வெள்ளி, 10 ஏப்ரல், 2026

ஏப்ரல் 17 முதல் 45 நாட்கள் கோடை விடுமுறை; மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

 half yearly holidays Tamil Nadu TN school holidays special classes ban,School Education Department TN

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் வரும் ஏப்ரல் 17-ந் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்ப்பட்டுள்ளது. மேலும் ஜூன்1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த கல்வி நிறுவனங்களில்  லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், மார்ச் 26-ந் தேதி இந்த தேர்வு நிறைவடைந்தது. அதேபோல் மார்ச் 11-ந் தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி நிறைவடைந்த நிலையில், தற்போது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதேபோல், 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 16-ந் தேதியுடன் தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 17-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு கோடை விடுமுறை தினம் 45 நாட்கள் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 17-ந் தேதி தொடங்கும் கோடை விடுமுறை மே 31-ந் தேதியுடன் நிறைவடைந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் காலத்தில் பல பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பள்ளி வளாகங்கள் தேவையாக இருப்பதால், தேர்வுகளை விரைவாக முடித்து விடுமுறை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-announced-summer-holyday-for-school-students-update-in-tamil-11709580

லெபனான் மீது மீண்டும் குண்டு மழை: தாக்குதலை நிறுத்தச் சொல்லி பாகிஸ்தான் பிரதமருக்கு கோரிக்கை

 

லெபனான் மீது மீண்டும் குண்டு மழை: தாக்குதலை நிறுத்தச் சொல்லி பாகிஸ்தான் பிரதமருக்கு கோரிக்கை

Nawaf-Salam-Shehbaz-Sharif-express-photo

அமெரிக்கா ஈரான் இடையேயான போர் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளதால், போர் நிறுத்த உதவி கோரி லெபனான் பாகிஸ்தான் பிரதமரிடம் உதவி கேட்டுள்ளதாக அந்நாட்டு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கிய இந்த போர் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கச்சா எண்ணெய், எல்.பி.ஜி சிலிண்டர் விலை ஏற்றம் கண்டது. மேலும் உலகளவில் வர்த்தகம் ஆகும் கச்சா எண்ணெயின் 5 சதவீதம் செல்லும் போக்குவரத்தாக இருக்த ஹர்முஸ் ஜலசந்திரய ஈரான் அரசு மூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஈரான் மூடிய ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்த அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப், ஹர்முஸ் ஜலசந்தியை திறக்க கோரி ஈரானுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தார். அதே சமயம் ஈரான் மீதான தாக்குதல் தொடர்வதும், இதற்கு ஈரான் பதிலடி கொடுக்கப்பது வழக்கமாக நடந்து வந்தது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. சமீபத்தில் பாகிஸ்தான் அரசு இந்த விவகாரத்தில் தலையிட், 2 வாரங்களுக்கு போரை நிறுத்தி வைத்துள்ளது. 

இதனிடையே, ஈரான் மீது தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தியது. தற்போது ஈரான் மீதான தாக்குதல் நின்றுவிட்டாலும், லெபனான் மற்றும் அதன் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த தாக்குதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இஸ்லாமாபாத்தின் ஆதரவை லெபனான் பிரதமர் நவாப் சலாம் கோரியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஷெரீப் சலாமிடம் கூறுகையில், "பிராந்திய அமைதிக்காக பாகிஸ்தான் உண்மையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது, அந்த உணர்வின் அடிப்படையில் தான் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் கூட்டப்படுகின்றன என்று தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

09 04 2026 


source https://tamil.indianexpress.com/international/lebanons-pm-seeks-support-immediate-end-attacks-from-pakistan-update-in-tamil-11709752

வியாழன், 9 ஏப்ரல், 2026

தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?

 தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?

தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
நாங்கள் கேட்பது #FairDelimitation!
#DelimitationDanger: Is India sliding into dictatorship?
Do not turn a calm South into a storm.
Hon’ble PMO India Thiru. Narendra Modi must answer these fair and pressing questions raised by the people of the South.
❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out?
❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today?
❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections?
❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide?
❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship.
❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered?
🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North.
💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may.
The South demands #FairDelimitation!



பெண்களுக்கும்! சமயக் கல்விக்கும்!

