புதன், 20 மே, 2026

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மகாஜனங்களே 20 05 2026


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மகாஜனங்களே 20 05 2026

Credit Sun News

தடுமாறும் இளைய சமுதாயம்

தடுமாறும் இளைய சமுதாயம் கே.தாவூத் கைசர் MISc (மாநிலத் துணைத்தலைவர், TNTJ) தர்பியா ஆசாத்நகர் - 03.08.2025 கோவை மாநகர் மாவட்டம்

பாபர் மஸ்ஜித் பாணியில் கமால் மெளலாமஸ்ஜித்

பாபர் மஸ்ஜித் பாணியில் கமால் மெளலாமஸ்ஜித் Therizhandur Branch - Mayiladuthurai District - 16.05.2026 Dhar Bhojshala Controversy | MP High Court | Madhya Pradesh High Court

சமரசமில்லா சாதியக்கொள்கை

சமரசமில்லா சாதியக்கொள்கை சமய விளக்கப் பொதுக்கூட்டம் - 15.02.2026 M.S. சுலைமான் (தணிக்கைக் குழுத் தலைவர், TNTJ) தர்கா & வள்ளுவர் நகர் கிளை திருச்சி மாவட்டம்

திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்-06

திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்-06 R. அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர், TNTJ

இறைத்தூதரின் இறுதி பேருரை..

இறைத்தூதரின் இறுதி பேருரை.. R.Abdul Karim M.I.Sc State President, TNTJ Therizandur Branch - Mayiladuthurai District - 16.05.2026

ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் குர்பானி ...

ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் குர்பானி ... Suja Ali MISc (Speaker,TNTJ)

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா ?

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா ? Shuja Ali MISc (Speaker, TNTJ)

கூட்டுக்குர்பானி கொடுக்கலாமா ?

கூட்டுக்குர்பானி கொடுக்கலாமா ? Suja Ali MISc (Speaker, TNTJ) கூட்டுக்குர்பானி கொடுக்கலாமா ?

குர்பானிப் பிராணியின் தோல்களை என்ன செய்வது?

குர்பானிப் பிராணியின் தோல்களை என்ன செய்வது? அபூபக்கர் MISc (பேச்சாளர், TNTJ) குர்பானிச் சட்டங்கள் - 10

குர்பானிப் பிராணியை அறுப்பதற்கான தகுதி என்ன?

குர்பானிப் பிராணியை அறுப்பதற்கான தகுதி என்ன? அபூபக்கர் MISc (பேச்சாளர், TNTJ)

குர்பானி கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை?

குர்பானி கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை? அபூபக்கர் MISc (பேச்சாளர், TNTJ) குர்பானி சட்டங்கள் - 8 15.05.2026

பால் கொடுக்கும் விலங்கை குர்பானி கொடுக்கலாமா?

S. அப்துர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர், TNTJ) குர்பானி சட்டங்கள் - 7 14.05.2026 பால் கொடுக்கும் விலங்கை குர்பானி கொடுக்கலாமா?

கொம்பு உடைந்த பிராணியை குர்பானி கொடுக்கலாமா ?

கொம்பு உடைந்த பிராணியை குர்பானி கொடுக்கலாமா ? S.Abdur Rahman MISc Speaker, TNTJ Laws of Qurbani - 6

பெண்கள் குர்பானி கொடுக்கலாமா?

பெண்கள் குர்பானி கொடுக்கலாமா? கே.எம்.சல்மான் M.I.Sc பேச்சாளர்,TNTJ குர்பானியின் சட்டங்கள் - 5 பெண்கள் குர்பானி கொடுக்கலாமா?

கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?

கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா? K.M. Salman M.I.Sc Speaker, TNTJ

கண்ணியமும், கௌரவமும்

கண்ணியமும், கௌரவமும் K.M.Salman M.I.Sc Speaker,TNTJ TNTJ,Headquarters Jumu'ah - 15.05.2026

ஜோதிடம் செய்தியும் சிந்தனையும்

ஜோதிடம் செய்தியும் சிந்தனையும் 14.05.2026 S.Muhammad Yasir (State Secretary, TNTJ)

எதிர்பார்க்கும் மாற்றம் முதல்வர் கவனத்திற்கு

எதிர்பார்க்கும் மாற்றம் முதல்வர் கவனத்திற்கு செய்தியும் சிந்தனையும் 13.05.2026 ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர், TNTJ)

வாக்குறுதிகள் மக்களின் எதிர்பார்ப்பு

வாக்குறுதிகள் மக்களின் எதிர்பார்ப்பு A. Feroz Khan State Secretary, TNTJ Message and Thoughts - 15.05.2026 வாக்குறுதிகள் மக்களின் எதிர்பார்ப்பு

வீழ்ச்சியை நோக்கி பொருளாதாரம் , ஆர்ப்பரிக்கும் மதவாதம்

வீழ்ச்சியை நோக்கி பொருளாதாரம் , ஆர்ப்பரிக்கும் மதவாதம் அல் அமீன் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 16.05.2026

இந்தியாவில் பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படுமா?

E.J.Muhsin State Secretary TNTJ Message and Thoughts - 19.05.2026 • இந்தியாவில் பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படுமா?

அதிகாரிகளுக்கு பிளாஸ்டிக் நாற்காலி; எம்.எல்.ஏ-வுக்கு சொகுசு சோஃபாவா? வெடித்த சர்ச்சை

 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-mla-kanimozhi-responds-to-criticism-over-officials-seated-on-plastic-chairs-11852303


19 05 2026
kanimozhi

கோவை கவுண்டம் பாளையம் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்ட், அரசு அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்த நிலையில் அவை சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் முதலில், அரசு அதிகாரிகளை வரவழைத்து எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்க எம்.எல்.ஏ கனிமொழி ஒய்யாரமான சோஃபாவில் அமர்ந்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல், அப்புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில், எம்.எல்.ஏ கனிமொழி இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

அதில்,  "நான் அதிகாரிகளை சந்தித்தது எனது வீடு அல்ல, எனது ஜோதிட அலுவலகம். பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம். தற்போது, எனது புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் பெயிண்டிங் மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. 

அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே மக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். புதிய எம்.எல்.ஏ அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து மக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க மத்திய அரசு உத்தரவு

 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பது அல்லது அவற்றை ஒப்படைப்பது குறித்து குறிப்பிட்ட விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பிரகடனம் செய்ய வேண்டும் என்ற வகையில், 2009-ம் ஆண்டின் குடியுரிமை விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவுத் திருத்தங்களை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில், 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் 18-வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட குடியுரிமை (திருத்த) விதிகள் 2026, 2009-ம் ஆண்டு விதிகளின் அட்டவணை IC-ல் ஒரு புதிய பத்தியைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதியான பத்தி (iiiA), விண்ணப்பதாரர்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3-ல் ஏதேனும் ஒரு நாட்டினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அல்லது காலாவதியான கடவுச்சீட்டை வைத்துள்ளார்களா என்பதைத் தெரிவிக்கக் கட்டாயமாக்குகிறது.

அத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி, இடம் மற்றும் காலாவதியாகும் தேதி ஆகிய விவரங்களை வழங்க வேண்டும். மேலும், இந்தியக் குடியுரிமை அங்கீகரிக்கப்பட்ட 15 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் (Senior Superintendent of Post) அல்லது அஞ்சல் கண்காணிப்பாளரிடம் (Superintendent of Post) அந்த ஆவணத்தை ஒப்படைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திருத்தமானது குடியுரிமை வழக்குகளில் சரிபார்ப்பு மற்றும் ஆவணப் பராமரிப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிர்வாக ரீதியிலான தெளிவுபடுத்தல் ஆகும் என்றார்.

இதே மாத தொடக்கத்தில், உள்துறை அமைச்சகம் குடியுரிமை (திருத்த) விதிகள், 2026-ஐ அறிவித்து, மின்னணு வெளிநாடு வாழ் இந்தியர் குடிமக்கள் (e-OCI) கார்டுகள், முழுமையான ஆன்லைன் விண்ணப்பங்கள் மற்றும் மைனர்களுக்கான (Minor) இரட்டைக் கடவுச்சீட்டுகள் மீதான கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்தது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி பேசுகையில், இந்த விதிகள் முழுமையான டிஜிட்டல் ஓசிஐ கட்டமைப்பை அறிமுகப்படுத்துகின்றன. இது ஆன்லைன் விண்ணப்பங்கள், மின்னணு பதிவுகள் மற்றும் ஒப்புதல்களைக் கட்டாயமாக்குகிறது; அதே நேரத்தில் நகல் எடுக்கப்படும் இயற்பியல் செயல்முறைகளை படிப்படியாக நீக்குகிறது. புதிய விதியானது, இயற்பியல் கார்டுகளுடன் (Physical cards) மின்னணு ஓசிஐ (e-OCI) கார்டுகளையும் வழங்க அனுமதிக்கிறது. இது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காகிதமில்லா அடையாளத்தை நோக்கிய மாற்றத்தைக் காட்டுகிறது. விண்ணப்பதாரர்கள் இனி விரைவு-நெறிப்படுத்தப்பட்ட குடிவரவுத் திட்டங்களுடன் (fast-track immigration programmes) ஒருங்கிணைப்பதற்காகத் தங்களது பயோமெட்ரிக் தரவை (Biometric data) பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தில் தானியங்கி சேர்க்கையை (Automatic enrolment) சாத்தியமாக்கும் என்றார்.

source https://tamil.indianexpress.com/india/citizenship-rule-change-applicants-have-to-declare-surrender-passports-issued-by-pakistan-afghanistan-bangladesh-11850676

ஒரு குரூப் ஆதரவை பெற்றால் எங்கள் ஆதரவை மறு பரிசீலனை செய்வோம்:

 விஜய் தலைமையிலான த.வெ.க, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்கள் பிடித்த நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள், வி.சி.க, இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது, ”மீண்டும் உடனடியாக தமிழ்நாடு ஒரு தேர்தலை சந்திக்க தயாராக இல்லை என்பதால் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தோம். 

கொல்லைப்புற வழியாக பா.ஜ.க ஆட்சி நடத்தும் வகையில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவிடக் கூடாது. மக்களுடைய தீர்ப்பு என்பது தி.மு.க அணி, அ.தி.மு.க அணி இரண்டிற்கும் எதிராக தான் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும், எந்த ஒரு அணிக்கும் அருதி பெரும்பான்மை இல்லை என்ற நிலையில் ஒரு தனிப் பெரும் கட்சி என்ற வகையில் 108 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது த.வெ.க தான். ஆகவே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு தான் இருக்கிறது.

அந்த அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்பதற்காக த.வெ.க-விற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக இடதுசாரி கட்சிகள் மற்றும் வி.சி.க அறிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதோ, அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெறுவது என்பது மக்களின் தீர்ப்பிற்கு எதிரானது.

ஏற்கனவே அ.தி.மு.க, தி.மு.க 2 அணிக்கும் எதிராக தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அத்தகைய அணியின் ஆதரவை பெற்று த.வெ.க ஆட்சியில் தொடர்வது என்பது மக்களுடைய தீர்ப்பிற்கு விரோதமாக அமையும். அ.தி.மு.க-வின் ஒரு குரூப் ஆதரவை பெற்றாலோ, அ.தி.மு.க-வுடன் சேர்ந்து கொண்டு ஆட்சி அமைக்கும் முடிவிற்கு த.வெ.க செல்லுமானால் எங்களின் முடிவை மறு பரிசீலனை செய்வோம்” என்றார்.

