வியாழன், 12 மார்ச், 2026

கேஸ் சிலிண்டருக்கு இறுதிச் சடங்கு: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்

 WhatsApp Image 2026-03-12 at 11.44.04 AM

Trichy

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முடங்கும் ஹோட்டல் தொழில்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடுத்துள்ள போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மும்பையில் 50 சதவீத ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உருவாகியுள்ளது. பல இடங்களில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றன.

WhatsApp Image 2026-03-12 at 11.44.06 AM

நூதன முறையில் எதிர்ப்பு

இந்தச் சூழலை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கையாள வேண்டும் என வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்த்தகர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீஇந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு வணிக கேஸ் சிலிண்டரை நடுவில் வைத்து, அதற்கு மாலை அணிவித்து, இறுதிச் சடங்கு நடத்துவது போன்ற நூதன முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பிரதமர் மோடியின் கேலிச்சித்திர பதாகைகளை ஏந்தியபடி 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

WhatsApp Image 2026-03-12 at 11.44.07 AM

அமெரிக்காவிற்கு அடிபணியலாமா? - கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அமைப்பின் பொருளாளர் பத்மநாபன் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

”நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய அமைச்சர்கள் பொய் கூறி வருகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ரஷ்யா நமக்கு வழங்க முன்வந்த எரிவாயுவை, அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்தியா நிராகரித்துள்ளது. இதனால்தான் இன்று ஒட்டுமொத்த நாடும் எரிவாயுவிற்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அத்தியாவசியத் தேவையான எரிவாயுவை அரசு போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்து, வதந்திகளையும் பொய் வாக்குறுதிகளையும் நிறுத்திவிட்டு, போர்க்கால அடிப்படையில் சமையல் எரிவாயுவை கொள்முதல் செய்ய வேண்டும். 

நாடு முழுவதும் தட்டுப்பாடு இன்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யாவிட்டால், கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.ங்கள் விரும்பக்கூடிய கதைகள்



source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-cpim-protest-commercial-lpg-cylinder-shortage-11205735