பெண்களுக்கும்! சமயக் கல்விக்கும்! எம்.எஸ்.சுலைமான் தலைவர், TNTJ பட்டமளிப்பு விழா - 30.08.2025 நெல்லிக்குப்பம் கிளை-1 கடலூர் வடக்கு மாவட்டம்

இஸ்லாம் ஒரு உன்னதமான மார்க்கம்

இஸ்லாம் ஒரு உன்னதமான மார்க்கம் ஆர். அப்துல் கரீம் மாநிலத் தலைவர், TNTJ பொதுக்கூட்டம் - 31.01.2026 கூத்தநல்லூர் திருவாரூர் வடக்கு மாவட்டம்

படைத்தவன் நேசம் பெற பாவமன்னிப்பு கேட்போம்

படைத்தவன் நேசம் பெற பாவமன்னிப்பு கேட்போம் எம்.ஆர்.ஜாவித் அஷ்ரஃப் பேச்சாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 03.04.2026

அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி

அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்துமாத செயல்திட்டம் ஏ.முஜீபுர்ரஹ்மான் மாநிலப்பொதுச்செயலாளர்,TNTJ மாநிலச் செயற் குழு - 29.03.2026 திருச்சி

அல் குர்ஆனை அணுகும் முறை

அல் குர்ஆனை அணுகும் முறை ஆர் அப்துல் கரீம் MISc (மாநிலத்தலைவர் TNTJ) திருக்குர்ஆன் விளக்கவுரை - தொடர் 1 மாநில தலைமையகம் - 02.04.2026

இறை நினைவில் நிலைத்திருப்போம்!

இறை நினைவில் நிலைத்திருப்போம்! எஸ்.ஹஃபீஸ் M.I.Sc பேச்சாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 03.04.2026

இறைநேசம் பெற என்ன வழி!

இறைநேசம் பெற என்ன வழி! J.முஹம்மது தாஹா M.I.Sc பேச்சாளர்,TNTJ பொதுக்கூட்டம் - 29.06.2025 குலசேகரன்பட்டினம் - தூத்துக்குடி மாவட்டம்

திட்டங்கள் சிறகடித்துப் பறக்கட்டும் புனித நபி அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி

திட்டங்கள் சிறகடித்துப் பறக்கட்டும் புனித நபி அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி A. சாபிர் அலி M.I.Sc மாநிலச் செயலாளர், TNTJ மாநில செயற்குழு - 29.03.2026 திருச்சி

வசனம் 83:18 -28-க்கான விளக்கம்

வசனம் 83:18 -28-க்கான விளக்கம் குர்ஆனின் அழகான விளக்கம்.. எஸ். ஹாஃபிஸ் எம்.ஐ.எஸ்சி பேச்சாளர், TNTJ ரமலான் 2026 - தொடர் - 28

சாத்தானின் குளம் தீர்ப்பு! எங்கள் பார்வை..

சாத்தானின் குளம் தீர்ப்பு! எங்கள் பார்வை.. ஏ. ஃபெரோஸ் கான் மாநிலச் செயலாளர், TNTJ செய்தியும் எண்ணங்களும் - 08.04.2026

கவனம்: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களே! கல்லூரிச் சேர்க்கைக்குப் பதினைந்து ஆவணங்கள் தேவை!

கவனம்: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களே! கல்லூரிச் சேர்க்கைக்குப் பதினைந்து ஆவணங்கள் தேவை! முஹம்மது ஆசாத் மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர், TNTJ கல்விச் சிந்தனை - 08-04-2026

மவ்லித் ஒரு பண்டிகை இல்லையா? அதற்கான காரணம் என்ன?

மவ்லித் ஒரு பண்டிகை இல்லையா? அதற்கான காரணம் என்ன? இஸ்லாம் ஒரு எளிமையான மார்க்கம் கே. சுஜா அலி எம்.ஐ.எஸ்சி பேச்சாளர், டி.என்.டி.ஜே திருத்தணி கிளை - 05.09.2025 திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

நான் ஆன்லைனில் திருமணம் செய்துகொள்ளலாமா?

நான் ஆன்லைனில் திருமணம் செய்துகொள்ளலாமா? சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ) புதுப்பேட்டை கிளை - வட சென்னை மாவட்டம் - 28.10.2023

Al யூம் எதிர்காலமும் ! (Al & Future !)