19 05 2026 



source https://tamil.indianexpress.com/tamilnadu/if-vijay-receives-the-support-of-an-admk-we-will-reconsider-our-support-shanmugam-says-11852501

செவ்வாய், 19 மே, 2026

vandalised a market and several houses, including homes and businesses belonging to Muslim families

 

05 /05/2026 Following the Bharatiya Janata Party’s (BJP) victory in the West Bengal Assembly elections, supporters vandalised a market and several houses, including homes and businesses belonging to Muslim families, on May 5. The violence erupted a day after the results were announced. BJP supporters also damaged a local All India Trinamool Congress (AITC) office, breaking chairs, tearing banners and burning party flags. AITC has governed West Bengal since 2011. The BJP’s historic victory in West Bengal has raised questions about whether the exclusion of Muslim voters played a significant role. A Special Intensive Revision of electoral rolls removed around 9 million names (nearly 12% of voters). Critics, including opposition parties, allege the process disproportionately targeted Muslim communities in key districts such as Murshidabad, Malda, and North 24 Parganas, potentially shifting outcomes in tightly contested seats.

Credit https://www.instagram.com/trtworld/?e=5bc0083c-b46a-4b29-b3ba-765b9e0c45aa&g=5

மேற்குவங்கம் கேஜுரியில் தாக்குதலால்

 



13/06/2026 மேற்குவங்கம் கேஜுரியில் பாஜக-ஆர்எஸ்எஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், சிபிஐ(எம்) மேற்கு வங்க மாநிலச் செயலாளருமான முகமது சலீம் தலைமையிலான கட்சியின் தூதுக்குழு, நேரில் சந்தித்து ஒற்றுமையையும் ஆதரவையும் தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த ஒரே கட்சி சிபிஐ(எம்) ஆகும். இரவில் நடந்த முதல் தாக்குதலில், இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது சம்பவத்தில், முகத்தை மூடிக்கொண்டு வந்த கும்பல் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கமிட்டபடி முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கியது.

credit https://www.instagram.com/tncpim/?e=6efde022-c681-41e6-8e17-a2e7c7fec07b&g=5


Mosque Converted Into Hindu Temple Following High Court Ruling

 18/05/2026

India: 700-Year-Old Mosque Converted Into Hindu Temple Following High Court Ruling 700-year-old historic Kamal Maula Mosque in Dhar, in Madhya Pradesh, has been forcibly converted into a Hindu temple following a High Court ruling. The Madhya Pradesh High Court ruled on Friday that the Kamal Maula Mosque is a temple dedicated to a Hindu goddess. The next day, the historic mosque was “cleansed” with cow urine, and a Hindu idol was installed inside the mosque with Hindus performing rituals.

credit Instagram /https://www.instagram.com/doamuslims/

சென்னை ஐ.ஐ.டி. புதிய அறிவிப்பு: ஆன்லைன் எம்.டெக் படிப்புகளுக்கு உடனே விண்ணப்பியுங்க: மே 31 கடைசி நாள்

 

சென்னை ஐ.ஐ.டி. புதிய அறிவிப்பு: ஆன்லைன் எம்.டெக் படிப்புகளுக்கு உடனே விண்ணப்பியுங்க: மே 31 கடைசி நாள்

IIT Madras Web MTech admissions 2026 IIT Madras artificial intelligence PG diploma

IIT Madras Web MTech admissions 2026 | IIT Madras artificial intelligence PG diploma

சென்னை ஐ.ஐ.டி., பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இளம் பட்டதாரிகள் தங்களின் உயர் கல்வியைத் தொடரும் வகையில், ஆன்லைன் வழியிலான (Web-enabled) எம்.டெக் (MTech) மற்றும் முதுகலை டிப்ளமோ (PG Diploma) படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 31, 2026 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31, 2026

நுழைவுத் தேர்வுகள்: ஜூன் மற்றும் ஜூலை 2026

வகுப்புகள் தொடக்கம்: ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2026


கல்வித் தகுதி:

எம்.டெக் படிப்புக்கு தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டத்துடன், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.


பிஜி டிப்ளமோ படிப்புக்கு பணி அனுபவம் இல்லாத இளம் பட்டதாரிகளும் (Freshers) விண்ணப்பிக்கலாம். தொடர்புடைய கல்விப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த ஆன்லைன் வழி முதுகலை திட்டத்தின் கீழ் பின்வரும் பொறியியல் துறைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன:

விண்வெளி பொறியியல் (Aerospace Engineering)

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

மின் பொறியியல் (Electrical Engineering)

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)

இ-மொபிலிட்டி (E-Mobility)

செயல்முறை பாதுகாப்பு மற்றும் உற்பத்தி பகுப்பாய்வு (Process Safety and Manufacturing Analytics)

விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப எம்.டெக் அல்லது பிஜி டிப்ளமோ படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். பின்னர் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் டிப்ளமோ படிப்பிலிருந்து எம்.டெக் படிப்பிற்கு மாறிக் கொள்ளும் வசதியும் உண்டு.

மாணவர்கள் முதலில் பிஜி டிப்ளமோவில் சேர்ந்து, அதை வெற்றிகரமாக முடிக்கலாம் அல்லது எம்.டெக் பட்டமாக மேம்படுத்திக் கொள்ளலாம். பணிபுரியும் வல்லுநர்கள் தங்களின் வேலையைத் தொடர்ந்துகொண்டே நேரடியாக எம்.டெக் படிப்பில் சேர முடியும்.

தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த ஆன்லைன் எம்.டெக் திட்டத்தில், மாணவர்களின் திறன் அசைன்மென்ட்டுகள், தொடர் மதிப்பீடுகள் மற்றும் ஆன்லைன் கண்காணிப்பு தேர்வுகள் (Remote-proctored exams) மூலம் மதிப்பிடப்படும். இருப்பினும், இறுதிப் பருவத் தேர்வுகள் (End-semester examinations) இந்தியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நேரடியாக நடத்தப்படும்.

தற்போது, சுமார் 1,200 மாணவர்கள் இந்த வெப்-எம்.டெக் திட்டங்களில் படித்து வருகின்றனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் தங்களின் பணியைத் தொடர்ந்துகொண்டே ஐஐடி மெட்ராஸில் எம்.டெக் பட்டம் பெற்றுத் தேர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி. டீன் (கல்விப் படிப்புகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், "இந்த பாடத்திட்டங்களின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது புராஜெக்ட் சார்ந்த கற்றலுக்கு (Project-based learning) அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பணியிடங்களிலும் தொழில்துறைகளிலும் எதிர்கொள்ளும் நிஜ உலக சவால்களோடு தங்களது கல்வியை ஒப்பிட்டுப் படிக்க முடியும்" என்றார். 


source https://tamil.indianexpress.com/education-jobs/iit-madras-web-mtech-admissions-2026-iit-madras-artificial-intelligence-pg-diploma-11847827

சர்ப்ரைஸ்’ விசிட்; மாணவிகளுடன் டிபன் சாப்பிட்டபோது நெட்டிசன்கள் கவனித்த விஷயம்

 visit aadhav arjuna x

விடுதி மாணவிகள் அனைவரும் தட்டுகளில் தங்களின் வழக்கமான காலை உணவான இட்லியைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அமைச்சர் மட்டும் அவர்களுக்கு அருகே அமர்ந்து 'பிரட்டில் ஜாம்' தடவிச் சாப்பிடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோக்களில் பதிவாகியிருந்தன.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள மாணவர் விடுதிக்கு விடியற்காலையிலேயே திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றன.

வழக்கமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பகல் நேரங்களில்தான் விடுதிகளை ஆய்வு செய்வார்கள். ஆனால், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முந்தைய நாள் அதிகாலையிலேயே நேரு ஸ்டேடியத்திற்கு விசிட் அடித்துள்ளார். விடிந்தும் விடியாததுமாக அமைச்சரை நேரில் பார்த்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அங்கு தங்கி தீவிரப் பயிற்சி பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து அமைச்சர் தனது வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் தெரிவித்தார்.


ஆய்வின் ஒரு பகுதியாக, விடுதியில் தங்கியுள்ள வீராங்கனைகளுடன் ஒரே மேஜையில் அமர்ந்து அமைச்சர் காலை உணவு அருந்தினார். அப்போது வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் எப்படி இருக்கிறது, தங்கும் விடுதி வசதிகள் திருப்திகரமாக உள்ளதா என்பது குறித்து மாணவிகளிடம் மிகவும் கனிவோடு கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய அவர், "கல்வியோடு விளையாட்டையும் சேர்த்து மாணவர்களுக்குக் கொடுக்கும்போது மன அழுத்தம் குறையும். முக்கியமாக, இளைய சமூகத்திடம் பெருகி வரும் போதை கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க விளையாட்டுத்துறைக்கு அதிக ஊக்கமளிக்கப்பட வேண்டும்" என்று ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிடும் இந்த நெகிழ்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் சில சுவாரசியமான, அதேசமயம் நாகரிகமான விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

உணவு முறையில் உள்ள முரண்: விடுதி மாணவிகள் அனைவரும் தட்டுகளில் தங்களின் வழக்கமான காலை உணவான இட்லியைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அமைச்சர் மட்டும் அவர்களுக்கு அருகே அமர்ந்து 'பிரட்டில் ஜாம்' தடவிச் சாப்பிடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோக்களில் பதிவாகியிருந்தன.

நெட்டிசன்களின் பார்வை: "அமைச்சரின் இந்தத் திடீர் ஆய்வு மற்றும் எளிமையான அணுகுமுறை பாராட்டுக்குரியது என்றாலும், விளையாட்டு வீரர்களுக்குக் கொடுக்கப்படும் அதே எளிய உணவை அவரும் சாப்பிட்டிருந்தால் இந்த ஆய்வு இன்னும் எதார்த்தமாகவும், முழுமையாகவும் இருந்திருக்கும்" என்று நெட்டிசன்கள் நாகரிகமான முறையில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆரோக்கிய விவாதம்: "களத்தில் கடினமாகப் பயிற்சி பெறும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் நிறைந்த இட்லி போன்ற உணவுகள் மிக அவசியம். அமைச்சர் அவர்கள் டயட் காரணங்களுக்காக பிரட் சாப்பிட்டிருக்கலாம் என்றாலும், மாணவிகளின் உணவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது கொஞ்சம் தனித்துத் தெரிகிறது" என்றும் சமூக வலைதளங்களில் மென்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எது எப்படியோ, பெரிய ஆடம்பரங்கள் இல்லாமல் அதிகாலையிலேயே விடுதிக்குச் சென்று மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்த விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த அதிரடி ஆக்‌ஷன், தற்போது இணையத்தில் 'டிரெண்டிங்' செய்தியாக வலம் வருகிறது!



source https://tamil.indianexpress.com/viral/minister-aadhav-arjuna-surprise-inspection-nehru-stadium-hostel-breakfast-with-students-viral-news-11849407

சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

 

child

சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை இனி வாட்ஸ் அப் செயலி மூலம் எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ் அப் செயலி மூலம் எப்படி பெறலாம்?

