சனி, 21 மார்ச், 2026

Netizen Talk






 






















































அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்து சுவிட்சர்லாந்து அதிரடி!




















அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்து சுவிட்சர்லாந்து அதிரடி!




 

பிறை நிலவு குழப்பவாதிகள் யார்?

பிறை நிலவு குழப்பவாதிகள் யார்? தேசத்துரோகிகள் யார்? எம்.எஸ். சுலைமான்

98:5 வசனத்தின் விளக்கம்

98:5 வசனத்தின் விளக்கம் அல்குர்ஆனின் அழகிய விளக்கம்.. A.சலீம் M.I.Sc பேச்சளர்,TNTJ ரமலான் 2026 - தொடர் - 30

முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கஃபாவை வணங்குகிறார்களா?

முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கஃபாவை வணங்குகிறார்களா? N.அல் அமீன் (மாநிலச் செயலாளர்,TNTJ) ஐயமும் தெளிவும் ரமலான் தொடர் - 27 - 2026

98:5 வசனத்தின் விளக்கம்

98:5 வசனத்தின் விளக்கம் அல்குர்ஆனின் அழகிய விளக்கம்.. A.சலீம் M.I.Sc பேச்சளர்,TNTJ ரமலான் 2026 - தொடர் - 29

நேரம் குறிப்பிடாமல் பொதுவாக நபிகளார் செய்த பிரார்த்தனைகள்..

நேரம் குறிப்பிடாமல் பொதுவாக நபிகளார் செய்த பிரார்த்தனைகள்.. தினம் ஒரு துஆ S.ஹஃபீஸ் M.I.Sc ரமலான் 2026 - தொடர் - 29

அண்ணலாருடன் அண்மையில் இருக்க!

அண்ணலாருடன் அண்மையில் இருக்க! N.தவ்ஹீத் M.I.Sc பேச்சாளர்,TNTJ TNTJ,தலைமையக ஜுமுஆ - 20.03.2026

மரணத்தருவாயில் எனது நிலை!

மரணத்தருவாயில் எனது நிலை! சுயபரிசோதனை எம்.ஏ அப்துர் ரஹ்மான் MISc பேச்சாளர் TNTJ தொடர் - 7

இந்திய கிரிக்கெட்டில் இன வெறி... பி.சி.சி.ஐ மீது பரபர குற்றச்சாட்டு

 

1985 உலக சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாகச் செயல்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். அவர் இந்தியாவுக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 26 மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1983-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது அவர் தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இளம் வீரராக இருந்தபோது, ​​ உள்ளூர் போட்டியில் இரண்டு ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆரம்பத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அவரது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்று 1984-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளிப்பட்டது; அதில் அவர் ஒரு ஆட்டத்தில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராகவும் அவர் திகழ்ந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். குறிப்பாக சுழற்பந்து வீச்சு குறித்த தனது தொழில்நுட்பப் பகுப்பாய்வுகளுக்காக அவர் அறியப்பட்டார்.

publive-image

இந்த நிலையில், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பி.சி.சி.ஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். தனது 23 ஆண்டு கால வர்ணனையாளர் பணியின் போது இனவெறி மற்றும் வாய்ப்பின்மை ஆகியவற்றை குற்றம்சாட்டி, வர்ணனை செய்வதில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

publive-image

இது குறித்து 60 வயதான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "பி.சி.சி.ஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். கடந்த 23 ஆண்டுகளாக டாஸ் போடும் நிகழ்வு மற்றும் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழா ஆகியவற்றில் வர்ணனை செய்ய பி.சி.சி.ஐ என்னை அனுமதிக்கவே இல்லை. ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே போன்றவர்களுக்கும், புதிதாக வர்ணனைக்கு வருபவர்களுக்கும் மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனது சுயமரியாதையை இழந்து என்னால் யாருக்கும் அடிபணிந்து கிடக்க முடியாது. 

எனது இந்த ஓய்வு ஒரு நீண்ட கதையின் தொடக்கம் மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவரும்போது பொதுமக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். பி.சி.சி.ஐ இதை நம்ப முடியாமல் திகைத்து நிற்கும்" என்றும் அவர் பதிவிட்டு உள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு ரசிகர் ஒருவர், "நீங்கள் கருப்பாக இருப்பதால் உங்களை பரிசளிப்பு நிகழ்வில் அனுமதிக்கவில்லையா?" எனக் கேட்டதற்கு, "நீங்கள் சொல்வது சரி. நிற பாகுபாடுதான்" என்று தெரிவித்துள்ளார். 


source https://tamil.indianexpress.com/sports/laxman-sivaramakrishnan-accuses-bcci-of-racism-forcing-commentary-retirement-tamil-news-11248558

அரசியல் கட்சிகள் விளம்பரங்களுக்கு முன் அனுமதி சான்றிதழ் கட்டாயம்; வேட்பாளர்களின் சமூக ஊடக கணக்குகளுக்கு செக்

 

அரசியல் கட்சிகள் விளம்பரங்களுக்கு முன் அனுமதி சான்றிதழ் கட்டாயம்; வேட்பாளர்களின் சமூக ஊடக கணக்குகளுக்கு செக்

eci 2

இதற்காக ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு (எம்.சி.எம்.சி) அமைக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளை வேட்புமனுவில் தாக்கல் செய்வதுடன், ஆன்லைன் பிரச்சாரச் செலவுகளையும் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியிடும் விளம்பரங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு (எம்.சி.எம்.சி) அமைக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளை வேட்புமனுவில் தாக்கல் செய்வதுடன், ஆன்லைன் பிரச்சாரச் செலவுகளையும் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி்் குறிப்பில் கூறியிருப்பதாவது: “அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதி அறிவித்தது.

பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பு/சங்கம் அல்லது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்/தனிநபர் என எவராயினும், மின்னணு ஊடகங்களில் (தொலைக்காட்சி, வானொலி, பொது இடங்களில் உள்ள ஆடியோ-விஷுவல் திரைகள், இ-பேப்பர்கள், மொத்த குறுஞ்செய்திகள்/குரல் செய்திகள் போன்றவை) சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து விதமான அரசியல் விளம்பரங்களையும் வெளியிடுவதற்கு முன்னதாகவே, அவற்றை முன்-சான்றிதழ் பெறுவதற்காக ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (எம்.சி.எம்.சி) விண்ணப்பிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தனிநபர்கள் அல்லது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விளம்பரங்களுக்கான சான்றிதழ் பெற மாவட்ட அளவிலான எம்.சி.எம்.சி-யிடம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அத்தகைய விளம்பரங்களுக்கான சான்றிதழ் பெற மாநில அளவிலான எம்.சி.எம்.சி-யிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாவட்ட/மாநில அளவிலான எம்.சி.எம்.சி குழுக்களின் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் ஒரு மேல்முறையீட்டுக் குழுவும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களால் சமூக ஊடக இணையதளங்கள் உட்பட எந்தவொரு இணையம் சார்ந்த ஊடகங்கள்/இணையதளங்களுக்கும் சம்பந்தப்பட்ட எம்.சி.எம்.சி-யின் முன்-சான்றிதழ் இன்றி அரசியல் விளம்பரங்கள் வெளியிடப்படக் கூடாது.

ஊடகங்களில் சந்தேகத்திற்குரிய 'கட்டணச் செய்திகள்' குறித்து எம்.சி.எம்.சி குழுக்கள் தீவிரமாகக் கண்காணிப்பதுடன், தகுந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

மேலும், வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில், தங்களின் உண்மையான சமூக ஊடகக் கணக்குகளின் விவரங்களைப் பகிர வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 77(1) மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, அரசியல் கட்சிகள் சமூக ஊடக இணையதளங்கள் உட்பட இணையம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களுக்காகச் செய்யப்பட்ட செலவின அறிக்கையை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்த 75 நாட்களுக்குள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தகைய செலவினங்களில் மற்றவற்றுடன், விளம்பரங்களை வெளியிடுவதற்காக இணைய நிறுவனங்கள் மற்றும் இணையதளங்களுக்கு வழங்கப்பட்ட கட்டணங்கள், விளம்பர உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான செலவுகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைப் பராமரிப்பதற்கான செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவையும் அடங்கும்.

இது தொடர்பாக, மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தலின் போது புகாரளிக்கப்படும் தவறான தகவல்கள், பொய்யான பிரச்சாரங்கள் மற்றும் போலிச் செய்திகளுக்கு எதிராகச் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும், தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாநிலக் காவல் நோடல் அதிகாரிகள், மாநிலத் தகவல் தொழில்நுட்ப நோடல் அதிகாரிகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களின் (SMPs) பிரதிநிதிகளுடன் 2026 மார்ச் 19 அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது.” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/eci-guidelines-political-ads-mcmc-certification-social-media-rules-2026-11248370

தமிழகத்தில் 1– 9-ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு; அட்டவணை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை

 

தமிழகத்தில் 1– 9-ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு; அட்டவணை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை

School exam

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 ஆம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருப்பதால் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான் தேர்வுகள் முன்கூட்டியே நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. 

அதன்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன. அதேபோல், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன. 

ஏப்ரல் 16 ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைந்து 17 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். அதன்பிறகு 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-school-exam-department-release-annual-exam-schedule-11248768

துருக்கி, ஓமன் மீதான தாக்குதல்களை ஈரான் நடத்தவில்லை - கமெனி

 

துருக்கி, ஓமன் மீதான தாக்குதல்களை ஈரான் நடத்தவில்லை - கமெனி

19 3 2026

iran

US - Israel - Iran War Today News Updates: அமெரிக்கா – இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனிடையே நேற்று, (மார்ச் 19) பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) ஈரான் போரை "முடிக்கப் போவதாக" உறுதி அளித்தார். கடந்த வாரம் ஈராக்கில் உயிரிழந்த ஆறு அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் தான் பேசியதாகவும், "வேலை முடியும் வரை நிறுத்த வேண்டாம்" என்று அவர்கள் தன்னிடமும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடமும் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். 

ஈரான் எச்சரிக்கை

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகள் முழுமையாக அழிக்கப்படும் என்று என்று நேற்று (மார்ச் 19) ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரித்தது. "இது மீண்டும் தொடர்ந்தால், உங்கள் மற்றும் உங்கள் கூட்டாளிகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், அவை முழுமையாக அழியும் வரை நிற்காது," என்று தெரிவித்துள்ளது.

தற்போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக முனையங்கள் மற்றும் கத்தாரின் எஞ்சியுள்ள இயற்கை எரிவாயு (LNG) அலகுகள் என வளைகுடா நாடுகளின் அனைத்து எரிசக்தி சொத்துகளும் ஈரானின் இலக்கு பட்டியலில் உள்ளன.

ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

இஸ்ரேல் நடத்திய 'சவுத் பார்ஸ்' (South Pars) தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்குத் தெரியாது என்று கூறிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , இதற்குப் பழிவாங்க ஈரான் கத்தாரைத் தாக்கியது நியாயமற்றது. கத்தார் மீண்டும் தாக்கப்பட்டால், இஸ்ரேலின் உதவியுடனோ அல்லது இல்லாமலோ, அமெரிக்கா "சவுத் பார்ஸ் முழுவதையும் பாரிய அளவில் வெடித்துச் சிதறடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 'சவுத் பார்ஸ்' என்பது உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பு மற்றும் ஈரானின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.


source https://tamil.indianexpress.com/india/us-israel-iran-war-news-live-updates-missiles-drones-attack-larijani-killing-11226386

வேட்புமனுவில் 'சோஷியல் மீடியா' விவரம் கட்டாயம்; டிஜிட்டல் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

வேட்புமனுவில் 'சோஷியல் மீடியா' விவரம் கட்டாயம்; டிஜிட்டல் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ECI

Election Commission of India | Candidates Social Media Account Details

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) போலிச் செய்திகளைத் தடுக்கவும், வெளிப்படையான தேர்தல் முறையை உறுதி செய்யவும் அதிரடியான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/assembly-elections-2026-schedule-election-commission-of-india-candidates-social-media-account-details-11247913

வெள்ளி, 20 மார்ச், 2026

குண்டு மழை பொழியும் இஸ்ரேல் - ஈரான் புரட்சிப் படை செய்தித் தொடர்பாளர் மரணம்

 

குண்டு மழை பொழியும் இஸ்ரேல் - ஈரான் புரட்சிப் படை செய்தித் தொடர்பாளர் மரணம்19 3 2026

iran

US - Israel - Iran War Today News Live Updates: அமெரிக்கா – இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனிடையே நேற்று, (மார்ச் 19) பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) ஈரான் போரை "முடிக்கப் போவதாக" உறுதி அளித்தார். கடந்த வாரம் ஈராக்கில் உயிரிழந்த ஆறு அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் தான் பேசியதாகவும், "வேலை முடியும் வரை நிறுத்த வேண்டாம்" என்று அவர்கள் தன்னிடமும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடமும் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். 

ஈரான் எச்சரிக்கை

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகள் முழுமையாக அழிக்கப்படும் என்று என்று நேற்று (மார்ச் 19) ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரித்தது. "இது மீண்டும் தொடர்ந்தால், உங்கள் மற்றும் உங்கள் கூட்டாளிகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், அவை முழுமையாக அழியும் வரை நிற்காது," என்று தெரிவித்துள்ளது.

தற்போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக முனையங்கள் மற்றும் கத்தாரின் எஞ்சியுள்ள இயற்கை எரிவாயு (LNG) அலகுகள் என வளைகுடா நாடுகளின் அனைத்து எரிசக்தி சொத்துகளும் ஈரானின் இலக்கு பட்டியலில் உள்ளன.

ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

இஸ்ரேல் நடத்திய 'சவுத் பார்ஸ்' (South Pars) தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்குத் தெரியாது என்று கூறிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , இதற்குப் பழிவாங்க ஈரான் கத்தாரைத் தாக்கியது நியாயமற்றது. கத்தார் மீண்டும் தாக்கப்பட்டால், இஸ்ரேலின் உதவியுடனோ அல்லது இல்லாமலோ, அமெரிக்கா "சவுத் பார்ஸ் முழுவதையும் பாரிய அளவில் வெடித்துச் சிதறடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 'சவுத் பார்ஸ்' என்பது உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பு மற்றும் ஈரானின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.


source https://tamil.indianexpress.com/india/us-israel-iran-war-news-live-updates-missiles-drones-attack-larijani-killing-11226386

வியாழன், 19 மார்ச், 2026

நபிகள் நாயகம் (ஸல்) சிறு வயது பெண்ணை திருமணம் செய்தது சரியா?

நபிகள் நாயகம் (ஸல்) சிறு வயது பெண்ணை திருமணம் செய்தது சரியா? N.அல் அமீன் (மாநிலச் செயலாளர்,TNTJ) ஐயமும் தெளிவும் ரமலான் தொடர் - 26 - 2026

ரமலான் மாதத்தில் நோன்பின் முக்கியத்துவம் என்ன?

ரமலான் மாதத்தில் நோன்பின் முக்கியத்துவம் என்ன? எஸ். முஹம்மது யாசிர் (மாநிலச் செயலாளர், TNTJ) சந்தேகமும் தெளிவும் ரமலான் தொடர் - 25 - 2026

உலகப் பற்றை உடைத்தெறிவோம்...!

உலகப் பற்றை உடைத்தெறிவோம்...! சுயபரிசோதனை எம்.ஏ அப்துர் ரஹ்மான் MISc பேச்சாளர் TNTJ தொடர் 6

திருச்சி: 38,733 பேருக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதி - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

 

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களுக்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு வசதிகளைச் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்த மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

யாரெல்லாம் தபால் வாக்கு செலுத்தலாம்?

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.சரவணன் வெளியிட்டுள்ள தகவலின்படி:

85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்.

40 சதவீதத்திற்கும் மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 16,327 மூத்த குடிமக்கள் மற்றும் 22,406 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 38,733 பேர் இந்தப் பட்டியலின் கீழ் வருகின்றனர்.

வீடு தேடி வரும் படிவம் 12B

தபால் வாக்கு செலுத்த விருப்பமுள்ள வாக்காளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கே நேரில் சென்று படிவம் 12B (Form 12B) வழங்கும் பணி கடந்த மார்ச் 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இந்தப் படிவங்களை வழங்கி வருகின்றனர்.

வாக்காளர்கள் இந்தப் படிவத்தைப் பெற்ற 5 நாட்களுக்குள் தங்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்து மீண்டும் அதே அலுவலரிடம் வழங்க வேண்டும்.

கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள்

தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்கள், பின்னர் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மீண்டும் வாக்களிக்க முடியாது.

மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கிற்கு விண்ணப்பிக்கும்போது, தகுதியான மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றினை இணைப்பது கட்டாயமாகும்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் முதல்முறை செல்லும்போது வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் ஒருமுறை செல்வார். இருமுறையும் வாக்காளர் வீட்டில் இல்லையென்றால், அவர் தபால் வாக்கு செலுத்த விரும்பவில்லை எனக் கருதப்படுவார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முன்னெடுப்பு, ஜனநாயகக் கடமையாற்ற வயது மற்றும் உடல்நிலை தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விருப்ப மனு அளித்துள்ள அனைவருக்கும் எவ்வித சிரமமும் இன்றி தபால் வாக்கு செலுத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-district-postal-ballot-2026-tamil-nadu-assembly-election-2026-trichy-voting-for-senior-citizens-trichy-11228128

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் செல்ல கட்டணம் - ஈரான் பரிசீலனை

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் செல்ல கட்டணம் - ஈரான் பரிசீலனை

US-Israel-Iran War Live News Updates: அமெரிக்கா – இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாளன் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகக் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் கப்பல் ஒன்று தீப்பிடித்ததாக பிரிட்டன் கடல்வழி வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்

நேற்று (மார்ச் 18) இஸ்ரேல்-ஈரான் போர் ஒரு இக்கட்டான புதிய கட்டத்தை எட்டியது. கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் தனது இலக்காக மூன்றாவது முக்கிய ஈரானிய அதிகாரியான உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை (Esmail Khatib) அழித்தது. இதற்குப் பதிலடியாக ஈரான், டெல் அவிவ் மீது கோர்ரம்ஷாஹர்-4 (Khorramshahr-4) வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசியதில் இருவர் கொல்லப்பட்டனர். மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் நிலத்தடி ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா 5,000 பவுண்ட் எடையுள்ள பதுங்கு குழி அழிக்கும் (Bunker-busting) குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

முக்கிய உயிரிழப்புகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்

நேற்று முன்தினம் (மார்ச் 17) கொல்லப்பட்ட அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் தளபதி கோலம்ரெசா சோலைமானி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது காதிப் கொல்லப்பட்டுள்ளார். இதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. டெல் அவிவ் நகரின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறித் தாக்கக்கூடிய கோர்ரம்ஷாஹர்-4 மற்றும் கத்ர் (Qadr) ஏவுகணைகளை ஈரான் ஏவியது. லாரிஜானியின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இப்போரில் முதல்முறையாக கிளஸ்டர் வெடிகுண்டுகளை (Cluster munitions) பயன்படுத்தியதாகவும் ஈரான் தெரிவித்தது.

ஈரானின் எச்சரிக்கை

ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஜெனரல் அலி அப்துல்லாஹி, டிரம்ப்பிற்கு விடுத்த எச்சரிக்கையில் "எங்கள் ஆச்சரியமான பதிலடிகளுக்காகக் காத்திருங்கள்" என்று கூறினார். மேலும், லாரிஜானியின் மரணத்திற்கு "நிச்சயமாக பழிவாங்கப்படும்" என ராணுவத் தளபதி ஹதாமி உறுதியாக தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/us-israel-iran-war-news-live-updates-missiles-drones-attack-larijani-killing-11226386

புதன், 18 மார்ச், 2026

லாபியின் அழுத்தத்தால்தான் இரான் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது.

 "இஸ்ரேல், அமெரிக்க லாபியின் அழுத்தத்தால்தான் இரான் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது." – ஜோசப் கென்ட்



இரான் போரில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறி அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் ஜோசப் கென்ட்.


source dw

உயிர்மண்டலக் காப்பகம் பாதிக்கப்படும் அபாயம்

 தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை முதல் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் எடமன் வரையில் 4 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தால் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற அகத்தியமலை உயிர்மண்டலக் காப்பகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.


இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தின் புளியரையில் தொடங்கி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து இரு வழிகளிலும் 11மீ உயரம் கொண்ட சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காகத் தமிழ்நாட்டு எல்லைக்குள் தேவைப்படும் 3.60 எக்டர் காப்புக்காட்டிற்கான அனுமதிகோரி தமிழ் நாடு வனத்துறையிடம் விண்ணப்பித்துள்ளது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.

source / முழு விவரம்:
https://poovulagu.org/statements/tunnel-road-shengottai-gap-threatens-western-ghat/
(Website link in bio)

நேரம் குறிப்பிடாமல் பொதுவாக நபிகளார் செய்த பிரார்த்தனைகள்..

நேரம் குறிப்பிடாமல் பொதுவாக நபிகளார் செய்த பிரார்த்தனைகள்.. தினம் ஒரு துஆ S.ஹஃபீஸ் M.I.Sc ரமலான் 2026 - தொடர் - 28

83:18 -21 வசனத்தின் விளக்கம் அல்குர்ஆனின் அழகிய விளக்கம்..

83:18 -21 வசனத்தின் விளக்கம் அல்குர்ஆனின் அழகிய விளக்கம்.. S.ஹஃபீஸ் M.I.Sc பேச்சளர்,TNTJ ரமலான் 2026 - தொடர் - 27

கண்ணீரின் வழியே கண்ணியம் பெறுவோம்...!

