Home »
» Say No to - வந்தே மாதரம்
வந்தே மாதரம் விவகாரம் : வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்........!!
வந்தே மாதரம் பாடலின்போது நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்த ஷபீகுர் ரஹ்மான் எம்பி.,க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை லக்னவ் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சவுரப் ஷர்மா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.சிங் மற்றும் வீ.கே.அரோடா அடங்கிய இரு நபர் அமர்வு நீதிமன்றத்தில், காரசாரமான விவாதம் நடை பெற்றது.
வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாகாது, இதை பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்தவும் முடியாது என எடுத்துக் கூறப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கரிஞரும் "ஜன கன மன" தான் தேசிய கீதம் என எடுத்துரைத்ததுடன் வந்தே மாதரம் குறித்து எங்கும் சொல்லப்படவில்லை என்பதையும் ஆமோதித்தார்.
இதை தொடர்ந்து, சவுரப் ஷர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் வந்தே மாதரம் நிகழ்ச்சியை புறக்கணித்தது, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு, அதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்யமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Related Posts:
இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது - மம்தா பேனர்ஜி காட்டம் November 25, 2017
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியால் இந்தியாவில் அவசர நிலைப்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா ப… Read More
பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து மொபைல்களிலும் ஜி.பி.எஸ் வசதி! November 25, 2017
2018ம் ஆண்டு முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் அவசர உதவி பட்டன், ஜிபிஎஸ் வசதியுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறி… Read More
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியால் இந்தியாவில் அவசர நிலைப்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்திற்கு பாரதிய ஜனதா கட்சி எதிராக செயல்படுவதாகவும் விமர்சித்தார். இதனால், சிறுபான்மையின மக்கள் தங்களின் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதிய ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்திற்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவசர நிலையைப் போன்ற சூழல் தற்போது உருவாகியுள்ளதாகவும் மம்தா பேனர்ஜி விமர்சித்துள்ளார். இதனை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்தை வெளியிட மம்தா பானர்ஜி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,` பத்மாவதி திரைப்படம் சர்ச்சையில் சிக்கியது துரதிருஷ்டவசமானது எனக் கருத்து தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை அழிக்கும் வகையில் கட்சி ஒன்று திட்டமிட்டு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ள அவர், இதை சினிமா துறையினர் ஒருங்கிணைந்து எதிர்த்து போராட முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணரும் பத்மாவதி படக்குழுவினர், பாதுகாப்பாக இருக்க, மேற்கு வங்கத்திற்கு வரலாம் என்றும் மம்தா பேனர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜ… Read More
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பெண்களை சீண்டிய தமிழக இளைஞர்கள்..! November 25, 2017
சென்னை நேரு மைதானத்தில் கால்பந்து போட்டியை காண வந்த வடகிழக்கு மாநில பெண்களை தமிழக இளைஞர்கள் சிலர் தகாத முறையில் சீண்டிய வீடியோ காட்சிகள் இணையத்தில… Read More
அரசின் நிதியுதவி இன்றுவரை கிடைக்காமல் அவதியுறும் மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டோர்! November 26, 2017
இந்தியாவை உலுக்கிய மும்பை தாக்குதலின் 9-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் இந்தியாவின் வர்த்தக த… Read More