சச்சார் கமிட்டிப் பரிந்துரையை
அமல் படுத்த
ஐக்கிய முற்போக்கு
கூட்டணி முடிவு..!
கல்வி மற்றும்
வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சமஉரிமை
வழங்கும் புதிய
சட்டத்தை கொண்டு
வர காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
முடிவு செய்துள்ளது.
இதற்கான சட்ட
வரைவை சிறுபான்மையினர்
நலத்துறை அமைச்சகம்
தயாரித்து வருகிறது.
மத ரீதியான
பின்புலத்தைக் கொண்டு அவர்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல்
இருக்க அனைத்து
வகையிலும் அவர்களுக்கு
சமஉரிமையை சட்டப்பூர்வமாக
வழங்க அரசு
முடிவு செய்துள்ளது.
18.5 சதவீதம் இருக்கும் சிறுபான்மை இனத்தவர்களில் 2.5 சதவீதம் மட்டுமே அதிகாரிகளாக உள்ளனர்.
இதனால் வேலைவாய்ப்பு
மற்றும் கல்வியில்
சமஉரிமை அளித்து
அவர்களின் எண்ணிக்கையை
அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல்
நெருங்கும் போது தான் இதை எல்லாம்
அறிவிப்பார்கள், இதற்கு மேலும் அறிவிப்பார்கள் தேர்தல்
முடிந்து ஆட்சியில்
அமர்ந்து விட்டால்
இதை மறந்து
விடுவார்கள். மறந்து விட்டுப் போகட்டும் ஆனால்
குறைந்த பட்சம்
மதக்கலவரத்திலாவது காப்பாற்ற வேண்டாமா
?. அதைச் செய்யவும்
மறுப்பார்கள், இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் என்பதை
நாம் அறிந்து
வைத்திருப்பதால் ஜனவரி 28 அன்று நமது உரிமைக்குரலை
தமிழகத்தில் உய்ரத்தி உரிமையை வென்றெடுப்போம் இன்ஷா
அல்லாஹ்.
வியாழன், 9 ஜனவரி, 2014
Home »
» சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல்
சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல்
By Muckanamalaipatti 11:55 AM
Related Posts:
பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி! குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படு… Read More
முஸ்லீம் லீக் தலைவர்: யார் இந்த சாதிக் அலி ஷிஹாப் தங்கல்? இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் கேரளத் தலைவர் சாதிக் அலி ஷிஹாப் தங்கல், அயோத்தியில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் கோயிலுக்… Read More
அண்ணா பிறந்தநாள்- 12 சிறைவாசிகள் முன்விடுதலை! அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று 12 சிறைவா… Read More
ஈராக், சிரியா பகுதிகளில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்! சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான… Read More
தமிழ்நாட்டிற்கு 29 பைசா: உ.பிக்கு ரூ.2.73: ஏன் இந்த அநீதி? திருச்சி சிவா கேள்விதமிழ்நாடு மத்திய அரசுக்குத் தரும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. அதேநேரம் உத்தரப் பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக… Read More