சனி, 11 ஜனவரி, 2014

பாசிஸ வெறி


சங் பரிவார கும்பலின் பாசிஸ வெறி தலைவிரித்தாட துவங்கியுள்ளது. மோடியின் உண்மை முகத்தை அம்பலபடுத்திய சன் டிவி வீரபாண்டியன் தற்போது இந்த சங் பரிவாரக் கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

மோடியை பற்றி பேசியதற்காக கருத்தை கருத்தால் எதிர் கொள்ள திராணியில்லாத சங் பரிவாரக்கும்பல் அவருக்கு கொலை மிரட்டல் விட்டதோடு, அவரை ஆபாச அர்ச்சனைகள் மூலம் இழிவுபடுத்தியதுடன், அவர் மீது சன் டிவி நிர்வாகத்தில் புகார் கொடுத்து, இவர் நடத்தும் நிகழ்ச்சியில் பா...வின் சார்பில் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று மிரட்டியுள்ளது.

இதை வழிமொழிந்த சன் நிர்வாகம் 17ஆண்டுகளாக சன் டிவியில் நிகழ்ச்சி நடத்திவந்த வீரபாண்டியன் அவர்களது நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளது.

17ஆண்டு ஊடகவியலாளராக இருந்து, ஒருபக்க சார்பு இல்லாமல் நடுநிலையாக விமர்சனங்களை செய்து வரும் வீரபாண்டியன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கருத்துரிமை பேசும் எந்த மீடியாக்களும் இது வரை வாய்திறக்கவில்லை.

சங் பரிவாரக் கும்பலை பொறுத்தவரை கருத்தால் கருத்தை எதிர்கொள்ள திராணியில்லாத பெட்டைகள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

காந்தியின் கருத்தை எதிர்கொள்ள திராணியில்லாமல் அவரை சுட்டுக் கொலை செய்தது முதல் தி ஹிந்து பத்திரிக்கையின் பெண் இணை ஆசிரியர் வித்யா சுப்ரமணியத்திற்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுத்தது வரை இது தொடர்கின்றது. சகோதரர் வீரபாண்டியன் அவர்களது விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது.

இந்த அநியாயத்தை தட்டிக்கேட்டு நீதியை நிலைநாட்டி வீரபாண்டியனுக்கு நீதி வழங்காவிட்டால் நாளை கலாநிதி மாறனுக்கும் கூட இந்த நிலை ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றோம்.

இனியும் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் மீடியாக்கள் வாய்மூடி மௌனம் சாதிப்பார்களேயானால்,
இன்று வீரபாண்டியன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை நாளை உங்களுக்கு ஏற்படப்போவது உறுத