  • மாநகராட்சியின் இந்த புதிய தானியங்கி வாட்ஸ் அப் சேவை மூலம் மிக எளிதாகச் சான்றிதழைப் பெறலாம். பெற்றோர் தங்களது மொபைல் போனில் 94450 61913 என்ற சென்னை மாநகராட்சியின் பிரத்யேக வாட்ஸ் அப் உதவி மைய எண்ணைச் சேமித்துக் கொள்ள வேண்டும்.
  • அந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் இருந்து ’ஹாய்’, ‘வணக்கம்’ அல்லது ‘பிறப்பு சான்றிதழ்’ என  தகவல் அனுப்பித் தங்களது கோரிக்கையைப் பதிவு செய்ய வேண்டும்.
  • பெற்றோர் தங்களது விவரங்களை உள்ளிட்ட சில நொடிகளிலேயே, அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு பி.டி.எஃப்  வடிவில் தானாகவே பிறப்புச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
  • இதனைப் பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-people-get-birth-certificate-on-whatsapp-read-full-story-11848703

திங்கள், 18 மே, 2026

அடிப்படை புரிதல் இல்லாத விஷமத்தனம்’

 தமிழகத்தின் புதிய தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் 10.50 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், நிதி நிர்வாகத்தில் என்ன நடந்துள்ளது என்பதைத் தாங்கள் முழுமையாக ஆராய்ந்து வருவதாகவும், போதிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்துப் பணிகளும் சரிசெய்யப்படும் என்றும் அவர் பேசியிருந்தார்.

அமைச்சரின் இந்த விமர்சனத்திற்குத் தற்போது முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கம் வாயிலாகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தொழில்துறை அமைச்சர், மாநிலத்தின் நிதி உள்கட்டமைப்பு குறித்த எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் உலவும் வதந்திகளை மூலதனமாகக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்தோடு கழக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்க அவர் முயல்கிறார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று சாடியுள்ளார்.

மேலும், "அரசு நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால், மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் அமைச்சர் கீர்த்தனா இத்தகைய முதிர்ச்சியற்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். நிர்வாக அனுபவம் வாய்ந்த தற்போதைய நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறைச் செயலாளரும் தலையிட்டு, தொழில்துறை அமைச்சரின் இத்தகைய கற்பனையான பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? அல்லது இதுபோன்ற மலிவான அரசியல் பிரச்சாரங்களுக்கு அவர்களும் உடந்தையாக இருக்கப் போகிறார்களா?" என்றும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/thangam-thennarasu-condemns-industry-minister-keerthana-over-debt-allegations-11845676

ஞாயிறு, 17 மே, 2026

இனி எங்கேயும் காத்திருக்க வேண்டாம்; மின்னல் வேகத்தில் பறக்கலாம்!

source https://tamil.indianexpress.com/international/malaysia-introduce-new-immigration-system-to-reduce-airport-queues-11844292

 பழைய முறை டூ புதிய முறை

பழைய முறை 

கடந்த 20 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த இந்த முறையில், பயணிகள் முதலில் தங்களின் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு, கைரேகை  மற்றும் முக ஸ்கேன் மூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடக்கும். இதற்கு அதிக நேரம் எடுத்தது.

புதிய முறை 

சுமார் 100 கோடி மலேசிய ரிங்கிட், அதாவது சுமார் 255 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, முக அங்கீகார தொழில்நுட்பம், கியூ.ஆர் கோடுகள் மற்றும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுகிறது. இது பயணியின் முகத்தையும் அவர்களின் பயண விவரங்களையும் டிஜிட்டல் பதிவுகளுடன் மிக வேகமாக ஒப்பிட்டுப் பார்த்து அனுமதியை வழங்கிவிடுகிறது.

சுங்கச் சோதனையிலும் மாற்றம் 

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகச் சுங்கச் சோதனையில் தனித்தனி வழிகள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வரி செலுத்த வேண்டிய அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதையும் வைத்திருக்காத பயணிகள் ’நத்திங் டூ டிக்ளர்’ (Nothing to Declare) வழித்தடத்தைப் பயன்படுத்தி வேகமாக வெளியேறலாம். சுங்க அதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டிய மற்றும் வரி செலுத்த வேண்டிய பொருட்கள் வைத்துள்ள பயணிகள்  ‘குட்ஸ் டூ டிக்ளர்’ (Goods to Declare)  வழியைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழில் பொறிக்கப்பட்ட சோழர் பெருமை” - நெதர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பும் செப்பேடுகள்










நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்திற்கு தனது இரண்டாவது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மே 16, 17 தேதிகளில்  மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, ஹேக் நகரில் உள்ள 'ஹவுஸ் டென் போஷ்' அரச மாளிகையில் நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மன்னர் தம்பதியினர் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மதிய விருந்தளித்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகிய இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிரதிநிதிகள் அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். 

இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகத் தொடர்புகள் மற்றும் ஆழமான மக்கள் உறவுகளை நினைவு கூர்ந்த தலைவர்கள், இந்த பன்முக உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உலகளாவிய இணக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியா-நெதர்லாந்து உறவை ஒரு 'உத்திசார் கூட்டாண்மை' ஆக உயர்த்த இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். இதன் கீழ் அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி, குவாண்டம் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் வழக்கமான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கான கூட்டு வழிகாட்டி வரைபடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், மிகவும் லட்சியமான 'இந்தியா-நெதர்லாந்து பசுமை ஹைட்ரஜன் மேம்பாட்டு வழிகாட்டி வரைபடம்' முறைப்படி தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பசுமை ஆற்றல் இலக்குகளுக்கும், தூய்மையான உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கும் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளின் ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கூட்டு மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் ராணுவ உபகரணங்களைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு தொழில்துறை வழிகாட்டி வரைபடத்தை உருவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை இரு தலைவர்களும் மனதார வரவேற்றனர். உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், உலகின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சட்டங்களையும், கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தையும் நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் ஜெட்டன், இந்தியா முன்னெடுத்துள்ள 'இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சியில்' நெதர்லாந்து இணைவதாகவும், அதன் ஒரு முக்கியத் தூணுக்கு ஜெர்மனியுடன் இணைந்து கூட்டுத் தலைமை தாங்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

உலக அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் தங்களின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தின. கடந்த 2025 ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்த நெதர்லாந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் பக்கம் எப்போதும் நிற்பதாக உறுதியளித்தது.

தொழில்நுட்பத் துறையில் மிக முக்கிய மைல்கல்லாக, செமிகண்டக்டர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, நெதர்லாந்தின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ட்வென்டே பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவின் ஆறு முன்னணி ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செமிகண்டக்டர் துறையில் ஆராய்ச்சி மற்றும் திறமையாளர்களை மேம்படுத்துவதற்கான 'அறிவுப் பாலத்தை' உருவாக்கவுள்ளன. இதற்கு ஏஎஸ்எம்எல், டாடா, என்எக்ஸ்பி போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் தொழில்துறைப் பங்களிப்பை வழங்குகின்றன. நீர் மேலாண்மையைப் பொறுத்தவரை, புதுடெல்லி ஐ.ஐ.டி-யில் 'நீர் மேலாண்மைக்கான சிறந்த மையம்' அமைக்கப்படவுள்ளது. 

விவசாயத் துறையில், பெங்களூருவில் பால் பண்ணை பயிற்சிக்கான பிரத்யேக மையமும், தூய்மையான தாவர மையங்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க செப்புப் பட்டயங்கள் இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதை இரு தலைவர்களும் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.


source https://tamil.indianexpress.com/india/pm-modi-x-post-chola-era-copper-plates-returned-from-leiden-university-netherlands-11844301

ரூபாயின் மதிப்பை உயர்த்த அதிரடி: வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு

 

மத்திய அரசு உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான வெள்ளி இறக்குமதியைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளதுடன், இதற்கு அரசின் முன்அனுமதியைப் பெறுவதையும் சனிக்கிழமை கட்டாயமாக்கியுள்ளது. அதிகரித்து வரும் சர்வதேச விலைகள் காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரித்து, அந்நியச் செலாவணி வெளிப்பாட்டை ஏற்படுத்தும் விலைமதிப்பற்ற உலோகங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்காக, கடந்த சில நாட்களாக எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசியப் பகுதி நெருக்கடிக்கு மத்தியில், அத்தியாவசியமற்ற இந்த இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி சுங்க வரியை 6%-லிருந்து 15% ஆகவும், பிளாட்டினத்திற்கான வரியை 6.4%-லிருந்து 15.4% ஆகவும் மத்திய அரசு கடந்த புதன்கிழமை உயர்த்தியிருந்தது.


இதனைத் தொடர்ந்து, மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதிகளுக்காக வழங்கப்படும் வரி இல்லாத இறக்குமதி சலுகை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், முக்கிய ஏற்றுமதித் திட்டம் ஒன்றின் கீழ் தங்கம் இறக்குமதி செய்வதற்கு 100 கிலோ என்ற அளவிலான வரம்பை அதற்கு அடுத்த நாளே அரசு விதித்தது.

வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 99% வரையிலான தூய்மை கொண்ட வெள்ளிப் பாளங்களை உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வது இனி கட்டுப்பாட்டுப் பிரிவின் கீழ் வரும். எனினும், நகை தயாரிப்பு போன்ற செயலாக்கம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் வெள்ளிக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது, அது வழக்கம் போல் தடையின்றி தொடரும்.

அதேபோல், 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் (EOUs) மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZs) அமைந்துள்ள நிறுவனங்கள் செய்யும் இறக்குமதிகளுக்கும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படாது. ஆனால், இந்த இறக்குமதி பொருட்கள் உள்நாட்டு வரிப் பகுதியில் (Domestic Tariff Area) விற்பனை செய்யப்படக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயர்ந்து வரும் வேளையில், அவற்றின் இறக்குமதியும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு ஆசியாவில் தொடங்கியுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், நிச்சயமற்ற உலகளாவிய சூழ்நிலையில் இறக்குமதியைக் குறைத்து அந்நியச் செலாவணியைச் சேமிக்க கடந்த ஒரு வாரமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 2025-26 நிதியாண்டில், வெள்ளி இறக்குமதி 150% அதிகரித்து 12.05 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எனினும், அளவின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த உயர்வு 42% மட்டுமே ஆகும் (7,334 டன்கள்). இந்த ஆண்டில் சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 74% அதிகரித்துள்ளது இதற்குக் காரணமாகும். இதேபோல், கடந்த நிதியாண்டில் தங்கத்தின் இறக்குமதி அளவு 4.7% குறைந்து 721 டன்களாக இருந்தபோதிலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை 30% உயர்ந்ததால், அதன் மொத்த இறக்குமதி மதிப்பு 24% அதிகரித்து 71.98 பில்லியன் டாலராக எட்டியுள்ளது.

