் கட்சிகள் பாஜக அல்லது அதன் கூட்டணிகளிடம் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், இப்போது அனைவரின் பார்வையும் உத்தரப் பிரதேச தேர்தல் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் மீதே உள்ளது.

அகிலேஷ் யாதவின் இந்தச் சமூக வலைதளப் பதிவு, 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மந்தமாக இருக்கும் இந்தியா கூட்டணிக்குள்ளான மோதல்களையும், கடந்த சில ஆண்டுகளாகச் சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கூட்டணி சந்தித்து வரும் பின்னடைவுகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/akhilesh-yadav-veiled-attack-on-congress-dmk-stalin-mamata-banerjee-tamil-nadu-politics-11815478

சிலிக்கான் வேலியில் கால்பதிக்கும் சென்னை ஐ.ஐ.டி: அமெரிக்காவில் ரூ.62 கோடி மதிப்பில் புதிய ஆராய்ச்சி மையம் தொடக்கம்

 select usa

சென்னை ஐ.ஐ.டி. தனது முதல் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை அமெரிக்காவின் மென்லோ பார்க் (சிலிக்கான் வேலி) பகுதியில் தொடங்கியுள்ளது. சுமார் ரூ.62 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், இந்திய ஸ்டார்ட்அப்களை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக அமையும்.

சென்னை ஐ.ஐ.டி. தனது முதல் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை அமெரிக்காவின் மென்லோ பார்க் (சிலிக்கான் வேலி) பகுதியில் தொடங்கியுள்ளது. சுமார் 7.5 மில்லியன் டாலர் (ரூ.62 கோடி) முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், இந்திய ஸ்டார்ட்அப்களை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக அமையும். இதன் முழு விவரம் இங்கே.

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐ.ஐ.டி) சர்வதேசப் பிரிவான 'ஐ.ஐ.டி.எம் குளோபல் ரிசர்ச் ஃபவுண்டேஷன்', அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மென்லோ பார்க் பகுதியில் தனது முதல் மையத்தை அமைப்பதாக 2026, மே 6 அன்று அறிவித்தது. இந்தியாவின் 'ஆழ்ந்த தொழில்நுட்ப' (டீப்-டெக்) கண்டுபிடிப்புகளை உலகளாவிய தளத்திற்குக் கொண்டு செல்வதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த அறிவிப்பு செலக்ட் யு.எஸ்.ஏ (SelectUSA) முதலீட்டு உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்டது.

இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களுக்கு இடையே ஒரு முன்னோடி நடவடிக்கையாகப் பார்க்கப்படும் இத்திட்டம், இந்திய ஆராய்ச்சி, புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்கள்) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நேரடியாக உலகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லும் உத்தியைப் பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த மையம், 2026 ஏப்ரல் 24 அன்று தொடங்கப்பட்டது. இது சி.ஏ. ஸ்டார்ட்அப்ஸ் (CA Startups) அமைப்புடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது.

இந்த மையம் குறித்து சென்னை ஐ.ஐ.டி இயக்குநரும், ஐ.ஐ.டி.எம் குளோபல் தலைவருமான பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில், “அமெரிக்காவிற்குள் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கம், இந்திய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் சென்னை ஐ.ஐ.டி-யின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும். மென்லோ பார்க் மையம், உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வித்துறையுடன் ஆழமான ஒத்துழைப்பைச் சாத்தியமாக்கும்,” என்றார்.

இந்த மையம் மொத்தம் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும். சிலிக்கான் வேலிக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், இந்தியப் புத்தாக்க நிறுவனங்கள் உலகளாவிய முதலீடு மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு இது ஒரு நுழைவாயிலாக அமையும்.

ஐ.ஐ.டி.எம் குளோபல் இயக்குநர் பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி கூறுகையில், “இந்த மையம் இந்தியா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படும்,” என்றார். சர்வதேசத் தொடர்புப் பிரிவின் டீன் பேராசிரியர் பிரீதி அகலாயம், "மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் சர்வதேச அளவில் வாய்ப்புகளைப் பெற இது உதவும்" என்று குறிப்பிட்டார்.

இந்த மென்லோ பார்க் மையம் புத்தாக்க நிறுவனங்களை வளர்த்தெடுப்பதோடு, உலகச் சந்தைக்கான வாய்ப்புகளையும் வழங்கும். மேலும், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியிலும் ஒரு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி.எம் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரி திருமலை மாதவ்நாராயண், "ஆய்வகக் கண்டுபிடிப்புகளை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்லும் பாலமாக இது இருக்கும்" என்றார்.

செலக்ட் யு.எஸ்.ஏ என்பது அமெரிக்காவில் வணிக முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒரு கூட்டாட்சித் திட்டமாகும். இதன் முதலீட்டு உச்சிமாநாடு பன்னாட்டு நிறுவனங்களை அமெரிக்கப் பொருளாதார அமைப்புகளுடன் இணைக்கும் 4 நாள் நிகழ்வாகும்.

