மாணவர்கள் போராட்டம்

முதன்முறையாக பணிந்த ஒன்றிய அரசு 25 07 2026

credit https://www.youtube.com/watch?v=IPAWHmmz2ao
ராஜினாமா! ஜந்தர் மந்தரில் ஆர்ப்பரிப்பு 25 07 2026

Credit https://www.youtube.com/watch?v=x_LZWrMNx-k

 

தீவிரமடைந்த நீட் வினாத் தாள் கசிவு போராட்டம்: 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய என்.டி.ஏ


25 7 2026
நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து, தேர்வமைப்பை சீர்திருத்தும் நோக்கில் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய தொடர் போராட்டங்களின் பின்னணியில், தேசிய தேர்வு முகமை தனது 47 அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கையில், என்.டி.ஏ அமைப்பிலிருந்து 47 அதிகாரிகளின் சேவைகள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தின. 

மேலும், தவறிழைத்த அதிகாரிகளுக்குப் தகுந்த பாடம் புகட்டவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையிலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பக்கட்ட நடவடிக்கை மட்டுமே என்றும், தேர்வு முறையைச் சீரமைக்க மேலும் பல கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் என்.டி.ஏ வட்டாரம் கூறி உள்ளது. இதனிடையே, அரசுப் பொதுத் தேர்வு வினாத்தாள்களைக் கசியவிடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை கடுமையாக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிகள் தடுப்பு) சட்டத்தில்' (Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024) திருத்தங்கள் மேற்கொள்ள இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கால் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வியாழக்கிழமை நள்ளிரவில் X பக்கத்தில் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, முறைகேடுகளைத் தடுக்கக் கடுமையான புதிய சட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் தனது உரையில், தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி, நள்ளிரவில் இதற்கான வரைவு முன்மொழிவை துறைகள் என்னிடம் சமர்ப்பித்து உள்ளன. விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளைக் கொண்ட இந்த வரைவு, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அமைச்சரவை சகாகாளின் ஆலோசனைகளை உள்வாங்கி வரைவு இறுதி செய்யப்படும். வரும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 2-வது வாரத்திலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.


source https://tamil.indianexpress.com/india/47-national-testing-agency-officials-sacked-amid-student-protests-nta-fires-47-officials-strict-new-exam-leak-bill-approved-12195031
இன்னும் உடம்புல 30 குண்டுகள் இருக்கு'... ஜந்தர் மந்தர் தடியடியில் காயமடைந்த ரிப்போர்ட்டரின் கண்ணீர் வாக்குமூலம் 24 07 2026

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'சலோ சன்சாத்' (Chalo Sansad) பேரணியின்போது ஏற்பட்ட தடியடி மற்றும் மோதலில், அவுட்லுக் (Outlook) நிறுவனத்தைச் சேர்ந்த 28 வயதான விளையாட்டு பத்திரிகையாளர் ஒருவர் பெல்லட் (Pellet) குண்டுகளால் சுடப்பட்டுப் பலத்த காயமடைந்து உள்ளார். பேரணி நடந்து முடிந்து 3 நாட்கள் கடந்த நிலையிலும், உடலில் 30-க்கும் மேற்பட்ட சிறு குண்டுகள் தங்கியிருக்க, தீவிர வலியோடு வீட்டிலிருந்தபடியே அவர் பணியாற்றி வருகிறார்.

பெல்லட் குண்டுகள் ஊசிபோன்ற வடிவம், முக்கோண வடிவம், பால் பேரிங் என பல்வேறு வகைகளில் உள்ளன. ஒருமுறை பெல்லட் துப்பாக்கியால், ட்ரிகரை அழுத்தி சுடும்போது, சில நூறு குண்டுகள் வெடித்துச் சிதறும். இந்த பெல்லட் குண்டுகளும், துப்பாக்கிகளும் இஷாபூரில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

ஜூலை 22 அன்று சஃப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையின்படி, ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் நடந்த தாக்குதலின் போது, பெல்லட் துப்பாக்கிச்சூடு காரணமாக அவரது வலது கை, நெஞ்சு, முதுகுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், அவரது வலது கை, நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதியில் சிறிய அளவிலான ஆழமான காயங்கள் இருப்பதும், அவை பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயங்களுடன் ஒத்துப் போவதும் கண்டறியப்பட்டது. காயங்களின் வலி ஒருபுறமிருக்க, விளையாட்டின் மீதான ஆர்வத்தால் அவர் வீட்டிலிருந்தே மீண்டும் செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளார்.