இந்த உலோகங்களுக்கான தேவை ஏப்ரல் மாதத்திலும் வலுவாகவே இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 81.7% அதிகரித்து 5.6 பில்லியன் டாலராகவும், வெள்ளியின் இறக்குமதி 157% அதிகரித்து 411 மில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெயை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருப்பதால், எரிசக்தி விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தங்கம் மற்றும் வெள்ளிக்கான வரி உயர்த்தப்பட்ட போது அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். "இத்தகைய சூழ்நிலைகளில், நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத் துறையை விவேகத்துடன் கையாள்வது அவசியமாகிறது" என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். விலைமதிப்பற்ற உலோகங்கள் கலாச்சார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், அவை "முதன்மையாக நுகர்வு மற்றும் முதலீட்டு நோக்கங்களை மட்டுமே சார்ந்தவை" என்றும், இத்தகைய இறக்குமதிகளால் "அந்நியச் செலாவணி பெருமளவில் வெளியேறுகிறது" என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது நாட்டின் இறக்குமதிச் செலவை மேலும் சுமையாக்கியுள்ளது. எனவே, இந்தியாவின் அந்நியச் செலாவணி வளங்களை கச்சா எண்ணெய், உரங்கள், தொழில்துறை மூலப்பொருட்கள், பாதுகாப்புத் தேவைகள், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்துப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். கடந்த சில ஆண்டுகளாக, விலைமதிப்பற்ற உலோகங்களின் அதிகப்படியான இறக்குமதி மற்றும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவிலிருந்து கணிசமான அந்நியச் செலாவணி வெளியேறியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் மத்திய கிழக்கு ஆசியப் போருக்கு மத்தியில் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறை மீதான அழுத்தம் கடுமையாக உணரப்பட்டுள்ளது. போர் தொடங்கிய 10 வாரங்களில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 32 பில்லியன் டாலர் சரிந்துள்ளதுடன், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாகவே நீடித்து வருகிறது.

source https://tamil.indianexpress.com/business/govt-restricts-silver-imports-for-domestic-use-to-curb-forex-outflow-amid-west-asia-crisis-11844141

நீட் யுஜி 2026 மறுதேர்வு: என்.டி.ஏ வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள், முக்கிய விளக்கங்கள்

 

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் யுஜி (NEET UG 2026) நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு சர்ச்சை காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வர்கள் மத்தியில் எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தேசிய தேர்வு முகமை (NTA) விரிவான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs) அடங்கிய விளக்கக் கையேடு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான கட்டணத் திருப்பிச் செலுத்துதல், தேர்வு எழுதவிருக்கும் புதிய நகரங்களை மாற்றுதல், தேர்வு மைய ஒதுக்கீடு, தேர்வு எழுதப் பயன்படுத்தும் மொழி மற்றும் அதற்கான காலக்கெடு போன்ற மிக முக்கியமான விவரங்களை என்.டி.ஏ தெளிவுபடுத்தியுள்ளது.

மறுதேர்வு எப்போது, எப்படி நடக்கும்?

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த நீட் யுஜி 2026 மறுதேர்வு, வரும் ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை பேனா மற்றும் தாள் (Pen-and-Paper) முறையில் நடைபெறும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இதற்காகத் தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தத் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, மராத்தி, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, அசாமி, கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.

கட்டணத் திரும்பப் பெறுதல் மற்றும் மறுதேர்வுக்கான கட்டணம்

ரத்து செய்யப்பட்ட முந்தைய தேர்வுக்காக மாணவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஏதுவாக, வங்கி கணக்கு விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான தனி மாடியூல் ஒன்றை என்.டி.ஏ உருவாக்கவுள்ளது. மாணவர்கள் தங்கள் வங்கி விவரங்களை மே 21, 2026-க்குள் இதில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஜூன் 21 அன்று நடக்கும் மறுதேர்வில் கலந்துகொள்ள மாணவர்கள் எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும், பழைய கட்டணத்திலேயே இந்தத் தேர்வை எழுதலாம் என்றும் என்டிஏ தெளிவுபடுத்தியுள்ளது.

முகவரி மற்றும் தேர்வு நகரங்களை மாற்றுவதற்கான காலக்கெடு

தேர்வு ரத்து செய்யப்பட்ட இடைப்பட்ட காலத்தில் தங்களின் தற்போதைய முகவரியை மாற்றியவர்கள் அல்லது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் தேர்வு எழுதும் நகரத்தை மாற்ற விரும்பும் மாணவர்களுக்கு என்.டி.ஏ ஒரு நல்வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தேர்வு நகரத்தை மாற்றுவதற்கான வசதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை மேற்கொள்ள மே 21, 2026 அன்று இரவு 11:50 மணி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள் ஒதுக்கீடு என்பது, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் நகர விருப்பங்களின் அடிப்படையிலும், அங்குள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துமே தீர்மானிக்கப்படும். எனவே, இந்த மறுதேர்வுக்கு ஒதுக்கப்படும் மையங்கள், கடந்த முறை ஒதுக்கப்பட்ட மையங்களில் இருந்து மாறுபட வாய்ப்புள்ளது. கணினி முறையில் குலுக்கல் அடிப்படையிலேயே இந்தத் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்பதால், முந்தைய மையமே மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

தேர்வு மொழியில் மாற்றங்கள் செய்ய முடியாது

தொடக்கத்தில் விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தேர்வு செய்த தேர்வுக்கான மொழி (Medium of Examination) இறுதியானது என்றும், இந்தச் சூழ்நிலையில் அதனை மாற்ற எந்தவித அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்றும் என்.டி.ஏ திட்டவட்டமாகக் கூறியுள்ளது. குறிப்பிட்ட சில தேர்வு நகரங்களைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று மாணவர்கள் சிலர் எழுப்பிய புகாருக்கும் என்.டி.ஏ விளக்கம் அளித்துள்ளது. அதாவது, சில குறிப்பிட்ட மொழிகளுக்கான தேர்வு மையங்கள், நீட் தகவல் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி சில குறிப்பிட்ட மாநிலங்களிலும் இடங்களிலும் மட்டுமே அமைக்க முடியும் என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்ப்பு பணிகளுக்குக் கூடுதல் நேரம் மற்றும் புகார்கள்