சென்னை ஐ.ஐ.டி குளோபல் ரிசர்ச் ஃபவுண்டேஷன்:

இது சென்னை ஐ.ஐ.டி-யின் சர்வதேசப் பிரிவாகும். இது உலகளாவிய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேம்படுத்தவும், இந்தியப் புத்தாக்க நிறுவனங்களைச் சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் செயல்படும் அமைப்பாகும்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/iit-madras-launches-deep-tech-hub-in-menlo-park-usa-silicon-valley-11815573

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: 'ஆபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவு; முட்டுக்கட்டையை எதிர்கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான்

 சிந்து நதி நீர் ஒப்பந்தம்: 'ஆபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவு; முட்டுக்கட்டையை எதிர்கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான் 8 5 2026


Indus waters treaty signed expl

(இடமிருந்து வலம்) செப்டம்பர் 19, 1960 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது பிரதமர் ஜவஹர்லால் நேரு, பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கான் மற்றும் உலக வங்கியின் துணைத் தலைவர் வில்லியம் இலிஃப். Photograph: (புகைப்படம்: உலக வங்கி)

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) "நிறுத்தி வைக்க" (in abeyance) இந்தியா முடிவெடுத்து ஓராண்டிற்கு மேலாகிறது. இந்த முடிவின் பொருள் என்னவென்றால், இரு நாடுகளுக்கு இடையே பாயும் சிந்து, ஜீலம், செனாப், ரவி, சட்லெஜ் மற்றும் பியாஸ் ஆகிய ஆறு முக்கிய ஆறுகளின் நீர் பகிர்வைக் கட்டுப்படுத்தும் 1960-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் விதிகளுக்குத் தற்போது கட்டுப்பட்டிருப்பதாக இந்தியா கருதவில்லை.

இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானை சென்றடையும் வழக்கமான நீர் ஓட்டத்தில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில், ஏற்கனவே சிக்கலில் இருக்கும் இருதரப்பு உறவில் இதுவே மிகவும் நெருக்கடியான விஷயமாக மாறியுள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு எதிராக ஒரு சர்வதேச சட்ட வழக்கை உருவாக்கவும், ஐக்கிய நாடுகள் சபை (UN), சர்வதேச நீதிமன்றம் (ICJ), உலக வங்கி மற்றும் பிற மூன்றாம் தரப்பு அமைப்புகளின் தலையீட்டைக் கோரவும் பாகிஸ்தான் கடந்த ஓராண்டாக முயற்சித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) தற்காலிக உறுப்பினராக இருக்கும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்க அந்தப் பதவியைப் பயன்படுத்தி ஐநா-வில் மீண்டும் மீண்டும் இப்பிரச்சினையை எழுப்பியுள்ளது.

மறுபுறம் இந்தியா, இந்த ஆறுகளில் நீண்டகாலமாகத் தாமதமாகி வந்த திட்டங்களை முடிப்பதில் தனது ஆற்றலைச் செலுத்தி வருகிறது. இந்தியா தனது பகுதியில் எதைக் கட்ட முயன்றாலும், ஒப்பந்த விதிகளைத் தவறாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் தொடர்ந்து ஆட்சேபனைகளை எழுப்பி வந்ததே இந்தத் தாமதத்திற்கு முக்கிய காரணமாகும்.

இந்தப் பிரச்சினை தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கிறது. இது ஒரு கட்டத்தில் பெரிய சட்ட அல்லது ராஜதந்திர மோதலாகவோ, அல்லது பாகிஸ்தான் எச்சரித்தபடி ஒரு ஆயுதப் போராட்டமாகவோ வெடிக்க வாய்ப்புள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் முழுமையாகக் கைவிடும் வரை ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

விவகாரத்தைச் சர்வதேசமயமாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள்

ஆற்றின் கீழ்மட்டத்தில் இருக்கும் நாடு என்பதால், இந்தியாவின் இந்த முடிவால் பாகிஸ்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பாசனத் தேவைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை சிந்து நதி அமைப்பின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. தண்ணீர் தொடர்ந்து பாய்ந்தாலும், இரு நாடுகளின் நதி நீர் ஆணையர்களின் வழக்கமான கூட்டங்கள் மற்றும் தரவுப் பகிர்வு வழிமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் நிச்சயமற்ற தன்மையை ஊட்டியுள்ளது. இதனால் நீர் பயன்பாட்டைத் திட்டமிடுவதிலும், வெள்ளம் அல்லது வறட்சி அபாயங்களை எதிர்கொள்வதிலும் பாகிஸ்தானின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை மாற்றத் தானாக எதையும் செய்ய முடியாத நிலையில், இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க பாகிஸ்தான் சர்வதேச அளவில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒப்பந்தத்தை "நிறுத்தி வைக்க" எந்த ஒரு நாட்டிற்கும் இந்த ஒப்பந்தத்தில் அதிகாரம் இல்லை என்பதே பாகிஸ்தானின் முக்கிய சட்ட வாதம். இதில் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிமுறை மட்டுமே உள்ளது என்பது அவர்கள் தரப்பு.