ஃபிஃபா தொடர் ஜூலை 19 உடன் நிறைவடைந்தது. இன்று (ஜூலை 23) இந்தியா - ஜிம்பாப்வே இடையே கிரிக்கெட் போட்டி நடப்பதால், அதுகுறித்த செய்திகளைக் கவனித்து வருகிறேன் என்று கூறும் அந்தப் பத்திரிகையாளர், விரைவில் களத்திற்குச் சென்று பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது? கடந்த ஜூலை 20 அன்று, தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி Cockroach Janta Party 'சலோ சன்சாத்' பேரணியை நடத்தியது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற பிறகே, இந்த பேரணியில் பங்கேற்க நான் முடிவு செய்தேன் எனப் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் கூறினார். பேரணி ஜந்தர் மந்தரிலிருந்து கன்னாட் பிளேஸ் பகுதியை நோக்கி நகர்ந்தபோது, மாலை 4 மணியளவில் கலவரமும் தடியடியும் வெடித்தது.

ஆரம்பத்தில் காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வானத்தை நோக்கிச் சுட்டது. ஆனால், திடீரெனக் கூட்டத்தை நோக்கி நேரடியாக சுடத் தொடங்கினர். எனக்கு சற்று முன்னே நின்றுகொண்டிருந்த ஒருவரின் கண்ணுக்கு மேலே, கண்ணீர்ப்புகைக் குண்டு நேரடியாக தாக்கியது. உடனே மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினர் என அவர் அச்சத்துடன் நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் என் மீது துப்பாக்கியைக் குறிவைப்பதைப் பார்த்தேன். நான் உடனே திரும்பி ஓடத் தொடங்கினேன், ஆனால் என் முதுகில் ஏதோ பலமாகத் தாக்குவதை உணர்ந்தேன். முதலில் நரம்புகளில் சுர்ரென்ற உணர்வு ஏற்பட்டது, அடுத்த நொடியே என் முதுகில் தீப்பிடித்து எரிவது போல் கடுமையான வலி உண்டானது என்றார்.

கன்னாட் பிளேஸ் பகுதியில் காவல் கட்டுப்பாடுகள் இருந்ததால், சுமார் 1 மணி நேரம் காத்திருந்த பிறகே அவர் தன் மோட்டார் சைக்கிளில் நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நான் நண்பரின் வீட்டிற்குச் சென்று சட்டையைக் கழற்றிப் பார்த்தபோது, அது ரத்தத்தில் நனைந்திருந்தது. எனது நண்பர் அந்த காயங்களைப் புகைப்படமெடுத்து சாட்ஜிபிடியில் பதிவேற்றி ஆய்வு செய்தார். அப்போதே அது பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயம் என எங்களுக்கு முதன்முதலாகச் சந்தேகம் ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.

மறுநாள் ஜூலை 21 மாலை 7 மணியளவில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த அவருக்கு, அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரை தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சி.டி ஸ்கேன், எம்.ஐ.ஆர் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது உடலில் 30-க்கும் மேற்பட்ட பெல்லட் ரவைகள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அந்த ரவைகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுப்பது மேலும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனது உடலில் அதிக எண்ணிக்கையில் ரவைகள் இருந்தன. நானே 25 முதல் 30 ரவைகளை எண்ணினேன். அவற்றை அறுவை சிகிச்சை செய்து எடுக்க முயன்றால் உடலில் பல வெட்டுக்காயங்களை உருவாக்க வேண்டும் அது நன்மையை விட ஆபத்தையே அதிகம் தரும் என மருத்துவர்கள் கூறினர். அதனால் 'குண்டுகள் உடலிலேயே இருக்கட்டும்' என விட்டுவிட்டனர் என்று அவர் கூறினார். நல்லவேளையாக அந்த குண்டுகள் எலும்புகளுக்கு மிக அருகில் செல்லவில்லை என்பதால், அவர் பெரிய ஆபத்திலிருந்து தப்பினார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எலும்பில் பட்டிருந்தால் அவரது கையை அசைக்க முடியாமல் போயிருக்கலாம்.

தற்போது வலி தீவிரமடையும் போது மட்டும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள அவர், எலும்பியல் நிபுணரிடம் தொடர் சிகிச்சை பெறத் திட்டமிட்டுள்ளார். மேலும், தனக்கு ஏற்பட்ட இந்தக் காயங்களுக்கு மத்திய அரசிடமிருந்து உரிய இழப்பீடு (Compensation) பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
source https://tamil.indianexpress.com/india/30-pellets-still-inside-my-body-journalist-hurt-in-cjp-protest-seeks-compensation-12195070

வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் | Ban Neet | CJP | Protest | Sun News 24 o7 2026

மக்களவை 5வது நாளாக முடங்கியது 24 07 2026

ஒன்றிய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி 24 06 2026

War Of Words Between Education Minister Dharmendra Pradhan Vs Rahul Gandhi in Lok Sabha 24 07 2026