கண்ணீரின் வழியே கண்ணியம் பெறுவோம்...! சுய ஆய்வு M.A. அப்துர் ரஹ்மான் MISc பேச்சாளர், TNTJ தொடர் 5

சீனா சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் யூ-டர்ன்

 Screenshot 2026-03-18 155550

புது தில்லி மாஸ்கோவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ள நிலையில், உலக எரிசக்தி வர்த்தகத்தில் புதிய மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, முதலில் சீனாவை நோக்கிச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் தங்களின் பயண திசையை மாற்றி இந்தியாவை நோக்கி திருப்பிக் கொண்டிருக்கின்றன.

கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, “அக்வா டைட்டன்” எனப்படும் அஃப்ராமாக்ஸ் வகை கப்பல், கடந்த ஜனவரி மாத இறுதியில் பால்டிக் கடல் துறைமுகத்திலிருந்து யூரல்ஸ் கச்சா எண்ணெயை ஏற்றி புறப்பட்டு, மார்ச் 21ஆம் தேதி புது மங்களூரை வந்தடைய உள்ளது. ஆரம்பத்தில் சீனாவின் ரிஷாவ் துறைமுகமே அதன் இலக்காக இருந்த போதிலும், மார்ச் மாத நடுப்பகுதியில் தென்கிழக்கு ஆசியக் கடற்பரப்பில் பயண திசையை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றத்திற்குப் பின்னணி காரணமாக, அமெரிக்கா இந்தியாவுக்கு தற்காலிகமாக ரஷ்ய எண்ணெய் கொள்முதலை அதிகரிக்க அனுமதி வழங்கியிருப்பது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரான் போரால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட விநியோக தடையை சமாளிக்க இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் சுமார் 3 கோடி பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை சலுகை விலையில் வாங்கியுள்ளன. இதன் விளைவாக, கடந்த சில மாதங்களாக ரஷ்யாவின் முக்கிய இறக்குமதி நாடாக இருந்த சீனாவிலிருந்து, சரக்கு இந்தியாவுக்கு திருப்பி விடப்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், வோர்டெக்ஸா லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குறைந்தது ஏழு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் தங்களின் பயணத்தின் பாதியிலேயே சீனாவிலிருந்து இந்தியாவை நோக்கி திசை மாற்றியுள்ளன. இந்தியாவின் முக்கிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் தற்போது ரஷ்ய எண்ணெய் வாங்கும் சந்தையில் செயல்படுகின்றன. இதனுடன், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளும் மீண்டும் ரஷ்ய எண்ணெய் சந்தையில் நுழையத் தொடங்கியுள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், “ஸோஸோ என்” எனப்படும் சூயஸ்மாக்ஸ் கப்பல், கஜகஸ்தானின் CPC பிளெண்ட் கச்சா எண்ணெயை ஏற்றி ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, முதலில் சீன கடற்பகுதிக்குச் சென்ற பின்னர், மார்ச் தொடக்கத்தில் இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. இந்த கப்பல் மார்ச் 25ஆம் தேதி சிக்கா துறைமுகத்தை வந்தடையும் என கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வுகள் அனைத்தும், உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன. அதேசமயம், அரசியல் மற்றும் பொருளாதார காரணிகள் எவ்வாறு கடல்சார் வர்த்தகப் போக்குகளை உடனடியாக மாற்றுகின்றன என்பதற்கும் இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/india/india-doubles-russian-oil-imports-as-tankers-divert-from-china-amid-global-supply-shifts-11224558

60% இருக்கைகள் இனி இலவசம்; குடும்பத்தினர் ஒன்றாக அமர புதிய வசதி

Air travel 60 percent free seats families to sit together

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை அசுர வளர்ச்சி கண்டு வரும் நிலையில், பயணிகளின் நலனை முன்னிறுத்தி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டிஜிசிஏ (DGCA) இணைந்து மிக முக்கியமான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. சமீபகாலமாக சர்வதேச பதற்றங்களால் விமானக் கட்டணங்கள் உயர்ந்து வரும் சூழலில், சாமானிய மக்களின் பயணத்தைச் சுமையற்றதாக மாற்ற இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிகள் பயணிகளுக்கு என்னென்ன சலுகைகளை வழங்குகின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்:

1. 60% இருக்கைகள் இனி இலவசம்

விமான நிறுவனங்கள் கூடுதல் லாபம் ஈட்டுவதற்காக, ஜன்னல் ஓரம் அல்லது முன்பக்க இருக்கைகளைத் தேர்வு செய்ய (Seat Selection) அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60 சதவீத இருக்கைகளை எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி பயணிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களுக்கு விருப்பமான இடங்களை கூடுதல் செலவின்றி தேர்வு செய்யும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 2. குடும்பத்தினர் ஒன்றாக அமர புதிய வசதி

விமானப் பயணத்தின் போது ஒரே பிஎன்ஆர் (PNR) எண்ணில் டிக்கெட் முன்பதிவு செய்த குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் வெவ்வேறு இடங்களில் அமர வைக்கப்படும் நிலை இனி இருக்காது. ஒரே குழுவாகப் பயணம் செய்பவர்களை அருகருகே உள்ள இருக்கைகளில் அமர வைப்பதை விமான நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும். இது குறிப்பாகக் குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

3. செல்லப்பிராணிகள், உபகரணங்களுக்கான வெளிப்படைத்தன்மை

விமானத்தில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வது, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வது ஆகியவற்றில் நிலவும் குழப்பங்களைத் தவிர்க்க தெளிவான மற்றும் வெளிப்படையான கொள்கைகளை விமான நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

பேக்கேஜ் தொடர்பான கொள்கைகளும் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