கடந்த ஆண்டு முதல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராகப் பாகிஸ்தான் இருப்பது அதற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பாகப் பாதுகாப்பு கவுன்சிலில் பலமுறை மனுக்களை அளித்துள்ள பாகிஸ்தான், சம்பந்தமில்லாத விவாதங்களின் போது கூட இந்த விவகாரத்தை எழுப்பி வருகிறது. உதாரணமாக, எரிசக்தி மற்றும் சர்வதேச பாதுகாப்பு குறித்த விவாதத்தின் போது, இயற்கை வளங்கள் ஒத்துழைப்புக்குக் கருவியாக இருக்க வேண்டுமே தவிர மோதலுக்கு அல்ல என்று கூறி, இந்த விதியை நதி நீருக்கும் பொருத்தி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசியது.

பாதுகாப்புப் பிரச்சினையாகச் சித்தரித்தல்

சிந்து நதி நீர் விவகாரத்தைப் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு விஷயமாகப் பாகிஸ்தான் சித்தரித்து வருகிறது. மேலும், இதை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவும் உருவகப்படுத்தி, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) முறையீடு செய்துள்ளது. இதன் விளைவாக, ஐநா-வின் சிறப்புத் தூதுவர்கள் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் முடிவு பற்றி விளக்கம் கேட்டு ஒரு கடிதத்தை அனுப்பினர். ஆனால், இது உலக வங்கியைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லாத ஒரு இருதரப்பு ஏற்பாடு எனக் கூறி, இந்தியா அந்தக் கடிதத்தைப் புறக்கணித்தது.

பாகிஸ்தானால் கோரப்பட்ட நடுவர் நீதிமன்றம் (Court of Arbitration), இந்தியாவின் முடிவு நீதிமன்றத்தின் அதிகார வரம்பைப் பாதிக்காது என்று கடந்த ஆண்டு தீர்ப்பளித்ததை பாகிஸ்தான் ஒரு வெற்றியாகக் கொண்டாடுகிறது. ஆனால், உலக வங்கியால் நியமிக்கப்பட்ட ஒரு நடுநிலை நிபுணர் மூலம் ஏற்கனவே தீர்வு காணும் முயற்சி நடந்து வரும் நிலையில், இந்தத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதையே இந்தியா எதிர்த்து, அதன் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் தீர்ப்புகளை நிராகரித்துவிட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவது அல்லது விவகாரத்தைச் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வது என்பதே பாகிஸ்தானின் பெரிய இலக்காகும்.

கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் இந்தியாவின் வாதம்

பாகிஸ்தானின் வாதங்களுக்குச் சர்வதேச மேடைகளில் இந்தியா பதிலளித்து வந்தாலும், ஒப்பந்த விதிகளின் கீழ் தனக்கு உரிமையுள்ள நீரை முழுமையாகப் பயன்படுத்தத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதிலேயே இந்தியா முதன்மையாகக் கவனம் செலுத்துகிறது. பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட மேற்கு ஆறுகளிலும் (சிந்து, ஜீலம், செனாப்) குறைந்தளவு நீரை நுகர்வு செய்யாத தேவைக்காகப் பயன்படுத்த இந்தியாவிற்கு அனுமதியுண்டு. கிழக்கு ஆறுகளில் (ரவி, சட்லெஜ், பியாஸ்) இந்தியாவிற்குத் தடையில்லா முழு அதிகாரம் உண்டு.

ஆனால், இந்தியாவின் இத்திட்டங்களைத் தாமதப்படுத்தவும், செலவை அதிகரிக்கவுமே பாகிஸ்தான் தொடர்ந்து ஆட்சேபனைகளை எழுப்பியது. இந்நிலையில், கடந்த 65 ஆண்டுகளில் கள நிலவரம் முற்றிலும் மாறிவிட்டதாக இந்தியா வாதாடுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது, காலநிலை மாற்றத்தால் நீர் வரத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது மற்றும் ஜம்மு காஷ்மீரின் எரிசக்தித் தேவைகள் மாறியுள்ளன. எனவே, தற்போதைய சூழலுக்குப் பொருந்தாத இந்த ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்று இந்தியா கூறுகிறது. இதற்கான புதிய தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் இந்தியாவின் சட்டப்பூர்வ வாதத்தைப் பலப்படுத்த நிபுணர் குழு ஒன்று அமைதியாகச் செயல்பட்டு வருகிறது.

source https://tamil.indianexpress.com/explained/indus-waters-treaty-one-year-of-operation-sindoor-india-pakistan-deadlock-unsc-legal-battle-11815530