புதன், 15 மே, 2013

கலவரங்களை தூண்ட

நாடெங்கும் கலவரங்களை தூண்ட ஆர்.எஸ்.எஸ் திட்டம்!

நாடெங்கும் கலவரங்களை உருவாக்கி இந்து இசுலாமியர்கள் இடையே மோதலை உண்டாக்குவதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்துத்துவ உணர்வை வாக்காக அறுவடை செய்ய சங் பரிவார் அமைப்புகள் திட்டம் தீட்டி வருகின்றன.

இன்றளவிலும் ஆர்.எஸ்.எஸ்காரர்களால் இந்தியாவில் சிறியதும் பெரியதுமாக கலவரங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மத உணர்வுகளை தூண்டி மக்களை பிரித்து பதவி ருசி கண்ட பிணம் திண்ணிகள் மக்களை கொலைக்கு கொடுக்க ஒரு போதும் அஞ்ச மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களை சொல்லாம்.

இதோ,ஓர் சமீபத்திய உதாரணம்..
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் 19 ம் மைலில் வசிப்பவர் இக்பால்.இவர் வீட்டில் வளர்ந்து வந்த எருமை மாட்டினை,ஆர்.எஸ்.எஸ் காரர்கள் திருடி சென்று சாவச்சேரி குளத்து பரம்பு போர்கலி கோவில் அருகே தலையையும் காலையும் வெட்டி கொன்று.பின்னர் மாட்டின் இதர உடல் உறுப்புகளை கோவிலில் வீசி எறிந்திருக்க்ன்றனர்.
பின்னர் இது குறித்து ஊர்மக்களிடம் இசுலாமியர்கள் மாட்டை கொன்று உடல் உறுப்புகளை கோவிலில் வீசி எறிந்து விட்டார்கள் என்று பொய்யான தகவலை பரப்பி மக்களிடத்தில் வண்முறையை தூண்டும் விதமாக பரப்புரை செய்து இருக்கிறார்கள்.
சம்பவம் அறிந்த காவல்துறையினர் கோவிலுக்கு சென்று மாட்டின் உடலை அப்புறப்படுத்தி விசாரனை முடுக்கி விட்டு இருக்கிறார்கள்.
இதனிடையில் ஊரில் மத மோதல்கள் எழும் அளவிற்கு பிரச்சாரம் செய்த ஆர்.எஸ். எஸ் பயங்கரவாதிகளின் மேல் காவல்துறைக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் இந்த கொடுஞ்செயலுக்கு காரணம் என்று தெரிய வந்தும் இருக்கிறது.

கோவிலில் மாட்டின் இறைச்சியை வீசி எறிந்தால் மத மோதல் உருவாகும் என்று திட்டத்தின் படி அவ்வாறு செய்ததாக காவல்துறையினரிடம் உண்மையை ஒப்புக்கொண்டும் உள்ளனர்.

பொதுமக்களிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ள முயற்சி செய்தாக வழக்கு பதிவு செய்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான
விஜேஸ்,அஜேஸ்,ஸ்ரீ ராஜ்,பிரகாசன் ஆகியோர்களை காவல் துறை கைது செய்து இருக்கிறது.கூடவே மாட்டை திருடிய வழக்கும் பதிவு செய்யப்படு இருக்கிறது.


##காவல் துறை சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்ததால் மிக பெரிய கலவரம் தடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்து இந்துனு தொண்டை தண்ணி தீர கத்துவானுங்க இந்து முஸ்லீம் இடையே கலவரத்தினை தூண்டும் விதமாக ஏதாவது ஒரு அசம்பாவாத செயலை நிகழ்த்துவார்கள்.பின்னர் அதனை பெரிய விடயமாக்கி இரு தரப்பிற்கும் சண்டையை மூட்டிவிட்டு அப்பாவிகள் செத்து விழும் போது அந்த பிணத்தை காட்டி அதற்கும் ஒரு கலவரத்தை உண்டு பண்ணுவானுங்க பிணம் திண்ணிகள்..!
இந்துக்களே உசார் உசார்..உங்களை பிணமாக்கி தான் ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்..!!!#