வெள்ளி, 22 நவம்பர், 2013

Al Fathiya


ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுவதை இஸ்லாம்
 கட்டாயக் கடமையாக்கியுள்ளது. இந்தத்
 தொழுகையில்
 அல்பாத்திஹா அத்தியாயத்தை கண்டிப்பாக ஓத
 வேண்டும். இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வைப் பற்றியும்
 மறுமை நாளைப் பற்றியும் இந்த உலகத்தில் வாழும் போது நாம்
 என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்
 நினைவூட்டப்படுகின்றது.

 உறக்கத்தை விட்டுவிட்டு அதிகாலைத்
 தொழுகைக்கு எழுவது சாதாரண விஷயமா?
 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம்
 வியாபார நேரத்தில் கடையை மூடிவிட்டு ஜும்ஆ
 தொழுகைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சிகள்
 எல்லாம் எதற்காக?

 இறைவனுக்காகவும் மறுமைக்காகவும் எதையும் நான்
 தியாகம் செய்வேன். மற்ற அனைத்தையும் விட
 எனக்கு இறைக்கட்டளை முக்கியமானது என்ற
 எண்ணத்தை மனிதனிடத்தில் ஏற்படுத்தி அவனைச்
 சீர்திருத்துவதற்காகத் தான்.