இந்த முறை நீட் தேர்வின் மொத்த நேரத்தில் கூடுதலாக 15 நிமிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த உபரி நேரமானது தேர்வு எழுதுவதற்காக அல்லாமல், மாணவர்களின் ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கும், இதரத் தேர்வு வழிகாட்டுதல் நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் போது தேர்வு மையங்களில் ஏதேனும் அசௌகரியங்களையோ அல்லது குறைபாடுகளையோ சந்தித்த மாணவர்கள், அதுகுறித்த தங்களின் புகார்களை உரிய ஆதாரங்களுடன் neetug2026@nta.ac.in என்ற என்.டி.ஏ உதவி மைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு தேதியில் மாற்றம் இல்லை

பிற போட்டித் தேர்வுகள் அல்லது பல்கலைக்கழகத் தேர்வுகள் இதே நாளில் வருவதால், நீட் மறுதேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், ஜூன் 21ஆம் தேதி நடத்தப்படும் இந்த மறுதேர்வு தேதி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இதில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று தேசிய தேர்வு முகமை உறுதியாகத் தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2026-re-exam-nta-releases-detailed-faqs-clarifies-fee-refunds-city-changes-and-exam-guidelines-11844071

சனி, 16 மே, 2026

கட்சித் தாவல் தடை அபாயத்தில் 26 எம்.எல்.ஏ-க்கள்

 

எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிருப்தி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, த.வெ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க சபாநாயகர் அனுமதி வழங்கியிருப்பது தமிழ்நாடு சட்டமன்ற விதிகளை முற்றிலும் மீறும் செயலாகும் என தி.மு.க எம்.பி.யும், வழக்கறிஞருமான பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 144 வாக்குகள் பெற்றதாக கூறப்படுவது சட்டப்படி தவறான கூற்றாகும். 118 (144-26) என்பது மட்டுமே சரி. (25 அ.இ.அ.தி.மு.க அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு அ.ம.மு.க அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு ) சட்டமன்றத்தில் உரையாற்றிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர் பதவிகள் மற்றும் வாரியப் பதவிகள் தருவதாகக் கூறி த.வெ.க-வினர் அணுகியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

அவர் தமது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் பிரிவு 2(b)-ன் கீழ் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு ஒரு தெளிவான ஆணையாக கருதப்படுகிறது. ஊடகச் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இது அவர் தரப்பிற்கு ஒரு வலுவான ஆதாரமாக உள்ளது.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எடப்பாடி பழனிசாமி உரையாற்றி முடித்த பிறகு, சட்டப்பேரவைத் தலைவர் அ.தி.மு.க-வின் அதிருப்திக் குழுவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணியை பேசுவதற்கு அனுமதித்துள்ளார். மேலும், எஸ்.பி.வேலுமணி  தலைமையிலான அந்த அதிருப்தி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார். இது தமிழ்நாடு சட்டமன்ற விதிகளை முற்றிலும் மீறும் செயலாகும். மேலும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமது கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான காமராஜ், குதிரை பேரத்தில் ஈர்க்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தே.மு.தி.க வைச் சார்ந்த பிரேமலதா விஜய்காந்த் உள்ளிட்ட எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியின் இந்த குதிரை பேரத்திற்கு எதிராகத் தங்கள் கடும் கண்டனங்களை சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். ஆளும் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. பிரதான எதிர்கட்சியினர் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைவரும் ஒண்றினைந்து, எஸ்.பி.வேலுமணி  தலைமையிலான அ.தி.மு.க அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும், அ.ம.மு.க-வின் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் கட்சிப் பொதுச்செயலாளர்களின் உத்தரவுகளைப் பின்பற்றாமலும், தார்மீக அடிப்படையில் இல்லாமலும் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும் பணப் பயன்களுக்காகவும் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் சட்டமன்ற விதிகளை முறையாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.. இவ்வளவு அவசரமாக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கக்கூடாது என்பதே சரியான நிலைப்பாடாகும்.
குற்றச்சாட்டுகளை முன்வைத்த உறுப்பினர்களுக்கு அவற்றை நிரூபிக்க சபாநாயகர் போதிய கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். மேலும், கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்படும் அந்த அதிருப்தியாளர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதித்திருக்கக் கூடாது என்பதே சட்ட ரீதியான வாதமாகும். 

சட்டப்பேரவைத் தலைவர் இந்த விதியைக் கண்டிப்பாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.. சட்டப்பேரவைத் தலைவர் அவர்களின் இந்த முடிவும், அதிருப்தி உறுப்பினர்களின் வாக்குகளும் முறையான ஆதாரங்களுடன் ஆளுநரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ முன்வைக்கப்பட்டால், அந்த 26 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டு, அவை செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

சட்டப்பேரவைத் தலைவர் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, குதிரை பேரம் குறித்த புகார்களை விசாரிக்க ஒரு குழுவை நியமித்திருக்க வேண்டும். முதலமைச்சர் ஜேசப் விஜய் சட்டமன்ற அவையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கவோ அல்லது அவற்றுக்கு விளக்கம் அளிக்கவோ முன்வராதது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது.
இராஜாராம் பால் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இத்தகைய விவகாரங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/speaker-rule-violation-26-mlas-face-disqualification-says-dmk-mp-wilson-11840175