Al யூம் எதிர்காலமும் ! (Al & Future !) கல்வி கருத்தரங்கம் - 01-02-2026 Dr. நிவாஸ் ஜீவானந்தம் (Ms. M.tech, P.hd) தென் சென்னை மாவட்டம்

Right To Education (RTE) (கட்டாயக் கல்வி உரிமை )

Right To Education (RTE) (கட்டாயக் கல்வி உரிமை ) எம்.ஆர்.ஜாவித் அஷ்ரஃப் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர், TNTJ) கல்வி சிந்தனை- 06-04-2026

தேர்தல் நேரத்தில் கூடும் நாடாளுமன்றம்

தேர்தல் நேரத்தில் கூடும் நாடாளுமன்றம் வாழும் வடக்கு, தேயப்போகும் தெற்கு N.அல் அமீன் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும்! சிந்தனையும்! - 04.04.2026 Delimitation

ஒரு ஆண் குழந்தைக்காகக் கொலையா?

ஒரு ஆண் குழந்தைக்காகக் கொலையா? செய்திகளும் சிந்தனைகளும் - 06.04.2026 இ.ஜே. அப்துல் முஹ்சின் (அரச செயலாளர், TNTJ)

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மாவட்ட செயற்குழு - 05.04.2026 ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர்,TNTJ தென்காசி மாவட்டம் புளியங்குடி

செய்தியாளர் சந்திப்பு - 05.04.2026

செய்தியாளர் சந்திப்பு - 05.04.2026 என். அல் அமின் மாநிலச் செயலாளர், TNTJ செயல்திறன் மிக்க ஆட்டக்காரர்கள் மற்றும் நாயகர்களின் சந்திப்பு மயிலாடுதுறை மாவட்டம்

போலிக் கூட்டணியா?

போலிக் கூட்டணியா? செய்தியாளர் சந்திப்பு ஏ.கே. அப்துர்ரஹீம் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், TNTJ நெல்லை மாவட்டப் பொதுக் குழு - 05.06.2023

FCRA - பாஜக கிறிஸ்தவ சேவை நிறுவனங்களை மூடி வருகிறது..

FCRA - பாஜக கிறிஸ்தவ சேவை நிறுவனங்களை மூடி வருகிறது.. செய்திகளும் சிந்தனைகளும் - 07.4.2026 K. ரஃபீக் முஹம்மது (மாநிலச் செயலாளர், TNTJ)

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்- ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்

 

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்- ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்

Iran

மத்திய கிழக்கில் பெரும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு போரின் விளிம்பிலிருந்து உலகம் ஒரு வழியாகப் பின்வாங்கியுள்ளது. ஈரான் மீது நடத்தத் திட்டமிட்டிருந்த பிரம்மாண்டமானத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். வெள்ளை மாளிகை நிர்ணயித்திருந்த இறுதி எச்சரிக்கை காலக்கெடு முடிவதற்கு இரண்டு மணி நேரமே இருந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மற்றும் சீனாவின் ராஜதந்திர அழுத்தத்தால் ஈட்டப்பட்ட இந்த இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம், ஒரு மாபெரும் இக்கட்டான சூழலைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

8 4 2026 


அமெரிக்காவின் இந்த முடிவைத் தொடர்ந்து அதன் ராணுவ நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முதற்கட்ட உடன்பாடும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் போர்நிறுத்தம் ஒரு மெல்லிய நூலிழையிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. வளைகுடா நாடுகளில் இப்போதும் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஈரானுடனான இந்தப் பேச்சுவார்த்தைக்கும், லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த முன்னேற்றங்கள் குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், "உலக அமைதிக்கு இது ஒரு பெரிய நாள். ஈரான் இந்தப் போர்நிறுத்தத்தை விரும்புகிறது. இதன் மூலம் பெரும் பொருளாதார லாபங்கள் ஈட்டப்படும்," என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைச் சீர்செய்ய அமெரிக்கா உதவும் என்றும், சூழலைக் கண்காணிக்க அமெரிக்கப் படைகள் அங்கு நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் திடீர் அமைதி முயற்சியால் உலக எண்ணெய் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்து 92.60 டாலராகக் குறைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் 6 சதவீதம் சரிந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் சந்தை முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தாலும், "தொழில்நுட்பக் காரணங்களால்" தாமதம் ஏற்படலாம் எனத் தெஹ்ரான் எச்சரித்துள்ளதால் ஒருவித தயக்கம் நிலவுகிறது.