4. பயணிகளின் உரிமைகள் இனி உங்கள் மொழியில்

விமானத் தாமதம், பயணம் ரத்து செய்யப்படுதல் அல்லது போர்டிங் மறுக்கப்படுதல் போன்ற நேரங்களில் பயணிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இழப்பீடுகளை விமான நிறுவனங்கள் கட்டாயம் அறிவிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் விமான நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் செயலிகள் மற்றும் விமான நிலைய கவுண்டர்களில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

முக்கியமாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் இந்த விபரங்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5. விமான நிலையங்களில் நவீன வசதிகள்

விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக 'உடான் யாத்ரி கஃபே' (UDAN Yatri Cafes) மூலம் மலிவு விலையில் உணவு, 'பிளைப்ரரி' (Flybrary) மூலம் புத்தகங்கள் வாசிக்கும் வசதி மற்றும் இலவச வைஃபை போன்ற நவீன வசதிகளை அமைச்சகம் முன்னெடுத்து வருகிறது.

நாட்டின் விமான நிலையங்கள் இப்போது ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பயணிகளைக் கையாள்கின்றன. இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தை உலகளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள சூழலில், இந்த புதிய விதிகள் பயணிகளின் பயணத்தை மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 3 2026 

source https://tamil.indianexpress.com/business/air-travel-60-percent-free-seats-families-to-sit-together-11223374

செவ்வாய், 17 மார்ச், 2026

திருக்குர்ஆன் இறுதி வேதம் என எப்படி நம்புவது?

திருக்குர்ஆன் இறுதி வேதம் என எப்படி நம்புவது? A.முஜிபுர் ரஹ்மான் (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ) ஐயமும் தெளிவும் ரமலான் தொடர் - 24 - 2026

தொழுகையில் இறுதி இருப்பில் ஓதும் துஆ

தொழுகையில் இறுதி இருப்பில் ஓதும் துஆ தினம் ஒரு துஆ S.ஹஃபீஸ் M.I.Sc ரமலான் 2026 - தொடர் - 27

மலிவாக்கப்படும் ஆபத்தான பாவங்கள்..!

மலிவாக்கப்படும் ஆபத்தான பாவங்கள்..! சுயபரிசோதனை எம்.ஏ அப்துர் ரஹ்மான் MISc பேச்சாளர் TNTJ தொடர் 4

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது ஏன்?

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது ஏன்? M.அப்துல் சமத் மாநிலச் செயலாளர்,TNTJ ஐயமும் தெளிவும் ரமலான் தொடர் - 23 - 2026

8 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: நாடாளுமன்றத்தில் 'லட்சுமண ரேகை' உடன்பாடு - எதனால் இந்த மோதல்?

 

8 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: நாடாளுமன்றத்தில் 'லட்சுமண ரேகை' உடன்பாடு - எதனால் இந்த மோதல்? 17 3 2026


Congress Protest 2

நாடெங்கும் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எம்.பி.க்கள் ஹிபி ஈடன், பிரசாந்த் படோலே, சாமலா கிரண் குமார் ரெட்டி, அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர் மற்றும் பிறர். Photograph: (ANI Photo)

மக்களவையின் கண்ணியத்தைப் பேணுவதென சபை தீர்மானித்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 3-ம் தேதி "கட்டுப்பாடற்ற நடத்தைக்காக" இடைநீக்கம் செய்யப்பட்ட 8 உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய செவ்வாய்க்கிழமை சபை ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வரிசைகளுக்கு இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

சபை நடவடிக்கைகளின் போது "லட்சுமண ரேகையை" தாண்ட மாட்டோம் என்றும், சபையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். குரல் வாக்கெடுப்புக்குப் பிறகு இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், குர்ஜித் சிங் ஆஜ்லா, ஹிபி ஈடன், சி. கிரண் குமார் ரெட்டி, டீன் குரியகோஸ், அமரீந்தர் சிங் ராஜா வாரிங், பிரசாந்த் படோலே மற்றும் சி.பி.ஐ(எம்) கட்சியைச் சேர்ந்த எஸ். வெங்கடேசன் ஆகிய 8 பேரும் பிப்ரவரி 3 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

மக்களவை காங்கிரஸ் தலைமைச் கொறடா கே. சுரேஷ், இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கான தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்தார். "அவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன்... நேற்று நீங்கள் ஒரு கூட்டத்தை நடத்தினீர்கள். அதில் நாங்கள் விரிவாக விவாதித்தோம்... அதன்படியே முடிவு எடுக்கப்பட்டது," என்று சுரேஷ் கூறினார்.

