வியாழன், 26 ஜூன், 2025

சுங்கக் கட்டணம் வசூலிப்பு; தாமதத்தை தவிர்க்க வேறு வழிகள் இல்லையா? - உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி

 

madurai high court

மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "எல்லா மாநிலங்களிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானதும், அரசியலமைப்புக்கு எதிரானதும் ஆகும். எனவே, சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம் தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் பயணிகள் அரை மணி நேரம் வரை இழக்கின்றனர். இந்த தாமதத்தை தவிர்க்க வேறு வழிகள் இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் இந்த வழக்குக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/highcourt-madurai-raise-questions-against-toll-plaza-price-and-time-delay-9420071