வியாழன், 19 டிசம்பர், 2013

Hadis


அல்லாஹ்வைப்
பற்றி எச்சரிக்கை செய்தல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய
தோழர்களுக்கு அல்லாஹ்வின்
அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். எந்தக்
காரியத்தைச் செய்தால்
இறைவனின் கோபமும், தண்டனையும்
கிடைக்குமோ அதைப் பற்றியும்
எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நான் என் அடிமையைச் சாட்டையால்
அடித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எனக்கு பின்னால்
யாரோ நினைவிருக்கட்டும் அபூமஸ்வூத்
என்று கூறியதைக் கேட்டேன். ;போது நான்
கோபத்தில் இருந்ததால் அந்தக்
குரலை (நன்கு) விளங்கிக்
கொள்ளவில்லை. அவர்
என்னை நெருங்கி வந்த
போது (பார்த்தால்)
அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் இருந்தார்கள்.
அப்போது அவர்கள் நினைவிருக்கட்டும்
அபூமஸ்வூத், நினைவிருக்கட்டும்
அபூ மஸ்வூத் என்று சொல்லிக்
கொண்டிருந்தார்கள்.
உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக்
கீழே போட்டேன். அப்போது அவர்கள்
நினைவிருக்கட்டும் அபூமஸ்வூத்
உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும்
அதிகாரத்தை விடப்
பன்மடங்கு அதிகாரம் உம்
சொன்னார்கள்அல்லாஹ்வுக்குமீதுஇருக்கிறதுஎன்று.
நான் இநதன் பின்னர் ஒரு போதும்
நான் எந்த அடிமையையும் அடிக்க
மாட்டேன் என
உறுதிமொழிந்தேன்.

நூல் : முஸ்லிம் 3413

முஸ்லிமின்
மற்றொரு அறிவிப்பில் :
நபி (ஸல்) அவர்கள் இந்த அடிமையின்
மீதிருக்கும் அதிகாரத்தை விட
பன்மடங்கு அதிகாரம்
உம்மீதுஅல்லாஹ்வுக்குஇருக்கிறதுஎன்றுசொன்னதும்
அச்சத்தால் எனது கையிலிருந்த
சாட்டை கீழே விழுந்துவிட்டது என
அபூமஸ்வூத் (ரலி) அவர்கள்
கூறினார்கள்.
முஸ்லிமின்
மற்றொரு அறிவிப்பில் :
அல்லாஹ்வின் உவப்புக்காக
(இவரை நான்
விடுதலை செய்துவிட்டேன்) இவர்
சுதந்திரமானவர் என்று கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள்
அபூதர்ரே அறிந்து கொள் நீ
இவ்வாறு செய்திருக்காவிட்டால்
நரகம் உம்மை எரித்திருக்கும்
அல்லது நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்
என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3414

தவறைச் சுட்டிக் காட்டுதல்

நபித்தோழர்களும் மனிதர்கள்தான்,
நபித்தோழர்கள் தவறு செய்யும்
பட்சத்தில் உடனே நபி (ஸல்) அவர்கள்
அந்தத் தோழரை கண்டித்தும் விடுவார்கள்.
காரணம் அப்போதுதான் அவர்கள்
அந்தத் தவறை விட்டும்
தவிர்ந்து கொள்வார்கள்.

மஅரூர் பின் சுவைத் அவர்கள்
கூறியதாவது: நான் அபூதர்
அல்கிஃபாரீ (ரலி)
(அவர்களை மதீனாவுக்கருகில் உள்ள
"ரபதா' எனுமிடத்தில் சந்தித்தேன்.
அப்போது) அவர்கள் மீது ஒரு மேலங்கியும்,
அவர்களுடைய அடிமையின்
மீது (அதே மாதிரியான) ஒரு மேலங்கியும்
இருக்கக் கண்டேன். நான்
(அவர்களிடம்), "(அடிமை அணிந்திருக்கும்)
இதை நீங்கள் வாங்கி (கீழங்கியாக)
அணிந்து கொண்டால்
(உங்களுக்கு) ஒரு ஜோடி ஆடையாக
இருக்குமே! இவருக்கு வேறோர் ஆடையைக்
கொடுத்துவிடலாமே''
என்று சொன்னேன்.
அப்போது அபூதர் (ரலி) அவர்கள்
கூறினார்கள்:
எனக்கும் ஒரு மனிதருக்கும்
இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
அம்மனிதரின் தாய்
அரபியரல்லாதவர் ஆவார். ஆகவே,
நான் அவருடைய தாயைக்
குறிப்பிட்டு (இழிவாக)ப் பேசிவிட்டேன்.
உடனே அம்மனிதர் நபி (ஸல்)
அவர்களிடம் என்னைப் பற்றி முறையிட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம்,
"நீர் இன்னாரை ஏசினீரா?''
என்று கேட்டார்கள். நான், "ஆம்''
என்று சொன்னேன். "அவருடைய
தாயைக் குறிப்பிட்டு (இழிவாக)ப்
பேசினீரா?'' என்று கேட்டார்கள். நான்
(அதற்கும்) "ஆம்'' என்று பதிலளித்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர்
அறியாமைக் காலத்துச் கலாச்சாரம்
உள்ள மனிதராகவே இருக்கின்றீர்''
என்று சொன்னார்கள்.
நான், "வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக்
காலகட்டத்திலுமா?
(அறியாமைக்கால குணம்
கொண்டவனாய் உள்ளேன்?)''
என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள்,
"ஆம்'' என்று கூறிவிட்டு,
"(பணியாளர்களான) அவர்கள்
உங்கள் சகோதரர்கள் ஆவர்.
அவர்களை அல்லாஹ் உங்கள்
ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான்.
ஆகவே, யாருடைய ஆதிக்கத்தின் கீழ்
அவருடைய சகோதரரை அல்லாஹ்
வைத்துள்ளானோ அவர் தம் சகோதரருக்குத்
தாம் உண்பதிலிருந்து உணவளிக்கட்டும்.
தாம்
அணிவதிலிருந்து அவருக்கு அணியத்
தரட்டும். அவரது சக்திக்கு மீறிய
பணியை அவருக்குக்
கொடுத்து அவரைச் சிரமப்படுத்த
வேண்டாம்.
அவ்வாறு அவரது சக்திக்கு மீறிய
பணியை அவருக்குக்
கொடுத்தால் அவருக்குத்
தாமும் ஒத்துழைக்கட்டும்''
என்று கூறினார்கள்.

நூல்கள் : புகாரீ 6050, முஸ்லிம்

அபூதர் (ரலி) அவர்களை நபி (ஸல்)
அவர்கள் கண்டித்ததும் தம்முடைய
நடவடிக்கையே மாற்றி அமைக்கின்றார்கள்.
தான் அணிந்திருக்கும்
அதே ஆடையை தன்னுடைய அடிமைக்கும்
அணிவிக்கின்றார்கள். தான்
சாப்பிடும்போது தன்னுடைய
அடிமையோடு சேர்ந்து சாப்பிடுகின்றார்.
அடிமையின் சக்திக்கு அப்பாற்பட்டு எந்த
வேலையையும் அபூதர் (ரலி) அவர்கள்
கொடுக்கவில்லை.

தாராளமாகக்
கொடுத்தல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய
தோழர்களுக்குபொருளாதாரத்தைவாரிக்
கொடுக்கக்கூடியவர்களாக
இருந்தார்கள். தம்மிடம் இருப்பதில்
கஞ்சத்தனம் காட்டமாட்டார்கள்.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள்
கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "ஹுனைன்'
போரிலிருந்து திரும்பி வந்த போது நான்
அவர்களுடன்
சென்று கொண்டிருந்தேன்.
மக்களும் உடன் இருந்தனர்.
அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச்
சூழ்ந்து கொண்டு (தர்மம்)
கேட்கலானார்கள்; "சமுரா' என்னும்
(கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்)
அவர்களை நெருக்கித்
தள்ளி விட்டார்கள். நபியவர்களின்
சால்வை முள்மரத்தில் சிக்கிக்
கொண்டது. ஆகவே நபி (ஸல்)
அவர்கள் சற்று நின்று, "என்
சால்வையை என்னிடம்
கொடுங்கள். என்னிடம் இந்த
முள் மரங்களின் எண்ணிக்கையில்
ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட
அவற்றை உங்களிடையே பங்கிட்டிருப்பேன்.
பிறகு என்னை நீங்கள் கருமியாகவும்
காண மாட்டீர்கள்;
பொய்யனாகவும் காண
மாட்டீர்கள்; கோழையாகவும் காண
மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரீ 2821