சமாஜ்வாடி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ் பேசுகையில், ஆளுங்கட்சியும் சபையின் கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் பேண வேண்டும் என்றார். "8 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன்... ஆளுங்கட்சியினர் இங்கே நிபந்தனைகளை விதிக்கிறார்கள். சபையின் கண்ணியத்தைப் பேணுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பு. எனது கட்சி மற்றும் எனது தலைவர் அகிலேஷ் யாதவ் சார்பில், நாங்கள் ஒருபோதும் சபையின் கண்ணியத்தைத் தாண்ட மாட்டோம் என்று உறுதி கூறுகிறேன். ஆனால், ஆளுங்கட்சியினரும் இதைச் செய்யத் தீர்மானிக்க வேண்டும். அது இல்லாமல் சபை நடக்காது. நிஷிகாந்த் துபே தனது நடத்தையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று யாதவ் கூறியது சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டாம் என்று உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த துபே, "நான் 17 ஆண்டுகளாக இந்தச் சபையில் உறுப்பினராக இருக்கிறேன். நான் ஒருபோதும் எல்லையைத் தாண்டியதில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் இந்தச் சபை நடக்காது," என்றார்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) உறுப்பினர் சுப்ரியா சுலே, இரு தரப்பு உறுப்பினர்களும் தனிப்பட்ட விமர்சனங்களைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். "நேற்றைய முடிவின்படி 'லட்சுமண ரேகை' தாண்டப்படக்கூடாது. நாங்கள் முயற்சிப்போம். ஆனால் ஆளுங்கட்சி வரிசை தயாராக இல்லை. நான்கு அமைச்சர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்," என்று சுலே கூறினார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், சுலேவின் கருத்தை ஏற்றுக்கொண்டு 'லட்சுமண ரேகை' தாண்டப்படக்கூடாது என்றார். "ஒரு கையால் தட்ட முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், விவாதங்களுக்கு ஆளுங்கட்சி எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். "நேற்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். இன்று சபையில் பேசியபோது, சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் அவர்கள் தயக்கம் காட்டினர். நான் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன், சபையின் கருத்து குறித்துத் தெளிவு இருந்தால், நான் தீர்மானத்தைக் கொண்டு வரத் தயார்," என்று கூறினார்.

"நாங்கள் கடந்த காலத்திலும் விதிகளையே பின்பற்றினோம், எதிர்காலத்திலும் அதையே செய்வோம்," என்றும் ரிஜிஜு கூறினார்.

பின்னர் காங்கிரஸின் கே. சுரேஷ் கூறுகையில், "நேற்று முதல் பதாகைகள் ஏந்தப்படவில்லை. மகர் துவாரில் போராட்டமும் இல்லை. நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், ஆளுங்கட்சிக்கு வழங்கப்படுவது போலவே எதிர்க்கட்சி வரிசைக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது எல்லாம் சரியாகிவிடும்," என்றார்.

சபாநாயகர் பிர்லா பேசுகையில், "சபையின் கண்ணியம் மற்றும் பாரம்பரியத்தைப் பேணுவதற்குப் பங்களிப்பதாக அனைத்துக் கட்சிகளும் உறுதியளித்துள்ளன. உறுப்பினர்கள் யாரும் போலியான, ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதை நான் புல்லட்டினிலும்  கோரியுள்ளேன்," என்றார்.


source https://tamil.indianexpress.com/india/suspension-of-8-lok-sabha-mps-revoked-parliament-decorum-debate-11220674

12-ஆம் வகுப்பு கணிதம்: ட்விஸ்ட் வைத்த வினாக்கள் - சென்டம் எடுக்க வைக்குமா?

 

New Project (10)

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற கணிதப் பாடத்தேர்வு, இதற்கு முன் நடைபெற்ற இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுகளை விட எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஒரு சில வினாக்கள் சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக மாணவர்கள் 90-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை எளிதாகப் பெற முடியும் என்றும், சென்டம் (100/100) எடுப்பதற்கு இந்த வினாத்தாள் தடையாக இருக்காது என்றும் விவேக் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் ஒரு மதிப்பெண் வினாக்கள்

கணித வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியைப் பொறுத்தவரை, சுமார் 4 வினாக்கள் மட்டுமே புத்தகத்தின் உட்பகுதியிலிருந்து (Internal/Creative) கேட்கப்பட்டிருந்தன. மற்றவை அனைத்தும் புத்தகப் பயிற்சிகளிலிருந்தே (Book back) கேட்கப்பட்டதால் மாணவர்கள் எளிதாக விடையளித்தனர்.

குறிப்பாக, டிஃபெரன்ஷியல் ஈக்குவேஷன்ஸ் (Differential Equations), பாரபோலா (Parabola), மற்றும் அணிகள் (Matrices) தொடர்பான ஒரு மதிப்பெண் வினாக்கள் மிக எளிதாக இருந்தன. ஆல்பா, பீட்டா, காமா தொடர்பான வினாக்கள் மற்றும் 3x3 நான்-சிங்குலர் மேட்ரிக்ஸ் (Non-singular matrix) தொடர்பான கேள்விகளுக்கு மாணவர்கள் விரைவாக விடையளித்தனர். ரோல்ஸ் தேற்றம் (Rolle's Theorem), சர்க்கிள் (Circle) தொடர்பான வினாக்கள் மற்றும் வெக்டர் அல்ஜீப்ரா பகுதிகளும் மாணவர்களுக்குச் சாதகமாகவே அமைந்தன.

இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்களின் நிலை

இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்களில் சில இடங்களில் சிறிய ட்விஸ்ட்கள் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், நன்கு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அவை கடினமாகத் தெரியவில்லை. அணிகள் பகுதியில் 'ஏ' ஒரு நான்-சிங்குலர் மேட்ரிக்ஸ் ஆக இருக்கும்போது அதன் பண்புகளைப் பயன்படுத்தி நிரூபிக்கும் கணக்குகள் இடம்பெற்றிருந்தன.

5 செ.மீ ஆரம் கொண்ட வட்டம் X-அச்சைத் தொட்டுச் செல்லும் சமன்பாடு காணும் கணக்கு மாணவர்களால் எளிதாகப் போடக்கூடிய ஒன்றாக அமைந்தது.

டிஃபெரன்ஷியல் கால்குலஸ் பகுதியில் 'Strictly Increasing' மற்றும் 'Strictly Decreasing' இடைவெளிகளைக் காணும் கணக்குகளும், சைன் ரிடக்ஷன் சூத்திரத்தைப் பயன்படுத்தும் கணக்குகளும் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட வினாக்களாகவே அமைந்தன.

