திங்கள், 7 அக்டோபர், 2013

பாவங்கள் மன்னிக்கப்படும்

ஒவ்வொரு ஐவேளைத் தொழுகைக்காகவும்
உபரியான தொழுகைக்காகவும் நாம்
செய்யும் உளூவின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும்.
எனவே ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்
செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும்.

361 ﻋَﻦْ ﻋُﺜْﻤَﺎﻥَ ﺑْﻦِ ﻋَﻔَّﺎﻥَ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻣَﻦْ
ﺗَﻮَﺿَّﺄَ ﻓَﺄَﺣْﺴَﻦَ ﺍﻟْﻮُﺿُﻮﺀَ ﺧَﺮَﺟَﺖْ ﺧَﻄَﺎﻳَﺎﻩُ ﻣِﻦْ ﺟَﺴَﺪِﻩِ ﺣَﺘَّﻰ ﺗَﺨْﺮُﺝَ ﻣِﻦْ ﺗَﺤْﺖِ
ﺃَﻇْﻔَﺎﺭِﻩِ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர்
முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர்
செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள்
அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில்,
அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய
பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி),

நூல் :
முஸ்லிம் (413)

Related Posts: