ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கடவுளுக்கு ஆயுதம் தேவையா?



 - இந்து கிறித்தவ அன்பர்கள் கவனத்திற்கு....

 ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் தனக்கு பாதுக்காப்பு அளிக்க இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்றும், இறைவன் தான் தனக்கு பாதுகாப்பு என்றும் கூறியதற்கு பதிலளித்த சாமியார் ரவி சங்கர் பாபா, “கடவுள்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்கள் வைத்திருக்கும் போது உங்களது பாதுகாப்புக்கு போலீசார் மிக மிக அவசியம்என்று கூறியுள்ளார்.

 கடவுளுடைய ஆற்றல் குறித்து இவர்கள் என்ன நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று நமக்கு புரியவில்லை.

 கடவுளுக்கு ஆயுதம் தேவையா?

 ஆயுதங்கள் வைத்திருக்கும் கடவுள்(?) அந்த ஆயுதத்தை வைத்து ஒரு போதும் தன்னை காத்துக் கொள்வதில்லை.

 அந்த கடவுள்(?)களையே கடத்திக் கொண்டு போய் விடுகின்றார்கள்.

 அதை காக்க போலீஸ் தேவைப்படுகின்றது.

 இப்படித்தான் இவர்கள் இறைவனை நம்பிக்கொண்டுள்ளார்கள்.

 இது ஒருபுறம் என்றால் மறுபுறம் கிறித்தவ நண்பவர்கள், “யாக்கோபு என்பவருடன் கடவுள் சண்டை போட்டு ஜெயிக்க முடியாததால், அவரது மர்ம உறுப்பை பிடித்து கடவுள் வெற்றி(?) பெற்றார்என்று பைபிளில் வசனத்தை வாசித்து வருகின்றார்கள்.

 இந்த நம்பிக்கைகள் சரியா?

 கடவுளுக்கு ஆயுதம் தேவையா?

 இத்தகையவர் கடவுளாக இருக்க முடியுமா?