## நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார் களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார் களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது சிலரது வாதமாகும். எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும், மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம். எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த குருட்டு பக்தியை துடைத்தெரிகிறது. குர்ஆன் கூறும் செய்திகளைப் பாருங்கள். وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آَبَاءَنَا أَوَلَوْ كَانَ آَبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ (2:170) அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 2:170) மனிதனது அறிவுக்கும்இ சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர். முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்'' எனக் கூறுகின்றனர். சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான். அல்லாஹ்வும் அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?'' என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது. இவர்களின் இந்தக் குருட்டு பக்திக்கான காரணம் என்ன? நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி صلى الله عليه وسلم அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும். நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிட மிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறது? வாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா? இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்ப இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?
வெள்ளி, 25 அக்டோபர், 2013
Home »
» முன்னோர்களை பின்பற்றலாமா ?
முன்னோர்களை பின்பற்றலாமா ?
By Muckanamalaipatti 7:42 AM
Related Posts:
ஈரான் - இஸ்ரேல் மோதல் எதிரொலி: விமான சேவை கடும் பாதிப்பு ஈரான் - இஸ்ரேல் மோதல் எதிரொலி: விமான சேவை கடும் பாதிப்பு 24 6 2025ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போர் பதற்றம் மற்றும் சமீபத்திய அமெரிக்க தா… Read More
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: அணுசக்தி தளங்களை தாக்கிய B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் என்பது என்ன? ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: அணுசக்தி தளங்களை தாக்கிய B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் என்பது என்ன?ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையில், ஈரானின் அ… Read More
வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை – 1,000 அடி உயரத்திற்கு வெளியேறிய தீக்குழம்பு வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை – 1,000 அடி உயரத்திற்கு வெளியேறிய தீக்குழம்பு22 6 2025அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. க… Read More
கலப்பு திருமணம்… 40 பேருக்கு மொட்டை அடித்த கிராம மக்கள் – சடங்கின் பேரில் தீண்டாமை 22 6 2025ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள பைகனகுடா கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர… Read More
கத்தாரில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள்: 24 06 2025கத்தாரில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள்: 24 06 2025கத்தாரின் தோஹாவில் உள்ள பின் மஹ்முத்தைச் சேர்ந்த 36 வயது குடியிருப்பாளர் ஒருவர், திங்கள்கிழமை இரவு … Read More