செவ்வாய், 26 நவம்பர், 2013

பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?

பைத்தியமாக எழுபவனை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (2:275) கூறுகின்றது. மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பதற்குக் காரணம் ஷைத்தான் தான் என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் அமைந்துள்ளது. மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பது பற்றி மக்களிடம் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இறந்தவர்களின் ஆவி, உயிருடன் இருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது தான் பைத்தியம் என்று பாமர மக்கள் கருதுகின்றனர். இறந்தவர்களின் உயிர்கள் இறைவனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக 39:42...

தொழத

தொழத் தொடங்கியவர் #விடலாகாது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல் ஆகி விடாதீர்!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி), நூல் : புகாரி 11...

நற்கூல

"ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு!" -இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 20...

ஜோதிடனிடம்

யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. -நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் . அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: முஸ்லிம் 41...

சத்திய மார்க்கத்தின்

சத்திய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எப்போதும் விட்டுகொடுக்காமல், மற்ற கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியான முறையில் பின்பற்ற வேண்டும். மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எதற்காகவும் எவருக்காகவும் வளைக்கக்கூடாது. ஆளுக்கும் இடத்திற்கும் ஏற்ப மார்க்கத்தை மாற்றிக் கொள்வது திரிப்பது நம்மை தடம் புரளச் செய்துவிடும் மோசமான பண்பு என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பண்பு இருந்தவர்கள் வழிகேடுகளில் வீழ்ந்து, கெட்டழிந்தார்கள் என்று நபியவர்கள்...

விலகி விடும் #விலாப்புறங்கள் :

அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக கண்குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார். (#அல்குர்ஆன் 32:16,1...

கேட்டது கிடைக்கும் #நேரம்

நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : முஸ்லிம் 12...

உண்மை முஸ்லிமாக வாழ்வோம்

நாம் உண்மை முஸ்லிமாக வாழ்ந்து காட்டினால் நாம் வாழும் இந்தியா கூட இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இது ஆச்சரியப்படும் விஷயமல்ல. 1400 வருட கால இடைவெளியில் இன்றைக்கு உலகில் 72 நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. நாம் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தால் இன்னும் பல நாடுகள் இஸ்லாத்தை தழுவும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக்...

வெள்ளி, 22 நவம்பர், 2013

“பேய்கள் என்பது ஷைத்தான் தான் என்று இவர்கள் கண்டுபிடித்த புதிய இலக்கணமும் சரியானது அல்ல என்பது தெளிவாகின்றது. ஷைத்தான் என்றொரு படைப்பு இருப்பதாகக் கூறும் இஸ்லாம் ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை? என்பதையும் சொல்லித் தருகின்றது. ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை? என இறைவனும் அவனது தூதரும் சொன்னார்களோ அந்த அலுவல்களையே அவன் செய்து வர முடியும். ஒரு மனிதனது அறிவை முற்றாக நீக்கி அவன் மீது முழு ஆதிக்கம் செய்வது அவனது அலுவல்களில் ஒன்றல்ல. இவர்கள் தங்கள்...

கிறிஸ்தவர்கள்

இன்று கிறிஸ்தவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கையைப் பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சியில் நூறில் ஒரு பங்கு கூட நாம் முயற்சி செய்யவில்லை. எனினும் அல்லாஹ் தூய இஸ்லாத்தை மட்டுமே உலகில் அதிவேகமாகப் பரவும் சத்தியக் கொள்கையாக ஆக்கியுள்ளான்...

Al Fathiya

ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுவதை இஸ்லாம்  கட்டாயக் கடமையாக்கியுள்ளது. இந்தத்  தொழுகையில்  அல்பாத்திஹா அத்தியாயத்தை கண்டிப்பாக ஓத  வேண்டும். இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வைப் பற்றியும்  மறுமை நாளைப் பற்றியும் இந்த உலகத்தில் வாழும் போது நாம்  என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்  நினைவூட்டப்படுகின்றது.  உறக்கத்தை விட்டுவிட்டு அதிகாலைத்  தொழுகைக்கு எழுவது சாதாரண விஷயமா?  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம்  வியாபார...

வெள்ளி, 15 நவம்பர், 2013

Quran & Hadis

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், "அவன் பூமியில் நாற்பது நாட்கள் தங்குவான்.  அன்று ஒரு நாள் ஒரு வருடம் போலவும், இன்னொரு நாள் ஒரு மாதம் போலவும், மற்றொரு நாள் ஒரு வாரம் போலவும், ஏனைய நாட்கள் அனைத்தும் உங்களது இந்த நாட்களைப் போலவும் இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  "அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடம் போன்று இருக்கும் ஒரு நாளில் ஒரு நாளுக்குரிய தொழுகை...