மறுபுறம், இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானுடனான அமெரிக்காவின் உடன்பாட்டை ஆதரிப்பதாகத் தெரிவித்த பிரதமர் நெதன்யாகு, லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என அறிவித்த சில நிமிடங்களிலேயே சிதோன் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஈரானில் மக்கள் தெருக்களில் இறங்கி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமரசப் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஈரானிய ராணுவத் தலைவர்கள், தங்கள் கைகள் எப்போதும் துப்பாக்கியின் விசை (Trigger) மீதே இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

மேலும், இந்த அமைதித் திட்டத்தில் ஒரு சிக்கலான முரண்பாடும் எழுந்துள்ளது. ஈரானிய மொழியான பார்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானின் அணுசக்தி செறிவூட்டலை அங்கீகரிக்கும் அம்சம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் ஆங்கில அறிக்கையில் இது இடம்பெறவில்லை. இது டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதலை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலைச் சீர்செய்யும் நோக்கில், வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளன. இந்த உச்சிமாநாடு மத்திய கிழக்கின் நிரந்தர அமைதியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/india/iran-israel-us-war-live-updates-in-tamil-11700448

தலைமைச் செயலர் மாற்றம்: 'அதிகார வரம்பை மீறிய செயல்' - ப.சிதம்பரம் கண்டனம்

 

8 4 2026 

P Chidambaram condemned Election Commission for transferring the State Chief Secretary N Muruganandan TN Election 2026 Tamil News

"தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு முருகானந்தம் அவர்களைத் தேர்தல் ஆணையம் பணிமாற்றம் செய்திருப்பது அதிகார  வரம்பை மீறிய செயல்." என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் உள்பட தமிழக அரசின் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து வருகிறது.
 
இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தலைமை செயலாளராக சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.  

இந்த நிலையில், "தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு முருகானந்தம் அவர்களைத் தேர்தல் ஆணையம் பணிமாற்றம் செய்திருப்பது அதிகார  வரம்பை மீறிய செயல்." என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு முருகானந்தம் அவர்களைத் தேர்தல் ஆணையம் பணிமாற்றம் செய்திருப்பது அதிகார  வரம்பை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தின் செயல் கடும் கண்டனத்திற்குரிய செயல்.

தேர்தல் ஆணையத்தின்  அதிகாரத்திற்கு வரம்பிருக்கிறது. தன்னிச்சையான (arbitrary) நியாயமற்ற (unfair) செயல் அதிகார வரம்பை மீறிய செயல். தேர்தல் ஆணையத்திற்கு மேல் மக்கள் இருக்கிறார்கள், அந்த மக்கள் கைகளில் வாக்கு என்ற சக்தி இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையத்திற்கு நினைவு படுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது." என்று கூறியுள்ளார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/p-chidambaram-condemned-election-commission-for-transferring-the-state-chief-secretary-n-muruganandan-tn-election-2026-tamil-news-11703345

திருப்பரங்குன்றம் வழக்கு விசாரிக்க தடை - உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு

 8 4 2026

GR Swaminathan HC

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அருகே தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வழக்கின் பின்னணி:

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அருகே தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் உள்ளிட்ட சிலரை மலைக்குச் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தடைக்கான காரணங்கள்:

தர்கா நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், தனி நீதிபதி ஒரு பொது நிகழ்ச்சியில் இந்த விவகாரம் குறித்து அதிருப்தி வெளியிட்டதாகவும், அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவதாகப் பகிரங்கமாகக் கூறியிருப்பதால், இந்த வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டது.

நேற்று இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த விவகாரத்தை ஒரு அரசியல் மேடையாக மாற்றக் கூடாது" என்று கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ள நிலையில், தனி நீதிபதி மீண்டும் இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இரு நீதிபதிகள் அமர்வு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை, தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுகளுக்கும் தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மலை அளவீடு குறித்து மற்றொரு உத்தரவு:

இதற்கிடையில், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மற்றொரு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீமதி அமர்வு, மதுரை மாவட்ட ஆட்சியர் உதவியுடன் மே மாதத்திற்குள் மலையை முழுமையாக அளவீடு செய்ய மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/hc-madurai-bench-stays-justice-gr-swaminathan-contempt-proceedings-thiruparankundram-deepam-case-11703616

ஒப்பந்தம் முறிந்ததா? லெபனான் தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான் - உலக நாடுகள் அதிர்ச்சி

 

ஒப்பந்தம் முறிந்ததா? லெபனான் தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான் - உலக நாடுகள் அதிர்ச்சி

 09 04 2026

Strait of Hormuz oil blockade

Donald Trump Iran ceasefire | Strait of Hormuz closed | Lebanon airstrikes today

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தில் ஒரு முக்கிய திருப்பமாக, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக்கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக நாடுகளின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மீண்டும் மூடியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பந்தத்தை மீறியதா இஸ்ரேல்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடுவுக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே லெபனான் மீது இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்களை நடத்தியது.

லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பின் தகவல்படி, புதன்கிழமை அன்று மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் பெய்ரூட்டின் பல பகுதிகள் புகைய மண்டலமாகக் காட்சியளிக்கின்றன. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்தே, "இஸ்ரேல் போர் நிறுத்த விதிகளை மீறிவிட்டது" என்று குற்றம் சாட்டிய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக அறிவித்தது.

குழப்பத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தில் லெபனான் நாடு மற்றும் அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பெரும் கருத்து முரண்பாடு நிலவுகிறது:

அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், "ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு பயங்கரவாதக் குழு என்பதால் லெபனான் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இஸ்ரேல் அங்கே நடத்துவது ஒரு தனிப்பட்ட சிறு போர் (Separate skirmish)" என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர், "ஈரானுடனான ஒப்பந்தம் ஹிஸ்புல்லாவுக்குப் பொருந்தாது; அவர்களை நாங்கள் தொடர்ந்து வேட்டையாடுவோம்" எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இதனை வன்மையாக மறுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பதிவைச் சுட்டிக்காட்டிய அவர், லெபனானும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான் என்று வாதிடுகிறார். "அமெரிக்கா ஒன்று அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது இஸ்ரேல் வழியாகப் போரைத் தொடர வேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது" என்று அவர் எச்சரித்துள்ளார்.

உலகின் 20 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ஒரு பேரல் எண்ணெய்க்கு 1 டாலர் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது எரிபொருள் விலையை உலகளவில் உயர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான், இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால், இஸ்ரேலும் அமெரிக்காவும் அதனை மறுப்பதால் தற்போது இந்த ஒப்பந்தம் முறியும் நிலையில் உள்ளது. "உலக நாடுகள் லெபனானில் நடக்கும் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா தனது வாக்குறுதியைக் காப்பாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/international/donald-trump-iran-ceasefire-strait-of-hormuz-closed-lebanon-airstrikes-today-11703719

புதன், 8 ஏப்ரல், 2026

ஈரான்- டிரம்ப் 2 வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம்: பாகிஸ்தான் தலையீடு எதிரொலி

 

ஈரான்- டிரம்ப் 2 வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம்: பாகிஸ்தான் தலையீடு எதிரொலி

7 4 2026 

Donald Trump Iran two week ceasefire deal Strait of Hormuz reopening April 2026

Donald Trump announces 2-week ceasefire with Iran

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தை (Ceasefire) அறிவித்துள்ளார். ஈரானின் "முழு நாகரிகத்தையும்" இலக்கு வைக்க டிரம்ப் விதித்திருந்த காலக்கெடு முடிவடைய இரண்டு மணி நேரமே இருந்த நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்த போர் நிறுத்த அறிவிப்பு ஒரு முக்கிய நிபந்தனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் ஹார்முஸ் நீர்ச்சந்தியை (Strait of Hormuz) ஈரான் உடனடியாகவும், முழுமையாகவும் திறக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஈரான் ஏற்படுத்தியிருந்த தடையை நீக்க ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், "இது இருதரப்பு போர் நிறுத்தமாக இருக்கும். எங்களது ராணுவ இலக்குகளை நாங்கள் ஏற்கனவே அடைந்துவிட்டோம். ஈரானுடனும், மத்திய கிழக்கிலும் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்கான இறுதி உடன்படிக்கையை நெருங்கிவிட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இக்கட்டான சூழலில், பாகிஸ்தான் ஒரு முக்கிய சமரசத்தையாராகச் (Mediator) செயல்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் ஆகியோர் டிரம்பிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் சம்மதித்துள்ளார்.

ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு உகந்ததாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. இந்த இரண்டு வார போர் நிறுத்த காலத்திற்குள் நிரந்தர அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரானும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

மறுபுறம், இஸ்ரேலும் இந்த இரண்டு வார போர் நிறுத்தத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இஸ்ரேலின் பொது ஒளிபரப்பு நிறுவனமான 'கான்' (Kan) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருந்த ஒரு பெரும் போர் மேகம், தற்போது இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம் சற்று விலகியுள்ளது. எனினும், வரும் இரண்டு வாரங்களில் எடுக்கப்படும் முடிவுகளே மத்திய கிழக்கின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

source https://tamil.indianexpress.com/international/donald-trump-iran-two-week-ceasefire-deal-strait-of-hormuz-reopening-april-2026-11700160