ஐந்து மதிப்பெண் வினாக்கள்: மதிப்பெண்களை வாரி வழங்கிய பகுதி

ஐந்து மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை எந்தவிதமான பெரிய மாற்றங்களும் அல்லது கடினமான வினாக்களும் இடம் பெறவில்லை.

எதிர்பார்க்கப்பட்ட 'Cos(A+B)' வெக்டர் முறை கணக்கு மற்றும் 10.8 பயிற்சியில் உள்ள கதிரியக்கச் சிதைவு (Radioactive decay) தொடர்பான கணக்குகள் கேட்கப்பட்டிருந்தன.

நிகழ்தகவு பகுதியில் 'கே' மதிப்பைத் தேடும் கணக்கு மற்றும் அதன் நான்கு உட்பிரிவுகளும் மாணவர்களுக்கு முழு மதிப்பெண்களைப் பெற்றுத் தரும் வகையில் அமைந்தன.

மேட்ரிக்ஸ் இன்வெர்ஷன் மெத்தட் மற்றும் ட்ரூத் டேபிள் போன்ற எளிமையான பகுதிகளும் ஐந்து மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்தன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த ஆண்டு கணிதத் தேர்வு மாணவர்களுக்குப் பெரும் சுமையாக அமையவில்லை. சில வினாக்கள் கிரியேட்டிவ் முறையில் கேட்கப்பட்டாலும், அவை மாணவர்களின் சிந்திக்கும் திறனைச் சோதிக்கும் வகையில் மட்டுமே இருந்தன. இதனால் இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் வரும் நாட்களில் தெரியவரும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/tn-12th-maths-public-exam-2026-question-paper-analysis-and-answer-key-review-11220830

ஈரான் போர் பதற்றம்: எகிற வேண்டிய தங்கம் விலை சரிவது ஏன்?

 

ஈரான் போர் பதற்றம்: எகிற வேண்டிய தங்கம் விலை சரிவது ஏன்?

17 3 2026

Iran Israel war impact on gold US dollar vs gold price Gold investment tips 2026

Iran - Israel war impact on gold

சாதாரணமான காலங்களில் போர் அல்லது உலகளாவிய பதற்றங்கள் ஏற்பட்டால், முதலீட்டாளர்கள் அனைவரும் பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கத்தை நோக்கித்தான் ஓடுவார்கள். இதனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வது வழக்கம். ஆனால், தற்போது மேற்கு ஆசியாவில் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோதிலும், தங்கத்தின் விலை உயரவில்லை என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மார்ச் 17, 2026 நிலவரப்படி, 10 கிராம் தங்கம் ₹1.6 லட்சம் முதல் ₹1.62 லட்சம் என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. சமீபத்திய உச்சத்தில் இருந்து இது சரிவைச் சந்தித்துள்ளது. இந்த விசித்திரமான சூழலுக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணங்களை ஒரு கதையோட்டமாக இங்கே பார்க்கலாம்.

பணவீக்கமும் வட்டி விகிதமும்: ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்

மேற்கு ஆசியப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு, அதன் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் விலை உயர்ந்தால் அது நேரடியாக பணவீக்கத்தை (விலைவாசி உயர்வு) அதிகரிக்கும். வழக்கமாக பணவீக்கம் அதிகரித்தால் மக்கள் தங்கத்தை வாங்குவார்கள். ஆனால், இங்கேதான் ஒரு முக்கிய திருப்பம் உள்ளது.

பணவீக்கம் அதிகமாக இருந்தால், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் உள்ளிட்ட உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்க முன்வராது. மாறாக, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்வாகவே வைத்திருக்கும். தங்கம் என்பது வட்டி வருமானம் தராத ஒரு முதலீடு. வங்கிகளில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை விட நிலையான வருமானம் தரும் பாண்டுகள் மற்றும் டெபாசிட்டுகளையே விரும்புவார்கள். இது தங்கத்திற்கான தேவையை குறைத்து, விலையை சரிவடையச் செய்கிறது.

iraq-iran-us

அமெரிக்க டாலரின் ஆதிக்கம்

உலக சந்தையில் தங்கம் மற்றும் அமெரிக்க டாலர் ஆகிய இரண்டுமே பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழலில், முதலீட்டாளர்கள் தங்கத்தை விட டாலர் மீதே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். டாலர் வலுவடைவதால், மற்ற நாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு தங்கம் வாங்குவது செலவு மிகுந்ததாக மாறுகிறது. இது சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையை முடக்கி, விலையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மற்றொரு முக்கியமான தொழில்நுட்பக் காரணம், கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம் $5,300 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டிருந்தது. இவ்வளவு பெரிய உயர்வுக்குப் பிறகு, பெரிய முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை உறுதி செய்வதற்காக (Profit booking) தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர். இந்த விற்பனை அழுத்தம் விலையை மேலும் கீழிறக்கியுள்ளது.

தங்கம் இப்போதும் பாதுகாப்பானதா?

நிச்சயமாக, தங்கம் தனது மதிப்பை இழந்துவிடவில்லை. ஆனால், தற்போதைய சந்தை, போர்ச் செய்திகளை விட மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. உலக நாடுகள் வட்டி விகிதம் குறித்து தெளிவான முடிவை அறிவிக்கும் வரை, தங்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், சந்தை போரை விட பொருளாதாரக் கொள்கைகளுக்கே அதிக முன்னுரிமை அளிக்கிறது.


source https://tamil.indianexpress.com/business/iran-israel-war-impact-on-gold-us-dollar-vs-gold-price-gold-investment-tips-2026-11220783